Archive for October, 2012

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

October 31, 2012

திருஉடம்பு வான்சுடர்; செந் தாமரைகண் கைகமலம்;

        திருஇடமே மார்வம்; அயன்இடமே கொப்பூழ்;

        ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ!

        ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள்கலந் தானுக்கே.

    பொ – ரை : வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமானுக்கு அழகிய திருமேனி சூரியனைப் போன்று இருக்கின்றது; திருக்கண்கள் செந்தாமரை போன்று இருக்கின்றன; திருமகளுக்கு இருப்பிடம் திருமார்பாகும்; பிரமனுடைய இடம் திரு உந்தித்தாமரையாகும்; ஒழிந்த மற்றை இடம் சிவன் இருக்கும் இடமாகும்.

    வி-கு : வான் சுடர் -சூரியன்; மிக்க ஒளியுமாம். ஒருவுதல்-நீக்குதல். ‘ஒன்று’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருட்டாய் நின்றது. ஓகாரம், சிறப்புப் பொருளில் வந்தது. கலந்தான் – வினையாலணையும் பெயர்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன்தான், என் உட்ம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்.

திரு உடம்பு வான் சுடர் – அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார். 2’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர், ‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்குவிக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ? 1அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார். வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின்,‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.

கண் செம் தாமரை – கடாக்ஷத்தாலே 1வவ்வல் இடப்பெற்றுச் சொல்லுகிற வார்த்தை. கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார். திரு இடமே மார்வம் – அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டி யாருக்கு இருப்பிடம் திருமார்வு. அயன் இடமே கொப்பூழ் பதினான்கு உலகங்களையு படைத்த பிரமன் திருநாபிக்கமலத்தை இருப்பிடமாகக் கொண்டிருப்பான். ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே – என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் உருத்திரனுக்கு இருப்பிடமாய்  இருக்கும். ‘ஓரிடம்’ என்னாதே, ‘ஒருவிடம்’என்கிறது, ஒருவுதல் – நீங்குதலாய், நீங்கின இடம் என்றபடி. தாமச தேவதை இருப்பிடம் ஆகையாலே ‘நீங்கின இடம்’ என்று விருப்பு அற்ற வார்த்தை இருக்கிறபடி.

ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல்குணத்தை அனுசந்தித்து,3வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.

5. ‘இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக
இருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம். ‘அப்படியாயின், ‘ஆறு
குணங்களையுடைய திருமேனி’ என்பது சேரும்படி என்?’ என்னும் வினாவிற்கு
விடையாக, ‘இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய்’ என்று தொடங்கும் வாக்கியத்தை
அருளிச்செய்கிறார்.

பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
இவ்வுலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டது போன்று, அவ்வுலகம் பஞ்ச
சக்திகளாலாயது என்பர்.

ஆழ்வார் உடன் கலந்த பின்பு தனக்கு வந்த புகர் -தன உடம்பை பற்றி பிரமாதிகள்  சத்தை பெற

அவன் என் உடம்பை பற்றி சத்தை பெற்றான் –
திரு உடம்பு வான் துடர் -என்னுள் கலந்தான் -ஓடு இடம் பாக்கி இன்றி –
செந்தாமாரை கண்
பாட்டு தோறும்
திரு இடமே மார்பு அயன் இடமே கொப்புள்
அரனுக்கும் ஒரு இடம் -என்னுள் கலந்த பின்பு தேஜஸ்
அணைத்த போதே ஸ்பர்ச சுகம் ஏற்பட -அதனால் வந்த புகர்
பிராட்டி அணைத்த போதை ஸ்பர்ச சுகம் –
திரு இடமே மார்பம் -பெரிய பிராட்டியார் –
திரு மார்பின் போக்கியம் சொல்ல மாட்டாதே திரு வார்த்தை ஒன்றையே ஸ்ரத்தையா -திரு -உயர்ந்த அர்த்தம்
வான் உயர்ந்த சுடர்
நஞ்சீயர் வார்த்தை -அருளிச் செய்வாராம் -வ்யாக்யானத்தின் சிறப்பு -மற்றவர் வார்த்தை குறிப்பிட்டு கெளரவம்
ஈஸ்வரனுக்கு விக்ரகம் இல்லைவிபூதி இல்லை சொல்வார் முன்பே
ஆப்த தமர் தம் திரு வாக்கல்-காட்டி –
கழுத்தை பிடிப்பது போல் –
அப்படி சொல்பவர் பண்ணாத பாபம் இல்லை
தாங்கள் மொட்டை அடித்தது போல் பிர,மதத்துக்கும் மொட்டை அடித்து
அவர்கள் சொன்னதை கேட்காமல் ஆழ்வார் –
அத்வைதத்தில் இருந்த நஞ்சீயர் சொல்லும் வார்த்தை –
திரு இல்லா தேவரை -திரு மழிசை பாக்யத்தில் செங்கண் மால் அடி சேர்ந்தார் வக்கீல் ஜுட்ஜ் ஆனதும் -நானே பார்த்த விஷயம் -எதிரிகளுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தாராம் –

அது போல் நஞ்சீயர் வார்த்தைக்கு ஸ்ரேஷ்டம்
இங்கே சேர்த்தாரே பட்டர் என்ன பாக்கியம் –
ஆழ்வார் தோற்கும் இடம் திரு மேனியில் -இச்சா க்ருகேத அபிமதம் -தன் திரு மேனி தனக்கே ஆனந்தம் –
தான் மதித்தார்க்கு கொடுப்பதும் திரு மேனி தானே
பரிஸ்வங்கோ  ஹனுமதோ -ஆலிங்கனம் உயர்ந்த பரிசு தான் -கொடுப்பான் –
அதை கொண்டாடுகிறார் முதலில் சுடர் இப்பொழுது வான் சுடர்
மிகவும் ஒளி பெற்றது –
புறம்பு ஒளியாய் உள்ளே மண் பற்று இன்றிக்கே
பொம்பை குதிரை சாணியில் முன்பு பண்ணுவாராம்
இங்கு தேஜஸ் தத்வம் நெய் திணின்கினால் போல் இருகி –
தேஜாசாம் ராசி கூட்டம் -பஞ்ச சக்தி மயமாக இருக்க செய்தே -ஷாட் குணிய விக்ரகன்
விக்கிரகங்களுக்கு -குணங்களுக்கு பிரகாசம் –
திரு கண் அதரம் பாரும்
கடாஷத்தால் குளிரப்பட்டு -வவ்வல் இட-வார்த்தை சொல்கிறார் –
அணைத்த கதை -மிதுரனா கரண -ஹரி வம்சம் -கண்டா கர்ண மோஷ பிரதானே
ஒரு கால் சொன்னதை ஒன்பது காலும் சொல்லுவான்
முத்து கோக்குறவன் முகம்  மாற்றி கோத்தவாறே  விலை பெறுமா போல் –
மாற்றி மாற்றி ரசித்து அனுபவிக்கிறார்
கண் கை கமலம் -முக பேதத்தால்
கையாலே அனைப்பிக்கும் பெரிய பிராட்டியார் -புருஷகாரம்
அயனிடமே கொப்பூழ்
திரு நாபி கமலத்தை
ஒருவிடம் -ஓர் இடம் இன்னாதே ஒருவதால் நீங்கின இடம்
நீங்கின இடமும்-ருத்ரன் – தாமச -காட்டுக்கு போய் தீர்த்தம் -நீங்கின இடம்
சர்வேஸ்வரன் நீக்கிய இடமும்   அரனுக்கு
போய் கலவாது என்மே கலந்தான்
ஒரு இடம் இன்றி கலந்தான் ஒ ஆசார்யம்
அநந்ய பரர் அந்ய பரரர் ப்ரமாதிகளுக்கும் கொடுத்தானே என்று வித்தராய் இருந்தார் முன்பு —
எறனை பூவனை பாசுரம்
தமக்கு இடம் கொடுத்த பின்பு பிரமாதிகளுக்கு கொடுத்தது எளிமை எல்லை நிலம் –
மூன்றையும் சேர்த்து இந்த பந்தி அருளுகிறார் –
ஒரு இடம் இன்றி என்னுள் கலந்தான் -ஒ என்று அன்வயம்

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-5-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

October 31, 2012

ஐந்தாந்திருவாய்மொழி – ‘அந்தாமத்தன்பு’

முன்னுரை

1‘கேஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்;3அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில்  முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட துக்க ஒலியானது செவிப்பட, ‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று, பிற்பட்டதனால் உண்டாகும் 1நாணத்தாலும் பயத்தாலும் கலங்கினவனாய், தன்னுடைய 2சொரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும் வந்து கலந்து அத்தாலே மகிழ்ந்தவனாய், தான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.

 

 

        அந்தாமத்து அன்புசெய்துஎன் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாமம் வாழ்முடிசங்கு ஆழிநூல் ஆரம்உள;
செந்தாம ரைத்தடங்கண்; செங்கனிவாய் செங்கமலம்;
செந்தா மரை3அடிகள்; செம்பொன் திருஉடம்பே..

 

    பொ – ரை : ‘அழகிய பரமபதத்தில் உள்ள நித்தியசூரிகளிடத்தில் செய்யும் அன்பினை என்னிடத்திற்செய்து, என் உயிரோடு கலந்த அம்மானுக்கு, அழகிய மாலையானது வாழ்கிற திருமுடி, சங்கு, சக்கரம், பூணூல், முத்துமாலை முதலிய மாலைகள் ஆகிய இவை எல்லாம் உள்ளன; கண்கள் செந்தாமரைமலர்கள் மலர்ந்திருக்கின்ற தடாகம் போன்று உள்ளன; செந்நிறம் வாய்ந்த திருவாயானது, செங்கமலமாய் இருக்கின்றது; திருவடிகளும் செந்தாமரையாய் இருக்கின்றன; திருமேனி சிறந்த பொன்னாகவே இருக்கிறது’, என்பதாம்.

    வி-கு : தாமம் – இடம்; இங்கே பரமபத்தினைக் குறித்தது. ‘தண் தாமம் செய்து’ என்றார் முன்னும் (1. 8 : 7.) ‘செய்து சேர்ந்த அம்மான்’ என்க, தாமம் – மாலை. சேர் அம்மான், வாழ்முடி – நிகழ்கால வினைத்தொகைகள்.

இத்திருவாய்மொழி, நாற்சீரடி நான்காய் வருதலின் தரவுகொச்சகக்கலிப்பா எனப்படும்.

ஈடு : 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தான் என்கிறார்.

அம் தாமத்து அன்பு செய்து – 2அழகிய தாமத்திலே செய்யக் கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து. இனி, இதனை ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, இடவாகு பெயராகக் கொண்டு, ‘பரம்பதத்திலுள்ளார் பகலிலே செய்யக்கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து’ என்று பொருள் கூறலுமாம். இதனால், 3‘ஒரு  விபூதியில் உள்ளார் பக்கலிலே செய்யக் கூடிய சினேகத்தை என் ஒருவன் பக்கலிலே செய்தான்’ என்கிறார்; 4‘முற்றவும் நின்றனன்’ என்று, முன்னர்த் தாமே அருளிச்செய்தார் அன்றோ? என் – அவன் மேல் விழத் தாம் 5இறாய்த்தமை தோன்றுகிறது. இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்; அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான். கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. 6‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார். ‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார். ‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ என்கிறார் மேல்: அம்மானுக்கு – நித்திய விபூதியில் உள்ளாரைப் போன்று 7லீலா விபூதியில் உள்ளார்க்கும் வந்து முகங்காட்ட வேண்டும் சம்பந்தத்தை உடையவனுக்கு.வகுத்த ஸ்வாமி ஆகையாலே ‘அம் தாமத்துஅன்பு செய்தான், என் ஆவிசேர்ந்தான்’ என்றபடி, 1இனி, இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான்’ என்கிறார் எனலுமாம்.

அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – இதற்கு, 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்தியசூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச்செய்வர். ‘ஆயின், அவர்களை 2‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், ஞானவான்களாய் இருக்கச்செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக்கொள்கிறார்கள் இத்தனையே. இனி, இதற்கு எம்பெருமானார், இவரோடு கலப்பதற்கு முன்பு இறைவனைப் போன்றே இவையும் ஒளி இழந்தவையாய்ச் சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச்செய்வர். ‘ஆயின், இறைவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின், கற்பகத்தரு  வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ? அம் தாமம் வாழ் முடி – அழகிய மாலையானது முடியிலே சூடப்பட்டதனால் வாழத் தொடங்கிற்று. இனி, ‘வாண்முடி’ என்பது பாடமாயின், ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள் கூறுக. அம் தாமம்  சங்கு – ஒளி உருவமான திருஆழி. நூல் – திருப்பூணூல். ஆரம் – திரு ஆரம். உள – உள்ளவைகள் ஆயின. இவற்றைக் கூறியது நித்தியசூரிகட்கு உபலக்ஷணம். இனி, ‘நித்தியரான இவர்கள் 3உளராகையாவது என்?’ என்னில்,4‘அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’ என்கிறபடியே,

இவரோடு கலப்பதற்கு முன்னர் அந்த மோக்ஷ உலகமும் இல்லை யாய்த் தோன்றுகையாலே என்க.1

செந்தாமரைத்தடம் கண் – துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே! ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ?’ எனின், அங்குக் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம். செம் கனி வாய் செம் கமலம் – நூற்றுக் கணக்கான உபசார வார்த்தைகளைச் சொல்லுகிற திரு அதரம் இருக்கிறபடி. சிவந்து கனிந்த அதரமானது, சிவந்த கமலம் போலே இராநின்றது. செந்தாமரை அடிகள் – நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே – திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என்னும்படி ஆயிற்று.

ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்
கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்
கூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி
சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்
ஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.

வாட்டமில்வாமணன்  -என்றதால் கலந்தான் அறிகிறோம்

கல்வியால் வந்த ஆனந்தம் -அடியார்களோடு கலந்தான் -ஆழ்வார் ஆசைப் பட்ட படியே
கஜேந்திரன் –தரையில் பலம் -முதலை ஆகர்ஷதே ஜலம் -போன்ற விசனம் ஆழ்வாருக்க்ம்
ஆறும் படியாக வந்தான் –அவசரமாக -ஆயுதம் ஆபரணம் அகரமாக பெரிய த்வரை உடன் –
சமுபதி -சேனை முதலியார் கைலாகு கொடுக்க -மனிபாதுகை சாதிகக் கொள்ளாமல் -கிமிகுலம் கிம் ஜித
அந்த புரம் துக்க -வாகனம் பர்சிஷ்கரியம் -ஆரோகத -துடிப்பு -பகவத த்வரைக்கு நமஸ்காரம் -பட்டர்  –
வேகம் போக வில்லை -மந்தம் -உம்காரம் -சப்தித்தி ஆச்பாலனம் -அடித்து –  அங்க்ரி பிரக்ரிதி -மூன்றும் செய்து விரட்டி –
காந்தி தசை -அது போல் -ஓடி வந்தான் -அரை குலைய தலை குலைய -ஓடி வந்தான் -அரையில் வஸ்த்ரம் -குடுமி அவிளும்படி –
உள்ளே போய் புக்கு ஆனை யை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து கொண்டு வந்து -கரையிலே ஏறி –
சென்று நின்று ஆழி தொட்டானை -பிரஜையையின் வாயில் முலை கொடுப்பது போல் -இரண்டுக்கும் நலிவி வாராத படி –
வாய்க்குள் கால் எவ்வளவு அறிந்து பின்பு -கிரந்தியை சிகிசிப்பிக்குமா போலே -குழந்த்தை கட்டி அமுக்குவது போல்
பெரிய பிராட்டியாரும் தானுமாக -இரண்டுக்கும் நலிவு வாராமே –திரு ஆளியாலே விடுவித்து -முதலை வாயில் -சம்சாரத்தில் இருந்து -இரண்டும்
சாத்தி அருளின திரு பரியவட்டம்தலையை சுருட்டி —திரு பவளத்தில் வைத்து  ஊதி –திரு புண் வாயை – வெது கொண்டு
திருக் கையாலே ஸ்பர்சித்து சிகிச்சை –
சமாஸ்ரையான வத்சலன் -ஆழ்வான் அருளி செய்த வசனம் -பாதம் சிசிருசை –
அழகியதான ஜகத் வியாபாரம் பண்ணினோம் -லஜ்ஜை உடன் -யார் ஆனோம் -பிறபாட்டுக்கு லஜ்ஜனாய் –
லஜ்ஜா பயங்களுடன் -கலங்கி -சேர்த்தி உடன் -ஸ்வரூப ரூபா குணங்கள் ஒப்பனை திவ்ய ஆயுதங்கள்
கலந்து கிருத கிருத்யனாய் -அப்படி பட்ட அவனுக்கு வந்த சந்தோஷம் ஹர்ஷா பிரகர்ஷம் கண்டு
தான் பெற்ற பேற்றை பேசி அனுபவிக்கிறார்
அடியார்கள் குழாம் களை –உடன்கூடுவது என்று கொலோ -இவர் ஆசைப் பட்ட படியே -அவன் வந்தான் –
இரண்டு நிர்வாகம் –

அம் தாமத்து அன்பு செய்து -அழகிய இருப்பிடம் -அங்கு காட்டும் பிரிதியை ஆழ்வார் இடம் காட்டி
ஆவி சேர் அம்மான் -அம் தாம வாள் முடி -சங்கு ஆழி நூல் ஹாரம் -உள்ளன –
செந்தாமரை தசம் கண் –வாய் -அடிகள் -செம் பொன் திரு உடம்பு
அழகிய தாமதத்தில் -சிநேகம் ஆழ்வார் இடம்
தாமம் ஸ்தானமாய் -மாலையாய் -மஞ்சா க்ரோசந்தி போல்நித்ய முக்தர் அனைவர் பக்கல் சிநேகம் -இவர் இடம் காட்டி
ஆகு பெயர் -விபூதியில் உள்ளார் பக்கம் காட்டும் சிநேகம் கிடீர் தம் ஒருவர் பக்கல்
பற்றிலன் ஈசன்மும் முற்றவும் நின்றனன் -பட்டர் நிர்வாகம் அங்கெ
என் ஆவி -அதுவும் -என்னுடைய -நீசன்
தான் இறாய்தமை அவன்மேல் விழ -தோற்றுகிறது
பூர்வ வ்ருத்தாந்தம் அனுசந்தித்து இறாயா நின்றார்
அதுவே ஹெதுவாகா -மேல் விழ –
கமர் பிளந்த இடத்தில் நீர் பாய்ச்சுவர் போல்
உள்ளுள் ஆவி உலர்ந்து இருந்ததே
அந்த ஆவி சேர் அம்மான் –
சேர் -சேர்ந்த வான் அவன் -ஆசை போலே அவனுக்கு விடாயர் மடிவில் சேர்ந்தது போல்
ஆழ்வார் கிடைப்பாரா -வெல்ல குளத்திலே இருவரும் ஆனோம் பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம்
அம்மானுக்கு -வகுத்த சுவாமி ஆகையால் மேல் விழுந்தான்
இரண்டு விபூதிக்கும்முகம் காட்ட பிராப்தி உள்ள அம்மான்
சர்வ ஸ்மாத் பரன் -இவரை பெற்ற பின்பு ஆயத்து அவன் சர்வேஸ்வரன் ஆனான் –
கலக்கும் பொழுது -அடியார் குழாம் -ஆசை பட்ட படி நித்ய சூரிகள் உடன் வந்தான்
திரு மாலை ஆண்டான் -நூல் ஹாரம் -சேர்த்து சொல்லலாமா -அடியார்கள் –
சின் மாராக இருந்தாலும் பாரதந்த்ராயம் -ருசியால் மாற்றி கொள்வார்கள்
-சத்வ பிரசுரம் கொண்ட வை தான் கோபுரம் மண்டபம் அனைத்தும் -கைங்கர்யம் செய்ய நூலாக ஹாரமாக அமைத்து கொள்வார்
நாதனை நரசிங்கனை –பருகும் நீரும் உடுக்கும் கூரையும் பாபம் செய்தன -அபிமான ஜீவன் உண்டே அதற்கும் –
எம்பெருமானார் -நிர்வாகம் -வாள் ஒளி-வாழுகிற முடி -வாள் முடி -ஒளி உடைய வாழுகின்ற
அவையும் ஒளி குன்றி இருக்க ஆழ்வார் உடன் சம்ச்லேஷித்த பின்பு
அவனோடு ஒக்க இவையும் ஒவ்ஜ்வலமாய் -வாட்டமாக -ஆசாத் சமம்
இப்பொழுது உஜ்ஜ்வலமாய் சத்தும் பெற்றனவாம் முடி சூடி வாழத தொடங்கிற்றாம்
கல்பகம் வாடினால் தளிரும் பூவும் வாடுமே
தேஜோ ரூபமான -அம் தாம –
நித்ய சூரிகள் அனைவருக்கும் உப லஷணம்
உள -நித்யர் உளராவது    எப்பொழுது – -அவனுக்கு வாட்டம் தீந்த பின்பு தான் உள
ஜனஸ்தானம் -பிராட்டி -பர்த்தாரம் பரிஷ்ஜச்வஜே -பிராட்டி –சத்ரு ஹந்தாரம் ராமம் த்ருஷ்ட்வா –
பபுவா ஹ்ருஷ்டா வைதேஹி -பபுவா ஆனாள் இருந்தாள் -தான் உளள் ஆனாள் -வீர வாசி அறியும் குலம்-விதேக ராஜ புத்ரி –
விபீஷணன் -கிருத கிருத்யா – சதா ராம – முன்பு ராமராக இல்லை சதா ஏவ ராம -இத பூர்வம் அராம -பிரமமோத-
ச ஏகா  ந ரமேத–ஏகாக்கி நாராயண ஆஸீத் ந பரமா -ந நஷத்ரணி  –போல்
துயாஸ ரக நந்தன -பரத சத்ருக்னன் கூட சேர்ந்த பொழுது தான்
குகன் -சேர்ந்த பின்பு தாள் இளைய பெருமாள் சேர்த்தி உளது போல் ஆனதாம்
தேஜஸ் கரமாக அவை வந்தன -ஆள வந்தார் -இந்த அர்த்தம் சொல்லி
ஆர்த்தி தீர கடாஷித்த செம் தாமரை தடம் கண்
செவ்வி பெற்று விகாசம் பெற்றன –
சதா ஏக ரூப ரூபாய  -மாறு பாடு விகாரம் -கர்மமடியாக வருகிற விகாரம் இல்லை -திரு உள்ளம்
செம் கனி வாய் செங்கமலம் -சாடு சதங்கள்சொல்லுகிற திரு அதரம்  –
செந்தாமரை அடிக்கள் -ஓசை இன்பத்துக்காக இரட்டிக்கும் –
அமலன் ஆதிப்பிரான் -திருத்தி காட்டி -சுவாமி
சங்கம் காலம் -சங்கக் காலம் இல்லை சங்க காலம் -சங்கப்பலகை –
பதம் சமஸ்க்ர்தம் ஒரு பதம் தமிழ் இரட்டிப்பு கூடாது –
சிருக்கால் சிறுகால் ஒருமா தெய்வாம் மாத் தெய்வம்
சிறு சோறும் மணலும் -பல காட்டி -நிறைய இடங்கள் -இப்படியும் அப்படியும் வரும்
நோக்கு ஸ்மிதம் -கண் அதரம் சொல்லி -தோற்று விழ திருவடிகள் –
செம் பொன் திரு உடம்பு -ருக்மாபம் -தங்கம் போல் -ஆகர்ஷகம் பிரகாசமாய் –
ஹிரண்ய  மஸ்ரு-மீசை -ஹிரண்ய கேச – -சர்வ ஏக ஸ்வர்ண்ய-

புகார் உண்டாய்த்தாம் –

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 30, 2012

  வாட்டம்இல்புகழ் வாமன னைஇசை
கூட்டி, வண்சட கோபன் சொல்அமை
பாட்டுஓர் ஆயிரத்து இப்பத்தால்அடி
சூட்ட லாகும்அம் தாமமே.

    பொ – ரை : குறைதல் இல்லாத புகழையுடைய வாமனனை, வள்ளலாரான ஸ்ரீ சடகோபர் இசையோடு சேர்த்து அருளிச்செய்த எல்லா இலக்கணங்களும் அமைந்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களால், அழகிய செவ்வி மாலையினை அவனுடைய திருவடிகளில் சூட்டுதலாகிய பேற்றினை அடையலாம்.

    வி-கு : வாட்டம் இல் புகழ் வானமனை, வண் சடகோபன் இசை கூட்டிச் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அம் தாமம்

அடி சூட்டலாகும்’ என்க. ‘வாட்டம் இல் புகழ் வாமனன்’ என்பதனை, ‘தாவா விழுப்புகழ் மாயோன்’ (தொல். பொ. புறம்.) என்றதனோடு ஒப்பிடுக.

ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே நித்தியசூரிகள் திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே, 1‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.

வாட்டம் இல் புகழ் வாமனனை – ‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்; இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது. இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள். தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள். இசை கூட்டி – பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள். வண்சடகோபன் சொல் –2‘உதாரகுணத்தையுடையவரும் மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,‘வண்சடகோபர்’ என்கிறார்.

அமை பாட்டு ஓர் ஆயிரத்து – அமைவு -சமைவாய், சொல்லும் பொருளும் நிறைந்திருத்தல். இப்பத்தால் அம் தாமம் அடி சூட்டலாகும் – இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம். ‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப் பிறந்த ஆற்றாமை இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ?’ எனின், வேண்டா; தொண்டினைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப் பிறந்தன; 3தமப்பன் செல்வம் புத்திரனுக்குக்கிடைக்கவேண்டியது முறையாமாறு போன்று, இவ்

வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல், 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

(11)

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்; இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய தோள் வலியிலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்; மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்; நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அதுதன்னையே உபகாரமாகச் சொல்லாநின்றாள்,’ என்றாள்; ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்; ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்; ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் இன்மைதன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்; எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவள் படும் பாடே இது?’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்; பத்தாம் பாட்டில், ‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்; முடிவில், இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

இவர் பிரார்த்தித்த படியே -சூட்டு நன் மாலைகள் படியே அடிமை செய்ய படுவர்
அடி சூட்டம்
வாட்டமில் புகழ் வாமனன்
இவள் வாடினால் அவன் வாடுவான்
கலந்து மகிழ்ந்து
கலந்தபடியை அனுபவித்து வடதமிழ் புகழ் வாமனன்
இடை கூட்டி ஆழ்வார்
அம் தாமம் அடி சூட்டல் ஆகும் முக்தராக
நோக்கு ஒன்றும் விடேல் -புறப்பட்டோம் என்று லஜ்ஜை உடன் வந்தானாம் –
இவள் வாட அவன் புகழ்  ஆயித்து வாடுமே
ஆள வந்தார் சகஜம் துக்கம் கிந்து -உன் திருவடி பராபவகுனக்கு தான் கேடு
ராஜ மகிஷி உஞ்ச விருத்தி செய்தால் ராஜாவுக்கு தான் அவத்யம் இறே
நாயகி வாட்டம் -ஆபத்து வந்தது -மூவருக்கும் இல்லை
கஜேந்த்திரன் த்ரவ்பதி பிரகலாதனும் -மூன்று தப்பிலே பிழைத்தான் –
முகம் காட்டா விடில் பூரணத்வம் போகுமே
வாட்டமில் புகழ் வாமனன் –
தன் உடைமை கொள்ள இறப்பாலானாக வந்தவன்
தன் உடைமை பராங்குச நாயகி
வாசனை புஷ்பம் போல் இசையுடன் பாட்டு –
வண் சடகோபன் -முனி உதாகரகர் –மானச அனுபவம் இன்றி வாசகமாக பாடி நமக்கு அனுபவம்
வள்ளல் தனம் இசை கூட்டின வன்மை
சப்தாதங்கள் அமைந்து
ஆயிரத்தில் இப்பத்து -செவ்வி மாலை கொண்டு நித்ய கைங்கர்யம்
பெறாமல் தான் பிறந்த ஆற்றாமை -ஆழ்வாருக்கு கிடைத்தது போல்
பித்ரு தனம் பிள்ளைக்கு போல்
பத்து பாட்டின் அர்த்தங்களையும் சொல்லி தலைக் கட்டினார்
ஆடி -அடியாரை பெற ஆசை -மகிழ்வான் -அடியார்கள் குழாம் கூடி எய்தா குறையால் வாடி
மிக அன்புற்றார் தன் நிலைமை தாயார் ஆய்ந்து உரைக்கும் படி -பாடி அருளினார் –
கல்வியால் பிறந்த சந்தோஷம் அடுத்து அருளுகிறார் .

 

திருவாய்மொழி நூற்றாந்தாதி

 

        ஆடிமகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடிஇன்பம் எய்தாக் குறையதனால் – வாடிமிக
அன்புற்றார் தம்நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன்அந் தோ! 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 30, 2012

 ஏழைபேதை இராப்ப கல்தன
கேழ்இல்ஒண் கண்ணநீர்கொண் டாள்;கிளர்
வாழ்வை வேவஇலங்கைசெற் றீர்! இவள்
மாழைநோக்குஒன் றும்வாட் டேன்மினே.

    பொ – ரை : ஏழையாய்ப் பேதையாய் இருக்கின்ற இவள், தனது ஒப்பில்லாத ஒள்ளிய கண்களில் எக்காலத்திலும் நீரைக் கொண்டாள்; மேன்மேலும் ஒங்குகிற செல்வமானது அழியும்படி இலங்கையை அழித்தவரே! இவளுடைய இளமை பொருந்திய மான் போன்று நோக்கு ஒன்றும் வாடும்படி செய்யாதீர்.

வி-கு : ’இலங்கை செற்றீர்! இவள் தன கண்ண நீர் கொண்டாள்; இவள் நோக்கு ஒன்றும் வாட்டேன்மின்’ என்பதாம். கேழ் -ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!’ என்பது கம்பராமாயணம். கிளர்வாழ்வு – வினைத்தொகை. வாழ்வை – ஐகாரம் சாரியை மாழை – இளமை; அழகுமாம் ‘வாட்டேன்மின்’ என்பது எதிர்மறைப் பன்மை வினைமுற்று.

ஈடு : பத்தாம் பாட்டு. 1‘இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்; இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்.

ஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில், கிடைக்கக்கூடிய பொருளில் செய்யும் விருப்பத்தினைச் செய்பவள். பேதை -‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம சொன்னாலும் கேளாத பருவம். இராப்பகல் தன கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் – ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியாய், ஒப்பு இல்லாதவையாய், கண்ண நீர் இல்லாவிடினும் கண்டவர்க்கு ஆலத்தி வழிக்கவேண்டும் படி ஒள்ளியவாள் உள்ள கண்களில், எல்லாக் காலங்களிலும் கண்ணீர் நிறையப் பெற்றாள். தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!3 இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘நடுவே கண்ணீர் விழ விடும் இத்தனையோ, விரோதி கனத்திருக்க?’ என்ன, ‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்?’ என்கிறாள் மேல் : கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள்? நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள், ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

1. ‘இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே’ என்றதனை நோக்கி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.

2. கண்ணை வர்ணிக்கிறவளுடைய மனோபாவம், ‘தாமைரையிலே முத்துபட்டாற்போன்று’
என்று தொடங்கும் வாக்கியம். அதாவது, கலவியாலே உண்டான ரசத்தைப்
பொறுப்பதற்காகவும், மேலும் மேலும் விருப்பம் மிகுவதற்காகவும் அன்றோ நீர் பிரிந்தது?
அவை அப்படியே பலித்த பின்பும், கண்ண நீரையும் மாற்றிக் கலக்கப் பெறாமல்
இழப்பதே!’ என்றபடி.

3. ‘இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையில் இழப்பதே!’ என்றது, ‘இது
வேண்டும் என்று படைத்தல், அவதரித்தல் முதலியவைகளாலே பாடு பட்டு, இப்பொழுது
இழப்பதே!’ என்றபடி.

4. ‘ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார். ‘பொன்னும் முத்தும்’ என்று தொடங்கி பொன் –
பசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி.

இந் நோக்கு ஒன்றையும் நோக்கி கொள்ளும்
ஏழை பேதை அறியாதவள்
மருண்ட பார்வை
கிடைக்காத வஸ்துவை பிரமான பிரசித்தம் -கிடைக்கும் என்று
நாசோ புருஷகாரண -சபலம்
கிடையாது என்று அறியும் பருவம் இல்லை பேதை
சந்தரன் கேட்க்கும் குழந்தை போல்
உம்மை அடைய முடியாது -ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்
ஆனந்த
கெழ் ஒப்பாய்ய ஒப்பு இன்றி இருக்கும் கண்
கண்ணா நீர் இல்லா விடிலும் பார்த்தார் ஆலத்தி கழிக்கும் படி
தாமரையில் முத்து பட்டால் போல் கண்ணும் கண்ண நீரும்
இவ் இருப்பை காட்டில் இருக்கும் நிலா ஆக்குவதே
அழகை அனுபவிக்காமல்
சீதா பிராட்டி -யார் குடி வீணாக பார்த்தோம்
கிருஷி பண்ணி பலன் கிடைக்கும் பொழுது இழப்பா
பொன்னும் முத்தும் விளையும் படி ஆக்கிய பின்பு
இவள் இழவுக்கு அன்றி அவன் இழவுக்காகா தாயார் கதறுகிறாள்
இப்போது -தாயார் நிலை
விரோதி கனத்து இருக்க -ராவனணிலும் வலிதோ இவள் விரோதி வர்க்கம் –
தாயாரும் தக்கபனையும் பிரித்த திமிர் வேந்தும் படி –
வேரோடு பிடிங்கி போட்டீரே
இவள் முக்தமான நோக்கு ஒன்றும் கிடைக்கும் படி -இளமையான அழகான திருக் கண்கள்
இவள் தானே முடிந்து
நாங்கள் தானே இழப்போம்
நீர் அப்படி இல்லை நித்யம்
உம்முடைய ஜீவனைத்தை நோக்கி கொள்ளும்
அவன் இழவுக்கு வருந்தி இந்த பாசுரம்

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 30, 2012

பட்டபோதுஎழு போதுஅறி யாள்;விரை
மட்டுஅலர் தண்துழாய் என்னும்; சுடர்
வட்டவாய்நுதி நேமி யீர்! நுமது
இட்டம் என்கொல்இவ் ஏழைக்கே?

    பொ – ரை : ‘பேரொளியினையும் வட்டமான வாயினையும் கூர்மையினையுமுடைய சக்கரத்தைத் தரித்தவரே! சூரியன் மறைகின்ற காலத்தையும் தோன்றுகிற காலத்தையும் அறிகின்றிலள்; வாசனையோடு மலர்கின்ற தேனையுடைய குளிர்ந்த திருத்துழாய் என்று சொல்லுகிறாள்; அரியாமையினையுடைய இப்பெண்ணின் திறத்து நுமது எண்ணம் தான் யாதோ?’ என்றவாறு.

    வி – கு : அலர் துழாய் – வினைத்தொகை. நேமீயிர் – விளிப்பெயர். ஏழை – அறிவில்லாதவள். இது, உயர்திணை இருபாற்கும் பொதுப் பெயர். ‘களி மடி மானி காமி கள்வன், பிணியன் ஏழை’ என்றார் நன்னூலார்

ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘இவள் ‘பட்டன’ என்கைக்கு என்பட்டாள்?’ என்ன, ‘படுவன எல்லாம் பட்டாள்; இனி, என் படல் வேண்டும்?’ என்கிறாள்.

பட்டபோது எழுபோது அறியாள் – 2உதித்ததும் மறைந்ததும் அறிகின்றிலள். ‘இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ?’ என்னில், விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் -‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று, திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும். ஆக, 3‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே, நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று 4அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான ‘சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள். அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரவாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம் 5இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் ‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று. ஆக, 6‘அடைந்தவர் பகைவர்

என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி. 1‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர்தம்முடைய வார்த்தையும்? கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் 2இவர்கள். நுமது இட்டம் என் கொல் – 3இரா வணன் இரணியன் முதலியோர்களை முடித்தது போன்று, முடிக்க நினைக்கிறீரோ? நித்தியசூரிகளைப் போன்று, கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பிக்கிறீரோ? தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைக்கிறீரோ? இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறது என்? இவ்வேழைக்கே – சிறிதும் மனத்திட்பம் இல்லாதவளான 4இவள் விஷயத்தில் நீர் நினைத்திருக்கிறது என்?

இவள் பட்டன என்கைக்கு என்ன பட்டாள் -படுவது எல்லாம் பட்ட பின்பு -பட வேண்டியது ஒன்றும் இல்லையே
பட்ட போதும் ஏழு போதும் -சூர்யன் -இரவு பகல் -அறியாத –
உதித்ததும் அஸ்தமித்ததும் தாயார் -அறிந்த படி
ராத்ரியில் நித்தரை இன்றி வாயில் வார்த்தை இன்றி
விரை மட்டு -தேன்ஒழுகும் –இட்டம் என் கொல்
-இது தேனே -இது -வாசனை மணமே குளிருசியை கொண்டாடுகிறாள்
பெரும் தாரும் ஒன்றை தவற
ஒன்றும் அறியாமல்
அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை காட்டினான் –
தருனவ் -ரூபா சம்மனவ் -போல இவளும் உண்ணப் புக்கு வாயை மறந்தால் போல்
சுடர் வட்ட   வாய் -நேமி அழகில் ஈடு பட்டு -தாயார் வார்த்தை –
விசெஷணம் இட்டு -வர்ணிக்கிறாள்
தருணவ் ரூப சம்மப்பைன்வ் -போலே –
ஆஸ்ரித -விரோதி
நஞ்சீயர் வார்த்தை உகப்பாரை அவ் அழகை காட்டி  அகல நின்று முடிக்கும்
உகதாவாரை கிட்டே நின்று இத்தாலே முடிக்கும் –
உமது இட்டம் என் கொல் -ராவண ஹிரன்யாதி போல் முடிக்க பார்க்கிறீரா
கிட்டே நின்று நித்யர் போல் அனுபவிக்க
தன்னையும் மறந்து உம்மையும் பறந்து –
இவர் பேற்றுக்கு என் நினைவு
ஏழைக்கு -ஞானம் இல்லாத –அத்யந்த சபலை -ஈடுபாடு -மதி எல்லாம் உள் கலங்கி –
தத்துவ அர்த்தம் -அவனையே வாய் புலத்தும் இத்தையும் பேற்றுக்கு சாதனம் இல்லை
அவன் நினைவே உபாயம் –
இவ் -காட்டி -சபலைகள் பலரும் உண்டு -இப்படி ஒரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள் –

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 30, 2012

வஞ்சனே! என்னும்; கைதொழும்; தன
நெஞ்சம்வேவ நெடிதுஉயிர்க் கும்;விறற்
கஞ்சனைவஞ்சனை செய்தீர்! உம்மைத்
தஞ்சம் என்றுஇவள் பட்டனவே!

    பொ – ரை : ‘வலிமையினையுடைய கம்ஸனை அவன் நினைத்த நினைவு அவனோடே போமாறு கொன்றவரே! இவள், ‘குணங்களாலும் செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே!’ என்கிறாள்; கைகூப்பி வணங்குகிறாள்; தன்னுடைய நெஞ்சமானது வேகும்படி பெருமூச்சு எறிகின்றாள்; ஆதலால், உம்மையே பற்றுக்கோடாக நினைத்து இவள் பட்ட துன்பங்கள் எண்ணில் அடங்கா’ என்றவாறு.

    வி-கு : தன நெஞ்சம்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை செய்தீர் – பெயர். தஞ்சம் – பற்றக்கோடு. பட்டன -பெயர். ‘ஏ’காரம் இரக்கத்தின் கண் வந்தது.

    ஈடு : எட்டாம் பாட்டு. ‘உம்மை அனுபவித்துச் சுகித்திருக்க வைத்தீர் அல்லீர்; கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்; உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.

வஞ்சனே என்னும் – தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்; 1தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’, ‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து, உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள். கைதொழும் – வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுக் கைதொழும். தன நெஞ்சும் வேவ நெடிது உயிர்க்கும் – தாயார் சொன்ன குணமின்மைக்கு ஒரு பரிகாரம் செய்தும் ஆற்றாமை போகாமல் தன் நெஞ்சும் வேவ நெடுமூச்சு எறியாநிற்கும். 2‘பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். ஸ்ரீவால்மீகியும். 3‘உள்ளம் மலங்க’ என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று. 4‘உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது.

விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் – ‘மிடுக்கனான கம்ஸனை அழியச் செய்தீர். உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர். 5அடைந்தவர்கள் பகைவர்கள் என்னும் வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள். உம்மைத் தஞ்சம் என்ற – 6தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய்’ என்னும் சர்வ ரக்ஷகனைக் காதுகரைச் சொல்லுமாறு போன்று சொல்லுகிறாள். மகள் நிலையைப் பார்த்து.7தஞ்சம் அல்லாதாரைத் ‘தஞ்சம்’ என்று இருந்தால் சொல்லுமாறுபோன்று சொல்லுவதே! இவள் பட்டனவே – 1‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்; நித்திய சூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்; 2‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்; கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்; என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்? இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் எனலுமாம்.

உம்மை அனுபவித்து சுகிக்க வைக்க வில்லை 
கஞ்சனை முடித்தது போல் முடிக்கவும் இல்லை 
குணா செஷ்டிதன்களாய் வசீகரித்தான் வஞ்சனே என்னும் 
நீண்ட பெரு மூச்சு விடுகிறாள் 
கம்சனை முடிக்க -துக்கம் போனது அவனுக்கும் –
உம்மை தஞ்சம் என்று நினைத்து இவள் –
நான் அல்லேன் என்று விலகினலுமஎன்னை கொண்டானே -தான் ஒட்டி வந்து 
தனி நெஞ்சை வஞ்சித்து -நானும் அறியாமல் உபகரிதவன் 
இந்த வஞ்சனத்தை கொண்டாடி 
உபகாரத்துக்கு தோற்று கை தொழும்-பிரகிருதி சம்பந்தம் நீக்கி 
துக்கம் -தாயார் சொன்னதுக்கு பரிகாரம் 
நெஞ்சு வேவும் படி பெரு மூச்சு விட 
அசோகா வனம் -உபவாச கிரிசாம் -தேவதைகள் சீதா பிராட்டிக்கு அமர்த்தம் கொடுப்பார்களாம் –
தீனாம் -நிச்வசந்தி உள்ளம் மலங்க -வெட்டி 
அங்கு உலர்ந்து -முந்திய பாசுரம் —இங்கே பற்றி எரிய-
மிடுக்கை உடைய கஞ்சனை -அவன் நினைவு அவன்தன்னிலும் போம் படி –  
வில் பெரும் விழாவுக்கு கூப்பிட்டு -வஞ்சித்தான் –
உள்ளுவார் உள்ளத்தில் உடனிருந்து அறுதி –
ஆணுமாய் மிடுக்கனுமாய் எதிரியாய் -அந்த பாடு -பெண் -பட வைக்கிறீரே 
உம்மை தொர்ப்பிக்க -அவன் நினைக்க உம்மிடம் தோற்றவள் 
ஆஸ்ரித -விரோதி -இடம் காட்டுவது ஆஸ்ரிதர் காட்டுவாரா 
செப்பம் உடையாய் அடியார்வருக்கு திறல் விரோதிகளுக்கு -செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா 
உம்மை தஞ்சம் -தஞ்சம் படக் காடாதவர் -சொல்லுவது போல் உம்மை தஞ்சம் கொண்டாலே -தாயார் 
சர்வ ரஷகன் -தஞ்சமாகிய –காதுகண் ஆட்டு வாணியன் -போல் சொல்லி 
இவள் பட்டனவே ஒரு மகா பாரதம் 
சம்சாரி போல் உண்டு உடுத்து இருக்க ஓட்ட வில்லை 
நித்யர் போல் அனுபவிக்க பண்ண வில்லை 
எங்களை போல் -அவன் வரும் வரை ஆறி -அவன் வில்லை நம்பி சு பிரவ்ருத்தி கூடாதே 
கம்சனை போல் முடித்தீர் அல்லீர் 
ஞானம் கொடுத்து துடிக்க விட்டீர் 

 

தத் தது சத்ருசம் பவதே -சீதை பிராட்டி வார்த்தை –
கதற வைத்தாயே -இவளை -முடித்தாகிலும் செய்யாமல் எத்தை படுத்த வேணும் –
இவள் பட்டனவே –
நஞ்சீயர் திருவடிகளே சரணம் 
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 30, 2012

உள்உள்ஆவி உலர்ந்து உலர்ந்து, என
வள்ளலே! கண்ணனே! என்னும்;பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும்; என
கள்வி தான்பட்ட வஞ்சனையே?

    பொ – ரை : உள்ளே இருக்கிற உயிரானது சருகாக உலர்ந்து, எனக்கு உதவியைச் செய்தவனே! கண்ணனே!’ என்று கூப்பிடுகின்றாள்.

அதற்குமேல், ‘திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளுகிறவனே!’ என்கிறாள்; ஆதலால், என்னுடைய கள்வியானவள் பட்டவைகள் வஞ்சனையேயாகும்.

    வி-கு : ‘உலர்ந்து என்னும்’ என்க. என வள்ளல், என கள்வி என்பன; ஒருமை – பன்மை மயக்கம். என – அகரம் ஆறனுருபு. கள்வி – பெண்பாற்பெயர். ‘எற்பெறத் தவஞ்செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே? நற்பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி என்றாள்’என்றார் கம்பர். தன் மனத்தின் நிகழ்ச்சிகளைத் தாயும் அறியாதவாறு மறைக்கின்றாளாதலின், ‘கள்வி’ என்கிறாள். பட்ட வினையாலணையும் பெயர். எச்சமெனக் கோடலுமாம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள், வாய் விட்டுக் கூப்பிடும் படி இவளை வஞ்சித்தான்’ என்கிறாள்.

உள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று. என வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள். பின்னும் – அதற்குமேலே. வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.

இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும். என கள்வி – தன் மனத்தில் ஒடுகிறது பிறர் அறியாத படி மறைத்துப் பரிமாறக்கூடிய இவள் படும் பாடே இது! தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

தன்- நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாமல் -மடப்பம் ச்வாபம் –
வாய் விட்டு கூப்பிடும் படி வஞ்சித்தான்
வள்ளலே –கண்ணனே -வெள்ள நீர் கடந்தாய் —
கல்வி தான் பட்ட வஞ்சனையே
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து –
உள்ளே மனச அதுக்கும் தாரகம் ஆத்மா சருகு போல்
அசொஷ்யம் -உலற்ற முடியாது -அதாக்யோயம் எரிக்க முடியாது
பாவ பந்தம் -அகவாயை வெந்து  –
தாகம் விடையார் -பச்சை கற்பூரம்  வாயில் வைத்து கொண்டது போல் திரு நாமம் –
வள்ளலே -இவ்வளவு ஆர்த்தியில் -தன்னை கொடுக்கிறவன்
கொடுத்த இடம் கண்ணனே -கையாளாக
அதுக்கு மேலே விடாயுக்கு -வெள்ள நீர் –
இருட்டில் பயம் நரசிம்கன் -தாபத்தால் வெந்து போனால் ஜல சாயி
கருட வாகனம் வீர்யம் விஷம் பயம் – ஸ்ரீ விஷ்ணு தர்மம் ஸ்லோகம் –
மிக அதிகமான எடுத்துக்காட்டு –
இக் கிடை இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தால் போல் -ஒரே படுக்கையில் சேர்ந்து
இருப்பதாக நினைந்து
என கள்வி -தன் ஹிருதயத்தில் ஓடுவது பிறர் அறியாமல் –
ந ஜீவியம் ஷணம் அபி -அவன் பட வேண்டியது -அவள் பட -இப்படி வஞ்சனை படுகிறாள்
அவிக்ருதனாய் -கல் உழி மங்கன் -உழு வைத்து அடித்தாலும் மங்காமல் -விகாரம் இன்றி
வஞ்சனை -கிர்த்ரமம் -அளவு படைக்கு பெரும்படை தோற்றது வஞ்சனையால் தான் –
இவள் பெரும்படை -அழகி -அவன் இடம் அளவு படை -அவனுக்கு தோற்றது வஞ்சனையால்
பகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் சொல்லி ஆயுதம் எடுத்ததும் –
சிகண்டி –பீஷ்மர் –அஸ்வத்தாமா –
குறை இல்லை அதர்மம் ஜெயிக்க பண்ணினதால் –
அடியவர் ரஷிக்க– ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ண அவதாரத்தில் பொய்யும் தஞ்சம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 30, 2012

தகவுஉடை யவனே! என்னும் ;பின்னும்
மிகவிரும்பும்; பிரான்!என் னும்;எனது
அகஉயிர்க்கு அமுதே!என் னும்;உள்ளம்
உகஉருகி நின்று உள்உளே.

    பொ-ரை : ‘மனமானது நிலை கெடும்படி நீர்ப்பண்டமாக உருகி நின்று, ‘மேலும் மேலும் மேலும் அருள் உடையவனே!’ என்கிறாள்; அதற்கு மேல், மிகுதியாக விரும்புகிறாள்; ‘எனக்கு உதவியினைச் செய்தவனே! என்கிறாள்; ‘என்னிடத்துள்ள ஆத்துமாவிற்கு அமுதே! என்கிறாள்.’

    வி -கு : உள்உளே -மேலும் மேலும். ‘உள்ளே உள்ளே’ என்று உரைத்தலும் ஒன்று. ‘நின்று என்னும்’ என மாற்றுக.

    ஈடு : ஆறாம் பாட்டு. இவள் துன்பத்தினைக் கண்ட திருத்தாய் 1‘அருள் அற்றவர்’ என்றாள்; இவள் அது பொறாமல்

‘தகவுடையவனே’ என்று அதனையே நிரூபகமாகச் சொல்லுகிறாள் என்கிறாள்.

தகவுடையவனே என்னும் – ஐயகோ! 1‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள். இனி, ‘தகவு இல்லை என்றவள் வாயைப் புதைத்தாற்போலே, 2வந்து தோன்றுவதே!’ என்று, அவன் வந்தால் செய்யும் விருப்பத்தைச் செய்கிறாள் எனலுமாம். பின்னும் மிக விரும்பும் – உருவெளிப்பாட்டின் தன்மை இருக்கிறபடி. 3பிரான் என்னும் -‘பெற்ற தாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றுவதே! இது என்ன உபகாரந்தான்’ என்கிறாள். எனது அக உயிர்க்கு அமுதே என்னும் – ‘என்னுடைய உள்ளே இருக்கிற ஆத்துமாவுக்கு இனியனானவனே!’ என்கிறாள். இறைவன், நித்தியமான ஆத்துமா அழியாமல் நோக்கும் அமுதமாதலின், ‘அக உயிர்க்கு அமுதே’ என்கிறாள். உள்ளம் உக உருகி நின்று – வடிவம் இல்லாத மனமானது வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப்போகாநின்றது.  உள்ளம் உருகி நின்று தகவுடையவனே என்னும்; பின்னும் மிக விரும்பும்; பிரான் என்னும்; எனது அக உயிர்க்கு அமுதே என்னும்; இவை, இவள் பேசும் பேச்சைக் கொண்டு நாம் அறிந்தவைகள்; உள் ஓடுகிறது, உள் உளே – 4வாசா மகோசரம். இனி, ‘உள் உளே’ என்பதற்கு, மேலும் மேலும் என்று பொருள் கூறுவாருமுளர். அப்பொருளுக்கு, ‘மேலும் மேலும் உருகி நின்று என்னும்’ எனக்கூட்டுக.

மோகித்து இருந்தாலும் -தகவு உடையவனே நிரூபகம் அதுவே கொண்டவனே

அதை வைத்து சம்போதிக்கிறாள் –
கெடுவாய் –அடி பாவி –
ஆகரத்தில் தகவு மறுக்குமோ -ஆகரத்தில் முத்து -கொள்ள கொள்ள சுரை இன்றி இருக்கும் இடம் ஆகரம்
நம் குற்றம் தான் –சங்கே மத் பாக்ய  சம்சையா -சீதா பிராட்டி வார்த்தை போல்
வந்து தோற்றுவதே -அவள் வாயை அடைப்பது போல் -ஈடுபாடு காரணமாக –
வந்தால் பண்ணும் விருப்பத்தை பண்ணா நிற்கும்
நினைவு முதிர்ச்சி -பாவனா பிரகர்ஷம் –
பின்னும் -வராவிடிலும் -பிரான் -உபகாரகன் -அவள் வைய்யிடம் கொடுக்காமல் தோற்றி –
எனது அக உயிர் க்கு அமுது -உள்ளே உள்ள அமர்த்தம்
நித்ய வஸ்து அழியாமல் காட்டும் -பூண்  கட்டி கொடுக்கும் அமுது
போக தசையில் சொல்வதை எல்லாம் சொல்கிறாள்
உள்ளம் மிக உருகி
ஆத்மா அணு -அமிர்தம் உரு கொண்டு உருகி த்ரவ்யம் போல் ஆனா பின்பு இப்படி
பேச்சை கொண்டு அறிந்த உள் நிலை -வாசா மகொசரம்  –

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 30, 2012

இவள்இராப் பகல்வாய் வெரீஇத்தன
குவளைஒண் கண்ணநீர் கொண்டாள்; வண்டு
திவளும்தண் அம்துழாய் கொடீர்; எனத்
தவள வண்ணர் தகவுகளே.

    பொ – ரை : இவள் இரவும் பகலும் வாயால் பிதற்றிக்கொண்டு தன்னுடைய கருங்குவளை போன்று கண்களில் நீரினைக் கொண்டாள்; வண்டு படிந்து ஒளி விடுகின்ற குளிர்ந்த அழகிய திருமார்வில்  இருக்கின்ற திருத்துழாய் மாலையினைக் கொடுக்கின்றீர் இலீர்; ஆதலால், தூய்மையான பரிசுத்தத்தையுடையவரே! உம்முடைய தகவுகள்தாம் என்னே!

    வி-கு : ‘வெரீஇ’ என்பது, சொல்லிசையளபெடை. தன – அகரம் ஆறனுருபு. காண்: சாதியொருமை. கண்ண – அகரம் சாரியை. ‘என’ என்பது, ‘என்ன’ என்ற சொல்லின் விகாரம். ‘என்ன போதித்தும்

என்ன?’ என்பது தாயுமானவர் பாடல். தவளம் – வெண்மை; அது ஈண்டுத் தூய்மைக்கு ஆயிற்று. வண்ணம் – தன்மை. இதனை ‘இயற்சொல்’ என்பர் நச்சினார்க்கினியர்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. இவள் இப்படித் துக்கப்படுகின்ற இடத்திலும் வரக் காணாமையாலே, 1‘அருள் அற்றவர்’ என்கிறாள்.

இவள் இராப்பகல் வாய் வெரீஇ – 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச்செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.

தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் – தன்னுடைய வாய குவளைப்பூப் போலே இருக்கிற அழகிய கண்களிலே நீரைக் கொண்டாள். ‘ஆனந்தக் கண்ணீர் பெருக்கு எடுக்கக்கூடிய கண்களில் துக்கக் கண்ணீர் பெருக்கு எடுத்து ஓடுகின்றதே!’ என்பாள், ‘குவளை ஒண்கண்ண நீர் கொண்டாள்’ என்றும், ‘இக்கண்ணுக்குஇலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள். ‘அதற்கு நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘வண்டு திவளும் தண் அம் துழாய் கொடீர்’ என்கிறாள்; அதாவது, ‘விரஹ வெம்மையால் வாடின இவள் மார்வில் மாலையை வாங்கி, உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கின்றிலீர்‘ என்றபடி. ‘அவ்வன்டுகளுக்கு என்ன கண்ணீரைக் கண்டு கொடுக்கிறீர்?’ என்பாள், ‘வண்டு திவளும் துழாய்’ என்கிறாள். திவளுகை – படிதல், அசைதல், ஒளி விடுதல். தவள வண்ணர் தகவுகள் என1 ‘சுத்த சுவபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர். ‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர்அருளிச்செய்வர்.

நிர்தயம் -தயை இல்லை தாயார் சொல்ல

தகவு உடையவன் -மகள் அடுத்து
சேர்த்து -ஸ்ரீ வசன பூஷனத்தில் இந்த இரண்டையும் காட்டுவர்
கிலேசிக்க கிடக்கிலும் -வாராமை -தாயவத்தை இருந்த படி என் –

குவளை மலர் போன்ற கண் -திரு துழாய் கொடுத்தாலே போதுமே
தவள வண்ணர் சுத்தம் -ச்வாபர் -தகவுகளே
இரா பகல் வாய் வஐவி
சீதா மதுரா வாணி வாய் வேறுவி பெருமாள் -அத்தலை இத்தலை
ராமமா சததம் அநித்ரை
நித்தரை உடன் கால ஷேபம் செய்யும் ஐ ச்வர்யம்  உள்ளவர் இப்பொழுது தூங்காமல் – பிராட்டி மட்டுமே நினைவு கொண்டு
அபிமத விச்லேஷத்தில் இங்கனம் இருக்கும் நரோத்தமர் புருஷோத்தமத்வம் இதில்
அந்த துடிப்பு எல்லாம் இவள் இடம்
பொய் நின்ற ஞானம்தொடங்கி இது வரை இரா பகல் வாய் வெருவினது தான் பாசுரங்கள்
வாய் பிதற்றி– -அவதானம் பண்ணி சொன்னது இல்லை –வாசனையே உபாத்யாயராக
அவாவில் அந்தாதி -அவா -ஆசை -உந்த பட்டு அருளிச் seytha –
அவா உபாத்யாயராக நடந்த ஆயிரம் -அது நடத்த இவர் அருளியது –
இவரது மைத்ரேயர் -முன்னுரு சொல்ல பின்னுரு சொன்னார் -பராசரர் -மைத்ரேயர் கேட்க சொன்னது போல்
ஆசை தூண்ட -சிஷ்யர் போல் -இரா பகல் வாய் வெருவி-
தான தன்னுடைய குவளை ஒண் கண் – நீலோத்பலம் -கருமை நிறைந்த விழி —
ஆனந்தாறு பிரவக்கிக்க கடவ -சோக கண்
இக் கண்ணுக்கு இலக்கானவர் பட வேண்டிய அவஸ்தை இவள் பட்டு கொண்டு
நம்மை செய்ய சொல்லுகிறது என்ன
விரக -மாலை வாட -அதை வாங்கி கொண்டு உம் செவ்வி மாறாத பசும் துவளம் மாலை கொடும்
வண்டு துவளும்-தண் அம் துழாய் –சூட்டை தணிக்கும் குணம் உண்டு –
வண்டுக்கு கொடுத்தீர் -என்ன கண்ணா நீரைக் கண்டு கொடுத்தீர்
படிந்து -அசைந்து ஒளி விடுகை -துவளுகை –
என தவள வண்ணர் -சுத்த ச்வாபவம் உள்ள உம் தகவுகள் எங்கே போனது -எம்பார் நிர்வாகம்
பட்டர் -உம்மை போல் நாலு சிஷ்யர் அமைந்தால் போல் -அபலைகள் குடி  கெடுக்க -சுரத்தை வைத்து -அர்த்தம்
சுத்த ச்பாவம் இல்லாதவர் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 29, 2012

இலங்கைசெற் றவனே! என்னும்; பின்னும்
வலங்கொள்புள் உயர்த்தாய்: என்னும்; உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும்; கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றுஇவளே.

    பொ – ரை : இவள், ‘இலங்கையினை அழித்தவனே!’ என்கிறாள்; அதற்குமேல், ‘வெற்றியைக் கொண்ட கருடப்பறவையினைக் கொடியாக உயர்த்தியவனே!’ என்கிறாள்; மனமானது கலங்கும்படி நெருப்பினைப் போன்று பெருமூச்சு எறிகின்றாள்; கண்களில் நீர் மிகும்படி நின்று அறிவு கலங்கிக் கைதொழுகின்றாள்.

    வி-கு : ‘என்னும், என்னும், உயிர்க்கும், தொழும்’ என்பன, ‘செய்யுள்’ என் முற்றுகள். ‘நின்று கைதொழும்’ என மாற்றுக.

    ஈடு : நான்காம் பாட்டு. ‘‘அரக்கன் இலங்கை செற்றீர்’ என்கிற இது எப்பொழுதும் உள்ளது ஒரு செயல் அன்றுகாண், எப்பொழுதாயினும் ஒரு கால விசேடத்திலே நிகழ்வதுகாண்’ என்றாள் திருத்தாய்; அது பொறுக்க மாட்டாமே, அதுதன்னையே சொல்லுகிறாள்.

இலங்கை செற்றவனே என்னும் -எனக்குப் பாண்டே உதவி உபகரித்தவனே!’ என்னாநின்றான். முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள். 1‘மலை எடுத்தல், கடல் அடைத்தல், அம்பு ஏற்றல் செய்ய வேண்டுமோ? என் பக்கல்  வரும்போது என்ன தடை உண்டு?’ என்கிறாள் எனலுமாம். திருத்தாய், இவள் விடுக்கைக்குச் சொன்னது தானே இவளுக்குப் பற்றுகைக்கு உடலாய்விட்டது. பின்னும் – அதற்குமேல். வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் – ‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே! என்கிறாள். ‘விடாயர் இருந்த இடத்தே 2சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தையுடையவனே!’ என்கிறாள் என்றபடி. அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.

நியத ஸ்வாபம் இல்லை அரக்கன் இலங்கை செற்றது –
காதா சித்தம் –வார்த்தை கேட்டு பொறுக்க மாட்டாமல் மகள் -வார்த்தை –
வார்த்தை பேச முடியாமல் கை தொழும்-
எனக்கு பண்டே உபகரித்தவன் -முன்பு உதவினவன்
கடலை கடைய வேண்டாம் மலை எடுக்க வேண்டாமே அம்பு ஏற்க வேண்டாமே
பிரபந்தகம் ஒன்றும் இல்லையே
தாயார் விடுகைக்கு சொன்னதே பற்றுக்கைக்கு காரணம் மகளுக்கு
விடாய் இருந்த இடத்தில் சாய் கரகம் போல்
புள் உயர்த்தாய் -உயர வைத்து கொண்டு வந்து காட்டும்
மேல் இருப்பது ஆனந்தம் -திருஷ்டாந்தம் –
புள்ளை கொடியாக -கொண்டவன்
கொண்டு வருக்கைக்கு பீகரம் உண்டே -வரக் காணாமையாலே
மனச தத்வம் வேருடன் பிடிங்கி நெடு மூச்சு
சர்வ வ்ருஷான் பல்லவ  தாரின தகந்தி மிவ நிச்வாசம் –சீதா பிராட்டி
நெடு மூச்ச்சாக புறப்பட்டது – மீதி கண்ணீராக வடிய
கலங்கி கை தொழும்
தெளிவில் தொழுகை
தேறும் கை கூப்பும் கலந்கும்கை கூப்பும்
இவளே -அவன் தொழும்படி இருக்கும் -அவன் பட வேண்டி இருக்க -பெருமாள் பட்ட துக்கம் அதிகம்
உஊர்த்வம் மாசாத்து ஜீவிதம் -சிரஞ்சீவி வைதேகி -ஷணம் அபி நான் –
பெருமாள் இழந்தது பிராட்டி யாகையால் காசை மணி இழவு ஒத்து இல்லையே –

 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.