Archive for July, 2012

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-10–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

July 31, 2012

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் –
ஊரிலே ஸ்திரீகள் ஆனவர்கள் தந்தாம் அகங்களில் இவன் செய்த தீம்புகளை சொல்லி –
தாயாரான யசோதை பிராட்டிக்கு வந்து முறைபட்டு –
உன் மகனை இங்கே அழைத்து கொள்ள வேணும் -என்றபடியையும் –
அதுக்கு ஈடாக அவள் அவனை அழைத்த பிரகாரங்களையும் சொல்லுகையாலே –
அவன் ஊரில் இல்லங்கள் தோறும் செய்த
நவநீத ஸௌர்யாதி க்ரீடா விசேஷங்களை அனுபவித்தாராய் நின்றார் –

(சக்ரவர்த்தி திரு மகன் பெருமாள் குணங்களை அயோத்யா மக்கள் சொல்ல கேட்டு உகந்தானே
அதே போல் இங்கும் யசோதை இவன் சேஷ்டிதங்கள் இவர்கள் சொல்ல கேட்டு உகப்பதே பிரயோஜனம் )

ப்ராப்த யௌவநைகளான பெண்களோடே அவன் இட்டீடு கொண்டு -ஓன்று கொடுத்து
ஓன்று வாங்குகை-இது தானும் வார்த்த விஷயத்தில் -என கொள்க –
விளையாடுகையாலே அவனால் ஈடுபட்ட பெண்கள் -மாதாவான யசோதை பிராட்டி பக்கலிலே வந்து –
தங்கள் திறத்திலே அவன் செய்த தீம்புகள் சிலவற்றை சொல்லி –

1-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் -(விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட)
2-ஆஸ்ரித ரஷகனாய் –
3-ஆஸ்ரிதர் கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
4-ஆஸ்ரிதர்க்கு நல் சீவனான தன்னை பூதனை கையில் அகப்படாமல் நோக்கி கொடுத்தவனாய்–
5-ஆஸ்ரிதர்க்கு தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவனாய்-
6-ஆஸ்ரிதர் ஆர்த்தி அறிந்து சென்று உதவுமவனாய் –
7-நித்ய ஆஸ்ரிதையான பூமிப் பிராட்டிகாக நிமக்னையான பூமியை உத்தரித்தவனாய் –
இப்படி சர்வ விஷயமாக உபகாரங்களை பண்ணினவன் –
எங்கள் திறத்தில் அபகாரங்களை செய்யா நின்றான் –

ஆன பின்பு இவன் கீழ் ஜீவிக்க போகாது –
இவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் என்று பல காலும் சொல்லி
முறைப்பட்ட பிரகாரத்தை தாமும் அப்படியே பேசி –
அவனுடைய அந்த லீலா வியாபார ரசத்தை அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –

————–

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்   -2 -10-1 – –

பதவுரை

ஆற்றில் இருந்து–யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு
விளையாடுவோங்களை–விளையாட நின்ற எங்கள் மேல்
சேற்றால் எறிந்து–சேற்றை விட்டெறிந்து
வளை–எங்களுடைய கை வளைகளையும்
துகில்–புடவைகளையும்
கைக் கொண்டு–(தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு
காற்றில்–காற்றிலுங் காட்டில்
கடியன் ஆய்–மிக்க வேகமுடையவனாய்
ஓடி–(அங்கு நின்றும்) ஓடி வந்து
அகம் புக்கு–(தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு
(வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து)
மாற்றமும்–ஒரு வாய்ச் சொல்லும்
தாரானாய்–அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால்
இன்று முற்றும்–இப்போது முடியா நின்றோம்;
வளைத் திறம்–(தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக
பேசானால்–(தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால்
இன்று முற்றும்–இன்று முற்றும் –
இது வயிறு எரிந்து சொல்லும் வார்த்தை-இரு கால் சொல்கிறது –ஆற்றாமையின் மிகுதி

ஆற்றிலிருந்து –
சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ –
சர்வ சாதாரணமான ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –

இத்தால்
ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான
ஸ்தலத்திலே அன்றோ

விளையாடுவோங்களை
நாங்கள் அந்ய பரைகள் அன்றோ –
தன் இடையாட்டம் பட்டமோ –
நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-
தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ –
தன்னை இங்கு இட்டு (இங்கிட்டு இங்கே )எண்ணினார் இல்லை கிடீர் –

சேற்றால் எறிந்து-
சேற்றை இட்டு எறிந்து –
பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ-
இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –

வளை துகில் கை கொண்டு –
நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும்  வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது

காற்றில் கடியனாய் ஓடி –
துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி –
தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் –
எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –

அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –
இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் –
அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )

அகம் புக்கு –
பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு
வழி பறித்து அசாதாரண  ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது

மாற்றமும் தாரானால் இன்று முற்றும் –
நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ
(உம்மைத்தொகை -வளை துகில் தர வில்லை -வார்த்தையும் தர வில்லை
மாற்றமும் தாராரோ -திருப்பாவை -தூ மணி மாட பாசுரம் போல் )
ஒரு வாரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ –
இப்படி  ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் –
ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்

வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் –
தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக
ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்

முற்றதும் -என்ற இது –
முற்றும் -என்று குறைந்து கிடக்கிறது
முற்றுதல் முற்றலாய் -அதாவது –
முடிவாய் -முற்றும் என்றது -முடிவோம் என்றபடி –

————————————————

குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு
விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-

பதவுரை

குண்டலம்–கர்ண பூஷணங்களானவை
தாழ–(தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும்
குழல்–திருக் குழல்களானவை
தாழ–(அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்
நாண்–திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது
தாழ–(திருவுந்தி யளவும்) தாழந்தசையவும்
எண் திசையோரும்–எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்
இறைஞ்சி தொழுது–நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி
ஏத்த–ஸ்தோத்ரம் பண்ணவும்
(இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்)
வண்டு அமர் பூ குழலார்–வண்டுகள் படிந்து கிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய
இடைச்சிக(ளான எங்க)ளுடைய(ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த)
துகில்–புடவைகளை
கைக் கொண்டு–(தனது)கைகளால் வாரிக் கொண்டு
விண் தோய் மரத்தானால்–ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்
இன்று முற்றும்;
வேண்டவும்–(எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும்
தாரானால்–(அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்
இன்று முற்றும்;

குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ –
குண்டலம் -காதுப்பணி-அது திருத் தோள்கள் அளவும் தாழ்ந்து அசைய
திருக் குழல்களும் அதுக்கு பரபாகமாம்படி அத்தோடு ஒக்க தாழ்ந்து அசைய
திருக் கழுத்தில் சாத்தின விடு நாண் ஆனது திரு உந்தி அளவும் தாழ –

எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த –
எட்டு திக்கிலும் உண்டான தேவ மனுஷ்யாதிகள் எல்லாம் –
இவ் வடிவு அழகையும் சேஷ்டித வைலக்ஷண்யத்தையும் கண்டு பக்ன அபிமானாராய் வணங்கி ஸ்தோத்ரம் பண்ண –

வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு –
வண்டுகள் மாறாத பூக்களாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்களுடைய
கரையிலே  இட்டு வைத்த பரியட்டங்களைக் கைக் கொண்டு

விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் –
இவர்களுக்கு எட்டாதபடி விண்ணிலே தோய வளர்ந்த குருந்த மரத்திலே இருந்தவனால் இன்று முடிவோம்

வேண்டவும் தாரானால் இன்று முற்றும் –
துகிலைப் பணித்து அருளாய் -என்று அபேஷிக்கவும் கொடாதானாலே இன்று முடிவோம் –

—————————————————-

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3-

பதவுரை

தடம் படு–இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப் பொய்கை–தாமரைப் பொய்கையை
கலக்கி–உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம் படு–விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை–காளிய ஸர்ப்பத்தை
வால் பற்றி ஈர்த்து–வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு–படமெடுக்கப்பெற்று
பை–மெத்தென்றிருந்த
தலை மேல்–(அந் நாகத்தின்) தலை மேல்
எழப் பாய்ந்திட்டு–கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று)
உடம்பை–(தன்) திரு மேனியை
அசைத்ததனால்–அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்
இன்று முற்றும்;
(அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்)
உச்சியில்–(அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்–நின்றருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்

தடமுடை –
இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு
பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை –
நிபபாத  ஹ்ரதே தத்ர   சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே
பெரிய விசையோடு உள்ளே  குதித்து கலங்க பண்ணி

விடும்படி நாகத்தை வால் பற்றி ஈர்த்து –
இப்படி கலக்கினவாறே க்ருதனாய் -விஷத்தை உமிழ்ந்து கொண்டு கிளர்ந்த
காளியனாகிற சர்ப்பத்தை ஒரு சரக்காக நினையாதே வாலைப் பிடித்து இழுத்து

படும்படி பைம் தலை மேல் எழப் பாய்ந்திட்டு
படத்தை உடைத்தாய் -கோபத்தாலே விஸ்தர்மான அதன் தலை மேலே –
அதிர்த்தியாலே விஷத்தை கக்கும்படி கிளறக் குதித்து –

உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் –
காளியனுடைய க்ரோதத்தையும்-கிளர்த்தியையும் -அவன் பணங்களிலே
இவன் சென்று குதித்த படியையும் கரையில் நின்று கண்டு
இப்பாம்பின் வாயிலே அகப்பட புகுகிறான் இத்தனை -எல்லாரும் முடிந்தோம் –
என்று படுகாடு பட்டு விழுந்து கிடக்கிற அனுகூலரான கோப கோபி ஜனங்கள்
தரித்து எழுந்து இருக்கும்படியாக -அங்கே நின்று திருமேனியை
அசைத்தாடினவனாலே இன்று முடிவுதோம்

உச்சியில் நின்றானால் -இன்று முற்றும் –
அவன் இளைத்து விழுந்து சரணம் புகுந்த அளவும் -அந்த பணத்தின் மேலே
நெருங்க மிதித்து நின்றவனாலே இன்று முடிவுதோம்

இத்தால் –
பிரதிகூலனை சமித்து –
அனுகூலரானவர்களுடைய வயிற்று எரிச்சலை போக்கினவன்
ஸ்வ சேஷ்டிதங்களாலே எங்களை இப்படி வயிறு எரியும்படி பண்ணா நின்றான்
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை

இரு கால் சொல்லுகிறது ஆற்றாமையின் உடைய அதிசயம்

———————————————–

தேனுகனாவி செகுத்துப் பனம் கனி
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் -2 10-4 – –

பதவுரை

தேனுகன்–தேநுகாஸுரனுடைய
ஆவி–உயிரை
செகுத்து–முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி–(ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
(பனை முன் வலி வந்தால் -கனி -வல்லினம் -ஐ போய் அம் வரும் -நன்னூல் -பனம் கனி -பனங்கனி )
எறிந்திட்ட–(அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்–மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து–தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆன் நிரை–பசுக்களின் திரளை
காத்தானால்–ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்
அவை–அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்

தேனுகன் இத்யாதி –
க்ர்ஹீத்வா பிரமனேனைவ சோம்பரே கத ஜீவிதம் தஸ்மின் னேவ சசிஷேப தேனுகம் த்ர்ணா ராஜினி
தத பலான்ய நேகானி தாளாக்ரான் நிபந்தர ப்ர்திவ்யாம் பாதயா மாச  மகாவோதா கனா நிவ —என்கிறபடியே
கழுதை யான வடிவைக் கொண்டு -தன்னை நலிவதாக வந்து நின்ற
தேனுகன் ஆகிற அசுரனனுடைய பிராணனை -ஆகாசத்திலே எடுத்து சுழற்றிய வேகத்தாலே முடித்து –
ஆசூரமான பனையினுடைய பழங்களும் உதிரும்படி தான் எறிந்திட்ட மிகவும் பெரிய திருத் தோளாலே

வானவர் இத்யாதி –
தனக்கு இடுகிற சோற்றை விலக்கி – மலைக்கு இடுவித்தது அடியாக மிகவும் குபிதனாய
தேவர்களுக்கு நிர்வாஹனான இந்த்ரன் ஆய்ப்பாடியில் உள்ள கோபர்களும் கோப
கோபீ ஜனங்களும் கடலிலே போம் புகும்படி வர்ஷிக்க சொல்லி –
புஷ்கலா வர்ததாதி-மேகங்களை ஏவி விடுகையாலே
அவற்றால் வந்த வர்ஷத்தை முன்பே -ரஷகம் -என்று சொன்ன மலை தன்னையே குடையாக எடுத்து தடுத்து –
உள்ளத்தில் தான் செய்யும் உபகாரம் அறியும் பசுக்களை ரஷித்தவனாலே இன்று முடிவுதோம்

(கோபர்களுக்கு கூட செய்நன்றி -இருக்குமோ இருக்காதோ ஆ நிரை களுக்கு இருக்குமே
கோவிந்த பட்டாபிஷேகம் ஸூரபி வந்து செய்ததே
ஆகவே ஆநிரை காத்தானால் இன்று முற்றும் )

அவை இத்யாதி –
அம் மழையிலே ஈடுபடாத படி நோக்கி -அவற்றை உஜ்ஜீவிப்பத்தவனாலே இன்று முடிவுதோம் –

இத்தால்
ரஷ்ய வர்க்கத்துக்கு வந்த வர்ஷாபத்தை போக்கினவன்
எங்களுக்கு விரஹ ஆபத்தை விளைத்து நலியா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

———————————————

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்க பிடி உண்டு
வேய்த் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
அடி உண்டு அழுதானால் இன்று முற்றும் – 2-10 -5-

பதவுரை

ஆய்ச்சியர் சேரி–இடைச் சேரியிலே
(இடைச்சிகள் கடைவதாக)
அளை–(மத்தை நாட்டி) உடைத்த
தயிர்–தயிரையும்
பால்–(காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு–அமுது செய்து
(அவ் வளவோடு திருப்தி யடையாமல்)
பேர்ந்து–பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்–அவ் இடைச்சிகள்
(ஒளிந்திருந்து)
கண்டு–(இவன் திருடுகின்ற போதில்) கண்டு
பிடிக்க–(இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள
பிடி யுண்ட–(அவர்கள் கையில்) பிடிபட்டு
(அதற்கு தப்ப மாட்டாமல்)
வெண்ணை–வெண்ணெயை
கொள்ள மாட்டாது–(தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல்
அங்கு–அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்–கட்டுண்டிருந்த கண்ணபிரானால்
இன்று முற்றும்
அடியுண்ட அமுதினால்–(அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்
இன்று முற்றும்

அளை-மத்தை நாட்டி உடைத்த
ஆய்ச்சியர் சேரி -இடைச்சிகள் சேரியிலே

அளை தயிர் பால் உண்டு –
அவர்கள் கடைவதாக மத்து நாட்டி உடைத்த அளவிலே வைத்த தயிரையும் –
காய்ச்சுவதாக வைத்த பாலையும் அமுது செய்த

அன்றிகே –
அளை தயிர் என்றது –
அபிநிவேச அதிசயத்தாலே தன் கை  உள் அளவும் போக விட்டு அலையப்பட்ட தயிர் என்னவுமாம் –

பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி உண்டு –
மீண்டு  ஒரு கால் வெண்ணெய் களவு காண -என்று புகுந்த அளவில்
அவர்கள் ஒளித்து இருந்து கண்டு பிடிக்க அவர்கள் கையிலே பிடி பட்டு –

வேய் இத்யாதி –
பசுமையாலும் சுற்றுடைமையாலும் -வேய் போல் இருப்பதாய் –
பெரிதாய் இருந்துள்ள தோளை உடையவர்களுடைய -வெண்ணெயை அபஹரிக்க மாட்டாதே –

அங்கு இத்யாதி –
அங்கு அவர்கள் கட்ட கட்டுண்டவன் ஆகையாலே இன்று முடிவுதோம் –

அடி உண்டு இத்யாதி –
கட்டுன அளவும் அன்றிக்கே -அவர்கள் அடிக்க -அவர்கள் கையாலே -அடி உண்டு இருந்து
அழுதவனாலே இன்று முடிவுதோம்

இத்தால் –
அனுகூலான அபலைகளுக்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருந்தவன் –
எங்களுக்கு அபவ்யனாய் மிறுக்குகளைப் பண்ணா நின்றான்
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

————————————————–

தள்ளித் தடர் நடை இட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால்  இன்று முற்றும்
துவக்கற உண்டானால் இன்று முற்றும் -2 10-6- –

பதவுரை
(காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே)
தள்ளி தளர் நடை இட்டு–தட்டித் தடுமாறி தளர் நடை யிட்டு
(நடக்க வேண்டும்படியான)
இளம் பிள்ளையாய்–இளங்குழந்தையாய்
(இருக்கச் செய்தே)
கள்ளத்தினால்–(தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த–(தன்னைக் கொல்ல)வந்த
பேய்ச்சி அவளை–பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி–(’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
(பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே)
முலை–அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்–(அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
துவக்கு அற–(அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்–(அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்

(அவாப்த ஸமஸ்த காமன் -இருந்தாலும் பலவும் செய்வேன் -கர்ம பலன் எனக்கு ஒட்டாது –
நான் செய்தாலும் -கீதை ஸ்லோக தமிழ் ஆக்கம் இது )

தள்ளித் தடர் நடை இட்டு –
காலூன்றி நடக்கத் தரிப்பு இல்லாமையாலே தடுமாறித் தளர் நடை இட்டு –

இளம் பிள்ளையாய் –
முக்த சிசுவாய்
இத்தால் நடைக்கு கூட பலம் இல்லாத அதி பாலனாய் இருக்கச் செய்தே -என்கை

உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி –
பிறர்க்கு தெரியாதபடி தன் மனசினுள்ளே -தன்னை நலிவதாக வருகிறவள் இவள் -என்று
அவளை உறைக்கப் பார்த்து

கள்ளம் இத்யாதி –
தன் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு க்ரித்ரிமத்தாலே வந்த
பூதனை உடைய முலைப்பாலோடே அவள் உயிரையும் அவள் துடிக்கும்படி
பசையற உண்டவனாலே  இன்று முடிவுதோம்

துவக்கற இத்யாதி
அவள் நச்சு முலையை உண்ணா நிற்க செய்தே -அந் நெஞ்சிலே
தனக்கு ஒரு ஸ்பர்சம் அற உண்டவனாலே இன்று முடிவுதோம் –

இத்தால்
ஆஸ்ரிதர்க்கு நல் ஜீவனான தன்னை பூதனை கையில் அகப்படாமல் நோக்கி
உபகரித்தவன் -எங்களுக்கு தன்னைத் தராமல் அருமைப் படுத்தா நின்றான் –
ஆன பின்பு -அவனால் நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை –

——————————————————–

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –

பதவுரை

மா வலி–மஹாபலியினுடைய
வேள்வியில்–யாக பூமியிலே
மாண் உரு ஆய் சென்று–பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று–(என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்து–யாசித்துப் பெற்ற
இம் மண்ணினை–இந்தப் பூமியை
(அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே)
ஓர் அடி இட்டு–(பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே–இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே
தாவி அடி இட்டானால்–மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
(தேவேந்திரனாகிய ஒரு ஆஸ்ரிதனுக்காக இப்படி)
தரணி அளந்தானால்–லோகத்தை அளந்தவனாலே
இன்று முற்றும்.

மாவலி வேள்வியில் –
இந்திரனுடைய ஐஸ்வர்யத்தை பலத்தாலே அபகரித்து கொண்டு –
கோவாகிய மாவலி -(9-8-)என்கிறபடியே
தன்னரசாய் -அழிக்க ஒண்ணாதபடி -ஒவ்தார்யம் என்பதொரு குணத்தை
உடையனாய் இருந்த மகா பலியினுடைய யாகத்திலே

மாண் உருவாய் சென்று –
கள்ளக் குறளாய்-(திருமொழி) -என்றபடியே 
அவனை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணுகைக்காக வாமன வேஷத்தை கொண்டு
வடிவு அழகாலும் -நடை அழகாலும் -(உருவாய் சென்று-இரண்டுக்கும் வியாக்யானம்)
அவனை அபர்ஹசித்தனாய் தான் சொன்னது மாறாமல் செய்யும்படி சென்று

மூவடி தா என்று இறந்த இம் மண்ணினை
அவன் சடக்கென இசைந்து தருகைக்காகவும் –
பின்பு ஓரடிக்கு அவனை சிறை வைக்காகவும் –
என் காலாலே மூவடி தா – என்று இரந்து பெற்ற இப்பூமியை

மண் என்கிற இது
மற்ற லோகங்களுக்கு எல்லாம் உப லஷணம்

ஓரடி இத்யாதி –
அளக்கிற அளவிலே பூமிப் பரப்பு அடங்கலும் தனக்குள்ளே ஆம்படி
ஓரடி இட்டு இரண்டாம் படி தன்னிலே

தாவடி இத்யாதி –
ஊர்த்த லோகங்கள் அடங்கலும் தனக்கு உள்ளே ஆம்படி
தாவி -அடி -இட்டவனாலே இன்று முடிவுதோம்
(தாவி அன்று உலகம் எல்லாம் -திருமாலை )

தாரணி இத்யாதி
திருவடிகளின் மார்த்தவம் பாராதே ஓர் ஆஸ்ரிதனுக்காக
இப்படி லோகத்தை அளந்தவனாலே இன்று முடிவுதோம்

இத்தால் –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரித ரஷணம் செய்யும் அவன்
எங்கள் அபேஷிதம் செய்யாதே  ஈடுபடுத்தா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் முடிவுதோம் -என்கை

——————————————————-

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2 10-8 –

பதவுரை

தாழை–(கரையிலே) தாழைகளையும்
தண் ஆம்பல்–(உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய
தடம் பெரும்–மிகவும் பெரிய
பொய்கை வாய்–தடாகத்தினுள்ளே
வாழும்–வாழ்ந்து கொண்டிருந்த
முதலை–முதலையின் வாயாகிய
வலைப்பட்டு–வலையிலே அகப்பட்டுக் கொண்டு
வாதிப்பு உண்–துன்பமடைந்த
வேழம்–ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயர்–வருத்தம்
மனத்துன்பம் -உடல் துன்பம் ஒரு பொருட்டு இல்லையே -தொழும் காதல் களிறு அன்றோ
கெட–தீரும்படியாக
விண்ணோர் பெருமான் ஆய்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய்
(அப்பொய்கைக் கரையிலே சென்று)
ஆழி–சக்ராயுதத்தாலே
(முதலையைத் துணிந்து)
பணி கொண்டானால்–(கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
அதற்கு–அந்த யானையின் திறத்தில்
அருள் செய்தானால்–(இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;புஷ்ப்பத்தை திருவடியில் இடுவித்துக் கொண்டவனாலே இன்று முற்றும்

வாதிப்பு உண்-வருந்தின -வாதிப்பு -உபாதை

தாழை இத்யாதி –
கரையிலே தாழைகளையும் -உள்ளே குளிர்ந்த ஆம்பல்களையும் உடைத்தாய் –
மிகவும் பெரிதாய் இருந்துள்ள பொய்கை யிடத்திலே
தாழை -கரையில் உண்டான சோலைக்கு உப லஷணம்
மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -(3-5-)-என்றார் ஆழ்வார்
ஆம்பல் -உள்ளுண்டான புஷ்பங்களுக்கு எல்லாம் உப லஷணம்
வைகு தாமரை வாங்கிய வேழம் – என்கிறபடியே தாமரை நெருங்கி பூத்துக் கிடக்கிறது கண்டு அது பரிக்கைக்கா இறே
உள்ளே துஷ்டச்தவம் கிடக்கிறது என்று அறியாதே ஸ்ரீ கஜேந்த்திரன் தான் இப்பொய்கையிலே –
அத்ய ஆதரத்தோடே சென்று இழிந்தது

வாழு முதலை வலைப்பட்டு –
நெடும் காலம் எல்லாம் -நம் சாப மோஷத்துக்கு ஓரானை வருவது எப்போதோ –
என்கிற நினைவோடு -அதினுள்ளே வர்த்திக்கிற முதலை யாகிற வலையிலே அகப்பட்டு –
(வாழும் சோம்பர் போல் வாழும் முதலை
ஜனன மரண -தாடை மேல் கீழ் பற்கள் -)

வாதிப்புண் வேழம் துயர் கெட –
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹா ஆகர்ஷதே  ஜலே -என்கிறபடியே அது நீருக்கு இழுக்க தான் கரைக்கு இழுக்க –
திவ்யம் வர்ஷண ஹஸ்ரகம்-என்கிறபடியே நெடும் காலம் இப்படி பாதைப்பட்ட
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய – கையில் பூ செவ்வி அழியாமல் திருவடிகளில்
சாத்தப் பெற்றிலோமே -என்கிற க்லேசம் தீரும்படி யாக

விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானமை தோற்ற -பெரிய திருவடியை மேல் கொண்டு சென்று
க்ராஹஞ்ச்சக்ரென-என்கிறபடியே திரு ஆழியாலே முதலையைத் துணித்து
அந்த சிறையை விடுத்து -அவன் கையில் பூவைத் தன் திரு வடிகளிலே -இட்டுக் கொண்டு
இப்படி ரஷித்தவனாலே இன்று முடிவுதோம்

அதற்கு இத்யாதி –
கைம்மாவுக்கு அருள் செய்த -என்கிறபடியே
அந்த ஆனைக்கு அப்படி அருள் செய்தவனால் இன்று முடிவுதோம்

இத்தால்
ஆஸ்த்ரிதனுடைய ஆர்த்தி தீர சென்று ரஷித்தவன் –
எங்களை ஆர்த்தைகளாய் ஈடு படும்படி பண்ணா  நின்றன் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை

—————————————————-

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய்  இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –

பதவுரை

(கடலில் நீரை முகந்து கொண்டு)
வானத்து–ஆகாசத்திலே
எழுந்து–கிளம்பின
மழை முகில் போல்–வர்ஷிக்கப் புக்க மேகம் போல
(கறுத்த நிறத்தை யுடைய)
ஏனத்து உரு ஆய்–ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து)
கானத்து–காடு நிலங்களில்
எங்கும்–எல்லாவிடத்திலும் (திரிந்து)
மேய்ந்து–(கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து
களித்து–செருக்கடைந்து
விளையாடி–விளையாடி,
(பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று)
இடந்த–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த
இம் மண்ணினை–இந்தப் பூமியை
தானத்தே–யதாஸ்தாநத்தில்
வைத்தானால்–(கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
தரணி–(இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை
இடந்தானால்–கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால்
இன்று முற்றும்;

வானத்து எழுந்த மழை முகில் –
ஆகாசத்தில் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே –
இத்தால்
திருமேனியின் நிறத்தை சொல்கிறது

எங்கும் கானத்து மேய்ந்து –
காட்டிலே ஒரு பிரதிபஷ பயம் அற எங்கும் சஞ்சரித்து –
கோரைக் கிழங்கு முதலானவற்றை ஜீவித்து –

களித்து விளையாடி –
ஜாத் உசிதமான கர்வத்தோடு கூடிக் கொண்டு விளையாடி –

ஏனத் துருவாய் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை உடையனாய்

இடந்த இத்யாதி –
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த இந்த பூமியை –
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே -என்னும்படி
ஸ்வ ஸ்தானத்திலே வைத்தவனாலே இன்று முடிவுதோம் –

தரணி இத்யாதி
இப்படி நிமக்நையான பூமியை எடுத்தவனால் இன்று முடிவுதோம் –

இத்தால்
பிரளய ஆபன்னையான பூமியை எடுத்தவன் –
எங்களை விரஹ பிரளயத்தே தள்ளா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

————————————————————-

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார்-

அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம்  வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லை புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லார்க்கு  ஏதம் ஓன்று இல்லையே -2 10- 10- –

பதவுரை

நல் மங்கைமார்கள் தாம்–(பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள்
அம் கமலம்–அழகிய செந்தாமரைப் பூப் போன்ற
கண்ணன் தன்னை–கண்களை யுடைய கண்ண பிரான் (செய்த தீம்பு) விஷயமாக
அங்கு வந்து–அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து
அசோதைக்கு–(அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே
முற்பட்ட–(தங்கள் ஆர்த்தி தோற்றக்) கதறிச் சொன்ன
அவர் சொல்லை–அவ் விடைச்சிகளின் சொல்லை,
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
இங்கு–இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே)
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஒன்று ஏதம்–ஒரு வகைக் குற்றமும்
இல்லை–இல்லையாம்.

அங்கமலக் கண்ணன் தன்னை –
சிகப்பாலும் விகாசகத்தாலும் செவ்வையாலும் -அழகிய தாமரைப் பூ போல் இருக்கிற
திருக் கண்களை உடையவனைப் பற்ற

அசோதைக்கு
தாயாரான ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு

மங்கை நல்லார்கள் தாம் –
பருவத்தால் இளையராய் –
ஸ்ரீ கிருஷ்ணன் அளவிலே ஸ்நேகிநிகளாய்  இருக்கிற பெண்களானவர்கள் தாங்கள்

அங்கு வந்து முறைப்பட்ட –
அவன் அகத்திலே வந்து தங்கள் ஈடுபாடு தோற்ற முறைப்பட்டு

அவர்   சொல்லை –
அவர்கள் சொல்லை

மங்கை நல்லார் ஆனவர்கள் தாம் -அங்கமல கண்ணன் தன்னைப் பற்ற
அங்கு வந்த அசோதைக்கு -முறைப்பட்ட சொல்லை –
என்று அந்வயம்

புதுவைக் கோன் பட்டன் சொல் இவை –
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சொல்லான இவற்றை

இங்கு வல்லவர்க்கு
இந்த லோகத்தில் சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு

ஏதம் ஓன்று இல்லையே –
பொல்லாங்கு என்னப்பட்டவை ஒன்றும் இல்லாதபடி போம்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-9–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

July 30, 2012

அவதாரிகை
கீழ் பூ சூட்டி –
காப்பிட்டு –
தனக்கு வச வர்த்தியாக்கி –

(நீராட்டம் தொடங்கி -பள்ளி கொள்ளும் நேரம் -அந்திக்காப்பு வரை வந்ததால்
நாள் முழுவதும் இவள் தனது வசத்திலே வைத்து இருந்தாள் அன்றோ)

தன் அருகே இவனை உறக்கி –
நிர்ப்பரையாய் –
மாதாவான யசோதை பிராட்டி தானும் உறங்கி –
உணர்ந்து –
தன்னுடைய கிருஹ கார்ய பரவசையாய் வ்யாபரியா நிற்க

இவனும் உணர்ந்து போய் –
ஊரில் இல்லங்களிலே புக்கு –
அங்குண்டான வெண்ணெய்களை  விழுங்கி –
அவை இருந்த பாத்ரங்களை உருட்டி உடைத்து –
காய்ச்சி வைத்த பாலை சாய்த்து பருகி –
அவர்கள் சமைத்து வைத்த பணியாரங்கள் முதலானவற்றை நிச் சேஷமாக எடுத்து ஜீவித்து –
சிறு பெண்ணை அழைத்து அவள் கையில் வளையலை கழற்றிக் கொண்டு போய் –
அத்தை கொடுத்து நாவல் பழம் கொண்டு –
இப்படி தீம்புகள் செய்கையாலே –

அவ்வவ கிருஹங்களில் உள்ளார்கள் தனித்தனியே வந்து முறைப்பட்டு –
உன் பிள்ளையை இங்கே அழைத்துக் கொள்ளாய் -என்ற பிரகாரத்தையும் –

இவளும் இவர்கள் சொன்ன அனந்தரத்திலே இவனை இங்கே அழைத்துக் கொள்கைக்காக
பல காலும் இவனை ஸ்தோத்ரம் பண்ணுவது –
உன்னை பிறர் சொலும் பரிபவம் எனக்கு பொறுக்க போகிறது இல்லை -வாராய் -என்பதாய்-
இப் புடைகளிலே பலவற்றையும் சொல்லி இவனை அழைத்த பிரகாரத்தையும்
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு  பேசி
முன்பு அவன் செய்த க்ரீடைகள் எல்லாவற்றையும் அனுபவித்து ஹ்ர்ஷ்டராகிறார் -இத்திருமொழியில்

——————————————————–

முதல் பாட்டு –
ஊரில் ஸ்திரீகளில் சிலர் தங்கள் கிருஹங்களிலே இவன் செய்த தீம்புகளை
தாயாரான ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு வந்து சொல்லி
அவனை நீ இங்கு அழைக்க வேணும் என்ற படியை சொல்லுகிறது

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – –

பதவுரை

வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–(நிச் சேஷமாக) விழுங்கி விட்டு
வெறுங் கலத்தை–(பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை
வெற்பிடை இட்டு–கல்லிலே பொகட்டு
அதன் ஓசை–அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை
கேட்கும்–கேட்டுக் களிக்கின்ற
கண்ண பிரான்–ஸ்ரீக்ருஷ்ண பிரபு
கற்ற–படித்துள்ள
கல்வி தன்னை–(தஸ்கர) வித்தையைக்
காக்க கில்லோம்–(எங்களால்) காக்க முடியாது;
(ஆகையால்)
உன் மகனை–உன் பிள்ளையை
காவாய்–(தீம்பு செய்யாமல்) தடுப்பாயாக;
புண்ணில்–புண்ணின் மேலே
புளி பெய்தால் ஒக்கும்–புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான)
தீமை இவை–இப்படிப்பட்ட தீம்புகளை
புரை புரை–வீடு தோறும்
செய்ய வல்ல–செய்வதில் ஸமர்த்தனாகி
அண்ணல் கண்ணான்–ஸ்வாமித்வ ஸூசகமான கண்களை யுடையனான
ஓர் மகனை–ஒரு புத்திரனை
பெற்ற–பெற்ற
அசோதை நங்காய்–யசோதைப் பிராட்டி;
உன் மகனை–உன் பிள்ளையை
கூவாய்–அழைத்துக் கொள்வாயாக.

அண்ணற்கு அண்ணான் -தமையான பல ராமனுக்கு சேஷ்டித்தால் ஒத்து இராதவனாய் -தூரஸ்தன்
பிரான் -உபகாரகன் -இது வெறுத்து சொல்லும் வார்த்தை 
அபகாரகன் -என்று -விபரீத லக்ஷணையால் பொருள் –

வெண்ணெய் விழுங்கி —
கடைந்து எடுத்த தாழிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை நிச்சேஷமாக  களவிலே விழுங்கி –
அவ்வளவும் இன்றிக்கே –
வெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு  
அது இருந்த பாத்தரத்தை கல்லிலே இட்டு உடைத்து
வெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –

இத்தால் இவனுக்கு பிரயோஜனம் என் என்ன –
அதனோசை கேட்கும் –
அது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –
அதுக்காக செய்யும் என்ன –
ஆனால் உங்கள் க்ரஹங்களை இவனுக்கு புகுர அவகாசம் இல்லாத படி அடைத்து நோக்கிக் கொள்ளும் கொள்-என்ன –

கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்ககில்ளோம்-
கிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம்
எல்லாருடைய களவும் காக்கலாம் –
இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-

பிரான் என்கிறது
வ்யதிரேக உக்தி  -சர்வஸ்வ  அபஹாரி என்கிறபடி –
உந்தம் க்ரஹங்களை நீங்கள் காக்க மாட்டி கோள் ஆகில் ஆர் காப்பார் என்ன –

உன் மகனை காவாய் –
உன்னுடைய பிள்ளையை நீ காத்து கொள்ளுவுதி யாகில் எல்லாம் காவல் படும்
நீ அத்தை செய்யாய் என்றவாறே

சிறு பிள்ளைகள் தீம்புகளை செய்யார்களோ –
அவன் அறியாமல் ஏதேனும் சில  செய்தது உண்டாகில் நீங்களும் சற்று பொறுக்க வேண்டாவோ –
இப்படி அலர் தூற்றலாமோ என்ன –

புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை –
புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை
செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது –

நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்
உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –
எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –

புரை புரையால் இவை செய்ய வல்ல –
அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்-
வீப்சையால் அகம் தோறும் என்றபடி –
ஆல்-அசை

அண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ ஸூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –
இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது –
க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்
இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –

அன்றிக்கே –
அண்ணற்கு என்றது  அண்ணனுக்கு என்றபடியாய்
அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்
இப்படி தீம்புகளை செய்கையாலே
தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் (10-7)-என்கிறபடியே
சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் –
இப்படி அத்விதீயனான பிள்ளையை பெற்ற பூர்த்தியை உடையவளே

உன் மகனைக் கூவாய் –
இப்படி தீம்புகளை செய்து திரியாமே
உன் மகனை உன் பக்கலிலே அழைத்து கொள்ளாய்-

————————————————-

இரண்டாம் பாட்டு
இப்படி இவர்கள் சொன்ன அநந்தரம்
ஸ்ரீ யசோதை பிராட்டி தன் புத்ரனானவனை
அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது –

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்  அஞ்சன வண்ணா அசலகத்தார்
பரிபவம் பேச தரிக்க கில்லேன் பாவியேன் உனக்கு இங்கே போதராயே -2 9-2 –

பதவுரை

இங்கே–இவ்விடத்திலே
வருக வருக வருக–சடக்கென வருவாயாக;
வாமன நம்பீ! இங்கே வருக-;அபிமதம் பெற்று பூர்ணன் ஆன நம்பி
கரிய குழல்–கரு நிறமான கூந்தலையும்
செய்ய வாய்–செந் நிறமான வாயையும்
முகத்து–(ஒப்பற்ற) முகத்தையு முடைய
காகுத்த நம்பீ–இராம மூர்த்தி!
இங்கே வருக-;
(என்று கண்ணனை யழைத்து, தன் பிள்ளை மேல் குற்றம் சொன்னவளை நோக்கி யசோதை
உன் பிள்ளையை புகழ்ந்து கூப்பிட்டு அல்லது அச்சம் படும்படி கடிந்து பேசுகிறாய் அல்லாய்
என்பவளைக் குறித்து நங்காய் )
நங்காய்–குண பூர்ணை யானவளே!
இவன்–இந்தப் பிள்ளை
எனக்கு–எனக்கு
இன்று–இப்போது
அரியன்–அருமையானவனாயிற்றே;
(என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி)
அஞ்சனம்–மை போன்ற
வண்ணா–வடிவு படைத்தவனே!
அசல் அகத்தார்–அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச–(உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால்
தரிக்க கில்லேன்–பொறுக்க வல்லேனல்லேன்;
பாவியேனுக்கு–(இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு
(இவ் வருத்தந் தீர)
இங்கே போதராய்–இங்கே வாராய்
(என்று யசோதை கண்ணனை யழைக்கிறாள்.)

வாமன நம்பீ –
குறள் பிரமச்சாரியாய் கொண்டு -அபிமதம் பெற்று பூரணன் ஆனவனே

நங்காய் –
உன் மகனை புகழ்ந்து அழைக்கிறாய் அல்லது அச்சம் உறும்படி கடிந்து
பேசுகிறது இல்லையே -என்று என்னை பொடிகிற நங்காய்

பரிபவம் பேச –
கள்ளன் தீம்பன் என்றால் போலே உன்னை பரிபவித்துப் பேச

பாவியேனுக்கு—
உன் மேல் ஊரார் தூரேற்றக் கேட்க்கும் படியான பாபத்தைப் பண்ணின
என் மனக் கவலை தீரும்படி

வருக வருக வருக இங்கே –
அங்கே இருந்து தீம்புகளை செய்து -கண்டார் வாயாலே பரிபவம் கேளாதே –
இங்கே வா என்கிறாள் –
வருக என்றது வா என்றபடி –
அவன் கடுக வருகைக்காக பல காலும் சொல்லுகிறாள் –
இப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே –

வாமன நம்பீ வருக இங்கே –
நீ வாமன நம்பீ அன்றோ –
ஆஸ்ரித ரஷணம் செய்யும் குண பூர்த்தியை உடைய நீ இங்கே வாராய் -என்கிறாள் –
அவ்வளவிலும் வாராமையாலே –

கரிய இத்யாதி –
கறுத்த திருக் குழலையும் –
சிவந்த திருப் பவளத்தையும் –
உபமான ரஹிதமாய் கொண்டு இரண்டுக்கும் நடுவே விளங்கா நின்ற திரு முகத்தை உடையவனாய் –
மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்யும் குண பூர்த்தியை உடைய காகுத்தன் அன்றோ நீ –
இங்கே வாராய் என்ன –

முறைப்பட்டு வந்து நின்றவர்களில் ஒருத்தி –
அஞ்ச உரப்பாள் யசோதை (நாச்சியார் )-என்கிறபடியே
நீ நியமியாமல் கொள் கொம்பு கொடுத்து அன்றோ -இப்படி இவன் தீம்பிலே தகண் ஏற வேண்டிற்று –
இப்போது இவனை புகழ்ந்து கொண்டு -அழைக்கிறாய் இத்தனை போக்கி
நியமித்து ஒரு வார்த்தை சொல்லுகிறது இல்லையே என்ன –

அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் -என்கிறாள் –
பிள்ளை   பெற்று சிநேகித்து வளர்த்து போரும் பூர்த்தியை உடையவளே –
இவன் எனக்கு இன்று பெறுவதற்கு அரியவன் அன்றோ –
இப்படி இருக்கிறவனை நான் கருக நியமிக்க மாட்டேன் -என்கை

இப்படி இவள் சொன்னதற்கு தான் உத்தரம் சொல்லி –
மீளவும் தன் பிள்ளையானவனைக் குறித்து
பரிபவம் பொறுக்க மாட்டாமையால் வந்த தன் க்லேசத்தை சொல்லி அழைக்கிறாள்-

அஞ்சன வண்ணா –
கண்டவர்கள் கண் குளிரும்படி -அஞ்சனம் போன்ற திரு நிறத்தை உடையவனே

அசலகத்தார் பரிபவம் பேச தரிக்க கில்லேன் –
அசலகத்தார் ஆனவர்கள் -கள்ளன்-தீம்பன் -என்றால் போலே உன்னை பரிபவங்கள் சொல்லக் கேட்டு
பொறுக்க மாட்டுகிறிலேன்

பாவியேனுக்கு இங்கே போதராயே
இச் சொலவுகள் கேட்க்கும் படியான பாபத்தை பண்ணின எனக்கு இந்த க்லேசம் தீரும்படி இங்கே வாராய்-

—————————————–

மூன்றாம் பாட்டு –
முன்புத்தை அவர்களை ஒழிய –
வேறு சிலர் வந்து
தங்கள் க்ரஹத்திலே அவன் செய்த தீம்புகளை சொல்லி –
இப்படி அருகிருந்தாரை அநியாயம் செய்யலாமோ –
உன் பிள்ளையை உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் என்ற
பிரகாரத்தை சொல்லுகிறது –

திரு உடைப் பிள்ளை தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிச்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ யசோதாய்
வருக என்று  உன் மகன் தன்னை கூவாய் வாழ ஒட்டான் மது சூதனனே -2 9-3 – –

பதவுரை

திரு உடை பிள்ளை தான்–உன் செல்லப் பிள்ளையாகிய கண்ணன்
தீய ஆறு–தீம்பு செய்யும் வழியில்
ஒன்றும் தேக்கம் இவன்–சிறிதும் தாமஸிப்பதில்லை.
தேசு உடையன்–அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா நின்றான்;
(இவன் செய்ததென்ன வென்றால் ;
உருக வைத்து–உருகுவதற்காக (அடுப்பில் நான் வைத்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
குடத்தொடு–தாழியோடே (நிச்சேஷமாக)
உறிஞ்சி–உறிஞ்சி விட்டு
உடைத்திட்டு–தாழியை யுமுடைத்துப் பொகட்டு
(பிறகு தான் உடையாதவன் போல்)
போந்து நின்றான்–அவ்வருகே வந்து நில்லா நின்றான்;
அசோதாய்–யசோதையே!
அருகு இருந்தார் தம்மை–உன் வீட்டருகே இருந்தவர்களை
அநியாயம் செய்வது–இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது
வழக்கோ தான்–ந்யாயமாகுமோ?
(நீ)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையை
வருக என்று–‘வா’என்று சொல்லி
கூவாய்–அழைக்க வேணும்;
(நீ அழைத்துக் கொள்ளா விட்டாலோ)
மது சூதனன்–இக் கண்ண பிரான்
வாழ ஒட்டான்–(எங்களைக்) குடி வாழ்ந்திருக்க வொட்டான்.

தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன் –
தீம்புகள் செய்யும் வகைகிளில் சிறிதேனும் தேங்குதல் இல்லாதவனாய் –
அது தன்னையே தனக்கு தேஜஸ்ஸாக உடையனாய் இரா நின்றான்
உறிச்சி-உறிஞ்சி
வாழ ஒட்டான் மது சூதனனே –
முன்பு விரோதியான மதுவை நிரசித்தவன் -இப்போது தானே விரோதியாய் நின்று –
எங்கள் குடி வாழ்ந்து இருக்க ஒட்டுகிறிலன்

திரு உடைப் பிள்ளை –
ஐஸ்வர்யத்தால் குறைவற்றவன் என்கை –
இத்தால்
ஸ்வ க்ரஹத்தில் ஜீவனம் அற்று வயிறு வாழாமல் செய்கிறான் அன்றே
செல்வக் கிளர்ப்பாலே செய்கிற தீம்புகள் இறே இவை என்கை

தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் –
தான் தீம்பு செய்யும் பிரகாரங்களில் -தன் பிறப்பையும் ஐஸ்வர்யத்தையும் பார்த்து  –
நாம் இத்தை செய்யும்படி என்-என்று தேங்குதல் அல்பமும் உடையவன் அல்லன் –
தடை அற செய்யா நிற்கும் என்கை

தேசுடையன் –
தேக்கம் இல்லாத அளவேயோ –
இது தன்னையே தனக்கு தேஜசாய் உடையனாய் இரா நிற்கும்

இத்தால் –
பிறர் சொல்லும் பழிச் சொல்லுக்கு அஞ்சான் என்கை –
இப்படி நீங்கள் சொல்லுகைக்கு இவன் தான் செய்தவை என் என்ன –

செய்தவற்றில் ஒன்றை சொல்லுகிறாள் –
உருக -இத்யாதி
உருக்குவதாக வைத்த பாத்ரத்தோடே-வெண்ணெயை உறிஞ்சி -பாத்ரத்தையும் உடைத்து –
தான் அல்லாதாரைப் போலே இவ்வருகே  போந்து நில்லா நின்றான் –

அருகு இத்யாதி –
உன் அயலிலே குடி இருந்த எங்களை -உன் பிள்ளையை கொண்டு வேண்டிற்று செய்கிறது
இது தான் நியாயமோ

யசோதாய் வருக என்று உன் மகன் தன்னை கூவாய் –
உன்னுடைய பிள்ளையானவனை-இங்கே நின்று இன்னமும் தீம்புகளை செய்யாமல்
உன் அருகே வா என்று அழைத்துக் கொள்ளாய் –

வாழ ஒட்டான் மது சூதனனே –
நீ இது செய்யாய் ஆகில் எங்களை அவன் குடி செய்து குடி வாழ்ந்து இருக்க ஒட்டான் காண்-என்கை

மது சூதனன் -என்றது
முன்பு விரோதி நிரசனம் செய்து போந்தவன் இப்போது
தான் விரோதியாய் நின்று நலியா நின்றான் என்கிற வெறுப்பாலே –

———————————————

நான்காம் பாட்டு –
வருக என்று உன் மகன் தன்னை கூவாய் -என்றவாறே
இவள் அவனை ஸ்துதி பூர்வகமாக அழைக்க –
அவனும் ப்ரீதனாய் ஓடி வந்து –
அகத்திலே புகுர –
இவள் எதிரே சென்று எடுத்துக் கொண்ட படியை சொல்லுகிறது

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண்  திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

பதவுரை

கொண்டல்–காள மேகம் போன்ற
வண்ணா–வடிவை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
கோயில்–திரு வரங்கத்தில் வஸிக்குமவனான
பிள்ளாய்–பிள்ளையே!
இங்கே போதராய் ;
தென் திரை சூழ்–தெளிவான அலையை யுடைய ஜலத்தால் சூழப்பட்ட
திருப் பேர்–திருப் பேர் நகரிலே
கிடந்த–பள்ளி கொண்டிரா நின்ற
திரு நாரணா–ஸ்ரீமந் நாராயணனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
(இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ண பிரான் வந்து)
அம்மம்–‘உணவை
உண்டு வந்தேன்–(நான்) உண்டு வந்தேன்’
என்று சொல்லி–என்று சொல்லி
ஓடி–ஓடி வந்து
அகம் புக–அகத்தினுள்ளே புகும்
ஆய்ச்சி தானும்–தாயான யசோதையும்
கண்டு–(கண்ணன் வந்த வரவையும் இவன் முக மலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து)
எதிரே சென்று–எதிர் கொண்டு போய்
எடுத்துக் கொள்ள–(அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி
கண்ண பிரான்–(அந்த) ஸ்ரீகிருஷ்ணன்
கற்ற–(தானாகவே) கற்றுக் கொண்ட
கல்வி தானே–கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே!
(என்று ஆழ்வார் இனியராகிறார்)

தெண்  திரை சூழ்—நிர்மலமான அலைகளை உடைய புனலாலே சூழப்பட்ட
இங்கே போதராயே -இங்கே அம்மம் உண்ண வா என்று பஹுமாநித்து அழைக்க
அம்மம் -என்பது முலைப் பாலுக்கும் அன்னத்துக்கும் பர்யாய நாமம் -அடைய வளைந்தான்

கொண்டல் இத்யாதி –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவனே

அங்கு நின்று இங்கே போதராயே
போதராய் -என்றது வாராய் என்றபடி

கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
கொண்டல் வண்ணன் வெண்ணெய் உண்ட வாயன் -என்னும்படி
ஸ்ரீ கோவிலிலே வசிக்கிற பிள்ளை யானவனே  இங்கே போதராயே
(ஸ்ம்ருதம் -பெரியாழ்வார் திருப்பாண் ஆழ்வார் -பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் )

தெண் திரை இத்யாதி –
தெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த
ஸ்ரீ மானான நாராயணனே –
இங்கே அம்மம் உண்ணப் போதராயே –

உண்டு இத்யாதி –
இப்படி ஸ்துதி பூர்வகமாக அவள் அழைத்தவாறே -கிட்டே வந்து அம்மம் உண்டு வந்தேன் காண் –
என்று சொல்லி ஓடி வந்து அகத்திலே புகுந்து –
தாயாரான இவளும்
இவன் வந்த வரத்தையும்
முகத்தில் பிரசன்னத்தையும் கண்டு
ப்ரீதையாய் எதிரே சென்று எடுத்து கொள்ள
கண்ண பிரான் அவன் கற்ற கல்வி இருந்தபடியே -என்று ப்ரீதர் ஆகிறார்

அன்றிக்கே –
ஆய்ச்சி தானும் கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ள என்றது –
பிறர் சொல்லுமா  போலே தன் செயலை தானே சொன்னபடியாய்-
(வால்மீகி பகவான் ரிஷி –சடகோபன் சொல் –
தமேவ சரணம் கச்ச அந்த பர ப்ரஹ்மத்தைப் பற்று என்று தன்னையே கீதாச்சார்யன்
என்று சொல்லிக் கொள்ளுமா போல் )
அம்மம் உண்ண வர வேண்டும் என்று அழைத்தால் –
அருகே வந்து நின்று -வேணும் வேண்டா -என்ன அமைந்து இருக்க –
உண்டு வந்தேன் அம்மம் என்ற படியும் –
ஓடி வந்து உள்ளே புகுந்த படியும் –
அந்த உக்தி வர்த்திகளைக் கொண்டு வித்தையாய் –

தாயாரான தானும் -முன் தான் செய்த தீம்புகளை மறந்து –
எதிரே வந்து எடுத்துக் கொள்ளும்படியாக பண்ணின படியும் –
இவை எல்லாம் அனுசந்தித்து –
கண்ண பிரான் கற்ற கல்வி தானே -என்று ஒருவன் கற்ற கல்வி இருந்தபடியே-
இப்பருவத்தில் இத்தனை விரகு எல்லாம் இவன் அறிவதே –
என்று தன்னில் ஸ்லாகித்து ப்ரீதையாகிறாள் என்று யோஜிக்கவுமாம்

இப்படி ஆன போது பூர்வோத்தார்தங்கள் சேர்ந்து கிடக்கும் –

————————————-

ஐந்தாம் பாட்டு –
இப்படி க்ரஹத்தில் வந்து புகுந்து -இவளை உகப்பித்து  நின்று –
அவன் முன்பு போலே அசலகங்களிலே போய் தீம்புகளை செய்ய –
அதிலே ஒருத்தி வந்து தன் அகத்திலே அவன் செய்த தீம்புகளை சொல்லி முறைப் பட்டு –
உன் மகனை இங்கே அழைத்துக் கொள்ளாய் என்ற படியை சொல்லுகிறது –

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 -9- 5-

பதவுரை

ஆலை கரும்பு அனைய–ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று
இன் மொழி–மதுரமான மொழியை யுடைய
அசேதை நல்லாய்–யசோதைப் பிராட்டி!
பல் வளையாள்–பல வகை வளைகளை அணிந்துள்ள
என் மகள்–என் மகளானவன்
பாலை கறந்து–பாலை (ப்பாத்திரங்களில்) கறந்தெடுத்து
(அப் பாத்திரங்களை)
அடுப்பு ஏற வைத்து–அடுப்பின் மேலேற்றி வைத்து
இருப்ப–(அவற்றுக்குக் காவலாக) இருக்க (நான்)
நெருப்பு வேண்டி–(அவற்றைக் காய்ச்சுவதற்காக) நெருப் பெடுத்து வர விரும்பி
மேலை அகத்தே சென்று–மேலண்டை வீட்டிற்குப் போய்
அங்கே–அவ் விடத்தில்
இறைப் பொழுது–க்ஷண காலம்
பேசி நின்றேன்–(அவர்களோடு) பேசிக் கொண்டிருந்து விட்டேன்; (அவ் வளவிலே)
சாளக்கிராமம் உடைய–ஸ்ரீஸாளக்ராமத்தை (இருப்பிடமாக) உடையனாய்
நம்பி–ஒன்றாலுங் குறைவற்றவனான (உன் மகன்)
(என் மகளிருந்த விடத்திற் சென்று)
சாய்த்து–(அந்த க்ஷீர பாத்திரத்தைச்) சாய்த்து
பருகிட்டு–(அதிலிருந்த பாலை முழுதும்) குடித்து விட்டு
போந்து–(இப் புறத்தே) வந்து
நின்றான்–(ஒன்றுமறியாதவன் போல) நில்லா நின்றான்;
(இனி இவன் எங்களகங்களில் இவ் வாறான தீமைகளைச் செய்யத் துணியாதபடி நீ சிக்ஷிப்பதற்காக)
உன் மகனை–உன் பிள்ளையான இவனை
கடவாய்–அழைத்துக் கொள்ள வேணும்.

பாலைக் கறந்து –
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களினால் உண்டான பாலை எல்லாம் கறந்து –

அடுப்பேற வைத்து –
அந்த பாலை எல்லாம் காய்ச்சுகைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றி வைத்து

பல் வளையாள் என் மகள் இருப்ப
பல் வளைகளையும் உடையாளான என் மகள் இதுக்கு காவலாக இரா நிற்க

மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று –
உன் அகத்துக்கு மேலையான அகத்திலே இது காய்ச்சுகைக்கு  நெருப்பு எடுத்து கொள்வதாகப் போய்

இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
ஷண காலம் அங்கே அவர்களோடே வார்த்தை சொல்லி நின்றேன்
இதுவே அவகாசமாக

சாளக்ராமம் இத்யாதி –
ஸ்ரீ சாளக்ராமத்தில் நித்ய வாசம் செய்கிற பூரணன்
அபூர்ணனைப் போலே அத்தனை பாத்ரங்களையும் மறித்து பருகி -தான் –
அல்லாதாரைப் போலே இடைய போந்து நில்லா நின்றான்

ஆலைக் கரும்பு இத்யாதி –
ஆடுகைக்கு பக்குவமான கரும்பு போலே இனிதாய் இருக்கிற மொழியையும்
பூர்த்தியையும் உடையவளே

உன் மகனைக் கூவாய் –
உன் பிள்ளை யானவனை -அங்கு நின்று தீமை செய்யாதே
உன் பக்கலிலே வரும்படி விரைந்து அழையாய்

—————————————————

ஆறாம் பாட்டு
அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -என்றவாறே தன் மகனை
இவள் அழைத்த படியை சொல்லுகிறது

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

பதவுரை

கோதுகலம் உடை–(எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய
ஓ குட்டனே–வாராய் பிள்ளாய்!
குன்று–(கோவர்த்தனம் என்னும்) மலையை
எடுத்தாய்–(குடையாக) எடுத்தவனே!
குடம் ஆடு கூத்தா–குடக் கூத்தாடினவனே!
வேதம்–வேதங்களுக்கு
பொருளே–பொருளாயிருப்பவனே!
என் வேங்கடவா–‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே!
வித்தகனே–வியக்கத் தக்கவனே! (நீ)
இங்கே–என்னருகில்
போதர் கண்டாய் போதர் கண்டாய்–விரைந்து ஓடிவா;
(என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன;
போதரேன் என்னாதே–‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல்
போதர் கண்டாய்–(இசைந்து) வருவாயாக;
(என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன
அசல் அகத்தார்–அசல் வீட்டுக் காரர்கள்
ஏதேனும்–இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை
சொல்லி–(உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு
(அவ்வளவோடும் நில்லாமல்)
ஏதேனும்–(என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை
பேச–(என் பக்கலிலே வந்து) சொல்ல
(அவற்றை)
நான்–(உன் மீது பரிவுள்ள) நான்
கேட்க மாட்டேன்–கேட்டுப் பொறுக்க மாட்டேன்
(ஆதலால்,)
இங்கே போதராய்–(அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.)

போதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது

போதர் கண்டாய் இங்கே –
அங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –
போதர் என்ற இது போதரு என்றபடி

போதர் கண்டாய்
இவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருகால் சொல்லுகிறாள் –
இப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –

போதரேன் என்னாதே போதர் கண்டாய் –
வாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்
என் செய்யத் தான் நீ இப்படி நிர்பந்தித்து அழைக்கிறது என்ன –

ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –
அசலகத்தானவர்கள்  உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –
அவ்வளவும் அன்றிக்கே –
என் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை
சொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்

கோதுகுலமுடைய குட்டனே ஒ
எல்லாரும் கொண்டாடும்படி சீரை யுடைய பிள்ளாய்
இப்படி இருந்துள்ள நீ எல்லாரும் பழிக்கும்படி ஆவதே என்று விஷண்ணையாய் ஒ என்கிறாள்-

குன்று எடுத்தாய் –
கோக்களையும் கோப குலத்தையும் கோவர்த்தன கிரியையும் எடுத்து ரஷித்தவனே

குடமாடு கூத்தா –
கோ சம்ரத்தியால் வந்த ஐஸ்வர்ய செருக்குக்கு போக்கு வீடாக
குடக் கூத்து ஆடினவனே-
குடம் எடுத்து ஆடின கூத்தை உடையவன் -என்றபடி –

இவ்விரண்டாலும் -(குன்று எடுத்தாய் -குடமாடு கூத்தா-இவ்விரண்டாலும் )
இக்குலத்துக்கு ரஷகனாய் –
இக்குலத்தில் பிறப்பால் வந்த ஐஸ்வர்யமே உனக்கு ஐஸ்வர்யம் என்று நினைத்து இருக்குமவன் அன்றோ
நீ  இதுக்கு ஈடாக வர்த்திக்க வேணும் காண் – என்கை –

வேதப் பொருளே –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -(15-15)-என்கிறபடியே
சகல வேத பிரதிபாத்யன் ஆனவனே

என் வேம்கடவா –
அப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே காணலாம்படி
மண்ணோர்க்கும் வானோர்க்கும் வைப்பான திரு மலையிலே இரண்டு விபூதியில் உள்ளாரையும்
ஒரு துறையிலே அனுபவித்து கொண்டு
என்னுடையவன் என்னும்படி நிற்கிறவனே

வித்தகனே
இப்படி நிற்கையாலே விஸ்மயநீயன்  ஆனவனே

இங்கே போதராயே –
உன்னுடைய குண ஹானி சொல்லுவார் வர்த்திக்கிற இடத்தில் நின்றும்
உன் குணமே பேசா நிற்கும் நான் இருக்கிற இடத்தில் வாராய் –

————————————–

ஏழாம்  பாட்டு –
வித்தகனே இங்கே போதராயே -என்று இவள் அழைத்த இடத்தில் வாராமல் –
வேறு ஓர் அகத்தில் போய் புக்கு -அவர்கள் வ்ரதார்தமாக சமைத்து வைத்த
பதார்த்தங்களை அடைய ஜீவிக்கையாலே -ஒருத்தி வந்து அத்தைச் சொல்லி
முறைப்பட்டு -உன் மகனை அழைத்து கொள்ளாய் என்ற படியைச் சொல்லுகிறது-

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே – 2-9- 7-

பதவுரை

அசோதை நங்காய்!
செந்நெல் அரிசி–செந்நெல் லரிசியும்
சிறு பருப்பு–சிறு பயற்றம் பருப்பும்
செய்த–(சமையற் குற்றமொன்றும் நேராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த
அக்காரம்–கருப்புக் கட்டியும்
நறு நெய்–மணம் மிக்க நெய்யும்
பாலால்–பாலும் ஆகிற இவற்றாலே
பன்னிரண்டு திரு ஓணம்–பன்னிரண்டு திருவோணத் திரு நாளளவும்
(நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை)
அட்டேன்–சமைத்தேன்;
பண்டும்–முன்பும்
இப் பிள்ளை–இப் பிள்ளையினுடைய
பரிசு–ஸ்வபாவத்தை
அறிவன்–(நான்) அறிவேன்;
(இப்போதும் அப்படியே)
எல்லாம்–(திருவோண விரதத்திற்காகச் சமைத்த வற்றை) யெல்லாம்
விழுங்கிட்டு–(ஒன்றும் மிகாதபடி) விழுங்கி விட்டு
(அவ்வளவிலும் திருப்தி பெறாமல்)
நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி–‘நான் இன்னமும் உண்ண வேண்டியிரா நின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு
போந்த–(அவ் விடத்தை விட்டு) கடக்க வந்து
நின்றான்–(அந்ய பரரைப் போல) நில்லா நின்றான்;
(இனி இவ்வாறு தீமை செய்யாதபடி)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையான இக் கண்ணனை
கூவிக் கொள்ளாய்–(உன் னருகில்) அழைத்துக் கொள்வாயாக;
(பிள்ளைகளைத் தீம்பு செய்ய வொட்டாதபடி பேணி வளர்க்க வேண்டி யிருக்க, அப்படி வளர்க்காமல்)
இவையும்–இப்படி வளர்ப்பதும்
சிலவே–சில பிள்ளை வளர்க்கையோ?

செந்நெல் இத்யாதி –
உர நிலத்திலே -ஸார ஷேத்ரம் -பழுதற விளைந்து சிவந்து சுத்தமான செந்நெல் அரிசியும் –
அப்படிப்பட்ட நிலத்தில் விளைந்த சிறு பயறு நெரித்து உண்டாக்கின பருப்பும் –
பாக தோஷம் வாராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த கறுப்புக் கட்டியும் –
நல்ல பசுவின் பாலாய் -நால் ஒன்றாம்படி காய்ச்சித் தோய்த்து செவ்வி குன்றாமல் கடைந்து உருக்கின நெய்யும்
நல்ல பசுக்களில் கறந்த பாலும் ஆகிற இவற்றினாலே –

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் –
பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –

பண்டு இப்பிள்ளை பரிசு அறிவன்
முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்
அதாவது –
திருவோண வ்ரதத்துக்கு  என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –
இவனும் தீம்பிலே ஆரம்பித்து –
தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –
இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –
இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி

இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி –
அதிலும் த்ருப்தி பிரவ்பாமல் -இன்னமும் வேண்டி இருப்பன் நான் என்று சொல்லி –

போந்து நின்றான் –
அந்ய பரரைப் போலே அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –

உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –
யசோதை பிராட்டீ-அங்கு நின்று தீமை செய்யாமல் -உன்னுடைய பிள்ளையை
உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் –

இவையும் சிலவே –
பிள்ளை பெற்றார்க்கு பிள்ளை தீம்பு செய்யாமல் பேணி வளர்க்க வேண்டாவோ –
இவையும் சில பிள்ளை வளர்க்கையோ –

—————————————–

எட்டாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –என்றவாறே
தன் மகனை அவள் அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- – –

பதவுரை

கேசவனே–அழகிய குழலை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வருவாயாக;
கில்லேன் என்னாது–‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல்
இங்கே போதராய்;–(என்று யசோதை யழைக்க, இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,)
நீ–நீ
நேசம் இலாதார்–(உன்மீது) அன்பில்லாதவர்களுடைய
அகத்து இருந்து–அகங்களிலே யிருந்து
விளையாடாதே–விளையாட்டொழிவது மன்றி,
தூசனம் சொல்லும்–(உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற
தொழுத்தைமாரும்–(இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்
தொண்டரும்–(இடையர்க்கு) அடியரானவர்களும்
நின்ற–நிற்கின்ற
இடத்தில் நின்று–இடங்களையு மொழித்து விட்டு
போதராய்–(இங்கே) வாராய்;
(என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,)
தாய் சொல்லு–தாய் வாய்ச் சொல்லை
கொள்வது–மேற் கொண்டு நடப்பது
தன்மம் கண்டாய்–(பிள்ளைகளுக்கு) தர்மங்காண்;
(ஆதலால்)
தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.)

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
இப்படி இவள் அழைத்த இடத்தில் –
நான் இப்போது வர மாட்டேன் -என்ன –

கில்லேன் என்னாது இங்கே போதராயே –
மாட்டேன் என்னாதே இங்கே வாராய் -என்கிறாள்
நான் இங்கு சற்று போது இருந்து விளையாடி வருகிறேன் -என்ன –

நேசம் இத்யாதி –
விளையாடும் போதைக்கு உனக்கு வேறு இடம் இல்லையோ –
உன் பக்கல் சிநேகம் இல்லாதார் அகத்தில் இருந்து நீ விளையாடாதே இங்கே வாராய்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும் –
இவ்வளவேயோ -இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும்
இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும்
உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் –
அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –
இப்படி சொன்ன இடத்திலும் அவன் வாராமையாலே

தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய்- என்று இரக்கிறாள்
பெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்
நீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ –
சதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி  செய்கிறார் –

தாமோதரா –
கயிற்றை விட்டு வயிற்றிலே  கட்டலாம்படி எனக்கு தான் முன்பு பவ்யனாய் இருந்தவனும் அன்றோ –

இங்கே போதராயே –
ஆன பின்பு என் சொல்லை மாறாதே-திரச்கரியாமல்- இங்கே வாராய் –

————————————–

ஒன்பதாம் பாட்டு –
தாமோதரா இங்கே வாராய்-என்று அழைத்த இடத்திலும் வாராதே -வேறே  ஒரு க்ரஹத்தில்
போய் புக்கு -அவர்கள் சமைத்து வைத்த -அபூபாதிகளை அடைய வாரி ஜீவிக்கை முதலான
தீம்புகளை செய்ய -அவ்வகத்துக்கு கடவள் ஆனவள் வந்து முறைப்பட்டு
உன் பிள்ளையை இங்கே அழைத்து கொள்வாய் -என்றபடியை சொல்கிறது –

கன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை கலத்திலிட்டு
என்னகம் என்று நான் வைத்து போந்தேன் இவன்  புக்கு அவற்றைப் பெறுத்தி போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே -2 -9-9 – –

பதவுரை

அசோதை நங்காய்
கன்னல்-கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த
இலட்டுவத்தோடு–லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு
சீடை–சீடையும்
கார் எள்ளின் உண்டை– எள்ளுருண்டையையும்
கலத்தில்–அவ் வவற்றுக்கு உரிய பாத்திரங்களிலே
இட்டு–நிரைத்து
என் அகம் என்று–என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து விசேஷமாக காவலிடாமல்
வைத்து-உறிகளிலே வைத்து விட்டு
நான் போந்தேன்–நான் வெளியே வந்தேன்
(அவ்வளவில்)
இவன்-இப் பிள்ளையானவன்
புக்கு-அவ் விடத்திலே வந்து புகுந்து
அவற்றை-அப் பணியாரங்களை
பெறுத்தி–நான் பெறும்படி பண்ணி
போந்தான்–ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான்
(அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் )
பின்னும்–மறுபடியும்
அகம் புக்கு–என் வீட்டினுள் புகுந்து
உறியை நோக்கி–உறியைப் பார்த்து
அதில்
பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்–மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான்
இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்
உன் மகன் தன்னை–உன் பிள்ளையாகிய கண்ணனை
கூவிக் கொள்ளாய்–உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள்
இவையும்–இப்படி இவனைத் தீம்பிலே கைவளர விட்டிருக்கிற இவையும்
சிலவே–ஒரு பிள்ளை வளர்க்கையோ

பெறுத்தி -நான் பெறும்படி பண்ணி -இது வ்யதிரேக உக்தி –
அதாவது
அவற்றில் எனக்கு ஒன்றும் சேஷியாதபடி தானே களவு கண்டான் -என்கை

கன்னல் -கருப்புக்கட்டி –
இது மேல் சொல்லுகிறவை எல்லாவற்றிலும் அன்வயித்து கிடக்கிறது
கருப்பு வட்டோடு சமைத்தவை -வட்டிலும் காட்டிலும் ரசிக்கும் இறே

இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளுருண்டை
இலட்டுகம் ஆவது -ஓர் பூப விசேஷம்
அத்தோடே சீடையும்  கார் எள்ளோடு வாரின எள்ளுருண்டையும்

கலத்திலிட்டு –
அவற்றுக்கு அனுரூபமான பாத்ரங்களிலே இட்டு

என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன் –
என்னகம் அன்றோ இங்கு புகுவார் இல்லையே என்று வைத்து நான் புறம் போந்தேன்

இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் –
நான் போந்ததே அவகாசமாக இவன் சென்று புக்கு அவற்றை நான் பெறும்படி பண்ணிப் போந்தான்
என்று வ்யதிரேகமாக சொல்லுகிறாள்
அதாவது
அவற்றில் எனக்கு ஒன்றும் லபியாதபடி தானே ஜீவித்து போந்தான் என்கை –

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி –
அது போராமல் மீண்டும் அகத்திலே புக்கு -உறியைப் பார்த்து
பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணெயும் உண்டோ என்று ஆராயா நின்றான் –

உன் மகன் இத்யாதி –
யசோதை பிராட்டீ -உன்னுடைய பிள்ளை யானவனை அங்கு நின்றும் தீமை செய்யாதே உன் அருகே
அழைத்துக் கொள்ளாய்

இவையும் சிலவே –
இப்படி இவனை தீம்பிலே கை வளர விட்டு இருக்கிற இவையும் ஒரு பிள்ளை வளர்க்கையோ –

அன்றிக்கே –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் என்று
குண பூர்த்தியை உடைய யசோதாய் -அவனும் உன்னைப் போலே குண பூர்த்தி
உடையனாம்படி உன் அருகே அழைத்து கொள்ளாய் என்றவாறே
என்னுடைய குண பூர்த்தியும் அவனுடைய தோஷங்களும் சொல்லிக் கதறுகையோ உங்களுக்கு உள்ளது –
சிறு பிள்ளைகள் படலை திறந்து -திறந்த -குரம்பைகளிலே புக்கு -கண்டவற்றை
பொறுக்கி வாயிலே இடக் கடவது அன்றோ -உங்கள் பிள்ளைகள் தானோ உங்களுக்கு
வச வர்த்திகளாய் திரிகிறன என்று இவள் இவர்களை வெறுத்து விமுகையாக –
அவன் செய்தவற்றுக்கு மேலே
இவையும் சிலவே என்று  
இவள் இன்னாப்பாலே சொல்லுகிறாள் ஆகவுமாம்-

————————————–

பத்தாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் -என்று
ஒருத்தி சொல்லி வாய் மாறுவதற்கு முன்னே வேறு ஒருத்தி வந்து
தன்னுடைய க்ரஹத்தில் இவன் செய்த தீமைகளை முறைப்பட்ட படியை சொல்லுகிறது –

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே -2- 9-10 – –

பதவுரை

நங்காய்–யசோதைப் பிராட்டி
சொல்லில்–உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி–அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய்
உன் பிள்ளை தான்–உன் பிள்ளையோ என்றால்
சூழல் உடையனே–(பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே
(என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க)
இல்லம் புகுந்து–என் வீட்டினுள் புகுந்து
என் மகளை–என் பெண்ணை
கூவி–பேர் சொல்லி அழைத்து
கையில் வளையை–அவளுடைய கையிலிருந்த வளையை
கழற்றிக் கொண்டு–பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய்
கொல்லையில் நின்றும்–காடுகளில் நின்றும்
நாவற்பழங்கள்–நாவற்பழங்களை
கொணர்ந்து–இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து
அங்கு–அவ் விடத்தில்
விற்ற–அவற்றை விற்பனை செய்யலுற்ற
ஒருத்திக்கு–ஒரு பெண் பிள்ளைக்கு
அவ்வளை–அந்த என் மகளுடைய கை வளையை
கொடுத்து–கொடுத்து
(அதற்குப் பதிலாக)
நல்லன–(தனக்கு) நல்லவையாகத் தோற்றின
நாவல் பழங்கள்–நாவற் பழங்களை
கொண்டு–அவளிடத்தில் வாங்கிக் கொண்டு
(போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு,
நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே)
நான் அல்லேன் என்று–(உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி
(அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு)
சிரிக்கின்றான்–ஓ! மோசம் போனோமே என்று) சிரியா நின்றான்
(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்)

அரசிப்படுதி -கோபியா நின்றாய்
சூழல் உடையன் -பற்பல வஞ்சக செயல்களை உடையனாய் இரா நின்றான்

சொல்லிலரசிப் படுதி நங்காய் –
முன்பே ஒருத்தி சொன்னதுக்கு மேலே -புண்ணின் மேல் புண்ணாக -இவளும் ஒருத்தி வந்து –
தன் மகன் குறைகளை சொல்லப் புக்கவாறே -இதுவும் ஒரு சிலுகோ-என்று தாயான யசோதை பிராட்டி
குபிதையாக -நங்காய் -உன் பிள்ளை செய்த வற்றை சொல்லில் நீ கோபியா நின்றாய் –

சூழல் உடையன் உன் பிள்ளை தானே –
உன் பிள்ளையானவன் தானே -துஸ்ஸஹமாய் உனக்கு வந்து சொல்லி அல்லது நிற்க
ஒண்ணாத படியான சூழல்களை உடையனாய் இரா நின்றான் –

சூழல் ஆவது -சூழ்ச்சி –
அதாவது நானாவான கரித்ரிம வகைகள்
அவற்றில் இவனுக்கு இல்லாதது இல்லை காண் என்ன –
இப்படி சொல்லுகைக்கு அவன் இப்போது துச்சகமாய் செய்தது தான் ஏது-அத்தை சொல் என்ன –
சொல்கிறாள் மேல் –

இல்லம் புகுந்து என் மகளைக் கூவி –
என் அகத்திலே புகுந்து –
என் மகளைப் பேரைச் சொல்லி அழைத்து

கையில் வளையை கழற்றிக் கொண்டு –
அவள் கையில் அடையாள வளையை கழற்றிக் கொண்டு போய் –

கொல்லை இத்யாதி –
கொல்லையில் நின்றும் கொடு வந்து –
அங்கே நாவற் பழம் விற்கிறாள் ஒருத்திக்கு அவ் வளையைக் கொடுத்து

நல்லன நாவற் பழங்கள் கொண்டு –
தனக்கேற அழகிதான நாவற் பழம் கொண்டு –
போரும் போராது என்று சொல்லுகிற அளவில் –

நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க –

அவள்-இவன் தந்தான் -என்ன –
நீயோ இவளுக்கு வளை  கழற்றி கொண்டு கொடுத்தாய் -என்ன

நான் அல்லன் என்று சிரிக்கின்றானே  –
நான் அல்லேன் காண் –
என் கையில் வளை கண்டாயோ –
நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ –
வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ
கண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே
எனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்
இதில் காட்டில் உண்டோ துஸ்ஸகமான தீம்பு -என்கை –

—————————————————-

நிகமத்தில் இத்திரு மொழி கற்றார் நமக்கு ப்ராப்யர் ஆவார் என்கிறார் –
(செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -குலசேகரப்பெருமாள் அனுபவம் போலவும்
திருச்சேறை -திருக்கடல் மல்லை -கலியன் அனுபவம் போலவும்
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை நம்மாழ்வார் அனுபவம் போலவும் இங்கும் )

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 -11- –

பதவுரை

வண்டு–வண்டுகளானவை
களித்து–(தேனைப் பருகிக்) களித்து
இரைக்கும்–ஆரவாரங்கள் செய்யப் பெற்ற
பொழில்–சோலைகளாலும்
வரு–(அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள
புனல்–நீரை யுடைத்தான
காவிரி–காவேரீ நதியான
சூழ்–சூழப் பெற்று
தென்–அழகிய
அரங்கன் அவன்–திருவரங்கத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான்
பண்டு–(விபவமாகிய) முற் காலத்தில்
செய்த–செய்த
கிரீடை எல்லாம்–லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு)
விட்டு சித்தன் பட்டர் பிரான் பாடல்–விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய
இவை கொண்டு–இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு
பாடி–(இப் பாசுரங்களை)பாடி
(அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து)
குனிக்க வல்லார்–கூத்தாட வல்லவர்களாய்
கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி–கண்ண பிரானுக்கு அடியவர்களாய்
எண் திசைக்கும்–எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி)
விளக்கு ஆகி நிற்பார்–(அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய
இணை யடி–திருவடிவிணை களானவை
என் தலை மேலான–என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை

வண்டு இத்யாதி
வண்டுகள் ஆனவை மது பானத்தால் களித்து பாடுகிற கோஷத்தை உடைத்தான பொழில்களாலும்
பொழில்களுக்கு தாரகமாக பெருகி வாரா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரியாலும் சூழப்பட்டு
திரு மதிள்களும் –  திருக் கோபுரங்களும் -திரு வீதிகளும் -மாட மாளிகைகளுமான -இவற்றோட சேர்த்தியால் வந்த
அழகை உடைத்தாய் இருந்துள்ள -ஸ்ரீ திருவரங்கப் பெரு நகரிலே நித்ய வாசம் பண்ணும் வைபவத்தை உடையனானவன்
முன்பு -விபவ அவதாரத்திலே -செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாவற்றையும்

பட்டர் பிரான் இத்யாதி –
சர்வ வ்யாபகனான விஷ்ணுவை மனசிலே உடையராய் -ப்ராஹ்மன உத்தமரான
ஸ்ரீ பெரியாழ்வார் பாடின பாடலான இவற்றைக் கொண்டு

பாடிக் குனிக்க வல்லார் –
ப்ரீதி ப்ரேரிதராய் பாடி -உடம்பு இருந்த இடத்திலே இராதே -விகர்தராய் ஆட வல்லவர்களாய்

கோவிந்தன் இத்யாதி –
இந்த சேஷ்டிதங்கள் எல்லாம் செய்த கோவிந்தனுக்கே அடியார்களாய்–
தங்களுடைய சந்நிதி விசேஷத்தாலே
எட்டு திக்கிலும் உண்டான அந்தகாரம் போம்படி பிரகாசராய் கொண்டு நிற்கும் அவர்களுடைய

இணை அடி என் தலை மேலனவே
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகள் ஆனவை என் தலை மேலே
சர்வ காலமும் வர்த்திக்கும் அவைகள் என்கிறார் –

இத்தால்
ஓத வல்ல பிராக்கள் நமை ஆளுடையார்கள் பண்டே -என்னுமா போலே
இத்தை அப்யசித்தவர்கள் உடைய வைபவத்தையும்-
அவர்கள் பக்கல் தமக்கு உண்டான கௌரவ பிரதிபத்தியும்
அருளிச் செய்தார் ஆய்த்து-

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-8–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

July 28, 2012

அவதாரிகை –
கீழே அவனை திருமஞ்சனமாட்டி -திருக் குழல் வாரின யசோதை பிராட்டி
அவன் திருக் குழலுக்கு அலங்காரமாக பூ சூட்ட வேணும் -என்று கோலி
ஓன்று போல் ஓன்று அன்றிக்கே விலஷணமான புஷ்பங்கள் பலவற்றையும் சம்பாதித்து –
இவை செவ்வி அழிவதற்கு முன்னே உனக்கு நான் சூட்டும்படி வர வேணும் -என்று
அவனை பல காலம் அழைத்து பூ சூட்டின அநந்தரம்-

அவன் அழகுக்கு திருஷ்டி தோஷம் வாராதபடி காப்பிட வேணும் -என்று நினைத்து
சாயம் காலத்திலே உன்னை சேவிபபதாக தேவ ஜாதி எல்லாம் வந்து நில்லா நின்றது
காலமும் சந்த்யை ஆயிற்று-
இக்காலத்தில் உக்ர  தேவதைகள் சஞ்சரிக்கும்- மன்று முதலான ஸ்தலங்களில் நில்லாதே
உனக்கு அந்திக் காப்பு இடும்படி வர வேணும் -என்று
பலகாலும் அனுவர்த்தித்து அழைத்து காப்பிட்ட பிரகாரத்தை
தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு

உகந்து அருளின நிலமான ஸ்ரீ திரு வெள்ளறையிலே-அவன் நிற்கிற நிலையில் -அவனைக் குறித்து
யசோதை பிராட்டி உடைய சிநேகத்தையும் -பரிவையும் உடையராய் கொண்டு –
அவள் பேசினால் போல் பேசி
அவனுக்கு திரு அந்திக் காப்பு இடுகை யாகிற ரசத்தை அனுபவிக்கிறார் –
இத் திருமொழியில்

——————————————–

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1- –

பதவுரை

சந்திரன்–சந்த்ரனானவன்
மாளிகை சேரும்–வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற
சதுரர்கள் வெள்ளறை– மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றவனே!
அழகனே–அழகு உடையவனே!
இந்திரனோடு–இந்திரனும்
பிரமன்–ப்ரஹ்மாவும்
ஈசன்–ருத்ரனும்
இமையவர்–மற்றுமுள்ள தேவர்களும்
எல்லாம்–(ஆகிய) யாவரும்
மா மந்திரம் மலர் கொண்டு–சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு
உவர் ஆய் வந்து–(மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து
மறைந்து நின்றார்–மறைந்து நின்றார்கள்,
இது–இக் காலம்
அம்–அழகிய
அந்தி போது ஆகும்–ஸாயம் ஸந்த்யா காலமாகும்,
(ஆகையால்)
காப்பு இட–(நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி
வாராய்–வருவாயாக.

சதுரர்கள் வெள்ளறை –
மங்களா சாசன சமர்த்தரர்கள் வர்த்திக்கிற திரு வெள்ளறையிலே

இந்திரன் இத்யாதி –
த்ரை லோக்ய பாலகனான இந்திரனோடே-
தச புவன ஸ்ரஷ்டாவான பிரம்மாவும் –
ஜகத் சம்கார கர்த்தாவான ருத்ரனும் –
இவர்களுக்கு பரதந்த்ரராய் வர்த்திக்கும் மற்றும் உண்டான தேவர்களும் எல்லாம்-
இத்தால்-வாசி அற எல்லாரும் என்றபடி –

பிரம்ம ருத்ர இந்த்ரரர்கள் மூவரையும் சொல்லுகிற இடத்தில்
இந்திரனை முந்துற சொல்லிற்று –
அவனோபாதி பிரம்ம ருத்ரர்களும் அதிகரித்த கார்யத்தால் வந்த ஏற்றம் இத்தனை ஒழிய
ஈஸ்வர கந்தம் இல்லை என்று தோற்றுகைக்காக –

இவர்கள் தாம் தொட்டில் பருவமே பிடித்து இவ் விஷயத்திலே கிஞ்சித்கரித்து இறே போருவது –
ஆகையாலே
கிண்கிணி தந்துவனாய் நின்ற இந்திரனோடே –
வண்ண சிறு தொட்டில் வர விட்ட பிரம்மாவும் –
உடையார் கன மணி வரவிட்ட ருத்ரனும் –
வலம்புரி சேவடி கிண் கிணி முதலானவை வரவிட்ட மற்றும் உண்டான தேவர்களும் எல்லாம் என்கை

மந்திர மா மலர் கொண்டு
(மந்திரம் கொண்டு
மா மலர் கொண்டு)
திரு மந்திர புஷ்பம் கொண்டு
மந்திரம் என்கிறது
மறை கண்ட மந்த்ரமான புருஷ ஸூக்தாதிகளை
மா மலர் என்கிறது
ஸ்லாக்கியமான கல்பக வ்ருஷாதிகளை சொல்லுகிறது

மறைந்து உவராய் வந்து நின்றார் –
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் -(திருவாய் -7-7-11 )-என்கிறபடியே
இங்கு உள்ளாருடைய கண்ணுக்கு விஷயம் ஆகாதவர்கள் ஆகையாலே –
பிறருக்கு தெரியாத இயல்பாக –
நீ அருள் பாடிட்டவாறே
வரும்படி உனக்கு அதூர விப்ர்க்ருஷ்டராய் வந்து நின்றார்கள்

மறைந்து வாரா -என்று பாடமானாலும் –
உவரா -அதூர விபர்க்ருஷ்டர் என்று பொருள்

சந்தரன் இத்யாதி –
சந்திர பததளவும் செல்ல ஓங்கி இருக்கையாலே –
சந்தரன் மாளிகைகளிலே வந்து சேரும்படி இருப்பதாய் –
உன் சௌகுமார்யாதிகளை அறிந்து –
மங்களா சாசனம் பண்ணி
நோக்க வல்ல சமர்த்தரானவர்கள் வர்த்திக்கிற
ஸ்ரீ திரு வெள்ளறையிலே நின்று அருளுபவனே

அந்தியம் போது இதுவாகும் –
இது சந்த்யா காலமாய் இருக்கும் –
விளையாட்டு பராக்கில் அஸ்தமிதத்தும் அறிகிறாய் இல்லை –

அழகனே
த்ர்ஷ்டி தோஷ பயத்தாலே -அநவரதம் கொண்டாடும்படியான அழகை உடையவனே
அஸ்தமிதத்தை அறியாதா போலே உன் அழகு வாசியும் அறிகிறாய் இல்லையீ-

காப்பிட வாராய் –
உன்னுடைய ஸ்வாபாவிகமான சமுதாய சோபைக்கும்
ஒப்பனை அழகுக்கும்
ஒரு குறை வாராதபடி யாக திரு வந்திக் காப்பிட வாராய்-

————————————————

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2 –

பதவுரை

மதிள்–மதிளரணை யுடைய
திரு வெள்ளறை–திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றருளினவனே!
மேல்–(என்) மேல்
ஒன்றும்–துன்பமும்
நேசம் இலாதாய்–அன்பில்லாதவனே!
உன்னை கூவி–உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன்–நின்று விட்டேன்;
(அதனால்)
பசு எல்லாம்–பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து–கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற–முலை கடுப்பாலே -கத்துகின்றன;
இப்போது இது சொல்வது சடக்கென காப்பிட வருவதற்காக
(நீ)
அந்தி போது–அந்தி வேளையில்
மன்றில்–நாற் சந்தியில்
நில்வேல்–நில்லாதே;
என் தன் சொல்லு–என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய்–(உனக்கு) நல்லதாகுங்கிடாய்:
நான் உன்னை காப்பு இட வாராய்.

நின்று ஒழிந்தேன் -நின்று விட்டேன் -நான் உன்னை அழைப்பதில் உற்று இருந்தமையால்
கன்றுகளை குடிக்க விடுவர் ஒருவர் இல்லாமல் போகவே பசுக்கள் கதறா நின்றன -என்று கருத்து
இப்போது இது சொல்கிறது சடக்கென காப்பிட வர வேணும் என்பதற்கு உறுப்பாக
என் தன் சொல்லு நன்று கண்டாய் -தாயான என்னுடைய சொல்லானது
உனக்கு பிரியமாய் இருக்கும் கிடாய் -ஆகில் என் செய்ய வேணும் என்று அவன் கேட்க
நான் உன்னை காப்பிட வாராய் -என்கிறாள் –
நேசமேல்-யேல் அசை –

கன்று இத்யாதி –
பசுக்களானவை  எல்லாம் கன்றுகள் நிற்கிற இடத்திலே வந்து புகுந்து -கன்றுகளை குடிக்க விடுதல் –
கறக்குதல் -செய்வார் இல்லாதது கண்டு முலைக் கடுப்பால் கதறா நின்றன –
அதவா –
கதறுகின்ற -என்றதை
கீழும் மேலும் அன்வயித்து கன்றுகள் எல்லாம் தொழுவத்தில்
தாம்தாம் நிலைகளிலே புகுந்து நின்று முலை உண்ணப் பெறாமையாலே நாக்கொட்டிக் கதறுகின்றன –

பசுக்கள் எல்லாம் புறமே நின்று -கன்றுகள் குடித்தல்-கரத்தல் -செய்யப் பெறாமல்
முலைக்கடுப்பால் கதறா நின்றன என்னவுமாம் –
அவை அப்படி கதற வேண்டுகிறது -முன்போலே நீ கன்றுகளை விட்டு கறவாமையால் அன்றோ
அது செய்யாது ஒழிவான் என் என்ன

நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி –
நான் உன்னை அழைத்து நின்று விட்டேன் –
பின்னை அங்கு யாரது செய்வார் –
அவை கன்றை நினைத்து கதருகிறாப் போலே அன்றோ –
நானும் உன்னை அழைத்து நின்றுவிட்டபடி –

நேசமேல் ஒன்றும் இலாதாய் –
என் பக்கல் ஸ்நேகமாகில் ஒன்றும் இல்லாதவனே –
கதறுகிற தாய்கள் அளவில் கன்றுகளுக்கு உண்டான சிநேகம்
என் பக்கல் உனக்கு உண்டாக வேண்டாவோ –
அது ஏக தேசம் இல்லாதவனாய் இருந்தாய் நீ –
நான் உன் பக்கல் சிநேகம் அற்று இருக்கிறேனோ –
விளையாடி வருகைக்காக நின்றேன்- அத்தனை அன்றோ என்ன –

மன்றில் நில்லேல் வந்து இப்போது –
சந்த்யா காலத்திலே சூத்திர தேவதைகள் நிற்கும் இடமான நாற் சந்தியிலே நில்லாதே கொள்ளாய்
விளையாடுகைக்காக ஸ்தலமும் காலமும் அல்ல காண் இது  –

மதிள் திரு வெள்ளறை நின்றாய் –
மங்களா சாசன பரர்க்கு அஞ்ச வேண்டாதபடி –
உனக்கு அரணாக போம்படியான மதிளை உடைய ஸ்ரீ திரு வெள்ளறையில் நின்று அருளினவனே-
புறம்பே புறப்பட்டு வ்யாபரியாதே அவ் வரணுக்கு உள்ளே நின்றாயாகில் எனக்கு இப்படி வயிறு பிடிக்க வேண்டாவே

நன்று கண்டாய் என் தன் சொல்லு –
இப்படி சொன்ன இடத்திலும் தன் சொல் அவன் கை கொள்ளாமையாலே-
என் சொல்லு நன்று கிடாய் -அத்தை கைக் கொள் என்கிறாள்
தாயார் வாய் சொல் கருமம் கண்டாய்-(பெரியாழ்வார் -2-2-) -என்றாப் போலே

நான் உன்னை காப்பிட வாராய் –
உன் பக்கல் ஸ்நேக யுக்தையாய் -மங்களா சாசன பரையாய் இருக்கிற நான்
அநவரதம் காப்பிட வேண்டும்படியான சௌகுமார்யாதிகளை உடைய உன்னை காப்பிடும்படி நீ வாராய் –

—————————————————

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 -3-

பதவுரை

ஆள்வாய்–என்னை ஆளப் பிறந்தவனே!
முப்போதும்–­மூன்று காலத்திலும்
வானவர்–தேவர்கள்
ஏத்தும்–ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள் வெள்ளறை–(உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே
நின்றாய்–நிற்பவனே! (நீ)
செப்போது–பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த
மெல் முலையார்கள்–மெல்லிய முலையை யுடைய ஸ்திகள்
(விளையாட்டாகச் செய்த)
சிறு சோறும்–மணற் சோற்றையும்
(சிறு)இல்லும்–மணல் வீட்டையும்
சிதைத்திட்டு–அழித்து விட்டு (நிற்க)
அப்போது–அக் காலத்தில்
நான்–நான்
உரப்ப–கோபித்துச் சொல்ல
(பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்)
போய்–அப்பாற்போய்
அடிசிலும்–சோற்றையும்
உண்டிலை–உண்ணாமலிருந்திட்டாய்;
இப்போது–இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன்–நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்;
எம்பிரான் சாப்பிட வாராய்.

அப்போது நான் உரப்பப் போய்-
அவற்றை அழித்த அக்காலத்திலே -நான் உன்னை சீறி வார்த்தை சொல்ல 
அஞ்சி ஓடிப் போய்
நான் ஒன்றும் செய்யேன் –
நான் உன்னை பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்வது இல்லை

செப்பு இத்யாதி –
செப்பு என்று சொல்லும்படியான  சந்நிவேசத்தை உடைத்தாய் -அது போலே கடினமாய்
இருக்கை அன்றிகே மிருதுவாய் இருக்கும் முலையை உடையவர்களுடைய

சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு –
லீலார்த்தமாக மணல் கொழித்து சமைத்த
சிறு சோற்றையும்
கொட்டகத்தையும் அழித்திட்டு

அப்போது நான் உரப்ப போய் –
பெண்களோடே கை பிணக்கிட்டு திரிய வேண்டா காண் -என்று
அப்போது நான் கோபித்தவாறே-
நான் பிடிக்குதல் அடிக்குதல் செய்யப் போகிறேன் என்று
என் முன் நிற்க அஞ்சி போய்

அடிசிலும் உண்டிலை-
உனக்கு இனிதாக சமைத்து வைத்த அடிசிலும் அமுது செய்திலை

ஆள்வாய்
என்னை ஆளப் பிறந்தவனே
இப்படியோ நீ என்னை ஆளத் தேடுகிறது
இவளை ஆளுகையாவது –
இவள் சொல் வழி வந்து –
இவள் கொடுத்தவற்றையும் விநியோகம் கொண்டு –
கோல் கீழ் கன்றாய் நடக்கை இறே

முப்போதும் இத்யாதி –
ஆதி நடு அந்தியாய் (இரண்டாம் திரு வந்தாதி )-என்கிறபடியே
த்ரி சந்த்யமும் -ப்ரஹ்ம பாவனை தலை எடுத்த போதெல்லாம்
தேவர்களாலே துதிக்க படுபவனாய்-
மங்களா சாசன பரராய் கொண்டு -உன்னுடைய ஸம்ருத்தியை எப்போதும்
மனநம் பண்ணா நிற்கும் அவர்களுடைய ஸ்ரீ திரு வெள்ளறையிலே நிற்குமவனே

இப்போது நான் ஒன்றும் செய்யேன் –
அப்போது ஹித ரூபமாக உன்னை கோபித்து வார்த்தை சொன்னேன் ஆகிலும்
இப்போது நான் உன்னை ஒன்றும் செய்யேன்

எம்பிரான் காப்பிட வாராய் –
என்னுடைய நாதனே -உனக்கு நான் காப்பிடும்படி வாராய் –

——————————————————–

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 -4- – –

இவரார் முறைப்படுகின்றார்–பாட பேதம்
வண்ணமே-ஏகாரம் -இவரால் -ஆல் -அசைச் சொற்கள்
காலினால்–காலால் என்றவாறு –இன் -சரிகை

பதவுரை

கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!;புண்டரீகாக்ஷன் தானே இவன் –
கண்டாரோடே–கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய்–தீம்பு செய்பவனே!
வண்ணம்–திருமேனி நிறம்
வேலை அது–கடலின் நிறத்தை
ஒப்பாய்–ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே–உதாரனே!
எண் அரு–எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர்–இப் பிள்ளைகள்
வந்திட்டு–வந்திருந்து
மணல் கொடு–மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி–கண்ணில் தூவி விட்டு
(அதனோடு நில்லாமல்)
காலினால் பாய்ந்தனை–காலினாலும் உதைத்தாய்;
என்று என்று–என்று பலதரஞ்சொல்லி
(நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார்–முறையிடா நின்றார்கள்;
(ஆதலால் அங்கே போவதை விட்டு)
காப்பு இட வாராய்.

கண்ணில் இத்யாதி –
கண் விழித்து விளையாட ஒண்ணாதபடி -கண்ணிலே மணலை கொடு வந்து தூவி
எங்கள் கண்ணிலே மணலை தூவுவான் என் -என்றவாறே
கோபித்து -காலாலே உதைத்தாய் என்று தனித் தனியே சொல்லி –
ஒருவர் இருவர் அன்றிக்கே –
அசங்யதரான பிள்ளைகள் உன்னால் ஈடுபட்டமை தோற்ற வந்து
இவர்கள் முறைப்படா  நின்றபடி பாராய்

கண்ணனே வெள்ளறை நின்றாய் –
எல்லாருக்கும் ஸூலபனாய் கொண்டு
திரு வெள்ளறையிலே நின்று அருளினவனே

கண்டாரோடே தீமை செய்வாய் –
உன்னோடு சம்பந்தமும் சிநேகமும் உண்டாய் –
நீ செய்தது பொறுக்கத் தக்கவர்கள் அன்றிக்கே –
கண்டவர்களோடு எல்லாம் தீம்புகளை செய்யுமவனே –
இப்படி தீமை செய்யலாகாது காண்

வண்ணமே இத்யாதி –
நிறத்தால் சமுத்ரத்தோடு ஒக்கும் அவனே
(சமுத்ரம் இவ காம்பீர்யம் -அத்தைச் சொல்ல வில்லை வண்ணத்தைச் சொன்னவாறு )

வண்ணம் -நிறம்
ஏகாரம் -அவ்யயம்
வேலை-சமுத்ரம்
அது என்றது வேலையாகிற அது என்றபடி

இத்தால் தீம்பு செய்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் என்கை

வள்ளலே –
இவ் வடிவு அழகை எனக்கு உபகரித்தவனே –

காப்பிட வாராய் –

———————————————————–

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5 – –

பதவுரை

இ ஊரில்–(பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீமைகள் செய்வார்–தீம்புகளைச் செய்பவர்களாகிய
பிள்ளைகள்–சிறுவர்கள்
பல் ஆயிரவர்–அனேக ஆயிரக் கணக்கானவர்கள்;
எல்லாம்–அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேல் அன்றி–உன் மேலல்லாமல்
(வேறொருவர் மேலும்)
போகாது–ஏறாது;
(இப்படியிருப்பதால் அங்கே போகாமல்)
எம்பிரான்! நீ இங்கே வாராய்;
நல்லார்கள்–நல்லவர்கள் வாழ்கிற
வெள்ளறை(யில்) நின்றாய்! ;
ஞானம் சுடரே–ஞான வொளியை யுடையவனே!
உன் மேனி–உன் திருமேனியை
சொல் ஆர் நின்று ஏத்தி–சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி–மங்களாசாஸநஞ்செய்து
சொப்பட–நன்றாக
காப்பு இட வாராய்.

பல்லாயிரவர் இத்யாதி
பஞ்ச லஷம் குடியான இவ்வூரில் தீமை செய்யுமவர்களான பிள்ளைகள் அநேகம் ஆயிரம் பேர் இறே –

எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது –
தம் தாம் செய்த தீமைகளை நீ செய்தாய் என்று உன் மேல் வையா நின்றார்கள்
ஆகையால் அவர்கள் செய்த தீமைகள் எல்லாம் உன் மேலே ஏறுமது ஒழிய புறம்பு போகாது காண் –

எம்பிரான் நீ இங்கே வாராய் –
என் நாயகனே -உன் மேல் தோஷம் ஏறிடுவர்கள் இடத்தில் நின்றும் –
அவர்கள் நினைவும் சொல்லும் பொறாதார் வர்த்திக்கிற இங்கே வாராய்

நல்லார்கள் வெள்ளறை நின்றாய் –
உன் பக்கல் தோஷ கந்தம் சொல்லுமவர்களை சஹியாதே –
உனக்கு ஸ்நேஹிகளாய் –
மங்களா சாசன பரராய் -இருக்கிறவர்கள்
வர்த்திக்கிற திரு வெள்ளறையில் நின்று அருளினவனே

ஞானச் சுடரே
ஞான பிரபவையை உடையவனே

உன் மேனி
அந்த ஞானத்துக்கும்
ஞான ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
பிரகாசமான உன்னுடைய திருமேனியை

சொல்லார நின்று ஏத்தி –
சொல் நிறையும்படி நின்று ஸ்துதித்து-
சர்வ சப்த வாஸ்யமான விஷயத்தில் இறே சொல் ஆருவது
கவிக்கு நிறை பொருளாய் நின்றான் ( நான்முகன் )-என்னக் கடவது இறே

வாழ்த்தி
மங்களா சாசனம் பண்ணி

சொப்படக் காப்பிட வாராய் –
நன்றாக நான் காப்பிட வாராய்

சொப்பட -நன்றாக என்றபடி-

————————————————–

கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 – –

பதவுரை

மஞ்சு தவழ்–மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம்–ரத்ந மயமான வீடுகளையும்
மதிள்–மதிளையுமுடைய
திருவெள்ளறை(யில்) நின்றாய்! ;
கஞ்சன்–‘கம்ஸனானவன்
நின் மேல்–உன் மேலே,
கறுக்கொண்டு–கோபங்கொண்டு
கரு நிறம்–கரு நிறத்தையும்
செம் மயிர்–செம் பட்ட மயிரையுமுடைய
பேயை–பூதனையை
வஞ்சிப்பதற்கு–(உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான்–அனுப்பினான்,
என்பது–என்பதான
ஓர் வார்த்தையும்–ஒரு சொல்லும்
உண்டு–கேட்டிருப்பதுண்டு,
(ஆதலால்)
நீ அங்கு நிற்க–நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன்–நான் அஞ்சா நின்றேன்;
அழகனே! காப்பு இட வாராய்

மஞ்சு-மேகங்கள் ஆனவை –

கஞ்சன் இத்யாதி –
அசரீரி வாக்கியம் கேட்ட அன்று தொடங்கி-அத்யந்தம் வைர ஹ்ர்தனாய் அதி சங்கையாலே
மக்கள் அறுவரை கல்லிடை மோதி-சப்தம கர்ப்பம் நழுவப் போய்த்து என்று விட்டு –
அஷ்டம கர்ப்பமான இது எப்போதோ பிறப்பது -என்று ஹிம்சிப்பதாக பார்த்து கொண்டிரா நிற்கச் செய்தேயும் –
தாயும் தகப்பனும் ஒழிய அசலார் அறியாதபடி இருளிலே வந்து பிறந்து –
அவ்விருளிலே அங்கு நின்றும் திரு ஆய்ப்பாடியிலே போந்த இத்தை
துர்க்கா வசநாதிகளால் அறிந்த கம்சன் -(ஆதி -ஒற்றர்களாலும் அறிந்து )
உன் விஷயத்திலே மிகவும் சீற்றத்தை உடையனாய் கொண்டு –

கறுப்பு என்கிற இது -கறு -என்று குறைந்து கிடக்கிறது
கறுப்பு -சீற்றம்

கரு நிறம் இத்யாதி
இருள் தான் ஒரு வடிவு கொண்டால் போலே கருத்த நிறத்தையும்
அக்னி ஜ்வாலை  போலே சிவந்த தலை மயிரையும் உடையாளாய் இருக்கிற பேய்ச்சியை-
நேர் கொடு நேர் சென்றால் அவனை உன்னால் சாதிக்கப் போகாது –வஞ்சனத்தால் சென்று சதி –

என்று விட்டான் என்பதொரு வார்த்தையும் உண்டு காண்
பிறக்கிற போது –
இவ் வார்த்தை தான் ஸ்ரீ நந்தகோபர் வசுதேவர் பக்கல் கேட்டு வந்து சொன்னார் ஆதல் –
ஸ்ரீ மத் துவரையில் –பரவை வழக்கம் -செவி வழிச் செய்தி -உலக வழக்கம்- இங்கே வந்து பிறந்தது ஆதல் –

மஞ்சு இத்யாதி –
மேகங்கள் தவளும்படியான உயர்த்தியை உடைத்தாய் -மணி மயமான மாடங்களையும் –
அரணாக போம்படியான மதிளையும் உடைத்தான – திரு வெள்ளறையிலே -நிலையார நின்றவனே

அஞ்சுவன் நீ அங்கு நிற்க –
பூதனை வந்து வஞ்சனத்தால் உன்னை நலிய தேடினதும் தன் வசமாய் அன்றிகே
கம்ச ப்ரேரிதையாய்- என்ற வார்த்தை பிறக்கையால்-
அவன் இன்னம் யாரை வர விடும் -எது செய்யும் என்று தெரியாது -என்று பய ஸ்தானமான
அவ் விடத்தில் நீ நிற்கிற இதுக்கு நான் அஞ்சா நின்றேன்

அழகனே காப்பிட வாராய் –
ஆன பின்பு  அங்கு நில்லாதே  அதி லோகமான-(அப்ராக்ருதமான ) அழகை உடையவனே –
உன் அழகுக்கு த்ர்ஷ்டி தோஷம் வாராத படியாகக் காப்பிட வாராய்

———————————————————

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளி கொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 8-7 – –

பதவுரை

கள்ளம்–வஞ்சனை யுடைய
சகடும்–சகடாஸுரனையும்
மருதும்–யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய–(வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த–(திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே–பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ-நீ
பேயை–பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை–தாயாகவே நினைத்து -முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு–உள்ள படி
ஒன்றும் அறியேன்–ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய்! ;
இது–இப்போது
பள்ளி கொள் போது ஆகும்–படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே! அழகாலே மேம்பட்டவனே -காப்பு இட வாராய்.

கள்ளம் இத்யாதி –
கண் வளர்ந்து அருளச் செய்தே –
உன்னை நலிவதாக அசூர விசிஷ்டமாய் வந்த கர்த்ரிம சகடத்தையும் –
தவழ்ந்து போகா நிற்கச் செய்தே –
உன்னை நலிவதாக ஆசூர விசிஷ்டமாய் நின்ற யமளார்ஜுனங்களையும்
தன்னுடைய ரூபம் கட்டுக் குலைந்து சிதிலமாக விழும்படியாக –
காலால் சகடம் பாய்ந்தான் -என்றும் –
ஊரு கரத்தினோடு முந்திய –  என்றும் சொல்லுகிறபடியே
திருவடிகளாலும் -திருத்துடை -திருத்தோள்களாலும்  -தள்ளிப் பொகட்ட

பிள்ளை அரசே –
இந்த அதி ப்ரவர்த்திகளை செய்யா நிற்க செய்தேயும் –
பிள்ளைத் தனத்தில் புரை அற்ற இருந்த பெருமை உடையவனே

நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை –
நீ பேயைத் தாயாக நினைத்து முலை உண்ட பின்பு

உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
உள்ளபடி ஒன்றும் அறிகிறேன் இல்லை
அதாவது –
இன்னமும் அப்படிக்கு ஒத்தவற்றை செய்குதியாகில் –
ஒரூ நாள் அல்ல ஒரு நாள் அபாயம் விளையும் -என்று பயப்படா நின்றேன் என்கை –

ஒளி உடை இத்யாதி –
மாடங்களும் மதிள்களுமான அழகை உடைய திரு வெள்ளறையில் நின்று அருளினவனே –

பள்ளி கொள் போது இதுவாகும் –
நீ கண் வளர்ந்து அருளுகிற போது ஆய்த்து இப்போது
சந்த்யா காலத்து அளவு அன்றிக்கே -மாலை வைகிற்று காண் என்றபடி

பரமனே காப்பிட வாராய் –
ஸௌந்தர்யாதிகளால்  உனக்கு மேற்பட்டார் இல்லாதவனே -உனக்கு ஒரு குறை வாராதபடி
நான் காப்பிட வாராய் –

———————————————

இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8- 8-

பதவுரை

(உன் குண சேஷ்டிதங்களால்)
இன்பம் அதனை–பரமாநந்தத்தை
உயர்த்தாய்–(எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே!
தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ
இமையவர்க்கு-தேவர்க்கு
என்றும்–எந்நாளும்
அரியாய்–அருமையானவனே!
கும்பம்–மஸ்தகத்தையுடைய
களிறு–குவலயாபீடத்தை
அட்ட–கொன்ற
கோவே–ஸ்வாமியே!
கொடு–கொடுமை தங்கிய
கஞ்சன்–கம்ஸனுடைய
நெஞ்சினில்–மநஸ்ஸிலே
கூற்றே–யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!
செம் பொன் மதிள் வெள்ளறையாய்! ;
செல்லத்தினால் வளர்–செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய்–குழந்தாய்!
அங்கு–நீ இருக்கிறவிடத்தில்
கம்பம்–(கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல
கபாலி காண்–துர்க்கையாகும்;
(ஆகையால் அங்கு நில்லாமல்)
கடிது ஓடி–மிகவும் விரைந்தோடி
காப்பு இட வாராய்.

அங்கு கம்பக் கபாலி காண் –
அவ்விடத்தில் கண்டவர்களுக்கு நடுக்கத்தை தர கடவ கபாலத்தை உடைய
துர்க்கை சஞ்சரியா நின்றாள் காண் –
ஆதலால் சூத்திர தேவதைகள் உலாவுகிற அந்திப் பொழுதில் அங்கு நில்லாதே

இன்பம் அதனை உயர்த்தாய் –
உன்னுடைய அவதார குண சேஷ்டித அனுபவத்தால் வந்த ஸூகத்தை எனக்கு மேன் மேலும் அதிசயிப்பித்தவனே –
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் -என்னக் கடவது இறே

இமையவர்க்கு என்றும் அரியாய் –
தம் தாமுடைய ஞான சக்திகள் கொண்டு உன்னை லபிக்கப் பார்க்கும் தேவர்களுக்கு என்றும் ஒக்க
துஷ் ப்ராபன் ஆனவனே –
இத்தால் கீழ் சொன்ன  நீர்மைக்கு  எதிர்தட்டான மேன்மையை சொல்லுகிறது –

கும்பக் களிறு அட்ட கோவே –
கும்ப மிகு மத யானை -என்கிறபடியே மஸ்தகத்தினுடைய உயர்த்தியை உடைத்தாய் இருக்கும்
குவலயா பீடத்தை நிரசித்த ஸௌர்யத்தை உடைய ராஜா ஆனவனே

கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே –
உன் பக்கல் என்றும் ஒக்க க்ரூரனாய் இருக்கும் கம்சனுடைய மனசில் கூற்றம் போலே
பயாவஹனாய் கொண்டு தோற்றுமவனே

செம் பொன் மதிள் வெள்ளறையாய் –
செம் பொன் போலே மிகவும் ஸ்பருஹணீயமான மதிளை உடைய ஸ்ரீ திரு வெள்ளறையை
வாசஸ்தானமாக உடையவனே

செல்வத்தினால் வளர் பிள்ளாய் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே பலர்க்கும் நியாம்யனாய் வளருகை அன்றிக்கே –
ஒருவர் நியமனத்தில் அடங்காமல் –
வேண்டினபடி செய்து –
வேண்டியதை புசித்து –
செல்வச் செருக்கோடு வளர்கிற பிள்ளை யானவனே

கம்பக் கபாலி காண் அங்கு –
கண்டவர்களுக்கு நடுக்கத்தை விளைக்கும் உக்ரமான மழுவையும் கபாலத்தையும் உடையளான
துர்க்கை சஞ்சரிக்கிற ஸ்தலம் காண் அவ்விடம்

அன்றிக்கே
கபாலி என்று ருத்ரனை சொல்லிற்று ஆகவுமாம்

கடி தோடி காப்பிட வாராய் –
அந்த சூத்திர தேவதைகள் சஞ்சரிக்கிற சந்த்யா காலத்தில் அங்கு நில்லாதே –
இக் காலத்தில் நான் உனக்கு காப்பிடும்படி சடக்கென ஓடி வாராய் –

————————————————-

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9-

பதவுரை

இருக்கொடு–(புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர்–தீர்த்தத்தை
சங்கில்–சங்கத்திலே
கொண்டிட்டு–கொணர்ந்து
எழில்–விலக்ஷணரான
மறையோர்–ப்ராஹ்மணர்
(உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார்–வந்து நிற்கிறார்கள்;
நம்பி–தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று–நாற்சந்தியிலே நின்று
தருக்கேல்–செருக்கித் திரியாதே;
சில நாள்–சில காலம்
தாய் சொல்லு–தாய் வார்த்தையை
கொள்ளாய்–கேட்பாயாக;
தேசு உடை–தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்! ;
இன்று–இப்போது
நான்–நான்
திரு காப்பு–அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த–உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு–உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன்–ஏற்றுவேன்;
(இதைக்காண)
வாராய்–கடுக வருவாயாக.

இருக்கு இத்யாதி –
வேதப் புனித ருக்கை -(திருவாய் -5-2-)-என்கிறபடியே
புருஷ ஸூக்திகள் ஆன ரிக்குகளோடே  கூட
சுத்த ஜலத்தையும் சங்கிலே கொண்டு –
உனக்கு ரஷை இடுகைக்காக விலஷணமான பிராமணர்கள் வந்து நின்றார்கள் –
அவர்களைக் கொண்டு ரஷை இடுவித்துக் கொள்ள வேணும் காண்
உங்கள் ஐயரும் அப்படி அன்றோ செய்வது -வாராய் என்ன -அது கேளாமல் கர்வித்து
சந்தியில் நின்று -விளையாடப் புக்கவாறே

தருக்கேல் நம்பி சந்தி நின்று -என்கிறாள்
தீம்பால் பூர்ணம் ஆனவனே –
சூத்திர தேவதைகள் சந்நிதி பண்ணும் நால் சந்தியிலே நின்று கர்வியாதே கொள் –
அவர்கள் ரஷை இடுகைக்காக வந்திலை ஆகிலும்
அந்த ஸ்தலம் தன்னிலே நில்லாதே- வாராய்

தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் –
இன்னம் சில நாள் மாத்ரு வசன பரிபாலனம் செய்ய வேணும் காண்

திருக் காப்பு நான் உன்னைச் சாத்த –
நான் உன்னை அழகியதான ரஷை இட

தேசுடை வெள்ளறை நின்றாய்
விலஷணம் ஆனவர்கள் வர்திக்கையால் வந்த தேஜசை உடைய திரு வெள்ளறையில் நின்று அருளினவனே

உருக் காட்டு அந்தி விளக்கு –
உன் திரு மேனியைக் காட்டும் திரு அந்திக் காப்பு ஏற்றுவார் ஏற்றி இறே எடுப்பது
(ஸ்தோத்ரம் பண்ணியே அன்றோ எடுப்பது )
நிரதிசய போக்யமான திரு மேனி காண்கை புருஷார்த்தமாக இறே
ஆகையால் உருக் காட்டும் என்கிறது

(பிரதிபந்தகங்களைப் போக்கியே புருஷார்த்தம் அடைய முடியும்
நம -பின்பு தானே நாராயணாயா –
த்ருஷ்ட்டி தோஷம் -அகற்றி விட்டுத் தானே காண வேண்டும் –
காண்பதற்காக விளக்கு ஏற்ற வில்லை
கண் எச்சில் போக்கவே இது –
நிரதிசய போக்யமாகையாலே –
இதனால் தான் ஹாரத்தி தட்டை கண்ணில் ஒத்திக் கொள்வது நம் சம்ப்ரதாயம் அல்ல )

இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் –
இப்பொழுது ஒளியை உடைத்தாம் படி ஏற்றா நின்றேன் –
இத்தைக் கண்டு அருளும்படி கடுக வாராய் –

திருக் காப்பு நான் உன்னைச் சாத்த -உருக்காட்டும் அந்தி விளக்கு –
இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் -என்று அந்வயம்-

—————————————

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2 8-10 –

பதவுரை

மாதர்க்கு உயர்ந்த–ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை–யசோதைப் பிராட்டி
மகன் தன்னை–தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட–ரக்ஷை யிட அழைத்த
மாற்றம்–வார்த்தையை
போது அமர்–தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வக் கொழுந்து–செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர்–ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை–திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி-,
(எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே)
வேதப் பயன்–வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல–அறிய வல்ல
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–பாமாலையினுடைய
பாதம் பயன்–ஓரடி கற்றதனாலாகிய பயனை-நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை –
கொள்ள வல்ல–அடைய வல்ல
பக்தர் உள்ளார்–பக்தராக உள்ளவரது
வினை–வினைகளெல்லாம்
போம்–கழிந்து விடும்.

போதமர் செல்வக் கொழுந்து –
தனக்கு பிறந்தகமான தாமரைப் பூவை இருப்பிடமாக உடையவளாய் –
ஸ்ரீ யாகையாலே -சகல சம்பத் சமஷ்டி பூதையாய் –
பிரதான மகிஷியாய்-
இருந்துள்ள ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பங்கய செல்வி -என்று இறே திரு நாமம் –

புணர் திரு வெள்ளறையானை –
அவள் தாமரைப் பூவை மறந்து -அகலகில்லேன் -என்கிறபடியே
ஷண காலமும் பிரிய மாட்டாதே நித்ய சம்ஸ்லேஷம் பண்ணும்படியாய் கொண்டு
ஸ்ரீ திரு வெள்ளறையில் நிற்கிறவனை

கோல் தேடி ஓடும் கொழுந்தது (இரண்டாம் திருவந்தாதி )-என்கிறபடியே –
கொழுந்தானது ஓன்று -உபக்நத்தை ஒழிய தரிக்க மாட்டாதால் போலே ஆய்த்து –
போதமர் செல்வக் கொழுந்தான இவளும்
திரு வெள்ளறையான் ஆகிற உபக்னத்தோடே புணர்ந்து அல்லது தரிக்க மாட்டாதபடி

உபக்நம்-கொள் கொம்பு – ஆதாரமாய் நிற்கும் மாத்ரமாய் –
அதன் மேல் படர்ந்த கொடியே பிரதானமாய் இருக்கும் போல் ஆய்த்து –
ஸ்ரீ செம்தாமரைக் கண்ணார் அப்ரதானமாய் –
இவளே அவ்வூருக்கு பிரதானையாய் இருக்கும்படி –
(மஹா லஷ்மி பிரதான்யம் இங்கு –
ஸ்ரீ வில்லி புத்தூர் நாச்சியார் கோயில் பிரதானம் மற்றைய தேவிமார்களுக்கு )

மாதர்க்கு உயர்ந்த யசோதை –
என்ன நோன்பு நோற்றாள்  கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் (2-2-)-என்றும் –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாள்-என்றும்
(தாயரின் கடையாகிய தாய் என்று தேவகி பிராட்டியும் தன்னை சொல்லிக் கொண்டாளே )
சொல்லும்படி இவனைப் பிள்ளையாக பெற்று –
இவனுடைய பால சேஷ்டிதாதிகளான சகல ரசங்களும் அனுபவிக்க பெற்றவள் ஆகையாலே
லோகத்தில் ஸ்திரீகள் எல்லாரிலும் உத்கர்ஷ்டையான ஸ்ரீ யசோதை பிராட்டி –

மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் –
ரூப
குண
சேஷ்டிதங்கள்
எல்லா வற்றாலும் அநவரதம் காப்பிட வேண்டும்படியாய் இருக்கும்
தன்னுடைய புத்திரன் ஆனவனை –
புத்திர சிநேகம் எல்லாம் தோற்ற ரஷை இட்ட பாசுரங்களை

வேதப் பயன் இத்யாதி –
பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுகையே வேத தாத்பர்யம் என்று அறிந்து –
கைக் கொள்ள வல்ல ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இத் திருமொழியில் –

பாதப் பயன்   இத்யாதி –
பாட்டுகள் தோறும் பின்னடியில் சொன்ன பிரயோஜனத்தை கைக் கொள்ள வல்ல
பக்திமான்களாய்  உள்ளவர்களுடைய
மங்களா சாசன விரோதியாய் உள்ள பாபம் தன்னடையே விட்டு போம் –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-7–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

July 28, 2012

அவதாரிகை –
தாயான யசோதை பிராட்டி -தனக்கு குழல் வாரின அநந்தரம் –
பூ சூட்டுவதாக இருக்கிற அளவிலே –
அவன் கன்றுகள் மேய்க்க போவதாக நினைத்து -அவை மறித்து மேய்க்கைக்கு ஈடான
கோல் தர வேணும் – என்று அபேஷிக்க-
அது தனக்கு அநிஷ்டமானது கொண்டு -அவள் கொடாது ஒழிகையாலே அவன் அழப் புக்க வாறே  –
அவனை அழுகை மருட்டுகைக்காக -அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று
பலகாலும் சொல்லி அவன் அழுகுகையை மாற்றி உகப்பித்த பின்பு –

அவனுக்கு பூ சூட்டுவதாக கோலி-
செண்பகம் மல்லிகை செங்கழுநீர் இருவாட்சி -தொடக்கமாய் –
(ஒன்பது பூக்களை இங்கு சொல்லி
அஹிம்சா பிரதமம் –அஷ்ட விதம் )
நிறத்தாலும் மணத்தாலும் ஓன்று போல் ஓன்று அன்றிக்கே விலஷணமாய் இருக்கும் புஷ்பங்களை உண்டாக்கி –
அவற்றை தனி தனியே சொல்லி -உனக்கு இன்ன இன்ன பூ சூட்டும்படி வா என்று அனுவர்த்தித்து அழைத்து
பூ சூட்டின பிரகாரத்தை
தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
அவனை குறித்து அவள் பேசினால் போலே பேசி அந்த  ரசத்தை அனுபவிக்கிறார்
இத் திருமொழியில்

———————————

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –

பதவுரை

தேனில்–தேனைக் காட்டிலும்
இனிய–போக்யனாயிருக்கிற
பிரானே–ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம்–பகைவரெல்லாரும்
சிரிப்ப–பரிஹஸிக்கும்படி
பானையில் பாலை பருகி–(கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து
(பின்பு)
உன்–உன்னுடைய
கரிய–ஸ்யாமமான
திருமேனி–அழகிய திருமேனி
வாட–வாடும்படி
கானகம் எல்லாம் திரிந்து–காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு
ஆநிரை–பசுக்களின் திரளை
மேய்க்க–மேய்ப்பதற்கு
நீ போதி– ஸூ குமாரமான நீ போகிறாய்;
அரு மருந்து ஆவது–(நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை
சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து
அறியாய்–அறிகிறாயில்லை;
(இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு)
செண்பகம் பூ–செண்பகப் பூவை–காலைப் பூவை
சூட்ட–(நான்) சூட்டும்படி
வாராய்–வருவாயாக

ஆநிரை மேய்க்க நீ போதி –
உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும்
பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்

அரு மருந்து ஆவது அறியாய் –
நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

கானகம் எல்லாம் திரிந்து –
காட்டிடம் எங்கும் திரிந்து -பசுக்கள் பச்சை கண்ட இடம் எங்கும்
பரந்து மேய்கையாலே -உனக்கும் அவை போன இடம் எங்கும் திரிய வேணும் இறே –
(168 mile பிருந்தாவனம் )

உன் கரிய திரு மேனி வாட –
கண்டவர்கள் கண் குளிரும்படி இருக்கும் உன்னுடைய ஸ்யாமளமான திரு மேனி யானது –
காட்டு அழல் பொறாமையாலே-வெக்கை தட்டின பூ போலே வாடும்படியாக –

பானையில் பாலைப் பருகி –
கறந்த பானை யோடு இருக்கிற பச்சைப் பாலை -அந்த
பாத்ரத்தில் இருக்க செய்தே பருகி

பற்றாதார் எல்லாம் சிரிப்ப –
உன்னை உகவாதார் எல்லாரும் -எங்கள் வீட்டில் கை பானையில்
பாலை குடித்துப் போந்தான் -என்று சிரிக்கும்படியாக

தேனில் இனிய பிரானே –
தேனிலும் காட்டிலும் இனியனான உபகாரகன் ஆனவனே –

இத்தால் –
அனுபவிப்பாருக்கு ஒருகாலும் திருப்தி பிறவாதே மேன்மேல் என அனுபவிக்க
வேண்டும்படி இருப்பானாய் இருக்கிற தன்னை
உபகரிப்பானும் தானேயாய் இருக்கும் அவன் என்கை –

செண்பகப் பூ சூட்ட வாராய் –
கால புஷ்பமான செண்பகம் ஆனது செவ்வி குன்றாமல் சாத்த வாராய் –

தேனில் இனிய பிரானே -பற்றாதார் எல்லாம் சிரிப்ப -பானையில் பாலைப் பருகி
உன் கரிய திருமேனி வாட -கானகம் எல்லாம் திரிந்து -ஆநிரை மேய்க்க நீ போதி
அரு மருந்து ஆவது அறியாய் -செண்பக பூ சூட்ட வாராய் -என்று அந்வயம்–

——————————————

கீழே ப்ராத கால பூ
இங்கு சாயங்கால பூ
மல்லிகையில் பல வகை உண்டே
குண்டு மல்லி
பூ இருந்த வல்லி –

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2 7-2 –

பதவுரை

கண்கள்–கண்களானவை
உன்னை கண்டால்–உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள்–கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை
கண்டால்–பார்த்தால் (அதை)
ஒக்கும்–ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய்–வடிவை யுடையவனே!
உலகு ஏழும்–ஏழுலகங்களும்
உண்டாக–ஸத்தை பெறும்படி
வந்து பிறந்தாய்–திருவவதரித்தவனே!
திரு உடையாள்–(உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–நாயகனே!
திரு அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
மணம்–வாஸனை
மருவி கமழ்கின்ற–நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப் பூ–மல்லிகைப் பூவை
சூட்ட வாராய்-.

கரு இத்யாதி-
கண்கள் -உன்னைக் கண்டால் -கரு உடை மேகங்கள் கண்டால் ஒக்கும் உரு உடையாய்
கண்கள் ஆனவை உன்னைப் பார்த்தால் -நீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் போலே
குளிரும்படியான வடிவை உடையவனே –

அன்றிக்கே –
நீர் கொண்டு எழுந்த காள மேகங்களை கண்டால் உன்னைக் கண்டால் போலே இருக்கும் –

கண்கள் உருவு உடையாய் –
(திரு மேனி )அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின்
அழகை உடையவன் என்னவுமாம்

உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் –
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் –
உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
(நஷ்டம் ப்ராக் –பிராட்டி கடாக்ஷ அம்ருதம் பெற்று சத்தை பெற்றதே ஸமஸ்த லோகங்களும் –
அதே போல் இங்கும் )

திரு உடையாள் மணவாளா –
கஸ்ரீய ஸ்ரீ –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே

திருவரங்கத்தே கிடந்தாய் –
அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி
ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே

மருவி இத்யாதி –
பரிமளமானது நீங்காமல் நின்று கமழா நிற்கிற மல்லிகை பூ சூட்ட வாராய்

—————————————————

கீழே கோயில் –
இதில் திருவேங்கடம்
மந்தி பாய் -திருவேங்கடம் சொல்லி பின்பு திருவரங்கம்

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –

பதவுரை

மச்சொடு மாளிகை ஏறி–நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய்
மாதர்கள் தம் இடம் புக்கு–பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு–(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை–பட்டாடைகளையும்
கிழித்து–கிழித்து விட்டு
காம்பு துகில் அவை–(மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும்
கீறி–கிழித்துப் போட்டு
(இப்படியே)
நிச்சலும்–ப்ரதி நித்யம்
தீமைகள்–துஷ்ட சேஷ்டைகளை
செய்வாய்–செய்பவனே!
நீள் திருவேங்கடத்து–உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய்–ஸ்வாமியே!
பச்சை–பசு நிறமுள்ள
தமனகத்தோடு–மருக் கொழுந்தையும்
பாதிரிப் பூ–பாதிரிப் பூவையும்
சூட்ட வாராய்-.

மச்சு இத்யாதி –
மச்சு -நடு நிலம்
மாளிகை -மேல் நிலம்
மச்சொடு கூட மாளிகையில் சென்று ஏறி –

மாதர்கள் தம்மிடம் புக்கு –
பெண்கள் இருக்கிற இடங்களிலே புக்கு

கச்சோடு பட்டை கிழித்து –
அவர்கள் முலைக் கச்சோடே
அதற்கு மேலீடான பட்டுக்களையும் கிழித்து

காம்பு துகில் அவை கீறி –
பணிப் புடவைகள் ஆனவற்றையும் கிழித்து
காம்பு துகில் -விளிம்பில் பணி உடன் சேர்ந்த புடவை
(பணி -கரை -எழுத்து போன்ற செயல்கள் )

நிச்சலும் தீமைகள் செய்வாய் –
நாள் தோறும் தீம்புகள் செய்யுமவனே –
வளர வளர தீம்பு மிகை ஏறிச் செல்லா நின்றது இறே

நீள் திருவேம்கடத்து எந்தாய் –
ஒக்கத்தை உடைத்தான வடக்கு திரு மலையிலே நிற்கிற என் ஸ்வாமி யானவனே
கானமும் வானரமும் வேடும் ஆனவற்றுக்கு முகம் கொடுத்து கொண்டு நிற்கிறது ஸ்வாமித்வ ப்ராப்தி யாலே இறே
(இங்கு நிற்பதாலேயே எனக்கு ஸ்வாமி
அங்கு நித்ய ஸூ ரிகளுக்கு )

பச்சை இத்யாதி –
பசுமை குன்றாத தமநகத்தோடே-
அதுக்கு பரபாகமான நிறத்தை உடைய பாதிரிப் பூவையும் சூட்டும்படி வர வேணும் –

————————————-

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –

பதவுரை

புருவம்–புருவங்களையும்
கரு குழல்–கரு நிறமான கூந்தலையும்
நெற்றி–(இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு
பொலிந்த–விளங்குகின்ற
முகில் கன்று போலே–மேகக் கன்று போலே
உருவம் அழகிய–வடிவமழகிய
நம்பி–சிறந்தோனே! (நீ)
தெருவின் கண் நின்று–தெருவிலே நின்று கொண்டு
இள ஆய்ச்சி மார்களை–இடைச் சிறுமிகளை
தீமை செய்யாதே–தீம்பு செய்யாமலிரு;
மருவும்–மருவையும்
தமனகமும்–தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)
சீர் மாலை–அழகிய மாலைகள்
மணம் கமழ்கின்ற–வாஸனை வீசுகின்றன;
இவை–இவற்றை
உகந்து–மகிழ்ச்சி கொண்டு
சூட்ட நீ வாராய்-.

தெருவின் கண் நின்று-நான் மச்சிலும் மாளிகையிலும் ஏறினேனோ-
தெருவிலே அன்றோ நின்றேன் -என்னை நீ இப்படி சொல்லுவான் என் என்ன
அவ் விடத்தில் தானோ நீ தீமை செய்யாது இருக்கிறது –

தெரு இடங்களில் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே –
அவ் விடத்தில் விளையாடா நிற்கிற பருவத்தால் இளைய இடைப் பெண்களை தீமை செய்யாதே –
சிற்றில் சிதைக்கை-
லீலா உபோகரணங்களை  பறிக்கை
அவர்களோடு கை பிணக்கு இடுகை முதலாக
இவன் செய்யும் விஷயங்கள் வாசா மகோசரம் ஆகையாலே –
தீமை என்று
ஒரு சொல்லாலே அடக்கி சொல்கிறார்

மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற –
மருவும் தமநகமும் கலந்து கட்டின அழகிய மாலைகள் ஆனவை பரிமளம் கமழா நின்றன
உன் திருக் குழலிலே சேரத் தக்க மணம் பாழே போகா நின்றது என்கை

புருவம் இத்யாதி –
உபமான ரஹீதமான புருவமும் –
இருண்டு இருந்துள்ள குழலும் –
இரண்டுக்கும் நடுவே விளங்கா நிற்கிற திரு நெற்றியும் ஆகிற –
இவ் அவயவ சோபையாலே உஜ்ஜ்வலமாய் இருப்பதொரு
முகில் ஈன்ற கன்று போலே வடிவால் அழகியனுமாய்
சர்வ பிரகார பரி பூர்ணனுமாய் இருக்கிறவனே –

உகந்து இத்யாதி –
உனக்கு சூட்டப் பெற்றோம் என்கிற உகப்புடன் மணம் கமழா நின்றுள்ள
இம் மாலைகளை நான் உனக்கு சூட்டும் படியாக வர வேண்டும்

————————————-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7 5- – –

பதவுரை

புள்ளினை–பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய்–வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு–யுத்தோந்முகமான
கரியின்–குவலயாபீடத்தின்
கொம்பு–கொம்பை
ஒசித்தாய்–பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு–வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை–(அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை–தலையையும்
கொண்டாய்–அறுத்தவனே!
நீ–(இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய்–வெண்ணெயை
அள்ளி விழுங்க–வாரி விழுங்க
அஞ்சாது–சிறிதும் பயப்படாமல்
அடியேன்–(‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன்–அடித்தேன்;
(அப் பிழையைப் பொறுத்து)
தெள்ளிய–தெளிவான
நீரில்–நீரிலே
எழுந்த–உண்டான
செங்கழுநீர்–செங்கழுநீரை
சூட்டவாராய்-.

புள்ளினை இத்யாதி –
கன்றுகள் மேய்க்கிற இடத்தில் –
பள்ளத்தில்  மேயும் பறவை உருக் கொண்டு உன்னை நலிவதாக
வந்த பகாசுரனை -வாயைக் கிழித்து பொகட்டவனே

பொரு இத்யாதி –
கல்யாணத்துக்கு -என்று அழைத்து விட்டு
வழியில் நலிவதாக கம்சன் நிறுத்தி வைத்ததாய் –
உன் மேல் யுத்தோன்முகமாய்  வந்த குவலயாபீடத்தின் கொம்பை
அநாயாசேன பிடுங்கி பொகட்டவனே

கள்ளம் இத்யாதி –
சீதைக்கு நேராவேன் -என்று
க்ரித்ரிம வேஷம் கொடு வந்த சூர்பணகை ஆகிற ராஷசி மூக்கோடு-
அவளுக்கு ரஷகனான ராவணன் தலையையும் அறுத்து பொகட்டவனே –
இவளுக்கு அவன் காவலன் ஆகையாவது –
இவளை ஸ்வரை சஞ்சாரம் பண்ணித் திரி -என்று விடுகை இறே

அன்றிக்கே-
பொதுவிலே காவலன் என்கையாலே
ராஷச ஜாதிக்காக ரஷகன் என்னவுமாம்

இத்தால்
பிரபல விரோதிகளை அநாயாசேநேப் போக்கி
உன்னை அனுபவிப்பார்க்கு உன்னை உபகரித்தவன் அன்றோ என்கை –

அள்ளி இத்யாதி –
இவன் வெண்ணெய் தானே அள்ளி விழுங்க வல்லவன் ஆவது எப்போதோ -என்று
பார்த்து இருந்த நான் –
நீ வெண்ணெயை அள்ளி விழுங்கவும் பெற்று வைத்து
உன் மார்த்வத்தை பார்த்து அஞ்சாமல் அடியேன் அடித்தேன்
யாவர் சிலரும் அனுதாபம் தலை எடுத்தால் –
அடியேன் -என்று இறே சொல்லுவது –
இவள் தான் அது தன்னை முன்னே நினையாதே அடிக்க வேண்டிற்றும்
இவன் மற்றுமோர் இடத்தில் இது செய்யுமாகில் வரும் பழிச் சொல்லுக்கு அஞ்சி இறே –

தெள்ளிய இத்யாதி –
ஆன பின்பு நான் முன்பு செய்த அத்தை பொறுத்து –
தெளிந்த நீரில் எழுந்தது ஆகையாலே –
நிறத்தாலும் பரிமளத்தாலும் விலஷணமாய் இருக்கிற
செங்கழு நீரை  செவ்வையிலே நான் சூட்டும்படி வாராய்

——————————————————-

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2 7-6 –

பதவுரை

நம்பி–சிறந்தோனே!
(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)
எருதுகளோடு–ஏழு ரிஷபங்களுடன்
பொருதி–போர் செய்யா நின்றாய்;
ஏதும்–எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண்–விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;
(தேகம் பிராணன் பேணாமல் -லோபம் வடமொழி சொல் )
கருதிய–(கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த
தீமைகள்–தீம்புகளை
செய்த–(நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை–அந்தக் கம்ஸனை
கால் கொடு–காலினால் (காலைக் கொண்டு)
பாய்ந்தாய்–பாய்ந்தவனே!
(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது)
தெருவின் கண்–தெருவிலே
தீமைகள் செய்து–தீமைகளைச் செய்து கொண்டு போய்
சிக்கென–வலிமையாக
மல்லர்களோடு–(சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற–போர் செய்து வந்த
பொன்னே–பொன் போலருமையானவனே!
புன்னைப் பூ சூட்ட வாராய்-.

உலோபாய் -ஆசை அற்று இரா நின்றாய்
சிக்கென -நிரந்தரமாக

எருதுகளோடு பொருதி —
நப்பின்னை பிராட்டியை லபிக்கையில் உண்டான ஆசையாலே -உன் திருமேனியின்
மார்த்வம் பாராமல் அசூரா விஷ்டமான எருதுகளோடு பொரா நின்றாய் –
காலாந்தரமாக இருக்க செய்தேயும் -தத் காலம் போலே பிரகாசிக்கையாலே
பொருதி -என்று வர்தமானமாக சொல்லுகிறது –

ஏதும் உலோபாய் காண் நம்பீ-
ஒன்றிலும் லோபம் அற்று இரா நின்றாய் காண்
அதாவது –
தேகத்தை பேணுதல் -பிராணனை பேணுதல் செய்யாது இருக்கை –

நம்பி –
நப்பின்னை அளவிலே வ்யாமோகத்தால் பூரணன் ஆனவனே

கருதிய தீமைகள் செய்து –
கஞ்சன் உன் திறத்தில் செய்யக் கருதின தீமைகள் எல்லாவற்றையும்
அவன் திறத்திலே நீ செய்து –

கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் –
கம்சனை திருவடிகளால் உதைத்தாய் –
அதாவது –
துங்கமஞ்ச வ்யவஸ்த்தித )ஸ்ரீ விஷ்ணு புராணம் ) -என்கிறபடியே
அவன் இருந்த உயர்ந்த மஞ்சச்தலத்திலே சென்று குதித்து –
கேசேஷ் வாக்ர்ஷ்ய விகளத் கிரீட மவநீதலே ச கம்சம் பாதயாமாச தச்யோபரி பபாதச (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
அபிஷேகத்தை பறித்து எறிந்து – மயிரைப் பிடித்து இழுத்து -மஞ்சச்தலத்தில் நின்றும் –
பூமியிலே விழத் தள்ளி -அவன் மேலே குதித்து இறே அவனைக் கொன்றது –

தெருவின் கண் தீமைகள் செய்து –
தெரு -வழி
அவனை நிரசிப்பதாக போகிற போது வழியிலே அவனுடைய ஈரம் கொல்லியான –
ரஜகனைக் கொன்று – இது வண்ணானுடைய பெயர் –
ஆயுத சாலையிலே புக்கு –
அவனுக்கு மறம் பிறக்கும்படி -வில் விழவுக்கு என்று அலங்கரித்து இருக்கிற வில்லை முறித்து –
அவனுக்கு அபிமத கஜமான குவலயாபீடத்தை கொன்று -செய்த இவை இறே –
தெருவின் கண் செய்த தீமைகள் ஆவன –

சிக்கென மல்லர்களோடு பொருது –
ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லர் ( 4-2-)-என்கிறபடியே
கம்சன் ஏவினது செய்ய வேணும் என்று மல் பொருகையை ஏன்று கொண்டு
வந்த சாணூர முஷ்டிகர் ஆகிற மல்லர்களோடு பிரதிக்ஜா பூர்வகமாக உறைக்க

பொருது அழித்து வருகின்ற பொன்னே –
இப்படி விரோதி வர்க்கத்தை நிரசித்து வருகிற போதை செருக்காலே பொன் போலே
உஜ்ஜ்வலமான வடிவை உடையவனே

முந்துற கம்ச நிரசனத்தை சொல்லி -அதுக்கு பூர்வத்தில் உள்ளவற்றை பின்பு
சொல்வான் என் என்னில் –
கம்ச நிரசனமே பிரதானமாய் -இவை அதுக்கு உறுப்பாக -போகிற வழியில் செய்த
வியாபாரங்கள் ஆகையாலே அதுக்கு முன்னாக சொன்ன இதில் விரோதம் இல்லை

புன்னை இத்யாதி –
உனக்கு பாங்கான-உகப்பான – புன்னை பூ சூட்டும்படியாக நீ வாராய்
பொன்னே புன்னை பூ சூட்ட வாராய் -என்கையாலே
பொன்னோடு பொன்னை சேர்ப்பாரைப் போலே பொன் போலே இருக்கிற
திரு மேனியில் -பொன் ஏய்ந்த தாதை உடைய புன்னை பூவை சூட்டப் பார்க்கிறாள் காணும்-

—————————————–

குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2 7-7-

பதவுரை

குடங்கள்–பல குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர்வெறிந்து
(இப்படி)
கூத்து ஆட–குடக் கூத்தை யாடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுடைய
எம் கோவே–எம்முடைய தலைவனே
மடம் கொள்–மடப்பமென்ற குணத்தை யுடைய
மதி முகத்தாரை–சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை
மால் செய்ய வல்ல–மயக்க வல்ல
என் மைந்தா–எனது புத்திரனே!
முன்–நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன் நெஞ்சை–ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு–(திரு வுகிரால் ) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக-இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய்–பிளந்தவனே!
குடந்தை–திருக் குடந்தையில்
கிடந்த–பள்ளி கொள்ளுகிற
எம் கோவே–எமது தலைவனே!
குருக்கத்திப் பூ சூட்டவாராய்.

குடங்கள் இத்யாதி-
பிராமணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமா போலே
இடையர் ஐஸ்வர்யம் விஞ்சினால் செருக்குக்கு போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து-
குடக்கூத்தாவது –
உபய விபூத் ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இவனுக்கு இது –

இடையர்க்கு ஐஸ்வர்யம் தானாவது -கோ சம்ர்த்தி இறே
அந்த சம்ர்த்தி குறை அற உள்ளது தனக்கே ஆகையாலே –
அத்தால் வந்த செருக்குக்கு போக்கு விட்டு குடக்கூத்து ஆடினபடி சொல்லுகிறது –

தலையிலே அடுக்கு குடம் இருக்க –
இரண்டு தோள்களிலும் குடங்கள் இருக்க –
இரண்டு கைகளிலும் குடங்களை ஏந்தி ஆகாசத்தில் எறிந்து ஆடுவது ஒரு கூத்து ஆய்த்து –
குடக் கூத்தாவது –
அத்தை சொல்லுகிறது -குடங்கள் எடுதேற விட்டு கூத்தாட வல்ல -என்று –

குடம் என்னாதே -குடங்கள் -என்கையாலே
பல குடங்களையும் கொண்டு ஆடினதை சொல்லுகிறது –

எடுததேற  விட்டு என்கையாலே –
அவற்றை திருக் கையிலே எடுத்து ஆகாசத்திலே உயர எறிவது –
ஏற்பது ஆனமையை சொல்லுகிறது

கூத்தாட வல்ல -என்கையாலே –
மற்றும் இக்கூத்தாடுவார்  உண்டே ஆகிலும் –
இவன் ஆடின கட்டளை ஒருவருக்கும் ஆடப் போகாது என்னும் இடம் சொல்லுகிறது –
இவன் ஆடின வைசித்ரி -பரத சாஸ்திரத்திலும் காண அரிதாய் இருக்கை –

எம் கோவே –
எங்களுக்கு நாயகன் ஆனவனே

மடம் கொள் இத்யாதி –
இப்படி இருக்கிற சேஷ்டிதத்தாலே மடப்பத்தை உடையராய்
பூர்ண சந்த்ரனைப் போலே குளிர்ந்து ஒளிவிடா நின்ற முகத்தை உடையராய் இருக்கிற
ஸ்திரீகளை பிச்சேற்ற வல்ல என்னுடைய பிள்ளை யானவனே

இடந்திட்டு   இத்யாதி –  –
நெஞ்சு என்று மார்வை சொல்லுகிறது
தேவர்கள் கொடுத்த வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற ஹிரண்யன் உடைய மார்வை –
கொலை கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளன் -என்கிறபடியே
கூரிய திரு உகிர்களாலே உறைக்க ஊன்றி இடந்து இரண்டு கூறாம்படியாக முற்காலத்திலே கிழித்துப் பொகட்டவனே

இத்தால் –
சிறுக்கனுடைய ஆபத்திலே வந்து உதவினான் ஆகையாலே
தளர்ந்தாரை நோக்குமவன் என்னும் இடம் சொல்லுகிறது –

குடந்தை இத்யாதி –
அவதாரங்களுக்கு பிற்பாடானவர்களுக்கும் உதவுகைக்காக திருக் குடந்தையில்
கண் வளர்ந்து அருளின என் ஆயன் ஆனவனே

குருக்கத்தி இத்யாதி –
உனக்கு என்று தேடி வைத்த குருக்கத்தி பூவை உன் திருக் குழலிலே சூட்டும்படியாக வாராய் –

———————————————

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7- 8-

பதவுரை

சீ மாலிகன் அவனோடு–மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும்–ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய்–வல்லவனாய்
அவனை–அந்த மாலிகனை
நீ-நீ
சாம் ஆறு எண்ணி–செத்து போம் வழியையும் ஆலோசித்து
சக்கரத்தால்–சக்ராயுதத்தினால்
தலை கொண்டாய்–தலையையுமறுத்தாய்;
ஆம் ஆறு–நடத்த வேண்டியவைகளை
அறியும்–அறிய வல்ல
பிரானே–ப்ரபுவே!
அணி–அழகிய
அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
என்னை-எனக்கு

சீமாலிகன் எனும் இடத்தில் சி -எனுமது ஒவ்பசாரிக சொல்
ஸ்ரீ என்னுமது சி என்றாய் கண்ணனோடு நட்பு கொண்டதால் வந்த சீர்மையை சொலுகிறது என்பர்

சீமாலிகன் இத்யாதி –
மாலிகன் என்பான் ஒருத்தன் கிருஷ்ணனுக்கு சகாவாய்-பல ஆயுதங்களும்
பயிற்றுவிக்க கிருஷ்ணன் பக்கலிலே கற்று -இந்த ஆசக்தி பலத்தாலே ஒருவருக்கும் அஞ்சாமல்
லோகத்தில் உள்ள சாதுக்களை நலிந்து -திரியப் புக்கவாறே –
சகாவாய் போந்த இவனை நிரசிக்க ஒண்ணாது -என்று திரு உள்ளத்தில் அத்யந்த வ்யாகுலம்
நடந்து போகிற காலத்திலே-அவனை ஒரு போது  கருக நியமித்தவாறே –

அவன் தான் நறுகு முறுகு என்றால் போலே சில பிதற்றி -எல்லா ஆயுதங்களையும் பயிற்று வித்தீர்
ஆகிலும் என்னை ஆழி பயிற்று வித்தீர் இலீரே என்ன
இது நமக்கு அசாதாரணம் -உனக்கு கர்த்தவ்யம் அன்று காண் -என்ன –
எனக்கு கர்த்தவ்யம் அன்றிலே இருப்பது ஒரு ஆயுதம் உண்டோ -என்று
அவன் நிர்பந்தங்களை பண்ணினவாறே -இவனுடைய துஸ் ஸ்பாவங்கள் அடியாக
இவனை நிரசிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி தன்னுடைய சீர்மை குன்றாதபடி
ஆயுதம் பயிற்றுவிக்கிறானாக திரு ஆழியை ஒரு விரலாலே சுழற்றி ஆகாசத்தில் எழ வீசி
சுழன்று வருகிற திரு ஆழியை மீண்டும் திருக் கையிலே அநாயாசேன ஏற்க

அவன் இத்தை கண்டு -எனக்கு இது அரிதோ -என்று கை நீட்ட
உனக்கு இது அரிது காண் -என்ன செய்தேயும் -அவன் வாங்கி சுழற்றி மேலே விட்டு
மீண்டு சுழன்று வருகிற போது பிடிப்பானாக நினைத்து -தன் கழுத்தை அடுக்க தன் விரலை
எடுத்து கொடு நிற்க -அது -வட்ட வாய் நுதி நேமி ஆகையாலே -சுழல வர இடம் போராதது கொண்டு
அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து பொகட்டது என்று இதிஹாசாதிகளிலே
சொல்லப்பட்டதொரு விருத்தாந்தத்தை இப் பாட்டில் பூர்வ அர்த்தத்தால் ஸங்க்ரஹேன சொல்லுகிறது  –

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் –
சி -ஒவ்பசாரிகம் -மாலிகன் என்று பேரை உடையனாய் அசூர பிரக்ருதியாய் இருக்கிறவனோடே
உன் குணத்தாலே கலந்து தோழமை கொளவும் வல்லவனே

சாமாறு அவனை நீ எண்ணி –
சாது பீடாதிகளை பண்ணப் புக்க வாறே -இனி அவனை அழிய செய்யாவிடில் நாடு குடி கிடவாது –
என்று அவன் சாகத் தக்க வழிகளை நீயே சிந்தித்து
அதாவது –
தோழனை கொன்றான் -என்று தனக்கு அபவாதம் வராதபடியாகவும்
தன்னாலே தான் முடிந்தான் -என்னும்படியாகவும் தக்க வழியை சிந்திக்கை –

அவனை -என்கிற இடத்தில் -ஐகாரம் அவ்யயம்

சக்கரத்தால் தலை கொண்டாய் –
நமக்கு அசாதாரணமான ஆயுதம் -உனக்கு இது ஆகாது காண் -என்ன செய்தேயும்
அவன் நிர்பந்தம் பண்ணினதுக்காக அவனை ஆழி பயிற்றுவிக்கிறானாக
உபாய ரூபேண திரு ஆழியாலே சிர சேதம் பண்ணிப் பொகட்டவனே

ஆமாறு அறியும் பிரானே –
சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்
மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே

அணி அரங்கத்தே கிடந்தாய்
இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் –
நல்லவர்கள் வாழும் நளிர் அரங்கம் (நாச்சியார் )-என்கிறபடியே
பரிவர்  உள்ள தேசத்திலே பள்ளி கொள்ளுகையலே உன் சௌகுமார்யாதிகளை நினைத்து –
உனக்கு என் வருகிறதோ – என்று வயிறு எரியா நிற்கும் என் க்லேசத்தை போக்கினவனே
ஏமாற்றமாவது -துக்கம்

இருவாட்சி பூ சூட்ட வாராய் –
கால புஷ்பமான இது செவ்வி அழிவதற்கு முன்னே
உன் திருக் குழலிலே நான் சூட்டும்படி வாராய் –

——————————————-

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்–பரத்வமும்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்-ஸுலப்யமும் –
தூ மலராள் மணவாளா-இவற்றுக்கு நிதானமும் –
உண்டிட்டு உலகினை ஏழும்-ரக்ஷகத்வமும் –
ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்-அகடிகடநா சாமர்த்தியமும் –
ஐந்தும் இதில் -பஞ்சாம்ருதம் –

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2 7-9 – –

பதவுரை

அத்தாணியுள்–அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள்–தேவர்கள்
சூழ–சூழ்ந்திருக்க
அங்கு–அவர்கள் நடுவில்
அண்டத்து–பரம பதத்தில்
இருத்தாய்–வீற்றிருப்பவனே!
தொண்டர்கள்–அடியார்களுடைய
நெஞ்சில்–ஹ்ருதயத்தில்
உறைவாய்–வஸிப்பவனே!
தூ மலரான்–பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–கொழுநனே!
(பிரளய காலத்தில்)
உலகினை ஏழும்–ஏழு உலகங்களையும்
உண்டிட்டு–உண்டு விட்டு
ஓர் ஆல் இலையில்–ஒராவிலையில்
துயில் கொண்டாய்–யோக நித்திரையைக் கொண்டவனே!
நான்–நான்
உன்னை கண்டு–(நீ பூச் குடியதைப்) பார்த்து
உகக்க–மகிழும்படி
கருமுகைப் பூ–இருவாட்சிப் பூவை சூட்டவாராய்

அண்டத்துள் -ஸ்ரீ வைகுண்டத்தில்
உள் அங்கு இருந்தாய் -உள் இங்கு அந்வயித்து கிடக்கிறது
அத்தாணி -நித்ய சந்நிநிஹதர்களான

அண்டத்து இத்யாதி –
இறந்தால் தங்குமூர் அண்டமே -என்றும்
அண்டம் போயாட்சி அவர்க்கு -என்றும்
ஸ்ரீ பரமபதத்தை -அண்டம் -சொல்லக்  கடவது இறே –
(அண்டம் என்றால் ஸ்ரீ வைகுண்டம் காட்டுமோ -என்பதற்கு இந்த பிரமாணங்கள் )

அண்டத்துள் -அத்தாணி -அமரர்கள் சூழ -அங்கு இருந்தாய் –
ஸ்ரீ பரம பதத்தின் உள்ளே அருகு இருப்பை உடையரான நித்ய ஸூரிகள் சூழ சேவிக்க –
அவர்கள் நடுவே –
ஏழுலகம் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அருளினவனே –
அத்தாணி-அருகு இருப்பு

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் –
இந்த விபூதியில் முமுஷுக்களாய்-உன் பக்கல் பிரேம யுக்தர்களாய் இருக்கும்
அவர்களுடைய மனசினுள்ளே -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பிலும் காட்டிலும்
உகந்து நித்யவாசம் பண்ணுமவனே –

தூ மலராள் மணவாளா –
தூயதான தாமரைப் பூவை பிறந்தகமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டி யார்க்கு நாயகன் ஆனவனே
ஸ்ரியாசார்த்தம் -என்கிறபடியே ஸ்ரீ பரம பதத்திலும் –
அரவிந்த பாவையும் தானும் – என்கிறபடியே தொண்டர்களுடைய ஹ்ருதயத்திலும்
ஸ்ரீ பிராட்டியும் தானும் கூட இறே எழுந்து அருளி இருப்பது –

உண்டிட்டு இத்யாதி –
பிரளயத்தில் அழியாதபடி சகல லோகங்களையும் திரு வயிற்றில் வைத்து ஒரு பவனான ஆல் இலையிலே
கண் வளர்ந்து அருளினவனே
இந்த ஆபத் சகத்வதுக்கும் ஹேதுகள் சொன்ன ஸ்ரிய பதித்வம் இறே

யஸ்யா வீஷ்யமுகம் ததிந்கித பராதீனோ விதத்தே கிலம்-(ஸ்ரீ ஸ்தவம் ) -என்கிறபடியே
சகலமும் அவளுடைய இங்கித பராதீனன் ஆயிறே செய்வது

கண்டு இத்யாதி –
மாலையும் மயிர் முடியுமாய் இருக்கிற உன்னைக் கண்டு
நான் உகக்கும்படி நீ உகக்கும் கருமுகை பூ சூட்ட வாராய் –

——————————————

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-

பதவுரை

செண்பகம்–செண்பகப் பூவும்
மல்லிகையோடு–மல்லிகைப் பூவும்
செங்கழுநீர்–செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி–இருவாட்சிப் பூவும்
(ஆகிய)
எண் பகர்–(இன்ன தின்னதென்று) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும்–மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன்–கொண்டு வந்தேன்;
இன்று–இப்போது
இவை சூட்ட–இப் பூக்களைச் சூட்டும்படி
வா–வருவாயாக,
என்று–என்று
பகர் மண் கொண்டானை–பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
(தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் )
ஆய்ச்சி–யசோதை
மகிழ்ந்து–மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த–சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர்–ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன-அருளிச் செய்த
இம் மாலை–இந்தச் சொல் மாலையும்
பத்தே–ஒரு பத்தே!

என்பகர் -இன்னது இன்னது என்று எண்ணி சொல்லப்பட்ட
பகர் மண் கொண்டானை -தன்னது என்று சாஸ்திர சித்தமான பூமியை மகா பலி இடத்தில்
நீரேற்று அளந்து கொண்டவனை குறித்து
பண் -ராகம் –
பத்தே -ஒரு பத்தே -என்று இப் பத்தின் மேன்மையை
புகழ்ந்து -இதனுடைய ரச அனுபவம் தானே இதுக்கு பலம் என்று தோற்ற அருளி செய்கிறார்

செண்பக மல்லிகையோடு இத்யாதி –
ப்ராதகால புஷ்பிதமான செண்பகமும்
சாயங்கால புஷ்பமான மல்லிகையும் -ஆகிய இவற்றோடே
ப்ராத கால புஷ்பங்களான செங்கழுநீர் இருவாட்சி முதலாக எண்ணி சொல்லப்பட்ட பூக்கள் எல்லாம் கொண்டு வந்தேன் –
(காலைப் பூ மாலைப்பூ –தின பேதேந அவ்வவ கால பூக்களைக் கொண்டு வந்தவற்றை அருளிச் செய்கிறார் )

அன்றிக்கே
எண்பகர் பூ என்றது -இன்னது இன்னது என்றி பரிகணிக்க படுமதாய் -சாஸ்திர சித்தமுமாகிற புஷ்பங்கள் என்னவுமாம் –
கொணர்ந்தேன் என்றது கொண்டு வந்தேன் -என்றபடி –

இன்று இவை சூட்ட வா என்று –
இப்போது இவற்றை உன் திருக் குழலிலே சூட்ட வர வேணும் என்று

மண் பகர் கொண்டானை
பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
பகர்தல்-மூவடிதா -என்ற இவனுடைய உக்தியாதல்
தந்தேன் என்ற மகா பலி யுக்தியாதல்
சாஸ்திர சித்தமான பூமியை எல்லாம் கொண்டவனை -என்னுதல்

ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த
இப்படி இருக்கிறவனைக் குறித்து இன்று இவை சூட்ட வா என்று யசோதை பிராட்டி உகந்து சொன்ன பிரகாரங்களை
செய்த என்றது செய்தவற்றை என்றபடி

பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன இம்மாலை பத்தே
யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த

இம் மாலையும் ஒரு பத்தே -என்று
இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது –

இதுக்கு ஒரு பலம் சொல்லாதே இத்தை ஸ்லாகித்து விட்டது இதனுடைய ரச அனுபவம் தானே
இதுக்கு பலம் என்று தோற்றுகைக்காக –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி-2-6–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

July 27, 2012

(கோல் ஆஜ்ஜா
எல்லாம்
தரை குண்ய வேதா
அபிமதம் ஆனதையே செய்ய வேண்டுமே
நிறைய விதித்தாலும் காம்ய கர்மங்கள் கூடாதே –
முக்குணத்தில் உள்ளாருக்கு சொல்வதை சாத்விகனாய் உள்ளவன் செய்யக் கூடாதே –
ரஜோ குண சமராய் -காக்காய் -ஸ்வாபதேசத்தில் விரிவாக உண்டே )

அவதாரிகை
யசோதை பிராட்டி அவனை திருக் குழல் வாருவதாக உத்யோகித்து அவன் –
ஒட்டேன் -என்று அழுதும் இறங்கி ஓடாமைக்காக –
அவனுடைய பால்யத்துக்கு அனுகுணமாம் படி -அக்காக்காய் குழல் வார வா என்று பலகாலும்
அவன் செவி கேட்க சொல்லி இருந்து
அவனை உகப்பித்து குழல் வாரினபடியை தாம் அனுபவிக்கையில் ஆசை உடையராய் –
பாவன பிரகர்ஷத்தாலே அவளான நிலையை அடைந்து –
தத் காலம் போலே அவனைக் குறித்து பாசுரங்களை பேசி அனுபவித்தாராய் நின்றார் கீழ் –

திருக் குழல் வாரின அநந்தரம்
பூ சூட்டுவதாக தேடுகிற அளவிலே
ஜாதி உசிதமாக கன்று மேய்க்கப் போகிற பிள்ளைகளோடு தானும் போவானாக உத்யோகித்து –
கன்றுகள் மேய்த்து மறிக்கிற கோலைத் தா வென்ன

அவள் இசைந்து கோலைக் கொடாமல் –
இவனை ஒப்பித்து காண வேணும் -என்னும் கருத்தாலே
கோலை வாங்கித் தருகிறேன் என்று இவனை அழுகை மருட்டி –
அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று
பலகாலும் சொன்ன பிரகாரத்தை
தத் பாவ யுக்தராய் கொண்டு
அவளைப் போலே தாமும் அவனைக் குறித்து பேசி
அந்த ரசத்தை அனுபவிக்கிறார் – இத் திரு மொழியில் –

———————————————

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையை பிணைத்து பிறகிட்டு
காலிப் பின் போவாற் கோல் கொண்டு வா
கடல் நிற வண்ணற் கோர் கோல் கொண்டு வா 2-6-1-

பதவுரை

(அக்காக்காய்)–காக்கையே!–ஏழாம் பாட்டிலும் இறுதியிலும் உள்ள விளிச் சொல்லை
வேலிகோல்–வேலிக் கால்களிலுள்ள கோலை
வெட்டி–(வாளால்) வெட்டி (அதை)
விளையாடு வில்–லீலோபகரணமான வில்லாகச் செய்து
ஏற்றி–(அதிலே) நாணேற்றியும்,
கொழுந்து தாலியை––பனை மர கொழுந்தால் செய்த -சிறந்த ஆமைத் தாலியை
தடங்கழுத்தில்–(தனது) பெரிய கழுத்திலே
பூண்டு–அணிந்து கொண்டும்
பீலித் தழையை–மயில் தோகைகளை
பிணைத்து–ஒன்று சேர்த்து
பிறகு இட்டு–பின் புறத்திலே கட்டிக் கொண்டும்
காலி பின்–பசுக் கூட்டங்களின் பின்னே
போவாற்கு–போகி்ன்ற இவனுக்கு
ஓர் கோல்–ஒரு கோலை கொண்டு வா –
கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –

தாலிக் கொழுந்தை –பனை யினுடைய வெண் குருத்தை பீலி தழையை  பிணைத்து
மயிலினுடைய தோகைகளை சேர்த்து பிறகு  இட்டு -திரு முதுகிலே தொங்க விட்டு
காலி பின் -கன்றுகள் பின்னே ஓர் கோல் கொண்டு வா -என்ற இதுவும்
அக்காக்காய்  விளித்து சொல்லும் பாசுரம் என்னுமது
ஏழாம் பாட்டாலும் கடைப் பாட்டாலும் விளங்கும் –

இவ்விடத்தில் கோலாவது
கன்றுகள் மேய்த்து மறிக்கிற கோல் -அதை கொண்டு வா என்ற படி
கடல் வண்ணற்கு -அண்ணற்கு என்று பிரித்தால் ஸ்வாமிக்கு என்று பொருள்
வேலிக் கோல் வெட்டி -வேலிக் கால்களிலே வளர்ந்து நிற்கும் கோல்களை வெட்டி

அன்றிக்கே
வேலி என்று வளைவாய் -வளைந்த கோலை வெட்டி என்னவுமாம்
விளையாடு வில் ஏற்றி -லீலார்த்தமாக வில்லாக பண்ணி
நாண் ஏறிட்டு தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு –
ஜாத் உசிதம் ஆகையாலே ஸ்ரேஷ்டமாய் இருந்துள்ள
ஆமைத் தாலியை தடவிதான கழுத்திலே பூண்டு

அன்றிக்கே
தாலி என்றது -தாளி என்றபடியாய்-
கொழுந்து என்றது –
அதில் வெண் குருத்தாய் அது வெள்ளி போலே இருக்கையாலே –
அத்தை ஆபரணமாக தெற்றிப் பூண்பர்கள் இறே இடையர் -அத்தை சொல்லிற்றாகவுமாம்

பீலி  இத்யாதி –
பிலிப் பிச்சங்களை சேர்த்து திரு முதுகிலே நாற்றி -(தொங்க விட்டு )

காலி இத்யாதி –
கன்று -காலியின் பின்னே அவற்றை மேய்க்கைகாக போமவனுக்கு

ஒரு கோல் கொண்டு வா

கடல் இத்யாதி –
கடலோடு ஒத்த நிறத்தை உடைய வடிவை உடையவனுக்கு

———————————————

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக் கைக்கு தக்க நல்
அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா
அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா -2 6-2 –

பதவுரை

கொங்கு–வாஸனை பொருந்திய
குடந்தையும்–திருக் குடந்தையிலும்
கோட்டி ஊரும்–திருக் கோட்டியூரிலும்
பேரும்–திருப்பேர் நகரிலும்
எங்கும்–மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்
திரிந்து–ஸஞ்சரித்து
விளையாடும்–விளையாடுகின்ற
என் மகன்–என் பிள்ளையினுடைய
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு–பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு
தக்க–தகுந்ததான
நல் அங்கம் உடையது–நல்ல வடிவை யுடையதாகிய
ஓர் கோல் கொண்டு வா –
அரக்கு வழித்தது–(நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய
ஓர் கோல் கொண்டுவா –

கொங்கும் குடந்தையும் —
பரிமளத்தை உடைத்தான திருக் குடந்தையிலும்
கொங்குக் குடந்தை என்கிற வல் ஒற்று மெல் ஒற்றை கிடக்கிறது
சோலை களிலும் ஓடைகளிலும் உண்டான பரிமளமும் –
உள்ளுக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருமேனியின் பரிமளமுமாய்க் கொண்டு 
ஊர் அடங்கலும் பரிமளமுமாய் கிடக்கும் இத்தனை

கோட்டியூரும் -திருக் கோட்டியூரிலும்
பேரும் -திருப் பேரிலும்

எங்கும் –
அநுக்தமான திருப் பதிகளிலும்

திரிந்து விளையாடும் என் மகன் –
வ்யாபரித்து விளையாடா நிற்கும் என் பிள்ளை உடைய

சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு தக்க –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை  பிடிக்கும் பெரிய திருக் கைக்கு தகுதியான

நல் அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா –
நல்ல வடிவை உடைத்தான தொரு கோல் கொண்டு வா

அரக்கு இத்யாதி –
நிறம் உடைத்தாம் படி அரக்கு வழித்ததொரு கோல் கொண்டு வா

—————————————————–

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-

பதவுரை

கறுத்திட்டு–கோபித்து
எதிர் நின்ற–தன்னை எதிரிட்டு நின்ற
கஞ்சனை–கம்ஸனை
கொன்றான்–கொன்றவனும்
எதிர் வந்த–(தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த
புள்ளின்–பகாஸுரனுடைய
வாய்–வாயை
பொறுத்திட்டு–(முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து
கீண்டான்–(பின்பு) கிழித்தவனும்
நெறித்த–நெறித்திரா நின்றுள்ள
குழல்கள்–கூந்தல்கள்
நீங்க–ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக
முன் ஓடி–கன்றுகளுக்கு முன்னே போய்
சிறு கன்று–இளங்கன்றுகளை
மேய்ப்பாற்கு–மேய்ப்பவனுமாகிய இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா –
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –

நீங்க –
ஓடுகிற வேகத்தாலே இரண்டு அருகும் நீங்கும் படியாக

கறுப்பு இத்யாதி –
கறுமை -சீற்றம் -தன் மேல் குரோதத்தை உடையனாய் கொண்டு
எதிரிட்டு நின்ற கம்சனை கொன்றவன்

பொறுத்து இத்யாதி –
வருகிற போதை வேகத்தை பொறுத்து நின்று தன்னை நலிவதாக எதிரே  வந்த
பகாசுரனுடைய வாயை கிழித்தவன்

நெறித்த இத்யாதி –
நெறித்து முன்னே நாலா நின்ற குழல்கள் ஆனவை ஓடுகிற விசையாலே
இரண்டு அருகும் நீங்கும் படியாக கன்றுகளுக்கு முன்னே ஓடி

சிறுக் கன்று இத்யாதி –
இளம் கன்றுகளை மேய்க்கிறவனுக்கு ஓர் கோல் கொண்டு வா

தேவ பிரானுக்கு –
ஆசுர ப்ரக்ருதிகளான கம்சாதிகளை அழிய செய்கையாலே தேவர்களுக்கு உபகாரகன் ஆனவனுக்கு

———————————————-

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கொள் கொண்டு வா
கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2 6-4 –

பதவுரை

ஒன்றே–(‘பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை
உரைப்பான்–சொல்லுபவனும்
(மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற)
ஒரு சொல்லே–ஒரு சொல்லையே
சொல்லுவான்–சொல்லுபவனும்
(ஆஸ்ரிதரை கைவிடேன் நத்யஜேயம் ஒன்றையே சொல்லும் அவன்
அபயம் சர்வ பூதாப்யாம் ததாமி )
துன்று முடியான்–(நவ ரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான
துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில்
சென்று–தூது போய்
அங்கு–அவ்விடத்தில்
பாரதம்–பாரத யுத்தத்தை
கையெறிந்தானுக்கு–உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா –
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –

துன்று -நவ ரத்னங்கள் அழுத்தின –
ஓன்று இத்யாதி –
பாண்டவர்களும் நாங்களும் கூடி ஜீவிப்பதில்லை -என்னும் ஓர் அர்த்தமே சொல்லுவானாய் –
கூடி ஜீவிப்பது இல்லையாகிலும் அவர்களுக்கும் ஏதேனும் சில கொடுக்க வேண்டாவோ –என்று மத்தியஸ்தர் சொன்னால் —
அவர்களுக்கு ஒரு கோற்குத்து நிலமும் கொடுப்பது இல்லை -என்னும்
ஒரு வசனமே சொல்லுவானாய் -இருக்கும் அவன் என்கை-

அன்றிக்கே –
ஆஸ்ரித விஷயத்தில் -மித்ர பாவேன சம்ப்ராப்தம் -இத்யாதிபடியே
ஒரு படியாலும் அவர்களை கை விடாமை ஆகிற ஒரு அர்த்தமே சொல்லுபவனாய் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -இத்யாதிபடியே –
அவர்களுடைய ரஷணத்துக்கு உடலான வசனம் ஒன்றுமே சொல்லா நிற்ப்பானாய் இருக்கும்
அவன் என்று பகவத் விசேஷணம் ஆகவுமாம்-

துன்று முடியான் –
நவ ரத்னங்களாலே நெருங்கின அபிஷேகத்தை உடையவன் –
அபிஷிக்த ஷத்ரியாலே நெருங்கி சேவிக்கப் படுமவன் என்னுதல்-

துரியோதனன் பக்கல்-
ஏவம் பூதனான துரியோதனன் பக்கலிலே-

சென்று அங்கு பாரதம் கை எறிந்தானுக்கு –
இரண்டு தலையும் பொருந்த விடலாமோ என்று தூதனாய் சென்று –
பொருத்தப் பார்த்த இடத்திலும் பொருந்தாமையாலும் -யுத்தத்தில் பொருந்துகையாலும்-
ஆனால் அது தன்னை செய்க என்று பாரத யுத்தத்துக்கு அங்கே கை தட்டிப் போந்தவனுக்கு  -என்னுதல்-

அன்றிக்கே –
ஆனால் அது தன்னை செய்வது என்று இசைந்து போந்து –
பாண்டவர்களுக்காக நின்று -பாரத யுத்தத்திலே கையும் அணியும் வகுத்தவனுக்கு -என்னுதல் –
(கை வ்யூஹம்
எறிதல்-வகுத்து )

எறிதல்-இடுதல் ஆகையாலே
வேண்டின பொருள் கொள்ளலாம் இறே-

கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா –
பசு மேய்க்கையிலும் அவன் விரும்பி இருப்பது கன்றுகள் மேக்கை ஆய்த்து-
அதுக்கு தகுதியாய் இருப்பதோர் கோல் கொண்டு கோல் கொண்டு வா-

கடல் இத்யாதி –
கடலோடு ஒத்த நிறத்தை உடைத்தான வடிவை உடையவனுக்கு –

——————————————

சீர் ஓன்று தூதாய் துரியோதனன் பக்கல்
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பாரதற்க்கு
தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு ஓர்  கோல் கொண்டு வா
தேவப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2- 6-5 –

பதவுரை

துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக
சீர் ஒன்று தூது ஆய்–சிறப்பு பொருந்திய தூதனாகப் போய்
ஊர் ஒன்று வேண்டி–(பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும்
பெறாத–அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான
உரோடத்தால்–சீற்றத்தாலே
பார் ஒன்றி–பூமியில் பொருந்தி யிருந்து
பாரதம் கை செய்து–பாரத யுத்தத்தில் அணி வகுத்து
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு–ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா—;
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா—;

சீர் ஓன்று தூதாய் –
இன்னார் தூதன் என நின்றான் -என்கிறபடியே-
ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஆகிற குணம் தனக்கு சேருகைக்கு உறுப்பான தூத கர்த்யத்திலே அதிகரித்து-

துரியோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டி-
அதார்மிகனாய் -பந்துக்களை அடர்த்து-
பலத்தாலே ஜீவிக்க இருக்கிற துரியோதனன் பக்கலிலே சென்று –
உங்களுக்கு உள்ள அங்கங்களை விபஜித்து இரண்டு தலையும் பொருந்தி ஜீவித்து இருங்கோள் -என்று
முந்துற சொன்ன அளவில் –
அவன் -அது செய்யேன் -என்றவாறே –
ஆனால் பத்தூர் தன்னை கொடுக்கப் பார்ப்பது -என்ன – -அதுவும் செய்யேன் -என்றவாறே –
ஓரூர் தன்னையாலும் கொடு -என்றவாறே அவன் அதுக்கும் இசையாமல் –
அவர்களுக்கு தர்மம் உண்டு -தத் பலமான ஸ்வர்க்காதி லோகங்கள் உண்டு –
அத்தை அனுபவிக்க கடவர்கள் -எங்களுக்கு இத்தனையும் அன்றோ உள்ளது –
அதில் ஒன்றும் கொடுப்பது இல்லை -என்று வெட்டிதாக வார்த்தை சொல்ல –

பெறாத வுரோடத்தால் –
ஓரூர் தானும் பெறாத ரோஷத்தாலே –
ஆனால் வீர போக்யை அன்றோ வசுந்தரை -யுத்தத்தை பண்ணி ஜெயித்தவர்கள் ஒருவர்
பூமியை ஆளுங்கோள் என்ன –
அவன் அதுக்கு பொருந்தினவாறே

பாரொன்றி-
திரு உள்ளம் உகந்து –
பூமியிலே பரந்த ( பொருந்த )கால் பாவி நின்று –

பாரதம் கை செய்து –
பாரத யுத்தத்திலே பாண்டவர்களுக்குகாக நின்று கையும் அணியும் வகுத்து –

பார்த்தற்கு தேர் ஒன்றை ஊர்ந்தார்ககு –
ஆயுதம் எடுக்க ஒண்ணாமையாலே
சாரத்யத்திலே அதிக்ரித்யனாய் –
அர்ஜுனனை ரதியாக்கி –
பிரதிபஷத்தை உருளி காலாலே நெருக்கைக்கு உறுப்பாகையாலே-
அத்வீதியமான தேரை நடத்தினவனுக்கு

ஓர் கோல் கொண்டு வா –

தேவ பிரானுக்கு –
இந் நீர்மைக்கு எதிர்தட்டாம் படி நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையை உடையவனுக்கு –

இத்தால் மனுஷ்யத்வே பரத்வத்தை  சொன்னபடி –

———————————

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
நீலக் கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் –
பாலப் ப்ராயத்தே பார்த்தற்கு அருள் செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
குடந்தை கிடந்தாற்க்கு ஓர் கோல் கொண்டு வா 2-6 -6-

பதவுரை

(ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு)
ஆலத்து இலையான்–ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான்–(எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும்
நிலம் கடலுள்–கரு நிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம்–வெகு காலமாக
கண் வளர்ந்தான்–யோக நித்ரை செய்பவனும்
பாலம் பிராயத்தே–குழந்தைப் பருவமே தொடங்கி
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
அருள் செய்த–க்ருபை செய்த
கோலம்–அழகிய வடிவத்தை யுடைய
பிரானுக்கு–தலைவனுமான இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா;
குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

நீலம் கடலுள் -திரு மேனியின் நிழலீட்டாலே கறுத்து இரா நின்ற சமுத்ரத்தில்
நெடு காலம் -பிரளயம் வரும் அளவும்
ஆலத்து இலையான் -என்னுமத்தில் அத்தும் –
அரவின் அணை மேலான் -என்னுமத்தில் இன்-இரண்டும் சாரியை –

ஆலத்து இலையான் –
ஜகத் பிரளயம் வந்த போது வடதளத்திலே கண் வளர்ந்து அருளினவன்

அரவின் அணை மேலான் –
திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிறவன்
சகஸ்ரவதனோ தேவ பணா மணி விராஜித ச ஏவ வட வர்ஷோபூத் அனந்த அத்புதோ ரூபவான் -என்கிறபடியே
வடவர்ஷம் ஆனாலும் -திரு அனந்தாழ்வான் இறே
ஆலத்து இலையான் அரவின் அணை மேலான் -என்கையாலே அந்த அர்த்தமும் தோற்றுகிறது –

நீலக் கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் –
ஷீரம் ஆகையாலே வெளுத்த நிறமாய் இருக்கச் செய்தேயும் –
திருமேனியின் நிழலீட்டாலே நீலமான நிறத்தை உடைத்தாய் இருக்கிற கடலிலே
பிரளய அவதியாக கண் வளர்ந்து அருளினவன் –

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் -என்றும்
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான் -என்கையாலே
நீலக் கடல் என்று இந்த லவன சமுத்ரம் தன்னை சொல்லிற்று  ஆகவுமாம்
அரவின் அணை மேலானாய் கொண்டு நீலக் கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் என்று
மேலே அன்வயிக்க்கவுமாம்

பாலப் ப்ராயத்தே பார்த்தற்கு அருள் செய்த –
இந்திரன் வந்து என்னுடைய புத்ரனான இவனை
ரஷித்து அருள வேணும் -என்று காட்டிக் கொடுக்கையாலே –
பால்ய வயசிலே அர்ஜுனனுக்கு அருள் செய்த பின்பு –
இவன் தன்னளவிலே ஸ்நேஹித்து வச வர்த்தியாய் போருகையாலும் –
எல்லாரளவிலும் போல் அன்றியே இவன் அளவில் தான் பஷ பதித்து போருகையாலும்
அவ் வருள் மேன்மேல் என வளர்ந்து சென்ற இத்தனை இறே
(இந்திரன் புத்ரன் வாலி -பகைவன் ராமாவதாரத்தில் )

கோலப் பிரானுக்கு –
அழகிய உபகாரகனுக்கு என்னுதல் –
அத்வீதியமான விக்ரஹத்தை இவனுக்கு சஷூர் விஷயமாக்கி முன் நின்று
ரஷித்த உபகாரத்தை சொல்லுகிறது ஆதல் –

குடந்தை கிடந்தாற்க்கு –
குடந்தையன் கோவலன் -(10-9-)-என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதார சௌலப்யம் எல்லாம் தோற்றும்படி இறே ஸ்ரீ திருக் குடந்தையில்
கண் வளர்ந்து அருளுவது –
அங்கும் கோலப் பிரான்  ஆனால் போலே இங்கும்
ஏரார் கோலம் திகழ இறே சாய்ந்து அருளுவது –

—————————————-

பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-7 –

பதவுரை

(அக்காக்காய்!)
பொன்–அழகியதாய்
திகழ்–விளங்குகின்ற
சித்திர கூடம் பொருப்பினில்–சித்ர கூட மலைச் சாரலில்-காமத கிரி சித்ர கூட மலை
(பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது)
வடிவில்–(பிராட்டியின்) திரு மேனியில்
உற்ற–பதிந்த
(உனது இரண்டு கண்களில்)
ஒரு கண்ணும்–ஒரு கண்ணை மாத்திரம்
கொண்ட–பறித்துக் கொண்ட
அ கற்றை குழலன்–அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன்
கடியன்–க்ரூரன்;
(ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக)
உன்னை–உன்னை (ச்சீறி)
மற்றை கண்–(உனது) மற்றொரு கண்ணையும்
கொள்ளாமே–பறித்துக் கொள்ளாதபடி
விரைந்து–ஓடிப் போய்
ஓர் கோல் கொண்டு வா;
மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.

பொன் –
சோலைகள் சுனைகள் முதலியவற்றால் உண்டான பொலிவை உடைத்தாய் –

பொன் திகள் இத்யாதி –
ஸூபகஸ் சித்ரகூடோயம் கிரிராஜோபமோகிரி யச்மின் வசதி காகுஸ்த குபேர இவ நன்தனே-என்கிறபடியே –
(கிரி ராஜ் -கோவர்தனம் சொல்வார் -வால்மீகி சித்ர கூட மலை க்கே இந்தப் பட் டம் அருளிச் செய்கிறார் )
திரு அயோத்தியில் இருப்பிலும்  காட்டிலும் உகந்து அருளி இருக்கும்படி –

சோலைகளும் சுனைகளும் பாறைகளும் அருவிகளும் -முதலானவற்றால் வந்த
பொலிவை உடைத்தாய் விளங்கா நின்றுள்ள சித்ர கூட பார்ஸ்வத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே இறே
காகம் வந்து  அபராதம் பண்ணிற்று –

பிராட்டியும் தாமும் கூட ஜலக்ரீடை பண்ணின பின்பு
பெருமாள் மடியிலே முந்துற பிராட்டி கண் வளர்ந்து
அநந்தரம்-
பார்யாயேன ப்ரசூப்த -என்கிறபடியே –
பிராட்டி மடியில் பெருமாள் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே –
இந்திர புத்ரனான ஜெயந்தன் – ஆசூர பிரகிருதி ஆகையாலே -தேவ ரூபத்தை மறைத்து
காக ரூபத்தை பரிகிரஹித்து கொண்டு
ஜனனி-என்று அறியாதே -பிராட்டி உடைய வடிவு அழகை கண்டு -விபரீத புத்தியாலே வந்து
திருமேனியிலே புண் படுத்த –

அத்தாலே பெருமாள் சீறி அருளி -காகத்தை குறித்து
ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகிக்க -அது புக்க இடம் எங்கும் தொடருகையாலே –
ஓர் இடத்திலும் போக்கற்று -தமேவ சரணம் கத -என்கிறபடியே தன்னுடைய பிராண ரஷணம்
அர்த்தமாக  வந்து சரணம் புக –
அத்தாலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண் அழிவை கற்ப்பித்து
பிராணனோடு   போக விட்ட கதையைச்  சொல்லுகிறது

உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட என்று –
அதாவது -விபரீத புத்தி அடியாக பிராட்டி உடைய வடிவிலே சென்று உற்ற இரண்டு கண்ணில்
ஒரு கண்ணைப் பறித்து விட்டவன் -என்கை-

அக் கற்றை குழலன் கடியன் –
அப்படிப்பட்ட ஸ்வாபவனாய்-செறிந்த திருக் குழலை உடையனாய் இருக்கிறவன்-
குற்றத்துக்கு ஈடாக தண்டிக்கும் க்ரூரன்

விரைந்து இத்யாதி –
ஆன பின்பு சொன்னது செய்யாமையாலே உன்னைச் சீறி
மற்றைக் கண்ணையும் பரியாதபடியாக விரைந்து  கோல் கொண்டு வா

மணி வண்ணன் நம்பிக்கு –
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனாய் –
ஸ்வா தந்த்ர்யத்தில் பூர்ணனானவனுக்கு ஓர் கோல் கொண்டு வா –

——————————————

மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழத்
தன்னிகர் ஒன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட
மின்னு முடியற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை அடைதாற்க்கு  ஓர் கோல் கொண்டு வா -2 6-8 –

பதவுரை

மின்–மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை–இடையை யுடைய
சீதை பொருட்டா–ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்–லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய
மணி முடி பத்தும்–ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ–ஒரு சேர அற்று விழும்படி
தன்னிகர் ஒன்று இல்லா–தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை–வில்லை
கால் வளைத்து இட்ட–கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு–விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு–ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா-.

மின் இத்யாதி –
மின்னொடு ஒத்த இடையை உடையாள் ஆகையாலே
விரஹ சஹை அல்லாத -மிருது பிரக்ருதியாய்-
அயோநிஜை ஆகையாலே
கர்ப்ப வாச க்லேசமும் உட்பட அறியாத பிராட்டிகாக

இலங்கையர்  மன்னன் –
இப்படி இருக்கிறவளைப் பிரித்துக் கொண்டு போய் சிறை வைத்தவனாய் –
இலங்கையில் உள்ளவர்களுக்கு எல்லாம் நிர்வாஹனாய் இருக்கிற ராவணனுடைய

மணி முடி பத்தும் உடன் வீழ –
ரத்நாதிகளாலே அலங்க்ருதமான தலைகளை ஒரொன்றாக  அறுத்த இடத்தில் –
அவன் கொண்ட வர பலத்தாலே மீளவும் மீளவும் கிளருகையாலே –
பத்தும் சேர ஒரு காலே அற்று விழும்படியாக

தன்னிகர் இத்யாதி –
தனக்கு உபமானம் ஆவது ஒன்றும் இல்லாதபடி இருக்கும் திரு வில்லை –
கால் வளையும் படி பண்ணின-
வளைத்து இட்ட -வளைத்து எய்த -என்றபடி

மின்னு முடியற்க்கு –
இப்படி ராவண வதம் பண்ணுகையாலே -விளங்கா நின்றுள்ள
வீர அபிஷேகத்தை உடையவனாய் நின்றவனுக்கு

வேலை அடைதாற்க்கு –
சுரி குழல் கனி வாய் -இத்யாதி படியே
வேலை அடைத்ததும் பிராட்டிக்காக இறே

—————————————

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்கைக்கு
மன்னன்–அரசனாகிய ராவணனுடைய
சிரம்–தலைகளையும்
தோள்–தோள்களையும்
துணி செய்து–(அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு–ஒளி வீசுகின்ற
பூண்–ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு–-ராம பக்தியால் பூர்ணன் விபீஷணாழ்வானுக்கு
என் இலங்கு நாமத்து அளவும்–என் பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு–ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற–என்று அருள் செய்து
மின் இலங்கு ஆரற்கு–மின்னல் போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா-;
வேங்கடம்–திருமலையில்
வாணற்கு–வாழ்ந்தருளுமவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.

தென் இத்யாதி –
துர்க்க த்ரய -(கிரி ஜலம் வனம் )யுக்தம் ஆகையாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாதபடி இருக்கும் –
கட்டளைப் பட்ட இலங்கைக்கு நிர்வாஹனான ராவணனுடைய
தென் என்று அழகாய் -கட்டளைப் பட்டு இருக்கையை சொல்லுகிறது

சிரம் தோள் துணி செய்து –
தேவர்கள் கொடுத்த வர பலத்தாலே
அழிவு இல்லையாக நினைத்து இருந்த –
தலைகளையும் தோள்களையும் துணித்து பொகட்டு
(ராம விராம -ஒய்வு -வரம் கொடுத்தவனும் வரம் வாங்கினவனும் வரமும் -மூன்றுமே ஒய்வு )

மின் இத்யாதி –
ஒளி விடா நின்றுள்ள ஆபரணத்தை உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு –
அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே
இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே
ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் –
ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்-
ஆகையாலே -நம்பி என்கிறது

என் இலங்கு இத்யாதி –
என்னுடைய உஜ்வலமான நாமம் இந்த லோகத்தில் எவ்வளவு செல்லும்
அவ்வளவும் உனக்கு ராஜ்ஜியம் நடக்க கடவது என்று அருளி செய்த

மின் இலங்கு ஆரற்க்கு–
மின் அலங்காரர்க்கு -பாட பேதம்
ஒளி விடா நின்ற ஒப்பனை உடையாருக்கு-
அலங்காரம்-ஒப்பனை

அன்றிக்கே
மின் இலங்கு ஆரர்க்கு-என்ற பாடம் ஆன போது-
மின் போலே விளங்கா நின்றுள்ள ஹாரத்தை உடையவனுக்கு என்று பொருளாகக் கடவது

வேம்கட வாணர்க்கு –
மிடைந்த வெழ் மரங்களும் அடங்க வெய்து வேம்கடம் அடைந்த மால் ( திரு மழிசை ) என்கிறபடியே
அவ் அவதார குணம் எல்லாம் இங்கே பிரகாசிக்கும்படி திருமலைக்கு- நிர்வாஹகனாய் இருக்கிறவனுக்கு –

——————————————

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களை பெற்று மகிழ்வர் இவ் வையத்தே -2 6-10 –

பதவுரை

அக்காக்காய்–காக்கையே!
நம்பிக்கு கோல் கொண்டுவா என்று–உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று
நம்பி-தீம்பில் பூர்ணன்
மிக்கான் உரைத்த சொல்–-தேவகி பிராட்டியைக் காட்டில் மிக்கு -சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை
வில்லி புத்தூர் பட்டன்–ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்–அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப் பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள்
மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்–ஜ்ஞாந புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இ ப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர்

நம்பிக்கு -தீம்பில் கை வளர்ந்த இவனுக்கு
மிக்காள்-கண்ணனுடைய சைசவ சேஷ்டிதங்களை அனுபவிக்க பெறாத
தேவகி பிராட்டியில் காட்டில் தத் அனுபவத்தால் உண்டான மேன்மையை உடையளான யசோதை பிராட்டி
மக்களை -பகவத் அபிமுகர்களான சிஷ்ய புத்ரர்களை

அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வா என்று  –
கன்றுகள் மேய்க்க போம்படி கோல் தேடி தா என்று –
அழுகிறவனை அழுகை மருட்டுகைக்காக சொன்ன பாசுரம் ஆய்த்து இது –

கீழ்-2-5- -அக்காக்காய் குழல் வார வா -என்றதோ பாதி இறே –
இங்கு அக்காக்காய் கோல் கொண்டு வா -என்றதும்-

மிக்காள் உரைத்த சொல் –
இருவரும் ஒக்க நின்பு நோற்க செய்தே –
இவனைப் பெற்ற மாத்ரமேயாய்
இவனுடைய பால சேஷ்டிதங்கள் ஒன்றும் அனுபவிக்க பெறாமையாலே –
திருவிலேன் ஒன்றும் பெற்று இலேன் -என்ற ஸ்ரீ தேவகி பிராட்டியை போல் அன்றியே –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாள் -என்னும்படி
இவ் அவதாரத்தில் உள்ள ரசம் எல்லாம்
அனுபவிக்க பெற்ற பாக்யாதிகையான ஸ்ரீ யசோதை பிராட்டி சொன்ன சொல்லை –

வில்லிபுத்தூர் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் —
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் –
அவளுடைய பாவ பந்தத்தை உடையவராய்
அவள் சொன்னால் போலே சொன்னதாய் –
சர்வாதிகாரமான திராவிடமாய் இருந்துள்ள
பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக வல்லவர்கள் –

மக்கள் இத்யாதி –
பகவத் ஞான பிரேம பரி பூர்ணரான சிஷ்ய புத்ரர்களைப் பெற்று –
அவர்களும் தாங்களுமாய்க்  கொண்டு –
இந்த சம்சார பூமியிலே ஆனந்திகளாய் இருக்கப் பெறுவர்-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி-2-5–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

July 26, 2012

அவதாரிகை –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-என்கிறபடியே
அவதார சமயமே தொடங்கி-
இவ்வதார சேஷ்டித ரசம் எல்லாம் தானே முற்றூட்டாக அனுபவித்த யசோதை பிராட்டி –
அவனுடைய அவதாரத்தின் மெய்ப்பாட்டால் வந்த -பால்ய அனுகுணமாக அவனை அவள்
மஞ்சனம் ஆட நீ வாராய் -என்று அர்த்தித்து –
அவன் அதுக்கு இசையாமையாலே அநேக பிரகாரேன அனுசரித்தி உடன்படுத்தி
மஞ்சனமாட்டித் தலைக் கட்டின
அநந்தரம்

அவனுக்கு திருக் குழல் வாருவதாக உத்யோகித்து -அவன் பிணங்கி ஓடாமல் இசைந்து நிற்க்கைக்காக
லோகத்தில் சிறுப் பிள்ளைகளை குழல் வாருவார் -அவர்களை வசப்படுதுக்கைகாக மருட்டி சொல்லுமா போலே
இவனுடைய பால்ய அனுகுணமாக –
அக்காக்காய் குழல் வார வா -என்று பலகாலும் இவன் செவி கேட்கச் சொல்லி
(அ -அந்த -உயர்ந்த -வேறு பட்ட )
சீராட்டிக் கொண்டு இருந்து -திருக் குழல் வாரின பிரகாரத்தையும் –
தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
பாவன பிரகர்ஷத்தாலே தத் அவஸ்தா பன்னராய் கொண்டு –
தத்காலம் போலே தாம் அவனைக் குறித்து
அப் பாசுரங்களைச் சொல்லி –
திருக் குழல் வாருகை யாகிற ரசத்தை அனுபவிக்கிறார் –

————————

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது  ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 – –

பதவுரை

அக்காக்காய்–காக்கையே!
பின்னை–நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை–நாயகனும்- வல்லபனாய் –
பேரில்–திருப் பேர்களிலே
கிடந்தானை–பள்ளி கொண்டிருப்பவனும்
முன்னை–(பகவதநுபவத்தில்) முதல்வரான
அமரர்–நித்ய ஸுரிகளுக்கு
முதல்–தலைவனும்
(அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்)
தனி வித்தினை–ஒப்பற்ற காரணமாயிருப்பவனும்
என்னையும்–என்னையும்
எங்கள் குடி முழுது–எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும்
ஆட் கொண்ட–அடிமை கொண்ட
மன்னனை–தலைவனுமாகிய கண்ணனுக்கு
வந்து–(நீ) வந்து
குழல் வாராய்–கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்–காக்கையே!
மாதவன் தன்-ஸ்ரீயபதியான இவனுக்கு
குழல் வாராய்-

பின்னை மணாளனை -நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனானவனை –
இவ் அவதாரத்துக்கு பிரதான மகிஷி இவளே இறே
மேன்மைக்கு ஸ்ரீ யபதி போலே இறே நீர்மைக்கு இவளுக்கு வல்லபன் என்கிறதும் –

பேரில் கிடந்தானை –
அதுக்கு மேலே ஒரு நீர்மை இறே இது
அவதார சௌலப்யம் போல் அன்று இறே அர்ச்சாவதார சௌலப்யம்
கொம்பினார் பின்னை கூடுவதற்கு ஏறு கொன்றான் -தென் திருப் பேருள் மேவும் எம்பிரான் -என்கையாலே
பின்னைக்கு மணாளன் ஆனதுக்கும் பேரில் கிடந்ததுக்கும் ஒரு சேர்த்தி உண்டு இறே –
நப்பின்னை பிராட்டியை திருமணம் புணர்ந்து -பின்னை அவளோடு கூட வந்து
கண் வளர்ந்து அருளிற்று திருப் பேரிலே போலே காணும்

முன்னை அமரர் இத்யாதி –
கீழ் சொன்ன நீர்மைக்கு எதிர் தட்டான மேன்மையை சொல்லுகிறது –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
பகவத் அனுபவத்துக்கு முற்பாடரான -(நீதி வானவர் ) நித்ய ஸூரிகளுக்கு சேஷித்வேன பிரதானனாய்
அவர்களுடைய சத்தாதிகளுக்கும் தாரகாதிகளுக்கும் தானே ஹேதுவானவனை

என்னையும் இத்யாதி –
தன்னைப் பரிந்து அன்றி உளன் ஆகாத என்னையும் –
ஏழாட்காலும் பழிப்பு இல்லாத எங்கள் குடியில் உள்ள எல்லோரையும்
ஸ்வரூப அனுரூபமான அடிமையைக் கொண்ட

மன்னனை –
ராஜாவானவனை

வந்து குழல் வாராய் அக்காக்காய் –
இது சிறு பிள்ளைகளை குழல் வாருவார் சீராட்டாக சொல்லும் பாசுரம் –

மேலில்- உற்றன பேசி நீ யோடித் திரியாதே -என்றும் –
பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்சோறு முண்டற்க்கு வேண்டி நீ யோடித் திரியாதே -என்றும் அருளி செய்தமையால் –
காகத்தை நோக்கி சொல்லும் பாசுரம் என்று கொள்ள வேணும் –

அக்காக்காய் என்பது
வ்யவஹாரிக சொல்லு

மாதவன் இத்யாதி –
நீர்மைக்கு பின்னை மணாளனைப் போலே
மேன்மைக்கு ஸ்ரீ யபதி யானவனுடைய குழல் வாராய் வந்து அக்காக்காய்-

—————————————————

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – –

பதவுரை

அக்காக்காய்!-
இவன்–இப் பிள்ளை
முன்னம்–முன்பு
பேயின் முலை–பூதனையின் முலையை
உண்ட–(அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை–பிள்ளை காண்
(அன்றியும்)
மாயம்–வஞ்சனை யுள்ள
சகடும்-சகடத்தையும்
மருதும்–யமளார்ஜுனங்களையும்
இறுத்தவன்–முறித்தவன்
காயா மலர் வண்ணன்–காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன்
கண்ணன்–‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன்
கரு குழல்–கரு நிறமான கூந்தலை
வந்து–(நீ) வந்து
தூய்து ஆக குழல் வாராய்–நின்றாக வாருவாயாக.
தூ மணி–பழிப்பற்ற நீல மணி போன்ற
வண்ணன்–நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய் –

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம் –
முன்னம் தாய் வடிவு கொண்டு வந்த பூதனை உடைய முலையை –
தாய் முலை உண்ணுமா போலே இருந்து உண்ட முக்தன் இவன் –
இவனுக்கு பிள்ளைத் தனத்தில் புரை( குறை ) இல்லை யாகில் -அவள் முடிந்த படி என் என்னில் –
பிரதி கூலித்து கிட்டினார் முடிய கடவ வஸ்து ஸ்வாபத்தாலே முடிந்த இத்தனை –

மாயச் சகடும்  மருதும் இறுத்தவன் –
அதுக்கு பின்பு கண் வளர்ந்து அருளா நிற்க செய்தே –
அசூரா விஷ்டமாய் -நலிய வந்த க்ரித்ரிமமான சகடத்தையும் –

தவழ்ந்து போகா நிற்க செய்தே –
நடுவே வந்து நலிவதாக நின்ற யமளார்ஜுனங்களையும்
காலாலும் துடையாலும் தள்ளி முறித்து பொகட்டவன்

காயா மலர் வண்ணன்-
ஆத்ம குணங்கள் மிகை யாம்படி அப்போது அலர்ந்த செவ்வி காயம் பூ போலே யாய் –
அனுகூலரை எழுத்து இடுவித்து கொள்ளும் வடிவு அழகு படைத்தவன் –

கண்ணன் –
விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத சௌலப்யத்தை உடையவன் –

கரும் குழல் –
குழலுக்கு ஒரு போலி காணாமையாலே
வெறும் கரும் குழல் என்கிறாள் –

தூய்தாக வந்து குழல் வாராய் –
நன்றாக வந்து குழல் வாராய் –

தூய்தாக  வாருகையாவது –
அலகு அலகாக செப்பம் கிடக்கும்படி வாருகை

தூ மணி வண்ணன் –
பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை உடையவன்

காயாம்பூ போலே போது செய்யாதே ஒரு படி பட்டு இருக்கும் நீல ரத்னம் போன்ற
வடிவு அழகை உடையவன் என்கை–

————————————–

திண்ணக் கலத்து திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் – 2-5 3-(விரையன் உறங்கிடும்-பாட பேதம்)

பதவுரை

அக்காக்காய்!-
திரை–பின்னுதலை யுடைய
உறி மேல் வைத்த–(பெரிய) உறி மேல் வைத்த
திண்ணம் கலத்து–த்ருடமான பாத்ரத்திலுள்ள
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–உட் கொண்டு
விரைய–விரைவாக (ஓடி வந்து)
உறங்கிடும்–பொய் யுறக்க முறங்குகின்ற
அண்ணல்–ஸ்வாமியும்
அமரர்–நி்த்ய ஸுரிகளுக்கு
பெருமானை–நிர்வாஹகனும்
ஆயர் தம் கண்ணனை–இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை
வந்து குழல் வாராய் –
அக்காக்காய்!-
கார் முகில்–காள மேகம் போன்ற
வண்ணன்–நிறத்தை யுடையனான இவனுடைய
குழல் வாராய் –

திரை -கயிறுகளால் பின்னப் பட்டு பெரிதாய் இருந்துள்ள –
அண்ணல் -சர்வ ஸ்வாமி யாய்

திண்ணக் கலத்து –
சிக்கென்ற கலத்திலே-
கோல்களாலே மாறி அடித்தாலும் ஈடுபடாத கலம் என்கை –

திரை உறி மேல் வைத்த –
பெரிய உறி மேல் வைத்த –

திரை உறி யாவது –
கயிற்றை பின்னலாக கொண்டு சமைத்த பெரிய உறி –

வெண்ணெய் விழுங்கி –
இப்படி சேமித்து வைத்த வெண்ணெயை வைத்த குறி அழியாமல் –
தெய்வம் கொண்டதோ -என்னும்படி விழுங்கி –

விரைய உறங்கிடும் –
உடையவர்கள் காண்பதற்கு முன்பே கடுகப் போந்து –
அறியாதாரைப் போலே கிடந்தது உறங்கா நிற்கும் –
வெண்ணெய் விழுங்குகிற போதை பதற்றிலும் காட்டில் பதறி உறங்கப் புக்கால் -கண் உறங்குமோ –
குறு விழிக் கொண்டு -வந்தார் போனார் நிழல்  ஆட்டம் பார்த்து கொண்டு -கிடக்கையாலே –
இது என்ன பொய் உறக்கம் -என்று பிடித்துக் கொள்ளும் அவர்கள் இறே-

அண்ணல் -ஸ்வாமி –
இது நவநீத ஸௌர்ய வ்ருத்தாந்தத்தாலே அனுகூலரானவர்களை எழுதிக் கொள்ளும் அவன் –

அமரர் பெருமானை –
அயர்வறும் அமரர்கள் அதிபதியை –
மேன்மைக்கு  இவ்வருகு சொல்லலாவது இல்லை இறே –

ஆயர் தம் கண்ணனை –
அம்  மேன்மைக்கு எதிர் தட்டான நீர்மை சொல்லுகிறது –
இடக்கை வலக்கை அறியாத இடையருக்கு நிர்வாஹன் ஆனவனை

கண்ணன் –
அவர்களுக்கு கண்ணன் ஆனவன் என்னவுமாம்
(கண் ஆனவன் )

கார் முகில் வண்ணன்  –
வர்ஷு கவலாஹம் போலே இருக்கிற வடிவை உடையவன் –
இத்தால் அனுபவிப்பாருக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையவன் என்கை –

குழல் வாராய்-

—————————————–

பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள வசுரன் வருவானை தான் கண்டு
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் அக்காக்காய்
பேய் முலை உண்டான் குழல் வாராய் அக்காக்காய் – 2-5 4- –

பதவுரை

அக் காக்காய்!-
பள்ளத்தில்–நீர்த் தாழ்வுகளிலே
மேயும்–இரை யெடுத்துத் திரிகின்ற
பறவை–(கொக்கு என்னும்) பஷியின்
உரு–ரூபத்தை
கொண்டு–ஏறிட்டு்க் கொண்டு
வருவான்–வருபவனாகிய
கள்ளம் அசுரனை–வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை)
தான் கண்டு–தான் பார்த்து (பராக்காய் கன்றுகளை மேய்த்து விளையாடும் தான் -அவனை)
இது புள் என்று–இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து)
பொதுக்கோ–விரைவாக
வாய்–(அவ் வஸுரனது) வாயை
தீ்ண்டிட்ட–கிழித்துப் போட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் -அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய் -.

பொதுக்கோ -சடக்கென

பள்ளத்தில் இத்யாதி –
குணத்திலே தோஷ தர்சனம் செய்து
ப்ரஸன்ன ரூபியுமாய் இறே பகாசூரன் தான் வந்தது –
நீர் தாழ்வுகளிலே இரை எடுத்து திரியா நிற்கும் -பகமாகிற
பஷியின் வடிவைக் கொண்டு

கள்ள அசுரன் –
க்ரித்ரமான அசுரன் -தன்னுடைய ரூபத்தை மறைத்து பக ரூபம் கொண்டு வந்தது –
க்ரித்ரமனாகையாலே இறே

வருவானை தான் கண்டு –
இப்படி பிரசன்னனாய் கொண்டு தன்னை நலிய வருகிறவனை –
அந்ய பரனாய் கன்று மேய்த்து நின்று விளையாடுகிற தான் கண்டு

புள் இது என்று –
அசுரன் என்று இத்தை பெருக்க நினையாதே –
ஒரு பஷி என்று ஆபாசமாக நினைத்து

பொதுக்கோ வாய் கீண்டிட்ட –
தன்னை நலிவதாக அங்காந்து வருகிற வாயை அதினுடைய நினைவுக்கு
இடம் அறும்படி சடக்கென கிழித்து பொகட்ட

பொதுக்கோ -என்கிறது
பொதுக்கென என்றபடி –
அதாவது சடக்கென என்கை –

பிள்ளையை –
பிள்ளைத் தனத்தில் புரை இல்லாதவனை
இத்தனையும் செய்யா நிற்க செய்தே இது தானும் விளையாட்டாய் இருந்தபடி –

பேய் முலை உண்டான் –
அவள் முலை உண்கிற இடத்தில் பிள்ளைத் தனத்தில் புரை
இல்லாதாப் போலே ஆய்த்து இதுவும் –

———————————————–

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய்  அக்காக்காய்
ஆழியான் தன் குழல் வாராய் அக்காக்காய் – 2-5- 5- –

பதவுரை

அக்காக்காய்!-
நீ–நீ
உற்றன–(உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை
பேசி–சொல்லிக் கொண்டு-காக்கை வாயிலும் கட்டுரை கொள்வார் உண்டே
ஓடி–அங்குமிங்கும் பறந்து
திரியாதே–திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து–கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து
ஒரு கன்றினை–(அஸுரா விஷ்டமான) கன்றொன்றை
பற்றி–பிடித்து
கனிக்கு–(அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த–(குணிலாக) வீசின
பரமன்–பரம புருஷனுடைய
திருமுடி–அழகிய தலை முடியை
அற்றைக்கும் வந்து–அவ்வக்காலும் வந்து
குழல் வாராய்–வாருவாயாக
ஆழியான் தன்–சக்ராயுதபாணியான இவனுடைய
குழல் வாராய் –

கற்றினம் மேய்த்து-
கன்றுகளினுடைய திரளை  மேய்த்து
பால்யத்தில் கன்றுகள் மேய்த்து பின்பு இறே பசுக்களோ மேய்ப்பது
ஆகையால் இவனும் கன்றுகள் மேய்க்கத் தொடங்கினான் ஆயத்து –

கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த –
இப்படி கன்றுகள் மேய்த்து திரியா நிற்கிற இடத்திலே –
தனை நலிகைக்காக கன்றான வடிவைக் கொண்டும் –
விளாவான வடிவைக் கொண்டும் -வந்து நின்ற சில அசுரர்களை
விளம் கனிக்கு இளம் கன்று விசிறி -என்கிறபடியே
முள்ளாலே முள்ளைக் களையுமா போலே
அசுர மயமான நின்ற தொரு கன்றை காலைப் பிடித்து தூக்கி எடுத்து –
அந்த விளம் கனி உதிருகைக்காக எறிந்து –
இரண்டையும் சேர முடித்து பொகட்ட

பரமன் திருமுடி –
தன்னை நலிய வந்த இவர்கள் கையில் தான் படாதே அவற்றை
நிரஸித்து ஜகத்துக்கு பரம சேஷியான தன்னை நோக்கித் தந்த –
உபகாரகனுடைய திருமுடியை –

உற்றன பேசி நீ ஓடித் திரியாதே –
உன்னுடைய ஜாதி உசிதமானவற்றை சொல்லிக் கொண்டு
ஓர் இடத்திலே நிலை இன்றிக்கே நீ பறந்து திரியாதே

அற்றைக்கும் வந்து குழல் வாராய் –
நாள் தோறும் வந்து குழல் வாராய்

ஆழியான் –
திரு ஆழியை உடையவன் –
அவிதேயரை நியமிக்க வல்ல பரிகரம் உடையவன் என்கை –

———————————————–

கிழக்கில் குடி மன்னர் கேடு இலாதாரை
அழிப்பான் நினைந்திட்ட ஆழி அதனால்
விழிக்கும் அளவிலே வேர்  அறுத்தானை
குழற்கு அணியாக குழல் வாராய் அக்காக்காய்
கோவிந்தன் தண்   குழல் வாராய் அக்காக்காய் -2 5-6 –

பதவுரை

அக்காக்காய்!-
கேடு இலாதார்–(வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான
கிழக்கில் குடி மன்னரை–கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை
அழிப்பான்–அழிக்கும் படி
நினைந்திட்டு–எண்ணி
(ப்ராக் ஜ்யோதிஷ் புரம் -நரகாசூரன் முடித்து -முன்பு முரன் -பாசம் அறுத்து எரிந்து முடித்து முராரி பெயர்
இவர்கள் இந்த்ராதிகளை அழிக்க நினைந்திட்ட என்றும் இவர்களை அழிக்க நினைந்திட்ட என்றும்)
அவ் வாழி அதனால்–அந்தச் சக்ராயுதத்தால்
விழிக்கும் அளவிலே–கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள்
வேர் அறுத்தானை–ஸ மூலமாக அழித்தவனுடைய
குழற்கு–கூந்தலுக்கு
அணி ஆக–அழகு உண்டாம்படி குழல் வாராய்
கோவிந்தன்–(இந்த) கோவிந்தனுடைய
தண் குழல்–குளிர்ந்த (சிறந்த) குழலை
வாராய்–வாருவாயாக.

கிழக்கில் குடி மன்னர்-
ப்ராக்ஜ்யோதிஷ புரவாசிகளாய் நரகாசுர ப்ரப் ப்ருதிகளான ராஜாக்களை

கேடு இலாதாரை –
வர பல புஜ பலங்கள் உண்டாகையாலே நமக்கு ஒரு கேடு இல்லை என்று நினைத்தவர்களை

அழிப்பான் நினைந்திட்டு –
ஆஸ்ரிதரான இந்த்ராதிகளை நலிகையாலே அழிக்கத் திரு உள்ளம் பற்றி –

அவ் வாழி அதனால் –
கருதுமிடம் பொருதுமதாய்-
அற முயலாழி-(2-10-5-)-என்கிறபடியே தன்னிலும் காட்டில் –
ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் மிகவும் முயலா நிற்கும் ஏற்றத்தை உடைய திரு வாழியாலே

விழிக்கும் அளவிலே வேர்  அறுத்தானை –
இமைத்து விழிக்கும் முன்னே கிழங்கு எடுத்து பொகட்டானை

அதவா
கேடிலாதாரை அழிப்பான் நினைந்திட்டு -கிழக்கில் முடி மன்னர் -விழிக்கும் அளவில் –
ஆழி அதனால் வேர் அறுத்தானை –
என்று அந்வயம் ஆக்கி –

நமக்கு ரஷகனாக ஈஸ்வரன் உண்டு -என்று இருக்கையாலே –
தங்களுக்கு ஒரு கேடு இன்றிக்கே இருக்கும் இந்த்ராதிகளை
அடர்த்து அழிப்பதாக கோலின ப்ராக்ஜ்யோதிஷா புரவாசிகளான நரக ப்ரபர்த்ய
அசுர ராஜக்களானவர்களை அழிக்க பார்க்கிற அளவிலே –

அச் செய்தி இந்த்ரன் வந்து விண்ணப்பம் செய்த அநந்தரம்
பெரிய திருவடியை மேற்கொண்டு நரக புரத்திலே எழுந்து அருளி –
கருதுமிடம் பொருத வல்ல திரு ஆழியாலே
அந்த நரகாதிகளை மறு கிளை உண்டாகாதபடி அறுத்துப் பொகட்டவனை என்னவுமாம்-

குழற்கு அணியாக குழல் வாராய் அக்காக்காய் –
திருக் குழல்களுக்கு அழகு பிறக்கும்படி குழல் வாராய்

கோவிந்தன் –
பர ரஷணத்தில் தீர்ந்த வியாபாரங்களை உடையவன்

தண் குழல்-
ஸ்லாக்கியமான குழல் –

———————————————

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து  இருண்ட  குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –

பதவுரை

அக்காக்காய்!-
பிண்டம் திரளையும்–(பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்
பேய்க்கு இட்ட-பிசாசங்களுக்குப் பொகட்ட
நீர் சோறும்–நீரையுடைய சோற்றையும்
உண்டற்கு–உண்ணுதற்கு
வேண்டி–விரும்பி
நீ ஓடி திரியாதே– பலி புக்கான நீ பறந்தோடித் திரியவே வேண்டா
அண்டத்து–மேலுலகத்திலுள்ள
அமரர்–தேவர்களுக்கு
பெருமான்–தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய
அழகு அமர்–அழகு பொருந்திய
வண்டு ஒத்து இருண்ட–வண்டைப் போல் கரு நிறமான
குழல் வாராய் –
மாயவன் தன்–ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய
குழல் வாராய் –

பிண்டத் திரளையும் –
பித்ருக்கள் முதலானரை உத்தேசித்து இடும் பிண்டங்களாகிற  திரளையும் –

பேய்க்கிட்ட நீர் சோறும் –
பிசாசங்களை உத்தேசித்து இட்ட ஜல சஹிதமான சோறுகளையும்

உண்டற்கு வேண்டி –
உண்கைக்கு ஆசைப்பட்டு

நீ ஓடித் திரியாதே –
அது கிட்டும் இடம் தேடி நீ தட்டித் திரியாதே

அண்டத்த அமரர் பெருமான் –
நித்ய விபூதியிலே ஸூரிகளுக்கு தாரகாதிகள் எல்லாம்
தானேயாய் இருக்கும் பெரியவனுடைய

அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் –
அழகு பொருந்தி இருந்துள்ள வண்டு போலே
சுருண்டு இருண்டு இருக்கிற குழல்களை வாராய்

மாயவன் இத்யாதி –
ஆச்சர்ய  சக்தி உக்தன்  ஆனவனுடைய  குழலை வந்து வாராய் –

———————————————–

உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன்  குழல் வாராய் அக்காக்காய் -2 5-8 – –

பதவுரை

அக்காக்காய்!-
உந்தி–(தனது) திருநாபியிலே
எழுந்த–உண்டான
உருவம்–ஸுருபத்தையுடைய
மலர் தன்னில்–தாமரைப் பூவிலே
சந்தம்–சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய
சதுமுகன் தன்னை–நான்முகனை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்த இவனுடைய
புளி அட்டி கொந்தம் குழலை–புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை
தந்தத்தின் சீப்பால்–தந்தத்தினாற் செய்த சீப்பாலே
குறந்து–சிக்கு விடுத்து
குழல் வாராய்–வாருவாயாக
அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-

புளி குறந்து -புழுகு -புலுகு- வார்த்து–(புனுகு காப்பு )
அட்டி-உறைக்கத் தடவி

உந்தி இத்யாதி –
திரு நாபியிலே கிளர்ந்த அழகிய தாமரைப் பூவிலே
உருவம்-அழகு –

சந்தம் இத்யாதி –
ஜகத் சிருஷ்டியில் வந்தால் தன்னோடு ஒக்க விகல்ப்பிக்கலாம்படி
ஞான சக்திகளால் வந்த வைலஷண்யத்தை உடைய சதுர்முகனை சிருஷ்டித்தவன்
சந்தம் -அழகு

அன்றிக்கே
சந்தம் என்று சந்தஸாய்
வேதத்தை தனக்கு நிரூபகமாக உடையவன் -என்னவுமாம்

கொந்தக் குழலை குறந்து புளி அட்டி –
திருமஞ்சனம் செய்கிற போது புளி குறந்து அட்டித்
திருமஞ்சனம் செய்கையாலே நெறிந்து இருக்கிற குழலை

கொந்தம்-நெறிப்பு
புளி அட்டி கொந்தக் குழல் என்றது –
புளி அட்டின கொந்தக் குழல் என்றபடி –
திருக் குழல் வாருகிற காலத்தில் இது கூடாமையாலே திரு மஞ்சனம் காலத்தில் செய்தது என்னுமிடம் நிச்சிதம் இறே –
எண்ணெய்ப் புளிப் பழம் கொண்டு இறே திருமஞ்சனம் செய்தது

அதவா
கொந்தக் குழலை -நெறிந்து இருக்கிற திருக் குழலை
குறந்து புளி அட்டி –
அகங்களில் வளர்ந்தது அதனால் ஸ்வைரமாக குறந்தது புளி உண்டு -புழுகு-
அதை தான் புலுகு என்பார்கள் -அத்தை வார்த்தது என்னவுமாம்

குறந்தது புளி என்கிற இடத்தில் –
துகரம் கடை குறைத்தலாய்  கிடக்கிறது-(குறந்து புளி_
ஒண் சங்கதை வாள் போலே

புழுகட்டி-என்று பாடமாகில்
புழுகை குறந்தட்டி என்று பொருளாக கடவது

தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் –
திருக் குழலினுடைய ஸ்லாக்யாத அனுகுணமாக
தந்தத்தால் பண்ணின சீப்பைக் கொண்டு குழல் வாராய்

தாமோதரன் இத்யாதி –
அபலையான எனக்கு பிடித்துக் கட்டலாம்படி
சுலபனாய் இருக்கிறவனுடைய குழல் வாராய்-

—————————————–

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ வணை மேல் வைத்துப்
பின்னே இருந்து குழல் வாராய் அக்காக்காய்
பேர் ஆயிரத்தான் குழல் வாராய் அக்காக்காய் 2-5 9- – –

பதவுரை

அக்காக்காய்!-
முன்–வாமநாவதார காலத்தில்
மன்னன் தன்–அஸுர ராஜனான மஹாபலியினுடைய
தேவிமார்–மனைவியர்கள்
கண்டு–(தன்னுடைய) வடிவைக் கண்டு
மகிழ்வு எய்த–மகிழ்ச்சி யடையும்படி
(மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி)’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்)
இ உலகினை முற்றும்–இந்த வுலகங்கள் முழுவதையும்
அளந்தவன்–அளந்து கொண்ட இவனுடைய
பொன் முடியினை–அழகிய தலையை
பூஅணை மேல் வைத்து–புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து
பின்னே இருந்து–(இவனது) பின் புறத்திலே இருந்து கொண்டு
குழல் வாராய்!- அக்காக்காய்!-
பேர் ஆயிரத்தான்–ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு
குழல் வாராய் –

(பேர் ஆயிரத்தான்–நாராயணனே அழேல் -என்றாரே -அது பின்னாட்டியபடி
திருவிக்ரமன் -சொல்லி முடி -இவனே சர்வேஸ்வரன் -நிவந்த நீள் முடியின் -திருப்பாண் ஆழ்வார்

பொன்னின் -என்கிற இடத்தில் –
இன் -என்னுமது சாரியை –
பொன் முடி -அழகிய திரு முடி –

மன்னன் இத்யாதி –
புலன் கொள் மாணய்-(திருவாய் -1-8-)-என்கிறபடியே –
சர்வேந்திரிய அபஹார ஷமமானவாமன ரூபமும் –
பொங்கு இலங்கு புரி நூலும் -இத்யாதிப் படியே
அவ் அழகுக்கு மேலே கிளர்ந்து விளங்கா நின்றுள்ள யக்ஜோபவீதமும்
க்ருஷ்ணாஜினமும் மூஞ்சியுமான விநீத வேஷமும் கொண்டு –
மகா பலி யக்ஜா வாடத்திலே-
வல்லார் ஆடினாப் போலே பதறி நடந்து சென்று நின்ற நிலையும்

கொள்வான் நான் -இத்யாதிப் படியே சொன்ன –
முக்த ஜல்பத்தையும் கண்டு
அசுர ராஜனான மகா பலி யினுடைய ஸ்திரீகள் ஆனவர்கள் ப்ரீதைகள் ஆம்படி
முந்துற நின்று அர்த்தித்து
கையிலே நீர் விழுந்த சமந்தரம்-
முன்பே தன்னதாய் இருக்கிற  இந்த லோகத்தை எல்லாம்
இப்போது அபூர்வமாக பெற்றால் போலே அளந்து கொண்டவனுடைய

பொன்னின் முடியினை -அழகிய திரு முடியை
பொன் -அழகு
இன் -சாரியை

பூ அணை மேல் வைத்து –
திரு முடியை மார்த்தவத்துக்கு ஈடாக பூ போலே மிருதுவான அணை மேல் வைத்து

பின்னே இருந்து குழல் வாராய் –
வாருகைக்கு அனுகுணமாக பின்னே இருந்து குழல் வாராய்

பேர் ஆயிரத்தான் –
தன் வைலஷண்யத்தை கண்டு ஸ்துதிக்கும் அவர்களுக்கு இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி –
தேவோனாம் சஹஸ்ரவான்-( சபா பர்வம் ) -என்கிறபடியே
அநேகம் திருநாமங்களை உடையவன் உடைய
குழல் வாராய்

—————————————————-

நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

கண்டார் பழியாமே யக்காக்காய் கார் வண்ணன்
வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லி புத்தூர் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப்  பாட குறுகா வினை தானே -2 5-10 – –

பதவுரை

அக் காக்காய்–‘காக்கையே!
கண்டார்–பார்த்தவர்கள்
பழியாமே–பழியாதபடி
கார் வண்ணன்–காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய
வண்டு ஆர் குழல்–வண்டை ஒத்த கரிய கூந்தலை
வார–வாரும்படி
வா–வருவாயாக’
என்ற–என்று சொன்ன
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியின்
சொல்–சொல்லை (க்குறித்த) –
விண் தோய்–ஆகாசத்தை அளாவுகின்ற
மதிள்–மதிளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
சொல்–அருளிச் செயல்களை
கொண்டாடி–சிலாகித்து
பாட–பாடப் பெற்றால்
வினை தாம்–ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும்
குறுகா–சேராவாம்.

வினை தான் –
வினை என்று பேர் பெற்றவை எல்லாம்

கண்டார் இத்யாதி –
திரு மஞ்சனம் செய்து குழல் வாராது இருந்தால் கண்டவர்கள் பழிக்கக் கூடும்
அவர்கள் பழியாத படியாக –

அக்காக்காய் -கார் வண்ணன் இத்யாதி –
மேகம் போலே ச்யாமளமான வடிவை உடையவனுடைய
இருட்சியாலும் சுருட்சியாலும்  வண்டு போல் இருக்கிற திருக் குழலை
வாரும்படியாக வா என்று சொன்ன
யசோதை பிராட்டி யினுடைய சொல்லை

விண் தோய் இத்யாதி –
ஆகாசத்தில் மிகவும் உயர்ந்த மதிளை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு
நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த இத்தை

கொண்டாடி இத்யாதி –
சப்தார்த்த வைலஷண்யத்தை கொண்டாடி –
ப்ரீதி ப்ரேரிதராய் கொண்டு பாட
வினை என்று பேர் பெற்றவை  அடங்கலும் தானே அருகு வந்து கிட்டா –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –