அவதாரிகை-
கீழில் திருமொழி யிலே
சப்பாணி கொட்டுகை யாகிற அவனுடைய பால சேஷ்டிதத்தை –
தத் காலத்திலேயே யசோதை பிராட்டி அனுபவித்தாப் போலே –
பிற் பாடராய் இருக்கிற தாமும் –
அதிலே ஆதார அதிசயத்தாலே –
அவளுடைய பாவ யுக்தராய் கொண்டு -பேசி அனுபவித்தாராய் நின்றார் –
அவன் தளர் நடை நடக்கை ஆகிற சேஷ்டிதத்தை
தத் காலம் போலே -அனுபவித்து இனியர் ஆகிறார் இதில் –
—————-
துடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –
பதவுரை
சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார் பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற் கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மத நீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இள நடையை
நடவானோ–நடக்க மாட்டானோ?
[நடக்க வேணும். ]
தளர் நடை ஆவது –
திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –
நடை கற்கும் பருவம் ஆகையாலே
தவறி தவறி நடக்கும் நடை–மதாதி அதிசயத்தாலே –
கம்பத்தை முறித்து -காலில் துடரை இழுத்து கொண்டு -நடக்கையாலே –
காலில் கிடந்த சங்கிலித் துடரானது -சலார் பிலார் என்று சப்திக்க –
துடர் என்று விலங்கு-
ஆனை விலங்கு சங்கிலியாய் இறே இருப்பது -சலார் பிலார் என்கிறது சப்த அநு காரம் –
தூங்கு இத்யாதி –
முதுகில் கட்டின பொன் கயிற்றால் தூங்குகிற மணியானது த்வநிக்க-
பொன் மணி -என்கிற இடத்தில் –
பொன் என்கிற இத்தால் -பொற் கயிற்றை சொல்லுகிறது –
படு இத்யாதி –
உண்டாக்கப் பட்ட மூன்று வகையான மத ஜலம் அருவி குதித்தால் போலே வடிய –
மும் மதப் புனலாவது –
மதத்தாலே கபால த்வ்யமும் மேட்ர ஸ்தானமுமாகிற த்ரயத்தில் நின்று வடிகிற ஜலம்-
வாரணம் இத்யாதி –
ஆனையானது அந்த மத பாரவச்யத்தாலே -அ வசமாய் கொண்டு –
மெள்ள நடக்குமா போலே –
உடன் இத்யாதி –
சேவடிக் கிண் கிணி-என்றபடி –
திருவடிகளில் சாத்தின சதங்கைகள் யானவை –
தன்னிலே கூடி சப்திக்க –
அன்றிக்கே –
திருவரையில் சாத்தின சதங்கை வடமானது –
நழுவி விழுந்து –
திருவடிகளோடு சேர்ந்து –
இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம் –
உடை இத்யாதி –
திருவரையில் கட்டின மணியானது பறை போல் சப்திக்க –
தடம் தாள் இத்யாதி –
பருவத்துக்கு ஈடாய் -விகாச யுக்தமாய் -பரஸ்பர சதர்சமாய் -இருக்கிற திருவடிகளைக் கொண்டு –
சாரங்க பாணி –
ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையிலே உடையவன் –
இது ஈஸ்வர சிஹ்னங்களுக்கு எல்லாம் உப லஷணம்-
அவதரிக்கிற போதே ஈஸ்வர சிஹ்னங்கள் தோன்றும் படியாக இறே அவதரித்தது –
தளர் நடை ஆவது –
திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –
நடை கற்கும் பருவம் ஆகையாலே
தவறி தவறி நடக்கும் நடை–
———————————
(கீழே சாரங்க பாணி -ராமனோ இவன்
இதில் வாசுதேவன் -வாசு தேவ புத்ரனோ -நந்தகோபன் குமாரன் அன்றோ )
செக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பறை முளைப் போல்
நக்க செந்துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ – 1-7 2-
பதவுரை
செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறு பிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப் போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணி வண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .
செக்கர் வானத்து இடையிலே சாகாந்தரத்திலே தோன்றும்படி
உன்நேயமான பால சந்தார்ங்குரம் போலே –
ஸ்மிதம் செய்கையாலே -மிக சிவந்து இருந்துள்ள திரு அதரமாகிற
உயர்ந்த நிலத்தின் மேலே
குளிர்ந்து வெளுத்து இருக்கிற திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜசானது பிரகாசிக்க –
(மாய மோஹ புன்னகை -மந்தஸ்மிதம் )
அக்கு வடம் உடுத்து –
சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து
ஆமைத் தாலி பூண்ட –
கூர்ம ஆகாரமான ஆபரணத்தை திருக் கழுத்திலே சாத்திக் கொண்டவனாய்
அனந்த சயனன் –
அவதாரத்தின் உடைய மூலத்தை நினைத்து சொல்கிறது –
நாக பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகத -என்னக் கடவது இறே
தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –
தளர் நடை நடவானோ –
—————————————
மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசு இலையும் பீதகச் சிற்றாடையோடும்
மின்னில் பொலிந்ததோர் கார் முகில் போல கழுத்தினில் காறையோடும்
தன்னில் பொலிந்த இடுடீகேசன் தளர் நடை நடவானோ – 1-7 3-
பதவுரை
மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்க மில்லாததுமான (முழுவதும்) வெண்மையா யுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திரு வரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திரு வாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காள மேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறை யென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ் வாபரணங்கள் திருமேனிச் சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திரு நாமமுடைய இவன்
(கண்டவர் தம் மனம் வழங்கும் -பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரீம் )
தளர் நடை நடவானோ-.
மின் கொடியும்
அத்தோடு சேர்ந்ததோர் அகளங்க சந்திர மண்டலமும்
அத்தை சூழ்ந்த பரி வேஷமும் போலே –
திரு வரையில் சாத்தின பொன் பின்னாலும் –
அதிலே கோவைபட்டு பிரகாசிக்கிற வெள்ளி அரசிலைப் பணியும் –
இவற்றுக்கு மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையும் ஆகிற இவற்றோடும் –
மின்னாலே விளங்கப் பட்டதொரு -காள மேகம் போலே –
திருக் கழுத்தில் -சாத்தின காறையோடும் –
(மின்னில் ஏழாம் வேற்றுமை மின்னலால் மூன்றாம் வேற்றுமை பொருளில் )
இவ் ஒப்பனைகள் மிகை யாம்படி
தன் அழகாலே சமர்தனாய் இருப்பவனாய்-
அவ் வழகாலே கண்டவர்கள் உடைய இந்திரியங்களை
தன் வசமாக கொள்ளுமவன் தளர் நடை நடவானோ –
——————————————
கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கண கண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்க்குத் தன் திருவாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலை கண் மீதே தளர் நடை நடவானோ -1 7-4 –
பதவுரை
கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–-எனக்கு பவ்யனாய் -எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரிய பிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் எற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.
கன்னல் இத்யாதி –
கரும்பு சாறு குடம் இந்த பதங்கள் சேர்ந்து -கருப்பம் சாற்று குடம் -என்று கிடக்கிறது –
இல்லி ( சிறிது அளவு ) திறந்தால் பொசிந்து புறப்படுமா போலே –
திருப் பவளத்தில் ஜலம் ஆனது ஊறி வடிய –
கண கண என சிரித்து
ப்ரீதனாய்க் கொண்டு –
கண கண என்றது -விட்டு சிரிக்கிற போதை சப்த அநு காரம் –
முன் இத்யாதி –
முன்னே வந்து நின்று -தன்னுடைய அதர ஆச்வாதத்தை தாரா நிற்கும் –
முத்தம் -அதரம்
என் இத்யாதி –
எனக்கு பவ்யனாய் -காள மேகம் போன்ற வடிவை உடையனாய் –
அந்த பவ்யதைக்கு ஊற்று வாயான ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை உடையவன் –
தன்னை இத்யாதி –
தன்னை பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை உடைய எனக்கு தன்னுடைய
வாகம்ர்தத்தை தந்து -என்னைத் தழைப்பியா நின்றான் –
இங்கே –
வாய் அமுதம் தந்து தளர்ப்பிக்கின்றான் -என்று வர்தமானமாக சொல்லுகையாலே –
முன்பு –
முத்தம் தரும் என்றது –
எப்போதும் தன் விஷயத்தில் அவன் செய்து போரும் ஸ்வபாவ கதனம் பண்ணின படி –
தன் எற்றி-இத்யாதி –
தன்னோடு எதிர்ந்த சத்ருக்கள் ஆனவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ
————————————
முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே
பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ -1 7-5 –
பதவுரை
முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளி மலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடு மொடு–திடு திடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக் கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக் கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர் நடை நடவானோ -.
உலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –
உலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –
முன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே
பின்னை இத்யாதி –
அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –
அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு
செல்லுமா போலே –
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )
பன்னி இத்யாதி –
லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு
ஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –
பல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –
அவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக
த்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –
(யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் )
—————————————–
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கருகார் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ -1 7-6 –
பதவுரை
கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காம தேவனுக்குப் பிதாவுமான இப் பிள்ளை,-(காமனைப் பயந்த காளை )
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்தது போல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
(கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -அங்கும் ரேகை என்பாரும் உண்டே )
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர் நடை நடவானோ -.
ஒரு கால் இத்யாதி –
ஒரு திருவடிகளிலே ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –
ஒரு திருவடிகளிலே திரு ஆழி ஆழ்வானுமாக
உள்ளடிகளிலே ரேகா ரூபேண பொறித்து சமைந்த இரண்டு திருவடிகளையும் கொண்டு –
அங்கு அங்கு இத்யாதி –
அடி இட்ட அவ்வவ ஸ்தலங்களிலே தூலிகை கொண்டு
எழுதினால் போல் அடையாளம் படும்படி நடந்து –
பெருகா இத்யாதி –
இந்த நடை அழகையும் வடிவு அழகையும் கண்டு மேன்மேல் என்று
பெருகா நின்ற -ஆனந்த சாகரத்துக்கு மேலே –
பின்னையும் உத்தரோத்தரம் –
ஆனந்தத்தை உண்டாக்கி –
(பொறி பட நடந்த ஆனந்த சாகரம் -முதல் நிலை
தவழ்ந்து தவழ்ந்து தளிர் நடை அதுக்கும் மேல் பெருகும் இன்ப வெள்ளம்
மதுரையார் மன்னன் -அடி நிலை தொடுத்து அதிர நடந்தான் அன்றோ
நம்பெருமாள் நின்ற நிலை -இன்றும் -கிஞ்சித் தாண்டவ நிலை உண்டே –
பிருந்தாவன பண்டிதன் -கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் )
கரு கார் இத்யாதி –
இருண்டு குளிர்ந்து இருக்கிற கடல் போன்ற நிறத்தை உடையவன் –
கருமை -இருட்சி
கார் -குளிர்த்தி
அன்றிக்கே
கருமை -பெருமையாய்
கார் -இருட்சியாகவுமாம்
அன்றிக்கே
கார் என்று மேகமுமாய் –
காள மேகம் போலேயும் கடல் போலேயும் இருக்கிற திரு நிறத்தை உடையவன் என்னவுமாம் –
காமர் தாதை இத்யாதி –
அழகால் நாட்டை வெருட்டி திரிகிற காமனுக்கு -உத்பாதகன் ஆனவன் –
காமனைப் பயந்த காளை-இறே
பிரசவாந்தஞ்ச யவ்வனம் -என்னும் படி அன்றிக்கே
காமனைப் பயந்த பின்பு
கீழ் நோக்கி பிராயம் புகும் ஆய்த்து-
காமர் தாதை இன்ப வெள்ளத்தின் மேல் -பின்னையும் பெய்து பெய்து –
தளர் நடை நடவானோ -என்று அந்வயம்-
———————————–
படர் பங்கய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழ நின்று
கடும் சேக் கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண என
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ – 1 7-7-
பதவுரை
படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப் பூ
வாய் நெகிழ–(மொட்டா யிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனி படு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப் போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறி ஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலி போலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க
படர் இத்யாதி –
பெருத்து இருந்துள்ள தாமரை பூவானது -முகுளிதமாய் இருக்கை அன்றிக்கே –
வாய் நெகிழ்ந்த அளவிலே
குளிர்த்தியை உடைத்தான அக வாயில் மதுவானது
சிறுக துளித்து -விழுமா போலே –
இடம் கொண்ட இத்யாதி –
இடம் உடைத்தாய் -சிவந்து இருந்துள்ள -திருப் பவளத்தில்
ஜலமானது -நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று –
கடும் சேக் கழுத்தின் -இத்யாதி –
கடிதான சேவின் கழுத்தில் -கட்டின மணி உடைய
த்வனி போலே -திருவரையில் கட்டின மணியானது -கண கண என்று சப்திக்கும்படி –
தடம் தாள் இத்யாதி –
ச விகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு
சாரங்க பாணியானவன் தளர் நடை நடவானோ
———————————
பக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —
பதவுரை
கரு–கரு நிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடு பள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திரு வரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழவி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க.
தகுந்த நீல மணி )
பக்கம் இத்யாதி –
கருத்த நிறத்தை உடைத்தாய் -சிறுத்து இருந்துள்ள மலையினுடைய
பார்ஸ்வத்திலே நிம்நோன் நதமான அருவிகள் ஒளி விடுமா போலே –
பகர் -ஒளி
அக்கு இத்யாதி –
திருவரையில் சாத்தின வளை மணி வடமானது –
உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
நாலும் படி -தொங்கும் படியாக
அணி இத்யாதி
ஆபரணங்களால் பூஷிதமான -அழகிய நிதம்ப பிரதேசம் பார்ஸ்வத்தில் அசைய
மக்கள் இத்யாதி –
லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –
தக்க இத்யாதி –
தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான
ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –
———————————————
வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –
பதவுரை
திரிவிக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே பொகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டி யானை போல,
தெள் புழுதி–தெளிவான (வெளுத்த) புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர் நடை நடவானோ-.
வெண் புழுதி இத்யாதி –
வெளுத்த புழுதியை மேலே ஏறிட்டு கொண்டு
அளைந்த
ஒரு கரிய
ஆனைக் கன்று போலே
தெள் இத்யாதி –
தெள்ளிய புழுதியை திருமேனியிலே ஏறிட்டு கொண்டு
திருவிக்ரமன் –
ஆஸ்ரிதனான இந்த்ரன் அபேஷிதம் செய்கைக்காக –
திருவடிகளின் மார்த்த்வம் பாராதே
லோகத்தை அளந்தவன்
சிறு புகர் பட வியர்த்து –
ஏறிட்டு கொண்ட புழுதி ஸ்வேத பிந்துக்களாலே
நனைந்த இடங்களிலே திருமேனி சிறிது புகர்த்து தோன்றும்படி வியர்த்து
ஒண் போது இத்யாதி –
அழகியதாய் –
தனைக் கடைத்த காலத்திலே அலர்ந்த
தாமரைப் பூ போலே
இருக்கிற சிறியதான திருவடிகள் மிதித்த இடத்திலே –
ஓன்று உறுத்தி நோவாதபடி யாக
தண் இத்யாதி –
குளிர்ந்த பூக்களை உடைத்தான மெத்தை மேலே
தளர் நடை நடவானோ –
தவிசு -மெத்தை –
—————————————
திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-
பதவுரை
செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தை யுமுடைய
கேசவன்–ப்ரசஸ்த கேசவன் -கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரை யுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதி பிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திரு முகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த -நீராடிய -பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர–துளி துளியாகச் சொட்டவும்
தளர் நடை நடவானோ-.
சண்ணம் -குஹ்ய அவயவம்
திரை நீர் இத்யாதி –
திரைக் கிளப்பத்தை உடைத்தான சமுத்திர மத்யத்திலே சலித்து தோற்றுகிற
சந்திர மண்டலம் போலே –
செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –
தன் இத்யாதி –
தன்னுடைய அழகியதாய் -நீர்மையை உடைத்தான திரு முக மண்டலத்தில் –
விளங்குகிற திரு சுட்டியானது -எங்கும் ஒக்க பிரகாசித்து –
இடம் வலம் கொண்டு அசைய –
பெரு நீர் இத்யாதி –
தீர்த்தங்களில் பிரசித்தமாய் -ப்ரவாஹா ஜலம் மாறாமல் –
அலை எரிகிற கங்கையிலும் காட்டிலும் –
(கங்கா காயத்ரி கோவிந்தா கீதா -நான்கும் புனிதம் )
பெரியதாய் அத்வீதியமான தீர்த்த பலத்தை
தரும் ஜலத்தை உடைத்தான சிறுச் சண்ணம் ஆனது துளிக்க துளிக்க
தளர் நடை நடவானோ –
(சுத்த சத்வ மயம் அன்றோ )
————————————-
அவதாரிகை
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –
பதவுரை
ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கரு நிற முடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர் நடை நடந்தனை–தளர் நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவ ரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.
ஆயர் இத்யாதி –
கோப குலத்தில் வந்து ஆவிர்பவித்த –
ராஜ குலத்தில் ஆவிர்பவித்த வித்தமை -அடி அறிவார் அறியும் இத்தனை இறே-
இது இறே எல்லாரும் அறிந்தது –
அஞ்சன வண்ணன் தன்னை –
கண்டவர் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையவனை –
தாயர் இத்யாதி –
பெற்ற தாயான யசோதையும் –
அவளோ பாதி ஸ்நேஹிகள் ஆனவர்களும்
ப்ரீதராம் படியாகவும் –
தொட்டில் பருவத்திலே பூதன சகடாதிகள் நிரஸ்தர் ஆனமை அறிந்த –
கம்சாதிகளான சத்ருக்கள்
தலை எடுத்து நடக்க வல்லன் ஆனமை கண்டு –
என் செய்ய புகுகிறோம் என்று பீதராய் அவசன்னராம்படி யாகவும்
தளர் நடை நடந்த பிரகாரத்தை –
வேயர் இத்யாதி –
வேயர் தங்கள் குலத்து உதித்தவர் ஆகையாலே –
அக் குடியில் உள்ள எல்லோரும் தம்முடைய வைபவத்தை சொல்லி
புகழும் படியான ஸ்ரீ பெரியாழ்வார் –
சீரால் இத்யாதி –
சீர்மையோடே விஸ்தரித்து சொன்ன –
இவற்றை ஏதேனும் ஒரு படி சொல்ல வல்லவர்கள் –
மாயன் இத்யாதி –
ஆச்சர்யமான குணங்களை உடையவனாய் –
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவன் ஆனவனுடைய திருவடிகளிலே
ஸ்வ சேஷத்வ அநு ரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணும் –
சத் புத்ரர்களைப் பெறுவர்-
மக்கள் -என்று
அவி விசேஷமாக சொல்லுகையாலே –
வித்தையாலும் -(சிஷ்யர் களாகவும் )
ஜன்மத்தாலும் வரும் –
உபய வித புத்ரர்களையும் சொல்லுகிறது –
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply