Archive for May, 2013

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்–

May 26, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

நிகமத்தில் –
இவ்வளவும் ஜ்ஞான சாஷாத்காரம் –
மேல் லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில்  வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் –
பெரிய பெருமாள் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா என்கிறார் –

———–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை –

நிகமத்தில் -இவ் வாழ்வார் இவ் வூருக்கு புறம்புள்ள தேசங்களில் உள்ளாருடைய ரஜஸ் தமஸ்
ப்ரசுரராய் -சப்தாதி விஷய ப்ரவணராய் -அது தானும் நேர் கோடு நேர் கிடையாமையாலே
அர்த்தார்ஜநாதிகளிலே இழிந்து -பெரியதோர் இடும்பை பூண்டு இருக்கிற படியையும்
இவ் வூரில் உள்ளார் பரம சாத்விகராய் நிரதிசய போக்யதராய் இருக்கிற பெரிய பெருமாளை
தொண்டு பூண்டு அமுதம் உண்டு களித்து இருக்கிற படியையும் கண்டு –

வரம் ஹூத வஹஜ் வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி -ந சௌரி சிந்தாவி முகஜநசம்வாஸ வைஸஸம் –
என்று புறம்பு உள்ளாரோடு பொருத்தம் இன்றிக்கே -இவ் வூரைப் பார்த்தால்
சர்வ புண்ய மையோ தேச -என்கிறபடியே –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் -என்னும்
பரம பாவநரான பெரிய பெருமாள் தாமும் –
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்று இவ் வூரோட்டை சம்பந்தத்தாலே பாவன பூதர் என்னும்படியான
வைலஷண்யத்தை வுடைத்தாய் இருக்கையாலே –
நாம் இவ் வூரிலே புகுருகை இவ் வூருக்கு மாலின்யாவஹம் என்று பார்த்து –

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்
என்கிறபடியே பிறருடைய நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே -தம்முடைய
நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி
அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

பெரிய பெருமாளும் –
ஈஸ்வரோஹமஹம் போகீ -நான்யோஸ்தி சத்ருசோ மயா -என்று தேசமாக
அஹங்கார க்ரஸ்தமாய் சப்தாதி விஷய ப்ரவணராய் நோவு படா நிற்க -இவர் இப்படி யாவதே
என்று மனசிலே போர உகந்து –

நிமக்ந ஆப ப்ரணவ -என்கிறபடியே இவர் அளவிலே திரு உள்ளம் பேராறு மண்டி –
நிஹீநாநாம் முக்கியம் சரணமான திருவடிகளைக் கொடு வந்து இவருடைய
திரு உள்ளத்திலே -என் கண்ணினுள்ளன வொக்கின்றவே -என்று ப்ரத்யஷ சாமாநா காரமாக
ப்ரகாசிக்கும் படி வைக்க –

அந்தத் திருவடிகளை அனுசந்தித்து தம்முடைய மனஸ் ஆனது
ஜ்ஞாநாஸ் பதமாகையாலே -அந்த திருவடிகளுக்கு மேலான் திருப் பீதாம்பரைத்தையும்
திருவரையுமான சேர்த்தியை மடி பிடித்து அனுபவித்து –

இப்படி கரணமும் நாமும் அனுபவிக்கும்படி நம்மை
உண்டாக்கிற்றுத் திரு நாபீ கமலம் அன்றோ அத்தை அனுபவித்து

மேன்மைக்கும் சௌலப்யத்தையும் பட்டம் கட்டி யிருக்கிறோம் நாம் அல்லோமோ என்று திரு வுதர பந்தனம்
தன் பக்கலிலே வர விசிக்க அத்தை அனுபவித்து-

அதுக்கு மேலே இருக்கிற திரு மார்பானது தன்னுடைய ஹாரத்ய ஆபரணங்களையும்
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமான மேன்மையையும் காட்டி இசித்துக் கொள்ள
அந்தத் திரு மார்பை அனுபவித்து –

அந்த பிராட்டிக்கும் ஹாரத்ய ஆபரணங்களுக்கும்
ஆச்ரயமான திருக் கழுத்தை அனுபவித்து –

அதுக்கு மேலே –
வாயில் -சர்வ பூதேப்யோ அபயம் ததாமி –
என்றாப் போலே சொல்லா நிற்கச் செய்தே அனுபவிக்கிற நாய்ச்சிமார்க்கு அகப்பட –
வாயழகர் தம்மை யஞ்சுதம் -என்று கண்களை செம்பிளித்து அனுபவிக்கும்படி ஸ்வா பாவிக
சௌந்தர்யத்தை உடைத்தான திருவதரத்தை அனுபவித்து –

இப்படி அவயவங்களை அனுபவியா நிற்கச் செய்தே
இடையில் திவ்யாயுதங்களும் இறாய்ஞ்சிக் கொள்ள அவற்றை அனுபவித்து –

அபயம் ததாமி – என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகளை மேல் எழுத்து  இட்டு கொடுக்கிற குளிர்ந்த
கடாஷங்களை உடைத்தான திருக்கண்களை அனுபவித்து –

பாலும் பழமும் கண்ட சர்க்கரையுமான ரசவஸ்துக்களை சேர்த்து புஜிப்பாரைப் போலே
இந்த அவயவங்களோடு உண்டான சேர்த்தியால் வந்த அழகையும் ஸ்வா பாவிகமான
அழகையும் உடைத்தான திருமேனியின் பசும் கூட்டமான சமுதாய சோபையையும்
அனுபவித்தாராய் இறே கீழ் நின்றது –

இவருடைய இப்படிப்பட்ட மானஸ அனுபவத்தையும் -மன பூர்வகமான வாசிக அனுபவத்தையும்
கண்ட பெரிய பெருமாள் -இப்படி குணா விஷ்டராய் அனுபவிக்கிற படியைக் கண்டு –
த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -என்கிறபடியே அவரை அழைத்துக் கொண்டு இருக்க
வேண்டும்படி அவர் அளவிலே அபி நிவிஷ்டராகையாலும் –

க்ஷண அபி தே யத் விரஹோஸ்தி தஸ்சஹ –
என்கிறபடியே தம்மை ஒருகால் காண வேணும் என்னும் ஆசை உடையாரை ஷண காலமும்
பிரிந்து இருக்க மாட்டாமையாலும் அவரை அழைப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்தார்-

இனி நாம் போய்க் கொடு வர வென்றால் -அசங்கேத மநாலாபம் -என்றாப் போலே சொல்லுகிற சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டுகையாலே அது செய்ய ஒண்ணாதாய் இருந்தது –

இனி இவர் தாமே வர வென்றால்
அதுவும் தமக்கு ஸ்வரூப ஹாநியாய் இருந்தது –

ஆன பின்பு விபீஷண ஆழ்வானை மஹா ராஜரை யிட்டு
ஆநயைநம் -என்றாப் போலே இவரையும் ஒருவரை யிட்டு அழைப்பிக்க வேணும் என்று பார்த்தார் –

அந்த விபீஷணன் ராஜ்ய காங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிஸ்ரேஷ்டரான மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே

சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வ்ருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்க கேட்டு இருக்கையாலும் –

நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு  இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர-

இவரும் பெரிய பெருமாளுடைய கௌரவத்தைக் குலைக்க ஒண்ணாது என்று முநிவாஹநராய்
வந்து புகுந்து பெரிய பெருமாளைத் திருவடி தொழ  –

பெரிய பெருமாளும் –
ஆவிர்ப்ப பூவ பகவான் பீதாம்பாதரோ ஹரி -என்று ஸ்தோத்ர பரனான ப்ரஹ்லாதனுக்கு
வந்து ஆவிர்ப்பவித்து அபேஷிதங்களைக் கொடுத்து -அவன் ராஜ்யாதிகளிலே போது போக்க
வல்லன் ஆகையாலே அவன் பார்த்துக் கொடு நிற்கச் செய்தே -தத்ரைவாந்தர தீயதே -என்று போக
பின்பு அந்த ராஜ்யாதிகளாலே ப்ரஹ்லாதனும் போது போக்கி இருந்தான் இறே-

இவர் அவனைப் போல் அன்றிக்கே அநந்ய சாதநராய் அநந்ய ப்ரயோஜனராய் இருக்கையாலே
நம் விஸ்லேஷம் பொறுக்க வல்லவர் அல்லர் என்று பார்த்தருளி தம்முடைய ஸ்வரூபாதிகளைக் காட்ட

இவரும் ப்ரீதரான வளவிலே இவர் மானஸ அனுசந்தானம் பண்ணுகிற தசையிலே –
ஆதி -விண்ணவர் கோன் -நீதி வானவன் –அரங்கத்தம்மான் என்றும் –
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக் கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
என்றும் -விரையார் பொழில் சூழ் வேங்கடவன் -என்றாப் போலே தம்முடைய
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களையும் தம் பக்கலிலே அனுசந்திக்கையாலே
இவற்றைத் தனித்தனியே அனுபவிக்க வேணும் என்கிற அபேஷை இவர்க்கு இல்லை என்கிற விடம்
ஹ்ருதயனாய்க் கொண்டு-

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியா நிற்கச் செய்தேயும் இவரைச் சோதிக்கைக்காக
இவற்றையும் இவர்க்குத் தனித்தனியே காட்டி இவர் அனுபவிக்கும்படி பண்ணுவோம் என்று
பார்த்தருளி –

அது செய்யும் இடத்துப் புருஷார்த்தமாக வேண்டுகையாலே இவருடைய
அபேஷை யறிந்து செய்ய வேணும் -இல்லை யாகில் இவர் நாம் அத்தை பிரகாசிப்பித்துக் கொள்ள
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -என்னும் திரு மங்கை யாழ்வாரைப் போலே நிந்தித்தல்
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போலே -அச்சுவை பெறினும் வேண்டேன் -என்று காற்கடைக் கொள்ளுதல் செய்வரோ
அறிய வேணும் என்று தம் திரு உள்ளத்திலே முன்னோர் அடிக் கொண்டத்தை அறிந்து –

இவர் –
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே
எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை
அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

—————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன் என்னுமது ஒழிய இப் ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு பெரிய பெருமாள் இனி ஒரு
விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு -தம்முடைய ஆத்மாவதியான
அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி அநாதி காலம்
பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

—————-

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

பதவுரை

கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவை யுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.

—————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் மேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க் குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –

கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –

வெண்ணெய் வுண்ட வாயன் –
களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-

என் உள்ளம் கவர்ந்தானை-
என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை

யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ஸ்ரத்தையை
என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை -வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே
யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-

அண்டர் கோன் –
திருவாய்ப்பாடியில் இடைக் குலத்துக்கு நிர்வாஹகன் -என்னுதல்
அண்டாந்தர வ்ர்த்திகளான ஆத்ம வர்க்கத்துக்கு நிர்வாஹகன் என்னுதல்

அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்களுடைய உப்புச் சாறு போல் அன்று இவருடைய அம்ருதம்

என் அமுதினை –
ப்ரஹ்மாதிகளுக்கு முதலியாய் இருக்கும்
எனக்குச் சாகாமல் காக்கும் அம்ருதமாய் இருக்கும்

கண்ட கண்கள் –
சுவை அறிந்த கண்கள் -ஸ்ரவண இந்த்ரிய மாத்ரம் அன்றியே விடாய் தீரக் கண்ட கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நான்யத்ர கச்சதி -போலே கண்களுக்கு பச்சை இட்டாலும்
வேறு ஒரு அர்ச்சாவதாரம் அவதார விசேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யம் என்று கருதாது
காட்சி ஒழிய வேறு ஒரு பலம் சொல்லா விட்டது பலமும் காட்சியாகையாலே
முக்த ப்ராப்யம் என்று ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பஸ்யந்தி -இறே

தம்மைச் சொல்லுதல் பாட்டுக்கு சங்க்யை சொல்லுதல் செய்யில் கரை மேலே நின்ற
அல்லாத ஆழ்வார்களோ பாதி யாவர் -அஸ்தமி தான்ய பாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார்

நோ பஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே முக்த ப்ராப்யமான புருஷார்த்தத்தை
அனுபவித்தார் என்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய் விட்டது –
இப் பாட்டில் கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –

—————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கண்களுக்கு விஷயம் இருந்தபடி –
ந மாம்ஸ சஷூ ரபி வீஷதே தம் -என்றும் –
ந சஷூஷா பஸ்யதி கச்சநைநம் -என்கிற இலச்சினையை அழித்துத் தன் வடிவைக் காணும்படி
பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து சொல்லுகிறார் –

அங்கன் இன்றிக்கே
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –

அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்

ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –

வண்ணம் -என்று
ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –

நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
அந்த மேகமானால் ஆகாசத்தே கடக்க நின்று நீரை வர்ஷித்துப் போம் இத்தனை இறே
அங்கன் இன்றிக்கே இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்து
தன் வடிவு அழகை அவர்களுக்கு சர்வ ஸ்வ தாநம் பண்ணின படி –

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
பர அவஸ்தனாய் வந்து வெண்ணெய் யமுது செய்யில் மாளிகைச் சாந்து நாறுமே –
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே ராஜாவாக்கிச் சிலர்
சீராட்டுகையாலே வந்து வெண்ணெய் காண ஒண்ணாதே -அதுக்காக –

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
சக்ரவர்த்தி தன்னுடைய ராஜ ஐஸ்வர்யத்தை புஜிக்கைக்கு -எனக்கொரு பிள்ளை வேணும் -என்று
மஹதா தபஸா -என்கிறபடியே நோற்றுப் பெருமாளைப் பெற்றாப் போலே
ஸ்ரீ நந்த கோபரும் -கானாயர் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் –
என்கிறபடியே திருவாய்ப்பாடியிலே கவ்ய ஸம்ருத்தி யடைய பாழ் போக ஒண்ணாது என்று
இத்தை புஜிக்கைகாக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து கிருஷ்ணன்-

வெண்ணெய் உண்ட வாயன் –
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும் –

வெண்ணெய் உண்ட வாயன் —
ஆஸ்ரிதர் உடைமை யாகையாலே தத் ஸ்பர்சம் ஆகாதே என்று இன்றும் அகப்பட அந்தக் குணுங்கு
நாற்றம் வாயிலே தோன்றும்படி இறே  பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவது –

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -என்று சந்தேஹிக்க வேண்டாதபடி யாய்த்து
இன்றும் அகப்பட வாய் குணுங்கு நாறும்படி

வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ஸ்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக்
கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள் –
அந்த உறிகளின் குறி அழியாது இருக்க
அந்த வெண்ணெய் பானைகளை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து -அரங்கம் தன்னுள்
கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-

என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –

என் உள்ளம் கவர்ந்தானை —
தைவீம் சம்பதமபிஜாதரான -பெரியவர்கள் அகப்பட தம்தாமுடைய
மனஸை இவன் பக்கலிலே வைக்க வேணும் என்று பார்த்து -அது செய்யப் போகாமல்
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண -என்றாப் போலே பெரும் காற்றைத் தாம் பிடிக்கலாம் –
என் மனஸை ஒரு அளவாக்கப் போகிறதில்லை -என்னும்படி இறே மனஸ்ஸினுடைய
சஞ்சலத்வமும் திமிரும்படியான மிடுக்கும் -அப்படி -நின்றவா நில்லாத மனஸ்சை
என் பக்கல் அபேஷை இன்றிக்கே இருக்க -நானும் அறியாதபடி –
அபஹரிதுத்து தன் பக்கலிலே சேர்த்துக் கொண்டான் –

அண்டர் கோன்
இப்படி இடையரோடும் இடைச்சிகளோடும் தண்ணியரான உம்மோடும் வாசியற வந்து கலந்து
வெண்ணெயையும் மனசையும் அவன் களவு கண்டது -புறம்பு ஆள் இல்லாமையாலும்
தன் குறையிலுமாவோ என்ன –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி
அந்தூபந்தரா நிற்கச் செய்தே கிடீர் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து அவதரித்தது என்கிறார் –

அன்றிக்கே –
அண்டர் -என்று
இடையர் என்னுதல் –
அண்டாந்தர்வர்த்திகள் என்னுதல்

அணி யரங்கன் –
என் நெஞ்சை அபஹரித்து -சேணுயர் வானத்திலே -போய் இருக்கை அன்றிக்கே
கண்ணிட்டு காணலாம்படி சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவன்
சம்சாரிகள் அறவைத்தனப் படாதபடி யாலே இறே இக்கிடை கிடக்கிறது

அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்கள் அம்ருதம் போலே உப்புச் சாறாய் எட்டா நிலத்திலே இருக்குமதன்று இறே இவருடைய அம்ருதம்-

அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை –
அளப்பரிய வாரமுதை அரங்க மேய வந்தணனை -என்கிற வம்ருதம் இறே –

அமுதினைக் கண்ட கண்கள் –
இந்தக் கண்கள் இவரைக் காணாது ஒழியப் பெற்றதாகிலும் புறம்பே போகலாய்த்து –
காட்சி தான் அரை வயிற்று யாகிலும் புறம்பே போகலாய்த்து

அங்கன் இன்றிக்கே -பூர்ண அனுபவம் பண்ணின கண்கள் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –

மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -போலே இந்தப் பெரிய பெருமாள் தம்மை கேசாதி பாதாந்தமாக
அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்

என் உள்ளம் கவர்ந்தான் -என்கையாலே
சித்த அபஹாரம் பண்ணின படியைச் சொன்னார் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கையாலே
த்ருஷ்ட்ய அபஹாரம் பண்ணின படியைச் சொல்லுகிறார்

அல்லாதார் திருநாமப் பாட்டுப் போலே தம்மை சொல்லிற்று இலர்
விஸஸ்மார ததாத்மாநம் -என்கிறபடியே தாம் போக ப்ரவணராய் தம்மை மறக்கையாலே –
பலம் -சதா பஸ்யந்தி -யாகையாகில் அது இங்கே சித்திக்கையாலே பலத்துக்கு பலம்
வேணுமோ என்று சொல்லிற்று இலர்

இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
1-இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
2-வடிவில் பசை இல்லை என்று போகவோ –
3-சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
4-நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
5-மேன்மை இல்லை என்று போகவோ –
6-சௌலப்யம் இல்லை என்று போகவோ –
7-போக்யதை இல்லை என்று போகவோ –
8-அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –

————————————————————————–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை -அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் அறியாத இடையரையும் இடைச்சிகளையும் ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய் -சூட்டு நன் மாலை -யில் படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-

என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய் போலே இவருடைய திரு உள்ளம் பெரிய பெருமாளுக்கு
நவநீதம் ஆயிற்று -ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள்
வடிம்பிடுகிற என்னுடைய மனஸை -வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும்
வசீகரித்து -இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –

அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி -அண்டாதிபதியான ப்ரஹ்மா
முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்
என்கிறார் ஆகவுமாம் –

அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை-

என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச் சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம்
போல் அன்றிக்கே -அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான
அம்ருதமானவனை என்னவுமாம்-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர் மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர் மமத்தோடே சேர்ந்த இம் மமகாரம் அநபிஜ்ஞர்  மமகாரம் போலே தோஷம் ஆகாது

மற்று ஒன்றினைக் காணாவே
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் -அவற்றைக் கண்ட போது
ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை
அநுபவிக்கப் பெற்ற கண்கள்-

மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே ப்ரஹ்ம புத்ரர்களாய்
யூயம் ஜிஜ்ஞா சவோ பக்தா -என்னும் அளவான ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –

ப்ராப்ய ச்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ்  ஸூ பூஜித -என்று
ஸ்ரீ நாரத பகவான் அளவிலும் அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது

உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற
ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்

அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ ய பதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்

பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப்
போலே -பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு  பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே

இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்
முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய் –

May 24, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-

—————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-

கீழ்ப் பாட்டில் –
கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே -என்று –
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசாநாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம் -ஸ்மரன் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேஸ்வர –
என்கிறபடியே ராம சரம் போலே இருக்கிற அந்த கடாஷ பாதங்களாலே –
கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ் சூடுருவவே வுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை –
என்றாப் போலே இவர் படுகிற பாட்டக் கண்ட திரு மேனியானது –

தனிப் பூ சூடுவாரைப் போலே நம்முடைய அவயவ சௌந்தர்யத்தை தனித் தனியே அனுபவித்தார்
இத்தனை யன்றோ –
இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆஸ்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –

இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்கப் பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த அவயவங்களோடும் ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க  வேணும் என்று பார்த்து –

ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு
அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -அவயவங்களையும் -ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி –
உய்விட மேழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள
தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –

————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் -நித்ய அநுபவ
ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

——————–

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

பதவுரை

மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப் பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திரு வாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

——————————————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இத்யாதி –
பெரிய ஆல  மரத்தினுடைய சிற்றிலையிலே யசோதை ஸ்தநந்தயமும் பெரியது என்னும்படி அத்விதீயனான பாலனாய் –

ஒரு பாலகனாய் –
யசோதாள் தநந்தயனான கிருஷ்ணனனும் முரணித்து இருக்கும்படி
இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும்

ஞாலம் இத்யாதி –
சிறு பிரஜைகள் புரோ வர்த்தி பதார்த்தங்களை எடுத்து வாயிலிடுமா போலே
பூமிப் பரப்படைய வாயிலே வைத்தானாய்த்து பிள்ளைத் தனம் –
பிரளயத்தில் தன் அகடிதகடநத்தோடு ஒக்கும் -என்னை அகப் படித்தன படியும்

அரங்கத்தரவினணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்கக் கிடக்கிற படி
அந்த ஆலின் இலையில் நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை காணும்
அந்த உறவு ஒன்றுமே இவர் அச்சம் கெடுக்கிற வித்தனை காணும்
இப்ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான் என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்படி கிடக்கிற விடம்

அரவின் அணையான் –
பிரளயத்தில் தன் வயிற்றில் புகா விடில் ஜகத்து ஜீவியாதது போலே
சம்சாரிகள் தன் முகப்பே விழியா விடில் தனக்குச் செல்லாதான படி-

கோல மா மணி யாரமும் –
அழகியதாய் பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களாலே செய்யப்பட ஆரமும்

முத்துத் தாமமும் –
முத்து மாலையும்

கோலம் –
இது பெருமாளைச் சொல்லுகிறது

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
அவதி காண வொண்ணாத அழகை உடைய நெய்தத திருமேனி

ஐயோ –
பச்சை சட்டை உடுத்து -இட்டு -தனக்கு உள்ளத்தை அடையக் காட்டி எனக்கு உள்ளத்தை
யடையக் கொண்டான்

நிறை கொண்டது என் நெஞ்சினையே -எனக்கு அகவாயில் காம்பீர்யத்தைப் போக வடித்தது

இப் பாட்டால் வட தள சயநமும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு -என்கிறது –

——————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

கீழ் ஐந்தாம் பாட்டாலே –
தம்முடைய துஷ் கர்மங்களை சவாசநமாகப் போக்கின படியைச் சொல்லி
எட்டாம் பாட்டாலே -பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட -என்று பிறந்த கர்மங்களுக்கு அடியான
அவித்யையை தமோ ரூபமான ஹிரண்யனை கிழித்து பொகட்டாப் போலே
ஞானக் கையால் நிரசித்தான் என்றும் இறே இவர் சொல்லி நின்றது –

இத்தைக் கேட்டவர்கள்
இந்த தேசமாகிறது -இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே -தெளி விசும்பின் நின்றும்
சர்வேஸ்வரன் தானே அவதரிக்கிலும் அவனுக்கும் சோக மோகங்களை உண்டாக்குமதாய் இருக்கும்

காலத்தைப் பார்த்தவாறே அப்ரஜ்ஞா தண்ட லிங்காநி -என்கிறபடியே உள்ள அறிவையும் அழித்து
விபரீத அனுஷ்டானத்துக்கு உடலான லிங்கங்களையும் உதித்தாய் இருக்கும்

தேகத்தைப் பார்த்தால் -பகவத் ஸ்வரூப தீரோதா நகரீம் -என்கிறபடி பகவத் ஸ்வரூபத்தை
மறைத்து விபரீத ஜ்ஞானத்தை பிறப்பிக்குமதாய் இருக்கும்

வேதாந்த ஞானத்தால் அல்லது அஞ்ஞானம் போகாது -உமக்கு அந்த வேதாந்த ஸ்ரவணத்துக்கு
அதிகாரமே பிடித்தில்லை -வேதாந்த விஜ்ஞான ஸூ நிச்சிதார்த்தா -என்றாப் போலே சொல்லுகிற
வேதாந்த ஞானம் உடைய பெரியவர்கள் பாடே சென்று உபசத்தி பண்ணி அவர்களுக்கு
அந்தே வாசியாய் இருந்து இவ்வர்தங்களைக் கேட்டு அறிய ஒண்ணாதபடி நிஹீந ஜன்மத்திலே
பிறந்தவராய் இருந்தீர் –
ஆக தேசம் இது காலம் இது தேகம் இது உம்முடைய ஜன்மம் இது -இப்படி இருக்க

பகவானான கீதோப நிஷ தாசார்யன் கீதை பதினெட்டோத்திலும் -நெறி எல்லாம் எடுத்து உரைக்க –
தைவீம் சம்பதமவிஜாதனான அர்ஜுனன் இத்தைக் கேட்டு -நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா –
என்றும் சொன்னாப் போலே நீர் உம்முடைய அஞ்ஞாநாதிகள் அடைய போய் ஜ்ஞானம் பிறந்ததாகச்
சொல்லா  நின்றீர் -இது அகடிதமாய் இருந்ததீ -என்ன –

பிரளய காலத்திலே இந்த ஜகத்தாக
நோவு படப்புக இத்தை யடையத் தான் அதி சிசுவாய் இருக்கத் தன் சிறிய வயிற்றிலே வைத்து –
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு –
என்னும் படி யிருக்கிற ஓர் ஆலிலை ஓட்டைக் கோட்டை போராதாய் இருப்பதோர்
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து இந்த ஜகத்தை அடைய ரஷித்தருள அந்த அகடிதகடநா
சமர்த்யமுடைய வனுக்கு என்னுடைய விரோதியைப் போக்கி எனக்கு ஜ்ஞானத்தைப்
பிறப்பித்த விது சால அகடிதமாய் இருந்ததோ என்கிறார்-

ஆல மா  மரத்தின் இலை மேல் –
பாலாலிலை -என்கிறபடியே ஆல மா மரத்திலே
நெரியில் பால் பாயும்படி யிருக்கிற இளம் தளிரிலே

மா மரம் -என்று
விபரீத லஷணை யாய்ச் சிறிய மரம் என்றபடி –

இலை மேல் -என்கையாலே
இந்த இலைக்குள்ள அடங்கும்படி யாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது –

ஒரு பாலகனாய் –
யசோதா ஸ்த நந்த்யம் ப்ரௌட தசை என்னும்படி அத்விதீயனான பாலனாய் –
யசோதா ஸ்தநந்யமான கிருஷ்ணனும் முரணித்து இருக்கும்படி இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும் –
இந்த பால்யத்தை உபபாதிக்கிறார் மேல் –

ஞாலம் ஏழும் உண்டான் –
சிறுப் பிள்ளைகளாய் இருப்பார் -புரோ வர்த்தி பதார்த்தங்கள் அடைய எடுத்து
வாயிலே இடுமா போலே -மஞ்சாடு வரை ஏழும் ஈசன் -என்கிறபடியே -சப்த லோகங்களையும் இவற்றைச் சூழ்ந்த
கடல்கள் ஏழையும் குல பர்வதங்கள் ஏழையும் மற்றும் உள்ளவையும் அடைய எடுத்து அமுது செய்தான் –

தேவ திர்யக் மநுஷ்ய ஸ்தாவர ரூபமான ஜகத்தை யடைய வமுது செய்யா நிற்க
ஒரு ஸ்தாவரம் உண்டாய் -அதின் தளிரிலே இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து அருளுகை
யாகிற விந்த அகடிதங்களைச் செய்தவனுக்கு
அந்த தேச கால தேக ஜன்மங்களால் உண்டான
நிகர்ஷம் பாராதே எனக்கு ஜ்ஞானத்தைப் பிறப்பித்து -இதுக்கு விரோதிகளான அஜ்ஞாநாதிகளைப்
போக்கி சால அகடிதமாய் இருந்ததோ –
என்னால் போக்கிக் கொள்வது அன்றோ அரிது
அவனுக்கு அரியது உண்டோ -பிரளயத்தில் அகடிதகட நத்தொடு ஒக்கும் என்னை அகப்படுத்தின படி

அரங்கத் தரவின் அணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்க கிடக்கிற படி
அவ்வாலிலை நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை –

இப் ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான்
என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்  படி கிடக்கிற இடம்-

அரவின் அணையான் –
அந்தப் பிரளய ஜலதியிலே இந்த ஜகத்தை யடைய தன் திரு
வயிற்றுக்கு உள்ளே வைத்து -தான் அத்யந்த சிசுவாய் -ஆலிலை என்று பேர் மாத்ரமான
ஓர் இளம் தளிரிலே இடம் வலம் கொண்டு கண் வளரா நின்றான் -இப்படி பெரிய ஜகத்தை
எல்லாம் அமுது செய்தால் அறாது ஒழித்தல் -அமுது செய்த அண்டத்தின் பெருமையாலும்
இவற்றின் சிறுமையாலும் வயிறு விரிதல் -ஆலம் தளிரிலே இடம் வலம் கொள்ளப் புக்கால்
கடலிலே புக்குப் போதல் செய்யில் செய்வது என் -என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி –
திருவரங்கப் பெரு நகராகிற பெரிய கோயிலிலே –
இருள் இரியச் சுடர் -அனந்தன் என்னும் அணை என்கிற
பெரிய படுக்கையிலே மொசு மொசு என்று வளர்ந்த பெரிய வடிவும் தாமுமாய்ப் பெரிய
பெருமாள் கண் வளர்ந்து அருளின படி –

அங்குப் பரிவர் இல்லை என்கிற குறையும் இல்லை இறே
படுக்கையான இவன் தான் -சிந்தாமணி மிவோத் வாந்த முத் சங்கே நந்த போகிந –
என்கிறபடியே ஜகத் உபாதாநமாய் இருப்பதொரு சிந்தாமணியை உமிழ்ந்து இத்தை யாரேனும் ஒருவர்
இறாய்ஞ்சிக் கொள்ளில் செய்வது என் என்று தன் மடியில் வைத்து -படியிலோ வைத்து –
கரண்டகம் இட்டு கொண்டு கிடக்கிறாப் போலே இருக்கிற –
தீ முகத்து நாகணை -என்றும் –
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவணை -என்றும் சொல்லுகிறபடியே
இவ் வஸ்துவுக்கு என் வருகிறதோ என்று தன்னுடைய பணா மண்டலங்களாலே விஷ அக்நியை
உமிழ்ந்து கொண்டு -நோக்கிக் கொண்டு -போருகையாலே அவாந்தர பிரளயத்திலே அகப்பட்டவர்களை
தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான் –
சம்சாரம் ஆகிற மஹா பிரளயத்திலே புக்கவர்களை
ஸ்ரீமான் ஸூக ஸூப்த -என்றும் –
கிடந்ததோர் கிடக்கை -என்றும் சொல்லுகிற தன் கிடை யழகைக் காட்டி ரஷித்தான் –
இப்படி கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் வடிவு இருக்கிறபடியைச் சொல்லுகிறார் மேல்

கோல மா மணி யாரமும் –
ஸ்ரீ கௌஸ்துபம் போலே மஹார்க்கமாய்ப் பெரு விலையனான
மாணிக்கங்களாலே அழுத்தப் பட்டு திரு மேனிக்கு அலங்காரமான ஹாரத்தையும்

முத்துத் தாமமும் –
த்ரி சரம் பஞ்ச சரம் சப்த சரம் என்றாப் போலே சொல்லுகிற திருமேனியின்
மார்த்த்வத்துக்கு அநு ரூபமான குளிர்த்தியை உடைய முத்து வடங்களையும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
அவதி காண ஒண்ணாத அழகை வுடைய நெய்தத திருமேனி –
அபரிச்சித்தமாய் அத்விதீயமான சமுதாய சோபையை உடையதுமாய்

நீல மேனி –
இந்த ஆபரணங்களாலும் சமுதாய சோபையாலும் ஓர் அழகு வேண்டாதபடி
இவை தனக்கு நிறம் கொடுக்கும் படி -மங்கு நீலச் சுடர் தழைப்ப -என்கிறபடியே
நீல தோயதா மத் யஸ்தா வித் யுல்லேகா -கல்பமான வடிவு –
த்ருதகந கஜ கிரி பரிமிள துததி ப்ரச லித லஹரி வத் –
என்கிறபடியே அந்தத் திருமேனி தன்னை பார்த்தாலும் அறப் பளபளத்து அத்தை நீக்கி
உள் வாயிலே கண்ணை யோட்டிப் பார்த்தால் காண்கிறவன் கண்களிலே குளிர அஞ்சனத்தை
எழிதினால் போலே யாய்த்து –அவனுக்கு ஆனந்தத்துக்கு அவதி இன்றிக்கே ஒழிகிறதும்
வடிவின் வைலஷண்யத்தாலே இறே

நிறை கொண்டது என் நெஞ்சினையே –
என்னுடைய ஹ்ருதயத்தில் உண்டான பூர்த்தியை அவஹரித்தது –
என் அகவாயில் காம்பீர்யத்தையும் போகவடித்தது -இந்த ஜகத்துக்கு கரண களேபரங்களை இழவாமல்
தன் திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாய் இருக்க அவனுக்கு அபிமதமான அவ்வடிவு
என்னுடைய கரணத்தை யழித்தது-

ஐயோ –
பச்சைச் சட்டை இட்டுத் தனக்கு உள்ளத்தைக் காட்டி எனக்கு உள்ளத்தை
அடைய கொண்டான் -நான் எல்லாவற்றையும் அநுபவிக்க வேணும் என்று இருக்க எனக்கு
அநுபவ பரிகரமான என் நெஞ்சைத் தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே -ஐயோ -என்கிறார் –

————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் –
ஓர் அவாந்தர பிரளயத்திலே -ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ -என்று
அறிய அரியதாய் அநந்த சாகமாய் இருப்பதொரு வட வருஷத்திலே ஓர் இலையிலே தாயும் தந்தையும்
இல்லாத தொரு தனிக் குழவியாய்

ஞாலம் ஏழும் உண்டான் –
அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்தவன் –

அரங்கத்து அரவின் அணையான் –
பிரளய காலத்திலே பாலனாய்க் கொண்டு ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளுகிற போதோடு
சர்வ காலத்திலும் கோயில் ஆழ்வார்க்கு உள்ளே ஸூரிகளுக்கு எல்லாம் தலைவரான
திருவனந்தாழ்வான் மேலே -உலகுக்கு ஓர் தனியப்பன் -என்னும்படி தன் பிரஜைகளான
ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க கண் வளர்ந்து அருளுகிற போதோடு வாசியறக்
காரணத்வ ரஷகத் வாதிகள் காணலாம்படியாய் இருக்கிற பெரிய பெருமாளுடைய

கோல மா மணி யாரமும் –
நாய்ச்சியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற திரு மார்வுக்கு
ஒரு ரத்ன ப்ரகாரம் போலே -அபி ரூபமாய் -அதி மஹத்தாய் -மஹார்க்க ரத்னமான திருவாரமும் –

முத்துத் தாமமும் –
சந்நவீரமாயும் ஏகவாளியாயும் -த்ரி சரமாயும் -பஞ்ச சரமாயும்
உள்ள திரு முத்து வடங்களும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
இவை தனக்கும் அதிசயகரமாய் -அநந்தமாய –
அத்விதீயமான ஆபி ரூப்யத்தை உடைத்தாய் -காளமேகம் போலே ஸ்ரமஹரமான திருமேனியும்
ஆபரணங்களுக்கு முடி இல்லாதோர் எழிலை உண்டாக்கும்படியான நீலமேனி என்னவுமாம்

ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித்தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த
என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே முன்புற்ற பூர்ணத்வ் அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை
கழித்து இப் பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு –

May 23, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-கீழில்  பாட்டில் –
செய்யவாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்தது-என்று திருப் பவளத்திலே இவர்
அப்ஹ்ருத ஹ்ருதயர் ஆகிற படியைக் கடைக் கணித்து கொண்டு கிடக்கிற
திருக் கண்கள் ஆனவை –
செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும்
நாம் அல்லோமோ –

மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற
வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது -ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ

அது கிடக்க -அந்த வார்த்தை தான் -ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தால் போலே
அன்றிக்கே -மெய்ம்மை பெரு வார்த்தை -என்று விஸ்வசித்து இருக்கலாம்படி வாத்சல்யம்
அடியாக பிறந்த வார்த்தை என்று அந்த அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ -அது கிடக்க
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ –
அதுக்கு மேலே

புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் -புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது
நம்மோட்டை சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –

செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து -என்று
தம்முடைய அஜ்ஞ்ஞாந ஆசாத் கர்மாதி  நிகர்ஷம் பாராதே -பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தாம் அநாதி கால்ம் அர்ஜித்த பாபங்களை அடைய போக்கினபடியைச் சொன்னாராய்
அது கூடுமோ என்கிற அபேஷையிலே
கூடும் என்னும் இடத்துக்கு ருத்ரனை த்ருஷ்டாந்தமாகச் சொன்னாராய் –

அநந்தரம்
விஷம த்ருஷ்டாந்தம் என்று சில ஹேதுக்களை சொல்ல –
அதுக்கு அடைவே உத்தரம் சொன்னார் கீழ் -பாட்டில்

இதில் அந்த -பாரமாய -என்கிற பாட்டைப் பற்றி ஓர் அபேஷை எழும்ப அதுக்கு உத்தரமாய் இருக்கிறது –
அதாவது அநாதி கால ஆர்ஜிதமான உம்முடைய பாபங்களை அடையப் போக்கினார் என்றீர்
அது மறு கிளை எழாதபடி போய்த்தாவது –
அவித்யா சஞ்சித கர்மம் என்றும் –
அநாத்ய வித்யா சஞ்சித புண்ய பாப கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தம் என்றும் -சொல்லுகிறபடியே
அந்த கர்மத்துக்கு ஹேது பூதையான அவித்யை போனால் அன்றோ அது போய்த்தாவது –
அது போய்த்ததுவோ என்கிற அபேஷையில் –
அந்த அவித்யைவாது தன்னோடு அனுபந்தித்தாரை பகவத் பிரவணர் ஆக ஒட்டாதே
விபரீதங்களை அனுஷ்டிப்பிக்குமது இறே –

அப்படியே தன்னோடு அனுபந்தித பிரஹ்லாதனை பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்கத் தேடின
ஹிரண்யனை தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே
தமோ குணம் ஹிரண்யன் என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது

அப்படியே இருக்கிறவனை –
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே –
ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை கிழித்துப் பொகட்டான் என்கிறார்

——————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

தன்னை ஜிதந்த புண்டரீகாஷ -இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே
விழப் பண்ணி மேன் மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு
தாம் அற்றுத் தீர்ந்த படியை -ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

——————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப் பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காது வரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக் கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்து விட்டன.

—————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே சேஷத்வத்தை அறிந்து
மெலிந்து இராமே -சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –

பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை -ஊட்டி இட்டு வளர்த்த
பன்றி போலே உடம்பை வளர்த்தான் இறே -வந்த -இப்போது தாம் வயிறு பிடிக்கிறார்-

அவுணன் உடல் கீண்ட –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் –
குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின
பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தேவர்களுக்கு உத்பாதகனான மாத்ரமே -கையாளனாய் நிற்பது ஆஸ்ரிதர்க்கு
சிருக்கனுக்கு உதவி நிற்கிற நிலை தன்னிலே ப்ரஹ்மாதிகளுக்கு பரிச்சேதிக்க ஒண்ணாதபடி நிற்கிற ப்ரதாநன் –

க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத –

ஆதிப் பிரான் –
தான் முற்கோலி உபகரிக்குமவன்

பிரான் –
ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான நிலையும்
இரண்டும் தமக்கு உபகாரமாய் இருக்கிறது-

அரங்கத்தமலன் –
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த சுத்தி –ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த ஸூத்தி ஆகவுமாம்

முகத்து –
அவனுடைய முகத்து

கரியவாகி –
விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை-

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடம் உடைத்தாய் இருக்கை

மிளிர்ந்து –
திரை வீசிக் கரையாலும் வழி போக ஒண்ணாது இருக்கை

செவ்வரி யோடி –
ஸ்ரீயபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை

நீண்ட –
செவி யளவும் அலை எறிகை

அப் பெரிய வாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் -இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண
வேண்டும்படி இருக்கை –

என்னை –
பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்த்யத்தைப் பறித்துப் பொகட்டு
மௌக்த்யத்தைத் தந்தன -ஒருவன் எய்தத்தை மற்றவனும் எய்யுமா போலே –

பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க வொட்டுகிறன வில்லை –

இத்தால் நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே வுண்டு என்கிறார் –

————————————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே
சேஷத்வத்தை அறிந்து மெலிந்து இராமே –
சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –

பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை-

ஆத்மா வஸ்து என்று ஓன்று உள்ளது -அதுக்கு அவன் சேஷியாய் இருக்கையாலே
அந்த சேஷியானவனை நம்முடைய சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தின் சித்திக்காகப் பெற வேணும் என்று –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி உடம்பை இளைக்கப் பண்ணுகிறான் இறே

அங்கன் அன்றியிலே பரமாத்மாவை அநுபவிக்க ஆசைப்பட்டு பெறாமையாலே பக்தி தலை மண்டை இட்டு –
நின்பால் அன்பையே அடியேன் உடலம் நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே – என்கிறபடியே
சரீரத்தை இளைப்பித்து மெலிந்து இருக்கிறான் அன்றே –

பரமேஸ்வர சம்ஜ்ஜோஸ் ஜ்ஞ கிமந்யோ மய்ய வஸ்திதே -என்கிறபடியே தன்னுடைய
அஹங்கார மமகாரங்களாலே பூண் கட்டி -பலவான் ப்ரஹ்ம ராஷஸ -என்னுமா போலே
பருக்கப் பண்ணின சரீரம் இறே

ராஜாக்களுக்கு சிலர் ஊட்டி இட்டு சில  காவல் பன்றி வளர்த்து வைக்குமா போலே
நரசிம்ஹத்தின் உகிருக்கு இரை போரும்படி தேவர்கள் வரங்களால் யூட்டி யிட்டு வளர்த்து வைத்தார்கள் –
மேல் இத்தால் வரும் அநர்த்தமும் அறியாமையாலே வரம் கொடுத்து பருக்க வளர்த்தார்கள் –
இது தானே தாம் அழிக்கைக்கு உறுப்பாய்த்து –

வந்த –
இப்போது தாம் வயிறு பிடிக்கிறார் -இன்றும் வருகிறானாகக் காணும் இவர்க்கு தோற்றுகிறது
அனுகூலனாய் வருகை அன்றிக்கே -பகவத் தத்வம் இல்லை என்றும் -உண்டு என்கிறவனை
நலிகைக்கு என்றும் வந்த க்ரௌர்யத்தை நினைத்து பயப்படுகிறார்-

அவுணன் –
இப்படி பகவத் பாகவத விஷயம் என்றால் அவன் சிவட்க்கு என்கைக்கு
ஹேது என் என்னில் -ஆசூரீம் யோ நிமா பன்னனாய் மூடன் ஆகையாலே -என்கிறார் –

உடல் கீண்ட –
திருவாழி யாழ்வானுக்கும் பிற்காலிக்க வேண்டும்படி இறே -ஊன் மல்கி
மோடி பருத்து இருக்கிறபடி -அப்படி இருக்கிற ஹிரண்ய சரீரமானது நர சிம்ஹத்தின் உடைய
மொறாந்த முகமும் -நா மடிக்கொண்ட வுதடும் -இறுத்து நோக்கின நோக்கும் -குத்த முறுக்கின
கையும் கண்ட போதே பொசுக்கு என பன்றி போலே உலர்ந்த தாழை நாரைக் கிழித்தாப் போலே கிழித்த படி

உடல் கீண்ட –
தன்னதான ஆத்ம வஸ்துவுக்கு அழிவு வாராமல் கிள்ளிக் களைந்தான் -என்னுமா போலே
அஹங்கார ஹேதுவான தேஹத்தைக் கிழித்துப் பொகட்டான்-

அமரர்க்கு அரிய –
இப்படி ப்ரஹ்லாதனுக்கு எளியனாய் நிற்கிற அவ்வளவு தன்னிலே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கிட்ட அரியனாய் இருக்கும்
க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத -ஸ்வ சாமர்த்தியம்
கொண்டு கிட்ட நினைப்பார்க்கு தயை பண்ணும் அளவிலும் கிட்ட வரிதாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனர்க்குச் சீற்றத்திலும் கிட்டலாய் இருக்கும் -அங்கன் இன்றியிலே –
தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் தமக்கு எளியனாய் இருக்கறபடியைச் சொல்லுகிறார்

அதாவது -தம்முடைய நிகர்ஷம் பாராதே தம்மையே விஷயீ கரித்து தம்முடைய
துஷ்கர்மங்களை யடைய ஸ வாசனமாகப் போக்கி தம்மை முழுக்க அனுபவித்துக் கொண்டு
இருக்கிறபடியைச் சொல்லுகிறார் –

இப்படி தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் உமக்கு எளியனாய் இருக்கைக்கு அடி என் என்னில் –
ஆதி –
காரண பூதன் -பஹூ புத்ரனானவன் விகல கரணனான புத்திரன் பக்கலிலே போர
வத்சல்யனாய் இருக்குமா போலே -இவனும் ஜகத் காரணனாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய அஞ்ஞான அசக்திகளை திரு உள்ளம் பற்றி என்னளவிலே போர வத்சல்யனாய் இருக்கும் –

ஆதி –
தான் முற்கோலி உபகரிக்குமவன்-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தமக்கு உபகரித்த படியை நினைத்து பிரான் என்கிறார் அல்லர்
தேவர்களுக்கு கிட்ட அரியனாய் இருக்கச் செய்தே ப்ரஹ்லாதனுடைய விரோதியை முற் பாடனாய்ச்
சென்று போக்கின உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறார்

ஆதிப் பிரான் –
ப்ரஹ்லாதன் -சர்வ காரணம் -என்ன ஹிரண்யன் அதுக்கு பொறாமல் –
இந்தத் தூணில் உண்டோ அந்த காரண பூதன் -என்று துணைத் தட்டி கேட்க –
ப்ரஹ்லாதனும் சர்வ அந்தராத்மான் காண் அவன் -ஆகையால் இதிலும் உண்டு -என்ன –

அங்கு அப்பொழுதே -என்கிறபடியே அவன் தட்டின தூணிலே வந்து நரசிம்ஹ ரூபியாய் தோன்றி
அவன் தட்டின கையைப் பிடித்து -பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்பிடந்தான் -என்கிறபடியே
அவனைக் கதுப்பிலே அடித்து -அவன் மார்பைக் கிழித்து ப்ரஹ்லாதனுடைய ப்ரதிஜ்ஞா வாக்யத்தை
க்ரயம் செலுத்தி தன்னுடைய காரணத்வத்தையும்
ஈஸ்வரத்வத்தையும் நிலை நிறுத்தின உபகாரத்தைப் பற்றி சொல்லுகிறார் ஆகவுமாம் –

அரங்கத்தம்மான் –
நரசிம்ஹ வ்யாவ்ருத்தி -அதாவது -ஒரு கால விசேஷத்திலே -ஒரு தூணின்
நடுவே வந்து தோன்றி ப்ரஹ்லாதன் ஒருவனுக்கு வந்த விரோதியைப் போக்கின வளவு இறே அங்கு உள்ளது –
இங்குக் கிடக்கிற கிடை-எல்லாக் காலத்திலும் எல்லாருடைய விரோதிகளையும் போக்குகைக்கு
அணித்தாக வந்து இரண்டு தூணுக்கும் நடுவே கிடக்கிற கிடையாகையாலே வ்யாவ்ருத்தமாய் இருக்கும் இறே-

அரங்கத்தமலன் –
ப்ரஹ்லாதன் ஆகிறான் பகவத் சந்நிதி உண்டான வளவிலே –
யா ப்ரீதிர விவேகாநாம் -என்று பகவத் விஷய பிரேமத்தை யபேஷிக்கை யாகையாலும் –
மலைகளாலே கடலிலே யமுக்கு உண்டு போது ஸ்தோத்ரங்களைப் பண்ணுகை யாலும்
மயி பக்திஸ் தவாஸ் த்யேவ -என்கிற அனந்தரமே ஜ்ஞான பக்திகளை உடையவன் ஆகையாலே
அவன் அளவில் பண்ணின உபகாரம் அப்படி யாகையாலே வருவதொரு மாலின்யம் உண்டு அங்கு –

இங்கு –
ஏழை யேதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்கிறபடியே நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
பிற்காலிப்பார் அளவிலும் அந்த நிகர்ஷம் பாராதே மேல் விழுந்து விஷயீ கரித்து விரோதிகளையும்
போக்கிப் பரம புருஷார்த்தத்தை கொடுக்கையாலே கீழ்ச் சொன்ன மாலின்யம்
பெரிய பெருமாளுக்கு இல்லை என்று இட்டு -அரங்கத்தமலன் -என்கிறார் –

அஸ்மத் தாதிகளும் திரு முகத்திலே விழித்து அவித்யா சௌசம போய் சுத்தராம் படியான அமலத்வம்
என்னையும் ஆளாம்படி லோக சாரங்க மஹா முநி களோடே கூட்டின அமலத்வம்
எல்லார்க்கும் உதவும் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகையால் வந்த ஸூத்தி –
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்னக் கடவது இறே

ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்தல் -செய்யாமையால் வந்த ஸூத்தியுமாம்
விரோத்யம்சம் கழித்து ஸூத்தரானால் அநுபவ விஷயம் சொல்லுகிறது மேல் –

அரங்கத்தமலன் இத்யாதி –
இவை ஓர் ஒன்றே யமையும் என்னைப் பேதைமை செய்ய -என்கிறார்
வண்டினம் குரலும் இத்யாதிப் படியே -அண்டர்கோனும் பரமபதம் முதலான வாஸ ஸ்தானங்களையும் விட்டுப்
படுகாடு கிடக்கும்படியாய் யாய்த்து -இவ் வூரின் போக்யதை இருப்பது –
அதுக்கு மேலே கண் வளருகிறவருடைய அமலத்வம் –

மித்ர பாவேந சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந –
என்று விபீஷண விஷயமான வார்த்தையை க்ரயம் செலுத்துகைக்காக –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானாய்
சர்வ பிரகார நிக்ருஷ்டனான என் போல்வாரையும் ஸூத்தராக்குகைக்கு ஆகவாகையால்
கிடக்கிற சௌலப்யம் –

அதுக்கு மேலே ஓன்று இறே திரு முகம் –

முகத்து –
சக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகம் -என்றும் –
உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ -என்றும்
சொல்லுகிறபடியே வெறும் முகம் தானே ஆகர்ஷகமாய் யிறே இருப்பது –

கீழ் -தாம்
அநுபவித்த திருப் பவளத்தின் வைலஷண்யம் பின்னாட்டுகையாலே அந்த திரு வதரத்தை உடைத்தான
திரு முகத்தைப் பிரித்துச் சொல்கிறார் –

அதுக்கு மேலே –
அத்யருனேஷணம்  -என்கிறபடியே
இரண்டு ஆழங்காலாய்த்து -சந்திர மண்டலத்திலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும்-
ஒரு தாமரையிலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும் இருக்கிற திருக் கண்கள்

கரியவாகி –
புண்டரீகம் போலே வெளுத்து இருக்கிற திருக் கண்களுக்கு பரபாகமாம்படி
இரண்டு கரு விழியை வுடைத்தாய் -அங்கன் அன்றிக்கே -அஞ்சனத்தாலே கறுத்து இருத்தல் –
கண்களைக் கண்ட போதே தாபத் த்ரயம் அடைய சகல தாபங்களும் போம்படி குளிர்ந்து
இருக்கும் என்னுதல் -விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை –

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடமுடைத்தாய் இருக்கை -ஸ்வதஸ்
காண்கிற அளவுக்கு அவ்வருகே இரண்டு பார்ஸ்வமும் இடுங்கி யிராதே -பரந்து -இடம் உடைத்தாய்
அவித்யாதிகளைப் போக்கி அனுபவிப்பிக்கும் கார்யங்களைப் பற்றி வருகிற பரப்பு-

மிளிர்ந்து –
க்ருபா பரிதமாய் இருக்கையாலே கரை யருகும் வழி போக ஒண்ணாத படி
அலை எறிந்து திரை வீசுகை –
காண வேணும் என்கிற இவருடைய த்வரையில் காட்டிலும்
இவரை விஷயீ கரிக்கையில் உண்டான கண்களின் த்வரையைச் சொல்லுகிறது

செவ்வரி யோடி –
ஸ்ரீ யபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கும் என்னவுமாம் –

நீண்ட –
ஒழுகு நீண்டு இருக்கையும் தம்மளவும் கடாஷம் வந்து விஷயீ கரித்த படியும் –
க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகலாங்கம் கில சர்வ தோஷி நேத்ரே
ப்ரதமம் ஸ்ரவஸீ சமாஸ்த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –
பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் பட்டர் –

அதாவது –
பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண்
இரண்டாய்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ -இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக
வேண்டாவோ என்று பார்த்து -எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ஸ்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே
போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள்
அளவும் நீண்டு இருக்கிறபடி –

அப் பெரியவாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிகே இருக்கையாலே
அப் பெரியவாய கண்கள் -என்கிறார் –
இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி யிருக்கை –

கீழ் பரந்து நீண்டு –
என்று ஆயாம விஸ்தாரங்களை சொல்லுகையாலே இங்கு போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுகிறது –
போக்யதா அதிசயத்தாலே -அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே
முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார் –

என்னை –
அறப் பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்யத்தை பறித்துப் பொகட்டு மௌக்யத்தைத் தந்தன –
ஒருவன் எய்ய அதனை மற்றை யவனும் எய்யுமா போலே –

பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க ஒட்டுகிறன வில்லை-

என்னைப் பேதைமை செய்தனவே –
கீழ்ப் பாட்டில் என்னைச் சிந்தை கவர்ந்ததுவே -என்று
ஜ்ஞான ப்ரரைத்வாரத்தை அபஹரித்த படியைச் சொல்லிற்று –

இங்கு ஞானத்தை அபகரித்த படியைச் சொல்லுகிறது -ஜ்ஞான அபஹாரம் ஆவது -அழகிலே அலமருகை –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை தன் பக்கலிலே ஆதரத்தைப் பிறப்பித்து –
மதி எல்லாம் உள் கலங்கும்படி பண்ணிற்று –

என்னைப் பேதைமை செய்தனவே –
அவன் அக் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
என்று இருந்த கடாஷங்களுக்கு இலக்கானார்க்குத் தெளிவைப் பிறப்பிக்க கடவதாய்  இருக்க
எனக்குள்ள அறிவு தன்னையும் அழித்தது -இனி தாமரைக் கண்களால் நோக்காய் -என்பார்க்கு
எல்லாம் அழகிதாக ப்ரார்த்திக்கலாம்-

இப் பாட்டில் -நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே உண்டு என்கிறார் –

———————————————————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –
சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு
ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் -மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆழம் ஒன்றையும் ஒரு வாழை மடலைக் கிழிக்குமா
போலே இரண்டு கூறு செய்தவனாய்

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தன்னாலே ஸ்ருஷ்டருமாய்  உபக்ருதருமான தேவர்கள் -தான் காரண பூதனாய்  -உபாகாரகனாய் நிற்கிற நிலை
அறிய மாட்டாமையாலே அவர்களுக்கு ப்ரஹ்லாதன்
அனுபவித்தாப் போலே அணுகவும் அநுபவிக்கவும் அரியனாய் இருக்கிற

அரங்கத்தமலன் முகத்து –
ஹேய பிரசுரமான சம்சாரத்துக்கு உள்ளே கோயில் ஆழ்வார் உடன் எழுந்தருளி வந்து –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்று இருப்பார்
தம்முடைய திருவடிகளை அடைந்து அடி சூடி உய்யும் படி அவர்களுடைய
ஐயப்பாடு முதலான ஹேயங்களை அறுத்துத் தோன்றும் அழகை வுடையரான
பெரிய பெருமாள் உடைய கோள் இழைத் தாமரை -இத்யாதிகளால் பேசப்பட்ட
பேர் அழகை வுடைத்தே சந்திரனும் தாமரையும் ஒன்றினால் போலே இருக்கிற திரு முகத்தில்-

கரியவாகிப் புடை படர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள் –
நிகர் இல்லாத நீல ரத்னம் போலே இருக்கிற தாரைகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய் –
ஆஸ்ரீத தர்சன ப்ரீதியாலே அன்று அலர்ந்த தாமரைப் பூ போலே அதி விகசிதங்களாய் –
ஆசன்னர் எல்லாம் பக்கலிலும் ஆதரம் தோன்றும்படியான உல்லாசத்தை வுடையவையாய் –
அனந்யர் பக்கல் அநு ராகத்துக்குக் கீற்று எடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே வ்யாப்தங்களாய் –
ஸ்வபாவ சித்தங்களானஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –

அப்பெரிய -என்றதுக்கு
இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய் அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும்
மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்

என்னைப் பேதைமை செய்தனவே –
இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் –

May 23, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே

————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

கீழ்ப் பாட்டில் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டது -என்று திருக் கழுத்தானது
தன்னுடைய ஆபத் சகத்வாதிகளைக் காட்டி தம்மை எழுதிக் கொண்ட படியை இறே சொல்லிற்று –

இதுக்கு மேலான -திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –

ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க

செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் -என்கிறபடியே
அந்த திருப் பவளச் செவ்வாயிலே தாம் அபஹ்ருதராய் அகப்பட்ட படியைச் சொல்லுகிறார்

ஆனால் -செய்ய வாயையோ என்னைச் சிந்தை கவர்ந்தது -என்ன அமைந்து இருக்க -கீழில்
விசேஷணங்களால் செய்கிறது என் என்பது என்னில் –
கீழ் -அஞ்சாம் பாட்டில் –
பாரமாயபழ வினை பற்று அறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் -என்று அநேக ஜன்மார்ஜிதமான
பாபராசியை அடைய இத்தலையில் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னுடைய
நிகர்ஷம் பாராதே ஸவாசனமாகப் போக்கினான் என்று சொல்லி -அது கூடுமோ என்கிற
அபேஷையிலே -ஈஸ்வர அபிமாநியாய் துர்மாநியாய் ருத்ரனுடைய துயரை அவன் தண்மை
பாராதே போக்கினாப் போலே -என்னுடைய நிகர்ஷம் பாராதே பாபங்களையும் போக்கினான்
என்று ருத்ரனை த்ருஷ்டாந்தமாக சொன்னாராய் இறே கீழ்ப்பாட்டில் நின்றது –

இத்தைக் கேட்டவர்கள் இது விஷம உதாஹரணம் காணும் -அந்த ருத்ரன் -ஆகிறான்
ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி சம்ஹார கார கௌ -என்கிறபடியே சம்ஹார தொழிலிலே
புருஷோத்தமனாலே நியுக்தன் ஆகையாலே அதிகாரி புருஷனுமாய் -அவனுக்கு
ப்ரஹ்ம சிரஸ் க்ருந்த நத்தாலே வந்த ஆபத்து தானும் ப்ராமாதிகமாக ஒருகால்
பிறந்தது ஆகையாலே -தன் அலங்கல் மார்பில் வாசநீர் மாத்ரத்தாலே போக்கலாம் –

நீராகிறீர் -ச்ருதிஸ் ஸ்மருதிர் ம்மை வாஜ்ஞா -என்கிறபடியே பகவத ஆஜ்ஞா ரூபமான
வேத வைதிக மர்யாதையை அதிக்ரமித்தவருமாய் அதுக்கு மேலே அக்ருத்ய கரண
க்ருத்ய அகரண ரூபமான பாபங்களை அநாதி காலம் கூடு பூரித்தவருமாய் அன்றோ -இருப்பது

ஆன பின்பு உம்முடைய பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க உம்முடைய பாபங்களை அப்படிப் போக்க போமோ
அது கிடக்க -அந்த ருத்ரன் தானே தேவர்களுக்கு மேலாய் இருக்கையாலே ஆனை மேல்
இருந்தார் ஆனை மேல் இருந்தாருக்கு சுண்ணாம்பு இடுமோபாதி அவன் கார்யம் செய்யக் கூடும்
மனுஷ்யர்களுக்கும் கீழாய் இருக்கிற உம்முடைய பாபங்களை போக்கக் கூடுமோ -அது கிடக்க –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்கிறபடியே ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்ரனான படியாலே
தனக்கு பௌத்ரன் என்று இட்டு அவன் கார்யம் செய்யலாம் -அப்படி இருப்பதொரு பந்த விசேஷம்
உமக்கு இல்லையே –

அதுவும் கிடக்க அந்த ருத்ரன் தான் மூ வுலகும் பலி -திரிவோன்
என்கிறபடியே திருப்பாற் கடலிலே செல்ல பின்பன்றோ அவன் துயரைப் போக்கிற்று -நீரும் அப்படிப்
போனீரோ -என்ன அதற்க்கு அடைவே உத்தரமாய் இருக்கிறது

——————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை-

மேல் நாலு பாட்டாலே ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் –

அதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு
திரு முடி யளவும் சென்று மீண்ட சிந்தையை தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய
கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -என்னும்படியான திருப் பவளத்தில் அழகு
தன் வசம் ஆக்கிற்று என்கிறார்

———-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

பதவுரை

கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தி யிருக்கிற
சுரி சங்கு-சுரியை யுடைய திருச் சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத் துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள் முடி–உயர்ந்த திரு வபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப் பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப் பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

——————————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-வியாக்யானம் –

கையினார் -இத்யாதி வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் –

திருக் கோட்டியூரிலே அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்

நீள் வரை –
மலையை கடலை ஒப்பாகச் சொல்லும் இத்தனை இறே
நீட்சி போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -அதுக்கு மேலே ஒப்பனை அழகு –

துளப விரையார் கமழ் நீண் முடி –
பரிமளம் மிக்கு இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையருமாய்

எம்மையனார் –
உறவு தோற்றுகை -எனக்கு ஜனகரானவர்

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

அரவின் அணை மிசை –
ரத்னங்களை எல்லாம் தங்கத்திலே புதைத்துக் காட்டுமா போலே
தன் அழகு தெரிய திருவநந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டுகிற படி

மேய மாயனார் –
மின் மினி பறக்கிற படி –
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்

செய்ய வாய் –
ஸ்திரீகளுடைய  பொய்ச் சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச் சிரிப்பு
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ

ஐயோ –
திருவதரமும் -சிவப்பும் அநுபவிக்க அரிதாய் -ஐயோ –என்கிறார்

என்னை –
பண்டே நெஞ்சு பரி கொடுத்த என்னை அந்யாயம் செய்வதே -என்று கூப்பிடுகிறார்

என்னை –
கல்லை நீராக்கி -நீரையும் தானே கொண்டது
இப் பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார் –

——————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
கரி முனிந்த கைத்தலம் என்றும் -பரிகோபமா -என்றும் வெறும் புறத்திலே விரோதிகளை
நிரசிக்க நிரசிக்க வற்றாய் இருக்கச் செய்தே -அசிந்த்ய சக்திகளான திவ்ய ஆயுதங்களை
தரித்துக் கொண்டு -எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கிறது -நம் மேல் வினை கடிகைக்கு அன்றோ -என்கிறார்

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் -இறே

வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –

ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்ய தாரயத் -என்றும் –
தீய அசுரர் நடலைப்பட -முழங்கும் என்றும் சொல்லுகிறபடியே விரோதி வர்க்கத்தை
தன் த்வநியாலே தானே நிரசிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
கருதுமிடம் பொருது -என்கிறபடியே விரோதி வர்க்கத்தை -கூறாய் நீறாய் நிலனாகி –
என்கிறபடியே அழியச் செய்யும் திரு வாழியையும் தரித்துக் கொண்டு இருக்கிறது
என்னுடைய அறுக்கலறாப் பாபங்களை போக்குகைக்கு அன்றோ –

பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிற காலத்திலேயே ஒரு விசேஷ
திவசத்தின் அன்று கோளரி ஆழ்வானைப் பார்த்து தெற்காழ்வார் சொன்ன வார்த்தையை ஸ்மரிப்பது –

திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்க அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்-

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் -நம்மைப் போல் அன்றிக்கே தெளியக் கண்டவர்கள்
பெரிய பெருமாளையும் சதுர்ப் புஜராய் யிறே அநுபவிப்பது –

நீள் வரை போல் மெய்யினார் -திவ்யாயுதங்கள் தானும் மிகை என்னும்படி மேரு மந்தர மாத்ரமான
என்னுடைய பாப ராசிகளை மலையை இட்டு நெரித்தாப் போலே நெரிக்க வற்றான பெரிய
மலை போலே திண்ணிதான வடிவை வுடையவர் -மலையை கடலுக்கு ஒப்பாக சொல்லும் இத்தனை

நீட்சி -போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -இந்த வடிவை அனுபவிப்பார்க்கு
பிரகாஸ ரூபமாய்த்து இவர்கள் இருப்பது -அதுக்கு மேலே ஒப்பனை அழகு

துளப விரையார் கமழ் நீண் முடி –
பெரியவர்கள் கார்யம் செய்தவன் உம்முடைய கார்யம் செய்யப் புகுகிறானோ என்ன –
வெறும் ப்ரஹ்ம ருத்ராதி களுக்கே சேஷி என்று அன்றே அவன்
முடி கவித்து இருக்கிறது –

பிசு நயந் கில மௌளளி -பதிம் விச்வச்ய -என்றும் சொல்லுகிறபடியே
உபய விபூதி நாதன் அன்றோ –

துளப விரையார் கமழ்-
சர்வ கந்த வஸ்துவுக்கு தன் கந்தத்தாலே மணம் கொடுக்க வற்றாய்
மேன்மைக்கு உடலாய் இருக்கிறபடி –
நீண் முடி -என்னளவும் வந்து என்னை விஷயீ கரித்த முடி –

எம்மையனார் –
ருத்ரனனுக்கு பௌத்ரனாய் இருப்பதொரு பந்த விசேஷம் உண்டே -உமக்கு அது
இல்லையே என்று சொன்னதுக்கு உத்தரம் சொல்லுகிறார் -அவனுக்கு பௌத்ரத்வ நிபந்தநம்
ஒன்றுமே யன்றோ உள்ளது -மாதா பிதா ப்ராதா -இத்யாதிப் படியே சர்வவித பந்துத்வமும்
உள்ளது எனக்கே யன்றோ –

எம்மையனார் –
என்னைப் பெற்ற தமப்பனார்
பிதேவ புத்ரச்ய -இத்யாதிப் படியே இத்தலையில் குற்றங்களைப் பொறுக்க வேண்டும்படியான
பந்தம் உடையவன் அன்றோ –

அணி யரங்கனார் –
அந்த ருத்ரன் ஷீராப்தி யளவும் போய் அன்றோ கார்யம் கொண்டது -நீர் அவ்வளவும்
போந்திலீரே என்ன-அதுக்கு உத்தரமாக அவன் -மூ வுலகும் பலி திரிவோன் ஆகையாலே போய்க்
கார்யம் கொள்ள சக்தனானான் -அழும் குழவியாய் இருக்கிற என் போல்வாரை ரஷிக்கைக்கு அன்றோ

பிரஜை கிணற்றிலே விழுந்தால் கூடக் குதிக்கும் தாயைப் போலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிற பொது வன்று
திரு வரங்கத்துள் ஓங்கும் -இத்யாதிப் படியே பெரிய பெருமாள் தாமே என்கிறார்
அணி அரங்கனார் -அலங்காரமான கோயிலிலே வந்து சாய்ந்தவர்
ஆபரணம் ஆனது பூண்டவனுக்கு நிறம் கொடுக்கிறது -இவ் ஊரும் ரஷகனுக்கு நிறம்
கொடுக்கிறது ஆகையாலே சொல்லுகிறது

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

அரவின் அணை மிசை மேய மாயனார் –
இவ்வளவேயோ உள்ளது –
யத்ர ராம ஸ லஷ்மண-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
சொல்லுகிறபடியே புருஷகார பலமும் உண்டு என்கிறார்

அரவின் அணை மிசை மேய –
ரத்னங்களை சாடியிலே பதித்துக் காட்டுமா  போலே
தன் அழகு தெரியாதார்க்கு திருவந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டின படி
அரவின் அணை மிசை மேய -தான் புருஷகாரமாக சிலரைக் காட்டிக் கொடுத்தால்
அவர்களை அவன் ரஷியாதே விடில் தானும் அவனை எடுத்து உதறிப் போக்கும்

அரவின் அணை மிசை மேய மாயனார் –
ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப
என்கிறபடியே தான் எழுந்து இருந்து ஒரு வ்யாபாரம் பண்ண வேணுமோ

புலி கிடந்த தூறு என்றால் மிருகங்கள் எல்லாம் காடு பாய்ந்து போமா போலே
ஆஸ்ரிதர் உடைய விரோதி வர்க்கம் அடைய தான் கிடக்கிற படியைக் கண்ட போதே
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்னும்படி கிடக்கிற ஆச்சர்ய பூதன் –
மாயனார் -மின் மினி பறக்கிறபடி

ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்

மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்

மாயனார் செய்ய வாயையோ என்னை சிந்தை கவர்ந்ததுவே
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே பிற்காலிக்கிற என்னை -ஸ்வா பாவிக சௌந்தர்யத்தையும்
போக்யதையும் உடைய திருப்பவளமானது தன்னுடைய் ஸ்மிதத்தைக் காட்டி
அருகே சேர்த்துக் கொண்டு என்னுடைய மனஸ்ஸை அபஹரித்தது

என்னை சிந்தை கவர்ந்ததுவே –
உழக்கைக் கொண்டு கடலின் நீரை யளக்கப் புக்கு
அது தன்னையும் பறி  கொடுத்தேன்

என்னை சிந்தை கவர்ந்தது-
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனான
என்னைக் கிடீர் இப்படி அகப்படுத்திற்று என்கிறார் –

செய்ய வாய் –
ஸ்திரீகள் உடைய பொய்ச் சிரிப்பிலே துவக்கு உண்டார்க்கு இச் சிரிப்புக்
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ –

ஐயோ –
திருவதரமும் சிவப்பும் அனுபவிக்க அரிதாய் ஐயோ என்கிறார்

ஐயோ –
அவரும் தம்மை முழுக்க அனுபவிக்கப் பார்த்தார் -நானும் முழுக்க அனுபவிப்பேனாக
பாரித்தேன் -இத்தை திருவதரம் ஒட்டாதே இடையிலே இறாஞ்சிக் கொள்வதே ஐயோ என்கிறார் –

என்னை –
கல்லை நீராக்கி நீரையும் தானே கொண்டது -சித்த அபஹாரத்தைப் பண்ணி ஆத்ம
அபஹாரத்தை அழித்தது –
ப்ரதான சேஷியைக் கண்டவாறே த்வார சேஷி யளவில் நில்லாது இறே

இப் பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார்

———————————————————–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
திருக் கைக்கு ஆயுதமாகைக்கும் ஆபரணம் ஆகைக்கும்
போரும் என்னும்படி ஆர்ந்த சந்நிவேசத்தை உடைத்தாய் -அவலம்புரியான வடிவாலே ப்ரணவ் சந்நிவேசமாய்
சப்த ப்ரஹ்ம மயமாய் -நிரதிசய ஆநந்த ஹேதுவான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் -தாநவ வநதா
வக்னியாய் -மனஸ் தத்வ அபிமானியான திருவாழி யாழ்வானையும் உடையராய் –

இத்தால் -மந்தரத்தையும் மனசையும் அநுகூல  சிந்தைக்கு அனுகுணம் ஆக்கவில்ல
உப கரணங்களை உடையவர் என்றது ஆய்த்து –

திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக் கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
பெருமாள் திரு மேனியிலே தோன்றி நிற்பர்கள்

நீள் வரை போல் மெய்யனார் –
ஸ்வரூபம் போலே ஸூஷ்ம த்ருஷ்டிகள் காணும் அளவன்றிக்கே
மாம்ச சஷூஸ்ஸூக்களும் காணலாம் படி மலை இலக்கான திருமேனியை வுடையவர்

துளப விரையார் கமழ் நீண் முடி எம் ஐயனார் –
சர்வாதிகத்வ ஸூசகமான திருத் துளாயின் பரிமளத்தைப் பரி பூர்ணம் ஆக்கும்படி
கமழ்ந்து -விபூதி த்வய சாம்ராஜ்ய வ்யஞ்சகமான திவ்ய கிரீடத்தை வுடைய சர்வ லோக பிதாவானவர்

அணி அரங்கனார் –
பரம வ்யோம ஷீரார்ண வாதிகளைக் காட்டில் குணா திசயத்தாலே
ஆஸ்ரீதற்கு ஹ்ருத்ய தமமான படியாலே விபூதி இரண்டுக்கும் ஏக ஆபரணம் என்னலாய்
சௌலப்ய அதிசயம் உண்டாம் படியான ஸ்ரீ ரெங்க விமாநத்தை சயன ஸ்தானமாக உடையவர்
அணிமையாலே அணி அரங்கனார் -என்கிறது ஆகவுமாம்

அரவின் அணை மிசை மேய மாயனார் –
தம்முடைய ஜ்ஞான பலங்கள் வடிவு கொண்டால் போல
இருக்கிற திருவனந்தாழ்வான் ஆகிற ஆநுகூலதிவ்ய பர்யங்கத்தின் மேலே அளவறத்
தேங்கின அம்ருத தடாகம் போலே ஆஸ்ரீதர்கு அனுபவிக்கலாய் –
சிந்தாமணி வோத்வாந்த முத்சங்ககேஸ் அநந்த போகிந -என்னும்படி அத்ய ஆச்சர்ய பூதரானவருடைய
வாலியதோர் கனி கொல் -என்னலாம் படி வர்ண மாதர் யாதிகளை வுடைத்தாய்
வையம் ஏழும் உள்ளே காணலாம் படியான செய்ய வாய் என் சிந்தையைப் பறித்துக் கொண்டது

ஐயோ என்று ஆச்சர்யத்தை யாதல்
அனுபவித்து ஆற்ற அரிதான படியை யாதல்
அநுபவ ரசத்தை யாதல் -காட்டுகிறது

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய –

May 22, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திரு மார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்

——-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திரு மார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

கீழ்ப் பாட்டில் திரு மார்பானது ஹராத்ய ஆபரண சோபையையும் –
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற மேன்மையையும் காட்டி
தம்மை திரு வயிற்றின் நின்றும் வர வீரத்துக் கொண்டு எழுதிக் கொண்ட படி யிறே சொல்லிற்று –

இதில் -அந்த திரு மார்புக்கு மேலாய் –
ரமயது ஸ மாம் கண்ட ஸ்ரீ ரங்க நே துரு தஞ்சி தக்ரமுக தருண க்ரீவாகம் புப்ர லம்பமலிம்லுச
ப்ரணய விலகல்  லஷ்மீ விச்வம் பராகர கந்தளீ கநக வலய க்ரீடா சங்கராந்த ரேக இவோல்ல சன் –
என்கிறபடியே கமுகுக் கன்றின் கழுத்துப் போலே பசுகு பசுகு என்று இருப்பதாய் -ரேகாத்ரயாங்கிதமாய் –
இரண்டருகும் நெருங்கி நடுவு பெருத்து இருக்கையாலும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற திருக் கழுத்தானது-

இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும்
திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –

இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார்
ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே -அவ் வாபரணங்கள் அழுத்த
அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும்
நாம் அல்லோமோ -அதுவும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட
மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ –
என்றாப் போலே தன்னுடைய ஆபரண சோபையையும் -யௌவனத்தையும் -ஆபன் நிவாரகத்வத்தையும்
காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –

—————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

கீழ்ப் பாட்டில் கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான
நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம் நிராகரித்த படியை
அருளிச் செய்தார் –

இப் பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

—————–

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6–

பதவுரை

துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண் பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகை யுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுது செய்த
கண்டம் கண்டீர்-திருக் கழுத்துக் கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது

—————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம் –

துண்டம் -இத்யாதி
கலா மாத்ரமாய் வெளுத்து இருந்துள்ள பிறையை -ஜடையிலே உடையனான –
ருத்ரன் தனக்கு பிதாவுமாய் லோக குருவுமாய் இருந்துள்ள ப்ரஹ்மா உடைய
தலையை அறுக்கையால் வந்த பாபத்தை போக்கினவன் –
சுமையராய் இருப்பார் சும்மாட்டுக்கு உள்ளே தாழை மடலை செருகுமா போலே
சாதகனாய் இருக்கச் செய்தே -ஸூக ப்ரதானாக அபிமானித்து இருக்குமாய்த்து –
ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல் இல்லையே –

சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம்
அவனுடைய் துரிதத்தைப் போக்கினாப் போலே தம்முடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்-
லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்

வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

அண்ட ரண்டம் இத்யாதி –
அண்டாந்தர வர்த்திகள் உடைய அண்டம் –
பகிரண்டம் -புற வண்டம்
அத்விதீயமான மஹா ப்ருதிவி
பூமிக்கு ஆணி யடித்தால் போலே இருக்கிற ஏழு வகைப்பட்ட குல கிரிகள்
ஓன்று ஒழியாமே ஆடிக் காற்றில் பூளை போலே பறந்து திரு வயிற்றிலே புகும்படி
யுண்ட கழுத்து கிடீர்

இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனியே சொல்லுகை போக்யமாய் இருக்கையாலே
பெரிய பெருமாள் திருக் கழுத்தைக் கண்டால் பிரளய ஆபத்தில் ஜகத்தை எடுத்துத்
திரு வயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றது ஆய்த்து –

அடியேனை உய்யக் கொண்டதே
முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று
என்னை சம்சாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று –

இப் பாட்டால்
ஆபத் ஸகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார் –

———————————————————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன்றுயர் தீர்த்தவன் –
கீழ்ப் பாட்டிலே என்னுடைய அஜ்ஞானத்தாலே -என்னாலும்  பிறராலும் பரிஹரிக்க
ஒண்ணாதபடி -அநாதி காலார்ஜிதமாய் -அவசியம் அனுபோக்ய தவ்யமாய் -பிடரியைப்
பிடித்து கொடு நிற்கிற துஷ் கர்மங்களை பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தத் ஷணா தேவ நச்யதி -என்கிறபடியே பெரிய பெருமாள் நசிப்பித்தார் என்று இறே சொல்லிற்று –

இத்தைக் கேட்டவர்கள் -பாரமாய பழ வினை யடைய அவள் புருஷகாரமாக போக்கினார்
என்னும் -இடம் ஆச்சர்யமாய் இருந்ததீ -இது உபபன்னம் என்று நாங்கள் அறியும் படி என் என்ன –

என்னைப் போலே தன்னுடைய அஜ்ஞ்ஞானத்தாலே ஈஸ்வர அபிமானியான ருத்ரன் ஆனவன்
லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான ப்ரஹ்மா வினுடைய சிரஸை நகத்தாலே அறுத்து
இப்படி தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துயரை சம்பாதித்து
அது போகைக்காக ஷீராப்தி நாதன் பாடேற வர -அவ்விடத்தே தானும் பெரிய ப்ராட்டியாருமாய் தோன்றி
ஸ்ரீமான் மயா  பிஷாம் ப்ரயாசித -என்கிறபடியே அபேஷ அநு குணமாக அவள் புருஷகாரமாக
அவனுடைய பிரமஹத்தையால் வந்த துயரைத் தீர்த்தாப் போலே -ஸ கலு ப்ரஹ்மஹா பவேத்
என்கிற என்னுடைய ப்ரஹ்மஹத்தையையும் போக்கினான் -என்கிறார்

இந்தச் சேவகன் -மஹா பாதகாதி பாபங்களைப் பண்ணி மஹா ரௌரவாதி நரகங்களிலே
யம படர் கையிளைத்து விடுமளவும் அசித் கல்பனாய் கிடந்தது அனுபவித்து -அவர்கள் விட்டடித்தவாறே
முற்பட -ஸ்தாவர க்ரிமயோப் ஜாச்ச பஷிணச்ச ஸரீஸ்ருபா -என்கிறபடியே முற்பட
ஸ்தாவராதி யோநிகளிலே பிறந்து -மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மின் ந மூகோ பதிரோபி வா –
நா பக்ராமதி சம்சாராத் ஸ கலு ப்ரஹ் மஹா பவேத் -என்கிறபடியே மநுஷ்ய ஜன்மத்திலே
பிறக்கவும் பெற்று -ஸ்ரோத்ராதி கரணங்களும் விதேயமாகப் பெற்று வைத்து -இவற்றைக் கொண்டு
ஈஸ்வரனைப் பற்றி திரு நாம சங்கீர்த்தன முகத்தாலே இந்த சம்சாரத்தை கடவானாகில்
அவனை ப்ரஹ்ம -என்றது இறே -புழு நெருடுகிறவனுக்கும் -ப்ராஹ்மண சரீரத்தை
வதிக்கிறவனுக்கும் ஹிம்சை ஒத்து இருக்கச் செய்தே ப்ரஹ்மண வதம் ப்ரஹ்மஹத்யை
என்கிறது –
அவனுடைய ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் வந்த க்ரௌரவம் பற்ற விறே –
அப்படியே யஸ்யாத்மா சரீரம் -என்கிறபடியே பகவத் சரீர பூதமான ஆத்மாவை அபஹரித்து
நாராயணத்வத்தை ஒருவாய்ப் போக்குகிறவனை ப்ரஹ்ம என்னத் தட்டில்லை இறே-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வாச நீர் கொடுத்தவன் -என்கிறபடியே
தீர்த்த சேவையாலும் -தன் தபசாலும் -தன் சக்தி மத்தையாலும் போக்க ஒண்ணாத வலிய துயரை
பிராட்டி புருஷாகாரமாக தன் மார்பில் வாச நீரால் போக்கினது -தம்முடைய துயரை போக்கினதுக்கு
நிதர்சநமாய் இருக்கையாலே அவனை உதாஹரணம் ஆக்குகிறார் –

தாழை மடலை சூடி
வருவாரைப் போலே ஒரு கலா மாத்ரமான வெளுத்த சந்த்ரனை சடையிலே வுடையனான
ருத்ரன் உடைய பாபத்தைப் போக்கினவன் -கலா மாத்ரமான சந்த்ரனை ஜடையிலே சூடி
வந்தான் ஆகில் இப்படி ஆபன்னனாய் வருகிற விடத்திலும் அலங்காரத்தோடே த்ருப்தனாய் வந்தான் என்கை –

வெண்மையாலே சிவந்த ஜடைக்கு பரபாகமாய் இருக்கிறபடி –
சுமையரராய் இருப்பவர் சும்மாட்டுக்குள் தாழை மடல் சொருகுமா போலே சாதகனாய் இருக்கச் செய்தே
ஸூக பிரதானாய் அபிமாநிதது இருக்குமாய்த்து -ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல்
இல்லை யிறே -இத்தால் ஒரு தேவதையை ஆபரணமாக உடையவன் ஆகையாலே வந்த மதிப்பும்
போக ப்ரதானன் என்னும் இடமும் முமுஷு வல்லன் என்னும் இடமும் சொல்லுகிறது —

வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –

ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –

இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகன்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –

இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –

ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்

ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ரு சம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –

தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –

சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-

லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் ப்ரயாசித
விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ந லப்த தனம் யதா –என்று துர்மாநியான தானே
தன் அபிமத விஷயத்தைப் பார்த்து சொல்லும்படி யிறே அவனுடைய துயரைப் போக்கின படி

தத்ர –
அந்த பரம பதத்திலே -நாராயண -அபராதம் பாராமல் ரஷிக்கைக்கு அடியான பந்த
விசேஷத்தைச் சொல்லுகிறது –

ஸ்ரீ மான் –
அந்த பந்த விசேஷம் கிடக்கச் செய்தேயும் – ஷிபாமி -என்றால் பொறுப்பிக்கும் அவள் –

மயா பிஷாம் ப்ரயாசித –
நாட்டை யடைய கும்பீடு கொண்டு அபேஷித பல ப்ரதனை நான் இரந்தேன் –

விஷ்ணு பிரசாதாத் –
அக வாயில் இருந்து என் அலமாப்பை அடைய அனுசந்திதுக் கொண்டு போருகிறவனுடைய பிரசாதம் அடியாக

ஸூஸ்ரோணி-
உன்னுடைய சௌபாக்ய விசேஷம் இறே –

தத் கபாலம் –
ஒரு காலும் நிரம்பாதே விடாதே கிடந்தது –

சஹஸ்ரதா –
காண ஒண்ணாத படி யாய்த்து காண் -விரோதி போக்கும் இடத்தில்
புகுந்து போய்த்து என்று தெரியாதபடி வாசனையோடே போக்கும் இடத்துக்கு நிதர்சனம் இறே-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம் –
அவனுடைய துயரத்தைப் போக்கினாப் போலே என்னுடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

அஞ்சிறைய -இத்யாதி -லோகத்திலே பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்மஹத்யை பண்ணி அலைந்து
கொடு கிடக்கப் புக்கவாறே -நாம் கிடக்க ஒண்ணாது -என்று அவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண்  வளர்ந்து அருளுகிற உபகாரகன் -அழகிய சிறகை உடைத்தான வண்டு வாழா
நின்றுள்ள சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன் –

அந்த ருத்ரன் -அலங்கல் மார்பில் வாச நீர் பெற்றுக் களித்தாப் போலே யாய்த்து இந்த வண்டுகளும்
அந்த சோலையிலே மது பானம் பண்ணினத்தால் பிறந்த ஹர்ஷம் சிறகிலே தொடை
கொள்ளலாம் படி களித்து வாழுகிறபடி-

வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

அங்கன் அன்றிக்கே -உபாப்யாமேவ பஷாப்யா மாகாஸே பஷிணாம் கதி -ததைவ
ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்கிறபடியே –
வண்டுகளோ வம்மின் -என்கிற முமுஷுக்களான சாத்விகர் சமயக் ஜ்ஞான
சத் கர்மங்கள் ஆகிற மோஷ பரிகரங்களைக் கொண்டு வாழுகிற படியை சொல்லிற்று ஆகவுமாம்-

பெரிய பெருமாளுக்கு ஆபரணமாய் ஊருக்கும் ஆபரணமாய் இருக்கும் சோலை
சோலைக்கு ஆபரணமாய் இருக்கும் வண்டுகள் –
வண்டுகளுக்கு ஆபரணமாய் இருக்கும் அழகிய சிறகு -என்கை

ருத்ரனானவன் வந்து அபேஷிக்க அவன் ஒருவனுக்கு உதவின படியை சொல்லிற்று -கீழ்
அபேஷா நிரபேஷமாக அநேக ஜனத்தினுடைய ஆபத்தைப் போக்கிற்று அன்றோ திருக் கழுத்து என்கிறார் மேல் –

அண்ட ரண்டம் –
அண்டாந்தர வர்த்திகளான சேதனரை உடைத்தான இந்த அண்டம்
பகிர் அண்டத்து -பஹி உண்டான அண்டங்கள்
ஈத்ரு சங்களான பறம்பில் உண்டான அண்டங்கள்
ஒரு மாநிலம் -ஈத்ரு சமான அண்டங்களை தரித்து கொண்டு இருக்கையாலே
அத்விதீயமான மஹா ப்ருதிவி
எழு மால் வரை -இவ் வண்டங்களையும் பூமியும் பாதாளத்தில் விழாதபடி சங்கு ஸ்தாபனம்
பண்ணினாப் போலே இந்த பூமியை ஊடுவிக்கிற குல பர்வதங்கள் ஏழும்-

முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனித் தனியே சொல்லுகை தான் போக்யமாய் இருக்கையாலே -பெரிய பெருமாள்
திருக் கழுத்தைக் கண்டவாறே ஜகத்தை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்தமை
தோன்றா நின்றதாய்த்து

உண்ட கண்டம் –
விடு காது தோடிட்டு வளர்ந்தது என்று தெரியுமா போலே

முற்றும்  உண்ட கண்டம் –
பஹிர் அண்டாந்த வர்த்தி சேதனரும் பாதாளாதிகளும்
உண்ட கண்டம் –
சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருக்குமா போலே
இவற்றின் உடைய ரஷணம் தனக்கு தாரகமாய் இருக்கிறபடி

அத்தா சராசர க்ரஹணாத் –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந -என்னக் கடவது இறே
அடியேனை உய்யக் கொண்ட — பிறப்பித்து -சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுத்து அக்கரை ஏற்றி
சந்த மேகம் என்னும்படி பண்ணிற்று இப்படிப் பட்ட திருக் கழுத்து அன்றோ

இப் பாட்டில்
ஆபத் சகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார்

———————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
ஈஸ்வரன் என்று பேரைச் சுமந்த தனக்கும் பூரணத்வம் இல்லை என்கைக்கு ஜ்ஞாபகம் போலே
சகல மாத்ரமாய்க் கொண்டு பிரகாசிக்கிற சந்திர கலையை தரிக்கிற ருத்ரன் ப்ரஹ்மாவினுடைய புத்ரனாய் வைத்து –
பிதாவின் திறத்திலே அபராதம் பண்ணி -அத்தாலே மஹா பாதகா க்ராந்தனாய் –
இப் பாதகத்தை தீர்க்க வல்லார் ஆர் -என்று கரகலித கபாலனாய்க்
கொண்டு திரிந்து -ஓர் அளவிலே கெடு மரக்கலம் கரை சேர்ந்தாப் போலே காருணிகனான
சர்வேஸ்வரனை வந்து கண்டு -என்னெந்தாய் சாபம் தீர் -என்ன-இவனுடைய சாபத்தைத் தீர்க்க -வல்லவன் –

இத்தால் ஈஸ்வரன் என்று பேருடைய ருத்ரன் கர்ம வஸ்யன் என்னும் இடமும்
தன்னைத் தான் ரஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறு ஒருத்தருக்கு நிரபேஷை
ரஷகனாக மாட்டான் என்னும்  இடமும் சர்வேஸ்வரனே சர்வ அநிஷ்ட நிவர்த்தகன் என்னும்
இடமும் சொல்லிற்று ஆயிற்று-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
ஆர்த்தி வுடையார் அபேஷித்தால் அவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணுகைக்கும்
மாசில் மலரடிக் கீழ் அவர்களை சேர்க்கைக்கும் ஹேதுவான கதிக்கு சாதனங்களாய் –
அபி ரூபங்களான சிறகுகளை உடைத்தான வண்டுகள்
அபிமத போகத்தோடே வாழுகிற திவ்ய உத்யானங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ ரெங்க நகரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற சேவை லோக பிதாவானவன் –

இத்தால்-காரண பூதனாய் -கரண களேபரங்களை கொடுத்து உபகரித்தவன் கண்ணுக்கு
இலக்காய் வந்து கண் வளர்ந்து -கரணங்கள் பட்டி புகுராதபடி காக்கிற உபகார
அதிசயத்தை உதாஹரிக்கிறது -ஆகிறது –

ந ராஜ் ஜாதாநி தத்வான் -இத்யாதிகளின் அர்த்தமும்-இங்கே அனுசந்தேயம்

காரண அவஸ்தையில் எல்லாக் கார்யங்களையும் தன் பக்கலிலே உப சம்ஹரித்து
பின்பு ஸ்ருஷ்டிக்கும் படிக்கு உதாஹரணமாக -வெற்றிப் போர்க் கடலைரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட உபகாரத்தைக் காட்டி -நெற்றி மேல் கண்ணானும் நான் முகனும் –
முதலாக -எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்னும்
அர்த்தத்தை பேசிக் கொண்டு தம்மை இப்போது சம்சார ஆர்ணவம் விழுங்காதபடி
உய்யக் கொண்ட படியை உபாலாளிக்கிறார்-

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்ச சத கோடி விஸ்தீரணையான
மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –

ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம் என்று தோன்றுகிறது

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத்தன் –

May 20, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–அவதாரிகை-
எனக்கு பற்றாசான பெரிய பிராட்டியார் இருக்கிற திரு மார்பு கிடீர் என்னை
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யம் கொண்டது என்கிறார் –

————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-

எனக்கு பற்றாசான பெரிய பிராட்டியார் உடனே -திருவார மார்பானது என்னை ஸ்வரூப அநுரூபமான
கைங்கர்யத்தைக் கொண்டது என்கிறார் –

மூன்றாம் பாட்டிலே திரு நாபீ கமலம் ப்ரஹ்மாவை
தரித்துக் கொண்டு இருக்கிற தன் மதிப்பையும் அழகையும் காட்டி -தம்முடைய திரு உள்ளத்தை
திருப் பீதாம்பரத்தின் நின்றும் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள -அங்கே  அது சுழி யாறு
பட்ட படி இறே சொல்லிற்று

கீழில் -பாட்டில் இத்தைக் கண்ட திரு வயிறானது
சகல சேதன அசெதனங்களையும் தானே தரித்துக் கொண்டு இருக்கிற மதிப்பையும் –
யசோதைப் பிராட்டி கட்டக் கட்டுண்ட தழும்பைக் காட்டி -தன்னுடைய  சௌலப்யத்தையும் -சிற்றிடையான அழகையும் காட்டி –
அத் திரு நாபீ கமலத்தின் நின்றும் திரு உள்ளத்தைத் தன் பக்கலிலே யிசிக்க
அங்குப் போக ஒட்டாதே அப்படிக்கு பட்டம் கட்டி இருக்கிறாப் போலே இருக்கிற
திரு உதர பந்தனம் மேலிட்டு நின்று ஸ்வைர சஞ்சாரம் பண்ணுகிற படியை இறே சொல்லிற்று –

அந்த திரு வயிற்ருக்கு ஒரு கால விசேஷத்திலே காதா சித்கமாக சகல அண்டங்களையும்
வைத்ததால் உண்டான மதிப்பும் -ஒரு கால் யசோதைப் பிராட்டி கட்ட அத்தால் வந்த
சௌலப்யமும் இறே இருப்பது -அப்படி யன்றே திரு மார்பு –

ஸ்ரீ வத்ஸ ஸம்ஸ்தாந தரமநந்தேச சமாச்ரிதம் -ப்ரதாநம் –என்றும்
ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம்
பிபர்த்தி கௌச்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ காலமும் சேதன அசேதனங்களை ஸ்ரீ வத்ஸ கௌச்துப முகத்தாலே தரித்துக் கொண்டு இருக்கிற
பெரிய மதிப்பையும் -அவனுடைய ஸ்வரூபாதிகளுக்கு நிரூபக பூதையாய் -நீர்மைக்கு
எல்லை நிலமாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற
ஏற்றத்தையும் உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலையை தரித்துக் கொண்டு இருக்கிற
ஆகாரத்தையும் உடைத்தாய் –
அக்கு வடமுடுத் தாமைத்தாலி பூண்ட வனந்த சயனன் -என்கிறபடியே யசோதை பிராட்டி
பூட்டின ஆபரணங்களையும் உடைத்தாய் இறே இருப்பது-

ஆகையாலே –
அந்த திரு மார்பானது -திரு வயிற்றில் காட்டில் தனக்கு உண்டான ஆதிக்யத்தையும்
சௌலப்யத்தையும் திருவாரம் உள்ளிட்ட ஆபரண சேர்த்தியால் வந்த அழகையும் உடையோம் நாம் அன்றோ –
ஆன பின்பு பேரகலமான நமக்கு சிற்றிடையான தான் நிகரோ -என்று தன் இறுமாப்பைக் காட்டி –
அத் திரு உதிர பந்தனத்தின் நின்றும்
தன் பக்கலிலே யிசித்துக் கொள்ள -தம்முடைய நெஞ்சு அளவன்றிக்கே -கரணியதான
தம்மையும் ஸ்வரூப ஜ்ஞாநாதிகளை பிறப்பித்து அடிமை கொண்ட படியை சொல்லுகிறார்

—————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் – அவதாரிகை-

மேல் இரண்டு பாட்டில் –
நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பையும்
திருக் கழுத்தையும் அனுபவிக்கிறார் –

—————–

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பதவுரை
பாரம் ஆய–பொறுக்க முடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற் பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத் திரு மார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப் படுத்திக் கொண்டது

————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-
பாரமாய –
சர்வ சக்தியான சர்வேஸ்வரனே தள்ளும் இடத்திலும் ஒரு நிலை நின்று தள்ள வேண்டும்படி யிருக்கை –
சம்ஹரிப்பதும் நரகத்திலேயாய் -ஸ்ருஷ்டிப்பதும் நரகத்திலேயாய் இருக்கை-

பழ வினை –
காலம் அநாதி –
ஆத்மாவோ நித்யன்
அசித் சம்சர்க்கமும் உண்டு இறே –
இக் காலம் எல்லாம் கூடக் கூடு பூரித்தாதாய் இருக்கும் இறே –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்று அவன் தானே தள்ள வேண்டும்படி இருக்கை-

பற்றறுத்து –
விரகராய் இருப்பார் அடி யறுத்து நெடுஞ்சுவர் தள்ளுமா போலே ஸவாசனமாகப் போக்கி –
நித்ய ஸூரிகளுக்கு பாப சங்கை உண்டாகிலும் இவர்க்கு இல்லாத படி பண்ணி –

என்னை –
பாபத்துக்கு போக்கடி யறியாத என்னை –
பாபம் படும் ஆகரமான என்னை –என்றுமாம்
அக மஹோததி –

தன் வாரமாக்கி வைத்தான் –
தான் -என்றால் பஷ பதிக்கும்படி பண்ணினான் –
என் கார்யம் தனக்கு கூறாக என் பேரிலே தனக்கு இருப்பென்று தன் பேரிலே
எனக்கு இருப்பாக்கின படி –

அன்றியே –
விஷயாந்தரங்களை விட்டு தன்னையே கூறாகப் பற்றும்படி பண்ணினான் –
வைத்தான் –
இச் சந்தானச் சாபம் வைத்தான்-

வைத்த தன்றி –
இந்த நன்மைகளுக்கு மேலே –
என்னுள் புகுந்தான் –
பின்னையும் தன் ஆற்றாமையாலே விடாய்த்தவன் தடாகத்தை நீக்கி உள்ளே
முழுகுமா போலே -என் உள்ளம் புகுந்தான் –
வாலி புக்க விடத்தே மலை இட்டு அடைத்து மஹா ராஜர் இருந்து குறும்பு செலுத்தினால்
போலேயாக ஒண்ணாது என்று என் ஸ்வரூப ஜ்ஞானம் குலையாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான்
அநச்நன்நன்ய -என்கிறபடியே -இத்தோடு ஒட்டு அற்று இருக்குமவனுக்கும் இத்தால் அல்லது
செல்லுகிறது இல்லை என்கிறது-

கோர மா தவம் -இத்யாதி –
இப் பேற்றுக்கு அடி என் என்று பார்த்தார் —
இந்திரியங்களை ஒறுத்து மஹா தபஸை பண்ணினேனோ அறிகிறிலேன் –
நான் அறிய ஒன்றும் இல்லை –
இப்படி சங்கிப்பான் என் என்னில் –
பெற்ற பேறு அப்படிப்பட்டாருக்கு கிடைக்குமது யாகையாலே –
அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ்ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் —
கோரமான தபஸ்ஸூ ஆகிறது –
அத் தலையாக தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை
எந் நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே -என்னுமா போலே-

அரங்கத்தம்மான் –
இப் பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக் கிடந்தது தபஸ்ஸூ பண்ணினானும் அவனாய் இருந்தது
இச் சீரிய பேற்றுக்கு வேறு உபாயம் உண்டாக மாட்டாதே-

திரு வார மார்ப தன்றோ –
பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையும் உடைத்தான -மார்வன்றோ
தமக்கு பற்றாசாகத் தாய் நிழலிலே ஒதுங்குகிறார்

இவனைக் குறித்து -தே மைத்ரீ -பவது என்றும் –
அவனைக் குறித்து -ந கச்சின் ந அபராத்யதி -என்றும் –
சிறையில் இருந்தே சேர விடப் பார்க்கிறவள்
மார்பிலே இருந்தால் சேர விடச் சொல்ல வேணுமோ

அழகிய மார்வில் ஆரம்
ஆரத்துக்கு அழகு கொடுக்க வற்றாய் இருக்கை
ஆரம் அழகை  மறைக்கைக்கு உடலாம் இத்தனை இறே –
சர்வ பூஷண பூஷார்ஹா -என்னுமா போலே-

அடியேனை –
முன்பு எல்லாம் கூலிச் சேவகரைப் போலே –
அழகுக்கு தோற்ற அடிமை –
இது பிறந்து உடைய அடிமை –
முந்துற தூதோ ராமஸ்ய -என்றவன் -பிராட்டி கடாஷம் பெற்றவாறே –
தாசோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்றான் இறே-

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –

அடியேனை ஆள் கொண்டதே –
ராஜ்யம் இழந்த ராஜ புத்ரனை அழைத்து முடி சூட்டுமா போலே –
அழகிலே அழுந்தின என்னை -அவன் குணம் கிடீர் பிழைப்பிததது -என்கிறார் –

அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம் –
குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும் –
நீரிலே அழுந்தினார்க்கு நீரை இட்டுப் பிழைப்பிக்க விடும் இத்தனை யன்றோ உள்ளது

இப் பாட்டால் –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே சர்வ வ்யாபகத்வ சக்தியும் உண்டு என்கிறார் –

—————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம்-

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்

கீழ்ப்பாட்டில்-
ராகாதி தோஷங்களுக்கு அந்தர்பூதகமான மநோ ரஜ நீசரனைப் பெரிய பெருமாள்
விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்த படி இறே சொல்லிற்று –அதிலே ஓர் அபேஷையோடே
அதுக்கு உத்தரமாய் இருக்கிறது இப் பாட்டு –

அவர் தந்த விவேக சர ஜாலத்தாலே மநோ ரஜ நீசரனை வென்றோம் என்றீர் -அந்த விவேக ஜ்ஞானம் ஆகிறது –
சத்வாத் சஞ்சாயதே ஜ்ஞானம் -என்கிறபடியே சத்வ அபிவ்ருத்தியாலே உண்டாமது அன்றோ –

(த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷)

(சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்
முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது)

அந்த சத்வம் தானே ரஜஸ் தமஸ்ஸூக்கள் தலை சாய்ந்தால் பிறக்குமது இறே –
அந்த ரஜஸ் தமஸ்ஸூக்கள் தான் –
கர்ம வச்யா குணா ஹ்யேதே -என்கிறபடியே நிவ்ருத்தி கர்ம அனுஷ்டானத்தாலே போக்குமவை யன்றோ –
அந்த கர்ம அனுஷ்டானத்துக்கு யோக்யமான ஜன்மமே பிடித்தில்லாத உமக்கு அந்த துஷ் கர்மங்கள்
போன படி என் என்ன -அநுஷ்டேயமான சாத்ய கர்மங்களாலே போக்கில்
அன்றோ யோக்யதையே பிடித்தின்றியிலே யொழிவது –
கிருஷ்ணம் தர்மம் சநாதனம் –என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் –
அறம் சுவராகி நின்ற வரங்கனார் -என்கிறபடியே
சித்த ஸ்வரூபனான அவன் தானே கைத் தொடனாய்ப் போக்கினான் என்கிறார் –

பாரமாய –
வானக் கோனை கவி சொல்ல -வல்லேன் என்கிறபடியே –
மலக்கு நா வுடைய நம்மாழ்வாரும் வகை சொல்ல மாட்டாதே -தொன் மா வல் வினைத் தொடர் -என்று
திரளச் சொன்னாப் போலே -இவரும் பாரமாய -என்கிறார் –

கர்மத்தின் உடைய கனத்தினாலே அல்ப சக்தனான தான் சமபாதித்ததாய் இருக்கச் செய்தேயும் –
வகை சொல்லப் போகாதபடி இறே இருப்பது –

சர்வ சக்தியான அவன் போக்கும் போதும் வகையில் போக்கப் போகாது -தொகையில் போக்கும் -இத்தனை
வகையான தான் சதுர்வித தேக ப்ரேவேசத்துக்கு ஹேதுவாய் இருப்பனவும் –
பரிக்ரஹ தேகத்தில் பிறக்கிற ருசிக்கு அடியாய் இருப்பனவும் –
விஷய ப்ராவண்யத்துக்கு அடியாய் இருப்பனவும் –
தேவதாந்தரங்களுக்கு உத்தேச்யம் என்று இருக்கும் புத்திக்கு அடியாய் இருப்பனவும் –
ஈஸ்வரனைப் பற்றி நிற்க பிரயோஜனாந்தரன்களைப் கொண்டு அகலுகைக்கு
ஹேதுவாய் இருப்பனவுமாக ஒரு சுமையாய் இறே இருப்பது-

அதுக்கு மேலே விஹித அனுஷ்டானத்தாலும் நிஷித்த அசரணத்தாலும் பாப கர்மாக்களோட்டை
சஹவாசத்தாலுமாக த்ரி விதமாய் இறே இருப்பது –
அவை தான் மானஸ வாசிக காயிக ரூபேண த்ரி விதமாய் இறே இருப்பது –

யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ ஷணார்த்தே
என்கிறபடியே பல அநந்தயத்தை -பாரமாய -என்கிறதாகவுமாம் –

சம்ஹரிப்பதும் நரகத்திலேயாய் சிருஷ்டிப்பதும் நரகத்திலேயாய் இருக்கை –
இப்படி பாரமாகைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –

பழ வினை –
காலம் அநாதி –
ஆத்மாவோ நித்யன்
அசித் சம்சர்க்கமும் உண்டு இறே –
இக் காலம் எல்லாம் கூடக் கூடு பூரித்தாதாய் இருக்கும் இறே –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்று அவன் தானே தள்ள வேண்டும்படி இருக்கை-

பற்றறுத்து –
விரகராய் இருப்பார் அடி யறுத்து நெடுஞ்சுவர் தள்ளுமா போலே ஸவாசனமாகப் போக்கி –
நித்ய ஸூரிகளுக்கு பாப சங்கை உண்டாகிலும் இவர்க்கு இல்லாத படி பண்ணி –
அஜ்ஞானமும் தத் க்ருதமான கர்மமும் அதடியான தேக சம்பந்தமும் என்று -மூன்றாய்
இவற்றை வாஸநா ருசியோடே போக்கி –

அதாவது அஞ்ஞானமும் -அஞ்ஞான வாசனையும் -அஞ்ஞான -ருசியும்
கர்மமும் -கர்ம வாசனையும் -கர்ம ருசியும் —
தேகமும் தேக வாசனையும் -தேக ருசியும் -அறுத்து –
க்ரமத்தில் அனுஷ்டிக்கும் சாத்ய கர்மம் ஆகில் இறே அடைவே -போக்குவது

சித்த ரூபன் ஆகையாலே வாசனையோடே கடுகப் போக்கினான் –
அநாதி காலார்ஜிதமான கர்மங்களை ஸவாஸநமாகப் போக விட்ட -வளவேயோ

என்னை தன் வாரமாக்கி -வைத்தான்
என் பாபம் தனக்கு கூறாக என் பேரிலே அவனுக்கு இருப்பு என்று தன் பேரில் எனக்கு இருப்பாக்கினபடி
அன்றியிலே –
விஷயாந்தரங்களை விட்டு தன்னை கூறாக பற்றும்படி பண்ணினான் வைத்தான் –
தம்முடைய நினைவன்றியிலே அத்தலையாலே வந்தது என்று தோற்ற வைத்தான் -என்கிறார்-

மாறு செய்த வாளரக்கன் நாளுலப்ப -இறந்த குற்றம் எண்ண வல்லனே –
ராவணனை சபரிகரமாக கொன்று வெற்றி கொண்ட பின்னை என்னைத் தம்மோடே
ஒரு பேராக கூட்டுகையாலே யமாதிகளால் நினைக்க ஒண்ணாதபடி யானேன்

வைத்தான் –
இச் சந்தானச் சாபம் வைத்தான்
வைத்த தன்றி என்னுள் -புகுந்தான் –
என்னுடைய துஷ் கர்மங்களை ச்வாசநமாகப் போக்கி -தான் அறிந்த -மதி நலத்துக்கு
தன்னையே விஷயமாக்கி வைத்ததுக்கு மேலே -நாம் சந்நிஹிதரா வுதோமாகில்
முன்புத்தை ருசி வாசநைகள் மேலிட்டு பழையபடி துஷ் கர்மங்களைப் பண்ணி நான்
அகலக் கூடுமோ என்று பார்த்து -அவை மேலிடாதபடி என் நெஞ்சில் புகுந்து தன்னுடைய
வாஸநா பலத்தாலே அவை தேயும்படி பண்ணி இருந்தான் –

என்னுள் புகுந்தான் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -என்றும்
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும் சொல்லுகிறபடியே
எத்தைனையேனும் அளவுடையவர்களுக்கு செய்யுமத்தை என் நிகர்ஷம் பாராதே
வசிஷ்டன் சண்டாள க்ருஹத்திலே புகுமா போலே புகுந்தான் –

என்னுள் புகுந்தான் –
அநச்நன் நன்ய -என்கிறபடியே இத்தோடு ஒட்டு அற்று இருக்கும் அவனுக்கு இத்தால் அல்லது
செல்லுகிறது இல்லை -என்கிறது

கோர மாதவம் செய்தனன் கொல் –
முன்பே கனத்து இருந்தது இப்போது சித்திக்கும் போது –
தபஸா விந்ததே மஹத் -என்கிறபடியே நெடும் காலம் அதி கோரமான பெரிய தபஸ்ஸூக்களை
பண்ணினேனோ -மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா -என்றும் –
தே தம் சோமமி வோத்யந்தம் -என்னும் அவனைப் பெறும் போது அதி கோரமான
தபஸை பண்ண வேணும் இறே

அறியேன் –
அறிகிறிலேன் -நான் அறிய ஒன்றும் இல்லை -இப்படி சங்கிப்பான் என் என்னில் –
பெற்ற பேறு அப்படிப் பட்டாருக்கு கிடைக்குமதாகையாலே -அவன் தான் நதீ
தீரத்திலே கிடந்தது தபசி பண்ணினானோ அறிகிறிலேன் –
கோரமான யுத்தத்திலே தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை –

எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே -என்று தம் பக்கல் ஒரு நன்மை காணாமையாலே
சம்சயிக்கிறார் -நிர்ஹேதுகமாக இப்படி உபகரிப்பதே -என்று இறே இவர் வித்தர் ஆகிறது –

இத்தால் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தான் என்றபடி –
தம்மையையும் தம் உடைமையையும் நமக்கு ஆக்கினவர்க்கு
நம்மையையும் நம் உடைமையையும் அவர்க்கு ஆக்கின முறை
முதுகு தோய்த்தோம் இத்தனை யன்றோ என்று எல்லாம் செய்தும் தான் ஒன்றும் செய்திலனாய்
இறே அவன் இருப்பது –

அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி  நீ -என்னக் கடவது இறே –
அறியேன் -என்றவர் தாமே சர்வதா இக் கனத்த பேற்றுக்கு ஒரு ஹேது வுண்டாக வேணும் என்று விசாரித்து
அறிந்தேன் என்கிறார் மேல் –
அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ வடியேனை யாட் கொண்டதே –
இவருடைய விரோதியைப் போக்கி
உஜ்ஜீவிப்பைக்கைக்காக வாய்த்து இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
இவருடைய பேறு தன்னதாம்படி தாம் பண்ணுகைக்கு உண்டான ப்ராப்தியைச் சொல்லுகிறது
இப் பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக் கிடந்து தபஸ் பண்ணினானும் அவனாய் இருந்தது –
இல்லையாகில் எனக்கு இக் கனவிய பேற்றுக்கு வேறு உபாயம் உண்டாக மாட்டாதே-

திருவார மார்பதன்றோ –
பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையும் உடைத்தான மார்வன்றோ –
பெரிய பெருமாள் தாம் அன்றோ -ஹிரண்ய வர்ணாம் -ஹிரன்ய -ப்ராகாராம் -என்கிற
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் -அதுக்கு ஹிரண்ய மயமான திரு மதிள்
போலே இருக்கிற திரு வாரத்தை உடைத்தாய் இறே திரு மார்பு இருப்பது -அந்த திரு மார்பன்றோ –

இத்தால் தமக்கு பற்றாசாக தாய் நிழலிலே ஒதுங்குகிறார் –
இவனைக் -குறித்து -தேந மைத்ரீ பவது -என்றும் –
அவனைக் குறித்து -ந கச்சின்நா பராத்யதி -என்றும் சிறையிலே இருந்தே சேர விடப் பார்க்குமவள் –
மார்பிலே இருந்தால் சேர விடச் சொல்ல வேணுமோ –

அழகிய மார்பில் ஆரம்
ஆரத்துக்கு அழகு கொடுக்கவற்றாய் இருக்கை
ஆரம் அழகை மறைக்கைக்கு உடலாய் இருக்கும் இத்தனை –
சர்வ பூஷண பூஷார்ஹா -என்னுமா போலே-

அடியேனை –
முன்பு எல்லாம் கூலிச் சேவகரைப் போலே –
அழகுக்கு தோற்ற அடிமை –
இது பிறந்து உடைய அடிமை –
முந்துற தூதோ ராமஸ்ய -என்றவன் -பிராட்டி கடாஷம் பெற்றவாறே –
தாசோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்றான் இறே-

அடியேனை —
ஞான ஆனந்தங்களுக்கு முன்னே சேஷத்வம் பிரதம நிரூபகமான என்னை யன்றோ-

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
முடிக்கு உரியவனை முடி சூட்டுமா போலே -என்னுடைய
ஸ்வரூப -விரோதியையும் ஆஸ்ரயண விரோதியையும் -உபாய விரோதியையும்
உபேய விரோதியையும் -போக விரோதியையும் -போக்கி
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது –

தன்னுடைய மேன்மையையும் அழகையும் -காட்டி -என்னை அநந்யார்ஹமாம் படி பண்ணி
பெரிய பிராட்டியாரை இடுவித்து -ந கச்சின் நா பராத்யதி -எண்ணப் பண்ணி
பெரிய பெருமாளை யிடுவித்து -என்னுடைய விரோதி பாபங்களை சவாசனமாகப் போக்குவித்து –
அவர் தம்முடைய போக்யதையை என் நெஞ்சிலே பிரகாசிப்பித்துக் கொண்டு
புகுரும்படி பண்ணி என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது
அந்தத் திரு மார்பு அன்றோ

அடியேனை ஆட் கொண்டது அந்தத் திரு மார்பன்றோ –
என்னைப் போலே இருப்பார் -வேறே சிலரைத் திருத்தி அடிமை கொள்ளுகைக்கு
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்வும்
மரகத வுருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆய சீர்
முடியும் தேசும் -என்று தாம் கிடக்கிற ஊருக்கு அலங்காரமான ஆற்றழகு தொடங்கி
காட்ட வேண்டிற்று –
எனக்கு மார்பு ஒன்றுமே யமைந்தது –

அழகிலே அழுந்தின என்னை -அவன் குணம் கிடீர் பிழைப்பிததது -என்கிறார் –
அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம் –
குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும் –
நீரிலே அழுந்தினார்க்கு நீரை இட்டுப் பிழைப்பிக்க விடும் இத்தனையிறே-

இப்பாட்டில் –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே சர்வ வ்யாபி சக்தியும் இங்கே  உண்டு என்கிறார் –

———————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம்-
பாரமாய பழ வினை பற்று அறுத்து –
கால தத்வம் உள்ளதனையும் ப்ராயாச்சித்தம் பண்ணினாலும் கழிக்க ஒண்ணாத படி
உபசிதமாய்க் கொண்டு அநாதி காலம் நடக்கிற சம்சாரிக கர்ம கலாபத்தை
சவாசனமாக என்னுடன் துவக்கு அறுத்து

என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் –
இப்படி கர்ம பரவசனாய் இந்த்ரிய கிங்கரனாய் தாத்ருசரான இந்த்ராதிகளை எடுத்துச்
சுமந்து தனிசு தீராதே பொலிசை இறுத்துத் திரிகிற என்னை –
அபஹத பாப்மாவாய் ஸ்வாமி பாவத்துக்கு எல்லை நிலமாய் ஸூரி போக்யனான
தன்னுடைய அந்தபுர ஸ்திரீகளைப் போலே அன்யர்க்கு கூறு இல்லாதபடி பண்ணி
அசாதாரண கைங்கர்ய ரசத்தை -தந்து இது மேல் ஒரு காலத்திலும் மாறாதபடி வைத்தான் –

வைத்த தன்றி என்னுள் புகுந்தான் –
அநந்யனாக்கி வைத்த வளவன்றிக்கே முன்பு பிரயோஜ  நாந்தர ப்ரவணனான
என்னுடைய ஹ்ருதயத்தில் அநந்ய பிரயோஜன அநுபவ விஷயமாக்கிக் கொண்டு –
தஸ்யு பரிக்ருஹீதமான தன் படை வீட்டிலே தஸ்யுக்களை ஒட்டி புகுருமா போலே புகுந்தான் –

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –

அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரீதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி  நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய்  இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்

இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி -(காஞ்சி ஸ்வாமிகள் இது இடைச் செருகல் என்பர் -அதிவாதம் என்று சொல்வார் இல்லையே )

சர்வ சம்சார நிவர்தகமாய்-அமோகமாய்
இருப்பதொரு –
மோஷ யிஷ்யாமி -என்கிற சங்கல்ப ரூபமான தபசி பண்ணினான் என்று தாத்பர்யம் –

அங்கன் அன்றிக்கே –
இப் பெரிய பேறு பெறுகைக்கு அயோயனான நான் இதுக்கு அநு ரூபமாய் அமோகமாய்
இருப்பதொரு மகா தபசி பண்ணிப் பெற்றேன் அல்லேன் –
இதுக்கு -த்வயி நிஹித பரோஸ்ஸ்மி சோஸ்ஹம் யத -என்றும் –
தவ பரோஸ் ஹம காரிஷி தார்மிகை -என்றும் -சொல்லுகிறபடியே –
இப்போது நானும் பிறரும் அறியலாவது எனக்கொரு தபஸ் காண்கிறிலேன் -என்று ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத் பர்யமாகவுமாம்

இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –

அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு -கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய்  நின்றது –

இப்பாட்டில்
பதங்களின் அடைவே
1-நாராயண சப்தத்தில் விவஷிதமான அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
2-இஷ்ட -ப்ராபகத்வமும் –
3-உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் -படியும்
4-நித்ய -கிருபையும்
5-உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
6-ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமித்வமும்
7-சர்வ அநு குணமான ஸ்ரீ ய பதித்வமும்
8-பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
9-நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
19-தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்
அனுசந்தேயம்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து –

May 19, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –

திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்

————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய அவதாரிகை –

திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்-

முதல் பாட்டில்
ஜகத் காரண பூதனானவன் -தம்முடைய அபேஷா நிரபேஷமாக தம்மை விஷயீ கரித்து –
தம்முடைய திரு உள்ளத்தில் திருவடிகள் தானே வந்து பிரகாசித்த படியை சொன்னாராய் –
நிரபேஷமாக செய்யக் கூடுமோ என்கிற அபேஷையிலே சோதாஹரணமாகச் சொல்லா நின்று கொண்டு
தம் திரு உள்ளம் திரு வரையும் திரு பீதாம்பரமுமான சேர்த்தியிலே மேல் விழுந்து நசை
பண்ணுகிற படியைச் சொன்னார் இரண்டாம் பாட்டில்

அவ் விரண்டாம் பாட்டில் சொன்ன த்ரைவிக்ர அபதானம் பிரமாண உபபத்திகளாலே
திருவேங்கடமுடையானுக்கே சேருமதன்றோ என்கிற அபேஷையிலே திருமலையில் நின்றும்
திரு உலகு அளந்தருளினாரும் பெரிய பெருமாளே -என்று கொண்டு -முதல் பாட்டில் -ஆதி -என்று
சொன்ன அவனுடைய காரணத்வத்தை -திரு நாபீ -கமலத்திலே ப்ரஹ்மாவை  உண்டாக்கி
அம் முகத்தாலே வெளி இடா நின்று கொண்டு -அந்த திரு நாபீ கமலம் தானே
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற தம் திரு உள்ளத்தை -ப்ரஹ்ம உத்பாதகமான
தன்மையையும் அழகையும் காட்டி தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள -அதிலே சுழி யாறு
படுகிற படிடை யிறே மூன்றாம் பாட்டில் சொல்லி நின்றது-

தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழியாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆஸ்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆஸ்ரயமான நம்மைப் பார்த்தால் –
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்தா வலம்பி வலி த்ரயம் கணயதி தவைஸ்வர்யம் வ்யாக்யாதி
ரங்கமஹே ஸிது
ப்ரணதவசதாம் ப்ரூதே தாமோத மத்வக்ர கிணஸ் ததுபய குணாவிஷ்டம் பட்டம் கிலோதர பந்தநம் –
என்கிறபடியே -பகத் முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாத்மகமாயும் -சத்வ ஸூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆஸ்ரயமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்க்கவுமாம் படி எளியோமான
சௌலப்ய நீர்மையையும் உடையோமான ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது
என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி –
திரு நாபீ கமலத்தில் ஆழங்கால் படுகிற் என் நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க –
அத் திரு வயிற்றை ஆஸ்ரயமாகப்
பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று தம் திரு உள்ளத்திலே
ஸ்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்

———

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் அவதாரிகை –

இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –

நாலாம் பாட்டாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள்
வரம் கொடுத்து வாழ்வித்த  ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா  ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ்  த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும்
அனுசந்திதுக் கொண்டு ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே
வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீமத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகதி தகடநா சக்திகளுக்கு அடையவளைந்தான் போலே
யிருக்கிற உதர பந்தம் தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –

கீழ் மூன்று பாட்டாலும் -ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து -தசேந்த்ரியா நநம் கோரம் -என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு -நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற
நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக அனுசந்திகிறார் ஆகவுமாம்

—————–

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

பதவுரை

சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலை பத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதர பந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது-

———————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் —

சதுர மா மதிள் -இத்யாதி
கட்டளைப் பட்டு இருக்கை
மா மதிள் –
துர்க்க த்ரயம்
ஈஸ்வரன் என்று அறியச் செய்தே எதிர்க்கப் பண்ணின மதிள்

இலங்கைக்கு இறைவன் –
முழஞ்சிலே சிம்ஹம் கிடந்தது என்னுமா போலே -லங்காம் ராவண பாலிதாம் –

இலங்கைக்கு இறைவன் –
சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று  இருந்தாப் போலே காணும்
இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி

விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர
ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா -என்றான் இறே

யாவன் ஒருவனுக்காக இவனை அழியச் செய்ய நினைக்கிறார் -அவன் தன்னையே
இவ் வரணுக்கு காவலாக வைப்பர் கிடீர் அல்பம் அனுகூலிததான் ஆகில் –

தலை பத்து உதிர –
பனங்குலை உதிர்ந்தாப் போலே உதிர -அறுக்க அறுக்க முளைத்த சடக்கு
ஒட்டி –
அனுகூலிக்குமாகில் அழியச் செய்ய

ஓர் வெங்கணை வுய்த்தவன் –
பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –
அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன் –
அவன் பிரதி கூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி –

ஓத வண்ணன் –
ராவண வதம் பண்ணி -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முடி கொடுத்து -க்ருத க்ருத்யனாய்
ப்ரஹ்மாதிகள் புஷ்ப வ்ருஷ்டியும் ஸ்தோத்ரமும் பண்ண -வீர ஸ்ரீ தோற்ற ஸ்ரமஹரமான வடிவோடே நின்ற நிலை

மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன

மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-

வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்ய ஸூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-

———————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம் –

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்-
இரண்டாம் பாட்டில் உக்தமான அபதானங்கள் இரண்டில் பூர்வ அபதானதைப் பற்ற
ஓர் அபேஷையோடே -அதுக்கு உத்தரம் சொல்லிற்றாய் நின்றது மூன்றாம் பாட்டில் முற் கூறு
அதிலே அநந்தர அபதானதைப் பற்ற ஓர் அபேஷையோடே அதுக்கு உத்தரமாய் இருக்கிறது இதில் முற் கூறு

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று ஜன ஸ்தானத்திலே
பெருமாளும் பிராட்டியும் இளைய பெருமாளுமாய் போய் புக்கு -அங்குத்தை ரிஷிகளை
ஆவா சந்த்வஹம் இச்சாமி -என்று அபேஷித்து -அவர்கள் அனுமதியோடே இருக்கிற காலத்தில்
அவ்விருப்புக்கு விரோதிகளாய் வந்த ஜனஸ்தான வாசிகளான கராதிகளை நிரசித்தாப் போலே
உம்முடைய ஹ்ருதயத்திலே இருப்பேன் என்று அநுமதி பெற்று வந்து புகுந்து
அங்கு விரோதிகளான ராகாதிகளை நிரசித்தான் என்று சொன்னீர்
அந்த ராகாதிகள் ஆகிறன சப்தாதி விஷய ப்ராவண்யம் அடியாக வருவது ஓன்று

அந்த ப்ராவண்யம் -தனக்கடி -அஹங்கார மமகாரங்கள் ஆகிற மதிளை இட்டுக் கொண்டு
நவ த்வாரமான புரத்திலே வர்த்திக்கிற -இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன் மநோ நுவிதீயதே –
என்கிறபடியே சஷூராதி கரணங்களோடு கூடின மனஸ் அன்றோ –

இந்த தீ மனம் கெட்டால் அன்றோ ராகாதிகள் போவது
அவை போனால் அன்றோ அவன் பேரேன் என்று இருப்பது

அது கிடக்கிடீர் –
அவன் தானே வந்து மேல் விழுந்து கிடக்கச் செய்தே –
சென்றதாம் என் சிந்தனை -என்றும் –
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிர் -என்றும் உம்முடைய
திரு உள்ளம் தானே மேல் விழா நின்றது என்று சொன்னீர் -இது இப்படி மேல் விழும் போது
அவ்வரண் அழிந்தாக வேணும் -அழித்தார் யார் என்ன –

அந்த ஜன ஸ்தான வாசிகளான கராதிகளுக்கு குடி இருப்பாய் -அரணோடு கூடின இலங்கையை
ராவணனை அழிப்பதற்கு முன்னே -நேய மஸ்தி புரீ லங்கா -என்கிறபடியே அசத் கல்ப்பமாக்கி
இவர்களுக்கு அதிஷ்டான பூதனான ராவணனையும் சபரிகரமாக ஓர் அம்பாலே உருட்டின
சக்கரவர்த்தி திருமகனே இவ் வரணை அழித்தது –
மநோ ரஜ நீசரனை விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்தான் என்கிறார் –

சதுர மா மதிள் சூழ் –
சதுர ஸ்ரமாய் கட்டளைப்பட்டு அரணாகப் போரும்படி ஒக்கத்தை வுடைத்தான மதிள்களாலே
சூழப் பட்டு இருக்கும் -கட்டளைப் பட்டு இருக்கை யாகிறது –
வேலை சூழ் வெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை – என்கிறபடியே கடலை அகழாக உடைத்தாய் அநந்தரம்
காடாய் பர்வதமாய் அதின் மேலே மதிளாய் இறே இருப்பது

(வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே திருச்சந்த விருத்தம் -39-)

மா மதிள்
சந்த்ராதித்யர்களும் பின்னாட்டியே வரும்படியான ஒக்கத்தை வுடைத்து
பீஷோ தேதி -என்னும்படி இறே இருப்பது –
ஈஸ்வரன் நேர் நிற்கவும் எதிரிடப் பண்ணின மதிள் இறே
இவ்வழகையும் அரணையும் விஸ்வசித்து இறே பையல் பெருமாளோடே எதிரிட்டது
இது தானிட்ட மதிள் என்று அறிந்திலன்
அரணுக்கு உள்ளே இருக்கச் செய்தே பெருமாளோடே எதிர்க்கையாலே இது தான் அழிகைக்கு
உடல் ஆய்த்து -அவ் வரணை விட்டுப் பெருமாள் தோளையே அரணாகப் பற்றின ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
கச்த ஏவ வ்யதிஷ்டத -என்று ஆகாசத்திலே நிலை பெற்று நின்றான் இறே-

இலங்கை-
குளவிக் கூடு போலே பிறரை நலிந்து புக்கு ஒதுங்குமிடம் -சத்துக்களுக்கு பிரவேசிக்க
ஒண்ணாதபடி இருக்கும் அரணும் மதிளும் -என்கை

இஹ சந்தோ ந வா ஸந்தி சதோ வா நாநு வர்த்தசே
ததாஹி விபரீதா தே புத்திரா சார வர்ஜிதா -என்றும் –
சதோ வா நாநு வர்த்தசே-என்னவே –
இஹ சந்தோ ந வா ஸந்தி-என்னும் அர்த்தம் சொல்லிற்றாய் இறே இருப்பது

ஆனால் இது சொல்லிற்று என் என்னில் -மனைக் கேடர் இல்லாமையோ
நீ உனக்கு இல்லாமையோ -என்கை -நல் வார்த்தை சொல்லுவான் ஒருவன் உண்டாக –
த்வாந்துதிக் குல பாம்ஸநம் -என்று புறப்பட விட்டான் இறே -கல்லாதவர் இலங்கை இறே
திருவடி வர -ராஷசர் வருவதற்கு முன்னே இலங்கை இறே கண்டு எதிர்த்தது
ஒரு கைம் பெண்டாட்டிக்கும் அடைத்துக் கொண்டு இருக்கலாம்படி இறே ஊரும் அரணும் இருப்பது –

இலங்கைக்கு இறைவன் –
முழஞ்சிலே சிம்ஹம் கிடந்தது என்னுமா போலே
அதுக்கு மேலே -லங்காம் ராவண பாலிதாம் -என்கிறபடி புலி கிடந்த தூறு என்று அஞ்சுமா போலே
அஞ்ச வேண்டும் படி இறே இதுக்கு நிர்வாஹகனான ராவணன் படி

இறைவன் –
சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று  இருந்தாப் போலே காணும்
இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே

யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர
ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா –

இறைவன் –
துர் வர்க்கங்கள் அடைய ஒதுங்க நிழலாய் இருக்குமவன் –
ஒருவன் சாத்விகன் ஆனால் அவன் பக்கலில் சத்துக்கள் அடைய ஒதுங்கும் இறே
அப்படி இறே எதிர்தலையும் -யாவன் ஒருவனைக் கொலை செய்ய நினைக்கிறார்
அவன் தன்னையே அவ் வரணுக்கு காவலாக வைப்பார் கிடீர் அல்பம் அனுகூலித்தான் ஆகில்
தாயையும் தகப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த பையல் இறே இவன் –
தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடா யுஷம் -ஹரணத்துக்கு பரிஹாரம் உண்டு
ஹநநத்துக்கு பரிஹாரம் இல்லை இறே
இவர் திரு உள்ளமும் பரிஹாரம் இல்லை என்று புண் பட்டு இருக்கும் இறே யிது

தலை பத்து உதிர ஒட்டி –
இப்படி பகவத அபசார பாகவத அபசார அசஹ்யா அபசாரங்களுக்கு எல்லை நிலமான பையலுடைய –
வர பலத்தாலே பூண் கட்டின தலைகளை பனம் பழங்களை காற்று உதிர்க்குமா போலே –
முளைக்கிற தலைகள் விழுகிற தலைகளைக் காணும்படி
நெடும் போது லீலா ரசம் அநுபவிக்க –
இத்தைக் கண்ட தேவர்கள் -இங்கனே முடிய நடத்துமாகில் செய்வது என் -என்று அஞ்ச –
இவனைக் கொல்ல வென்று வைத்த அம்பு தன்னை வாங்கி உதிரும்படியாக ஒட்டி –
அனுகூலிக்குமவன் ப்ரதிகூலித்தால் சொல்ல வேண்டா விறே
பூசலிலே இளைப்பித்து வைத்து ஓட வடிந்தபடி -கச்சா நு ஜா நாமி -என்கிறபடியே –
ஓர் வெங்கணை வுய்த்தவன்
அமோகமாய் இருக்கையும் -நிரசித்து அல்லது மீளாது இருக்கையும்
உய்த்தவன் -பிரயோகித்தவன்

பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –
அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன் –
அவன் பிரதிகூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி –

ஓத வண்ணன் –
ராவண வத அநந்தரம் -மஹா ராஜ ப்ரப்ருதிகளுடைய யுத்த ஸ்ரமம் அடையப் போம் படி
ஒரு கடல் கரையிலே நின்றாப் போலே இருக்கை -ராவணனை நிரசித்தான் இத்தனை போக்கி
இலங்கையில் ஒன்றும் குறி அழியாமல் இலங்கை ஐஸ்வர்யம் அடைய தன்ன தாக்கினான் இறே
அத்தை விபீஷண விதேயமாக்கின ஔதார்யத்துக்கு உதார ஸ்வபாவமான கடல் போலே இருந்துள்ள
ஸ்வபாவத்தை உடையவன் என்று -ஓத வண்ணன் -என்கிறார் ஆகவுமாம் –
அன்றிக்கே -ஓத வண்ணன் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறது ஆகவுமாம் –

இத்தால் பிரதிகூலரை அம்பாலே அழிக்கும் –
அநுகூலரை அழகாலே அழிக்கும் -என்கை-

மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன
மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை-

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள –
தொடுத்த தலைவன் வர வெங்கும் காணேன் -என்று
என்னோட்டையாள் ஒருத்தி உடைய விரோதியான ராவணனுடையதாய் தலை யற்று யற்று
விழும்படி சர வர்ஷத்தை உண்டாக்கின அந்த வீரன் என்னுடைய விரோதியையும் போக்கி
கொடு வரக் காண்கிறிலேன் என்று கண் மறையப் பார்த்து கொண்டு இருந்தாள் இறே ஒருத்தி

அப்படி இருக்க வேண்டாதபடி –
செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் –
என்கிறபடியே அந்த சேவகனார் தாமே ராவண வத அநந்தரம் -அந்த யுத்த சரமம் ஆறும்படி –
தெற்கு திரு வாசலாலே புகுந்து சாய்ந்து அருளினார்

கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவே கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி
அந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக வண்டுகள் ஆனவை கல்வியால் வரும் அருமை இல்லாமையாலே
பாட்டை மதுரமாம் படியாக -தென்னா தெனா -என்று முரலா நிற்க
சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்
இவ் ஊரில் வர்த்திக்குமவர்களுக்கு சாரஸ்யமும் செருக்குமேயாய் யிருக்கும் யத்தனை-

பராவஸ்தனான போது நித்ய முக்தரும் தன்னை அனுபவித்து ஹாவு ஹாவு ஹாவு என்று களிப்பார்கள்
அவதீர்ணன் ஆனபோது காயந்தி கேசித் க்ருத்யந்தி கேசித் -என்று முதலிகள் ஆடுவது பாடுவது ஆவார்கள்
அர்ச்சா ரூபியாக கோயிலிலே கண் வளர்ந்து அருளப் புக்கவாறே வண்டுகளும் மயில்களும்
பாடுவது ஆடுவதாக நிற்கும்
ராஜா வெள்ளைச் சட்டை யிட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே

அரங்கதம்மான் –
சம்சாரிகளுக்காக கோயிலிலே சாய்ந்து அருளி -தன்னுடைய ஸ்வாமித்வத்தை உதறிப் படுத்தவனுடைய
அங்கன் அன்றிக்கே -அம்மான் -என்று சௌலப்ய காஷ்டையால் வந்த மஹத்தை
சொல்லுகிறார் ஆகவுமாம்-

திரு வயிற்று உதர பந்தம் –
பண்டே திரு வயிறு தான் –
சிற்றிடையும் என்கிறபடியே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி யாய்த்து இருப்பது –
அதுக்கு மேலே இறே ஆபரண ஸ்யாபரணமான திரு உதர பந்தம்
பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டின படி

என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
அந்த திருப் பீதாம்பரத்திலும் செல்ல ஒட்டாதே -திரு நாபீ கமலத்தின் நின்றும் வர வீர்த்து
இதுக்கு ஆஸ்ரயமான திரு வயிற்றிலும் போக ஒட்டாதே தான் மேலே விழுந்து ரஷித்து
தன் ஏற்றம் அடைய தோற்றும்படி -மத்த கஜம் போலே செருக்காலே பிசகி நின்று உலவா நின்றது –

விஸ்வ ஸ்யாயதனம் மஹத் -என்றும் -நெஞ்ச நாடு -என்றும் சொல்லுகிற படியே என்னுடைய பெரிய
ஹ்ருதயத்தில் நின்று அழகு செண்டேறா நின்றது

———————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் வியாக்யானம் –

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர-
குல பர்வதங்களை சேர்த்து இசைத்தாப் போலே -செறிவும் திண்மையும் உயர்த்தியும் உடைத்தாய்
எட்டு திக்குகளில் உள்ள திக் பாலர்களுக்கும் எட்டிப் பார்க்க ஒண்ணாது இருக்கிற
மதிள்களாலே இற்ற விடம் முறிந்த விடம் இல்லாதபடி எங்கும் ஒக்க சூழப்பட்டு
ஜல துர்க்க கிரி துர்க்க வன துர்க்கங்களாலே -துர்கங்களுக்கு எல்லாம்
உபமானம் ஆம்படி பிரசித்தமான இலங்கைக்கு ஈஸ்வரனாய்
துர்க்க பல வர பல புஜ பல சைன்ய பலங்களாலே செருக்கனாய்
மால்யவான் அகம்பனன் மாரீசன் முதலான ராஷசர்களோடு
ஹனுமான் விபீஷணன் முதலான சத்வ பிரக்ருதிகளோடு வாசியற
அவகீதமாகப் பேசப்பட்ட பெருமாள் பெருமையை அறிந்து வைத்தும் கண்டும்
மதி கேட்டான் படியே -தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி என்ற தாய் வாய் சொல்லும் கேளாதே

அராஷசமிமம் லோகம் கர்த்தாஸ்மி நிசிதைசரை
ந சேச் சரண மப்யேஷி மாமுபாதாய மைதிலீம் -என்று பெருமாள் அருளிச் செய்து விட்ட
பரம ஹிதமான பாசுரத்தையும் அநாதரித்து -அடைகோட்டைப் பட்டவளவிலும்
பூசலுக்கு புறப்பட்டு விட்ட மகா பலரான படை முதலிகள் எல்லாரையும் படக் கொடுத்து
தான் ஏறிப் பொருதவன்று ரிபூணா மபி வத்சலரான பெருமாள் சரச் செருக்கு வாட்டி -நம்முடனே பொரும்படி
இளைப்பாறி நாளை வா -என்று விட -நாணாதே போய் மண்டோதரி முதலான பெண்டுகள்
முகத்திலே விழித்து -தன்னில் பெரிய தம்பியையும் மகனையும் படக் கொடுத்து தான் சாவேறாக
வந்து ப்ரதிஹத சர்வ அச்தரனான பின்பும் சினம் தீராதே சேவகப் பிச்சேறி  நின்ற ராவணனை
இனித் தலை யறுக்குமது ஒழிய வேறு ஒரு பரிஹாரம் இல்லை என்று திரு உள்ளம் பற்றி

ஒரு தலை விழ வேறு ஒரு தலை கிளைக்க முன்பு பண்ணின சித்ர வத ப்ரகாரம் அன்றிக்கே
ஒரு காலே பத்துத் தலையும் உதிரும்படியாக ஒட்டி யோர் வெங்கணை வுய்த்தவன்
தானே போய் ராவணன் தலை பத்தும் கைக் கொள்ள வேணும் -என்று சினம் உடைத்தாய் –
அத்விதீயமாய் இருப்பதொரு திருச் சரத்தை -தகையதே ஓட விட்டு -இரை போந்த இலக்கு
பெறுகையாலே அத் திருச் சரத்தை உய்யப் பண்ணினவன் –
சரத்தினுடைய ஆஸூகாரித்வத்தாலும்
ராவணனுடைய தைர்யத்தாலும் தலை பத்தும் உதிர்ந்த பின்னும் அவன் உடல் கட்டைப் பனை போலே
சிறிது போது இருந்து நிற்கும்படியாய் -இருந்தது
தலை பத்து உதிர ஒட்டி -என்றது முன்னில் பூசலில் ராவணனைத் தலை சாய்த்து –
கச்ச அநுஜா நாமி -என்று துரத்தி விட்ட படியாய்
ஓர் வெங்கணை வுய்த்தவன் -என்றது பின்பு அவனுடைய வத அர்த்தமாக அத்விதீயமான அஸ்த்ரத்தை
விட்டவன் என்னவுமாம்

ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ஸ்யாமளமான
திருமேனியை உடையவன் –

மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மி யுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ்ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே  –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –
பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண –
இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய

திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை
வெளி இடா நின்ற திரு வயிற்றில் -திரு உதர பந்தம் -என்று திரு நாமத்தை உடைத்தான
திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப்
பண்ணா நின்றது

இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 19, 2013

பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்நின்று இராஊழி கண்புதைய மூடிற்றால்
மன்நின்ற சக்கரத்துஎம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள்ஆவி காப்பார்ஆர் இவ்விடத்தே?

பொ-ரை :- விடாது பின்தொடர்ந்து நிற்கின்ற காதலாகிய நோயானது என் மனத்தினை மிகவும் வருத்தாநிற்கின்றது, இரவாகிய ஊழிக்காலமானது முன்னே நின்று கண்களின் ஒளி மறையும்படி மூடிவிட்டது. நிலைத்து நிற்கின்ற சக்கரத்தையுடைய எம் மாயவனும் வருகின்றிலன்; இந்த நிலையில் நிற்கின்ற நீண்ட உயிரை இவ்விடத்திலே காப்பவர்கள் யாவர்? என்கிறாள்.

வி-கு :- இரா ஊழி முன்நின்று புதைய மூடிற்று என்க. இவ்விடத்து நீள் ஆவியைக் காப்பவர் ஆர்? என்க.

ஈடு :- ஆறாம் பாட்டு. 3விரஹத் துன்பமும் செல்லா நிற்க, இரவும் ஆய் ரக்ஷகனானவனும் வாராது ஒழிந்தால் முடியப் பெறாத உயிரைக் காப்பார் ஆர்? என்கிறாள்.பின் நின்ற காதல் நோய் – 1புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது. இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை. நெஞ்சம் பெரிது அடும் – நெஞ்சினை மிகவும் நோவுபடுத்தாநின்றது. 2நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது; அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று – 3காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக்கொண்டு வந்தாற் போலே இராநின்றது. 4‘நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி. 5எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று 6இத்தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது. 7உட்கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட்கண்ணை இரவு மறைத்தது. அறிகின்றதுமாய்ப் பிரகாசமுமாய் இருக்கின்ற கண் இந்திரியத்தை, அறியப்படுகின்ற பொருளான இருள் வந்து மூடா நின்றது என்பாள் ‘கண் புதைய மூடிற்றால்’ என்கிறாள். அன்றிக்கே, இருளினை ஒத்த நிறத்தினையுடையவன் வந்து முன்னே நின்றாலும் காண ஒண்ணாதபடி, இரவாகிற ஊழி கண்களை மறையாநின்றது என்னலுமாம்.

மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-1“எப்போதும் கைகழலா நேமியான்” என்கிறபடியே, அடியார்கட்குப் பகைவர்கள் உண்டான போதாக ஆயுதம் எடுக்கப் பார்த்திராமல், எப்போதும் ஒக்கக் கையிலே விடாதே கொண்டிருப்பவனாதலின், ‘மன் நின்ற சக்கரம்’ என்கிறது. 2பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளை அழைக்க வல்ல ஆச்சரியத்தை உடையவனாதலின், ‘மாயவன்’ என்கிறது. இதனால், போக்குகின்ற பொருளைக் கொண்டு, போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு, போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற பொருளைப் போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி. 3இங்குச் சங்கல்பம் அழியவேண்டா; வருவதாக நினைக்க அமையும். 1“என்னுடைய இச்சையினாலே அவதரிக்கிறேன்” என்கிறபடியே, வருவதாக நினைக்க அமையும் என்றபடி. 2‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கையும், பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளைப் போக்கக் கடவது என்கிற மர்யாதையைக் குலைக்கையுமாகிற இவை வேண்டா, தான் வர அமையும்; போக்குகின்ற பொருளின் தன்மையினாலே போகின்ற பொருள் தன்னடையே போகும். 3இவ்விடத்தே இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் – முடிய வேண்டுமளவிலே நூறே பிராயமாக இருக்கிற இவ்வாத்மாவை முடித்து நோக்குவார் ஆர்? 4“இவன் வெட்டத் தகாதவன், இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன், வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக்கொண்டு நின்று வழக்குப் பேசாநின்றதாயிற்று ஆத்மவஸ்து. 5இதனை முடித்து நம்மை நோக்குவார் ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை, இச்சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப் புலவன் இட்டு வைக்கிறான்‘பிரிவிலும் முடியாத என் 1உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று. இவ்விடத்தே-2சர்வ ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.

ஆவியைக் காப்பார் யார்
பின்னே வந்து ஹிம்சை செய்யும் காதல் நோய்
சக்கரம் வைத்து கொண்டும் வாராமல்
பின் நின்ற காதல் முடிந்த பின்பும் வரும் விஸ்லேஷ துக்கம்
புக்க இடம் எங்கும் புக்கு ஹிம்சிக்கும்
ஒதுங்க முடியாமல் ஹிம்சிக்கும்
நெருப்பு அடுப்பை சூடு  பண்ணி –
அது போல் காதல் நோய் நெஞ்சை முதலில் எரித்து –
பிரேமவியாதியும் இரவும் சேர்ந்து -சங்கேதம் -செய்து -கூட்டு சேர்ந்து –
முன்னே இரவு இரவு பின்னே சூழ்ந்து
இரவு முன்னே வர காதல் பின்னே வர
எதிரிகள் சேர்ந்து நலியும் படி
கண்ணை மூடி -உள் கண்ணை காதல் மறைக்க -கட் கண்ணை இரவு மறைக்க
இருளை ஒத்த அவன் வந்தாலும் காண ஒண்ணாத படி
மன் நின்ற சக்கரத்தன் கை கழலா நேமியான்
ஆஸ்ரிதர் துக்கம் உடன் தீர்க்க தானே

“மன்னின்ற சக்கரத்து எம் மாயவன்” என்பதற்கு, பிரகாசத்தையுடைய
பொருளைக்கொண்டு இருளை அழைக்க வல்ல ஆச்சரிய பூதன் என்று
மேலே ஒரு கருத்து அருளிச்செய்தார். இப்பொழுது, ‘ஆயுதம் எடேன்’
என்று கூறி வைத்துப் பின்னர் வீடுமனை அழிப்பதற்காக ஆயுதத்தை
எடுத்த ஆச்சரியத்தையுடையவன் என்று வேறும் ஒரு கருத்து
அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி, “வாரானால்” என்பதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘இங்கு’ என்று தொடங்கி. ‘சங்கல்பம் அழிய வேண்டா’
என்றது, சங்கல்பத்தையும் அழித்து ஆயுதத்தை எடுத்தலாகிற முயற்சியும்
வேண்டா என்றபடி. ‘நினைக்க அமையும்’ என்றது, வருவதற்குத் தன்
இச்சையே ஒழிய வேறு ஒரு வருத்தமும் இல்லாமையைத் தெரிவித்தபடி.

மாயவனும் –
பிரகாச த்ரவ்யதை விட்டு தமசை அழிக்க -இல்லை -அழைக்க வல்ல –
சூர்யனை மறைத்து –
நிவர்தகம் வைத்து -இருட்டை நிவர்த்யத்தை நிவர்ப்பிக்க வல்லவன் –
கோடி சூர்ய ஒளியால் -மறைத்தானே
வாரானால் –
சம்பவாமி ஆத்ம மாயாயா
இச்சை காரணமாக அவன் வருவதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘என்னுடைய’ என்று தொடங்கி.

“அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”-என்பது, ஸ்ரீ கீதை. 4 : 6.

“நீள் ஆவியாய்க் கொண்டு நின்ற” என்றதனால், பலித்த பொருளை
அருளிச்செய்கிறார் ‘இவன் வெட்டத் தகாதவன்’ என்று தொடங்கி.

“அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அஸோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசல: அயம் ஸநாதந:”-இது, ஸ்ரீ கீதை. 2 : 24.
சங்கல்பமே  போதுமே
ஆய்தம் எடேன் சொல்லி ஆயுதம் எடுக்க வேண்டாமே
நிவர்தள ஸ்வாபாவத்தால் துக்கம் தானே போகுமே
இருள் தானே விலகும் வெளிச்சத்தில்
நூறே பிராயமாக இருக்கும் வஸ்து -ஆத்மா
நோக்குவார் யார் ஆத்மாவை முடித்து காப்பார் யார்
முடிந்து பிழைப்பதே சுகம் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 19, 2013

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனிநம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே.

பொ-ரை :- தாய்மார்களும் தோழிமார்களும் இவள் தன்மையாதாக இருக்கின்றது என்று ஆராயாமல், நீண்ட இரவு முழுதும் தூங்குகின்றார்கள்; மேகம் போன்ற நிறத்தையுடைய நம் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; என்னை ஆராய்கின்றவர்கள் யாவர்? கொடிய தீவினையேனாகிய எனக்குப் பின்னே நின்று பெயரானது என்னை முடிய ஒட்டுகின்றது இல்லை என்கிறாள்.

வி-கு :- நீர் – நீர்மை. துஞ்சுவர் வாரான் ஆதலால், என்னை ஆராய்வார் ஆர்? என்க. வல்வினையேன் பின் நின்று பேர் என்னை மாயாது என்க. மாய்தல்-மறைதல், அழிதல்.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராயகின்றிலர்கள்; அவர்கள் உதவாதபோது உதவும் கிருஷ்ணனும் வருகின்றிலன்; பெயரளவில் நிற்கின்றவள் ஆனேன் என்கிறாள்.

என்னை ஆராய்வார் ஆர் – 2“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய  குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே, திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப்பட்டவர்களாகையாலே என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில், அதுதனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன, ‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்துபோந்த இப் பெண்பையல்களை இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன, “துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப்புக்கால், அப்போதே அவர்கள் கண்குழிவு காணமாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.” 1இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினையுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ. ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று 2“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக்கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய், ‘ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ.

அன்னையரும் தோழியரும் – என் நிலையைக் கண்டு என்னைப் போன்றே 3உறக்கத்தைத் துறந்தவர்களோடு, ‘உறக்கம் துறக்கக் கூடாது’ என்று விலக்குகின்றவர்களோடு வாசி அற ஒக்க எடுக்கும்படியாய் வந்து விழுந்தது. என்றது, என் நினைவே நினைவாய் இருக்குமவர்களோடு தங்களுக்கு என்ன ஒரு நினைவுண்டாய் நியமிக்கத் தக்கவர்களோடு வாசி அற்றது என்றபடி. அன்னையரும் தோழியரும் நீர் என்னை என்னாதே நீள் இரவும் துஞ்சுவர் – 1அன்னையரும் தோழியருமான நீங்கள், என்பட்டாய் என்னாதே, நீள் இரவும் துஞ்சுதிர் என்று சொல்லுவாரும் உளர். அன்றிக்கே, அன்னையரும் தோழியரும் இது ஒரு நீர்மை இருக்கும்படியே! என்னே! என்னாமல், நீள் இரவும் துஞ்சுவார்கள் என்னுதல். என்றது, அவன், தன்னைப் போகட்டுப் போய் வேறு சிலவற்றால் போது போக்தித் தன்னை நினையாமலே இருக்கச் செய்தேயும், தான் அவனை ஒழியப் போது போக்கமாட்டாதே இருப்பதே! இது ஒரு நீர்மையே! என்னே ஆச்சரியம்! என்று இப்படிச் சொல்லாமல் தூங்குவர்கள் என்றபடி. 2“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” என்புழிப் போன்று, ஈண்டும் ‘நீர்’ என்பது, நீர்மை என்ற பொருளில் வந்தது. எனக்கு உறங்காமையே தன்மையாம்படி, நெடிதான இரவு முழுதும் அவர்களுக்கு உறங்குகையே தன்மையாய் விட்டது என்பாள்  ‘நீள் இரவும் துஞ்சுவர்’ என்கிறாள்.

கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் – ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவையுடையனுமாய், 3“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப்போந்தவனும் வருகின்றிலன்.1“தாஸாம்-அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ. பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள். பேர் என்னை மாயாதால் – அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும். 2அவன் வருகின்றிலன், இது போகிறதில்லை. 3நான் காரியத்திலே முடிந்தேனாயிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப்பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை. 4ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஏதுவானபடி. 5அடியுடைய பெயர் ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே. இதனுடைய அடியுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது. பேர் என்னை மாயாதால் – பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்றபடி. வல்வினையேன் – நான் முடியச்செய்தேயும் என்னை முடித்தேன் ஆகாதபடி செய்யும்படியான பெயரைப் படைக்கக்கூடிய மஹாபாவத்தைச் செய்தேன். பின்நின்று – நான் முடியச் செய்தேயும் இப்பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை. 6வருகிறபோது ஒருசேர வந்தால், போகிறபோதும் ஒருசேரப் போக வேண்டாவோ.1“பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணக் கடவேன்” என்றும், “தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்” என்றும் ஒக்கச் சொல்லக்கடவதன்றோ. 2முற்பட வந்தார்க்கு முற்படப் போகவேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?

மீண்டும் கண்ணன்
ஆழ்வார் இழிந்த துறைக்கு மீண்டும் வர
சப்தம் -நாமம் மாதரம் பேருக்கு இருபது போலே
வஸ்து இல்லை -என்கிறார்
துக்கம் ஆராயப் போகிறவர் யார்
அன்னையர் தோழியர் -நீ இப்படி -சொல்லாமல் –
இரவும் நீண்டு
காரன்ன மேனி கண்ணனும் வாரானால் –
தன்னை நலிந்த ராஷசிகளை கூட அஞ்சாதே என்று ஆராய்ந்து பார்த்தவள்
தன்னை யார் ஆராய்வார் என்கிறாள்

வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘பலம் இல்லாத நான்’ என்றது முதல், ‘ஆர்
என்னை ஆராய்வார் என்கிறாளே அன்றோ’ என்றது முடிய.

“பிராப்தவ்யம் து தஸாயோகம் மயாஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.

கம்பராமாயணம் யுத்தகாண்டம் மீட்சிப்படலம் 32 முதல் 37 முடிய
உள்ள செய்யுள்களை இங்குக் காணல் தகும். நேர்த்தரவு-செல்லுச்சீட்டு.
‘இராவணனும் பட்டானாகில்’ என்றது, இராவணனாலே தேவரீருக்கு நலிவு
வாராமல் இருப்பதற்காக முன்பு இவர்களை நலியாமல் விட்டேன் என்றபடி.

திருவடி சென்று ராஷசிகளை நலிய புக –
ராவணன் பரதந்த்ரிகள் -தாசிகள் -பொறுத்தோம் -முன்பே சொல்லி -திரிஜடை சொபனத்தில் –
பிரார்த்திக்காமல் இருக்கச் செய்தே அவர்கள் நடுக்கம் மட்டுமே பார்த்து அருளி –
ராவணனும் பட்டானாகில் நெடு நாள் ஹிம்சை செய்த இவர்களை பொறுக்க வேணுமோ -திருவடி வார்த்தை
கண்ணீர் பார்க்கும் அளவில் உடம்பில் பலம் இல்லை -சீதை வார்த்தை –
ராவணனும் பட்டு -வேற துர் பலம் இல்லையே –

“துர்பலா” என்றால், மனோபலம் இல்லாமை என்று ஆக வேண்டுமோ?
சரீரவலி இன்மையைச் சொன்னதாகக் கொண்டால் என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இராவணனும்’ என்று தொடங்கி. ‘இது’
என்றது, மனவலி இன்மையை.

2. “தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜயஹர்ஷிதா
அவோசத் யதி தத்தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.

கடி மா மலர் பாவை உடன் சாம்ய ஷட்கம் -நாம் அனைவருக்கும் உண்டே –
அன்னையர் -தசை கண்டு உறக்கம் துரந்து
தோழி-உறக்கம் இன்றி இருக்க கூடாது சொல்பவர்
இருவரும் சேர்ந்து -துஞ்ச
நியமிக்கும் -அவர்களும்
துஞ்சுவரால் –
நீர் என்னை என்னாதே –
என்னே -என் பட்டாய் –
அன்னையும் தோழியரூமான நீர் -என்னே என்னாதே –
நீர்மை -அர்த்தம் வேற -இப்படி நீர்மை -இருப்பதே -வேறு சிலவற்றால் போது -போகாமல்
அவனையே நினைத்து கதறி –

நல்லவர் பழக்கம் -நீரவர் கேண்மை நட்பு -பிறை மதி போலே
பேதையார் நட்பு தேய் பிறை போலே
நல்ல மணம் -தீய -கந்தம் மா முனிகள் ஸ்ரீ ஸூக்தி
உறங்காமையே ஸ்வபாவம் போலே இவர்களுக்கு உறங்குவதே
காரன்ன மேனி -வந்தாலே ஸ்ரமஹரமான
உதவிப் போந்தவனும் வர வில்லை
பூர்வ அவஸ்தைஅந்தக் கோப
ஸ்திரீகளுக்கு’ என்று தொடங்கி.

“தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.

நம் கண்ணனும் வாரானால்
அவன் வர வில்லை
பெயரும் போக வில்லை
போக்கு வரத்து இல்லை
காரியத்தில் முடிந்தேனாக இருக்கச் செய்தேயும் –
clinical death போலே
இப்பெயர் இன்னாள் முடியவில்லையே
ஆழ்வார் திரு நாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சத்தா ஹேதுவான படி அதுவும் இவருக்கு
அடி உடைய பெயர் ஆகையாலே சர்வருக்கும் பெருமை உடைய பெயர் தாரகம்
சிரசா வகிக்கும் படி அடி உடைய பெயர் -அடி உடைமை பலம் உடைமை திருவடி
சப்த அவசேஷை
முடிய ஒட்டாமல் வல் வினை
பின் நின்று
வருகிற பொழுது ஒக்க வந்தால் போகும் பொழுதும் ஒக்க போக வேண்டாமோ என்ன பாபம்

வருகிறபோது ஒருசேர வந்ததோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
பெயர்களையும் என்று தொடங்கி.

“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி”
என்பது, சாந்தோக். 6:3.

“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”-என்பது. ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 5 : 63.

முற்பட போக வேண்டி இருக்க ஆத்மா முன்பு சரீரம் பின்பு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 19, 2013

பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண்சுடரோன் வாரா தொளித்தான் இம்மண் ணளந்த
கண்பெரிய செவ்வாய்நம் காரேறு வாரானால்
எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பார்ஆர் என்னையே?

பொ-ரை :- பெண்ணாகப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரிய துன்பத்தைக் காண மாட்டேன் என்று சூரியன் வராமல் ஒளித்துக் கொண்டான்; இந்த மூவுலகத்தைத் தன் திருவடியால் அளவிட்ட, பெரிய கண்களையும் சிவந்த வாயினையுமுடைய நம் கார் ஏறு வருகின்றானிலன்; எண்ணுதற்கும் மிக்கதாயுள்ள மனத்தின் நோயை என்னைத் தீர்ப்பார் யார்? என்கிறாள்.

வி-கு :- என்று ஒளித்தான் என்க. அளந்த காரேறு என்க. பசுவைப் பாலைக் கறந்தான் என்பது போன்று, நோயை என்னைத் தீர்ப்பார் யார் என இரண்டு செயப்படுபொருள் வந்தது. அன்றி, என்னுடைய நோயைத் தீர்ப்பார் யார்? என வேற்றுமை மயக்கமாகக் கோடலுமாம்.

ஈடு :- நான்காம் பாட்டு. 2கண்டார்க்குப் பொறுக்க ஒண்ணாதபடி வியசனம் செல்லாநிற்க, வரையாதே காப்பாற்றும் ஸ்ரீ வாமநனும் வருகின்றிலன்; என்னுடைய மனத்தின் துன்பத்தைப் போக்குவார் யார்? என்கிறாள்.

பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – பரதந்திர ஜன்மம் ஆகையாலே முடிந்து போகவும் பெறாமல், மிருதுத் தன்மையையுடையவர்களாகையால்பிரிவும் பொறுக்க மாட்டாமல் இருக்கிற பெண்கள் அநுபவிக்கிற மஹா துக்கத்தைக் காண்கின்றிலேன் என்று. 1சர்வ ரக்ஷகன் பொறுக்குமித்தனை போக்கிப் பாதுகாத்தலிலே ஏகதேசம் சேர்ந்தவர்களுக்குப் பொறுக்கப்போமோ? புருஷோத்தமன் பொறுக்குமித்தனை போக்கிப் புருஷர்களால் பொறுக்கப் போமோ? ஒண்சுடரோன் வாராது ஒளித்தான் – 2தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தையுடையவனும் வாராதே மறைந்தான். 3“அந்தப் பரம்பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது” என்கிறபடியே, பகவானுடைய கட்டளையாலே முப்பது வட்டம் வரவேணுமேயன்றோ, அதுவும் செய்திலன் என்பாள் ‘வாராதே’ என்கிறாள். இங்ஙனமிருப்பவன் ‘ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ, இக்கொடுமை என் கண்களால் காணப்போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’ என்கிறாள். 4“ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று” என்னக் கடவதன்றோ. 1அன்றிக்கே, “சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்”, 2“அந்தத் தூசியும் காணப்படவில்லை” என்பன போன்று, வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்னுதல்.

இம் மண் அளந்த – 3இந்தப் பூமிக்கு என்ன துயர் உண்டாக அளந்து கொண்டான். 4பூமிக்கு மஹாபலியால் உண்டான இடரினளவோ எனக்கு இரவால் உண்டான இடர்? 5வரையாமல் எல்லாரையும் காக்குமவன். கண் பெரிய செவ்வாய் நம் கார் ஏறு வாரானால்-கிருபையால் பெரியனாய்ப் பூமியை அளந்து, பூமியிலுள்ளார் இடர் போகும்படி குளிரக் கடாக்ஷித்து, அதனால் உண்டான பிரீதியின் மிகுதி தோற்றப் புன்முறுவல் செய்கையாலே சிவந்த அதரத்தை உடையவனான நம் கார் ஏறு வருகின்றிலன். எல்லார் விஷயமாகச் செய்யும் ரக்ஷணத்தையே இயல்பாகவுடையவன் என்பாள் “நம்” என்கிறாள். சர்வ ரக்ஷகனுடைய காக்கப்படும் பொருள்களில் தானும்சேர்ந்தவள் ஆகையாலே 1‘நம்’ என்கிறாள் என்பது கருத்து. இவற்றைக் காப்பாற்றுகையாலே தன் நிறம் பெற்றிருப்பவன் என்பாள் ‘கார்’ என்கிறாள். ‘அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின் ‘ஏறு’ என்கிறாள். இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள், “வாரானால்” என்கிறாள். இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமானபோது, பண்டு என்னோடே கலந்ததனாலே தன் நிறம்பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக. 2எண் பெரிய சிந்தை நோய் – “எவன் அறியாதவனாக எண்ணுகிறானோ அவன் அறிந்தவன், எவன் அறிந்தவனாக எண்ணுகிறானோ அவன் அறியாதவன்” என்கிறபடியே, வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, 3இத்தனை போதும் பேசினார்; தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது. ‘எண் பெரியது’ என்னுமித்தனை, ‘இவ்வளவு’ என்னப் போகாது. 4பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின் வியாகுலம்தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே. 5“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப் பாவங்களினின்றும் நீங்கினவள்” என்றாற்போலேசிந்தை நோய் தீர்ப்பார் ஆர் – 1மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும் அமையும். 2“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள்தாம். 3அவனை மறக்கவுமாம் நினைக்கவுமாம், துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’ என்றது, மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று; ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச் சொன்னபடியேயாம். 4பிரிவு நிலையில் நினைவுதான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ; “5கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” “காட்டேன்மின் நும்முரு என் உயிர்க்கு அது காலன்” என்னக்கடவ வன்றோ. என்னையே – 6இவள் ஒருத்திக்குமே உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள். நாட்டார் நினைத்துத் துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகாநின்றார்களே அன்றோ, 7சாதன புத்தியாக இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, 8“தியானிக்கக்கடவன்” என்ற நினைவு தன்னையே விதியாநின்றதேஅன்றோ; 1அவனுடைய படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.-

மாயும் வகை அறியேன் -சீதை பிராட்டி போலே பராங்குச நாயகி
பரதந்த்ரமே உருவாக -இருப்பதால் -பொருத்தமாக –
நமக்கு அதிகாரம் இல்லை பிராணன் போக்க- உடையவன் சர்வேஸ்வரன் -சட்டமும் அப்படியே
கண்டார்களுக்கும் பொறுக்க முடியாத துக்கம் கொண்டாள் இவள்
வாமனனும் வர வில்லையே
வரையாது ரஷித்தவனும் –
துக்கம் பார்க்க பொறாமல் சூரியனும் வர வில்லையே –
பெரும் துயர் காணமாட்டாமல்
மண் -அளந்த பெரிய கண் செவ்வாய் எனது கார் ஏறு புருஷ -ரிஷபன் வரவில்லையே
எனது சிந்தை விசனம் தீர்ப்பார் யார்
பரதந்திர ஜன்மம் முடியவும் பெறாமல் -பெண் -மிருது ஸ்வாபம் -பிரிவை ஆற்ற முடியாமல்
சர்வ ரஷகனும் விசனம் காண பொறுக்க  முடியாமல் -ரஷண ஏக தேசம் உள்ளவனும் –ஆதித்யன்
-புருஷோத்தமன் அவனால் முடியும் புருஷனால் முடியாதே
ஒளித்தான் கண்ணில் -படாமல் பகவத் ஆக்ஜையால் முப்பது வட்டம் வர வேண்டுமே –

பீஷா அஸ்மாத் வாத: பவதே”-என்பது, தைத்திரீயகோபநிடதம். 8.

நெடுங்கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலுங் கால்
ஒடுங்கி நடப்பதும் தண்கார் பொழிவதும் ஊழிதனில்
சுடுங்கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடுங்கன லாழி அரங்கேசர் தம்திரு ஆணையினே.- என்பது, திருவரங்கத்து மாலை.

முப்பது வட்டம்-முப்பது நாழிகைக்கு ஒரு வட்டம்.

எம்பெருமான் கட்டளை உண்டே
ஒளிந்து -இருக்க -கொடுமை கண்ணால் போக முடியாமல் –
தேரு -ம் போயிற்று –பெரிய திருமொழி, 8. 5 : 2-வர சூசகம் இன்றி மறைய

இம்மண் அளந்த –
மகா பலியால் பூமிக்கு வந்த துயருக்கு மேலே இவளுக்கு இருளால் வந்ததே –
பூமியை அளந்து கொண்டவன் என்னை ரஷிக்க வர வில்லை
கண் பெரிய கிருபையால் பெரிய -தயை -கடாஷம் இரண்டு -அர்த்தம்
சிவந்த அதரம் -விடாய் -போகும்படி பூமி துன்பம் தீர்த்த ஹர்ஷத்தால் சிரிக்க
கார் -தன்னிறம் பெற்று
ஏறு தனது பேறாக -மேணானிப்பு தோன்ற
என் கார் ஏறு -எம் பாட பேதம்
என்னுடன் கலந்ததால் தன்னிறம் பெற்றான்
-வாரானால்
இரக்க -வேண்டாம் அளக்க வேண்டாம் -வந்தாலே போதுமே
எண்ண முடியாதசிந்தை நோய்
வேதங்கள் நிலம் அல்லை பகவத் விஷயத்தை இவ்வளவு பேசி

எண் பெரிய” என்றது, எண்ணுக்கு அகப்படாத என்றபடி.

“யஸ்யமதம் தஸ்ய மதம். . . .அவிஜ்ஞாதம் விஜாநதாம்”-   இது, கேந உபநிடதம்.

கண்டவர் விண்டிலர் விண்டவர் -கண்டிலர் கம்பரும்
அறிய முடியாது என்று அறிந்து கொள்ளுவது தான் அறிவு –
சமுத்திர ஜாலம் எவ்வளவு அறிய முடியாது என்பவன் அறிந்து கொண்டவன்
யஸ்ய அமதம் தஸ்ய மதம் -வாக்குக்கும் மனசுக்கும் நிலகம் அன்று
பொய் நின்ற ஞாலம் தொடங்கி பேசி -சிந்தை நோய் -எண் பெரிய
தன்னாலும் அறிய முடியாத -அவனை அறிந்து பேசினாலும் –
பிரிந்த விஷயம் பற்றி அளவு படுத்தினாலும் அதனால் வந்த விசனம் பெரியதே
சூழ்ந்து அகன்ற அசித் சித் -ஈஸ்வரன் அவா பெரியதாய் போனதே –
அந்த அவா அற சூழ்ந்தானே அவன்

விஷயத்துக்குத் தகுதியாக இருக்கும் துன்பம் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘கண்ணனை’ என்று தொடங்கி.

“தச்சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா
ததப்ராப்தி மஹாதுக்க விலீநா ஸேஷ பாதகா.”
“சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸதயா முக்திம் கதா அந்யா கோபகந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.

சிந்தயந்தி போலே அனுபவிக்கிறாள் பெரிய துக்கம்
தீர்ப்பார் யார் –
மறக்கவும் அமையும் –
என்ன செய்தால் மறக்க முடியும்
மறக்க்கவுமாம் நினைக்க்கவுமாம் விசனம் தான் மிஞ்சும்
மறந்தாரை மானிடமாய் வையேன் என்பார்களே
ஓடுகிற விசன அதிசயம் சொல்லுகிறார்
ஓன்று கிடைக்காவிடில் -அதை நினைப்பதே துக்கம் தானே
கண்ணன் நாமமே குளறிக் கொல்வீர்
காட்டேன் மின் நும் உரு
நினைவுஊட்டுமே இவை துக்கம் அதிகமாகுமே
சிந்தை நோய் தீர்ப்பார் யார்-

ஈஸ்வரர் படர்கள் வந்து காண புக்காலும் காண முடியாமல் ஒளிந்தானாம்
இவள் துக்கத்தை காண முடியாதே –
தேரும் போயிற்றே -பெரிய திருமொழி
தூசி கூட தெரியவில்லையே
ராசக்ரீடை கண்ணன் மறைந்தது போலே
சுவடு கூட அறிய முடியாமல் –
பூமிக்கு மகாபலியால் உண்டான துன்பம் விட எனக்கு அதிகம்

கண் கிருபை தயை -இரண்டும்
செவ்வாய் -ப்ரீதி புகார் தோற்ற ஸ்மிதம் பண்ணி
கார் ஏறு -தன்னிறம் பெற்று -மேணாநிப்பு தோற்ற
எம் கார் ஏறு தன்னையும் சேர்த்து கொண்டு
என் கார் ஏறு தன்னிடம் கலந்ததால் வந்த தன்னிறம்
-வாரானால் வடிவை காட்டினாலே போதுமே இரக்கவும் அளக்கவும் வேண்டாமே

எண் -அறிய முடியாது என்று அறிந்தவனே அறிவாளி
யஸ்ய அமதம் -எவன் ஒருவனுக்கு புலப்படவில்லையோ அஸ்ய மதம்
வேதாந்தம் முடியாது என்பதை இத்தனை நேரம் பேசி
சிந்தை நோய்இவரின் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற  ஞானத்துக்கும் அவிஷயமாய் இருந்தது
பிரிந்த விஷயத்தை கூட அளவிடலாம் -துக்கம் அவனை விட பெரிசு
பாரிப்பு தத்வ த்ரயதுய்க்கும் விஞ்சி-

சிந்தயந்தி போலே -மிக பெரிய துக்கம் –
தீர்ப்பார் யார்
மறக்கவும் -அமையுமே நினைவு இருந்தால் தானே துக்கம்
மாநிடராக வையேன் என்பார்களே –
துக்கம் படுத்தும் பாடு இப்படி பேச வைக்கிறது -விசன அதிசயம்
காட்டேன் நும் உரு
கண்ணன் நாமமே குளறி கொல்லீர் போலே
தீர்ப்பது -அது செய்யலாம் இ றே சாதனா புத்தி செய்வாருக்கு
சாணி பஞ்ச கவ்யம் போலே அவனை நினைப்பாருக்கு தானே
நாட்டார் ஸ்மரித்து -துயர்வரும் -நினைமின் -துக்க -நிவ்ருத்தி சாதனா புத்தியாக –
ஆழ்வார் அவனை அடைவதையே பேறாக -நினைத்ததால் இவருக்கு துயர் –
நிதித்யாசவ்யா வேதாந்தம்
திருமேனியில் அவன் படியில் இழிந்தாருக்கு இப்படி துக்கம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.