Archive for March, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 31, 2013

வாங்குநீர் மலர்உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்குஉயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்குஇதன்மேல் வெந்நரகம்; இவைஎன்ன உலகியற்கை!
வாங்குஎனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.

    பொ-ரை : ‘வளைந்த கடலாற்சூழப்பட்ட பரந்த உலகத்திலே நிற்பனவும் திரிவனவுமான அவ்வவ்விடங்களிலே வசிக்கின்ற உயிர்கள் பிறப்பாலும் இறப்பாலும் வியாதியாலும் வருந்தாநிற்கும்; ஈங்கு இதற்குமேலே கொடிய நரகமுமாம்; இவை என்ன உலகு இயற்கை!

நீலமணி போன்ற நிறத்தையுடையவனே! நீ என்னை அங்கீகரித்தருளவேண்டும்; அடியேனைக் கலங்கும்படி செய்யாதொழிய வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ‘வாங்கு நீர்’ வியாக்கியானம் பார்க்க. தகர்ப்புண்ணல் -வருத்தத்தை அடைதல்; அழிதல். மறுக்கேல் – கலங்கப்பண்ணாதே.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. ‘பிறப்பு மூப்பு இறப்பு முதலியவைகளாலே நோவுபடுகிற இம்மக்கள் நடுவினின்றும், இவை நடையாடாத தேசத்திலே அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.

    வாங்கு நீர் மலர் உலகில் – இவ்வருகு உண்டான காரியவர்க்கத்தையடையத் தன் பக்கலிலே வாங்காநின்றுள்ள நீரிலே உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே.  1காரியங்கள் எல்லாம் காரணத்திலே இலயமாகக் கடவன அன்றோ? 2இலயத்தை முன்னிட்டு அன்றோ படைப்பு இருப்பது? அன்றிக்கே, ‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல். வாங்கு – வளைந்த. திரிவனவும் நிற்பனவும் -தாவரங்களும் சங்கமங்களும், ஆங்கு உயிர்கள் – அந்த அந்தச் சரீரத்திலேயுள்ள ஆத்துமாக்கள். அன்றிக்கே, ‘நிற்பனவும் திரிவனவுமான உயிர்கள்’ என்று கூட்டித் ‘தாவரமாகவும் சங்கமமாகவும் இருக்கின்ற உயிர்கள்’ என்னலுமாம். ‘ஆங்கு’ என்பதனை, மேலே வருகின்ற ‘வாங்கு எனை நீ’ என்றதனோடு கூட்டுக.

    பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் – பிறப்பு இறப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்குண்ணாநிற்பர்கள் சமுசாரத்தில் இருக்கும் நாள்கள் முழுதும். இதன்மேல் வெந்நரகம் – இதற்குமேல் போனால் கொடிதான நரகம். ‘இங்கு இருந்த நாள் 3மூலையடியேசுகாநுபவம் பண்ணித் திரிந்ததைப் போன்றது அன்றே அங்குப் போனால் படும் துக்கம்?’ என்பார், ‘வெந்நரகம்’ என்கிறார். என்றது, ‘துன்பத்தை இன்பமாக மயங்கும் மயக்கத்தாலாவது இன்பம் உண்டு இங்கு; அங்கு, வடிகட்டிய துக்கமே ஆயிற்று உள்ளது,’ என்றபடி. 1உயிர்க்கழுவில் இருக்குமவன் நீர் வேட்கை கொண்டு தண்ணீரும் குடித்து நீர் வேட்கை நீங்கினவனாய் இருக்குமாறு போன்றதே அன்றோ இங்குள்ளவை? அதுவும் இல்லை அங்கு. இவை என்ன உலகு இயற்கை – இது ஓர் உலக வாழ்வினைப் பண்ணி வைக்கும்படியே! ‘ஆனால், உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்ன, ஆங்கு வாங்கு எனை – 2‘நினைவிற்கும் எட்டாத உலக நாதரானா ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடுகூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே. ஏழுலகும் தனிக்கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்கவேண்டும். மணி வண்ணா – 3ஐம்புல இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை, ‘அவ்வடிவை நாய்க்கு இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போகவேண்டும். 4‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே, இவன் படியைக்கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ? அடியேனை – 5உன் படி அறிந்த என்னை; என்றது, ‘நீயும் அவ்வோலக்கமுமாய் இருக்கிறஇருப்பில் இனிமை அறிந்த என்னை’ என்றபடி. மறுக்கேலே – 1பிறப்பு மூப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்கு உண்கிற இவர்கள் நடுவே இருந்து நெஞ்சு மறுகாதபடி பண்ணவேண்டும். என்னைக் கலங்கப் பண்ணாதே கொள். தெளிவிசும்பிலே வாங்கியருளவேண்டும். ‘உனக்கே உரியராய் அடியருமாய் இருப்பாரைக்கொண்டு லீலாரசம் அனுபவிக்கக் கடவதோ?’ என்பார், ‘அடியேனை மறுக்கேல்’ என்கிறார்.

பிறப்பு இறப்பு இவை இல்லாத பரம பதம் அருளி
நிற்பனவும் திருவனவும் துன்பம் வென் நரகம்
வாங்கு நீர் கார்யம் காரணங்களில் லயம்

‘தண்ணீரோ, எல்லாவற்றையும் வாங்குகிறது?’ என்ன அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘காரியங்கள் எல்லாம்’ என்று தொடங்கி. தண்ணீர்,
காரணம்; பூமி, காரியம். தண்ணீரினின்றும் பூமி உண்டாயிற்று என்ற சிருஷ்டி
முறையை நினைவு கூர்க.

வாங்கு நீர் பூமியை வாங்கிக் கொள்ளும் நீர் காரணம் –
வாங்குதல் வளைதல் நீரால் சூழப்பட்ட
ஸ்தாவரம் ஜங்கமம் நிற்பன திரிவன அபிமான உயிர்கள் –
பிறப்பு இற ப்பு  பிணி மூப்பு -பிணி பசி மூப்பு -தொண்டர் அடி பொடி
இதன் மேல் வென் நரகம் -இங்கு மூலையடியே சுகம் பிராந்தி உண்டே
புலி துரத்த பாம்பு தேன் சொட்ட பிராந்தி
நரகம் துக்கமே ஆக இருக்கும்
உயிர் கழு இருப்பவன் தண்ணீர் குடித்து தாகம் தீர்ப்பவன் போலே –
லோக யாத்ரை இப்படி
ஆங்கு வாங்கு எனை -அந்த இடம் -ஸ்ரியா சார்த்தம் -ஏழு உலகும் தனிக் கோல் செய்யும் அந்த இடம் வாங்கு
பக்தஸ் பாகவதஸ் சஹ உனது வடிவை காட்டி –
‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ –இரண்டாந்திருவந். 42.என்கிறபடியே,

இவன் படியைக்கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ?

அடியேனை -உன்னை அறிந்த
மறுக்குதல் மருகாத படி பண்ண வேண்டும்
தெளி விசும்பு அது
இது இருள் தரும் மா ஞாலம்
வாங்கி அருள வேண்டும்
லோக வஸ்து லீலா கைவல்யம்
இன்புறு இவ்விளையாட்டு உடையான்
சேஷ பூதன் என்னைக் கொண்டு இப்படி செய்ய வேண்டுமா
அடியேனை கலங்கப் பண்ணும்படி வைக்காதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 31, 2013

கொள்என்று கிளர்ந்துஎழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள்என்று தமம்மூடும்; இவைஎன்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய்து அடியேனை உனதுஅருளால் வாங்காயே.

    பொ-ரை : ‘‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று கிளர்ந்து வருகின்ற பெரிய செல்வமானது, நெருப்பைப் போன்று தங்களையழிக்க, பின்னையும் செல்வத்தைக் கொள்வாய் என்று பிறர் சொன்ன அளவிலே அறிவின்மையால் மூடப்பட்டு அச்செல்வத்தை விரும்புகின்ற இவை என்ன உலகு இயற்கை! வள்ளலே! மணி வண்ணா! உன் திருவடிகட்கே வரும்படி திருவருளைச்செய்து அடியேனை உன் திருவருளால் கைக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ‘நெருப்பாக’ என்றது, ‘நெருப்பைப்போன்று இருக்க’ என்பது பொருள். ‘என்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு. ‘கொள்ளென்று தமம் மூடும்’ என்ற இடத்தில் ‘கொள்ளென்று தூண்டுதல், மனம்’ என்று கோடலுமாம்.

  ஈடு : நான்காம் பாட்டு. 1‘மக்கள், செல்வத்தை விரும்பினால், அது அழிவிற்குக் காரணமாதலைக் காணாநிற்கச் செய்தேயும், மீண்டும் அந்தச் செல்வத்தை விரும்புதலே இயல்பாம்படி இருக்கிற இதற்குக் காரணம் யாதோ? நான் இது கண்டு பொறுக்கமாட்டுகின்றிலேன்: முன்னம் என்னை இவர்கள் நடுவினின்றும் வாங்க வேண்டும்,’ என்கிறார்.

    கொள் என்று கிளர்ந்து எழுந்த பெருஞ்செல்வம் – இவன் தான் விரும்பாதிருக்கச்செய்தேயும் ‘கொள், கொள்’ என்று 2மொண்டெழு பானைபோலக் கிளர்ந்து வருகிற எல்லைஇல்லாத செல்வமானது. நெருப்பாக – 3‘அடியோடு அழிய’ என்னுதல்; 4அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல். ‘செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின், ‘இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே அன்றோ பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க. கொள் என்று தமம் மூடும் – 5இப்படிச் செல்வமானது அழிவிற்குக் காரணமாதலைக் காணச் செய்தேயும், பிறர் இவனைக் ‘கொள், கொள்’ என்று தூண்ட, அறிவின்மையால் மூடப்பட்டவனாய் பேராசையாலே முன்பு அழிவிற்குக் காரணமான அச்செல்வத்தை ஏற்றுக்கொள்வான். ‘அறிவின்மையால்

மூடப்பட்டவனாய் விரும்புகிறான் என்பதனை இவர் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின், மீளவும் அச்செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப்பட்டவனாய்த்தானே இருத்தல் வேண்டும்?

    அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம். அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத் தமோ குணத்தாலே மறைப்பித்து, ‘அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும் இச்செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம். 1‘மஹாரதரான வீடுமர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும், சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே, அதிரதர் மஹாரதர் அடையப்பட்டுப்போகாநிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே பாண்டவர்களை வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்? இவை என்ன உலகியற்கை – இவை உலக வாழ்வுகள் சில இருக்கிறபடியே!

    வள்ளலே –  2‘செல்வம் அழிவதற்குக் காரணம்’ என்னுமதனை என் நெஞ்சிலே படுத்தி எனக்கு ஒளதார்யத்தைச் செய்தவனே! மணிவண்ணா -மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? 3சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண அன்றாயிற்று. அன்றிக்கே, ‘செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, 4பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’என்பார், ‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம். உன கழற்கே வரும் பரிசு – 1ஞானலாப மாத்திரத்தால் போதுமா? பேற்றினைப் பண்ணித் தரவேண்டாவோ? 2மயர்வுஅற மதிநலம் அருளினதைப் போன்று, துயர்அறு சுடரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ? பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ? வள்ளல் செய்து – உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது, ‘இவன் இப்பேற்றைப் பெறுவான்,’ என்று அங்கீகரித்து, என்றபடி. அடியேனை – 3‘பிறர் உடைமை நசியாமல் நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை. உனது அருளால் – மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்யவேண்டும். ‘வாங்காய்’ என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார். அதற்கு அடி, இத்தலையில் பரமபத்தி பர்யந்தமாகப் பிறந்தாலும், 4பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத்தலையின் அருளாலே பெற்றதாம்படி இருக்கையாலே.

உனது கழல் கிடைக்கும்படி அருளாய்
சம்சாரத்தில் இருந்து வாங்காய் –
கொள் கொள் என்று நெருப்பு போலே செல்வம் ஆசை உண்டாக்கி
கிளர்ந்து எழும் -தமஸ் மூடி -இது என்ன உலகு இயற்க்கை
அர்தியாது இருக்கச் செய்தேயும் கொள்
நீள் செல்வம்  தான் வேண்டாதான் –
நெருப்பு -நசிக்கும் தனக்கும் விநாச ஹேது
பொறுக்க மாட்டாமல் பிறர் அழிக்க செய்வார்கள்

‘கொள்ளென்று தமம் மூடும்’ என்பதற்கு மூன்று வகையாகக் கருத்து
அருளிச்செய்கிறார். முதல் கருத்து, ‘இப்படிச் செல்வமானது’ என்று
தொடங்கும் வாக்கியம். இரண்டாவது கருத்து, ‘அன்றிக்கே’ என்று
தொடங்கும் வாக்கியம். மூன்றாவது கருத்து, ‘அன்றிக்கே, இது அழிவிற்குக்
காரணமாம்’ என்று தொடங்கும் வாக்கியம்.

மனசும் கொள் கொள் சொல்லி
தமோ குணம் மேலிடப் பட்டு -அழிவுக்கு காரணம் ஆகுமே
நெருப்பு -ஆஸ்ரய -முதலில் அழிக்கும் -அது போலே ஐஸ்வர்யம் –
பெரும் செல்வத்தராய் திருமால் அடியாரை பூசிப்பார்களே பலன் சொல்லி -பின்பு
நெருப்பு எப்பொழுதும் த்யாஜ்யம் இல்லையே –
பக்குவப்படுத்த நெருப்பு வேண்டுமே –
பெரும் செல்வதை நெருப்பு என்கிறார் அளவோடு கொள்ள வேண்டும்
ஐஸ்வர்யமும் புருஷார்த்தம் அளவுக்கு அதிகமான ஆசை கொள்ள கூடாது
அதுவே எல்லாமாக கொள்ள கூடாது -அளவோடு செல்வ்சம் இருந்தால் அதை கொண்டு நாம் ஜீவிகலாம்
அளவுக்கு அதிகமான செல்வம் நாம் காக்க வேண்டும்
ஹதே பீஷ்மே -ஹதே துரோனே ஹதே கர்ண சல்யனுக்கு பட்டாபிஷேகம் வைத்து
ராஜ்ஜியம் நப்பாசையால் செய்தானே

வள்ளலே ஐஸ்வர்யம் விநாச  ஹேது புரிய வைத்து வள்ளல் தனம் காட்டி
மாணிக்க பண்டாரம் வைத்து -மணி வண்ணா -திருமேனி ஸ்வரூபம் வைத்து இருக்கும் பண்டாரம்
சாதனா அனுஷ்டானம் வேண்டாமே தானே காட்டி கொடுத்து
ஐஸ்வர்யம் விட்டு -குப்ச்யை பிறப்பித்தது திருமேனி காட்டி
மேலேயும் வேண்டும்
உனது கழல்
பிராப்தி வேண்டுமே ஞானம் மட்டும் போதாதே
மயர்வற மதி நலம் அருளிய பின்
துயர் அரு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டுமே
பசியனுக்கு சோறு வேண்டுமே
அடியேனை பிறர் உடைமை காக்க பிறரை கேட்டு கொள்ளும்
உனது வச்துவ்சை உன்னை காக்க சொல் லும் என்னை
கைங்கர்யம் கொடுத்து
வாங்காய் -அசித் போலே பரம பக்தி இருந்தாலும் பெறுகிற பேற்றை பார்த்தல் அத்தலையால்
வந்தது என்றே இருப்பார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-3–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 31, 2013

கொண்டாட்டும் குலம்புனைவும் தமர்உற்றார் விழுநிதியும்
வண்டுஆர்பூங் குழலாளும் மனைஒழிய, உயிர்மாய்தல்
கண்டுஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டேபோல் கருதாது,உன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.

    பொ-ரை : ‘கடல் போன்ற நிறத்தையுடையவனே? மக்களால் கொண்டாடப்படுகின்ற கொண்டாட்டமும் குலத்தின் பெருமையும் பங்காளிகளும் உறவினர்களும் சிறந்த செல்வமும் வண்டுகள் தங்கியிருக்கின்ற மலர்களையுடைய கூந்தலையுடைய மனைவியும் வீட்டிலேயே தங்கியிருக்க, இறத்தலாகிற இந்த உலகியற்கையைக் கண்டு பொறுக்ககிலேன்! ஆதலால், அடியேனை முன்பு போலக் கருதாது உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்து அடிமை கொள்ளவேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ஒழிதல் – ஈண்டு இறவாது தங்கியிருத்தல். ‘அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே, முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்’ (தொல். எழுத். சூ. 315) என்றவிடத்து ‘ஒழிய’ என்பதூஉம் இப்பொருளிலேயே வந்திருத்தல் காண்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 3‘குலம் முதலானவைகள் எல்லாம் கிடக்க, இவை முடிகிறபடியைக் கண்டு பொறுக்க

மாட்டுகின்றிலேன்; துக்கம் சிறிதும் இல்லாத உன் திருவடிகளிலே அடிமை கொள்ள வேண்டும்,’ என்கிறார்.

    கொண்டாட்டும் – முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன் சிறிது வாழப் புக்கவாறே ‘முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள். 1‘பயிலும் திருவுடையார்’ என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்? குலம் புனைவும் – நல் வாழ்வு வாழப் புக்க அன்று தொடங்கி இவனுக்கு ஒருகுலம் உண்டாகத் தொடுத்துச் சொல்லுவர்கள். தமர் – 2முன்பு ‘இவனோடு நமக்கு ஓர் உறவு உண்டாகச் சொல்லுமது சாலத் தண்ணிது’ என்று போனவர்கள் இவன் வாழப் புக்கவாறே உறவு சொல்லிக்கொடு வந்து கிட்டுவார்கள், ‘அவன் தமர்’ என்று தமக்குத் தமர் புறம்பே அன்றோ? உற்றார் – 3முன்பு, ‘இவனோடு சம்பந்தம் செய்து கோடல் தரம் அன்று; நிறக்கேடாம்,’ என்று போனவர்கள், இப்போது ‘இவனோடு ஒரு சம்பந்தம் பண்ணினோமாக வல்லோமே!’ என்று ஆதரித்து மேல் விழுவர்கள். விழு நிதியும் – நினைவின்றிக்கே இருக்கச் செய்தே சருகிலை திரளுமாறு போலே சீரிய நிதி வந்து கைப்புகுருமே; அச்செல்வத்திற்குப் போக்கடி காணாமல், 4செய்வது அறியாமல், அதனை முன்னிட்டு ஒரு பெண்ணை மணந்துகொள்வான்; அவள்தான் வண்டு ஆர் பூங்குழலாள் ஆயிற்று. இவள் செவ்விவண்டே உண்டு போமித்தனை

போக்கித் தான் உண்ண மாட்டான் ஆதலின், ‘வண்டார் பூங்குழலாள்’ என்கிறது. ‘என்னை?’ எனின், இன்பத்திற்குத் தகுதியில்லாத பருவத்திலே ஆயிற்றுத் தான் அவளை மணந்துகொண்டது. 1‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’ இவை எல்லாம் சர்வேசுவரனேயன்றோ இவருக்கு?

    மனை ஒழிய – அவளுக்கும் தனக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கைக்குத் தன் ஆற்றல் எல்லாம் கொண்டு 2பல நிலமாக அகத்தை எடுப்பான். உயிர் மாய்தல் – 3இவை குறி அழியாதிருக்க, இவளைக் கூட்டோடே கொடுத்து, இப்படிப் பாரித்த தான் முடிந்து போவான். கண்டு ஆற்றேன் உலகு இயற்கை -இப்படிப்பட்ட உலக வாழ்வினை என்னால் பொறுக்கலாய் இருக்கிறதில்லை. கடல் வண்ணா – 4இந்த உலக வாழ்க்கையின்படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே. இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டியருளாய். அடியேனைப் பண்டே போல் கருதாது – ‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச் சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப் போன்று இராதே அன்றோ? 5சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது

சேர்க்கை பல்லி போலே பணியன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.

    1அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது, பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம். உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே – உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருளவேண்டும். 2உன் திருவடிகளிலே அழைத்தாலும், அடிமையின் இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது? ஆன பின்னர், என்னை நித்திய கைங்கரியம் கொண்டருளவேண்டும்,’ என்னுதல்; அன்றிக்கே, ‘சோற்றையிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.

ஆபிஜாதிகள் எல்லாம் கிடக்க
துக்க கந்தம் இல்லா உனது திருவடியில் சேர்த்து கொள்ளே வேண்டும்
அடியேனை பண்டே போல் கருதாது
அடிக்கே கூவி பணி கொள்ள  வேண்டும்
கொண்டாடும் -அவஸ்துவாய் போந்தவன் -கொஞ்சம் பணம் வந்ததும் முதலியார் போலே
பயிலும் திரு உடையார் –திருவாய் 3. 7 : 1.-ஆழ்வார்கள்
குலம் உண்டாவதாக இட்டுக்கட்டி பேசுவர் குலம் புனைவர்
தமர் -அவன் தமர்-முதல் திருவந். 55.-இவருக்கு
கிட்டின உறவு போலே சொலிக் கொள்வார்கள் கொஞ்சம் பணம் வந்ததும்

சேஷு எங்கே -கேட்டு வந்தவர் -நீதிபதி வீட்டில் –
நானும் நீயும் ஒரே எமனால் கொண்டு போக –
தயார் சகோதரிகள் -என்றாராம் –
லஷ்மி குமாரன் மூதேவி குமாரன் என்றாராம் அச்சு பிச்சு சொலி வருவார்கள்
விழு நிதியும் -பணம் வந்ததும் முதுமையிலும் பெண்ணை மணந்து
சருகு இலை சேர்வது போலே -வண்டார் பூம் குழலாள் -ஆயிற்று
இவள் செவ்வி வண்டே புஜித்து போகும் –
இவன் கிழவன் -சல்லாபம் பண்ணாதவன் –
ஆழ்வாருக்கு சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’

இவை எல்லாம் சர்வேசுவரனேயன்றோ –திருவாய். 5. 1 : 8.
துக்கம் இன்றி படி உண்டே உனது திருமேனி

மேற்கூறிய பொருளுக்கு ஆப்த சம்வாதம் காட்டுகிறார், ‘சிற்றாள்
கொண்டார்’ என்று தொடங்கி. சேர்க்கைப்பல்லி – நிலைப்பல்லி, ‘சேர்க்கைப்
பல்லி ஓர் இடத்திலேயே பலகால் சொல்லிக் கொண்டிருக்கும்; அந்தப் பல்லி
போலே, இவர்க்கும் இது பணி அன்றோ?’ என்று இருக்க ஒண்ணாது
என்கிறார் என்றபடி.

அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது,

பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம். உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே –

உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருளவேண்டும்

உன்னை இழந்த வருத்தம் தான் முன்பு
இப்பொழுது இவர்கள் இழவுக்கும் சேர்த்து கூவுகிறேன்
அடிமை சுவடு அறிந்து -கைங்கர்யமும் கொடுத்து பணி கொள்ள வேண்டும்
சோற்றை இட்டு பணி கொள் என்பாரைப் போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 31, 2013

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

    பொ-ரை : ‘சாகின்ற விதமும், செல்வம் கெடுகின்ற விதமும், தாயாதிகளும் மற்றைய உறவினர்களும் மேல் விழுந்து மேல் விழுந்து துக்கத்தினால் கிடந்து அழுகின்ற வகையுமான உலக இயற்கை இவை என்ன? இவர்கள் உய்யும் வகை ஒன்றனையும் அறிகின்றிலேன் யான். அரவணையாய்! அம்மானே! அடியேன் விஷயத்தில் திருவுள்ளம் பற்றி அடியேனை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் வகையில் விரைய வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு :  தமர் – தாயத்தார். உற்றார் – மற்றைய உறவினர். தலைத்தலை – இடந்தோறும். அரவணை – பாம்புப்படுக்கை. ‘குறிக்கொண்டு அடியேனைக் கூமாறே விரை கண்டாய்,’ என்க. கண்டாய் – முன்னிலையசைச்சொல்.

    ஈடு : இரண்டாம் பாட்டு, 1முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று தொகுத்துக் கூறினார்; அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய், ‘இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.

    சாமாறும் கெடுமாறும் – சாகும்படியும் கெடும்படியும். ‘‘ஆறும், ஆறும்’ என்னுதல் என்னை? சாதலுக்கும் கெடுதலுக்கும்

மேற்படச் சில வகைகளும் உளவோ?’ என்னில், ‘பல காலம் 1ஒருபடிப்பட வாழக்கடவனாகவும், தன்னோடு ஒக்க வாழ்வாரை அழியச் செய்யக் கடவனாகவும் கோலிக் கொண்டு போகாநிற்க, நினைவு அற முடிந்துகொடு நிற்கும்படியும், நான்கு 2சின்னம் கைப்பட்டவாறே, ‘இனி, நமக்கு உள்ளதனையும் வாழ்வதற்கு ஒரு குறை இல்லை’ என்று நினைத்திருக்கச்செய்தே, அதனை இழந்து துன்பப்பட்டுக் கூப்பிடும்படியும் எனச் சில உளவே அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி.’ 3ஒருவன் தன் சாக்காட்டிற்கும் இசைவான், தன் கையில் அகப்பட்ட பொருள் தப்பினால்; 4அதனையே அன்றோ இவன் தஞ்சமாக நினைத்திருப்பது? ஆதலின், சாதற்குப் பின் ‘கெடுதலை’ வைத்து ஓதுகின்றார். 5ஒருத்தனை ‘ராஜத்துரோஹி’ என்று கையையும் காலையும் தரிக்க, இவனை வினவப் புகுந்தவர்கள், ‘இப்படிப்பட்டது வரல் ஆகாதே!’ என்ன, ஆயிரம் ஐந்நூறு என்று காசு சில தா,’  என்னாதே இவ்வளவோடே போயிற்று உங்கள் அநுக்கிரஹமே அன்றோ?’ என்றானாம்.

    6இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின; 7‘நின்னலால் இலேன்காண்’ என்றும், 8‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’ 9‘இன்னம் கெடுப்பாயோ?’ என்றும், ‘பகவானை அடையாதொழிவது விநாசத்திற்குக் காரணம்,’

என்றும், ‘இதர விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது. 1‘அடியவனான என்னைத் தேவரீர் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருளவேண்டும்; என்னை அழைத்துக்கொண்டு போவதில் பாவம் இல்லை; தேவரீருக்கே பயன் கிடைக்கின்றது; நான் தேவரீருக்குக் கைங்கரியத்தைச் செய்து அதனால் பயனை அடைந்தவன் ஆகப் போகிறேன்,’ என்றும், 2‘ஸ்ரீராமரே! உம்மோடு கூடி வசிக்கும் இடம் எதுவோ, அது சுவர்க்கம்; உம்மைப் பிரிந்து வசிக்கும் இடம் எதுவோ அது நரகம் என்று எண்ணுகின்ற எனது சிறந்த பிரீதியை அறிந்தவரான நீர் என்னுடன் புறப்படும்,’ என்றும், இவற்றை விநாசமும் கேடுமாகவேயன்றோ இவர்கள் நினைத்திருப்பது? 3இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக்கொண்டார்கள்? ‘என் ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்?’ என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

    தமர் உற்றார் – சரீரசம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; 4இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு. தலைத்தலைப்பெய்து – மேல் விழுந்து மேல் விழுந்து. ஏமாறிக் கிடந்து அலற்றும் – 5‘ஏ’ என்று ஏக்கமாய்,

மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல். அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல். ‘ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை; அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர். இவை என்ன உலகு இயற்கை – இவை ஒரு உலக வாழ்வு இருக்கும்படி என்? என்றது, ‘வாழ்வதற்கு எண்ணாநிற்க முடிவது; நான்கு காசு கையிலே உண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்று இருக்க, அது அழிந்து போவது; சரீர சம்பந்தம் காரணமாக வருகிறவர்களையே தனக்கு எல்லாவித உறவுமாக நினைத்து, அவர்களுக்கு ஒன்று வந்தவாறே ‘பட்டேன் கெட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுவது ஆகிற இவையும் ஒரு உலகப் போக்கே! பிரானே!’ என்கிறார் என்றபடி.

    ‘நன்று; அவர்கள் என்படில் உமக்கு நல்லது? நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே! ‘சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்: நான் ஆமாறு ஒன்று அறியேன் – 1‘அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ? சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ? அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ? இவ்வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று அறியாநின்றேனோ?’ என்கிறார். 2அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது, ‘நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.

    அரவணையாய் அம்மானே – இவற்றைக் காக்கும் பொருட்டுத் திருவனந்தாழ்வான்மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி, இவற்றைப் பாதுகாத்தல் உன் பேறாம்படியான

குடல் சம்பந்தத்தை உடையவனே! 1இவற்றிற்கு இவனோடு மெய்யான குடல் சம்பந்தமே அன்றோ? 2இவனுடைய பொய்யோடு மெய்யோடு வாசியற இவனுக்கு இரண்டும் காப்பதற்குக் காரணமாக இருக்கும். கூமாறே விரை – 3சுலபனாய் இவற்றைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிலே கூக்குரல் கேட்கைக்காகக் கிட்டி வந்து கிடக்கிற நீ, நான் உன் திருவடிகளை வந்து கிட்டும்படி என்னை அழைத்துக்கொள்வதிலே விரைய வேண்டும். ‘இப்படி விரைய வேண்டுகிறது என்?’ என்னில், கண்டாய் – என்னைக் கண்ட உனக்குவிரையாதே இருக்கலாய் இருந்ததோ? 4‘காட்டிலே கொடியவர்களான இராக்கதர்களாலே பல வகையில் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலருடைய சரீரங்களைக் கடாக்ஷிக்க வேண்டும்; எழுந்தருளவேண்டும்,’ என்றாற்போலே, ‘பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.

    ‘ஆனாலும், அநாதி காலம் நீர் பிரியில் தரியாதே போந்த உடம்பும் உற்றாரும் அன்றோ?’ என்ன, அடியேனைக் குறிக்கொண்டே – ‘இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய்இருக்கிற 1என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.  2உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று பிறருடைய துக்கத்தைப் பொறுக்க மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்’ என்னுதல். ‘நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், ‘பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில், ‘இவை என்ன உலகியற்கை?’ என்று இந்த உலக வாழ்வினை நினைத்து வெறுத்து, என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?    

தமர் உற்றார் மேலே விழுந்து
இவை என்ன உலகு இயற்க்கை
அடியேனை திருவடியில் சேர்த்து கொள்ள வேண்டும்
சாமாறும் -ஒருபடிப்பட ஜீவிக்க தாம் கடவ
கெடுமாறும் -மற்றவர் அழியும்படியும் நினைந்து
இவனே முடிந்து போக -காசு இழந்து -சூதாடி பாண்டவர்களும் –
சூதாட கூப்பிட்டால் போகாமல் இருந்தால் ஷத்ரியர் இழுக்கு என்ற நினைவால் –
நாலு காசு கிடைத்த உடன் -இனி கவலை என்று ஜீவித்து இருக்க அதுவும் கெட்டு –
இவன் இருந்தாலும் அது கெடுமாறு
அது இருந்தாலும் இவன் சாவுமாறு –
நோவு பட பல விஷயம் ஆழ்வாருக்கு
நின்னலால் இலேன்காண்’- திருவாய், 2. 3 : 7. என்றும்,
‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’ –
திருவாய், 6. 9 : 9.
‘இன்னம் கெடுப்பாயோ?’ – திருவாய். 6. 9 : 8. -என்றும்,
‘பகவானை அடையாதொழிவது விநாசத்திற்குக் காரணம்,’
ஆழ்வார்களுக்கு
இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக்கொண்டார்கள்?

‘என் ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்?’-முதல் திருவந்.95. என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

நா வாயில் உண்டே
நமோ நாராயணா மந்த்ரம் உண்டே
சொல்லும்பொழுது மூச்சு விடாமல் -ஓவாது உரைக்கும் உரை உண்டே
மா கதி செல்லும் வகை உண்டே
எப்படி நரகம் போவார் என்ன ஆச்சர்யம் –
பிரிவும் சேர்ந்து இருப்பதே நரகமும் ஸ்வர்க்கமும் –
விநாசம் அநர்த்தம் இரண்டும் உண்டே -பிரிவு விநாசம்
கெடுமாறு ஸு போக்த புத்தி உடன் கைங்கர்யம் செய்தல்
குருஷ்ம மாம் இளைய பெருமாள்

ஸ்வா தந்த்ரம் கெடுமாறு என்று இவர்கள் நினைத்து இருப்பது
சாமாறு விட கெடுமாறு ரொம்ப -துக்கம்
பாடுபட்டு புதைத்து வைத்து கூடு விட்டு ஆவி போன பின்
ராஜ துரோகி கை காலை வெட்ட -விசாரிக்க வந்தவர்கள் -காசு கேட்க்காமல் இதை செய்தது நல்லது என்பாராம்
-அபராதம் சவுக்கடி -விரலை வெட்டி எது வேண்டும் –
விரலை வெட்டிக்கோ என்றானாம் -பணம் கொடுத்தானாம் அப்புறம் -புத்தி இப்படி போக –
தமர் உற்றார் -இது ஒழிய வேறு சிலர் -தமர்கள் தமர்கள் தமர்கள் -திருவாய்மொழி -8-10-9-
ஆழ்வாருக்கு –
சம்சாரிகள் -மேலே விழுந்து
ஏமாறி ஏக்கமாய்
ஏமாற்றம் ஒரு சொலாய் துக்கித்து கிடந்தது
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய்
தெளிவி அழிக்கை பிள்ளை அமுதனார்

ஏமாறி’ என்பதற்கு, ‘ஏங்காதே’ என்றும், ‘துக்கித்து’ என்றும், ‘கலங்கி’
என்றும் மூன்று வகையான பொருள் அருளிச்செய்கிறார்,

ஏமாறிக் கிடந்தது அலற்றும் -பெரியாழ்வார் திருமொழி -2-7-8-
சீலமில்லா சிறியன் -கூப்பிட வைத்தேனே
இவர்கள் கூப்பிடுவது உனது சம்பந்தம் இருக்க செய்தேயும் சம்சாரம் படுத்தும் பாடு
சம்சாரத்தில் இன்னம் வைத்து இருக்க –
இன்னத்துக்கு கூப்பிடுகிறேன் அறியாது
துக்க ஹேது என்னது அறியேன்
எனக்கு நீ தந்த வாசி இவர்களுக்கு சோழ அறிகிலேன்
அரவணையாய் அம்மானே -உனது பேறாக குடல் துவக்கு கொண்டு ரஷணத்துக்கு
யோக நித்தரை செய்து இருக்கும்
மெய்யான குடல் துவக்கு உண்மை சரீரி இரண்டுமே உண்டே
பொய்யும் மெய்யும் ரஷிக்கைக்கு உடலாய் இருக்கும்

சரீரம் பொய் ஆத்மா மெய் சாஸ்திர அர்த்தம் உண்டே

பிராசங்கிகமாக அருளிச்செய்கிறார், ‘இவனுடைய’ என்று தொடங்கி.
‘இவனுடைய பொய்’ என்றது, கிருஷ்ணாவதாரத்தில் பொய்யை. என்றது,
‘ஆயுதம் எடேன்’ என்று கூறி, ஆயுதம் எடுத்தல் போல்வன. ‘இவனுடைய
மெய்’ என்றது, இராமாவதாரத்தில் மெய்யை. என்றது, அபயப் பிரதான
விருத்தாந்தத்தை. இனி, ‘இவனுடைய பொய்யோடு மெய்யோடு’ என்றதற்கு,
‘நாஸ்தி சப்த வாச்சியமான அசித்தோடு, அஸ்தி சப்த வாச்சியமான
ஆத்மவஸ்துவோடு’ என்று பொருள் கோடலுமாம். ஈண்டு, ‘இவனுடைய’
என்பதற்குப் ‘புருஷனுடைய’ என்பது பொருள். ‘இல்லதும் உள்ளதும்’ என்ற
பாசுர வியாக்கியானம் ஈண்டு நினைவு கூர்க. ‘உடலாயிருக்கும்’ என்றதும்
சிலேடை : ‘சரீரமாக இருக்கும்’ என்பதும், ‘காரணமாக இருக்கும்’ என்பதும்
பொருள்.

விபரீத லஷணை சரீரம் மெய் என்கிறோம்
கூமாறே விரை கண்டாய் கிட்டி வந்து கிடக்கிற நீ
நான் உனது திருவடிகளை கிட்ட விரைய வேண்டும்
கண்டாய் -என்னை பார் அனுக்ரகம் செய்யா விடில் பாராய் வடிவை காட்டுகிறார்
பசய சரீராணி என்னுமா போலே
அநாதி காலம் பியில் தரியாதே போன லோக யாத்ரை செல்லாத என்னை அறிந்து
சம்பந்தம் அறிந்து தொடங்கி -உன்னைப் போலே பிறர் துக்கம் சகியாத என்னை –
அவயவம் அனைவரும் என்று உணர்ந்த அடியேனை –
பரார்த்தம் பொறுக்க மாட்டாதவர்
கூமாறு -இவை என்ன உலகு இயற்க்கை வெறுத்து பேசினவர் –

 நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பல்லாண்டு -அவதாரிகை –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

March 30, 2013

பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் -என்றும்
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
சர்வ ஸ்வாமியாகவும் -சர்வ நியந்தாவாகவும் -சர்வேஸ்வரன் ஸ்வரூபத்தை
நிர்ணயித்து -சேதன ஸ்வரூபத்தை
பரவா நஸ்மி என்றும் –
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும் நிரூபித்து
இந்த ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞானமும்
ஜ்ஞான அநுரூபமான வ்ருத்தியும் -ப்ராப்தமாய் இருக்க
அய பிண்டதுக்கு -பழுக்க காய்ச்சின இரும்புக்கு -அக்நி சம்சர்க்கத்தால் வந்த தாதாம்யம் போலே சேதனர்
அசித் ப்ரத்யா சத்தியாலே -தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று அஹங்கரித்து
புத்ர மித்ராதிகள் பக்கலிலே மமதா புத்தியைப் பண்ணி
இப்படி ப்ரவாஹ ரூபேண அஹங்கார மமகாரங்களாலே சர்வேஸ்வர கதமான
ச்வாமித்வ நியந்த்ருத்வங்களை தங்கள் பக்கலிலே அத்யவசித்து
ச்வத ப்ராப்தமான பாரதந்த்ர்யத்தில் விமுகராய் -அத ஏவ சப்தாதி விஷயங்களில் ப்ரவணராய்
அத்தாலே வந்த ராக த்வேஷாதிகளாலே அபிபூதராய் படுகிற துக்க பரம்பரைகளை அனுசந்தித்து
நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் சாசநாஸ் சாஸ்திரம் -என்கிறபடியே
தத்வ ஹிதங்களை அறிந்து நல்வழி போகைக்கு உடலாக சாஸ்த்ரத்தை
ப்ரகாசிப்பித்து அருளினான்-

ஹர்த்துந்தமஸ் சதஸ தீச விவேக்தும் ஈசோமானம் ப்ரதீப மிவ காருணி கோ ததாதி –
என்னக் கடவது இ றே
இந்த சாஸ்திர ப்ரதானமும் வாஸனா தூஷிதம் ஆகையாலே அகிஞ்சித்கரமாக
ஓலைப் புறத்தில் செல்லாத தேசத்திலே எடுத்து விடும் ராஜாக்களைப் போலே
ராம கிருஷ்ண ரூபேண வந்து அவதரித்து -சாசநாச பிதுர் வசன நிர்தேசாத் பரத்வாஜசஸ்ய சாசநாத் என்று
பித்ரு வசன பரிபாலனாதிகளை ஆசரித்து அருளியும்
இளையபெருமாளை யிடுவித்து -வகுத்த விஷயத்தில் சேஷத்வ வ்ருத்தியே இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம்
என்னும் இடத்தை பிரகாசிபித்து அருளியும்
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று கொண்டு இவ்வ்ருத்திக்கு அடியான
பாரதந்த்ர்யத்தை ஸ்ரீ பரத ஆழ்வானை இட்டு பிரகாசிப்பித்தது அருளியும்
இப்பாரதந்த்ர்ய காஷ்டையை -கச்சதா மாதுல  குலம் -பரதேன நீதா -என்று கொண்டு
ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைக் கொண்டு பிரகாசிபித்து அருளியும்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அருளி தூத்ய சாரத்யங்களை ஆசரித்து அருளியும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்று ஸ்ரேஷ்ட சமாசாரம் கர்த்தவ்யம் என்று உபதேசித்து அருளியும்
இப்படி பஹூ பிரகாரத்தாலே ஆத்மாக்களுடைய பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பித்தது
அருளின இடத்திலும் –
பெரியவன் தாழ நின்று ஆசரித்த இம் மஹா குணத்திலே அவஜா நந்தி மாம் மூடா –
என்கிறபடியே அநீச்வரத்வம் ஆகிற தோஷத்தை ஆவிஷ்கரித்து கால் கடை கொள்ளுகையாலே
அவையும் கார்யகரம் ஆய்த்து இல்லை –

இனி நாம் பார்வை வைத்து மிருகம்  பிடிப்பாரைப் போலே சஜாதீய முகத்தாலே சேதனரை-வசீகரிக்க வேண்டும்
என்று பார்த்தருளி பெரியாழ்வாரை அவதரிப்பித்து அருளினான்
இவ்வாழ்வார் சஹஜ தாஸ்யத்தை உடையவர் ஆகையாலே பகவத் விஷயத்திலே
கிஞ்சித் கரித்து
கால ஷேபம் பண்ண வேண்டும் என்று பார்த்தருளி -அதுசெய்யும் இடத்தில்
அவன் உகந்தவையே கர்த்தவ்யம் -என்று அனுசந்தித்து அவதாரங்களை ஆராய்ந்த இடத்தில்
கம்சனுக்கு பணி செய்து போந்த மாலாகாரர் க்ரஹத்திலே எழுந்தருளி பூவை இரந்து
அவன் தான்
ப்ரசாத பரமௌநாதௌ மம கேஹ முபாகதௌ
தன்யோஹம் அரச்ச யிஷ்யாம் ஈத்யாஹ மால்யோப ஜீவன -என்று
உகந்து சூட்டச் சூடின படியை அனுசந்திகையாலே -இவ்விஷயத்துக்கு பூ இடுகை ஒழிய
வேறு கர்த்தவ்யம் இல்லை நமக்கு என்று திருநந்தவனம் செய்கையிலே உத்யோகித்தார் ஒருவர் இ றே

இன்னமும் மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய ஸ்மர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத்  ஸ்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் -அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய்  நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த
பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –
வேதம் என்ன -தத் உப ப்ரஹ்மணம் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன –
இவை போலே அதிக்ர்த அதிகாரமாய் இராது
சர்வ அதிகாரமான திருவாய்மொழியில் உண்டான அருமையும் இதுக்கு இல்லை
அரி அயன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து -என்றும்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும் உபக்ரமம் தொடங்கி உப சம்ஹாரத் தளவும்-செல்ல த்ரிமூர்த்தி சாம்யத்தை அருளிச் செய்கையாலே
மத்யே விரிஞ்சி கிரீசம் ப்ரதம அவதாரம் -என்று ரகு குல சஜாதீயனாகவும் யது குல
சஜாதீயனாகவும் அவதரித்தாப் போலே ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து அவதரிக்கையாலே
வந்த சாம்யம் என்று நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல் –
நீராய் நிலனாய் -என்று தொடங்கி -சிவனாய் அயனாய் -என்று சேதன அசேதன வாசி
சப்தங்களோடு சமாநாதி கரிக்கையாலே சாமாநாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஈச்வரனோடு
சேதன அசேதனங்களுக்கு உண்டான ப்ரதக் ஸ்திதி யுபலப்த்தி இல்லாத சம்பந்தம் என்றே
நிர்வஹிக்க வேண்டும் என்னும் அருமை யாதல் இல்லை -இப்பிரபந்தத்துக்கு

இன்னமும் மகாபாரதம் போலே பெரும் பரப்பாய் -இன்னது சொல்லிற்று -என்று நிர்ணயிக்க
ஒண்ணாது இருக்கும் குறை யும் இன்றிக்கே
பிரணவம் போலே சப்தம் அத்யல்பமாய் -சகல வேதார்தமும் அதுக்கு உள்ளே காண வேண்டி
அது தெரியாதே தேட வேண்டி வரும் அந்த குறையும் இன்றிக்கே
பன்னிரண்டு பாட்டாய் -ஐஸ்வர்ய கைவல்யங்களை நீக்கி உத்தம புருஷார்த்தமான
பகவத் கைங்கர்யத்தை ஸூக்ரஹமாக பிரதிபாதிக்கையாலே இதுக்கு நெடு வாசி உண்டு –
இன்னமும் இப்பிரபந்தம் தன்னை அதிகரித்தவன் கையில் பரத்வத்தை கைப்படுத்த
வல்ல சக்தியை உடைத்தாகையாலே வந்த ஏற்றமும் உண்டு
பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்று இ றே இதுக்கு பலம்
இப்பிரபந்தம் அவதரித்தபடி என் என்னில் –

ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜா தார்மிகன் ஆகையாலே புரோகிதரான
செல்வநம்பியை -புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அத்ர்ஷ்ட ஸித்திக்கு விரகு என் -என்ன
தரமஜ்ஞ்சமய பிரமாணம் என்கிறபடியே -வித்வான்களை திரட்டி வேதார்த்த நிர்ணயத்தை பண்ணி
அவ்வழியாலே புருஷார்த்தத்தை பெற வேணும் -என்று சொல்ல -அவனும் அப்படியே
பஹூ த்ரவ்யத்தை வித்யா சுல்கமாக கட்டி வித்வாக்களை ஆஹ்வானம் பண்ணி செல்லுகிற அளவிலே
வட பெரும் கோயில் உடையான் ஆழ்வாரை விடுவித்து லோகத்திலே வேத தாத்பர்யத்தை
பிரகாசிப்பிக்கைகாக -நீர் போய் கிழியை அறுத்து கொண்டு வாரும் -என்று அருளிச் செய்ய –
அது வித்யா சுல்கமாக நிர்மித்தது ஓன்று அன்றோ
கையிலே கொட்டுத் தழும்பைக் காட்டி கிழியை அறுக்கலாமோ -என்ன
அது உமக்கு பரமோ -நாம் அன்றோ வேதார்த்த பிரதிபாதனத்துக்கு கடவோம் -என்று ஆழ்வாரை
நிர்பந்தித்து அருள -ஆழ்வரும் பாண்டிய வித்வத்  கோஷ்டியிலே எழுந்து அருளின அளவிலே

செல்வ நம்பியும் ராஜாவும் அப்யுத்தாந  ப்ரணாம பூர்வகமாக பஹூமானம் பண்ண –
அத்தைக் கண்ட வித்வான்கள் ராஜாவை அதிஷேபிக்க -அவ்வளவிலே செல்வ நம்பி
ஆழ்வாரை தெண்டன் இட்டு
வேதாதந்த தாத்பர்யமான புருஷார்த்தத்தை அருளிச் செய்யலாகாதோ என்ன -ஆழ்வாரும்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்ப்ரபச்யதி -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் சர்வ அர்த்தங்களையும்
சாஷாத் கரித்தால் போலேயும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஸ்பர்ச்தத்தாலே த்ருவன்
சர்வஞ்ஞனாப் போலேயும் -பகவத் ப்ரசாதத்தாலே சகல வேதார்த்த அர்த்தங்களையும்
சாஷாத் கரித்து வேதாந்த தாத்பர்யமான அர்த்தத்தை பிரதிபாதித்து அருள -அதிஷேபித்த
வித்வான்களோடு அனுவர்த்தித்த ராஜாவோடு வாசி யற சர்வரும் விஸ்மிதராய் -அநந்தரம்
இவரை யானையிலே ஏற்றி -ராஜா சபரிகரனாய் சேவித்துக் கொண்டு -நகரி வலம் வருகிற மகா-உத்சவத்தை காண்கைக்காக -புத்ரர்களை ப்ரஹ்மரதம் பண்ணும் சமயத்தில் மாதா பிதாக்கள்
காண ஆதரித்து வருமா போலே -பிராட்டியோடே கூட சபரிகரனாய் கொண்டு -ஈஸ்வரன்
சந்நிஹிதனாக -தத்பரிகர பூதரான ப்ரஹ்மாதி தேவதைகளும் ஆகாசத்திலே
நெருங்கி நிற்கிற வித்தை சாஷாத் கரித்த ஆழ்வார் ஸ்வ ஸ்மர்த்தியைக் கண்டு
இறுமாவாதே -பகவத் ப்ரசாதத்தாலே நிரவதிக பக்தியை பெற்று -அவனுடைய
சர்வஞ்ஞத்வ -சர்வ சக்தித்வ -சர்வ ரஷகத்வாதிகளை -அனுசந்திப்பதற்கு முன்னே
முகப்பில் உண்டான –சௌந்தர்ய சௌகுமார்யங்களைக் கண்டு

கால அதீதமான தேசத்திலே இருக்கிற வஸ்து காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற
தேசத்திலே சஷூர் விஷயமாவதே -இவ் வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ
என்னும் அதி சங்கையாலே -ஆனை மேல் கிடந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு
இந்த சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு தீங்கு வாராதே நித்யமாக செல்ல வேணும்
என்று திருப்பல்லாண்டு பாடுகிறார் –
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே ஒன்றால் ஒரு குறை இன்றிக்கே சர்வ நியந்தாவுமான
ஈஸ்வரனைக் கண்டால் தம்முடைய மங்களங்களை ஆஸாசிக்கை அசந்கதம் அன்றோ என்னில் –
முகப்பிலே சஷூர் விஷயமான சௌந்தர்யாதிகளிலே -பகவத் பிரசாத லப்தமான
பக்தி பரவசராய் கொண்டு அழுந்தி -அவனுடைய சர்வ ரஷகத்வ சர்வ சக்தித்வத்தையும் -ஸ்வ ஸ்ம்ர்தியையும் மறைக்கையாலே -பகவத் ஸ்ம்ர்தியே தமக்கு ஸ்ம்ர்தியாகக் கொண்டு-மங்களா சாசனம் பண்ணுகை ஸங்கதம் –
பகவத் ப்ரேமம் தான் தத் ப்ராப்திக்கு ஹேதுவாதல் தத் அனுபவத்துக்கு பரிகரம் ஆதல்
ஆகை  ஒழிய அறிவுகேட்டை பண்ணும் என்னும் இடத்தில் ப்ரமாணம் என் என்னில் –

அது சிஷ்டாசார சித்தம் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண்யஸ் ச ஸாயம் ப்ராதஸ் சமாஹிதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தே யசச்விந -என்று
திவாராத்ரி விபாகம் அற -தேவதைகளை ரஷித்து புகழ் படைத்தது போந்த சக்கரவர்த்தி திருமகனுடைய
சௌந்தர்யாதி குணங்களுக்கு ரஷகமாக அயோத்யாவாசி ஜனங்கள் பெருமாளால்
தங்களுக்கு வரும் ச்ம்ர்தியை மறந்து தேவதைகளின் காலில் விழுந்தார்கள் இ றே
பிராட்டியை திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க ஸ்ரீ பரசுராம ஆழ்வான்
வந்து தோன்றின அளவிலே -தாடக தாடகேயருடைய நிரசனங்களைக் கேட்டு இருக்கச்
செய்தேயும் அஞ்சி -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் தம் ப்ராஹ்மணஸ் ச மஹா யசா –
பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு -அவன் தோற்று மீண்டு போனான்
என்று கேட்ட பின்பு -புநர் ஜாதம் ததாமேந ஸூ தாநாத்மா நமேவச -என்கிறபடியே
தானும் பிள்ளைகளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருந்தான் இ றே சக்கரவர்த்தியும் –

ஸ்ரீ கௌசல்யை யாறும்-யன் மங்களம் ஸூபர்ணச்ய விநதா கல்பயத் புரா –
அம்ர்த்தம் ப்ரார்த்தயா நஸ்ய தத்தே பவது மங்களம் -என்று
விஸ்வாமித்ர த்வத்ராணாதிகளால் வந்த ஆண் பிள்ளைத் தனத்தை விஸ்மரித்து
மங்களா சாசனம் பண்ணினாள் இ றே
ஸ்ரீ தண்ட காரண்ய வாஸி ஜனங்களும் -தேதம் ஸோமமி வோத்யந்தம த்ருஷ்ட்வா வைதர்ம சாரிணா-மங்களா நிப்ர யுஜ்ஞ்ஞானா ப்ரத்யக் ருஹ்ணந த்ருட வ்ரதா -என்று தங்கள் ஆபன நிவ்ருத்திக்கும்
அபிமத ஸித்திக்கும் இவரை ரஷகர் என்றே சாதன அனுஷ்டானம் பண்ணுகிறவர்கள்
இவர் சந்நிஹிதர் ஆனவாறே அவற்றை மறந்து -இவர் வடிவு அழகிலே துவக்குண்டு
மங்களா சாசனம் பண்ணினார்கள் இ றே
கர்ம ஸ்பர்சம் இன்றிக்கே தலை நீர்ப்பாட்டிலே இவர் ஏற்றம் எல்லாம் அறியும் பிராட்டி
இவர் அழகிலே தோற்று –
பதி சம மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அனுவராஜ மங்களா நய பிதத் யுஷி-என்று தொடங்கி -பூர்வாம் திசம் வஜ்ரதர -என்று திக்பாலர்களை இவருக்கு ரஷகராக அபேஷித்தாள் இ றே
இன்னமும் -ஜாதோசி தேவதே வேச சங்கு சக்ர கதாதர -திவ்யம் ரூபமிதம் தேவப்ரசாதே
நோப சம்ஹர -என்று -அயர்வறும் அமரர்கள் அதிபதி அவ்வடிவோடே வந்து -அவதரித்தான்
என்று இவனுடைய பெருமையை அறிந்து இருந்த தசையிலும் -கம்ஸ பயத்தாலே –
இவ்வடிவை உப சம்ஹரிக்க வேண்டும் -என்றார் இ றே ஸ்ரீ வசுதேவர்
உப சம்ஹர சர்வாத்மான் ரூபமே தச் சதுர்புஜம்
ஜாநாதுமா வதாரனதே கம்சோயம் திதி ஜந்ம -என்று சர்வாத்மா -என்று சர்வ அந்தர்யாமி -என்றும்
ஏதச் சதுர்புஜம் -என்று அவனுடைய அசாதார விக்ரஹம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கம்ஸ பயத்தாலே -இவ்வடிவை உப சம்ஹரிக்க  வேணும் -என்றாள் இ றே தேவகிப் பிராட்டியும்

இவ்வர்த்தம் லோக பிரசித்தமும் -அநேக காலம் தபஸ் பண்ணி பெற்று ப்ரதமஜனாய்
அதி சுந்தரனான புத்திரன் அளவிலே ஒரு விரோதம் இன்றிகே இருக்கச் செய்தேயும்
செல்ல நின்றதும் வர நின்றதும் ப்ரேம அந்த்யத்தாலே பய ஹேதுவாக கடவது இ றே
மாதாவுக்கு –
தன்  கைக்கு அடங்காத விற்பிடி மாணிக்கத்தை பெற்றவன் அது ஷூர ஷிதமாய்
இருக்கச் செய்தேயும் -அதுக்கு என்ன விரோதம் வருகிறதோ என்று காற்று அசங்கிலும்
பயப்படா நிற்கும் இ றே -அல்ப தேஜஸ் ஸு க்களான சந்திர ஆதித்யர்கள் உடைய சன்னதியிலே-அச்சித்தான பாஷாணங்கள் உருகா நின்றன
பரஞ்யோதி ரூபசம்பத்ய -என்றும் பரம் ஜோதி நீ பரமாய் -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய சௌந்தர்ய யுக்தனாய் நிரவதிக தேஜோ ரூபமான எம்பெருமானைக் கண்டால்
பரம சேதனரான ஆழ்வார் கலங்க சொல்ல வேணுமோ -ஆகையாலே
ராவணாதி ராஷச துர் வர்க்க மயமாய் -காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற தேசத்திலே –
இவ் விலஷண விஷயத்தை கண்டு அருளி -இவ் விஷயத்துக்கு எவ் வழியில்
தீங்கு வருகிறதோ -என்று பயப்பட்டு தத் பரிஹார அர்த்தமாக திருப் பல்லாண்டு பாடுகிறார்

ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உள்ளபடி அறிந்து இருக்கிற இவர் -ரஷ்ய ரஷக
பாவத்தை மாறாடி பிரதிபத்தி பண்ணுகை விபரீத ஞானம் அன்றோ என்னில்
கர்ம நிபந்தனமான விபரீத ஞானம் ஆய்த்து த்யாஜ்யம் -விஷய வை லஷண்யம் அடியாக
வந்தது ஆகையாலே அவ்  வைலஷண்யம் உள்ள அளவும் அனுவர்த்திகையாலே
ஸ்வரூப ப்ராப்தமாக கடவது –
இன்னமும் சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை
சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை
சைதன்ய க்ர்த்யம் -அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும்
ஸ்வாமிக்கு ச்ம்ர்த்தியை ஆசாசிக்கை இ றே
வேதாந்த தாத்பர்யம் இ றே இத் திருப் பல்லாண்டில் பிரதிபாதிகப் படுகிறது

இப்பிரபந்தத்திலே முன்னிரண்டு பாட்டாலே -தாம் மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே -மேல் மூன்று பாட்டாலே -3/4/5-மங்களா சாசனம்-பண்ணுகைக்கு
பகவத் சரணார்த்தி களையும் -3
கேவலரையும் -4
ஐஸ்வர்யார்த்திகளையும் -அழைக்கிறார்-5
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே –6/7/8-ஆஹூதர் ஆனவர்கள் -அழைக்கப் பட்டவர்கள் -இவரோடே சங்கதர் ஆகிறார்கள்
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே-9/10/11-அவர்களோடே திருப் பல்லாண்டு பாடி அருளுகிறார்-
மேலிற் பாட்டு-12-பல ச்ருதி

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 30, 2013

ஒன்பதாம்திருவாய்மொழி – ‘நண்ணாதார்’

முன்னுரை

    ஈடு :  1‘உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ‘ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு வேண்டுமாகில் அதனைத் தந்தருளவேண்டும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 2இந்த அமங்கள வார்த்தையைத் திருமுன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. 3எம்பார், ‘உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்; இதனைத் தவிர்த்தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச்செய்வர். 4‘கதையைக் கையிலேயுடையவனாய் நான்கு மந்திரிகளோடு

உயர எழுந்தான்,’ என்கிறபடியே, இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று. இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலைநின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்றதன்றோ?

    1அங்ஙன் அன்றிக்கே, ‘ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய்மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டு ஆவார் உளரோ என்று உலகத்தாருடைய செயல்களை ஆராய்ந்து மக்களைப் பார்த்தார்; அவர்கள், தாம் சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய் அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாபமாம்படி இருந்தார்கள்; அதனைக் கண்டவாறே 2வாளேறுகாணத் தேளேறு மாய்ந்தாற்போலே, தம் இழவை மறந்தார்; இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது; 3சர்வேசுவரனைப் பார்த்தார்; அவன் முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்

பரம வள்ளலாய் எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய் எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.

    அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் 1‘தன்னரசு நாடோ?’ என்று பார்த்து, 2 ‘நீ சர்வேசுவரனாய்ப் பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய் இவற்றின் துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க, இவை இங்ஙனம் கிடந்து நோவுபடுகை போருமோ? இவற்றைக் கரைமரம் சேர்க்கவேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க, ‘நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே? நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே? புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது? அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியங் கொள்ளுகிறோம் அல்லோமே? இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு நாம் பார்த்து வைத்த 3வழிகளையடையத் தப்பின பின்பு நம்மாற்செய்யலாவது இல்லைகாணும்; நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.அதனைக் கேட்ட இவர், ‘நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தையடைந்தேனாவது 1‘இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவுபடுகின்றார்கள்’ என்று உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன, ‘இவர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று 2நம்மை ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து,’ ‘உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன, ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் 3தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்; நாமும் ஆகுந்தனையும் பார்த்து முடியாமைகாணும் கைவாங்கியது; இனி நம்மாற்செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.

    ‘ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும் 4என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘முன்பே உம்மை வாங்கினோமே! 5சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில், இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு

தோன்ற இருக்கும் 1இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் பேற்றுக்குக் 2குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன, 3இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக்கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.

    4ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடாநிற்க, ‘இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.

421

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.

    பொ-ரை : ‘பகைவர் மகிழ்ச்சி கொள்ளவும் சிறந்த உறவினர்கள் மனங்கரைந்து வருந்தவும் எண்ணுவதற்கு அமையாத துன்பத்தை உண்டாக்குகின்ற இவை என்ன உலகத்தின் தன்மை! கிருபையையுடையவனே! திருப்பாற்கடலைக் கடைந்தவனே! உன் திருவடிகளுக்கே

நான் வரும்படி காலம் நீட்டியாமல் அடியேனைச் சாகுமாறு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ‘முறுவலிப்ப ஏங்கத் துயர் விளைக்கும் உலகு’ என்க. ‘உலகு இயற்கை இவை என்ன?’ என்க. என்ன – எத்தன்மையவாய் இருக்கின்றன? அன்றிக்கே, ‘என்னே!’ எனலுமாம். ‘வரும் பரிசு பணி கண்டாய்’ என்க. கண்டாய் – முன்னிலையசைச்சொல். சாமாறு – உடலை விட்டு உயிர் பிரியும் வழியை. தண்ணாவாது – காலம் நீட்டியாமல்.

    இத்திருவாய்மொழி, தரவு கொச்சகக் கலிப்பா.

    ஈடு : முதற்பாட்டு. 1‘உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும் நான் உன் திருவடிகளிலே வந்து கிட்டும்படி எனக்கு இச்சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’ என்கிறார்.

    நண்ணாதார் முறுவலிப்ப – 2ஒருவனுக்கு ஒரு கேடு வந்தவாறே, அற்றைக்கு முன்பு வெற்றிலை தின்று அறியார்களேயாகிலும், அன்றைய தினத்திலே ஒரு வெற்றிலை தேடித் தின்பது, ஓர் உடுப்பு வாங்கி உடுப்பது, சிரிப்பது ஆகாநிற்பர்கள் ஆயிற்று. நண்ணாதார் – பகைவர். 3பிறர் கேடு கண்டு சிலர் உகக்கும்படியாவதே! இஃது என்ன ஆச்சரியந்தான்! 4அருச்சுனன், ‘என் பரகு பரகு கெடுவது என்று?’ என்ன, ‘எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதனாய் இருக்கிற என்னை!’ என்கிறபடியே, ‘நான் எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதன்,’ என்று அறிந்தவாறே நீயும் என்னைப் போன்று என் விபூதிக்குப் பரியத்தேடுவுதிகாண்,’ என்றானே அன்றோ?நல் உற்றார் – சர்வேசுவரனே காரணம் பற்றாத உறவாய் அவனைப் பற்றினவர்களையே 1‘அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன் அவன் தமரே,’ என்று, அவர்களை 2‘ஒருகாலும் பிரிகிலேன்’ என்றிருத்தல் தகுதியாக இருக்க, சரீரசம்பந்தம் காரணமாக வருகின்றவர்களைக் காரணம் பற்றாத உறவினர்களாக நினைத்து, அவர்களுக்கு ஒன்று வந்தவாறே, 3‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்,’ என்று இவர் பகவத் விஷயத்தை நினைத்தல் சொல்லுதல் செய்யப்புக்கால், படுவன எல்லாம் படாநிற்பர்களாயிற்று. ‘கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற இரண்டனையுமேயன்றோ? 4‘எல்லா ஆத்துமாக்களையும் சரீரமாகவுடைய கோபாலனிடத்தில் பகைவன் நட்டோன் என்கிற தன்மை ஏது?’ என்றது, 5‘ஆசையையும் துவேஷத்தையும் பற்றி வருகையாலே, நட்புத் தன்மையோடு பகைத்தன்மையோடு வாசி இல்லை. 6‘சுகம் துக்கம் என்கிற பெயரையுடைய இரண்டால் விடப்பட்டவர்கள்’ என்கிறபடியே, ‘சுக துக்கங்கள்’ என்று சில பெயர் மாத்திரமேயன்றே உள்ளன? உண்மையை

நோக்குங்கால், இரண்டும் துக்கமாய் அன்றோ இருப்பன? ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.

    1‘ஸ்ரீராமபிரானையே நினைத்தவர்களாய் ஒருவருக்கு ஒருவர் நலியவில்லை,’ என்கிறபடியே, திருவயோத்தியையில் உள்ளார், ஒருவரை ஒருவர் வேரோடே வாங்கிப் போகட வேண்டும்படியான பகைமை தொடர்ந்து நிற்கச் செய்தேயும் எல்லாரும் ஒரு மிடறாக விரும்பினார்கள்; ‘அதற்கு அடி என்?’ என்னில், பகைமை நெஞ்சிலே பட்டு அவர்களை நலிய நினைத்த போதாகப் பெருமாளை நினைப்பார்கள்; ‘அவர் முகம் சுளியும்’ என்னுமதனாலே அதன் காரியம் பிறக்கப் பெற்றது இல்லை.

    எண் ஆராத் துயர் விளைக்கும் – முறுவலிக்கிறதும், கரைந்தேங்குகிறதும் இரண்டு துயராய்த் தோற்றுகிறதாயிற்று இவர்க்கு. அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று இருப்பது; அதனால் ‘எண் ஆரா’ என்கிறார். பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.  2‘இராச்சியத்தினின்று  நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட

எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

    2‘சர்வேசுவரன் பெரிய பிராட்டியாரோடு பரிமாறும் போது மற்றுள்ள பிராட்டிமார் மலர் சந்தனம் முதலியவைகளைப் போன்று இன்பத்திற்கு உறுப்பான பொருள்களின் கோடியிலே சேர்ந்திருப்பார்கள்; மற்றைப்பிராட்டிமார்களோடு பரிமாறும் போது பெரிய பிராட்டியார் தம்மோடு பரிமாறுவதைப் போன்றே நினைத்து மகிழாநிற்பார்;’ 3‘திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால், திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்?’ என்கிறபடியே, அவர்களோடு இவன் பரிமாறும்போது பிராட்டிக்கே அற்றானாய் இருக்கும்; அதற்கு அடி, அதனால் பிறக்கும் முகமலர்ச்சி

அவள் பக்கல் காண்கையாலே. 1உயர் குணங்கள் பல பொருந்தியிருந்த ஸ்ரீ கௌசல்யையார் தமக்கு என ஒரு தன்மை இன்றிக் காலந்தோறும் காலந்தோறும் சக்கரவர்த்தியின் நினைவுக்குத் தகுதியாக மற்றைய மனைவிமார்களுக்கு விரோதவுணர்ச்சி தோன்றாதவாறு பரிமாறிப் போந்தாரே அன்றோ? இவை என்ன உலகு இயற்கை – 2உன்னை ஒழியப் புறம்பேயும் இந்த உலகப்பேறு இழவு ஆம்படி இது ஒரு உலக ஒழுக்கினை நீ பண்ணி வைத்தபடி என்? பிரானே! ‘நாம் பண்ணுகையாவது என்? இவர்கள் தாங்கள் செய்த கர்மங்களினுடைய பலம் தொடர்ந்து வருகிறது இத்தனையன்றோ? நம்மால் வந்தது அன்றுகாணும்,’ என்று பகவானுடைய அபிப்பிராயமாக, அருளிச்செய்கிறார் மேல் :

    3கண்ணாளா – இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில், உன் கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே? கண்ணாளன் – அருளை உடையவன். அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’ என்னக்கடவதன்றோ? அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை ஆளுகின்றவனே!’ என்னுதல். அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது, ‘நீ நிர்வாஹகனாய் இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல். கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர். ‘தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே அனுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் மேல் : கடல் கடைந்தாய் – ‘தூர்வாச முனிவரது சாபத்தால் வந்த கேட்டினைத் தப்புகைக்கு வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்கும் அரியன செய்து உதவுமவன் அன்றோ?’ என்கிறார். ‘நன்று; அவர்களுக்கு இச்சை உண்டு; இச்சை இல்லாதவர்களுக்கு நம்மாற்செய்யலாவது உண்டோ?’ என்ன, ‘ஆகில், இவர்கள் நடுவே இராதபடி என்னை உன் திருவடிகளிலே வரும்படி செய்ய வேண்டும்,’ என்கிறார் மேல் :

    உன கழற்கே வரும் பரிசு – 1விலக்கடிகளில் போகாமல், வகுத்ததுமாய் இனியதுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவது ஒரு வகை. இவர்க்குக் 2காற்கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈசுவரன். தண்ணாவாது – தாழாது; தண்ணாக்கை – தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது; செய்துகொடு நிற்க வேண்டும்,’ என்றபடி. ‘நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன, ‘அடியேனை’ என்கிறார்; என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி. பணிகண்டாய் சாமாறே – பணிக்கை -சொல்லுகை; 3சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது? அன்றிக்கே, 4‘சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.

    அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல். ‘நன்று; பிரபந்த ஜனகூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று 5இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில், 6‘கண்ணபிரானுடைய தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு சகவாசம்செய்தலாகிற பெருந்துன்பத்தைக் காட்டிலும் நெருப்பினுடைய சுவாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே, இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது, ‘காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது? பின்பே அன்றோ இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது? அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்கவேண்டும் என்கிறார்,’ என்றபடி. 

ஆத்ம ஆத்மதீயங்கள் வேண்டாம் என்றார் கீழே
உடம்பு உயிர் வேண்டாம் உபேஷித்து –
வேண்டாம் என்றால் தவிராதே -பெறுவதருக்கும் முடிகைக்கும் அவன் அனுக்ரகம் வேண்டுமே –
சம்ஸாரம் விரும்பாதே -வெறுப்பு அமங்கள வார்த்தை சாமாறு பணி கண்டாய் சொல்லும்படி –
இரண்டு நிர்வாஹம்
எம்பார் உன்னை பிரிந்து கிலேசம் போலே இல்லை சம்ஸாரத்தில் இருக்கும் இருப்பு
பொறுக்க முடியாதது
இரண்டாம் பிரிவை விட முதல் பிரிவு துக்கம் அதிகம் ராஷசிகள் உடன் இருந்ததால்

இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க -இவர்கள் நடுவில் வைத்து இருக்கிறாயே கதறுகிறார்

‘பகவானிடத்தில் விருப்பமில்லாதாரோடு சேர்ந்திருத்தலாகாது,’ என்பதற்கு
உதாஹரணம் காட்டுகிறார், ‘கதையை’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத்.
16 : 16. ‘எழுந்தான்’ என்றது, ஸ்ரீ விபீஷணாழ்வானை.

  ‘என்றலும் இளவலும் எழுந்து வானிடைச்
சென்றனன்’

  ‘அனலனும் அனிலனும் அரன்சம் பாதியும்
வினைவலர் நால்வரும் விரைவின் வந்தனர்
கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்
இனைவரும் வீடண னோடு மேயினார்.’

  என்றார் கம்பநாட்டாழ்வாரும்.

மேலே எழுந்து -நெருப்பு பட்ட இடத்தில் கால் வைக்க முடியாமல் அடி கொதித்து
கதா பாணி -ஹனுமான் ஆயுதம் எதற்கு -விபீஷணன் கொடுத்ததாம் -சதாபிஷேக ஸ்வாமி
அங்கு உள்ளாரில் -தண்டம் சமர்பிக்கும் ஓன்று இது தானே -ந நமேயம் என்றது
அதையும் எடுத்து தோளில் வைக்க
நான்கு பேர் இதுவும் வேண்டாதார் தானே
தாமே அப்புறப் படுத்திக் கொள்ள  ஆசைப் படுகிறார்
உன்னை விட்டு பிரிந்த இலவை விட இது அதிக துக்கம் -எம்பார்
கூரத் ஆழ்வான் -உலகத்தாரை திருத்தப் பார்க்கிறார் -பிறர் அநர்த்தம் கண்டு பொறுக்க முடியாமல் –

இரண்டாவது ஆழ்வான் நிர்வாஹம் : ‘ஆழ்வான் நிர்வாஹத்துக்குக் கருத்து,
‘கண்ணாளா! கடல் கடைந்தாய்!’ என்று அவன் குணங்களையும் சொல்லி,
‘நண்ணாதார் முறுவலிப்ப’ என்று சமுசாரிகளுடைய இழவையும் அநுசந்தித்து,
‘இவை என்ன உலகியற்கை?’ என்று, ‘நீ இப்படிக் குணாதிகனாயிருக்க
இவர்கள் யாத்திரை இருந்தபடி என்!’ என்று விண்ணப்பம் செய்ய, அவனும்,
‘இதனை விட்டு உம்முடைய பலத்தை நீர் கண்டுகொள்ளும்’ என்று
அருளிச்செய்ய, ‘ஆனால் இவர்களோடு சேர்ந்திருத்தல் தகாத காரியம்;
இவர்கள் நடுவில் இராதபடி திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருளவேணும்,’
என்று பிரார்த்திக்கிறார்,’ என்பது. இவர் நிர்வாஹத்தில், ‘கண்ணாளா! கடல்
கடைந்தாய்!’ என்பன போன்ற குண அநுசந்தானங்கள் எல்லாம்
பிறர்பொருட்டு எனக் கொள்க. ஆழ்வான் நிர்வாஹத்தை அருளிச்செய்கிறார்,
‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி. ஆழ்வான் – கூரத்தாழ்வான்.

இவர்கள் துக்கம் நெஞ்சில் பட -சர்வேஸ்வரனை பார்த்து

நெஞ்சிலே பட்டால். அவர்களுக்கு ஹிதம் அருளிச்செய்யலாகாதோ?’
என்ன, ‘சர்வேசுவரனை’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘ஆமாறு ஒன்றறியேன்
நான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘அவன் முற்றறிவினன்’ என்றும்,
(தம்மை ‘ஆமாறு ஒன்று அறியேன்’ எனின், அவன் முற்றறிவினன் என்பது
தானே போதருமன்றோ?’) ‘கடல் கடைந்தாய்’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி ‘அளவிலாத ஆற்றலையுடையவனாய்’ என்றும், ‘வள்ளலே’
என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பரம வள்ளலாய்’ என்றும்,
‘அரவணையாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாருடைய
பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய்’ என்றும், ‘வினையேனை
உனக்கு அடிமை அறக் கொண்டாய்,’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய்’ என்றும், ‘கண்ணாளா!’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாரையும் நியமிக்கின்றவனாய்’ என்றும்
அருளிச்செய்கிறார்.

பாம்பு வாயில் தவளை கண்டு மோகித்து -துக்கம் தாளாமல் மயங்கி விழ -கூரத் ஆழ்வான் –
ஏறாளும் இறையோன் -ஆற்றாமை -இது போல் இருக்கும் கூட்டாள் உண்டோ பார்க்க –
வாளேறு -தேளேறு கண்டு தம்முடைய இழவை மறந்து –
சர்வேஸ்வரன் -பார்த்து –ஸ்வா பாவம் நினைத்து பார்த்து சக்தன் ஞானவான் குணவான்
வள்ளல் -ரஷணத்தில் தீஷித்து இருப்பவன் -அபராத சஹன் -சர்வ நியந்தா -பிராப்தன்
அவன் படி இப்படி இருக்க நோவு பட இது தன்னரசு நாடா -கரை மரம் சேர்க்க வேண்டும் –
அவன் -இவர்களுக்கு ருசி உண்டாக வேண்டாமோ -சேதனர்கள் தானே -என்ன –
ருசி இன்றி அனுக்ரகம் செய்தல் அவர்களுக்கும் எனக்கும் ரசிகாதே –
புருஷார்த்தம் -புருஷன் அர்த்திக்க பட வேண்டுமே

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘அம்மானே!’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘நீ சர்வேசுவரனாய்’ என்றும், ‘கண்ணாளா!’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றிப் ‘பேரருட்கடலாய்’ என்றும், ( கண்-அருள்) ‘அம்மானே!’
என்றதனையே திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனுமாய்’ என்றும்
அருளிச்செய்கிறார்.

ருசி பிறக்க நாம் செய்த வழிகள் -அனைத்தும் தப்பி –
உண்டது உருகாட்டாதே -கர்ம ஞான பக்திகளைக் கொடுத்து –
ஏதேனும் பற்ற நீங்க வழி கண்டு பிடித்து -வ்ரதம் கொண்டு -படைத்தல் அவதாரங்கள்
நீ சொன்னது -பரிஹர்ரம் இல்லையே
அத்தனைக்கும் நீ ஆதீனம் ருசி நீயே உண்டாக்கலாமே -நான் சமாதானம் அடைய முடியாதே
இவர்கள் சேதனர் ஆகையால் -நம்மை ஒரு தட்டிலும் சப்தாதி விஷயங்கள் ஒரு தட்டில்
அது தாழ்ந்து இருப்பதாலே அதை பற்றி –

சமுசாரிகள் நினைவாலே ‘தாழ்ந்திருக்கையாலே’ என்கிறார். அன்றிக்கே,
‘இரத்தினத்தோடே பெரிய கல்லை வைத்து நிறுத்தால், கல் வைத்த தட்டுத்
தாழினும், அத்தாழ்வாலே அக்கல்லிற்கு ஓர் உயர்வு இல்லையாமேயன்றோ?
அது போன்றது,‘ என்று கோடலுமாம்.

ஆந்தனையும் பார்த்து முடியாமல் கை வாங்கினேன் என்றானாம்
இவர்கள் நடுவே வைக்காமல் அப்புறப் படுத்த
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை அன்றே பண்ணினேன் என்ன
பெரிய பிராட்டியார் தாமும் -ஒண் டோடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க

காட்டிக் கொடுத்து அங்கெ உம்முடைய நெஞ்சு போகும்படி
செய்த பின் செய்ய வேண்டுவது என்ன –

ஆழ்வாருடைய பேரருளைக் குறிக்கின்ற இந்நிர்வாஹம், பரம தயாளுவான
ஆழ்வான் தன்மைக்குச் சேரும் என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்,
‘ஆழ்வான்’ என்று தொடங்கி. 

      இவ்விடத்தில், ‘ஆழ்வாருக்கு மூன்று விதமான துன்பங்கள் உண்டு,’
என்று அருளிச்செய்வர் பெரியோர்: பிரகிருதி சம்பந்தமான துன்பம், ‘முந்நீர்
ஞாலம்’ என்ற திருவாய்மொழியிலே; பகவானைப் பிரிந்ததனால் உண்டான
துன்பம், ‘சீலமில்லா’ என்ற திருவாய்மொழியிலே; சமுசாரிகள் இழவைக்
கண்டு வாடும் துன்பம், இத் திருவாய்மொழியிலே.

ஆழ்வாருடைய பேரருளைக் குறிக்கின்ற இந்நிர்வாஹம், பரம தயாளுவான
ஆழ்வான் தன்மைக்குச் சேரும் என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்,

பாம்பால் பிடிக்கப் பட்ட தவளை கூப்பிட இது யார் அறிய கூப்பிடுகிறது என்றாராம் கூரத் ஆழ்வான்

நண்ணாதார் முறுவலிப்ப -வேண்டாதார் சிரிக்க
நல்லுற்றார் கரைந்து ஏங்க -வேண்டியவர் ஏங்கும்படி
எண்ண முடியாத துயர்கள் -விளைக்கும் உலகு இயற்க்கை
கண்ணாளா நிர்வாஹனே
சமுத்ரம் கடைந்தவனே
உனது திருவடி அடைவேன் அறிவேன் சீக்கிரம் கூட்டிக் கொள்
இப்படியும் லோகத்தில் இருப்பார்களா
சுக்ருதம் சர்வ பூதானாம் -நீ இருக்க -நீ எனது விபூதிக்கு பரிய தேடுவுதி காண்
ஜகமே அவன் சரீரம் -அவயவம் அனைத்தும் -ஓன்று வேறு ஒன்றை விரோதிக்குமோ –
உடுக்கை -இடுக்கண் களைவதே நட்பு திருக்குறள் போலே

சத்ருக்கள் அநர்த்தம் கண்டு வெற்றிலை வாங்கி -புது உடுப்பு உடுத்து சந்தோஷிக்க –
நல்லுற்றார் -கரைந்து ஏங்க -சர்வேஸ்வரனே உற்றார் அறியாமல் -சரீர சம்பந்தம்
பந்துக்களை கண்டால் பாம்பை கண்டது போலே இருக்க வேண்டுமே
அவன் தமர் பாப யோனியில் பிறந்தவர் ஆகிலும் உற்றாராக கொள்ளுவது இருக்க

‘அவன்தமர் எவ்வினைய ராகிலும் எங்கோன்
அவன்தமரே என்றொழிவ தல்லால் – நமன்தமரால்
ஆராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.’-(முதல் திருவந். 55.)

 

2. ‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே,’ என்பது
  பெரிய திருமொழி.   

உற்றாருக்கு ஓன்று வந்தால் நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்,’-திருவாய்மொழி, 9. 6 : 2.

என்று இவர் பகவத் விஷயத்தை நினைத்தல் சொல்லுதல் செய்யப்புக்கால், படுவன எல்லாம் படாநிற்பர்களாயிற்று.

பிரகலாதன் வார்த்தை -எல்லாருக்கும் ஆத்மா நண்பன் விரோதி எனபது இல்லையே
கரைந்து எங்க முறுவலிப்ப -எப்படி ராக த்வேஷம் இரண்டும் கூடாதே –

பகைமைதான் கூடாது; இரங்குதல் நல்லதேயன்றோ?’ என்ன, ‘இரண்டும்
தியாஜ்யமேயாம்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘எல்லா
ஆத்துமாக்களையும்’ என்று தொடங்கி, இது, ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 31.
இரணியனைப் பார்த்துப் பிரஹ்லாதாழ்வான் கூறியது.

சுகம் துக்கம் இரண்டுமே த்யாஜ்யம்

கோலம் கொள் ஸ்வர்க்கம் யானே என்னும்
நரகமும் ஸ்வர்க்கமும் த்யாஜ்யம்

‘வேற்றுமை இல்லை என்னலாமோ? நட்பு உத்தேஸ்யம் அன்றோ?’ என்ன,
‘சுகம் அநுகூலமாயிருக்க, துக்கத்தைப் போன்று, அதுவும் தியாஜ்யம்
என்னாநின்றதேயன்றோ?’ என்று அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘சுகம்
துக்கம்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ கீதை, 15 : 5. இங்கு, ‘இருள்சேர்
இருவினையும் சேரா’ என்ற திருக்குறளின் பொருளினை நினைவு கூர்தல்தகும்.

அயோத்யையில் விரோதம் இருந்தாலும் ஒரு மிடறாக பிரார்த்தித்து பெருமாளை நினைக்க

ராமன் முகம் சுளியும் என்று

‘எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதன் சர்வேசுவரன்’ என்று அறிந்து
துவேஷத்தை விட்ட பேர் உளரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘ஸ்ரீ ராமபிரானையே’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
யுத். 131 : 95.

சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியார் உடன் பரிமாறும் பொழுது -மற்றைய பிராட்டிமார்
புஷ்பம் சந்தனம் போல -இருப்பர்கள் –
நம்முடன் அவன் கலந்தால் -தன்னுடைய அவயவம் உடன் கலந்தது போலே அவளும் நினைப்பாள்
திரு மகளும் மண் மகளும் ஆய்மகளும் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் -முதல் திருவந்தாதி -42பாசுரம் –
கௌசல்யை தசரதன் கல்யாண குணங்களுக்கு தோற்று -அல்பம் ஆநுகூல்யம் இருக்கும்
தசரதன் -தாஸ்யை பார்யை தாய் -சஹி -சகோதரி -போலே பொறாமை இன்றி இருந்த –
யதா யதா ஹி நினைவு படி பரிமாறி போந்தாள்

ஸ்ரீராமாயணம், அயோத்தியா காண்டம், 12ஆம்
சர்க்கத்தின் 68ஆம் சுலோகம் அநுசந்தேயம்.

எண் ஆரா -பரம பதம் துக்கம் கலவா இன்பம் போலே
இங்கே இன்பம் கலவாத துக்கம் –
இங்கே அனைத்தும் துயரே தான்

அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் இங்கே துக்கம் எல்லை காண முடியாதே

இன்னார்க்குத் துயர் விளைக்கும் என்று விசேடித்துக் கூறாமையாலே,
கர்மங்கட்குக் கட்டுப்படாத சர்வேசுவரன் அவதரித்தாலும் அவனுக்கும்
துக்கத்தை விளைக்கக் கூடியது என்று கூறத் திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்கிறார், ‘இராச்சியத்தினின்று’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
ஆரண்ய.
67 : 24.

      ‘ராஜ்யாத் ப்ரம்ஸ:’ என்ற மேற்சுலோகத்திற்கு வியாக்கியாதா
அருளிச்செய்த பொருள் வருமாறு : திருவபிஷேகம் பண்ண நான்
இட்டவாறே, ‘ராஜ்யம் எனக்கு வேணும்’ என்றார் சிலர். அத்தை இழந்தால்
படை வீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் ஆமிறே, ‘என் மகன் ராஜ்யம்
பண்ண வேண்டா; பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே இருக்க
அமையும்,’ என்றாளிறே ஸ்ரீ கௌசல்யை. சீதா நஷ்டா – பிராட்டியும்
தாமுமாய் ‘ஏகாந்தமாகப் புஜிக்கலாம்’ என்று போர, இருவரும் இரண்டு
இடத்திலேயாம்படி விழுந்தது. பிராட்டிக்குத் தனியிடத்திலே உதவப் புக்க
பெரிய உடையாரையும் இழந்தது. * ‘ ‘ராஜ்ய நாசோ பஹர்ஷதி’ என்றும்,
‘வனவாசோ மஹேநதய:’ என்றும் சொல்லிப் போந்தவற்றை இப்போது
அநர்த்தமாகச் சொல்லுகிறது என்?’ என்னில், ஆஸ்ரித சம்ஸ்லேஷத்துக்கும்,
ரிஷிகளை எடுக்கைக்கும் என்றிறே போந்தது; அத்தோடே
விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும்,
பெரியவுடையார் இழவு பலிக்கையாலும், இவற்றுக்கு அடியானவையும்
இப்போது அநர்த்தமாய்த் தோற்றுகையாலே சொல்லுகிறார். இவ்விரண்டாலும்
வரும் துக்கங்களையடைய நினைக்கிறது. நிர்த்தஹேதபிபாவகம் – பிரியாத
இளையபெருமாளையும் பிரிக்க வற்றாயிறே இருக்கிறது.

  ‘இப்பொழுது எம்ம னோரால் இயம்புதற் கெளிதே யாரும்
செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்பவ் வாசகம் உரைக்கக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா!’

  என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைவிற்கு வருகின்றது.

ராஜ்ஜியம் இழந்து –
வனே வாஸா
நஷ்டா சீதா
ஜடாயு இழந்து
எனது வினை அலஷ்மி பெருமாள் வரத்தை
நெருப்பையும் எரிக்கும் துக்கம் உலக கொடுமை –

கௌசல்யை கண் வட்டத்தில் இருக்க முடியாமல் காட்டுக்கு போக
இருவரும் பிரிந்து
பெரிய உடையாரையும் இழந்து
இத்தை -வன வாஸம் -ஆஸ்ரித சம்ச்லேஷம் ரிஷிகள் இடம் கற்க வந்தது அனர்த்தமா
இழந்த சோகம் இப்படி பேச வைத்ததாம் -காஞ்சி ஸ்வாமி நிர்வாஹம் காட்டி –
நெருப்பையும் எரிக்கும் படியான துக்கம்
லோக யாத்ரை இப்படி பண்ணி வைத்தது எதற்கு -ஆழ்வார் கேட்க
கர்ம பலன் இவை என்றானாம் –
கண்ணாளா நிர்வாஹனே -உனது கிருபைக்கு என்ன கார்யம்
கிருபாளான் நீ இல்லையா –
கடல் கடைந்தாயே -பிரயோஜனாந்த பரருக்கும் உதவினாயே
அவர்களுக்கு இச்சை உண்டே
பிரார்தித்தார்களே அவர்கள்
இவர்கள் இச்சை இன்றி இருக்க
ஆகில் இவர்கள் நடுவில் இல்லாதபடி உனது திருவடியில் சேர்த்து கொள்ள வேண்டும்
உனது திருவடிகளுக்கே -ஏகாரம்
கால் கூறு இச்சை

காற்கூறு – திருவடிகளாகிற பாகத்தில் என்பது பொருள். ‘ஒன்றில் நாலில்
ஒரு பாகம்’ என்பது வேறும் ஒரு பொருள்

செய்ய வேண்டும்
தாழ்வு இன்றி
அடியேனை
சாமாறு பணிக்க வேண்டும்
நீ செய்ய வேண்டிய கார்யம்
ஒரு வார்த்தை சொன்னால் அடியேனுக்கு சத்தை
சரீரம் போனால் போதுமா
கைங்கர்யம் வேண்டாமா
கேவலரை போலே கேட்க மாட்டாரே
காட்டுத் தீயில் அகப்பட்ட நீரும் நிழலும் தேடுவது போலே –
எம்பெருமான் நினையாதவர் உடன் இருப்பதை விட நெருப்புக்குள் இருப்பதே தேவலை

 நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 30, 2013

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே.

    பொ-ரை : ‘உயிர்களால் குறைவில்லாத ஏழ் உலகங்களையும் தன் வயிற்றினுள்ளே ஒடுக்கிக்கொண்டு, தயிரையும் வெண்ணெயையும்

உண்ட சர்வேசுவரனை. விசாலம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட குற்றமில்லாத இசையோடு கூடின மாலையாகிற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப்பத்துத் திருப்பாசுரங்களாலும் காழ்ப்பு ஏறிய இந்தப் பிறவியை நீக்கிக்கொண்டு பரமபதத்தை அடைவார்கள்,’ என்றபடி.

    வி-கு : ‘ஒடுக்கி உண்டான்’ என்க. ‘உண்டானைச் சடகோபன் சொல் மாலை ஆயிரம்’ என்க. ‘பத்தால் அறுத்து நண்ணுவர்’ என்க.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், காழ்ப்பு ஏறின பிறவியினது கலக்கம் நீங்கிப் பரமபதத்திலே புகப்பெறுவார்கள்,’ என்கிறார்.

    2உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு – கணக்கு இல்லாதவைகளான ஆத்துமாக்கள் நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும். தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை – தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது, ‘செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று எல்லா உலகங்களுக்கும் வேண்டுவனவற்றையெல்லாம் தன் நினைவாலே செய்து, பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது. அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக உணவு முதலானவைகளை உட்கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல். அன்றிக்கே, 3‘எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான அந்தக் கிருஷ்ணபலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாயிருந்து வைத்து, அடியார்கள் சம்பந்தம் உள்ள பொருள்களால் அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

    தடம் குருகூர்ச் சடகோபன் – 4‘அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே, ‘பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோற்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தாற்போலே, இவர்

ஆத்துமாவையும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக் காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். செயிர் இல்சொல் இசை மாலை – செயிர் – குற்றம். இல் – இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது, ‘ஆத்துமாவும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற வார்த்தையில் குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.

    வயிரம் சேர் பிறப்பு அறுத்து – இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து. வைகுந்தம் நண்ணுவரே – ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, 1‘அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் நினைவின் வண்ணமும் பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். என்றது, 2 ‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி. 3அவன் விரும்பினபடி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது?

திருவாய்மொழி நூற்றாந்தாதி

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் – தேறுங்கால்
என்றனக்கும் வேண்டா எனுமாறன் தாளைநெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு.
  

‘பலபடிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல
விதங்களாலும்’ என்பது பொருள்.

3. ‘இவர் திருமேனியை நித்தியமுத்தர்கள் திருமேனிகளைப் போன்று அவன்
விரும்பாநிற்க, இவர் ‘வேண்டா’ என்பான் என்?’ என்ன, ‘அவன்
விரும்பினபடி’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், இங்கே,
‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின
திருமேனி’ என்பதும் பொருள்.

வைரம் சேர் பிறப்பு அறுத்து -வைகுந்தம் பெறுவார்
ஏழு உலகங்களையும் தன்னுள் ஒடுக்கி -தயிர் வெண்ணெய் உண்டான்
செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே இன்றி
தனது கார்யம் செய்து முடித்த பின்பு ஆர அமர வெண்ணெய் உண்டானாம்
ஸ்ரீ சடகோபன் சாதிக்க செருப்பு சாதிக்க கேட்டானாம் –
கற்ப ஸ்திரீகள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உண்பது போலே லோக ஜீவனமாக வெண்ணெய் உண்டான்
அடியார்கள் கை பட்ட த்ரவ்யம் என்பதால்
தடம் குருகூர் சடகோபன் -கூட்டம் கூட்டமாக திரண்ட
செயிர் குற்றம் இல்லாத ஆயிரம்
இவர் வேண்டாம் என்று கழித்தாலும் விடாத சம்சாரம் கழிந்து
அங்கும் பல சரீரம் கொண்டு
சங்கல்பம் அடியாக எல்லா கைங்கர்யம் செய்ய அநேக சரீரம் கொண்டு
பல படிகளாலும் அடிமை செய்யப் படுவர்

அவன் விரும்பின படி இது என்று அறியாதே வேண்டாம் என்கிறார்
சரீரத்தால் மேனி தனில் வஞ்சித்து

பலபடிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல
விதங்களாலும்’ என்பது பொருள்.

3. ‘இவர் திருமேனியை நித்தியமுத்தர்கள் திருமேனிகளைப் போன்று அவன்
விரும்பாநிற்க, இவர் ‘வேண்டா’ என்பான் என்?’ என்ன, ‘அவன்
விரும்பினபடி’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், இங்கே,
‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின
திருமேனி’ என்பதும் பொருள்.

என்னுடைமை
மிக் க உயிர்  வேண்டாம் என்கிறார் மாறன் தாளே நமக்கு பேறு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 30, 2013

உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.

    பொ-ரை : ‘சரீர பலத்தில் குறைவில்லாத அசுரர் கூட்டங்கள், உயிர் நீங்கிய மலைத்துண்டுகள் கிடந்தன போலத் துண்டங்கள் பலவாகத் துணித்து மகிழ்ந்த, மிகப் பெரிய கங்கையைத் தரித்த சடையாகிய முடியையுடைய சிவபிரான் ஒரு பக்கத்திலே ஒப்பில்லாதபடி விரும்பி வசிக்கின்ற திருமேனியையுடைய சர்வேசுவரன் விரும்பாத என்னுடைய இந்த உயிரால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : ‘உடம்பினால் குறையில்லா அசுரர்’ என்க. ‘துணித்து உகந்த உடம்புடையான்’ எனக் கூட்டுக. புனல – அகரம் சாரியை; ஆறாம் வேற்றுமை உருபுமாம்.

    ஈடு : பத்தாம் பாட்டு. முதற்பாசுரத்தில் சொன்ன சீலகுணத்தையும் விரோதிகளை அழித்தலையும் சொல்லி, ‘அவன் விரும்பாத உயிரால் என்ன காரியம் உண்டு?’ என்று, முதற்பாசுரத்தில் தொடங்கியதற்குச் சேர முடிக்கிறாள். ‘உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன போல் துணி பலவாத் துணித்து’ என்றதனால், ‘நீறு ஆகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்றதனைச் சொல்லுகிறது. ‘தடம் புனல் சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான்’ என்றதனால், ‘கூறு ஆளும் தனி உடம்பன்’ என்றதனைச் சொல்லுகிறது.

    2உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் – உயிரைத் தேய்த்து உடம்பை வளர்த்திருந்தவர் பிறப்பு இறப்புகளிலே எப்பொழுதும் உழன்று திரிகின்றவர்களாய்ப்

போருவர் இத்தனை அன்றோ?’ என்றது. ‘உயிரிலே ஆயிற்றுக் குறை உண்டாகில் உள்ளது,’ என்றபடி. உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன போல் துணி பலவாத் துணித்து உகந்த – உயிரோடு கூடிச் சஞ்சரிக்கின்ற மலைகள் இந்திரன் கையில் வச்சிராயுதத்தாலே பல கூறு ஆகும்படி துணியுண்டு கிடந்தாற்போலே, அசுரர் கூட்டத்தைத் துணித்து உகந்தான் ஆயிற்று. ‘உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் உடம்பினால் குறை இல்லா அசுரர்குழாம் துணித்து உகந்த’ என்று கூட்டுக. 1‘திருமகள் கேள்வன் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, சம்பந்தம் எல்லார் பக்கலிலும் உண்டாய் இருக்க, ‘இவர்கள் அடியார்கட்கு விரோதிகள்,’ என்னும் தன்மையாலே இவர்களை அழித்து, ‘அடியார்கட்குப் பகைவர்கள் அழியப் பெற்றோமே அன்றோ!’ என்றத்தாலே உகந்தானாயிற்று.

    தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான் – மிக்க நீர் வெள்ளத்தையுடைத்தான கங்கையைத் தன் சடையில் ஒரு பக்கத்திலே தரிக்கையால் வந்த செருக்கையுடைய சிவபிரான் ஆனவன், 2பிராட்டி திருமார்வைப் பற்றி, ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானித்திருக்குமாறுபோலே, ஒரு பக்கத்தைப் பற்றி ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானிக்கும்படி அவனுக்கு இடங்கொடுத்துக்கொண்டிருக்கிற திருமேனியையுடையவன். 3திருமேனியில் இடங்கொடுக்கச்செய்தே, இது தன்னைக் குணமாக விரித்துக்

கூற வேண்டும்படியாயிற்று அவர்களுடைய அகங்காரம். என்றது, ‘அகங்காரம் இல்லாதவர்கள் அணையக்கூடிய உடம்பிலே ஆயிற்று அகங்காரம் கொண்டவர்களுக்கும் இடங்கொடுக்கிறான்’ என்றபடி.

    கவராத உயிரினால் குறை இலம் – ‘இப்படிப் பொதுவான உடம்பு படைத்தவன் ஆசைப்பட்ட எனக்கு உதவானாகில், இவ்வாத்தும வஸ்துவைக்கொண்டு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள். 1இதற்கு முன்னர் எல்லாம் சரீரத்தையும் சரீரத்தோடு சேர்ந்திருக்கின்ற பொருள்களையுமே அன்றோ ‘வேண்டா’ என்றது? அவைதாம் அழியக்கூடியவையாய் இருக்கையாலே தாமாகவே அழியுமவற்றை ‘வேண்டா’ என்றதாய் இருக்குமே அன்றோ? அதற்காக நித்தியமான ஆத்துமவஸ்துவையும் ‘வேண்டா’ என்கிறாள் இப்பாசுரத்தால். ‘இதனை வேண்டா என்பதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இது கிடக்குமாகில், இன்னமும் ஒரு பிறவி உண்டாய்ப் 2பழையவையும் எல்லாம் வந்து தோற்றி முலை எழுந்து நோவு படுகைக்குக் காரணமாய் இருக்கும் ஆதலால், அதனைப் பற்ற’ என்க. 3இனித்தான், அவனுடைய நித்திய இச்சையாலே அன்றோ இவ்வாத்துமாவினுடைய நித்தியமாய் இருக்குந் தன்மையும் உளது? அவனுக்கு இச்சை இல்லாத போது பின்னை இவ்வாத்துமாவைக் கொண்டு காரியம் இல்லையே’ என்க.       

முதல் பாட்டில் சீல குணம் -விரோதி நிரசன -சொல்லியது போலே
இதிலும் பராக்ராமம் சீலம் குணம் சொல்லி -முடிக்கிறார்
உபக்ரமதுடன் சேர உப சம்காரம்
நீராகும் படியாக படை தொட்ட சொல்லி
மலை போல் கிடந்த அசுரர் குழாம் முடித்து
உடம்பு பெரியதாக அசுரர் உயிர் ஞானம் குறை
உயிர் -பேணாமல் உடம்பு பேணி –
ஆத்மாவை வெய்யிலே வைத்து தேகத்தை நிழலிலே வைத்து -நித்ய சம்சாரிகள்
உயிர் பிரிந்த மலைத் துண்டம் போலே
இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு சிறகுகளை வெட்டி –
துணித்து உகந்த
தேவர் தானவர் இருவருக்கும் பொது -ஆஸ்ரித விரோதி என்பதால்
திருமேனியில் இடம் கொடுத்தான் துர் அபிமானம்
அபிமான சூன்யர்
மிக நீர் வெள்ளத்தை -தனது சடையில் தரிப்பதால் அபிமானம் கொண்டு
இவ்விடம் என்னிடம் என்று அபிமானித்து
பொதுவான உடம்பு அனைவருக்கும்
ஆஸ்ரித எனக்கு உதவாமல் ஆத்மாவால் என்ன பலன்
முன்பு தேகம் வேண்டாம்
அவை தன்னடையே கழியுமே -வேண்டாம் சோழ வேண்டுமோ
நித்தியமான ஆத்மாவும் வேண்டாம்
இது கிடக்குமாகில் இன்னொரு ஜன்மம் உண்டாகி நோவு பட உடலாக இருக்கும்
அவனுடைய நித்ய இச்சையாலே ஆத்மா நித்யமாக இருக்க
அவன் இச்சை இன்றி இருக்க இதனால் என்ன பலன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 30, 2013

மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.

பொ-ரை : ‘மேகலையாலே குறைவில்லாத மெலிந்திருக்கின்ற அகன்ற அல்குலையுடைய இன்பத்திற்குத் தக்கவளான உஷையினது புகழையுடைய தந்தையாகிய, வெற்றி பொருந்திய பாணாசுரனுடைய தோள்களைத் துணித்து, ஆதிசேஷ சயனத்தின்மேலே தூங்குகின்றவனைப் போன்று உலகமெல்லாம் நன்மையிலே பொருந்தும்படி யோக நித்திரையைச் செய்கின்ற சர்வேசுவரன் விரும்பாத இந்தச் சரீரத்தால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : மேகலை – ஓர் ஆபரணம்; இடையிலே அணிந்து கொள்வது; ஏழு அல்லது, எட்டுக் கோவையால் ஆயது. அன்றிப் புடைவையுமாம். ‘குறையில்லாப் போகமகள்’ என்றும், ‘மெலிவுற்ற போகமகள்’ என்றும் தனித்தனியே கூட்டுக. ‘தந்தையாகிய வாணன்’ என்க. புகழையும் விறலையுமுடைய வாணன். ‘துணித்து யோகணைவான்’ எனக் கூட்டுக.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘அடியார்க்கு விரோதியான வாணனை அழியச்செய்து, எல்லாரும் உய்வு பெறும் வழியை எண்ணுமவன் விரும்பாத உடம்புகொண்டு காரியம் என்?’ என்கிறாள்.

    மேகலையால் குறை இல்லா மகள் – 2‘உஷைக்குக் கூறை உடை அழகியதாய் இருக்கும்போலேகாண்’ என்று அருளிச்செய்வராம் வங்கிப்புரத்து நம்பி. மெலிவுற்ற மகள் – மென்மைத்தன்மையுடையளாய் உள்ளவள். என்றது, ‘பிரிந்து தனியிருக்கப் பொறாதவள்’ என்றபடி. அகல் அல்குல் மகள் – அகன்ற அல்குலையுடையளாய் இருக்கை. போக மகள் – 3போகத்திற்குத் தக்கவளான பெண்பிள்ளை. புகழ்த்தந்தை – உஷைக்குத் தந்தையான வார்த்தைப்பாட்டால் உள்ள புகழையுடையவன். அன்றிக்கே, ‘சௌரியம் வீரியம் முதலியவைகளால் உள்ள பிரசித்தியையுடையவன்’ என்னுதல். விறல் வாணன் – மிடுக்கையுடைய வாணன். ஒரு தேவதையின் சந்நிதியிலே இருந்தால் சத்துவகுணம் தலையெடுத்து இருக்கக் கூடியதாய் இருக்குமே

அன்றோ எல்லோர்க்கும்? அவ்வளவிலும் 1யுத்த கண்டூதி மிக்கு, ‘எனக்கு எதிரியாய் இருப்பான் ஒருவனைக் காட்டவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ளும்படியான பெருமிடுக்கையுடையவனாதலின், ‘விறல் வாணன்’ என்கிறது. புயம் துணித்து – ‘இவன் அறக் கை விஞ்சினான்!’ என்று கரத்தைக் கழித்துவிட்டான். தலையை அறுத்து வைக்க வேண்டும் குறை உண்டாயிருக்கச் செய்தேயும், ‘உஷை தந்தை அற்றவள் ஆகவொண்ணாது,’ என்று உயிரை நிறுத்தி வைத்துக் கையைமாத்திரம் கழித்தானாகலின், ‘புயம் துணித்து’ என்கிறது.

    நாகமிசைத் துயில்வான்போல் – வாணனுடைய தோள்களாகிய காட்டினைத் துணித்த பின்பு ஆயிற்றுப் 2போகத்தில் பொருந்திற்று. ‘‘துயில்வான் போல்’ என்பது என்? துயில இல்லையோ?’ என்னில், உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகு அணைவான் – ‘இன்னமும் வாணன் போல்வார் எதிரிடுவார் உளராகில் அவர்களையும் அழித்து, ‘உலகத்தார் நம்மையே பற்றிக் கரைமரம் சேரும் விரகு யாதோ?’ என்று இதனையே சிந்தித்துக்கொண்டு யோக நித்திரை செய்யாநிற்பான். கவராத உடம்பினால் குறை இலம் – இப்படி எல்லார் பக்கலிலும் செய்யும் பரிவை அவன் என் பக்கலிலே செய்யாதே இருக்க, நான் என் உடம்பைக் கட்டிக்கொண்டு கிடக்கவோ? 3அவனுக்காகக் கண்ட உடம்பு ஆயிற்று இவளது. அவனுக்கு உறுப்பாகவே அன்றோ 4இவள்தான் இந்தச் சரீரத்தை விரும்புவது?அவன்தான் தன் உடம்பு ‘பத்தர்களுக்காகவே’ என்று இருக்குமாறு போன்று இறைவனுக்காகக் கண்ட உடம்பாயிற்று இது.

ஆக, ‘மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல் அல்குல் போகமகள்’
என்ற அடைமொழிகளால், ‘ஒப்பனையழகாலும், ஆத்தும குணத்தாலும்,
பருவத்தாலும் குறைவற்றவள்’ என்பதனைத் தெரிவித்தபடி.

உடம்பால் என்ன பயன்
உஷை மேகலையால் குறை இன்றி -இன்பம் தரும் போக மகள் -வாணன் புத்ரி
புஜம் அறுத்து
உலகு எல்லாம் ரஷிக்க யோகு செய்பவன்
புகழ் தந்தை உஷை தந்தை
விறல் மிடுக்கு கொண்ட வாணன்
புயம் துணிந்து கை விஞ்சினான் என்று கையை அறுத்தான்
தலையை அறுக்க கூடிய குற்றம் செய்தாலும் -உயிர் நிறுத்தி வைத்து
நாக மிசை -புயம் துணிந்து போகம் சுகம் பாம்பு துயில்வான் போலே

கரை சேர்க்க சிந்தை செய்து யோக நித்தரை செய்து இருக்கும்
அவனுக்காகா கண்ட உடம்பு
அவனுக்கு சரீரம்
அவனுக்கு உடல் என்பதால் இவள் விரும்புவது
தன்னுடைய உடம்பை அடியவருக்கு என்று நினைக்க
இ வரும் அவனுக்கு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 30, 2013

வரிவளையால் குறையில்லாப் பெருமுழக்கால் அடங்காரை
எரிஅழலம் புகஊதி இருநிலம்முன் துயர்தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்துஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.

    பொ-ரை : ‘வரிகளையுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கினது குறைபாடு இல்லாத பெரிய ஒளியால், எரிகின்ற அச்சமாகிய நெருப்பானது பகைவர்கள் மனங்களிலே புகும்படியாக ஊதிப் பெரிய நிலத்தினது துன்பத்தை நீக்கிய, அறிதற்கு அரிய சிவனும் பிரமனும் இந்திரனும் வணங்கி ஏத்துகின்ற விரிந்த கல்யாண குணங்களையுடைய சர்வேசுவரன் விரும்பாத மேகலையால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்’ என்கிறாள்.

    வி-கு : ‘வரிவளையினது குறை இல்லாத பெருமுழக்காலே அடங்கார் மனங்களிலே எரி அழலம் புக ஊதி நிலத்தினது துயரைத் தவிர்த்த விரிபுகழான்,’ என்க. அழலம் : அம் – சாரியை. அழல் – நெருப்பு. ‘வளையால், அடங்காரை’ என்பன வேற்றுமை மயக்கங்கள். ‘தெரிவரிய’ என்பது, ‘சிவன்’ முதலானோர்கட்கு அடை.

    ஈடு : எட்டாம் பாட்டு. 2‘உலகத்திற்கு உபகாரத்தைச் செய்த சர்வேசுவரன், தனக்கே உரியவளான என்னை

விரும்பிலனேயாகில், என்னுடைய மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள்.

    வரி வளையால் – 1ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே. வளை – சங்கு. குறை இல்லாப் பெருமுழக்கால் – 2‘அந்த ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய நெஞ்சுகளைப் பிளந்தது,’ என்றும், 3‘அந்தப் பாஞ்சஜன்யமானது, பாதாளம் ஆகாயம் திக்குகள் திக்குப்பாலர்கள் ஆகிய இவற்றோடு கூடின உலகத்தை நடுங்கச் செய்தது,’ என்றும் கூறப்படுகின்றபடியே, பகைவர்கள் அளவு அல்லாத பெரிய ஒலியாலே. ‘ஹஸ்தேந ராமேண – கையினாலே ஸ்ரீராமனாலே’ என்னுமாறு போன்று, ‘வரிவளையால் பெருமுழக்கால்’ என்பது  வேற்றுமை மயக்கம். அடங்காரை – பகைவர்களை. எரி அழலம் புக ஊதி – எரியாநின்றுள்ள நெருப்பானது அவர்கள் மனங்களிலே புகும்படி ஊதி. என்றது, ‘பய அக்கினி கொளுந்தும்படி செய்து’ என்றபடி. அடியார்களுடைய பகைவர்கள் கழிய ஊதியது 4இவளையிட்டே அன்றோ?

    இருநிலம் முன் துயர் தவிர்த்த – பரப்பையுடைத்தான பூமியில் முன்பே உண்டான துக்கத்தைப் போக்கின. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘முன்பே பிடித்துத் துக்கத்தைப் போக்குமவனாய்ப் போருமவன், இன்று இத்தலையை நோவுபட விட்டிருக்குமாகில், பின்னை எனக்கு என்னுடைமை கொண்டு காரியம் என்?’ என்கிறாள் என்றபடி. 5‘தேவர்களுக்குப் பலம் விருத்தியடைந்தது

யோகிகளுக்குத் தெளிவும் விருத்தியடைந்தது’; 1‘அந்தச்சங்கின் ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய மனங்களைப் பிளந்தது,’ என்கிறபடியே, ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலியாகிற இதுதான் அன்புடையவர்கள் கேட்க ஆசைப்பட்டிருப்பதுமாய், பகைவர்கள் முடிகைக்குக் காரணமுமாய் இருப்பது ஒன்றே அன்றோ?

    2பெரியாழ்வார் திருமகளார்க்கும் விசேடித்து ஜீவனமாய் இருப்பது ஒன்றே அன்றோ இது? ‘பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும், சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்றுகொலோ!’ என்பது நாய்ச்சியார் திருமொழி. 3என்றது, ‘ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப்பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒருகாலே பெறவேண்டும்,’ என்கிறாள் என்றபடி. 4‘இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர். 5சிசுபாலன் சுயம்வரத்திலே வந்த போது உருக்குமிணிப்பிராட்டி, ‘இவ்வளவிலே கிருஷ்ணன் வந்து முகங்காட்டிற்றிலனாகில் நான் பிழையேன்!’ என்ன, அவள் கலங்கின சமயத்திலே புறச்சோலையிலே நின்று ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை முழக்க, அது வந்து செவிப்பட்டது; இராவணன் மாயா சிரசைக் காட்டிய போது பிராட்டி தடுமாற, அவ்வளவிலே வில்லின் நாண் ஒலி வந்து செவிப்பட்டது;அவ்விருவர் விடாயும் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, இரண்டும் ஒருகாலே பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாளாயிற்று இவள்.

    தெளிவு அரிய சிவன் பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும் விரி புகழான் – பாரதப்போரை முடிய 2நடத்தினமை காண்கையாலே, தாங்கள் பிறரால் அறியப்படமாட்டாதவர்களாக நினைத்திருப்பாருமாய்ப் பூமியில் கால்பாவாமையால் வந்த செருக்கினையுடையருமான சிவன் தொடக்கமானார் செருக்கு அற்றவர்களாய்க்கொண்டு வந்து விழுந்து ஏத்தும்படியான பரந்த புகழையுடையவன். 3ஒரு கொசுகுத்திரள் இருந்தது என்னா, திருப்பாற்கடலில் ஒரு மூலை சுவறாதே அன்றோ? அப்படியே, இவர்கள் ஏத்தா நின்றால் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சும்படியான புகழையுடையவனாதலின், ‘விரிபுகழான்’ என்கிறது. ‘கவராத மேகலையால் குறை இலமே – அவன் விரும்பாதே நானே உடுத்து முசியும்படியான மேகலை எனக்கு என் செய்ய? அன்றிக்கே, 4‘உடைமாறாத பரிவட்டங்கொண்டு காரியம் என்?’ என்னுதல். அன்றிக்கே, ‘பாதுகாப்பவனாய்த் தான் வந்து புகழ் படைத்துப் போருகிறவன், ‘இத்தலையைப் பாதுகாப்பதனால் வரும் புகழ் வேண்டா; அது தவிர்ந்தால் வரும் பழி வர அமையும்,’ என்று இருந்தானாகில், நான் எனக்குப் பழியாம்படி 5பரிவட்டம் பேணி இருக்கவோ?’ என்னுதல்.

    6இனி, வரிவளையால் குறையிலமே – வாயாடி. வாய்க்கரைப் பற்றை அடுத்தூணாகவுடையவன். எதிரிகள்முடுகினால் இவன்தான் வாய்க்கரையிலே இருந்து செய்யும் ஆர்ப்பரவத்தைக் கேட்டு எதிரிகள் முழுக்காயாக அவியும்படியாக இருப்பவன். அந்தப்புரத்திலுள்ளார் ‘எங்கள் வாய்புகு சோற்றைப் பறித்து ஜீவியாநின்றான்!’ என்று முறைப்பட்டால், அவன் 1வாய்விடாச்சாதி என்னலாம்படி அன்றோ இருப்பது? ஓசையும் ஒளியும் உடையனாய் எதிரிகளை ஊதப் பறக்கும்படி செய்தே அன்றோ இருப்பது? 2அல்லாத ஆழ்வார்கள் கூரியரேயாகிலும், ‘தடியர் கழுந்தர் என்னலாய், இவனைப் போலே சுஷியுடையார் இலரே அன்றோ? 3மரங்கள்போல் வலிய நெஞ்சர் ஆகையாலே எரிஅழலம் புக ஊதிக் கொளுத்தினபடி. ‘இப்படி அடியார்களைப் பாதுகாத்தவன் விரும்பாத மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள் என்னுதல்.

ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலி தாரகம் என்று ஆசைப்பட்ட பேர் உளரோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பெரியாழ்வார்’ என்று தொடங்கி.

  ‘கோங்குல ரும்பொழில் மாலிருஞ் சோலையில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைக ளோடுஉடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத் துமடுத் தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாணொலி யும்தலைப் பெய்வதுஎஞ் ஞான்றுகொலோ!’

  என்பது அத்திருப்பாசுரம்.

‘மற்றைய ஆழ்வார்களைக்காட்டிலும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்திற்கு உயர்வு யாது?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அல்லாத’ என்று தொடங்கி.
மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் – கூரிய
அறிவினர்; தீக்ஷணர்கள். தடியர் – கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
சப்பரை. சுஷி – ஞானம், துவாரம்.

மேகலை ஆபரணத்தால் என்ன பயன்
வரி வளையால் -வரிகளை உடைய பாஞ்ச சன்யம்
ஒலியால் பிரதி கூலர் நெஞ்சை பிளந்து
எங்கு தர்மம் இருக்கோ அங்கெ வெற்றி -எங்கு கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கெ தர்மம்
பாண்டவர்கள் மகிழ -துரியோதனாதிகள் -நடுங்க ஒலி கொடுக்குமே
ஜகத் பாதாளம் திக்குகள் நடுங்க பெரு முழக்கால்
ஹஸ்தேன சரேன ராகவேன -சங்கம் உஊத பய அக்நி பெருக
ஆஸ்ரித விரோதிகளை இவளை இட்டு அன்றோ -பெண் பிள்ளைக்காக

இவளையிட்டேயன்றோ?’ என்றது, சிலேடை : ‘இந்தப் பாஞ்சஜன்யம்
என்னும் சங்கைக் கொண்டேயன்றோ?’ என்பது நேர்ப்பொருள். ‘இவள்
காரணமாக அல்லவா?’ என்பது

பூமிப் பிராட்டிகாக
இவ் வளை இட்டு –
ஸ்ரீ பாஞ்ச சன்ய  கோஷம் அனுகூலர் கேட்க ஆசைப்பட்டு –

ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலி தாரகம் என்று ஆசைப்பட்ட பேர் உளரோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பெரியாழ்வார்’ என்று தொடங்கி.

  ‘கோங்குல ரும்பொழில் மாலிருஞ் சோலையில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைக ளோடுஉடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத் துமடுத் தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாணொலி யும்தலைப் பெய்வதுஎஞ் ஞான்றுகொலோ!’

  என்பது அத்திருப்பாசுரம்.

தூது விடுகிறாள் -சங்கு ஒலியும் சாரங்க வில் நாண் ஒலியும்
பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று பிள்ளை அருளிச் செய்வர்
நஞ்சீயர் -சிஷ்யர் நம்பிள்ளை -சிஷ்யர் ஆகும் பின்பு பட்டர் இடம் கேட்டு இருப்பார்
பட்டர் 28 வயசில் பரம பதம் செல்ல வாய்ப்பு இல்லை
நஞ்சீயர் வந்து சேர்ந்த கொஞ்ச காலத்தில் போய் இருக்கலாம் –
அதனால் பால்யம்-58 இருக்கலாம்
-1147-
எம்பெருமானார் பரம பதம் சென்ற பின்பு 20 வருஷம் இருந்து இருப்பார் பட்டர்
இருவரும் பெற்ற பேற்றை தான் ஒருத்தி பெற ஆசைப் படுகிறார் -இரண்டும் ஒருகாலே கேட்க ஆசைப் படுகிறாள்
சிசுபாலன் -ருக்மிணி முகம் காட்டாவிடில் நான் பிழையேன் என்ன –
கண்ணாலம் கோடித்து -பாரித்து -கன்னி தன்னைக் கை பிடிக்க அண்ணாந்து
இருக்கும் சிசுபாலன் -பாஞ்ச சன்யம் ஒலி கேட்டு -தரிக்க -அந்த ஆனந்தம்
தனக்கு கிடைக்க –
பராங்குச நாயகியும் இதே ஆசைப்பட
மாயா சிரஸ் பார்த்து தடுமாற -சார்ங்கம் நாண் ஒலி கேட்டு -தரித்து ஆனந்தம்
பட்ட சீதா பிராட்டி போலேயும்
விடாய் ஒருத்திக்கே உண்டாகையாலே –
பாரத சமயத்தை முடிய -சேர்த்து வியாக்யானம்
கண்டு தேவதைகள் -பூமியில் கால் பாவ கூசும் -விழுந்து ஏத்தும் படி
சிவன் பிரமன் இந்த்ரன் போல்வார் –
கொசுகுத் திரள் போலே இவர்கள் ஏத்தினால் ஏத்தா இடம் விஞ்சி விரி புகழான்
விரும்பாத -மேகலை -வஸ்த்ரம் ஆபரணம் இரண்டும் -கார்யம் என்ன
உடை மாறாத பரிவட்டம் வேண்டாமே
ரஷிப்பதே அவன் ஸ்வாபம்
இவளை ரஷித்து வரும் புகழ் வேண்டாம் என்று இருப்பானாகில்

வாயாடி வாய் கரிப்பட்ட
வாயாலே ஜீவனம்
திருப்பவள்ம் இருக்கும் பாஞ்ச ஜன்யம்
எதிரிகள் -வாயாலே வாயாடி -கேட்டு எதிரிகள் அழியும் படி இருக்கும்

வாய் விடாச்சாதி – ‘வார்த்தை சொல்லமாட்டாதவன்’ என்பதும், ‘வாயை
விடாதவன்’ என்பதும் பொருள். ‘வரி’ என்ற பதத்தையும், ‘பெருமுழக்கால்’
என்றதனையும் கடாக்ஷித்து, ‘ஓசையும் ஒளியுமுடையனாய்’ என்கிறார்.
இதனால், ‘வார்த்தை சொல்ல வல்லவன்’ என்றும், ‘ஒளியையுடையவன்;
என்றும் தெரிவித்தபடி. என்றது, ‘உலகத்தில் வார்த்தை சொல்ல
வல்லவனானால், ஒளி இல்லாமல் இருப்பான்; ஒளியுடையனாயிருப்பின்,
வார்த்தை சொல்ல வல்லவனல்லனாயிருப்பான்; அப்படியன்றிக்கே,
ஒளியையும் ஓசையையுமுடையவனாய்’ என்றபடி. ‘ஊதப் பறக்கும்’ என்றது,
‘ஊதினால் பறந்து போகும்படி’ என்றபடி.

2. ‘மற்றைய ஆழ்வார்களைக்காட்டிலும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்திற்கு உயர்வு யாது?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அல்லாத’ என்று தொடங்கி.
மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் – கூரிய
அறிவினர்; தீக்ஷணர்கள். தடியர் – கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
சப்பரை. சுஷி – ஞானம், துவாரம்.

பொதுவாக இருப்பதை புக்கு நீ உண்பாயே –
அந்தபுர வாசிகள் சொன்னாலும் வாய் அகலாதபடி –
வாயாடிக்கும் சங்கு ஆழ்வானுக்கும்
ஓசை ஒளி இரண்டாலும் எதிரிகளை ஊனப் படுத்தி
அல்லாதார் கூரியர் ஆகிலும் -தடியர் கழுந்தர் பெயர் –
சுசி வீரம் உடையார் இல்லையே
இப்படி ஆஸ்ரித ரஷணம் செய்த அவன் விரும்பாத மேகலையால் என்ன பலன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.