Archive for January, 2014

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 31, 2014

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி
தன் இனிமையினால்
நித்ய சூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -என்கிறார்

———————————————————————————————————————————–

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே

—————————————————————————————————————————————-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச் –
ஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய
குவலயா பீடத்தை அழித்தவனை –
அதனை அழித்தாப் போலே
என் விரோதியைப் போக்கினவனை –

சேறு ஆர் வயல் –
குவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக
ஒட்டாதே கிடந்தது –

தென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –
கிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே
நூறு நூறாக சொன்னபடி
பாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே
பாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் –
தரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –

இப்பத்தும் — வானவர் தம் இன்னுயிர்க்கே -ஏறே தரும் –
இத் திருவாய்மொழி நித்ய சூரிகள்
மனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-
அன்றிக்கே
நித்ய சூரிகளுக்கு எறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்

நிகமத்தில்
போக்யதையால் நித்யர் ஹிருதயம் ஈர்க்கப் பண்ணும்
உருக பண்ணும்
வானவர்
மத யானை குவலையா பீடம் நிரசித்து
ஆரா மதம் கொண்ட யானை
என்னுடைய விரோதியை போக்கி
அது தான் திரு நகரி வயலை உழுது ஆக ஒட்டாமல் தடுக்க
சேறு ஆர்ந்து இருக்கும் வயல்
யானை படுத்து இருக்க –
ஆழ்வார் சமுரதர் ஆனாதும் குருகூரும்
விரோதி கலிந்தவாரெ ஆழ்வார் தரிக்க
திரு நகரியும் வயலும் சேருமாக ஆனதே
கிழி கிழியாக கட்டு கட்டாக பணம்
நூறு நூறு பாட்டு
கிழி கிழி அந்த காலம்
கிழி சீரை பட்டு துணி பகட்டின மாணிக்கம்
காண்ட பர்வத பேதம் போலே
பிரித்து பிரித்து
எளிதாம் படி -நூறு நூறாக
இப்பத்து
வானவர் தன் இன் உயிர் க்கு ஏறு தரும்
சர்வேஸ்வரன் தரும்
ஈடுபாடு உண்டாகும்
பிரகாரம் தரும்
இன்பம் தரும்
ரிஷபம் அமரர் ஏறு -இவனையே தரும்

——————————————————————————————————————————————-

மையார் கண் மா மார்பில் மண்ணும் திருமாலைக்
கையாழி சங்குடனே காண எண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர் -84

சாரம்
மையார் கரும் கண்ணி மன்னும் திருமாலை
சங்கு சக்கரத்துடன் காண கருதி
மெய்யான காதல் உடன் கூப்பிட்டு
கண்டு
உகந்த
மாறன்
கண்டு கொண்டேன்
உகந்தேன்
மாறன் பேர் ஓத இன் உயிர் உய்யும்

———————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 31, 2014

இப்படி
அவனைப் பெற்று
கிருதார்த்தன் ஆனேன்
என்கிறார் –

————————————————————————————————————————-

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே

———————————————————————————————————————————-

அடியான் இவன் என்று –
மேல் செய்யப் புகுகிற கொடை தக்கதே -என்று சொல்லுகைக்காக
அடியான் என்று
ஒரு பெயரை இட்டாயிற்றுக் கொடுத்தது –

எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-
கொள்ளுகிற என் அளவு அன்றிக்கே
தன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –
அருள் பெறுவார் அடியாரே அன்றோ –
புத்ரர்களுக்கு அம்சம் அன்றோ உள்ளது
எல்லா வற்றிலும் கூறு உண்டாய் இருக்கும் அடியார்க்கு –
பிள்ளை அகளங்க பிரமராயர் -பட்டரைசமாதானம் செய்ய வேண்டும் என்று
பட்டர் திரு உள்ளத்துக்கு உகந்த -இருகை மத வாரணம் –
என்கிறவனை பட்டர் பக்கல் வரவிட
அவனும் சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து
திரு உள்ளம் மகிச்சியை உடையதாய் இருக்கிற அளவிலே
இவனுடைய வைஷ்ணத்வம் இருக்கும் படி திரு உள்ளம்
பற்றி இருக்கை உண்டே -என்றானாக
சொல்ல வேண்டுமோ கர்ப்ப தாசர்கள் -கருவிலே திரு உடையார் -அன்றோ என்றது தொடக்கமாக
இப்பாசுரத்தை அருளிச் செய்தார் பட்டர் –

ஆர் அருள் செய் நெடியானை –
பெறுகிற என் அளவில் அன்றிக்கே
தருகிற தன் அளவிலே தந்தான் –

தனக்கு அளவு தான் என் என்ன –
நெடியானை –
சர்வேஸ்வரன் -என்னும் அத்தனை –

நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் –
இது தான் நான் இன்று இருந்து விரித்து கூற வேண்டி இருந்ததோ
கட்டிக் கொண்டு இருக்கிற கொடியிலே தெரியாதோ –
சூரம் வீரம் முதலிய குணங்களில் பிரசித்தியை உடையனாய்
பகவானை எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் அனுபவத்தாலே
காட்சிக்கு இனிய வேஷத்தை உடையனாய்
இருக்கிற பெரிய திருவடியை கொடியாக உடையவனை
பெரிய திருவடியை அங்கீ கருத்தால் போலே என்னை அங்கீ கரித்தவனை –

இப்படி அங்கீ கரித்த தற்கு இத்தலையில் என்ன நன்மை உண்டு -என்னில் –
குன்றாமல் உலகம் அளந்த அடியானை –
குணத்தையும் குணம் இல்லாமையையும்
நிரூபணம் செய்யாதே
திரு உலகு அளந்து அருளினாப் போலே
ஒரு காரணமும் இல்லாமல் நிர்ஹெதுகமாக -அங்கீ கரித்தான் -என்கிறார்
ஒரு அடியும் குறையாமல்
பூமிப் பரப்பை அளந்து கொண்ட
திருவடிகளை உடையவனை –
தன் பெருமையையும் சௌலப்யத்தையும் என்னை அனுபவிப்பித்தான் –

அடைந்து அடியேன் உய்ந்தவாறே –
அடிமைத் தன்மையே காரணமாக
உஜ்ஜீவித்த படி -என் –
அடிமைப் பட்டு இருக்கும் ஞானத்துக்கு
இத்தனை பிரயோஜனம் உண்டோ –

அடைந்து அடியேன் உய்ந்தவாறே
ஆரருள் செய்த நெடியான்
அடியான் இவன் என்று தேர்ந்து எடுத்து
மேல் பண்ண புகுகிற ஔதார்யம்
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக அடியான் பெயரைக் கொடுத்து
தன்னளவில் கொடுத்த –
கொள்ளும் இவன் அளவு அன்றி –
அருளை வாரி வழங்கி
யோக்யதை ஒன்றும் இல்லாமல் அற அருள்
அருள் பெறுவார் அடியார் இ றே
புத்ரர்களுக்கு அம்சம் மட்டும்
அகளங்க பிரமராயன் ஐதிகம் பட்டரை சமாதானம் செய்ய
பிரமராயன் மந்த்ரி –
திருக் கோஷ்டியூர் -போக
இருகை மத வாராணம் அனுப்பி -அந்தரங்க கைங்கர்யம் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர் பட்டர் ப்ரீதி கொண்டவர்
வார்த்தை பேச திரு உள்ளம் பிரசன்னமாக
கர்ப்ப தாசர்கள் -தொண்டைக்குலம் -பாக்யம்தான் –
அடியான் -கர்ப்ப தாசன்
தீர்த்த காரர் குடும்பம் –
தீர்த்த காராராக திரிந்து போகிறார்கள் அருமை தெரியாமல் இப்பொழுது
திருவேலைக்காரனை அனுப்பி -கைங்கர்ய பரர
நெடியான் சர்வேஸ்வரன்
புள்ளின் கொடியான் –
கட்டிக் கொண்ட கொடியாலெ
நிறை புகழ் அழகிய சிறகை
சௌர்ய வீராதி புகழ்
நிரந்த பகவத் தர்சனீயத்தால் அழகிய
அவனை விஷயீ கரித்தால் போலே என்னையும்
நிர்ஹெதுகமாக
ஓர் அடியும் குறையாமல் பூமிப் பரப்பை கொண்ட -எளிமை
பெருமை சௌல்பயம் இரண்டையும் அனுபிப்பித்து
சேஷத்வ ஞானத்துக்கு இவ்வளவு பிரயோஜனம் உண்டோ

—————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 31, 2014

தன்னை அனுபவிக்கப் பெற்று
அதற்கு மேலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அமுதமாம்படி
திருவாய்மொழி பாடவும் பெற்றேன் –
என்கிறார் –

—————————————————————————————————————————————-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –

—————————————————————————————————————————————-

கண்டு கொண்டு-
நான் அழைப்பன் -என்ற விடாய் எல்லாம் கெட
கண்களால் காணப் பெற்று –

என் கண்ணினை ஆரக்-
காணக் கருதும் என் கண்ணே -என்ற கண்கள் விடாய் கெட
கலியர் -வயிறார உண்டேன் -என்னுமா போலே
ஆரக் கண்டு கொண்டு -என்கிறார்

களித்து-
மறுகின நெஞ்சு களித்து –

பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் –
இவ்வுகப்புக்கு இடைச் சுவரான
பழைய கர்மங்களை
வாசனையோடு போக்கி –

தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் –
என்னளவும் அன்றிக்கே –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகன் ஆகப் பெற்றேன் –
நானும் உண்டு
என் வேலையாள்களும் ஜீவித்து
என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –
என்பாரைப் போலே –
சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்
அடியார்கட்கு அடிமை யாதலை
எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே
இது தான் தோன்றியான கைப்பற்று அடியாக வந்தது ஓன்று அன்று –

அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –
சர்வேஸ்வரனாலே
அடியவனாக
அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

ஸ்ரீ வைஷ்ணவர் போக்யமாக
திருவாய் மொழி சொல்லப் பெற்றேன்
தொண்டர்க்கு அமுது சொல்லப் பெற்றேன்
அனுபவம் வெளி
வண் குருகூர் வண் சடகோபன்
ஆழ்வாரை கொடுத்த வண்மை
திருவாய்மொழி கொடுத்த வண்மை
கண்டு கொண்டு கண் இணை ஆர கண்டு கொண்டு விடாய் தீர
ஆரா அமுதம்
வயிறு ஆர
திருப்தி ஆர்தல்
கண்ணார சேவித்தேன் -என்கிறார் ஐவரும்
மறுகின நெஞ்சு களித்து
பண்டை வினை பற்றோடு
கர்மங்கள் பிரார்ர்தன சவாசனமாக போக்கி
தொண்டர்க்கு அமுது உண்ண
ஸ்ரீ வைஷ்ணவர்
நானும் உண்டு பரிகரமும் உண்டு
உபகரிக்கும் படி
சொல்மாலைகள்
ததீய சேஷத்வம் பரிந்த பேறு பெற்றேன்
பாகவத கைங்கர்யம் திருவாய் மொழி பாடி
தான் தோன்றி இல்லை
பேற்றின் கணம்
கிருபையால்
அண்டத்து அமரர் பெருமான்
சர்வேஸ்வரன் விஷயீ கரித்த பலத்தால்
பக்தாம்ருதம் -இத்தை கொண்டே தனியன் நாத முனிகள் –
மாலும் -7 பத்து
தூ முதல் பத்தருக்கு தான் தன்னை சொன்ன வாய் முதல் அப்பன்
அமரர் பெருமான் அடியேனே -ததீய சேஷத்வம் பர்யந்தம் ஆக்கி வைத்தானே

——————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 31, 2014

எல்லா பொருள்களுக்கும் அந்தராத்மாவாய் –
பிரமன் முதலாயினார்க்கு எல்லாம்
காரணன் ஆனவனை காணப் பெற்றேன்
என்று இனியர் ஆகிறார் –

——————————————————————————————————————————————–

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே

———————————————————————————————————————————————

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் –
மேல் எழுந்த பார்வையில் ஓன்று போல் இருக்க
சிலவற்றை விதிப்பது
சிலவற்றை விலக்குவது
விலக்கியனவற்றை ஒழிதலைச் சொல்லுவதாய்க் கொண்டு
உபதேசிப்பாரும் கேட்ப்பாருமாய் பொறுக்கிற புறச் சமயங்கள் எல்லாவற்றாலும் –

பொருவாகி நின்றான் -அவன் –
பொரு -தடை
அவற்றால் தன்னை இல்லை செய்ய ஒண்ணாத படி –
தடை அற்றவனாய் நின்றான் –

எல்லாப் பொருட்கும் அருவாகிய -வாதியைத்-
எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்மாவாய்
அவற்றை எல்லாம் நியமிப்பதில் முதன்மையன் ஆனவனை –

தேவர்கட்கு எல்லாம் கருவாகிய –
பிரமன் முதலானதேவர்களுக்கு எல்லாம் காரணனாய்
உள்ளவனே –

கண்ணனைக் –
காரியங்களிலே ஒன்றுக்கு-வசுதேவருக்கு -தான் கார்யம் ஆனவனை -சௌலப்யம் காட்ட

கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க
கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருது என் -என்னில் –
அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
புறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்
எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு
எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து
அடைந்தார்க்கு சுலபன் ஆனவனைக்
காணப் பெற்றேன் -என்கிறார்

அந்தராத்மா -அருவாகிய ஆதி
காரண பூதன்
காணப் பெற்றேன் -இனியர் ஆகிறார்
உருவாகிய ஆறு சமயங்கள்
பொறு தடையாக நின்றான் –
சார்வாகம் ஜைனம் வைசெஷிகன் சாணக்கியம் பாசுபதம் பாஹ்ய மாதங்கள்
பாசுபதி ஆகமம் பிரமாணம் கொண்டு
போருவாகி தடையாகி
ஆபாத பிரதியில் -உருவாக்கி உபதேசிப்பாரும் கேட்பாரும் உருவாக்கி இருப்பது போலே தோற்றும்
அவற்றால் தன்னை இல்லை செய்யாத படி
அருவாகி அந்தராத்மா நியாமகத்தால் பிரதானம்
ஆதி காரணம்
தேவர்களுக்கு கரு
கண்ணனை கார்யங்களில் ஒன்றுக்கு தான் காரியம்
கண்டு கொண்டேனே
அவதாரத்துக்கு பிற்பாடராக
அவதாரம் காண ஒண்ணாது சிசுபாலாதி
இவர் கண்டு கொண்டார்
பாஹ்ய சமயங்களால் இல்லை செய்ய முடியாத
அருவாகி ஆதி கரி -மென்மை
கண்ணனை சௌலப்யம்
ஆஸ்ரித சுலபன்
கண்டு கொண்டேனே என்கிறார் –

————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 31, 2014

தூணிலே தோற்றி
பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று
தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து
ஏத்துகிறார்

—————————————————————————————————————————

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே

—————————————————————————————————————————-

உகந்தே யுன்னை உள்ளும் –
பிரிந்த துயரத்தோடு தலைக் கட்டும் உகப்பு அன்றிக்கே
ஒரே தன்மையாக உன்னை அனுபவிக்கும்படியாக –

என்னுள்ளத்து –
எண்ணே-கொண்ட சிந்தையை உடைத்தான
என் உள்ளத்து –

அகம்பால் அகந்தான் –
உள்ளுக்கும் உள்ளே -என்றது
உள் உள் ஆவி -என்னும்படியே
கமர் பிளந்த இடம் எங்கும் மறு நினையும்படி -என்றவாறு –

அமர்ந்தே –
தன பேறாக மிக்க காதலைச் செய்து –

யிடங்கொண்ட –
இடம் உள்ள எங்கும் தானே ஆம்படி நிறைந்த –

வமலா –
இவ்விருப்புக்கு அவ்வருகு ஒரு பயனைக் கணிசித்து அன்றிக்கே -ஸுயம் பிரயோஜனமாகவும்
ஒரு காரணத்தையும் பற்றியும் இன்றி நிர்ஹெதுகமாக இருக்கையும் –
எண்ணே கொண்ட சிந்தையதாய் -என்றதனை ஒரு சாதனமாக நினைத்து இலர் –

மிகுந்தானவன் –
பகைமையில் ஒரு அளவில்லாத தானவன் -என்றது
தன்னை இல்லை செய்கை அன்றிக்கே
தன் உயிர் நிலையிலே நலிந்தவன் -என்றபடி
உதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18-
ஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –

மார்வகலம் இரு கூறா நகந்தாய் –
அகன்ற மார்வானது இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல
நகத்தை உடையவனே
நகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் –

நரசிங்கமதாய வுருவே –
என்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –
சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்கிற விக்ரகத்தை இப்படி கொள்வதே –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்னில் –
அடியார்கள் சூளுறவு செய்த காலத்தில் வந்து
தோற்றுமவன் ஆகையால்
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி
மனத்தின் இடம் எல்லாம் புகுந்து
கமர்பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே
நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –
என்கிறார் என்பது –

தூணிலே தோற்றி பிரகலாதன் ஆர்த்தி தீர்த்து அருளியது போலே
உகந்து உள்ளும் நெஞ்சு
உகந்தே -பிரியாமல் சம்ச்லேஷம் ஒன்றாலே ஏவ காரம் –
அனுபவிக்க
எண்ணே கொண்ட சிந்தை நினைத்த மாதரம்
அகம்பால் -அகம் -உள்ளுக்கும் உள்ளே -ஏகாந்தம் -அறைக்கு உள்ளே பிறை
கமர் பிளந்த இடம் எங்கும் -நனையும் படி மறு நனையும் படி அமர்ந்தே
இடம் கொண்ட அவகாசம் கொண்ட இடம் எங்கும்
அமலா -ஹேது இன்றி தனது பேறாக
இருப்பே பிரயோஜனம் அவனுக்கு
இசைவுக்கே இவ்வளவு அனுக்ரஹம் செய்து அருளி
எண்ணே கொண்ட சிந்தை அதுவும் சாதனம் இல்லை
நிர்ஹெதுக கிருபை
கிடைத்த பேறு
எண்ணம் ஸ்வரூபம் தான்
தானவன் -மிகுந்த விரோதம் பிரதிகூல்யம் மிக்கு
தன்னை இல்லை செய்து அன்றி
தன் உய்ர் நிலை பிரகலாதனனை ஹிம்சித்து
ஞானி ஆத்மைவ மே மதம் –
என்னுடைய அபிப்ராயம்
வேதாந்த சித்தமா விசாரம் வேண்டாம்
ஞானிகள் என்னுடைய ஆத்மா
வேதாந்தம் –
அறிவார் உயிர் ஆனாய் -வேற்றுமை தொகை அன் மொழி தொகை இரண்டும்
மிகும் தானவன் –
முதுகில் அடிக்கலாம் வயிற்றில் அடிக்காதே போலே
அகன்ற மார்வி இரண்டு கூஒராக நகத்தால்
நகந்தாய் நகற்றாய் -நகம் உள்ளவன்
சதைக ரூபா ரூபாயா நரசிங்க உருவாக்கி
இரண்டு வடிவை
பிரதிஞ சமகாலம்
உள்ளே புகுந்து எல்லா இடமும் நிரம்பி
கஜேந்த்திரன் உதவ வந்த வேகமும் கூட பொறுக்க மாட்டாமல் ஆழ்வார் நிலை –

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 31, 2014

காண ஆசைப் பட்ட அளவிலே
அவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள
தம்முடைய மனம் உகந்து
அனுபவிக்கிறபடியை
அருளிச் செய்கிறார் —

—————————————————————————————————————

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –

———————————————————————————————————————-

கருத்தே உன்னைக் காண கருதி-
எனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே
முகம் காட்டினாய் –
இவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –
கண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்
கருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே
இதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி
அனுபபத்தியைக் கொண்டு அர்த்தா பத்தியாலே கற்பித்தல்
அனுமானத்தாலே அதீந்த்ரியம் என்று அறிதல் செய்யும் பொருளை
நேரே காண வேண்டும் என்று எண்ணுகிறார் என்கை
அநுபவத்தி -பொருத்தம் இன்மை
அர்த்தா பத்தி -அர்த்தத்தாலே கிடைத்தால் –

என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –
மறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை
பரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்
இவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்
இத்தனை இசைவு பெற்றால்
பின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –

யதீஹ சரத அநேகர த்வயா ஸார்த்தம் அநிந்திதே
லஷ்மனேன ச வத்ச்யாமி நமாம் சோக பிரதஷ்யதி -ஆரண்ய -94-15-
குற்றம் இல்லாத சீதையே உன்னோடும் இலக்குமணனோடும்
பல வருடங்கள் இங்கே வசிப்பதனால் என்னை சோகம் வந்து அடையாது -என்றார்
இதம்புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்
இஹ வத்ச்யாமி சௌமித்ரெ ஸார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது
பரிசுத்தமானது

மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்
என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி
இனி -இருத்தாக என்பதற்கு
சிநேக பாவமே அன்றோ என் பக்கலில் உள்ளது என்கிறார் -என்னுதல்-

தேவர்கட்கு எல்லாம் விருத்தா –
இனி அவ்வருகு இல்லை என்னும்படி உயர்ந்தவர்கட்கும் அவ்வருகானவனே
தலை மகனையும் தலை மகளையும் கிழவனும் கிழத்தியும் என்று தமிழர் சொல்லுவர்
அவளையும் மலர்க் கிழத்தி –திருச் சந்த விருத்தம் -55-என்றார்கள் அன்றோ –

விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –
அத யத்த பரோ திவோ ஜ்யோதி தீப்யதே -சாந்தோக்யம்
இந்த பிரகிருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம் பொருள் விளங்குகிறான் –
என்கிறபடியே
எப்போதும் ஒக்க விளங்கா நிற்பதாய்
எல்லை இல்லாத ஒளி மயமாய் இருக்கிற
பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற
ஒப்பற்றவனே –
பிரகாரத்தில் அன்றோ பல வகை உள்ளது
பிரகாரி ஒருவனே ஆம் –

உன்னை என் உள்ளம் உகந்து உள்ளும் –
சடக்கென முகம் காட்டின உன்னைக் கண்டு
கலங்கின என் நெஞ்சம் உகந்தே அனுபவியா நின்றது
தேவர்கட்கு எல்லாம் விருத்தா
விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –
என்று சொல்லுகிற இவ் விசெஷனங்கட்கு கருத்து
மேலானார்க்கும் மேலாய்
பரம பதத்தில் எழுந்தருளி இருந்து
அவர்களை அனுபவிக்குமாறு போலே
தன்னை அனுபவிப்பிக்க
அனுபவித்த என் நெஞ்சம் உகந்தது ஆகா நின்றது -என்கை –

காண ஆசைப் பட்ட அளவில்
திரு உள்ளத்தில் புக
ப்ரீதி உடன் தலைக் காட்டும் திருவாய் மொழி –
அனுபவித்து அருளிச் செய்கிறார்
உன்னை உள்ளும் ஏன் உள்ளம் உகந்தே
கருத்தே -உன்னை
கண்ணே -உன்னை என்றார் முன்னால்
விருத்தா மூத்தவன் -தேவர்களுக்கு விருத்தர் முற்பட்டவன்
உயரத்து பரமபதத்தில் ஒருத்தா அத்விதீயன்
முகம் காட்டி
இந்த விஷயம் லாபிக்க ருசியே அமையும்
மிடுக்கான உன்னை காண கருதின அளவிலே முகம் காட்டி
கருத்தே –
அனுபபத்தி கொண்டு அர்த்தாபத்தி
பொருத்தம் இல்லாதவற்றை கொண்டு அர்த்தா பத்தி அனுமானம்
அவயவங்கள் உடன் கூடியவை கார்ய வஸ்து
கடம் வாயும் வயிறுமாக உண்டே
கடம் உண்டாக்கக் பட்டதால் கார்யம்
குயவனும் உண்டே நிமித்தம்
சக காரி தண்டம் சக்கரம்
மண் உபாதானம்
காரணங்கள் அனுமானம் -அர்த்தா பத்தி பார்க்காமல்
ஜகம் அவவயவம்
ஈஸ்வரன் அனுமானம் கொண்டு சாஸ்திரம் கொண்டு இல்லாமல்
அனுபபத்தி -கொண்டு அர்த்தாபத்தி கல்பித்தல்
அனுபபத்தியால் அதீந்த்ரம்
இந்த்ரியங்கள் கொண்டு அறிய முடியாதே
அனுமானம் -சாஸ்திர விருத்தமாக தான் த்யாஜ்யம்
சாஸ்திர யோநித்வாத்-
சாஸ்திரம் ஒன்றாலே தான் அறிய வேண்டும் –
அனுமானம் -குயவன் போலே ஞான சக்திகள் குறைவு இல்லையே
குயவன் வேஷ்டி பண்ண மாட்டான்
ஜகத் சிருஷ்டி மட்டும் இல்லை
நாம் நினைக்கும் படி இல்லை
கட்டடம் பலர் சேர்ந்து கட்ட -அது போலே இல்லை
நிறைய ஈஸ்வரங்கள் இல்லையே
சர்வ சக்தன் அத்விதீயன் அறிய சாஸ்திரம்
வையம் தகளியா -வார் கடல் நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக
சமுத்ரம் ஜகத்துக்கு உள்ளே வாராமல் இருக்க கட்டுப் படுத்த
ஈஸ்வர ஆஞ்ஞை உண்டே
பூமி காடின்யம் குலையாமல் -ஆஞ்ஞை
சூர்யன் இட்ட கார்யம் சரியான -ஆஞ்ஞை நியாமகம் உண்டே
அனுமானம் -கொண்டு சாதிக்கலாமா
நியாய சாஸ்திர -சாச்த்ரதுக்கு உட்பட்ட அனுமானம் ஒத்து கொள்ளலாம்
சாஸ்திர சம்மதமான அனுமானம் –
பிரத்யஷம் விருத்தமான அனுமானம் தள்ளப் படுவது போலே
சாஸ்திர விருத்தமான பிரத்யஷம் அனுமானம் தள்ள வேண்டுமே
கல்யாண சுந்தர சாஸ்த்ரி தர்க்க சாஸ்திரம்
மரம் கிளி -கண்டு -உண்டு இல்லை இருவரும்
கண்ணால் கண்டும் இல்லை என்பான் அனுமானம்
கிளையில் கிளி
மீதி கிளைகளில் கிளி இல்லையே
அத்தை கொண்டு சொல்கிறேன்
வாதம் -அனுமானம் குறை இல்லை
பிரத்யஷ விருத்தம்
விதண்டா வாதம் குதர்க்க வாதம் –
எம்பெருமான் கருத்து -காணும் வஸ்து இல்லையே
கண்ணே உன்னை காண –
கண்ணும் கருத்தும் இவருக்கு அவன் தானே சார்த்தி
மறுகல் செய்த நெஞ்சினை –
மறுகலில் ஈசன் -நான்காம் பத்து
இருத்தாக இருத்தினேன்
இசைவு பெற்றால்
தள்ளிக் கதவு அடைத்தாலும் போகான்
பரம பதம் போலே பொருந்தி இருந்தான் –
பெருமாள் தண்ட காரண்யம் சித்ர கூடம் பொருந்தி இருந்தால் போலே
இஹ வஸ்யாமி –பஞ்சவடி -சித்ர கூடே சீதா ராம
அநேக காலம் –
சரத் காலம் -சஞ்சீவ சரதாம் சதம் -மாங்கல்ய தாரணம் –
தந்து கயிறு
ஆனேன கண்டே -கழுத்தில் கட்டுவது
சௌபாக்யத்தால்
சரதாம் சரம் நூறு சரத்க்கல் ஜீவித்து இருக்க
சரத் காலம் ருது -ஓன்று தான் ஒரு வருஷத்தில்
ஜடாயு பஷி அடியில் வசிக்க -ஐயர் கண் வட்டத்தில் வர்த்திக்காத இலவு
நடுவில் ஆய்ச்சி ஆணையால் பிரிந்து
அது போலே ஆழ்வார் நெஞ்சில் பொருந்தி
வீற்று இருந்தான் -இருப்பாக இருத்தாக -ஸ்தாவர பிரதிஷ்டை
அன்றிக்கே
இருத்தாக -ப்ரீதி இல்லாமல் இருந்தாலும் மித்ரா பாவேன
விருத்தா -தேவர்களுக்கும் அவ்வருகே-மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா
குமரன்
தலை மகன் தலை மகள் கிழவன் கிழத்தி என்பார்
மலர் கிழத்தி மன்னு மா மலர் கிழத்தி திரு சந்த விருத்தம்
விளங்கும் சுடர் சோதி -பரோ ஜ்யோதி தீப்யதெ பிரகாசிக்கும்
உயரம் -தேஜோ ரூபமான பரமதம்
ஒருத்தா அத்விதீயம்
பிரகாரி ஒருவன்
பிரகாரங்கள் பல உண்டே பிரகாரி ஒருவனே
உன்னை –
சடக்கு என்ன முகம் காட்டின உன்னை கண்டு அனுபவியா நின்றது
மேலார்க்கும் மேலாய்
அவர்கள் போலே தன்னை அனுபவிப்பித்த நெஞ்சம் உகந்தது

————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 31, 2014

நாம் எளியோமான கோடியிலே அன்றோ
உமக்கு பேறு கை புகுந்து இருக்க
நீர் இங்கன் படுகிறது என் -என்ன
என் நெஞ்சு காண்கையிலே
விரையா நின்றது
என்கிறார்

————————————————————————————————————————————

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே

—————————————————————————————————————————————–

அம்மானை
சர்வேஸ்வரனை –

அமரர் பிரானைப்
நித்ய சூரிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்து
அனுபவிப்பிக்கும் உபகாரகனை –

பெரியானைப் –
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்
தனக்கு உரிமைப் பட்டவையாய்
தன்னை அவர்களால் அளவிட்டு அறிய முடியாமல் இருப்பவனை –

பிரமனை முன் படைத்தானை –
பிரமனை முன்னே உண்டாக்கினவனை –

அரியாய –
படைக்கப் பட்ட உலகத்திலே
அடியவன் பொருட்டு
அவன் சூளுறவு செய்த அந்த சமயத்திலே
தன்னை அழிய மாறி வந்து அவதரித்தவனை –

வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற –
அடியாருக்கு உதவுகை அன்றிக்கே
அவர்களோடு கலந்து இருக்கும் தன்மையானை
வரி வாள் அரவு
வரியையும் ஒளியையும் உடைய அரவு
வரி -அழகுமாம் –

கரியான் –
வெளுத்த நிறத்தை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே
ஒரு காளமேகம் சாய்ந்தால் போலே
ஆயிற்று கண் வளர்ந்து அருளுவது –

கழல் காணக் கருதும் கருத்தே
என்மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது
படுக்கைக்கு பரபாகமான வடிவும்
அதற்கு பரபாகமான திருவடிகளும்
ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது

எளியோமான கோஷ்டிபேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன
நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்

எளியவன் கோஷ்டி நீர்
பேறு கை புகுந்து இருக்க இங்கனே படுகிறது என்ன
நெஞ்சு உன் கழல் காண துடிக்க
சர்வேஸ்வரன்
அமரர் பிரான் நித்ய சூரிகளுக்கு கட்டுக் கொடுத்து உபகரிதவன்
பெரியான் -ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி இவன் அதானம்
யாராலும் அரிய முடியாத
பிரமனை முன் படைத்தானை அரியானே
அரியாய -நரசிம்கன்
பரத்வம் சொல்லி
ஸ்ருஷ்டமான ஜகத்தில்
பிரதிஞ்ஞா சம காலம் ஆஸ்ரீதருக்காக
அழிய மாறி தோற்றி
அரவின் ஆணை -சம்ச்லெஷக ஏக ஸ்வாபவன்
வரி அழகு -செர்தியால் வந்த
கரியான்
வெளுத்த அரவின் மேல் காள மேகம் பரப்பாக சோபை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
காண
கழல் -சிவந்த உள்ளம் கால்
பரபாகம்
நீல மேனி திருவடியில் -செம்கண் கருமேனி அம கை தலம் ஏறி
செங்கமலம் தேனை பருகும் சங்கு போலே -அங்கும் பரபாகம்
இந்த சேர்த்தி அழகைக் காண த்வரித்து நின்றது நெஞ்சு

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 29, 2014

நீர் இங்கன் அஞ்சுகிறது என் என்ன –
தேவர்கள் முதலானோருக்கு அரியை ஆகையாலே
எனக்கும் அரியை ஆகிறாயோ-என்று
என் நெஞ்சு கலங்கா நின்றது –
என்கிறார் –

——————————————————————————————————————————————-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே

——————————————————————————————————————————————–

உறுவது இது என்று –
சீரியது அடிமை செய்யும் இது -என்று

உனக்கு ஆட்பட்டு –
ஆத்மா பகவானுக்கு அடிமைப் பட்டது என்ற சேஷத்வ ஞானம் வந்ததும் பின் சீரிய பயன்
கைங்கர்யமே அன்றோ –

நின் கண் பெறுவது எது கொல் என்று –
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –
சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்
கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து
சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ
அன்றி
என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –
என்கைக்காக சொல்லுகிறார் எனபது –

பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் –
நாம் விரும்பிய படி பலிக்கும் என்னும் அறிவு இன்றிக்கே இருக்கிற
என் நெஞ்சம் கலங்கா நின்றது –
இங்கனம் கலங்குகைக்கு அடி என் என்னில் –
மனத்தின் உடைய அறிவின்மையே இதற்கு காரணம் –
நீயும் கூட இதற்கு காரணம் –

வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –
தேவர்களுக்கும் தானவர்களுக்கும் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
தேவர்களுக்கும் தானவர்களுக்கும் என்றும் ஒக்க அறிய அரியையாய் –
தேவானாம் தானவானாம்ச சாமான்யம் அதிதைவதம்
சர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தா
அந்நிலையிலே ஒரு சிறுக்கனுக்கு உன்னை உள்ளபடி அறியலாம்படி இருந்தாய்
அதில் நான் எக்கோடியில் ஆகிறேனோ -என்ற அறியாமை –
தேவர்களையும் அசுரர்களையும்பிரித்த பின்னர் அர்ஜுனன் -நான் எக் கோடியிலே ஆகிறேனோ
என்று அஞ்சினாப் போலே
பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –
தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது
எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்
உமக்கு இனி
நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி

தேவாதிகளுக்கு அரியை
அதனால் எனக்கும் அறியனாவாயோ நெஞ்சு பயப்படுகிறது
பேதையேன் நெஞ்சம் மருகல் செய்ய
வானவர் தானவர்க்கும் அரிய
உறுவது இது சீறியது அடிமை செய்வதே -உறுவது
ஸ்வரூபம் பார தந்த்ர்யம் அறிந்தால் செய்ய வேண்டுவது கைங்கர்யம்
உனக்கு ஆள் பட்டு
அநந்ய பிரயொஜனர்
உன் கண் பெறுவது எது -சொல்வாரோ
ஸ்வரூபம் உணர்ந்து
கைங்கர்யம்-,ஆம்பரிசு அறிந்து கொண்டு
மெய்ம்மையை உள்ளபடி உணர்ந்த பின்பு
ஈஸ்வரன்-வேறு ஒன்றை கொடுத்து விடுவான் அல்லன்
தன்னையே கொடுத்து அருளுவான் –
இப்படி இருக்க
உன் பக்கல் பெறுவது எது -என்பான் என்
க்ரமத்தில் செய்கிறோம் தவரை அறிந்து சம்சார இருப்பு நீக்கி
ஆகட்டும் பார்க்கலாம் சுவாமி போலே இல்லாமல் –
சம்சார இருப்பே சேஷமாய் போகுமோ
உன் பக்கல் பெறுவது எது என்று பேதையேன் நெஞ்சு
உறுதி குலைந்து நெஞ்சு கலங்க
விவேக சூன்யத்தை பேதையேன்
ணீ தான் இதுக்கடி
வானவர்க்கு
தேவானாம் தானாவான் பொதுவாக இருந்தும் -ஒக்க அரிய
சிருக்கனுக்கு அறியும் படி
வானவர்க்கு அறிவது அரிய
தானவர்க்கு அறிவது அரிய
இருவருக்கும் ஒக்க
அரியாய நர சிம்கனாய் -சிருக்கன் -பிரகலாதனுள்ளபடி
நான் எந்த கோடியில் ஆகிறேனோ –
தேவாசுர விவாகம் அநந்தரம்
தைவி சம்பத்து ஆசூர சம்பத்து அர்ஜுனன் சொக்கிக எந்த கோஷ்டி
நீ தைவி கோஷ்டி தான் மாசுச -பரிஹாரம் செய்து அருள
சௌலப்யம் பிரகாசிப்பித்தது ஆழ்வார்
கை புகுந்தோம் என்று இருக்காய் அமையாதோ
எளியவன் கோஷ்டி
எளியவர்க்கு உதவினான் என்றீர்
அடி நாயேன் சொன்னீர்
யாருக்கு கிடைப்பேன் நீரே சொல்லும்
சங்கைக்கு இடமே இல்லையே -சமாதானம் இப்படி காட்டி அருளி –
சௌசீல்ய சௌலப்யம் காட்டிய பின்பு
அம்மான் -நமக்கு என்று யெர்ப்பட்டவன் –
நின் கண் பெறுவது எது கோள் மறுக வேண்டாமே

———————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 29, 2014

இப்படிக் கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே
துன்பத்தையே கைம்முதலாக கொண்டு காப்பாற்றுகின்ற
உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –
என்கிறார்

————————————————————————————————————————————-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே

——————————————————————————————————————————————

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்-
தகுதி அற்றவனாய்
அற்பனாய் இருந்து வைத்து
துயரத்தாலே கூப்பிடா நின்றேன்
ருசியாலே தவிர மாட்டார்
கிட்டினால் அத்தலைக்கு குற்றமாம்படி ஆயிற்று தம்முடைய நிலை
நாய் தன் தலைவனுக்கு தான் விரும்பிய பொருளில் ருசியை தெரிவிப்பது வாலாலே ஆயிற்று
அவ்வால் தான் கூழை
ஆனால் தெரிவிக்கை அரிதாகும் அன்றோ –
அது போலே என் மனமானது நோவு படா நின்றது
இதனால் நமக்கு ஓடுகிற துயரம் பேச்சுக்கு நிலம் அன்று
என்பதனைத் தெரிவித்தபடி –
அன்றிக்கே
சாதனம் ஒன்றும் இல்லாதவனாய் வைத்தும் ஆசைப் படா நின்றேன் -என்கிறார் -என்னுதல்

மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் –
இந்த்ரன் கல் மழையைப் பெய்த அளவிலே
மலையை எடுத்து ஆயர்களையும் பசுக்களையும்
துயரமே கைம்முதலாக பாதுகாத்தவனே –

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே –
அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று
பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது
ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது
ஆனபின்பு
பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த
இம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ
என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்

கூப்பிட செய்தேயும் வர காணாமை யாலே
புறம்பு ஆனவனொ ரஷிக்கும் வர்க்கத்துக்கு –
உனக்கும் அப்படி -வரம்பு உண்டோ
எம்பெருமானார் நிர்வாகம்
ஆர்த்தியே கைமுதல் கதற கூட வேண்டாம்
ரஷிக்கும் குணம் உண்டே
அடி நாயேன் -அழைக்கின்றேன்
வாலால் -ஆட்டி ப்ரீதி காட்டும்
குதறிப் போன வால் கொண்டு
மழைக்கு -துக்கமே காரணம் -கோவர்த்தனம் கொண்டு காத்தாயே
எனக்கு மலை எடுக்க வேண்டாம்
கண்ணால் கண்டால் போதும்
அடி நாயேன் அயோக்யன் சூத்திரன் ஆர்த்தியால் கூப்பிடுகிறேன்
கிட்டினாலும் அவத்யம் –
ஆசை -துடிக்க பண்ணும்
கிட்டினால் -நைச்ச்ய பாவம் –கொண்டு அவத்யம் -ஆகும்
நாய் -வால் கொண்டு ருசி தெரிவிக்கும்
மொட்டை கூழ் ஆனால் தெரிவிக்க முடியாதே
ஸ்வரூபம் அயோக்கியம் நீசம்
கிலேசம் பேச்சுக்கு நிலை இல்லை
ஆசைப்படா நின்றேன் -சாதனம் உள்ளவர் போலே -மொட்டை வால் கொண்ட நாய் போலே
இந்த்ரன் கல் மழை-ஆர்த்தியே கை முதலாக ரஷித்து
இழக்க -ஆளவந்தார் -திருமாலை ஆண்டான் -வரையாதே ரஷிக்கும் குணம் இல்லை என்று சொல்லும் படி ஆனதே –
மகா குணம் -ஆடுகள் கன்றுகள் இடையர்கள் அனைவரையும் ரஷித்தாயே
பேகணியா நின்றேன் வருந்தினேன்
எம்பெருமானார் ஓடுகிற தசைக்கு சேராதே
குணம் கொண்டாடும் பிரகரணம் இது
குணம் இருந்தும் நான் இழக்கிறதால் நான் புறம்பு ஆனேனோ
அப்பால் பட்டவனோ நான் –
இரண்டு நிர்வாஹம்
அருள் பிழைக்கின்றது
தப்பி தவறி போகின்றது சப்த அர்த்தம்
உன்னிடத்தில் ஆளவந்தார் நிர்வாகமாக திருமாலை ஆண்டான் –
என்னிடத்தில் எம்பெருமானார் நிர்வாகம்

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 29, 2014

தமக்கும்
தம்முடைய மனதுக்கும் உண்டான
காதல் பெருக்கை
அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————–

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –

—————————————————————————————————————————-

கண்ணே –
எனக்கு கண் ஆனவனே

உன்னைக் காணக் கருதி-
எல்லை இல்லாத இனியனான உன்னைக் காண ஆசைப் பட்டு
கண்ணைக் கொண்டே கண்ணை காண இருக்குமா போலே
காணும் இவர் இருக்கிறது –
காண்பதற்கு கருவியான கண்களும்
காணப்படும் விஷயமும்
அவனே என்கிறார் –
சஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண
ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -சுபால உபநிஷத்
பார்கின்ற கண்களும் பார்க்கப் படுகின்ற பொருள்களும்
நாராயணனே -என்னக் கடவது அன்றோ –
அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்
பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய
வழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –

என்நெஞ்சம் –
நல்வினை தீவினைகட்கு காரணமாய் கொண்டு
விஷயங்களிலே பரகு பரகு என்று
வாரா நிற்கும் அன்றோ சம்சாரிகள் உடைய மனம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் மனம் அன்றோ -தொழுது ஏழு -எனபது

எண்ணே – கொண்ட சிந்தையதாய் —
எண் கொண்ட என்னத்தை உடையதாய் -என்றது
பலவிதமான எண்ணங்களை எண்ணி -என்றது –
காண வேண்டும்
காணாதே பட்ட துக்கத்தைப் போக்க வேண்டும்
அடிமை செய்ய வேண்டும் –
என்று எண்ணி என்றபடி –

நின்று இயம்பும்-
எப்பொழுதும் கூப்பிடா நிற்கும்
கூப்பிடிகை யாகிற செயலையும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும்
கண்ணே -என்கையாலே வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று
உன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று
எண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு
இந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று
இருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –

விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயைநண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –
இதனால்
இது தான் மனத்திற்கேயாய் நான் செயல் அற்று இருக்கிறேனோ
என்பதனை தெரிவித்தபடி
பிரமன் முதலான தேவர்களுக்கும்
சனகன்முதலான முனிவர்களுக்கும்
என்றும் ஒக்க காண அரியையாய் இருக்கிற உன்னை
நான் கிட்டாது ஒழிவனோ
பெற்றே முடிப்பேன் -என்று நான் கூப்பிடா நின்றேன்
இவர் பெற்றே முடிப்பன் எனபது என் கொண்டு -என்னில்
வேறுபட்ட சிறப்பினை உடைய தேசங்களில் வாழ்கின்ற வர்களாய்
தங்களுக்கு என்ன ஒரு கைம்முதல் உண்டாய் இருக்குமவர்கள் ஆகையாலே விளம்பத்துக்கு காரணம் உண்டு அவர்களுக்கு
அங்கன் ஒரு கைம்முதல் இல்லாதவர்களுக்கு விளம்பத்துக்கு காரணம் உண்டோ
இல்லையே என்னும் உறுதியைக் கொண்டு கூப்பிடா நின்றார் என்க –
நண்ணாது ஒழியேன் -என்பதற்கு
அவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –
நண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது
தேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்
அங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது
எடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –
எடுக்க வேண்டும் என்று இருந்தேன்
எடுப்பான் தானாய் இருந்தான்
எடுத்தால் பெறுவது தன்னையே இருந்தது
ஆனா பின்பு
எனக்கு என்ன கண் அழிவு உண்டு –

நெஞ்சு சாபலம் இதில்
கண்ணே எம்பெருமானே
உன்னை காண கருதி
எண்ணே கொண்ட சிந்தை
எண்ணிக் கொண்டே
நண்ணாது ஒழியேன் கிட்டாவிடில்முடியென்
கிட்டாமல் போகேன்
கண்ணே கண்ணாக இருப்பவனே
நிரதிசய போக்கின்
கண்ணைக் கொண்டு கண்ணை பார்க்க ஆசைப் படுகிறார்
கண்ணாடி கொண்டு இல்லை –
காண்கைக்கு சாதனம் காணப் படும் அவனே
சஷூஸ் நாராயண -த்ரஷ்டவ்ய நாராயண
அவன் தன்னாலே அவனை பெற
உபாயமும் உபேயமும் அவனே
பிராப்ய நியதி போலே பிராபக நியதி உண்டே
அவனைக் கொண்டே அவனை பெற –
வேறு ஒன்றாலும் அவனை பெற கூடாது
அவனை கொண்டு வேற ஒன்றை பெற கூடாதே
கண்ணே காணக் கருதி
ஏன் நெஞ்சம்
பந்த ஹேது சம்சாரிகள் உலகியல் விஷயம் பரக் பரக் பார்த்து வாளா நிற்கும்
இவர் நெஞ்சு மயர்வற மதி நலம் அருளப் பெற்றார் நெஞ்சு தொழுது ஏழு
எண்ணே கொண்ட
மனோ ரதம் பல
எண்ணிக்கை உள்ள
காண வேண்டும் ஆசை
காணாத பட்ட துக்கம் போக்க
கண்ட பின்பு அடிமை செய்ய ஆசை
நின்று நிரந்தரமாக
இயம்பும்
துடிப்பின் காரணம் பிரவர்த்தி
எண்ணே -அதிகாரி ஸ்வரூபம் யாத்ரை
நஞ்சீயர் இரக்கம் உபாயம் -இரங்கேலோ
இனிமை -உபேயம் அனுபவிக்க
இச்சை அதிகாரம் -தகுதி –
கண்ணே உபாயம்
உன்னைக் காண -பிராப்யம்
எண்ணே கொண்ட இச்சை அதிகாரி ஸ்வரூபம் யாத்ரை சொல்லுகிறது -தேக யாத்ரை உயிர் உள்ளவரை செய்ய வேண்டியது
தேகம் தரித்து இருக்க செய்ய வேண்டியது இச்சை ஒன்றே
எண்ணே கொண்ட சிந்தையராய்
விண்ணோர் முனிவர் காண்பதற்கு அறியா
நெஞ்சுக்கு தான் கை வாங்கி இல்லாமல்
கிட்டாது ஒழிய
பெற்று முடிப்பன் கூப்பிடா நின்றேன்
கிட்டாது ஒழியேன் – நான் தரியேன் -ஆயத்தான் நிர்வாகம் -பட்டர் சிஷ்யர்
மகா விசுவாசம் சொல்கிறது –
நம்பிள்ளை -கிட்டாமல் இருக்க மாட்டேன் நிச்சயமாக கிட்டி விடுவேன் பிரகரணம் சேர அர்த்தம்
எத்தை கொண்டு
நித்ய சூரிகள் காண முடியாத வஸ்துவை இவர் காண்பேன் என்கிறது
விலஷன தேச வாசி கை முதல் ஞான சக்தி உள்ளவர்கள்
விளம்ப ஹேது சுபிரவ்ர்த்தி –
ப்ரஹ்மாதிகள் சனகாதிகள் விண்ணோர் முனிவர் -அர்த்தம்
ஒன்றுமே கை முதல் இல்லாமல்
வாளேறு தெலெரு கதை போலே
சம்சார அகப்பட்ட இவரை எடுக்க
எடுக்க வேண்டிய நிலத்தில் இருந்தேன்
எடுக்க ஆசை பட்டு பிரார்திக்கிற
யெடுப்பானும் சர்வ சக்தன்
எடுத்தார் பெறுவது தனக்கு லாபம்
என்ன கண் அழிவு உண்டு
நண்ணாது ஒழிவேன் மகா விசுவாசம் -இது தானே
பேறு பெற்றே தீருவேன் –

————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-