Archive for February, 2013

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -409-420….

February 28, 2013

வார்த்தை -409-
அன்ன சாங்கர்யம் –
ஜ்ஞான சாங்கர்யம் –
கால சாங்கர்யம் –
தேச சாங்கர்யம் –
போக சாங்கர்யம் –
இவை த்யாஜ்யம் –

சாங்கர்யம் =கலப்படம்

————————————————————–

வார்த்தை -410-
நடுவில் திருவீதிப் பிள்ளை –
சம்சாரிகள் தோஷத்தை தன் அசக்தியாலே காணாது இருக்கக் கடவன்
சாத்விகருடைய தோஷத்தை இவர்களுடைய சக்தியாலே காணாது இருக்கக் கடவன் –

பத்த லோகத்தில் விலஷண ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இன்ற்க்கே இருக்கை யாவது –
ஔஷத பலத்தாலே அக்நியை ஏந்தி இருக்குமா போலே –
ஜ்ஞானத்துக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச பிரவேசத்திலும்
அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

——————————————————————-

வார்த்தை -411-
ஆச்சான் பிள்ளை -சித்த உபாயனான பிரபன்னனுக்கு அஞ்சு ஸ்பர்சம் பரிஹார்யம் –
அவையாவன –
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன  ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம் –
இவை ஐந்தும் ஐந்து அனுசந்தானத்தாலே போம்

எம்பெருமானுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை அனுசந்திக்க சைவ ஸ்பர்சம் போம்
சமஸ்த கல்யாண குணங்களை அனுசந்திக்க மாயாவாத ஸ்பர்சம் அறும்
ஸ்ரீ ய பதித்வதை அனுசந்திக்க ஏகாயன  ஸ்பர்சம் அறும்
உபாய பூர்த்தியை அனுசந்திக்க உபாயாந்தர ஸ்பர்சம் அறும் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்க விஷயாந்தர ஸ்பர்சம் அறும் –

——————————————————

வார்த்தை -412-
முமுஷுவாய் பிரபன்னன் ஆனவனுக்கு
1-சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரன் விஷயமாகவும் –
2-அநாதிகால ஆர்ஜித பாபத்தை போக்கக் கடவளான பிராட்டி விஷயமாகவும்-
3-மஹா உபகாரகரான ஆசார்ய விஷயமாகவும் –
4-உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயமாகவும் –
5-த்யாஜ்யரான சம்சாரிகள் விஷயமாகவும் –
6-ஸ்வ சரீர விஷயமாகவும் –
7-சரீர சம்பந்திகள் விஷயமாகவும் -பிறக்கும் அநுசந்தானம் –

தேகாத்ம அபிமான நிவ்ருத்திக்கும் –
தேஹாத் வ்யதிரிக்தனான ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வ ப்ரகாசத்துக்கும் –
சேஷ பூதனுக்கு ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்தர்யதினுடைய எல்லைக்கும் –
இப்படி பரதந்த்ரனானவனுக்கு ஸ்வரூப ப்ராப்தமான புருஷார்த்த சித்திக்கும் –
இப்புருஷார்ததுக்கு இடைச் சுவரான அஹங்கார மமகார நிவ்ருத்திக்கும்
அவனே உபாயம் என்று சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரனை அனுசந்திப்பது –

இப்படி ரஷகனான ஈஸ்வரனுடைய கழற்ற ஒண்ணாத ஸ்வா தந்த்ர்யத்தை தலை சாயப் பண்ணி
இவ்வதிகாரி உடைய அபராதம் அவன் ஹிருதயத்திலே படாதபடி பண்ணி
அவனுடைய சீலாதி ஸ்வாபாவங்களை ப்ரகாசிப்பித்து ரஷிக்கும் என்று பிராட்டியை அனுசந்திப்பது-

இம் மிதுனத்தோடே கழற்ற ஒண்ணாதபடி சம்பந்தத்தையும் –
இஸ் சம்பந்தத்துக்கு அநுரூபமாய் -ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞான வர்த்தகர் என்று ஆசார்யனை அனுசந்திப்பது –

சஹ வாஸ யோக்யர் என்றும் -ப்ராப்யாந்தர்க்கரர் என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திப்பது –

பகவத அனுபவ விரோதிகள் என்றும் பாகவத சம்ச்லேஷ விரோதிகள் என்றும் சம்சாரிகளை அனுசந்திப்பது –

பகவத் ஜ்ஞான விரோதி என்றும் விபரீத ஜ்ஞானத்திலே அன்வயிப்பிக்கும் என்றும்
தன்  பக்கலில் போக்ய புத்தியைப் பிறப்பிக்கும் என்றும் -சரீரத்தை அனுசந்திப்பது –

பகவத் ப்ராவண்ய விரோதிகள் என்றும் -அர்த்த காம அபிமானங்களை வர்திப்பிப்பார்கள்
என்றும் -சரீர சம்பந்திகளை அனுசந்திப்பது –

ந்யார்ஜிதமான தனத்தாலே ஷூ நிவ்ருத்தி பர்யாப்தனாய்ப் போருவது –

இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் ஆசார்ய கடாஷத்தாலும் –
எம்பெருமான் விஷயீகாரத்தாலும் உண்டாகக் கடவது ஆகையாலே
ஆசார்ய விஷயத்தில் க்ருதக்ஜையும் –
எம்பெருமான் பக்கலிலே ரஷகத்வ பிரதிபத்தியும் – சர்வ காலமும் நடையாடவும் –
கரணத் த்ரயத்தாலும் பகவத் பாகவத விஷயங்களிலே ஸ்வரூப ப்ராப்த கைங்கர்யம் பண்ணவும்
உபகாரகனான ஆசார்யனுக்கு சத்ருச சத்காரம் இல்லாமையாலே –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -உனக்கு என் செய்கேன் -என்று அனுசந்திக்கவும் –

————————————————————————

வார்த்தை -413-
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே சம்பந்தம் உடைய –
முமுஷுகளுடைய காலஷேபத்துக்கும் -பரமபத ப்ராப்திக்கும் –
சாதனம் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகையும் –

அநாதி கால வாஸித பாப நிவ்ருத்திக்கு சாதனம்
பெரிய பிராட்டியாருடைய விசேஷ கடாஷம் என்று இருக்கையும் –

இவ்வர்த்தம் உபதேசிக்கும் ஆசார்ய விஷயத்தில்
பிரத்யுபகார நிரபேஷ உபகார ஸ்ம்ருதி கண் அழிவு அற உண்டாகையும் –

இவ்வர்த்ததோடு சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில்
தனக்கு சிஷ்யத்வம் ஆகிற முறை தப்பாது இருக்கையும் –

தேவதாந்தர ஸ்பர்சத்தை தூரதே வர்ஜநீயம் ஆக்குகையும் –

உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர் விஷயத்தில் த்யஜ்யமான அர்த்த காமம் நிமித்தமாக
நெஞ்சு தவறாமல் அனுவர்த்திக்கையும் –

இவ்வதிகாரிக்கு சரீர பாதத்தளவும் ஸ்வரூப அநுரூபமான க்ருத்யம்
பகவத் பாகவத விஷயத்தில் பண்ணும் அநுகூல வ்ருத்தி மாறாது ஒழிகையும் – –

ஈஸ்வரனையும் பிராட்டியையும் -ஆசார்யனையும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களையும் ஒழிய
அல்லாத விஷயத்தில் நிஸ் ப்ருஹனாகையும் –

——————————————————————

வார்த்தை -414-
விஷயம் வகுத்த விஷயமானாலும் –ஆற்றாமை கரை புரண்டாலும் –
உபாயம் ப்ரபல உபாயமானாலும் –ஸ்வ சக்தி அதிகாரமானாலும் –
ஸ்வரூப அனுரூபமான உபாயத்தால் அல்லது பெறக் கடவோம் என்கிற-அத்யவசாயத்தை சொல்லுகிறது —
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர காண்டம் -39-30-என்று இருக்கும் இருப்பு –

———————————————————–

வார்த்தை -415-
ஆசார்ய விஷயீகாரமோ -ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரமோ –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமோ -தன்னுடைய அனுசந்தானமோ –
சம்சார நிவ்ருத்திக்கும்
பரமபத ப்ராப்திக்கும் ஹேது என் என்னில் –

இவை நாலும் அன்று –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் ப்ராப்திக்கும் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகை –
ஆசார்ய விஷயீகாரம் அஜ்ஞ்ஞானத்தை போக்கி வெளிச் செறிப்பிக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் சத்துக்கள் சத்கரிக்கப் பண்ணும் –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமும் தன்னுடைய அநுசந்தானமும் தன்னுடைய கால ஷேமம் –

——————————————————————-

வார்த்தை -416-

ரஷகனுடைய ரஷகத்வம் ஆளிட்டுச் செய்விக்கை யாவது -அவனுடைய ஸ்வாமித்வத்துக்கு கொத்தை

சேஷபூதனுடைய சேஷ வ்ருத்தி ஆளிட்டு செய்விக்கையாவது -இவனுடைய சேஷத்வத்துக்கு கொத்தை –

கொத்தையாக வேண்டுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டும் ஸ்வரூபம் ஆகையாலே –

——————————————————————-

வார்த்தை -417-
பட்டர் பிரபன்னரை அழைத்தருளி –
உம்மை எல்லோரும் பிரபன்னர் என்னா நின்றார்கள் ப்ரபன்ன லஷணம் இருக்கும்படி என் -என்று கேட்க
அர்த்த ராத்ரியிலே தனி வழி போகா நிற்க -துஷ்ட மிருகங்களால் மிடைநததொரு காட்டிலே –
முன்னடி தோற்றாதபடி மருண்டு -வர்ஷமும் இடியும் உண்டாய் –
கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினாப் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க –
அவ்வஸ்தையிலே திரு நாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை ப்ரபன்ன லஷணம் என்று அருளினார் –

———————————————————————-

வார்த்தை -418-
திருவேங்கட யாத்ரையாக எழுந்தருளா நிற்க -காட்டிலே ஒரு நாள் விடுதியிலே நீராட
எழுந்து அருளா நிற்க -ஸ்ரீ பாதத்திலே விஷம் தீண்ட –

பரிவராய் இருப்பார் – எங்கே விஷம் தீண்டிற்று என்ன –

அந்த செடியிலே என்ன –

அவர்களும் லஜ்ஜா விஷ்டராய்ப் போக -இத்தை அனந்தாழ்வான் கேட்டருளி
பிரபன்னர் எழுந்தருளின வாறே -நீர் என்ன நினைத்து விஷம் தீர்க்க வேண்டாது இருந்தீர் -என்ன –

பிரபன்னரும்
கடித்த பாம்பு பலவானாகில் -விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறோம் –
கடி உண்ட பாம்பு பலவானாகில் திருக் கோனெரியிலே தீர்த்தமாடி
திருவேங்கடமுடையானை சேவிக்கிறோம் -என்று நினைத்து இருந்தேன்
என்று விண்ணப்பம் செய்தார் –

————————————————————–

வார்த்தை -419-
ஒரு விசேஷ திவசத்திலே பெரிய திருமண்டபத்திலே பெருமாளும் நாய்ச்சிமாரும் புறப்பட்டருளி இருந்து
திருத் திரை யிட்டு ஏகாந்தமாய் இரா நிற்க –
பட்டர் திருவடித் தொழ என்று எழுந்தருளி திருத் திரையை வாங்கினவாறே
பெருமாள்  முனிந்து புறப்படவிட திரு உள்ளமாக –
இவர் புறப்பட்ட அளவிலே

அவனை அழையும் கோள் -என்று திரு உள்ளமாக –
அருளப்பாடு -என்ற அளவிலே
இவரும் வந்து திருவடி தொழ –

நாம் புறப்பட சொன்ன போது என நினைந்து இருந்தாய் என்று கேட்டருள –
பெருமாளும் நாய்ச்சிமாருமாக நினைந்து இருந்தேன் -என்ன –

நம்மை முன்பு என்ன நினைந்து இருப்பதென்று கேட்டருள –
முன்பு ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்து இருப்பேன் என்ன –

நம் ஆணையே -நம்மை முன்பு போலே நினைத்து இரு -என்று திரு உள்ளமாய் அருளினார் –

————————————————————————

வார்த்தை -420-
வைஷ்ணத்வம் ஆவது -வைஷம்ய ஜ்ஞானம் -அதாவது வாஸி அறிகை –
1-குருக்களுக்கும் சத்குருவுக்கும் உள்ள வாசியும் –
2-தேவதாந்தரங்களுக்கும் பர தேவதைக்கும் உள்ள -வாசியும்
3-மந்த்ராந்தரத்துக்கும் மந்திர ரத்னத்துக்கும் உலா வாசியும் –
4-தேஹத்துக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வாசியும் –
5-உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் உள்ள வாசியும் –
6-சாதனாந்தரங்களுக்கும் சித்த சாதனத்துக்கும் உள்ள  வாசியும் –
7-பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசியும் –
8-சம்சாரிகளுக்கும் வைஷ்ணவனுக்கும் உள்ள வாசியும் –
9-ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசியும் –
10-புருஷார்தங்களுக்கும் பரம புருஷார்தத்துக்கும் உள்ள வாசியும் -அறிகை –

அதாவது –
குருக்கள் ஆகிறார் -சம்சார பிரவர்த்தகருமாய் -அஜ்ஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும்
சத்குரு ஆகிறான் சம்சார நிவர்தகனுமாய் -ஜ்ஞான ப்ரதனுமாய் இருக்கும் என்று அறிகை –

தேவதாந்தரங்கள் அஜ்ஞ்ஞராய் அசக்தராய் இருப்பார்கள் என்றும் –
பரதேவதை சர்வஜ்ஞ்ஞனுமாய் சர்வ சகதியுமாய் இருக்கும்  என்று அறிகை –

மந்த்ராந்தங்கள் பிரயோஜநாந்தர ப்ரவர்தகமுமாய் ஸ்வாதந்த்ர்ய ப்ரவர்த்தகமுமாய் இருக்கும் என்றும்
மந்திர ரத்னம் புருஷார்த்த ப்ரவர்தகமுமாய் பாரதந்த்ர்ய பிரகாசமுமாய் இருக்கும் என்று அறிகை

தேஹம் ஜடமாய் பரிணாமியாய் இருக்கும் என்றும் ஆத்மா ஜ்ஞாநானந்த ரூபமுமாய்
ஏக ரூபமுமாய் இருக்கும் என்று அறிகை

உபாசகனுக்கு ஆநுகூல்யஸ்ய சங்கல்பமும் ப்ராதிகூல்ய வர்ஜனமும் வேண்டும்
பிரபன்னனுக்கு அபராதாநாம் ஆலய -அகிஞ்சன என்று இருக்க வேண்டும் -என்று அறிகை

சாதநாந்தரம் சாத்யமுமாய் சாபாயுமாய் இருக்கும் என்றும் -சித்த சாதனம் சித்தமுமாய்
நிர் உபாயுமாய் இருக்கும் என்று அறிகை

பரத்வம் ஸ்வ தந்த்ரமுமாய் துர் லபமுமாய் இருக்கும் -என்றும் -அர்ச்சாவதாரம்
ஸுலபமுமாய் ஆசீத பராதீனமுமாய் இருக்கும் என்று அறிகை

சம்சாரிகள் அநாசார பிரவர்த்தகருமாய் துர்மான ப்ரதர்களுமுமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்ய ப்ரவர்தகருமாய் துர்மான நிவர்தகருமுமாய் இருப்பார்கள் என்று அறிகை –

ஆத்மா வ்யாப்யமுமாய் சேஷமுமாய் இருக்கும் என்றும் -ஈஸ்வரன் வ்யாபகனுமாய்
சேஷியுமாய் இருக்கும் என்று அறிகை

புருஷார்தாந்தரம் அல்பமுமாய் அஸ்திரமுமாய் இருக்கும் என்றும் பரம புருஷார்த்தம்
நித்யமுமாய் நிரதிசயமுமாய் இருக்கும் என்று அறிகை

ஆகிற இது வைஷம்ய ஜ்ஞானம் ஆவது –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 28, 2013

மடந்தையை வண்கம லத்திரு மாதினைத்
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூந் தண்அம் துழாய்மலர்க் கேஇவள்
மடங்குமால்; வாணுத லீர்!என் மடக்கொம்பே.

    பொ-ரை : ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்களே! என்னுடைய பெண்ணானவள், மடந்தைப் பருவத்தையுடையவளாகிய, வளப்பம்பொருந்திய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரியபிராட்டியைப் பரந்த மாலையை அணிந்த திருமார்பிலே வைத்த எம்பெருமானுடைய திருவடிகளின்மேலே அணிந்த தொடுக்கப்பட்ட பூக்களையுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலர்க்கே இவள் சுருண்டு விழுகின்றாள்.

    வி-கு : ‘என் மடக்கொம்பு இவள் துழாய் மலர்க்கே மடங்கும்,’ எனக்கூட்டுக. கொம்பு – ஆகுபெயர். ‘தார் கொள் தடம் மார்பு’ என மாறுக.

    ஈடு : ஏழாம் பாட்டு. 2‘அமிர்தத்திற்காகத் திருப்பாற்கடலைக் கடைகிற காலத்திலே பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே வைத்தருளினவனுடைய திருவடிகளிற் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படாநின்றாள்,’ என்கிறாள்.

மடந்தையை – 1எப்போதும் ஒக்க போகத்திற்குத் தகுதியான பருவத்தையுடையவளை. வண் கமலத் திருமாதினை – அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய திருவாகிற பெண் பிள்ளையை. ‘சாக்ஷாத் இலக்குமியை’ என்றபடி. தடம்கொள் தார் மார்பினில் வைத்தவர் – பெரிய பிராட்டியாருக்குத் திவ்ய அந்தப்புரமாகப் போகும்படி இடமுடைத்தாய், இறைமைத் தன்மைக்கு அறிகுறியான மாலையையுடைத்தான மார்பிலே வைத்தவர்.

    மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் – 2‘மஹாலக்ஷ்மியானவள் பார்த்துக்கொண்டிருக்கின்ற எல்லாத் தேவர்களுக்கும் நடுவில் பகவானுடைய திருமார்பை அடைந்தாள்’ என்கிறபடியே, அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் 3‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ என்று தன்பாடு ஏற வர, அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின்மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருத்துழாய்ப் பூவை ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள். வாள் நுதலீர் – ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்களே! 4‘உங்களைப்போன்று இவளைக் காண்பதுஎப்போது?’ என்பாள், ‘வாள் நுதலீர்’ என்று விளிக்கிறாள். என் மடக்கொம்பே ‑ 1என்னைப் பிரியாமல் எல்லா அளவிலும் விகாரம் இல்லாதவளாய் இருக்குமவள் படும் பாடே இது!

வெருவு மாலமும் பிறையும்வெவ் விடையவற் கீந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற் கருளி
மருவு தொல்பெரு வளங்களும் வேறுற வழங்கித்
திருவு மாரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி.’

  என்பது கம்ப ராமாயணம்

தடம் கொள் மார்பில் வைத்து
அழகிய தாமரைப் பூவை இருப்பிடம் ஆக கொண்ட
திவ்ய அந்தபுரம் தடம் கொள்
ஐஸ்வர்ய சூசகம்
அமிர்த
மால் –
அமுது கொண்டு உகந்த
சர்வ தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்க தானே ஏறி உட்கார்ந்து
அமம் மா அம்மா இம்மா ர்வு பெற வேண்டும் என்று ஏறி வர
தர்சநீயமான செவ்வி
மடங்கும் மால்
நுதலீர் -உங்களைப் போலே இவளைக் காண்பது என்றோ –
மாறுபாடு படுகிறாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 28, 2013

மாதர்மா மண்மடந் தைபொருட்டு ஏனமாய்,
ஆதிஅம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல்அணி பைம்பொன் துழாய்என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.

    பொ-ரை : என்னுடைய பெண்ணானவள் காதலையுடைய பூமி தேவியின்பொருட்டுப் பண்டைக்காலத்தில் வராக அவதாரத்தைச் செய்து அகன்ற பூ உலகத்தை ஒட்டு விடுவித்து எடுத்து வந்தவருடைய திருவடிகளின்மேலே அணிந்த பசிய அழகிய திருத்துழாய் என்றே சொல்லும்படியான மயக்கத்தை அடைந்தாள்.

    வி-கு : ‘ஆதி அம் காலத்து மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடம் கீண்டவர்’ என்க. ‘என்றன் மடந்தை மால் எய்தினள்,’ என மாறுக.

    ஈடு : ஆறாம் பாட்டு. 4‘மனிதத்தன்மை அழியாமல் நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற்போல அன்றிக்கே,ரீபூமிப் பிராட்டிக்காகத் தன்னை அழிய மாறியும் உதவினவனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.

    மாதர் – அழகு. 1நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னுதல்; 2மாதர் என்று காதலாய், ‘சினேகத்தையுடையவள்’ என்னுதல். மா மண் மடந்தைபொருட்டு – ஏற்றத்தையுடையவளான ஸ்ரீபூமிப்பிராட்டியின்பொருட்டு. ஏனமாய் – 3‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே, காதலி உடம்பு பேணாமல் கிடக்க, காதலன் உடம்பு பேணி இருக்கை காதலுக்குத் தக்கது அன்றே? ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே, நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவையுடையவனாய். ஆதி -வராக கல்பத்தின் ஆதியிலே. அம் காலத்து – அழகிய காலத்தில் . 4காப்பாற்றுகின்ற சர்வேசுவரன் தன் விபூதியைக் காப்பதற்காகக் கொண்ட கோலத்தை அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.

    அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் – பெரிய இவ்வுலகத்தை அண்டப்பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே 5‘அந்த வராக நயினாருடைய மயிர்க்கால்களில் உள்ளமஹரிஷிகள் துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே, ‘சனகன் முதலானோர் இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது. இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள். என்றன் மடந்தையே – ‘அவன் அன்றோ பிச்சு ஏறுவான்?’ என்று இருப்பவளாதலின், ‘என் மடந்தை’ என்கிறாள். 1‘இப்பருவத்தைக் கண்டார் படுமதனை இப்பருவமுடைய இவள் படுவதே!’ என்கிறாள்.

பூமிப் பிராட்டிக்காகா தன்னை அழிய மாறி -மேலும் சௌலப்யம்
பெருமை பொருந்திய பூமி பிராடிக்காக
அகலிடம் கீண்டவன் பாதம் மேல் அணி
மாதர் -நிருபாதிக ஸ்த்ரீத்வம்
ஏனமாய் -மாசுடம்பில்
பிரணி யிநித்வம் -தோன்ற
பாசி தூத்து கிடந்த உடம்பு பேணாமல் கிடக்க –
நீ ருக்கும் செற்றுக்கும் இறாயாத
அழகிய காலம் -கோலம் அனுபவிக்க வந்த
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
மா ல் பிச்சு ஏறினாள்
அவன் தான் பிச்சேரும்படி பருவம்
அவன் பெரிய பிராட்டியை திரு மார்பில் கொண்டவன் திருத்துழாய்
மூன்று தேவி சேர்த்தி
மடந்தை -அனுபவிக்கிறார் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 28, 2013

தோளிசேர் பின்னை பொருட்டுஎருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவல னார்,குடக் கூத்தனார்
தாள்இணை மேல்அணி தண்அம் துழாய்என்றே
நாளும்நாள் நைகின்ற தால்என்றன் மாதரே.

    பொ-ரை : ‘என்னுடைய பெண்ணானவள், ஒத்த தோள்களையுடையவளான நப்பின்னைப்பிராட்டி காரணமாக ஏழ் எருதுகளையும் தழுவிக்கொண்டவரும், ஆயர் வமிசத்தில் பிறந்தவரும், குடக்கூத்தை ஆடியவருமான கண்ணபிரானது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய் என்றே நாளுக்குநாள் வருந்தாநின்றாள்,’ என்கிறாள்.

    வி-கு : தோளி – தோள்களையுடையவள். தழீஇ – தழுவி; சொல்லிசை அளபெடை. கோளியார் – கொண்டவர். ‘மாதர் நைகின்றது,’ என மாறுக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘எல்லா ஆத்துமாக்களுக்கும் பரனாய்ப் பரமபதத்தில் உள்ளவனாய்க் கிட்டுதற்குமுடியாதவனாய் இருக்கிறவன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை என்னால் தேடப்போமோ?’ என்ன, ‘ஆனால், இங்கே என்னைப் போன்றாள் ஒருத்திக்காகத் தன்னைப் பேணாதே எருது ஏழ் அடர்த்த கிருஷ்ணன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

    தோளி சேர் பின்னை – 2‘ஒத்த சீலம் வயது ஒழுக்கம் இவற்றையுடையவளும், ஒத்த குலம் இராஜ லக்ஷணம்

இவற்றையுடையவளுமான பிராட்டிக்குப் பெருமாள் தக்கவர்; பெருமாளுக்குப் பிராட்டியும் தக்கவள்,’ என்கிறபடியே, குடிப்பிறப்பு முதலியவைகளால் பெருமாளுக்கு ஒத்தவளாய்க் ‘கறுத்த கண்களையுடையவள்’ என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற்போலே, மற்றை அழகு எல்லாம் கிருஷ்ணனோடு ஒத்திருக்கும்; தோள் அழகு அவனைக்காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது. அவளுடைய அவயவ சோபையிலே தோற்று அத்தோளோடே அணைக்கைக்காக; எருது ஏழ் தழீஇக் கோளியார் – எருதுகள் ஏழனையும் தழுவிக் கொள்ளுமவர். அடுத்த கணத்திலே அவளைத் தழுவப் பார்க்கிறான் ஆகையாலே, அவளைத் தழுவினாற்போலே இருக்கிறதாயிற்று எருதுகளோடு பொருததும்; ஆகையாலே அன்றோ ‘எருது ஏழ் தழீஇ’ என்கிறது? அவளைப் பெறுகைக்குக் காரணம் ஆகையாலே, 1அவற்றின் கொம்போடே பொருததும் இக்கொம்போடே சேர்ந்தாற்போலே போக ரூபமாய் இருக்கிறபடி. கோவலனார் குடக்கூத்தனார் – அவளைப் பெறுகைக்குத் தகுதியான 2குடிப்பிறப்பையும் செருக்கையும் உடையவர். வில் முரித்தாலும் இக்ஷ்வாகு வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே, எருது ஏழ் அடர்த்தாலும் ஆய்க்குலத்தில் குறை உண்டாகில் பெண் கொடார்கள் அன்றே ஆயர்கள்? ஆதலின், அதனை அடுத்துக் ‘கோவலனார்’ என்கிறது.

    தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே – அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்பட்டது. நாளும் நாள் நைகின்றது – ஒருநாள் நைகைக்கும் 3ஆஸ்ரயம் இல்லாத மென்மையையுடையவள், நாள்தோறும் நையா நின்றாள். 4நைவதற்குரிய சரீரத்தையும் கொடுத்து நையப்பண்ணும் விஷயமே அன்றோ? என்றன் மாதர் – 1என் பெண் பிள்ளை. அன்றிக்கே, தன்னைப்போலே பிறந்து விலங்கு முரித்துக் கொண்டுபோய்ப் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் முதலானவைகளோடே பொருது, 2‘தழும்பு இருந்த தாள் சகடம் சாடி’ என்கிறபடியே, தழும்பு ஏறி இருப்பாள் ஒருத்தியோ என் பெண்பிள்ளை என்பாள், ‘என்மாதர்’ என்கிறாள் என்னுதல். என்றது, 3‘தொடுங்கால் ஒசியும் இடை இளமான் அன்றோ?’ என்கிறாள் என்றபடி.

சர்வ ஸ்மாத் பரன் -கிட்ட முடியாதே என்ன
என்னைப் போன்ற நப்பின்னை பிராடிக்காக எருதுகள் மேலே விழுந்த
கூத்தன் -தன்னைப் பேணாதே கிருஷ்ணன் -திருவடிகளில் சாத்திய திருத் துழாய்
நைகின்றாள் –

கோவலனார் குடக்கூத்தனார் –
துல்ய சீல வா வ்ருத்தாம்
அபி தீஷிணாம்
சீதை பிராட்டி கண் அழகுக்கு ராகவன் முழுவதும் ஒப்பு
அது போலே இவள் தோளுக்கு -நப்பின்னை பிராட்டிக்கு

விஞ்சி இருக்கும் தோள் அழகு உடையவள்-அஸி தீஷிணா போலே –
அல்லாத அழகு ஒத்து இருந்தாலும் –
இது ஒன்றுமே ஒரு தட்டு -அவன் முழுவதும் ஒரு தட்டு
அவயவ அழகில் தோற்று எருதுகளை
தழுவினான் அநந்தரம் -அவளை தழுவினது போலே
கொம்பு உடன் சேர்ந்தது இக்கொம்பு உடன் சேருவது போலே போக ரூபம்
வஞ்சிக்கொம்பு -போன்ற ஸ்திரீகள் –

கோவலனாய் ஆனதே நப்பின்னை பிராட்டி கொள்வதற்கு
இரண்டு தாயார் இரண்டு குலம் -ருக்மிணி பிராட்டி நப்பின்னை பிராட்டி
ஷத்ரிய இடைய குலம்
செருக்கையும் உடையவன் குடக்கூத்தன் –
குயவன் -ஸ்ரீ வைஷ்ணவ ததீயாராதனம் நுழைந்த வ்ருத்தாந்தம்
சக்கரம் மாற்றி சுற்றி பழக்கம் -அடே குசவா சொல்லி -எப்படி கண்டு பிடித்தாய்
கண்ணன் -கோவலன் -குடக் கூத்து ஆடி மெய்ப்பித்தான்
வில் முறித்தாலும் இஷ்வாகு குலம் ஜனகன் பெண் கொடுத்தது போலே
உதவின கிருஷ்ணன்

சரீரம் கொடுத்து நலிய வைக்கிறான் –
தழும்பு இருந்த தாள் -திருவிருத்தம்
என்னுடைய பெண் பிள்ளை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 28, 2013

கோதுஇல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல்அணி பைம்பொன் துழாய்என்றே
ஓதுமால்; ஊழ்வினை யேன்தடந் தோளியே.

    பொ-ரை : ஊழ்வினையேனான என்னுடைய பெண்ணானவள், ‘சமயிகள் குற்றம் இல்லாத வளவிய கல்யாணகுணங்களைக் கொண்டு ஒவ்வொரு குணத்திற்குரிய உயர்வின் பேதங்களைச் சொல்லிப் பிதற்றும்படியான பிரானாகிய பரனுடைய திருவடிகளின்மேலே அணிந்த பசுமையான அழகிய திருத்துழாய்’ என்றே சொல்லாநின்றாள்.

    வி-கு : ‘சமயிகள் வண்புகழ் கொண்டு பேதங்களைச் சொல்லிப் பிதற்றும் பரன்’ என்க. பிதற்றும் – பிதற்றப்படுகின்ற. பிரான் –

உபகாரகன், ‘தடந்தோளி ஓதும்’ என மாறுக. ஊழாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாய நியதி. தோளி -தோளையுடையவள். ‘சமயிகள்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற்காண்க.

    ஈடு : நாலாம் பாட்டு. 1‘பெருக்காறு வற்றினாற் போலே ஒருகால் எல்லாரையும் வாழ்வித்துப் போன அவதாரங்களில் உள்ளதனை நான் இப்போது எங்கே தேடுவேன்?’ என்ன, ‘அது தவிருகிறேன்; என்றும் ஒக்க ஓரே தன்மையனாய் இருக்கின்ற பரமபத நிலையன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

பரன் பாதங்கள்மேல் அணி’ என்றது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘பெருக்காறு வற்றினாற் போலே’ என்ற
இவ்விடத்தில் ‘பூகத ஜலம்போலே அந்தர்யாமித்வம்; ஆவரணஜலம் போலே
பரத்வம்; பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே
விபவங்கள்;அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்,’ என்னும்
பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீ சூக்திகளை ஒப்பு நோக்குக.

 

    கோது இல் — குற்றம் அற்ற; ‘குற்றங்கட்கு எதிர்த்தட்டான’ என்றபடி. குணத்திற்குக் கோது இல்லாமையாவது, ஒரு குணத்தை அநுசந்தித்தால் மற்றைய குணங்களிற்போகாதபடி காற்கட்டுகை. 2அப்படி இராதாகில், அல்லாத விஷயங்களிற்காட்டில் வேற்றுமை இல்லையே அன்றோ? வண்புகழ் – கல்யாண குணங்கள். கொண்டு – இக்குணங்களைச் சொல்லிக்கொண்டு. சமயிகள் – 3ஒரோ குணத்தில் கால் தாழ்ந்து மற்றைய குணங்களில் போகமாட்டாதவர்கள்; என்றது, ‘சீல குணம் துவக்க வற்று; அதிலும் வீரகுணம் துவக்க வற்று; அதிலும் உருவகுணமான அழகு முதலானவைகள் துவக்க வல்லன,’ என்று இவற்றிலே நிஷ்டரானவர்கள் என்றபடி. இனி, சொன்ன இவர்களை ஒழிய, 4‘சத்வித்யா நிஷ்டர், தகரவித்யா நிஷ்டர்,உபகோசல சாண்டில்யாதி வித்யா நிஷ்டரைச் சொல்லவுமாம்.

சர்வஜ்ஞத்வம் முதலான குணங்களோடு கூடின சொரூபம் உபாசிக்கத்
தக்கது’ என்று கூறுபவர்கள் சத்வித்யா நிஷ்டர். ‘குணமும் உபாசிக்கத்
தக்கது; சொரூபமும் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுமவர்கள் தகர வித்யா
நிஷ்டர். ‘கண்களில் வசிக்கின்ற சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று
கூறுமவர்கள் உபகோசலவித்யா நிஷ்டர். ‘உலகமே உருவாயுள்ள
சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் சாண்டில்ய வித்யா
நிஷ்டர்.

பேதங்கள் சொல்லி – தாங்கள் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி; என்றது, சீல குணத்தை அனுபவித்து, இதுவும் ஒரு குணமே! இது போலேயோ வீர குணம்!’ என்றாற்போலே சொல்லுதல் என்றபடி. பிதற்றும் – அந்தக் குணங்களிலே ஈடுபட்டு ஜ்வரசந்நி பதிதரைப்போலே அடைவு கெடக் கூப்பிடா நிற்பர்கள். பிரான் பரன் – 2அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன்; என்றது, ‘இமையோர்தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்’ என்கிறபடியே, இக்குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே ‘பிரான்’ என்கிறாள் என்றபடி. 

    பரன் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் – ‘சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி’ என்கிறபடியே, மிக்க சீர்த்தொண்டரான நித்தியசூரிகள் அவன் திருவடிகளிலே சார்த்தினதாய், அதனாலேயே மிகவும் விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று எப்போதும் சொல்லாநின்றாள். ஊழ்வினையேன் – 3வந்தது அடைய முறையாம்படியான பாவத்தைப் பண்ணின யான். ஊழ் – முறை. தடந்தோளியே – 4இப்படிக் கைவிஞ்சினஅழகையுடையவள், குணங்களுக்கு இருப்பிடமான அவன் திருவடிகளிலே திருத்துழாயை ஆசைப்படாநின்றாள். இத்தோள் அழகுக்கு இலக்கு ஆனாரோ, இவளோ, இப்படி அடைவு கெடப் பிதற்றுவார் என்பாள், ‘தடந்தோளி’ என்கிறாள்.

பெருக்காறு -அவதாரம் -ஆற்றில் வெள்ளம் -யென்றோ வரும் போலே
நித்தியமாய் உள்ள பரமபத நாதன் திருவடிகளில் உள்ள திருத் துழாய்
ஏக ரூபமாய் இருப்பானே
கோது இல் புகழ் கொண்டு
சமயிகள் –
பிதற்றும் பிரான் –
அதற்குள்ளும் பேதங்கள் –
பரன் பாதங்கள் மேல் பசுமை பொன் போலே திருத்துழாய்
ஹேயப் பிரத்யநீகன்
கோது -இல் -வேறு எங்கும் போக மாட்டாத ஒவ்வொரு குணங்களும்
குணாநதரம் போக மாட்டாதபடி கால் கட்டி
சமயிகள் -சீல குணம் உருக்கும் -வீர -ரூப -அதிலும் ஒவ்வொன்ற்றிலே நின்று
ஸ்ரீ பாஷ்யம் -3 அத்யாயம் 32 வித்யை சொல்லி உபாசனம் செய்பவரை
குணங்கள் சிறப்பை சொல்லி பேதங்கள்
பெரும் தேவர் குழாம் பிதற்றும் பிரான்
தோஷ போக்யத்வம்
தயா பர துக்க நிரசனம் -துக்கிக்த்வம் போன்ற பேதங்கள் –
பிரான் -உபகாரகன் பிதற்றும்படி செய்ததால்
நெஞ்சல் நினைப்பதரிதால் -குணங்களை நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே
சூட்டு நன்மைலைகள் -மிக்க சீர் தொண்டர் சாத்திய திருத்துழாய்
அநந்ய பிரயோஜனர் சமர்ப்பித்த
வினையேன் -வந்தது துக்கம் அடைய –
தடம் தோ ளியே
கை விஞ்சிய அழகு
திருத்துழாய் ஆசைப்படா நின்றாள்
அவன் சொல்ல வேண்டியதை –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 28, 2013

பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,
தேவர்கள் மாமுனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல்அணி செம்பொன் துழாய்என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.

    பொ-ரை : ‘வலிய தீய வினைகளைச் செய்த என்னுடைய பெண்ணானவள், ‘பாக்களோடு கூடின வேதங்களில் சிறந்த மாலைகளைக் கொண்டு தேவர்களும் பெருமை பொருந்திய முனிவர்களும் துதிக்கும்படி உலகத்தை அளந்து நின்ற சிவந்த திருவடிகளின்மேலே அணிந்த சிவந்த பொன் போன்று விரும்பத்தக்க திருத்துழாய்’ என்றே கூப்பிடாநின்றாள்.’ வி-கு : ‘தேவர்கள் முனிவர்கள் நன்மாலை பல கொண்டு இறைஞ்ச நின்ற சேவடி’ என்க, ‘கோதை கூவும்,’ என மாறுக.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘ஓர் ஊருக்காக உதவினதே அன்றிக்கே, ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல் உள்ளது பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

    பா இயல் வேதம் – பாவாலே இயற்றப்பட்ட வேதம், பா – செய்யுள். 2‘அநுஷ்டுப்’ என்றும், ‘பிருஹதீ’ என்றும், ‘திருஷ்டுப்’ என்றும் இவை முதலாகச் சொல்லப்படுகின்ற சந்தஸ்ஸூக்களையுடைத்தான வேதம் ஆதலின், ‘பா இயல் வேதம்’ என்கிறார். நல் மாலை பல கொண்டு – அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு; என்றது, ஸ்ரீ புருஷசூக்தம் முதலியவைகளை. 3‘யாதொரு அடையத் தக்க பரம்பொருளின் சொரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், 4‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் யானே’ என்றும் சொல்லப்படுகின்றவாறே மற்றைய இடங்களிலும் சொல்லப்படுகின்றவன் அவனேயாகிலும், சொரூப ரூப குணங்களுக்கு நேரே வாசகங்களாக இருக்கையாலே, அவற்றைநன்மாலைகள்’ என்கிறார். 1அன்றிக்கே, ‘ஆராதனத்திலும் விபூதி விஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும் ஸ்ரீ புருஷசூக்தம் முதலானவைகளையும் கொண்டு’ என்னலுமாம்.

    தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற – தேவர்களும் சனகன் முதலிய முனிவர்களும் 2‘சுவர்க்கத்திலுள்ள தேவ கூட்டத்தாலும் பூமியிலுள்ள மனிதர்களாலும் ஆகாயத்தில் திரிகின்ற வைமாநிகர்களாலும் துதிக்கப்பட்டவனாய் உலகத்தை அளந்த அந்தத் திரிவிக்கிரமன், எப்பொழுதும் எனக்கு மங்களம் உண்டாகுமாறு துணையாக வேண்டும்,’ என்கிறபடியே துதித்துப் பற்றும்படி திரு உலகு அளந்து நின்ற. சே அடி – 3‘மா முதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி’ என்கிறபடியே, தலையிலே பூப்போலே வந்திருக்கிற போது மேலே பார்த்தவாறே அனுபவிக்கத் தகுந்ததாய் இருந்த சிவப்பையுடைத்தாய் இருக்கை. 4‘அடியில் ராகம் அன்றோ இப்படி ஆக்கிற்று இவளை? அன்றிக்கே, செவ்விய அடி என்றாய், அடிக்குச் செவ்வையாவது, 5‘பொதுநின்ற பொன்னங்கழல்’ என்கிறபடியே, அடியார் அடியர் அல்லார் என்ற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் வைத்த செவ்வை. 6‘தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே’ என்று ஈடுபடும்படி அன்றோ அடியில் நேர்மை இருப்பது?

    சே அடிமேல் அணி செம்பொன் துழாய் என்றே கூவுமால் – அத்திருவடிகளிற்சார்த்தின விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று சொல்லிக் கூப்பிடாநின்றாள்.‘தோளிற்சார்த்தின மாலை கொடுக்கிலும் கொள்ளாள்’ என்பாள், ‘சே அடி துழாய் என்றே கூவுமால்’ என்கிறாள். ஆல் – இது ஒரு ஆச்சரியம் இருந்தபடி என்னே! அன்றிக்கே, அசையுமாம். கோள்வினையாட்டியேன் – முடித்து அல்லாது விடாத பாவத்தைச் செய்த என்னுடைய. அன்றிக்கே, கோள் என்று மிடுக்காய், ‘அனுபவித்தே தீர்க்க வேண்டும்படியான பாவம்’ என்னுதல். 1கோதையே – தன்மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமதனைத் தான் படுவதே! இம்மாலையையுடைய இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலையான இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலைக்கு மால் அவன்; அம்மாலுக்கு மால் இவள்.

கோதை என்பது, ‘பூமாலை, பெண்களின் தலைமயிர், பெண்’ முதலிய பல
பொருள்களைக் குறிப்பதொரு பெயர்ச்சொல். முதல் இரண்டு
பொருள்களையும் அருளிச்செய்கிறார், ‘தன் மாலையையும்’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருளை அருளிச்செய்கிறார், ‘இம்மாலையையுடைய இவள்’
என்று தொடங்கி. கோதை என்பது, பிராட்டி தன்னைச் சொல்லுகிறதாகத்
திருவுள்ளம் பற்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மார்வத்து மாலையான’
என்று தொடங்கி. மார்வத்து மாலை – பிராட்டி. ‘உன் திருமார்வத்து மாலை
நங்கை’ என்பது தமிழ்மறை. (திருவாய். 10. 10 : 2.)

      ‘கோதை’ என்றதனை நோக்கி, ‘அம்மாலுக்கு மால் இவள்,’ என்கிறார்.
‘அவனுடைய வியாமோஹத்துக்கு விஷயமாயிருப்பவள்’ என்றபடி. மால் –
வியாமோகம்; எல்லார்க்கும் அறப்பெரியவன்.

ஊருக் காக செய்த உபகாரம் சொன்னாள் முன்பு
நாட்டுக்காக உதவினவன்
தேவ லோகம் செய்த உபகாரம்

அளவியற்சந்தம்’ என்றும், ‘அளவழிச் சந்தம்’ என்றும் சந்தம் இரு
வகைப்படும். நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த
இருபத்து மூன்றடியானும் வந்து, தம்முள் ஒத்தும், குருவும் லகுவும் ஒத்தும்
வந்தன அளவியற்சந்தம் எனப்படும். எழுத்தொவ்வாதும் எழுத்தலகு
ஒவ்வாதும் வருவன அளவழிச் சந்தம் எனப்படும். எட்டெழுத்தடி
அளவியற்சந்தம் ‘திருஷ்டுப்’ என்றும், ஒன்பதெழுத்தடி அளவியற்சந்தம்
‘பிருஹதீ’ என்றும் பெயர் பெறும். ‘சந்தம், பா’ என்பன, ஒரு
பொருட்கிளவிகள்.

3. ‘எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்றவன் சர்வேசுவரனாயிருக்க,
புருஷ சூக்தம் முதலானவைகளை மட்டும் ‘நன்மாலைகள்’ என்பது என்?’
என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘யாதொரு’ என்று தொடங்கி. இது, கடவல்லி உபநிடதம், 1. 2 : 15.

சந்தஸ் உடைய வேதம்

நல் மாலை பல கொண்டு – அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு

ஸ்தோத்ரம் செய்து –

அன்றிக்கே’ என்று தொடங்கி வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்.
இப்பொருளில் வேதங்களும் நன்மாலைகளும் என்று உம்மைத் தொகை.
முன்னைய பொருளில் வேற்றுமைத் தொகை; ‘வேதத்திலேயுள்ள
நன்மாலைகள்’ என்பது பொருள்.

வேதம் எல்லாம் அவனை சொன்னாலும் ஸ்பஷடமாக ஸ்வரூப ரூபா குணங்கள் புருஷ சுக்தம் சொல்லும்

வேதம் -நன்மாலை இரண்டையும் கொண்டு –

தேவர்கள் -சனகாதிகளும் ஸ்தோத்ரம் செய்ய

சேவடி -மா மலர் அடிப்போது கவிழ்த்து -அலர்த்தி – –திருவாசிரியம், 5.

தலையிலே -அடியில் ராகம் இ றே -ஆழ்வாருக்கு 

ராகம் சிகப்பு ஆசை –

செவ்விய அடி உயர்ந்து பொது நின்ற பொன் அம் கழல் வாசி அற அனைவர் தலைகளையும் தீண்டி

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே

என்றே கூவுமால்

தோளில் சாத்தின திருத்துழாய் கொள்ளாள்

வினை -வலிமை கோள் -முடித்து அல்லது விடாத பாபம் -அனுபவத்தாலே விநாச்யம்

கோதையே -மாலை -முடி அழகையும் பார்த்து அவன் பட வேண்டியது

இம்மாலையை உடைய இவள் -வேறு ஒரு மாலை ஆசைப்படுகிறாள்

இவளே மார்பத்து மாலை நங்கை -மாலுக்கு மால் இவள் வ்யாமோஹம்

அம்மாலுக்கு இவள் மால்

கோதை என்பது, ‘பூமாலை, பெண்களின் தலைமயிர், பெண்’ முதலிய பல
பொருள்களைக் குறிப்பதொரு பெயர்ச்சொல். முதல் இரண்டு
பொருள்களையும் அருளிச்செய்கிறார், ‘தன் மாலையையும்’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருளை அருளிச்செய்கிறார், ‘இம்மாலையையுடைய இவள்’
என்று தொடங்கி. கோதை என்பது, பிராட்டி தன்னைச் சொல்லுகிறதாகத்
திருவுள்ளம் பற்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மார்வத்து மாலையான’
என்று தொடங்கி. மார்வத்து மாலை – பிராட்டி. ‘உன் திருமார்வத்து மாலை
நங்கை’ என்பது தமிழ்மறை. (திருவாய். 10. 10 : 2.)

      ‘கோதை’ என்றதனை நோக்கி, ‘அம்மாலுக்கு மால் இவள்,’ என்கிறார்.
‘அவனுடைய வியாமோஹத்துக்கு விஷயமாயிருப்பவள்’ என்றபடி. மால் –
வியாமோகம்; எல்லார்க்கும் அறப்பெரியவன்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 28, 2013

வல்லிசேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல்அணி நாறு துழாய்என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.

    பொ-ரை : செய்த தீவினையையுடையேனாகிய என்னுடைய பாவை போன்ற பெண்ணானவள், ‘கொடிபோன்ற நுண்ணிய இடையையுடைய ஆயர் பெண்களோடும் வரம்பு அழிந்த செயல்களைச் செய்து குரவைக்கூத்தைக் கோத்து ஆடிய கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே அணிந்த வாசனை வீசுகின்ற திருத்துழாய்,’ என்றே சொல்லாநின்றாள்.

    வி-கு : ‘பாவை சொல்லும்’ என மாறுக. பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நல்லடி’ என்கிறாள். ‘வாலறிவன் நற்றாள் என்றார் திருவள்ளுவனாரும்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 2‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான சர்வேசுவரன் பிரளய ஆபத்திலே உடைமையாகிற தன் உலகத்தைக் காப்பாற்றினானாகில், அதுவும் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, ‘அது உடல் அன்றாகில் தவிருகிறேன்; என் பருவத்தினையுடைய பெண்களுக்கு உதவின இடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.வல்லி சேர் நுண் இடை – 1‘வள்ளி மருங்குல்’-பெரிய திருமொழி, 3. 7 : 1.– என்றாற்போலே, வள்ளிக்கொடி போலே இருக்கிற இடையையுடையவர்கள் என்னுதல்; நுண்ணிய இடையையுடைய வல்லி போன்ற வடிவினையுடையவர்கள் என்னுதல். இடைக்கு உபமானம் இல்லாமையாலே, ‘நுண்ணிடை’ என்கிறது. ஆய்ச்சியர்தம்மொடும் – திருவாய்ப்பாடியில் இவள் பருவத்தையுடைய பெண்கள் பலரோடும். 2கொல்லைமை செய்து – வரம்பு அழிந்த செயல்களைச் செய்து. அன்றிக்கே, ‘தன் அழகு முதலியவைகளாலே அவர்கள் மரியாதையை அழித்து’ என்னலுமாம். குரவை பிணைந்தவர் – அவர்களோடு தன்னைத் தொடுத்தபடி. இதனால், ‘என் பருவத்தினையுடைய பெண்கள் பலர்க்கும் உதவினவர், அவர்கள் எல்லார் விடாயையுமுடைய எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்றபடி.

    நல் அடிமேல் அணி – 4பெண்களும் தானுமாய் மாறி மாறித் துகைத்த திருத்துழாய் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். பிரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுபவள் அன்றே இவள்? நாறு தூழாய் – 5அவர்களும் அவனுமாகத் துகைத்ததுஎன்று அறியுங்காணும் இவள் வாசனையாலே; 1‘கலம்பகன் நாறுமே அன்றோ?’ என்றே சொல்லுமால் – 2நினைத்தது வாய்விடமாட்டாத பெண்மை எல்லாம் எங்கே போயிற்று? சூழ்வினையாட்டியேன் – தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். 3‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள், தன்னைச் ‘சூழ்வினையாட்டியேன்’ என்கிறாள். பாவையே – 4‘எல்லா நிலைகளிலும் தன் அகவாயில் ஓடுகிறது பிறர் அறியாதபடி இருக்கக்கூடிய இயல்பாகவே அமைந்த பெண்மையையுடைய இவள் தன் பேற்றுக்குத் தான் வார்த்தை சொல்லும்படி ஆவதே!

பருவ பெண்களை ரஷித்தவன்
முன்பு சர்வ ரஷகன் -அது உன் பேற்றுக்கு உடலாகுமா
எல்லா பாசுரங்களிலும் திருத் துழாய்
பறிக்கும் நாள் விதி உண்டே ஏகாதசி பறிக கூடாதே
விலை கொடுத்து வாங்க கூடாது
இந்த பதிகம் சேவித்தால் திருத்துழாய் சமர்ப்பித்து போலே
இடை -வள்ளிக் கோடி போலே
குரவை கூத்து
நல்லடி மேல் அணிந்த
வள்ளி மருங்குல் போலே
இடைக்கு உபமானம் இன்றி நுண் இடை
பலருக்கும் உதவி
அவர்கள் எலாரும் விடாய் இவள் ஒருத்திக்கு
கொல்லமை -வரம்பு அழிய
மரியாதை கட்டுப்பாடு அழித்து
இது ஒரு அற்புதம் கேளீர் -காவல் கடந்து -கயிற்றை மாலையாக்கி
சௌந்தர் யாதிகளால்
நல்லடி மேலடி -பெண்களும் இவனும் மிதித்து
பிரமச்சாரி அடி திருத் துழாய் வேண்டாம்
பரிமளம் கொண்டே அறி வாள் -இருவரும் துகைத்த
கலம்பகம்
என்றே சொல்லுவாள்
வாயைத் திறந்து
ஸ்த்ரீத்வம் குடி போயிற்றே
பெண்மை என் -எங்கே போனது உண்மை உரைக்கின்றாள் பெரிய திருமொழி பாசுரம்
சூழ் வினை யாட்டியேன்
சூழ்ந்து அகப்படுத்திக் கொண்ட பாபம்
வார்த்தை சொல்கிறது என் பாபம்
சுமந்த்ரன் -பிராட்டி வார்த்தை சொல்லாமல்
துக்கத்திலும் வார்த்தை சொல்லாமல் –
ஸ்ரீராமா. அயோத். 58 : 85. இது, பெருமாளையும் இளைய
பெருமாளையும் பிராட்டியையும் கங்கையின் கரையிலே விட்டு மீண்டு
அயோத்தியா நகரத்திற்கு வந்த சுமந்திரன் கூறுவது.
இங்கே வாயைத் திறந்து வார்த்தை சொன்னது தான் செய்த
பாபம்
பாவையே -இவள் மனசில் உள்ளதை அறிய முடியாமல்
தனது பேற்றுக்கு தானே பேசும்படி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 28, 2013

இரண்டாந்திருவாய்மொழி – ‘பாலனாய்’

முன்னுரை

    ஈடு : 1இராம விரகத்தில் திருவயோத்தியில் உள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய உறுப்புகளுமாய்ப் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்; இக்கூப்பீட்டை அல்லாதார் மிகச் சிறிய பிரயோஜனங்களுக்காகப் புறம்பே கூப்பிடுகிறபடியைக் கண்டு, ‘இது இவ்விஷயத்திலே ஆகப் பெற்றது இல்லையே!’ என்று நொந்து, ‘நாம் முந்துற முன்னம் இவ்விஷயத்திலே கூப்பிடப்பெற்றோம் அன்றோ?’ என்று உகந்தார், ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில்; ‘அவ்வளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தகுந்த உறுப்புகளை உடையோமாகவும் பெற்றோம்,’ என்றார் ‘சன்மம் பலபல’ என்ற திருவாய்மொழியில்; அல்லாதார் தங்கள் தங்களுடைய உறுப்புகளைப் பாழே போக்குகைக்கு அடியான ஐஸ்வரிய கைவல்யங்களிலே ஈடுபாடு உள்ளவராய்க் கேட்டினை அடைகிறபடியைக் கண்டு, அவற்றினுடைய சிறுமை, நிலையின்மை முதலிய தோஷங்களையும், சர்வேசுவரன் அடையத்தக்க மேலான பலமாய் இருக்கிறபடியையும் உபதேசித்து, ‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,’ என்றார், ‘ஒரு நாயகம்’ என்ற திருவாய்மொழியில்.

    2பிராசங்கிகமாக, இவ்வொரு நாயகம் அருளிச் செய்தவரே அன்றோ ‘சூழ்விசும்பு அணிமுகி’லும் அருளிச்செய்தார்?இதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். என்றது, ‘இது கண்கூடாகக் காண்பது போன்று இச்சரீரம் நீங்கிய பின்னர் அதுவும் காண அன்றோ நாம் புகுகிறது! 1இனி எத்தனைநாள்?’ என்றபடி. ஆக 2மூன்று திருவாய்மொழிகளாலும் இப்படிப் பரோபதேசம் செய்த இது, சமுசாரிகள் திருந்துகைக்குக் காரணம் ஆகாமல். 3அத்தாலும் தமக்குப் பகவானிடத்திலே விடாய் பிறந்தபடி சொல்லுகிறார் இதில்.

    என்றது, 4மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைச் சொல்லுதல் முன்னாகப் பகவானுடைய வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, ‘அவனைப் பற்றுங்கோள்; மற்றைய விஷயங்களை விடுங்கோள்,’ என்றே அன்றோ அருளிச் செய்தது? அது அவர்கள் திருந்துவதற்குக் காரணமாகாமல் தமக்குப் பற்று மிகுதற்குக் காரணமாயிற்று; 5ஸ்ரீ விபீஷணாழ்வான் இராவணனுக்குச் சொன்ன நலம் அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல் தான் பெருமாளைப் பற்றுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன நலம் அவன் நெஞ்சிலே படாமல் தனக்குப் பகவானிடத்தில் பத்தி மிகுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்’ என்னும் இம் மூன்று திருவாய்மொழிகளிலும் பிறரைக் குறித்து அருளிச்

செய்த நலம் அவர்கள் திருந்துவதற்குக் காரணம் ஆகாமல், மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே தமக்கு அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பணைக்கைக்குக் காரணம் ஆயிற்று என்றபடி. இவர்களுக்குக் களையாவது, பகவானுக்கு வேறுபட்ட விஷயங்களும், சேவிக்கத் தகாதாரைச் சேவைசெய்து திரிகையும், ஐஸ்வர்யத்தைப் புருஷார்த்தம் என்று இருக்கையும். சங்காயமாவது, பயிர்களின் இடையிடையே முளைத்து, அறியாதார்க்குப் பயிர் போலே தோற்றி, அதனை வாரிப் போகடாத போது நெல் பதர்க்கும்படியாய் இருப்பது ஒன்று. அப்படியே கைவல்யமும்.

    1இந்தக் காதற்பெருக்கும் இப்படிச் செல்லாநிற்கச் செய்தே, முன்பு ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த விடாய் 2வேறு ரசங்களாலே மூடப்பட்டுக் கிடந்தது; அந்த விடாய் தலை எடுத்து, ‘தேசத்தாலும் காலத்தோடும் தேசத்தோடும் கூட்டி இப்போதே அனுபவிக்க வேண்டும்,’ என்னும் விடாயையும் பிறப்பித்தது; அவை அப்போதே கிடையாமையாலே அந்த விடாய்தான் 3வேறு நிலையைப் பிறப்பித்தது; அந்த நிலைதான் சர்வேசுவரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி நிலையாய், பிராட்டிதான் மயங்கினவளாய்க் கிடக்க, அவள் நிலையைப் பார்த்த திருத்தாயார், ‘தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்த அவன் படிகளையும் அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூட்டி இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிறாள்,’ என்கிற பாசுரத்தாலே தம் நிலையைப் பேசுகிறார்.திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, 2‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே, ‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ? அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடியாலேயும், தன் ஆசையின் மிகுதியாலேயும் இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.

344

பாலன்ஆய், ஏழ்உலகு உண்டு, பரிவுஇன்றி
ஆலிலை அன்ன வசம்செயும் அண்ணலார்
தாளிணை மேல்அணி தண்அம் துழாய்என்றே
மாலுமால் வல்வினை யேன்மட வல்லியே.

    பொ-ரை : அதிபால்யமான வடிவையுடையனாய் எல்லா உலகங்களையும் உண்டு வருத்தம் இல்லாமல் ஆலின் இலையிலே உண்ட உணவு அறாமைக்குத் தகுதியாகக் கிடக்கும் பெருமையையுடைய இறைவனது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயினைப் பெறவேண்டும் என்றே மயங்காநின்றாள்; தீவினையேனாகிய என்னுடைய, பற்றியதை விடாத வல்லிக்கொடி போன்ற பெண்ணானவள்.வி-கு : ‘வல்வினையேன் மடவல்லி ஆல் இலை அன்ன வசம் செயும் அண்ணலார் தாளிணை துழாய் என்றே மாலும்,’ என்று கூட்டுக. ‘பரிவு இன்றி அன்ன வசம் செயும் அண்ணலார்’ என்க.

    இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.

    ஈடு : முதற்பாட்டு. 1‘ஆல் இலையைப் படுக்கையாக உடையவனுடைய திருவடிகளிலே சார்த்தின திருத்துழாயைச் செவ்வியோடே இப்போதே பெறவேண்டும் என்று ஆசைப்படாநின்றாள்,’ என்கிறாள்.

    பாலன் ஆய் – கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தை உடையனாய்; 2‘படியாதும் இல் குழவிப் படி’ என்னக் கடவது அன்றோ? 3பருவம் நிரம்பின பின்பு உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில், என் மகள் இப்பாடு படாளே! ‘அவன் ஒரு நிலையிலேகாண் காப்பாற்றுமவன் ஆவது’ என்று மீட்கலாமே!’ என்பாள், ‘பாலன்’ என்கிறாள். 4‘என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த நிலை ஒழிய முன் நிலை நெஞ்சிற்படாமல் இருந்தானாதலின், ‘ஆய்’ என்கிறாள். ஏழ் உலகு உண்டு –5‘இது சரிக்கும்; இது சரியாது,’

என்று அறியாமல் ஏதேனுமாக முன்பு தோன்றியதை வாயிலே எடுத்து இடும்படி ஆயிற்றுப் பருவம். 1‘காப்பாற்றுகின்ற சர்வேசுவரனுடைய தொழில் ஆகையாலே, இது பாதுகாவலாய் முடிந்தது இத்தனை. அவன் பொறுக்கும் செயலைச் செய்தானாகில், இவளும் பொறுக்கும்படியானவற்றை ஆசைப்படாளோ?’ என்பது தாயாருடைய உட்கோள். ஆபத்து உண்டானால் 2வரைந்து நோக்குமது இல்லை ஆதலின், ‘உலகு’ என்கிறாள்.

    பரிவு இன்றி – ஒரு வருத்தம் இன்றிக்கே. என்றது, உலகங்களை எடுத்து வயிற்றிலே வைக்கிற இடத்தில் அதனால் ஒரு வருத்தம் இன்மையைத் தெரிவித்தபடி. ஆல் இலை – அப்பொழுது தோன்றியது ஓர் ஆல் இலையிலே. என்றது, 3‘அவ்வடம் பண்ணிக்கொடுத்த சுத்த பத்திரத்திலே’ என்றபடி,

அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’
என்றபடி. அவ்வடம் – அந்த ஆலமரம். சுத்த பத்திரம் – வெற்று இலை.

அன்ன வசம்செயும் – தன் வசமாக அன்றிக்கே 4‘அஹம் அன்னம் – நான் இனியபொருளாய் இருப்பவன்’ என்கிற அன்னத்திற்கு வசமாக. என்றது, உண்ட உணவு சரியாதபடி 5அதற்குத் தகுதியாகச் செய்தமையைத் தெரிவித்தபடி.

அதற்குத் தகுதியாக’ என்றது, ‘வலக்கை கீழாக’ என்றபடி.

  ‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்தபழஞ்
சேமப் புவனம் செரிக்கும்என் றேசிவன் மாமுடிக்கு
நாமப் புனல்தந்த பொற்றாள் அரங்கர் நலஞ்சிறந்த
வாமத் திருக்கர மேலாக வேகண் வளர்வதுவே.’

  என்பது திருவரங்கத்து மாலை.

அண்ணலார் – எல்லாப் பொருள்களையும் காக்கின்றவருமாய் எல்லாப்பொருள்களுக்கும் ஸ்வாமியும் ஆனவர். எல்லாப் பொருள்களையும் காக்கின்றவரான உமக்கு உம்மை ஆசைப்பட்ட வலிமை அற்றவளான என் விருப்பத்தைச் செய்யத் தட்டு என்?’ என்கிறாள்

என்பாள். ‘அண்ணலார்’ என்கிறாள். 1அவன் இளமைப்பருவத்தில் பாதுகாப்பதில் குறிக்கோளாய் இருப்பது போலே ஆயிற்று இவள் மயங்கி இருக்கும் காலத்திலும் முறையில் கலக்கம் அற்று இருந்தபடி.

    அண்ணலார் தாள்இணை – அடிமையாக உள்ளவன் பற்றுவது ஸ்வாமியினுடைய திருவடிகளை அன்றோ? தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் – இப்படி இவள் ஆசைப்படுகைக்கு 2அடியிலே பச்சையிட்டாள்காணும்.  பிராஹ்மணன் பிச்சு ஏறினாலும் ஓத்துச் சொல்லுமாறு போன்று, இவளும் அடியில் கற்றுப் பழகியதனையே சொல்லாநின்றாள்; 3தாள் பட்ட தண் துழாய்த் தாமத்திலே அன்றோ வாசனை பண்ணிற்று? துழாய் என்றே – எப்போதும் அத்தையே சொல்லாநின்றாள்.

அடியிலே பச்சையிட்டாள், சிலேடை : அடியிலே – முதலிலே,
திருவடிகளிலே. பச்சை – உபகாரம், திருத்துழாய்.

3. ‘அடியிலே கற்றது எங்கே?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தாட்பட்ட’ என்று தொடங்கி. இது திருவாய். 2. 1 : 2.

‘கெடுவாய், இது, சேராதது காண்; இறந்த காலத்தில் உள்ளது ஒன்றுகாண்,’ என்றால், அது செவியிற்படுகிறது இல்லை என்பாள், ‘என்றே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறாள். ஒரு காரணத்தாலே சாதித்துக்கொள்ள முடியாமல் இருக்கையைத் தெரிவித்தபடி. மாலும் – மயங்கும். என்றது, ‘இது ஒரு சொல் அளவேயாய் அகவாயில் இன்றிக்கே இருக்கை அன்றிக்கே, உள் அழியாநின்றாள்,’ என்றபடி. 4மாணிக்கத்தின் ஒளியிலே நெருப்பு என்னும் புத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேண்டுமோ? வல்வினையேன் – 5மயக்கம் உற்றவளாய்க் கிடக்கிறஇவளுக்கு ஒரு துக்கத்தின் நினைவு இல்லை ஆதலின், உணர்ந்திருந்து பார்த்துக் கூறுகிற தன்னை ‘வல்வினையேன்’ என்கிறாள். மடம் வல்லி – ஒரு கொள்கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின், ‘வல்லி’ என்கிறாள். 1‘தமப்பபனாரான ஜனகமஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற கடலில் மூழ்கினார்,’ என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் – பற்றிற்று விடாமை.

பாலனாய் –
இராம விரகத்தில் திரு அயோதியை உள்ளார் கூப்பிட்டார் போலே முடியானே
கூப்பிட்டை அல்லாதார் -லோகத்தார் உலக விஷய -புறம்பே கூப்பிட்டகண்டு
பகவத் விஷயம் -தாம் முந்துற பெற்றோமே -ஹ்ருஷ்டராய் சொனால் விரோதம் அருளி
சென்மம் பல -கரணங்கள் பகவத் விஷய ஈடுபாடு ஹ்ருஷ்டராய்
அல்லாதார் ஐஸ்வர்ய கைவல்ய ப்ரவணராய் இருக்க அல்ப அஸ்திர தோஷம் காட்டி
இவற்றை விட்டு அவனைப் பற்ற
ஒரு நாயகமாய் அருளிச் செய்தவர் தானே சூழ் விசும்பு பணி முகில் அருளி
விஸ்வசித் து இருக்கவேண்டும் -இனி எத்தனை நாள் என்றே இருக்க வேண்டும் –
மூன்றாலும் உபதேசிக்க -சம்சாரிகள் திருந்த உடலாக இல்லாமல்
அத்தாலே இவருக்கு பகவத் விஷய விடாய் கூட பலனாய்
பகவத் வை லஷ்ண்யம் அனுசந்தித்து -தமக்கு ஈடுபாடு அதிகரிக்க
விபீஷண ஆழ்வான் இராவணனுக்கு ஹிதம் அருளி -தனக்கே இது உடலாக
இரா வணன் -இரவை போன்ற வண்ணம் -இராமனை குறிக்கலாமே மேகஸ்யாமம்
இரா மன்னைக் கொன்றான் நிசாசரா இரவுக்கு மன்னன் இராவணன்
சமாளித்து இராவணன் இராமனைக் கொன்றான் சொல்லி
பிரகலாதன் ஹிரண்யனுக்கு ஹிதம் உபதேசித்து தனக்கு ஈடுபாடு ஆனது போலே
மூன்று களை பறித்து –
சக்காயம் -கோரப்புல்லும் நீக்கி –
வீடு முன் முற்றவும் -சொன்னால் விரோதி ஒரு நாயகம்
கைவல்யம்
பகவத் இதரிக்த விஷயம் -அசேவ்ய சேவை -ஐஸ்வர் யம் மூன்று களை
கைவல்யம் பார்ப்போருக்கு பயிர் போலே தோன்றும் சக் காயம்
முடியானே பிறந்த விடாய்
மூடிக் கொண்டு -உபதேசிக்க போனதும் –
இதில் மீண்டும் எழ -தலை எடுத்து –
தேச -கால -பர வ்யூஹ விபவ படிகளை
அந்த காலம் அந்த தேசம் போலே அனுபவிக்க
கிட்டாமல் அவஸ்தான்தரம்
பிராட்டி நிலை
மோஹித்து கிடக்க
திருத்தாயார் -பாசுரம் -ஸ்வ தசையைப் பேசுகிறார் –

திருவடியைக் கண்ட பீம சேனன் –
வாலைத் தூக்க முடியாமல்
சமுத்ரம் தாண்டிய அபிராத்திமா மகத் ரூபம் காண ஆசைப் பட்டது போலே
முன்பு கடல் கடந்த ரூபம் காண

பாரதம். இந்தச் சுலோகப் பொருளோடு,

  ‘நீட்டு மவ்வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான்;
மீட்டும் நல்வரம் ஒன்றுமுன் வேண்டினன் வீமன்;
ஈட்டு மாநிதி இலங்கைதீ இட்டநாள் இசைந்த
மோட்டு ருத்தனைக் காட்டுகென் றிறைஞ்சினன் முதல்வன்.’

(வில்லி பா.ஆரணிய பர்.புட்ப யாத். செய். 49.)

  என்ற செய்யுள் ஒப்பு நோக்கலாகும்.

பகவத் சக்தி அறிந்தவர்
அவா மிகுதி
பூதகாலம் –
வடதள சாயி சாத்தின திருத் துழாய் அதே வாசனை உடன் அனுபவிக்க ஆசைப் படுகிறார்
முதல் பாசுரத்தில்

தேச கால பிற்பாடு ஆனாலும் அவற்றைஅவன் படிகளை -இப்பொழுது பெற்று
அனுபவிக்க ஆசைப்படுகிறாள் –
வட தள சாயி திருவடிகளில் சாத்திய திருத் துழாய் செவ்வியை
அனுபவிக்க  வல்வினையேன் மட வல்லி –
த ண் அம் துழாய்
பாலனாய் ஏழு உலகும் உண்டு
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணல்
அன்னத்துக்கு வசம் ஆனான் –
பாலனாய் -சின்ன குழந்தை பால முகுந்தம்
பருவம் முடிந்தபின்பு -இத்தை செய்தான் ஆகில் -இன்றி குழைந்தை பருவத்தில் செய்ததால் அவன் மேலே ஈடுபாடு –
அனைத்து தசையிலும் ரஷகன் ஆகவே இருந்தவன்
பூர்வ நிலை நெஞ்சில் படாமல் -ஆத்மாநாம் மானுஷ்ய -மன்யே
ராமன் ஆன பின்பு -உண்மையான நிலை -மன்யே பகுமன்யே அதை பெரியதாக மதித்து இருக்கிறேன்
குவாலாக கொண்டான்
அது போலே பாலனாக ஆனான்
படி -ஒப்பு வேரு பாலன் இல்லை –
கலப்பற்ற பிள்ளைத் தனம்
ஏழு உலகும் உண்டு -இதுசாத்மிக்கும் இது சாதிமிக்காது அறியாமல் உண்டான் –
ரஷகன் வியாபாரம் என்பதால் பண்ணின செயல் ரஷகம் ஆனது
பண்ணினது எல்லாம் ஆசைப்படுகிறாள்
கிரமம் பாராமல் உண்டான் –
அப்படியே உண்டான்
பரிவு இன்றி அனாயாசேன
ஆலிலை பலனான ஆலிலை அலம் தளிர்
அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’
என்றபடி. அவ்வடம் – அந்த ஆலமரம். சுத்த பத்திரம் – வெற்று இலை.

அஹம் அன்னம் அன்ன வசம் ஆனான்
ஜீவாத்மா  வசம் ஆனான்
அண்ணலார் -வலப்பக்கம் சயனித்து ஜரிக்காமல் இருக்க
அதற்குத் தகுதியாக’ என்றது, ‘வலக்கை கீழாக’ என்றபடி.

  ‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்தபழஞ்
சேமப் புவனம் செரிக்கும்என் றேசிவன் மாமுடிக்கு
நாமப் புனல்தந்த பொற்றாள் அரங்கர் நலஞ்சிறந்த
வாமத் திருக்கர மேலாக வேகண் வளர்வதுவே.’

  என்பது திருவரங்கத்து மாலை.

சயன திருக்கோலம் வலது பக்கம் சயனித்து எங்கும் –
அண்ணலார் -சிறு பருவத்திலும் ரஷகன் -மோஹித்து இருக்கும் நிலையிலும் அண்ணலார்
ஸ்வரூபம் இருவரும் மாறாமல் இருப்பது
ஸ்வாமி -சர்வ ரஷகன்
என்னை ரஷிக்க வேண்டாமா
தாள் இணை -சேஷி திருவடி
அடியிலே பச்சை இட்டாள்
பிராமணர் பிச்செறினாலும் ஒத்து சொல்வது போலே
அடியிலே அப்யசிதத்தை சொல்லா நின்றாள்
தாள் இணை மேல் உள்ள த ண் அம் துழாய் என்றே
இதை ஒன்றே சொல்லி
பூத காலம் என்றாலும் செவியில் படுகிறது இல்லை -கெடுவாய்
யுக்தி -சொல்லி புரியும் நிலை இல்லையே இவள் மோகித்து இருக்க
மாலும் மயங்கி
உள் அழிந்து –
மாணிக்கம் பிரகாசிக்க நெருப்பு துண்டு -தொட்டால் சுடாதே
மோகத்தில் -இருந்தாலும் விடாமல் கேட்கிறாள் –
உணர்ந்து இருந்து சோகிக்கிற நான்
மடப்பு பற்றிற்று விடாமல்
வல்லி -கொள் கொம்பு உடன் சேர்க்கும் பருவம்
ஜனகன் வார்த்தை போலே ஸ்ரீராமா. அயோத். 119 : 36.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -397-408….

February 27, 2013

வார்த்தை -397-
நம்பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
அந்யோந்யம் பிணங்கி ஒருவரை ஒருவர் மடி பிடித்துக் கொண்டு செல்ல –
அதுக்கடி என்ன -என்று பிள்ளை கேட்டருள -பெரியவாச்சான் பிள்ளை கேட்டருள-
இத்தனை நாளாக சேவித்து நின்றதில் தேங்கின அர்த்தம் இது என்று காட்ட வந்தார்கள் -என்ன –
கோ மூத்தவன் பாடே போகாதே நம்பாடே வந்தார்கள் – என்று அருளினார் –

————————————————————

வார்த்தை -398-
சர்ப்பாஸ் யகதமான மண்டூகத்தினுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்தார் என்று
நம் பிள்ளை அருளிச் செய்தார் -இத்தால்
பர துக்க அஸ ஹிஷ்ணுத்வமும் –
பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வமும் வைஷ்ணவனுக்கு ஸ்வபாவம் -என்றபடி –

——————————————————————-

வார்த்தை -399-
பிள்ளை திருவழுதி நாட்டு அரையருக்கு அந்திம தசையிலே ஒரு சோகம் உண்டாயிற்று –
சுற்றில் இருந்த முதலிகள் அந்யோந்யம் முகம் பார்த்தார்கள் –

இவர் அத்தை திரு உள்ளத்திலே கோலி -வாரி கோள் முதலிகாள் -சம்சாரிகள் இழவுக்கு நொந்தோம் காணும் கோள் –
அவர்களில் நமக்கு அல்பம் ஆய்த்து வாசி -எங்கனே என்னில் –

நாம் இடுவது ஒரு தண்டன் – பண்ணுவது ஒரு பிரபத்தி –
இழப்பது சம்சாரம் -பெறுவது பரமபதம் –
இத்தை அறியாதே அத பதிக்கிறார்களே என்று கிலேசம் ஆயிற்று காணும் கோள்–என்ன –
இவர்களும் க்ருதார்தர் ஆனார்கள்

——————————————————————-

வார்த்தை –400-
வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் காலத்திலே பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து
அருளி இருக்கச் செய்தே –
வீர சுந்தர பட்டான் என்று பிள்ளை  பிள்ளை யாழ்வான்
ஆண்டாளுக்கு விண்ணப்பம் செய்ய -போர க்லேசித்தார் –

பட்டரை கோயிலில் இருக்கவும் கூட ஒண்ணாதபடி பண்ணின இவன் பட்டான் என்றதுக்கு இது வென் -என்ன –

பிள்ளையோடு உண்டான விரோதத்தாலே அத்ருஷ்டத்தை இழந்தான் –
சில நாள் இருந்து த்ருஷ்ட சுகமாகிலும் அனுபவிக்கிறானோ என்று இருந்தோம் –
அதுவும் கூட இழந்தான் ஆகாதே -என்று க்லேசமாயிற்று -என்று அருளிச் செய்தார் –

—————————————————————

வார்த்தை -401-

நம்பிள்ளை திரு உள்ளத்திலே அபேஷை நடக்கும்படியையும் –
அநபேஷை நடக்கும்படியையும் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்யும் படி –

அபேஷை நடப்பது -அஹங்கார நிரசநத்திலும் -அவிவேக நிரசநத்திலும் –
அநபேஷை நடப்பது -ஆத்ம ஜ்ஞானத்திலும் -ஆத்ம லாபத்திலும் -பகவல் லாபத்திலும் –

ஆத்ம ஜ்ஞானம் ஆவது -ஜ்ஞாநானந்த சாஷாத்காரம் –
ஆத்ம லாபம் ஆவது -தத் பிரதிபந்தக நிவ்ருத்தி –
பகவல் லாபமாவது -ஸ்வ யத்ன சாத்யமுமாய் -ஸ்வ கதமுமான பகவத் அநுபவத்தை –

———————————————————————

வார்த்தை -402-

எம்பெருமானார் எம்பாரை  நோக்கி -ஸ்ரீ கோவிந்த பெருமாளே –
எம்பெருமான் எளியன் என்று பலபடியாலும் சொன்னோமே என்ன –
இப்படி எளியனாகில் நமக்கு என் -என்று எல்லோரும் உபேஷிகைக்கு உடலாம் இத்தனை யன்றோ -என்ன –
இப்படி இருக்கிற அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளது
உமக்கு ஒருவருக்கும் அன்றோ -என்று அருளினார் –

——————————————————————-

வார்த்தை -403-
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய்மொழி -1-3-2- என்கிற இடம்
அருளிச் செய்யா நிற்க –
இப்படி குணவானாய் இருக்கிற அவனை சாஷாத்கரிக்க விரகு இல்லையோ என்று
மணக்கால் நம்பியை ஆளவந்தார் கேட்டருள –

எனக்கு சேஷத்வ அனுசந்தானமே அமையும் நீர் குருகை காவல் அப்பன் பாடே செல்லும் என்ன –
இவரும் அங்கே செல்ல –

அவரும் காலம் குறித்து விட -இவரும் திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளி –
அங்கே அக்காலத்தை நினைத்து -அப்பன் பக்கல் ஏறப் போக ஒரு புஷ்பகம் பெற்றிலோமே – என்று க்லேசிக்க –
பெருமாளும் -நாம் செய்தபடி காணும் இது -சேஷத்வ ஜ்ஞானமே அமையும் என்று அருளினார் –

—————————————————————-

வார்த்தை -404-

நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
முமுஷுவான அதிகாரிக்கு அனுசந்தேயம் -ஸ்வரூபம் -பரதந்த்ரம் –
விரோதி -பிரபலம் – புருஷார்த்தம் -அந்ய சாத்தியமன்று –
பரிஹார்யம் தேவதாந்திர பஜனமும் -பாகவத அபசாரமும் ஆகிற படு குழிகள் -என்று அருளினார் –

———————————————————————

வார்த்தை -405-
துறை அறிந்து இழிந்து
முகம் அறிந்து கோத்து
விலை அறிந்து பரிமாறி
நினைவு அறிந்து
அடிமை செய்ய வேண்டும் –

—————————————————————

வார்த்தை -406-

ஜ்ஞானத்துக்கு இலக்கு -ஆச்சார்ய குணம் –
அஜ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு -நிஷித்த அனுஷ்டானம் –

———————————————————

வார்த்தை -407-
நம்பிள்ளை திருவெள்ளறை தேன கொள சோலை தாஸர் மாளிகையிலே எழுந்தருளி –
அவருடைய திருமாளிகையிலேயே ஐஸ்வர்யத்தைக் கண்டு ப்ரீதராய் இருக்க –
இதுக் கடி என் என்று எதிராஜ தாசர் பிள்ளையைக் கேட்க –

நம்பிள்ளை –
இஸ் சம்ஸார ஸுகம் தான் மூன்று படியாய் இருக்கும் –
இஸ் ஸுகத்தை தனக்கு என்றும் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்றும் –
எம்பெருமானுக்கே என்றும் -நினைக்கை காண் –

தனக்கு என்கை -நரக அநுபவ சத்ருசம் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை ஸ்வர்க்க அநுபவ சத்ருசம் –
எம்பெருமானுக்கே என்கை பரமபத அநுபவ சத்ருசம் –

————————————————

வார்த்தை -408-
ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை விட்டு –
ஔ பாதிகமான பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொள்ளுகிற இத்தனை இறே
என்று பெரியவாச்சான் பிள்ளை –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -385-396….

February 27, 2013

வார்த்தை -385-

அனந்தாழ்வான் மூன்று சம்வத்சரமாக வாதமாய்க் கிடக்க –
ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பவர் சிலர் –
திருவேங்கடமுடையான் செய்து அருளுகிறது என் – என்று வெறுக்க –
திருவேங்கடமுடையான் ஹிதம் அல்லது செய்யான் -என்று அருளிச் செய்தார் –

——————————————————

வார்த்தை -386-
அனந்தாழ்வான் திரு நந்தவனத்துக்கு மண் சுமவா நிற்க –
பிள்ளைகளிலே ஒருவன் சென்று -கூடையை வாங்க –
நான் இத்தை விடில் இளைப்பன் -நீ இத்தைத் தொடில் இளைப்புதி -என்ற அளவிலே –
இளைப்பாகாது -என்று பின்னையும் வாங்க –
ஆனால் நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்க வேணுமோ –
நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கி சுமக்க மாட்டாயோ -என்று அருளிச் செய்தார் –

—————————————————————

வார்த்தை -387-

அனந்தாழ்வான் திரு நந்தவனத்திலே திருமண்டபத்திலே இருந்து திருமாலை கட்டா நிற்க –
திருவேங்கடமுடையான் அருள் பாடிட –
இவரும் பேசாதே இருந்து திருமாலையும் கட்டிக்கொண்டு பின்பு கோயிலுக்குள் புக்கவாறே –
நான் அழைக்க வராவிட்டது என் -என்று திரு உள்ளமாக –

தேவரீரைக் கொண்டு கார்யம் என் கருமுகை மொட்டு வெடியா நிற்க -என்ன –
ஆனால் -நாம் உம்மை இங்கே நின்று போகச் சொன்னோமாகில் செய்வது என் -என்ன –
பரன் சென்று சேர் திருவேம்கடமாமலை அன்றோ –
தேவரீர் அன்றோ வந்தேறிகள் -இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ -என்றார் –

—————————————————————————————–

வார்த்தை -388-
அனந்தாழ்வான் திருபடலிகை யிலே திருமாலையைச் சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கு –
கைப் புடையிலே நின்று அருளப்பாடு என்றவாறே
திருத் திரையை நீக்கித் திருமாலையை நீட்டி கையை மறித்துப் போருவர் –
நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -பெரியாழ்வார் திருமொழி -3-6-6-
தனது கையில் சக்தி இல்லை -மாலை கட்டும் கைங்கர்யம் தானே செய்வித்துக் கொண்டான் என்றபடி

—————————————————————-

வார்த்தை -389-

பீஷ்மர் ஞாநாதிகராய் யிருக்க –
பகவத் பரிக்ருஹீத பஷ பிரதிபஷத்தில் நின்று கிருஷ்ணன் திருமேனியில் அகப்பட அம்பு படும்படியான  செயல் கூடிற்று –

ராஜக்களை பணிக்கன் சிரமம் செய்விக்கும் போது நினைத்த இடத்திலே தட்டுகை ப்ராப்தமாம் போலே –
ஏவம்விதரும் சர்வேஸ்வரனுடைய லீலா ரஸாதீ ந சங்கல்ப அந்தர்கதர் –

——————————————————————–

வார்த்தை -390-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஐஸ்வர் யார்தியோ -அநந்ய பிரயோஜநனோ -என்னில்
அஸ்மாதாதிகள் பிரபன்னராய் வைத்தே சரீர அவசாநத்தளவும்
ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிறாப் போலே –
அநந்ய ப்ரயோஜநனாயே அதிகார அவசாநத்தளவும் ஐஸ்வர்ய அனுபவம் பண்ணுகிறான்

————————————————————-

வார்த்தை -391–
முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் பட்டருக்கு அருளிச் செய்த வார்த்தை –
எம்பெருமான் சிலரைப் போம் என்னும் –
சிலரை வா வென்னும் –
சிலரைப் போது என்னும் –

பிரயோஜனந்தர நிஷ்டரை பலத்தைக் கொடுத்து போ என்னும் –
கர்ம ஜ்ஞான நிஷ்டரை கர்மம் கழிந்தவாறே வா வென்னும் —
அநந்ய பிரயோஜனரை போது என்னும் -போதுவீர் போதுமினோ -உடனே வாருங்கோள் என்று கை நீட்டி வரவேற்ப்பான்

இந்த தேசத்தில் ஒரு அநந்ய  பிரயோஜனரை உண்டு என்று இருந்தோமோ –
உண்டாகில் அங்கே கண்டு கொள்கிறோம் -எங்கனே என்னில் –

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமான் என்றால் விஸ்வசிப்பார் இல்லை –
விஸ்வசித்தால் க்ருதஞ்ஜராய் இருப்பார் இல்லை –
க்ருதஞ்ஜராய் பெற்றதாகில் பகவத் கைங்கர்யம் விரசமாய் இருக்கும் –

இவை மூன்றும் கூடிற்று ஆகிலும் -ராக த்வேஷ அபஹதர் ஆகையாலே
பாகவத கைங்கர்யத்துக்கு இசையார் –
அதுவும் கூடிற்றாகில் ஆசார்ய உடைய தேக யாத்ரையைக் கண்டு நெகிழ நினைப்பர்கள் –
இதுவும் கூடிற்றாகில் தங்களை ஸூத்தராக நினைப்பர்கள் –

ஆகையால் பகவத் குணம் சொல்லுகைக்கும் கேட்கைக்கும் இவ்விடத்தில் ஆள் இல்லை காணும் –

சரஸ்வதி பண்டாரத்தில் எழுந்து அருளி இருந்து பணித்த வார்த்தை –

——————————————————

வார்த்தை -392-

திருமாலையாண்டான் அருளிச் செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோம் என்றால் சம்சாரத்தில் ஆள் இல்லை -அது எங்கனே என்னில் –
ஒரு பாக்கைப் புதைத்து அது உருவாந்தனையும் செல்லத் தலையாலே எரு சுமந்து ரஷித்து
அதினருகே கூரை கட்டி -பதினாறாட்டைக் காலம் காத்துக் கிடந்தால்
கடைவழி ஒரு கொட்டைப் பாக்காயிற்று கிடைப்பது –

அது போல் அன்றிக்கே இழக்கிறது ஹேயமான சம்சாரத்தை –
பெறுகிறது விலஷணமான பரம பதத்தை –
இதுக்கு உடலாக ஒரு வார்த்தை அருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலும்
க்ருதஞ்ஜர் ஆகாத சம்சாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்வது -என்று வெறுத்தார் –

—————————————————————–

வார்த்தை -393-
அவதாரம் இருக்கும்படி என் -என்று நம்பிள்ளையை முதலிகள் கேட்க –
மெய் வெளுத்து நாக்கு வற்றி இருக்கும் -என்ன –
அது  என் என்ன –

அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்
பெற்றால் பிரயோஜனாந்த பரர்  ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு
வற்றி இருக்கும் -என்று அருளிச் செய்தார் –

————————————————————-

வார்த்தை -394-

ஆளவந்தார் ஒரு நாள் பெருமாளைத் திருவடி தொழ வென்று உள்ளே புகுரா நிற்க
ஒருத்தி அநந்ய பிரயோஜனரைப் போலே கண்ணும் கண்ண நீருமாய் -கழுத்தும் கப்படுமுமாய் -சேலை யுமாய் –
பிரதஷணம் பண்ணா நிற்க -உள்ளுப் புகுராதே புறம்பே நின்றருளி –
பிரயோஜனாந்த பரை யானவள் புறப்பட்டாளோ -என்று கேட்டருள –

இதுக்கு நிதானம் என் -என்று விண்ணப்பம் செய்ய –
பெருமாள் சன்னதியே யாகிலும்
பிரயோஜனந்த பரரோட்டை சேர்த்திக்கு -அதிகாரி விரோதம் பிறந்து -பல விரோதமும்
பிறக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –

———————————————————

வார்த்தை -395-
தேஹாத்ம விவேகம் -பரமாத்ம விவேகம் -த்ரி மூர்த்தி சாம்ய விவேகம் –
புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் -விரோதி அவிரோதி விவேகம் –
உபாய அநுபாய விவேகம் -வைஷ்ணவ அவைஷ்ணவ விவேகம் -துஷ்கர ஸூகர விவேகம் –
ஆசார அநாசார விவேகம் -சிஷ்ய ஆச்சர்ய விவேகம் –
இவைகள் ஒருவனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யங்கள் –

———————————————————-

வார்த்தை -396-

முமுஷுவாய் பிரபன்னனான அதிகாரிக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்தம் -நாலு –
ப்ராப்ய விஷயமும் -பிராபக விஷயமும் -ஆசார்ய விஷயமும் -போஜன விஷயமும் –

ப்ராப்ய விஷயம் ஆவது -சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்திலே போய்
பரம பதத்திலே சென்று -அங்குண்டான பகவத் அனுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –

இதில் அத்யாவச்யம் ஆவது -கைங்கர்யத்தை ஒழிந்த தர்மார்த்த காமங்களிலும் –
மோஷத்தில் கைவல்யம் முதலாக உள்ள புரஷார்தங்களிலும் கால் தாழாதே
இக்கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –

பிராபக விஷயமாவது -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் -விக்ரஹ விசிஷ்டன முமாய் உள்ள ஈஸ்வரன் –

இதில் அத்யாவசியம் ஆவது -பிராட்டி புருஷகாரமாக அவனே
உபாயம் என்று அறுதி இட்டு -உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞான பக்திகளில் கால் தாழாமல் இருக்கை –

ஆசார்ய விஷயமாவது -இவ்வுபாய ஸ்வீகாரம் பண்ணினவன் சரீர அவசாநத்து அளவும் –
மநோ வாக் காயங்களினால் அநுகூலித்து வர்திக்கை –
அதாவது –
உகந்து அருளின நிலங்களிலும் -அர்ச்சாவதார ப்ரேமம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும் -த்ரிவித கரணத்தாலும் ப்ராதிகூல்யம் தவிருகை –

இதில் அத்யாவச்யம் ஆவது -இப்படி வர்த்திக்கும் இடத்தில் -க்யாதி  லாப பூஜைகளைப்
பற்றவாதல் -பகவத் ப்ராப்திக்கு சாதனம் என்றாதல் -செய்யாதே ஸ்வயம் பிரயோஜனம்
என்று இருக்கை –

போஜன விஷயம் ஆவது -ந்யாய ஆர்ஜித த்ரவ்யத்தாலே தாஹம் போம் அளவே
என்று ஜீவிக்கை –

இதில் அத்யாவச்யம் ஆவது -அநுகூலரை நெருக்கி யாதல் -பிரதிகூலரை
அபேஷித்தது ஆதல் -அமுதுபடி த்ரவ்யத்தை யாதல் ஜீவனம் ஆக்காதே
உடம்பை வருத்தி யாதல் அயாசிதமாக வாதல் வந்த த்ரவ்யதைக் கொண்டு
தேக யாத்ரை நடத்துகை –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .