Archive for April, 2013

திருச்சந்த விருத்தம் -71-80-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 30, 2013

71 -பாட்டு –

அவதாரிகை –

பாணனை ரஷிக்க கடவேன் என்று பிரதிக்ஜை பண்ணி ஸபரிகரனாய் கொண்டு
ரஷணத்தில் உத்யோகித்து எதிர் தலையில் அவனைக் காட்டிக் கொடுத்து தப்பி
போன படியாலும் -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று லஜ்ஜித்து
க்ர்ஷ்ணன் கிருபை பண்ணி அவன் சத்தியை நோக்கின படியாலும்
அவன் ரஷகன் அல்ல என்னும் இடமும்
க்ருஷ்ணனே ரஷகன் என்னும் இடமும்
ப்ரத்யஷம் அன்றோ -இவ்வர்த்தத்தை ஒருவர் சொல்ல வேண்டி இருந்ததோ -என்கிறார் –

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-

பதவுரை

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால்

(மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக
வெகுண்டு

கோபங்கொண்டு
இண்ட

செறித்துவந்த
வாணன்

பாணாகரனுடைய
ஈர் ஐ நூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணித்தநாள்

கழித்தபோது
முண்டன் நீறன்

மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும்
மக்கள்

அவனுடைய குமாரர்களும்
வெப்பு

ஜ்வரதேவதையும்
மோடி

பிடாரியும்
அங்கி

அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்)
ஓடிட

(பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே
கண்டு

பார்த்து
நாணி

(இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு
வாணனுக்கு

பாணாகரன் விஷயத்தில்
இரங்கினான்

கிருபைபண்ணினவன்
எம்மாயனே

ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.)

வியாக்யானம் –

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் –
வண்டு மாறாத மாலையாலே அலங்க்ர்தையான உஷை நிமித்தமாக –
ஸ்வப்ன த்ர்ஷ்டனான அநிருத்தனை சித்ரலேகை கொண்டு வரக் கூடும் என்று
அவள் வரவு பார்த்து செவ்விப் பூவாலே ஒப்பித்து இருந்தபடியைச் சொல்கிறது

வெகுண்டு இண்ட வாணன் –
எதிர்தலை சர்வேஸ்வரன் என்று பாராதே யுத்த க்ருத்தனாய் மேல் விழுந்த பாணன்

வெகுளி -கோபம்

இண்டல் -நெருங்குதல்

பிதரம் மாதரம் தாரான் -என்று ரக்த ஸ்பர்சங்களை விட்டுப் பற்ற வேண்டும் விஷயத்தில்
உஷை நிமித்தமாக பகைக்கிறான் இ றே துஷ் ப்ரக்ர்தை யாகை யாலே
காந்தர்வ பஷத்தாலே சம்ச்லேஷம் பிறந்த பின்பு க்ர்ஷ்ணன் உடன் சம்பந்தி யாய்க் கொண்டு
ப்ரீதமாக ப்ராப்தமாய் இருக்க -தன பாஹூ பலத்தாலே வந்த துர்மாநத்தாலே
சீறி அந்தரப்பட்டான் என்கை

ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள் –
இவன் எதிர் இடுகைக்கு ஹேது பஹூ பலம் ஆகையாலே பஹூ வனத்தை சேதித்த வன்று –

முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிட கண்டு நாணி –
ரஷிக்கிறேன் என்று பிரதிக்ஜை பண்ணினவன் செய்தது என் என்னில் –
பாணனை க்ருஷ்ணன் கையிலே காட்டிக் கொடுத்து ப்ரதானனான தன்னோடு
பரிகரத்தோடு வாசியற முது காட்டி ஓடின இத்தனை –

முண்டன் நீறன் –
முண்டிதனாய் பச்மச்சன்ன சரீரமான ருத்ரன் -இத்தால்-
க்ருஷ்ணனைக் குறித்து தன் அபிமத சித்தியைக் குறித்து சாதகனான அவன்
தன்னளவும் பாராதே -எதிர் தலையும் பாராதே -சாதக வேஷத்தோடு துர்மானம்
கொண்டாடின படி –
தேவ சேநாதிபதியான சுப்ரஹமண்யன் முதலான புத்ரர்கள்
ஜ்வரம் மோடி -பிடரி -49 அக்நிக்கும் கூடஸ்தனான அக்நி இவர்களோடு
தன்னோடு வாசியற முதுகிட்டு போகக் கண்டு லஜ்ஜித்து

மோடி -காளிகள் என்றுமாம்

லஜ்ஜிக்கையாவது -யுத்தோன் முகனாய் தான் படுதல் -எதிர் தலையை ஜயித்தல்
செய்ய ப்ராப்தமாய் இருக்க முதுகிடுகையாலே தரம் போராத இவற்றின் மேலே
யாகாதே நாம் சீறிற்று என்று லஜ்ஜிக்கை
அரி  பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய -என்கிறபடியே ஆஸ்ரிதனை ப்ராணாவதியாக
ரஷிக்க ப்ராப்தமாய் இருக்க -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று
லஜ்ஜித்து என்னவுமாம்

வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –
இப்படிப்பட்ட ருத்ரனை தனக்கு தஞ்சமாக நினைத்து இருக்கையாலே
தய நீயனான பாணனுக்கு -ஆபத்தே ஹேதுவாக க்ர்பை பண்ணி -இரண்டு தோள்களைக்
கொடுத்து ரஷித்தான் -என் ஆயனான க்ருஷ்ணன் அல்லனோ –

இத்தால்
தேவதாந்தரங்கள் ரஷகர் ஆனாலும் ஆபத்துக்கு உதவாதவர்கள்
ஈஸ்வரன் முனிந்த தசையிலும் ஆபத்சகன் என்றது ஆய்த்து
கர்பயா பர்ய பாலயத் –

———————————————————————————–

72-பாட்டு –

அவதாரிகை-

ருத்ரன் லோகத்திலே மோஷ ப்ரதன் என்று ஆச்ரயிப்பாரும்
ஆகமாதிகளிலே பரத்வத்தை பிரதிபாதித்தும் அன்றோ போகிறது என்னில்
நிர்தோஷ ஸ்ருதியில் அவனை ஷேத்ரஞ்ஞனாகச் சொல்லுகையாலே லோக
பிரசித்தி வடயஷி பிரசித்தி போலே அயதார்தம் -ஆகமாதிகள் விப்ரலம்பக வாக்யவத்-அயதார்த்தம் -என்கிறார் –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72-

பதவுரை

போதில் மங்கை

பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி

பூமிப்பிராட்டியும்
தேவி

தேவிமாராவர்;
அன்றியும்

மேலும்
போது தங்குநான் முகன்

பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்
அவன் மகன்

பேரனாயிரா நின்றான்;
என்று

இவ்வண்ணமாக
வேதம்நூல்

வேத சாஸ்த்ரம்
ஓதுகின்றது

உரைப்பதானது
உண்மை

ஸத்யம்
மகன்

புத்திரனாயிரா நின்றான்;
சொலில்

மேலும் சொல்லப்புக்கால்
மாது தங்கு கூறன்

ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய்
ஏறு அது ஊர்தி

எருதை வாஹனமாக வுடையனான சிவன்
மற்று

இங்ஙனன்றிக்கே
அல்லது

இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை)
உரைக்கில்

(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில்
இல்லை

அது அஸத்யம்

வியாக்யானம்-

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி-
தாமரையில் பிறப்பை உடைய பிராட்டியும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் மகிஷிகள் –
ஹ்ரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் -பத்மேஸ்திதாம் பத்ம வர்ணாம் -என்றும்
சொல்லக் கடவது இறே

அன்றியே –
ஸ்ரீ ய பதித்வமே போரும் சர்வாதிகன் சர்வ சமாஸ்ரயணீயன் என்கைக்கு –
ஸ்ரீ ய பதித்வத்துக்கு மேல் எல்லை இல்லை இறே

யன்றியும் –
அதுக்கு மேலும் –

போது தங்கு நான்முகன்  மகன்-
திரு நாபீ கமலத்திலே பிறக்கையாலே -கமலாஸநனான சதுர்முகன் புத்திரன்

அஜச்ய நா பாவத் யே கமர்ப்பிதம் யஸ்மின் நிதம் விச்வம் புவன மதிச் ரிதம்
ஸ ப்ரஜாபதி ரேக புஷ்கர பர்னேஸம பவத் -என்னக் கடவது இறே

அவன் மகன் சொல்லில் மாது தங்கு கூறன் ஏறு அது ஊர்தி –
ஏக ஏவ ருத்ர சர்வோஹ் ஏஷ ருத்ர -என்கிற ப்ரசம்சா வாக்யங்களையும்
ஆகமாதி தந்த்ரங்களையும் ஒழிய -அவன் ஸ்வரூபத்தை உள்ளபடியே –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய -இத்யாதி நிர்தோஷ சுருதி ப்ரக்ரியையாலே
சொல்லப் பார்க்கில் அவன் ப்ரஹ்ம புத்ரன் –

மாது தங்கு கூறன் -என்கிறது
ப்ரஹ்மாவினுடைய மானஸ ஸ்ர்ஷ்டி ஒழிய யோஷித் புருஷ சம்யோகத்தாலே
பிறக்கும் ஸ்ர்ஷ்டிக்கு ப்ரதம கண்யன் என்று இவனுடைய ஷேத்ரஞ்ஞத்வம்
தோற்றுகைக்காக

ப்ருகுடீ குடிலா தஸ்ய லலாடாத் க்ரோத தீபிதாத்
சமுத்பன்னஸ் ததா ருத்ரோ மத்யாஹ் நார்க்க சம ப்ரப
அர்த்த நாரீ நரவபு பிரசண்டோதி சரீர வான் -என்று
ப்ரஹ்மாவினுடைய ஸ்ர்ஷ்டி பிரகரணத்திலே சொல்லக் கடவது இறே

ஏறு அது ஊர்தி -என்று
வேதமயனான பெரிய திருவடிக்கு எதிராக ரிஷபத்தை வாகனமாகக் கொண்டு இருக்கிற
துர்மானம் தோற்றுகைகாக

என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை –
ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன்
ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று
வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்

யல்லது இல்லை மற்றுரைக்கிலே —
அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –
ஸூபர்ண வைகுண்ட சம்வாதே –
யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே
ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம்
சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –

———————————————————————————

73 -பாட்டு –

அவதாரிகை –

ஸ்ரீயபதியே ஆஸ்ரயணீயன்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ஷேத்ரஞ்ஞர் ஆகையாலே அநாஸ்ரணீயர் -என்றதாய் நின்றது கீழ் –

இதில் –
அந்த ஸ்ரீயபதி தான் தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக மனுஷ்ய சஜாதீயனாய் தன்னை
தாழ  விட்டுக் கொண்டு நின்ற நிலையிலே
ப்ரஹ்ம ருத்ரர்கள் உடைய அதிகாரத்தில் நின்றாருக்கு மோஷ ப்ரதன் என்று கொண்டு –
தேவதாந்தரங்களுக்கும் சர்வேஸ்வரனுக்கும் உண்டான நெடுவாசியை அருளிச் செய்கிறார் –

மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –73-

பதவுரை

முன் ஓர் நாள்

முன்னொரு காலத்திலே
மரம் பொத

ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக
சரம் துரந்து

அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு)
வாலி வீழ

வாலியானவன் முடியும்படியும்
உரம் பொத

அவனது மார்பிலே பொத்தும் படியும்
சரம் துரந்த

பாணத்தைப் பிரயோகித்த
உம்பர் ஆளி எம் பிரான்

தேவாதி தேவனான எம்பெருமான்
வரம் குறிப்பில்

(தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே
வைத்தவர்க்கு அலாது

யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர;
வானம் ஆளினும்

மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும்
யார்க்கும்

மற்றவர்கட்கும்
நிரம்பு நீடு போகம்

சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம்
எத்திறத்தும்

எவ்வழியாலும்
இல்லை

கிடைக்கமாட்டாது.

வியாக்யானம் –

மரம் பொதச் சரம் துரந்து –
மகாராஜர் உடைய விஸ்வாச அர்த்தமாக மராமரங்களை மாறுபாடுருவ திருச் சரத்தை ஏவி

இத்தால் –

தன்னுடைய ரஷணத்தில் அதிசங்கை பண்ணினாருக்கும் அவ்வதி சங்கையைத்
தீர்த்து -தன் பக்கலில் விஸ்வாசத்தை பிறப்பித்து -ரஷிக்கும் சீலவான்-என்கை

வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரம் துரந்த
ராவணனை வாலிலே கட்டிக் கொண்டு திரியும் பெரு மிடுக்கனான வாலியை –
முன் போன சதுர் யுகங்களிலே ஒரு த்ரேதா யுகத்திலே இவன் தறைப் படும்படியாக
மராமரங்களையும் -திண்ணிய அவன் மார்வு மாறுபாடுருவும்படி அம்பை விட்டு –

அதிகாரிகளுமாய் -நிவர்த்த விரோதருமாய் இருக்குமவர்களுக்கு ஸ்வரூப
அநுரூபமான அபிமதத்தை கொடுக்கை யன்றிக்கே
தத் விரோதியான -அவித்யாதி ப்ரபல விரோதிகளையும் போக்கி
அதுக்கு அடியான அதிகாரத்தையும் கொடுக்கும் சீலவான் என்கைக்கு உதாஹரணம் இது
என்கை –

வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அபிமத பிரதானத்திலும் அசக்தர் என்றது இறே
ப்ரஹ்மாதிகளை

வும்பர் ஆளி –
நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுகிறவன் கிடீர் தாழ்ந்தாருக்கு இப்படி உபகரிக்கிறான் -என்கை
ரஷணத்திலே அதி சங்கை பண்ணினவனுடைய அதி சங்கையை தீர்த்து
அவன் விரோதியைப் போக்கின அந்த சீலம் அறிய வுரியார் நித்யஸூரிகள் இறே

எம்பிரான் –
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவன்

அதவா
உம்பராளி எம்பிரான் -என்று
அச் செயலாலே பிரயோஜநாந்த பரரான தேவர்களையும் –
அநந்ய பிரயோஜனரான அஸ்மாத்தாதிகளையும் எழுதிக் கொண்டவன் என்றுமாம்

உரம் பொதச் சரம் துரந்த –எம்பிரான் -என்று முன்பு மகாரஜருக்கு உதவினதும் தமக்கு
உதவிற்றாக நினைத்து இருக்கிறார் –

வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது –
இப்படிப்பட்ட தசரதாத்மஜநுடைய ஸ்ரேஷ்டமான திரு உள்ளத்தாலே விஷயீ கரிக்கப்பட்ட
வர்களுக்கு அல்லது -ஸ்ரேஷ்டம் ஆகையாவது பர ஸம்ர்த்த்யேக பிரயோஜனமாய் இருக்கை –

வானம் ஆளிலும் –

ஜ்ஞாநாதிகராய் -சதுர்தச புவநன்களுக்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாக இருந்தாலும்

நிரம்பு நீடு போகம் –
குறைவற்று -நித்தியமான போகம்
அதாவது -பரம பக்தி க்ர்தமாய் -பரிபூரணமாய் -விசத தமமான-நித்ய அநுபவம் –

எத்திறத்தும் யார்க்கும் இல்லையே —
அநந்ய பிரயோஜனர்க்கும் இல்லை –
கர்மாதி உபாயங்களை அனுஷ்டிக்கவுமாம் -சித்த உபாய பரிக்ரஹம் பண்ணவுமாம்

அவன் பிரசாதம் ஒழிய மோஷ சித்தி இல்லை-
ஜ்ஞாநாதிகராய் அநந்ய  ப்ரயோஜனராய் ஆகவுமாம் –
அகிஞ்சநராய் அநந்ய  ப்ரயோஜனராய் ஆகவுமாம் –
அவன் ப்ரசாதமே மோஷ சாதனம் என்கை –

விரோதி நிரசந  சீலனான தசரதாத்மஜன் பிரசன்னரானார்க்கு அல்லது
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரத்தாலே நின்றாருக்கும் நித்யமான மோஷத்தை
ப்ராபிக்க விரகு இல்லை என்றது ஆய்த்து –

———————————————————————————————-

74 -பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரயணீயனுடைய பிரசாதமே மோஷ சாதனம் ஆகில் -முமுஷுவான இவ் வதிகாரிக்கு
பிரசாதகமான கர்த்தவ்யம் ஏது என்னில் –
ஸ்ரீ வாமனனுடைய திருவடிகளில் தலை சாய்த்தல் –
ஷீராப்தி நாதனுடைய சீலத்துக்கு வாசகமான திரு நாமத்தை வாயாலே சொல்லுதல் செய்யவே
புருஷார்த்த சித்தி உண்டு -என்கிறார் –

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-

பதவுரை

முதலாயிரம்

திருச்சந்தவிருத்தம்
வாமணன்

உலகளந்த பெருயாமனுடைய
அடி இணை

அடியிணைகளை
அறிந்து அறிந்து

உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு
வணங்கினால்

நமஸ்கரித்தால்
செறிந்து எழுந்த ஞானமொழி

பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும்
செல்வமும்

பக்தியாகிற செல்வமும்
செறித்திடும்

பரிபூர்ணமாக விளையும்
மறிந்து எழுந்த

பரம்பிக்கிளர்ந்த;
தென் திரையுள்

தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே
மன்னு

நிதய்வாஸம் செய்தருள்கின்ற
மாலை

ஸர்வேச்வரனை
வாழ்தினால்

ஸங்கீரத்தகம் பண்ணினால்
எழுந்த தீவினைகள்

ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள்
பற்று அறுதல்

வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல்
பன்மையே

இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.)

வியாக்யானம் –
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்-
தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –
ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து -அத்திருவடிகளில்
ந்யஸ்தபரன் ஆதல் –

வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை
வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை -என்றுமாம் –

அறிந்து அறிந்து -என்று
சாஸ்திர ச்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் -என்றுமாம் –

இது -அன்று பாரளந்த பாத போதை யொன்றி -என்று கீழ்ச் சொன்னதினுடைய விவரணம் –

செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் –
ப்ரத்யக் ப்ரவணமாய் -சாஷாத்கார பர்யந்தமான சர்வேஸ்வரனுக்கே அனந்யார்ஹ
சேஷபூதன் -இவ்வாத்மா என்கிற ஜ்ஞானமும் –
அது அடியாக கைங்கர்ய உபகரணமான பக்தியும் குறைவற உண்டாம் –

சிறப்பு -மிகுதி
அது கைங்கர்யத்துக்கும் விரோதி நிவ்ருத்திக்கும் உப லஷணம்
நிர்தோஷனுக்கு இ றே கைங்கர்ய உபகரணமான பக்தி உண்டாவது –
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் –
தனமாய தானே கைகூடும் -என்று வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யம் பக்தி யாகையாலே
அந்த பக்தியை இங்கு –செல்வம் -என்கிறது –

மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் –
பரம்பி கிளர்ந்து தெளிந்த திரைகளை உடைய ஷீராப்தியிலே நித்ய வாஸம்
பண்ணுகிற ஆஸ்ரித வத்ஸலனுடைய வாத்ஸல்ய வாசியான திரு நாமத்தை வாயாலே-சொன்னால்

மறிதல் -விரிதல்

பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் –
பகவத் ப்ராப்தி பந்தகங்களாய் -ஸ்வ ஆஸ்ரயித்தில் வேர் விழுந்தவை அவற்றை விட்டு-பறிந்து போய்

மறுவல் இடாதபடி வாசனையோடே போம்படி பண்ணுகை

பான்மையே —
அவன் ஓர் ஏற்றம் செய்தானாக அன்றிக்கே ப்ரக்ர்தியாய் இருக்கை

இதுவும் -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கிறபடியே கைங்கர்யத்துக்கும் உப லஷணம் –

———————————————————————————————

75 -பாட்டு –

அவதாரிகை –

இப்படி அவனை ஆஸ்ரயித்து -அவனுடைய கடாஷத்தாலே பிரதிபந்தக நிரசன
பூர்வகமாக அவனைப் பெறுகை ஒழிய –
உபாயாந்தரஙககளிலே இழிந்து ஆஸ்ரயிப்பாருடைய அருமையை அருளிச் செய்கிறார் –
மேல் ஏழு பாட்டுக்களாலே –

இதில் முதல் பாட்டில்
கர்ம யோகமே தொடங்கி -பரம பக்தி பர்யந்தமாக -சாதிக்குமவர்களுடைய
துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-

பதவுரை

ஒன்றி நின்று

மனம் சலியாமல் நிலைத்து நின்ற
நல் தவம்

விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது  கர்மயோகத்தை)
ஊழி ஊழிதோறு எலாம் செய்து

பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து
அவன் குணங்கள்

அப்பெருமானுடைய திருக்குணங்களை
நின்று நின்று உள்ளி

ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து
உள்ளம் தூயர் ஆய்

கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய்
சென்று சென்று

மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம்  மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று)
உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர்

பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது
தேவதேவர்

(மற்றபடி) தேவதேவராயிருந்தாலும்
எங்கள் செம் கண் மாலை

செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை
யாவர் காணவல்லர்

யார் காணக்கூடியவர்கள்.

வியாக்யானம் –

ஒன்றி நின்று –
சஞ்சலம் ஹி மந க்ர்ஷ்ண -என்கிறபடியே விஷயாந்தரங்களிலே மண்டி -அவற்றில் நின்றும்
மீட்க அரிதான நெஞ்சை -பகவத் விஷயத்தில் உத்தேச்ய புத்தியாலே மீட்ட –
அம் மனஸ்சோடே பகவத் விஷயத்தில் ஒன்றி நின்று –

நல் தவம் செய்து-
தபஸ் என்று -யஜ்ஞே நதாநேந தபஸா நாஸ கேந -என்றும் –
யஜ்ஞோ தாநம் தபஸ் கர்மநத்யாஜ்யம் கார்யமே வதத் -என்றும் -சொல்லுகிற
கர்மங்களுக்கும் உபலஷணம் –

நல் தவம் என்று –
ஜீவ பர யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாகவும்
த்ரிவித பரித்யாக பூர்வகமாகவும் –
அனுஷ்டிக்கும் கர்ம யோகத்தை சொல்லுகிறது –

ஊழி ஊழி தோறேலாம் –
புதுப் புடைவையில் அழுக்கு கழற்றுமா போலே -அந்த கர்மத்தாலே விரோதி பாபம்
போகும் இடத்தில் -ஜந்மாந்தர சஹஸ்ரேஷூ -இத்யாதி படியே கால தைர்க்யத்தை
சொல்லுகிறது

நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி-
க்ரமத்தாலே பரம பாவநனாய் இருந்துள்ளவன் குணங்களை அனுசந்தித்து -இத்தால்-
விவேக விமோகாதி சாதனா சப்தங்களில் அப்யாசத்தை சொல்லுகிறது –
க்ரமத்தாலே அநவரத பாவநையும் சொல்லுகிறது –

உள்ளம் தூயராய் –
உக்தமான கர்ம யோகத்தாலும்
பகவத் குண அப்யாசத்தாலும்
மநஸா விசுத்தேந -என்றும் -மநஸா க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே
பரிசுத்த அந்த கரணராய்

 

சென்று சென்று-
த்ருவாநு ஸ்ம்ர்தி -என்றும் -நிதித்யாஸிதவ்ய -என்றும் -சொல்லுகிறபடி க்ரமத்தாலே
அநவரத பாவனை அளவும் சென்று –

தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய் அன்றி –
சூரிகள் அளவும் செல்ல சோபன க்ரமத்தாலே -பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி ரூபத்தாலே
உத்க்ர்ஷ்டராய் பெறுவது ஒழிய

எங்கள் செங்கண் மாலை –
சரணாகத வத்ஸலனான புண்டரீகாஷனை

எங்கள்-என்று மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார் என்னுதல் –
தம்மையே பற்றி வர்த்திக்கும் சரணாகத சமூஹத்தை கூட்டிக் கொள்கிறார் -என்னுதல்

செங்கண் மால் என்றது -ஜிதந்தே புண்டரீகாஷ-என்கிறபடியே
ருசியே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக -அத்தலையிலே விசேஷ கடாஷத்தாலே
சித்தி என்று தோற்றுகைக்காக

யாவர் காண வல்லரே —
நிர்ஹேதுக கடாஷத்தாலே எங்களுக்கு அவன் காட்ட நாங்கள் கண்டாப்  போலே
யாவர் காண வல்லர்

உம்பர் உம்பர் உம்பராய் -மேலே மேலே போய் அல்லது -தேவதேவர் -எங்கள் செங்கண் மால் -என்று கூட்டுவது –

—————————————————————————————-

76-பாட்டு –அவதாரிகை –

த்ரவ்ய அர்ஜநாதி க்லேசம் என்ன –
பர ஹிம்சாதி துரிதம் என்ன –
இவற்றை உடைத்தாய் -இந்த்ரிய வ்யாபார ரூபமான கர்ம யோகத்தில் காட்டில் –
இந்த்ரியோபாதி ரூபமான ஜ்ஞான யோகத்தில் பிரதமத்தில் இழியுமவர்கள் உடைய
துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-

பதவுரை

புல்

க்ஷுத்ரங்களான
புலன் வழி

சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை
அடைத்து

அடைத்து
அரக்கு இலச்சினை செய்து

(விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு
நன் புலன் வழி திறந்து

ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு
ஞானம்

ஞானமாகிய
நல்சுடர்

விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ

கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல்

எலும்பு வீடாகிய சரீரம்
என்கி

சிதிலமாகி
நெஞ்சு உருகி

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உள் கனிந்து

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி

பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது
ஆழியானை

திருவாழியைக் கையிலேந்தின பெருமானை

யாவர் காண வல்லர்  ?.

வியாக்யானம் –

புன்புல வழி அடைத்து –
ஷூத்ர விஷயங்களைப் பற்றி போருகிற இந்த்ரிய வ்யாபாரத்தை நிரோதித்து –

விஷயங்களுக்கு புல்லிமை யாவது –

அல்பமாய் -அஸ்த்ரிமாய் -அபோக்யமாய் -இருக்கையும்
வகுத்த விஷயத்திலே வைமுக்யத்தை பண்ணுகையும் –

தத் விஷயமான இந்த்ரிய பதத்தை நிரோதிக்கை யாவது –
விஷயங்களில் சாபலத்தை பண்ணி -சேதனனையும் தன் வழியில் ஆகர்ஷிக்கும்
இந்த்ரியங்களை ப்ரத்யாஹாரத்தாலே மீட்கை –

அரக்கு இலச்சினை செய்து –
சப்தாதி விஷயங்களினுடைய ஷூத்ரதையை அனுசந்தித்து -வாசநையும் -அனுவர்த்தியாத
படி -பலவான் இந்த்ரிய க்ராமோ வித்வாம் ஸம்பி கர்ஷதி -என்று ஜ்ஞானாதிகர்களையும்
வாசனை நலியும் இ றே -அதுவும் பிரவாதபடி பண்ணி –

நன் புல வழி திறந்து –
விலஷண விஷயத்தில் இந்த்ரிய மார்க்கத்தை பிரகாசிப்பித்தது
இவ்வாத்மாவுக்கு ப்ராப்தமாய் -ஸூ ஸூ கம் கர்த்தும் -என்கிறபடியே சாதனை வேளையே
தொடங்கி ரசிக்கும் பகவத் விஷயமே இந்த்ரியங்களுக்கு விஷயமாக்கி -என்கை

ஞான நற் சுடர் கொளீ இ –
நன்றாக ஞானப் பிரபையை மிகவும் உண்டாக்கி
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை -ஸ்வ ஜ்ஞானத்துக்கு விஷயமாம்படி பண்ணி –

என்பில் எள்கி –
எலும்பிலே தட்ட சரீரம் சிதிலமாய்

நெஞ்சு உருகி –
மனஸ் தத்வம் த்ரவீபூதமாய்
கீழ்ச் சொன்ன ஜ்ஞானம் பரபக்தி அவஸ்தாம் படி வாசனை பண்ணி

உள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி –
உள்ளே பக்வமாய் -பரம பக்தி ரூபேண ஆவிர்ப்பூதமான பிரேமத்தால் அல்லது பெற
விரகு இல்லை –

ஆழி யானை யாவர் காண வல்லரே —
எங்கள் செங்கண் மால் -என்று -கீழ்ச் சொன்ன ஸ்தானத்திலே –ஆழியானே –என்கிறார்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -என்கிறபடியே விஷயாந்தர
ப்ராவ்ண்ய ஹேதுவான பாவத்தையும் –
பகவத் வைமுக்ய ஹேதுவாய் இருந்துள்ள பாபங்களையும்
கையில் திருவாழி யாலே  இரு துண்டமாக வெட்டி –
கையும் திரு ஆழியும் ஆன சேர்த்தியைக் காட்டி
ஸ்வ விஷயமான பக்தியை வர்த்திப்பித்தவனை நான் கண்டாப்  போலே யாவர் காண வல்லர்

இந்த்ரியங்களுக்கு விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –
பகவத் விஷயமே விஷயமாக்கி –
தத் விஷய ஜ்ஞானம் பக்தி ரூபாபன்ன ஜ்ஞாநமாய்
அது பரபக்தியாதிகளாய் பழுத்தால் அல்லது சர்வேஸ்வரனை லபிக்க
விரகு இல்லை -ஆய்த்து –

—————————————————————————————

77-பாட்டு –

அவதாரிகை –

கர்ம ஜ்ஞானன்களை சஹ காரமாகக் கொண்டு ப்ரவர்த்தமான பக்தியாலே
பகவத் லாபத்தை சொல்லிற்று -கீழ் –

(கீழ் இரண்டை விட கொஞ்சம் லகுவாக உபாயம் இதில்
மேலும் மேலும் எளிதாக்கி மேல் பாசுரங்கள்)

சர்வ அந்தர்யாமியாய் -ஜகத் காரணபூதனான சர்வேஸ்வரனை அஷ்டாங்க ப்ரணாமம்
முன்னாக -திரு மந்த்ரத்தை கொண்டு பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கிறார் –

இப்பாட்டு முதலாக

இதிஹாச புராண ப்ரக்ரியையாலே பகவத் பஜனத்தை அருளிச் செய்கிறார்

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-

பதவுரை

எட்டும் எட்டும் எட்டும் ஆய்

இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும்
ஓர் ஏழும் ஏழும் ஆய்

ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற

த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற
ஆதி தேவனை

பரமபுருஷனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று

ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி
அவன் பெயர் எட்டு எழுத்தும்

அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன வல்லர்

பரமபதத்தை ஆளவல்லவர்களாவர்

வியாக்யானம்-

எட்டும் எட்டும் எட்டுமாய் –
சதுர் விம்சதி தத்வங்களுக்கும் ஆத்மாவாய் நின்று சத்தையை நோக்குமவன் –
இந்த சாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம பாவத்தாலே சொல்லுகிறது –

ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய் –
சப்த த்வீபங்களும் -அவற்றுக்கு தாரகமான சப்த குல பர்வந்தகளும்
அந்த த்வீபங்களுக்கு அவச் சேதகங்களான சப்த சமுத்ரங்களுமாய் –

அண்டாந்த வர்த்திகளான சகல லோகங்களுக்கும் உப லஷணம் –
ஸ்தல சரராயும் -ஜல சரராயும் -பர்வதேயருமான சேதனரை நினைக்கிறது –

எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற –
த்வாதச ஆதித்யர்களுக்கும் அந்தராத்மாவாய் நின்ற இது -ஆராத்ய தேவதைகளுக்கும் உப லஷணம் –

அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக்

வாதி தேவனை –
சூஷ்ம சித் அசித் வஸ்து சரீரனாயும்
ஸ்தூல சித் அசித் சரீர வஸ்து சரீரனாயும்
கார்ய காரணம் இரண்டுமாய்க் கொண்டு சர்வ சமாஸ்ரயணீயனானவனை

எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று
அஷ்டாங்க ப்ரணாமத்தை பண்ணி
அம்முகத்தாலே ஆஸ்ரயித்து நின்று பிரணாமத்துக்கு அஷ்டாங்கதை யாவது –
பக்ன அபிமாநியாய் விழுகையும்
மநோ புத்திகளுக்கு ஈச்வரனே விஷயம் ஆகையும்
பத த்வய கர த்வயங்களும் கூர்மவத் பூமியிலே பொருந்துகையும்-

மநோ புத்த்ய  அபிமாநேன ஸஹநயஸ்ய தராதல-

அவன் பெயர் எட்டெழுத்தும் ஓதுவார்கள் –
கீழ்ச் சொன்ன ஜகத் அந்தராத்ம பாவத்துக்கு வாசகமான மந்த்ராந்தந்தரங்களில் காட்டில்
திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் –

வல்லர் வானம் ஆளவே –
அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –
வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –
சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்
இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கை

ஆபோ நாரா இதி ப்ராக்தோ -என்றும்
நராஜ் ஜாதா நிதத்வாநி -என்றும் –
ஜகத் காரண வஸ்துவை நாராயணன் என்னக் கடவது இறே –

———————————————————————————-

78 -பாட்டு –அவதாரிகை –

உபாசனதுக்கு சுபாஸ்ரயம் வேண்டாவோ என்ன –
கார்ய ரூபமான ஜகத்தில் ஆஸ்ரித அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற ஷீராப்தி
நாதனை சுபாஸ்ரயமாகப் பற்றி –
மந்திர ரஹஅச்யத்தாலே முறை யறிந்து –
ஆஸ்ரயித்து –
இடைவிடாதே பிரேமத்துடன் இருக்குமவர்கள்
பரமபதத்தி ஆளுகை நிச்சயம் -என்கிறார் –

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-

பதவுரை

நீர்

திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
கிடந்த

கண் வளர்ந்தருள்கிற
நின்மலன்

அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய
நலம் கழல்

நன்மைபொருந்திய திருவடிகளை
ஆர்வமோடு

அன்புடன்
இறைஞ்சி நின்று

ஆஸ்ரயித்து
சோர்வு இல்லாத காதலால்

விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு
துடக்கு அது மனத்தர் ஆய்

விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய்

அவன் பெயர் எட்டு எழுத்தும்

வாரம் ஆக

இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன

பரமபதத்தை ஆள்வதற்கு
வல்லர்

ஸமர்த்தராவர்.

வியாக்யானம் –

சோர்விலாத காதலால்-
சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர்
ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே
தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை –

தொடக்கறா மனத்தராய் –
பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –

சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் –
ஸ்ம்ரதிலம் பேசர்வகரந்தீநாம் விபர மோஷ -என்கிற அளவைச் சொல்லுகிறது

நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் –
இப்படி பிரேமத்தை விளைக்கும் விலஷண விஷயமான சுபாஸ்ரயத்தை சொல்லுகிறது –

நீர் அராவணைக்கிடந்த –
ஷீராப்தியில் திரு வநந்த வாழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிற

இத்தால் -நீர் உறுத்தாமைக்கு அதன் மேல் திரு வநந்த வாழ்வானைப் படுக்கையாக
உடையவன் ஆகையாலே -சௌகுமார்யமும் -ஆஸ்ரித சம்ச்லேஷைக ஸ்வபாவத்வமும்
அர்தித்வ நிரபேஷமாக ஆஸ்ரித அனுக்ரஹத்தாலே கண் வளர்ந்து அருளுகையாலே
சௌலப்யாதிகளையும் சொல்லுகிறது –

நின்மலன் நலம் கழல் –
பஜன விரோதி பாபங்களைப் போக்கும் ஹேய ப்ரத்யநீகனுடைய ருசி ஜநகமான திருவடிகளை-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று –
பிரேமயுக்தராய்க் கொண்டு ஆஸ்ரயித்து நின்று -இத்தால்-
நாஸ்த்ய க்ர்தா க்ர்தேந -என்கிறபடியே -சம்ஸாரம் அநித்யம் -ஈஸ்வரன் நித்யன் -என்று-
ஆஸ்ரயிக்கும் அளவு அன்றிக்கே -நிரதிசய போக்யன் -என்கிற பிரேமத்தால் ஆஸ்ரயிக்கை –

அவன் பெயர் எட்டு எழுத்தும் –
ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –
ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் –
நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் –
பவான் நாராயணோ தேவ -என்றும் –
தர்மி  புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் -என்கை-

வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –
நமோ நாராயணா யேதி மந்தரைக சரணா வயம் -என்கிறபடியே
தன் நிஷ்டராய்க் கொண்டு சொல்லுமவர்கள் –
பரமபததுக்கு நிர்வாஹகராக வல்லர் -என்கிறார் –

நீர் அராவணைக் கிடந்த -நின்மலன் நலம் கழல் -ஆர்வமோடு இறைஞ்சி நின்று –
சோர்விலாத காதலால் -துடக்கறா மனத்தராய் -அவன் பெயர் எட்டு எழுத்தும் –
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்று அந்வயம் –

———————————————————————————–

79 பாடு –

அவதாரிகை –

ஸ்வேத த்வீப வாசிகளை ஒழிந்த சம்சாரிகளுக்கு அது நிலமோ என்ன –
அவதார கந்தமான ஷீராப்தியில் நின்றும் தன் மேன்மை பாராதே
தச ப்ராதுர்பாவத்தை பண்ணி சுலபனானவன் திருவடிகளிலே
அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் அடியான பக்தியை உடையவர்களுக்கு அல்லது
முக்தராக விரகு உண்டோ –என்கிறார்

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-

பதவுரை

பத்தினோடு பத்தும் ஆய்

பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய்

ஸப்த ஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய்
பத்து நால் திசை கண் நின்ற

பதினான்கு வகைப்பட்ட
நாடு

லோகங்களிலுள்ளவர்கள்
பெற்ற

பெறக் கூடிய
நன்மை ஆய்

நன்மைக்காக
பத்தின் ஆய தோற்றமோடு

தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து)
ஆற்றல் மிக்க

பொறுமையினாலே பூர்ணனான
ஓர் ஆதி பால்

எம்பெருமான் விஷயத்திலே
பக்தர் ஆமவர்க்கு அலாது

கதி யுடையவராயிருப் பவர்களுக்கன்றி (மற்றை யோர்க்கு)
முக்தி

மோக்ஷ புருஷார்த்தம்
முற்றல் ஆகுமே

பரி பக்வமாகுமோ?

வியாக்யானம்-

பத்தினோடு பத்துமாய் –
தச திக்குகளுக்கும் -அத் திக்குகளிலே வ்யவஸ்திதரான தசாத் யஷருக்கும் -நிர்வாஹகராய்

அவர்கள் ஆகிறார் –
இந்த்ராதி திக்பாலர்கள் என்றுமாம்
ஊர்த்தவ லோகங்களுக்கு மேல் எல்லையான சத்ய லோகத்துக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவும்
அதோ லோகத்துக்கு கீழ் எல்லையிலே தாரகனான அனந்தனும்

(இந்திரன், அக்னி தேவன், எமதருமன், வருண பகவான், நிருதி பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
1-கிழக்கு இந்திரன்.– சகல வளமும் நலமும் கிடைக்கப் பெறலாம். நோய் நொடியில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழலாம். தீராத நோயையும் தீர்த்து வைப்பார் இந்திரன்.
2-தென் கிழக்கு அக்னி தேவன்-அக்னி தேவனை வணங்கி வழிபட்டால், சகல தெய்வங்களின் அருளையும் பெறலாம். தனம், தானியம் பெருகும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.
3-எம தருமன். தென் திசைக்காவலன். –எமதருமனை வணங்கினால், எம பயம் விலகும். தீராத நோயும் தீரும். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கப் பெறலாம்.
4-வருண பகவான், மேற்குத் திசையின் நாயகன்–இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்
5-நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.
6-வட மேற்கு திசைக்குக் காவலன் வாயு பகவான்-இவரை வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், உடல் நலக் கோளாறுகள் நீங்கும்.
7-வடக்குத் திசையின் நாயகன்-குபேரன்-இவரை வழிபட்டால், குபேர யோகம் கிடைக்கும்-சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்
8-வட கிழக்கு திசையின் அதிபதி, நாயகன்… ஈசானன்-இவரை வழிபட்டு வந்தால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்)

ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய் –
அத்வதீயனான சப்த  ஸ்வரமும்

நாட்ய ரசம் ஒன்பதும்
அவை யாகிறன -இசைகள் ஏழும்

நிஷா தர்ஷப காந்தார ஷட்ஜ மத்யம தைவதா -பஞ்சமச் சேத்ய மீ சப்த -என்கிறபடியே-

ச்ர்ங்கார ஹாஸ்ய கருணா வீர ரௌத்ர பயா நகா
பீபத்சாத் புத சாந்தாச்ச நவ நாட்ய ரசாஸ் ச்ம்ர்தா -என்கிறபடியே நாட்ய ரசங்களும்

இவை சப்தாதி விஷயங்களுக்கும் உப லஷணம்

(இயற்கையாக மனதை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் ஒலியே ஸ்வரமாகும். சங்கீதத்திற்கு ஆதாரமாயுள்ளவை சப்த ஸ்வரங்கள் ஆகும். இவ் ஏழு ஸ்வரங்களும் அவற்றிற்குரிய பண்டைய தமிழிசைப் பெயர்களும், அவற்றிற்குரிய இயற்கையான விலங்கொலிகள் கிழே கொடுக்கப்பட்டன:

சட்ஜம் (ஸ) – குரல் – மயில்
ரிஷபம் (ரி) – துத்தம் – மாடு
காந்தாரம் (க) – கைக்கிளை – ஆடு
மத்யமம் (ம) – உழை – புறா
பஞ்சமம் (ப) – இளி – குயில்
தைவதம் (த) – விளரி – குதிரை
நிஷாதம் (நி) – தாரம் – யானை

சப்த சுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்தச் சுரங்களின் துணை சுரமாகின்றன. இவற்றைப் பிரகிருதி, விக்ருதி பேதங்கள் என்பார்கள். ஷட்ஜமம், பஞ்சமம் இரண்டும் பேதமில்லாதவை. மற்றைய ஐந்தும் பேதமுடையவை..)

(காதல் கருணை மகிழ்ச்சி ஹாஸ்யம் வீரம் குழப்பம் கோபம் பயம் ரௌத்ரம் சோகம் –
இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம்.)

இத்தால் -கீழ் சொன்ன தசாத் யஷரோடு
அவர்களுக்கு நிர்வாஹகரான சேதனரோடு வாசியற
எல்லார்க்கும் போக்யமான சப்தாதிகளுக்கும் நிர்வாஹகன் என்கை –

பத்து நான்கு திசைக் கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப் –
பதினாலு வகைப்பட்டு இருந்த லோகங்களுக்கு பிரயோஜனமான சப்தாதி விஷயங்கள்
எல்லாம் தானே யாகைக்காக -ஏஷா திக் -என்கிறபடியே –

திசை -என்று பிரகார வாசி –

பத்து நான்கு திசைக் கண் நின்ற நாடு -என்று –

பத்தினோடு பத்துமாய் –என்ற இடத்தை
அநுபாஷிக்கிறார் –

பெற்ற நன்மை -என்று –

ஏழினோடு ஓர் ஒன்பதாய் –
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் என்ற இடத்தை
அநுபாஷிக்கிறார் –

ஆய் –என்று ஆகைக்காக -என்றபடி –

உயிர் முதலா முற்றுமாய் –என்னக்-கடவது இறே –

சர்வ ரச -என்கிற தானே சேதனர்க்கு போக்யனாகைகாக என்கை

பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதியாய் –
தச ப்ராதுர்பாவத்தாலே ஆவிர்பவித்து
சம்சாரிகள் பண்ணும் பரிபவதை பொறுத்து
ரஷிக்கும் பூர்வஜன் பக்கலிலே

தோற்றம் ஆவது -அதீந்த்ரியனான தன்னை சஷூர் விஷயம் ஆக்குகை

ஆற்றல்-பொறை
பூர்வஜன் ஆகையாவது -சம்சாரிகளுக்கு ருசி பிறந்த வன்று -ஆஸ்ரயணீயரான தாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஏற்கவே அவதரித்து நிற்கை –

பத்தர் ஆமவர்க்கு அலாது-
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத -என்கிறபடியே அவன் பண்ணின
உபகாரத்தை உள்ளபடி அறிந்து அதிலே சக்தராய் இருக்குமவர்களுக்கு அல்லது –

முக்தி முற்றல் ஆகுமே —
மோஷ பலம் பக்குவமாகைக்கு விரகு இல்லை-
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி -என்கிறபடி

விரோதி நிவர்த்தி  பூர்வகமான பகவல் லாப முண்டாக விரகு இல்லை -என்கிறார் –

——————————————————————————————-

80 பாட்டு –

அவதாரிகை –

அவதார ரஹச்ய ஞானம் அடியான ப்ரேமம் மோஷ சாதனம் என்றது கீழ் –
இதில்

அவதார விசேஷமான க்ர்ஷ்ணனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தை
அநுவதித்து –அவன் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அல்லது நித்ய ஸூரிகளோடு
ஒரு கோவையாய் அநுபவிக்கைக்கு விரகு இல்லை -என்கிறார் –

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே –80-

பதவுரை

வாசி ஆகி

(கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு
நேசம் இன்றி வந்து

பக்தியற்றவனாய் வந்து
எதிந்த

எதிரிட்ட
தேனுகன்

தேநுகாஸுரனை
நாசம் ஆகி நான் உலப்ப

ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக
மேல் நிமிர்ந்த தோளின்

உயர்த் தூக்கப்பட்ட தோளாலே
நன்மை சேர் பணங்கனிக்கு வீசி

அழகிய பணம் பழங்களின் மேலே தூக்கி யெறிந்து
இல்லை ஆக்கினாய் கழற்கு

(அவ் வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு
ஆசை ஆமவர்க்கு அலால்

நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு
அமரர் ஆகல்

நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல்
ஆகுமே

கூடுமோ?

வியாக்யானம் –

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் –
கால்யவநாதிகளைப் போலே ஸ்வரூபேண வந்து தோற்றாமே
வாஜி (காவேரி கழுதை வடிவு )வேஷத்திலே வந்து தோற்றினான் ஆய்த்து -க்ருஷ்ணன் அவதாநம் பண்ணி
மேல் விழுகைக்காக –

நேசமின்றி வருகை யாவது –
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர -என்று
கிருஷ்ண சேஷ்டிதங்களாலே திர்யக்குகளும் ப்ரேம பரவசமாய் செல்லா  நிற்க –
துஷ் ப்ரக்ர்தி யாகையாலே அத் துறையிலே இழியாது ஒழிகை –

எதிர்ந்து வருகை யாவது –
ஆதரம் இல்லையானாலும் உபேஷகன் ஆகலாம் இறே -அதுவும் இன்றிக்கே பாதகனாய் வருகை

நாசமாகி நாளுலப்ப-
இப்படிப்பட்ட தேனுகனை ம்ர்த ப்ராயனாக்கி ஆயுஸ்ஸை முடிக்கைக்காக

நாசம் –துன்பம்

நன்மை சேர் பனம் கனிக்கு வீசி –
தர்சநீயமாய் பழுத்து நின்ற பனம் பழம் உதிரும்படி -பனைத் தலையிலே சுழற்றி எறிந்து –
க்ர்ஹீத்வா ப்ரமனே நைவ சோம்ப ரேகத ஜீவிதம்
தஸ்மின் நேவஸசி ஷேப தேனு கந்த்ர்ண ராஜ நி
ததா பலான்ய நேகா நிதா லாக்ரான் நிபதன்கர –
ப்ர்தி வ்யாம் பாதயாமாச மஹா வாதோகநா நிவ —ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்னக் கடவது இறே

மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு –
எதிரி அளவு அன்றிக்கே விஞ்சின தோள் வலியாலே அவனை அழியச் செய்த உன் திருவடிகளுக்கு
சங்கல்ப்பத்தாலே அழித்தல்
ஆயுதத்தாலே அழித்தல்
அன்றிக்கே-
கை தொட்டு தோள் வலியாலே அழியச் செய்தபடி

ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே —
உன்னுடைய விரோதி நிரசன சீலதயை அனுசந்தித்து
உன் பக்கலிலே ப்ரேமம் உடையாருக்கு அல்லது
நித்ய ஸூரிகளோடு ஸத்ர்சராய் தேவரீரை அனுபவிக்கப் போமோ -என்கிறார் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-268-277..

April 29, 2013

268-

ஸ்ரீ ராகவம் -ரத்ன தீபம் ஆஜானுபாஹும் -தசரதன் பெற்ற செல்வம் –
அரவிந்த தளாய தீஷம் -9 அடி உயர திரு மேனி ஸ்ரீ ராமன் –
அரக்கோணம்-திருவள்ளூர் -மார்க்கம் – செஞ்சி பானம் பாக்கம் -தாசரதி கல்யாண ராமர் சன்னதி
பானம் எய்து -பானம் பார்த்த பாக்கம் –
கருடன் சன்னதி -பலி பீடம் த்வஜ ஸ்தம்பம்
400 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்
ஸ்தல வருஷம் வேம்பு
மனத்துக்கு இனியான் –
97 சர்க்கம் –
லஷ்மணம் குரோதம் மூர்ச்சிதம் -தவறாக நினைத்து -விவேகம் இழந்து
ராமன் சமாதானப் படுத்துகிறான்
பரதன் சிறந்தவன்
எனது அன்பால் தான் வெல்ல முடியும்
என்னிடம் நாட்டை சமர்ப்பிக்க தான் வந்து  இருப்பான்
கிம் கரிஷ்யாமி ராஜ்ஜியம் -தந்தை சொல் பொய்யாக கூடாதே

உறவினரைக் கொன்று  நாட்டை ஆள்வதா
தர்மம் நடைப்படுதுவது தம்பிகளுக்காக தானே
உங்களுக்கு தீங்கு செய்து நாட்டை ஆள்வதில் என்ன பலன்
உனக்கோ சீதைக்கோ தசரதனுக்கோ பரதனுக்கோ நன்மை இன்றி
கூடி இருந்து குளிர வேண்டும்
பரதன் என்னை காண தான் வருகிறான்
தனியாக அவாக்ய அநாதர -பரம பதத்தில் –
பரதனுக்கு விருப்பம் இல்லாததை கூறாதே –
லஷ்மணன் எதிர் பார்க்காத ஸ்லோகம்
வெட்கி இருக்கிறான் லஷ்மணன் -ஏற்கனவே –
பாகவத அபசாரம் பொறுக்காத -சாட்டை அடி
நாட்டின் பேரில் உனக்கும் கண் இருக்கிறதா
உனக்கு விட்டு கொடுக்க பரதன் இடம் சொல்லி
அவனைக் கூட்டி காட்டில் போவேன்
அடியார் இடம் தப்பு செய்தால் லஷ்மனனையும் கூட பொறுக்க மாட்டானே
எண் சான் உடம்பு குறுகும்படி பேசி அவன் உணர வேண்டும் என்று

269-

ஆபதாம் -பூயோ பூயோ நமாம்யஹம்
மங்களங்கள் வழங்கி –
ஊரே ராமர் கோயில் என்ற பெயர் ஊரிலெ கோயில் உண்டு மற்ற இடங்களில்
அரக்கோணம் -செஞ்சி வானம் பாக்கம் அருகில்
9 அடி உயரம்
சீதா தேவி 7 அடி
லஷ்மணன் 8 அடி
ஆஜானுபாஹூ –
ஆஞ்சநேயர் 1 அடி –
சாளக்ராம திருமேனி
400 வருஷம் பழைய திருக்கோயில்
108 திவ்ய தேசம் 108 திரு நாமாவளி 108 அங்குலம் உயரம்
அயோத்யாவாசிகள் திருக் கோயில்கள் சென்று ஸ்ரீ ராமனுக்கு பல்லாண்டு இருக்க வேண்டிக் கொண்டபடி
நாம் ராமர் கோயிலில் தர்சிக்கிறோம்
97 சர்க்கம்
லஷ்மணனை சமாதானப் படுதினான் ராமன்
எல்லா தம்பிகளும் ஒன்றாக இருந்தால் பரதன் பெருமை விளங்காதே
அண்ணன் தம்பி இலக்கணம்
சுடு சொல் உனக்கும் நாட்டில் கண் இருந்தால் உனக்கு கொடுக்க சொல்லி அவனை காட்டுக்கு கூட்டிப் போகிறேன்
குத்தும் சொல் போலே பேச –
சுற்றி சுற்றி காத்து கைங்கர்யம் செய்தவன்
பாகவத அபசாரம் பொறுக்க மாட்டான்
எது அபசார சகஸ்ர -கூரத் ஆழ்வான் -ஆண்டு ஆண்டு காலமாக குற்றம் செய்த
ஹிரண்யன் மேல் கோபம் வராமல்
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய சிங்கப்பெருமான் சீர்மை

லஷ்மணன் வருந்தி
தந்தை கூட நம்மை பார்க்க வருகிறார் போலும் என்ன
ராமனும் ஏற்றுக் கொண்டு
ஸ்ரீ மான் -சீதை சுந்தரி சுகுமாரி காட்டு வாழ்வு தாங்க மாட்டாள் என்று வருகிறான்
வாயு வேக மனோ வேகம் வரும் குதிரைகள் வரக் கண்டான்
குதிரைகள் பின்னே பட்டது யானை சத்ருஜ்யனன்
பட்டது யானை சாமரம் இன்றி வர
மன்னன் இல்லையே கண்டதும் உள்ளம்தளர
மரத்தின் மேல் நின்று லஷ்மணன் பேச
ஒன்றரை யோஜனை தூரம் சேனை 15 மைல் கண்டு
பரதன் நிறுத்தி தானே சென்று சந்திக்க வர
98 சர்க்கம்
குகன் தொண்டர்கள் உடன் வேற வழி போக
கலால் நடந்து தவித்து பெருமாளை பார்க்க
பிராது விசாலாட்ஷி காணும் அளவு சாந்தி அடையாதே
சக்கரவர்த்தி சின்னங்கள் உடைய பாதங்களை தலையால் தாங்கும் வரை சாந்தி வராதே

270-

ஸ்ரீ ராமாய -சீதாயாம் பதயே நம
சிற்றூர் ராமர் கோயில் -தாசரதி கல்யாண ராமர் கோயில் செஞ்சி பானம் பாக்கம்
நின்ற திருக்கோலம்
உத்சவர் -சேவை -ஹனுமான் கை கூப்பி -நடுவில் கதை இல்லை
கதை சாய்த்து -அருகில் -மணிக்கட்டுக்கு அருகில்
அஞ்சலி கை கூப்பி கர்மங்கள் கழிக்க ஒரே பாணம்
98 சர்க்கம்
பிராதவ் சரணவ் தலையால் தாங்க பரதன் –
2-9-1-எம்மா வீட்டு திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்பு தலை மேல் சேர்த்து ஒல்லை –
அடியேன் வேண்டுவது ஈதே –
தொண் டன் என்று உறுதி படுத்த –
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறிப்பாய்
அதுவே பரதனும் வேண்டுகிறான் இங்கே குபேரன் நந்தவனம் வீறுபெற்று இருந்தது போல
-கிரி ராஜ் சித்ர கூடம் -கோவர்த்தனம் கிரி ராஜ் என்பர்
அது போல் ராமன் ஆனந்தமாக இருக்க –
சித்ர கூடம் –ஸ்ரீ ரெங்கம் போலே -அயோதியை -இலங்கை போகும் வழியில் தங்கியது போலே
சரபங்க அகஸ்தியர் ஆஸ்ரமம் -இயற்க்கை எழில் கொஞ்சும்
கடலை தாண்டியவன் ஆரவரிப்பது போலே பரதன் நெருங்கி
அண்ணனை காண
சுமந்த்ரன் சத்ருனன் கூட
ஒத்தை அடி பாதை கண்டான் –
பெருமாள் குளிர் காய வரட்டி பண்ணி லஷ்மணன் வைத்து இருக்கிறான்
வேள்வி புகையும் தெரிகிறது
ஹோம குண்டம் பார்த்து நெஞ்சு உருகி பரதன் –
பரண சாலை சடை முடி -கோல மூக்கும் கண்டு
பார்த்த பரதன் மயங்கி
தன்னால் தான் பெருமாளுக்கு இந்த பாடு கண்ணீர் பெருகி
மான் தோல் -மர உரி அணிந்து காய்கனிகள் உண்டு
ஆர்ய -சொல்
ராமன் ஓடி வந்து அள்ளி எடுத்து அணைக்க

271-

நம கோதண்ட ஹஸ்தாய ஆபத் நிவாரண –
மங்களங்களுக்கு எல்லாம் மங்களம்
திரு நாமம் கேட்டு ஈர்க்கப் படுகிறோம்
பரதன் ராமனை கண்டு அலுத்து அலற்றி –
கங்கணம் காப்பு -நாம் -இறைவனுக்கு காப்பு -மங்களா சாசனம்
விஸ்வாமித்ரர் ரஷா பந்தனம் -ராமன் இடது கையிலும் காலிலும் கட்டி
பருத்தி சேரி -தரிசிக்கிறோம் -குடவாசல் அருகில்
கோதண்ட ராமர் திருக் கோயில் -லஷ்மி அம்மையார் புனர் நிர்மாணம்
திரு சேறை தாயார் சார நாயகி திருவவதரித்த ஸ்தலம்
சார நாத பெருமாள் மாப்பிள்ளை -திரு மஞ்சனம் கண்டு அருளி கோலாகல உத்சவம்
காளிங்க நர்த்தன கண்ணன்
சுதர்சனர் சேவை
பாஸ்கர கோடி துல்யம் -துன்பங்கள் போக்கி கொடுப்பவர்
100 சர்க்கம் –
ஆஸ்ரமம் உள்ளே இருக்கும் ராமனை கண்டன்
சடை முடி -அருள் பொழியும் திருக் கோலம்
சுக போகத்தில் இருக்க வேண்டியவர்-உடம்பை வருத்தி -ஆர்ய
ஒரு வார்த்தை சொல்லி தரையில் விழுந்தான்
மேலே பேச மாட்டாமல் தவிக்க –
சுமந்த்ரன் முதலானோர் ராமனை வணங்கி கண்களில் கண்ணீர்
பரதனை மடியில் அமர்த்தி கொண்டான் ராமன்
பரதரம் பரதம் -ஆசை உடன் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து
தந்தை தனியாக விட்டு வந்தாயா
குசலம் விசாரிக்க
குல குரு வசிஷ்டர் எப்படி இருக்கிறார்
ஸு யஞ்ஞர்-சுகந்தா –
நாட்டை ஆளும் மன்னவன் இருக்கும் படி இருக்கிறாயா
யுவ ராஜன் பரதன் என்ற நினைவால்
அரசன் இருக்க வேண்டிய முறை அனைத்தும் விளக்கி
யார் மந்த்ரிகள் -சமமான அறிவு உண்மையே பேசும்
ரகஸ்ய ஆலோசனம் மந்திர ஆலோசனம் நன்கு செய்கிறாயா
கால அதிக்கிரமம் செய்கிறாயா
உள்ளம் தவிப்பு இன்றி

யார் உடன் ஆலோசனை செய்ய வேண்டுமோ அவர்கள் உடன் தான் செய்ய வேண்டும்
கீழ் உள்ள சிற்றரசர் எப்படி விஷயங்கள் அறிகிறார்கள்

272-

ஸ்ரீ ராம ராமேதி -சஹஸ்ரநாம சத் துல்யம் –
ராம பக்தி நிரம்பி -ஸ்ரீ ராம நவமி சித்தரை புனர்வசு திரு நட்ஷத்ரம் -திரு அவதாரம்
பன்னிரண்டு மாதங்கள் கௌசல்யை திரு வயிறு வாய்த்தவனே
ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திரு புட் குழி விஜய ராகவன்
ஏரி காத்த ராமன்
வல் வில்  ராமன் திரு வள்ளி யன்குடி
புள்ளம் பூதம் குடி
திருப்புல்லாணி தர்ப சயன பெருமாள்
ரஷை பந்தம் -பருத்தி சேரி ஸ்ரீ ராமன் –
ராமன் பரதன் இடம் கேள்விகள் -அரசன் இருக்கும் முறை விவரிக்கும்

100 சர்க்கம் –
பண்டிதன் கொண்டாடப்படுபவன்
ஆபத்தில் சகாயம் செய்வார்கள்
மேதாவி சூரன் சாமர்த்தின் பேச்சு வல்லமை கொண்ட மந்த்ரிகள்
நேர்மை விசுவாசம் உள்ளவர் சேர்த்து கொள்ள வேண்டும்
சேனாதி பத்தி மதி யூஹம் நேர்மை வீரன் சூரன் அன்பு மிக்கவன்
சேவை செய்பவருக்கு ஊதியம் ஒழுங்காக வழுவாமல் கொடுக்கிறாயா
தூதன் உள்ளூர் வாசி
18 உயர் பதவி குரு மந்த்ரி -மற்றவர் வேவு பார்க்க ஆள் வைத்து இருக்கிறாயா
கண்டதே காட்ஷி கொண்டதே கோலம் என்று இருப்பவரை சேர்த்து கொள்ளா தே
வலியவர் எளியவரை நலியாமல்
உழவர் வேலைக்கு உதவுகிறாயா
பெண்கள் மரியாதை
காடு மிருகங்கள் குறை இன்றி உள்ளனவா
நாட்டு மக்கள் நடுவில் போகிறாயா
மந்த்ரிகள் உன்னை மக்கள் இடம் பிரிக்காமல்
வரவு இரண்டு பங்கு செலவை விட உள்ளதா
நல்ல கார்யம் செலவு செய்கிறாயா
தேவதை பித்ரு அந்தணர் அதிதி செலவு
தண்டனை பார்த்து கொடுக்கிறாயா
விசாரணை பஷ பாதம் இன்றி நடக்கிறதா
வயோதிகர் சிறுவர் தானம் கொடுக்கிறாயா
புண்ய ஸ்தலங்கள் பேணி
அ றம் பொருள் இன்பம் வீடு –
பொருள் காமம் இன்றி அறம் வீடு மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருக்கிறாயா

273

ஸ்ரீ நிதிம் சத்வ பூத ஸூக்ருதம்அர்த்தித அனைத்தையும் வழங்கும் தேவ பெருமாள்
அவரே செல்வம் –
ராமனை வரதனாக வால்மீகி குறிப்பிடுகிறார்
ஹஸ்தி கிரி -வரம் ததாதி வரதன்
கரிய மாணிக்கம் கோதண்ட ராமர் கோயில் 11 நூற்றாண்டு
ராம பக்த தீஷிதர் மந்த்ரி –
வரதனும் ராமனும் சேவை
பெரிய புஷ்கரணி சூர்ய நாராயண புஷ்கரணி
1658 கும்பாபிஷேகம் செய்த கல்வெட்டு
100 சர்க்கம் 65 ஸ்லோகம் அரசன் 16 நல்ல செயல்கள் செய்வதை
16 தீட்ட செயல்கள் தவிர்ந்து இருப்பதை அருளுகிறான்
ஆஸ்திகம்
உண்மை
கோபம் இன்றி
கவன குறைவு இன்றி இருக்க
தீர்க்க -குறித்த நேரத்தில்
நல்லவர் சேர்க்கை
சோம்பல் இன்றி
புலன்கள் அடிமை கூடாது
மந்த்ரிகள் நல்லவர்
நாட்டுக்கு நன்மை செயல்கள் செயல்படுத்தி
ரகஸ்ய முடிவு காத்து
நன்மை செய்யு கார்யங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும்
குற்றம் கூறி கொண்டே இருக்காமல்
நிறைய பெயர்கள் இடம் ஒத்து போகாமல் இருந்தால் குற்றம் நம்மிடம் தானே
விட்டு கொடுத்து கார்யம் நடத்துபவனாக இருக்க வேண்டும்
படித்த வேதங்கள் பயன் படுத்தி
மனைவி மாண்டவி உனக்கு அன்புடன் ஆலோசனை சொல்கிறாளா
பெரியவர்கள் இடம் தர்ம சிந்தனை
இனிமை பகிர்ந்து கொண்டு இருக்கிறாயா
நிறைய நன்மை
குறைந்த தண்டனை
அரசு பட்டம் கட்டிக் கொள்ள வில்லையே
இறுதி கேள்வி
முன்னோர் செய்த மரபின் படி மாறாமல் இருக்கிறாயா
மேலையார் செய்வனகள்
நீ மாற்ற பார்க்கிறாய் சரி செய்ய வந்தேன் என்று சொல்ல  போகிறான் பரதன்

274-

ஸ்வஸ்தி ஹஸ்தகிரி –
காஞ்சி கருட சேவை -பிரசித்தம் –
கோதண்ட ராமர் வராத ராஜர் தனி விமானம்
அபய ஹஸ்தம் -பக்தாநாம் அனைத்தும் ஆபரணங்கள் சொத்துக்கள் திருமேனி அழகு அனைத்தும்
உத்சவம் -பக்தர்களுக்கு
அவன் நமக்கா -நாம் அவனுக்காக
உபய நாய்சிமார்
பெரும்தேவி தாயார் சேவை வரத வல்லப-
101 சர்க்கம் –
ராமன் கேள்வி 100 சர்க்கம்
முன்னோர் வழி
முறை தப்பாமல் கேட்டு -மூர்க்கர் ஆவார் -மா முனிகள் இப்படி இல்லாமல்
நாம் கண்டு பிடித்து செய்ய வேண்டும் -கேள்வி கேட்டு ஆராய்ந்து
எப்படி உள்ளது உறுதி பட கேட்க வேண்டும்
வேண்டாம் மறுக்க கேள்வி கேட்க கூடாது
பதில் கிட்டி சம்மதித்து நடக்க வேண்டும்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
செய்யாதன செய்யோம் -ஆண்டாள்
சான்றோர் படி நடக்கை வேண்டுமே
பரதன் இடம் ராமன் கேட்க
பிராதரம் -குரு -தாஸ்யம் –
மான் தோல் மர  உரி சடை முடி கொண்டு பரதன் இருக்க –
கேள்வி இருவருக்கும் பொருந்தும்
நாக்கு தழு தழுது பரதன் பேச
நான் அறிந்து சம்மதித்து தாயார் வரம் கேட்க்கவில்லை
ராமன் சங்கை பட வில்லையே
பிரசாதம் கர்த்தும் அர்ஹசி
நாட்டை சமர்ப்பிக்க வந்தேன்
பிராது சிஷ்ய தாஸ்யன் எப்படியாவது பார்த்து அருள் செய்

பிரசாதம் கர்த்தும் அர்ஹசி
சேனை உடன் வந்தேன்
யார் ஒருவருக்காவது மனம் மாற மாட்டாயா என்று
கைகளை கூப்பி
அணைத்து கொண்டு பேச
அதர்ம வழி போக கூடாதே
உன்னிடம் எந்த குற்றமும் இல்லையே
சிறு பிள்ளை போல் தாயை இகழாதே
காட்டில் வந்த இடம் நல்ல நன்மை
தயரதன் மாண்ட செய்தி இன்னும் ராமன் உள்ளம் உணரவில்லை
தந்தை கொடுத்த அரசை நீயே ஆள வேண்டும்
தந்தை இந்த்ரன் போலே
அரசன் போலே நடக்க வேண்டும் நீ

275-

வேத வேதே -சாஷாத் ராமாயணம்
மறை -கருத்துக்களை மறைத்து கூறும் வேதம்
நமக்கு உணர்த்த -ஸ்ரீ ராமாயணம் -அருளிச் செயல்கள் –
அவனே ஸ்வாமி -நாம் சேஷ பூதர்கள் –
அவனால் ரஷிகப்பட -பரதன் உணர்ந்து ராமன் திருவடிகளைப் பற்றி –
கோதண்ட ராமர் கோயில் கண்டவற்றால் தனதே உலகு
சீதை தாமரை காடு போலே -கடாஷம் வாழ்விக்கும்
வாய் புதைத்து விநய ஆஞ்சநேயர் –
ராம தூதர் சீதை கடாஷத்தால் ராம தாசர் ஆனார்
பதவி விட்டு அன்பு பாசம் தொண்டு
கண்ட மாணிக்கம் கோதண்ட ராமர் கோயில்
102 சர்க்கம் –
தந்தை மரிதத்தை விளக்கி
ராஜ தர்மத்தில் நான் இல்லையே முடி சூட்டிக் கொள்ளவில்லை
ஜ்யேஷ்ட பிள்ளை இருக்க -இஷ்வாகு குல தர்மம் மாற்றலாமா
மரபை மீரா ராமானுஜன் பரதன் விட மாட்டானே
வீறு கொண்டு ராமானுஜர் –
ராமா -நீ காட்டுக்கு எழுந்து அருளிய பின் தசரதன் பிராணனை விட்டு ஸ்வர்க்கம் அடைந்தான்
உத்திஷ்ட புருஷ வயாக்ரா
தண்ணீர் தர்ப்பணம் ஸ்ராத கார்யம் செய்
பரதன் சத்ருக்னன் செய்து முடித்தார்கள்
ராமனும் லஷ்மணனும் செய்ய வேண்டும்
மந்தாகினி நதி போக
கூற்று வாக்கியம் போலே சோகம் 103 சர்க்கம்
நினைவு இழந்து கீழே விழுந்தான் ராமன்
வஜ்ராயுதம் அடி பட்டது போலே
சீதை தண்ணீர் தெளித்து
கண்கள் குளமாக பேச தொடங்கினான்
அயோதியை திரும்பி வந்து என்ன செய்யப் போகிறேன்
தசரதன் இல்லா நாட்டுக்கு வந்து
பாக்கியம் இழந்தேன்
மூத்த மகன் பெயர் மட்டும்
ஈமச் சடங்கு செய்யாமல் இழந்தேன்

அவரால் அரசு கொடுக்கப்பட்டது பரதா நீ தான் ஆள வேண்டும் –
தாயார் ஈமச்சடங்கு எளிதில் கிட்டாது –
பெற்று வளர்த்து ஆளாக்கி –
துர் தசை யாருக்கும் கிட்ட கூடாது –
முன்னேற்றம் அங்கம் தாய் தந்தை கடன் ஆற்றுவது தானே
பித்ருக்கள் கார்யம் முக்கியம் –
ராமனே புலம்புகிறான் –
உன் மாமனார் இழந்தாய் உன் தந்தை இழந்தாய் என்கிறான் –

276-

ஆஞ்சநேய -பாரிஜாத -யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் –
தீய சக்திகள் ஒட்டி
வாயு புத்திரன் –
ஐந்திலே ஓன்று பெற்ற சீதை -பூமி புதல்வி காக்க
ஐந்திலே ஒன்றை ஆகாசம் தாவி
தண்ணீர் கடல் தாண்டி
அயலார் உஊரில்
நெருப்பை வைத்து
அளித்து காப்பான் –
சாந்த வெளி ஆஞ்சநேயர்
30 ஆண்டுகள் ராமன் உடன் சேவை சாதித்த பின்பு சாந்தமான சேவை
ஜெய வீர ஆஞ்சநேயர் கோதண்ட ராமர் திருக் கோயில்
1 acre ஆல மரம் சேனை முழுவதும் தங்க விசாலமான மரம்
உக்ர ஆஞ்சநேயர் 1950-1980 வரை
அப்புறம் சீதா ராமர் பிரதிஷ்டை சாந்தமாக ஆனாராம்
சாந்த வெளி
வடக்கே நோக்கி திரு முக கண்டலம்
இடது திருக்கை அபய ஹஸ்தம்
வால் மேல் வரை
சிவன் சனி அருள் பெற்ற
தேங்காய் கட்டுவது பிரபலம்
புத்திர பாக்கியம் பெறுகிறார்கள்
பரதன் -மந்தாகினி நதிக்கு ராமனை கூட்டிப் போக
தந்தை மரித்தது உணர்ந்து
லஷ்மணா நீ தந்தையை இழந்தாய்
லஷ்மணன் அனை த்து உறவாக இருப்பதால் -தந்தை மரித்த எண்ணம் இல்லையே அவனுக்கு
சீதை துக்கித்து அழ
ராமன் தேற்றி
தன்  நீரால் ரல் பிண்ட பிரதானம் உதகம் தண்ணீர் பிண்டம்
காட்டு கோதுமை இங்குளி கொண்டு பிண்டம்

சீதை முன்னே நடுவில் இலக்குவன் பின்பு ராமன் நடந்து பிண்ட பிரதானம்
ராம் காட் -மந்தாகினி நதி
நீராடி தெற்கு நோக்கி வேண்டிக் கொண்டு தந்தை
அரிசி சோறு சமைத்து பிண்டம் கொடுக்க முடியாமல்
தெய்வம் தொண்டன் உண்பதையே விரும்பும்
மனிதன் உண்பதையே வணங்கப் படும் பெருமாளுக்கு
ஆச்சார்யர்களுக்கு பிடித்தவற்றை சமர்ப்பிக்க வேண்டும்
தந்தை தானே பெருமாளுக்கு தெய்வம் போலே
அழுகை ஒலி கேட்டு சேனை
ராமன் பரதன் சந்திப்பு அறிந்து கிட்டே வந்தார்கள்

277-

ராமஸ்ய -சீதா பதி
ராமோ ராஜ
ராமே
ராமாய தஸ்மை நம
வேற்றுமை உருபுகள் கொண்டு ராமனை வணங்குவது
அரக்கர்களை முடித்த சீதா பத்தி அரசர்களுக்கு அரசன் வணங்குவோம்
தாசனை சம்சார சாகரம் தாண்டி விக வேண்டும்
துதிப்பதை ஏற்று கொள்ளும் பெருமை உண்டே ஸ்ரீ ராமனுக்கு
மக்கள் கதறலை கேட்டு அருகில் போக
சாந்த வெளி திருக்கோயில்
இயற்கை வாய்ப்பு ஆல மரம் அடியில்
ராமன் சீதை லஷ்மணன் ஆஞ்சநேயர் –
பஞ்ச ஆயுதனம் வடக்கில்
கருப்பு வெளுப்பு ராமன் பஞ்சவடி சேவை
சிரித்த திரு முக மண்டலம்
வில்லின் நுனி நாகம்
அம்பை கீழ் நோக்கி -சண்டை முடிந்து விஜய ராமன் திருக் கோலம்
நேர் கொண்ட நிமிர்ந்த பார்வை ஸ்ரீ ராமன்
மக்கள் -கண்டு கைகேயி மந்தரை ஏசி கொண்டே வர
கட்டி தழுவி அழ
அயோத்யா வாசிகள்
104 சர்க்கம்
தாய் மார்கள் சந்திக்க
கௌசல்யை சுமத்ரை வேதாந்த அறிவு படைத்தவள் கூட வர
படித்துறை -லஷ்மணன் கட்டி இருக்கிறான் –
கைங்கர்யம் செய்ய பாக்கியம்
ஜல தர்ப்பணம் செய்த இடம் வந்தார்கள்
துக்கம் -அழுகை பீரிட்டு
மனிதன் உண்பதையே பித்ருக்களுக்கு கொடுக்க வேண்டும் சுமத்ரை சொல்ல
தனி ஒருவனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தை அழித்து விடுவோம்
என்று இருந்த தசரதனுக்கு கோதுமை பிண்டமா
பத்து திக்குகளிலும் ரதம் செலுத்தும் திறன் உள்ளவன்
சுமத்ரை லஷ்மணனை கண்டு பெருமிதம் அடைய
இனிய கடமை என்ற நினைவால்
காட்டில் இருந்தாலும் கைங்கர்ய ஸ்ரீ உடையவனாக இருந்தானே
சீதை கண்டு கௌசல்யை மிகவும் வருந்த
வசிஷ்டர் திருவடிகளை வணங்கினார்கள் ராமன் லஷ்மணன் சீதை மூவரும்

பரதன் அரசை எப்படி சமர்ப்பிக்க போகிறான் எதிர்பார்த்து இருக்கிறார்கள்

———————————————————————————————————————————————————————–

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருச்சந்த விருத்தம் -61-70-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 29, 2013

61 -பாட்டு –

அவதாரிகை –
இப்படி போக ஸ்தானம் ஆகையாலே ஆராவமுத  ஆழ்வார் திருவடிகளில் தாம்
அனுபவிக்க இழிந்த இடத்தில் –
வாய் திறத்தல் -அணைத்தல் -செய்யாதே –
ஒரு படியே கண் வளர்ந்து அருளக் காண்கையாலே
ஸூகுமாரமான இவ்வடிவைக் கொண்டு த்ரைவிக்ரமாதி சேஷ்டிதங்களைப்
பண்ணுகையாலே -திருமேனி நொந்து கண் வளர்ந்து அருளுகிறாராக
தம்முடைய பரிவாலே அதிசங்கித்து
என் பயம் கெடும்படி ஒன்றை நிர்ணயித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்கிறார்
இது ஒழிய -ப்ராங்ந்யாயத்தாலே -அர்ச்சாவதார சங்கல்பம் என்ன ஒண்ணாது இறே -இவர்க்கு –

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

பதவுரை

விலங்கு

நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற
மால் வரை

பெருப்பெருத்த மலைகளையும்
கரம்

பாலைநிலம் முதலிய அருவழிகளையும்
கடந்த

(வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற
கால் பரந்த

விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய
காவிரி

திருக்காவேரி நதியினுடைய
கூரை

கூரைமீது
குடந்தையும்

திருக்குடந்தையிலே
கிடந்த ஆறு

திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது
நடந்த கால்கள் நொந்தவோ

உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?)
ஞாலம்

பூமிப்பிராட்டியானவள்
நடுங்க

(பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து)
ஏனம் ஆய்

மஹாவராஹமூர்த்தியாகி
இடந்த

அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த
மெய்

திருமேனி
குலுங்கவோ?

ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?)
கோனே

கோவனே!
எழுந்திருந்து போ

(எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க;
வாழி

இக்கிடையழகு என்றும் வாழ்க.

வியாக்யானம் –

நடந்த கால்கள் நொந்தவோ
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்கிறபடியே
ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு திரு உலகு அளந்த இது பொறாமே நொந்து
கண் வளர்ந்து அருளுகிறதோ –

சக்கரவத்தி திருமகனாய்  காட்டிலும் மலையிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
திரிந்த வது பொறாமே நொந்து கண் வளர்ந்து அருளுகிறதோ –

எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ -என்று -சௌகுமார்யத்தை அறியுமவர்கள்
கூப்பிடும்படியாய் இ றே இருப்பது –
நடந்து பொறாமே கண் வளர்ந்து அருளுகிற தாகில் -நான் திருவடிகளைப் பிடிக்க –

நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ –
அன்றிக்கே –
பூமிக்கு அபிமானியான பிராட்டி -பாதாளகதையாய் தன்னுடைய உத்தரணத்துக்கு ஒரு
வழி காணாதே நின்று நடுங்குகிற தசையிலே -பஞ்சாசத்கோடி விஸ்தீர்ணையான பூமியை
மஹா வராஹமாய் -அண்ட புத்தியிலே புக்கு –அதுவாகில் நான் திரு மேனியைப் பிடிக்க –

விலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரி கரை-
நீர் வர ஒண்ணாதபடி இரு விலங்கான பெரிய மலைகளையும் சுரங்களையும் கடந்த
நீரோடு கால் பரந்து வருகிற காவிரிக் கரையிலே

சுரம் -காடும் அரு நெறியும்

இத்தால் -ஆராவமுத ஆழ்வார் உடைய சௌகுமார்யத்துக்கு அநுகூலமாக சிசுரோபசாரம்
பண்ணுகைக்கு -காவிரி மலை என்ன -அரு நெறி என்ன -இவற்றைக் கடந்து தன் அபிநிவேசம்
தோற்றப் பரந்து வந்த படியைச் சொல்லுகிறது

குடந்தையுள் கிடந்தவாறு –
காவிரி அடிமை செய்ய திருக் குடந்தையிலே ச்ரமம் தோற்ற கண் வளர்ந்து அருளுகிற படியை
காவிரி சிசுரோபசாரம் பண்ணக் காண்கையாலும்

திரு வெக்கா கிடையில் -சாயாவாஸ த்வம் அநுகச்சேத் -என்கிறபடியே தொடர்ந்து போரக்
காண்கையாலும்

கோயிலிலும் -உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் -என்று
தன்  அபிமதம் பெறுகையாலும்

திருக் குடந்தையிலே முகம் தாராதே கண் வளர்ந்து அருளுகைக்கு ஹேது ச்ரமம் என்று
இருக்கிறார் –

ஆராவமுத ஆழ்வாரும்- இவருடைய பரிவின் எல்லையை அனுபவிக்கைக்காவும் –
படுக்கை வாய்ப்பாலும் -கண் வளர்ந்து அருளுகிறார்

எழுந்து இருந்து பேசு-
இதுக்கு ஹேதுவை -கண் வளர்ந்து அருளா நிற்க -அருளிச் செய்ய ஒண்ணாது
என் பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும் –

எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் –
அருளிச் செய்யும் பொழுது ஸ்வரத்தாலும் –
எனக்கு பயம் கெட வேணும்

வாழி –
அப்படி அருளிச் செய்யாமையாலே -ஆயுஷ்மான் -என்னுமா போலே -ஒரு தீங்கு
இன்றிக்கே கண் வளர்ந்து அருளுகிற இவ்வழகு நித்யமாய் செல்ல வேணும் என்று மங்களா
சாசனம் பண்ணுகிறார் –

கேசனே —
கேசவ சப்தமாய்  கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்

இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

——————————————————————————————–

62 -பாட்டு –

அவதாரிகை –
திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின இதுக்கு ஹேது நிச்சயிக்க மாட்டாதே பீதர்
ஆனவருக்கு –ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தோடே –
திருக் குறுங்குடியிலே நின்று அருளின படியை காட்டக் கண்டு தரித்து –
நம்பி உடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -முரட்டு ஹிரண்யனை -அழியச் செய்தாய்
என்பது உன்னையே என்று விஸ்மிதர் ஆகிறார் –

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே –-62-

பதவுரை

கரண்டம் ஆடு பொய்கையுள்

நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே
கரு பனை பெரு பழம்

கரிய பெரிய பனம்பழங்களானவை
புரண்டு வீழ

விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின)
வாளை

மீன்கள்
பாய்

துள்ளியோடி யொனிக்கின்ற
குறுங்குடி

திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற
நெடுந்தகாய்

மஹாதுபாவனே!
திரண்ட தோள்

திரண்டதோள்களையுடையவனான
இரணியன்

ஹிரண்யனுடைய
சினம்கொள் ஆகம் ஒன்றை

மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை
இரண்டு கூறு செய்து

இருபிளவாகப் பிளந்து
உகந்த

மகிழ்ந்த
சிங்கம் என்பது

நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது
உன்னையே

உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.)

வியாக்யானம் –

கரண்ட மித்யாதி –
நீர்க் காக்கை சஞ்சரிக்கும் பொய்கையிலே -பனையினுடைய கறுத்த பெரிய பழம்
அதினின்றும் விழுந்து -புரண்டு நீரிலே விழ -அவற்றை நீர்க் காக்கையாக கருதி
வாளைகள் அஞ்சிப் பாயா நின்ற திருக் குருங்குடியிலே –
அழகும் சௌகுமார்யமும் சீலமும் மேன்மையும் -ஆகிற
இஸ் ஸ்வபாவங்கள் குறைவற்று இருக்கிற மஹா ப்ரபாவனே

கரண்டம் -நீர்க் காக்கை

ஆடுகை -நடையாடுதல் -என்னுதல் -முழுகுதல் -என்னுதல்

தகை -இயல்வு

போலியைக் கண்டு வாளையானது அதி சங்கை பண்ணுகிற இது
அத்தேசத்தின் பதார்த்தங்கள் நம்பி பக்கல் அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறபடிக்கு
ஸூசகமாய் இருக்கிறது

திரண்ட தோள் இரணியன்
திரட்சி பெற்ற தோளை உடைய ஹிரண்யன்
அவன் வலியை கோட் சொல்லித் தருகிற தோள் -என்கை

அதவா
தேவர்கள் உடைய வலி யடங்க திரண்ட தோள் என்னுமாம் –

இந்த்ரத்வ மகரோத் தைத்ய -இத்யாதி –

சினம் கொள் ஆகம் –
நெஞ்சில் க்ரோதம் வடிவிலே தோற்றி இருக்கிற படி -சினம் மிக்க வடிவு
ஒன்றையும் இரண்டு கூறு செய்து –
இஸ் ஸூகுமாரமான வடிவைக் கொண்டு அத்வதீயனான ஹிரண்யன் சரீரத்தை இரண்டு கூறாக பிளந்து

உகந்த சிங்கம் என்பது உன்னையே –
சிறுக்கன் உடைய விரோதி போகப் பெற்றோம் என்று உகந்த நர சிம்ஹமாக பிரமாணங்கள்
சொல்லுவது அத்யந்த ஸூகுமாரமான உன்னையே

உக்ரம் வீரம் — ம்ர்த்த்யும்ர்த்த்யும் -என்று சொல்லுவது உன்னையே

க்வ் யவன உந்முகீ பூத ஸூ குமார தநுர் ஹரி –
க்வ வஜ்ர கடிநா போக சரீரோயம் மஹா ஸூர -என்கிறபடியே
உன் சௌகுமார்யாம் கண்டபடிக்கு அவ்வபதாநம் அநுபபன்னம் என்று கருத்து –

சர்வாதிகனாய் அத்யந்த ஸூகுமாரமான அவன் –விமுகரான சம்சாரிகள் நடுவே
திருக் குருங்குடியிலே வந்து தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்க நிற்கிற நிலை யாய்த்து

அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்
இவ் வாழ்வாருக்கு நம்பி உடைய சௌகுமார்யத்தையே அனுசந்திகைக்கும் ஹேது 

——————————————————————————————

63-பாட்டு –

அவதாரிகை –
தேவரீர் சௌகுமார்யத்தை பாராதே ஸ்ரீ ப்ரஹலாதன் பக்கல் வாத்சல்யத்தால் ப்ரேரிதராய்
ஹிரண்யனை அழியச் செய்யலாம் –
விமுகரான சம்சாரிகளுடைய ஆபிமுக்யத்தை அபேஷித்து
உன் மேன்மையைப் பாராதே –
கோயில்களிலே நிற்பது -இருப்பது -கிடப்பது -ஆகிற இது
என்ன நீர்மை என்று ஈடுபடுகிறார் –

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-

பதவுரை

நன்று இருந்து

(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து
யோகம் நீதி

யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள்

ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள்

ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து

ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும்

திருவூரகத்திலும்
வெஃகனை

திருவெஃகாவிலும்
தீ வினைகள் தீர்த்த

(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின
தேவ தேவனே!

தேவாதி தேவனே!
குன்று இருந்த நீடு மாடம்

மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய
பாடகத்தும்

திருப்பாடகத்திலும்
இருந்து நின்று கிடந்தது

(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது
என்ன நீர்மை

என்ன ஸௌஹார்த்தமோ!

வியாக்யானம் –

நன்று இருந்து –
சேலாஜி ந குசோத்தரம் ஸ்திர மாஸநம் சு சௌ தேச ப்ரதிஷ்டாப்ய -என்கிறபடியே
சுத்தமான தேசத்திலே குசாஜிந சேலோத்தமான ஆசநத்தை இட்டு -அதிலே ஏகாக்ர சித்தனாய்
இருந்து -ஆஸிநஸ் சம்பவாத் -இத்யாதி –

யோக நீதி நண்ணுவார்கள் –
யோகமாகிற உபாயத்தாலே உன்னை லபிக்க இருக்கிறவர்கள்

நீதி -வழி

சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான உன் மேன்மை பாராதே
அவர்கள் உடைய ஹ்ர்தயத்திலே சென்று சுபாஸ்ரயமாகக் கொண்டு
அநாதிகாலம் விஷயாந்தர ப்ரவணமாயப் போந்த ஹ்ர்தயம் என்று குத்ஸியாதே
ஆசன பலத்தாலே ஜெயிப்பாரைப்  போலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்து –

ஆந்தரமாயும் பாஹ்யமாயும் இருந்துள்ள அனுபவ விரோதிகளான துக்கங்களைப் போக்கும்
ஸ்வபாவத்தை உடையவனே அவர்கள் ஹ்ர்தயத்தில் செல்லுகைக்கும் –

நெடுநாள் விஷயாந்தர ப்ரவணமான ஹ்ர்த்யம் என்று குத்ஸியாதே அதிலே
நல் தரிக்க இருக்கையும் –

ஸ்வ ப்ராப்தி விரோதிகளான -அவித்யா கர்ம வாசநாதிகளை போக்கையும்

தேவரீருக்கே பரம் இறே -யோகோ யோக விதான் நேதா -என்னக் கடவது இறே –

ஸாதநாந்தர நிஷ்டர் என்று பாராதே -அநந்ய பிரயோஜனர் என்கிற
இவ்வளவே பார்த்து -அவர்கள் உடைய ஹ்ர்தயத்திலே சென்று -உன்னைப் பெறுகைக்கு
க்ர்ஷி பண்ணின -இவ் ஔதார்யம் பொறாமே -உன் பக்கல் த்வேஷம் பண்ணி இருக்கிற
சம்சாரிகள் திறத்திலே பண்ணின இவை என்ன நீர்மை என்கிறார் -மேல் –

குன்றிருந்த -இத்யாதி –
மலைகள் சேர்ந்து இருந்தால் போல் ஓங்கின மாடங்களை உடைய திருப் பாடகத்திலும்
அப்படியே இருந்துள்ள திரு ஊரகத்திலும் –
முகம் காட்டுவார் உண்டோ -என்று திரு ஊரகத்தில் –நின்று அருளியும் 

ஒருத்தரையும் கண்டிலோம் -என்று சோம்பாதே திருப் பாடகத்திலே இருந்து அருளியும்-

அவ்விடத்திலும் ஆதரிப்பார் இல்லாமையாலே -ருசி பிறந்த வன்று கிடை அழகைக் கண்டு
ஆதரிக்கிறார்கள் என்று திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளியும்
இப்படி செய்து அருளினே இது என்ன நீர்மை -என்கிறார்

உன்னைப் பிரிய மாட்டாதே -நித்ய ஸூரிகளுக்கும் நித்ய அனுபவ விஷயமாகலாம்
உன் வாசி அறிந்தார்
உன்னை நோக்கோம் என்று இருந்த சம்சாரிகள் உடைய உகப்பை ஆசைப்பட்டு
வளைப்பு கிடக்கிற இது என்ன நீர்மை -என்கிறார்

————————————————————————————-

64 -பாட்டு –அவதாரிகை –

கீழ்ச் சொன்ன நீர்மையை உடையவன் -எனக்கு ருசி ஜனகன் ஆகைக்காக
திரு ஊரகம் தொடக்கமான திருப்பதிகளில் வர்த்தித்து –
ருசி பிறந்த பின்பு என் பக்கல் அதி வ்யாமோஹத்தைப் பண்ணுகையாலே
கீழ்ச் சொன்ன நீர்மை பலித்தது என் பக்கலில் -என்கிறார் –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்தபின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

வியாக்யானம் –
நின்றது எந்தை ஊரகத்து –
த்ரைவிக்ரமம் பண்ணின தூளி தாநம் தோற்ற திரு ஊரகத்திலே  நின்று அருளிற்று –
எனக்கு ஸ்வாமி என்று நான் இசைகைக்காக –
நிலை அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து
த்ரிவிக்ரம அபதாநத்தை பிரகாசிப்பித்தது -முறையை உணர்த்துகைக்காக –என்கை

அதவா –
எனக்கு இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் -வந்து நின்று அருளுகிறது –
உடையவன் உடைமையை இழக்க மாட்டாமையாலே நின்று அருளுகின்றான் என்றுமாம் –

இருந்தது எந்தை பாடகத்து –
அந்த நிலை அழகிலும் எனக்கு ஆபிமுக்யம் காணப் பெறாமையாலே –
இருப்பழகைக் காட்டி -குணைர் தாஸ்யம் உபாகதா -என்கிறபடியே –
நீ எனக்கு ஸ்வாமி -நான் அடியேன் -என்னும் முறை உணருகைகாக -திருப்பாடகத்திலே
எழுந்து அருளினான் –

அன்று வெக்கணைக் கிடந்தது –
கீழ்ச் சொன்ன இரண்டு திருப்பதிகளிலும் எனக்கு ருசி பிறவாத அன்றாக
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளிற்றும் –
அத்திருப்பதிகளை ஆஸ்ரயித்த காலத்துக்கு அவதி என் என்னில் –

என்னிலாத முன்னெலாம் –
நான் இல்லாத முற்காலம் எல்லாம் –
நான் அபிமுகீபவிப்பதற்குமுன்பு எல்லாம் -என்னாகி -நானாகி -என்னக் கடவது இறே

உபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம்
ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –

என்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில்
கடாஷம் தனக்கு தேட்டமாவதே –

அக்காலத்தில் நீர் செய்தது என் என்னில் –
அன்று நான் பிறந்திலேன் –
நான் திருவடிகளில் தலை சாய்க்கைகாக ஸ்ர்ஷ்டி காலத்தில் நாம ரூபங்களை தந்து அருள –
விஷயாந்தர ப்ராவண்யத்தால் அனுபவிக்கப் பெற்றிலேன் –

நான் பிறந்திலேன் –
ஆத்மாவுக்கு ஜன்மம் ஆகிறது ஜ்ஞான லாபம் ஆகையாலே அஜ்ஞனனாய்ப் போனேன்

அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் -அஸநநேவஸ பவதி -என்னக் கடவது இறே

கரீயான் ப்ரஹ்மத பிதா –

பிறந்த பின்பு மறந்திலேன் –
அவன் க்ர்ஷியாக எனக்கு அறிவு பிறந்தபின் மறந்து அறியேன் –

மத்தஸ் ஸ்ம்ர்திர் ஜ்ஞாந மபோஹநஞ்ச –
அவனடியாக பிறந்த ஜ்ஞானம் –மதி நலம் -என்கிறபடியே -பக்தி ரூபா பன்ன ஞானம்
ஆகையாலே -விஸ்ம்ர்தி பிரசங்கம் இல்லை இறே

ஆக -தன்னுடைய சத்பாவ அசத் பாவங்கள் ஆகிறன-பகவத் விஷயத்தில் ருசி பிறக்கையும்
அது அன்றிக்கே ஒழிகையும்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –

எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின
செயல்கள் எல்லாவற்றையும்  -திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய
ஹ்ர்தயத்தில் பண்ணி  அருளா நின்றான்-

முதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள
என்னையும் உளனாம்படி பண்ணி -தன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து –
அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து

சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த -என்றார் கீழ்-

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -என்று அனுபவத்தைச் சொன்னார் இங்கு –

இவை இரண்டாலும் –
சாதநாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தம்முடைய அதிகாரத்துக்கு உண்டான ஏற்றத்தை
அருளிச் செய்து விட்டார் ஆய்த்து –

———————————————————————————

65- பாட்டு –அவதாரிகை –
தம் திறத்தில் ஈஸ்வரன் பண்ணின உபகாரமானது தம் திரு உள்ளத்தில் நின்றும் போராமையாலே
பின்னும் அதிலே கால் தாழ்ந்து -திருமலையில் நிலையும் -பரம பதத்தில் இருப்பும் –
ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளின இதுவும் எனக்குத் தன் திருவடிகளில் ருசி
பிறவாத காலம் இறே -என்கிறார்

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்த பின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

வியாக்யானம் –

நிற்பதும் ஓர் வெற்பகத்து –
அத்வதீயமான திருமலையிலே நிற்பதுவும்-
திருமலைக்கு அத்வதீயம் -கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தார்க்கு
முகம் கொடுக்கும் நீர்மைக்கு எல்லை நிலமாய் இருக்கை –

ஸ்தாவரங்களுக்கும் திரியக்குகளுக்கும் தத் ப்ராப்யரான வேடர்க்கும் திருவடிகளிலே
ருசியைப் பிறப்பிக்கைக்கு நிற்கிற நிலை -இறே

இருப்பும்  விண் –
ருசி பிறந்தாரை அஸ்பஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளோபாதி முகம் கொடுத்து
அனுபவிகைக்காக எழுந்து அருளி இருக்கிற பரம பதத்தில் இருப்பும் –

கிடப்பதும் நற்  பெரும் திரைக் கடலுள் –
தெளிந்து குளிர்ந்து இருக்கிற திரைகளை உடைத்தாய் –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே விஸ்த்ர்தமாக
கண் வளர்ந்து அருளுகைக்கு வேண்டும் பரப்பை உடைத்தாய்
திரையாகிற கை களாலே திருவடிகளை வருட ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளுவதும் –

நான் இலாத முன்னெலாம்-
தன்னோடு உண்டான முறையை அறியாதே நான் அசத் சமனாய் இருந்த காலம் எல்லாம்
இப்படி என் பக்கலிலே அத்ய அபிநிவேசத்தை பண்ணுகிறவன் சர்வ ப்ரகார பரி பூரணன்
கிடீர் என்கிறது மேல் –

அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்-
ஆச்சர்யமான ஜ்ஞான சக்தியாதி குண பரி பூர்ணனாய்
அநந்த சாயி யாகையாலே சர்வேஸ்வரனாய்
ஜகத் காரண பூதனாய்
உபய விபூதி நாதத்வத்துக்கும் அவ்வருகான ஸ்ரீ ய பதித்வத்தையும்
உடையவன் கிடீர் -என்னுதல்

என்னைப் பெற்ற பின்பு அவனுக்கு இவை எல்லாம் நிறம் பெற்றது -என்னுதல்

நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் –
என்கிறபடியே அத் திருப்பதிகளை காற்கடைக் கொண்டு அவ் வவ் இடங்களில்
நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மை எல்லாம் என் நெஞ்சிலே யாய்த்து –

நிகிந அக்ரேசரனான என்னை -விஷயீ கரித்தவாறே -திருமலையில் நிலையும் மாறி
என் நெஞ்சில் நின்று அருளினான் –

தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –

தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின
படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில்
கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –

இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது
இல்லை -என்கிறார் –

————————————————————————————

66-பாட்டு –

அவதாரிகை –

பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-
சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய்
இருக்க -பகவத் சமாஸ்ரயணம் அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –
சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர்
ஆகிறார்

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

பதவுரை

பிறந்தானென்கிற க்ஷணத்திலே செத்துப்போவதோ
நின்று சாதல்

சிலகாலமிருந்து செத்துப் போவதோ
அன்றி

இவ்விரண்டத்தொன்று தவிர
யாரும்

மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும்
வையகத்து

இந்நிலத்திலே
ஒன்றி நின்று

சிரஞ்சீவியாயிருந்து
வாழ்தல் இன்மை கண்டும்

வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும்
நீசர்

அறிவில்லாதவர்கள்
அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று

முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து
சென்று

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று
வானின்மேல் சென்று

பரமபதத்தேறப் புகுந்து
தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல்

நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ?

வியாக்யானம் –

இன்று சாதல் –
யோஷித் புருஷ சம்யோக சமநந்தரம் முடிதல்

கர்பாஷ்டமேஷூ -என்கிறபடியே கர்ப்பாதந சமயம் -உத்பத்தி காலமாய்  -கர்ப்ப வச காலம்
ஆயுஸ் ஸூக்கு உடலாக கடவது

நின்று சாதல் –
சதாயுஸ் சம்பூர்ணனாய் முடிதல் –
கல்பாதியிலே தோற்றி கல்பாந்தரத்திலே முடியும் தேவர்களைப் போல் ஆதல்
நாயம் பூத்வா பவிதாவாந பூய -என்னக் கடவது இறே
அன்றி –
இந்த அஸ் தைர்யத்திலும் உள்மானம் புறமானம் ஒழிய நித்யராய் இருப்பார் ஒருவரும் இல்லை –
கர்ப்பே விலீயதே பூயோ ஜாய மா நோஸ் தமே திச
ஜாதமாத்ரே சம் ரிய தே பால பாவே ச யௌ வ நே -இத்யாதி –

யாரும்-
எத்தனை யேனும் அதிசயித ஜ்ஞாநராய் சதுர் தச புவநத்திலும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளும்

வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் –
சதுர் தச புவநத்திலும் ஒருபடிப்பட்டு நின்று ஜீவிக்கும் அது இல்லாமையை கண்டு வைத்தும் –

வையகம் -என்று சதுர் தச புவநத்துக்கும் உப லஷணம்

வாழ்தல் -என்று ஷேபிக்கிறார் -ஆதல்
சம்சாரிகள் கருத்தாலே  யாதல்

நீசர் –
தங்கள் அனுபவத்துக்கு உபதேசம் வேண்டும்படி அஜ்ஞராய் இருக்குமவர்கள்
ப்ரக்ர்தி ப்ராக்ர்தங்களின் தண்மை ப்ரத்யஷத்தாலும் பரோஷத்தாலும் ப்ரகாசியா
நிற்கச் செய்தே விட மாட்டாதே இருக்கிற பாப ப்ரசுரம் –என்றுமாம் –

நீசர் –என்று அறிவிலோரும் -பறையரும்

அன்று –
பூமி மஹாபலியாலே அபஹ்ர்தமாய் -அத்தாலே தன்னுடைய
சேஷித்வமும் சேதனருடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று –

பாரளந்த பாத போதை –
குணாகுண நிரூபணம் பண்ணாதே பூமி முதலான சகல லோகங்களிலும் உண்டான
சகல சேதனர் தலையிலும் வைத்து முறையை உணர்த்தின சர்வ ஸூலபமான
திருவடித் தாமரைகளை –

பார் –என்று -ஊர்த்தவ லோகங்களுக்கும் உப லஷணம்

தாமரை -என்றது -துர்லபமானாலும் விட ஒண்ணாத போக்யதையாலே –

யொன்றி –
ஆஸ்ரயணம் அநாயாசம் -என்கிறது
சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே

ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று –
அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று

அதவா
சென்று சென்று –
தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –
தேவராய் இருக்கிலாத வண்ணமே –என் கொலோ –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாய் இராதே ஒழிகிற ஹேது என்னோ –
நித்ய ஸூரிகளாய் இருக்கை யாவது -சர்வ தாஸ த்ர்சராய் இருக்கை
அதாகிறது
அசங்கோசத்தாலும் -ரூபத்தாலும் -பேதத்தாலும் -அவர்களோடு சமராய் இருக்கை

என் கொலோ
1-ப்ரத்யஷ சித்தமான சம்சார தோஷத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
2-சாஸ்திர சித்தமான பகவத் ப்ராப்தியில் நன்மைக்கு கண் அழிவு உண்டாயோ –
3-ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய சௌலப்யத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
4-ஆஸ்ரயணீ யத்தில் ஆயாசம் உண்டாயோ –
5-வழிப் போக்கில் அருமை உண்டாயோ –

 ப்ரகர்தி ப்ராக்ர்தங்களில் ப்ராவண்ய ஹேதுவான பாபமும்
பகவத் வைமுக்ய ஹேதுவான பாபமும்
ஒழிய இப் புருஷார்த்தத்தை இழைக்கைக்கு ஒரு ஹேதுவும் கண்டிலோம் -என்கை

————————————————————————————

67 -பாட்டு –

அவதாரிகை –

சம்சாரிகள் தங்களுக்கு ஹிதம் அறிந்திலரே ஆகிலும் –
இதில் ருசி பிறந்த வன்று இத்தை இழக்க ஒண்ணாது என்று பார்த்து –
இவர்கள் துர்கதியைக் கண்டு –பரோபதேச ப்ரவ்ர்த்தர் ஆகிறார் -மேல் ஏழு பாட்டாலே –

இதில் முதல் பாடு
அர்ச்சிராதி கதியிலே போய் -நிலை நின்ற புருஷார்த்தத்தை லபிக்க வேண்டி இருப்பீர் –
ப்ராப்யமும் ப்ராபகமும் ஆன பகவத் விஷயத்தை ஆஸ்ரயித்து
உங்கள் விரோதியைப் போக்கி
உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –67-

பதவுரை

சண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று

ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய்
வீடு பெற்று

பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்)
மேல்வீடு இலாத

பக்தியின் பயனான கைங்கர்ய
காதல் இன்பம்

ஸுகத்தை நித்தியமாகப் பெற
நாளும் கண்டு

விருப்பமுடையவர்களே!
எய்துவீர்

(முமுக்ஷுக்களே)
புண்டரீக  பாதன்

தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய
புண்ய கீர்த்தி

பரிசுத்தமான திருப்புகழ்களை
நும் செவி

உங்களுடைய காதுகளிலே
மடுத்து

தேக்கி
உண்டு

அநுபவித்து.
நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின்

உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள்.

வியாக்யானம் –

சண்ட மண்டலத்தினூடு சென்று –
கடிதான ஆதித்ய மண்டலத்தின் நடுவே போய்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின்னனடுவுள் -என்கிறபடியே –

முமுஷூக்கள் அல்லாதவருக்கு துஷ் ப்ராப்யமான ஆதித்ய மண்டலத்தின் மத்யத்திலே –
ராஜ புத்ரர்கள்ராஜ குலத்தாலே அப்ரதிஹத கதிகளாய் போமாப் போலே போய் –

வீடு பெற்று —
பரம பதத்தை லபித்தது

மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் –
மேல் -வீடிலாத காதல் இன்பம் -கண்டு நாளும் எய்துவீர் –
ப்ராப்ய பலமாய் -யாவதாத்மபாவி விச்சேத சங்கை யன்றியே -ஸ்வரூப அநுபந்தியாய்-
பகவத் அனுபவ ஜனித பக்தி காரித கைங்கர்ய சுகத்தை சாஷாத் கரித்து -யாவதாத்மபாவி லபிக்க வேண்டி இருப்பீர் –

புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி –
செவ்வித் தாமரை போலே நிரதிசயமான போக்யமான திருவடிகளில் பாவநத்வ
ப்ராபகத்வ ப்ரதையிலே-

பாவநஸ் சர்வ லோகாநாம் -என்றும் -பவித்ராணாம் ஹி கோவிந்த -என்றும் –
லோகாநாம் த்வம் பரோதர்ம -என்றும் -க்ர்ஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும் -ப்ரசித்தம் இறே

நுஞ் செவி மடுத்தி –
பகவத் விஷயத்தை கனாக் காணாதே போந்த உங்கள் செவியை –
ஆச்சார்ய உபதேசத்துக்கு பாத்ரமாக்கி-
ஆப்த வாக்ய ஸ்ரவணமே பகவத் விஷயீகாரத்துக்கு வேண்டுவது -என்கை

உண்டு –
ஸ்மர்த்தவ்ய தசையே தொடங்கி -இனிதாகையாலும் –
நிரபேஷ உபாயம் ஆகையாலும்
பகவத் குணங்களையே அனுபவித்து

நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –
நீங்கள் சூழ்த்துக் கொண்டதாய் அவஸ்யம் அநு போக்தவயம் -என்கிற பாப பலமான-
துக்கத்தின் உள்ளே வர்த்திக்கிற  நீங்கள் -இதில் நின்றும் நீங்கி
முன் சொன்ன கைங்கர்ய சுகத்தை லபித்து-தொழுது எழு-என்கிறபடியே உஜ்ஜீவியுங்கோள்

—————————————————————————————-

68 -பாட்டு –

அவதாரிகை –

சம்சாரிகள் குணத்ரய ப்ரசுரர் ஆகையாலே குண அநுகூலமாக ராஜச தாமச
தேவதைகளை ஆசரயித்து உஜ்ஜீவிக்கப் பார்க்கிறவர்களை நிஷேதியா நின்று கொண்டு –
ஆத்ம உஜ்ஜீவநத்தில் ருசியை உடையராய் -சாத்விகர்ஆனவர்கள் சர்வாதிகனை
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க பாரும் கோள் -என்கிறார்

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-

பதவுரை

மூத்திறந்து

மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே
இரண்டில்

(ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில்
ஒன்றும்

விருப்பமுடையரான
நீசர்கள்

நீசரான மனிசர்கள்
அதில் இட்டு

அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து
இறந்து

அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து
போந்து

(மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து
மத்தர் ஆய்

“தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய்
மயங்குகின்றது

மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு)
உய்வது ஓர் உபாயம்

உஜ்ஜீவ்நோபாயம்
எத்திறத்தும் இல்லை

எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை)
உய்குறில்

(உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில்
கொத்து இறுத்த

கொத்துக்கொத்தாகச் செறிந்த
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான
நம் மாலை

பரமபுருஷனை
வாழ்த்தி

துகித்து
வாழ்வின்

உஜ்ஜீவித்துப் போங்கோள்.

வியாக்யானம் –

முத்திறத்து வாணியத்து
சாத்விக ராஜஸ தாமஸ தேவதைகளை தம் தாமுடைய குண அநுகூலமாக பற்றி
ஆராதிக்கப் பெறும் மூன்று வகைப்பட்ட பலங்களிலும்

திறம் -ப்ரகாரம்

பலங்களை –வாணியம் என்கிறது
வ்யாபாரம் அல்பமாய் -பலம் விஞ்சிதாய் இருக்கை

அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக் -என்றும் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –
த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே
வேதங்களும் குணத்ரய வச்யரான சேதனருக்கு குண அநுகூலமாக ஆராத்ய தேவதைகளையும்
தத் ஆராதன பிரகாரங்களையும் -ஆராதன பலன்களையும் சொல்லி -வைத்தது

இரண்டில் ஒன்றும் நீசர்கள் –

ஸ்வ குணங்களுக்கு அநுகூலமாய் இருக்கையாலும் -சாஸ்திர அனுமதியாலும்
நித்ய சத்வத்தையும் -தத் ஆராத்யனான ஈஸ்வரனையும் -தத் ஆராதன பலமான
மோஷத்தையும் ஒழிந்து -ராஜஸ தாமஸ பலங்களில் ருசியைப் பண்ணும் நீசர் –

நீசர் ஆகிறார் -சம்சாரத்தை வர்த்திப்பித்து கொள்ளும் ஹேயர்

மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து –
இட்டதில் –
கர்ம அவசாநத்திலே அந்த பலத்தை இட்டு

இறந்து –
அவ் வவ தேசங்களில் போக சரீரங்களை முடித்து

போந்து –
அந்த போக பூமியில் நின்றும் ஆகாச மேக அவச்யாதிகளிலே கிடந்தது
கர்ப்ப வாஸ அர்த்தமாக போந்து-
ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -என்கிறபடியே பூமியிலே பிறந்து –

மத்தராய் –
தேக ஆத்ம அபிமானத்தாலே ப்ராக்ர்த பதார்த்த லாபத்தாலே களித்து
மயங்குகின்றது –
ஆத்மாவை ஆதல் –
ஈஸ்வரனை ஆதல் –
உள்ளபடி அறியாமையாலே மோஹாங்கதரைப் போலே இருக்கிறது இறே

ஸ்வர்க்காதி பல அனுபவங்களை புண்யம் ஷயித்த அளவிலே மத்யே விட்டு
அந்த போக சரீரங்களையும் முடித்து -கர்ப்ப வாஸ அர்த்தமாக அதி கிலேசத்தோடே
போந்தபடியை அனுசந்தியாமையால் இறே சேதனர் ப்ரக்ர்த போகங்களில்
களித்து வர்த்திக்கிறது என்கை-

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை –
ஆகையால் ஸ்வ பௌருஷத்தாலும் இதர தேவதைகளை ஆஸ்ரயணீயராக பற்றினாலும்
ஈஸ்வரன் தன்னையே ஐஸ்வர்ய அர்த்தமாகப் பற்றினாலும்
உஜ்ஜீவிக்கைக்கு வழி இல்லை

யுய்குறில் –
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தி கோள் ஆகில் –
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ —

சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்

நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து
யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்

ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே

—————————————————————————————

69 -பாட்டு –அவதாரிகை

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –
அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்
ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள
வல்லிகோள் -என்கிறார் –

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-

பதவுரை

காணிலும்

கண்டாலும்
உரு போலார்

விகாரமான உருவத்தையுடையராயும்
செவிக்கு இனாத கீர்த்தியார்

காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும்
பேணிலும்

(இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும்
வரம் தர

(ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க
மிடுக்கு இலாத

சக்தியற்றவர்களாயுமுள்ள
தேவரை

தேவதைகளை
ஆணம் என்று

சரணமென்றுகொண்டு
அடைந்து வாழும்

அவற்றையடைந்து கெட்டுப்போகிற
ஆதர்கள்

குருடர்களே!
என் ஆதிபால்

ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து
பேணி

வழிபாடுகளைச் செய்து
நும்

உங்களுடைய
பிறப்பு எனும்

ஸம்ஸாரமாகிற
பிணக்கு

பெரும்புதரை
அறுக்க கிற்றிரே

அறுத்தொழிக்க வல்லீர்களே?

வியாக்யானம்-

காணிலும் உருப்பொலார் –
தாமஸ தேவதைகள் ஆகையாலே முமுஷுக்களுக்கு அவர்கள் த்ரஷ்டவ்யர் அல்லர் –

ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா பிரதி ஷித்தாஸ் து பூஜநே –
அசுத்தாஸ் தே சமஸ்தாச்ச தேவாத்ய கர்மயோநய -என்னக் கடவது இறே –

ஆத்மாவாரேத்ரஷ்டவ்ய -என்னும் அவன் அல்லன் இறே

இங்கன் இருக்கச் செய்தே உங்கள் குண அநுரூபமான ருசியாலே கண்டாலும்
விருபா ஷத்வாதிகளாலே வடிவு பொல்லாதாய் இருப்பர்

திரு உள்ளத்தில் தண்ணளியை கோட் சொல்லித் தாரா நின்ற புண்டரீகாஷனைப் போலே
வடிவு ஆகர்ஷமாய் இருக்கிறது அன்றே
அவர்களுடைய ஹ்ர்தயத்தில் க்ரௌர்யமே அவர்கள் வடிவில் பிரகாசிப்பது

செவிக்கினாத கீர்த்தியார் –
த்ரஷ்டவ்யர் அல்லாதவோபாதி ச்ரோதவ்யரும் அல்லர்

கேட்க வேண்டி இருந்தி கோளே யாகிலும்
பித்ர் வத ப்ரசித்தி என்ன –
தத் பலான பிஷாடந சாரித்ர ப்ரதை என்ன –
அத்வரத்வம்ச கதை என்ன –
சுர அசுர வத கதை -என்ன –
இத்யாதி சரவண கடுகமான கீர்த்தியை உடையராய் இருப்பர் –

ம்ர்தனான புத்ரனை சாந்தீபிநிக்கு மீட்டுக் கொடுத்தான்
புநராவ்ர்த்தி யில்லாத தேசத்தில் நின்றும் வைதிகன் புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்று -இத்யாதிகளாலே ஸம்ச்ரவே மதுரமான கீர்த்தி இறே

பேணிலும் –
ஆஸ்ரயணீயரும் அல்லர் –
ஆஸ்ரயித்தார் திறத்தில் -உன் பயலை அறுத்து இடும் -என்றும் -ஊட்டியிலே தட்டிற்றிலை

காண் -என்றும் சொல்லுகையாலே -உங்கள் ருசியாலே அவற்றையும் பொறுத்து
ச்ரவண கடோரமான கீர்த்தியையும் ஸ்வரூபத்தையும் பொறுத்து ஆஸ்ரயித்தாலும் –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –

ஸூ ஸூகம் கர்த்தும் -என்றும் ஆஸ்ரயணம்
ஸூக கரமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கிறது அன்றே –

வரந்தர மிடுக்கிலாத தேவரை –
பர ஹிம்சையிலே வந்தால் -ஜகது உபசம்ஹார ஷமராய்
அபிமத பலம் தருகைக்கு சக்தி இல்லாத தேவதைகளை
ஒரு பிசாசுக்கு மோஷம் கொடுப்பது
ஒரு பஷிக்கு மோஷம் கொடுப்பது
உதாராஸ் சர்வ யேவைதே -என்று தானும் -பிறரும் –
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்னும் விஷயம் அன்று இறே

நீ தந்த நித்யத்வம் எனக்கு கழுத்து கட்டி யாய்த்து -என்று மார்கண்டேயன் அவனை வளைக்க
மோஷ ப்ரதன் கையிலே காட்டிக் கொடுத்து நழுவும் சீலம் இறே பிறரது

ஆணம் என்று அடைந்து –
இப்படி இவர்கள் ஆஸ்ரயணீயரும் அன்றிக்கே இருக்கச் செய்தே தங்கள் பிரேமத்தால் ஆஸ்ரயித்து

ஆணம் -அரண்
நத்யஜேயம் -என்னும் விஷயம் அன்றே
மா சுச -என்ன மாட்டான்
ஏறுண்டவன் ஆகையாலே-

வாழும் ஆதர்காள் –
ம்ர்த்ராய் இருக்கிற அறிவு கேடர்காள்

ஆதர் -குருடரும் -அறிவு கேடரும்
நா ஹாரயதி சந்த்ரா சம்பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -என்றும்
பாஹூ இச்சாயமவஷ்ட ப்தோ யஸ்ய லோகோ மகாத்மாந -என்றும் –
அதஸோ பயங்கதோ பவதி -என்றும் -இருக்கிறார்கள் அன்றே

எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை

எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்

நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே –
ஒருத்தராலும் அறுக்கப் போகாத உங்களுடைய பிறப்பு என்கிற தூற்றை அறுத்துக் கொள்ள
வல்லி கோளே

பிணப்பு அறுக்க -ஜன்மம் அறுக்க

ஜென்மத்தை தூறு என்கிறது அகப்பட்டவனுக்கு புறப்படாது போக ஒழிகையும்
தன்னால் தரிக்க ஒண்ணாது ஒழிகையும்
முதலும் முடிவும் காண முடியாது இருக்கையும் –

—————————————————————————————

70–பாட்டு

அவதாரிகை –

வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அவர்களுக்கு சக்தி வைகல்யம்
சொல்லுவான் என் -அவர்களை ஆஸ்ரயித்து தங்கள் அபிமதம் பெற்றார் இல்லையோ
என்ன –

ருத்ரனை ஆஸ்ரயித்து அவனுக்கு அந்தரங்கனாய்ப் போந்த பாணன்
பட்ட பாடும் -ருத்ரன் கலங்கிய படியும் தேவர்களே அறியும் அத்தனை இறே -என்கிறார்

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

பதவுரை

குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்

ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள்

கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து

(பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற

தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன்

(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணிந்த நாள்

அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம்

வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர்

(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)

வியாக்யானம் –

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் –
குந்தம் முதலான ஆயுதங்களைக் கொண்டு ருத்ரனுக்கு பந்துக்களாக உதவி செய்ய வந்த தேவதைகள்

குந்தம் -சவளம்

தோமரம் -எறி ஈட்டி
இவ் வாயுத வர்க்கத்தைக் கொண்டு வந்து -அவை தானே காற் கட்டாய் பொகட்டு போன
தேவர்கள் என்றுமாம்
அப்போது பந்தம் -என்றது பந்தகம் என்றபடி –

விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்கிறபடியே -க்ர்ஷ்ணனை தங்களுக்கு விரோதிகளான
அ சூர ராஷசர்களை அழியச் செய்து குடி இருப்பு தர வந்தவன் என்று பாராதே
அந்த துர்வர்க்கத்தோ பாதி எதிரம்பு கொத்து வருகையாலே
க்ர்தக்நருமாய் -துர்மாநிகளுமாயும் இருக்குமவர்கள் -என்கை

ஸாயூதரை வந்த தேவர்கள் என்று சுருங்க சொல்லாதே பரக்க ஆயுதங்களைப் பேசிற்று
உபகாரனானவன் பக்கலில் இத்தனை அபகாரத்தை  பண்ணுவதே என்ற நெஞ்செரிவாலே
யருளிச் -செய்கிறார்

பரந்து வானகமுற
க்ர்ஷ்ணன் சன்னதியிலே நேர் நிற்க மாட்டாதே
ஒருவர் போன வழி ஒருவர் போகாதே சிதறி தங்கள் குடி இருப்பிலே புக

வந்த வாணன் –
தேவதைகள் ஆயுதங்களைப் பொகட்டு போன இடத்திலும்
தனக்கு நியாமகனான ருத்ரன் ச்ஜ்ர்ம்பிதனான இடத்திலும்
தன்  தோள் வலியை விஸ்வசித்து வந்த பாணனுடைய

ஈரைஞ்சு நூறு தோள்களைத் துணித்த நாள்-
ஆயிரம் தோள்களையும் துணித்த வன்று –
தோள் வலியை கொண்டு வந்தவனுடைய தோள் வலியைக் கழித்தான் –
ஆயுதங்களைப் பலமாகக் கொண்டு வந்த தேவர்களை ஆயுதங்களைப் பொகட்டு
பிற்காலித்து போம்படி பண்ணினான்

சர்வாத்யஷனாய் வந்த ருத்னனை நிச் சேஷ்டனாம் படி பண்ணினான்
அந்தவந்தவாகுலம்
ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவச்யமும்
போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவச்யமும்

பாரவச்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா
பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச -என்றும்
க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்
பரிசம் பரமாத்மாந ம நா தி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே

அமரரே யறிவரே
ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி
நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -51-60-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 27, 2013

பாட்டு -51-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

வியாக்யானம்

பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல் –
தன் அபிநிவேசம் எல்லாம் கொண்டு -எங்கும் ஒக்கப் பரந்து மாறாதே வந்து பொன்களை
கோயிலிலே தள்ளி அலை எறியா நின்றுள்ள காவேரி

வார் புனல் –
ப்ரவாஹ ரூபமான ஜலம்

அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே —
உபயபாவ நிஷ்டனான ப்ரஹ்மாவானவன் தன் அதிகாரத்துக்கு வரும் விரோதிகளை
பரிஹரிகைக்கு –
ப்ரஹ்ம பாவனைக்கும் -பலமான மோஷத்துக்குமாக சதுர்தச புவன ஸ்ரஷ்டா என்றும்
நாலு வேதங்களையும் ஒருக்காலே உச்சரிகைக்கு ஈடான நான்கு முகத்தை உடையன் என்றும்
அஜன் -என்றும் -தன்னை சர்வாதிகனாக அபிமானித்து இருக்கிறவன் பக்ன அபிமாநனாய்
வந்து ஆஸ்ரயிக்கும் கோயிலை –ஸ்ரீ ரெங்கம் -என்னா நின்றார்கள் புராண வித்துக்கள் –

ரதிங்கத இதி –ரங்கம் -என்றும் –
ஷீராப்தேர் மண்டலாத்பாநேரர் யோகிநாம் ஹர்த்தா தபி
ரதிங்கதோ ஹரிர்யத்ர ரங்க மித்யபி தீயதே -என்னக் கடவது இறே

————————————————————————————-

52 பாட்டு –அவதாரிகை –

ராமாவதாரதுக்கு பிற்பாடர்க்கு கோயிலிலே வந்து உதவினபடி சொல்லிற்று -கீழ் மூன்று பாட்டாலே
இனி -இரண்டு பாட்டாலே கருஷ்ணாவதாரதுக்கு பிறபாடர்க்கு உதவும்படி சொல்லுகிறது –

அநந்தரம் கீழில் பாட்டோடு சங்கதி என் என்னில் –
சதுர்தச புவநாத் யஷனாய் ஜ்ஞானாதிகனான ப்ரஹ்மாவுக்கு ஆஸ்ரயணீ யமான
அளவு அன்றிக்கேஅநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருந்துள்ளவர்களுக்கு
அனுபவ ஸ்தானம் கோயில் -என்கிறார் –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-

அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் –

வியாக்யானம் –
பொற்றை யுற்ற முற்றல் யானை –
கற்பாறையிலே வர்த்திக்கையாலே திண்ணிதான ஆனை
மனுஷ்ய சஞ்சாரம் இன்றிக்கே மரங்களால் நெருங்கின காட்டிலே வர்த்திக்கையாலே
மநுஷ்யரைக் கண்டு கண் கலங்கி வர்த்திக்கிற ஆனை என்றுமாம் –

பொற்றை -கற்பாறையும் -கரிக்காடும்

போர் எதிர்ந்து வந்ததைப் –
ரஜகனைப் போல் அன்றியே யுத்தத்தில் எதிர்த்து வந்ததை

பற்றி உற்று –
மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து

மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர் –
அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –

பாகன் -என்று அதற்க்கு ரஷகனாவன் –
அதின் அளவு அறிந்து -இடம் கொள்ளுமா போலே இடம் கொண்டு அத்தை அழித்த
படியாலே சொல்லுகிறது

இத்தால் க்ருஷ்ணாவதாரத்தில் பிற்பாடர் ஆனார்க்கு -பெருமாள் ஸ்வ அநுபவ
விரோதி வர்க்கத்தை குவலயாபீடத்தை அழித்தால் போலே -அழியச் செய்யுமவர்
என்கை –

ஸ்ரீ வசுதேவரும் தேவகிப் பிராட்டியாரும் ஸ்ரீ மதுரையில் பெண்களும்
ரங்க மத்யத்திலே க்ருஷ்ணனைக் காண ஆசைப்பட்டு இருக்க-வாசலிலே இடைச் சுவராய்
இறே  குவலயாபீடம் நின்றது –
சக்ய பஸ்யதே -வஸூ தேவோ  பூத் ப்ராதுர ஸீஜ்ஜ நார்த்தந -என்னக் கடவது இறே

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் –
சிறுகின கண்களை உடைத்தாய் -திண்ணியதான மூங்கில் தண்டு மூன்று தரித்த –
சந்ன்யாசிகள் –மூங்கில் மூன்று -தண்டர் -என்கிற இத்தால் -கீழ் உள்ள ஆஸ்ரம த்ரயத்தையும்
வ்யாவர்த்திக்கிறது –
சிற்று எயிற்று முற்றல் -என்ற இத்தால் –
ஏகேந ப்ரஹ்ம தண்டேந சர்வாஸ் த்ராணி ஹதா நிமே -என்கிற ந்யாயத்தால்
எதிர்த்த விரோதி வர்க்கத்தை தானே யழிய செய்யவற்றாய் -தனக்கு அழிவு அன்றிக்கே
இருக்கும் என்னும் அத்தை நினைக்கிறார் –

ஒன்றினார் –
பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயர் ஆனவர்கள் என்னுதல்

தேசாந்தரங்களை விட்டு இத் தேசமே ப்ராப்யம் என்று வந்து சேர்ந்தவர்கள் –என்னுதல்

அற்ற பத்தர் –
புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று
பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –

த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்
பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்

சுற்றி வாழும் –
சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள்
என்னுதல் –

சுற்றல்-எண்ணல்

அம் தண் நீர் அரங்கமே –
தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

——————————————————————————–

53 பாட்டு –அவதாரிகை –

அநிருத்த ஆழ்வானுடைய அபிமத விரோதியாய் -ப்ரபலமான பாண ப்ரமுக வர்க்கத்தை
போக்கினாப் போலே -இன்று ஆஸ்ரிதருடைய போக விரோதியைப் போக்குகைக்கு
அந்த க்ருஷ்ணன் நித்ய வாஸம் பண்ணும் தேசம் கோயில் –என்கிறார் –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே –53-

பதவுரை

மோடியோடு

காளியும்
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான்

வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும்
மக்களோடு

ஸ்வஜனங்களோடு
கூடு

திரண்ட
சேனை

ஸேனையை
கொண்டு

அழைத்துக்கொண்டு
வெம் சமத்து

பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட

வேகமாக ஓடிப்போன வளவிலே
வாணன்

பாணாஸுரனது
ஆயிரம் கரம்

ஆயிரம் கைகளை
கழித்த

அறித்தொழித்த
ஆதி மால்

பரமபுருஷனுடைய
பீடுகோயில்

பெருமைதங்கிய கோயில்
நீர் கூடு

காவேரியோடு கூடின
அரங்கம் என்றபோது

திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்

 

வியாக்யானம் –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி –
சாத்விகர்க்கு தர்சனமே தொடங்கி லஜ்ஜையாம் படி அவர்களால் அபரிக்ராஹ்யை யான
சாபத்தை ப்ராபித்த காளியோடே -தமஸ் சுரை -யாகையாலும் துராசாரை யாகையாலும்
சாத்விகரால் உபேஷணீயையாய் இறே -இவள் இருப்பது –

சாபம் எய்திஇலச்சையாய -முக்கண்ணான் –
கபாலீத்வம் பவிஷ்யசி -என்று ப்ரஹ்மா சபிக்கையாலே லஜ்ஜா விஷ்டனான லலாட
நேத்ரன் -என்றுமாம் –
ஆகம முகத்தாலே தன்னை சர்வேச்வரனாக உபதேசித்து -லலாட நேத்ரத்வ
கங்கா தரத்வாதிகளோடு தன்னுடைய சக்திகளையும் ஆவிஷ்கரித்து
லோகத்தை அடங்கலும் கும்பிடு கொள்ளுகிற -இவனுக்கு ப்ரஹ்ம சாபத்தாலே
ஷேத்ரஞ்ஞத்வமும் -சாஸ்திர வஸ்யதையும் -பிரகாசித்தால் லஜ்ஜா விஷ்டனாகச்
சொல்ல வேணுமோ

கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து -ஓட-
மக்களோடே திரண்ட சேனையும் கொண்டு அரை குலையத் தலை குலைய யுத்தத்திலே
ஓடி -நம்பி மூத்த பிரானும் க்ருஷ்ணனும் விசயத்திலே மண்டினவாறே
ருத்ரனும் பரிகரமும் ஒடுகையிலே மண்டின படி

வாணன் ஆயிரம் கரம் கழித்த –
பாணனுடைய ஆயிரம் தோள்களையும் கழித்த-பாணனுடைய ரஷணத்தில் பிரதிக்ஜை பண்ணின ருத்ரனுடைய அபிமானத்தை
கழித்தான்

வாதிமால் –
ஜகத் காரணனான சர்வேஸ்வரன்
கர்ஷண ஏவகி லோகாநாம் உத்பத்தி ரபி சாப்யய -என்னக் கடவது இறே

பீடு கோயில்-
பெரிய கோயில் –பீடு -பெருமை

கூடு நீர் அரங்கம் என்றபேரதே —
சஹ்யத்தின் நின்றும் வந்ததும் -இப்பாலும் உண்டான வர்ஷத்தாலும் கூடிய நீரை உடைத்தான
திருவரங்கம் என்னும் திருநாமத்தை உடைத்து

சாபம் எய்தி -இலைச்சையாய -முக்கண்ணான் -மோடியோடு -மக்களோடு –
கூடு சேனை கொண்டு -வெஞ்சமத்து -மண்டி ஓட -வாணனன் ஆயிரம் கழித்த
வாதிமால் -கூடு நீர் -அரங்கம் என்ற பேரதான -பீடு கோயில் -என்று அந்வயம் –

ஆக இரண்டு பாட்டாலும் செய்தது ஆய்த்து –
ஆஸ்ரிதருக்கு விரோதிகளாம் இத்தனையே வேண்டுவது –
எதிர்தலை திர்யக் ஆகவுமாம்
சர்வாதிகனான ருத்ரன் ஆகவுமாம்
அழியச் செய்கைக்கு குவலயாபீடம் -கொலை யானையாய்த் தோற்றுகையாலே
கொன்று அருளினான் -க்ருஷ்ணனைத் தோற்ப்பித்து பாணனை ரஷிக்க  கடவோம் என்று
வந்த ருத்ரன் தோற்று போம்படி பண்ணி யருளினான் –

பாராய மம கிம் புஜை -என்று தோள் வலி கொண்டு  வந்த பாணனுடைய
தோள்களைக் கழித்தான் –

ஆக –அவர்கள் உடைய நினைவு அவர்கள் தலையிலே யாக்குமவன் என்கை –

———————————————————————————-

54 பாட்டு –அவதாரிகை –
இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

பதவுரை

இலை தலை

இலைபோன்ற நுனியையுடைய
சரம்

அம்புகளை
துரந்து

பிரயோகித்து
இலங்கை

எல்லையினுடைய
கட்டு

அரண்களை
அழித்தவன்

அழியச்செய்த இராமபிரான்;
மலைத்தலை

(ஸஹ்யமென்னும்) மலையிலே
பிறந்து

பிறந்து
இழிந்து

அங்கு நின்றும் ப்ரவஹித்து
வந்து

நெடுக ஓடிவந்து
சந்தனம்

சந்தன மரங்களை
நுந்து

(போர்த்துத்) தள்ளாநின்றதாயும்,
குலைத்து

(குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி
அலைத்து

அலசி
இறுத்து

முறிக்க
எறிந்த

(அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின
குங்குமம் குழம்பினோடு

குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட
அலைத்து ஒழுகு காவிரி

அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய
அரங்கம்

கோயிலிலே
மேய

எழுந்தருளியிருக்கிற
அண்ணன்

ஸ்வாமியாவர்.

 

வியாக்யானம் –
சம்சாரத்தில் தன பக்கல் ருசி இல்லாதாருக்கு ருசி ஜநகனாகைக்கும்
ருசி பிறந்தாருக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்
ஆஸ்ரிதரை அஹங்கார ரஹீதமாக அடிமை கொள்ளுகைக்கும்
உரியவன் -என்கை-

அடுத்த 7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –
சந்தனம் குங்குமப் பூ இழிந்து வரும் காவேரி அன்றோ-

——————————————————————————————

55-பாட்டு –அவதாரிகை –

இப்படி ஆஸ்ரித அர்த்தமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை காட்டி –
லஷ்மீ பூமி நீளா -நாயகனாய் இருந்து வைத்து எனக்கு மறக்க ஒண்ணாதபடி

என்னை-அங்கீ கரித்து அருளினான் -என்கிறார் –

இவ்வாறு  7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –

மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-

பதவுரை

மா மலர் மன்னு கிழத்தி

சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும்
வையம் மங்கை

ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும்
மைந்தன் ஆய்

(விரும்பத்தக்க) யுவாவாய்,
பின்னும்

மேலும்
ஆயர் பின்னை

(கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
தோள்

தோளோடே
மணம் புணர்ந்து

ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்)
அது அன்றியும்

அதுக்கு மேலும்
உன்ன பாதம்

உன்னுடைய திருவடிகளை
என்ன சிந்தை

என்னுடைய நெஞ்சினுள்ளே
மன்னை வைத்து

பொருந்தவைத்து
கல்கினாய்

அருள்செய்த பெருமானே!
பொன்னி சூழ் அரங்கம் மேய

(நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற
புண்டரீகன் அல்லையே

தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ.

வியாக்யானம்-

மன்னு மா மலர்க்கிழத்தி –
மென்மை குளிர்த்தி நாற்றம் -என்கிற இவற்றால் ச்லாக்யமான தாமரைப் பூவிலே
பிறப்பை உடையளான பெரிய பிராட்டியார் ஆகிற மஹிஷி
க்ர்தாபிஷேகா மஹிஷீ -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும் உரியவள் என்கை
கிழத்தி -உரியவள்

வைய மங்கை மைந்தனாய்ப் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அபிமதனாய் –
யுவதிச்ச குமாரிணி -என்கிற இவள் பருவத்தோடே சேர -யுவா குமார -என்கிற
பருவத்தை உடைய காந்தனாய் –

மைந்தன் -இளையோன் –

பின்னும்
அதுக்கு மேலே
சர்வாதிகத்துவத்துக்கும் போக பௌஷ்கல்யத்துக்கும் இவர்கள் இருவருமே அமைந்து
இருக்க -அதுக்கு மேலே –

அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்றும் -ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ -என்றும்
தேவிமாராவார் திருமகள் பூமி

ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது –
அபிஜாதையான நப்பின்னை பிராட்டியாரோடு கலந்து போரும் போக பௌஷ்கல்யத்தை
உடையனாய்

அன்றியும் –
உனக்கு அபிமத விஷயங்கள் குறைவற்று இருக்கச் செய்தே -அதுக்கு மேலேயும் –

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் –
அமரர் சென்னிப் பூ -என்கிறபடியே ஸூரி போக்யமான உன் திருவடிகளை
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னுடைய ஹ்ருதயத்திலே ஷண காலம் விச்லேஷம்
இல்லாதபடி வைத்து என் பக்கலில் பஷ பதித்தாய்
வாத்சல்யம் -தம் தாமுடைய வைலஷண்யத்தையும் -எதிர்தலையில் தண்மையையும்
பார்க்க ஒட்டாது இறே

பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே —
ஸ்ரமஹரமான காவேரியாலே சூழப் பட்ட கோயிலிலே நித்ய வாஸம் பண்ணின

புண்டரீக அவயவன் அல்லையோ –
புண்டரீக அவயவ ப்ரசுர்யத்தாலே புண்டரீகவ்யபதேசம்

ஆனந்தோ ப்ரஹ்மோ -விஞ்ஞாநம் ப்ரஹ்ம -இதிவத்

திவ்ய அவயவங்களுக்கு ஸ்ரமஹரமான தேச வாசத்தாலே பிறந்த செவ்விக்கு மேலே
என்னோட்டை சம்ச்லேஷத்தாலேயும் புதுக் கணித்தது என்கை –

—————————————————————————————-

56 -பாட்டு –அவதாரிகை –
இனி மேல் ஆறு பாட்டாலே -திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை
அனுபவிக்கிறார்
இதில் -முதல் பாட்டில் –
ஆஸ்ரித விரோதியான ராவணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகன்
பின்புள்ளாரான –அநந்ய பிரயோஜனருக்கு ஸ்வ ப்ராப்தி விரோதிகளைப் போக்கி
அநுகூல வ்ர்த்தி கொள்ளுகைகாக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற
படியை அனுபவிக்கிறார் –

இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
இலங்கை மன்னன்

இராவணனுடைய
ஐந்தொடு ஐந்து

பத்தாகிய
பை தலை

வலிய தலைகள்
நீலத்து உலக

பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க

(அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று

இலங்கையிற் புகுந்து
கொன்று

(அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து
வென்றி கொண்ட

விஜயம் பெற்ற
வீரனே

மஹாவீரனே!
விலக்கு நூலர்

உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும்
வேதம் நாவர்

வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும்
நீதி ஆன கேள்வி யார்

(நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள்.
வலம் கொள

வழிபாடுகள் செய்யும்படியாக
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருளா நின்ற
மாலும் அல்லையே

ஸர்வேச்வரனும் நீயன்றோ

 

வியாக்யானம் –

இலங்கை மன்னன் –
குளவிக்கூடு சேர்த்தாப்  போலே ஹிம்சகர் சேர வர்த்திக்கும் இலங்கைக்கு நிர்வாஹகனான
ராவணன் -ராவணோ ராஷஸேஸ்வர -என்கிறபடியே அந்த துர் வர்க்கத்துக்கடைய
நிழலாய் இருக்குமவன் இறே

ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துக-
அறுக்க அரிதான பத்துத் தலையையும் பூமியிலே உதிர்த்து உரு மாய்ந்து போம்படி
பைந்தலை -வலிய தலை

ஐந்தொடைந்து-என்று தசேந்த்ரியாநநம் -என்கிறபடியே அநந்ய பிரயோஜனருக்கு
பாதகமான சில வஞ்சகங்களை நினைக்கிறார் ஆய்த்து –

கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே –
பயமிருக்கும்படி அறியாதவன் பயத்தாலே போக்கற்று கலங்கும்படி –
இவனுக்கு வரம் கொடுத்த தேவதைகளும் குடி இருப்பு இழக்கும்படியான தசையிலே
ஜனஸ்தான வதத்தையும் -சேது பந்தனத்தையும் பண்ணிச் சென்று அவனைக் கொன்று
விஜயத்தை லபித்த ஆண் புலியானவனே –

விலங்கு நூலர் –
சர்வ காலமும் வைதிக கர்ம அனுஷ்டாதாக்கள் என்று தோற்றும்படியான
யஞ்ஞோ பவீதத்தை சரீரத்துக்கு நிரூபகமாக உடையராய் –

விலங்கு -உடம்பு

வேத நாவர் –
சர்வ காலமும் வேத பாராயணம் பண்ணுகையாலே வேத உச்சாரணத்தை நிரூபகமாக
உடையராய்

நீதியான கேள்வியார் –
சர்வ கர்ம சமாராத்யன் சர்வேஸ்வரன் என்று சதாசார்யர் உபதேசம் உடைய ப்ராஹ்மணர்

வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே —
அவர்கள் உடைய அநுகூல வ்ர்த்தியை ச்வீகரிக்கைகாகத் திருக் குடந்தையிலே கண்
வளர்ந்து அருளுகிற சர்வாதிகன் அல்லையோ –

வலம் -அநு கூலம்

சக்கரவர்த்தி திருமகனுடைய ஆண் பிள்ளைத் தனத்தை ஆராவமுத ஆழ்வார் பக்கலிலே
அநுபவித்த படி சொல்லிற்றாய்  விட்டது –

—————————————————————————————–

57 -பாட்டு –அவதாரிகை –

ப்ராப்தி விரோதியைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளும் அளவு அன்றிக்கே
நித்ய அநபாயிநி யான பிராட்டி யோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான
ராவணனை அழியச் செய்தாப் போலே –

பிற்பாடரான ஆஸ்ரிதருக்கு அநுபவ
விரோதிகளைப் போக்குகைகாகத் திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை-அநுபவிக்கிறார் –

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-

பதவுரை

சங்கு தங்கு முன் கை நங்கை

(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன்

விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம்

சரீரமானது
மங்க

மாளவேணுமென்று
அன்று சென்று

முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து

அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த

(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான்

கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல்

நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார்

திவ்யஸுந்தரிகள்
குடந்தை

அவகாஹிக்கப்பெற்ற
நீர்

தீர்த்தமானது
பொங்கு

வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள்

குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த

பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன்

ஸுந்தராங்கன்.

வியாக்யானம் –

சங்கு தங்கு முன்கை –
வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் –
அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும்
அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –

நங்கை-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –
துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் -என்கிற பிராட்டி பக்கலிலே –

கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க –
திருவடிகளில் தங்க ப்ராப்தமாய் இருக்க -மாதர்  விஷயம் என்று பாராதே அதிக்ரமத்தை
நினைத்த ராவணனுடைய சரீரம் அழிகைக்காக –

தங்கல் -தொங்கல்
இந்த துர் புத்திக்கு அடி -தேஹாத்ம அபிமானம் ஆகையாலே அதுக்கடியான சரீரத்தை
யாய்த்து அழிக்க நினைத்தது

வன்று –
உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே -இருவரையும் கடலுக்கு அக்கரையும்
இக்கரையுமாம்படி பண்ணின அன்று என்னுதல்
வேணி யுத்க்ரதந தசையிலே -என்னுதல்

சென்று –
அபியாதா ப்ரஹர்த்தாசா -என்கிறபடியே அவன் இருந்த  இடத்தே  சென்று

அடர்த்து எறிந்த  வாழியான் –
அடை மதிள் படைத்து -அவந்தலையை அறுத்து அந்த ஹர்ஷத்தாலே கடல் போலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –

எறிதல் -அறுத்தல்

கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் –
பரிமளம் மாறாத நீண்ட குழலை உடைய ஸ்திரீகள்

குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் –
அவஹாகித்த நீரானது இவர்களுடைய நெருக்கத்தாலே ப்ரவர்த்தமாய் -அத்தாலே
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே

இத்தால் –
ஆராவமுத ஆழ்வாரை அனுபவிக்க செல்லுமவர்களை –

சதம் மாலா ஹஸ்தா -என்கிறபடியே எதிரேற்றுக் கொள்ளுமவர்களையும்

அங்குதைக்கு பரிசாரிகைகளாயும்-நிற்குமவர்கள் -என்கை

கிடந்த புண்டரீகனே —
தாமரைக்காடு பரப்பு மாறப் பூத்தாப் போலே இருக்கிற திவ்ய அவயவங்களோடு தன்னை
அனுபவிக்கைக்காக கண் வளர்ந்து அருளுகிறவன் –

ஆக –
இரண்டு பாட்டால் சக்கரவர்த்தி திருமகனுடைய ஆண் பிள்ளைத் தனத்தையும்
அழகையும் அனுபவித்து
மேல் இரண்டு பாட்டாலே
க்ருஷ்ணனுடைய வீர சரிதத்தையும் அழகையும் ஆராவமுத ஆழ்வார் பக்கலிலே அனுபவிக்கிறார்

————————————————————————————–

58 -பாட்டு- அவதாரிகை –
ஆஸ்ரித அர்த்தமாக யமளார்ஜுநங்கள் தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தைப்
போக்கின நீ -அக்காலத்துக்கு பிற்பாடருக்கு உதவுகைக்காக
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே வந்து கண் வளர்ந்து அருளினாய் அல்லையோ -என்கிறார்

மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே –58-

பதவுரை

மரம் கெட கடந்து

யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று.
மத்த யானை அடர்ந்து

(குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து
மத்தகத்து

(அவ்வானையின்) தலைமேல்
உரம்கெட புடைத்து

(அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து
ஓர்கொம்பு ஒசித்த உத்தமர்

(அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே!
துரங்கம்

குதிரை வடிவங்கொண்டு  வந்த கேசியென்னுமசுரனுடைய
வாய்பிளந்து

வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே)
மண் அளந்த பாத!

உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.)
வேதியர் வசம் கொள

வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு

குடந்தையுள் கிடந்தமால் அல்லையே.

வியாக்யானம் –

மரம் கெட நடந்து –
மருதுகள் முறிய நடை கற்று
நடக்கையாவது -தவழுகையும் -தளர் நடை இடுகையும் –

அடர்த்து மத்த யானை –
மதிக்கப் பண்ணி கொண்டு வந்த குவலயாபீடத்தை செருக்கு போம்படி நெருக்கி

மத்தகத்துஉரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து –
ஆனை விழ குத்தும் இடத்தில் அத்வதீயமான கொம்பை முறித்து
அதினுடைய மிடுக்கு அழியும்படி மஸ்தகத்திலே புடைத்து –
மதத்தாலே வந்த செருக்கை அதினுடைய நாலு காலுக்குள்ளேயும் புக்கு நின்று
உழைப்பித்துக் கொடுத்து -அதினுடைய ஹிம்சா பரிகரமான கொம்பை கொன்று
அருளினான் என்றது ஆய்த்து

உகந்த உத்தமா-
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றது என்று உகந்த புருஷோத்தமனே –
இங்கு புருஷோத்தமன் -என்கிறது ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத் தளவு அன்றியே
ஆஸ்ரித பஷ பாதத்தால் வந்த உத்கர்ஷத்தை நினைத்து –

குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு உத்கர்ஷ ஹேது

துரங்கம் வாய் பிளந்து –
சந்த்யா காலத்திலே திருவாய்ப்பாடியை அழிக்க வந்த கேசியுடைய வாயைக் கிழித்து

மண் அளந்த பாத –
ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை உடையவனே
த்ரிவிக்ரம அபதாநம் -கேசி வத சமநந்தரத்திலே கிருஷ்ணனுடைய சேஷ்டிதமாக பேசலாம்படி
இறே இரண்டு அவதாரத்துக்கும் உண்டான சௌப்ராத்ரம் -அதாகிறது
எல்லாரையும் வரையாது தீண்டுகையும்
எதிரிகளை அழகாலே அழிக்கையும்

வேதியர் வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே-
வேதார்த்த தாத்பர்யம் கைப்பட்டவர்கள் தம் தாம் அபேஷிதங்களை உன் பக்கலிலே
அபேஷிக்கலாம்படி திருக் குடைந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன்-அல்லையோ
-வஞ்சகராய் வந்த யமளார்ஜூநங்களை தன் மௌக்யத்தாலே அழித்து
எதிரிகளாக கண் முகப்பே தோற்ற வந்த குவலயாபீடத்தையும் கேசியையும் அநாயேசேந-அழியச் செய்து
தான் வஞ்சகனாய் எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறை உணர்த்தின-புருஷோத்தமன் –

தன் வாத்ஸல்யத்தாலே-பிற்பாடருக்கு உதவ வந்து கிடக்கிற தேசம் திருக் குடந்தை என்றது ஆய்த்து –

———————————————————————————-

59 -பாட்டு -அவதாரிகை –

பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து
அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் –
பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –-59-

பதவுரை

சாலிவேலி

செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு

குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண்

குளிர்ந்ததான
குடந்தை

திருக்குடந்தையிலே

மேய எழுந்தருளியிராநின்ற

கோவலா

க்ருஷ்ணனே!
காலநேமி

காலநேமியென்ன
வக்கரன்

தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம்

புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன்

கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை

தலைகளானவை
காலனோடு கூட

யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த

வில்லை வளைத்த
வில் கை

அழகிய திருக்கையையுடைய
வீரனே

தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)

வியாக்யானம் –

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
செந்நெலை சுற்றும் உடைத்தாய் -ஸ்ரமஹரமான வயலையும் -அதுக்குள்ளாக பெரிய
அகழையும் -அதுக்குள்ளாக பூத்த பொழிலையும் -உடைத்தாய் –

இத்தால்
ஆராவமுத ஆழ்வார் உடைய சௌகுமார்யத்துக்கு அநுரூபமான சர்வ பிரகார-போக்யதையை உடைய தேசம் -என்கை

கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா –
தர்சநீயமாய் -ஒக்கத்தை உடைய மாடங்களை உடைத்தாய் -ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே
நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனே –

இத்தால்-
ஆராமுத ஆழ்வார் உடைய ரசிகத்வதுக்கு ஏகாந்தமான போக ஸ்தானம் என்கை

கோவலா -என்கிறது
கிருக்ஷ்ணனுடைய அழகும் சௌலப்யமும் சீலமும் ஆராமுத ஆழ்வார் பக்கலிலே
காணலாம்படி இருக்கையாலே -அவதார அந்தரங்கள் என்ன ஒண்ணாது -சர்வதாஸாத்ர்ச்யத்தாலே

குடந்தையன் கோவலன் குடி குடியார் -என்று ஒரு தேச விசேஷத்திலும் பிரசித்தம் இறே

காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை-
காலநேமி தந்த வக்ரன் க்ரூரரான முரன் -இவர்களுடைய தலையை அறுத்து
கரன் அரக்கன் நிரஸனம் ராம பெருமான் –

இது கிருஷ்ணன் பராக்ரமம் சொல்ல வந்ததால் இங்கு கரன் என்பதை குரூரமான முரன் என்கிறார் –

காலனோடு கூட வில் குனித்த –
இவர்கள் பேர் கேட்க அஞ்சும் காலன் இவர்களுக்கு நிர்வாஹகனாய்
இவர்கள் அஞ்சிச் சென்று கூப்பிடும்படியாக
சங்கல்பத்தாலே அன்றி -வில்லாலே -அழியச் செய்தவனே –

வில் கை வீரனே —
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்கைக்கு வில் வளைக்கவும் வேண்டாதே
சக்ர சாப நிபே சாபே க்ர்ஹீத்வா சத்ரு நாசநே -என்னும்படியே வில் பிடித்த பிடியிலே
அவர்கள் முடியும்படி ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனே –

——————————————————————————-

60 -பாட்டு -அவதாரிகை –
உகந்து அருளின நிலங்கள் ஆஸ்ரயணீய ஸ்தலம்
போக ஸ்தானம் ஒரு தேச விசேஷம் என்று இராதே
நிலையார நின்றான் -என்று
நிலை யழகிலே துவக்குண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும்
இப்படி செய்து அருளிற்று
போக்தாக்களான ஆஸ்ரிதர் பக்கலிலே உள்ள வ்யாமோஹம் இறே -என்கிறார்

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-60-

பதவுரை

செழும் கொழும் பெரும்பணி

இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது.
பொழிந்திட

பொழிந்தவளவிலே
உயர்ந்த வேய் விழுந்து

முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து

(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு
எழுந்து

(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி
விண் புடைக்கும்

விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய
வேங்கடத்துள்

திருவேங்கடமலையிலே
நின்று

நின்றருளி
தேன்

வண்டுகளானவை
எழுந்து இருந்து பொருந்து

மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற
பூ பொழில்

புஷ்பங்கள் நிறைந்த சோலைகள்
தழை கொழும்

தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய்
செழும்கடல்

செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான்
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண்வளர்ந்தருளா நின்ற
மால் அல்லையே

பெருமாள் நீயிறே.

வியாக்யானம்-

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட –
பருத்து தாரைகளாய் விழுகிற மூடு பனி சொரிய

செழுமை -பெருமை

கொழுப்பு -கொழுமை
இடைவிடாதே தாரைகளாய் விழுகை

செழுமை -வண்மை

பெரும்பனி -மூடு பனி

இப்படி பனியை வர்ணிக்கிறது -ஏதேனுமாக திருமலையில் சம்பந்தித்தவை தமக்கு
மநோஹரமாய் இருக்கையாலே-

வுயர்ந்த வேய் விழுந்து –
ஓங்கின மூங்கில்கள் பனியால் வந்த கனத்தாலே தரை யளவும் சாய்ந்து
செழும் கொழும் -உயர்ந்த வேய் -பெரும் பனி பொழிந்திட -விழுந்து -என்னவுமாம்

அப்போது -பெருத்து -ச்ரத்தையை உடைத்தாய் -உயர்ந்த மூங்கில்கள் என்றாகக் கடவது –
திருவேம்கடமுடையானுடைய விசேஷ கடாஷமே விளைநீராக வளருகிறவை -என்கை –

உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று –
ஆதித்ய கிரணங்களாலே பனி உலருகையாலே –
பனி உலர்ந்தவாறே தலை எடுத்து ஆகாசத்தின் எல்லையில் -முட்டும்
திருமலையிலே நின்று அருளி –

இத்தால்-திருவேம்கடமுடையானுடைய விசேஷ கடாஷத்தாலே
தலை எடுக்கையும் -வ்யதிரேகத்தில் தரைப்படுகையும் -அத்  தைசிகமான பதார்த்தங்களுக்கு
ஸ்வபாவம் என்னும் இடத்துக்கு த்யோதகம் என்கை –

எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக்கும்
வண்டுகள் கிளர்ந்து பரவா திரியும்படி வர்த்திக்குமதாய்
தழைத்து ச்ரத்தையை உடைத்தாய்
பரப்பு மாறப் பூத்த பொழிலை உடைய தேசம் –

இத்தால் -வண்டுகள் பொழிலின் மது வெள்ளத்தால் அவஹாக்கிக மாட்டாதே
அலமாக்கும் என்கை

செழும் தடம் குடந்தையுள் –
விடமாட்டாதே -அப் பொழிலுக்குள்வாயில் அழகிய தடாகத்தை உடைத்தான திருக் குடந்தையிலே

இத்தால் -அத்தேசத்தில் திர்யக்குகளும் போக்யத்தால் வந்து களித்து வர்திக்கும்படியாயும் –
தாபத் த்ரயாதுரர்க்கு கண்ட போதே ஸ்ரமஹரமாய் இருக்கும் தேசம் -என்கிறது –

கிடந்த மாலும் அல்லையே
கிடை அழகிலே துவக்குண்டு அனுபவிப்பார் ஆரோ -என்று அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன் அல்லையோ –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -41-50-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 25, 2013

41 பாட்டு –அவதாரிகை –
நீ உகந்தாரை -தத் சஜாதீயனாய் வந்து அவதரித்து ஸ்வரூப அநுரூபமாக ரஷிக்கும்
படியையும் விமுகரான சம்சாரிகளை சங்கல்பத்தாலே கர்ம அநுகூலமாக ரஷிக்கும்
படியையும் அநுசந்திக்கப் புக்கால் பரிச்சேதிக்க முடியாததாய் இருந்ததீ -என்கிறார் 

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

பதவுரை

மாய !

ஆச்சரியபூதனே. (நீ)
அயன் ஆகி

இடப்பிள்ளையாய்ப் பிறந்து
ஆயர் மங்கை

இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய
வேய தோள்

வேய்போன்ற தோள்களை

விரும்பினாய் விரும்பிப் புணர்ந்தாய்;

அம்பரத்தோடு இம்பராய்

மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில்
யாவர்

யார்தான்
நின்னை ஆயவல்லர்

உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.)
மாயம் மாயை கொல்!

(இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.)
அது அன்றி

அது அப்படியிருக்கட்டும்;
நீ

ஸர்வசக்தனான நீ
வகுத்தலும்

(உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும்.
மாய

(சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக

(அந்த விநாசத்தை நீ ஸஹிக்கமாட்டாமல்)

மாயம் ஆக்கினாய்

(இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்;
உன் மாயம் முற்றும்

உன்னுடைய ஸங்கல்பமெல்லாம்
மாயமே

ஆச்சரியமாயிருக்கின்றன.

வியாக்யானம் –

ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –
இடை ஜன்மத்திலே அவதரித்து நவ யௌவன ஸ்வபாவையான நப்பின்னை பிராட்டி உடைய
சுற்றுடைமையாலும் -பசுமையாலும் -செவ்வையாலும் -வேய் போலே
ஸ்பர்ஹணீ யமான திருத் தோள் உடன் சம்ச்லேஷித்தாய்
நித்ய மங்கள விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்து
அத்யாதரத்தை பண்ணினாய்

ஆனை அன்று சென்று அடர்த்த -என்று கீழ்ப் பாட்டிலும்
இவ் வபதானத்தைச் சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் –
விரோதி நிரசனத்தில் நோக்குஅது

ஸூ ரி போக்யமான விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கி
வந்து அவதரித்த படியைச் சொல்லுகிறது -இது

அநந்ய பிரயோஜனமான ஆஸ்ரிதர்கள் உடைய ரஷணத்துக்கும் உப லஷணம்-

ஆய நின்னை  யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் –
உபரிதந லோகங்களில் உண்டான ப்ரஹ்மாதிகளிலும் -பூமியில் விசேஷஜ்ஞ்ஞரான
மனுஷ்யாதிகளிலும் சர்வ சக்தி உக்தனான உன்னை யார் ஆராய வல்லர் –
அப்ராக்ர்த விக்ரஹத்தை ப்ராக்ர்த்த சஜாதீயம் ஆக்கின இத்தை பரிச்சேதிக்க வல்லார்
ஒருவரும் இல்லை என்கை –

மாய –
ஆச்சர்ய சக்தி உக்தனே

மாய மாயை கொல் –
மம மாயா துரத்தயா -என்கிறபடி பிரகிருதி சம்பந்தத்தால் பிறந்த அக்ஞானத்தாலேயோ
அன்று இறே -கிம் ஷேபே -மாயாவயு நம் ஜ்ஞானம் -என்கிறபடி மாயா சப்தம் ஞான வாசி ஆகிறதே –

அஞ்ஞானமும் ஞான விசேஷம் இறே
அச்ப்ர்ஷ்ட கந்தனான தான் -அப்ராக்ர்தமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை
ப்ராக்ர்த்த சஜாதீயமாக்கி சஷூர் விஷயமாக்கின இத்தை அறியலாமோ –
அவாக்ய அநாதர -என்கிறபடியே ஸ்வயம் பூர்ணனானவான் ஒரு கோப ஸ்த்ரி உடைய
வடிவு அழகில் அத்யாதாரத்தை பண்ணின இத்தை தான் எவர் பரிச்சேதிக்க

அதன்றி
அந்த அவதார வைபவத்தை ஒழிய -சகல ஜகத் ஸ்ர்ஸ்டியாதிகளால் பண்ணின
உபகாரங்களை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கிறது மேல் –

நீ வகுத்தலும் –
சம்சாரிகள் உடைய இழவிலே -தயமான மனவாய் இருந்துள்ள நீ -உன்னை லபிக்கைக்கு
ஹேதுவான ஜ்ஞானம் உண்டாய் -நல் வழி போகைக்கு கரண களேபரங்களைக்
கொடுக்கச் செய்தேயும் -மஹதாதி விசேஷாந்தமான வகுப்பு -தத் கார்யமான
அண்டங்கள் ஆகிற வகுப்பு -அண்டாந்தர்கதமான சதுர்தச புவனாத்மகமான வகுப்பு –
தத் அந்தர்கத தேவாதிகள் ஆகிற வகுப்பு –

மாய –
நசிக்க
அந்த சரீரங்களைக் கொண்டு தம் தாம் ஹிதம் பார்க்க மாட்டாதே விஷயாந்தர
ப்ரவணராய் நசிப்பார்கள்

மாய மாக்கினாய்
அவ்வளவிலும் உபேஷியாதே இவற்றுக்கு இனி சம்சாரமே ஹிதம் என்று ஸ்வ சரீரமான
ப்ரக்ர்த் யாவஸ்தம் ஆக்கினாய்

உன் மாயம் முற்றும் மாயமே –
உன்னுடைய மானஸ வியாபார ரூபமான சங்கல்ப ஞானம் அடங்கலும்
ஆச்சர்ய அவஹமாக நின்றதீ –

———————————————————————————-

42-பாட்டு –அவதாரிகை

நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -என்று ஸ்ர்ஷ்டி சம்ஹாரங்கள் சேர ப்ரஸ்துதம்
ஆகையால் -ஏக ஏவ ருத்ர சர்வோஹ்யே ஷ ருத்ர -என்று சுருதி பிரசித்தராய் இருப்பாரும்
உண்டாய் இருக்க -நம்மையே அபரிச்சின்ன ஸ்வபாவராகச் சொல்ல கடவீரோ என்று
பகவத் அபிப்ராயமாக –

அந்த ருத்னனுக்கு வந்த ஆபத்தை அவதரித்து தாழ நின்று
அந்நிலையிலே போக்கின தேவரீருக்கு இது பரிஹரிக்கை பரமோ என்கிறார் –

வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு கூசம் இன்றியே –42-

பதவுரை

கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச

கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை!
வேறு

வேறாக
இசைக்க

ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான
செக்கர் மேனி

சிவந்த உடலையுடையனாய்
நீறு அணிந்த

பஸ்தாரியாய்
புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த

ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன்
கை வைத்த

தன்கையில் வைத்துக் கொண்டிருந்த
வல் கபால் மிசை

வலிதான கபாலத்தை
ஊறுசெம் குருதியால்

உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே
நிறைந்த காரணம்தனை

நிறைந்த காரணத்தை
பேசு

அருளிச் செய்யவேணும்.

வியாக்யானம் –
வேறு இசைந்த செக்கர் மேனி-
வேறாக தன்னுடைய சம்ஹாரத்வதுக்கு சேர்ந்த க்ருத்தமான வேஷத்தை உடையவனே –

செக்கர் -சிவப்பு -சிவத்தல் -கோபித்தல் –
ஸ்ர்ஷ்டியாதி த்ரயத்துக்கும் தேவரீருக்கு தயை இறே ஸ்வபாவம் –

நீறணிந்த புன் சடை-
பஸ்மோத் தூளித சர்வாங்கனாய் க்ர்பணமான ஜடையை உடையவனாய்

புன்மை -பொல்லாமை
இத்தால் -பிரயாச்சித்ததுக்கும் பாதகித்வத்துக்கும் ஏகாந்தமான லிங்கத்தை உடையவன் -என்கை

கீறு திங்கள் வைத்தவன் –
அந்த ஜடையிலே கலா மாத்ரமான சந்திரனை வைத்தவன் –

ஆக -சம்ஹர்த்வமே தொழில் என்றும் -சாஸ்திரவஸ்யதையை  ஸூசிப்பிக்கிற
ஜடாதிகளை உடையவன் என்றும் –
சந்திர தாரணத்தாலே போக ப்ரதானன் என்றும் சொலிற்று ஆய்த்து
சாஸ்திர வச்யனுக்கு இறே இப்பாதகம் உண்டாவது

கை வைத்தவன் கபால மிசை –
கையில் வைத்த வலிய கபாலத்தாலே –
பாதகத்வ பிரகாசகமான கபால தாரணம் -பாதகம் போனால் அல்லது போகாத பிராபல்யத்தை
உடைத்தான கபாலம் என்றும் சொல்லிற்று ஆய்த்து
சாஸ்திர வச்யனுக்கு இறே இப்பாதகம் உண்டாவது –

ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை –
உன் திருமேனியிலே ஊறா நின்றுள்ள ரக்த ஜலத்தாலே நிறைத்த ஹேதுவை

பேசு –
உன்னுடைய ஈஸ்வரத்வமும் அவனுடைய -ஈசிதவ்யமும் ஒழிய வேறு ஹேது உண்டாகில்
அருளிச் செய்ய வேணும் -உன்னுடைய ரஷகத்வமும் அவனுடைய ரஷ்யத்வமும் ஒழிய ஹேது உண்டோ
இங்கே செங்குருதி -என்றும் –

மேலே –அலங்கல் மார்வில் வாசநீர் கொடுத்தவன் –என்றும்
அருளிச் செய்யா நின்றார் இரண்டுக்கும் பேதம் என் என்னில் –
அப்ராக்ர்த்த சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கின மெய்ப்பாட்டைச் சொல்லுகிறது –இங்கு –

சர்வ கந்த -என்ற அப்ராக்ர்த்த சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆகிற்று என்று- தோற்றுகைகாக

வந்த வைலஷண்யத்தை சொல்லுகிறது -அங்கு –

ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு கூசம் இன்றியே —
கூசம் இன்றியே-ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு-
ரிஷபங்களுடைய க்ரௌர்யத்தையும் தன் சௌகுமார்யத்தையும் பார்த்து கூசாதே
மேல் விழுந்து அடர்த்து உன் ஈச்வரத்வம் நிறம் பெறும்படி நின்றவனே எனக்கு அருளிச் செய்ய வேணும் –

சாஸ்திர வஸ்ய ஜன்மத்திலே பிறந்து ஏழு கோ ஹத்தியைப் பண்ணச் செய்தேயும்
ஈச்வரத்வம் நிறம் பெற நின்றாய் நீ -ருத்ரன் ஈச்வரத்தால் வந்த மேன்மை குலையாதே
நிற்கிற அளவிலே பாதகி யானான் -அப்பதகத்தை அவதரித்து தாழ நின்ற நிலையிலே
போக்கி அருளினாய்
இந் நெடுவாசியை தேவர்களே எதிரிகளாய் அழியப் புக்கால் தான் அழியுமோ
கூசமின்றியே பேசு என்னவுமாம்

அஹம்வோ பாந்தவோ ஜாத -என்று சிலருக்கு தேவரீர் உடைய மேன்மையை மறைத்து
பரிமாறுகிற படியை நினைத்து கூசாதே -ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்கிறபடியே
அவதாரத்தின் உடைய அப்ராக்ர்த்வத்தை உள்ளபடி அறிகிற எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்

———————————————————————————————
43 பாட்டு –அவதாரிகை-

ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கின வளவே யன்றிக்கே –க்ருஷ்ணனாய்  வந்து அவதரித்த
பூபாரமான கம்சனை சபரிகரமாக நிரசிக்கையாலும் -அந்த ருத்ராதிகளோடு
க்ரிமிகீடாதிகளோடு வாசியற ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்து உன் சேவை சேஷித்வத்தை பிரகாசிப்பித்தபடியாலும் ஜகத் காரண பூதன் நீயே
என்கிறார் -காலநேமி ஹதோயோ சௌ -என்று பூமி கம்சனை பூபாரமாகச் சொன்னாள் இறே

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43-

பதவுரை

வெம்சினந்த

உக்ரமான கோபத்தையுடைய
வேழம்

குவலயாபீட மென்னும் யானை யினுடைய
வெண் மருப்பு

வெண்ணிறமான தந்தத்தை
ஒசித்து

ஒடித்து (அந்த யானையை முடித்து)
உருத்த

கோபிஷ்டனாயும்
மா

பல்ஷ்டனாயுமிருந்த
கஞ்சனை

கம்ஸனை
கடிந்து

வதைசெய்து
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி

வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை
பாலுன் வாங்கினாய்

முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே!
மண் அளந்து கொண்ட காலனே!

(த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ.
அஞ்சனந்த வண்ணன் ஆய

மைபோன்ற காந்தியையுடையனான
ஆதிதேவன் அல்லையே

ஆதிபுருஷனன்றோ?

வியாக்யானம் –

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து –
வெவ்விய சினத்தை உடைய குவலயாபீடத்தினுடைய வெளுத்த கொம்பை அநாயாசேந
முறித்து -வெவ்விய சினம் -அதி கோபம் -அதினுடைய சினமும் ஹிம்சா பரிகரமான
கொம்பும் பய ஹேதுவானபாதி கொம்பினுடைய வர்ணமும் பய ஹேதுவாய் இருக்கிறது
ஆய்த்து இவர்க்கு –

உருத்த மா கஞ்சனைக் கடிந்து –
அது கேட்டு க்ருத்தனாய் ப்ரக்ர்த்யா பலோத்தரனான கம்சனனுடைய நினைவைக் கடிந்து –
அவன் நினைத்த நினைவை அவன் தன்னோடே போக்கி

காலநேமிர் ஹதோயோ சௌ –

வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி –பாலுள் வாங்கினாய் –மண்ணளந்து கொண்ட காலனே –
என்று அந்வயம்

குவலயாபீடத்தை போலேயும் கம்சனை போலேயும் எதிரியாக தோன்றுகை

அன்றிக்கே –தாய் வடிவு கொண்டு -வஞ்சனையால் வந்த பூதனை உடைய ப்ராணனை
பாலோடு கூட வாங்கினாய் –

அவளும் தாயாய் முலை கொடுக்க வந்தாள் –

இவனும் பிள்ளையாய் ஆதாரத்தோடு அம்முலைப் பாலை அமுது செய்தான் –

துஷ் ப்ரக்ர்திகளுக்கு நாசகரமான தர்மி ஸ்வபாவத்தால் அவள் நினைவு அவள் தன்னோடே போன வித்தனை –
முலை வழியே ப்ராணனை வாங்கின ஆச்சர்யத்தாலும் துர்வர்க்கத்துக்கு ஜ்ஞாததயா
அன்றிக்கே சத்தையா நாசகன் ஆகையாலும் சர்வாதிகன் நீயே என்கை –
ஸ்த்நயம் தத் விஷ சம்மிச்சம் ரஸ்ய மாஸீஜ் ஜகத் குரோ -என்னக்  கடவது இறே

உருத்து -என்ற பாடமான போது
குவலயாபீட நிரசநத்தாலும் திரு உள்ளத்திலே சினம் மாறாமையைச் சொல்லிற்று
ஆக கடவது –

மண்ணளந்து கொண்ட காலனே –
பூ பாரமான கம்ச நிரசனம் அன்றிக்கே தன் சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைகாக
ப்ரஹ்மாதி சகலஜந்துக்கள்  தலைகள் வாய்த்த திருவடிகளை உடையவனே

காலனே -என்று பிரதிகூலர்க்கு மர்த்யு யானவனே என்றுமாம் –

அஞ்சனத்து வண்ணனாய ஆதி தேவன் அல்லையே –
நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகஉபாஸ்வரா -என்கிறபடியே விலஷண
விக்ரஹ உக்தனாய் ஜகத்துக்கு உத்பாதகனாய் அத்தாலே உஜ்வலன் ஆனவன்
அல்லையோ –

ஜகத் காரணவத்தோபாதி அப்ராக்ர்த திவ்ய விக்ரஹ யோகமும்
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம் என்கை –

————————————————————————————————–

44 பாட்டு -அவதாரிகை –

மண்ணளந்து கொண்ட காலனே -என்று முறை அறிவித்தபடியும்
அஞ்சன வண்ணன் -என்று முறை அறிந்தவர்கள் ஆஸ்ரயிக்கைக்கு சுபாஸ்ரயமான
வடிவும் ப்ரஸ்துதமாய் நின்றது கீழ்

க்ருத்யாதி  யுகங்களிலே சேதனர் சத்வாதி குண அநுகூலமாக ச்வேதாதி வர்ணங்களை
விரும்புகையாலே அந்த காள மேக நிபாஸ்யமான நிறத்தை யழிய மாறி அவர்களுக்கு
வர்ணங்களைக் கொண்டு அவ்வவ காலங்களிலே முகம் காட்டச் செய்தேயும்
சம்சாரிகள் காற்கடைக் கொள்ளுவதே -இது என்ன துர்வாசநா  பலம் -என்கிறார் –

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44-

பதவுரை

பாலின் நீர்மை

பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
செம்பொன் நீர்மை

சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை

பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை

அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்று இவை நிறைந்த

என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற
காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை

நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
வையகம்

இவ்வுலகத்திலுள்ளவர்கள்
மறைத்தது

திரஸ்கரித்தது
என்ன நீர்மை

என்ன ஸ்வபாவம்!

வியாக்யானம் –

பாலின் நீர்மை –
க்ர்த யுகத்தில் உள்ளார் சத்வ ப்ரசுரராய் வெளுப்பு உகக்குமவர்கள் ஆகையாலே
அவர்களுக்கு பால் போன்ற நிறைத்தைக் கொள்ளும் ஸ்வபாவம் –அதாகிறது நிறம் –
வளை வுருவாய்த் திகழ்ந்தான் -என்றும் -சங்க வண்ண மன்ன மேனி -என்றும் –
சொல்லுகிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -என்றது -இவ் வெளுப்புக்கு ஆஸ்ரயம்
சர்வ ரச -என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக –

செம்பொன் நீர்மை –
த்ரேதா யுகத்திலே வந்தால் -ருக்மாபம் -என்றும் –
கட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்றும் சொல்லுகிறபடியே
சிவந்த நிறத்தை கொள்ளும் -சேயன் என்றும் த்ரேதைக் கண் -என்கிற ஸ்தானத்திலே –
செம்பொன் நீர்மை -என்றது அந் நிறத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
என்று தோற்றுகைக்காக –

பாசியின் பசும்புறம் போலும்  நீர்மை –
த்வாபர யுகத்திலே வந்தால் பாசியினுடைய புறத்தில் பசுமை போல ஸ்ரமஹரமான
திரு நிறத்தை உடையவனாய் –

பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை –
கலி யுகத்தில் வந்தால் எல்லா வடிவும் கொண்டாலும் அபிமுகீ கரிப்பர் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான நீல நிறமாய் இருக்கும் –

நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்னக் கடவது இறே –

கலௌ ஜகத் பதிம் -அழகிய தடாகத்திலே வண்டுகள் நெருங்கப் படிந்து மது பாநத்தை
பண்ணி -அத்தால் வந்த ஹர்ஷத்தாலே சிறகு விரித்து வுலவா நின்றுள்ள நீலப்
பூவின் நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் -இத்தால் ஸ்ரமஹரமாய்
செவ்வியை உடைத்தான நீலப் பூ என்கை –

பொற்பு-அழகு

விண்டல்-அலர்தல்

யென்றிவை நிறைந்த கால நான்குமாய் –
ஆஸ்ரித அர்த்தமாகக் கொள்ளும் அந் நிறங்கள் குறைவற்று இருந்துள்ள சதுர் யுகமாய் –
இந் நிறங்கள் நாலு யுகங்களிலும் குறைவற்று இருக்கை

மாலின் நீர்மை –
இப்படி இருக்கிற சர்வேஸ்வரனுடைய நீர்மையை -இஸ் சௌலப்யத்தை –

வையகம் மறைந்ததென்ன நீர்மையே –
பூமியில் உள்ளார் ஆஸ்ரயியாதே காற்கடைக் கொண்டது என்ன துர் வாசனையாலே தான்
மஞ்சா க்ரோசந்தி -என்னுமாபோலே தத் அந்தர்பூதரை சொல்லுகிறது –

மறைத்தது -என்கிறது -குண மாயா சமா வ்ர்த -என்னுமா போலே பகவத்
அனுக்ரஹத்தையும் அதிசயித்து இருப்பதே -அநாதி கால துர்வாசனை என்கை –

———————————————————————————

45 பாட்டு –அவதாரிகை –
பகவத் சௌலப்யத்தையும் அதிசயத்து இருந்துள்ள சம்சாரிகளுடைய துர்வாசனையால்
வந்த இழவைச் சொன்னார் கீழ் –
இதில் அவர்களில் அந்யதமனான எனக்கு தேவரீர் உடைய பரத்வ சௌலப்யங்களையும் –
ஆஸ்ரிதருக்கு எளியனாய் அநாஸ்ரிதருக்கு அரியனாய் இருக்கிற படியையும் காட்டி
என்னை அனந்யார்ஹம் ஆக்குவதே -இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் –

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-

பதவுரை

அனந்தன் மேல் கிடந்த

திருவனந்தாழ்வான்மேலே  சாய்ந்தருள்கின்ற
எம் புண்ணியா

எங்களுடைய  ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே!
புனம் துழாய் அலங்கல்

தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய
அம் புனிதனே

பரமபாவகனே!
மண் உளாய்

லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்;
விண் உளாய்

பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்;
மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய்

இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்;
நின் தமர்

உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு
கண்ணுளாய்

சக்ஷுர்விஷயமாகாநின்றாய்;
சேயை

(மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்;
என்ன மாயை

இது என்ன ஆச்சரியம்!

வியாக்யானம் –

மண்ணுளாய் கொல் –
அவாக்ய அநாதர -என்கிறபடியே பூரணரான தேவரீர் -சர்வ சமாஸ்ரயணீயர் ஆகைக்காக
-சாபேஷமாய் -அப்ராக்ர்தமாய் -அதீந்த்ரியமான விக்ரஹத்தை ப்ராக்ர்த சஜாதீயம்
ஆக்கிக் கொண்டு அவதரித்து சஷூர் விஷயமானாய் –

கொல் -என்று ஏகாஸ்ரயத்தில் விருத்த கருமங்கள் காண்கையாலே இது என்னாய்
இருக்கிறது என்கிறார் –

அதாகிறது -ஸீதா வியோகத்தில் கலக்கமும் -ஒரு திரயக்குக்கு
மோஷ ப்ரதானமும் -ப்ர்ச்சாமி கிஞ்சந –

விண்ணுளாய் கொல் –
அஸ்பஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெருமையை
உடையையாய்

கொல் –
நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாஹகனாய் இருக்கையும் குஹ சபரீ சுக்ரீவாதிகளுக்கு
நிர்வாஹகனாய் இருக்கையும் ஆகிற இது என்னாய் இருக்கிறதோ என்கிறார் –

மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய் கொல் –
இப் பரத்வ சௌலப்யங்கள் ப்ரக்ர்தி ஸ்பர்சத்தால் வந்த விபரீத ஜ்ஞாநத்தை உடையராய்
பிரயோஜநாந்த பரரான சம்சாரிகள் மநோரதிக்கும் மநோரதத்துககும் அவ்வருகாம்படி இருத்தி

என்ன மாயை –
என்ன மாயை -என்கிற இது இப்பாட்டின் முடிவிலே கிரியையாகக் கடவது –

நின்தமர் கண்ணுளாய் கொல்-
உன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு -பரித்ராணாய ஸாதுநாம் –
என்கிறபடியே உள்ளபடியை சாஷாத் கரிப்பியா நிற்றி –

சேயை கொல் –
ஆஸ்ரித விரோதிகளுக்கு உன்னை அறிய ஒண்ணாதே எதிரிட்டு முடிந்து போம் படி
தூரச்தனாய் இருப்புதி
விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்னக் கடவது இறே

கொல் –
சம்பந்தம் சமாநமாய் இருக்க அநந்ய பிரயோஜனர் பக்கலிலும் தத் விரோதிகள் பக்கலிலும்
உண்டான இஸ் ஸ்வபாவங்கள் என்னாய் இருக்கிறதோ

இவ் விருத்த தர்ம ஆஸ்ரயமாகிற தேவரீருடைய பிரபாவம் பிரமாண சித்தம் ஆகையாலே
பொய் என்ன ஒண்ணாது -விருத்த ஸ்வபாவங்கள் ஆகையாலே மெய் என்ன ஒண்ணாது –

அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா –
அது எல்லாம் கிடக்க -திருவநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளின வடிவு அழகைக் காட்டி
தேவரீர் உடைய ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வபாவத்தையும் என்னுடைய அனன்யார்ஹ
சேஷத்வத்தையும் எனக்கு உணர்தினவனே –

பும்ஸ்த்வம் நயதீதி புண்ய -என்கிறபடியே இவருடைய ஸ்ரூபத்தையும்
பிரகாசிப்பிக்கைக்கு உபாயம் ஆனவனே

புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே —
தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன –

சோரேண ,ஆத்ம அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன –

இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே

என்ன மாயை
இது என்ன ஆச்சர்யம்
என் திறத்தில் நீ செய்து அருளின இவை என்னால் பரிச்சேதிக்கலாய் இருந்தது இல்லை
என்கிறார் –

————————————————————————————————

46 பாட்டு –அவதாரிகை
அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -என்று ஸ்வரூபத்தை அறிவிக்கையாலே
சம்சாரத்திலே வந்து ஆவிர்பவித்தும் -அவதரித்ததும் -பெரிய திருவடி தோளிலே ஏறி
ஆஸ்ரிதர் இருந்த இடத்திலே சென்று ரஷித்த காலம் எல்லாம் இழந்தேன் –
இனி இழவாதபடி -விரோதி நிவர்த்தி பூர்வகமாக நான் உன்னைப் பெரும் விரகு
அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46-

பதவுரை

தோடு பெற்ற

இதழ்களையுடைய
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாயினாலாகிய
அலங்கல்

மாலையானது
ஆடு

விளங்கப்பெற்ற
சென்னியாய்

திருமுடியையுடைவனே!
கோடு

ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை
பற்றி

தரித்து
ஆழி

திருவாழியாழ்வானை
ஏந்தி

ஏந்திக்கொண்டு
அம் சிறைபுள்

அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை
ஊர்தி

வாஹகமாக நடந்தாநின்றார்;
நாடு பெற்ற நன்மை

மற்ற பேர்கள் பெற்ற நன்மையை
கண்ணம் இல்லையேனும்

நான் பெற்றிலேனாகிலும்
காயினேன்

நீசனான அடியேன்
வீடுபெற்று

மோக்ஷத்தைப் பெற்று
இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ

இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை
சொல்

அருளிச் செய்யவேணும்.

வியாக்யானம் –

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய் –
உன் திருமேனியின் ஸ்பர்சத்தால் தழைத்து குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையை
உடையையாய் -ப்ரணதஜனங்கள் பக்கல் முகப்ப்ரதானத்தாலே அசைந்து வருகிற
திரு முடியை உடையையாய் –

சர்வேஸ்வர ஸ்பர்சம் இறே -சேதனருக்கு அசங்கோசத்தக்கும் தாப சாந்திக்கும் ஹேது –

இத்தால் கண்ட போதே ருசி பிறக்கும்படியான ஒப்பனை அழகையும்
ஆபிமுக்யம் பண்ணினார் பக்கலில் முகப்ப்ரதானம் பண்ணும் நீர்மையும் சொல்லிற்று

தோடு –பூவிதழ்
கோடு பற்றி யாழி யேந்தி –
ஆஸ்ரிதர் விரோதிகளை த்வநியாலே மண் உண்ணும்படி பண்ணுகைக்கு
ஸ்ரீ பாஞ்சஜந்யதைப் பற்றி -கருதுமிடம் பொருது -என்னும்படி எதிரிகளை சென்று
அழிக்கைக்கு திருவாழியை ஏந்தி -ஆஸ்ரிதருக்கு முகம் கொடுக்கும் அளவு
அன்றிக்கே -அவர்கள விரோதிகளையும் அழியச் செய்யும் பரிகரங்களை உடையவன்
என்கை

யஞ்சிறைப் புள்ளூர்தியால் –
ஸ்பர்சத்தாலே அழகு பெற்ற திரு சிறகுகளை உடைய பெரிய திருவடியை நடத்தா நிற்றி –
அவனை மேற்கொண்டால் ஈஸ்வரனுக்கு அலங்காரமாய் இருக்கும்படியைச் சொல்லிற்று
ஆகவுமாம் –

இத்தால் ஆஸ்ரிதர் இருந்த சம்சாரத்தில் ஆபத் தசைகளில் சென்று
முகம் காட்டி ரஷிக்கும் நீர்மையைச் சொல்லிற்று -இப்படி தன்னை தூளிதானம் பண்ணின
காலம் எல்லாம் இழந்தேன் என்கிறார் –

ஆல்-என்று விஷாத அதிசய ஸூசகம்

நாடு பெற்ற நன்மை நண்மை யில்லை யேனும் –
இருந்ததே குடியாக காணலாம்படி திருவடியை மேற் கொண்டு சஞ்சரித்த இந் நன்மையை
நான் கிட்டப் பெற்றிலேன் ஆகிலும் –

நான் விமுகனான காலம் எல்லாம் இழநதாலும் -எனக்கு ருசி பிறந்த இன்றும் தேவரீர்
உள்ளீராய் இருக்க இழக்க வேணுமோ என்கை-

நாயினேன் வீடு பெற்று  –
நாயினேன் –
அநாதி காலம் திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து சர்வராலும் பரிபூஹதனான நான்
உகந்து தொட்டாலும் எதிர்தலைக்கு அசுத்தியை விளைப்பிக்கும் நிஹீநதையை உடைய நான்

வீடு பெற்று –
இப்படி பட்டு இருந்துள்ள நான் உனக்கு ஸத்ர்சராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள் பேற்றைப் பெற்று
அகிஞ்சனான நான் பூரணனுடைய பேற்றைப் பெற்று

இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே —
இச் சரீரத்தினுடைய விமோசனத்தோ டே இனி ஒரு சரீர பரிக்ரஹம்
பண்ண வேண்டாதபடி சம்சாரத்தை அறுக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –

சிறைக்கூடத்தில் இருக்கும் ராஜ குமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்பு
சிறையை வெட்டி விட்டால் போலே ப்ராப்தி முன்பாக விரோதியைப் போக்கும்
விரகு அருளிச் செய்ய வேணும் –

————————————————————————————————

47- பாட்டு –அவதாரிகை

பர வியூஹ விபவங்கள் அடங்க ஆஸ்ரயணீய ஸ்தலம் அன்றோ –
அதிலே ஓர் இடத்தைப் பற்றி ஆஸ்ரயித்து நம்மைப் பெற மாட்டீரோ என்ன –
அவ்விடங்கள் எல்லாம் நிலம் அல்ல –இனி எனக்கு பிரதிபத்தி பண்ணி
ஆஸ்ரயிக்க வல்லதோர் இடத்தை அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே –47-

பதவுரை

காரொடு ஒத்த மேனி

காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய்
நங்கள் கண்ண

எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே!
விண்ணின் நாதனே

நித்யஸூரிகட்குத் தலைவனே!
நீர் இடத்து

(நீதி) திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே
கிடத்தி

பள்ளிகொண்டருளா நின்றாய்
என்பர்

என்று (ஞானிகள்) சொல்லுவார்கள்
அன்றியும்

அது தவிரவும் (நீ)
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை.
எல்லை இல்லை

(நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை.
என்பர்

என்றும் சொல்லுவார்கள்
ஆதலால்

இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே
காயினேன்

மிகவும் நீசனாகிய அடியேன்.
சேர்வு இடத்தை தெரிந்து

ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு
இறைஞ்சும் ஆ

ஆச்ரயிக்கலாம்படியை
சொல்

அருளிச் செய்யவேணும்.

 

வியாக்யானம் –

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண –
காளமேகத்தோடு ஸதர்சமாய் ஆகர்ஷமான வடிவை உடையையாய் -அத்தை
ஆஸ்ரிதருக்கு ஸ்வம்மாக்கி வாய்த்த கிருஷ்ணனே –

இத்தால்
கால விப்ர கர்ஷத்தால் எனக்கு ஆஸ்ரயிக்க விரகு இல்லை -என்கிறார் –
அந்த கால விபர கர்ஷமாகிற குற்றம் இன்றிக்கே நித்தியமாய் இருக்கிற பரமபதத்தில்
வடிவைப் பற்றி ஆச்ரயிக்க மாட்டீரோ -என்ன

விண்ணின் நாதனே –
அவ்வடிவை நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை ஒழிய
தேச விபர கர்ஷத்தாலே எனக்கு ஆஸ்ரயிக்க விரகு இல்லை -என்கை

நீரிடத்து அரவணைக் கிடத்தி –
தேச கால விபர கர்ஷன்கள் ஆகிற குற்றங்கள் இன்றிக்கே ஷீராப்தியிலே நித்ய
சந்நிஹிதர் அல்லோமோ என்ன –
அவ்விடமும் ஸ்வேத த்வீபவாசிகளுக்கு காதாசித்கமாக காணலாம் இத்தனை அல்லது
அஸ்மதாதிகளுக்கு வரவு ஒண்ணாது-

என்பர் –
இவ்வர்த்தம் வேதங்களும் ஜ்ஞானாதிகரான வைதிகர்களும் சொல்லக் கேட்டோம் இத்தனை –
அஜாயமாநோ  பஹூதா விஜாயதே -என்றும் -யாத்ரா வதீர்ண க்ருஷ்ணாக்ய பரப்ரஹ்ம நராக்ர்தி –
என்று க்ருஷ்ணாவதாரமும் கேட்டு போம் இத்தனை –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பச்யந்தி ஸூ ரயே -என்று பரம பதத்தில் இருப்பும் ஸ்ருதிகள்
சொல்லக் கேட்ட இத்தனை –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன -என்று ஷீராப்தியில் வாசமும்-ஜ்ஞானாதிகர் சொல்லக் கேட்ட வித்தனை

நீரிடத்து –கடல் இடத்து

அராவணை -அரவணை

அன்றியும் -அது ஒழியவும்

ஓர் இடத்தை அல்லை
ஓர் இடத்தில் வர்த்திகிறாய் இல்லை –சர்வகதன் -என்கை -இதுவும் –
மாம் உபாஸ்வ -என்றும் -மாமேவ விஜாநீஹி -என்றும் இத்யாதிகளிலே சுபாஸ்ரயமாக
உபாசனத்ரைவித்யத்தில் சொல்லப்பட்டது இறே

தஹர சாண்டில்ய வித்யை -வைஸ்வா நரோபகோசலாதி வித்யைகளிலே
ஆஸ்ரயணீய ஸ்தலங்களுக்கு எல்லை இல்லை இறே -அவையும் –
யமாத்மா நவேத -என்று பிரதிபத்தி விஷயம் அல்லாமையாலும் -த்ரைவர்ணிக
அதிகாரம் ஆகையாலும் நிலம் இல்லை

ஆதலால் –
பரமபதம் தேசத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும்
அவதாரம் காலத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும் –
ஷீராப்தி அதிக்ர்த அதிகாரம் ஆகையாலும்
அந்தர்யாமித்வம் பிரதிபத்திக்கு அபூமி ஆகையாலும் -த்ரைவர்ணிக அதிகாரம் ஆகையாலும் –
நிலம் அல்ல –

சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே —
அயோக்யனான நான் -இதம் -என்று புத்தி பண்ணி ஆஸ்ரயிக்கலாம் படி ஆச்ரயணீய
ஸ்தலத்தை அருளிச் செய்ய வேணும் –

————————————————————————————————-

48 பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரயணீய ஸ்தலங்களை சாமான்யேன பாரித்து வைத்தோம் ஆகில்
அவற்றில் ஒன்றைப் பற்றி ஆஸ்ரயிக்கும் ஆஸ்ரய  பூதருக்கு ஆஸ்ரயண
அநுகூலமாக பல ப்ரதராய் இருக்கும் அது ஒழிய – ஆஸ்ரயணீய ஸ்தலத்தை
விசேஷித்து சொல்லுகை நமக்கு பரமோ என்ன –
ஆஸ்ரிதர் நாஸ்ரிதர் விபாகம் அன்றிக்கே நின்ற நின்ற நிலைகளிலே பர ஹிதமே
செய்யும் ஸ்வபாவனான பின்பு என் அபேஷிதம் செய்கை உனக்கே பரம் அன்றோ -என்கிறார்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

குன்றில் நின்று

திருவேங்கடமலையில் நின்றும்
வான் இருந்து

பரமபதத்தில் வீற்றிருந்தும்
நீள் கடல் கிடந்து

பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும்
மண் ஒன்று சென்று

இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும்
ஒன்று அதை உண்டு

மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும்
ஒன்று அது பன்றி ஆய் இடந்து

மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும்
கன்று சென்ற நாள் அவற்றுள்

கன்றாய் சென்ற நாட்களிலே
நல் உயிர் படைத்து

நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும்
அன்று

அப்போது
அவர்க்கு

அந்த மனிதர்கட்கு
தேவு

(தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை
அமைத்து

ஏற்படுத்தியும் (இப்படிகளாலே)
அளித்த

நன்மை செய்தருளின
ஆதிதேவன் இல்லையே

பரமபுருஷன் நீயேகாண்.
பாட்டு

மன்னுமாமலர்

வியாக்யானம் –

குன்றில் நின்று –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தாருக்கு முகம்
கொடுக்கைகாக சிலர் அபேஷியாது இருக்க திருமலையிலே நின்ற நிலை

வான் இருந்து –
அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு நித்ய அனுபவம் பண்ணுகைகாக
பரம பதத்திலே இருக்கிற பெரிய மேன்மையாய் உடையையாய் இருக்கச் செய்தே
யன்றோ திரு மலையில் வந்து நின்றது

நீள் கடல் கிடந்தது –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே
அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்று

மண் ஓன்று சென்று –
இந்த்ரன் இழந்ததும் மகா பலி அபஹரிததும் த்ரை லோகத்து அளவாய் இருக்க
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக -ஒருத்தர் அபேஷியாது இருக்க எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்திலையோ -பிரதான பூமியை அளந்து –
சென்று -என்று பத விஷேபமாய் அளந்து என்றபடி

பூமியிலே ஓர் ஓர் இடங்களிலே சென்று அவதரித்தது என்னவுமாம்

அ து  ஒன்றை உண்டு –
அந்த பிரதானமான பூமியை பிரளயம் கொள்ளப் புக அர்தித்வ நிரபேஷமாக
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தது இல்லையோ

அது ஓன்று இடந்து பன்றியாய் –
மஹா வராஹமாய் பிரளயம் கொண்ட பூமியை உத்தரித்து

நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து –
நன்றாகச் சென்ற நாள்களிலே மனுஷ்யர்களை ஸ்ர்ஷ்டித்து –நன்று சென்ற நாள் –என்று
மஹா வராஹ வேஷத்தைக் காணலாம் காலம் என்னுமத்தாலே வராஹ கல்பத்தைக்
கொண்டாடுகிறார் –நல்லுயிர் என்று சாஸ்திர அதிகாரத்தாலே ஸ்ரேஷ்டரான
மனுஷ்யர்களைச் சொல்லுகிறது -துர்லபோ மானுஷோ தேஹ -என்னக்  இறே –

அவர்க்கன்று தேவமைத்தளித்த –
அம்  மனுஷ்யர்களுக்கு ரஜஸ் தமஸ் ஸூக்கள் மேலிட்டு பகவத் விமுகரான அன்று –
ஆஸ்ரயணீயராக தேவ ஜாதியை ஸ்ர்ஷ்டித்து அளித்த

ஆதி தேவன் அல்லையே
இப்படி நின்ற நின்ற நிலைகளில் பரஹிதங்களை ப்ரவர்த்திப்பிக்கிற ஜகத் காரண பூதனான
சர்வேஸ்வரன் அல்லையோ –
ஆராதகரான மனுஷ்யர்களையும் ஆராத்யரான தேவர்களையும் ஸ்ர்ஷ்டிக்கையாலே
ஜகத் காரண பூதனான நிரூபாதிக தேவன் ஆகையாலே சர்வ சமாஸ்ரயணீயன் அல்லையோ –

ஸஹஸ்ரசீர்ஷம் தேவம் -என்றும் –

சாஷாத் தேவ புராணோ சௌ -என்றும் சொல்லக் கடவது இறே –

———————————————————————————————————-

49 பாட்டு –அவதாரிகை –
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே -என்று இவருக்கு இவர் இருந்த
பூமியிலே சஷூர் விஷயமாய் -அவதாரங்களில் உண்டான நீர்மைகளும் இழக்க
வேண்டாதபடி –குண பூர்த்தியோடே கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஸம்ர்தியைக் காட்ட கண்டு -அனுபவிக்கிறார்-

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

வியாக்யானம் –

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி-
மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீ ய வேஷை யான கூனி –
இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –

கூனி கூன் –
கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்

உண்டை கொண்டு அரங்கவோட்டி-
லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித்
தெறித்து -அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-

உள் மகிழ்ந்த நாதனூர் –
ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே
ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி
உகப்பானும் தானே என்கை –

ஆக –சக்கரவத்தி திருமகனுடைய நீர்மையும் நம்பெருமாள் பக்கலிலே காணலாம்
என்கிறார் –

நண்டை உண்டு நாரை போர –
நண்டை விழுங்கின நாரை யானது விழுங்கின கனத்தாலே மலை பேர்ந்தால் போலே பேர

இத்தால் -பாதக பதார்த்தத்தின் உடைய கணம் சொல்லிற்று –

வாளை பாய –
அந் நாரைக்கு தன் மேலே நோக்கு என்று நினைத்து பயப்பட்டு வாளை யானது துள்ள –

நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் –
அதன் மிகுதியைக் கண்டு கெண்டை யானது பயத்தாலே பரப்பு மாற
பூத்த நீலத்தின் இருட்சியை அண்டை கொண்டு -அரணுக்கு உள்ளே வர்த்திப்பாரைப்
பயம் கெட்டு மேய்ந்து வர்த்திக்கிற தேசம் –

இத்தால் -சம்சாரிகளை நலிகிற அஹங்காரத்தைக் கண்டு பீதராய் –முமுஷுக்களாய்
உபாசநத்திலே இழிந்த சாதகரைக் கண்டு இவை இரண்டும் பய ஸ்தானம் என்று
சர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரராய் -ஸ்வரூப அநுரூபமான
பகவத் குண அநுபவமே யாத்ரையாய் வர்த்திக்கும் பிரபன்னரருக்கு ஸ்மா ரகமாய்
இருக்கிறது ஆய்த்து -கெண்டைகளினுடைய யாத்ரை -என்கை-

அம் தண் நீர் அரங்கமே –
அழகியதாய் -ஸ்ரமஹரமான ஜல சம்ர்தியை உடைத்தான கோயில்
தாபத்த்ரயாதூரருக்கு தாபஹரமான தேசம் என்கை –

நீலமே அண்டை கொண்டு -என்று ச்யாமமாய் ஸூகுமாரமான நீலத்தை
அண்டை கொண்டு என்கையாலே –
பெருமாளுடைய சௌந்தர்யமே அபாஸ்ரயமும்
அத்தை ஆஸ்ரயித்து இருப்பாருக்கு போக்யமும் அதுவே என்று கருத்து –

இப்பாட்டில் சொன்ன ஸ்வாபதேசங்கள் இவர்க்கு நிலம் இல்லாத போது
தேசத்தை ஆஸ்ரயித்து அனுபவிக்க இழிந்தவர்க்கு இப்பாட்டால் ஒரு பிரயோஜனம் இல்லை –

————————————————————————————————

50- பாட்டு –அவதாரிகை –
ஆந்தர விரோதத்தை போக்க வல்ல அவதார வைபவத்தையும் -பாதக பதார்த்த
சகாசத்திலே நிர்பயராய் வர்திக்கலாம்படி அபாஸ்ரயமான தேச வைபவத்தை
சொன்னார் -கீழில் பாட்டில் –
இதில் –பாஹ்ய விரோதத்தைப் போக்க வல்ல அவதார வைபவத்தையும்
சர்வ சமாஸ்ரயணீ யமான தேச வைபவத்தையும் – அருளிச் செய்கிறார் –

வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50

வியாக்யானம்-

வெண் திரைக் கரும் கடல் –
வெளுத்த திரைகளை உடைத்தான கரும் கடல் –
திரைக் கிளர்த்தியின் மிகுதி சொல்லிற்று –

சிவந்து வேவ-
கறுத்த கடலோடு வெளுத்த திரைகளோடு வாசியற அக்நியின் நிறமான சிவப்பே
நிறமாய் மறுகும்படி தக்தமான படி –
இத்தால் -ஆஸ்ரித ரஷணத்துக்கு வருணன் விரோதியாக அவனுக்கு இருப்பிடமான
கடலை அழியச் செய்தபடி

முன்னொரு நாள் திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர் –
இருபத்தெட்டாம் சதுர் யுகத்தில் மிக்க வலியை உடைய ஸ்ரீ சார்ங்கத்தை
சாப மாநய -என்கிறபடியே வாங்கி அம்புகளை ஏவின ஆண் பிள்ளை சேருமூர் –

உள் மகிழ்ந்த நாதனூர் -என்று ஆஸ்ரித ரஷணம் ஸ்வயம் பிரயோஜனமாக பண்ணும்
நீர்மையைச் சொல்லிற்று -கீழில் பாட்டில் –

இதில் -விரோதி நிரசன சக்தியைச் சொல்லுகிறது

இத்தால் -அவதாரத்துக்கு பிற் பாடரான ஆஸ்ரிதருக்கு ஸ்வ அநுபவ விரோதியான
சப்தாதிகளில் ப்ராவண்யத்தைப் போக்குகைக்காக கோயிலிலே நித்ய வாஸம்
பண்ணுகிறபடி -என்கை-

திண்மை என்றும் திறல் என்றும் வலியைச் சொல்லுகையாலே மிக்க வலிமை  என்றபடி

எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர் –
எட்டு திக்குகளிலும் உள்ள சமூஹங்கள் வந்து பெருமாளைத் திருவடி தொழுது
தீர்த்தமாடி -தங்கள் அபிமத விரோதியான சர்வ பாபங்களையும் போக்கும் சுத்தியை
உடைய நீரை உடைத்தாய் –
சர்வ சக்தி மயந்தாம சர்வ தீர்த்த மயம் சர -சர்வ புண்ய மயோ தேச -சர்வ தேவ மயோ ஹரி
என்னக் கடவது இறே

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -31-40-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 23, 2013

31 பாட்டு –அவதாரிகை –

கீழில் பாட்டில் அவதாரங்களில் உண்டான ரஷகத்வத்தை அனுபவிக்கிறார் -இதில்
ஆஸ்ரயேண உன்முகர் ஆனவர்கள் திறத்தில் அவதார கார்யமான உபகார பரம்பரைகளை-அனுபவிக்கிறார் –

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-

பதவுரை

காலநேமி காலனே!

காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே!
கணக்கு இலாத கீர்த்தியாய்

எண்ணிறந்த புகழையுடையவனே!
பண்டு

முன்பொருகால் (ப்ரளய காலத்திலே)
ஞாலம் எழும் உண்டு

ஏழுலகங்களையும் அமுது செய்து
பாட்டு

மின்னறதெயிற்றரக்கன் வீழ
ஓர் பாலன் ஆய

ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த
பண்பனே!

ஆச்சர்யபூதனே
வேலைவேவ

கடல்நீர் வெந்து போம்படி
வில்வளைத்த

வில்லை வளைத்த.
வெல் சினத்த  வீர!

எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே!
நின்பாலர் ஆய பக்தர் சித்தம்

உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி
முத்தி செய்யும்

(அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற
மூர்த்தியே!

ஸ்வாமியே!

வியாக்யானம் –

கால நேமி காலனே
கால நேமி யாகிற அசுரனுக்கும் ம்ர்த்யு யானவனே –

காலநேமி ராவணனின் மாதூலன்
இத்தால் முமுஷுக்களாய் தேவரீரை ஆஸ்ரயிக்கையிலே உத்யுக்தர் ஆனவர்களுடைய

ஆஸ்ரயண விரோதி பாபங்களை -கால நேமியை நசிப்பித்தால்  போலே நசிப்பிக்குமவன் என்கை –
பிராட்டி பொறுப்பிக்க ஈஸ்வரன் பொறுக்குமாய் இருக்கச் செய்தேயும் -தம் அதுக்கு அஞ்சின படியாலே
கால நேமியை த்ருஷ்டாந்தீ கரிக்கிறார் இறே

கணக்கிலாத கீர்த்தியாய் –
ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமாய் -எண்ணிறந்த சௌலப்யாதி கல்யாண குணங்களை உடையை என்னும்
குணவத்தா ப்ரதையை உடையவனே

குடந்தையன் -கோவலன் -என்று இந்த சௌலப்யாதிகள் பரத்வத்திலும் பிரசித்தம் இறே
அபார காருண்யம் -தொடங்கி சௌந்தர்யம ஹோததே -என்னக் கடவது இ றே

ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
ஆஸ்ரயித்தால் பண்ணும் உபகாரத்தை சொல்லுகிறது –
சப்த த்வீபவதியான பூமியை உண்டு -பூர்வ கல்ப அவஸாநத்திலே அத்வதீய பாலனான
ஆச்சர்ய சக்தியை நிரூபகமாக உடையவனே

பண்பு -இயல்வு
த்ரை லோகத்துக்கும் உப லஷணம்

இத்தால் ஸ்வா தந்த்ரமே நிரூபகமாய் போந்த சம்சாரியை சேஷத்வமே நிரூபகம் என்னும் படி
பண்ண வல்ல சக்தியை உடையவன் -என்கை -அதாகிறது –
த்விதா பஜ்யே யமப்யேயம் ந நமேயம் -என்று இருக்குமவனை –

முஹூர்த்தம் அபிஜீவாவ-என்றும் –

நின்னலால் இலேன் காண்  -என்றும் சொல்லும்படி பண்ணுகை

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர-கடல் சுஷ்கத்ர்ண சமூஹம் போலே தக்தமாம்படி -வில் வளைத்தவனாய் –

பிரதி பஷத்தை வெல்லும் சினத்தை உடைய வீரனே –

இத்தால் ஆஸ்ரிதருக்கு ஸுவ அனுபவ விரோதி-வர்க்கத்தை அநாயாசேந போக்குமவன் என்கை

இவன் சினம் வென்றதின் பின் தான் தீரும் –
வெல் சினத்த வீரன் -என்கிறார் அதனால்

நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே
உன் திறத்தில் அநந்ய ப்ரயோஜனராய் -சாயாவா சத்வ மநு கச்சேத் -என்கிறபடியே
உன் பார்ச்வத்தை விடமாட்டாத பக்தர்கள் உடைய மனச்சு உன்னை ஒழிய வேறு
ப்ராப்ய ப்ராபகங்கள் உண்டு என்னும் நசை யறுக்க வல்ல மஹா பிரபாவத்தை
உடையவனே -இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம்

ஆஸ்ரித விஷயத்தில் கீழ் உக்தமான தன் படிகளை அனுசந்தித்தால் அது தன்னை
ஒழிய வேறு ஒன்றை அறியாதபடி பண்ணுமவன் என்கை –

————————————————————————————–

32 பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணும் இடத்தில் சக்கரவர்த்தி திருமகன் செவ்வைப்
பூசலாலே ராஷசரை அழியச் செய்தால் போலே விரோதி வர்க்கத்தை போக்கவுமாம் –
மகாபலி பக்கலில் வாமனனாய் அர்த்தித்துச் சென்று வஞ்சித்து அழித்தால் போலே அழிக்கவுமாம் –
ஆஸ்ரித விரோதி நிரசநத்தில் ஸ்வபாவ நியதி இல்லை

குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-

பதவுரை

குரங்கு இனம் படைகொடு

வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய்

கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு

அவ்விலங்கையிலுள்ள
அரக்கர்

ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க

அழியும்படி
வெம் சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி

வீரர்களில் தலைவன்
நீ

(எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க

நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு

உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க

குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே

ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து

(திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட

(மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே

தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.

வியாக்யானம் –

குரக்கினப் படை கொடு –
வானர சமூஹமான சேனையைக் கொண்டு –

குரை கடலின் மீது போய் –
கடலின் கிளர்த்தியையும் கோஷத்தையும் கண்டு -இக்கடலை எங்கனே கடக்கக் கடவோம் –
என்று அந்த சேனை பயப்படும்படி கோஷத்தை உடைத்தான கடலை தூர்த்து அதன் மேல
போய் -இத்தால் பிரபல பதார்த்தங்களை ஷூத்ர பதார்த்தங்களைக் கொண்டு அழிக்க
வல்லவன் என்கை –

அரக்கர் அரங்க –
அவ் அவபதாநத்தைக் கண்டு -வர பல புஜ பலங்களால் நமக்கு எதிரி இல்லை என்று
இருக்கும் ராஷசர் -போக்கடி தேடி அஞ்சும்படியாக

வெஞ்சரம் துரந்த வாதி நீ -அரக்கல் -கரத்தல் -அரங்க என்று மெல் ஒற்றாய்க் கிடக்கிறது

வெஞ்சரம் துரந்த –
பாவக சங்காசை -என்கிறபடியே அக்நி ஸ்த்ர்சங்களான திருச்சரங்களை நடத்தின

ஆதி நீ –
இலங்கைக்கு அரணான சமுத்ரத்தை தூர்த்து -அரணை  அழித்து -ராஷசர்கள் உடைய
ஹ்ருதயத்தை அழித்து -திருச்சரங்களாலே உடல்களைத் துணித்துச் செய்த ஆனைத்
தொழில்களாலே வீரர்களில் பிரதானனான வீரன் நீ -என்கிறார்

ஆதி -சப்தம் பிரதானத்தைச் சொல்லுகிறது

இரக்க மண் கொடுத்தவருக்கு –
நீ அர்த்தியாகச் செல்ல பிரத்யாக்யாநம் பண்ணுதல் -சுக்ரனுடைய உபதேசம் கேட்டல்
செய்யாதே பூமியைத் தந்த மகாபலிக்கு
இரக்கம் ஒன்றும் இன்றியே –
பூமியிலே அவனுக்கு ஒரு பத ந்யாஸமும் சேஷியாதபடி

பரக்க வைத்து அளந்து கொண்ட –
சிறு காலைக் காட்டி -மூன்றடி இரந்து -இரண்டடியாலே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்ட

பற்ப நாபன் அல்லையே –
புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு -காடும் ஓடையும் அளந்து கொண்டவன் அல்லையோ –
1-திருவடிகளின் சௌகுமார்யமும் பார்த்திலை –
2-மகாபலி பக்கல் ஔதார் யமும் பார்த்திலை –
3-அர்திக்கிறவன் பிரயோஜநாந்த பரன் என்றும் பார்த்திலை –

இந்த இந்தரனுடைய இரப்பையே பார்த்த இத்தனை இறே -இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம் –

——————————————————————————————-

33 பாட்டு –

அவதாரிகை –
ஆஸ்ரித ரஷணத்தில் ஸ்வபாவ நியதி இல்லாதவோபாதி ஆஸ்ரயிப்பாருக்கும்
ஜாதி நியதி இல்லை என்கிறார் –

மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

பதவுரை

மின் நிறத்து எயிறு அரக்கன்

மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன்
வீழ

மாளும்படி
வெம் சரம்

கொடிய அம்புகளை
துரந்து

அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி)
பின்னவற்கு

அவனது தம்பியான விபீடணனுக்கு
அருள் புரிந்து

க்ருபை செய்தருளி
அரசு அளித்த

பட்டாபிஷேகம் செய்து வைத்த
பெற்றியோய்!

பெருமானே!
நல் சிறத்து

நல்ல நிறத்தையுடையவளாய்
ஓர் இன் சொல்

ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய்
ஏழை

உன்பக்கல் சாபல்யமுடையவளான
பின்னை

நப்பின்னைப் பிராட்டிக்கு
கேள்வி

நாயகனானவனே!
மன்னு சீர்

நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய்
பொன் நிறந்த வண்ணன் ஆய

பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான
புண்டரீகன் அல்லையே

புண்டரீகாக்ஷனென்பவன்  நீயே காண்

வியாக்யானம் –

மின் நிறத்து எயிறு அரக்கன் –
மின் போலே ஒளியை உடைத்தான எயிற்றோடு கூடின -ராஷசனான ராவணன் –

மின் நிறத்து எயிறு -என்றது புஜ பலத்தால் வந்த செருக்கு ஸூசகமாய் இருக்கிறது

அரக்கன் -என்கையாலே அத் தோள் வலி பர ஹிம்சைக்கே யாகை ஜாதி ஸ்வபாவமாய்
இருக்கை -சத் பிரகிருதிகள் உடைய தோள் வலி இறே சாத்விகருக்கு ஒதுங்க நிழலாய்
இருப்பது —

வீழ வெஞ்சரம் துரந்து
அவன் முடியும்படியாக -பாவக ஸங்காசங்களான சரங்களை ஏவி –

பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய் –
அவன் தம்பிக்கு பிரசாதத்தைப் பண்ணி ராஜ்யத்தை கொடுத்த சீலத்தையை உடையவனே –
ராகவம் சரணம் கத -என்று அத்தையே கொண்டு ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அவன் தம்பி
என்று பாராதே –வத்யதாம் வத்யதாம் -என்று மஹா ராஜ ப்ரப்ர்திகள் வார்த்தையும் கேளாதே
நத்யஜேயம் -என்றும் -ஏதத் வ்ரதம் மம -என்றும் -பிரசாதத்தைப் பண்ணி -ராஜ்ய ஸ்பர்ஹை
அவனுக்கு இன்றிக்கே இருக்க -தாஸ வச்சாவமா நி தா -என்று புறப்பட விட்டான் என்று
அந்தலங்கா ராஜ்யத்தைக் கொடுப்பதே -இது என்ன ஸ்வபாவம் -என்கிறது

பெற்றி -ஸ்வபாவம்

நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ-
நல்ல நிறத்தையும் -இனிய பேச்சையும் உடையளாய் -தேவரீர் பக்கலிலே
அதி சபலையான நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே -இத்தால்
நப்பின்னை பிராட்டியாருடைய ரூப குணங்களும் ஆத்ம குணங்களும்
தேவரருக்கு போக்யமாய் இருக்குமா போலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தேவரீருக்கு
போக்யனாய் இருக்கும்படியை சொல்லுகிறது

மன்னு சீர்ப் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே —
நித்தியமான ஔ தார்யாதி குணங்களையும் -அந்தராதித்யே ஹிரண்மயே புருஷோ
த்ர்ச்யதே -என்றும் -ருக்மாபம் -என்றும் சொல்லுகிற ஸபர்ஹணீய விக்ரஹத்தை
உடையையாய் -யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ -என்கிறபடி
புண்டரீகாஷனாய் இருக்கிறவன் அல்லையோ –
இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம்

நிறம் -வடிவு

வண்ணம் -நிறம்

ஆக அவயவ சோபையும் -வர்ண சோபையும் சொல்லுகிறது
இத்தால் ஆதித்ய மண்டல மத்ய அவதாரத்தின் ஆத்ம குணங்களும் ரூப குணங்களும்
மஹிஷீ வர்க்கத்துக்கு போக்யமாய் இருக்குமா போலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
போக்ய பூதனாய் இருக்கிறபடியைச் சொல்லுகிறது –

——————————————————————————————-

34 பாட்டு –அவதாரிகை –
கீழில் பாட்டில் ருசி உடைய ஸ்ரீ விபீஷண  ஆழ்வானை ஜன்மத்தால் தாழ்வு
பார்க்காதே –விஷயீ கரிக்கும் சக்கரவர்த்தி திரு மகனுடைய நீர்மையை
அனுபவித்தார் –இதில் –
கார்ய காரணங்கள் என்ன –
பிரமாண ப்ரமேயங்கள் என்ன –
சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ -புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு
ருசி ஜனகனாய்க் கொண்டு -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த இது -என்ன
ஆச்சர்யம் -என்கிறார் –

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

பதவுரை

ஆதி ஆதி ஆதி நீ

மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்:
ஒரு அண்டம் ஆதி

அண்டத்துக்குட்பட்ட  ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்;
ஆதலால்

இப்படியிருக்கையாலே
சோதியாத சோதி நீ

பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்;
அது உண்மையில்

அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே
விளங்கினாய்

(வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்;
வேதம் ஆகி

வேதங்கட்கு நிர்வாஹகனாய்
வேள்வி ஆகி

யஜ்ஞ்களாலே ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணும் ஆய்

உபய விபூதிக்கும் நியாமகனாய்
ஆதி ஆகி

இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த
ஆயன் ஆய மாயம்

இடையனாய்ப் பிறந்தாமயம்
என்ன மாயம்

என்ன ஆச்சரியமோதான்.

வியாக்யானம் –

ஆதி யாதி யாதி நீ –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி யே த்ரிவித காரணமும்நீயே
எதுக்கு காரணம் ஆகிறது என் என்னில் -மஹதாதி விசேஷாந்தமான ப்ரகர்தி சிருஷ்டிக்கு –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே காரண பூதன் –

ஓர் அண்டமாதி –
மஹதாத்யவஸ்தனான நீயே ஏக ரூபமான அண்ட ஜாதியுமாவுதி –
ஈத்ர்சாநாம் ததா -என்கிறபடியே அண்டங்கள் ஏக ரூபமாய் இறே இருப்பது

ஏக வசனம் ஜாத் யபிப்ராயத்தாலே

அதாகிறது –

அண்டத்தில் உத்பன்னமான ப்ரஹ்மாதி பீபீலிகாந்தமான சகல
பதார்த்தங்களையும் ஸ்ர்ஷ்டித்து -தத் அனுப்ரேவேசத்தாலே சகல
அந்தர்யாமியாய் நிற்கை

ஆதலால் சோதியாத சோதி நீ –
இப்படி சகல ஜகத் காரண பூதனாகையாலே பரீஷிக்க வேண்டாத உபாஸ்ய தேஜஸ்
தத்வம் -நீ –உபாஸ்யமான தேஜஸ் தத்வம் –

த்ரிவித மஹா பூதமோ -தேவதையோ -ஆதித்யனோ -வைச்வானர அக்நியோ
என்று சங்கித்து -சர்வ நிர்வாஹகமான தேஜஸ் தத்வமே உபாஸ்யம் என்று
நிர்ணயிக்க வேண்டாது இருக்கை

அதயதத பரோதி வோஜ்யோதி -என்றும் –

ததேவ ஜ்யோதி சாஜ்யோதி -என்றும் –

நாராயண பரோஜ்யோதி -என்கிற தத்வம் அல்லையோ நீ –
அது உண்மையில் விளங்கினாய் –
அந்த தேஜஸ் தத்வம் நித்ய நிர்தோஷ ப்ரமாண சித்தம் ஆகையாலே –

இதர விஸ ஜாதீயனாய்க் கொண்டு விளங்கினவனே

வேதமாகி
வேதத்தினுடைய நித்ய நிர்தோஷத்துக்கு நிர்வாஹகனாய் -அதாவது
சம்ஹார வேளையில் திரு உள்ளத்தில் சம்ச்காரத்தாலே வைத்து
யோவை வேதாம்ச்ச ப்ரஹி ணோ தி தஸ்மை -என்கிறபடியே ஆதியிலே
வேதத்துக்கு அத்யாபன் ஆகை

வேள்வியாகி –
ததர்த்தமான யாகத்துக்கு நிர்வாஹகனாவனே -அதாவது –ஆராத்யனாகை –

விண்ணினோடு மண்ணுமாய் –
ஆராதன பலமான போக மோஷ பூமிகளுக்கு நிர்வாஹகனாகை

விண் -என்று பரமபதம்

மண் -என்று சதுர்தச புவனத்துக்கும் உப லஷணம்

யாகம் அந்யோந்ய வ்ருதங்களான போக மோஷங்கள் இரண்டுக்கும் சாதனம் ஆமோ
என்னில் –
ஜீவ பர யாதாம்ய ஞான பூர்வகமான யாகம் மோஷத்துக்கும்
கேவல யாகம் போகத்துக்கும் சாதனம் ஆகையாலே அவிருத்தம்

ஆதியாகி –
இது எல்லாம் ருசி உடையவனுக்கு அங்கம் இ றே -அந்த ருசி ஜநகனாய்க் கொண்டு

ஆயனாய மாயம் என்ன மாயமே –
அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு
ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு
வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –

————————————————————————————————-

35 பாட்டு –

அவதாரிகை –
அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கி ருசி ஜனகனாய்
கொண்டு அவதரித்த ஏற்றத்தை அனுபவித்தார் கீழில் பாட்டில் –

இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவும் விடவுமாம் படி ந்யாம்யனான
குணாதிக்யத்தை அனுசந்தித்து திரியவும் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார் –

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க  தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ எம் ஈசனே –35-

பதவுரை

என் இசனே

எம்பெருமானே! (தேவரீர்)
ஆழியார் தம் பிரானும் ஆகி

திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து
அம்பு உலாவும் மீனும் ஆகி

ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும்
ஆமை ஆகி

ஆமையாகியும் (அவதரித்து)
மிக்கது

அதிசயத்தை அடைந்தருளிற்று
அன்பு மிக்கது

மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று;
அன்றியும்

இதற்கு மேலும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய்

வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல்

எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!.

வியாக்யானம் –

யாழியார் தம்பிரானுமாகி –அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி -மிக்கது என்று அந்வயமாகக் கடவது –

தமஸ் பரமோதாத சங்கு சக்ர கதாதர-என்கிறபடியே –
சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருவாழியை உடைய சர்வாதிகனுமாய் வைத்து

அம்பு உலாவு மீனுமாகி –
அம்பிலே வர்த்திக்கிற மத்ச்யமாய்

அப்பை அம்பு என்று மெலித்துக் கிடக்கிறது

முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -என்கிறபடியே
பிரளயார்ணவத்தில் நோவுபட்ட தேவர்களுடைய ஆபத்தை போக்குகைகாக தன்னிலமான நீரிலே
சஞ்சரிக்கக் கடவதான மத்ச்யமுமாய் –

சப்தத்தாலே -தேவ யோநி மனுஷ்ய யோநிகளிலே பண்ணின அவதாரங்களால்
பர்யவசியாத அனுக்ரஹ அதிசயத்தை சொல்லுகிறது

ஆமையாகி
அமர்த்த மதன வேளையிலே மந்த்ர தாரண அர்த்தமாக கூர்மமாய் –
கூர்மம் பூதம் சர்ப்பந்தம் -என்கிறபடியே பிரளய வேளையில் கூர்ம விக்ரஹத்தை
சொல்லிற்று ஆகவுமாம்

மிக்கது –
ஷூத்ர யோநி என்றும் -பாப யோநி என்றும் பாராதே கை கழிய அவதரித்து

அன்பு மிக்கு –
ஆபன்னராய் அவதாரங்களுக்கு நிமித்த பூதரான சேதனர் பக்கலில் உண்டான
சங்க அதிசயத்தால் வந்து அவதரித்த இத்தனை இறே
ஒரு கர்மம் பிரேரிக்க வாதல் -ஒரு கர்த்த பிரேரிக்க வாதல் அன்று இறே

மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கு -என்னக் கடவது இறே

அன்றியும் –
அதுக்கு மேலே ஸூரி போக்யமான வடிவை ஜல சர சத்வ சஜாதீயம் ஆக்குவதே
என்று அதிலே ஈடுபட்டு ஆய்த்து இவர் தாம் இருப்பது

அதில் காட்டிலும் கிருஷ்ணாவதாரத்தில் குணாதிக்யம் தம்மை ஈடுபடுத்திய படியைச் சொல்லுகிறார் மேலே –

கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் –
கொம்பு -போலேயும் அரவு போலேயும் –நுண்ணிய இடையை உடைய அசோதை
பிராட்டிக்கு பிள்ளையாய் -மத்ஸ்யாதி அவதாரங்களில் ரஷணத்தில் தன்
ஸ்வா தந்த்ர்யங்கள் குலைந்தது இல்லை -இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும்
அடிக்கவுமாம்படி ந்யாம்யனாய் வந்து அவதரித்த குணாதிக்யம் உண்டு இறே

ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் -என்கிற ஸ்வரூபமும் அழிந்தது இறே இதில் –

அவதாரங்களில் ஸ்வரூபத்தை அழிய மாறின இத்தனை இறே

எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ-
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படியான நீர்மையைக் காட்டி எங்களை
அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்டது என் செய்த படி –
பஹூ வசனத்தாலே மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார்

எம் ஈசனே –

அறிந்தோம் –
எங்களுடைய இழவு பேறுகள் உன்னது என்னும்படியான சம்பந்த்தாலே –

————————————————————————————————

36 பாட்டு –அவதாரிகை –

கீழ் சொன்ன பரதந்த்ர்யத்தை அநுபாஷித்து அவ்வதாரங்களின் ஆச்சர்ய சேஷ்டிதங்களில்-ஈடுபடுகிறார் –

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36-

பதவுரை

ஆடகந்தபூண் முலை

ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான
அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய்

யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி
சாடு உதைத்து

சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து
ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள்

சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள்
வீட

நீ உயிர்விட்டு மாளும்படி
வைத்த

உன் திருப்வளத்திலே வைத்த
வெய்ய  கொங்கை

(விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள
ஐய பால்

ஸூக்ஷ்மமான பாலை
அமுதுசெய்து

உறிஞ்சியுண்டு
ஆடகம் கை மாதர்

பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய
வாய் அமுதம் உண்டது

அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது
என்கொல்

என்ன வித்தகம்!

ஆடகம் -ஹாடகம் -ஆபரணம்

ஐய -சூஷ்மமான பிராணனை கிரஹிக்க வல்ல

வியாக்யானம்-

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய் –
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் -என்றது தன்னையே
முக பேதத்தாலே அனுபவிக்கிறார் –

ஆடகத்த பூண் முலை –
பொன்னாலே செய்த ஹாரத்தாலே அலங்க்ர்தமான முலையை உடையவள் –
க்ருஷ்ணன் அமுது செய்யக் கடவன் -என்று முலையை ஒப்பித்துக் கொண்டு
நிற்கிறாள் ஆய்த்து அவள் -அந்த பிரேமத்தை அனுபவிக்கிறார் இ றே இவர் –

ஆயார் மாதர் பிள்ளையாய் -என்ற சாமாந்யத்தை –அசோதை ஆய்ச்சி பிள்ளையாய் -என்று விசேஷிக்கிறார் –

சர்வ நியந்தாவானவன் ஓர் இடைச்சி -என் மகன் -என்று
நியமிக்கலாம்படி இருக்கிற ஆச்சர்யத்தில் நின்றும் கால் வாங்க மாட்டுகிறிலர் –

சாடு உதைத்து –
ஸ்தநயார்த்தியாய் திருவடிகளை நிமிர்த்து -சகடாசுரனை நிரசித்து –
தநம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்றும் –
கோலமாம் என் சென்னிக்கு -என்றும் -அநந்ய பிரயோஜநருக்கு ப்ராப்யமான
திருவடிகளை துஷ் பிரக்ர்திகளுக்கு -வாத சாதனம் ஆக்குவதே -என்கை –

ஓர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள் –
பிள்ளைகள் அனுங்க சஞ்சரிக்கும் புள்ளின் கருத்தை உடையளாய் -அபூர்வை
என்று சங்கித்து விலங்க ஒண்ணாதபடி க்ர்த்ரிமான ஜனநியான பேய்ப் பெண் –

ஓர் புள் என்று தப்ப ஒண்ணாதபடி அனுங்கப் பண்ணும் புள் என்றபடி –

வீட வைத்த வெய்ய கொங்கை –
ஜகஜ் ஜீவநமான உன் திறத்திலே தீங்கை விளைப்பாளாக திருப் பவளத்திலே
வைத்த க்ரூரமான முலையில் –

ஐய பால் அமுது செய்து –
ஸூஷ்மமான பிராணனைப் புக்கு க்ரஹிக்கவல்ல அதி ஸூஷ்மமான பாலை
அமுது செய்து –
அவள் தன்னுடைய க்ரௌர்யத்தையும் ஸ்தனத்தினுடைய க்ரௌர்யத்தையும்
விரித்துப் பேசுகிறார் ஆய்த்து -தம்முடைய பய அதிசயத்தாலே

ஐய -என்று சம்போதனம் ஆகவுமாம்

பூதனையை தாய் என்று மௌக்யத்தாலே அவள் முலையை அமுது செய்தான் –
பிரகாஸ சந்நிதியிலே தமஸ் போலே துஷ் பிரகிருதிகள் நசிக்கும் தரமி
ஸ்வபாவத்தாலே அத்தலை இத்தலை யான வித்தனை –

ஆடகக் கை மாதர் வாய் அமுது உண்டது என் கொலோ –
அப்பருவத்தில் -உன்னையும் ஒக்கலையில் கொண்டு -என்னுமா போலே

அவ் ஊரில் கன்னிகைகள் தங்கள் க்ரஹத்தில் கொண்டு போக யௌவன
தசையைப் பரிக்ரஹித்து விதக்தனாய் கலந்து அவர்கள் வாக் அம்ர்தத்தை உண்ட
இது என்னோ –

ஆடகக் கை மாதர்
பொன்னாலே அலங்கரித்த கை வளையை உடைய பெண்கள் –
அவன் பிடிக்கும் கை என்றும் –
அவன் அணைக்கும் கொங்கை என்றும் -அலங்கரிக்கிறார்கள் ஆய்த்து

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின
செய்து வரும் கன்னியரும் மகிழ-அவர்கள் வாய் அமுதம் உண்பானே
என் கொலோ -என்றது –

அவ்விஷத்துக்கு இவ் வாக் அம்ர்த்தம் பரிஹாராமோ
சர்வ தாரகனாய் வேறு தாரகாந்தரம் இன்றிகே இருக்கிற உனக்கு -ப்ரதிகூலர்
பிராணனும் -அனுகூலர் ப்ரேமமும் தாரகமாய் இருந்ததோ

பால்ய அவஸ்தையில் யுவாவாயும்
யுவாவான நீ பாலனாயும் இருந்த விது என்ன ஆச்சர்யமோ என்கிறார் –

——————————————————————————————-

37 பாட்டு –

அவதாரிகை –
பின்பு க்ருஷ்ணாவதாரத்தில் விதக்த சேஷ்டிதங்களையும் -முக்த சேஷ்டிதங்களையும்
அனுபவிக்கிறவர் -மௌக்த்யத்தாலும் சௌலப்யத்தாலும் -வரையாதே எல்லாரையும்
தீண்டின படியாலும் க்ர்ஷ்ணாவதாரமான ஸத்ர்சமான வட தள சாயியையும்
ஸ்ரீ வராஹ வாமன ப்ராதுர்பாவங்களையும் க்ருஷ்ணாவதாரத்தொடு ஒக்க
அனுபவிக்கிறார் –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

பதவுரை

காய்ந்த

காய்கள் நிறைந்ததும்
நீள்

உயர்த்தியையுடையதுமான
விளங்கனி

(அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை
உதிர்த்து

உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று)
எதிர்த்த பூ குருந்தம்

எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து
சாய்த்து

முடித்து
மா பிளந்த

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த
கைத் தலத்த

திருக்கைகளையுடைய
கண்ணன் என்பர்

கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள்.
ஆய்ச்சி பாலை

யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை
உண்டு

அமுது செய்து
வெண்ணெய் உண்டு

நவநீதத்தை அமுத செய்து
பேய்ச்சிபாலை உண்டு

பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு
பின்

கல்ப்பத்தின் முடிவில்
மண்ணை

பூமியை
உண்டு

திருவயிற்றிலே வைத்து
பண்டு

கல்பத்தின் ஆதியிலே
ஓர் ஏனம் ஆய

ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த
வாமனா

வாமந மூர்த்தியே!

வியாக்யானம் –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
க்ருஷ்ணன் மேலே விழுகைக்கு உறுப்பாக பரப்பு மாறக் காய்ந்து ஓங்கி நின்ற விளாவான
அசுரனுடைய கனிகளை -கன்று விட்டு எறிந்து உதிர்த்து

எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து –
விளாவான அசுரனை அழியச் செய்து க்ருஷ்ணன் கிட்டின பின்பும் பேராதே நின்ற
பூங்குருந்தை ஊசி வேரோடே பறித்து விழ விட்டு –

இதுவும் அவன் மேலே விழுந்து புஷ்பாபசயம் பண்ணுகைக்கு உறுப்பாக பரப்பு மாறப்
பூத்து நின்றது ஆய்த்து –

இவை இரண்டாலும் அனுகூல வேஷராய் நலிய வந்த அசுரர்களை அழியச் செய்தபடி
சொல்லிற்று –

மா பிளந்த –
ப்ரதிகூலனாயே வாய்பாறி ஊரை அழிக்க வல்ல கேசியை அநாயேசேந இரு கூறாகப்
பிளந்து அவ்வாபத்தைப் போக்கினான்

கைத்தலத்த கண்ணன் என்பரால் –
ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன்
என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்

ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு
ஆய்ச்சி பாலை உண்டு -வெண்ணெய் உண்டு –
யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –
இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால்
அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –

பேய்ச்சி பாலை உண்டு –
தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து –
அவ்வழியாலே அவளை முடித்து –

யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி
பின் மண்ணை உண்டு –
க்ருஷ்ணனுடைய மௌக்த்யத்தை அனுபவித்த சமனந்தரம் தத் ஸத்ர்சமான வட தள
சாயினுடைய மௌக்த்யத்தை யனுபவிக்கிறார் –
கல்ப அவசாநத்திலே சிறிய திரு வயிற்றிலே ஜகத்தை அடைய அமுது செய்தால்
சாத்மியாது என்று அறியாதே மௌக்த்யம் இ றே வட தள சாயி உடைய மௌக்த்யம்

பண்டு ஓர் ஏனமாய வாமனா —
கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –

1-தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்
2-வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே
இவ்வதாரங்களை அனுபவிக்கிறார் –

——————————————————————————————

38- பாட்டு –

அவதாரிகை
பரித்ராணாய சாதூநாம் விநாசாயச துஷ்க்ர்தாம் – என்கிறபடியே பிரதிகூலரை அழியச்
செய்தும் -அனுகூலரை உகப்பத்திம் செய்தருளின கிருஷ்ணா அவதார சேஷடிதங்களை-அனுபவிக்கிறார் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-

பதவுரை

கடம் கலந்த

மதஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி

வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய
மருப்பு

கொம்பை
ஒசித்து

முறித்தெறிந்து
ஓர் பொய்கை வாய்

ஓர் மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல்

விஷமனான காளியநாகத்தின் மேல்
நடம் பயின்ற

நர்ததனம் செய்தருளின

நாதனே! ஸ்வாமியே!

குடம் கலந்த கூத்தன் ஆய

குடக்கூத்தாடின
கொண்டல் வண்ண!

காளமேகம் போன்ற கண்ணபிரானே!
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப

குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே!
காலநேமி காலனே!

காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.)

வியாக்யானம் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து –
குவலயாபீடத்தை மதிப்பித்த படியாலே அம்மத ஜலம் உடம்பிலே வ்யாப்தமாய் அதி
ப்ரபலமாய் இருந்த அதின் கொம்பை முறித்து -இத்தால்
ஸ்வாபாவிகமான பலத்தாலும் மத பலத்தாலும் துர்ஜயமான குவலயாபீடத்தை
அநாயாசேந அழித்தான் என்கை –

கடம் -ஆனை மதம்

ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே –
வாதாஹதாம் புவி ஷேப ஸ்பர்ச தக்தவிஹங்கம் -என்கிறபடியே
அதி பீஷணம் ஆகையாலே அத்விதீயமான பொய்கையிலே –
முதலை கிடந்த பொய்கையும் இதுக்கு ஸத்ர்சமன் அன்று என்கை –

விஷமே இவனுக்கு உபாதானம் என்னும்படி விஷ ப்ரசுரமான காளியனுடைய
பணங்களிலே வல்லார் ஆடினாப் போலே திருவடிகளை மாறி இட்டு அவ் வழியாலே
அவனைத் தமித்துப் போகவிட்டு -யமுனையை சர்வ உபஜீவ்யமாம்படி பண்ணி
உன்னுடைய நாதத்வத்தை பிரகாசிப்பித்தவனே

துஷ்டு வுர்முதிதாகோபாத்ர்ஷ்ட்வா சீத ஜலாம்நதீம் -என்னக் கடவது இறே
இவ்வளவில் துஷ்க்ர்த் விநாசம் சொல்லி -மேல் சாது பரித்ராணாம் சொல்லுகிறது –

குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண –
கையில் திருவாழி பொருந்தினால் போலே பொருந்தின குடத்தை உடையனாய்
ஜாதி ப்ரயுக்தமான கூத்தையாடி –மன்றிலே உன்னுடைய அழகை சர்வ ஸ்வதாநம்
பண்ணிணவனே -பிரயோஜநாந்தர  நிரபேஷமாக ஜல ஸ்தல விபாகம் அன்றிக்கே
வர்ஷிக்கும் மேக ஸ்வபாவனேகுடக் கூத்து ஆடின போதை காளமேக நிபாச்யமான
நிறத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்

தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப –
இப்படி ஷூத்ரரான இடையருடைய சேஷ்டிதத்திலே இழிந்தவன் -சர்வ சேஷியாய் –
அவாக்ய அநாதர -என்கிற பூரணன் கிடீர் என்கிறார்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் வடத்தோடும் வனமாலை யோடும் கூடின
திரு மார்வை உடையவனே –

வடம் -தொடை –

மாலை -வனமாலை

காலநேமி காலனே —
ஆபன்னராய்த் திருவடிகளில் விழுந்த தேவர்களுக்கு விரோதியான காலநேமிக்கு
ம்ர்த்யு வானவனே

இத்தால் சர்வ அசாதாரணனாய் இருக்கச் செய்தேயும் தன் திருவடிகளில் தலை
சாய்ந்தாருக்கு விரோதிகளானார் தனக்கு சத்ரு என்கை –

——————————————————————————————

39 பாட்டு –

அவதாரிகை
சாது பரித்ராணமும் துஷ் க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ்
இதில் –இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதி களுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை
அழியச் செய்து அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான்
ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது அவனை அழியச் செய்யாதே
முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

பதவுரை

வெற்பு எடுத்து

மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர்

கடல் நீரை
கலக்கினாய்

கலங்கச் செய்தாய்
அது அன்றியும்

அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து

மலைகளைக்கொண்டு
வேலை நீர்

(தெற்குக்) கடலிலே
வரம்பு கட்டி

திருவணையைக்கட்டி
வேலைசூழ்

கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ்

மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள
இலங்கை

லங்கையினுடைய
கட்டு

அரணை
அழித்த

அழியச் செய்த
நீ

தேவரீர்
வெற்பு எடுத்து

கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து
மாரி காத்த

மழையைத் தடுத்த
மேகம் வண்ணன் அல்லையே

காளமேக நிபச்யாமரன்றோ!

வியாக்யானம் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் –
துர்வாச சாபத்தாலே இந்த்ராதிகள் ஐஸ்வர்யத்தை இழந்து -சரணம் த்வாம் அநுப்ராப்தா –
என்கிறபடியே திருவடிகளில் சரணம் புகுர -கடல் கொண்டு முழுகும் மந்த்ரத்தைப்
பரிகரமாகக் கொண்டு சமுத்திர ஜலத்தில் அவர்கள் இழந்தவை அடங்கலும்
உத் பன்னநாம் படி கலக்கினாய் -ரத்நாகரம் -மத்ஸ்யாகரம்-என்று லோக பிரசித்தமாய்
இருந்துள்ள சமுத்ர ஸ்வபாவத்தை தவிர்ந்து ஸ்வர்க்கத்தில் உள்ள பதார்த்தங்களுக்கு
உத்பாதகம் ஆக்கினாய் –

ஏதத் கதம் கதய யன்மதிதஸ் த்வயா சௌ ஹித்வா ஸ்வ பாவ நியமம் ப்ரதிதம்
த்ரிலோக்யாம் -அச்வாப்சரோ விஷ ஸூ தாவிது பாரிஜாத லஷம்யாத்மநா
பரிணதோ ஜல திர்ப்ப பூல -என்னக் கடவது இறே

பிரயோஜ நாந்தர பரன் என்று அவன் சிறுமை பாராதே -மோஷ பிரதனாய் இருக்கும்
தன் பெருமை பாராதே -ஈச்வரோஹம் – என்று இருக்குமவன் என்று அவன் பூர்வ வ்ருத்தம்
பாராதே -சரணம் என்று நின்றான் -என்றத்தையே பார்த்து ரஷித்து அருளினாய் –

அதன்றியும் –
இது தானே போருமாய்த்து -ஆஸ்ரிதர் உன்னை தஞ்சம் என்று விஸ்வசித்து
இருக்கைக்கு -அதுக்கு மேலே –

வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
கண்ட மலைகளைப் பிடுங்கி சமுத்திர ஜலத்தின் மேலே -பூமியிலே வரம்பு கட்டுமா
போலே -ப்லவங்கங்கள் காலாலே நடந்து போம்படி அணை கட்டி –
இது ஒரு அதிமானுஷமான ஆச்சர்யம் -அகாதமான சமுத்ரத்திலே மலை யமிழ்ந்தது
இல்லை -திரைக் கிளர்த்தியில் மண் கரையப் பெற்றதில்லை –

வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –
கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விச்வகர்மாவாலே சமைக்கப்
பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –
யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –

இனி இந்த்ரன் தான் ஆஸ்ரிதருக்கு துஷ் க்ர்த்தானால் அவனை அழியச் செய்யாதே
முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும்படி சொல்லுகிறது

வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே —
இடையர் க்ருஷ்ணனை அண்டை கொண்டு நம்முடைய மசுபங்கம் பண்ணினார்கள்
என்று சம்வர்த்த கணத்தை ஏவி வர்ஷிப்பிக்க -அவனை அழியச் செய்கை ப்ராப்தமாய்
இருக்க -ப்ராதிகூல்யத்தில் நியதன் அல்லாமையாலும் -ந  நமேயம் -என்கிறபடியே
திருவடிகளில் தலை சாயேன் என்கிற நியதி இல்லாமையாலும்

கோவர்த்தன கிரியை எடுத்து வர்ஷத்தால் வந்த அநர்த்தத்தை பரிஹரித்த
மஹா உதாரன் அல்லையோ -காளமேக நிபாஸ்யாமமாய் ஸ்ரமஹரமான
விக்ரஹத்தை சொல்லவுமாம் –

ஒரு மேக சமூஹம் பாதக கோடியிலேயாய்
நிற்க ஒரு மேகத்தால் வந்த ஆபத்தை பரிஹரித்ததாப் போலே இருந்தது என்கை-

——————————————————————————————

40 பாட்டு –

அவதாரிகை –
ஈஸ்வர அபிமாநிகளான தேவதைகள் உடைய ரஷண பிரகாரம் சொல்லிற்று கீழ் –
இப்பாட்டில் –அநந்ய பிரயோஜனரை ரஷிக்கும் இடத்தில் நித்ய ஸூரிகளுக்கு
மேல் எல்லையான பிராட்டிமாரோடே -சம்சாரிகளுக்கு கீழான திர்யக்குகள் உடன்
வாசியற -தன்னை ஒழியச் செல்லாமை ஒன்றுமே ஹேதுவாக விரோதி நிரசன
பூர்வகமாக ரஷிக்கும் ஆச்சர்யங்களை யநுபவிக்கிறார்

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம்  ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-

பதவுரை

ஆனை காத்து

கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி
அது அன்றி

அவ்வளவேயல்லாமல்
ஆயர்பிள்ளை ஆய்

கோபாலகுமாரனாகி
ஓர் ஆனை கொன்று

குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று
ஆனை

பசுக்களை
மேய்த்தி

மேய்த்தருளா நின்றாய்;
ஆ நெய்

பசுக்களின் நெய்யை.
உண்டி

அமுது செய்யா நின்றாய்;
அன்று

இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில்
குன்றம் ஒன்றினால்

கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு
ஆனைக் காட்டு

பசுக்களை ரக்ஷித்து
மை அரி கண் மாதரார் திறந்து

மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று

அக்காலத்திலே
முன்சென்று

அவளெதிரே நின்று

ஆனை அடர்ந்த மாயம் எருதுகளேழையுங் கொன்ற ஆச்சரியம்

என்ன மரயம்

என்ன ஆச்சரியம்!

 

வியாக்யானம் –

ஆனை காத்து –
அநந்ய பிரயோஜநத்வம் ஒழிய இவ்வருகு ஜன்மாதிகளாலே ஒரு யோக்யதை இல்லாத
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து —

இவ்வானை என்னாதே –ஆனை காத்து -என்கிறார் ஆய்த்து அவனுடிய ஆபத் பிரசித்தியாலும்
அவனை ரஷித்த ரஷண பிரகாரத்தின் பிரசித்தியாலும் –
கஜ ஆகர்ஷேதேதீரே -என்றும் -பரமாபதமாபன்ன -என்னும் படி இ றே அவனுடைய
ஆபத்து -அதந்த்ரி தசமூபதி ப்ரஹித ஹஸ்தம் -என்றும் -தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப -என்னக் கடவது இறே

ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய் –
அதன்றி ஆயர் பிள்ளையாய் –
தேவரை தஞ்சம் என்று இருக்கைக்கு ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ரஷண ப்ரகாரமே
அமையும் -அதுக்கு மேலே இடைச் சாதிக்கு நியாமனாய் வந்து அவதரித்து கீழ்-
அசோதை ஆய்ச்சி பிள்ளையாய் -என்றதை வ்யாவர்த்திக்கிறது –

ஓர் ஆனை  கொன்று –
ஸ்ரீ வசுதேவர் தேவகிப் பிராட்டி -ந சமம் யுத்தம் இத்யாஹூ -என்கிற ஸ்ரீ மதுரையில்
பெண்களாக இவ் அநுகூல வர்க்கம் அடைய பயப்படும்படி -மதிப்பித்து கம்சன் நிறுத்திய
அத்வதீயமான குவலயாபீடத்தை அநாயாசேந கொன்று
ஸ்வா பாவிகமான பலமும் மத பலமுமாய் அத்வதீயமாய் இறே இருப்பது –

கடம் கலந்த வன் கரி -என்றார்  இறே

அதன்றி ஆனை மேய்த்தி –
அதுக்கு மேலே அந்த ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களை ரஷியா நிற்றி –
விஜிகத்ச -விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய் -என்கிறபடியே
தன் அழகாலே வயிறு நிரம்பும்படி இ றே பசுக்களை ரஷித்தது

ஆ நெய் உண்டி  –
பசுக்களின் நெய்யை அமுது செய்யா நிற்றி
சத்யகாமனாய் -விஜிகத்சனாய் இருக்கிற நீ ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய தொரு
த்ரவ்யத்தை ஒழிய செல்லாமை யிலே இ றே அத்தை விரும்பி அமுது செய்தது –

யன்று குன்றம்  ஒன்றினால் ஆனை காத்து –
அதுக்கு மேலே இந்த்ரன் சம்வர்த்த கணம் -என்கிற மேக சமூஹத்தைக்
கொண்டு ஊரை அழியச் செய்கிற தசையில் -கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்து
பசுக்களை ரஷித்தது –ஆன் -பசு -கீழில் பாட்டிலும் இவ் வபதானம் சொல்லிற்று –

அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில் –
ப்ராதிகூல்யத்தில் நியதன் இல்லாமையாலே இந்த்ரனை அழியச் செய்ய மாட்டாத
நீர்மையை சொல்லிற்று அங்கு -இங்கு -தன்னை ஒழிய செல்லாத பசுக்களை ரஷித்த
படியை சொல்லுகிறது –

மை யரிக்கண் மாதரார் திறத்து –
அஜ்ஞனத்தாலே அலங்க்ர்தமாய் செவ்வரி கருவரிகளோடே கூடின திருக் கண்களை
உடைய நப்பின்னைப் பிராட்டிகாக

முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம்-
சம்ச்லேஷ அர்த்தமாக ஒப்பித்து நிற்கிற தசையிலே அவள் சந்நிதியிலே சென்று
ரிஷபங்கள் ஏழையும் அடர்த்த ஆச்சர்யம்

என்ன மாயமே —
முன்பு செய்த செயல்களுக்கும் அவ்வருகாய் ஒன்றாய் இருந்ததீ –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -21-30-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 21, 2013

21-பாடல்-

அவதாரிகை –
சமுத்ர மதன வேளையில் ஆமையான நீர்மைக்கு மேல் -சகல வியாபாரங்களையும்
தேவரீரே செய்து அருளி -தேவர்கள் கடல் கடைந்தார்கள் -என்று தேவர்கள் தலையில்
ஏறிட்டு கொண்டாடினபடி -ராவணனை  அழியச் செய்து முதலிகள் தலையிலே விஜயத்தை
ஏறிட்டு கொண்டாடினாப் போலே இருந்தது

இவ் வாஸ்ரித பஷபாதத்தை வேறாக தெரிய அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க இதொரு பஷபாதம் இருந்தபடி என்ன என்று விஸ்மிதர் ஆகிறார்-

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-

பதவுரை

குரங்கை

வானரப்படைகளை
ஆள் உகந்த எந்தை !

உகந்த ஆட்கொண்ட நாயனே!
அரங்கனே

ஸ்ரீஅரங்கநாதனே!
அன்று

(துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று
தரங்கம் நீர் கலங்க

அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க

பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய்

வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த

(கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற

அருகே நின்று கொண்டிருந்த
சூரர்

மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள்.
என் செய்தார்

என்ன  காரியம் செய்தார்கள்
இது

இவ்விஷயத்தை
வேறு

விசேஷித்து
தேற

நான் தெரிந்து கொள்ளும்படி
கூறு

அருளிச் செய்யவேணும்.

 

வியாக்யானம் –

அரங்கனே –
அரங்கனே என்கிற இது விசேஷ்யம் யாகையாலே க்ரியை கூட அந்வயிகக் கடவது

தரங்க நீர் கலங்க –
அப்ரமேயோம ஹோததி -என்கிறபடியே அத்யகாதமான கடல் ஆகையாலே

தன்னை-அனுபவிக்க இழிந்தாரைக் கரையிலே ஏறிட வல்ல திரைக் கிளர்தியை உடைத்தான-

கடல் குளப்படி போலே கலங்க –

வன்று –
சகல தேவதைகளும் துர்வாச சாபத்தாலே நஷ்ட ஸ்ரீ காரராய்

தங்கள் ஐஸ்வர்யத்துக்கு-தேவரீர் கை பார்த்து இருந்த வன்று –

குன்று சூழ் மரங்கள் தேய –
மந்த்ரத்தை சூழ்ந்த மரங்கள் வாஸூகி உடல் பட்டு தேய

மா நிலம் குலுங்க –
சமுத்திர கோஷத்தின் உடைய அதிசயத்தாலே அத்தோடு சேர்ந்த புஷ்கர தீபங்கள் ஆகிற-மஹா ப்ர்த்வி குலுங்க

மா சுணம் சுலாய் நெருங்க –
நெருங்க -மாசுணம் சுலாய் -வாசுகியை நெருக்கி சுற்ற

சுலாய் -சுலாவி -சுற்றி என்றபடி

ஸ்வ தேஜஸ்ஸாலே உபப்ர்ம்ஹிதமான படியாலே கூசாதே மந்த்ரத்தில் வாசுகியை நெருங்க சுற்றி-

மந்தராத் ரோதிஷ்டாநாம் மதநே பூத் -என்று மந்த்ரத்துக்கு அதிஷ்டாநமும் தானே என்றும் –

தேஜஸா நாக ராஜாநாம் ததாப்யா யிதவான் ப்ரபு -என்று

வாசுகிக்கு பல கரனும் தானே என்றும்-சொல்லக் கடவது இறே –

நீ கடைந்த போது –
ததோ மதிது மாரப்ய -என்று தேவர்களுக்கு ஆரம்ப மாத்ரமேயாய் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடிந்தான் -என்கிறபடியே அக்கடலை தேவரீரே  கடைந்த போது

நின்ற சூரர் என் செய்தார் –
அதிபல பராக்ரமான தேவர்களும் அசூரர்களும் செய்தது என்-

அம்ருத மதன சாமர்த்தியத்தை தேவர்கள் பக்கலிலே ஏறிட்டு கொண்டாடுகைகாக அவர்கள்-செய்த கார்யம் என் –

கூர்ம ரூபியாய் மந்த்ராத்ரிக்கு -அதிஷ்டாநம் ஆனார்களோ
உபர்யாக்ராந்த வாந்சைலம் ப்ர்ஹத்ரூபேண கேசவ -என்று மந்த்ரம் சலியாதபடி நோக்கினர்களோ-

தேஜஸ்சாலே வாசுகிக்கு பல கரரானார்களோ-
பல போக்தாக்களாய் நின்ற இது ஹேதுவாக அவர்களையே கர்த்தாக்கள் ஆக்கின இத்தனை அன்றோ –

தேவதாந வயத்நே ந ப்ரசூதாம்ர்த மநதநே -என்று

அம்ருத மதன வ்யாபாரம் அசூரர்களுக்கும்-ஒத்து இருக்க –

அவர்களை கிலேச பாகிகளாக்கி –

தேவர்களை அமர்த்த பாகிகளாக்கி-

இதுவும் அதுக்கு மேலே ஒரு பஷபாதம் இறே

பிரயோஜநாந்த பரர் என்று பாராதே தேவர்கள் பக்கலில் பஷபாததுக்கு அடி
சரணம் த்வா அனுப்ராப்தா -என்று சரணம் என்ற அதிலே இறே

குரங்கை யாள் உகந்த வெந்தை –
கீழ் சொன்ன பஷபாததுக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்லுகிறது-.

ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக-

ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே

எந்தை –
என்று நித்ய ஸூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து
திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து
இருக்கையாலே என் நாதனே என்கிறார் –

அரங்கனே கூறு தேற வேறிதே —
ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக

அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்-

இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் –

கீழ்-
வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது 

பெரிய பெருமாள் பக்கலிலே என்று கருத்து

——————————————————————————————

22 பாட்டு –அவதாரிகை –
பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ -என்கிறார் –

பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேருமார்ப பூமி நாதனே –22-

பதவுரை

பண்டும் இன்றும் மேலும் ஆய்

மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே
ஞானம் எழும்

உலகங்களையெல்லாம்
மண்டி உண்டு

(ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து
ஓய் பாலன் ஆகி

ஒப்பற்ற சிறு குழந்தையாய்
ஆலிலை துயின்ற

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின
ஆதிதேவனே !

மூல புருஷனே!
வண்டு

வண்டுகளானவை
கிண்டு

(மதுவுக்காக வந்து) குடையும்படியான
தண் துழாய் அலங்கலாய்

குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே!
சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப!

அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே!
பூமி நாதனே!

பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.)

வியாக்யானம்-

பண்டு இன்று மேலுமாய் –
பண்டு -சிருஷ்டி பூர்வ காலத்தை
இன்று -சிருஷ்டி காலத்தை
மேல் -பிரளய வேளையில்

சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -என்கிறபடியே நாம ரூபங்களை இழந்து அசித விசேஷிதமாய்
சோச்ய தசாபன்னமான சகல பதார்த்தங்களையும் –

ஸ்ருஷ்டி வேளையில் கர்ம அநுரூபமாக ஸ்ருஷ்டித்து

தத் அநுரூபமாக ரஷித்தும் –

பிரளயம் கொள்ளும் அளவில் வயிற்றிலே வைத்து நோக்கியும்
போருமவன் ஆகையாலே

ஆய் -என்றது ஆகையாலே என்று ஹேது கர்ப்பமாய் கிடக்கிறது

ஓர் பாலனாகி –
அத்விதீயமான முக்த சிசுவாய்

ஞாலம் ஏழும் உண்டு மண்டி –
சகல லோகங்களையும் தன் பேறாக விரும்பி அமுது செய்து சிறிய வயிற்றிலே

சகல-லோகங்களையும் அடக்கின அகடிதகட நா சாமர்த்தியத்தால் தேவரீருடைய
ஐஸ்வர்யமான சக்தியைப் பிரகாசிப்பித்த படி இறே இது

ஆலிலைத் துயின்ற வாதி தேவனே-
ஒரு பவனான ஆலிலையிலே -ஜகத் காரண வஸ்து என்று தோற்றும்படி கண் வளர்ந்து அருளினவனே-

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் –
இப்படி பிரளயார்ணவத்திலே பரிவர் ஒன்றிக்கே தனியே கண் வளர்ந்து அருளுகிறவன்-சர்வாதிகன் கிடீர் என்கிறது-இப்பாட்டில் சேஷமும் –

செவ்வியாலே வண்டுகள் புக்குப் பருகும்-ஸ்ரமஹரமான திருத் துழாய் மாலையை உடையவனே –

கிண்டல் -கிளர்தலும் -கிழித்தலும்

இத்தால் -ஆதி ராஜ்ய ஸூசுகமான திருத் துழாய் மாலையை உடையவன் -என்கை

கலந்த சீர்ப் புண்டரீகப் பாவை சேரு மார்பா –
ஸ்வரூப நிரூபக பூதை யாகையாலே நித்ய சம்ச்லேஷ ஸ்வபாவையாய்
தாமரைப் பூவை ஜன்ம பூமியாய்  உடையளாய் -நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய பிராட்டி-
அகலகில்லேன் இறையும் -என்று அவள் ஆதரிக்கும் திரு மார்பை உடையவனே

பூமி நாதனே –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு நாதன் ஆனவனே –

இத்தால் –ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்கிறபடியே –
ஸ்ரீ பூமி சஹிதனான ஏற்றத்தை உடையவன் என்கை –

இப்படி சர்வாதிகன் கிடீர் பிரளய
ஆர்ணவத்திலே ஒருவர் இல்லாதாரைப் போலே தனியே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கை-

———————————————————————————————–

23 பாட்டு -அவதாரிகை –

பிரளய ஆபத் சகன் ஆகைக்கு வட தள சாயி யான அகடிதகடிநா சாமர்த்ய அளவு அன்றியே –
தேவரீர் உடைய அசாதாராண விக்ரஹத்தை

நாஸ் யர்த்ததநும் க்ர்த்வா சிம்ஹஸ் யார்த்தத நுந்ததா –
என்கிறபடியே ஏக தேகத்தை மனுஷ்ய சஜாதீயம் ஆக்கியும்

ஏக தேகத்தை திர்யக் சஜாதீயம் ஆக்கியும்
இப்படி யோநி த்வயத்தை ஏக விக்ரஹமாக்கி

அர்த்தித்வ நிரபேஷமாக -பிதாவாலே புத்ரனுக்கு
பிறந்த ஆபத்தை -தேவரீர் பொறுக்க மாட்டாமையாலே

தூணிலே தோற்றின அகடிதகடநா
சாமர்த்யத்தை அனுசந்தித்து -இத்தை யாவர் பரிச்சேதித்து அறிய வல்லார் -என்கிறார் –

வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே –-23-

பதவுரை

வால் நிறத்து

வெளுத்த நிறத்தை யுடைய
ஓர் சீயம் ஆய்

ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து
வளைந்த வாள் வயிற்றினன்

வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களை யுடையனான இரணியனுடைய
ஊன் நிறத்து

சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே
உதிர் தலம் அழுத்தினாய்

கை நகங்களை அழுத்தினவனே!
உலாய சீர்

உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய
நால் நிறத்த வேதம்

உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை
நாவர்

நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்)
நல்ல யோதினால்

விலக்ஷணமான உபாயத்தினாலே
வணங்கு

வணங்குவதற்கு இடமான
பால் நிறக் கடல்

திருப்பாற் கடலிலே
கிடந்த

பள்ளிகொண்டருளின
பற்பநரபன் அல்லையே

பத்மநாபன் நீயே யன்றோ

வியாக்யானம் –

வால் நிறத்தோர் சீயமாய் –
புருஷோத்தமன் தன்னை அழிய மாறி சிம்ஹ சஜாதீயனானாப் போலே ஸ்வாபாவிகமான-நிறத்தையும் -மாறாடுவதே என்கிறார் –

வால் நிறம் -வெளுத்த நிறம் –

ஓர் சீயமாய் –
பஹூதா விஜாயதே -என்றும் -பஹூநி -என்றும் சொல்லுகிற
அசங்யாதமான அவதாரங்களிலே இங்கன் இருப்பது ஓன்று இலாமையாலே
அத்வதீயம் -என்கிறார்

அழகியான் தான் -என்கிறபடியே போக்யதையில் அத்வதீயத்தை சொல்லவுமாம்

சீயம் -சிங்கம் –

வளைந்த வாள் எயிற்றவன் –
வளைந்து ஒளியை உடைத்தான எயிற்றை உடைய ஹிரண்யன் –

இத்தால் வர பலத்தில்-அந்தர்பவியாத ஆசூரமான புஜ பலத்தை சொன்னபடி –

ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய் –
சரீரத்தில் மர்மத்திலே திரு உகிரை அழுத்தினவனே

உகிர் தலம்  அழுத்தினாய் என்று -அவன் வரத்திலே அந்தர்பவியாத வத சாதநத்தாலே-

அநாயாசேந அழித்தபடி சொல்லிற்று ஆகிறது –

உலாய சீர் நால் நிறத்த வேத நாவர் –
சர்வ லோக ப்ரசித்தமான ப்ராமாண்யத்தை உடைத்தாய் -உதாத்த அநுதாத்த –
ஸ்வரித ப்ரசய ரூபமான நாலு வகைப்பட்ட ஸ்வரத்தை உடைய வேதத்தை நாவிலே உடையவர்கள் –

(மேலாக கீழாக சமமாக கண்ட -உள்ளிருந்து -இப்படி நான்கு ஸ்வரங்கள் வேத சரீரம் என்றபடி )

நிறம் -மேனி

இத்தால் -அநுமாநாதிகளாலே தத்வ ஹிதங்களை நிர்ணயிக்குமவர்கள் அன்றியே
வைதிகர் ஆஸ்ரயிக்கும் அவன் என்கை –

நல்ல யோகினால் வணங்கு –
பக்தி யோகத்தாலே ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல் –
விலஷணமான பிரதிபத்தியாலே ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல் —

யோகு -யோகம் -உபாயம் –

பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே –
தேவரீர் திருமேனிக்கு பரபாக ரூபமான நிறத்தை உடைத்தான கடலிலே ஜகத்துக்கு-உத்பாதகன் என்று –

தோற்றும் வடிவோடே கண் வளர்ந்து அருளுகிற பத்மநாபன் அல்லையோ

நல்ல யோகினால் -என்கையாலே –
(வாக்ய ஜெனித )வாக்யார்த்த ஜ்ஞானம் என்ன -கர்ம ஜ்ஞான சமுச்சயம் என்ன -இவற்றை மோஷ
சாதனம் என்கிற குத்ர்ஷ்டிகளில் வைதிகருக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்லுகிறது –

(மஹா வாக்கியங்கள்
தத் த்வம் அஸீ ஸ்வேதகேது -அஹம் ப்ரஹ்மாஸ்மி -சேதனமும் ப்ரஹ்மமே
ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம-அசேதனமும் ப்ரஹ்மமே
நாநா நாஸ்தி இத கிஞ்சித்

பிரிவு இங்கே அங்கு கூடி -மோக்ஷம் -யாதவ பிரகாசிகள் பேத அபேத வாதிகள் -கர்ம ஞான சமுச்சயம் -கூடி இருந்தால் மோக்ஷம்
இத்தைத் தாண்டி பக்தி ரூபா பன்ன ஞானம் -யோகி
இத்தையும் தாண்டி பிரபத்தி -நல்ல யோகி )

உலாய சீர் -என்று அதிகாரி விசேஷணம் ஆகவுமாம் –

உலாய சீர் -பத்ம நாபன் -என்று அந்வயிக்கவுமாம் -அப்போது –

விதிதஸ்ய தர்மஸ்ய சரணாகத வத்சல்ய தேன மைத்ரீ பவது –என்கிறபடியே-கல்யாண குண யுக்தனான ஜநகன் என்கிறது –

———————————————————————————————

24 பாட்டு –

அவதாரிகை –
பரம பாவநனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -போக்தாக்களை காத்தூட்ட வல்ல
பரிகரத்தையும் உடைய தேவரீர் -ஆஸ்ரித ரஷணத்துக்கு அநுரூபமாக திவ்ய
விக்ரஹத்தை அழிய மாறி வந்து தோற்றின இவ் வேற்றத்தை
நித்யஸூரிகள் அறிதல் –
பிராட்டி அறிதல் -ஒழிய
வேறு யார் அறிய வல்லார் என்று பின்னையும் அந்த நரசிம்ஹ வ்ருத்தாந்தத்தில் ஈடுபடுகிறார் –

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24-

பதவுரை

கங்கை நீர்

கங்கா தீர்த்தத்தை
பயந்த

உண்டாக்கின
பாத பங்கயத்து எம் அண்ணலே

திருவடித் தாமரையை யுடைய எம்பெருமானே!
அம் கை

அழகிய திருக் கையிலே
ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும்

பஞ்சாயுதாழ்வாரக்ளை
ஏந்தினாய் !

ஏந்திக் கொண்டிருப்பவனே!
சிங்கம் ஆய

நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த
தேவ தேவ!

தேவாதி தேவனே;
தென் உலாவும் மெல்மலர் மங்கை

தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி
மன்னிவாழும் மார்ப

(அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே!
ஆழி மேனி

கடல் போன்ற திருமேனியையுடைய
மாயனே

ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.)

வியாக்யானம் –

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே –
குரு பாதகனான ருத்ரனுக்கும் சக்தியைப் பிறப்பிக்கும் அக் கங்கைக்கும் உத்பாதகனாய் –
சுத்தி உக்தருக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை உடைய என் நாதனே –
அச்ப்ர்ஷ்ட சம்சார தோஷரான நித்யருக்கும் முக்தருக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளை உடையவன் என்கை –

இப்போது –அண்ணல் -என்றது -இவ்வர்த்தத்தை தமக்கு நிர்ஹேதுகமாக பிரகாசிப்பித்த
உபகார ச்ம்ர்தியாலே என் நாதனே -என்கிறார் –

அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –
அத் திருவடிகளை அனுபவிக்க இழிந்தாருக்கு விரோதிகளை அழியச் செய்யும் திவ்ய
ஆயுதங்களை -எப்போது யாருக்கு என் வருகிறதோ என்று சர்வதா தரித்து நிற்குமவனே
தனக்கு தானே ஆபரணமான திருக்கையில் திருவாழி தொடக்கமான ஸ்ரீ பஞ்சாயுதங்களை
தரித்த இதுவும் திருவடிகளோபாதி தமக்கு போக்யமாய் இருக்கிறது ஆய்த்து

சிங்கமாய தேவ தேவ –
அத் திவ்யாயுதங்கள் அசத் சமமாம் படி வரம் கொண்ட ஹிரண்யனை நக ஆயுதமான
சிம்ஹமாய் அழியச் செய்த ஆஸ்ரித பஷபாதத்தாலே நித்ய சூரிகளை எழுதிக் கொண்டவனே –

திவ்ய மங்கள விக்ரஹத்தின் சுவடு அறியும் நித்ய ஸூரிகளுக்கு இறே அவ்வடிவையும் அழிய மாறி
ரஷித்த ஆஸ்ரித பஷபாதத்தின் எல்லை தெரிவது

தேனுலாவு மென் மலர் மங்கை மன்னு வாழு மார்ப –
செவ்வியையும் மென்மையையும் உடைத்தான தாமரையில் பிறப்பாலும் பருவத்தாலும்
நிரதிசய போக்யையான பிராட்டி நித்ய வாஸம் பண்ணி அனுபவிக்கும் திரு மார்பை உடையவனே –

இப்போது -அகலகில்லேன் -என்று சாமான்யம் அன்றிக்கே ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தாலே
பர்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே இவ்வடிவிலே பிராட்டி அத்ய ஆதாரம் பண்ணின
படியைச் சொல்லுகிறது –

இத்தால் -நித்ய ஸூரிகள் அளவும் அன்றிக்கே தலைநீர்ப் பாட்டில் அனுபவிக்கும் பிராட்டியும்
இவ் வாஸ்ரித பஷபாதத்துக்கு தோற்று இருக்கும்படியை சொல்லிற்று ஆய்த்து –

என்னடியார் அது செய்யார் -என்று இறே அவன் படி இருப்பது

வாழி மேனி மாயனே —
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஆச்சர்ய பூதனே

ஹிரண்யனுக்கு அநபிபவநீயமான அவ்வடிவு தான் ஆஸ்ரிதருக்கு ஸ்ரமஹரமான படியைச் சொல்லுகிறது –

—————————————————————————————————-

25 பாட்டு –

அவதாரிகை –

அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுடைய விரோதியைப் போக்கினபடியை
அநுபாஷித்துக் கொண்டு -அவனுடைய அளவு அன்றிக்கே –

பிரயோஜனாந்தர  பரரான-இந்திரனுக்காக அர்த்தியாயும் -அவ்வளவும் புகுர நில்லாதே 

விமுகரான சம்சாரிகளை-பிரளய ஆபத்தில் திரு வயிற்றில் வைத்து ரஷித்த

இவ் வாபத் சஹத்வத்தை-அறிய வல்லார் யார் -என்கிறார் –

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

பதவுரை

வரத்தினில்

(பிரமன் கொடுத்த) வரத்திலே
சிரத்தை மிக்க

அதிகமான நம்பிக்கையுடையவனாய்
வாள் எயிறு

வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான
மற்றவன்

ஆச்ரித சத்ருவான இரணியனுடைய
உரத்தினில்

மார்விலே
கரத்தை வைத்து

திருக்கைகளை வைத்து
உகிர்த்தலத்தை

நகரங்களை
ஊன்றினாய்

அழுத்திக் கொன்றாய்;
நீ

இப்படிப்பட்ட நீ
இரத்தி

(ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்;
இது என்ன பொய்

இது என்ன இந்திரஜாலம்!
இரந்த மண்

யாசித்துப்பெற்ற உலகத்தை
வயிற்றுளே கரத்தி

(ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்;

கண்ணனே! கண்ணபிரானே!

உன் கருத்தை

(இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை
யாவர் காண வல்லர்

யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.)

வியாக்யானம் –

வரத்தினில் சிரத்தை மிக்க –
தனக்கு தந்த வரத்தில் -அத்ய ஆதரத்தைப் பண்ணி -வரப்ரதானனான ப்ரஹ்மாவுக்கு
உத்பாதகன் ஆனவனோடே விரோதித்து -அவனாலே உத்பன்னனான ப்ரஹ்மா தனக்கு
தந்த வரத்திலே இறே மிக்க சிரத்தையைப் பண்ணிற்று -கோயம் விஷ்ணு -என்றான் இறே –
தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை என்று உன்னை அறியாதே வரத்தையே
விஸ்வசித்து இருந்தவன் –

வாள் எயிற்று –
வாள் போலே இருக்கிற எயிற்றை உடையவன் -இத்தால் ஹிரண்யன் உடைய புஜ
பலத்தை சொல்லிற்று -வர பலத்துக்கு புறம்பான வடிவு கொண்டாப் போலே புஜ
பலத்தை அழிக்க வல்ல சர்வ சக்தி என்று அறிந்திலன் –

உன்னை அறியாதே வர பல புஜ-பலங்களை விஸ்வசித்து இருந்த மதி கேடன்

மற்றவன் –
சத்ருவானவன் –
சம்பந்தம் ஒத்து இருக்க –மற்றவன் -என்கிறது -ஆஸ்ரித சத்ருவே தனக்கு சத்ரு என்னும் நினைவாலே

உரத்தினில் –
துர் மாம்சம் இருந்த விடத்தை கொட்டம் இடுவாரைப் போலே துர்மானம் கிடந்த மார்விலே

கரத்தை வைத்து –
அப்யேஷ ப்ர்ஷ்டே மம ஹச்த பத்மம் கரிஷ்யதி -என்று அக்ரூராதிகளுக்கு ஜீவன ஹேதுவாய்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று ப்ரணயிநிக்கு போக்யமாய் இருக்கும்
திருக் கையை துஷ் பிரக்ருதியான அவனுடைய திண்ணிய மார்விலே வைத்து –

உகிர் தலத்தை ஊன்றினாய் –
வர பலத்துக்கு புறம்பான வத சாதனமாய் அத்யந்தம் ஸூகுமாரமான உகிராலே
அநாயாசேந கொன்றாய்

தலம் -நிலமும் இதழும்

இரத்தி நீ-
ஹிரண்யனில் காட்டில் தத் சந்தாஜனான மஹாபலி பக்கல் ஔ தார்யம் குணம் என்பதொரு
குணம் உண்டாகையாலே அர்த்தித்வத்திலே இழிந்தாய்

இரத்தி நீ –
சர்வ சக்தியாய் அவாப்த சமஸ்த காமனான நீ
அலம் புரிந்த நெடும் தடக்கையாலே இரப்பதே –
ஹிரண்யனுக்காக உடம்பை அழிய மாறினாய்
பிரயோஜநாந்த பரனான இந்த்ரனுக்காக உனக்கு நிரூபகமான ஔ தார்யத்தை அன்று அழிய மாறிற்று –

இது என்ன பொய் –
உன்னது அல்லாத ஒன்றை அர்த்தித்தாய் ஆகிலே இ றே உன் அர்த்தித்வம் மெய்யாவது
தன்னது ஒன்றை தந்தான் ஆகில் இ றே மஹாபலி ஔ தார்யம் மெய்யாவது –

இது பொய் என்னாதே- இது என்ன பொய் -என்றது அர்தித்வ பலமான த்ரைவிக்ரம
அபதாநத்தை சுருதி ஓதா நின்றது -யத்ராம் புவின் யஸ்ய -என்று ஔதார்யத்துக்கு பலமாக
மஹாபலிக்கு இந்திர பதத்தை சொல்லா நின்றது -ஆக பிரமாணங்களாலே பொய் என்ன ஒண்ணாது-

தன்னத்தை அவனதாக்கிக் கொண்டு இரக்கையாலும் -மகாபலி அவனத்தை தன்னதாக்கிக்
கொடுக்கையாலும் மெய் என்ன ஒண்ணாது -ஆகையாலே –இது என்ன பொய் –என்கிறார்

யிரந்த மண் வயிற்றுளே கரத்தி –
அர்த்திதுப் பெற்ற பூமி என்று பிரளய ஆபத்திலே ஆபத்தே ஹேதுவாக திரு வயற்றிலே
ஒளித்து வைத்து ரஷித்து

யுன் கருத்தை யாவர் காண வல்லர் –
உன் நினைவை யாவர் காண வல்லர் –
அநந்ய பிரயோஜனனான பிரகலாதனோடு -பிரயோஜநாந்த பரனான இந்த்ரனோடு விமுகரான
சம்சாரிகளோடு வாசியற ரஷிக்கிற உன் நினைவை ஜ்ஞானாதிகர் ஆர் தான் அறிய வல்லார்

கண்ணனே —
கிருஷ்ணனாய்  வந்து அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரையும்
பசுக்களையும் ரஷித்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி
அவர்களுக்கு நியாம்யனான நீயே அருளிச் செய்ய வேணும் என்று கருத்து –

——————————————————————————————-

26 பாட்டு –

அவதாரிகை –

சர்வ நிர்வஹானான நீ ஸூரி போக்யமான வடிவை ஆஸ்ரித அர்த்தமாக தேவ
சஜாதீயம் ஆக்கியும் கோப சஜாதீயம் ஆக்கியும் அவதரித்துப் பண்ணின ஆச்சர்யங்களை
ஆர் அறிய வல்லார் என்கிறார் –

வாமன அவதாரத்தோடே கிருஷ்ண அவதாரத்துக்கு
ஒரு வகையில் சாம்யம் சொல்லலாய் இருக்கை யாலே இரண்டு அவதாரத்தையும்
சேர்ந்து அனுசந்திக்கிறார் –

ஆணினோடு பெண்ணுமாகி அல்லாவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-

 

பதவுரை

ஆணினோடு பெண்ணும் ஆகி

புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய்
அல்லவோடு நல்ல ஆய்

மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய்
ஊணொடு ஓசை கூறும் ஆகி

ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய்
என்று அலாத மாயை ஆய்

உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணி பேணும்

பசுக்களை மேய்கிக்கிற
ஆயன் ஆகி

இடையனாய்
பொய்யினோடு மெய்யும் ஆய்

பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய்
காணிப்பேணும் மாணி ஆய்

(மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி
கரந்து சென்ற கள்வனே!

(மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே!
உன்னை யார் மதிக்கவல்லர்!

உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்?

வியாக்யானம் –

ஆணினோடு பெண்ணுமாகி –
ஜன்ய ஜனந பாவத்தாலே ஜகத்து விச்த்ர்த்தமாய் வேணும் என்று ஸ்த்ரீபும் விபாகத்தாலே
ஸ்ருஷ்டித்தும் -அந்யோந்யம் சம்பந்தித்தும் -சம்ஸ்ர்கிர்பித்தும் இப்படி அந்தர் ஆத்மதயா
நின்று -நிர்வாஹனாய் –

அல்லவோடு –
ஒன்றுக்கும் உடல் அன்றிக்கே இருக்கிற நபும்சக பதார்த்தத்துக்கு நிர்வாஹகனாய்

நல்லவாய்
இந்த விரகத்ரய விசிஷ்ட பதார்தங்களிலே விலஷண பதார்த்தங்களுக்கு நிர்வாஹகனாய்
வைலஷண்யம் ஆவது -புருஷார்த்த ருசி உண்டாகை

அவர்களுக்கு நிர்வாஹகன் ஆகை யாவது -ததாமிபுத்தி யோகாந்தம் -என்கிறபடியே
புருஷார்த்த சாதன பூதனாகை

ஊணோடு ஓசை யூறுமாகி –
புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு போக்யமான சப்தாதிகளுக்கு கர்ம அநுகூலமாக
நியாமகனாய் -ரச சப்த ஸ்பர்சமான -இவை மூன்றும் அஞ்சுக்கும் உப லஷணம் –

ஒன்றலாத மாயையாய் –
இவற்றினுள்ளே ஒன்றுக்கு காரணமான அளவு அன்றிக்கே -உக்தங்களோடு அனுக்தங்களோடு
வாசியற சர்வமுமாய்க் கொண்டு பரிணமிக்க வல்ல பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
மாயாந்து ப்ரக்ர்திம் வித்யாத் -என்னக் கடவது இ றே

மாயை -என்று ஆச்சர்ய வாசியாய் ஒன்றுக்கு நிர்வாஹகனாம் அளவு அன்றிக்கே
சகல பதார்த்தங்களையும் சேதனனுடைய கர்ம அநுகூலமாக நிர்வஹிக்க வல்ல
ஆச்சர்யத்தை உடையவன் என்னவுமாம் –

பூணி பேணு மாயனாகி –
இப்படி சங்கல்பத்தாலே சகலமும் நிர்வஹிக்கிற நீ ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக
அசாதாராண விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்து -உன்னைப்
பேணாதே பசுக்களைப் பேணும் இடையனாகி –

பொய்யினோடு மெய்யுமாய் –
அவதரித்து ரஷிக்கும் போது அநாஸ்ரிதரான துர் யோநாதிகள் பக்கலிலே பொய்யையும்
ஆஸ்ரிதரான பாண்டவர்கள் பக்கலிலே மெய்யையும் உடையையாய்

காணி பேணு மாயையாய்
மகாபலியாலே அபஹ்ர்தமாய் பூமியைப் பேணி தன்னைப் பேணாதே ப்ரஹ்மசாரியாய்

கரந்து சென்ற கள்வனே –
மறைத்துக் கொண்டு சென்ற க்ர்த்ரிமனே
மறைத்துக் கொண்டு செல்கையாவது -ஐஸ்வர்யமான வைபவம் தோற்றாமே -பூமியை
மகாபலியதாக்கி அர்த்தியாய்ச் செல்லுகை
க்ர்த்ரிமன் ஆகையாவது -சுக்ரன் வார்த்தை செவிப்படாதபடி -அழகாலும் -சீலத்தாலும் –
மகாபலியை வசீகரித்து சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொள்ளுகை

கரந்து சென்ற கள்வனே –
உன்னை யார் மதிக்க வல்லர் -என்று மேல் பாட்டோடே அந்வயம் –

——————————————————————————————–

27 பாட்டு –அவதாரிகை –

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

பதவுரை

விண் கடந்த சோதியாய்

விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே!
விளங்கு

ஸ்வயம்ப்ரகாசனான
ஞானம்

ஜீவாத்மாவை
மூர்த்தியாய்

சரீரமாக வுடையவனே!
பண்கடந்த தேசம் மேவு

வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்
பாவநாச நாதனே!

ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே!
எண் கடந்த யோகினோடு

எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு
மாணி ஆய்

வாமனாய்
இரந்து சென்று

(மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று
மண் கடந்த வண்ணம்

பூமியை யளந்துகொண்ட விதத்தையும்
நின்னை

உன்னையும்
ஆர் மதிக்க வல்லர்

அளவிடக்கூடியவர்கள் யார்?

வியாக்யானம் –

விண் கடந்த சோதியாய் –
விபுவான மூல ப்ரகர்தி உனக்குள்ளே யாம்படியான ஸ்வரூப வைபவத்தை உடைய ஸ்வயம்
பிரகாச வஸ்துவாய் –சுரர் அறி வரு நிலை விண் -என்று மூல பிரக்ர்தியை விண் என்ற சப்தத்தால்
சொல்லிற்று இ றே -இது தனக்கு அடி கார்கி வித்யையில் -ஆகாசே ஓதஞ்சப் ரோதஞ்ச –
என்கிறபடியே விபுத்வ சூஷ்மத்வங்களைச் சொல்லிற்று

பண் கடந்த தேச மேவு பாவ நாச நாதனே –
வேதத்தாலே பரிச்சேதிக்க ஒண்ணாத தேஜஸ்சையே ஸ்வரூபமாக உடையையாய் –
ஹேய பிரத்யநீகனான சர்வேஸ்வரனே

வேதம் ஸ்வர பிரதானம் ஆகையாலே தத்வாசி சப்தத்தாலே வேதத்தை சொல்லுகிறது
சேதன அசேதனங்களை வியாபித்து நிற்கச் செய்தேயும் -தத்கத தோஷ ரசம் அச்ப்ர்ஷ்டன் ஆகையாலும்
அசித் சம்சர்க்கத்தாலே சேதனனுக்கு வந்த தோஷத்தை போக்க வல்லன் ஆகையாலும்
ஹேய பிரத்யநீகன் என்கிறது

எண் கடந்த யோகினோடு –
அசங்க்யாதமான கல்யாண குணங்களோடு கூட –யோகு -யோகம் -அதாகிறது கல்யாண குண யோகம் –
பஸ்யமே யோகே ஐஸ்வரம் -என்று யோக சப்தத்தாலே குண யோகத்தை சொல்லிற்று இறே

இரந்து சென்ற மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறினவன் என்று தோற்ற வாமன வேஷத்தைக் கொண்டு அர்த்தியாய்ச் சென்று –

மண் கடந்த வண்ணம் –
பூமியை அளந்து கொண்ட பிரகாரத்தை –
அதாகிறது -இந்தரனுக்கு மகாபலியாலே அபஹ்ர்தமான ராஜ்யத்தை வாங்கிக் கொடுக்க -என்கிற
வ்யாஜத்தாலே வசிஷ்ட சண்டாள விபாகம் அற சதுர்தச புவன அந்தர்கதமான சேதனர்
தலைகளிலும் திருவடிகளை வைக்க –

நின்னை –
சேதன அசேதன விலஷணமாய் -வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப வைலஷண்ய
வைபவத்தை உடையையாய் -அதுக்கு மேலே குண ப்ரேரிதனாய்க் கொண்டு பூமியை
அளந்து கொண்ட உன்னை –

ஆர் மதிக்க வல்லரே –
பரிச்சேதிக்க வல்லார் ஆர்

வேதங்களாலே பரிச்சேதிக்கலாமோ –
ஜ்ஞாநாதிகரான வைதிகரால் தான் -பரிச்சேதிக்கலாமோ-
அம்மேன்மையை பரிச்சேதிக்கவோ –
அந் நீர்மையை பரிச்சேதிக்கவோ —
எத்தை யார் பரிச்சேதிக்க வல்லார் –

அதவா
விண் கடந்த சோதியாய் –
பரம பதத்துக்கு அவ்வருகாய் ஸ்வயம் பிரகாசமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையையாய்
இத்தால் த்ரிபாத் விபூதியும் தனக்குள்ளே யாம்படியான ஸ்வரூபவைபவத்தை சொல்லுகிறது

விளங்கு ஞான மூர்த்தியாய்
ஞானம் விளங்குகிற மூர்த்தியை உடையையாய் -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக
உடைய ஜ்ஞானத்துக்கு பிரகாசமான திவ்ய விக்ரஹத்தை உடையையாய்
இந்த ஜ்ஞானம் ஷட் குணங்களுக்கும் உப லஷணம் –ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் –
என்னக் கடவது இறே

பண் கடந்த தேசு பாவ நாச நாதனே –
சுருதியால் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனாய்
சம்சாரிகளுடைய தோஷத்தை போக்க வல்ல ஹேய பிரத்யநீகத்தை உடைய சர்வேஸ்வரனே

எண் கடவ யோகினோடு –
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ருயதே -என்கிறபடி அபரிச்சின்னமாய் -அசங்க்யாதமான-
ஆச்சர்ய சக்தி யோகத்தை உடையையாய் கொண்டு

மாணியாய் இரந்து சென்று –
அதீந்த்ரியமாய் அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிச்சின்னமாக்கி
மகாபலி உடைய சஷூர் விஷயமாக்கி அர்த்தியாய் சென்று –

மண் கடந்த வண்ணம் –
மூன்றடியை அர்த்தித்து -இரண்டு அடியாலே சகல லோகங்களையும் அளந்து கொள்ளுகையும்
சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொள்ளுகையுமாகிற இப்ப்ரகாரத்தை உடைய

நின்னை
அபரிச்சின்னமான ஸ்வரூப வைபவத்தை உடையையாய்
அந்த ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசமான திவ்ய விக்ரஹ உக்தனாய்
வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையையாய்
உன்னுடைய ஆச்சர்ய சக்தி ப்ரேரிக்க -அத்தால் ப்ரேரிதனாய் வந்து -பூமியை அளந்து கொண்ட உன்னை

ஆர் மதிக்க வல்லரே –
இவற்றை ஒன்றை ஒருத்தராலே பரிச்சேதிக்கப் போமோ –

———————————————————————————————

28 பாட்டு –

அவதாரிகை –
சங்கல்ப லேசத்தாலே அண்ட காரணமான ஜல சிருஷ்டி முதலான சகல ஸ்ர்ஷ்டியும் பண்ணக் கடவ நீ –
ஸ்ரஷ்டமான ஜகத்திலே ஆஸ்ரித ரஷ்ண அர்த்தமாக உன்னை அழிய மாறி அநேக
அவதாரங்களைப் பண்ணியும் -ஆஸ்ரித விரோதிகளான துர் வர்க்கத்தை திவ்ய
ஆயுதங்களாலே கை தொட்டு அழிக்கையும் ஆகிற இவ் வாச்சர்யங்களை ஒருவரும்
அறிய வல்லார் இல்லை என்கிறார் -ஒருத்தரும் நின்னது தன்மை இன்னதென்னெ வல்லரே –
என்கிற மேலில் பாட்டில் க்ரியை இதுக்கும் க்ரியை –

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-

பதவுரை

பௌவம் நீர்

(அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து

ஸ்ருஷ்டித்து
படைத்த

(பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார்

பூமியை
இடந்து

(ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து
அளந்து

(த்ரிவிக்ரமனாய்) அளந்து
உண்டு

(ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து

(ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும்.
பௌவம் நீர்

(இலங்கைக்கு அழகான) கடலை
அடைத்து

ஸேதுகட்டித் தூர்த்து.
முன் அதில் கிடந்து

முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி
கடைந்த

(ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின
பெற்றிபோய்!

(இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே!
மிடைத்த

செருக்கி வந்த
மாலி

மாலி என்றகிற ராக்ஷஸனென்ன
விலங்கு மான் மாலி

அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள்
காலன் ஊர் புக

யமலோகம் போய்ச் சேரும்படியாக
படைக்கலம் விடுத்த

ஆயுதங்களை ப்ரயோகித்தருளின
பல் படை தடகை மாயனே!

பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே  யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது)

வியாக்யானம் –

படைத்து பார் இடந்து –
பௌவ நீர் -படைத்து பார் இடந்து –என்று அந்வயமாகக் கடவது –
அபயேவ ஸ சர்வஜா தெவ் -என்கிறபடியே -அண்ட காரணமான -ஏகார்ணவத்தை
சங்கல்ப லேசத்தால் சிருஷ்டித்து -ஜகத் காரணமான அண்டத்தையும் -அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும்
சிருஷ்டித்து -ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே

அளந்து –
அதுக்கு மேல் -மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக

அது உண்டு உமிழ்ந்து –
நைமித்திக பிரளயம் வர வட தள சாயியாய் -தன்னுடைய சிறிய வயிற்றில் த்ரிலோகத்தையும்
வைத்து ரஷித்து -உள்ளே இருந்து நோவு படாமல் -அவற்றை உமிழ்ந்து –

இதுவும் சங்கல்பத்தால் -அப்படி செய்ததும் சர்வ சக்தி என்றும் -உரு வழிந்த பதார்த்தங்களை
உண்டாக்குமவன் என்றும் –ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக -பௌவ நீர் படைத்து அடைத்து –
என்று இங்கேயும் அந்வயிக்கக் கடவது –

அண்ட காரணமான ஏகார்ணவத்தை சங்கல்ப லேசத்தால் ஸ்ர்ஷ்டித்த நீ அண்ட அந்தர்வர்த்திகளான
சமுத்ரங்களில் ஒரு சமுத்ரத்தை வருணனை சரண் புக்கு படை திரட்டியும் அடைத்து -இதுவும்
ப்ரணியி நி யுனுடைய விச்லேஷத்தில் தேவரீர் உடைய ஆற்றாமை பிரகாசிப்பித்த இத்தனை இறே

முன் அதில் கிடந்த
ப்ரஹ்மாதிகள் ஆர்த்தரான தசையிலே தூரஸ்தராக ஒண்ணாது என்றும்
அபிமுகீ கரித்தாருக்கு அவதரித்து சுபாஸ்ர்யமம் ஆகைக்கும் திருப் பாற் கடலில்
கண் வளர்ந்து அருளி -ஜ்யோதீம் ஷி விஷ்ணு -என்கிறபடி சர்வருக்கும் சந்நிஹிதரான தேவரீர்
இப்படி செய்து அருளிற்று –ஆஸ்ரித ரஷணத்தில் சதோத்உக்தர் என்று தோற்றுகைக்காக இறே –

கடைந்த பெற்றியோய் –
துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக
அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் –
இதுவும் ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் என்று தோற்றுகைகாக –

மிடைத்த மாலி –
கோபித்த மாலி

மாலிமான் விலங்கு –
பெரு மிடுகனான ஸூ மாலியான திர்யக்
திர்யக் ப்ரவர்தனான ஸூ மாலி -என்னவுமாம்-

காலனூர் புகப் படைக்கலம் விடுத்த –
அவர்களையும் அப்புறத்திலே புகும் படி ஆயுதத்தை ஏவினவன் -இத்தால் ஆஸ்ரித
விரோதிகளை அழியச் செய்யும் இடத்தில் சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு
ஆயுதத்தால் அழிக்குமவன் என்கிறது –
பல் படைத் தடக்கை மாயனே —
பின்பு விரோதி நிரசநத்து ஈடான அநேக ஆயுதங்களை உடைத்தாய்
அவ்வாயுதங்களுக்கு ஸத்ர்சமான சுற்றுடைதான திருக்கையை உடைய ஆச்சர்ய பூதனே –

——————————————————————————————

29 -பாட்டு –அவதாரிகை

கீழில் பாட்டில் -மநசைவ ஜகத் ஸ்ர்ஷ்டிம் -என்கிறபடியே சங்கல்ப லேசத்தாலே ஜகத் ஸ்ர்ஷ்டி
சம்ஹாரங்களைப் பண்ண வல்லவன் -ஆஸ்ரித அனுக்ரஹங்கத்தாலே எளிய கார்யங்களுக்கு
அநேக விக்ரஹ பரிக்கிரஹங்களைப் பண்ணி ரஷிக்கும் என்கிறது
இதில் –
இவ் வனுக்ரஹத்துக்கு ஹேது1- சர்வாதிகத்வத்தால் வந்த பூர்த்தியும்
2-ஸ்ரீயபதித்வத்தால் வந்த நீர்மையும் –
3-அவர்ஜநீயமான சம்பந்தமும் -என்றும் –
4-அனுக்ரஹ கார்யம் வியூக விபவாத்யவதாரங்கள் என்றும் சொல்லி —

இப்படி பட்ட அனுக்ரஹம்-ஏவம்விதம் என்று பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார் –

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே –29-

பதவுரை

நாத

ஸ்வாமிந்!
ஞானம் மூர்த்தி ஆயினாய்

ஜ்ஞாநஸ்வருபியானவனே!
பரத்திலும் பரத்தை ஆகி

பராத்பரனாயிராநின்றாய்.
ஒருத்தி தன்னை

ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை
உரத்தில்

திருமார்பிலே
வைத்து

பிரியாமல் அணையவைத்து
உகந்து

மகிழ்ந்து
பௌவம் நீர் அணை கிடந்து

திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி
அது அன்றியும்

இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல்
நரத்திலும்

ஹேயமான மானிட சாதியிலும்
பிறத்தி

வந்து பிறக்கின்றாய்;
நினாது தன்மை

உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை
ஒருத்தரும்

யாராகிலும்
இன்னது என்ன வல்லரே?

இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.)

வியாக்யானம் –

பரத்திலும் பரத்தையாதி –
பர பராணாம் பரம -என்கிறபடியே த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகான
ஸ்வரூப வைலஷண்யம் உடையையாய் –

அநந்தரம் –உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது-என்கிற இது அந்விதமாக கடவது –

கீழ் சொன்ன ஸ்வரூப வைலஷண்யத்துக்கும் -அவ்வருகான உத்கர்ஷத்துக்கும் ஹேதுவாய்
இ றே ஸ்ரீ ய பதித்வம் இருப்பது –

உரத்திலும் –
சப்தத்தாலே -ஸ்வரூப அந்தர்பாவத்தையும் சமுச்சயிக்கிறது -அதுக்கே மேலே மகிஷி
வர்க்கத்தையும் வ்யாவர்த்திக்கிறது

ஒருத்தி –
அத்வதீயை -வடிவிணை இல்லா மலர் மகள் -அதாகிறது த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும்
ஸ்வாமிநியாய -சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் இருக்கை

தன்னை வைத்து
அகலகில்லேன் இறையும் -என்று மேல் விழக் கடவ இவள் தன்னை தான் -இறையும்
அகலகில்லேன் -என்று திரு மார்விலே வைத்து –

உகந்து –
துலய சீல வயோ வர்த்ததையாய் இருந்துள்ள அவளோடே சம்ச்லேஷ ரசங்களை
அனுபவிக்கிற நீ –

பௌவ நீர் அணைக் கிடந்த –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம் -பிராட்டி பக்கல் ப்ரீதிக்கு போக்குவீடாய் இறே -இருப்பது
ஆர்த்த ரஷணத்துக்கு அநிருத்த ரூபியாய்க் கொண்டு -ஷீராப்தியிலே நீரே படுக்கையாகக்
கண் வளர்ந்து அருளி -தாபார்த்தோ ஜல சாயி நம் -என்கிறபடியே தாபார்த்தருக்கு
கொண்டு அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை -சொல்லுகிறது
இது சங்கர்ஷன பிரத்யும்ன வ்யூஹங்களுக்கும் உப லஷணம்

அதன்றியும் –
சம்சாரத்தில் அசித் கல்பமாய்க் கிடந்த சேதனருக்கு ரூப நாமங்களைக் கொடுத்தும்
சாஸ்திர ப்ரதா நாதிகளைப் பண்ணியும் -ப்ரஹ்மாதிகளுடைய ஆர்த்திகளைப்
பரிஹரித்தும் -இப்படி ரஷித்து ப[ஒந்த வ்யூஹ அவதாரங்களிலே தேவரீர் உடைய அனுக்ரஹம்
பர்யவசியாமையாலே -அதுக்கு மேலே –

நரத்திலும் பிறத்தி –
சர்வ கந்த -என்கிற நீ ப்ரஹ்மாதிகளுக்கும் குத்ஸா விஷயமான மனுஷ்ய யோநிகளிலே
தத் சஜாதீயனாய்க் கொண்டு ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே வந்து அவதரித்து -இது தேவ
யோநி யிலும் திர்யக் யோநியிலும் உண்டான அவதாரங்களுக்கும் உப லஷணம்

ஸூர நரதி ரச்சாமவதரன் -என்னக் கடவது இறே

நாத –
இப்படி விஸத்ர்சமான தேவ யோநியிலே வந்து அவதரிக்க வேண்டுகிறது -இவற்றை
உடையவன் ஆகையாலே

ஞான மூர்த்தி யாயினாய் –
ஜ்ஞான ஸ்வரூபன் ஆயினாய் -இப்போது ஞாநாதிக்யம் சொல்லுகிறது -ரஷிகைக்கு
விரகு அறியுமவன் என்கைக்காக -ப்ராப்தி உண்டானாலும் விரகு அறியாத வன்று ரஷிக்க
போகாது இ றே -சாஸ்திர பிரதானம் என்ன -ஆசார்ய உபதேசம் என்ன -அழகு என்ன -சீலம் -என்னை
ஏவமாதிகளாலே ஆச்ரயண அநுகூலமான ருசியைப் பிறப்பிக்க வேண்டும்படி இறே
சேதனனுடைய ப்ரக்ருதி பேதம் இருப்பது

ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே –
வேதங்கள் என்ன –
ஜ்ஞாநாதிகரான வைதிகர் என்ன –
இவர்கள் ஒருத்தரும் உன்னுடைய அனுக்ரஹத்தினுடைய எல்லையை ஏவம் விதம்
என்று பரிச்சேதிக்க வல்லரோ –தன்னை அழிய  மாறி -பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளும்
சம்சாரிகளை -தன்னை அழிய மாறி ரஷிக்கிற அனுக்ரஹத்தை எவர் அறிய வல்லரே –

——————————————————————————————-
30 பாட்டு –அவதாரிகை

கீழில் பாட்டிலே நரத்தில் பிறத்தி -என்று மனுஷ்ய யோநியில் அவதாரங்கள்
ப்ரஸ்துதம் ஆகையாலும் -அதுக்கு கீழ் பாட்டிலே -அது உண்டு உமிழ்ந்து -என்று
வட தள சாயி அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலும் -வட தள சாயி உடைய
மௌக்த்யத்திலும் சக்தியிலும் -சக்கரவர்த்தி திருமகன் உடைய அவதாரத்தின்
மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யத்திலும் வீர ஸ்ரீ யிலும் ஈடுபடுகிறார் -இப்பாட்டில் –

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

பதவுரை

வானகமும்

வானுலகத்திலுள்ளளாரயும்
மண்ணகமும்

மண்ணுலகத்திலுள்ளாரையும்
ஏழ் வெற்பும்

ஸப்தகுலபர்வதங்களையும்
ஏழ் கடல்களும்

ஸப்தஸாகரங்களையும்
போனகம் செய்து

அமுது செய்து
ஆல் இலை துயின்ற

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின்
புண்டரீகனே!

தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே!
தேன் செய் அகம்

தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய்
தண்

குளிர்ந்ததாய்
நறு

பரிமளிதமான
மலர் துழாய்

திருத்துழாயை
கல் மாலையாய்!

நல்லமாலையாக அணிந்தவனே! (நீ)
கூன்

(கூனியினுடைய) கூனானது
அகம் புக

உள்ளே யொடுங்கும்படி
தெறித்த

விட்டெறிந்த
கொற்றம் வில்லி அல்லையே

வெற்றி வில்லை யுடையவனான்றோ

வியாக்யானம்

வானகமும் மண்ணகமும் –
ஸ்வர்க்க வாசிகளான இந்த்ராதி தேவர்களும் -அவர்களுக்கு போகய போக உபகரண
போக ஸ்தாநமான ஸ்வர்க்கம் தானும் –
பூமியில் உள்ள மனுஷ்யாதிகளும் -அவர்களுக்கு வாஸஸ்தானமான பூமியும் –
மஞ்சாக்ரோசந்தி -என்னுமா போலே தேச வாசி  சப்தத்தாலே -தைசிகரையும் சொல்லுகிறது
பிரளயத்தில் ஆபன்னர் ஆனார் தைசிகர் ஆகையாலே –

இத்தால் –
பூமியில் உள்ளாருக்கு ஆராத்யராய் அவர்களுக்கு அபிமத பல ப்ரதருமான இந்த்ராதிகளோடே
ஆராதகரான மனுஷ்யாதிகளோடு வாசி யற பிரளய ஆபத்தில் வந்தால் எல்லாருக்கும்
ஒக்க ஈஸ்வர ஏக  ரஷ்ய பூதர் என்கிறது

வெற்பும் —
அந்த பூமிக்கு ஆதாரமாய் இருந்துள்ள சப்த குல பர்வதங்களும்
இத்தால் -ஆதாரமான குல பர்வதங்களோடே ஆதேயமான பூமியோடு வாசி யற
எல்லாவற்றுக்கும் தத் காலத்திலே ஈச்வரனே அதார்சம் என்கை

வெற்பு -என்று ஸ்தாவர ஜாதிக்கும் உப லஷணம்

ஏழ் கடல்களும் –
த்வீபங்களுக்கு பேதகமான சப்த சமுத்ரங்களும் -அத்தாலே -ஜலவாசி சத்வங்களையும் சொல்லுகிறது

ஆக
ஆராய்த்ரனா இந்த்ராதிகளோடே -ஆராதகரான மனுஷ்யர்களோடே -தாரகங்களான
பர்வதங்களோடு -தார்யையான பூமியோடு -சமுத்ரங்களோடு -ஜல சர தத்வங்களோடு –
வாசி யற எல்லாவற்றுக்கும் சர்வேஸ்வரனே ரஷகன் என்றது ஆய்த்து

போனகம் செய்து –
போனகம் செய்து -என்றது -ரஷகனுக்கு ரஷக தர்மம் பசியருக்கு சோறு போலே அபிமதமாய் இருக்கை -என்கை –
யஸ்ய ப்ரஹ்ம சஷத்ரஞ் சொபே பவத ஒதனம் -என்றும் -அத்தா சராசர க்ரஹணாத்

ஆலிலைத் துயின்ற –
அவ்வடிவுக்கு அளவாய் தன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின –

புண்டரீகனே –
புண்டரீக அவயவனே –
செங்கனிவாய்ச் செங்கமலம் கண் பாதம் கை கமலம் -என்கிறபடியே திவ்ய அவயவங்கள் –
அப்போது அலர்ந்த செந்தாமரைக் கண்கள் போலே இருக்கையாலே புண்டரீக சப்த வாச்யன் என்கிறது –
த்ரை லோக்ய ரஷணத்தால் வந்த ப்ரீதி திரு வடிவிலே தோற்றி இருக்கிறபடி –

தேனகம் செய் –
உள்ளெல்லாம் வண்டுகளாலே மிடைந்து இருக்கும் என்னுதல் –
மதுவாலே பூரணமாய் இருக்கும் என்னுதல் –

தண்ணறு மலர்த் துழாய் –
ஸ்ரமஹரமாய் -பரிமளிதமாய்ச் செவ்வியை உடைத்தான திருத் துழாய்

நன் மாலையாய் –
அவயவ சோபையைக் காட்டில் ஆகர்ஷமாய் இருக்கும் மாலை -என்னுதல்
ரஷணத்துக்கு இட்ட தனி மாலை யாகையாலே விலஷணம் -என்னுதல்

ஆக –
சத்தா ப்ரயுக்தமான சக்தி யதிசயத்தையும் -அவயவ சோபையையும் -அலங்கார
சோபையையும் அனுபவிக்கிறார்

கூனகம் புகத்தெறித்த –
கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இறே இருப்பது

கொற்ற வில்லி யல்லையே —
வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –

கொற்றம் -வென்றியும் -வலியும்

புண்டரீகனே -கொற்ற வில்லி அல்லையே என்று அவதார அந்தரமாய் இருக்கச் செய்தேயும்
தரம்யைக்யத்தாலே -பால்ய யவன அத்யவஸ்தா விசேஷங்கள் போலே தோன்றுகிறது  ஆய்த்து

இவர்க்கு -இப்பாட்டு தொடங்கி மேல் -மாயம் என்ன மாயம் -என்கிற பாட்டளவும் வர
அதுவே க்ரியையாகக் கடவது –

—————————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 20, 2013

1ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனிநம் கண்ணன் தோழீ! கடியனே?

பொ-ரை :- ஊரிலுள்ளவர்களால் பேசப்படுகின்ற அலராகிய எருவை இட்டு, தாயினால் பேசப்படுகின்ற நல்வார்த்தைகளாகிற தண்ணீரைப் பாய்ச்சி, அன்பாகிய நெல்லை விதைத்து அதனை முளைப்பித்த நெஞ்சமாகிய பெரிய வயலிலே, பொருந்திய பெரிய காதலைக் கடலைப் போலே உண்டாக்கிய மேகம் போன்ற திருமேனியையுடைய நம் கண்ணபிரான் கடியன் ஆவானோ? என்கிறாள்.

வி-கு :- முளைத்த – முளைப்பித்த. காதலைக் கடல் புரைய விளைவித்த கண்ணன் என்க. கடியனே என்ற ஏகாரம், கடியன் ஆகான் என்னும் பொருளையுடையது; எதிர்மறை.

ஈடு :- நாலாம் பாட்டு. 2“என்செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ஊரார் சொல்லும் பழியேயாய், அவன் தான் நமக்கு உடலானானோ அவர்கள் சொல்லும் பழி பொறுத்திருக்கைக்கு; ஆனபின்பு, அவன் கடியன்காண் என்றாள். ஏதேனும் ஒன்றைச் சொல்லியாகிலும் மீட்க வேணுமே அவளுக்கு, ‘அவன் அருள் அற்றவன்காண்’ என்ன; ‘கெடுவாய், நீ சொல்லும் வார்த்தையே இது,அவன் நமக்கு என்ன குறை செய்தான்’ என்ன, ஊரவர் பழி சொல்லிலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டான இடத்திலும் இந்நிலையில் வந்து முகங்காட்டிற்றிலன் கண்டாயே’ என்ன; அவன் இப்போது வந்து முகங்காட்டிற்றிலனாகிலும், தான் முகங்காட்டாத போதும் தன்னை ஒழிய நாம் மற்றொன்றால் பொருந்தாதபடி செய்தானே! அவன் செய்தபடி பொல்லாதோ என்கிறாள்.

ஊரவர் . . . . . . விளைவித்த கண்ணன் 1இவை எல்லாம் செய்தாய் நீயோ. ஊரவர் கவ்வை எருவாக – 2அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய அன்று தொடங்கி ஊரவர் பழி சொல்லத் தொடங்கினார்கள் காணும். தங்களை விட்டுப் போருவதற்கு முன்னே “விபீஷணஸ்து தர்மாத்மா” என்றார்களே அன்றோ; இவன் இக்குடியில் உள்ளார்படி அல்லன், இவனுக்கு வாசி உண்டு; அந்த வேறுபாட்டினைச்சொல்லுகிறது “தர்மாத்மா” என்று. 1“மறக்குடி அறஞ் செய்யக் கெடும்” என்றதே அன்றோ. “அரக்கர் செயலை உடையவன் அல்லன்” என்பது போன்று, ஜாதி மாத்திரமே இவன் பக்கல் எடுத்துக்கொள்ளலாவது. 2ஊரார் சொல்லுகிற பழியை இவளுடைய அன்புக்கு எருவாக இட்டான். 3ஊரார் பழி சொல்லிற்றிலர்களாகில் இவள் தானும் கைவாங்கி இருக்குங்காணும்; என்றது, இவள், ‘மறப்பேன்’ என்னும் அன்றும் மறக்க ஒண்ணாதபடி ஊரார் நினைவினை உண்டாக்குகின்றவர்கள் தன்மையிலே நிற்பர்கள் ஆயிற்று என்றபடி. அன்னை சொல் நீர்படுத்து-4தாயாரும் இதற்கு முன்பெல்லாம் ‘என் மகள்’ என்றே இருந்தாள், ஊரார் பழி சொல்லப்புக்க பின்பாயிற்று இவள் அறிந்தது. தாயாருடைய ஹித வசனத்தைநீராகப் பாய்ச்சி. 1எருவாவது, அடியிலே ஒருகாலே இட்டுவிடுவதே அன்றோ, நீர் மாறாமல் பாய்ச்ச வேணுமே; ஊரார் ஒருகால் சொல்லிவிடுவர்களித்தனையே, தாயார் வீட்டுக்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாக ஹிதம் சொல்லா நிற்குமே அன்றோ; அதனால், அன்னை சொல்லை ‘நீர்’ என்கிறாள். ஈர நெல் வித்தி – அன்பாகிற நெல்லை வித்தி. 2இவள், அன்பு இருக்கும்படி ஆராய்ச்சி செய்ததும் இவ்விஷயத்திலே ஆயிற்று; “முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” என்கிறபடியே, இளமைப் பருவம் தொடங்கி வேறு ஒன்றினையும் அறியாள். 3புறம்பே சில விஷயங்களிலே பற்று உண்டாய் விரக்தி பிறக்க வேண்டா ஆயிற்று இவளுக்கு. 4தன் சம்பந்தமான ஞானத்துக்கு உபகாரகமான மூல சுக்ருதமும் அவன்தானே ஆயிற்று. முளைத்த – 5எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்கும்போதும் முளைப்பிக்கும் சக்தி உண்டாகும்போதும் அவன் உண்டாக்க வேண்டுமே;ஆதலின், “முளைத்த” என்கிறது. 1“சரீர ஆரோக்யம் செல்வம்” என்னும் பொருளைத் தொடக்கமாகவுடைய 2சுலோகத்திலே சுகத்திற்குச் சாதனங்களையும் சொல்லி, அவற்றுக்குப் பலமான சுகத்தையும் தனித்துச் சொல்லி, இரண்டற்கும் பகவான் திருவருள் வேணும் என்று சொல்லியிருக்கிறதே அன்றோ. 3சிறியதைப் பெரியது நலியுமாறு போலே, ஒருவன் செய்த புண்ணியத்தினுடைய பலத்தை வேறு ஒருவன் பறித்துக்கொள்ளாமல், அப்புண்ணியத்தைச் செய்தவனே அநுபவிக்கும்படி செய்யும் போதும் அவன் திருவருள் வேணுமே.

நெஞ்சப் பெருஞ் செய்யுள் – நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. 4கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள். ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி. பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி1ஆத்மாவோடு கட்டுப்பட்டிருக்கின்ற காதல் என்றபடி. 2இங்கே ‘கடல் புரைய’ என்றது, “கடலின் மிகப் பெரிதால்” என்னாநின்றது; 3அதனில் பெரிய என்னவா” என்று, ஈச்வரன்தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது; ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக்கொண்ட காரியம் இதுவாயிற்று. 4கைங்கர்யத்திற்கு முன்கணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது. 5அது உண்டாக வேணுமே அன்றோ அவ்வருகு போம் போது; 6அங்கே போன பின்னர் அங்குள்ளாரது ஒருபடியாய் இவரது ஒருபடியாய் இருக்க ஒண்ணாதே. 7முதலிலே மயர்வற மதிநலம் அருளினது தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று. 8அன்றிக்கே, பெரியபோரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது, ஊர்ப்பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி. 1அன்றிக்கே, காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல். நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில், 2“விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது, அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே, அதிலே ஓர் அவஸ்தாவிசேடமாம். முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேடம் வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.

கார் அமர் மேனி – அடியிலே எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும், மேல் மழை பெய்யாதாகில் அப் பயிர் தலை குளிர்ந்து இராதே அன்றோ; வடிவாலே ஆயிற்று மழை பெய்தது. நீர் உண்ட மேகம் போலே குளிர்ந்த வடிவு. நம் கண்ணன் – வடிவையும் தந்து தன்னையும் நமக்குத் தந்த கிருஷ்ணன். வெறும் வடிவில் பசை கண்டு அகப்படுமவள் அன்று, அகவாயில் தண்ணளியும் உண்டாக வேணுமாயிற்று. 3கிருஷ்ணன் என்றால் ‘பெண்களுக்குச் சேஷபூதன்’ என்பது பிரசித்தமே அன்றோ. தோழி-நீ தான் யாராய் இவ்வார்த்தை சொல்லுகிறாய். இரண்டும் உனக்கே பணியோ; ‘நீர்மை யுடையவன்’ என்று பொருந்த விடுகையும் உனக்கே பணியாய், ‘அருள் அற்றவன்’ என்று அகற்றப் பார்க்கையும் உனக்கே பணியாயோ இருப்பது! கடியனே – இவ்விஷயத்தில் இப்படிப் பொருந்தவிட்ட நீயே மீட்கப் பார்த்தாலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டாம்படி செய்தானாகில், 1இனி அவன் என் செய்வான். முன்பு நீர்மையுடையவனாகச் சொல்லப்பட்டவன், இன்று பழிக்கும்படி கடியன் ஆனானோ?

ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.-என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்குக.

ஊரார் சொல்லும் பழி -கைப்பட்டால் பொறுக்கலாம் -கடியன் கான் அவன் என்றாள்  தோழி
ஏதாவது சொல்லி இவளை மீள சொல்கிறாள் –
நாயகி கெடுவாய் நீ சொல்லும் வார்த்தையா –
இத்தசையில் முகம் காட்டாது கண்டாயா துடிப்புக்கு வந்து இருக்க வேண்டாமோ –
நாயகி -முகம் காட்டாத போதும் தன்னை ஒழிய வேறு ஒன்றில் போகாத ஈடுபாட வைத்தானே
இது அவன் செய்த உபகாரம் -கடியன் இல்லையே
காதல் பயிர் -வசவே ஏறு அன்னை சொல் நீர்
ஈர நெல் -நெஞ்சகம் நிலம் -வித்து முளைத்த
பேரமர் காதல் கடல் போல
காரமரர் மேனி இத்தையும் செய்ததே
கடியன் அல்லனே
ப்ராதி கூல்ய நிவ்ருத்தி வந்தது தொடக்கி ஊரார் கவ்வை உண்டே
இவர்கள் தான் ஈடுபட காரணம் –

விரையாக உருவகம் செய்த அன்பிற்குப் பின்னர் உண்டாகக் கூடிய
‘ஊரவர் பழியை’ விரைப்பதற்கு முன்னே இடக் கூடிய ‘எருவாக’ உருவகம்
செய்யலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அநுகூலமில்லாதவர்களை’ என்று தொடங்கி. என்றது, சேர்க்கை உண்டானது
கண்டு பழி சொல்லுகிறார்கள் அன்று, அவன் பக்கல் அத்வேஷம் உண்டானது
கொண்டே பழி சொல்லுகிறார்கள் என்றபடி. அத்வேஷம்-துவேஷம் இன்மை.
அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய மாத்திரத்தில் பழி சொன்னார்
உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தங்களை விட்டுப்
போருவதற்கு முன்னே’ என்று தொடங்கி.

“விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித:”

இது, ஸ்ரீராமா, ஆரண்ய, ஸ்ரீராமனைப் பார்த்துச் சூர்ப்பணகை கூறியது.
இங்கு, “தர்மாத்மா” என்றது, கோறல் முதலிய தீயசெயல்கள் இல்லாமை
மாத்திரம் சொல்லுகிறது. “து” சப்தார்த்தம், ‘இவன் இக்குடியில் உள்ளார்படி
அல்லன்’ என்பது. “தர்மாத்மா’ என்பதற்கு, சநாதன தர்மமான பெருமாளை
ஆத்மாவாக உடையவன் என்றும் சொல்லுவார்கள்.

தங்கள் இடம் போவதருக்கு -முன்பே சூர்பணகை தண்டகாரண்யத்தில் சொல்லிய வார்த்தை –
சரணாகதி செய்வதற்கு முன்பே
ஆநுகூல்ய சங்கல்பம் வரும் முன்பே
ப்ராதி கூல்ய வர்ஜனம் மட்டுமே வந்த நிலை
ஞான பழம் பக்தன் கேலி செய்வது போலே
சொன்னது சூர்பணகை என்பதால் -வசவு கையால் ஆகாதவன் -கொண்டாட்டம் இல்லை
தர்மாத்மா நம்மை பொருது கொண்டாட்டம் போலே இருந்தாலும்
பழிக்கில் புகழ் போலே

“தர்மாத்மா” என்றால், அது பழியாகுமோ? எனின், அது ‘பழியேயாம்’
என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மறக்குடி’ என்று தொடங்கி.

  “மறக்குடித் தாயத்து வழிவளம் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்
கலையமர் செல்வி கடன்உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்
மட்டூண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டூண் மாக்கள் கடந்தரு மெனவாங்கு”

என்பது, சிலப். மேட்டுவ வரி.

‘மறக்குடி அறஞ் செய்யக் கெடும்’ என்பது வழக்கு.

அதர்ம ஜாதியில் அறம் செய்தவன் கெடும்
துணை நூல் மார்பில் அந்தணர் -உயர்ந்த கொண்டாட்டம் இல்லை இங்கும்
பண்டித சம தர்சன -ப்ராஹ்மனே -கேவல பிராமணர் இங்கே பாஷ்யம் ஜாதி மட்டுமே
அது போல் விபீஷணன் அரக்கர் ஜாதி மட்டுமே
வசவே ஸ்ரீ ராம பக்தி முத்த ஹேது
பிரேமதுக்கு எருவாக இவளுக்கு வசவே
பழி சொல்லாமல் இருந்தால் -கை வாங்கி இருக்க போயி காணும்
மறக்க ஒண்ணாத படி -நினைவு மூட்டி வசவை -பொழிய

அன்னை சொல் நீராக
தாயார் என் மகள் என்று இருக்க -வசவு கேட்டு -அறிந்து -சொல்லிக் கொண்டே இருக்க
எரு அடியில் இட்டால் போதுமே
நீர் மாறாமல் பாய்ச்ச வேண்டுமே
எப்போதும் ஒக்க ஹிதம் சொல்லா நிற்கும்
ஈர நெல் -சங்கம் ஈடுபாடு ஈர
சங்கம் உண்டு -நினைவு அறிந்த நாளில்
முலையோ முழு முற்றும் பொந்தில -பால்யா பிரவர்த்தி

பெருமாள் மலையே திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகம் –
இளைய பெருமாள் போலே தொட்டில் பருவம் தொடக்கி ஈடுபாடு
புறம் சங்கம் ஏற்பட்டு விரக்தி உண்டாகி பகவத் விஷயம் வர வேண்டியது இல்லை
மாதரார் முலை பேணினேன் -வாடினேன் -சொல்லி ஓடினேன் -நாடினேன் என்றார் கலியன்
இவருக்கு அப்படி இல்லையே
மூல ஸூக்ர்தமும் அவனே –
முளைக்கும் பொழுதும் -அவன் கிருபை வேண்டுமே
-எரு இட்டு நீறு பாய்ச்சினால் போதாதே
சரீரம் ஆரோக்கியம்

சாதனம் இருப்பினும் சாத்திய சித்தி அவன் அதீனம் என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘சரீர ஆரோக்கியம்’ என்று தொடங்கி.

2. “சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ்ஸு கம்
தேவி த்வத்திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”

என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன்
துதிப்பது. இது, பிராட்டி விஷயமாயினும், பிராட்டிக்கும் ஈச்வரனுக்கும்
உண்டான அபேதத்தைப் பற்ற, பிராட்டி விஷயமான இச்சுலோகம்
இவ்விடத்திற்குப் பிரமாணமாகத் தட்டு இல்லை என்க.

உன்னாலே கடாஷிக்க பெற்றவர்கள் அடைவார்கள் -இந்த்ரன் –
சரீரம் ஆரோக்கியம் விரோதிகள் ஜெயம் சுகம் -பலம் சுகம் கடைசியில் –
விளையும் பொழுது அனுக்ரஹம் வேண்டுமே
சிறியத்தை பெரியது நலியாமல் இருக்க –
ராஜ்ஜியம் minority -நலியாமல் –
கர்ம பலன் அனுபவிக்க -செய்தவனே புஜிக்க நிர்வாஹன்
பெரும் செய்யுள் -சம்ச்லேஷ விச்லேஷம் அகலம் நித்ய விபூதி போலே பெருக்கி –
தங்க முலாம் -பெருமாளுக்கு கவசம் -அடித்து அடித்து -பெரிசாக்கி –
கையால் தொடாமல் போடுவது
அடிக்க அடிக்க விரியுமே –
அணு ஸ்வரூபம் நெஞ்சை -பெரிசாக்கி
ஆசையான நெல்லை -விளை  நிலம் நெஞ்சு
பேரமர் காதல் –
வசவுக்கும்
கடல் புரைய
மேலே  கடலில் மிக பெரிய
பெரிய அவா -அதனில் பெரிய அவா -அளவுக்கு வளர்த்தது

“கடல் புரைய” என்ற இது, பின்னே வருகின்ற “கடலின் மிகப்
பெரிதால்” (7. 3 : 6.) என்பது போன்றவைகளோடு முரணாகாதோ?
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இங்கே “கடல் புரைய”
என்றது’ என்று தொடங்கி.

3. “அதனில் பெரிய என்னவா என்று” (திருவாய். 10. 10 : 10) என்றது,
“பொய்ந்நின்ற ஞானம்” (திருவிருத்தம், 1) என்ற திருப்பாசுரம் முதல்,
“முனியே! நான்முகனே!” (திருவாய். 10. 10 : 1) என்ற திருப்பாசுரம் முடிய,
மேலுக்கு மேல் பக்தி விசேஷமாக விளைகையாலே முரண் ஆகாது
என்றபடி. ‘இவ்வளவும்’ என்றது, “அதனிற் பெரிய என்னவா” என்னுமளவும்
என்றபடி. ‘இதுவாயிற்று’ என்றது, இந்தப் பக்தியையாயிற்று என்றபடி.

காது பெருக்குவது போலே -பெருமையாக அன்று கொண்டார்கள்
கைங்கர்யம் செய்ய -பூர்வ ப்ரீதி பூர்வகமாக உண்டாக்க
அனுபவிக்க வளர்த்து –
வியாபாரம் -வளர்க்க -தரம் -வேண்டும் –
பாத்ரம் நிறைய பாலை -காலி பாத்ரம் உள்ளே தானே சேர்க்க முடியும்
வஸ்து அங்கே  இல்லாமல் -தேவை இருக்க வேண்டும் –
செருப்பு வியாபாரம் -கிராமம்
முதல் போனவன் அங்கே யாரும் போட்டுக்கும் வழக்கம் இல்லை
அடுத்தவன் 20000 பேர் உள்ளார்கள் -விக்கலாம் என்றானாம் –
போஜனத்துக்கு சூத்து போலே சாத்திய பக்தி
கைங்கர்யம் அனுபவிக்க ஆசை வேண்டுமே
அதை வளர்த்த
பொய் நின்ற ஞானம் தொடங்கி அதனில் பெரிய அவா வரை –

மயர்வற மதி நலம் அருளி -இனி இனி இருபது கால் சொல்லும் அளவு ஆர்த்தி
அதிகார பூர்த்தி
பேரமர் காதல்
பெரியதாய் அமர்ந்த காதல்
தரமி அனுபந்தியான காதல்
தரமி ஆத்மாவில் அமர்ந்த
பெரிய யுத்தம் விளைக்கும்படி பூசல் தானே மடல் எடுப்பது
ஈரம் சங்கம் -சேர்த்தி
காதல் பக்தி -காமம்
சங்கம் ஈடுபாடு முற்றி காதல் ஆகும்
சங்கம் காமம் குரோதம் -படிக்கட்டுகள் அவஸ்தா விசேஷங்கள்

“பேரமர்காதல்” என்பதற்கு, மூன்றாவதாக வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. இங்கு, அமர் – போர்.
போரை விளைக்கின்ற காதல் என்றபடி. “காமவேள் மன்னும்” என்பது,-  பெரிய திருமடல். 43-44.

2. “த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் குரோத: அபிஜாயதே”-  என்பது, ஸ்ரீ கீதை. 2 : 62.

ஈரம் தான் காதலாக மாறி -வெவ்வேற த்ரவ்யம்
காரமர் மேனி திரு மேனி பார்த்து தான் இவை உண்டான
வர்த்திக மேகம் வேண்டுமே எரு நீர் ப வடிவால் ஆயிற்று வர்ஷித்தது
வர்ஷுத மேஹம்
நம் கண்ணன் –
வடிவில் பச்சை கண்டு போவாள் இல்லையே
உள்ளுக்குள் கிருபை கிருஷ்ணன் -பெண்களுக்கு சேஷ பூதன்
வடிவையும் தந்து தன்னையும் தந்த கண்ணன்
பற்று மஞ்சள் பூசி

கோபிகள் குனிய சொல்லி பற்றுகிறதா பார்த்து -யமுனையில் –
ஒருவர் இலுசும் இடத்தில் ஒருவர் இழுசாதே -முதுகில் முழுவதும் மஞ்சள்
தோழி -நீயே மீட்க்க பார்த்தாலும் மீளாமல்
நீ தான் சேர்த்தாய்
இனி அவன் என் செய்வான் –
சேர்த்து வைத்து பிரிக்க பார்க்கிறாய்
நீர்மை உள்ளவன் சொல்லி தூண்டி
அல்லன் சொல்லி -கடியன் ஆகி விட்டானா

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருச்சந்த விருத்தம் -11-20-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 19, 2013

பதினோராம் பாட்டு -அவதாரிகை –
நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன –
உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச
ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்ய பரம் என்கிறார் –

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –-11-

பதவுரை

சொல்லினால்

வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ

(ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ

(சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்

நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க

(உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார்

உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால்

சப்தங்களைக் கொண்டு
சுருங்க

சுருக்கமாவாவது
நின் குணங்கள்

உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே.

வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

வியாக்யானம் –

சொல்லினால் தொடர்ச்சி நீ –
சப்தத்தாலே சித்தமான புருஷார்த்தத்திலே இழிந்தாருக்கு அதிலே உறவு பிறப்பிப்பாயும் நீ –
தொடர் -உறவு -அதாவது ப்ரத்யட்ஷ விஷயமான சப்தாதிகளே புருஷார்த்தம் என்று இருக்கும் சம்சாரிகளை
ஒழிய வேதாந்த முகத்தாலே வேதைக ஸமதி கம்யமான வஸ்துவை அறிந்து அவ்வஸ்துவைப்
பெற ஆசைப்பட்டவர்களுக்கும் உபக்ர்ம தசையிலே ருசி ஜநகன் -ப்ரஹ்மாதிகள் ப்ரப்த்ரான
ஜநகர் அல்லாமையாலே  ருசி ஜநகரும் அல்லர்

சொலப்படும் பொருளும் நீ –
ஸ்ருதி ச்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீயாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ –
ஏநமேகேவ தந்த்யக்நிம் -என்றும் -சதுர்  ஹோதா ரோ யத்ர சம்பதம் கச்சந்தி -என்றும் –
யேய ஜந்தி -என்றும் –

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ –
வேதாதந்தத்தால் பரிச்சேதிகப் படாது என்று தோன்றுகிற தேஜஸ் சப்த வாச்யன் நீ
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் –
அவிஜ்ஞா தம் விஜாந தாம -என்றும் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்றும் –
பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்றும் –
நாராயண பரஞ்சோதி
இத்யாதிகளிலே உன் ஸ்வரூபாதிகள் அபரிச்சிந்நங்கள் என்றும் –
பரஞ்சோதி சப்த வாச்யன் நீ என்றும் சொல்லப்படா நின்றது இறே

சொல்லினால் படைக்க-
யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை -நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு-
ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக -ஸ பூரி திவ்யாஹரத்

நீ படைக்க வந்து தோன்றினார் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ
கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள் –

சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே —
உன் குணங்களை அறிந்து -பரக்க பேச மாட்டாமை அன்றியே ஒரோ பிரயோஜனங்களிலே
சங்ஷேபேண உன் குணங்களைப் பேசவும் மாட்டார்
பரத்வ சாதகமான குணங்கள் -ஜகத் காரணத்வ சாதகமான குணங்கள் -ஆஸ்ரித அர்த்தமான குணங்கள்
இவற்றிலே ஒரோ கோடியைக்  கரை காண மாட்டார்கள் –

—————————————————————————————–

பன்னிரண்டாம் பாட்டு -அவதாரிகை –
ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி
அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்
நினைக்க வல்லார் என்கிறார் –

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

பதவுரை

உலகு தன்னை

லோகங்களை
நீ படைத்தி

நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி

(நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு

அதுமன்றியில்
உலகு தன்னே

இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி

வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு

ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க

(சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி

அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;

ஆதலால்:

உலகில்

லோகத்திலே
குழல் உள்ள நின்னை

ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர்

அறியவல்லாரார்?

 

வியாக்யானம்

உலகு தன்னை நீ படைத்தி
அசித்தை உபகரணமாக கொண்டு ப்ராக்ர்த சிருஷ்டியைப் பண்ணின நீ ப்ரஹ்மாதி
சகல தேவதா அந்தர்யமியாய்க் கொண்டு சகல பதார்த்தங்களையும் சிருஷ்டியா நிற்றி

உள் ஒடுக்கி வைத்தி –

நித்ய நைமித்திகாதி பிரளய ஆபத்துக்களிலே நாம ரூபங்களை இழந்த பதார்த்தங்களை
உன் திரு வயிற்றில் வைத்து ரஷியா நிற்றி –

இத்தால் -சகல பதார்த்த சிருஷ்டிக்கும் கர்த்தாவாய் -சகல சம்ஹாரங்களிலும் ரஷகனாய் இருக்கிறான் –
அடியிலே பஹூஸ்யாம் -என்கிற ஜகத் உபாதான காரண பூதன் என்றது ஆய்த்து

மீண்டு உலகு தன்னுளே பிறத்தி
ஜகத் ஏக காரணத்வத்தால் வந்த வைபவத்தின் நின்றும் மீட்டு உன்னாலே ஸ்ருஷ்டமான
உலகத்திலே சில ஷேத்ரஞ்ஞருக்கு புத்ரனே வந்து அவதரியா நிற்றி –

மீண்டு –
அது போராமே திரியட்டும் என்றுமாம் -சகல பதார்த்தங்களுக்கும் ஜனகனான நீ
உன்னாலே ஸ்ர்ஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாகக் கொண்டு ஜனிப்பதே –
பிரளய ஆபத்திலே சகல பதார்த்தங்களையும் உன் திரு வயிற்றில் வைத்து ரஷித்த நீ
ஒரு ஸ்த்ரி வயிற்றில் கர்ப பூதன் ஆவதே

ப்ரீத்யாத்வம் தாரயே சாநம் தாத்மயே நாகிலம் ஜகத் -என்னக் கடவது இறே

ஓர் இடத்தை அல்லையால் –
ஓர் ஸ்தலத்தாய் என்று நிர்ணயிக்க ஒண்ணாத வனாகையாலெ ஒரு கோடியிலே
சேர்த்து அறியப் போகிறது இல்லை -அதாகிறது உபாதான காரணத் வத்தாலே புரை
இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –

அவதாரத்தில் சஜாதீய பாவத்தில் புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –
இது என்னபடி என்கிறார் –

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ
உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி -அதாகிறது -விமுகரான காலத்திலே
ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் -அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு
அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை -ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்க
ஒண்ணாமையாலே

உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் –

சூழல் -சூழ்ச்சி –

—————————————————————————————

பதிமூன்றாம் பாட்டு -அவதாரிகை –
இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் –
கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும்
அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

பதவுரை

இன்னை என்று

‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது

சொல்லக்கூடியது
யாதும் இல்லை

ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்

உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும்

(விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் (அல்லது)

உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய
இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை

நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய
பின்னை ஆய கோல மோடு

ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும்
பேரும் ஊரும்

திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும்
ஆர் நினைக்க வல்லர்

(மற்றைப்படி) அறிய வல்லாரார்?

 

வியாக்யானம் –

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் –
அவதரித்து நிற்கிற நிலையில் -அஜஹத் ஸ்வபாவங்கள் என்ன -சௌலப்யாதிகள் என்ன –
இவற்றிலே ஒரு கோடியிலே உன்னை பரிச்சேதிக்க புக்கால் ஏவம்விதன் என்று சொல்லல் ஆவது இல்லை –

ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் –

அஜாயமானோ பஹுதா விஜாயதே தச்ய தீரா பரிஜாநந்தி யோனீம் (புருஷ ஸூக்தம் )

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -என்கிறபடியே

அவதார ரஹச்ய ஞானம் உடையவர்களும்
மிதுனமே ஆஸ்ரயணீயம் -என்று சஜாதீயரில் வ்யாவர்தனான உன்னை உபதேசிப்பார்கள் –
நேரிதான இடையை உடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்று சொல்லுவார்கள்

யாதுமிட்டு –என்று கீழோடு கூட்டின போது சுபாஸ்ரயத்தை ஓதுகிற பிரகரணங்களில்
அங்குஷ்டமாத்ரேபுருஷோமத்யாஆத்ம நிதிஷ்டதி (கட உபநிஷத் -2-1-12) –

அங்குஷ்ட மாத் ரம் என்றும் –

அக் நிர் மூர்த்தோ சக்ஷுசி சந்ரே சூர்யோ திஷ ஸ்ரோத்ரோ வாக் விவ்ருதாக்ஷ வேதா
வாயுப் ப்ராணோ ஹ்ருதயம் விஸ்வமச்ய பத்ப்யாம் ப்ருதுவீ ஹ்யேஷ சர்வபூதாந்தராத்மா (முண்டக உபநிஷத் -2-1-4)
அக்நிர் மூர்த்தா சஷு ஷீ சந்த்ர சூர்யௌ -என்கிறபடியே

த்ரைலோக்ய சரீரன் என்றும் -இத்யாதிகளில் சொல்லுகிற ஸூபாஸ்ரயங்களை அடங்க விட்டு –

தேவேத்யே தேவதேஹேயம் மனுஷ்வத்யே ச மானுஷீ
விஷ்னோ தேவேனரூபாம் வை கரோத் யேஷாத் மனஸ் தனும் (ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-9-145)

மனுஷ்யத்வே சமாநுஷீ -என்று கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீளா வல்லபனே –
ஸூபாஸ்ரயமம் என்பார்கள் –

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் –
உன் நிமித்தமாக ஆஸ்ரிதருக்கும் அநாஸ்ரிதருக்கும் உண்டான விவாதத்தை

அனுசந்திக்கும் பண்டிதர்கள் -அதாகிறது –
பேருமோர் ஆயிரம் பிற பல உடைய வெம்பெருமான் -என்றாய்த்து ஆஸ்ரிதர் உடைய அறிவு
பேருமோர் உருவம் உளதில்லை -என்றாய்த்து அநாஸ்ரிதர் உடைய அறிவு –
இந்த விவாதத்துக்கு அடி நீ என்று அறியுமவர்கள்

பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும் நின்னை –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே -சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய
விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு
நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை –

அதவா –
அவதார சமாப்தியில் விச்ரம ஸ்தலமான வ்யூஹ விக்ரஹங்கள் என்ன -தத் தத் குண
சேஷ்டித வாசகங்கள் ஆன திருநாமங்கள் என்ன -ஆமோதாதி வ்யூஹ நிதானங்கள் என்ன –
இவற்றுகடியான பரத்வம் என்ன -இவற்றை உடைய உன்னை என்றுமாம்-

யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே —
நீர்மையால் நினைக்கில் அல்லது ஆர் நினைக்க வல்லர் -உன்னுடைய
நீர்மையினால் நீ அறிவிக்க அறியும் அத்தனை  ஒழிய வேறு அறிய வல்லார் ஆர் -அதாகிறது –
பஹூ நி மேவ்ய தீதாநி -என்று தொடங்கி –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்று நீ
அறிவித்தாப் போலே அறிவிக்க அறியும் அத்தனை –

பஹூனீமே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜுன –

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத்த:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைனி மாமேதி சோர்ஜுன-(ஸ்ரீ கீதா -4-9-)

———————————————————————————————

பதினான்காம் பாடு -அவதாரிகை –
நம் அவதார ரஹச்யம் நீர் அறிந்த படி என் என்னில் –
பிரயோஜனாந்த பரர்க்காக திர்யக் சஜாதீயனாய் வந்து அவதரித்த உன் குணங்களை
பரிச்சேதித்து  அறிய மாட்டேன் ஆகிலும் -அவ் வடிவு வேதைக சமதி கம்யம் என்று
அறிந்தேன் என்கிறார் –

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-

பதவுரை

தூய்மை யோகம் ஆயினாய்

ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய்

திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!

கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம்

உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன

இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும்

யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய

ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர பாணி அல்லையே

கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

வியாக்யானம்

தூய்மை யோகமாயினாய் –
அசித் சம்சர்க்கத்தாலே அசுதனான சம்சாரிக்கு உன் கிருபையாலே அசித் சம்சர்க்கத்தை
அறுத்து -நித்ய ஸூரிகளோடு சேர்த்து உன்னை அனுபவிக்க வல்ல சுத்தி யோகத்தை
உடையவனே -சம்சாரி சுத்தி யோகத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –

இத்தால் –
சம்சார உத்தரணத்துக்கு உபாயமும் நீயே என்கை –
ஹேய ப்ரத்ய நீகன் ஆனவனே இறே -சேதனருக்கு சம்சாரம் ஆகிற அசுதியைப் போக்க வல்லான்

துழாய் அலங்கல் மலையாய் –
சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே
திருத் துழாய் -நாதத்வ சிஹ்னம் ஆகையாலும் -போஹ்யத்வ சிஹ்னம் ஆகையாலும்
ப்ராப்ய பூதனும் நீயே என்கை
ஆமையாகி –
பிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு

ஆழ் கடல் துயின்ற –
அகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே –
ஷீரோத மத்யே த்வபவத் கூர்ம ரூபீ ஸ்வயம் ஹரி -என்னக்  கடவது இறே

ஷீரோத மத்யே பகவான் கூர்ம ரூபீ ஸ்வயம் ஹரி
மந்தராத்ரேரதிஷ்டானம் ப்ரமதோபூன்மஹாமனே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-88)

வாதிதேவ –
ஜகத்துக்கு நீயே காரண பூதன் என்னும் இடத்தை பிரகாசிப்பித்தவனே
பிரயோஜநாந்த பரர் என்று பாராதே அவர்கள் ஆபத்துக்கு உன்னை அழிய மாறி
உதவுகை யாகிற இது உத்பாதகர்க்கு அல்லது கூடுமோ என்கை

நின் நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும் –
கூர்ம ரூபியான தேவரீர் உடைய குண சேஷ்டிதங்களை  ஏவம் விதம் என்று
பரிச்சேதித்து சொல்ல மாட்டேன் ஆகிலும் –

நின்னாமதேயம் -என்று
வாச்யமான குண சேஷ்டிதங்களை தத் வாசகமான சப்தத்தாலே லஷிக்கிறது –

சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே —
நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான
அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன் –

யஷோந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே -என்றும்

சவித்ர் மண்டலமத்யே வரதீ நாராயணா -த்ர்த சங்கசக்ர -என்றும் சொல்லக் கடவது இறே

ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே ஹிரண்மய ஸ்மஸ்ருர்
ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸுவர்ண: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணி (சாந்தோக்யம் 1-6 and 7)

த்யேயஸ் ஸதா சவித்ர் மண்டலமத்யே வரதீ
நாராயணாயஸ் சஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட
கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி
ஹரீ ஹிரண்மயவபுர் -த்ர்த சங்கசக்ர (ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் )

——————————————————————————————-

பதினைந்தாம் பாட்டு -அவதாரிகை –
வேதைக சமதிகம்யமான ஸ்வ பாவத்தை உடைய நீ ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக
அவதார கந்தமான திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து அருளுகிறது பர தசை என்னலாம்படி
அங்கு நின்றும் ஆஸ்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்து அவதரித்த
உன்னுடைய நீர்மையை ஒருத்தரால் பரிச்சேதிக்க போமோ என்கிறார் –

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

பதவுரை

அங்கம் ஆறும்

சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நான்கும்

(அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆகி நின்று

ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய்

ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
தடம் கடல்

மஹா ஸமுத்திரத்திலே
பணம் தலை செம் கண் நாக அணை

படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே
கிடந்த

கண்வளர்ந்தருளுகிற
மல்குசெல்வம் சீரினாய்

நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே!
சஙக வண்ணம் அன்னமேனி

சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியை யுடையனாய் (கிருத யுகத்தில் திருவவதரித்து)
சாரங்கபாணி அல்லையே

(த்ரேதா யுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயே யன்றோ?

 

வியாக்யானம் –

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று –
சீஷாத் யங்கங்கள் யாறும் –

சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்

அஷரங்களை உச்சரிக்க வேண்டியதை சீஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யாயங்களை பாகுபடுத்தி வியாகரணம் சொல்லும்
அர்த்த விவேகம் நிருக்தம் சொல்லும்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும்

அங்கியான வேதங்கள் நாலும் -ஆகிற இவற்றுக்கு பிரவர்தகனாய் நின்று
அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் –
சாங்கமான வேதங்களினுள்ளே ப்ரமேயமாய் வர்த்திக்கிற ஸ்வபாவங்களை உடையவனே –

ஆகி நின்று அவற்றுளே –
நிர்தோஷ பிரமாணமாய் நின்றவற்றுள் என்னவுமாம்

சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோஅஸ்னுதே ஸர்வான் காமாந்சஹ ப்ரஹ்மணோ விபஸ்ஸிதேதி
(தைத்ரியம் ஆனந்த வல்லி -1-2)

வேத ப்ரதிபாத்யமான ஸ்வபாவங்கள் ஆவன -சத்யம் ஞானம் -இத்யாதிகளில் சொன்ன சர்வாதிகத்வம் என்ன –

யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:
(முண்டக உபநிஷத் -1-1-10)

யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொன்ன கல்யாண குணங்கள் என்ன –

யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
(தைத்ரியம் நாராயண ஸூக்தம் -11)

வ்யாப்ய நாராயணஸ்  ஸ்திதி -இத்யாதிகளில் சொன்ன உபய விபூதி நாதத்வம் என்ன –

மகாரஜதம்வாஸ -இத்யாதிகளில் சொன்ன விக்ரஹ யோகம் என்ன –
யாஷோந்தராதித்ய ஹிரண்மய புருஷ -இத்யாதிகளில் சொன்ன அவதாரங்கள் என்ன –

தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
திவீவ சக்ஷூராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் )

தத் விஷ்ணோ பரமம் பதம் -இத்யாதிகளில் சொன்ன நித்ய விபூதி யோகம் என்ன –இவை

தடம் கடல் இத்யாதி –
வேதைக சமதிகம்யமாய் -ஸ்வபாவங்களைக் கேட்டே போகாதபடி திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளி இக் குணங்களை பிரகாசிப்பித்தவனே –

இடமுடைதான கடலிலே -உன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின்
தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான
ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே

சங்க வண்ணம் அன்ன மேனி இத்யாதி –
ஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யுகத்திலே
சேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து –
அதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை
நிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ –
இப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் –

அப்ரவீத் த்ரிதஸ ஸ்ரேஷ்டாந் ராமோ தர்மப்ருதாம் வர
ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தாசரதாத்மஜம்-(யுத்த -117-11)

ஆத்மாநாம் மாநுஷம் மநயே -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய
நீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர் என்று வாக்ய சேஷம் –

—————————————————————————————————-

பதினாறாம் பாட்டு -அவதாரிகை –
திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும்
அளவு அன்றிக்கே -ஸ்தாவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை
சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி
இறே உன்னுடைய அவதார வைலஷண்யம் இருப்பது என்கிறார் –

தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே —-16-

பதவுரை

தலைக்கணம்

முதன்மை பெற்ற தேவ கணமென்ன
துகள்

க்ஷுத்ரமான ஸதாவர கணமென்ன
குழம்பு சாதி

மிச்ர யோனிகளான மநுஷ்ய திர்யக் ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி

அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய்

திருவவதரித்து
நிலைக் கணங்கள் காண

(தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி
வந்து நிற்றி

வந்து நிற்கிறாயாகிலும்
ஏலும் நீடு  இரும் கலை கணங்கள்

நித்தியமாய் விரிந்தவையான வேத சாஸ்திர ஸமூஹங்கள்
சொல் பொருளினால்

அபிதாந வ்ருத்தியாலும்
கருத்தினால்

தாம்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்க ஒணா

(உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல்
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி

பர்வத ஸமூஹஙகள் போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது
நின் தன் மாட்சியே

உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை

வியாக்யானம் –

தலைக்கணத் துகள் குழம்பு சாதி –
தேவ கணம் என்ன -சூத்ர கணம் என்ன -நடு உண்டான மனுஷ்ய திர்யக்க்குகள் என்ன –
சதுர்வித சரீரங்களிலே –

குழம்பு சாதி –
தேவ கணம் புண்ய யோநியாய் -ஸ்தாவரங்கள் பாப யோநியாய் -மனுஷ்ய திர்யக்க்குகள்
இரண்டும் புண்ய பாப மிஸ்ர யோநிகள் யாகையாலே –குழம்பு சாதி என்கிறது –
திர்யக்குகளுக்கு மிஸ்ர யோநித்வம் ஆஹார நித்ராதிகளாலே மனுஷ்ய சாம்யம் உண்டாகையாலே
ஷூத்ர கணம் என்று -ஸ்தாவரத்துக்கு உப லஷணம்

துகள் –

குற்றமும் புழுதியும்

சோதி தோற்றமாய் –
பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்கிற திவ்ய சமஸ்தானத்தை சதுர்வித ஜாதிகளிலும்
சஜாதீயமாக்கி அவதரித்து
ஸ்தாவர ஜாதியிலும் குப்ஜம்ரமாய் அவதரித்தான் இறே

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்
தேவாதிகளே யன்றியே ஸ்தாவரங்களும் உன்னை அனுபவிக்கும்படி வந்து -நின்றாலும் -அதாவது

உன்னை ஸ்பர்சித்த வாயு அவற்றை ஸ்பர்சிக்க ஸ்தாவரத்வ ஹேதுவான
பாபம் போகும் என்கை

நீடு இரும் கலை-இத்யாதி
நீ இப்படி தாழ நின்றாலும் பிரமாணங்கள் உன்னுடைய அவதார வைபவத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாது –

நீடிரும் கலைக் கணங்கள் –
ஸ்வரூபேணவும் -ப்ரவாஹ ரூபேணவும் -நித்தியமான பரப்பை உடைத்தாய் இருந்துள்ள
சதுர்தச வித்யா ஸ்தானங்களும்

கலை -என்று வேதமும் அங்கமும் –
அங்காநி சதுரோ வேத -இத்யாதியிலே சதுர்தச ஸ்தானங்கள் சொல்லப் பட்டது இறே

அங்காநி சதுரோ வேதா மீமாம்ஸா நியாய விஸ்தர:
புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யோ ஹேதாஸ் சதுர்தஸ (ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-6-28)

சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
அபிதாந வ்ர்த்தியாலும் தாத்பர்ய வ்ர்த்தியாலும் ஒரோ அவதாரத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாமையாலே

மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே —
பர்வத சமூஹங்கள் போலே அபேத்யமாய் அபரிச்சினமான உன்னுடைய அவதார
குண சரித்ரங்கள் என்ற வற்றாலே அறிவிக்கப்படும் வை லஷண்யம் உன் வை லஷண்யம்

மாட்சி -அழகு –

————————————————————————————————

பதினேழாம் பாட்டு-அவதாரிகை –
பரமபத நிலயனாய் இருந்து -நித்ய விபூதியை நிர்வஹித்து
வ்யூஹம் முதலாக ஸ்தாவர பர்யந்தமாக அவதரித்து லீலா விபூதியை நிர்வஹித்தும் –
போகிற இவை ஒரொன்றே பிரமாணங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்க-
அதுக்கே மேலே அர்ச்சாவதார ஸூலபனாய் -ஆஸ்ரிதருடைய இச்சாதீநனாய்
தன்னை நியமித்த இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறதோ என்று அதிலே வித்தராகிறார் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

பதவுரை

ஆதி தேவனே

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏக மூர்த்தி ஆய்

(பரமபத நிலயனான) பரவாஸு தேவ மூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

நல்ல திருப்பாற்கடலில்
நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

என்னாயிருந்தது.

வியாக்யானம் –

ஏக மூர்த்தி
வாசுதேவோசி பூர்ண -என்கிறபடி ஞாநாதி ஷட் குண பூர்ணனாய் -நிஸ்தரங்க ஜலதி
போலே பரமபத நிலயத்திலே எழுந்து அருளி இருந்து -நித்ய சித்தரும் முக்தரும் அனுபவிக்க
இருக்கிற அத்விதீயமான மூர்த்தியை உடையாய் –

மூன்று மூர்த்தி –
அந்த ஷட் குணங்களில் இவ்விரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு

ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுகைக்காக சங்கர்ஷணாதி ரூபத்தாலே மூன்று மூர்த்தியாய்

நாலு மூர்த்தி –
பர அவஸ்தையும் வ்யூஹங்களோடு எண்ணலாம் படி பரார்தமாய் இருக்கையாலே
அத்தையும் கூட்டி நாலு மூர்த்தி -என்கிறது –

அதவா –
வ்யூஹ கார்யமான ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயோகமாய் இருக்கிற பிரதான புருஷ
அவ்யக்த காலங்களைசரீரமாக உடையனாய் இருக்கறபடியை  சொல்லுகிறது என்னவுமாம் –

நன்மை சேர் போக மூர்த்தி –
அனுக்ரஹ ப்ராசுர்யமாகிற நன்மையை உடைத்தாய் -சம்சாரிகளுக்கு போக யோக்யமான மூர்த்தி –

அனுக்ரஹ ப்ராசுர்யமாவது -ஸ்வ அசாதாரணமாய் அப்ராப்ரக்ருதமான விக்ரஹத்தை –

தேவாதி சஜாதீயமாக்கிக் கொண்டு சம்சாரிகளுக்கு சஷூர் விஷயமாம் படி பண்ணுகை –

அதவா –
ஆமுஷ்மிகத்தில் நித்ய அனுபவத்தோடு சேர்ந்த நன்மையை உடைத்தாய் -ஐஹிகத்தில்
போக ரூபமாய் இருக்கும் மூர்த்தி என்னவுமாம் –

புண்ணியத்தின் மூர்த்தி –
அது தான் பாக்யாதிகருடைய புண்ய விபாகத்தில் பலிப்பதாய் இருக்கை –
பரித்ராணாயா ஸாதூநாம் -என்று பரம பக்தி உக்தருக்கு ஸ்வயம் பிரயோஜனமாய் –

சித்த சாதன பரிக்ரஹ உக்தருக்கு சரணமாயும் -உபாசகருக்கு சுபாஸ்ரயமாயும் இறே இருப்பது –

மாநுஷீம் ததுமாச்ரிதம் பரம்பாவமஜா நந்த -என்று பாஹ்ய ஹீநராய் -அவதாரத்துக்கு இழவாளராக சொல்லா நின்றது இறே –

எண்ணில் மூர்த்தியாய் –
இப்படி அசங்யாதமான விபவ ஜாதீயமான விக்ரஹத்தை உடையையாய் –
பஹுதா விஜாயதே -என்று ஸ்ருதி –

பஹூநி -என்று ஸ்வ வாக்யம் –

சன்மம் பல பல -என்று அபி உக்தர் வாக்யம் –

நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல் –
இப்படி அசங்யாதமான அவதாரங்களை பண்ணின இடத்திலும் தன் திரு உள்ளத்துக்கு ஏற
சம்சாரிகள் தன்னை வந்து கிட்டாமையாலே உபேஷித்து பரம பதத்தில் போக பிராப்த்மாய்
இருக்க   -ரஷணத்தில் ஆசையாலே திருப் பாற் கடலிலே சேர்ந்த நீர்மையை சொல்லுகிறது

நலம் கடலிலே நாக மூர்த்தி சயனமாய் கிடந்தது அவதார ஸ்தலங்கள் போலே சிரகாலாவதி
இன்றிக்கே பிரளய அவதியாக விரும்பி கண் வளர்ந்து அருளுகையாலே –நலம் கடல் -என்கிறது –

திருவனந்தாழ்வான் திருமேனி யாகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி –

மேலாக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –

ச்ம்ர்த்தம் சங்கல்ப நா மயம் -என்றும் –

யேய தாமம் ப்ரபத்யந்தே -என்றும் சொல்லுகிறபடி
ஆஸ்ரிதர் உனக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்தை இ றே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தோபாதி விரும்புவது -தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் ஆனாய்

ஆதி தேவனே —
ஜகத்துக்கு எல்லாம் காரண பூதனான நீ கார்ய பூதனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
இச்ச அதீநமாக உன்னைப் பண்ணுவதே -என்று கருத்து –
இவ்விருப்பத்துக்கடி -உடையவன் ஆகையாலே என்று ஹேதுவுமாம் –

————————————————————————————————–

பதினெட்டாம் பாட்டு -அவதாரிகை –
நாக மூர்த்தி சயனம் -என்றும் -தடம் கடல் பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த –
என்றும் அவதார கந்தமான ஷீராப்தி சயனம் ப்ரஸ்துதமானவாறே -திரு உள்ளம் அங்கே
தாழ்ந்து -அர்த்திதோ மாநுஷே லோகே -என்கிறபடியே அவதாரங்களில் உண்டான
அர்த்தித்வம் அன்றிகே இருக்க விசத்ர்ச தேசத்தில் வந்து கண் வளர்ந்து அருளிகிற தேவரீர் உடைய
வாசியை ஆரறிந்து ஆச்ரயித்து கார்யம் கொள்ள -என்கிறார் –

விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந்தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-

பதவுரை

வேலை வண்ணனே

கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த

விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய்

ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண்

ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல்

வெவ்விய தழலை
விடுத்து

புறப்படவிட்டுக்கொண்டு,
வீழ்வு இலாத போகம்

ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய்
மிக்க சோதி

மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
விதானம் ஆய்

மேற்கட்டிபோன்ற படங்களினுடைய
மேல்

மேற்புறத்திலே
தொக்க

திரள்திரளாயிருக்கிற
சீர்

அழகை
தொடுத்து

தொடுத்து
பௌவம் நீர்

ஸமுத்ரஜலத்திலே
படுத்த

படுக்கையாக அமைந்த
அரா அணை பாயல் பள்ளி கொள்ளது

திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை
என் சொல்

எத்திறம்!

வியாக்யானம்-

விடத்த வயோராயிரம்
விஷத்தை உமிழா நின்றுள்ள ஆயிரம் வாயை உடையனாய்

ஈராயிரம் கண் வெந்தழல் விடுத்து –
இரண்டாயிரம் கண்ணாலும் வெவ்விய தழலைப் புறப்பட விட்டு
பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கிற திருவநந்த ஆழ்வானுக்கு ரோஷ கார்யமான
இந்த க்ரௌர்யம் உண்டாவான் என் என்னில் -துஷ்ப்ரக்ர்திகள் சஞ்சரிக்கிற தேசத்திலே
கண் வளர்ந்து அருளுகிற இவனுக்கு ஆராலே என்ன வருகிறதோ என்று அதி சங்கையாலே வந்தது-
அனுபவம் ராக கார்யமானவோபாதி பிரதிகூல ஸ்தலத்திலே த்வேஷமும் ராககார்யம் இறே

இத்தால் துஷ்ப்ர்க்ருதிகளுக்கு கணிசிக்க ஒண்ணாதபடி திருவநந்த ஆழ்வானால் ஸூ ரஷிதனாய்
கண் வளர்ந்தருள பெற்றோம் என்று த்ர்ப்தர் ஆகிறார்

விள்விலாத போகம் –
ஈஸ்வரன் அணைத்தால் ஒருவகையாலும் பிரிய ஒண்ணாத திரு உடம்பை உடையவனாய் –
அநந்த போகிநி -என்று திருவநந்த ஆழ்வானுடைய திருமேனியை போகம் என்னக் கடவது இ றே

இத்தால் ஆத்ம குணங்களால் ரஷகன் ஆனால் போலே ரூப குணங்களாலே போக
பூதனான படியைச் சொல்லுகிறது –

மிக்க சோதி –
இப்படி கிஞ்சித் கார பூதனாய் கொண்டு -உன்னை அனுபவிக்கையாலே வந்த நிரவதிக
தேஜசை உடையவனாய்

தொக்க சீர் தொடுத்து மேல் விதாநமாய
விதாநமான பணங்கள் பலவற்றிலே உண்டான மிக்க அழகை தொடுத்து

தொக்கு -திரட்சி

சீர் -அழகு –

இத்தால் ஸ்பர்சத்தால் வந்த அனுபவமே  அன்றிக்கே -தர்சநீயமாய் நாநா வர்ணமான
பணங்களின் அழகைச் சேர்த்து அனுபவித்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறபடியைச் சொல்லுகிறது

பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் –
கடல் நீரில் அது உறுத்தாமைக்கு படுத்த திருவநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே –

பள்ளி கொள்வது என் கொல் –
கண் வளர்ந்து அருளுகிறது இது என்னோ
தங்கள் ஆபத்துக்கு உதவுகைக்கு ப்ரஹ்மாதிகள் அர்த்திக்க தான் செய்து அருளிற்றோ –

வேலை வண்ணனே —
வெள்ளைக் கடலிலே ஒரு நீலக் கடல் சாய்ந்தாப் போலே தேவரீருடைய பரபாக
ரசத்தை சிலர் அறிந்து அனுபவிகைகாக செய்து அருளிற்றோ
இப்பாட்டில் திருவநந்த ஆழ்வான் ஓட்டை அனுபவத்தை சொல்லிற்று

அடிமை செய்வார் இல்லாமை அன்று -சம்சாரிகள் இழவைப் பார்த்து பரார்தமாக
கண் வளர்ந்து அருளுகிறது என்று தோன்றுகைக்காக –

அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் பொங்கார் அரவு –

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்-.நின்றால் மரவடியாம் நீள் கடலுள்

என்றும் புணையா அணி விளக்காம்-பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு –

பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி என்கிறார்-

———————————————————————————————–

19 th  பாட்டு -அவதாரிகை –
அர்த்தித்வ நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற இது என்ன நீர்மை என்றார் கீழ் -இங்கு
பண்ணின ஜகத் ரஷணங்களைக் கண்டு -நஹி பாலான சாமர்த்யம்ர்தே சர்வேச்வரம் ஹரிம் –
பாலன தர்மத்துக்கு வேறு சக்தர் இல்லாமையாலும் -ஜகத்துக்கு தேவரீர் அனந்யார்ஹ சேஷம்
ஆகையாலே ரஷிக்கும் இடத்தில் அர்தித்வம் மிகை யாகையாலும் -வந்து கண் வளர்ந்து அருளுகிற
இத்தனை என்று -அந்த ரஷணங்களைப் பேசி சாமான்ய த்ர்ஷ்டியால் சஹஜ சத்ருகளாய்
தோற்றுகிற பெரிய திருவடியும் திருவநந்த ஆழ்வானும் ஏக கண்டராய் தேவரீருக்கு பரியும்படியாகக்
கண் வளர்ந்து அருளுகிற இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

பதவுரை

மின்கொள்  நேதமியாய்

தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி

ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும்

நான்கு வேதங்களையும்
ஓதினாய்

உபதேசித்தருளினாய்,
அது அன்றியும்

அதுவுமல்லாமல்,
புள்ளின் வாய் பிளந்து

(உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு)
புள்கொடி பிடித்த பின்னரும்

பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல்
புள்ளை

அப்பெரிய திருவடியை
ஊர்தி

வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய்
ஆதலால்

இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும்
கடல்

திருப்பாற்கடலிலே
புள்ளின் பகை மெய்

கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே
கிடத்தல்

பள்ளிகொள்வதை
காதலித்தது

விரும்பிப்போவதாகிய
என்கொல்

என்ன திருவுள்ளத்தாலே?

வியாக்யானம்-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
வேதத்தின் உடைய அபௌருஷேயத்வ சித்திக்காக ஸ்வ அசாதாராண விக்ரஹத்தை
திர்யக் சஜாதீயமாக்கிக் கொண்டு -ஹம்சாவதாரத்தைப் பண்ணி -தத்வ ஹிதங்களுக்கு
ஜ்ஞாபகமான நாலு வேதங்களையும் ஜகத்தில் அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படி அருளிச் செய்தாய் –

மாநம் ப்ரதீப மிவ காருணி கோததாதி -என்னக் கடவது இறே

அதன்றியும் –
சஹஜ சத்ருவான அஞ்ஞானத்தை போக்கினதுக்கு போலே

புள்ளின் வாய் பிளந்து –
பஹாசுரன் வாயைக் கிழித்து -இத்தால்
பிரமாண ஞானத்தால் அஞ்ஞான  அந்தகாரம் போக்கினாப் போலே பஹாசூரனை நிரசித்து
ப்ரமேய பூதனான தன்னை தந்து ஆஸ்ரிதருக்கு பிராண பிரதிஷ்டை பண்ணின படியைச் சொல்லிற்று

புட் கொடி பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி –
தன் பக்கலிலே ஆர்த்தர் அடங்க வந்து கார்யம் கொள்ளும்படி பெரிய திருவடியை
ரஷண தர்மத்துக்கு த்வஜமாகப் பிடித்து -அவ்வளவும் அன்றிக்கே -ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே
வந்து உதவுகைக்கு அவனை வாகனமாகக் கொண்டு நடவா நின்று

மின் கொள் நேமியாய் –
திரு நிறத்துக்கு பகைத்தொடையாய் மின்னா நின்ற திரு வாழியை உடையவனே

இத்தால்
ரஷகத்வமே நிரூபகம் என்று தோற்றும் படி –

கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -இருக்கிறபடியைச் சொல்லிற்று –

ஆதலால் –
நிருபாதிக ரஷகனாய்க் கொண்டு -புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் -என்று கீழோடு அந்வயம்

அது என் கொல் –
என்கிற இது பாட்டின் முடிவில் அந்வயம்

புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல்  காதலித்தது அது என் கொல் –
சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி
கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ

சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி
அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ என்று கருது –

அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –

———————————————————————————————–

20-பாட்டு -அவதாரிகை –
பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஏத்த திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
இம் மேன்மை தானே நீர்மைக்கு எல்லை நிலமாய் இரா நின்றது –
…அமிர்த மதன வேளையிலே மந்தர தாரண அர்த்தமாக ஆமையான நீர்மை தானே மேன்மைக்கு
எல்லை நிலமாய் இரா நின்றது -இவைகளைப் பிரித்து என்னெஞ்சிலே பட வருளிச்
செய்ய வேணும் என்கிறார் –

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-

பதவுரை

முன்

அநாதிகாலமாக.
வேலைநீர்

ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி

சிறிதும் கூசாதே
மாகணம்

திருவனந்தாழ்வானை
படுத்து

படுக்கையாக விரித்து
பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும்

ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும்
அன்று

தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும்

“வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும்
தேற

அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி
கூறு

(எனக்கு) அருளிச் செய்யவேணும்.

 

வியாக்யானம் –

கூசம் ஒன்றும் இன்றி –
மாயா குசலரான அஸூர ராஷசர் சஞ்சரிக்கும் தேசம் -ஆராலோ என் வருகிறதோ
என்று ஒரு கூச்சம் இன்றியே என்னுதல் -பிராட்டிமாருக்கும் அடுத்துப் பார்க்கப் பெறாத
ஸூகுமாரமான வடிவு துஷ் பிரக்ர்திகள் விஷ த்ர்ஷ்டிக்கு விஷயம்ஆகிறதோ என்று கூசாதே என்னுதல் –

அதவா –
கூசம் ஒன்றும் இன்றி கூறு தேற -என்று அந்வயித்து தன் படிகளைச் சொல்லுகைக்கு
அதிகாரிகள் இல்லை என்று அதிகாரி விரஹத்தால் கூசாதே என்றுமாம் –

அதாவது
மேன்மையைச் சொல்லி துஷ்ப்ராப்யம் என்று அகலுதல்
நீர்மையைச் சொல்லி காற்கடைக் கொண்டு அகலுதல் என்கை

மா சுணம் படுத்து
நீர் உறுத்தாமே திரு வநந்த ஆழ்வானை விரித்து

வேலை நீர் பேச –
ஸ்வ சந்நிதானத்தாலே வந்த ப்ரீதியாலே கடல் கோஷியா நிற்க

நின்ற தேவர் –
ஜகத் ரஷண தர்மத்திலே வ்யவஸ்திதராய் நின்ற ப்ர்ஹ்மாதிகள் -பேச நின்ற சிவன் -என்னக் கடவது இறே

வந்து பாட –
ஊர்த்வ லோகங்களிலும் நின்றும்  வந்து தம் தாமுடைய அபிமத சித்திக்காக ப்ரீதி ப்ரேரிதராய் ஏத்த

முன் கிடந்ததும் –
சிருஷ்டி காலமே தொடங்கி கண் வளர்ந்து அருளுகிற இதுவும்
சமுத்திர கோஷத்தோடு பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரத்தோடு
அநந்ய பிரயோஜனரான ஸ்வேத தீப வாசிகள் உடைய ஸ்தோத்ரத்தோடு வாசியற
முகம் கொடுத்து நிற்கிற இது என்ன சீலம் என்று கருத்து –

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –

பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி

ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்

கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

கூசம் ஒன்றும் இன்றி -சிறிதும் கூசாதே
மா கணம் படுத்து -திருவநந்த ஆழ்வானை படுக்கையாக விரித்து
வேலை நீர் -சமுத்திர ஜலத்தில்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும் -ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அமைந்த ப்ரஹ்மாதி தேவர்களும்
வந்து பாடும் படி அநாதி காலமாக சயனித்து இருந்து அருளியதும் –

நின்ற -ஊர்த்வ லோகங்களிலே வர்த்திக்கிற –

முன் கிடந்ததும் -ஸ்ருஷ்டி காலம் தொடங்கி கண் வளர்ந்து அருளினதும்
அன்று -தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று –

அன்று -தேவர்கள் சாபேஷராய் நின்ற அன்று
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –

வாழும் -மந்த்ரத்தை சுமந்து நிற்பவனாய்

கேசவா -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகன் ஆனவனே

நீ -சர்வாதிகனான நீ

வருண பாசங்கள் கிடக்கிற கடலில் வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர ஜந்துவாக அவதரித்து அருளிய கேசவனே
என்று ஏச நீ -கிடந்தவாறும் -அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்

தேற கூறு -அடியேன் நன்கு தெரிந்து கோலும் படி அருளிச் செய்ய வேணும்
நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம் –
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது –
இவற்றை பிரித்து எனக்கு அருளிச் செய வேணும் –
எல்லா அவதாரங்களிலும் இரண்டும் கலந்து இருக்குமே

பாசம் நின்ற நீர் -இதற்க்கு பரம பதத்தை விட இந்த கடலே பரம போக்யம் என்று இருக்கை
எம்பெருமான் ஆசைப்படத் தக்க நீர்

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 19, 2013

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடுஅன்றி ஓர்சொல்லில்லேன்
தீர்ந்த என்தோழி! என்செய்யும் ஊரவர் கவ்வையே?

பொ-ரை :- ஊர்ந்து வந்த சகடாசுரனை உதைத்துக் கொன்ற திருவடிகளையுடையவனும், சார்ந்து பூதனையின் முலையைச் சுவைத்த சிவந்த வாயினையுடையவனுமான கண்ணபிரான் என் நிறையைக் கொள்ளைகொண்டான்; சென்றும் வந்தும் அவன் சம்பந்தமான வார்த்தைகளை ஒழிய வேறு வார்த்தைகளையுடையேன் அல்லேன்; அறுதியையுடைய என் தோழீ! ஊராருடைய பழிச்சொல் என்ன காரியத்தைச் செய்யும் என்கிறாள்.

வி-கு :- தீர்ந்த-எல்லாவற்றையும் விட்டு நீங்கிய. “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது தொல்காப்பியம். தோழி ஊரவர் கவ்வை என் செய்யும் என்க. ஈடு :- மூன்றாம் பாட்டு. 1“என் செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ‘எல்லாம் செய்தாலும் பழி நீக்க வேண்டாவோ’ என்று இருப்பாளே அன்றோ இவள்; 2‘இது பழி’ என்று நீக்க ஒண்ணாதபடி எனக்கு ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன், 3‘இது பழி’ என்று மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபட்டவளாய் இருக்கிற நான் எவ்வளவிலே நிற்கிறேன், 4‘இது பழி’ என்று சொல்லுகிறவர்கள்தாம் எவ்வளவிலே நிற்கிறார்கள், 5அவர்கள் சொல்லுகிறவற்றைச் சொல்லுகிற நீதான் எவ்வளவிலே நிற்கிறாய் என்கிறாள்.

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்-ஊருகிற சகடம் அன்று; அது செய்வது எல்லாம் செய்து முடிந்தது; இவன்ஜீவன அதிருஷ்டத்தாலே தப்பின இத்தனை. 1இரண்டு சகடத்தை இரண்டு அருகும் இழுத்து நடுவே தொட்டிலை இட்டு வளர்த்திப் போனாள் தாயார்; பாடி காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று. அசேதனமான சகடத்தில் அசுரர்கள் ஆவேசித்து நலிவதாக ஊர்ந்து வந்ததித்தனை அன்றோ. அதுவும் செய்வது எல்லாம் செய்து, இவனும் அகப்படுவது எல்லாம் அகப்பட்டு நின்றான்; திருவடிகளினுடைய செயலாலே தப்பின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள். இவனை அடிகாத்துத் திரிந்ததித்தனை. முலை வரவு தாழ்க்கச் சீறி நிமிர்த்தத் திருவடிகளுக்கு இலக்காய்த் துகளாய்ப் போயின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள் 2“கிருஷ்ணன் முலைப்பாலை விரும்பினவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தான், அழுதான்” என்பது விஷ்ணு புராணம். 3நமக்குப் புகலான திருவடிகள்தாமே நமக்கு விருப்பம் இல்லாதவைகளையும் போக்கித் தருமாயிற்று.

4
சகடாசுரனைக் கொன்ற இது, பருவம் நிரம்பிக் கம்சனைக் கொன்ற செயலோடு ஒக்கச் சொல்லலாம்படி
யன்றோ இதற்கு முன்பே பூதனையைக் கொன்ற செயல். சகடம் வந்து கிட்டினபோது சிலராலே நீக்கப்படலாம்; பூதனை தாய் வடிவுகொண்டு வந்து நலியப் புக்கால் அதற்குப் பரிஹாரம் இல்லையே அன்றோ, ஈன்றோரே நஞ்சு இட்டாற்போலே இருப்பது ஒன்றே அன்றோ. பேய் முலை சார்ந்து சுவைத்த செவ் வாயன் – பிள்ளைகள் முலை உண்ணப் புக்கால் தாய்மார்களுடைய முலைக்கீழே முட்டினவாறே பால் சுரக்கும், பின்னைப் பாலை உண்டு உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்வார்கள்; அப்படியே, அவளும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக்கீழே முட்டி முலை உண்டு, உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற புன்முறுவல் செய்தாயிற்று முலை உண்டது. 1“மழலை மென்னகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே” என்னக் கடவதன்றோ. 2“உயிரை வற்ற வாங்கி உண்டவாயான்” என்கிறபடியே, முலைப்பாலோடே இரங்கி உயிரையும் சுரக்கும்படியாக ஆயிற்று முலை உண்டது.

1ஆக, இதற்கு முன்பெல்லாம், சகடாசுரனைக் கொன்றதும், பூதனையின் பாலைக் குடித்து அவளை அழித்ததும், ‘கம்சன் வரவிட்டனவற்றைப் போக்கினான்’ என்று இருந்தாள் அவள்; ‘எனக்குத் தன்பக்கலிலே ஈடுபாட்டினை உண்டாக்குகைக்காகச் செய்தான்’ என்று இருக்கிறாளாயிற்று இவள். பருவம் நிரம்பிக் காதலனாய் அதில் வல்லவனான பின்பு செய்தவை அலவோ இவளுக்குத் தன்பக்கல் ஈடுபாடு மிகைக்குச் செய்தவையாவது, பால்யத்திலே செய்தவை இவளுக்கு உடலாம்படி எங்ஙனே? என்னில், 2இவளுக்குத் தன் பக்கல் ஈடுபாட்டினை உண்டாக்குதல் அவனுக்குச் சத்தாபிரயுக்தம் என்கை. 3“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்று அவற்றைஒழியவேயும் பின்பு செய்த காரியங்கள் எல்லாம் தனக்காகச் செய்தான் என்று இருக்கிறாள் ஆயிற்று இவள்.

என்னை நிறை கொண்டான்1ஒரு செயலாலே இரண்டு பெண்களைக் கொன்றான். 2தன்னை ஆசைப்பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று; அவளை நற்கொலையாகக் கொன்றான், என்னை உயிர்க்கொலையாகக் கொன்றான். 3அவனுடைய செயல்களிலே ஒன்று குறைதல், நான் இழந்தவற்றிலே ஒன்று குறைய இழத்தல் செய்யில் அன்றோ நீ சொல்லுகிற வார்த்தையைக் கேட்க வல்லேனாவது. ஆகில், இத்தகைய நிலைகள் உளவானால் அவ்விஷயத்தை மறந்து உலக யாத்திரையிலே புகுந்து புறம்பு ஏதேனும் ஒன்றைக் கொண்டு போது போக்கிக்கொண்டு இருக்க வேண்டாவோ, எல்லாம் செய்தாலும் இழக்காலாவது ஒன்றோ நிறை? என்ன, 4பேர்ந்தும் பெயர்ந்தும்-போயும் வந்தும். என்றது, பிரிந்தும் கலந்தும் என்றபடி. அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்-அவன் சம்பந்தத்தையுடைய வார்த்தை அல்லது வேறு ஒரு வார்த்தையை யுடையேன் அல்லேன். 5மறக்கையாவது, நினைப்பனவற்றிலே ஒன்றாக வேணுமே நான் ஆறி இருக்கைக்கு,1“ஏது செய்தால் மறக்கேன்” என்னக்கடவதன்றோ. 2நாட்டார், தங்கள் தங்கள் காதலர் காதலிகளோடு கலந்த போது அவர்களை நினைத்து, பெயர இருந்தபோது அவர்களை மறந்திருப்பர்கள், கலந்து பிரிந்த விஷயத்தினுடைய தன்மையாலே; நான் பிரிந்த இது உலகத்தில் வேறுபட்ட பொருளாகையாலே, பிரிந்தபோது மறக்கலாய் இருந்தது இல்லை, இனிக்கூடித்தான் பார்ப்போமோ மறக்கலாமாகில் என்கிறாள். 3கூடினாலும் மறக்கலாமோ? என்னில், கூடின காலத்தில் மறப்பது செய்யலாமாயின் பிரிந்தபோது மறக்கலாவதென்று வியதிரேக உக்தி. அன்றிக்கே, அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன் என்பதற்கு, 4‘அவனை மற, அவனை நினை’ என்றே நீ சொல்லுவது,ஆகையாலே, அவனை ஒழிய எனக்கு வேறு ஒரு சொல் இன்றிக்கே இருந்தது என்கிறாள் என்னுதல். இவள் இப்படிச் சொன்னவாறே விலக்குகிற தோழி உகந்தாள், யாங்ஙனம்? எனின், ‘நாம் இவளை அவனோடு சேர்ப்பதற்குப் பட்டபாடும், அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயற்சி செய்தாலும் மறவாதபடி உட்புகுந்தவாறும் என்னே! என்று உகந்தாள்; இவள், விலக்குகிற வார்த்தைகளை விட்டு இவள் மனத்தினைக் கண்டாள் ‘தீர்ந்த என் தோழி’ என்கிறாள்.

தீ்ர்ந்த என் தோழி – தாய்மார் சொல்லுகிற நல்வார்த்தைகளை நீயும் சொல்லுகையாலே, ‘நீயும் அவர்களைப் போன்று விலக்குகிறாய்’ என்று இருந்தேன், உன் நினைவு இதுவாகப் பெறுவதே! 1நீ நீயேயாம்படி இருந்தாய் வர இரு என்கிறாள். 2“இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள், “பெருமாள் பக்கல் நின்றும் வந்தவன்” என்று அறிந்த பின்பு அவனைக் கொண்டாடிற் போலே. என்றது, “பெருமாளால் அநுப்பப் பட்டவனாயிருப்பதனாலே, ஓ வானர உத்தமனே! என்னுடன் இரஹசியமான சமாசாரங்களைச் சொல்லுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறாய்” என்றாள் என்றபடி. 3“தோழிமாருடனே சுகமாக அருப்பாய்” என்கிற அவர்கள் படியாய் இருந்தாயே நீ என்கிறாள் என்றபடி. 1“நான் அங்கு ஸ்ரீ ராமபிரானுடைய திருமாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய, மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக்கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப்பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும் உன்னோடே சொல்லக்கூடியதாய் இருந்தது. 2அத் தோழி தானும், பிறர் கூறுகின்ற நல்வார்த்தைகளும் இவள் செவியிற்படும்படியோ இவள்தான் நின்ற நிலை’ என்று அறிகைக்காகச் சொன்னாளித்தனை அன்றோ. ஊரார் பழிக்கு அஞ்சி அன்றோ நான் விலக்குகிறது என்ன, 3என் செய்யும் ஊரவர் கவ்வையே. 4ஆகில், உனக்கு வார்த்தை சொல்ல அடுப்பது இப்படியே காண், ‘நாட்டார் பழி சொல்லுவர்கள்’ என்று சொல்லாமல் ‘என் நினைவு இருந்தபடி இது’ என்று செல்லலாவதுண்டாகில் சொல்லிக்காணாய் என்கிறாள். ஊரார் பழி கொண்டு காரியம் என்? உன் நெஞ்சிற் குறை இல்லாமையே அன்றோ எனக்கு வேண்டுவது என்கிறாள்.

எல்லாம் செய்தாலும் -லோகத்தார் பழி தவிர்க்க வேண்டும் -தோழி
இது பழி என்று சொல்பவர்கள்
நான் எங்கே நீ எங்கே அவன் எங்கே ஊரார் எங்கே
பழி அனைவரும் சொன்னாலும் கவலை இன்றி இருக்க செய்தான்
செஷ்டிதங்கள் -செய்தவன் என்னை நிறை கொண்டான்
அவனை தவிர வேறு சொல் இல்லையே
அவனை விட முடியாதபடி ஈடுபாடு செய்த பிரான்
ஊரார் பழி சொன்னாலும் விட முடியாத ஈடுபாடு கொடுத்து அருளி
அத்தா  அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்பார் லோகத்தார்

பழிக்கிற சமயத்திலே உபகாரங்களைச் சொல்லுதல், மிக்க ஈடுபாட்டினை
உண்டாக்குவதற்குக் காரணங்கள் என்கிறார் ‘இது பழி’ என்று தொடங்கி.
“ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்” என்பது போன்றவைகளைத்
திருவுள்ளம்பற்றி ‘ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்’
என்கிறார்.

முத்தா எங்கனம் உன்னை விடுவேன்
சகடம் உதித்த பாதத்தன் –
இரண்டு சரித்ரம் விஸ்தர வியாக்யானம்
கம்சன் விரோதி போக்கியது என்று நினைத்து இருந்தால் முன்பு பராங்குச நாயகி
இப்பொழுது தனது  பக்கம் பிராவண்யம் விளை க்க தான் -அடிமை கொள்ள
பால்யத்தில் செய்தவை இவளுக்கு -யவன பருவத்தில் இருப்பது -ஆகர்ஷகமாக இருப்பது எங்கனம்
சத்தா பிரவருதி பிராவண்யம் விளைப்பது அவனுக்கு -உடன் கூடவே இருக்கும் திருக்குணம்
உலகு இரந்த கள்வருக்கு -மதியினால் குறள் மாணாய் –
சாமர்த்தியமாக மாவலி இடம்
எம்பெருமானார் நிர்வாஹம் -பராங்குச நாயகியை ஈடுபடுத்த இப்படி செய்த புத்தி சாதுர்யம் –
சைசவத்தில் பண்ணி வைத்து அவள் உருகுவாள் என்று –
சத்தா ப்ரவ்ருத்தம் அவனுக்கு
என் நின்ற யோநியுமாய் பிறந்தது இவளுக்கு தான்
ஊர்ந்த சகடம் -ஊருகின்ற சகடம் இல்லை -நின்று இருக்கும் சகடம் தான் –
நடுவிலே தொட்டில் இட்டு போனாள் தாயார்
எமுனை நீராட போனாள்
காவல் காத்தாரே  களவு காண்பது போலே ஊர்ந்து வந்தது -ஆவேச அசுரர்கள்
உதைத்த பாதத்தன்
திருவடி மெய் காப்பாளர் போலே
கவனத்தாலே-அடி காத்து திரியும் -திருவடி
உதை த்த பாதத்தன் முலை பால் தாழ்ந்தது என்று சீறி உதைக்க –
அவனுக்கும் இதுவே ரஷணம்
சகடாசுரன் -பருவம் நிறைந்த என்று -எழு திங்களில் இது
அதுக்கும் முன்பு -பூதனை நிரசனம்
சகடம் பார்த்து காக்கலாம்
தய்வடிவில் வந்தததால் தடுக்க பிரசக்தி இல்லையே
ஈன்றாரே நஞ்சு இட்டது போலே
முகம் பார்த்து ஸ்மிதம் பண்ணும்
தாய் பார்த்து முலைக்கு கீழே முழுசி -உதை த்த பாதத்தன்-சுவைத்த செவ்வாயன் –

புன்முறுவல் செய்து முலை உண்டமைக்குப் பிரமாணம் காட்டுகிறார்
“மழலை மென்னகை” என்று தொடங்கி.

குழகனே! என்தன் கோமளப் பிள்ளாய்!
கோவிந்தா! என்குடங் கையில் மன்னி
ஒழுகு பேரெழில் இளம்சிறு தளிர்போல்
ஒருகை யால்ஒரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை இடைஇடை அருளா
வாயி லேமுலை இருக்கஎன் முகத்தே
எழில்கொள் நின்திருக் கண்ணினை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே.-இது, பெருமாள் திருமொழி.

2. “சுவைத்த” என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “உயிரை” என்று தொடங்கி.

முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால்போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.-  இது, பெரிய திருமொழி.

ஒரே கார்யத்தால் இரண்டு பேர் முடிய போதனை பராங்குச நாயகி
அவளை நல்ல கொலை செய்து
என்னை உயிர் கொலை செய்தானே
அவனுடைய வியாபாரங்கள் செய்யாமல் இருந்தாலோ
நான் மறந்து லோக யாத்ரையில் இருக்கவோ
துக்கம் தவிர வஸ்துவை மறந்து வேற விஷயம் கவனம் செலுத்தி –
புறம்பு ஏதேனும் ஓன்று பொழுது போக்க
எல்லாம் செய்தாலும் நிறை காக்க
பேர்ந்தும்
மறைக்கை யாவது -இன்னொன்றை நினைப்பதே அதை மறப்பது -தன்னடையே போகும்
ஏது செய்தால் மறப்பேன்
எத்தை செய்தாலும் அவன் நினைவு
நினைக்க வழி சொலும்
திருமலை ஆண்டான் -மறக்க வழி சொல்லி கொடு -பின்பு சொல்கிறேன் எல்லாவற்றிலும் அந்தர்யாமி நியாமகன்
எது செய்தால் மறப்பேன் -திருமங்கை ஆழ்வார்

“ஏது செய்தால் மறக்கேன்” என்று. இது, பெரிய திருமொழி. 9. 3 : 3.

பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்” என்றதன்
கருத்து, பிரிந்தபோதொடு கலந்தபோதொடு வாசி அற அவனை ஒழிய, ஒரு
வார்த்தை எனக்கு இல்லை என்பது. இதனால் பலித்த பொருள், புணர்ச்சிக்
காலத்தும் பிரிவுக் காலத்தும் அவனை மறக்கப் போகாது என்பது.

5. மறக்கும்படி சொல்லுகிற தோழியைப் பார்த்து, ‘பிரிவுக்காலத்தில்
மறக்கப்போகாது’ என்னும் இத்துணையே சொல்ல அமைந்திருக்க,
“பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்” என்று

கூடினால் மறக்கும் படி இருந்தால் -பிரிந்து இருந்து மறக்க முடியும்
பேர்ந்து போந்தும் வந்தும் அவனை தவிர வேறு சொல் இல்லை
அவனை மற -நீ சொல்லி அவனை நினைவு படுத்த
அவனை தவிர வேறு சொல் இல்லை
தோழி சேர்பித்த தானே பிரிக்க முயன்றாலும் பிரியாமல் உறுதிகண்டு  ஹர்ஷிக்க

“பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்”
என்பதற்கு, விலக்ஷணமான பொருளாகையாலே புணர்ச்சிக்குரிய காலத்திற்
போலவே, பிரிவுக்குரிய காலத்திலும் மறக்க ஒண்ணாது என்று மேலே ஒரு
கருத்து அருளிச்செய்து, புணர்ச்சிக்குரிய காலத்தோடு பிரிவுக்குரிய
காலத்தோடு வாசி அற நீ அவனை நினைப்பூட்டுகின்றவளாயிருக்கையாலும்
‘அவனை மறக்கப்போகாது’ என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘அவனை மற’ என்று தொடங்கி. என்றது, கலவியில் அவனை நினை,
பிரிவில் ‘அவனை மற’ என்றே அன்றோ

ரிஷிகள் கொடுத்த வாக்கை விடேன் -பெருமாள் வார்த்தை கேட்டு பிராட்டி ஹர்ஷித்தது போலே
உன்னை விட்டாலும் இளைய பெருமாளையும் விட்டாலும் –
அது போலே தோழியும் ஹர்ஷிக்க –
பார்த்தவள் -தீர்ந்த என் தோழி -என்று -நெஞ்சை பார்த்து
தாய்மார் சொன்ன ஹித வார்த்தை போல் இல்லை
நீ  நீ தான்

முன்பு வெறுத்தவள், பின்பு ஆநுகூல்யத்தை அறிந்து கொண்டாடுவதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘இராவணன் வரவிட்ட ஆள்’ என்று தொடங்கி.
பிராட்டி கொண்டாடின படியைக் காட்டுகிறார் ‘பெருமாளால்
அநுப்பப்பட்டவனாயிருப்பதனாலே’ என்று தொடங்கி.

“அர்ஹஸேச கபிசிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும்
யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண விதிதாத்மநா”

என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 10. பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.

மேற்காட்டிய சுலோகத்தில், “மயாஸம் அபிபாஷிதும், அர்ஹஸே”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் “தோழிமாருடனே”என்று தொடங்கி. என்றது,

பெருமாள், ‘தோழிமாரோடே இரு’ என்று அருளிச்செய்த தோழிமாரைப் போலே இருந்தாய் நீ என்றபடி. அவர்கள்படி – தோழிமார்படி.

1. “சம்அபிபாஷிதும்” என்றதிலேயுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் “நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் –
என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.

“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் சர்வகாம சம்ருத்திநீ”

என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.

சங்கை முதலில்
சந்தோசம் இப்பொழுது
பிராட்டி -திருவடி இடம் பெருமாள் உடன் சந்தோஷமாக இருந்தேன் கூடி களித்ததை
சொல்லி -அது போலே இங்கும் –
உஊரார் பழி தடுக்க தான் சொன்னேன்
என் செய்யும் ஊரார் கவ்வை
நாட்டார் வார்த்தை நீ சொல்லாதே
உனது நிலைமையை சொல்லு
மனசில் கொண்டாடுவதை சொல்லு என்கிறாள்
எனக்கே அற்று தீர்ந்த தோழி நீ

அந்தரங்கமான நீ நிஷேதிக்க கடவையோ
உனது நெஞ்சில் குறை இல்லையே என்கிறாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.