அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –பெருமாள் திருமொழி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

146
தென்னீர் பொன்னி -1-1-
தெளிவிலாக் கலங்கள் நீர் -திருமாலை -37
காவேரி நீர் தெளிந்து இருந்தாலும் காவேரி நாச்சியாரின் உள்ளக் கலகத்தை கூறினபடி –
ஊற்று மாறி தெளிகைக்கு அவகாசம் இல்லாதபடி பெருககுகையாலே கலக்கம் மாறாதது ஆய்த்து –
இவரைப் போலே ஆய்த்து ஆறும் –
பிராப்திக்கு முன்பு சொகத்தாலே கலங்கி இருப்பர் –
கிட்டினால் பிரேமத்தாலே கலங்கி இருப்பர் –
ஆறும் கோயிலுக்கு மேற்கே பெருமாளை காண புகா நின்றோம் என்ற ஹர்ஷத்தாலே கலங்கி –
கிழக்கு பட்டால் பிரிந்து போகும் சோகத்தாலே கலங்கி –
வழி போவாரில் சேதன அசேதன விபாகம் இல்லை –
துக்தாப்தி -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-21-
ரத்நாகரமான ஷீராப்தி தகப்பனார் -ஜனனீ சாஷாத் லஷ்மீ பெண் -மணவாள பெருமாள் சர்வ லோக ஆதரரான
அழகிய மணவாள பெருமாள் -இதுக்கு சத்ருசமாக அங்கமணி செய்யலாவது எது -என்று விசாரித்துக் கொண்டு
வருகிறாப் போலே ஆய்த்து -மத்தகஜம் போலே பிசுகிப் பிற் காலித்துவருகிறபடி –
——————————————————————————————–

147-
அம் தமிழ் இன்பப் பாவினை -1-4-
செந்திறத்த தமிழோசை -திரு நெடும் தாண்டகம் -4
அம தமிழ்-இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை –
ஆழ்வாரின் தமிழ் பாசுரத்தின் போக்யதையும் -அந்த போக்யதைக்கு பெரிய பெருமாளின் போக்யதையை
த்ருஷ்டாந்தமாக்கும் பாங்கும் தெளிவாகிறது -இத்தால் தமிழ் கடவுளைக் காட்டிலும்
தமிழுக்கு உண்டான ஏற்றம் அறியலாகிறது -உபமேயத்தில் காட்டிலும் உபமானத்துக்கு ஏற்றம்
பிரசித்தம் இ றே
செந்திறத்த -இது-தமிழ் மறை -சர்வாதிகாரம் ஆகையாலும் -ஸ்வார்த்தத்தை செவ்வே பிரகாசிப்பிக்க
கடவதாய் இருக்கை யாலும் -தம் பாழி யாகையாலும் -இன்னமும் அத்தோபாதி -வட மொழி மறை போலே –
இதுவும் பிரமாணம் என்கைக்காக -முற் பட அருளிச் செய்கிறார் -வேதங்கள் போலேவும் இதிஹாச புராணங்கள்
போலவும் அன்று இ றே ஆழ்வார்கள் அருளிச் செயல் -அனுஷ்டாதாவின் வார்த்தை இ றே இது -ஐஸ்வர்ய
கைவல்யங்கள் த்யாஜ்யதயா புகுரும் இத்தனை இ றே இவர்கள் பக்கலில்
செந்திறத்த தமிழோசை -திறம் -கூறுபாடும் பிரகாரமும் -ஸ்வார்தத்தை செவ்விதாக பிரகாசிப்பிக்கையே
கூறான த்ரமிட சப்தம் -உபப்ரும்ஹன அபேஷை அற்று இருக்கை -வேதங்களுக்கு உப ப்ரும்ஹன
அபேஷை உண்டு இ றே
——————————————————————————————-
148
தேட்டரும் -2
கண்ணி  நுண் சிறு தாம்பு -ஸ்ரீ மதுர கவிகள்
நண்ணாத வாள் அவுணர் -பெரிய திருமொழி 2-6-
கண் சோர -பெரிய திருமொழி -7-4
பயிலும் சுடர் ஒளி -திருவாய்மொழி -3-7
நெடுமாற்கு அடிமை -8-10
அடிமையில் குடிமை இல்லா -திருமலை -39
இவற்றில் ஆழ்வார்களுக்கு உள்ள பாகவத சேஷத்வம் வ்யக்தமாகிறது
——————————————————————————————

149
மாலை உற்ற கடல் -2-8-
மாலும் கரும் கடலே -முதல் திருவந்தாதி –19
பகவத் சம்பந்தத்தாலே கடலுக்கு உண்டான களிப்பை ஆழ்வார்கள் அனுபவித்த படி –
——————————————————————————————
150-
துழாய் மாலை யுற்ற வரைப்  பெரும் திரு மார்பு -2-8-
மை போல் நெடு வரை வாயத் தாழு மருவி போலே தார் -மூன்றாம் திருவந்தாதி -59
பேய் ஆழ்வார் உவமை காட்டி திரு மார்புக்கும் திருத் துழாய் மாலைக்கும் உள்ள சேர்த்தி அழகை
அனுபவிக்க -தேனோ பமீ யே த தமால நீலம வஷ -மகா கவியும் -திரு மார்பில் தவழும்
முத்து மாலைக்கு உவமை அருளி யது போலே –
——————————————————————————————–
151-
அம் தாமரைப் பேதை மா மணாளன் -3-5
பெரும் தேவீ -பெரியாழ்வார் திருமொழி -3-10-4-
பெருமாளுடைய பெருமைக்கு தக்க தேவீ -என்று அர்த்தம்
பெருமானுடைய பெருமையே பிராட்டி சம்பந்த்தாதாலே என்றும் கூறலாம் –
முந்திய  நிர்வாஹம் பெரியாழ்வார் திரு உள்ளம் -பூர்வர்கள் வியாக்யானம் –
பிந்திய நிர்வாஹத்தை -பேதை மா மணாளன் -இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை –
——————————————————————————————
152–
திருமாலே நெடியானே -4-9-
நினைமின் நெடியானே -திருவாய்மொழி -10-5-10-
பிராட்டி சம்பந்தம் சொல்லி நெடியானே என்றது -பிராட்டி குற்றம் சொல்லி அகற்ற பார்த்தாலும்
அவனுக்கு உள்ள பஷ பாதத்தின் நீட்சி -அவன் நினைவு ஒருபடிப்பட்டு மாறாத நிலை –
நினைமின் -சிந்திப்பே அமையும் -உங்களுக்கு பாங்கான சமயத்தில் ஒருகால் நினையும் கோள் –
அவன் அஹம் ஸ்மராமி என்று உங்கள் நினைத்த படியே இருக்கும் -சர்வ குண சம்பன்னன்
அகர்ம வச்யன் -உருவ நினைத்த படியே இருக்குமவன் –
———————————————————————————————

153
தரு துயரம் தடாயேல் -5-1-
மாற்றமுள ஆகிலும் சொல்லுவன் -பெரிய திருமொழி -11-8-1-
என்னை போர வைத்தாய் புறமே -திருவாய்மொழி -5-1-5-
தரு துயரம்-நீயே தரும் துக்கத்தை நீயே மாற்றாய் ஆகில் -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பவர்
ஆகையாலே -அவனைக் குறித்து பரதந்த்ரன் -செய்யும் கர்மமும் பரதந்த்ரம் -பலப்ரதணும் தான் –
என்பதால் தரு துயரம் -என்கிறார் -மம மாயா துரத்தயா -என்று தானே சொல்லுகையாலே
நீயே துயர் தந்தாய் என்று தோற்றும் படியாக -பிரஜை தெருவிலே இடறி தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் -சக்தனாய் இருக்கிறவன் விலக்காமல் ஒழிந்தால் -அப்படி சொல்லலாம் இ றே –
பிரஜையை கிணற்றின் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினாள் -என்னக் கடவது இ றே –
துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இ றே இருப்பது –
ஒரு குருவி பிணைத்த பிணையல் அவிழ்க்க ஒண்ணாது இருக்க -சர்வசக்தன் பிணைத்த
பிணையை எலி எலும்பன் அவிழ்க்க போமோ -அவன் தன்னையே கால் கட்டிப் போம் இ றே –
பிள்ளை திரு நறையூர் அரையர் –
மாற்றமுள -இவர் சொன்ன வார்த்தை ஏது என்றால் -இவ்வாத்ம வஸ்து அங்குத்தைக்கு
ஸ்ரீ கௌச்துப த்தோபாதியும் -நாச்சியார் திரு முலைத்தடத்தோபாதியும் -சப்ருஹாவிஷயமுமாய் போக்யமுமாய்
இருந்தது -அநாதி காலம் இழந்து போனது -நம் பக்கலில் விமுகனாய் -சப்தாதிகளில் பிரவண னாய்
நம் பக்கலில் அத்வேஷமும் இன்றிகே போருகையாலே சம்சரித்து போந்தான் -என்று இதொரு வார்த்தை –
நம் பக்கலிலே நிரபேஷனாய் கர்மசாபேஷையைப் பண்ணிப் போந்த -அநாதி கால வாஸிதமான
புண்ய பாப ரூப கர்ம பரம்பரையானது ஜன்ம பரம்பரைகளிலே மூட்ட சம்சரித்து போந்தான் என்று இதொரு வார்த்தை –
ஆகிலும் சொல்லுவன் -ருசி இல்லை என்று முதல் வார்த்தை -ருசி அருசிகளுக்கு அடி மனம் -நீ இட்ட வழக்கு –
ருசி ஜனகனான நீ யான பின்பு ருசி இல்லை என்று சொன்ன இடம் வார்த்தை இல்லை –
கர்மம் அடியாக சம்சரித்தான் என்ற இரண்டாம் வார்த்தை -கர்மம் -நிக்ரக அனுக்ரக ரூபமாய்
உனது திரு உள்ளத்தே கிடக்கும் -உனக்கு நிர்வாகர் இல்லாமையாலே அத்தை ஷமிக்க தீருமே –
ஆகையால் இதுவும் வார்த்தை இல்லை -இனி பல போக்தாவான நீ  சாஸ்திர அர்த்த கர்த்தாவாக
வேண்டாவோ என்னில் -உனக்கு இவ்வாதம வஸ்து சரீரதயா பரதந்த்ரம் ஆகையால் -ஸ்வ தந்த்ர்ய
க்ருத்யமான கர்த்ருத்வம் பரதந்த்ரனுக்கு இல்லை -சரீர ரஷணம் பண்ணுவான் சரீரி யன்றோ –
இருவரும் என் நினைத்து வார்த்தை சொன்னார்கள் என்னில் –
அவன் கர்மத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் பரஹமத்தை பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் வேதத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் வேதாந்த தாத்பர்யத்தை பற்றி அழித்தார் –
அவன் ஸ்வரூபத்தை பற்றி வார்த்தை சொன்னான் –
இவர் ஸ்வரூப யாதாம்யத்தை பற்றி அழித்தார் –
அவன் சாத்திய உபாயத்தை பற்றி வார்த்தை சொன்னான் –
இவர் பாரதந்த்ர்யா காஷ்டையை பற்றி நின்று சித்த உபாயத்தை பற்றி அழித்தார் –
இது காணும் உபாசகரில் காட்டில் பிரபன்னனுக்கு ஏற்றம் –
மக்கள் தோற்ற குழி தொடங்கி மேல் பாட்டுக்குறையும் இவற்றைச் சொன்னபடி –
என்னைப் போர வைத்தாய் புறமே -உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்தில் வைத்தாய்
போர வைத்தாய் -என்று அவன் செய்தானாக சொல்லுகிறார் இ றே –
தம்முடைய ஸ்வரூபத்தோ பாதி -கர்மமும் அவனைக் குறித்து பரதந்த்ரம் என்று இருக்கும்
பரம வைதிகர் ஆகையாலே –
————————————————————————————————

154-
மீன் நோக்கும் வள வயில் -5-3-
ஏர் நிரை வயலுள வாளைகள் — பொய்கை சென்றணை -பெரிய திருமொழி -4-10-5-
மத்ஸ்யம் என்று பேர் பெற்றவை அடைய கடாஷிக்கும் தேசமாய்த்து –
கடல் அவற்றினால் நமக்குபுகலிடம் என்று நினைத்து இருக்கும்தேசம் ஆய்த்து திரு வித்துவக்கோடு –
ஏரி யில் உள்ள வாளைக் களஞ்சி உழப் புக்கவாறே -நிர் அபாயமாக வர்த்திக்க சீர் மலி பொய்கை
சென்று அணையும் -ஏர்கள் விட்டு பொய்கை உழுவார் இல்லையே -சம்சாரம் துக்கம் என்று விட்டு
விரஜை யைச்சென்று பற்றுவாரைப் போலே –
இப்படி திருவித்துவக்கோடு -திரு வெள்ளியங்குடி திவ்ய தேசங்களின் சம்ருத்தியை
அனுபவித்த படி –

————————————————————————————————–

155
வாசுதேவா உன் வரவு பார்த்தே -6-1
வாழ வல்ல வாசுதேவா -பெரியாழ்வார் திருமொழி -2-2-3-
வாசுதேவா உன் வரவு பார்த்தே-நீ நிற்கிறது உன்னை விஸ்வசித்து அன்று -உன் பிதாவை
விஸ்வசித்து -ஒரு வார்த்தை அல்லது அறியாத ஸ்ரீ வாசுதேவர் பிள்ளை என்னும் அத்தை
விஸ்வசித்து நின்றேன் –
நாயகி பாவத்தை அடைந்த குலேசேகரப் பெருமாள் ஊடலிலே அருளின பாசுரம் –
மெய்யன் வயிற்றில் பொய்யன் பிறந்தாயீ
வாழ வல்ல வாசுதேவா -ஒரு சற்றும் இளைப்பு இன்றிக்கே பிரியப்பட்டு இதுவே போகமாக
இருக்க வல்ல -வாசுதேவ புத்ரனானவனே -பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ –
பெரியாழ்வார் இனியராய் அருளி அவனைக் கொண்டாடுகிறார் –
——————————————————————————————

156-
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் -6-6
போகு நம்பீ -திருவாய்மொழி -6-2-2-
யாரைத் தீண்டி வந்தாய் -என்னைத் தீண்டாதே கடக்க நில்லு –
போகு நம்பி -6-2-1- முன்பே சொல்லியும் ஓன்று இரண்டு அடி இட்டு வர விட்டு கிட்ட நின்றானாக
புடைவை படாமே கடக்க நில்லும் என்கிறாள் –
நாயிகா பாவம் நாடி அறிந்து வியாக்யானம் அருளிச் செயும் பூர்வர்கள் –
——————————————————————————————

157
பைய அரவின் அணைப் பள்ளியினாய்  பண்டையோம் அல்லோம் -6-7-
மன்னுடை இலங்கை யரண் காய்ந்த மாயவனே -திருவாய்மொழி -6-2-1-
பைய அரவின் -நீ எனக்கு நல்லை யல்லை யாகிலும் நான் உனக்கு நல்லேன் –
ஆசைப்பட்டார்க்கு உடம்பு கொடுக்குமவன் எதிர் தலையினுடைய ரஷண சிந்தை
பண்ணுமவன் அவன் -என்று அவன் சொல்ல -பைய அரவின் அணைப் பள்ளியினாய் -என்கிறாள் –
பண்டையோம் அல்லோம் நாம் -அகப்படுத்துகைக்கு ஆக நீ  செய்யும் செயல்கள் அறிந்தவர்கள் ஆகையால் –
பழையவர்கள் அல்லோம் காண் நாங்கள் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று இருக்கும்
நிலை தவிர்ந்தோம் காண் நாங்கள் –
மன்னுடை-உண்ணாது உறங்காது என்று ஏக தார வ்ரதனாய்க் கொண்டு -நான் பட்டது எல்லாம்
பொய்யோ -என்றான் -அது தான் நீ செய்ய வேண்டிச் செய்தாயோ -ஒரு துறையிலே ஒரு மெய்
பரிமாறா விடில் நமக்கு மேலுள்ளது எல்லாம் ஒரு தொகையில் அகப்படாது என்று -செய்தாய்
அத்தனை அன்றோ -அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்ட வழி யன்றோ –
ப்ராவண்யா அதிரேகத்தாலே ஆழ்வார்கள் இப்படி ஏசும் பாசுரங்கள் பல பல –
——————————————————————————————–

158-
காணுமாறு இனி உண்டு எனில் அருளே -7-9-
ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் தாளிணை –துழாய் -திருவாய்மொழி -4-2-1-
நீ நினைத்தால் செய்ய ஒண்ணாதது இல்லை -தேவகி பாவனையில் கால அதீதமான
அனுபவங்களைப் ஆசைப்பட்டபடி –
ஆலிலை-வட தள சாயி யினுடைய திருவடிகளில் சாத்தின -திருத் துழா யை பராங்குச நாயகி ஆசைப்படுகிறாள்
இவன் சக்திமான் என்று அறிந்தபடியாலும் -தன் சாபல அதிசயத்தாலும் -அவாவின் மிகுதியாலும்
பூத காலத்து உள்ளவற்றையும் பற்ற வேண்டும் என்றுஆசைப்படா நின்றாள் -என்கிறாள் – திருத் தாயார்
————————————————————————————————–
159-
வன் தாளிணை -9-1
திண் கழல் -திருவாய்மொழி -1-2-10-
வண் புகழ் நாரணன் திண் கழல் -என்னுமா போலே -ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் –
என்னும் திருவடிகள் -பெருமாள் விட்டாலும் பிராட்டி விடாள் -பிராட்டி விடிலும் பெருமான் விடான் –
இருவரும் விட்டாலும் இவை விடாமல் திண் கழலாய் இருக்கும் –
————————————————————————————————-
160-

காகுத்தா கரிய கோவே -9-3-
தத்துவம் அன்று தகவு -திருப்பாவை -29-
தயரதன் புலம்பல் -என்னைப் பிரிந்து என் மனம் உருக்கும் வகையே கற்றாயே -இது உம்முடைய
குடிப்பிறப்புக்கு சேராது -என்பதை -காகுத்தா -என்கிற சொல்லாலும் -இது உம்முடைய வடிவு
அழகுக்கு சேராது -என்பதை -கரிய கோவே -என்று அருளுகிறார் –
தத்துவம் -கோபிமார் நப்பின்னையை ஏசும் பாசுரம் -கண்ணன் ஆய்ச்சிமாருக்கு மறுமாற்றம்
சொல்லப் புக -அவள் -ஆர்த்த விஷயத்தில் தம்மில் முற்பாடனாக ஒண்ணாது என்று கண்ணாலே
வாய் வாய் -என்று வாயை நெரித்தாள் -அப்போது அவர்கள் இவளை -மைத் தடம் கண்ணினாய் –
என்று விளித்து -இது உன் ஸ்வரூபத்துக்கும் போருமதன்று ஸ்வபாவத்துக்கும் போருமதன்று –
புருஷகாரமாய் நின்று சேர்ப்பாருடைய ஸ்வரூபத்துக்கும்-ஸ்வபாவத்துக்கும் -சேருமதோ இது
என்கிறார்கள் -அகில ஜகன் மாதரம் -என்கிறதுக்கும் சேராது -அசரண்ய சரண்யாம் -என்கிறதுக்கும்
சேராது -தேவ தேவ திவ்ய மகிஷீ -என்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை –
———————————————————————————————-
161
நெடும்தோள் வேந்தே -9-9-
-பாழியம் தோளுடை -திருப்பாவை -4
நெடும் தோள்-ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத காவல் துடிப்பை உடைய தோளை உடையவன் –
பாழியம் தோளுடை-ஆள் சுருங்கி நிழல் பெருத்து இருக்கை
உபய விபூதியும் ஒதுங்கினாலும் ரஷ்ய வர்க்கம் அளவு பட்டு
ரஷகனுடைய காவல் துடிப்பே மிக்கு இருக்கை –
————————————————————————————————
162-

தவம் உடைத்து தரணி தானே -10-5-
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன -பெரியாழ்வார் திருமொழி -4-4-4-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய சஞ்சாரத்துக்கு விஷயம் ஆகையாலே பூமியானது பாக்கியம் உடைத்தாய்
ஆனது என்கிறார் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
நாம ரூப விசிஷ்டமான சகல வஸ்துக்களிலும் ஒரோ ஜீவ அதிஷ்டானம் உண்டு என்று கொள்ள வேண்டும் –
கடபடாதிகளில் ஞான சங்கோச அதிசயத்தாலே ஜீவ அதிஷ்டானம் உண்டு என்று தோற்றாமல் இருக்கிறது –
பாபிகள் பருகும் நீருக்கும் உடுக்குமகூறைக்கும் -அபிமானியான ஜீவர்களுக்கு பாபம் உண்டு –
ஊனேறு -இத்யாதியில் பகவத் பாகவத ஸ்பர்சம் உள்ளவை ஞானாதிகர்க்கும் பக்தி பரவஸ்ர்க்கும்
உத்தேச்யம் ஆகா நின்றால் -இதர ஸ்பர்சம் உள்ளவை சத்துக்களுக்கு நிஷிதங்கள் -என்றது ஆய்த்து –
————————————————————————————————
163
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -10-10-
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை -திருவாய்மொழி -7-5-2-
நடந்தமை என்று நம் ஆழ்வார் அஸ்பஷ்டமாக அருளிச் செய்ததை
இவர் ஸ்பஷ்டமாக -சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று அருளிச் செய்கிறார் –
கலங்கா பெரு நகரம் காட்டுவான் இலங்கா புரம் எரித்தான் -என்னா நின்றது இ றே
————————————————————————————————-
ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: