Archive for June, 2013

ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

June 23, 2013

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-3-

(சேமம் -க்ஷேமம்
விஷய சபலனாய் -உஜ்ஜீவனத்துக்கு ஆள் இல்லாமல்
நான் உய்ய நான் கண்டு கொண்டேன் -ஒன்றும் வழி இல்லா நான் அன்றோ -என்பதால் இரண்டு நான்)

வியாக்யானம் –
சேமமே வேண்டி-
சத்ருக்களால் ராஜாக்கள் உள்ளிட்டாரால் நமக்கு ஒரு நலிவு வாராது ஒழிய வேணும்
எல்லாராலும் ரஷை பெற்று செல்ல வேணும் என்று ஆயிற்று நெஞ்சால் நினைத்து இருப்பது

தீவினை பெருக்கி-
ரஷையே பெற்றுச் செல்ல வேண்டும் என்று இருந்தால் அது சபலமாம்படியான
சத் கிரியை பண்ணாதே பாபத்தை யாயிற்று கூடு பூரிப்பது

தெரிவைமார் உருவமே மருவி –
நல்லதையே வேண்டி இருக்கும் காட்டில் அது வாராதே
செய்ததின் பலம் இறே வருவது –
பண்ணி வைத்த பாபங்கள் கொடு போய் விஷயங்களிலே மூட்டும்

உருவமே மருவி –
அகவாயில் இழயில் த்யஜிக்கலாம் இறே
அகவாய் நஞ்சாய் -ஸ்வ கார்ய பரராய் இறே இருப்பது
அகவாயிலே இழியில் அநாத்ம குணம் கண்டு மீளலாய் இருக்கும் இறே
வடிவில் தோஷங்களை மறைத்து இறே வைப்பது

மருவி –
அத்தையே ஸூபாஸ்ரயமாக மனனம் பண்ணியாய் இற்று இருப்பது-

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஊமனார் -ஊமைகள்
ஊமை கண்ட கனவிலும் பழுதாய்
ஊமை கண்ட கனா வாய் விட மாட்டான் இத்தனை நினைத்து இருக்கும்
அங்கனும் அன்றியே நெடுநாள் அனுபவித்துப் போந்த விஷயங்களில் போய் இருந்து
அநந்தரம் நினைத்து இருக்கைக்கும் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

அங்கன் அன்றிகே
ஊமை கண்ட கனா வாய் விட மாட்டிற்றலன் ஆகிலும் நினைத்து இருக்கலாம்
இவை நினைக்கில் பய அவஹம் ஆகையாலே நினைக்கவும் ஒண்ணாது என்கை
ஸ்ம்ருதி விஷயமாவது ஒன்றும் இல்லை
ஸ்ம்ருதி விஷயம் ஆயிற்றது உண்டாகில் பயாவஹமாய் இருக்கும்

ஒழிந்தன கழிந்த அந்நாள்கள் –
நமே துக்கம் ப்ரியாதூரே நமே துக்கம் ஹ்ருதேதிவா ஏததேவா நுசோசாமி
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே–யுத்த-5-5-
பிரியையாவாள் தூர இருந்தாள் என்று வெறுத்து இருக்கிறோம் அல்லோம்
அது நாலு பயணம் எடுத்து விடத் தீரும்
வலிய ரஷசாலே அபஹ்ருதை என்று வெறுத்து இருக்கிறோம் அல்லோம்
அது அவன் தலையை அறுக்கத் தீரும்
நமக்கு சோக நிமித்தமும் இதுவே
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே -போன காலத்தை அம்பாலே மீட்க ஒண்ணாதே

நீர் பற்ற சொல்லுகிற விஷயத்துக்கு இந்த தோஷங்கள் இல்லையோ என்ன –
காமனார் தாதை-
உருவமே மருவிலும் பசை போரும்
உடம்பைப் பற்றிலும் ஊதியம் போரும்-(ஊதியம்- விருத்தி கைங்கர்யம் )
தன் வடிவாலே நாட்டை யடைய பகட்டித் திரியுமவனுக்கும் உத்பத்தி ஸ்தானம்
தன் கையில் நாட்டார் படுவது அடங்க அவன் தான் இவன் கையிலே படும்
சாஷான் மன்மத மன்மத —

நம்முடை அடிகள் –
கீழில் விஷயங்களுக்கு சொன்ன குற்றம் இல்லாததுவே யன்று இதுக்கு வாசி
அவை அப்ராப்த விஷயம் -இது ப்ராப்த விஷயம்

நம்முடை அடிகள் -சர்வ ஸ்வாமி

தம்மடைந்தார் மனத்து இருப்பார் –
வடிவைக் காட்டித் துவக்கி -கையில் உள்ளது அடங்க அபஹரித்து உடம்பு கொடாதே
எழ வாங்கி இருக்கை அன்றிக்கே –
ஆசா லேசமுடையார் நெஞ்சு விட்டு போய் இருக்க மாட்டாதவன் –
கலவிருக்கையான ஸ்ரீ பரமபதத்தையும் விட்டு நெஞ்சே கலவிருக்கையாக-ராஜ தர்பார்- கொள்ளும்-

தம்மடைந்தார் மனத்து இருப்பார் -நாமம் –
இவ்வர்த்தம் இத்தனைக்கும் வாசகமான திருநாமம்
தேக குணமும்
சர்வ ஸ்வாமித்வமும்
சௌலப்யமும்
வாத்சல்யமும் இறே இதுக்கு அர்த்தம் ஆயிற்று

(தேக குணமும் -காமனார் தாதை
சர்வ ஸ்வாமித்வமும் -நம் அடிகள்
சௌலப்யமும் – தம்மடைந்தார் மனத்து இருப்பார் –
வாத்சல்யமும்-தம்மடைந்தார் மனத்து இருப்பார் -)

நான் உய்யக் கண்டு கொண்டேன் –
அசந்நேவ -என்று முடியும்படியான நான் உஜ்ஜீவிக்கும்படி கண்டு கொண்டேன்

நான் கண்டு கொண்டேன் –
இனிக் காட்சி இல்லையோ என்னும் படி கை கழிந்த நான் உத்தேச்ய சித்தி உண்டாகப் பெற்றேன்
இனி சத்தை உண்டாக மாட்டாது -காட்சி உண்டாக மாட்டாது -என்னும்படியான நான்
உஜ்ஜீவிக்கவும் பெற்று
நான்
காணவும் பெற்றேன் என்கிறார்

நான் உய்ய நான்-
என்று இருகால் சொல்லுகிறது
லாபத்தால் வந்த ப்ரீதிக்கு போக்கு விட்டுச் சொல்லுகிறார்
(மன் மநாபவ இன்டக்ஹ்யாதி –நான் நான் என்று நம்மைப் பெற அவன் சொல்வது போலே )

நாராயணா என்னும் நாமம் –
சந்தோ தாந்த உபரத ஸ்திதிஷூஸ் சமாஹிதோ பூத்வாத் மன்யே யாத்மானம் பஸ்யேத் -ப்ருஹதாரண்யம்
என்று சமதமாத்யுபேதர் சொல்லக் கடவ திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவை மா உருவமே மருவி -என்று
அநாத்ம குணோபேதனாய் போந்த நான்
ஆத்ம குணோ பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன்

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

June 23, 2013

அவதாரிகை –

அநாதி காலம் பகவத் தத்வம் என்று ஓன்று உண்டு -என்றும் அறியாதே
விஷய ப்ரவணராய் போருகையாலே –
வாடினேன் -என்றும் –
இளையவர் கல்வியே கருதி ஓடினேன் -என்றும் இறே கீழ் சொல்லி நின்றது –
அதில் அனுபவித்த கொங்கைகளையும் காலம் அடங்க வ்யர்தமே போயிற்று என்றும்  சொல்லி –
இப்படி போன காலமும் வ்யர்த்தம் ஆகாதபடியான திரு நாமத்தைக் காணப் பெற்றேன் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும்-என்றபடியே
போன காலத்தையும் நல்ல நாளாக்கும்-

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -திரு நெடும் தாண்டகம்––29-

சரம பர்வம் சரம திவ்ய தேச மங்களா சாசனமும் திருக்குடந்தையே
ஆறு திவ்ய பிரபந்தங்களிலும் திருக்குடந்தை மங்களா சாசனம் உண்டே

———-

ஆவியே அமுதே என நினைந்து உருகி யவரவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே போய் ஒழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2..

(பாவியேன் என்பதால் உணராமல் -உணராதே பாவியேன் ஆனேன் –
தூவிசேர் அன்னம்-சிறகினால் அநு ரூபமான -ஸ்ரீ கோமள வல்லித் தாயார் -ஸ்ரீ ஆராவமுதனுடன் ஸம்ஸ்லேஷித்து
நாவினால் கண்டு கொண்டேன் -நாவால் புகழ உள்ளத்தில் இருந்தமை காட்டக் கண்டு -அவனைக் கொண்டேன் -)

வியாக்யானம் –

ஆவியே அமுதே –
ஆவியே அமுதே அலை கடல் கடைந்தவனே அப்பனே -எட்டாம் பத்து திருவாய் -என்றும் –
ஆவியே அமுதே என்னை ஆளுடைத் தூவி யம் புள் உடையாய் -திருவாய்-3-8-7–என்றும்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை யாயிற்று இங்கே சொல்லிற்று –

வகுத்த விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை அப்ராப்த விஷயத்தில் சொன்னேன் –
தாரகத்வமும் கண் அழிவற்று போக்யதையும் கண் அழிவற்று இருப்பது ஸ்ரீ பகவத் விஷயம் இறே
தாரகம் அன்றிக்கே பாதகமுமாய் -போக்யதை அன்றிக்கே பீபத்ஸ்யமுமாய் இருக்கிற
விஷயங்களிலே யாயிற்று வார்த்தை சொல்லிப் போந்தது -(ஆவி -தாரகம்-அமுது -போக்யம்)
த்வம் ஜீவிதம் த்வமஸிமே ஹ்ருதயம் மதீயம் – என்று இறே சொல்லிப் போந்தது-

என நினைந்து –
இப்புடைகளிலே நினைப்பது அநேகத்தை  இறே -என்று ஆயிற்று ஸ்ரீ ஜீயரருளிச் செய்தது
ஸ்ரீ பிள்ளை இங்கன் நினைந்து வாய் விட மாட்டாதே –
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்று இங்கனே சொல்லாமோ -என்று
ஸ்ரீ ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய
நீர் இவரிலும் பக்தராய் இருந்தீர் -என்று அருளிச் செய்தார்-
(ஸ்ரீ நம்பிள்ளை கலிகன்றி தாசர் அன்றோ -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து அருளிச் செய்த வார்த்தை )

என நினைந்து உருகி –
இங்கனே அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே மயங்கிக் கிடப்பர் –
எத்தனை விஷயங்களிலே இப்படி கால் தாழ்ந்து போந்தது என்னில் –

அவரவர்
காலம் அநாதி -ஆத்மா நித்யன் -பரிகிரஹித்த சரீரங்களுக்கு எல்லை இல்லை –
அவ்வவோ சரீரங்கள் தோறும் விஷயங்களுக்கும் எல்லை இல்லை –
அவ் விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து இறே போந்தது -ஆகையாலே -அவரவர் -என்னும் இத்தனை –

பணை முலை –
ஒருத்தன் நோவு பட்டான் என்றால் -பிற்பாடரானோம் -உதவப் பெற்றிலோம் –
ஹ்ரீரேஷாஹி மமதுலா -என்றும் –
நத்யஜேயம் -என்னுமவன் அன்றே
இளிம்பனாய் இருந்தான் அகப்பட்டான் -இனி இவன் கையில் உள்ளது அடங்க நம்மது –
என்று அதுவே எருவாக பணைக்கும் ஆயிற்று
நம்மைப் பெற வேணும் என்று உருகினான் -என்றால் இரங்கி உடம்பு கொடுக்கும்
அத்தனை நீர்மை இல்லையே

பணை முலை  துணையா –
த்வங் மாம்ஸ மேதோஸ்த்தி மயமான க்ரந்தியைப் பற்றி (தோல் மாம்சம் எலும்பு சீழ் இத்யாதி அன்றோ )
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்று இருக்குமா போலேயாய் இறே இருப்பது
இப்போது சாபலத்தாலே விரும்புகிறோம் என்று இருக்கை அன்றிக்கே
அத்ருஷ்டத்தையும் இதுதானே தருமது போலே யாயிற்று -ஆதரிப்பது -அத்ருஷ்டத்தை மறந்தபடி

துன்னு குழல் கரு நிறத்து என் துணையே -திரு நெடும் தாண்டகம்–16-என்று
இருக்குமத்தை இறே இங்கே நினைப்பது-(ஸ்ரீ கிருஷ்ணனின் குழல் நிறமே என்றது போலே)

பாவியேன் –
நித்தியமாய் -ஏக ரூபமாய்- ஞநானந்த லஷணமாய் – ஸ்ரீ ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்வத்தோ பாதியாய்-
இருக்கிற ஆத்மா வஸ்து படும் எளிவரவே இது

உணராது
இவ் விஷயத்துக்கு நம்மை வகுத்தது என்று உணர மாட்டாதே

எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள்
எத்தனை காலமும் இப்படி வ்யர்த்தமே  போகிறது
காலம் அடங்க வ்யர்தமே போயிற்று-அணைக்கு அவ்வருகு பட்ட நீரோபாதி இறே
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே
(ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பிராட்டியை பிரிந்த காலத்தை மீண்டும் கொண்டு வர முடியாதே என்று வருந்தினால் போலே )

பழுது போய் ஒழிந்தன நாள்கள்
ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே கண் உறங்கவும் அவசரம் இன்றிக்கே போகக் கடவ காலம் அநர்த்தத்தோடே போயிற்று –
கைங்கர்யத்தோடே அடிக் கழஞ்சு பெற்று செல்லக் கடவ காலம் அநர்த்தத்தோடே போயிற்று-

தூவி சேர் இத்யாதி
இப்படி கை கழிந்தது உகந்து அருளின நிலங்களிலே இங்கே ஆகையாலே ஸ்வரூபம் பெற்று மீண்டது
தூவி -சிறகு –
சிறகால் வந்த அழகை உடைத்தாய் அன்னம் சஹ சரத்தோடே புணர்ந்து வர்த்திக்கிற தேசம்
சர்வ பூத சரண்யமான தேசம்
அன்னத்தோடு சர்வதா ஸாம்யம் சொல்லலாய் இருக்கையாலே
(அள்ளலில் ரதி இன்றி இத்யாதி -அவனை அன்னமாக ஆச்சார்ய ஹிருதயம் )
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு ஸ்ரீ ஆரா அமுத ஆழ்வார் ரமித்து வர்த்திக்கிற தேசம்
சரண்ய வஸ்து குறைவற வர்த்திக்கிற தேசம்
பொறுப்பாரும் உண்டாய் பொறுப்பிப்பாரும் உண்டாகையாலே குறைவற்ற தேசம்-

சூழ் புனல்
அசேதனமான ஜலமும் அங்கே வந்தால் ஒருகால் சூழ வாயிற்றுப் போவது
தாபார்த்தருக்கு ஸ்ரமஹரமான தேசம்

குடந்தையே தொழுது –
அவசா ப்ரதிபேதிரே -என்கிறபடியே தம் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க
தொழுது கொடு நிற்கக் கண்டார்-( துரியோதனன் தானே எழுந்தானே-தாங்கள் தம் வசம் இல்லாமல் )

என் நாவினால் –
ஆவியே அமுதே -என்ற என் நாவினால்
இப் பிரஜையை பெற்று வாழ்ந்தேன் -என்பாரைப் போலே -கரணம் -இன்று பெற்ற பேற்றுக்கு
பாங்காய் இருக்கையாலே வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணினாலும் -என் நா -என்னலாம் இறே
இதரை ஸ்தோத்ரம் பண்ணித் திரிந்த இவ் உடம்போடே

உய்ய நான் கண்டு கொண்டேன் –
மறந்த மதியின் மனத்தால் இறந்தேன் எத்தனையும்–என்ற நான்
உஜ்ஜீவிக்கும்படி கண்டு கொண்டேன்

கண்டு கொண்டேன் –
திருமந்த்ரத்தின் உடைய அர்த்தத்தை அனுசந்தித்தால் அது ஸ்வரூபமாய் இருக்குமா போலே
சப்தத்தை சொல்லுகையும் ஸ்வரூபமாய் இருக்கும் இறே
இப்படி பிராப்தமாய் இழந்ததை காணப் பெற்றேன் என்கை-

நாராயணா என்னும் நாமம் –
நா வாயில் உண்டே என்னுமத்தை –
நா வாயில் உண்டானால் ஓவாது உரைக்கும் உரை இறே

நா வாயில் உண்டே
இது முந்துற முன்னம் தேடித் போக வேண்டாவே

நமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
ஓவாது உரைக்கும் உரை யாகிறது உச்சி வீடு விடாதே சொல்ல வேணும் என்கிறது அன்று
எட்டு அஷரம் ஆகையாலே நடுவே இளைக்க வேண்டாதே சொல்லி இளைப்பாறலாம் என்கை –
சஹஸ்ர அஷரீ மாலா மந்த்ரமாய் -இது கற்பதில் நரகத்தை புக்கு போக அமையும் என்னும்படி இராது ஒழிகை-

என்னும் நாமம்
முன்பு இழந்த காலமும் வ்யர்த்தம் ஆகாதபடியான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்

சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும்
செங்கண் மால் எங்கள் மால் என்பது ஒரு நாள் உண்டாகில் -சென்ற நாள் செல்லாத எந்நாளும் நாளாகும் –

ஸ்ரீ திருமந்த்ரத்தை சொல்லுகைக்கு உறுப்பாகையாலே
போன காலமும் நல்ல காலமாய்
செல்லுகிற காலமும் தானே நல்ல காலம்
ஸ்ரீ திருமந்தரம் சொன்னால் மேல் தானே  ஓர் அநர்த்தம் விளையாது இறே..

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

June 23, 2013

பிரவேசம்
இவ் வாழ்வார் ஆகிறார் –
ஆத்மாவை வெய்யிலிலே வைத்து உடலை நிழலிலே வைத்துப் போந்தார் ஒருவர் ஆயிற்று-
ஆத்மாவை வெய்யிலிலே வைக்கையாவது –
ஸ்ரீ பகவத் விஷயத்தில் முதலிலே இழியாமை-
உடம்பை நிழலிலே வைக்கையாவது –
அநாதி காலம் விஷய பிரவணராய் -அதுவே யாத்ரையாய் போருகை-
நிழல் ஆவது ஸ்ரீ பகவத் விஷயம் இறே –

ஸ்ரீ வாஸு தேவ தருச் சாயா -ஸ்ரீ கருட புராண ஸ்லோகம்-
பார்த்த பார்த்த இடம் எல்லாம் நிழலாய் இருக்கை-
எங்கும் ஒக்க நிழல் செய்த இந் நிழல் அல்லது புறம்பு ஒதுங்க நிழல் இன்றிக்கே இருக்கை-
(வாஸூ தேவன் எங்கும் இருப்பதால்-நிழல் இல்லை நீர் இல்லை உன் பாத நிழல் அல்லால் )

நாதிசீதா ந கர்மதா —
அற வவ்வல் இடுதல் -வேர்த்தல் செய்யாது இருத்தல்-

நரகாங்கார சமநீ
தானே ஏறிட்டுக் கொண்ட நரகம் ஆகிற பெரு நெருப்பையும் அவிக்கவற்று –
(இந்த வாஸூ தேவ மரமோ சம்சாரம் ஆகிற நெருப்பை அழிக்கும் )

சா கிமர்த்தம் ந சேவ்யதே –
பிராப்தம் அன்று என்ன ஒண்ணாது –
துக்க நிவர்த்தகம் அன்று என்ன ஒண்ணாது
வயிறு நோவா நின்றது -சவி -என்பாரைப் போலே -அநிச்சை சொல்லி- கை வாங்கும் இத்தனை இறே உள்ளது –
அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை -பிரபத்தியிலே மாறாட்டமே உள்ளது –
இந் நிழலிலே இருந்து வைத்து ஒதுங்கிற்றிலேன் -என்பாரைச் செய்யலாவது இல்லையே-
(வாஸூ தேவ மரத்தில் ஒதுங்காமல் அவன் இடம் இருந்து ஒதுங்கி இருந்தாலும் -நம்மை விடானே அவன்)

இவர் கண்ணால் காண்கிற விஷயங்களுக்கு அவ்வருகு அறியாது இருக்கிறார் ஆகில்
நம்மையும் அவ்விஷயங்களோபாதி
இவர் கண்ணுக்கு இலக்காக்கினால் விரும்பாது ஒழியார் இறே என்று பார்த்து
உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிதி பண்ணி
இவரை விஷயீ கரித்து
தன் படிகளை அடையக் காட்டிக் கொடுத்து
தன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி
இவரை அனுபவித்து
இங்கே இருந்தே பரம பதத்தில் உள்ளார் படி யாம்படி பண்ணி
அத் தேச பிராப்தியும் இவருக்கு பண்ணிக் கொடுத்தான் -என்கிறது இப் பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்

இவர் பக்கலில்
அத்வேஷமும்
விஷயங்களின் உடைய லாகவமே இவரை மீட்கைக்கு பரிகரமாகவும்
லாகவம் -அல்ப அஸ்த்ரத்வாதிகள் –
இவருடைய ரசிகத்வமே -தன் வாசி அறிகைக்கு பற்றாசாகவும்
அநாதி காலம் பண்ணின பாப அம்சத்தை நம் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று பார்த்து
இவர் விஷயங்களின் வாசி அறிந்து தன்னை அறிகைக்காக
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே

தனக்கு வாசகமான திரு மந்தரம் முன்னாக
தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -அடங்கக் காட்டிக் கொடுக்க
கண்டு அனுபவித்து -அயோக்யனான என்னை அது தானே ஹேதுவாக விஷயீ கரித்தான்
என்று க்ருதஞ்ஞர் ஆகையாலே ஒருகால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார்

பகவத் விஷயத்திலே நேர் கொடு நேர் செய்யல் ஆவது ஓன்று இல்லை-
செய்ய வேண்டுவதும் ஓன்று இல்லை-
பண்ணின உபகாரத்துக்கு கிருதஞ்ஞராம் இத்தனையே வேண்டுவது -அசித் வ்யாவ்ருத்தி தோற்ற-

————-

மந்த்ரம் -முதல் பத்து
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து -திருப் ப்ரீதி -இரண்டாம் பத்து
மந்த்ர பிரதனரான ஆச்சார்யர்-ஸ்ரீ பதரிகாஸ்ரமம் மூன்றாம் நான்காம் பத்து

————-

அப்பு அரும் பதம் -இவ்வாழ்வார் என்றதை விளக்கி அருளுகிறார்-
அபார கருணா அம்ருத ஸாகரமான பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாராதிகளை வியாக்யானங்களில்
காட்டி அருளியதைத் தொகுத்து அருளிச் செய்கிறார் இங்கு

பெரியாழ்வார் -அவதாரம் தொடக்கமான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்தும் –
அதுக்கு அடியானை ராம அவதார அனுபவத்தையும் –அர்ச்சாவதாரங்களை பஹு பிரகாரமாக அனுபவித்து –
திரு வேங்கட அனுபவத்துடன் தலைக்கட்டுகிறார் –

பெண் பிள்ளையான ஆண்டாள் நந்தகோபன் குமாரனை அனுபவித்து -ஆழ்வார்களை பள்ளி எழுப்பி
அவர்களை அடி ஒற்றி-அநுகாரம்-பாவத்தால் -மானஸ அனுபவம் தானே
மனப்பால் -காமன் காலிலே விழுந்து துவண்டு -படாதன பட்டு -கனாக் கண்டு -தூது விட்டு –
பெரிய பெருமாளை அழகர் -தோற்று கலங்கின அளவில் தெய்வ யோகத்தால் –
தாம் பணித்த மெய்மைப் பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –
வல்ல பரிசு தருவிப்பரேல் -ஆச்சார்ய பரதந்த்ர ஞானம் –
அநுபூத விஷய வை லக்ஷண்யம் துடிக்க வைக்க -இங்கே போகக் கண்டீரே தேடிச் சென்று –
வீதியாரே வருவானைக் கண்டோமே காட்சி யுடன் முடிந்து

குலசேகர பெருமாள் -என்று கொலோ காணும் நாளே -பெரிய பெருமாள் -ஆசை கரை புரண்டு –
அடியார் அளவும் மால் ஏறி பெரும் பித்தராய் –
ஏதேனும் ஆவேனே -திர்யக் ஜென்மங்களை ஆசைப்பட்டு
அர்ச்சாவதாரத்துக்கு அடியான ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணனை ப்ராசங்கிகமாக அனுபவித்து-
அந்த அனுபவத்தை திருச் சித்ரகூடத்தில் அடியிலே இருந்த பரம பக்தியில்
பெரியாழ்வார் -திருவேங்கடத்தில்
ஆண்டாள் -பிருந்தாவனம்

திரு மழிசை பிரான் -பாவனா பிரகர்ஷம்–மாத்திரம் இல்லாமல் -அர்ச்சா பெருமாள் சொன்ன வண்ணம் செய்து –
நியமிக்கும் படி -தெளிந்த சிந்தை -பரத்வம் ஸ்பஷ்டமாக-நமக்கும் உபதேசித்து
மற்று ஓன்று வேண்டா என்று பெரிய பெருமாளை மட்டும் ஸ்ரோதாவாக்கி -தொண்டர் அடிப் பொடி –
இன் சொற்களைச் சொல்லி -திருமாலை -அறியாதார் திரு மாலையே அறியாதவர் ஆவாரே

திருப் பாண் ஆழ்வார் ஸ்ரீ பெரிய பெருமாளாலே விஷயீ கரிக்கப் பெற்று பரப்பற பத்து-அந்யபதேசம் இல்லாமல் –
காமன் காலில் விழாமல் –தூது விடாமல் -காணாமல் தடுமாறாமல் -கண்டு தெளிந்தும் –
பர உபதேசம் பண்ணப் போவார்களா நிந்தித்து -தமக்கு எம்பெருமான் இரங்காததை நொந்தார் தாமே போய் பள்ளி உணர்த்தும் செய்யாதே –
ஆ பாத சூடம் சாஷாத்காரம் அனுபவத்தில் ஊன்றி லோக சாரங்கர் திருத் தோள்களில் எழுந்து அருள –
சாயுஜ்யம் இந்த விபூதியில் பெற்று திரு வேங்கடமுடையானையும் பெரிய பெருமாளையும் ஒரே சேர்த்தியாக அனுபவித்து
மற்று ஒன்றினைக் காணா என்று தலைக்கட்டியும்
பிரதம அவதியில் மண்டி -இவர்கள் அனைவரும் –
மதுர கவி ஆழ்வார் -அடியார்க்கு ஆட்படுவது உத்தேச்யம் -ஆழ்வார் ப்ராப்யம் ப்ராபகம்
ஓம் –திருப்பல்லாண்டு
கண்ணி நுண் சிறுத்தாம்பு -மத்யமாம் பதம் –
த்ருதீய பதம் -பெரிய திருமொழி -நாராயணாயா –

காயிக அனுஷ்டானம் -திரு மங்கை ஆழ்வார் தானே செய்தார் -மதுர கவி ஆழ்வார் -பாசுரம் பாடி
இவர் தானே பாகவத ததீயாராதானம்
வாள் வலியால் மந்த்ரம் பெற்று
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்று வாயாலும் அருளிச் செய்து -பரம விலக்ஷணர்
சர்வேஸ்வரன் திருத்திய பிரகாரம்
ஸூ விஷய அத்வேஷத்தை மாற்றி
இவர் அனுபவித்த விஷய அல்பமே கொண்டு மீட்க பரிகரம்-இவரது ராசிகத்வத்தை தன் பக்கலில்
வாசி அறிய பற்றாசாகவும் நிர்ஹேதுக கடாக்ஷம் –
வக்த்ரு வை லக்ஷண்யம்
திரு மந்த்ரார்த்தம் ப்ரதிபாத்ய ஏற்றம் –

————————————————————————–

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-

பெரும் இடும்பையில் பிறந்து-மிகுந்த துன்பத்துக்கு கொள்கலமாய் -துன்பங்கள் வரக் காரணம் –
பிறப்பு சரீரம் கொள்வது
கூடினேன் கூடி -சரீரம் என்றும் ஆத்மா என்றும் பகுத்து அறியாத படி உடலே ஆத்மா என்று மயங்கி கூடினேன்
இப்படி நெடும் காலம் இருந்து
இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி-யுவதிகள் சம்ச்லேஷ இன்பத்தை நினைத்து
ஓடினேன் ஓடி -விஷயங்கள் தோறும் அலைந்து -ஓடினதே மிச்சம் -இதுவே தொழிலாக
பின்பு
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்-கொள் கொம்பு இல்லாத கொடி போல் வாடினேன்
வாடி -ஒவ் ஒன்றுக்கும் இப்படி திரும்பி -வாட்டமே வாழ்வாக –
விஷயாந்தரங்கள் பின்பு சென்று மனசால் வருந்தி
உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து-உஜ்ஜீவனம்-பொருள் என்று நிர்ஹேதுக கிருபை
உணர்வு -ஞானம் -உயர்ந்த -ஞானியே முக்தன் –
நாடினேன் நாடி -பகவத் விஷயம் நன்றாக ஆராய்ந்து
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-திரு நாமம் சொல்லக் கூட யோக்யதை இல்லா நான்
காணப் பெற்றேன்

நம் ஆழ்வார் சர்வேஸ்வரனை சாஷாத்கரித்த அநந்தரம் -தாம் பெற்ற பேறு அறியாதே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கீழ் நின்ற நிலையை அனுசந்தித்தாப் போலே
இவரும் பகவத் விஷயீகாரம் பிறந்த பின்பு தாம் கீழ் நின்ற நிலையை எல்லாம் அனுசந்தித்து
வாடினேன் -என்கிறார் –
உலர்ந்தேன் என்னாதே வாடினேன் என்கிறார் –
வாடி வாடும் இவ் வாணுதல் -பிராட்டி போலே
(தானான தன்மையிலும் பிராட்டி போலே வாடினேன் என்கிறாரே)

வாடினேன்
கொம்பை இழந்த தளிர் போலே -ஆஸ்ரயத்துக்கு அழிவு இல்லாமையாலே –
இன்னும் நோக்குவோம் என்னில் -நோக்குகைக்கு யோக்யதை உண்டு என்கை –
அநந்ய ராகவோ அஹம் என்கிற பிராட்டியோடே பிராப்தி சகல ஆத்மாக்களுக்கும் உண்டான பின்பு –
இப் பிராப்தியை உணர்ந்தால் அநாதி காலம் இழந்தவருக்கு வாடினேன் என்னத் தட்டில்லை இறே

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே
யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்

யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-

ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்

எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும்
பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்

எத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையிலே எண்ணப் படும்
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை

விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –
அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –

திருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை
திருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே

வாடினேன் -என்கிற இது தான்
எவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –
நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது

வாடி என்கிற
இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது  என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )

விஷய ப்ராவண்யம் காதாசித்கமாய் அனுதாபம் பிறந்து மீளுகை அன்றிக்கே
அநாதி காலம் இதுவே யாத்ரையாய் போந்தது என்றும் -இவ்வளவு அன்றிக்கே இதுக்கு மேலே
விளைந்ததோர் அநர்த்தத்தை சொல்ல ஒருப்பட்டமையும் தோற்றுகிறது –

மேல் விளைந்த அநர்த்தம் தான் ஏது என்னில் –
வருந்தினேன் மனத்தால் –
மாநசமான க்லேசத்தை அனுபவித்து போந்தேன் –
இந்த்ரியங்கள் விஷயங்களிலே ப்ரவணமாய் -அவற்றை அனுபவிக்கக் கோலி அவற்றை லபியாமையாலும்
லபித்தாலும் அவற்றில் அனுபவிக்க லாவது ஓன்று இல்லாமையாலும்
மாநசமான க்லேசத்தை அனுபவித்துப் போந்தேன்
சர்வேந்த்ரியங்களுக்கும் கந்தமான மனஸை பிரத்யகர்த்த பிரவணம் ஆக்க மாட்டாமையாலே
மாநசமான க்லேசத்தை அனுபவித்தேன் –
(பிரத்யகர்த்தம் -ஜீவ ஈஸ்வர பரம் / பராக் – வெளி விஷயம்)
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
சப்தாதி விஷயங்களிலே ப்ரவணனாய் திருவடிகளை ஒரு நாளும் நினைக்கப் பெற்றிலேன் என்றபடி

பெரும் துயர் இடும்பையில் பிறந்து –
விஷயங்களிலே ருசியைப் பிறப்பித்து
வாசனையை உண்டாக்கி
ராக த்வேஷங்களை மிகுத்து
இதில் உண்டான அவித்யா கர்மங்களும் சரீர ஆரம்ப ஹேதுவாக வந்து பிறந்தேன்

துயர் என்று துக்கம்
இடும்பை என்றும் துக்கம்
இத்தால் சரீரம் தான் துக்க ஆயதநமுமாய் துக்க ஹேதுவுமாய் இருக்கும் என்கை –
துக்க ஆயதநமுமாய் மேலே அநேக துக்கங்களை விளைக்கவும் வற்றாய் இருக்கை-

பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடி வாடினேன் -என்னாதே முதலில் -வாடினேன் -என்பான் என் என்னில் –
கர்ம சம்பந்தம் அநாதியாய் -அசித் சம்சர்க்கமும் ப்ரவாஹ ரூபேண நித்யமாய் இருக்கையாலே
நடுவே ஒன்றைப் பிடித்து சொல்லுகிறார் –
பிறந்து –
ஜன்ம மரணங்கள் இல்லாத ஆத்மா -செத்தான் பிறந்தான் -என்று வ்யவஹாராஸ் பதம் ஆகையாலே

கூடினேன் –
நித்தியமாய் ஏக ரூபமாய் ஞாநாநந்த லஷணமாய் பகவத் சேஷமான ஆத்மாவை
தேவோஹம் மனுஷ்யோஹம் என்னலாம் படியான படி கூடினேன் –

அசித் சம்சர்க்கம் தான் சத்தா ப்ரயுக்தம் என்னலாம் படி பொருந்தின படி கூடினேன் -என்கையாலே
இது தான் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்று ஔபாதிகம்-வந்தேறி என்னும் இடம் தோற்றுகிறது

ராஜ புத்திரன் வழி போகா நிற்க வேடர் கையிலே அகப்பட்டாப் போலே இறே
ஆத்மாவுக்கு அசித் சம்சர்க்க்கம் தான் வந்தபடி
அய பிண்டத்தை ( இரும்புத் துண்டத்தை )அக்நியின் அருகில் வைத்தால் அக்நி பரமாணுக்கள் சூஷ்ம ரூபேண
அதிலே சங்கரமித்தாதல் -வாசனையாலே யாதல் -அதினுடைய ஔஷ்யண்ய ஸ்வபாவத்தையும் நிறத்தையும் பஜித்து
அது தான் என்னலாம் போலே –
இவ்வாத்மாவும் அசித் சம்சர்க்கத்தாலே அதுதான் என்னலாம்படி அசித் கல்பமான படி
பரமாணு பற்று சிவப்பு மாறினாலும் வாசனையாலே சுடும்-

கூடி –
சரீர விச்லேஷம் அசஹ்யமாம் படி பொருந்தின படி –
ஞானம் பிறந்தால் சரீர விச்லேஷம் தான் பிரார்த்தித்து பெற வேண்டும் படியான படி

கூடி -என்கையாலே
அநாதி காலம் இத்தோடே பொருந்திப் போந்தமையும்
இதுக்கு மேலே ஓர் அநர்த்தம் விளைந்தது என்றும் தோற்றுகிறது –
மேல் விளைந்த அநர்த்தம் தான் என் என்னில் –

இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி ஓடினேன்
இளையவர் –
சப்தாதி விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்று ஆராயவும் ஒட்டாதே
பகவத் விஷயத்தில் நன்மையை அறிந்து அதிலே மூளவும் ஒட்டாதே
பருவத்தை இட்டு பகட்டித் துவக்குவர்கள்

தம்மோடு –
சாயா ரச சத்வம் அனுகச்சேத் -என்கிற அதுவும் எல்லாம் இங்கே
(மூல சம்ஹிதா -சாயா -நிழல் போவது போலே)
நல்லதொரு பூமாலை கண்டால் தன் தலையிலே வைத்தல்-தன்னை ஒருவனாக நினைத்து இருத்தல் செய்யாதே
அவர்கள் போந்த அடி வழியே போம் இத்தனை –
யேந யேந தாதா கச்சதி தேந தேந சஹ கச்சதி (பரம சம்ஹிதை)-என்கிறதுவும் எல்லாம் இங்கே –

அவர் தரும் கலவி –
கிட்டின போது-சிரித்து- சிறிது வார்த்தை சொல்லி இருந்து இனி இவன் கைப்பட்டான் என்று அறிந்தால்
தங்களைக் கொண்டு எழ வாங்கி இருப்பர்கள்

கலவியே கருதி –
அனுபவித்து என்பது அனுபாவ்யம் தான் உண்டாகில் இறே
இவனுடைய மநோ ரதமே ஆகையாலே -கருதி -என்கிறது
மநோ ரதம் தான் மாறாது இறே
அதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீள இறே அடுப்பது
அவர்கள் இறாய்க்க இறாய்க்க -நன்மை உண்டு -என்று மேன்மேலும் மநோ ரதம் செல்லா நிற்கும் ஆயிற்று –
அதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே –
ஒரு விஷயத்தில் அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீளலாம் இறே
அத்தை விட்டு மற்று ஒன்றை அறியப் போய் அதிலும் ஒன்றும் காணா  விட்டால்
பின்னையும் அவ்வருகே போகா நிற்கும் இத்தனை இறே –

ஓடினேன் –
விஷயங்கள் தன்னில் அரை ஷணம் கால் தாழப் பண்ண வல்லதொரு விஷயம் தான் இல்லை இறே
போக உபகரணம் கொண்டு புக்கு ஸ்நானத்துக்கு ஈடாக புறப்படும் விஷயம் இறே
இவற்றின் தோஷத்தை தானும் அறிந்து -அத்தை மறைக்கைக்கு ஈடான போக உபகரணங்கள்
கூட்டிக் கொடுத்து இறே தானும் அனுபவிக்கப் புகுவது
ப்ரத்யஷம் அகிஞ்சித்கரமாகிற விஷயம் இறே –
இவற்றின் உடைய தோஷம் தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டாதே கண்ணாலே காணலாம்படி
இருக்கச் செய்தே -கண்டு மீள ஒண்ணாதபடி இருக்கிறது இறே

விஷய ப்ராவண்யம் ஆவது பாம்பு படத்தை விரித்துக் கொண்டு நின்றால்
அது அள்ளிக் கொள்ள புகுகிறது அறியாதே அதன் நிழலிலே ஒதுங்கத் தேடுமா போலே இருப்பது ஓன்று இறே
உயிர்க் கழுவிலே இருந்தவன் பிபாசையும் வர்த்தித்து தண்ணீரும் குடித்துப் பிறக்கும் சுகம் போலே இறே
விஷய அனுபவத்தால் பிறக்கும் சுகம் ஆகிறது
துக்கங்களிலே ஒன்றை சுகம் என்று நிர்வகித்து கொள்ளுகிறான் இத்தனை இறே
நிரஸ்த சுக பாவைக லஷணா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்-என்கிற அதுவே இறே சுகம்

ஓடி
முன்பு எல்லாம் இப்படியேயாய் போரச் செய்தே ஒரு நன்மை உண்டாயிற்று என்று தோற்றுகிறது
சர்வ சக்தி ரஷிப்போம் -என்று கை நீட்டி எடுக்கப் பார்த்தாலும் எட்டாதபடி கை கழியப் போனேன்

உய்வதோர் பொருளால் –
விஷயங்களிலே கை  கழியப் போய் ஓடி இளைத்து விழுந்த இடத்தில் –
இனி இவன் தானாக மீள மாட்டான் -என்று அது தானே ஹேதுவாக ரஷிக்க ஒருப்பட்ட சர்வேஸ்வரன் –
கிருபையாலே உஜ்ஜ்வன உபாயமாய் இருப்பதொரு நல்ல அர்த்தத்தாலே -நல்ல அர்த்தம் என்கிறது
பகவத் கிருபையை -கௌரவத்தாலே -உய்வதோர் பொருள் -என்று மறைத்துச் சொல்லுகிறார்

நாலாம் பாட்டில் -ஆழியான் அருளே -என்று அது தன்னை தெரிய அருளிச் செய்வர்
நம்மாழ்வார் அவ்வருகு போகப் பொறாமை நடுவே மயர்வற மதி நலம் அருளினன் என்றார் இறே

நானே நாநா வித நரகம் புகும் பாவம் -செய்தேன் -என்றும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் நானே விநாசத்துக்கு ஈடான பரிகரம் தேடிக் கொள்ள 
எனக்கு உஜ்ஜீவிக்கலாவதொரு உபாயம் உண்டாயிற்று
அசந்நேவ -வான என்னை -சந்தமேநம் -என்னும் படி பண்ணிற்று ஒரு நல்ல அர்த்தம் உண்டாயிற்று

உணர்வு என்னும் பெரும் பதம்
விஞ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -யதிதன் ஸ்தானம் ஆர்ஜிதம் -ஜன்மாந்தரம் விலகாமல் இருக்க வேண்டும் -ஜிதந்தே-
கிடைக்கைப் பாயிலே வெள்ளம் கோத்தாப் போலே
பெரும் பதம் –
அவன் தான் வேண்டா தத் விஷய ஞானமே அமையும் -என்னும்படி இதனுடைய பெருமை
(உணர்வால் பெரும் பதம் அடைந்து என்னாமல் உணர்வே பெரும் பதம் என்றவாறு )

திரிந்து
விஷயங்கள் தான் சவாதி ஆகையாலே அவற்றில் அனுபவிக்கலாவது ஓன்று இல்லாமை மூட்டி மீண்டேன்
(அளவுக்கு உட்பட்டவை விஷயாந்தரங்கள்)

தெரிந்து -என்று பாடம் ஆகில் –
ஞானம் பிறந்தவாறே எல்லாம் இருந்தபடியே தெரிந்தது
ஆகையால் முன்பு எல்லாம் மிருட்சியாய் போந்தமை தோற்றுகிறது

நாடினேன் –
ஞானம் பிறந்தவாறே –
நாம் கீழ் பட்டது என் -மேல் படப் புகுகிறது என் -என்னும் ஆராய்ச்சி பிறந்தது

நாடி –
இதர விஷயங்களைப் பெற வேணும் என்று புத்தி பூர்வகமே ப்ரவர்த்தித்தாலும்
அநர்த்தாஹமாம் அத்தனை போக்கிப் பலிப்பது ஓன்று இல்லை
பகவத் விஷயத்தில் ஆராய என்று இழிந்த மாத்ரத்திலே பல வ்யாப்தி உண்டு
(த்வேஷம் போக்கி அறிய ஆசை வந்ததுமே பலன் இங்கு)

நான் –
ஓடினேன் என்ற நான்
ராவண பவனத்திலே நெடு நாள் அவன் எச்சில் தின்று வளர்ந்தவன்
ஒரு முழுக்கு இடாதே ஸ்ரீ ராம கோஷ்டிக்கு ஆள் அனால் போலே

ஸ்ரீ வேல் வெட்டி நம்பியார் ஸ்ரீ பிள்ளை கிழக்கே முக்காத மாற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஒரு திருக் கார்த்திகையிலே புறம்பே சிலரைக் கேட்டால் -எளியன் என்று இருப்பர்கள்
இது பரிஹரிக்க வல்லாரும் இல்லை-
இத்தை சொல்லி வர காட்ட வேணும் என்று ஒரு ஆள் கொடுத்து வரக் காட்டினார் –
அது என் என்பது என்னில் –

ஸ்ரீ பெருமாள் கடலைச் சரம் புகுகிற இடத்தில் ப்ராங்முகத்வாதி நியமோபேதராய்க் கொண்டு சரணம் புக்கார் –
இதர உபாயங்களோபாதி பிரபத்தியும் சஹாயாந்தர சாபேஷமோ -என்று வரக்காட்ட –
அந்த உபாயத்துக்கு உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று –
உபாய பரிக்ரஹம் பண்ணினவருடைய ஸ்வபாவத்தாலே வந்தது –
ராஜச ஜாதியார் ஆவார் தண்ணியராய் அநதிகாரிகளாய் இருக்க அவர்களிலே ஒருவனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இறே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று இவருக்கு உபதேசித்தான் –
அவன் பக்கல் நியதி கண்டிலம் -இவர் பக்கலிலே நியதி கண்டோம் –

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன என்றால் –
அநதிகாரியானவனுக்கு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -அதிகாரியானவனுக்கு அநதிகாராம் சம்பாதிக்க வேண்டா –
நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை -சர்வாதிகாரம் -என்றபடி –

கண்டு கொண்டேன் –
தனம் இழந்தவனுக்கு தந லாபம் போலே இருக்கையாலும்
தாய ப்ரப்தமாய் இருக்கையாலும் –

நான் கண்டு கொண்டேன் –
கெடுத்தவன் தானே கண்டால் போலே இருக்கை

நாராயணா
பிரணவம் ஆதல் -நமஸ் ஆதல் -சதுர்த்தி யாதல் -கூட்டாமையாலே
திருவிடை யாட்டத்திலே இழிய அமையும் (ஐஸ்வர்யத்துக்குள் ஒருவனாக இருந்தாலே போதும் )
பல பர்யந்தம் ஆகைக்கு சாங்கமாகவும் வேண்டா என்கிறது-
(நார சப்தத்துக்குள் நாமும் உள்ளோம் என்ற இசைவே வேண்டியது)

என்னும் நாமம் –
என்னும் என்கிறது -பலகால் ஆதரித்து சொல்லுகிற அநந்ய பரமான ஸ்ரீ நாராயண அநுவாகப் ப்ரசித்தி
நாமம் -என்கையாலே இருந்தபடியே உத்தேச்யம் –
இச்சை பிறந்த போதே காலம் –
சொல்லுவோம் என்றவன் அதிகாரி -என்கிறது-
(மந்த்ரம் என்று சொல்ல வில்லையே -ஆசையே அதிகாரி)

ஸ்ரீ திரு மந்த்ரம் சொல்லும்போது ப்ரயதராய்க் கொண்டு சொல்ல வேணுமோ வேண்டாவோ –
என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க -வேண்டா என்று அருளிச் செய்தார்
கங்கையாடப் போமவனுக்கு நடுவே ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ
இந் நன்மை எல்லாம் உண்டாகப் புகுகிறது கீழே அயோக்யதை இத்தனையும் போக்க மாட்டாதோ -என்று அருளிச் செய்தார்-

————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 23, 2013

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்னஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.

பொ-ரை : உழலை கோத்தாற்போலே இருக்கின்ற எலும்புகளையுடைய பூதனையினது முலை வழியே அவளுடைய உயிரையும் உண்டவனான கண்ணபிரானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்ட குருகூர்ச் சடகோபராலே வேய்ங்குழலின் இசையைக்காட்டிலும் இசை மிகும்படியாக அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இளமை தீரும்படி வல்லவர்கள் மானைப் போன்ற பார்வையையுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவரேயாவர்.

வி-கு :- உழலை – தடைமரம், “பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி” என்பது, சிந். 713. பேய்ச்சி – பூதனை.‘அவளை’ என்பது உருபு மயக்கம். ‘குழலின்’ என்பதில், இன் என்பது, ஐந்தாம் வேற்றுமையுருபு; ஒப்புப்பொருளில் வந்தது. உறழ்பொருவுமாம். ‘ஏய்’ என்பது, உவமை உருபு. நோக்கியர்க்குக் காமர் என்க.

ஈடு :- முடிவில், 1இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் – 2உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பூதனை முலைவழியே அவளுடைய உயிரை உண்டான். கழல்கள் அவையே சரணாகக்கொண்ட குருகூர்ச் சடகோபன் – 3விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தையுடைய கண்ணபிரானது திருவடிகளையே, விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார். விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார். பலியாவிட்டாலும் தம்மடிவிடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார். குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் – 4திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், 5மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு, மரங்களும் இரங்கும் வகைஇங்கு; இனி, நாம் இரங்குகிற இது 1தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு; ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது. மழலை தீர வல்லார் – இளமை தீர வல்லார். என்றது, ‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே, இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார் என்றபடி. 2அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை. மான் ஏய் நோக்கியர்க்குக் காமர் – மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் 3காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில், “தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும்போது மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; 4‘ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,

மேல் கொடிதான நரகம்” என்னாநிற்கச்செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே, இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம். 1இங்ஙன் அன்றாகில் வஞ்சனையுள்ளவர் வார்த்தையாமே அன்றோ. இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே. பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக்கட்டி இருப்பதும். ‘அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், 2முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி. உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. “தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னாநின்றதே அன்றோ.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        ஆரா வமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்
தாராமை யாலே தளர்ந்துமிகத்-தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறுசீர் மாறன்எம் மான்.

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவின் ஆயர் பெருமான் அவனொரு வன் குழலூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.-என்பது, பெரியாழ்வார் திருமொழி.

“இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ என்று கூவுமால்”-என்பது, திருவாய், 6, 5 : 9.

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போ
பேய்ச்சி -உயிர் உண்டான்
அடையும் விரோதி போக்கிக் கொள்ள வல்லவன்
உழலை -தடி போலே -திருவாசல் கதவு
எலும்பை உடையவள்
கழல்களையே -ஏவகாரம்
கொண்ட சடகோபன்
குழலை காட்டிலும் இனிமையான
மழலை தீர வல்லார் கொச்சை இன்றி ஸ்பஷ்டமாக சொல்ல வல்லார்

‘உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய’ என்றதற்குக்
கருத்து அகவாயில் மாத்திரமன்றிக்கே, வடிவிலும் ஒருபசை இல்லை-என்பதாம்

விஷம் கலந்த பாலைக் கொடுக்க
முலைப்பாலுக்கு சக்கரை சேர்த்தல் போலே இனிமையாக இருந்ததாம்
வேகமாக உறிஞ்சி
உயிர் சேர்ந்து வந்ததாம்
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் அவன் திருவடி ஒன்றே உபாயம்
சரணாக கொண்ட
அடி விடாத ஆழ்வார்
சேதன அசேதன விவாகம் அற -குழல் ஓசை –
மரத்தை போல் வழிய நெஞ்சம் இரும்பு போல் சொல்லாமல் திருமாலை
நெருப்பில் இளகும் இரும்பு
மரம் சாம்பல் தான் ஆகும்
ஆற்றாமை உடன் சொல்ல வல்லார் -இளமை இன்றி மழலை தீர சொல்ல வல்லார்

மானை போன்ற கண் உள்ளவர் -ஸ்திரீகள் -இருக்க -அனுபவ விஷயம் போலே
தூராக் குழி தூரத்து எனை நாள் அகன்று இருப்பேன்
திருமங்கை ஆழ்வார் -நெஞ்சுக்குள் உள்ளதை அறிந்து
கோவிந்த சுவாமிக்கு அருளியது போலே திருவடியும் கொடுத்து போகத்தையும் கொடுத்து போலே எனக்கும் அருள் –
எனது நெஞ்சில் உள்ளவற்றையும் அறிந்து அருள் –
அவன் கருத்தை அறிந்து அருளியது போலே எனக்கும் ஆக வேண்டும் –

மெழுகு பொம்மை தழுவ
நிறைய அறிந்தும் தப்பே செய்து
விஷய ப்ராவண்யம்
இது கற்றார் மேல் விழுந்து
மின்னிடை மடவார்கள் மேல் விழுந்து அனுபவிப்பது போலே
உவமை உறுப்பு இன்றி முற்றுவமை
உபமானம் மட்டும் சொல்லி உபமேயம்
திருஷ்டாந்தம் தாவி வையம் கொண்ட தடம் தாமரைகளுக்கு
தாமரை போன்ற திருவடிகள் என்று அருளாமல்
திருப்பவளம் -பவளம் போன்ற அதரம்
முத்து பல் -முது போன்ற பல்
அது போலே முற்றுவமை
மா முனிகள்
ஆரா வமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே
ஆற்றாமை விஞ்சி அலமந்தான்
மாறன் எம்மான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 23, 2013

வாரா அருவாய் வரும்என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

    பொ-ரை :- புறத்தில் காணும்படி வாராமல் அருவாய் மனத்தின் கண் தோன்றிக் காட்சி அளிக்கின்றவனே! அழிதல் இல்லாத திருமேனியையுடையவனே! ஆராவமுதம் போன்று அடியேனுடைய நெஞ்சுக்குள்ளே தித்திக்கின்றவனே! தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே! திருக்குடந்தையாகிய திவ்விய தேசத்தையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் இங்கே அடியேன் அலைந்து திரிவேனோ?

வி-கு :- மூர்த்தி – சரீரத்தையுடையவன். ஆவியகம் – ஆவியில்; அகம்: ஏழாம் வேற்றுமையுருபு. தீர ஆண்டாய் என்க. உழலுதல்- அலைந்து திரிதல்.

ஈடு :- பத்தாம் பாட்டு. 1‘திருக்குடந்தையிலே புக, நம் மனோரதம் எல்லாம் சித்திக்கும்’ என்று செல்ல, நினைத்தபடி தாம் பெறாமையாலே, இன்னமும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்கிறார்.

வாராஅருவாய்-வாராத அருவாய். என்றது, 2புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி. அருவாய் வரும் என் மாயா – மறந்து பிழைக்க ஒண்ணாதபடி 3அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தையுடையவனே! ‘அருவாய்’ என்ற பதத்தை இங்கேயும் கூட்டிக்கொள்வது. மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனே! 4“அல்லாதாருடைய சரீரங்கள் முழுதும் பிறத்தல் இறத்தல்களையுடையனவாயன்றோ இருப்பன. ஆராவமுதாய்-நிரதிசய இனியனாய்க்கொண்டு எனக்கு மறக்க ஒண்ணாதபடி இருக்கின்றவனே! அடியேன் ஆவியகமே தித்திப்பாய்-என்றும் உனக்குச் சொத்தாகவுள்ள என் நெஞ்சினுள்ளே உன் இனிமையைத் தோற்றுவித்து அநுபவிப்பித்தவனே! 5தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்-அநுபவித்தே போகக் கூடியனவாய், உன்னை ஒழிய வேறு ஒருவரால் போக்க ஒண்ணாத, உன்னை அநுபவிப்பதற்குத் தடையாகவுள்ள கருமங்களைப் போக்குவித்து, ‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே! அன்றிக்கே, “பிணியும் ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்” என்கிறபடியே, “தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி என்னை அடிமை கொண்டாய் என்றுமாம். திருக்குடந்தை ஊராய் – என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது, 1நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி. 2ஒருநத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால், பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும் இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார். உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும். அடியேன் – யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது. இன்னம் உழல்வேனோ-என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் 3தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.

அவனுடைய அனுக்ரகத்தாலே -நித்தியமாய் நினைக்க அருளி
இசைவித்து தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மானே
இத்தனை எத்தனை வாசல் தட்டித் திரிவேன்
வருவது போலே
உனக்கு ஆள் பட்டும் அடியேன்
வாராத அருவாய் -ரூபம் இல்லாத
பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண வாராமல்
உரு வெளிப்பாடு மட்டும் காட்டி –
கண்ணால் கண்டு அனுபவிக்க மாட்டாதே –

அகவாயிலே அருவாய்க்கொண்டு’ என்றது, அரு என்று ஆத்மாவாய்,
அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.

உள்ளே பிரகாசித்து
மாயா மூர்த்தியாய் -உத்பத்தி விநாசம் இல்லாத விக்ரஹ
நிரதிசய போக்யனாய்
அடியேன் -நெஞ்சுக்கு உள்ளே இனிமை அனுபவிக்கக் கொடுத்து
தீரா வினைகள் தீர என்னை ஆண்டான்
நிர்ஹெதுக கிருபையாலே

‘நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே’ என்றது, நீ
இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற
இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி

அனுபவ விரோதியான கர்மங்களைப் போக்கி
தீர்ப்பாரை யாம் இனி வினைகளைப் போக்கி
அனுக்ரகம் பண்ணி அருளி திருக்குடந்தை வந்து கண் வளர்ந்து
நீ கிட்ட வந்து -அருளி -நான் செய்ய வேண்டிய கார்யம் நீ செய்து
திவ்ய தேசம் பிடித்து
உனக்கு ஆள் பட்டும் -அடியேன் இன்னம் உழல வேண்டுமோ
யாருடைய வஸ்து இங்கனே அலமந்து கிடக்கிறது
உன் திருவடிகளில் சரண் அடைந்த பின்பு துக்கம் வந்தால் உனக்கு தானே இழிவு வரும்
அடியேன் -சர்வச்தையும் உனது திருவடிகளில் பொகட்டு
இன்னும் எத்தனை வாசல் தட்டித் திரிய வைப்பாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 23, 2013

இசைவித் தென்னை உன்தா ளிணைக்கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெருமூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.

பொ-ரை :- என்னை உடன்படச் செய்து உனது திருவடிகளிலே சேரச்செய்த அம்மானே! அழிதல் இல்லாத நித்தியசூரிகளுக்குத் தலைவரான சேனைமுதலியாருக்குத் தலைவனே! திசைகளில் எல்லாம் ஒளியை வீசுகின்ற செழுமைபொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகமானது பரவும்படி திருக்கண் வளர்கின்றவனே! நான் காணும்படி வர வேண்டும்.

வி-கு :- இசைவித்து இருத்தும் அம்மான் என்க. வில் – ஒளி. வாராய்; உடன்பாடு; வரவேண்டும் என்றபடி.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1சர்வேச்வரனாய் வைத்து எல்லாராலும் பற்றப்படுமவனாகைக்காக இங்கே வந்து அண்மையில் இருப்பவனாய் எனக்கு அடிமையால் அல்லது செல்லாதபடி செய்த நீ, கண்களால் நான் காணும்படி வர வேணும் என்கிறார்.

என்னை இசைவித்து – நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து. 2இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு. உன் தாள் இணைக்கீழ் இருத்தும் – 3நித்தியசூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே! பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை. 1“நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதிஅடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி.

அழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறு மானோம் – சுழலக்
குடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.-  என்பது, பெரிய திருவந்தாதி.

2பெருங்காற்றில் பூளைபோலே யாதானும்பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது. அம்மானே-பேறு இவரதாயிருக்க, அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது. அசைவு இல் அமரர் தலைவா – நித்தியசூரிகளுக்குத் தலைவனான ஸ்ரீசேனாபதியாழ்வானுடைய காரியமும் இவன் புத்தியதீனமாய் இருக்கிறபடி. அசைவில்லாத அமரர் – நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே 3ஆபேக்ஷகமன்று. கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி. அன்றிக்கே, குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தையுடையவர்கள் என்னுதல். ஆதிப் பெருமூர்த்தி-இவ்வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே! என்றது, உலகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கின்ற சர்வாதிகனே! என்றபடி. மூர்த்தி – ஸ்வாமி.

திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – திசைகளிலே ஒளி பரவாநின்றதாய், காட்சிக்கு இனியதாய், பெருவிலையனான இரத்தினங்கள் சேராநிற்கிற திருக்குடந்தையிலே. அசைவுஇல் உலகம் பரவக் கிடந்தாய் – உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய். வருத்தம் அறுதலாவது, கண்களால் காணமுடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம்தீர்தல். அன்றிக்கே, 1அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல். அன்றிக்கே, 2அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல். ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே, மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி. கிடந்தாய் காண வாராய் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும். செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, 3‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.

ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை
இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நவின்றனன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.-
என்பது, கம்பராமாயணம்.

பாரித்த ஆழ்வாரை இனி இனி இருபது கால் துடிக்க
சரீரத்துடன் வைத்து அனுபவிக்க ஆசை கொண்டான்
வீடு திருத்துவான் என்பதாலும்
திருவாய் பாசுரம் கேட்க ஆசை
லோகம் திருந்த
ஆயிரமும் தலைக்கட்ட
தூது விட்டார் -தரிகப்ப் பண்ணி
மடல் எடுக்க தலைக்கட்ட –
இருள் நலிய மடல் எடுக்க முடியாமல் உஊரெல்லாம் துஞ்சி
எம்பெருமானை அனுகரித்து தரிக்க பார்த்தார் கடல் ஞாலத்தில்
சாதனம் ஒன்றும் இல்லை என்று அறுதி இட்டு நோற்ற நோன்பு இலேன்
ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய்
முகம் காட்டவில்லை
திருக்குடைந்தை ஆரா அமுது -இடம் சரண் புக்கார்
விஸ்வாசம் குறையாமல் –

ஏரார் கோலம் திகழக் கிடந்தது எழுந்து பேசாமல் அணைக்காமல்
வாழி கேசனே திருமங்கை ஆழ்வார் அனுபவித்தால் போலே கிடைக்காமையாலே
சர்வேஸ்வரனாய் வைத்து -எனக்காக இங்கே வந்து அருளி
இசைவித்து என்னை உன் தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மானே

என்னை இசைவித்து
நெடுநாள் விமுகரான என்னை அடிமையில் இசைவித்து
நித்ய சூரியே திரு அவதரித்தாரோ சங்கிக்கும்படியான பெருமை ஆழ்வாரது
இசையாமல் இருந்த என்னை இசைவித்து
என்னை நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகே இருந்த என்னை
எங்குற்றேனும் அல்லேன் –
உன் தாள் இணைக் கீழ் -நித்ய சூரிகள் போலே
நிரந்தரமாக இருக்க நீ நினைக்க
பரந்த சிந்தை -திரியாதபடி தனது திருவடிகளில்
நிழலும் அடி தாறுமாக ஸ்ரீ தனமாக ஆக்கி

அழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறு மானோம் – சுழலக்
குடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.

மெய்ம்மையே -சத்யம் கண்ணி நுண் சிறு தாம்பு வியாக்யானம் –
தலை மேல் அடித்து -ஸ்ரீ சடகோபனை தலையிலே சாத்தி இருந்து
பெரும் காற்றில் -இலவம் பஞ்சு போலே திரியும் நெஞ்சை
யாதேனும் பற்று நீங்கும் விரதம்
நன்மை என்னும் பேர் இடலாவது தீமையாவது உண்டோ அவன் பார்த்து இருக்க
அதுக்கு கூட இட கொடுக்காமல்
பசு மாட்டை அடிக்க போனவன் ஓடிப் போக
பிரதஷிணமாக ஓட –
நன்மை என்று பேர் இடுவான் என்று அப்ரதஷிணமாக போக
பாவமே செய்து பாவி யே ஆனேன்
பாவம் செய்து புண்யம் ஆவோரும் உண்டே
இப்படி இருந்த என்னை இசைவித்து
அம்மானே -பேறு அவனுக்கும் பலம் தன்னது வஸ்து போகக் கூடாதே
நித்யர் தலைவன் -அசைவில் அமரர் -சேனை முதலியார்
ஆதி பெரும் மூர்த்தி

வில் வீசும் ஒளி திசைகள் எங்கும் வீச
திருக்குடந்தையிலே வந்து கண் வளர்ந்து
தர்சநீயமாய் -ரத்னங்கள் சேரும்
ஆராவமுத ஆழ்வார் திருமழிசை பிரான் போன்ற ரத்னங்கள் வந்து சேர்ந்த திவ்ய தேசம்
அமுது செய்த போனகம் -வாத்சல்யம் கொண்டு தானே அமுது செய்து அருளி
லோகம் வருத்தம் அற்று ஆஸ்ரயிக்கும் படி கிடந்தாய்
அசைவில்லாத நித்ய விபூதி உள்ளாறும் இங்கே வந்து
இவனது அசைவில் கண்டு –
திரை சாத்தி இருக்க -பேசாமல் இருக்க திரை எடுத்தும் சப்தம் கொண்டு ஆராவாரம்
லோகம் அடங்க ஆரவாரம் செய்யும் படி அசைந்து
நடை அழகை அனுபவிக்க -கிடை அழகை கண்ட பின் கிடந்தாய் நான் காண வாராய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ: அப்பிள்ளார் அருளிச்செய்த சம்பிரதாய சந்திரிகை (மணவாளமாமுனிகள் வைபவம்)..

June 23, 2013

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
    அவனியிலே இருநூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
    பரமபதம் நாடி அவர் போவேனென்ன
நீதியாய் முன் போல நிற்க நாடி
    நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணமெனும் மா வருடம் தன்னில்
    தனித்துலா மூலநாள் தான் வந்தாரே.     1

 

நற்குரோதன வருட மகரமாத
    நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து
விக்கிரம வற்சரத்தில் வீட்டிருந்து
    வேதாந்த மறைப்பொருளைச் சிந்தைசெய்து
புக்ககத்தில் பெண்பிள்ளை போலே சென்று
    புவனியுள்ள தலங்களெல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
    துரியநிலை பெற்று உலகைஉயக்கொண்டாரே.   2    

 

செயநாமமான திருவாண்டு தன்னில்
    சீரங்கராசருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாராநிற்கத்
    தென்னாட்டு வைணவரென்றொருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாளானார்
    தன்முன்பே ஓரருத்தம் இயம்பச்சொல்லிச்
சயனம் செய்து எழுந்திருந்து சிந்தித்தாங்கே
    சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே.       3

 

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
    வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
    கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
    சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
    பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார்.    4

 

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
    திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
    தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
    புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
    தனியனுரை செய்து தலைக் கட்டினாரே.            5

 

நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில்
    நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
    தொல்கிழமை வளர்பக்க நாலாநாளில்
செல்வமிகு பெரியதிரு மண்டபத்தில்
    செழுந்திருவாய் மொழிப்பொருளைச் செப்புமென்றே
வல்லியுரை மணவாளர் அரங்கர் நங்கண்
    மணவாள மாமுனிக்கு வழங்கினாரே.  6

 

ஆனந்தவருடத்தில் கீழ்மை ஆண்டில்
    அழகான ஆனிதனில் மூல நாளில்
பானு வாரங்கொண்ட பகலில் செய்ய
    பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்தமயமான மண்டபத்தில்
    அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீரிட்ட வழக்கே யென்ன
    மணவாள மாமுனிகள் களித்திட்டாரே.            7

தேவியர்கள் இருவருடன் சீரரங்கேசர்
    திகழ்திருமா மணிமண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
    தமிழ்மறையை வரமுனிவன் உரைக்கக்கேட்டே
ஆவணிமா சந்தொடங்கி நடக்கும் நாளில்
    அத்தியயனத்திருநாள் அரங்க நாதா
தாவமற வீற்றிருந்து தருவாய் என்று
    தாம் நோக்கி சீயர் தமக் கருளினாரே.                8

 

அருளினதே முதலாக அரங்க ருக்கும்
    அன்று முதல் அருந்தமிழை அமைத்துக்கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
    திகழ்திருமா மணிமண்டபத்தில் வந்து
பொருளுரைக்கும் போதெல்லாம் பெருமாளுக்குப்
    புன்சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
    மதுகேட்டுச் சாற்றியது இத்தனியன் தானே.            9

 

நாமார் பெருஞ்சீர்கொள் மண்டபத்து நம்பெருமாள்
தாமாக வந்து தனித்தழைத்து-நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாள்தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து.              10

சேற்றுக்கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழும நல்ல அந்தணர் வாழவிப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே.          11

அப்புள்ளார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 22, 2013

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் எனதாவி சரிந்து போம்போது
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே.

பொ-ரை :- வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக வுடையவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! மாமாயனே! என் துன்பத்தைப் போக்குவாய்; போக்காதொழிவாய்; துணையாவார் வேறு ஒருவரையுமுடையேன் அல்லேன்; சரீரம் தளர்ந்து என் உயிரும் இந்த உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை ஒருபடிப்படப் பிடித்துக்கொண்டு போவதற்கு நீ சம்மதிக்க வேண்டும்.

வி-கு :- “துன்பம் என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டுக. களைகண் – துணை. இளைத்தல் – நெகிழ்தல்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1“தரியேன்” என்ற பின்பும் முகங்கிடையாமையாலே கலங்கி; அநுபவம் பெற்றிலேனேயாகிலும், ‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் குலைகிறதோ என்று அஞ்சாநின்றேன்; அது குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் – நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், 2“நீயே உபாயமாகஎனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை; 1“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன்கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய். 2அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்: வளைவாய் நேமிப்படையாய்-பார்த்த இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே! 3களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ? என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார். என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ? என்றபடி. 4உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? என்பார் ‘வளைவாய்’ என்கிறார். நேமிப் படையாய் களைகண் மற்றிலேன் – 5அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ. குடந்தைக் கிடந்தாய் மா மாயா – திருக்குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ. நீ 6மாம்” என்றதன்பின் இவ்வரு

குள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி. 1சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது, ‘சுலபன் அல்லன்’ என்ன ஒண்ணாது, ‘ருசியை உண்டாக்குமவன் அல்லன்’ என்ன ஒண்ணாது என்றபடி.

உடலம் தளரா – சரீரம் கட்டுக் குலைந்து. தளரா-தளர. எனது ஆவி சரிந்து போம்போது – என் உயிரானது முடிந்து போகுமளவாயிற்றுக் கண்டாய். ‘போம்போது’ என்றது, போகும் அளவாயிற்று என்றபடி. நன்று; 2இதுதான் அந்திம ஸ்மிருதி ஆனாலோ? என்னில், “கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும், “நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;

‘இதுதான்’ என்று தொடங்கி.-“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம்   அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”என்பது, வராஹசரமம். ‘

இவர்தாம் அவ்வதிகாரிகளும் அலரே. ‘அவ்வதிகாரிகளும்’ என்றது, உபாசகர்களைக்குறித்தபடி.

ஆதலால், பிரிவுத் துன்பத்தாலே சரீரமும் தளர, உயிரும் சரீரத்தை விட்டுப் போகும் தசையாயிற்று என்கை. இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை – அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற்பண்ணி அருளவேண்டும். 3அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.

“துன்பம் களைவாய், துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற
பிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’ என்று தொடங்கி.“த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்குறை இல்லை என்றபடி.

“குடந்தைக் கிடந்தாய்” என்று அர்ச்சாவதார சௌலப்யம்
சொல்லுகையாலே, ‘நீ, “மாம்” என்றதன்பின்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். “மாம்” என்பது, சரமஸ்லோகத்திலுள்ள ஒரு பதம்.
‘நீ மாம் என்றதன்பின்’ என்றது, கிருஷ்ணாவதார சௌலப்யத்தைத்
திருவுள்ளம்பற்றி. ஏற்றமெல்லாம் என்றது, அர்ச்சக பராதீனனாயிருக்கிற
ஏற்றம் எல்லாம் என்றபடி.

விசுவாசம் குலையாமல்
வேறு ஓன்று உபயம் இல்லை
குறையாதபடி பார்த்து அருள வேண்டும்

“துன்பம் களைவாய், துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற
பிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’ என்று தொடங்கி.

“த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”-என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்
குறை இல்லை என்றபடி.

களைவாய் –
நீ உனது கார்யம் செய் -செய்யாமல் இருந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை
உன்னுடைய உடைமை நீ பெற்றால் உனக்கு பேறு
நான் குறை வற்று -உறுதி உடன் இருக்கிறேன்
செய்கிறோம் என்னாமையாலே
என்னுடைய ரஷணத்துக்கு நீ
கிடந்தது திவ்ய ஆயுதங்கள் வேற
அதுவும் வளையாய் இருக்க
பார்த்த பார்த்த இடம் எல்லாம் -வாயான ஆயுதம்
களையாது ஒழிகைக்கு ஒன்றும் சொல்ல முடியாமல்
வாய் படிந்த பிரயோஜனம்
கையிலே இருக்க கை கழலா நேமியான்
பிரயோக சக்கரம் வேற திருவரங்கத்தில்
வேறு ரஷகர் இல்லை களை கண் மற்று இல்லை
ஆயுதம்என் கையில் உண்டோ
பிறர் கையில் உண்டோ
உன்னிடம் இல்லாமல் இருக்கா
குடந்தை கிடந்த மா மாயா -மாம் சௌலப்யம் காட்டி –
கண்டு பற்றுகைக்கு
அர்ச்சாவதாரம் வரை வந்த பின்பு -மாம் என்கிறதுக்கும் மேம்பட்ட சௌலப்யம்
ஆச்சர்யமான அழகு
ருசி உத்பாகன் வடிவு அழகால் அனுபவிக்க வைத்து
ஆவி சரிந்து -சரீரம் தளர்ந்து போகும் முன் செய்யா நின்று -தளர்ந்து
பிராணன் முடிந்து போம் அளவு ஆயிற்று
போம் பொது இதுவாயிற்று
அதுக்கு முன்பு -இந்த ஷணத்திலும் -உனது தாள் ஒருங்க பிடித்து
மறக்காமல் இருக்க அனுக்ரகம்
போம் போதிலே இல்லை அந்திம ஸ்மரதி கேட்கிறார் இல்லை
பிரபன்னனுக்கு தேவை இல்லை அந்திம ஸ்மரதி  வர்ஜனம்
நயாமி பரமாம் கதி –
போம் போது -இது -இப்போது -அர்த்தம் கொண்டு

முடிந்து போகுமளவாயிற்றுக் காண்’ என்று வலிந்து பொருள் கொள்ளுதல்
எற்றிற்கு? இருந்தபடியே அந்திமஸ்மிருதி பிரார்த்தனையாகக் கொண்டாலோ?
என்று சங்கிக்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி.

“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”-என்பது, வராஹசரமம். ‘அவ்வதிகாரிகளும்’ என்றது, உபாசகர்களைக்
குறித்தபடி.

உபாசகனுக்கு தான் அந்திம ஸ்மரதி வேண்டும்
ஜடபரதர் மான் போலே பிறந்தாரே
விஸ்லேஷ விசனத்தால் சரீரம் தளர்ந்து
இப்போது பிராணனும் போகும் நிலை வந்தது
நெகிழாமல் உறுதியாக இருக்க பண்ணி அருள வேண்டும்
அனுபவம் கிடையாமையாலே அதுக்கு அடியான உபாய அத்யவசாயமும் குகையுமோ அஞ்சி
பிரார்த்திக்கிறார்
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைக்கும்படி  நீ நினைக்க வேண்டும் -திருமழிசை ஆழ்வார் போலே

முமுஷுபடி மூன்று விரோதி
ஸ்வரூப விரோதி
உபாய விரோதி களைவாய்
பிராப்ய விரோதி மற்றை நம் காமங்கள் மாற்று

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 22, 2013

அரியேறே! என்னம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
1
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே

பிரியா அடிமைஎன்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன்இனி உன்சரணம் தந்துஎன் சன்மம் களையாயே.

பொ-ரை :- அரியேறே! அழகிய பொன்னின் சுடரே! சிவந்த கண்களையுடைய கரிய முகிலே! நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே! நான்கு திருத்தோள்களையுடைய எந்தையே! உன்னுடைய திருவருளாலே என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே! இனி, தரித்திரேன், உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய்.

வி-கு :- வியாக்கியானத்துக்குப் பொருந்த “எரியேய் பவளக் குன்றே!” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது. ‘அடிமை கொண்டாய்!’ என்பதனை விளிப்பெயராகக் கொள்ளாது, அடிமை கொண்டாய், ஆகையாலே, சரணம் தந்து சன்மம் களையாய் எனக் கோடலுமாம். களையாய் என்றது, களைய வேண்டும் என்றபடி. உடன்பாட்டு முற்று.

ஈடு :- ஏழாம் பாட்டு. 2உன் கிருபையாலே உன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அடிமையாதல் அல்லது செல்லாதபடி ஆக்கின பின்பு, உன் திருவடிகளைத் தந்து பிறகு சம்சாரத்தை அறுக்க வேண்டும் என்கிறார்.

அரியேறே-3தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம் தானே கடவனாகையாலே வந்த மேனாணிப்பு.என் அம்பொன் சுடரே – அம்மேன்மைக்குச் சிறிது உள்ளாகப் பார்த்தவாறே பிரகாசித்துத் தோற்றுகிற ஒளியாலே விலக்ஷணமான பொன் போலே விரும்பத்தக்கதான ஒளியையுடையவனே! அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார். செங்கண் கருமுகிலே – 1அதற்கும் அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி. ஏரி ஏய் பவளக் குன்றே – நக்ஷத்திரமண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே! சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம். அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே! என்றபடி. இதனால் 2ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது. உகவாதார்க்கு நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார். நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே! 3‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.

உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்-4உன்னுடைய கேவல கிருபையாலே என்னை நித்திய கைங்கரியத்தைக் கொண்டாய். அருள் – அருளாலே. குடந்தைத் திருமாலே-அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய பிராட்டியாரோடேகூடத் திருக்குடந்தையிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே! ‘ஒரு தேச விசேடத்தே’ என்னாதபடி தேசத்தில் குறை இல்லை, திருமகள் கேள்வனாகையாலே பேற்றிற் குறை இல்லை. 1“சீதாபிராட்டியாரோடுகூட நீர் மலைத்தாழ் வரைகளில் உலாவும்பொழுது நான் எல்லாவித கைங்கர்யங்களையும் எப்பொழுதும் பண்ணுவேனாக” என்ற இளையபெருமாளைப் போலே பற்றுகிறார் இவரும்.

“பவாஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்கிரத: ஸ்வபதச்ச தே”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 25. பெருமாளைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.

இனி தரியேன்- அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது. 2தாய்தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க, குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். 3‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;

மண்ணாய் நீர்எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித்தளர்ந் தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்திரு வேங்கடவா!
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.-
என்பது, பெரிய திருமொழி.

அதற்கு அடியிலே தரிப்பித்துக்கொண்டு, பின்னை அறுக்க வேண்டும் என்கிறார்.

உனது திருவடிகளை தந்து சம்சாரம் போக்கி அருள வேணும்
பிரியா அடிமை என்னைக் கொண்டே
தரியேன் இனி
எனது சன்மம் களைவாய்
தன்னைத் தவிர அனைவருக்கும் -மேன்மை
பிரகாசக்கிகும் தேஜஸ் வடிவு கொண்டால் போலே
பொன் போலே ஒளி -வடிவின் வாசி அறிவித்து
அதற்கும் அடியாக திருகன்கல் திருமணி செங்கன் கருமேனி
எரியே -பவளக் குன்றே -நட்ஷத்ரம் வரை ஓங்கிய பவள மலை போலே -சமுதாய சோபை
பவளம் சிகப்பு இவனோ கருப்பு
காம்பீர்யம் ஒக்கம் பற்றி
அக்னி போலே தேஜஸ்
நிறம் சொலவில்லை பிரகாசம் -உதாவாதார் கிட்ட முடியாதபடி

நால் தோள் -கற்பக தரு -திருவடி தோற்ற துறை இவரும் தோற்று
எந்தாய்
உன்னுடைய கேவல கிருபையாலே மட்டுமே -அருளாலே மட்டுமே -என்னை அடிமை  கொண்டாய்
குடந்தை திருமாலே
அடிமை கொள்ள ஸ்ரீ ய பதியாய் -40 பாசுரங்களிலும் இங்கு தான் திருமாலே
இளைய பெருமாள் காக்காசுரன் போலே பிராட்டி முன்னிட்டு கொண்டு ஆழ்வாரும்
பிராட்டி சன்னதி முன்னிட்டு
தரியேன் இனி இந்த சேர்த்தி கண்ட பின்பு மாதா பிதா சன்னதி உதாகர்
ஸ்ரீ மானாக இருக்க அடியேன் தரியேன்
பிரஜை
உனது சரணம் தந்து சன்மம் களையாய்
முலை கொடுத்து சிகிச்சிப்பாரைப் போலே
ராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே
புண்ணார் ஆக்கை தானே அறுக்க வேண்டுமே
அடியிலே தரிப்பித்து கொண்டு அறுக்க வேண்டும்

திருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 22, 2013

சூழ்கண் டாய்என் தொல்லை வினையை அறுத்துன் னடிசேறும்
ஊழ்கண் டிருந்தே தூராக் குழி தூர்த்து எனைநா ளகன்றிருப்பன்
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!

பொ-ரை :- இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்தியவாசம் செய்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! யாழினிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே! என்னுடைய பழைமையான இரு வினைகளையும் அறுத்து உனது திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும், தூர்க்க முடியாத இந்திரியங்களாகிற குழியை நிறைத்துக்கொண்டு எத்தனை காலம் உன்னை நீங்கி இருப்பேன்? உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும்.

வி-கு :- ஊழ்-முறைமை, தூரா-நிறைதல் இல்லாத. தூர்த்து-நிறைத்து. எனை-எத்தனை. அரியேறே! சூழ்கண்டாய் என்க, அரி ஏறு-ஆண் சிங்கம்.

ஈடு :- ஆறாம் பாட்டு. 2உன் இனிமையை அநுபவிக்கிற எனக்கு ஒரு பிரிவு வாராதபடி உன்னை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி, உன்னைப் பெறுவது ஒரு விரகு பார்த்தருள வேண்டும் என்கிறார்.1என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் சூழ் கண்டாய் – என்னுடைய பழமையான கர்மங்களை வாசனையோடே போக்கி, உன் திருவடிகளை நான் வந்து கிட்டுவது ஒரு வழியை நீயே பார்த்தருள வேண்டும். கிரமத்திலே செய்கிறோம் என்ன, அதற்கு எல்லை என்? என்கிறார். உன் அடி சேரும் ஊழ் கண்டிருந்தே – உன் திருவடிகளைக் கிட்டும் முறையை அறிந்துகொண்டிருந்தே. நாட்டாரைப் போன்று உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன் என்பார் ‘இருந்தே’ என்கிறார். தூராக் குழி தூர்த்து-நிறைக்க இயலாத இந்திரியங்களுக்கு இரை இட்டு. எனை நாள் அகன்று இருப்பன் – இன்னம் எத்தனை நாள் இங்ஙனே இருக்கக் கடவேன்? 2ஸ்ரீபரதாழ்வான் போல்வார்க்கோ ஒரு நாள் இட்டுக் கொடுக்கலாவது என்றபடி. வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் – 3‘பிரிந்திருக்கும் நாள் எத்துணை’ என்று கேட்க வேண்டாதவர்கள், அவன் கண்வட்டத்தில் வசித்து வாழப் பெறுகையாலே வந்த சிலாக்யமான புகழையுடையவர்கள். அன்றிக்கே, தொல்புகழ் என்பதற்கு, பழைய புகழ் என்னலுமாம். விஷய சந்நிதி தமக்கும் அவர்களுக்கும் ஒத்திருக்க, அவர்கள் வாழ்கிறபடி எங்ஙனே? என்னில், தம்மைப் போன்று கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்.

வானோர் கோமானே – 4அவர்கள் சிலவர் நாள் நடையாடாத தேசத்திலே வசிக்கிறவர்கள் காணும்யாழின் இசையே – மி்டற்று ஓசை போன்று கர்மத்துக்குத் தகுதியாகப் 1போதுசெய்கை அன்றிக்கே இருத்தல். “யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே” –திருவாய்மொழி. 2. 3 : 7.-என்னக்கடவதன்றோ. அமுதே – 2‘செவிக்கு அதுவாய், நாவிற்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி இனிய பொருளாயிருக்கை. அறிவின் பயனே – ஞானத்துக்குப் பிரயோஜன ரூபமான சுகம். மனத்திற்கு இனிய பொருளாயிருக்கிறபடி. அரிஏறே – எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட தன்மையையுடையவனாயிருத்தலால் வந்த மேனாணிப்பையுடையவனே! 3அன்றிக்கே. கண்களுக்கு முகக்கொள்ள ஒண்ணாத இனிமையையுடையவன் என்றுமாம். 4இங்குள்ளார்க்கும் அங்குள்ளார்க்கும் உன்னை அநுபவிக்கக் கொடுத்து நிரதிசயபோக்கியனாயிருக்க, நான் இந்திரியங்களுக்கு இரை இட்டு எத்தனை காலம் அகன்றிருக்கக் கடவேன் என்கிறார்.

போக்யதை அனுபவித்த எனக்கு விச்செதம் இன்றி
உன்னை அடைய வழி நீயே பார்த்து அருள வேணும்
தூராக்குழி -இந்த்ரியங்கள் படுத்தும் பாடு
தொல்லை வினையை அறுத்து

“உன்னடி சேரும்” என்பதனை, “உன்னடி சேரும்படி சூழ்கண்டாய்”
என்றும், “உன்னடி சேரும் ஊழ் கண்டிருந்தே” என்றும் முன்னும்
பின்னும் கூட்டுக. “ஊழ்” என்றது, சேஷ சேஷிபாவ முறையினை.

தனமான கர்மங்களை சஞ்சித பாவம் தொல் வினை சவாசனமாக போக்கி
உன்னடி சேரும் வகை சூழ் கண்டாய்
க்ரமத்திலெ செய்கிறேன் என்றானாம்
அவதி என்ன என்று கேட்கிறார்
நாட்டாரை போலே உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன்
அறிந்து கொண்ட பின்பும் அடுத்த ஷணம் மோஷம் கொடுக்காமல் இந்த்ரியங்களுக்கு இறை இட்டு
போரும் திருப்தி இல்லாமல் –
எத்தனை நாள் அவதி நீயே சொல்லி அருள்
பரத ஆழ்வானுக்கு 14 வருஷம் அருளி
திருக்குடைந்தை இப்படி கதற வேண்டாதபடி கூடி
பிரிந்து இருக்கும் நாள் -ச்லாக்கியமான கண் வட்டத்தில் வாழும் படி
வேம்கடத்தை பதியாக வாழும் மேகங்காள் வாழ்ச்சி
நின் தாள் இணைக் கீழ் சேரும் வகை வாழ்ச்சி
தொல் ச்லாக்கியமான பழைய இரண்டு அர்த்தம்
அவர்கள் வாழ்கிற படி எங்கனே என்னில் –
இவரும் அவனை சேவித்து கண் வட்டத்தில் இருக்க
தம்மைப் போலே அவர்கள் கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் அடைந்து இருக்கிறார்கள் என்ற நினைப்பால்
வானோர் கோமான் -அகால -நாள் நடையாடாத தேசம் போலே இவர்களும் நித்யர் போலே
யாழின் இசையே
மிடற்று ஓசை போலே -இன்றி -கர்ம அனுகுணமாக தொண்டை மாறலாம்

நித்யமாக இனிமையான குரல் -யாழின் இசையே
அமுதே -நாக்குக்கு வேறு ஓன்று தேட வேண்டாதபடி -செவிக்கும் நாவுக்கும் போக்கியம்
அறிவின் பயனே மனசுக்கும் போக்கியம்
அரி ஏறே மேணானிப்பு -கண்ணுக்கு சிம்ஹ ஸ்ரேஷ்டம் போலே கம்பீரமாக
இங்கு உள்ளாருக்கும் அங்கு உள்ளாருக்கும் உன்னை அனுபவிக்க கொடுத்து இருக்க
நான் எத்தனை நாள் அகன்று இருப்பேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.