Archive for May, 2012

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-6–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

May 29, 2012

அவதாரிகை –
செங்கீரை ஆடுகையாகிற அவனுடைய  பால்ய சேஷ்டிதத்தை தத் காலத்திலேயே –
யசோதை பிராட்டி பிரார்த்தித்து அனுபவித்தால் போலே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-அந்த சிநேகத்தை உடையராய் கொண்டு –
தானும் அனுபவித்தாராய் நின்றார் –

இனி -சப்பாணி கொட்டுகையாகிற பால சேஷ்டிதத்தை செய்து அருள வேணும் என்று
அவனைப் பிரார்த்தித்து –
அந்த சேஷ்டித ரசத்தை அவள் அனுபவித்தால் போலே –
ஒரு சேஷ்டிதத்தை அனுபவித்த அளவிலே பர்யாப்தி பிறவாத அபிநிவேச அதிசயத்தாலே –
அந்த சேஷ்டித ரசத்தையும் அனுபவிக்க ஆசைப் பட்டு –
அவள் பேசினால் போலே பேசி –
தாமும் அனுபவிக்கிறார் –

——————————–

மாணிக்க கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்ப் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்து இலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1 6-1 –

பதவுரை

ஆணிப் பொன்னால் செய்த–மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்–(வேலைப் பாட்டிற் குறை வில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி–பொன் மணிக் கோவையை
உடை-உடைய
மருங்கின் மேல்–இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை
ஆர்ப்ப–ஒலி செய்யவும்
பவளம்–பவழம் போன்ற
வாய்–வாயிலே
முத்து–முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கவும்
பண்டு–முற் காலத்திலேயே
காணி–பூமியை
கொண்ட–(மஹாபலிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்–திருக் கைகளாலே
பேணி–விரும்பி
சப்பாணி–சப்பாணி கொட்டி யருள வேணும்;
கரு–கரு நிறமான
குழல்–கூந்தலை யுடைய
குட்டனே–பிள்ளாய்!
சப்பாணி–சப்பாணி கொட்டி யருள வேணும்.

ஆணி -மாற்று உயர்ந்த
உடை மணி -அரைவடத்தை உடைத்தான
மருங்கின்  மேல் -இடுப்பிலே

சப்பாணி கொட்டுதலாவது -திருக் கைத் தலங்களை தட்டிக் கொண்டு செய்யும் ஒரு வித நர்த்தனம் –

மாற்று எழும்பின பொன்னாலே சமைக்கப் பட்டதாய் –
பழிப்பு அற்று –
அழகியதாய் இருந்துள்ள –
அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் –
மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –

ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் –
ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல்
நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் –
கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது –

(ஆணிப்பொன் என்பதால் -அழகு -மேல் பகுதி
மணியின் நாக்கு மட்டும் மாணிக்கம் -சப்திக்குமே
நாக மாணிக்கம் என்று இத்தையே சொல்லுவார் )

பேணி இத்யாதி –
என்னுடைய நிர்பந்தத்துக்கு  ஆக அன்றிக்கே -விருப்பத்தோடு
பவளம் போல் இருக்கிற -திரு அதரமும் –
திரு முத்தும் பரபாகத்தாலே விளங்கும்படி ஸ்மிதம் செய்து  கொண்டு –

அன்றிக்கே –
பேணி என்றது –
உன் திருமேனி அலையாதபடி பேணிக் கொண்டு -என்னவுமாம் –

பண்டு இத்யாதி –
முன்பு -குடம் கையில் மண் கொண்டு-(4-3-0) -என்கிறபடியே
உன்னுடைமையான பூமியை –
மகா பலி இடம் சென்று
உதக பூர்வகமாக பரிகிரகித்த திருக் கைகளாலே –

இத்தால் –
தன் மேன்மை பாராதே ஆஸ்ரிதருக்குகாக தன்னை அழிய மாறி கார்யம் செய்யும் கை -என்கை –

கருகின திருக் குழலையும் –
பிள்ளைத் தனத்தையும் உடையவனே –
சப்பாணி கொட்டி அருள வேணும் –

———————————————–

பொன்னாரை நாணொடு மாணிக்க கிண் கிணி
தன்னரை ஆடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேனி இன்று இழுந்து உங்கள் ஆயர் தம்
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி -1-6 2- –

பதவுரை

பொன்–ஸ்வர்ண மயமான
அரை நாணொடு–அரை நாணோடு கூட
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
தன் அரை–தனக்கு உரிய இடமாகிய அரையிலே
ஆட–அசைந்து ஒலிக்கவும்
தனி–ஒப்பற்ற
சுட்டி–சுட்டியானது
தாழ்ந்து–(திரு நெற்றியில்) தொங்கி
ஆட–அசையவும்
என் அரை மேல் நின்று–என்னுடைய மடியிலிருந்து
இழிந்து–இறங்கிப் போய்
உங்கள்–உன்னுடைய (பிதாவான)
ஆயர் தம் மன்–இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய
அரை மேல்–மடியிலிருந்து
சப்பாணி கொட்டாய்-;
மாயவனே–அற்புதமான செயல்களை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-;

தன்னுடைய திருவரையில் சாத்தின பொன்னரை நாணோடு
கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி சப்திக்க
தனி சுட்டி –
அத்வீதியமான சுட்டியானது-திருக் குழலில் சாத்திய

உங்கள் ஆயர் தம் மன் அரை மேல் —
உங்கள் தமப்பனராய் இடையர்களுக்கு அரசரான ஸ்ரீ நந்த கோபருடைய மடியில் இருந்து –
இத்தால்
தன் மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும்-
அவர் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை
தனக்கு உகப்பு ஆகையாலே அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து-

மாயவனே -ஆச்சர்ய பூதன் ஆனவனே

——————————————-

பன் மணி முத்தின் பவளம் பதித்தன்ன
என் மணி வண்ணன்  இலங்கு பொன் தோட்டின் மேல்
நின் மணி வாய் முத்திலங்க நின் அம்மை தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி -1 6-3 –

பதவுரை

என்–என்னுடைய
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறமுடையவனே!
பல்–பலவகைப் பட்ட
மணி–சதகங்களையும்
முத்து–முத்துக்களையும்
இன் பவளம்–இனிய பவழத்தையும்
பதித்த–அழுத்திச் செய்யப் பட்டதும்
அன்ன–அப்படிப்பட்டதுமான (அழகியதுமான)
இலங்கு–விளங்குகின்ற
பொன் தோட்டின் மேல்–பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே
நின் மணி வாய் முத்து–உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கும்படி (சிரித்துக் கொண்டு)
நின் அம்மை தன்–உன் தாயினுடைய-(நின்னையே மகனாகப் பெற்ற ஏற்றம் கொண்டவள் )
அம்மணி மேல்–இடையிலிருந்து (அம்மணம் -இடை )
சப்பாணி கொட்டாய்-;
ஆழி–திருவாழி மோதிரத்தை
அம் கையனே–அழகிய கையிலுடையவனே!
சப்பாணி-;

என்னுடையவன் என்று அபிமாநிக்கலாம் படி -எனக்கு பவ்யனாய் – நீல ரத்னம் போன்ற –
வடிவை உடையவனாய் இருக்கிறவனே –

பன் மணி இத்யாதி –
மாணிக்கம், மரகதம், புஷ்ய  ராகம், வைரம், நீலம், கோமேதகம்,வைடூர்யம்
என்கிற பல வகைப் பட்ட ரத்னங்களும் –
முத்தும் –
இனிய பவளமும் -பகை தொடையாக அழுத்தி –
வாசா மனோகரமான
அழகை உடைத்தாய் கொண்டு விளங்கா நின்ற பொன் தோட்டின் அழகுக்கு மேலே
(அன்ன -அப்படிப்பட்ட -அது அது தான் என்று சொல்லலாம் படி
தொட்டின் மேல் -பாட பேதம் )

நின்  இத்யாதி –
உன்னுடைய அழகியதான திருப் பவளத்திலே திரு முத்துக்கள் பிரகாசிக்க –

நின்னம்மை இத்யாதி –
உன்னைப் பிள்ளையாக பெற்ற பாக்யத்தை உடையளான அவளுடைய
மடி மேலே இருந்து சப்பாணி கொட்டாய் –
அம்மணி என்று அரைக்கு பெயர் –
(நந்தகோபர் பாவனையில் இப் பாசுரம் )

இத்தால்
ஸ்ரீ நந்தகோபர் தம்முடைய மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும் –
தாயார் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை –
தமக்கு உகப்பு ஆகையாலே –
அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து –

ஆழி அம் கையனே –
திரு ஆழியை அழகிய திருக் கையிலே உடையவனே என்னுதல்-
ஆழி என்று -திருவாழி மோதிரம் ஆதல் –

——————————————

தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வான் நிலாம் அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நின் புகழா நின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடைந்தை கிடந்தானே சப்பாணி -1 6-4 –

பதவுரை

வான்–ஆகாசத்திலே
நிலா–விளங்குகின்ற
அம்புலி–அம்புலியே!
சந்திரா–சந்திரனே!
தூ–வெண்மையான
நிலா–நிலாவை யுடைய
முற்றத்தே–முற்றத்திலே
போந்து–வந்து
நீ–நீ
விளையாட–(நான்) விளையாடும்படி
வா–வருவாயாக
என்று–என்று (சந்திரனை அழைத்து)
நிலா–நின்று கொண்டு
நின்–உன்னை
புகழாநின்ற–புகழ்கின்ற
ஆயர் தம்–இடையர்களுடைய
கோ-தலைவராகிய நந்த கோபர்
நிலாவ–மனம் மகிழும்படி
சப்பாணி கொட்டாய்-;
குடந்தை கிடந்தானே! சப்பாணி-.

தூ நிலா -அழகிய நிலவை உடைய
கோ -தலைவனான நந்த கோபர்
நிலாவ -ஹர்ஷிக்கும் படி
நீ நிலா -நீ நின்று

ஆகாசத்தில் சஞ்சரிக்கும் அம்புலியையும் அழைத்து
உம்மைத் தொகை -குழந்தையும் அழைத்து
அம்புலி சந்திரா -ஆதரவு தோற்ற வா வா என்றது

உன் சேஷ்டிதங்களிலே வித்தராய் கொண்டு -உன்னை புகழா நிற்கிற –
சர்வ கோப நிர்வாகரான -உங்கள் ஐயன் –
உன்னுடைய சேஷ்டிதத்தை கண்ட -ஹர்ஷத்தாலே -உஜ்ஜ்வலமாம் படியாக
சப்பாணி கொட்ட வேணும் –

ஆஸ்ரித பராதீனனாய் கொண்டு
திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறவனே
(நான் சொன்னபடி செய்ய -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -அன்றோ நீ
சொன்ன வண்ணம் செய்தவன் அன்றோ -சப்பாணி கொட்ட வேண்டும் -)

——————————————–

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி யமுக்கி யகம் புக்கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பத்ம நாபா கொட்டாய் சப்பாணி -1 6-5 –

பதவுரை

புட்டியில்–திருவரையிற் படிந்த
சேறும்–சேற்றையும்
புழுதியும்–புழுதி மண்ணையும்
கொண்டு வந்து–கொணர்ந்து வந்து
அட்டி–(என் மேல்) இட்டு
அமுக்கி–உறைக்கப் பூசி
அகம் புக்கு–வீட்டினில் புகுந்து
அறியாமே–(எனக்கு நீ) தெரியாதபடி
சட்டி தயிரும்–சட்டியில் வைத்திருக்கும் தயிரையும்
தடாவினில்–மிடாக்களிலிருக்கிற
வெண்ணெயும்–வெண்ணெயையும்
உண்–உண்ணுகின்ற
பட்டி கன்றே–பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே!
சப்பாணி கொட்டாய்-;
பற்ப நாபா–ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக் கொண்ட நாபியை யுடையவனே!
(அயனைப் படைத்ததோர் எழில் உந்தி-பூவில் நான்முகனைப் படைத்த தேவன் )
சப்பாணி கொட்டாய்-.

மத்யம அங்கத்திலே சேற்றையும் புழுதியையும் கொண்டு வந்து –
சொட்டு சொட்டு என்ன -துளிக்க துளிக்க -( 1-9-1-)புழுதியிலே இருந்து விளையாடுகையாலே –
திருவரையிலே நனைந்த இடம் சேறும் –
நனையாத இடம் புழுதியுமாய்  இருக்கும் இறே-
இப்படி இருக்கிற ஆகாரத்தோடு வந்து மேலே அணைக்கையாலே-
அந்த சேற்றையும் புழுதியையும் கொண்டு
வந்து மேலே இட்டு உறைக்கப் பூசி –

அகம் புக்கு இத்யாதி –
ஓடிப் போய் உள்ளே புக்கு –
வைத்த நான் அறியாதபடி –
சட்டிகளிலே தோய்த்து வைத்த தயிரையும் –
தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும்
அமுது செய்யா நிற்கும் –

பட்டி இத்யாதி –
பட்டி தின்று திரியும் கன்று போலே களவே யாத்ரையாக திரியுமவனே –
சப்பாணி கொட்டு –

சகல ஜகத் காரணமான தாமரையை
திரு நாபியிலே உடையவனே –

—————————————————-

(விரல் நுனி சிவந்து
பிள்ளையாய் கையை அழுத்தி
கன்று மேய்க்கும் சாட்டை நுனி அழுத்தி
தேர் கடிவாளம் அழுத்தி சிவந்ததோ -கூரத்தாழ்வான்
மாயப் போர் தேர் பாகனுக்கு- இவள் சிந்தை –கொல்லா மாக்கோல் கொண்டு )

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்து மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

பதவுரை

தந்தை–(எல்லார்க்கும்) பிதாவாகிய உனது
சொல்–பேச்சை
தாரித்து கொள்ளாது–(மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல்
போர் உய்த்து வந்து–யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து
புகுந்தவர்–(போர்க் களத்தில்) ப்ரவேசித்தவரும்
மண்–ராஜ்யத்தை
ஆள–(தாமே) அரசாளுவதற்கு
பாரித்த–முயற்சி செய்த
மன்னர்–அரசர்களுமாகிய
நூற்றுவர்–நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள்
பட–மாண்டு போகும்படி
அன்று–(பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே
பஞ்சவர்க்கு–பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக)
தேர் உய்த்த–(பார்த்த ஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின
கைகளால்–திருக் கைகளாலே
சப்பாணி-;
தேவகி சிங்கமே–தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக் குட்டி போன்றவனே!
சப்பாணி-.

தந்தை -சர்வ லோக பிதாவான உன்னுடைய
தாரித்து -தரித்து என்கிற இத்தை நீட்டிக் கிடக்கிறது -தரித்து –
பொறுப்பு உண்டாய் என்னுதல் –
புத்தி பண்ணி என்னுதல் –
நூற்றுவர் -இதற்கு மேலே அந்வயம்- (மாளும் படி இத்யாதி )

தந்தை சொல் கொள்ளாது –
சர்வேஷா மேவ லோகாநாம் பிதாமாதாச மாதவ -என்கிறபடியே
(மாதவ -இருவரும் உள்ள சப்த பிரயோகம் )
சர்வ லோகத்துக்கும்  பிதாவாகையாலே -தங்களுக்கும் பிதாவான நீ –
இரண்டு தலையையும் சேர்க்கைக்கு –
தூதாக எழுந்து அருளி –
பாண்டவர்களும் நீங்களும் பரஸ்பரம்  விரோதித்து இருக்க வேண்டா –
ப்ராப்தி எல்லோருக்கும்  ஒக்கும் –
ஆன பின்பு ராஜ்யத்தை சம பாகம் பண்ணி -புசித்து சேர்ந்து இரும் கோள்-
அது செய்ய மாட்டி கோள் ஆகில் -தலைக்கு இரண்டு ஊராக -அவர்களுக்கு பத்தூர் தன்னை கொடும் கோள் –
அதுவும் செய்யி கோள் ஆகில் -அவர்கள் தங்கள் குடி இருக்கைக்கு ஒரூர் தன்னை ஆகிலும் கொடும் கோள் –
என்று இப்படி அருளிச் செய்த வசனத்தில் –
ஒன்றையும் கைக் கொள்ளாதே-

போர் உய்த்து இத்யாதி –
பின்பு ரோஷத்தாலே -வீர போக்யா வசுந்தரா அன்றோ -யுத்தத்தை பண்ணி –
ஜெயித்தவர்களில் ஒருவர் ராஜ்யத்தை ஆளும் கோள் -என்ற படியாலே
யுத்தத்தை நடத்துவதாக –
கர்வதோத்தராய் வந்து -யுத்த பூமியை புகுந்தவர்களாய்-பாண்டவர்களை அழியச் செய்து –
பூமிப் பரப்பு அடங்கலும் தாங்களே ஆளுவதாக பாரித்த ராஜாக்களான நூற்றுவரும் –
ஒருவர் சேஷியாதபடி  பட்டுப் போம் படியாக –

பஞ்சவர்க்கு இத்யாதி –
உன்னை அல்லது வேறு துணை இல்லாத பாண்டவர்கள் ஐவர்க்கும் –
தங்கள் வெறுமை தோன்ற நின்ற அன்று –
ஆயுதம் எடுக்க ஒண்ணாது -என்கையாலே –
சாரத்யத்திலே அதி க்ரத்யனாய் -பிரதிபஷம் இத்தனையும் தேர் காலிலே நெரிந்து போம்படியாக
தேரை நடத்தின கைகளால் சப்பாணி கொட்ட வேணும் –

தேவகி வயற்றில் பிறப்பாலே –
ஸிம்ஹ கன்று போலே செருக்கி இருக்கிறவனே -சப்பாணி –

———————————————

பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை
இரந்திட்ட கை மேல் எறி திரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரம் தொட்ட கைகளால் கொட்டாய் சப்பாணி -சாரங்க வில் கையனே சப்பாணி -1-6 7- –

பதவுரை

பரந்திட்டு நின்ற–(எல்லை காண வொண்ணாதபடி) பரவி யுள்ள
படு கடல்–ஆழமான ஸமுத்ரமானது
தன்னை இரந்திட்ட–(வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த
கை மேல்–கையின் மேலே
எறி திரை–வீசுகின்ற அலைகளினால்
மோத–மோதி யடிக்க
கரந்திட்டு நின்ற–(முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த
கடல்–அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
கலங்க–கலங்கி விடும்படி
சரம்–அம்புகளை
தொட்ட–தொடுத்து விட்ட
கைகளால் சப்பாணி-;
சார்ங்கம் வில்–ஸ்ரீசார்ங்க மென்னும் தநுஸ்ஸை
கையனே–(அப்போது) கையில் தரித்தவனே!
சப்பாணி-;

படு -ஆழ்ந்து இரா நின்ற
அப்ரமேயோ மகோததி -என்கிறபடி ஒருவராலும் எல்லை காண ஒண்ணாதபடி -விஸ்தீர்ணமாய்
நின்ற ஆழ்ந்த கடலானது –
படு -என்று ஆழம் –
அன்றிகே –
ரத்நாதிகள் படுகிற கடல் என்றுமாம் –

தன்னை இத்யாதி –
அஞ்சலிம் ப்ராங்முக க்ர்த்வா பிரதிசிச்யே மகோ ததே-என்கிறபடியே
இலங்கையில் போம் படி வழி தர வேணும் –
என்று தன்னைக் குறித்து சரணம் புகுந்த கை மேலே
துவலை எறிகிற திரைகளானவை மோத –

காந்தி இத்யாதி –
முகம் காட்டாதே மறைந்து நின்ற கடலை –
பீதியாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி கலங்க –
சாபமா ந யா ஸௌ மித்ரே சராம்சாசீ விஷோபமான் -என்கிறபடியே சீறி –

சரம் தொட்ட கைகளால் சப்பாணி –
கடல் என்கிற சப்தத்தாலே
அபிமானியான வருணனை சொல்லுகிறது –

சாரங்க வில் கையனே –
அப்போது கையும் வில்லுமாக நின்ற அழகை உடையவன் -என்னுதல்-
கையிலே வில்லை வாங்கின போதை வீரப் பாட்டை சொல்லுதல் –

————————————————

குரக்கு இனத்தினாலே குரை கடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி -1-6-8- –

பதவுரை

குரை–கோக்ஷியா நின்ற
கடல் தன்னை–ஸமுத்ரத்தை
நெருக்கி–(இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு–குரங்குகளினுடைய
இனத்தாலே–கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி–ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்–பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை–லங்கையிலுள்ள
அரக்கர்–ராக்ஷஸர்களெல்லாம்
அவிய–அழிந்து போம்படி
அடு கணையாலே–கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய–நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;
நேமி–திருவாழி ஆழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.

குரை கடல் -கோஷியா நின்ற கடல் –

குரக்கு இத்யாதி –
நீருக்கு அஞ்சி உயர்ந்த நிலங்களிலே வர்த்திக்கும் குரங்குகள் உடைய திரளாலே –
ஆழத்தாலும் பரப்பாலும் -திரைக் கிளப்பத்தை உடைத்தாய் கொண்டு –
கோஷியா நின்று வரும் சமுத்ரத்தை இரண்டருகும் தேங்கிப் போம்படி
நடுவே அணை கட்டி –

நீள் நீர் இத்யாதி –
நீள் கடல் சூழ் இலங்கை -என்கிறபடியே –
பரந்த கடலை அகழாக உடைத்தான -இலங்கையை -இருப்பிடமாக உடையவர் ஆகையாலே –
இந்த அரண் உண்டாய் இருக்க நமக்கு ஒரு குறையும் இல்லை என்று
செருக்கி இருக்கும் ராஷசர் ஆனவர்கள்
முழுக் காயாக அவியும் படி -பிரதிபஷ நிரசன சீலனான அம்புகளாலே நெருங்க
பொருத கைகளால் சப்பாணி –

திரு ஆழியை அழகிய திருக் கையிலே உடையவனே சப்பாணி –
விரோதி நிரசனத்துக்கு -அடு கணை தானே அமைந்து இருக்கையாலே
திரு ஆழி
அழகுக்கு உடலாம் இத்தனை இறே-

———————————————

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி -1 6-9 –

பதவுரை

அளந்திட்ட–(தானே) அளந்து கட்டின
தூணை–கம்பத்தை
அவன்–அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட-புடைக்க
ஆங்கே–(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே
வாள் உகிர்–கூர்மையான நகங்களை யுடைய
சிங்கம் உரு ஆய்–நரஸிம்ஹ ­மூர்த்தியாய்
வளர்ந்திட்டு–வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
(ஒரு கால் இவ் விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)
உளம்–(அவ் விரணியனது) மநஸ்ஸு
தொட்டு–பரி சோதித்துப் பார்த்து (பின்பு)
இரணியன்–அவ் விரணியனுடைய
ஒளி–ஒளி பொருந்திய
மார்பு அகலம்–மார்பின் பரப்படங்கலும்
பிளந்திட்ட–(நகத்தாற்) பிளந்த
கைகளால் சப்பாணி
பேய்– பூதனையின்
முலை–முலையை
உண்டானே–உண்டவனே!
சப்பாணி-;

அளந்து இட்ட -ஹிரண்யன் அளந்து நட்ட
வாள் -கத்தி போல் குரூரமான

தொட்டு –
இப்போது ஆகிலும் அனுகூலிக்க கூடுமோ என்று பரீஷித்து –
முன்பே நரஸிம்ஹத்தை வைத்து நட்ட தூண் -என்ன ஒண்ணாதபடி –
தானே தனக்கு பொருந்த பார்த்து –

அளந்து நட்ட தூணை அவன் தட்ட –
வேறே சிலர் தட்டில் -கையிலே நரசிம்கத்தை அடக்கி கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள் என்ன ஒண்ணாதபடி –
(அவன் தானே என்றபடி )

அவன் தானே –
எங்கும் உளன் (திருவாய் )-என்று பிரகலாதன் பண்ணின பிரதிக்ஜை பொறாமல் –
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப -( திருமொழி )- என்கிறபடியே
அவனை சீறி –
அந்த சீற்றத்தினுடைய அதிசயத்தாலே –
ஆனால் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லை – என்று அழன்று அடிக்க –

ஆங்கே –
அடித்த இடம் ஒழிய ஸ்தலாந்தரத்திலே தோன்றிலும் –
இவன் இங்கு இல்லை -என்று
பிரதிக்ஜை நிலை நின்றது ஆம் என்று –

அத் தூணிலே
அவன் அடித்த இடம் தன்னிலே –

வளர்ந்திட்டு –
பரிய இரணியன் -என்னும்படி
பருத்து வளர்ந்த வடிவை உடையனானவன் –
கீழ் படும்படியாக தான் வளர்ந்து –

வாள் உகிர் சிங்க உருவாய் –
அஸ்த்ர சஸ்த்ரங்களில் ஒன்றாலும் படக் கடவன் அல்லவாகவும்-
தேவாதி சதுர் வித ஜாதியில் உள்ள வற்றில் ஒன்றின் கையில் படக் கடவன் அல்லவாகவும் –
பிரம ருத்ராதிகள் கொடுத்த வரத்துக்கு விரோதம் வாராதபடி
ஒளியை உடைத்தான உகிர்களை உடைய நர ஸிம்ஹ ரூபியாய் –

உளம் தொட்டு –
எங்கும் உளன் என்று பிரகலாதன் சொன்னபடியே –
தான் -இல்லை -என்று சொன்ன ஸ்தலம் தன்னிலே –
உண்டு -என்னும்படியாக தோற்றுகையாலும் –
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலற தெழித்தான்-என்கிறபடியே
ஒரொன்றே துச் சகமாம்படி – பண்ணின பீடா விசேஷங்களாலும்-
பீதியிலே நெஞ்சு இளகி அனுகூலிக்க கூடுமோ
என்று ஹிருதயத்தை பரிஷை பண்ணி –

ஹிரண்யன் ஒண் மார்வகலம் –
ஹிரண்யனுடைய ஒள்ளியதான விச்தீர்ணமான மார்வை –

ஒண்மை யாவது-
நரஸிம்ஹத்தினுடைய கோப அக்நியாலும்
தன்னுடைய உதரத்தில் பய அக்நியாலும் பிறந்த பரிதாபத்தாலே –
அக்னி முகத்தில் பொன் போலே உருகி பதம் செய்து ஒளி விடுகை –

இத்தால் –
திரு உகிருக்கு அனாயாசேன கிழிக்கலாம்  படியான படியைச் சொல்லுகிறது –

அகலம் என்கையாலே –
வர பல பூஜை பலங்களாலே மிடி யற வளர்ந்த பரப்பாலே –
திரு உகிற்கு எல்லாம் இரை போந்த படியை சொல்லுகிறது –

பிளந்திட்ட கைகளால் –
உடலகம் இரு பிள வாக்கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே ( பொய்கையார் )- என்கிறபடியே
திரு உகிர்களாலே இரண்டு கூறாக பிளந்து பொகட்ட திருக் கைகளால் சப்பாணி –

பேய் முலை இத்யாதி –
அவனைப் போலே பிரதி கூல்யம் தோற்ற நிற்கையும் அன்றிக்கே –
தாயாய் வந்த பேய் -என்கிறபடியே
வஞ்சகையாய் வந்த பூதனை உடைய முலையை
பிராண சகிதமாக உண்டு முடித்தவனே -சப்பாணி –

—————————————————

அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை
மிடைந்திட்டு மந்த்ரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி  கார்முகில் வண்ணனே சப்பாணி -1 6-10 –

பதவுரை
(துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக)
அமரர்கள்–தேவர்கள்
அடைந்திட்டு–(உன்னைச்) சரணமடைய (நீ)
ஆழ் கடல் தன்னை–ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்)
விடைந்திட்டு–நெருங்கி
மந்தரம்–மந்தர பர்வதத்தை
மத்து ஆக–(கடைவதற்குரிய) மத்தாகும்படி
கூட்டி–நேராக நிறுத்தி
வாசுகி–வாசுகி யென்னும் பாம்பாகிய
வன் வடம்–வலிய கயிற்றை
(அந்த மந்தர மலை யாகிற மத்திலே)
கயிறு ஆக சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடைந்திட்ட–கடைந்த
கைகளால் சப்பாணி-;
கார் முகில் வண்ணனே–காள மேகம் போன்ற நிறமுடையவனே!
சப்பாணி-;

அடைந்திட்டு -சரணம் புகுந்த அளவிலே
துர்வாச சாபோபகதராய்-அத்தாலே நஷ்ட ஐஸ்வர்யராய்-அசூராக்ராந்தராய் –
அமரத்வ சாபேஷரான தேவர்கள் –
சரணம் த்வம் அநு ப்ராப்தா ச்ச்மச்தா தேவதா கணா-என்கிறபடியே –
ரஷித்து அருள வேணும் என்று -சரணம் புகுர –
அடைந்திட்டு என்கிற வினை எச்சம் திரிந்து-
அடைந்திட -என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது –

நலம் கழல் வணங்கி -என்கிற இது
திரிந்து -வணங்க -என்னும் பொருள் ஆகிறாப் போலே –

ஆழ் கடல் இத்யாதி –
அத்யகாதமான ஷீராப்தியை நம்முடைய படுக்கை என்று பாராதே –

மந்தரம் இத்யாதி –
மந்தானம் மந்த்ரம் த்ருதவா-என்கிறபடியே –
மகாசலமான மந்த்ரத்தை கடைகைக்கு மத்தாக நாட்டி –

வடம் இத்யாதி –
போக்த்ரம் கர்த்வா சவா சூகிம் -என்கிறபடியே –
வாசுகி யாகிற வலிய கயிற்றை-அதிலே கடை கயிறாக சுற்றி –

கடைந்திட்ட இத்யாதி –
தேவர்களையும் அசுரர்களையும் முந்துற கடைய விட்டு –
அவர்கள் இளைத்து கை வாங்கின வாறே –
அலை கடல் கடைந்த அப்பன்-(திருவாய் 8-1-1) -என்கிறபடி
அமிர்தம் கிளரும் தனையும் நின்று கடைந்து அருளின கைகளால் சப்பாணி –

கார் முகில் இத்யாதி –
ஆஸ்ரிதருடைய அபேஷித சம்விதானம் பண்ணின ஹர்ஷத்தாலே –
காள மேகம் போலே குளிர்ந்து -புகர் பெற்ற வடிவை உடையவனாய்
நின்றவனே-சப்பாணி –

———————————————-

நிகமத்தில் இத் திரு மொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே 1-6 11-

பதவுரை

ஆள் கொள்ள–(அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய–திருவவதரித்த (திரு ஆய்ப்பாடியிலேயே திரு அவதரித்ததாக அன்றோ இவர் திரு உள்ளம் )
ஆயர் தம் கோவினை–இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால்–ஆசையினால்
நாள்–எந்நாளிலும்
கமழ்–மணம் வீசுகின்ற
பூ–புஷ்பங்கள் வீசுகின்ற
பொழில்–சோலைகளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
பட்டன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சப்பாணி ஈர் ஐந்தும்–சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும்
வேட்கையினால்–இஷ்டத்தோடு
சொல்லுவார்–ஓதுகிறவர்களுடைய
வினை–பாபங்கள்
போம்– (தன்னடையே )அழிந்து போம்.

சர்வரையும் அடிமை கொள்ளுவதாக வந்து ஆவிர்பவித்த அவதார பிரயோஜனம் –
(ஆள் கொள்ள-இன்னாருக்கு என்று விசேஷணம் இல்லை யே –
அன்பன் தன்னை போல் இங்கும் சர்வருக்கும் )
லீலா விபூதியில் உள்ள சேதனரை திருத்தி அடிமை கொள்ளுகை என்கை-

பிறந்த -என்னாதே
தோன்றிய -என்றது –
கர்ப்ப வாச தோஷம் அற வந்து அவதரித்தமை தோற்றுகைக்காக-

ஆயர் தம் கோவினை –
ஆவிர்பவித்தது ஸ்ரீ மதுரையிலே ஆகிலும் -அது –
பிரகாசித்ததும் –
பிரயோஜனப் பட்டதும் –
திரு ஆய்ப்பாடியிலே இறே –

தான் தாழ நின்று –
ஏவிற்று  செய்து –
நீர்மையாலே எல்லாரையும் வசீகரித்து –
ஆளாக்கி கொண்டு –
சர்வ கோப நிர்வாகன் ஆனவனே –

நாள் கமழ் இத்யாதி –
சர்வ காலத்திலும் கமழா நின்றுள்ள பூம் பொழில்களை உடைய
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாகரான ஸ்ரீ பெரிய ஆழ்வார்-

வேட்கை இத்யாதி –
அவதார சேஷ்டித அனுபவத்தில் ஆசையால் அருளிச் செய்த
சப்பாணி விஷயமான பத்துப் பாட்டையும் –
ஆசை பூர்வகமாக சொல்லுமவர்கள் உடைய 
அகில பாபங்களும் தன்னடையே போம் –
(ஒரு கர்த்தா வந்து போக்குவது இல்லாமல் -தன்னடையே விட்டுப் போம் )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-5–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

May 28, 2012

(பத்து சேஷ்டிதங்களை ஆண் பால் பிள்ளைத் தமிழ்
காப்பு-3 மாதம் – செங்கீரை-5 மாதம் – தாலேலோ 7 மாதம் சப்பாணி -9 மாதம் -முத்தம் கொடு –
தளர் நடை இட்டு வாரான் –12 மாதம் -அம்புலி பருவம் 18 மாதம் –
சிற்றில் -2 வயசு -சிறு பறை-3 வயசில் – சிறு தேர் பருவம் -4 வயசு
இப்படி பத்தாக சொல்லி
கடைசி மூன்றுக்குமாக
நீராடல் அம்மானை ஊசல் மூன்றும் பெண் பிள்ளைக்கு சொல்பவர்
பெரியாழ்வார் சமஸ்க்ருத வட மொழி சம்ப்ரதாயம் படி மேலும் பல படிகளில் அருளிச் செய்கிறார் )

அவதாரிகை –

கீழில் திரு மொழியில் –
அவன் நிலா முற்றத்திலே இருந்து -புழுதி அளைவது –
அம்புலியை அழைப்பதான படியை -யசோதை பிராட்டி தான் அனுபவித்து –
அவை தன்னை சந்தரனைப் பார்த்து சொல்லி -இவனோடு விளையாட வேண்டி இருந்தாய் ஆகில் விரைந்து வா
என்று பல ஹேதுக்களாலும் அவனை அழைத்த பிரகாரத்தை –
தாமும் பேசி –
பிற் காலமாய் இருக்கச் செய்தே –
தத் காலம் போலே அவனுடைய அந்த சேஷ்டிதத்தை அனுபவித்தாராய் நின்றார் -கீழ் –

இனி மேல் அவனுடைய பருவத்துக்கு ஈடாக அவன் செங்கீரை ஆடுகிறது -காண வேணும் என்று ஆசைப் பட்டு –
அவனைப் பல படியாக புகழ்ந்து –
எனக்கு ஒரு கால் செங்கீரை ஆட வேணும் -என்று பல காலும் அபேஷித்து-
அந்த சேஷ்டித ரசத்தை அவள் அனுபவித்த படியை –
தாமும் தத் காலம் போலே அனுபவித்து –
அவள் பேசினாப் போலே பேசி இனியர் ஆகிறார் –

அவனை ஸ்தோத்தர பூர்வகமாக செங்கீரை ஆட வேணும் என்று பல காலம் அபேஷிக்கிறதும் –
அந்த சேஷ்டித அனுபவம் பண்ணுகிறதுமே அவளோடு இவருக்கு சாம்யம் –

மயர்வற மதிநலம் பெற்றவர் ஆகையாலே -அவன் படிகள் அடங்கலும் பிரகாசிக்கையாலே –
தர்ம ஐக்யத்தாலே –
அவதாந்தர சேஷ்டிதங்களையும் –
இவ் அவதாரம் தன்னில் உத்தர கால சேஷ்டித விசேஷங்களையும் –
பரத்வாதிகளில் உண்டான படிகளையும் –
உகந்து அருளின நிலங்களில் நிலையால் தோற்றுகிற குண விசேஷங்களை எல்லாம் –
தம்முடைய பிரேம அதிசயத்தாலே –
இவ் வஸ்துவுக்கு விசேஷமாக்கி கொண்டு –
புகழ்ந்து –
அந்த சேஷ்டித ரசத்தை அனுபவிக்கிறது இவருக்கு விசேஷம் –

——

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா
ஊழி தோறு ஊழி பல ஆலின் இலை அதன் மேல்
பைய வுயோகு துயில் கொண்ட பரம் பரனே
பங்கயம் நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி
செல்வு  பொலி மகரக் காது திகழ்ந்து இகல
ஐய எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே –1-5-1-

பதவுரை

உய்ய–(ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக
உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்து
(பின்பு ப்ரளயம் வந்த போது அவற்றை)
உண்ட–உள்ளே வைத்து ரக்ஷித்த
மணி வயிறா–அழகிய வயிற்றை யுடையவளே
பல ஊழி ஊழி தொறு–பல கல்பங்கள் தோறும்
ஆலின் இலை அதன் மேல்–ஆலிலையின் மேல்
பைய–மெள்ள
உயோகு துயில் கொண்ட– யோக நித்திரை செய்தருளின
பரம் பரனே–பர ஸ்மாத் பரனானவனே!
பங்கயம்–தாமரை மலர் போன்று
நீள்–நீண்டிருக்கின்ற
நயனம்–திருக் கண்களையும்
அஞ்சனம்–மை போன்ற
மேனியனே ஐய–திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
செய்யவள்–செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக் கிருப்பிடமான
நின் அகலம்–உன் திரு மார்வானது
(இந் நிர்த்தனத்தால் அசையாமல்)
சேமம் என கருதி–ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு
செல்வு பொலி–ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான
மகரம்–திரு மகரக் குழைகளோடு கூடின
காது–திருக் காதுகளானவை
திகழ்ந்து இலக–மிகவும் விளங்கும்படி
எனக்கு–எனக்காக
ஒரு கால்–ஒரு விசை
செங்கீரை ஆடுக–செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்–இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே–போர் செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!! –

பைய வுயோகு துயில் கொண்ட–அவ் ஆல் இலை அசையாதபடி -மெள்ள யோக நித்ரை பண்ணி அருளின
செய்யவள் -செந்தாமரையில் பிறந்த பிராட்டிக்கு வாசஸ்தானமான
செல்வு பொலி -ஐஸ்வர்ய ஸம்ருத்திக்கு உறுப்பான
செங்கீரை -தாய்மார் முதலானோர் -பிள்ளைகளை தாங்களே அசைத்து ஆடுவிப்பதொரு நர்த்தன விசேஷம்

உய்ய இத்யாதி –
கரண களேபர விதுரராய்-போக மோஷ சூன்யராய் கிடக்கிற ஆத்மாக்கள் –
உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக லோகத்தை சிருஷ்டித்து –
பின்பு அவாந்தர பிரளயம் வர –
அதில் அழியாதபடி உள்ளே வைத்து -நோக்கின அழகிய திரு வயிற்றை உடையவனே

ஊழி தோறு இத்யாதி –
பிரவாஹ ரூபேண வருகிற பல கல்பங்கள் தோறும் -ஜகத்தை அடங்க விழுங்கின
திரு வயிற்றோடே ஒரு பவனான ஆலின் இலை மேலே –
அது அசையாத படி மெள்ள –
யோக நித்ரை பண்ணின பராத் பரன் ஆனவனே

பங்கயம் இத்யாதி –
அந்த சர்வ ஸ்மாத் பரத்வ ஸூசகமாய் –
விகசாதிகளாலே தாமரையை ஒரு போலியாக சொல்லலாம் படியாய் –
அவ்வளவு  இன்றிக்கே
நீண்டு இருக்கிற திருக் கண்களை உடையவனாய் –
அதுக்கு பரபாகமாய் அஞ்சனம் போலே இருக்கிற திரு மேனியை உடையவனே –

(அதீர்க்கம் -அப்ரேம -க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர -அந்தக்கரணம் பஸ்யதாம் -கதம் நிதர்சனம் வாநாத்ரி -விசால நேத்ரம் –
ஆலை இல்லா ஊருக்கு -இலுப்பைப் பூ சக்கரை போல் போலியாக தானே சொல்லலாம் )

செய்யவள் இத்யாதி –
பெரிய பிராட்டியாருக்கு வாசஸ் ஸ்தானமான உன்னுடைய திரு மார்பானது –
இந்த நர்த்தத்தாலே அசையாதே ரஷையை உடையதாக வேணும் என்று நினைத்து கொண்டு –
ஐச்வர்யத்துக்கு ஸம்ருத்திக்கு ஸூசகமான திரு மகர குழைகளோடு கூடின திருக் காதுகள் ஆனவை –
உஜ்ஜ்வலமாய் கொண்டு விளங்க –

ஐய இத்யாதி –
ஐயனே என் பொருட்டாக ஒருகால் செங்கீரை ஆடி அருள வேணும் –

ஆயர்கள் இத்யாதி –
ஆயர்களுக்கு என்னுடையவன் என்னும்படி -பவ்யனாய் –
அத்தாலே யுத்தோன்முகமான ரிஷபம் போலே செருக்கி இருக்கிறவனே –
ஆடி அருள வேணும் -ஆடி அருள வேணும் –

செங்கீரை -தாய்மார் முதலானோர் -பிள்ளைகளை தாங்களே அசைத்து ஆடுவிப்பதொரு நர்த்தன விசேஷம்

—————————————————————-

கோளரி அரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம்
குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி
மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர
காள நல் மேகமவை கல்லோடு கார் பொழிய
கருதி வரை குடையாக காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால்  ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே –1-5-2-

(கால் பொழிய கார் பொழிய பாட பேதம் -காற்று மேகம்
பெரும் காற்றோடு கல் வர்ஷமாக வர்ஷிக்க –
அன்றிக்கே –
கார் -என்ற பாடமான போது-
கல்லோடு கூட வர்ஷத்தை சொரிய என்று பொருளாக கடவது – )

பதவுரை

கோன்–வலிமையை யுடைய
அரியின்–(நா) சிங்கத்தின்
உருவம் கொண்டு–வேஷங்கொண்டு
அவுணன்–ஹிரண்யாஸுரனுடைய
உடலம்–சரீரத்தில்
குருதி–ரத்தமானது
குழம்பி எழ–குழம்பிக் கிளரும்படியாகவும்
அவன்-அவ்வஸுரனானவன்
மீள–மறுபடியும்
மகனை–தன் மகனான ப்ரஹ்லாதனை
மெய்ம்மை கொள கருதி–ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி
கூர் உகிரால்–கூர்மையான நகங்களாலே
குடைவாய்–(அவ் வசுரனுடலைக்) கிழித்தருளினவனே!
மேலை–மேன்மை பொருந்திய
அமரர் பதி–தேவேந்திரன்
மிக்கு வெகுண்டு வா–மிகவும் கோபித்துவா (அதனால்)
காளம்–கறுத்த
நில்–சிறந்த
மேகம் அவை–மேகங்களானவை
கல்லொடு–கல்லோடு கூடின
கார் பொழிய–வர்ஷத்தைச் சொரிய-(கால் பொழிய கார் பொழிய பாட பேதம்-காற்று மேகம் )
கருதி–(‘இம் மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து
வரை–(அந்த) கோவர்த்தந கிரியை
குடையா–குடையாகக் கொண்டு
காலிகள்–பசுக்களை
காப்பவனே–ரக்ஷித்தருளினவனே!
ஆள–(இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண் பிள்ளைத் தனமுடையவனே!
எனக்கு. . . . . ஆடுக-.

மெய்மை கொள-சத்தியவாதி என்று நினைக்கும் படியாகவும் –
ஆள -இப்படி ரஷித்த ஆண் பிள்ளை தனம் உடையவனே –

தேவர்கள் கொடுத்த வரத்துக்கு விரோதம் அற-அவனை நிரசிகைக்காக மிடுக்கை
உடைத்தான நரசிம்ஹ வேஷத்தை பரிகரித்து கொண்டு –
பாபிஷ்டனான ஹிரண்யாசுரனுடைய-வர பல புஜ பலங்களால் உண்டான செருக்காலே –
மிடியற வளர்ந்த சரீரம் ஆனது ரத்தம் குழம்பிக் கிளரும்படியாகவும் –
(எங்கும் உளன் கண்ணன் -)சர்வத்ஸ்ர அஸ்தி -என்று சொன்ன வார்த்தையை பொய் என்று –
இங்கு இல்லை என்று தான் –
அளந்திட்ட தூணை தட்டின அவன் –
மனசு புரிந்து – ஸ்வ புத்ரனானவனை -சத்தியவாதி -என்று கொள்ளும்படியாகவும் -திரு உள்ளம் பற்றி –
ஆயுதம் எடுக்க ஒண்ணாதது கொண்டு -முழு கூர்மையான திரு உகிர்களாலே –
ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிக் குடைந்தவனே  –

மீள என்ற இது –
இல்லை -என்ற மனசு புரிந்தபடி –

மெய்ம்மை கொள என்ற இது –
மெய்ம்மையை உடையவனாக நினைக்க என்றபடி –

மேலை இத்யாதி –
ஐஸ்வர்யத்தாலும் -ஆயுஸ்ஸாலும் இவ் அருகில் உள்ளாரில் காட்டிலும் –
மேலாய் இருக்கிற தேவர்களுக்கு எல்லாம் அதிபதியான இந்த்ரன் –
எனக்கு இட்ட சோற்றை உண்டவனார் -என்று பசியாலே மிகவும் கோபித்து வர –
கடலை வற்றும் படி பருகையாலே கறுத்து-
ஸ்வாமி சொன்ன கார்யம் செய்கையாகிற நன்மையை உடைய மேகங்கள் ஆனவை –
பெரும் காற்றோடு கல் வர்ஷமாக வர்ஷிக்க –
அன்றிக்கே –
கார் -என்ற பாடமான போது-
கல்லோடு கூட வர்ஷத்தை சொரிய என்று பொருளாகக் கடவது –

கருதி -இத்யாதி –
இம் மலையே உங்களுக்கு ரஷகம் –
இச் சோற்றை இதுக்கு இடும் கோள் என்று
அடியில் அருளி செய்ததை நினைத்து
அம் மலை தன்னையே குடையாக கொண்டு பசுக்களை ரஷித்தவனே –

இடையரும் இடைச்சிகளையும் ரஷித்த -என்னாதே-
காலிகள் காப்பவனே -என்றது –
ரஷ்ய வர்க்கத்தில் பிரதானம் இவை என்று தோற்றுகைக்காக-
பண்ணின உபகாரம் அறிவதும் இவை இறே-

ஆள –
இப்படி ரஷித்த ஆண்மையை உடையவனே என்னுதல்-
என்னுடைய அபேஷிதம் செய்து -என்னை ஆளும்படியாக என்னுதல் –

எனக்காக ஒருகால் செங்கீரை ஆடி அருள வேணும் –

——————————-

நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே
நாபி உள் கமலம் நான்முகனுக்கு
ஒருகால் தம்மனை ஆனவனே
தரணி தலம் முழுதும் தாரைகையின் உலகும் தடவி
அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே
வேழமும் யேழ் விடையும் விரவிய
வேலை அதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1-5-3-

பதவுரை

நம்முடை–எங்களுக்கு
நாயகனே–நாதனானவனே!
நால் மறையின்–நாலு வேதங்களுடைய
பொருளே–பொருளாயிருப்பவனே!
நாபியுள்–திருநாபியில் முளைத்திராநின்ற
நல் கமலம்–நல்ல தாமரைமலரிற் பிறந்த
நான்முகனுக்கு–பிரமனுக்கு
ஒருகால்–அவன் வேதத்தைப் பறி கொடுத்துத் திகைத்த காலத்தில்
தம்மனை ஆனவனே–தாய் போலே பரிந்து அருளினவனே!
தரணி தலம் முழுதும்–பூமி யடங்கலும்
தாரகையின் உலகும்–நக்ஷத்ர லோக மடங்கலும்
தடவி–திருவடிகளால் ஸ்பர்சித்து
அதன் புறமும்–அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
விம்ம–பூர்ணமாம்படி
வளர்ந்தவனே–த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே!
வேழமும்–குவலயாபீடமென்ற யானையும்
ஏழ் விடையும்–ஏழு ரிஷபங்களும்
விரவிய–(உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த
வேலைதனுள்–ஸமயத்திலே
வென்று–(அவற்றை) ஜயித்து
வருமவனே–வந்தவனே!
அம்ம–ஸ்வாமியானவனே!
எனக்கு . . . ஆடுக.

எங்களுக்கு நிர்வாகன் ஆனவனே-
நாலு வகைப் பட்ட வேதங்களுக்கும் பிரதான பிரதிபாத்யன் ஆனவனே –
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்யே-என்றான் இறே-

திரு நாபியிலே உத்பன்னமாய் -விலஷணமாய்-இருந்துள்ள தாமரையை பிறப்பிடமாக உடைய
சதுர் முகனுக்கு ஒரு காலத்திலேயே தாய் போலே பரிவன் ஆனவனே –
தம்மனை -தாய் –
(மனை இருப்பிடம்
அன்னை போல் வேதம் உபதேசித்து அருளினவன் )

மது கைடபர்கள் கையிலே வேதத்தை பறி கொடுத்து –
வேதாமே பரமஞ்ச சஷூர் வேதாமே பரமம் தனம் -என்று
அவன் கண் இழந்தேன் தனம் இழந்தேன் -என்று கிலேசப்பட –
அவற்றை மீட்டு கொடுத்து ரஷித்த படியாலே –
ஒருகால் தம்மனை யானவனே -என்கிறது –

பூதலம் அடங்கலும் நஷத்திர லோகமும் நிலா தென்றல் போலே திரு வடிகளால் ஸ்பர்சித்து-
அதுக்கு புறம்புள்ள தேசம் எங்கும் ஒக்க பரி பூரணனாம் படி வளர்ந்தவனே –
இத்தால் ஆஸ்ரிதனான இந்த்ரன் உடைய அபேஷித சம்விதானம் தலைக் கட்டுகைகாக செய்த வியாபாரம் சொல்லிற்று –

குவலயா பீடமும் -சப்த ரிஷபங்களும் நலிவதாக உன்னோடு வந்து கலசின அளவிலே
அவற்றை ஜெயித்து வருபவனே –
வேழத்தையும் ரிஷபத்தையும் ஜெயித்தது -பின்ன காலத்திலேயே யாய் இருக்க செய்தேயும் –
ஏக காலத்திலேயே போலே அருளி செய்தது –
விரோதி நிரசனத்தில் த்வ்ரையாலே

இத்தால்
ஸ்ரீ மதுரையில் பெண்களுக்கும் நப்பின்னை பிராட்டிக்கும் ப்ரிய கரமாம்படியாக
செய்த வியாபாரங்கள் சொல்லப்பட்டன –

அம்மா -சுவாமி

———————————-

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள
வஞ்ச முலை பேயின் நஞ்சமது உண்டவனே
கானக வல் விளவின் காய் யுதிரக் கருதி
கன்றது கொண்டு எறியும் கரு நிற என்  கன்றே –
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகம்
என்பவர் தாம் மடிய செரு வதிரச் செல்லும்
ஆனை! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே – 1-5 4-

பதவுரை

வானவர் தாம்–தேவர்கள்
மகிழ– மகிழும் படியாகவும்
வல் சகடம்–வலியுள்ள சகடாஸுரன்
உருள–உருண்டு உருமாய்ந்து போம்படி யாகவும்
வஞ்சம்-வஞ்சனையை உடையளான
பேயின்–பூதனையினுடைய
முலை–முலை மேல் தடவிக் கிடந்த
நஞ்சு–விஷத்தை
அமுது உண்டவனே–அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே!
(நஞ்சு அம்ருதமாகும் முஹூர்த்தத்தில் திரு அவதரித்து அமுது செய் தருளினவனே! )
கானகம்–காட்டிலுள்ளதான
வல்–வலிமை பொருந்திய
விளவின்–விளா மரத்தினுடைய
காய்–காய்களானவை
உதிர–உதிரும்படி
கருதி–திருவுள்ளத்திற் கொண்டு
கன்று அது கொண்டு–கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு
எறியும்–(விளவின் மேல்) எறிந்தவனாய்
கரு நிறம்–கறுத்த நிறத்தை யுடையனாய்
என் கன்றே–என்னுடைய கன்றானவனே!
தேனுகனும்–தேனுகாஸுரனும்
முரனும்–முராஸுரனும்
திண் திறல்–திண்ணிய வலிவை யுடையனாய்
வெம்–கொடுமை யுடையனான
நரகன்–நரகாஸுரனும்
என்பவர் தாம்–என்றிப்படி சொல்லப் படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும்
மடிய–மாளும்படியாக
செரு–யுத்தத்திலே
அதிர–மிடுக்கை உடையயனாய்க் கொண்டு
செல்லும்–எழுந்தருளுமவனான
ஆனை–ஆனை போன்ற கண்ணனே!
எனக்கு . . . ஆடுக-.

பூபார நிரசன அர்த்தமாக அர்த்தித்து அவதரிப்பித்த தேவர்கள் –
பருவம் நிரம்புவதற்கு முன்னே தொடங்கி-ஆசூர பிரகர்திகளை நிரசிக்கிறபடியை கண்டு
ப்ரீதராம் படியாக –
ஆசூர விஷ்டமாய் கொண்டு -கண் வளருகிற இடத்திலே –
நலிய வந்த பிரபலமான சகடத்தை -முலை வரவு தாழ்த்து சீறி நிமிர்த்த திருவடிகளால் -கட்டழிந்து சிதறி உருளப் பண்ணி –
பெற்ற தாய் போல் வஞ்சித்து வந்த பேய்ச்சி உடைய முலையில் -அந்த கொடிதான நஞ்சை -பிராண சஹிதமாக உண்டவனே –

நஞ்சமுது  உண்டவனே -என்ற பாடம் ஆன போது –
நஞ்சை அமுதமாக உண்டவன் என்று -பொருளாக கடவது –
ஸ்தந்யம் தத் விஷ சம்மிச்ரம் ரச்யமாசீ ஜகத் குரோ -( ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னக் கடவது இறே –

காட்டில் கன்றுகள் மேய்க்க போன இடத்தில் -விளாவான வடிவை கொண்டும் -கன்றான வடிவைக் கொண்டும் –
சில அசுரர்கள் தன்னை நலிவதாக வந்து நிற்க –
அவற்றிலே ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து-
இரண்டையும் முடித்த படியை -சொல்லுகிறது –

காட்டிலே நிற்கிற வலிய விளாவினுடைய காய்களானவை உதிரும்படியாக  கருதி -கன்றான அத்தை கொண்டு எறிந்து –
கருத்த நிறத்தை உடைய -என்னுடைய கன்றாய் நின்றவனே –

இத்தால் விரோதி நிரசனம் பண்ணுகையாலே புகர் பெற்ற படியும் –
எல்லாத் தசையிலும் -ஆஸ்ரிதருக்கு பவ்யனாய் இருக்கும் படியும் சொல்லுகிறது –

என் கன்றே -என்றது –
உகப்பின் கார்யமான அக்றிணை சொல்லு –

தேனுகனான அசுரனும் -முராசுனனும்-திண்ணினதான திறல  உடையவனாய் -அதி க்ரூரனாய் இருக்கிற -நரகாசுரனும் -என்று
சொல்லப் படுகிறவர்கள்-தாங்களடைய  நசித்து போம்படியாக யுத்தத்திலே முடிகி சென்ற ஆனையானவனே –

ஆனை போல் என்னாதே ஆனை -என்றது முற்று உவமை-

———————————————————-

மத்தளவும் தயிரும் வார் குழல் நல் மடவார்
வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
யூறு கரத்தினோடு  முந்திய  வெம் திறலோய்
முத்து இன் இள முறுவல் முற்ற வருவதன் முன்
முன்னம் முகத்து அணியார் மொய் குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1-5-5-

பதவுரை

வார் குழல்–நீண்ட மயிர் முடியை யுடையராய்
நல் மடவார்–நன்மையையும் மடப்பத்தை யுமுடையரான ஸ்த்ரீகள்
வைத்தன–சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து–மத்தாலே
அளவும்–அளாவிக் கடைகைக்கு உரிய
தயிரும்–தயிரையும்
நெய்–நெய்யையும்
களவால்–திருட்டு வழியாலே
வாரி–கைகளால் அள்ளி
விழுங்கி–வயிறார உண்டு
உன்னிய–உன்னை நலிய வேணும் என்னும் நினைவை யுடையராய்
ஒருங்கு–ஒருபடிப்பட
ஒத்த–மனம் ஒத்தவர்களாய்
இணை மருதம்–இரட்டை மருத மரமாய்க் கொண்டு
வந்தவரை–வந்து நின்ற அஸுரர்களை
ஊரு கரத்தினொடும்–துடைகளாலும் கைகளாலும் (ஊரு கரம் -வடமொழி சொற்கள் )
உந்திய–இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
வெம்திறவோய்–வெவ்விய வலிவை யுடையவனே!
அத்த–அப்பனே!
முத்து–திரு முத்துக்கள் தோன்றும்படி
இன்–இனிதான
இள முறுவல்–மந்தஹாஸமானது
முற்ற–பூர்ணமாக
வருவதன் முன்–வெளி வருவதற்கு முன்னே
முன்னம் முகத்து–முன் முகத்திலே
அணி ஆர்–அழகு மிகப் பெற்று
மொய்–நெருங்கி யிரா நின்ற
குழல்கள்–திருக் குழல்களானவை
அலைய–தாழ்ந்து அசையும்படி
எனக்கு . . . . ஆடுக-.

பவ்யமான குழல் அழகை உடைய இடைச்சிகள் சேமித்து வைத்த வெண்ணெய்
அபி நிவேசத்தால் வாரி அமுது செய்து
ஸூவ வேஷம் தெரியாத படி இரட்டை மருத மரங்களாக வந்தவரை
யூறு கரத்தினோடு-துடைகளாலும் கைகளாலும்-
தன்னில் ஒத்து உன்னிய மருதமாய் வந்தவரை
ஒருங்கே சேர மறிந்து விழும்படி
திருத் துடையாலும் திருத் தோள்களாலும் தள்ளின கடிய சாமர்த்தியத்தை யுடையவனே –

மத்தாலே அளாவிக் கடைகைக்கு யோக்யமான தயிரும் –
முன்பு கடைந்த வெண்ணெய் உருக்கின நெய்யும் –
திரு முத்துக்கள் தோன்றும்படி இனிதான மந்த ஸ்மிதமானது பூரணமாக வருவதற்கு முன்னே –
முன் முகத்திலே அழகு மிக்க செறிந்து உள்ள திரு குழல்கள் ஆனவை –
வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்கிறபடியாக
திரு பவளத்தை மறைக்கும் படியாக தாழ்ந்து அலையும் படியாக-

—————————————————–

மொய் செறிவு காயா மலர் நிறவா! கரு முகில் போல் உருவா!
கானகம் மா மடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா!
துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே!
ஆயம் அறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை
அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – 1-5-6-

பதவுரை

காய மலர்–காயாம் பூப் போன்ற
நிறவா–நிறத்தை யுடையவனே!
கரு முகில் போல்–காள மேகம் போன்ற
உருவா–ரூபத்தை யுடையவனே
கானகம்–காட்டில்
மா மடுவில்–பெரிய மடுவினுள்ளே கிடந்த
காளியன்–காளிய நாகத்தினுடைய
உச்சியிலே–தலையின் மீது
தூய–மனோ ஹரமான
நடம்–நர்த்தநத்தை
பயிலும்–செய்தருளின
சுந்தர–அழகை யுடையவனே!
என் சிறுவா–எனக்குப் பிள்ளை யானவனே!
துங்கம்–உன்னதமாய்
மதம்–மதத்தை யுடைத்தான
கரியின்–குவலயாபீடமென்னும் யானையினது
கொம்பு–தந்தங்களை
பறித்தவனே–முறித்தருளினவனே!
ஆயம் அறிந்து–(மல்ல யுத்தம்) செய்யும் வகை யறிந்து
பொருவான்–யுத்தம் செய்வதற்காக
எதிர் வந்த–எதிர்த்து வந்த
மல்லை–மல்லர்களை
அந்தரம் இன்றி–(உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி
அழித்து–த்வம்ஸம் செய்து
ஆடிய–(இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த
தாள் இணையாய்–திருவடிகளை யுடையவனே!
ஆய–ஆயனே!
எனக்கு. . . ஆடுக-.

ஆயம் அறிந்து -மல்ல யுத்தம்  செய்யும் வகை அறிந்து
அந்தரம் இன்றி -உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி
ஆடிய -இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்த

காயா என்பதை காய சுருங்கி உள்ளது
நெய்ப்பாலும் நைல்யத்தாலும் காயம் பூ போல் இருக்கிற நிறத்தை உடையவனே –

இருட்சியாலும் குளிர்ச்சியாலும் காள மேகம் போலே வடிவை உடையவனே

காட்டிடத்திலே பெரிய மடுவினுள்ளே கிடந்த காளியனை அலைத்து கிளப்பி –
குரோதத்தாலே விஸ்தாரமான அவன் சிரச்சிலே ச லஷணம் ஆகையாலே –
அழகியதாய் இருந்துள்ள நர்த்தநத்தை நெருங்க செய்த அழகை உடைய –
என் பிள்ளை யானவனே –

பெரிய உயர்த்தியை உடைத்தாய் -மத முதிதமான குவலயா பீடத்தினுடைய கொம்புகளை –
அநாயாசேன பிடுங்கினவனே-

மல் பொரும் கூறு அறிந்த பொரு வதாக எதிர்த்து வந்த மல்லரை
வியாபரிக்கைக்கு இடம் இல்லாமல் -நிரசித்த
இன்னம் வருவார் உண்டோ என்று மனோ ஹர மான
இடை வெளி இல்லாமல்
அபாயம் இல்லாமல் என்றுமாம்
அவர்களே தங்களில் மாய்ந்து போம்படி என்றுமாம் –

——————————-

துப்புடை யாயர்கள் தம் சொல் வழுவா தொரு கால்
தூய கரும் குழல் நல்  தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழ் அவிய
நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத்
தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1 5-7 –

பதவுரை

துப்பு உடை–நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான
ஆயர்கள் தம்–இடையர்களுடைய
சொல்–வார்த்தையை
வழுவாது–தப்பாமல்
ஒரு கால்–ஒரு காலத்திலே
தூய–அழகியதாய்
கரு–கறுத்திரா நின்றுள்ள
குழல்–கூந்தலை யுடையளாய்,
நல் தோகை–நல்ல தோகையை யுடைய
மயில் அனைய–மயில் போன்ற சாயலை யுடையளான
நப்பின்னை தன் திறமா–நப்பின்னைப் பிராட்டிக்காக
நல்–(கொடுமையில்) நன்றான
விடைஏழ்–ரிஷபங்களேழும்
அவிய–முடியும் படியாக
நல்ல திறல் உடைய–நன்றான மிடுக்கை யுடையனாய்
நாதன் ஆனவனே–அவ் விடையர்களுக்கு ஸ்வாமி யானவனே!
தன்–தன்னுடைய
மிகு சோதி–நிரவதிக தேஜோ ரூபமான் பரம பதத்திலே
புக–செல்லும் படியாக
தனி-தனியே
ஒரு-ஒப்பற்ற
தேர்–தேரை
கடலி–கடத்தி
தப்பின–கை தப்பிப் போன
பிள்ளைகளை–வைதிகன் பிள்ளைகளை
தாயொடு கூட்டிய–தாயோடு கூட்டின
என் அப்ப-என் அப்பனே!
எனக்கு. . . . ஆடுக-.

துப்பு -மிடுக்கு –
இத்தால் ஏறு தழுவ வல்ல சாமர்த்தியத்தை சொல்லுதல் –
அன்றிக்கே –
ரிஷபங்களின் வன்மையும் இவன் மென்மையும் பாராதே -இவற்றை தழுவ வேணும் என்ற நெஞ்சு உரமாதல் –

இப்படி இருந்துள்ள இடையர்கள் தங்களுடைய வசனத்தை தப்பாதே
ஒரு கால விசேஷத்திலே –
அழகியதாய் கறுத்து இருந்துள்ள குழலை உடையவளாய் -அத்தாலே
நன்றாக தோகை மயில் போல் இருக்கிற சாயலை உடைய நப்பின்னை பிராட்டி ஹேதுவாக –
இவளோடு சேரலாம் ஆகில் யார் சொல்லிற்று செய்தாலும் நல்லது -என்று இறே
ஆயர்கள் தம் சொல்  வழுவாமல் ஒழிந்தது –

கொடிதான ரிஷபங்கள் ஏழும் விளக்குப் பிணம் போலே அவியும் படியாக –
நன்றாக மிடுக்கை உடையவனாய் -அத்தாலே இடையரும் -எங்கள் குல நாதன் -என்று கொண்டாடும்படி –
அவர்களுக்கு நாதனும் ஆனவனே –

நல் விடை -என்றது –
நல்ல பாம்பு என்னுமா போலே அதனுடைய க்ரௌர்யத்தை பற்ற  –

பிரவசம் அநந்தரம் மாதாவானாவள் காண்பதற்கு முன்னே கை தப்பிப் போன வைதிக புத்ரர்களை –
தன்னுடை சோதி -என்கிறபடியே
தனக்கு அசாதாரணமாய் நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தில் செல்லும்படியாக –
தனியே அத்விதீயமான தேரை நடத்தி –
அத்தை பிரகிருதி மண்டலத்தில் அளவிலே நிறுத்தி –
தானே அருகு சென்று புக்கு -அங்கு நின்றும் கொடு போந்து –
மாதாவானவள் -என் பிள்ளைகள் -என்று உச்சி மோந்து எடுக்கும்படி அவளோடு கூட்டினவனாய் –

ஆஸ்ரிதர் கார்யம் செய்து
அவ் வழியாலும் எனக்கு உபகாரன் ஆனவனே

——————————————–

(மங்களா சாசன பரர் ஆகையால் –
பிரளயம் வந்தாலும் அழியாமல் -மதிள்கள் சூழ்ந்த -இவர் திருக்காப்பு அருளிய திரு வெள்ளறை
கற்றவர்கள் தாம் வாழும் கண்ணபுரம் -பிரமேயம் ரக்ஷணம் -கலை இலங்கு மொழியாளர் -அன்றோ -)

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய்  வெள்ளறையாய் மதிள் சூழ்
சோலை மலைக்கு அரசே கண்ண புரத் தமுதே
என் னவலம் களைவாய் ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1 5-8 –

பதவுரை

மன்னு–(ப்ரளயத்துக்கு மழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ
குறுங்குடியாய்–திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே!
வெள்ளறையாய்–திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ்–மதிளாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு–திருமாலிருஞ்சோலை மலைக்கு
அரசே–அதிபதியானவனே!
கண்ணபுரத்து–திருக் கண்ண புரத்திலே நிற்கிற
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் அவலம்–என் துன்பங்களை
களைவாய்–நீக்குபவனே!
உன்னை–(மகோ உதாரனான ) உன்னை
ஒக்கலையில்–இடுப்பிலே
கொண்டு–எடுத்துக் கொண்டு
தம் இல்–தங்கள் அகங்களிலே
மருவி–சேர்ந்து
உன்னொடு–உன்னோடு
தங்கள்–தங்களுடைய
கருத்து ஆயின செய்து–நினைவுக்குத் தக்கபடி பரிமாறி
வரும்–மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற
கன்னியரும்-இளம் பெண்களும்
மகிழ–(இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும் படியாகவும்
கண்டவர்–(மற்றும்) பார்த்தவர்களுடைய
கண்–கண்களானவை
குளிர–குளிரும் படியாகவும்
கற்றவர்–(கவி சொல்லக்) கற்றவர்கள்
தெற்றி வர–பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படி யாகவும்
பெற்ற–உன்னை மகனாகப் பெற்ற
எனக்கு–என் விஷயத்திலே
அருளி–கிருபை செய்து
செங்கீரை ஆடுக-;
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமி யானவளே!
ஆடுக ஆடுக-.

மன்னு -பிரளயத்திலும் அழியாத
தமில் -தம் இல் -தங்கள் அகங்களிலே
கற்றவர் -நாலு சொல் தொடுக்க கற்றவர்கள்
தெற்றி வர -பிள்ளை கவிகள் தொடுத்து வர

உன்னையும் –
மனோ ஹாரியான உன்னையும்
சௌந்தர்யாதிகளாலே திருஷ்டி சித்த அபஹாரியான உன்னையும் மருங்கிலே எடுத்து கொண்டு –
தங்கள் கிருஹங்களிலே சேர்ந்து -இது என்ன அருமை தான் –
இவன் மருங்கிலே இருக்க
இவர்கள் தங்கள் க்ரஹங்கள் அறிந்து -போன படி என் என்ற கருத்து –

ஈதர்சனான உன்னொடு -தங்கள் நினைவுக்கு தக்கபடி பரிமாறி –
மீளவும் கொண்டு வாரா நிற்கும்
பாலைகள் ஆனவர்களும் -இச் சேஷ்டிதத்தை கண்டு உகக்கும் படியாக –
இத்தால் தனி இடத்திலே யவ்வன அவஸ்தனாய் தங்களோடே பரிமாறும் அவன் –
மாதர் சன்னதியில் இப்படி சைசா அவஸ்தனாய் செய்கிற சேஷ்டிதம் கண்டால்
அவர்கள் உகப்பார்கள் என்று கருத்து –

(தாயார் இடம் இருக்க பாலைகள் போலவும் இவர்கள் மட்டும் இருக்க யுவாவாகவும் –
இருப்பது கண்டு உகப்பார்களே )

ஆரேனுமாக இச் சேஷ்டிதங்களை காண்பவர்கள் கண்கள் இள நீர் குழம்பு இட்டாப் போலே குளிரும்படியாக –
நாலு சப்தம் தொடுக்க கற்றவர்கள் உன்னிடைய பால சேஷ்டித ரசத்தை கண்டு –
பிள்ளைக் கவிகள் தொடுத்து வர –
உன்னைப் பிள்ளையாக பெற்ற எனக்கு பிரசாதத்தை பண்ணி –
இது மேலே அன்வயிக்க கடவது –

(இவருக்கு ஆசையே அனைவரும் இவர் போல் மங்களா சாசன பரராகவும்
பிள்ளைத்தமிழ் பாடுவாராகவும் ஆக வேண்டும் என்பதே )

மன்னு குறுங்குடியாய் –
திருக் குருங்குடியிலே நித்ய வாசம் பண்ணுகிறவனே –
நப்லாவயதி சாகர -என்னா நின்றது இறே –
(கடல் வசுதேவர் திருமாளிகையை அழிக்க வில்லை -புராண ஸ்லோகம் )
பிரளயத்தில் அழியாத திருக்குறுங்குடி என்றே உகப்பார் இவர்

அவ்வளவு இன்றிக்கே
திரு வெள்ளறையிலும் நித்ய வாசம் பண்ணுகிறவனே-

அரணாக போரும்படியான மதிளாலே சூழப் பட்ட திருமலைக்கு ராஜாவாக கொண்டு
ஈரரசு தவிர்த்து நின்றவனே –

சர்வ ஜன போக்யமாம்படி திருக் கண்ண புரத்திலே நிற்கிற அமிர்தமே –

என்னுடைய அவத்யத்தை போக்குமவனே -அதாவது –
எனக்கு பவ்யனாக நான் சொன்னபடி செய்கையாலே
நீ அநியாம்யனான போது நான் படும் கிலேசத்தை போக்குமவனே -என்கை

இப்படி இருக்கிற நீ செங்கீரை ஆடி அருள வேணும் –
சமஸ்த லோகங்களுக்கும் ஸ்வாமி யானவனே –
ஆடி அருள வேணும் என்கை –

மன்னு குறும் குடியாய் -என்று தொடங்கி-என் அவலம் களைவாய் -என்று சம்போதித்து-
உன்னையும் ஒக்கலையில் -என்று தொடங்கி -பெற்ற எனக்கு அருளி -ஆடுக செங்கீரை –
என்று அந்வயம்-

—————————————————

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும்
பங்கய நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைப்  போல் சில பல் லிலக
நீல நிறத் தழகார் ஐம் படையின் நடுவே
நின் கனி வாயமுதமும் இற்று முறிந்து விழ
ஏலு மறைப் பொருளே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1-5-9-

பதவுரை

மறை–வேதத்தினுடைய
ஏலும்–தகுதியான
பொருளே–அர்த்தமானவனே!
பாலொடு–பாலோடே கூட
நெய்–நெய்யும்
தயிர்–தயிரும்
ஒண் சாந்தொடு–அழகிய சந்தநமும்
செண்பகமும்–செண்பகம் முதலிய மலர்களும்
பங்கயம்–தாமரைப் பூவும்
நல்ல–உத்தமமான
கருப்பூரமும்–பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை
நாறி வர–கலந்து பரிமளிக்க
கோலம்–அழகிய
நறு பவளம்–நற் பவளம் போல்
செம்–அழகியதாய்
துவர்–சிவந்திருக்கிற
வாயின் இடை–திருவதரத்தினுள்ளே
கோமளம்–இளையதான
வெள்ளி முளை போல்–வெள்ளி முளை போலே
சில பல்–சில திரு முத்துக்கள்
இலக–விளங்க
நீலம் நிறத்து–நீல நிறத்தை யுடைத்தாய்
அழகு ஆர்–அழகு நிறைந்திரா நின்ற
ஐம்படையின் நடுவே–பஞ்சாயுதத்தின் நடுவே
நின்–உன்னுடைய
கனி–கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தில் ஊறுகின்ற
அமுதம்–அம்ருத ஜலமானது
இற்று முறிந்து விழ–இற்றிற்று விழ
ஆடுக-.

பாலொடு கூட நெய்யும் தயிருமாகிய கவ்யங்களை பலகாலும் அமுது செய்கையாலும் –
(கவ்யங்களை -மஹிஷாதிகள் ஹிதம் ஆகாதே சின்னக் குழந்தைக்கு )
திருமேனியிலே அழகிய சாந்தும் செண்பகம் முதலானவற்றை பலகாலும் சாத்துகையாலும் –
திருமேனி அசைகையாலே அவையும் ஹர்ஷத்தாலே –
கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ- என்னும்படியான திருப் பவளம் விகசிக்கையாலே-
(சாத்திக் கொண்டு கந்தம் அல்லவே ஸ்வாபாவிகம் -இயற்க்கை அன்றோ )
பங்கஜமும் நல்ல கற்பூரமும் ஆகிற அவையும் தன்னிலே கலந்து கந்தித்து வர –

(திரு மேனியில் கந்தங்கள் சொல்லி
மீளவும் பங்கஜம் இத்யாதி
பிராமண பூர்விகமாக இயற்கையாக -ஆண்டாள் பாசுரம் பிரமாணம் –
மேலும் பிரமாணங்கள்
பத்ம வர்ணம் வதனம் ஸூ கேசாந்தம் பத்ம உசுவாசம் கதா ராமன் வதனம்
ஸத்ருசம் சரத்கால இந்திரன் -ஸூ காந்தி மம நாதஸ்ய -)

தர்சநீயமாய் -பரிமளிதமான பவளம் போல் அழகியதாய் –
(இல் பொருள் உவமை )
சிவந்து இருக்கிற திரு அவதரத்தினுள்ளே –
இளையதான வெள்ளி அரும்பு போலே சில முத்துகள் விளங்க –

நீலமான திருமேனி நிறத்துக்கு -பரபாகத்தாலே அழகு மிக்கு இருக்கிற
ஸ்ரீ பஞ்ச ஆயுதத்தின் நடுவே –
(திருமார்புக்கு சாத்தும் ஐம்படைத் தாலியைச் சொன்னவாறு )
உன்னுடைய பக்வ பலம் போலே இருக்கிற திருப் பவளத்தில் ஊருகிற வாக் அமிர்த ஜலம் ஆனது இற்று இற்று விழ –

தகுதியான வேதார்த்தமானவனே-
வேதைஸ் சர்வை ரஹமேவ வேத்யே -என்கிறபடியே
வேதத்துக்கு அநு ரூபமான அர்த்தம் அவன் இறே-

(தேவம் கேசவன் -சாஸ்திரம் வேதம் -சர்வ உத்க்ருஷ்டம்
பிரமேய பிராமண சிறப்பு பொருந்தும் )

———————————————————

(அனந்தாழ்வான் -பட்டர் -தூக்கி எங்கள் குடிக்கு அரசே -தோள்களில் தூக்கி கொண்டாடினாராம் –
மர்மம் அறிந்தவர்
ராமானுஜர் -அருளிச் செய்ய -நாமே அவர் -அவதார விசேஷம் )

செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம் படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –

பதவுரை

எங்கள் குடிக்கு–எங்கள் வம்சத்துக்கு
அரசே–ராஜாவானவனே!
செம் கமலம்–செந்தாமரைப் பூப் போன்ற
கழலில்–திருவடிகளில்
சிறு இதழ் போல்–(அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
விரலில்–திரு விரல்களில்
சேர் திகழ்–சேர்ந்து விளங்கா நின்ற
ஆழிகளும்–திருவாழி மோதிரங்களும்
கிண் கிணியும்– திருவடி சதங்கைகளும்
அரையில் தங்கிய–அரையில் சாத்தி யிருந்த
பொன் வடமும்–பொன் அரை நாணும்
(பொன்) தாள–பொன்னால் செய்த காம்பையுடைய
நல்–நல்லதான
மாதுளையின் பூவொடு–மாதுளம் பூக் கோவையும்
பொன் மணியும்–(நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும்
மோதிரமும்–திருக் கை மோதிரங்களும்
சிறியும்–(மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும்
மங்கலம்–மங்களாவஹமான
ஐம் படையும்–பஞ்சாயுதமும்-ஐம்படைத் தாலி –
தோள் வளையும்–திருத் தோள் வளைகளும்
குழையும்–காதணிகளும்
மகரமும்–மகர குண்டலங்களும்
வாளிகளும்–(திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும்
சுட்டியும்–திரு நெற்றிச் சுட்டியும்
ஒத்து–அமைந்து
இலக–விளங்கும்படி
ஆடுக. . . ஆடுக. –.

சிவந்த கமலம் போலே இருக்கிற திருவடிகளில் –
அதில் உள் இதழ் போல் இருக்கிற சிறுகி இருக்கிற திரு விரல்களிலே –
சகஜம் (கூடவே பிறந்தது )என்னும்படி சேர்ந்து  விளங்கா  நின்ற –
திரு ஆழி மோதிரங்களும் -திருவரையில் கிண் கிணியும் –
(கர்ணன் கூட கவஜ குண்டலத்துடன் பிறந்தான் என்பார்களே )

அன்றிக்கே –
கிண் கினி என்கிற இத்தை கீழோடு சேர்த்து பாதச் சதங்கையாக சொல்லவுமாம்-
சேவடிக் கிண் கினி என்னக் கடவது இறே

திருவரையில் சர்வ காலமும் சாத்தி இருக்கும் பொன்னரை நாணும்
உடையார் கன மணி யோடு ஒண் மாதளம்பூ-(1-3-2) -என்கிறபடியே
தாளை உடைத்தாய் – நன்றான மாதளம் பூவோடே நடு நடுவே கலந்து கோத்த பொன் மணிக் கோவையும் –
திருக்கையில் திரு விரலில் சாத்தின மோதிரங்களும்
மணிக் கட்டில் சாத்தின சிறுப் பவள வடமும் –

திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் –
அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும்
திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் –
திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் = தொங்குகின்ற -சுட்டியும் –

இரண்டு அருகும் அசைந்து ஆடுகையாலே -எல்லாம் சேர ஒளி விட என்னுதல்
திரு மேனிக்கு தகுதியாக பிரகாசிக்க என்னுதல் –

எங்களுடைய குலத்துக்கு ராஜாவானவனே

———————————————————

அவதாரிகை –
நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும்
அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில்
எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –

பதவுரை

அன்னமும்–ஹம்ஸ ரூபியாயும்
மீன் உருவும்–மத்ஸ்ய ரூபியாயும்
ஆள் அரியும்–நர ஸிம்ஹ ரூபியாயும்
குறளும்–வாமந ரூபியாயும்
ஆமையும்–கூர்ம ரூபியாயும்
ஆனவனே–அவதரித்தவனே!
ஆயர்கள்–இடையர்களுக்கு
நாயகனே–தலைவனானவனே!
என் அவலம்–என் துன்பத்தை
களைவாய்–நீக்கினவனே!
செங்கீரை ஆடுக–செங்கீரை ஆட வேணும்
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமி யானவனே!
ஆடுக ஆடுக என்று–பலகாலுமாட வேணும் என்று
அன்னம் நடை–ஹம்ஸ கதியை யுடையனாய்
மடவாள்–நற்குணமுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
உகந்த–உகந்த சொல்லப் பட்ட
பரிசு–ப்ரகாரத்தை
ஆன-பொருந்திய
புகழ்–புகழை யுடையரான
புதுவை பட்டன்–பெரியாழ்வார்
உரைத்த–அருளிச் செய்த
இன் இசை–இனிய இசையை யுடைய
தமிழ் மாலைகள்–தமிழ்த் தொடைகளான
இ பத்து–இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
உலகில்–இந்த லோகத்தில்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலும் (பரந்த)
புகழ்–கீர்த்தியையும்
மிகு இன்பமது–மிக்க இன்பத்தையும்
எய்துவர்–பெறுவார்கள்.

உகந்த பரிசு -உகந்து சொன்ன பிரகாரத்தை –

வேத பிரதமான ஹம்சமும் –
பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும்-
ஹிரண்ய நிரசன அர்த்தமான நரசிம்ஹமும் –
இந்திர அபேஷித சம்விதானம் பண்ணும் வாமனனும்
மந்திர ஆதாரமான கூர்மமும் ஆனவனே –

இத்தால் –
ஆஸ்ரித சம்ரஷித அர்த்தமாக -அசாதாரண திவ்ய விக்ரகத்தை
அழிய மாறிக் கொண்டு –
அவ்வவ தச குண அநு குணமாக -ரஷிக்கும் அவன் என்கை-

(உம்மைத் தொகை ஒவ்வொன்றுக்கும் -அந்த அந்த சேஷ்டிதங்கள்
தனித்தனியே ஆகர்ஷணமாக இருப்பதால் )

ஆயர்கள் நாயகனே –
அவை எல்லாம் போல் அன்றிக்கே –
பூ பார நிர்ஹரணார்த்தமாக அவதரித்து இடையருக்கு தலைவன் ஆனவனே –

என் அவலம் களைவாய் –
எல்லாத் தசையிலும் -உனக்கு என் வருகிறதோ –
என்று வயிறு எரியா நிற்கும் என்னுடைய கிலேசத்தை
உன்னை நோக்கித் தருகையாலே போக்கினவனே-

அன்னம் போல் நடை அழகையும்
பவ்யதையும் உடையவளான யசோதை பிராட்டி
உகந்து சொன்ன பிரகாரத்தை –
ப்ராஹ்மண உத்தமராய் வைத்து கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
அவள் தத் காலத்திலேயே அனுபவித்தால் போலே
பிற் காலத்திலும் அனுபவிக்கையாலே –
அவளில் காட்டிலும் ஸம்ருத்தமான புகழை உடையராய் –

ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாகரான ஸ்ரீ ஆழ்வார் அருளி செய்த -திராவிட ரூபமாய் –
இனியதான இசையோடு கூடி இருந்துள்ள -தொடைகளான இப் பத்தையும் -அப்யசிக்க வல்லவர்கள் –

இந்த லோகத்தில் இருக்க செய்தே எட்டு திக்கிலும் அடங்காத பெரிய புகழை உடையராய் –
அவர்களுக்கு நிலம் அல்லாத பகவத் அனுபவ பரம சுகத்தை ப்ராபிக்க பெறுவார்கள் –

(இந்த லோகத்தில் இருக்க செய்தே -கிருஷ்ண அனுபவம் பெறுவார்கள்
அவர்களுக்கு -நிலம் -அல்லாத -நித்ய ஸூரிகளுக்கும் கிட்டாத பரம ஸூகம் –
அவர்களுக்கு பரமபத நாத அனுபவம் உண்டு
செங்கீரை இத்யாதி அனுபவம் கிட்டாதே )

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம் -48-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

May 24, 2012

(கொட்டாய் பல்லிக்குட்டி -போல் -கத்துவதே
பல்லி விழுந்த பலன் -வருடம் தோறும் எழுதி
அதன் கார்யங்களை ச பலமாக -ஆக்குவார்களே
தலைவி தோளிக்கு நல்ல நிமித்தம் கண்டு ஆஸ்வசிப்பிக்கும்
வேர் குரு -புண்ணில் -அதிலே பிறந்து வளர்ந்து மாயும் கிருமிகள் போல்
பிறந்து சொல்லாமல் மிளிர்ந்து -மின்னல் போல் தோன்றி மறைவதால் –
புழு பூச்சி போல் கிருமி போலும்
பல்லிக்குட்டி போலும்
நைச்ய அனுசந்தானம் பண்ணுகிறார்
என்னை வைத்துக் கொண்டு தன்னைப் பாடுவித்துக் கொண்டானே

என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? -7-9-1-

தன்னைச் சொல்லிய-வேதமே மீண்ட விஷயத்தை -ப்ரதிபாதித்துக் கொண்டானே -திருமாலவன் கவி-
கிருமி போல் பிறந்து பல்லிக்குட்டிப் போல் பேசினாலும் உலகமே கொண்டாடும் படி ஆக்கி அருளினான்
அங்கே போயும் ஏதத் சாம கானம் பாடுவது போல் அன்றோ இங்கும் திவ்ய பிரபந்தம் பாடவே வைக்குதும்
கர்ம சம்பந்தம் இல்லையே உமக்கு
பிரபந்தம் தலைக்கட்ட -நச்சு பொய்கை ஆகாமைக்காக -ஆர்த்தி பெருக்க அன்றோ வைத்தான்
மகிழ்ச்சியில் பாடும் பாசுரம் இது )

அவதாரிகை –
இஸ் சம்சாரத்தில் நம்மை வைத்த இதுக்கு ஹேது ஏதோ -என்று இறே இவர் நொந்தது –
இவருக்கு இவ்விருப்பு நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கலில் இறே –
அங்கன் இன்றிக்கே –
நமக்காக இருக்கிறீர்-என்னும் இடத்தை அறிவிக்கவே இவரை தரிப்பிக்கலாம் –
மேல் இவர் போய் பெற இருக்கிற ஸ்வரூபமும் இதுவே என்று பார்த்து –

வாரீர் நீர் உமக்கு இங்கு ஒரு-சம்பந்தம் உண்டாய் இருக்கிறீர் அல்லீர் –
நமக்காக இருக்கிறீர் அத்தனை –
நாமும் ரசித்து நம்முடையாரும்-ரசிக்கும்படியாக உம்மை கொண்டு
நம் சீல வ்ருத்தங்களை வெளி இடப் பார்த்தது –
அதுக்காக வைத்தோம் இத்தனை காணும் -என்று ஈஸ்வரன் அறிவிக்க –

ஆனால் தட்டென்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்தததுவுமாய்-
நாம் பெற இருக்கிறது இது வாகில் குறை என் -என்று
விஷயீகரித்த படியை கண்டு விஸ்மிதராய்-
அவ்விஷயீ காரத்தை பேசுகிறார்-

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி -நன்னிமித்தம் கண்டு -பல்லிக்குரல் கேட்டதை –
தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்றைக்கும் என்னை -7-9–

பதவுரை

மெல் இயல்–மென்மையான தன்மையையுடைய
ஆக்கை–உடம்பை யுடைத்தான
கிருமி–புழுவானது
குருவில்–புண்ணிலே
மிளிர் தந்து–வெளிப்பட்டு
அதுவே–அவ்விடத்திலேயே
செல்லிய–நடமாடும்படியான
செலதைத்து–ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும்–உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
(அறியமாட்டாது; அதுபோல)
என்னாலும்–என்னைக் கொண்டும்.
தன்னைச் சொல்லிய–தன்னைப் பாடுவித்த
சூழல்–சூழ்ச்சியை யுடைய
திருமாலவன்–ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி–புகழுரையை
யாது கற்றேன்–(யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும்–பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ–(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு–மிக வெகு காலமாகவுள்ளது

வியாக்யானம் –

மெல்லியல் ஆக்கை இத்யாதி –
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே என்னுடைய  ஜ்ஞானத்துக்கு விஷயம்
ஆவது ஏக தேசம் கிடீர் –
நான் அறிவது ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கிற
என்னைக் கொண்டு கிடீர் இத்தை தலைக் கட்டிற்று என்கிறார் –

மெல்லியல் ஆக்கை கிரிமி –
ம்ருது ஸ்வாபமான சரீரத்தை உடைய கிரிமியானது –
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்று படப் பொறாதே முடியும்படியான
மிருதுவான சரீரத்தை உடைய –
ஒன்றாக எண்ணப்படாத ஷுத்திர ஜந்துவானது –

குருவில் மிளிர் தந்து –
கிரந்தியாலே மிளிர்ந்து -உற்பத்தியும் விநாசமும் ஒழிய –
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே –
தோற்றி மாயும் படி இருக்கையாலே -மிளிர்ந்தது என்கிறது –

பஞ்சாக்னி வித்தையில் -சொல்லுகிறபடியே புருஷார்த்ததோப யோகியாய் இருப்பதொரு-
சரீரத்தை பரிஹரிக்கில் இறே பிறந்தது என்னாலாவது –

ஆங்கே –
அந்த கிரந்தியிலே

செல்லிய செல்கைத்து-
செல்லுகிற செல்லுகையை உடைத்து –
நடக்கிற யாத்ரையை உடைத்தானது –

உத்பத்தியும்
ஜீவனமும்
நடுவு பட்ட நாளில் பரிபவமும்
விநாசமும்-
இவை அடங்க அங்கேயாய் இருக்கும் இறே –
அங்கே இறே அழகு செண்டு ஏறுகிறது –

நெற்காய்க்கும் மரம் எது -என்று இருப்பாரைப் போலே-
அக்க்ராந்திக்கு அவ்வருகு அறியாத இது

உலகை என் காணும் –
லோக வ்ருத்தாந்தத்தில் என்ன அறியவற்று-
இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை –

என்னாலும் –
இப்படி அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லை நிலமான

என்னைக் கொண்டு -தன்னை –
உலகை என் காணும் -என்கிற லோக வ்ருத்தாந்த்தத்திலே தான் ஒன்றை
என்னைக் கொண்டு -சொல்லி வைத்தானோ –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் நமக்கு நிலம் அன்று என்று மீண்ட தன்னை –

சொல்லிய –
சொல்லி வைப்பதாக கணிசித்து இருந்தானாய்-
இது எவ்வளவாய் தலை கட்டுமோ என்று இருக்கிறதோ –
சொல்லி யற்றதாயிற்று –

இப்படி சொல்லிவிக்கைக்கு ஹேது என் என்னில் –

சூழல் –
ஆச்சர்ய சக்தி யுக்தன் ஆகையாலே

திரு மால் –
இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே –
இவ்வாஸ்ரயத்தில் கிடக்க வேண்டுவான் என் என்னில் –
ஸ்ரீய பதி ஆகையாலே –

திருமாலவன் கவி –
அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –

இத்தால் –
ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –

ஸீதாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்கச் செய்தே
அவளை ஒழிய
தனியே இறே இருந்து கேட்டது –

1-யாது கற்றேன் -என்னுதல் –
2-ஆறு கற்றேன் என்னுதல் –
3-அவன்  கவி யாது கற்றேன் என்னுதல் –
4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –

(யாது ஓன்று நான் கற்றது -எந்த சிறியத்தையும் நான் கற்றாலும் அதுவும் திருமாலவன் கவியே
ஆறு -ஸமஸத்தையும் கற்றேன் )

கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே
அவன் முன்னே  சந்தை இட –
நான் பின்னே சொன்னேன் இத்தனை –
ஆனாலும் இது தலைக் கட்டின படி
எங்கனே என்ன –

பல்லியின் சொல்லும் இத்யாதி –
அல்பஜ்ஞராய் இருப்பார் ஒன்றை தொடங்கினால்-
ஞானாதிகராய் இருப்பார் அத்தை நன்றாக்கி
தலைக் கட்டிக் கொள்ளக் கடவதாய் இருப்பது ஓன்று-உண்டு இறே –

பல்லியானது ஓர் அர்த்த பிரத்யாயகம்  இல்லாதபடி –
தன்னுடைய ப்ரீதி யப்ரீதிகளாலே -நத்து நத்து -என்ன –
அத்தை ஞானவான் களாய்  இருப்பார்
தம்தாமுடைய லாப அலாபங்களுக்கு உடலாக்கிக் கொள்ளா நிற்ப்பர்கள் இறே –

அப்படியே நான் எனக்கு பிரதிபந்தங்களைச் சொல்ல –
அத்தை தனக்கு ஈடாம் படி நன்றாகத் தலைக் கட்டிக் கொண்டான் –

பண்டு பண்டே –
பழையதாக இப்படி போருவதொரு மரியாதை உண்டு இறே –
அத்தை இப்போது என் பக்கலிலே கை காணும்படி பண்ணினான் –

தாத்பர்யம்
ஆழ்வார் ஆர்த்தியை சமிப்பிக்கைக்காக
சர்வேஸ்வரன் உம்மைக் கொண்டு லோகத்தை வாழ்விக்கைக்காக
நம் விஷயமாக பிரபந்த நிர்மாணம் பண்ண
சங்கல்பித்தோம்
இப்படி விஷயீ கரித்தான் என்று ஹ்ருஷ்டராய் பேசுகிறார்
காற்றையும் பொறாத
ஜென்ம மரணம் தவிர வேறு ஒன்றை அறியாதே புழு
நித்ய ஸூ ரிகளுக்கும் வாக் மனஸ் ஸூக்களுக்கும் அரிததான தம்மை
என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்டான் -சர்வ சக்தித்வத்தால்
ஞானிகள் ஸூபம் அஸூம் என்று பல்லி சொல்வதைக் கொள்ளுமா போல்
என்னே அவனது சர்வ சாமர்த்தியம் என்று ஹ்ருஷ்டராய் அருளிச் செய்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-4–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

May 18, 2012

(மதி -ஞானம்
ஞானவான்-இவர்களைக் கூப்பிட்ட வாறு –
-ஆச்சார்யர் மூலமே ஞானம் பெற வேணுமே –
தாய் சந்த்ரனைக் காட்ட குழந்தை பார்க்குமா போல் -)

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் -யசோதை பிராட்டி அவனுடைய சைசவ அனுகுணமாக –
அழுகையை மாற்றி -கண் வளர பண்ணுகைகாக சீராட்டிக் கொண்டு தாலாட்டின -பிரகாரத்தை –
தத் பாவ யுக்தராய் கொண்டு -தாமும் அப்படி அருளி செய்தார் –

இனிமேல்
தொட்டில் பருவம் போய் -தவழ்ந்து விளையாடத் தக்க பருவமான பின்பு அவன் –
நீணிலா முற்றத்தே போந்து –
தவழ்ந்து புழுதி அளைவது –
சந்த்ரனை அழைப்பதான -பிரகாரத்தை -அவள் அனுபவித்து –
அவனுக்கு உகப்பாக சந்த்ரனை வரச் சொல்லி தான் பல காலும் அழைத்த பிரகாரத்தை
தாமும் அனுபவ பூர்வகமாக பேசி இனியர் ஆகிறார் –

பரம பதத்தில் -அவாக்யன் அநாதர-(சர்வம் இதம் அப்யாப்த்யா -சாந்தோக்யம் )-என்கிறபடியே
பெரு மதிப்பனாய்
ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே -தன்னோடு ஒக்க முகம் பார்த்து
வார்த்தை சொல்லுகைக்கு ஒரு தத்வாந்தரம் இல்லாமையாலே -அநாதாரித்து இருக்கும் அவன் –
லீலா விபூதியில் -சம்சாரி சம் ரஷண அர்த்தமாக -தன் இச்சையாலே –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து -அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற –
சைசவவாத்ய அவஸ்தைகளை அடைந்து –
தத்தத் அவஸ்த அனு குணமாக செய்த சேஷ்டிதாதிகளை அனுசந்தித்தால் –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-அவன் மேன்மையையும் -நீர்மையையும் -தெளிய கண்டவர்கள்-
அதிலே வித்தராய் -அனுபவிக்க சொல்ல வேண்டா விறே-

மற்று உள்ள ஆழ்வார்களையும் போல அன்றிக்கே -இவ் அவதார விசேஷத்தில் –
அதி பிரேம அதிசயத்தாலே -கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
இவ் அவதார ரசம் எல்லாம் அனுபவிப்பதாக இழிந்த இவர் –
அவனுடைய பால சேஷ்டிதங்களில் ஒன்றும் நழுவ விடார் இறே-

ஆகையாலே –
அவன் புழுதி அளைவது –
சந்தரனை அழைப்பது -ஆகிய
சேஷ்டிதங்களை-தத் காலத்தில்  யசோதை பிராட்டி அனுபவித்தாப் போலே
தாமும் அனுபவித்து பேசுகிறார் –

———————————————-

தன் முகத்து சுட்டித் தூங்கத்  தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முக கிண் கிணி யார்ப்பப் புழுதி அளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி
நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப்  போ -1-4-1-

பதவுரை

இள–இளமை தங்கிய
மா மதி–அழகிய சந்திரனே!
தன் முகத்து–தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி–சுட்டியானது
தூங்க தூங்க–பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்–அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி–சதங்கைகளானவை
ஆர்ப்ப–கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்–(முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி–தெருப் புழுதி மண்ணை
அளைகின்றான்–அளையா நிற்பவனும்
என் மகன்–எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்–கண்ண பிரானுடைய
கூத்தினை–சேஷ்டைகளை
நின் முகம்–உன் முகத்தில்
கண் உள ஆகில்–கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ–நீ இங்கே பார்த்துப் போ.

தூங்க தூங்க -பல காலும் அசையும் படியாகவும் –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்  படியான தன் திரு முகத்திலே
அழகுக்கு உடலாக -நாலும் படி =தொங்கும் படி -கட்டின சுட்டி யானது –
தவழுகைகாக-திருமுடியை நாற்றுகையாலே பல காலும் அசையும் படியாகவும் –
திருவரையில் சாத்திக் கிடக்கிற அழகிய முகத்தை உடைத்தான கிண் கிணி யானது-த்வநிக்கும் படியாகவும் –
தவழ்ந்து போய் -புழுதி அழையா நின்றான் –

பொன் முக கிண் கிணி என்றது –
சேவடிக் கிணி கிணி யாகிற பாத சதங்கை யாகவுமாம் –
அது இறே தவழும் போது மிகவும் சப்திப்பது –

என் மகன் இத்யாதி –
என்னுடைய பிள்ளையான கோவிந்தனுடைய-மநோ ஹாரி சேஷ்டிதத்தை –

இள மா மதி –
இத்தை கொண்டு கால் தாழ்ந்து நிற்க வேண்டி இருக்க –
அது செய்யாதே போகிற
அதி முக்தனான சந்த்ரனே

இள மா மதி என்றது –
இளைமையால் மிக்க மதி என்ற படி –

நின் முகம் இத்யாதி –
உன்னுடைய முகத்தில் கண் உண்டாமாகில் –
கண் படைத்த பிரயோஜனம் பெறும் படி நீ இங்கே பார்த்து போ

——————————————

என் சிறுக் குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைகின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட யுறுதியேல்
மஞ்சின் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா -1-4-2-

பதவுரை

மா மதீ !
எனக்கு–(தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது–விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்–எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்–என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்–தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி–பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்–அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு–மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட–விளையாட
உறுதியேல்–கருதினாயாகில்
மஞ்சில்–மேகத்திலே
மறையாது–சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா–உகந்து ஓடி வா.(நீல தோயதா மத்யஸ்தா)

ஓர் -அத்வீதியமாய்
மா -வடிவாலும் குளிர்த்தியாலும் உயர்ந்த –
என்னுடைய சிறுப் பிள்ளை –
பருவத்தாலும் சேஷ்டிதத்தாலும் அத்வீதியமாய் இனிதான அமிர்தம் போலே
எனக்கு ரசாவஹன் ஆனவன்

(எனக்கு அமுது
எனக்கு ஓர் அமுது
எனக்கு இன்னமுது )

எம்பிரான் –
எனக்கு புத்ரனாய் வந்து அவதரித்தும் —
தன் சேஷ்டிதங்கள் எல்லாம் அனுபவித்தும் –
இப்படியே
எல்லா படியாலும் எனக்கு உபகாரன் ஆனவன் –

தன் இத்யாதி –
தனக்கு தகுதியான  திருக் கைகளால் பலகாலும் உன்னை அழையா நின்றான் –

அஞ்சனம் இத்யாதி –
கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போல் இருக்கிற திரு நிறத்தை
உடையவனான இவனோடு விளையாடலாட  வேண்டுதியேல்

மஞ்சில் இத்யாதி –
மேகத்திலே சொருகி மறையாதே –
வடிவாலும் குளிர்த்தியாலும் – ஸ்லாக்யனான சந்த்ரனே –
நம்மை அழைக்க பெற்றோமே என்று உகந்து
ஆதரம் தோற்ற கடு நடை இட்டு வா-

————————————-

(சந்த்ர வம்சம் -கண்ணன் -ஆனாலும் முகம் நேர் ஒவ்வாய்
திருமுக மண்டலத்துக்கு பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்; )

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி  பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –

பதவுரை

அம்புலி–சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி–ஒளி பொருந்திய
வட்டம்–மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து–நாற்புறமும் சுழன்று
எங்கும்–எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து–ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்–இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்–என் மகனான கண்ண பிரானுடைய
முகம்–திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்–பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்–ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்–திருவேங்கடமலையிலே
வாணன்–நின்றாக வாழுமவனான இக் கண்ண பிரான்
உன்னை விளிக்கின்ற–உன்னை அழைக்கிற
கை தலம்–திருக் கைத் தலத்தில்
நோவாமே–நோவு மிகாத படி
கடிது ஓடி வா–சீக்கிரமாய் ஓடிவா.

சுற்றும் இத்யாதி –
ஒளியை உடைத்தான மண்டலமானது அஷயமாய்க் கொண்டு -சுற்றும் சுழன்று –
அகளங்கமாயக்  கொண்டு -எங்கும் தேஜஸ்சாலே  வ்யாப்தமாய் எல்லாம் செய்தாலும் –
(இல் பொருள் உவமை -பூரணமான சந்திரன் -அழுக்கும் இல்லாமல் -)

என் மகன் இத்யாதி –
என் மகனுடைய ஸூ வ்ருதமாய்
ஜ்யோதிர் மகமான முகத்துக்கு 
ஸ்வயா-சர்வதா- சத்ருசம் ஆக மாட்டாய் –

வித்தகன் இத்யாதி –
அழகாலும் குண சேஷ்டிதங்களாலும் -விஸ்மயநீயனாய் –
துர்மாநிகளான- உன் போல்வாரை அநாதரித்து-
கானமும் வானரமும் ஆனவற்றை ஆதரித்து கொண்டு
திருமலையில் வர்த்திக்கிறவன்-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாய )
உன்னை ஆதரித்து அழைக்கிற திருக் கைத் தலம் நோவாதபடியாக
அம்புலீ -விரைந்து ஓடி வா –

வாணன்- வாழ் நன்

———————————————

சக்கரக் கையன் தடம் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறுதியேல்  சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் -1 4-4 –

பதவுரை

சந்திரா—சந்திரனே!
சக்கரம்–திருவாழி ஆழ்வானை
கையன்–திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்–(என்) இடுப்பின்மேல்
இருந்து–இருந்து கொண்டு
தட கண்ணால்–விசாலமான கண்களாலே (கர்ணாந்தரமான -திருக்காதுகள் வரை )
மலர் விழித்து–மலரப் பார்த்து
உன்னையே–உன்னையே
சுட்டி காட்டும்–குறித்துக் காட்டுகின்றான்;
தக்கது–(உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்–அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத–பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்–மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே–கபடம் பண்ணாமல்
வா கண்டாய்–வந்து நில்கிடாய்.

தடம் -கர்ணாந்த விஸ்ராந்தமான
சலம் செய்யாதே -வெறுப்பு செய்யாதே -சலம் -கபடம் –

சக்கரக் கையன் –
கருதும் இடம் பொரும் திரு வாழியைக் கையில் உடையவன் –
இத்தால் -நீ வாராது ஒழிந்தால் -உன்னை சிஷிக்கைக்கு ஈடான பரிகாரம் உடையவன் -என்கை-

தடம் கண் இத்யாதி –
இடம் உடைத்தான திருக் கண்களாலே உன்னளவில் ப்ரீதி தோற்ற மலரப் பார்த்து –
ஒக்கலை மேல் இருந்து -என்னுடைய மருங்கிலே இருந்து –

உன்னை இத்யாதி –
வேறு ஒன்றில் கண் வையாதே -உன்னையே குறித்து காட்டா நிற்கும் காண் –

தக்கது அறுதி யேல் –
உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –

சந்திரா சலம் செய்யாதே –
எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே

மக்கள் இத்யாதி –
பிள்ளைகள் பெறாத வந்த்யன்  அல்லவாகில் வந்து கொடு -நில் கிடாய் –

——————————-

அழகிய வாயில் அமுதம் ஊறல் தெளிவு உறா
மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில வாகாதே நின் செவி புகர் மா மதீ  -1 4-5 –

பதவுரை

புகர்–தேஜஸ்வியாய்
மா–பெருமை பொருந்தி யிரா நின்ற
மதீ–சந்திரனே!
அழகிய வாயில்–அழகிய திருப் பவளத்திலே
ஊறல்-ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்–அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா–உருத் தெரியாததாய்
மழலை முற்றாத–மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்–இளம் பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;
குழகன்–எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்–ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ-(இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்–நீ போவாயே யானால்
நின் செவி–உன் காதுளானவை
புழை இல–துளை யில்லாதவையாக
ஆகாதே–ஆகாதோ?
(ஆகவே ஆகும்)

புகர் மா மதீ-தேஜஸையும் -பெரும் தன்மையும் உடைய -சந்த்ரனே
குழகன் -எல்லோரோடும் கலந்து இருப்பவனும்
சிரீதரன் -பிராட்டியைத்  திரு மார்விலே தரியா நின்றவனுமான இவன்
புழை இல -துளை இல்லாதவையாக
ஆகாதே -ஆகாதோ -ஆகவே ஆகும் என்று கருத்து –

அழகிய இத்யாதி –
அழகிய திருப் பவளத்திலே ஊறா நின்ற ஜலம் ஆகிற
அமிர்த்ததோடு கூடி உருத் தெரியாததாய் மழலைத் தனத்துக்கு உள்ள
முற்றுதல் தானும் இன்றிக்கே இருக்கிற இளம் சொல்லால் உன்னை அழையா நின்றான் –

குழகன் –
கொடுத்தார் கொடுத்தார் முலைகள் எல்லாம் உண்டு -எடுத்தார் எடுத்தாரோடு எல்லாம்
பொருந்தி இருக்கும் கலப்பு உடையவன்

சிரீதரன் –
கீழ் சொன்ன நீர்மைக்கு எதிர் தட்டான மேன்மையை உடையவன் –
ஸ்ரீ தரத்வம் -சர்வாதிகத்வ ஸூசகம் இறே

கூவக் கூவ நீ போதி யேல்-
ஒரு கால் போல பல காலும் அழையா நிற்க -கேளாதாரைப் போலே நீ போகுதியாகில் –

புழை இத்யாதி –
உன்னுடைய  செவி துளை இலவாகாதோ –
புழை -சூஷிரம் -உன்னுடைய ஸ்ரவண இந்திரியத்துக்கு பிரயோஜனம் இல்லை ஆகாதோ என்கை –

புகர் மா மதீ –
உன்னுடைய தேஜஸ்சுக்கும் பெருமைக்கும் போருமோ இது –

———————————

தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக் கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பால் அறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா -1 4-6 –

பதவுரை

விண் தனில்–ஆகாசத்திலே
மன்னிய–பொருந்திய
மா மதீ!–பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு–‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்–திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்–ஏந்தி யிரா நின்றுள்ள
தட–விசாலமான
கையன்–கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி–திருக் கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்–கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்–(இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட–அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்–ஸ்தந்யமானது
அறா–ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா

அறா கண்டாய்-ஜரிக்க மாட்டது கிடாய் –
கௌமோதகி என்னும் கதையோடு -திரு ஆழியும் -ஸ்ரீ சார்ங்கமும்-
மற்ற இரண்டுக்கும் உப லஷணம்

ஏந்தும் தடக் கையன் –
இவற்றை பூ  ஏந்தினாப் போலே -சர்வ காலமும் தரித்து கொண்டு இருக்கும் –
இடம் உடைத்தான திருக் கைகளை உடையவன் –
இவை தான் ஆபரண கோடியிலும்-ஆயுத கோடியிலும் – ஆகி இறே இருப்பது –
இத்தால் இவ் அழகை அனுபவித்து வாழலாய் இருக்க –
இவற்றின் வீர்யத்துக்கு  இலக்காய் முடிந்து போகாதே கொள் என்கை –

கண் துயில் இத்யாதி –
கண் வளர்ந்து அருளுவதாக நினைத்து அதுக்கு ஸூசகமாக கொட்டாவி கொள்ளா நின்றான் –

உண்ட இத்யாதி –
கண் வளர்ந்து அருளாது ஒழியில்-அமுது செய்த முலைப் பால் ஜரியாது கிடாய் –
ஆன பின்பு விண்டனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –
உச்சஸ் ஸ்தலத்திலே வர்த்தியா நிற்ப்பானாய்-வடிவில் பெருமை உடையனாய் இருக்கிற
சந்த்ரனே -உன்னுடைய உயர்த்திக்கும் பக்வதைக்கும் ஈடாக -சத்வானாய் கொண்டு ஓடி வா –

————————————-

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்-
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்து கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா -1-4 7- –

பதவுரை

மா மதீ!
பாலகன் என்று–‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்–திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்–முன்பொரு காலத்திலே
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
வளர்ந்த–கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்–அந்த சிறுப்பிள்ளை யானவன்
இவன்–இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்–(இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து–(உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்–(உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை–இம் மஹா புருஷனை
மதியாதே–அவ மதியாமல்
மகிழ்ந்து ஓடி வா–.

வெகுளுமேல் -சீறினான் ஆகில் -வெகுட்சி -கோபம்
மாலை -இப்படி பெரியவனான விஷயத்தில்
மதியாதே -சிறியன் என்று அலஷியதை நினையாமல்
மகிழ்ந்து -இவன் நம்மை அழைக்கப் பெற்றோமே -என்னும் உகப்பை உடையனாய் கொண்டு

இவன் சிறுப் பிள்ளை அன்றோ என்று பருவத்தை பார்த்து
குறைய நினைக்கை யாகிற பரிபவத்தை பண்ணாதே கொள்

பண்டொரு இத்யாதி –
முன்பொரு காலத்திலே-ஜகத்தை அடைய -திரு வயிற்றிலே வைத்து –
ஒரு பவனான (முகிழ் விடும் துளிர் ) ஆலம் தளிரிலே -கண் வளர்ந்த
சிறுப் பிள்ளையானவன் -இவன் காண் –
அந்த அகடிதகடநா சாமர்த்தியம் எல்லாம் உடையவன் என்கை –

மேல் எழ இத்யாதி –
இவன் சீறுமாகில் மேலே எழக் குதித்து
உன்னைப் பிடித்து கொள்ளும் –

மாலை இத்யாதி –
ஆன பின்பு -இப்படி பெரியனான அவனை
(மால் -வியாமோஹம் -பெருமை -கறுமை )
சிறியன் என்று பரிச் சேதியாதே-
பெருமையை உடைய சந்த்ரனே –
உன் பெருமைக்கு ஈடாக –
இவன் நம்மை ஆதரித்து அழைக்கப் பெற்றோமே -என்னும் உகப்பு தோற்ற ஓடி வா –

——————————-

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1 4-8 –

பதவுரை

நிறை மதி–பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை–எனக்குச் சிங்கக் குருகு போன்ற கண்ண பிரானை
சிறியன் என்று–(உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்–அவமதியாதே;
சிறுமையில்–(இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை–செய்கையை
மாவலி இடை சென்று கேள்–மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
(இப்படி யுள்ளவன் விஷயத்தில்)
சிறுமை பிழை கொள்ளில்–சிறுமை நினைத்தலிது மஹா அபாரதம் என்று நினைத்தாயாகில்
(அப்போது) நீயும்;
உன் தேவைக்கு–(அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை–தகுந்தவனாவாய் ;
(அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்–ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்
(‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )

சிறுமை -இப்படி உள்ளவன் விஷயத்தில் -சிறுமை நினைத்த இது
பிழை கொள்ளில் -அபராதம் என்று நினைத்தாய் ஆனால் –
உன் தேவைக்கு -அவன் விஷயத்தில் தாஸ்யத்துக்கு
உரியை காண் -தகுந்தவன் ஆவாய்
நெடுமால் -சர்வாதிகனான இவன் –

சிறியன் இத்யாதி –
பால ஸிம்ஹம் போலே செருக்கையும் வீர்யத்தையும் உடையனாய் இருக்கிற
என்னுடைய பிள்ளையை பருவத்தைப் பார்த்து –
சிறு பிள்ளை என்று அநாதரியாதே கிடாய் –

சிறுமை இத்யாதி –
இவனுடைய பால்யத்தினுடைய விசேஷத்தை –
வாமனனாய் சென்று –
தன்னை வசீகரித்து –
மூவடி -என்று இரந்து-
இரண்டு அடியாலே ஜகத்தை அடைய வளந்து –
ஓரடிக்கு தன்னை சிறையிலே வைக்கப் பட்ட மஹா பலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் –

சிறுமை இத்யாதி –
இப்படி இருக்கிறவன் விஷயத்தில் சிறுமையை நினைத்த இது –
நமக்கு அபராதம் என்று புத்தி பண்ணுவுதியாகில்-
அப்போது நீயும் அவன் திறத்தில் -அடிமைக்கு ப்ராப்தன் காண் –

நிறை இத்யாதி –
பரி பூர்ணனான சந்த்ரனே -சர்வாதிகனான அவன் –
பெரிய த்வரையோடே உன்னை அழையா நின்றான் –
ஆன பின்பு பூர்த்திக்கு ஈடாக ஓடி வா என்று கருத்து –

———————————-

தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய
பேழை வயிறு எம்பிரான் கண்டாய் உன்னை கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை எறியும் ஐஉற வில்லை காண்
வாழ வுறுதி யேல்  மா மதீ மகிந்து ஓடி வா -1 4-9 –

பதவுரை

மா மதீ!;
தாழியில்–தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்–வெண்ணெயை
தட–பெரிதான
கை ஆர–கை நிறைய (அள்ளி)
விழுங்கிய–அமுது செய்த
பேழை வயிறு–பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்–என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;
(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாரா திருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு–திருவாழியாலே
உன்னை எறியும்–உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை–ஸம்சயமே யில்லை;
(இதில் நின்றுந் தப்பி)
வாழ உறுதியேல்–வாழக் கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா

தடம் -விஸ்தாரமான
கையார் -கை நிறையும்  படி
பேழை-விசாலமாய் பருத்த
ஐ உற -இதில் ஒரு சம்சயம் –

தாழி இத்யாதி –
தாழியிலே  சேர்ந்து இருக்கிற வெண்ணெயை அபி நிவேச அதிசயத்தாலே
பருவத்துக்கு தக்க கை அன்றோ என்னும்படி வெண்ணெயை கண்டவாறே விஸ்த்ருதமான கை
நிறையும் படி அள்ளி அமுது செய்த –

பேழை இத்யாதி –
உள்ளுப் புக்க த்ரவ்ய கௌரவத்தாலே விசைத்து பெருத்து இருக்கிற
திரு வயிற்றை உடையனாய் –
எங்கள் குலத்துக்கு உபகாரகனாய் இருக்கிறவன் காண்
உன்னை அழையா நிற்கிறான் –

இத்தால் தன் பருவத்துக்கு ஈடாக வெண்ணெயை விழுங்கி விரும்பினாப் போலே இருப்பது
ஓன்று காண்
உன்னை அழைக்கிறதும் என்கை –

ஆழி இத்யாதி –
அவ் வெண்ணெய் தாழியை எட்டாதபடி வைக்கில் –
கல்லைக் கொண்டு எறிந்து உடைக்குமாப் போலே –
நீயும் வாராது இருக்கில் –
தலையை அறுக்கைக்காக திரு ஆழியைக் கொண்டு உன்னை எறியும் –
இதில் ஒரு சம்சயம் இல்லை காண் –

வாழ இத்யாதி –
அப்படி அவன் குரோதத்துக்கு விஷயமாய் முடிந்து போகாதே
ஜீவிக்க வேண்டி இருந்தாய் ஆகில் –
பெருமை உடைய சந்த்ரனே –
உன் பெருமைக்கு ஈடாம்படி ப்ரீதனாய் ஓடி வா

————————————————————

அவதாரிகை -நிகமத்தில் –
இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-

பதவுரை

மை–மை யணிந்த
தட–விசாலமாயிரா நின்ற
கண்ணி–கண்களை யுடையளான
அசோதை–யசோதை யானளவள்
தன் மகனுக்கு–தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி–நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த–(சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்–இப் பாசுரத்தை
ஒளி–ஒளி பொருந்திய
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்–(மங்களாசாஸந) ஸமர்த்தரான
விட்டு சித்தன்–பெரியாழ்வாராலே
விரித்த–விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்–த்ராவிட பாஷா ரூபமான
இவை–இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்–ஏதேனுமொரு படியாக
சொல்ல வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–துன்பமொன்று மில்லை.

ஒத்தன -நினைவுக்கும் சொல்லுக்கும் சேர்ந்தவையான
எத்தனையும் -ஏதேனும் ஒரு படியாக

மைத் தடம் கண்ணி யசோதை-
கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ருதமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-

அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து –
இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –

(மையார் கண்ணி -யமுனா நதி கறுமை -கிருஷ்ண துளஸீ கறுமை –
இவற்றுக்கும் அந்யோன்யம் இவனுக்கும் உண்டே )

தன் இத்யாதி –
தன்னுடைய புத்ரனான இவனுக்கு -நினைவுக்கும் சொல்லுக்கும் சேர்ந்தவையாய்
இருக்கிற இவற்றை சொல்லி –

(கண் துயில் –இத்யாதி
மேல் எழ
ஆழி கொண்டு எறியும் நினைவுக்கு
இளம் மொழிகளால் கூவுகின்றான் -சொல் )

மென்மையும் வன்மையும் தோன்றும்படியாக சந்த்ரனை குறித்து சொன்ன பாசுரத்தை –

ஒளி இத்யாதி –
நிலமிதி தானே ஜ்ஞானப் பிரேமங்களை விளைக்கும் தேஜஸ்சை உடைத்தான-ஸ்ரீ வில்லி புத்தூரில் –
மங்களா சாசன சமர்தரான ஸ்ரீ பெரிய ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்ததாய் –
திராவிட ரூபமாய் இருக்கிற இவை பத்துப் பாட்டையும் -ஏதேனும் ஒரு படி
சொல்ல வல்லவர்களுக்கு துக்கம் என்பது ஒன்றும் இல்லை –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-3–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

May 17, 2012

அவதாரிகை –
கீழில் திரு மொழியிலே திருவடிகள் தொடங்கி-
திரு முடி அளவு உண்டான திவ்ய அவயவங்களை
யசோதை பிராட்டி அனுபவித்த பிரகாரத்தை –
தத் காலம் போலே மிகவும் விரும்பி அனுபவித்தாராய் நின்றார் –

இனி மேல்
அவள் பிள்ளையை தொட்டிலே வளர்த்தி  தாலாட்டின பிரகாரத்தை –
தற் காலம் போலே விரும்பி அனுபவித்து பேசுகிறார் –

சர்வஸ்மாத் பரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் -சர்வ பிரகார நிர பேஷனாய் -நாராயண
சப்த வாஸ்யனான சர்வேஸ்வரன் –
யாதொரு இடத்திலே யாதொரு திரு மேனியோடு அவதரித்தாலும் –
அவனுடைய ஸ்திதி கமன சயநாதிகளைக் கண்டால் மிகவும் விரும்பி
தங்களால் ஆன அளவும் கிஞ்சித் கரித்தன்றி நிற்க ஒண்ணாது இறே-ப்ரஹ்ம ஈஸா நாதிகளும் –

இத்தை –
யசோதை பிராட்டி மனோ ரதித்து கண்டாளாக சொல்லி தாலாட்டின பிரகாரத்தை –
தாம் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
தத் காலம் போலே -ப்ரத்யஷமாக கொண்டு –
மிகவும் உகந்து –
அவனுடைய மேன்மையையும் -நீர்மையையும் -அருளிச் செய்து தாலாட்டுகிறார் –

(கோ -மேன்மையும்
குடந்தை கிடந்தாய் -எளிமையும் )

——————————————

அவதாரிகை -முதல் பாட்டு –
அண்டாதிபதியான ப்ரஹ்மா-இவனுடைய பருவத்துக்கு அனுகுணமாக பண்ணின
கிஞ்சித் காரத்தை சொல்லுகிறது –

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ -1-3-1-

பதவுரை

மாணிக்கம்–மாணிக்கத்தை
கட்டி–(இரண்டருகும்) கட்டியும்
இடை–நடுவில்
வயிரம்–வயிரத்தை
கட்டி–கட்டியும்
ஆணிப் பொன்னால்–மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த–செய்யப்பட்ட
வண்ணம்–அழகிய
சிறு தொட்டில்–சிறிய தொட்டிலை
பிரமன்–சதுர்முகனானவன்
பேணி–விரும்பி
உனக்கு–உனக்கு
விடு தந்தான்–அனுப்பினான்
மாணி குறளனே–ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே!
தாலேலோ!
வையம் -உலகங்களை
அளந்தானே–(த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!
தாலேலோ!

மாணிக்கம்  கட்டி -இரண்டு அருகும் மாணிக்கத்தை கட்டியும் –
ஆணிப் பொன் -மாற்று உயர்ந்த பொன்
விடு தந்தான் -அனுப்பினான்

இரண்டு அருகும் மாணிக்கத்தையும்-நடுவே வயிரத்தையும்-பகைத் தொடையாக கொண்டு –
ஒழுங்கு படக் கட்டி –
இதுக்கே மேல் மாற்று இல்லை -என்னும்படியான பொன்னாலே -சமைத்தது
ஆகையாலே -அழகியதாய் -பருவத்துக்கு தகுதியாம்படி -சிறியதாய் இருந்துள்ள தொட்டிலை –
ஆதரித்து உனக்கு ப்ரஹ்மா வர விட்டான் –

உன்னுடைய பெறுகைக்கு இரப்பிலே தழும்பு ஏறின பிரமச்சாரியாய் சென்று இரந்த
வாமன ரூபி யானவனே -தாலேலோ –
இரப்பு பெற்ற ஹர்ஷத்தாலே வளர்ந்து
லோகத்தை அளந்த த்ரிவிக்ரமன் ஆனவனே தாலேலோ-

————————————————–

அவதாரிகை -இரண்டாம் பாட்டு –
பிரம்மாவுக்கு அநந்தரம்-பரி கணிதனாய் -ஈஸ்வர அபிமானியான ருத்ரன்
கிஞ்சித்கரித்த படியைச் சொல்லுகிறது –

உடையார் கன மணியோடு ஒண் மாதளம் பூ
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடும்
விடை ஏறு காபாலி ஈசன் விடு தந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ -1-3 2-

பத உரை –
உடையார் -திரு அரைக்கு பொருந்தின
கன மணியோடு -பொன் மணியோடு
இடை -நடு நடுவே
விரவி கோத்த -கலந்து கோக்கப்பட்ட
எழில் தெழ்கினோடும்-அழகியதான இடை சரிகை யோடு கூட
ஒண் மாதளம் பூ -அழகிய மாதளம் பூ கோவையான அரை வடத்தை –
விடை ஏறு -ரிஷப வாகனனாய்
காபாலி -கபால  தாரியாய்
ஈசன் -ஸ்வ வியூகத்துக்கு  நியாமகனான ருத்ரன்
விடு தந்தான் -கொடுத்து அனுப்பினான்
உடையாய் -எல்லாவற்றையும் உடையவனே
அழேல் அழேல் -அழாதே கொள் அழாதே கொள்-

(உடையார் கன மணியோடு
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடும் ஒண் மாதளம் பூ-என்று அந்வயம் )

இடை சரிகை -இடையிலே சொருகிற கத்தி
திரு வரைக்கு சேர்ந்து இருப்பதான பொன் மணியோடு -நடு நடுவே கலசி கோத்த
அழகிய இடை சுரிகையோடும் கூடி இருந்துள்ள அழகிய மாதளம் பூ கோவையான அரை வடத்தை –
ரிஷப வாகனனாய் -கபால நிரூபகனாய் -ஸ்வ கோஷ்டிக்கு நியந்தாவாய் -இருக்கிற ருத்ரன் வர விட்டான் –

ஒருவர் என்னது என்று வர விடாத போதும் –
அவர்களோடு அவர்கள் உடைமையோடு வாசி அற
எல்லா வற்றையும் உடையவனே -அழாதே கொள் அழாதே கொள் –

திரு உலகு அளந்த வ்ருத்தாந்தத்தாலே -உன்னுடைய சர்வ ஸ்வாமித்வத்தை அடிப் படுத்தி வைத்தவனே

தாலாட்டு -நா அசைத்தல் –

—————————————————-

அவதாரிகை -மூன்றாம் பாட்டு –
பிரம ருத்ரர்களை எண்ணினால்
பின்பு தன்னை எண்ணும்படியான முதன்மையை உடைய
இந்திரன் கிஞ்சி கரித்த படியை சொல்லுகிறது –

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ -1-3 3- –

பதவுரை

எம் தம் பிரானார்–எமக்கு ஸ்வாமியாய்
எழில்–அழகிய
திருமார்வார்க்கு–திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய–நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு–தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்–தேவேந்த்ரனானவன்
எழில் உடை–அழகை யுடைய
கிண்கிணி–கிண் கிணியை
தந்து–கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்–அதோயிரா நின்றான்
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ–

என் தம்பிரானாய்-எனக்கு ஸ்வாமி யாய்
(திரு மார்பின் அழகுக்குத் தோற்று தாஸ்யம் )
சந்தம் அழகிய -அழகிய சந்தம் -அழகிய நிறத்தை உடைய
எழில் உடை கிண் கிணி -அழகை உடையதான கிண் கிணியை
தந்து -கொணர்ந்து சமர்ப்பித்து
உவனாய் நின்றான் -அதூர விப்ர க்ருஷ்டன் -சமீபத்திலும் தூரத்திலும் இன்றி மத்யஸ்தனாய் இருக்குமவன்

என் தம்பிரானார் என்கிற இது -திரு மார்பின் அழகுக்கு தோற்று சொன்ன வார்த்தை
சிகப்பாலும் விகாசாதிகளாலும் நிறம் அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனுக்கு –
த்ரைலோக்ய நிர்வாகனான முதன்மை உடைய இந்திரன் தானும் –
(இந்த்ரன் -பரம ஐஸ்வர்ய தாத் யர்த்தம் )
அழகை உடைத்தான கிண் கிணியை கொடு வந்து சமர்ப்பித்து –
ஸ்வ நைசயம் தோற்ற அதூர விப்ர க்ருஷ்டனாய் நின்றான் -தாலேலோ –

தாமரைக் கண்ணனே! தாலேலோ–
கிஞ்சித்  கரித்தவர்களை குளிர கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –

————————————————

அவதாரிகை -நாலாம் பாட்டு –
இந்திரனுக்கு கீழாய் -தனி தனி பிரதானரான
தேவர்கள் சமுதாயேன பண்ணின கிஞ்சித் காரத்தை சொல்லுகிறது –

சங்கின் வலம் புரியும் சேவடி கிண் கிணியும்
அங்கை சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கட் கரு முகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ -1-3-4-

பதவுரை

சங்கில்–சங்குகளில்(சிறந்த)
வலம் புரியும்–வலம் புரிச் சங்கையும்
சே அடி–செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த)
கிண்கிணியும்–சதங்கையையும்
அம் கை–அழகிய கைகளுக்கு உரிய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–திருத் தோள் வளைகளையும்
நாணும்–பொன்னரை நாணையும்
அரை தொடரும்–அரைவடத்தையும்
அம் கண்–அழகியதாய் விசாலமான
விசும்பில்–ஸ்வர்க்கத்திலுள்ள
அமரர்கள்–தேவர்கள்
போத்தந்தார்–அனுப்பினார்கள்
செம் கண்–சிவந்த கண்களை யுடையையாய்
கரு முகிலே–காள மேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே!
தாலேலோ!
தேவகி–தேவகியின் வயிற்றிற்பிறந்த
சிங்கமே–சிங்கக் குருகே!
தாலேலோ!

சங்குகளில் சிறந்த வலம் புரி சங்கமும் –
செவ்விய திருவடிகளில் சாத்தத் தகுந்த சதங்கையும் –
அழகிய திருக் கைக்கு அலங்காரமான -முன் கை வளைகளும்-திருத் தோள் வளைகளும் –
திரு மார்பில் சாத்த தக்க பொன் நாணும் –
அரை நாணும் –
ஆகிய இவற்றை –
சிங்கக் கன்று போன்ற பிள்ளாய் தாலேலோ –

சங்குகளில் வைத்து கொண்ட -உத்க்ர்ஷ்டமாய் -மங்கள ஆவஹமான வலம் புரியும் –

சிவந்த திருவடிகளில் சாத்த தக்க சதங்கையும் -சேவடி கிண் கிணி என்கையாலே –
கிண் கிணி என்று பாத சதங்கையை சொல்லுகிறது –

அழகிய திருக் கைக்கு ஆபரணமான முன் கை சரிகளும் -திருத் தோள் வளைகளும் –

திரு மார்புக்கு அலங்காரமாக சாத்த தக்க நாணும் -அரை வடமும் -அன்றிக்கே –
அரைத் தொடரோட்டை சேர்த்தியாலே-நாண் என்றது -அரை நாண் ஆகவுமாம்-

அழகியதான இடம்  உடைத்தான  ஸ்வர்காதி லோகங்களில் தேவர்கள் வர விட்டார்கள் –

செம் கண் இத்யாதி –
ஓர் ஆபரணமும் வேண்டாதபடி தாமரை பூத்த காள மேகம் போலே
சிவந்த திருக் கண்களோடு சேர்ந்த ஸ்யாமளமான வடிவை உடையவனே -தாலேலோ –
தேவகி வயிற்றில் பிறப்பாலே -ஸிம்ஹ கன்று போல் இருக்கிற செருக்கை உடையவனே -தாலேலோ –

——————————————-

அவதாரிகை -ஐந்தாம் பாட்டு –
உத்தர திக் பாலனாய் -உதாரனான வைச்ஸ்ரவணன் கிஞ்சித் கரித்த படியை சொல்லுகிறது –

எழிலார் திரு மார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்ரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி வண்ணனே தாலேலோ -1-3-5-

பதவுரை

எழில் ஆர்–அழகு மிக்கிருந்துள்ள
திருமார்பிற்கு–வக்ஷஸ் ஸ்தலத்துக்கு
இவை ஏற்கும் என்று–இவை பொருந்தும் என்று
அழகிய–அழகியவையான
ஐம்படையும்–பஞ்சாயுதங்களையும்
ஆரமும்–முத்து வடத்தையும்
கொண்டு–எடுத்துக் கொண்டு,
வழு இல்–குற்றமற்ற (பரிவால் சமர்ப்பித்ததால் குற்றம் அற்ற தானம் )
கொடையான்–ஔதார்யத்தை யுடையனான
வயிச்சிரவணன்–குபேரானானவன்-( விச்வரஸ் பிள்ளை )
தொழுது–(இவற்றைத் திருவுள்ளம் பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக் கொண்டு
உவனாய் நின்றான், தாலேலோ!
தூ மணி–பழிப்பற்ற நீல மணி போன்ற
வண்ணனே–வடிவை யுடைய கண்ணனே!
தாலேலோ!

அழகு விஞ்சி இருந்துள்ள
பிராட்டி உறையும் திரு மார்பில் சாத்துகைக்கு
இவை பொருந்தி இருக்கும்
என்று எண்ணி
அழகியதான பஞ்சாயுதமாகிற ஆபரணத்தையும்
ஆரமும் -முத்து வடத்தையும் –
எடுத்து கொண்டு
குற்றம் அற்ற தானத்தை உடையனான வைஸ்ரவணன்
இவற்றை திரு உள்ளம் பற்ற வேண்டும் -என்று அஞ்சலி பண்ணிக் கொண்டு
உவனாய் -அதூர விப்ர க்ருஷ்டனாய்
நின்றான் தாலேலோ –
பரிசுத்தமான நீல மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனே -தாலேலோ –

வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி அழகு மிக்கு இருந்துள்ள
திரு மார்புக்கு சேரும் இவை என்று அழகியதாய் இருந்துள்ள 
ஸ்ரீ பஞ்சாயுத மாகிற ஆபரணமும் –
கோல மா மணி ஆரமும் கொண்டு –

கொடுத்து கொள்ளுதல்-
கொடுக்க முசித்தல் -செய்கையாகிற குற்றம் இல்லாத
கொடையை உடையவனான வைஸ்ரவணன் –
அரவை அரா என்னுமா போலே -(நச்சு அரவு அணை -நச்சராவணை போல் )
வைஸ்ரவணன் -என்கிற இத்தை வயிச்சிரவணன் என்கிறது –
இத்தை அங்கீகரிக்க  வேணும் என்று அஞ்சலி பண்ணிக் கொண்டு –
அதூர விப்ர க்ருஷ்டனாய் நின்றான் -தாலேலோ –

ஓர் ஆபரணமும் வேண்டாதபடி பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை உடையவனே -தாலேலோ –

—————————————————

அவதாரிகை-ஆறாம் பாட்டு –
பச்சிம திக் பாலனாய் -சமுத்ராதிபதியான வருணன்
கிஞ்சித் கரித்த படியை சொல்கிறது –

ஓதக் கடலுள் ஒளி முத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தமும் சரி வளையும்
மா தக்க என்று வருணன் விடு தந்தான்
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே  தாலேலோ -1 3-6 –

பதவுரை

ஓதம்–அலை யெறிப்பை யுடைய
கடலில்–ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி–ஒளியை யுடைத்தாய்
முத்தின்–முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்–ஹாரத்தையும்
சாதி–நல்ல ஜாதியிலுண்டான
பவளமும்–பவழ வடத்தையும்
சந்தம்–அழகு பொருந்திய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–தோள் வளைகளையும்
மா தக்க என்று–விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன் விடு தந்தான்–வருண தேவனானவன் விடு தந்தான்
சோதி சுடர்–மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய (மீமிசை சப்தம்)
முடியாய்–கிரீடத்தை யணிந்த கண்ணனே!(ஆதி ராஜ்ய ஸூ சகம் –ஆதி ராஜ்ய ஜல்பிகா )
தாலேலோ. . !
சுந்தரம் தோளனே–அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே!
தாலேலோ. . !

ஓதம் -அலை எறியா நின்ற
மா தக்க என்று -விலையில் சிறந்ததாய் தகுதியாய் இருந்துள்ளவை -என்று

திரை கிளப்பத்தை யுடைத்தான கடலிலே உண்டாய் -ஒளியோடு கூடின முத்துக்களால் சேர்க்க பட்ட ஆரமும் –
அதுக்கு பரபாகமாம் படி -ஆக்கன் அன்றிக்கே சஜாதீயமான பவளப் படியும் –
திருக் கைக்கு தகுதியாம்படி அழகியதாய் இருந்துள்ள சரிகளும் வளைகளும் –
ஆதி ராஜ்ய ஸூசகமாய் -மிக்க தேஜஸ் உடைத்தான திரு அபிஷேகத்தை உடையவனே -தாலேலோ
ஆபரணங்கள் மிகையாம்படி அழகிய திரு தோள்கள் உடையவனே தாலேலோ –

————————————————–

அவதாரிகை -ஏழாம் பாட்டு –
திவ்ய மகிஷிகளில் பிரதாநையான பெரிய பிராட்டியார் வர விட்ட உபஹாரத்தை சொல்லுகிறது –

கானார் நறும் துழாய் கை செய்த கண்ணியும்
வானார் செழும் சோலை கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ குடைந்தை கிடந்தானே தாலேலோ -1-3-7-

பதவுரை

தேன் ஆர்–தேன் நிறைந்துள்ள
மலர்மேல்–(செந்தாமரை) மலரிலுறைகின்ற
திருமங்கை–பெரிய பிராட்டியார் (யுவதிஸ்ய குமாரிணி -மங்கை -பெருமையால் பெரிய பிராட்டியார் )
கான் ஆர்–காட்டிலுண்டான
நறு துழாய்–பரிமளம் மிக்க துளசியாலே
கை செய்த–தொடுத்த
கண்ணியும்–மாலையையும்
வான் ஆர்–சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள
செழு–செழுமை தங்கிய
சோலை–சோலையாய்த் தழைத்த
கற்பகத்தின்–கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த
வாசிகையும்–திரு நெற்றி மாலையையும்
போத்தந்தாள்–அனுப்பினாள்
கோனே–ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல் தாலேலோ!
குடந்தை–திருக்குடந்தையிலே
கிடந்தானே–கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே!
தாலேலோ!

கை செய்த கண்ணியும்-கைத் தொழில் தோன்ற பண்ணின மாலையையும் –
வானார் -ஆகாசம் முழுதும் நிறையும் படி
செழுமை தங்கிய சோலை செய்து நிற்கிற
கற்பகப் பூவாலே செய்த
திரு நெற்றி மாலையையும் –
கோனே -சர்வ சேஷியானவனே

கானார் இத்யாதி –
தன் நிலத்தில் வளருகையாலே தழைத்து பரிமள உத்தரமாய்
இருந்துள்ள திருத் துழாயாலே கைத் தொழில் தோன்ற பண்ணின திரு மாலையும் –
ஆகாசப் பரப்பு அடங்கலும் நிறையும் படி அழகியதாய் சோலை செய்து நிற்கிற
கற்பக பூவாலே செய்த திரு நெற்றி மாலையும் –
தேன் மாறாத செந்தாமரை மலரின்  மேல் நித்ய வாசம் செய்யா நிற்பாளாய்-
யுவதிஸ்ச குமாரிணீ-என்னும் பருவத்தை உடையளான பெரிய பிராட்டியார் வர விட்டாள்-

கோனே –
எல்லாரும் கிஞ்சித் கரிக்க வேண்டும் படி சர்வ சேஷியாய் உள்ளவனே -தாலேலோ –
அந்த மேன்மைக்கு எதிர் தட்டான நீர்மை தோன்ற
திருக்  குடைந்தையில் கண் வளர்ந்தவனே -தாலேலோ-

———————————————–

அவதாரிகை -எட்டாம் பாட்டு –
பெரிய பிராட்டியாருக்கு அநந்தரம் பரி கணிதையான
ஸ்ரீ பூமி பிராட்டி வர விட்ட உபஹார விசேஷத்தை சொல்லுகிறது –
(அவநியாள்-அவதி பிரஜை -காப்பாற்றுவதால் அவனி -விஸ்வம் பரா )

கச்சோடு பொற் சரிகைக் காம்பு கநக வளை
உச்சி மணிச் சுட்டி ஒண் தாள் நிரைப் பொற் பூ
அச்சுதனுக்கு என்று அவநியாள் போத்தந்தாள்
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ -1-3 8-

பதவுரை

கச்சொடு–கச்சுப் பட்டையையும்
பொன்–பொன்னாற்செய்த
சுரிகை–உடை வாளையும்
காம்பு–கரை கட்டிய சேலையையும்
கனம்–கநக மயமான
வளை–தோள் வளைகளையும்
மணி–ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி–உச்சியிலே சாத்தத் தக்கதான
சுட்டி–சுட்டியையும்
ஒண் தாள்–அழகிய காம்புகளை யுடைத்தாய்
நிரை–ஒழுங்கான
பொற்பூ–பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று–‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்–பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்–அனுப்பினாள்;
நஞ்சு–விஷமேற்றின
முலை–பூதனையின் முலையின் பாலை
உண்டாய்–உண்ட கண்ணனே!
தாலேலோ;
நாராயணா! அழேல்! தாலேலோ

கச்சோடு -திரு அரை பரியட்டத்தின் மேல் கட்டுமதான கச்சோடு கூட
பொன் சுரிகை -ஸ்பர்ஹணீயமான உடை வாளையும்
காம்பு -சிறுக் காம்பன் சேலையையும் -சிறிய கீற்றுகளை உடைய வஸ்த்ரம் -திருவரைக்கு அனுகுணமாக –
கநகம்-பொன்னால் செய்யப்பட திருவரையில் சாத்தின பரியட்டத்தின் மேலே கட்டுமதான கச்சோடே-அதிலே
சொருக தக்க அழகிய சுரிகை ஆகிற ஆயுதமும் -திருவரைக்கு அனுகுணமாக சாத்தும் –
திருக் காம்பன் சேலையும் -திரு தோள்களுக்கு அலங்காரமான பொன் வளையும் –
திருமுடியிலே சாத்துகைக்கு ரத்ன அலங்க்ருதமான சுட்டியும் -ஒள்ளிய தாளை உடைத்தாய் –
திரு முடியிலே ஒழுங்கு பட சாத்துகைக்கு ஈடான பொற் பூவும் –

அச்சுதன் இத்யாதி –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாதவனுக்கு என்று ஸ்ரீ பூமி பிராட்டி வர விட்டாள்

நச்சு முலை இத்யாதி –
பூபார நிரசனம் பண்ணுகைக்கு அடி இட்டு -பூதனையை
முடிகைக்காக அவளுடைய நஞ்சு  ஏற்றின முலையை உண்டவனே -தாலேலோ –

நாராயணா இத்யாதி –
உபய விபூதியில் உள்ளாறும் கிஞ்சித் கரிக்க வேண்டும்படி
உபய விபூதி நாதத்வ ஸூசகமான நாராயண சப்த வாச்யன் ஆனவனே அழாதே கொள் தாலேலோ –

—————————————-

அவதாரிகை -ஒன்பதாம் பாட்டு –
அவதார காலத்தில் ஒக்கப் பிறந்து -இத்தலையை
பேணிப் போந்த பாந்தவ விசேஷத்தாலே கீழ் சொன்னவர்கள் எல்லாரிலும் –
வ்யாவர்த்தையான -துர்க்கை-தன்னுடைய சினேகா அனுகுணமாக பண்ணின
கிஞ்சித் காரத்தை சொல்லுகிறது –

மெய் திமிரும் நானப் பொடியோடு  மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகிக் கொண்டு  உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ -1 3-9 –

பதவுரை

மெய்–திரு மேனியிலே
திமிரும்–பூசுகைக்குரிய
நானம் பொடியோடு–கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்–மஞ்சள் பொடியையும்
செய்ய–சிவந்ததாய்
தட–விசாலமாயுள்ள
கண்ணுக்கு–கண்களில் (சாத்த)
அஞ்சனமும்–மையையும்,
(திரு நெற்றியில் சாத்துகைக்கு)
சிந்தூரமும்–ஸிந்தூரத்தையும்
வெய்ய கலைப் பாகி–கொடிய ஆண் மானை வாஹநமாக வுடைய துர்க்கை யானவள்
கொண்டு–எடுத்துக் கொடு வந்து
உவளாய் நின்றாள்–அதோ இரா நின்றாள்;
ஐயா–ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து–ஸ்ரீரங்கத்திலே
அணையானே–(திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே!
தாலேலோ.

வெய்ய கலைப்பாகிக் கொண்டு -வெவ்விய ஆண் மானை வாகனமாக உடைய துர்க்கை ஆனவள்
உவளாய் நின்றாள்  -அதூர விப்ர க்ரஷ்டை யாய்  நின்றாள்

திருமேனியில் மர்திக்கைக்கு ( ஈசுவதற்கு ) ஈடான -சந்தன கஸ்தூரி கர்பூராதி சுகந்த தரவ்ய
சமுதாய சூர்ணத்தோடே நிறம் பெற சாத்த தக்க மஞ்சள் பொடியும் –
சிவந்து புடை பரந்து நீண்ட திருக் கண்களுக்கு சாத்துகைக்கு தகுதியான அஞ்சனமும் –
திரு நெற்றியிலே அழகு பெற சாத்துகைக்கு சிந்துரமும் –
வேவிதான கலையை வாகனமாக உடைய துர்க்கையானவள் கொண்டு வந்து
அதூர விப்ர க்ருஷ்டை யாய் நின்றாள் –

சர்வ ஸ்வாமி யானவனே அழாதே கொள் அழாதே கொள் –
அந்த சர்வ ஸ்வாமித்வத்தை நிரவகிக்கைக்கு ஈடாக -கோவில் திரு அரவு அணையிலே
பள்ளி கொண்டு அருளினவனே-தாலேலோ –

அன்றிக்கே –
வெய்ய கலைப்பாகி என்கிறது -வெம்மை விருப்பத்துக்கு வாசகம் ஆகையாலே
ஸ்ப்ருஹணீயமான கலைகளை நாவிலே நின்று நடத்துகிற சரஸ்வதியை சொல்லுகிறதாய் –
அடியிலே எல்லாருக்கும் பிரதானமாக சொல்லப் பட்ட பிரம்மாவுக்கு பிரதான மகிஷி யானவள் பண்ணின
கிஞ்சித் காரத்தை சொல்லுகிறது என்று -வாக்ய அர்த்தமாக்கி –
மேலடைய-அதுக்கு சேர நிர்வஹிக்கவுமாம்-

————————————————-

அவதாரிகை -நிகமத்தில் –
இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே-1 3-10 –

பதவுரை

வஞ்சனையால் வந்த–வஞ்சக வேஷத்தோடே வந்த
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை உண்ட–முலையை அமுது செய்தவனாய்
அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
தாலாட்டிய–தாலாட்டின படிகளை
செம் சொல் மறையவர்–செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
சேர்–நித்ய வாசம் பண்ணப் பெற்ற
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த
பட்டன்–பெரியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–இப் பாசுரங்கள்
எஞ்சாமை–குறைவு படாமல்
வல்லவர்க்கு–ஓத வல்லவர்க்கு
இடர் இல்லை–துன்பம் ஒன்றுமில்லையாம்.
தான் ஏ – அசை

தாயாய் வந்த பேய் -என்கிறபடியே -பேயான தன வடிவை மறைத்து
தாய் வடிவை கொண்டு வஞ்சித்து -வந்த பூதனை உடைய முலையை –
அவள் தாயாய் வந்தாப் போலே -தானும் பிள்ளையாய் கொண்டு -தாய் முலை உண்ணுமாப் போலே –
உண்ணா நிற்க செய்தே -அவள் முடியும்படியாக உண்ட –

அஞ்சன வண்ணனை –
விரோதி போக பெற்றோம் என்னும் ஹர்ஷத்தாலே திரு மேனியில் பிறந்த புகரை சொல்லுகிறது –

ஆய்ச்சி இத்யாதி –
மாதாவான யசோதை பிராட்டி தாலாட்டின படிகளை –

செம் சொல் இத்யாதி –
யதா பூத வாதி ஆகையாலே -செவ்விய சொல்லை உடைத்தான
வேதத்தை தங்களுக்கு நிரூபகமாக உடையவர்கள் சேர்ந்து வர்த்திக்கிற
ஸ்ரீ வில்லி புத்தூரில் -ப்ராஹ்மண உத்தமரான ஸ்ரீ பெரிய ஆழ்வார் அருளி செய்த சப்தத்தை –

எஞ்சாமை இத்யாதி –
சங்கோசம் அற அதிகரிக்க வல்லவர்களுக்கு ஒரு துக்கம் இல்லை –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-2– ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் – –

May 16, 2012

(சம தம -வளர -இந்திரியங்களை திவ்ய மங்கள விக்ரகத்தில் மேய விட்டு -பாதாதி கேசாந்தமாக அனுபவம் –
அமலனாதி பிரான் -திருவடி -தொடங்கி -அனுபவம்
பகவத் த்யான சோபானம் -படிக்கட்டு-இதே போல் –
ஸூத்வ ஸத்வம் -தியானிக்க ஸத்வ குணம் வளர்ந்து ரஜஸ் தமஸ் குறைந்து –
பிரக்ருதியால் உருவாக்கப்பட்ட உடல் முழுவதுமே முக்குண மயமாகவே இருக்கும் –
தண்ணீர் விட்டு வெந்நீரை ஆற்றுவது போல் -தியானிக்க தியானிக்க -ஸத்வம் சேரச் சேர -ஸத்வம் வளரும் –
ஆச்சர்யமான -21 பாசுரங்களால் விசத தமமாக யசோதா பிராட்டி ஆய்ச்சிமார்களுக்குக் காட்டும் பாவத்தாலே அனுபவிக்கிறார் –
பர உபகாரம் -காட்டிக் கொடுத்து -தத்காலம் அவள் -இக் காலத்தாருக்குமாக இவர் -)

கீழில் திரு மொழியில் –
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலைக் கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க தத்கால உலோபளாலநங்களோடே
அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –

இனி மேல் இப்படி திருவவதரித்து அருளினவனுடைய  திவ்ய விக்ரக்ஹ வை லஷண்யத்தை
தத் தத் காலத்தில் யசோதை பிராட்டி அனுபவித்தாப்  போலே –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
திருவடிகளில் நின்றும் -திருமுடி அளவாக –
அனுபவித்த பிரகாரத்தை –
அப்போது அவள் பேசின பாசுரத்தாலே ஆதாரம் தோற்ற அருளி செய்கிறார் –

(பவள வாயீர் வந்து காணீரே-1-2-1-
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை-1-2-21-)

————-

(அடியேன் -திருவடியே உபாயம் உபேயமாக -ஆறும் பேறும் -நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
திருக்கமல பாதம் -பொன் தாமரை -பாவானத்வம் போக்யத்வம்
துயர் அறு சுடர் அடி -துயரை அறுத்து தனது துயரை அறுத்துக் கொள்ளும் –
அவனுக்கும் நமக்கும் இவையே உத்தேச்யம் –
கர அரவிந்தம் -பதாரவிந்தம் )

சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு  போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பத உரை
சீதக் கடலுள்  அமுதன்ன = குளிர்ந்த கடலில் உள்ள அமுதாக பிறந்த பிராட்டியோடு ஒத்த
உப்புச்சாறு -புற அமுதம்
ஆராவமுதன் தானே கைக் கொண்டு உகந்த உள் அமுதம் இவளே
தேவகி = தேவகி பிராட்டி
கோதை =பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட
குழலாள் = கேச பாசத்தை உடைய
அசோதைக்கு =யசோதை பிராட்டிக்கு
போத்தந்த = போக விட்ட
பேதை குழவி =பேதைமை உடைய சிசுவானது
பிடித்து = திருக் கைகளால் பிடித்து
சுவைத்து = ஆச்வாதித்து
உண்ணும் = திருப் பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதக் கமலங்கள் = திரு வடித் தாமரைகளை
வந்து காணீர் = வந்து காணும் கோள்
பவள வாயீர் = பவளம் போல் சிவந்த அதரத்தை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் -கடுக வந்து பாரும் கோள்
காணீரே என்றதை இரட்டித்து சொன்னதால் ஆதரத்தின் மிகுதி தோற்றுகிறது-

வியாக்யானம்
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
அகாதமாகையாலே குளிர்த்தி மாறாத சமுத்ரத்திலே -தேவ போக்யமாக பிறந்த
அமிர்தம் புறவமுதாம் படி –
அமுதத்தில் வரும் பெண்ணமுது என்கிறபடியே உள்ளமுதாக பிறந்த
பிராட்டியோடே ஒத்த தேவகி பிராட்டி –
அதாவது –
அவள் பரோபகார சீலை யானாற் போலே இவளும் பரோபாகார சீலை -என்றபடி –

கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த –
பூமாலையால் அலங்க்ரிதமான குழலை  உடைய யசோதை பிராட்டிக்கு –
போகவிட்ட -வரவிட்ட என்றபடி
போத்தந்த என்று ஒரு முழு சொல்லு –

பேதை குழவி -பேதை பருவத்துக்கு தக்க அறிவில்லாமை–குழவி -பருவம்

பிடித்து சுவைத்து உண்ணும் –
திருக் கையாலே பிடித்து திருப் பவளத்தில் வைத்து ஆஸ்வசித்து புஜிக்கும்-
தேனே மலரும் திருப் பாதம் -என்று சொல்லக் கேட்டு இருக்கையாலே
திருவடிகள் தன்னின் போக்யதை தன்னை பரீஷிக்கைக்காக -பருவத்துக்கு
அநு குணமான வியாபாரம் செய்வாரைப் போலே செய்தான் -ஆதல் –

முக்தச்சி -என்றும் —
வட தள மதி சைய ரெங்க தாமன் சயித இவார்ண வதர்ணகபதாப்ஜம்
அதி முக முதரே ஜகந்தி மாதும் நிததித வைஷ்ணவ போகய லிப்சயாவ -என்றும் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்றும் –
வையம் ஏழும் கண்டாள்-என்னும்படி திரு வயிற்றில் கிடக்கிற லோகங்களுக்கு –
சிறை  சோறாக்கினான் ஆதல் –

பாதக் கமலங்கள் காணீர் –
இப்படி இருந்துள்ள திருவடித் தாமரைகளை வந்து காணும் கோள்-
கமலம் -என்கையாலே –
திருவடிகளில் உண்டான நிறத்தையும் -சைத்ய -மார்தவ -ஸௌரப்யாதிகளையும் -சொல்லுகிறது –

பவள வாயீர் வந்து காணீரே –
பவளம் போல் சிவந்த அதரத்தை உடையீர் வந்து காணும் கோள் என்று –
யசோதை பிராட்டி -தான் அனுபவித்த அம்சத்தை –
சஜாதீயைகளாய்-அநு புபூஷூக்களாய் இருப்பாரையும் ஸ்லாகித்து கொண்டு
அழைத்து காட்டின பாசுரத்தாலே அருளிச் செய்தார் ஆய்த்து-

—————————————–

அவதாரிகை-
இரண்டாம் பாட்டு –
திருவடிகளின் அகவாயை அநு பவித்தாராய் நின்றார் கீழ் –
இப்பாட்டில் திருவடிகளின் திரு உகிருடன் திரு விரல்களை அனுபவிக்கிறார் –

முத்தும் மணியும்  வயிரமும் நன் பொன்னும்
தத்தித் பதித்து தலை பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்து இட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே -1-2-2-

பத உரை
முத்தும் மணியும் =முத்துக்களையும் ரத்னங்களையும்
வயிரமும் = வயிரத்தையும்
நன் பொன்னும் =நல்ல பொன்னையும்
தத்திப் பதித்து = மாறி மாறி பதித்து
தலை பெய்தாற் போல் =சேர்த்தாப் போல்
எங்கும் = எங்கும்
மணி வண்ணன் = மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனுடைய
பாதங்கள் =திருவடிகளில் உள்ள
பத்து விரலும் =விரல்கள் பத்தும்
ஒத்திட்டு = தன்னிலே சேர்ந்து
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
ஒண் நுதலீர் =அழகிய நெற்றியை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் = வந்து பாரும் கோள்
ஏ -அசை

முத்து இத்யாதி –
திருவடிகளுக்கு செம்பஞ்சு சாத்துகிற போது ஒன்பது விரலுக்கும் நவ ரத்ன
வர்ணத்தையும் -மற்றொரு விரலுக்கு ஸ்வர்ண வர்ணத்தையும் –
பரபாகம் தோற்ற மாறி மாறி சாத்துகையாலே –
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனுடைய -திருவடிகளில் பத்து விரலும் –
முத்து மாணிக்கம் வயிரம் முதலான நவ ரத்னங்களையும் நல்ல பொன்னையும் –
மாறி மாறி பதித்து சேர்த்தாப் போலேயாய் -திரு விரல்களினுடைய  லஷணத்தில்
ஒன்றும் குறை இன்றிக்கே எனக்கும் தன்னிலே சேர்ந்த படியை காணும் கோள்-
ஒள்ளிய நுதலை உடைய நீங்கள் வந்து காணும் கோள் -என்கை-
முத்தும் மணியும் வயிரமும் -என்ற இது -அல்லாத ரத்னங்களுக்கும் உப லஷணம்
நுதல் =நெற்றி –

————————————————–

அவதாரிகை
மூன்றாம் பாட்டு -திருவடிகளை அனுபவித்த அநந்தரம்-திருக் கணைக் காலின் அழகை அனுபவிக்கிறார் –

பணைத் தோள் இள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-

பத உரை –
பணை = மூங்கில் போன்ற
தோள் = தோள்களை உடையளாய்
இள ஆய்ச்சி = இளைமை பருவத்தை உடையளான ஆய்ச்சியின்
பால் பாய்ந்த கொங்கை =பால் சொரிகிற முலையை
அணைத்து = திருக் கைகளால் அணைத்து
ஆர = திரு வயிறு பூரணனாம் படி
உண்டு = அமுது செய்து
கிடந்த = களித்து கிடந்த
இப்பிள்ளை = இந்த கிருஷ்ணனுடைய
இணை = சேர்த்தி அழகையுடைய
காலில் = திருவடிகளில்
வெள்ளி தளை நின்று = வெள்ளி தண்டை நின்று
இலங்கும் = விளங்கா நிற்கிற
கணை கால் இருந்த ஆ = கணைக் கால் இருந்த படியை
காணீர் = பாரும் கோள்
காரிகையீர் வந்து காணீர் = அழகிய பெண்களே வந்து காணும் கோள்
ஏ-அசை-

வியாக்யானம் –
பணைத் தோள் இள வாய்ச்சி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்விக்கும் -வேய் போல் இருந்துள்ள
தோளை உடையளாய்  -பருவத்தால் இளையளுமான ஆய்ச்சி உடைய –
இப்போது இவளை வர்ணிக்கிறது -அழகுக்கும் பருவத்துக்கும் ஈடாக -போக பரவசையாய்
இருக்கை அன்றிக்கே -பிள்ளையை சிநேகித்து நோக்கிக் கொண்டு -போருமவள் என்னும் இடம் தோற்றுகைக்காக-

பால் பாய்ந்த கொங்கை –
சிநேகத்தால் நெறித்து பால் சொரிகிற முலையை

அணைத்து ஆர உண்டு கிடந்த இப்பிள்ளை –
திருக்கைகளால் அணைத்து –
வயிறார உண்டு –
அத்தாலே ஹர்ஷனாய் கிடந்த -இப்பிள்ளை  உடைய –

இணைகால் இத்யாதி –
அந்யோந்யம் சேர்த்தி அழகை உடைய திருவடிகளில் –
வெள்ளித் தண்டை நின்று விளங்கா நிற்கிற கணைக் காலின்
அழகு இருந்த படியை -அனுபவ யோக்யரானவர்கள் வந்து காணும் கோள் –

காரிகையீர் வந்து காணீரே –
அழகு உடையவர்கள் ஆகையாலே அழகின் வாசி அறியும் நீங்கள் வந்து காணும் கோள் –

———————————————

அவதாரிகை -நாலாம் பாட்டு –
திருக் கணைக் காலின் அழகை அனுபவித்த அநந்தரம் -திரு முழம் தாளின் அழகை
அனுபவிக்கிறார் –

உழந்தாள்  நறு நெய் ஒரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-

பத உரை –
உழந்தாள் = ஸ்ரமப் பட்டு தடாவில் சேர்த்தவளுடைய
நறும் நெய் = மணம் மிக நெய்யை
ஒரோ தடா = ஒவ்வொரு தடாவாக
உண்ண = அமுது செய்த அளவில்
இழந்தாள் = பிள்ளையை இழந்தாளாக நினைத்த தாய்
எரிவினால் = வயிற்று எரிச்சலாலே
ஈர்த்து = கையை பிடித்து இழுத்து
எழில் மத்தின் =அழகிய மத்திலே
பழம் தாம்பால் = சுற்றி கடைந்து பழகின தாம்பாலே
ஒச்ச = அடிப்பதாக ஓங்க
பயத்தால் = அச்சத்தாலே
தவழ்ந்தான் = அத்தை தப்பி போவதாக தவழ்ந்தவனுடைய
முழம் தாள் = முழம் கால்கள்
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
முகிழ் முலையீர் = முகிழ்ந்த முலையை உடைய பெண்களே
வந்து காணீர் –

வியாக்யானம்
உழந்தாள் –ஆயாசித்தவள்-கறந்து காய்த்து தோய்த்து கடைந்து வெண்ணெய் ஆக்கி
உருக்கி தடாக்களில் சேர்த்து வைத்த வருத்தத்தை எல்லாம் சொல்லுகிறது

நறுநெய் ஓரா தடா உண்ண
நறுவிதான நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் சேஷியாதபடி உண்ண –

இழந்தாள் எரிவினால் ஈர்த்து -உண்ட நெய் பிள்ளைக்கு சாத்மியாது-என்று
பிள்ளையை இழந்தாளாக நினைத்து -பயப்படுகையால் வந்த வயிற்று எரிச்சலாலே கையை பிடித்து இழுத்து

எழில் மத்தின் பழம் தாம்பால் ஒச்ச -அழகிய மத்திலே சுற்றி கடைந்து பழகின தாம்பாலே அடிப்பதாக ஓங்க

பயத்தால் தவழ்ந்தான் -பயத்தாலே அத்தை தப்புவதாக தவழ்ந்தவனுடைய

முழம் தாள் இருந்தவா காணீரே -முழம் தாளின் அழகு இருந்தபடியை காணுங்கோள்

முகிழ் முலையீர் வந்து காணீரே -முகிழ்த்த முலையை உடையீர் வந்து காணுங்கோள்

—————————————————–

அவதாரிகை -ஐந்தாம் பாட்டு –
முழம் தாளின் அழகை அனுபவித்த அநந்தரம் -திருத் துடையின் அழகை அனுபவிக்கிறார் –

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை  வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-

பத உரை –
முன் = முற்காலத்திலே
மறம் கொள் = த்வேஷம் கொண்ட
இரணியன் = ஹிரணியன் உடைய
மார்வை = மார்வை
கீண்டான் = பிளந்தவனாய்
பிறங்கிய =கொடுமையால் வந்த பிரகாசத்தை உடைய
பேய்ச்சி = பூதனையின்
முலை = முலையை
சுவைத்து = பசி அறும்படி ஆச்வாசித்து
உண்டிட்டு = புசித்து
உறங்குவான் போல் =ஒன்றும் அறியாதவன் படி உறங்குமவன் போல்
கிடந்த இப்பிள்ளை =கிடந்த இப்பிள்ளையின்
குறங்குகளை = திருத் தொடைகளை
வந்து காணீர் = வந்து காணுங்கோள்
குவி முலையீர் = குவியா நின்ற முலைகளை உடைய பெண் காள்
வந்து காணீர்
ஏ -அசை

வியாக்யானம் –
க்ரௌர்யத்தால் வந்த பிரகாசத்தை உடைத்தான பூதனை உடைய முலையை
பசையற சுவைத்து புசித்து -செய்த பராக்கிரமம் ஒன்றும் தெரியாதபடி -உறங்குபவன் போல் கிடந்த
இப்பிள்ளை -பிரகலாத விஷயமான சீற்றத்தை உடையனான ஹிரண்யனுடைய மார்வை
முற்காலத்திலே பிளந்து -பொகட்டவனுடைய-அச் சுவடு தோற்றும்படி இருக்கிற திருத் துடைகளை வந்து காணுங்கோள் –

—————————————————

அவதாரிகை -ஆறாம் பாட்டு –
திருத் துடையின் அழகை அனுபவித்த அநந்தரம்
திருக் கடி பிரதேசத்தின் அழகை அனுபவிக்கிறார் –

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

பதவுரை

மத்தம்–மதத்தையுடைய
களிறு–யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை–ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத–மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்–தேவகியினுடைய
வயிற்றில்–வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்–ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய–திருவவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ–சண்ணமிருந்த படியை
காணீர்!!
முகிழ் நகையீர்–புன் சிரிப்பை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் –
மதித்த ஆனைகளின் உடைய ஸ்ரீ வசூதேவர்
தம்முடைய ஹிருதயத்துக்கு தகுதியாக பரிமாறுகிற தேவகியுடைய திரு வயிற்றிலே –

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

அச்யுத பாநு நா தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் -என்கிறபடியே –
தேவகி திரு வயிறு கிழக்கு ஸந்த்யை -இவன் அச்யுத பாநு
(கிழக்குக்கும் ஸூர்யனுக்கும் உள்ள சம்பந்தம் போல் இவனுக்கும் இவள் கர்ப்பத்துக்கும் தொடர்பு )
கர்ப வாச தோஷம் அற ஆவிர்பவித்து –
(சேதனனைப் போலே கர்ம நிபந்தம் இன்றிக்கே
இச்சா க்ருஹீத -அனுக்ரஹத்தாலே ஆவிர்பவித்தான் -என்கிறது )

ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ
விடாதவனுடைய முத்தம் இருந்தபடியை காணுங்கோள் –
முத்தம் -சண்ணம்
முகிழ் நகை -மந்தஸ்மிதம்-

—————————————————–

ஏழாம் பாட்டு –
திருக் கடி பிரதேசத்தின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு மருங்கின் அழகை அனுபவிக்கிறார் –

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப் பறித்து கொண்டு ஓடும் பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-

பதவுரை

இரு கை மத களிறு–பெரிய துதிக்கையை யுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை–தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை (அம்பத்தன் -பாகனின் பெயர் )
பருங்கி–கொன்று
பறித்துக்கொண்டு–(யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு–(கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்–பரமபுருஷனான கண்ணனுடைய
நெருங்கு–செறியக் கோத்த
பவளமும்–பவள வடமும்
நேர் நாணும்–அழகிய அரை நாணும்
முத்தும்–முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ–திருவரையும் இருந்தபடியை
காணீர்!
வாள் நுதலீர்–ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

இருங்கை =பெரிய துதிக்கை உடைய
பருங்கி =கொன்று
குவலயாபீடத்தை தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனைக் கொன்று –
அதன் கொம்புகளை பறித்து கொண்டு -கம்சன் இருந்த உயர்ந்த நிலத்திலே
ஓடிச் சென்று குதித்த பரமன் –

அன்றிக்கே
ஊரில் இடைப் பிள்ளைகள் விளையாடுகிறவர்களில்-லிலோ உபகரணங்களிலே
ஆனையாக பண்ணி -பெரிய கையை உடைய மத்த கஜம் என்று இழுத்து கொண்டு
திரிகிறவனை-அடர்த்து பறித்து கொண்டு ஓடா நிற்கும் பரமன் -என்னுதல்-

செறிய கோத்த பவள வடமும் –
நேரியதான பொன் நாணும் –
முத்து வடமும் –
இவற்றோடு சேர்ந்த திரு மருங்கும் இருந்தபடியை காணுங்கோள் –

————————————————–

அவதாரிகை -எட்டாம் பட்டு –
திரு மருங்கின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு உந்தியின் அழகை அனுபவிக்கிறார் –
(அயனைப் படைத்ததோர் எழில் உந்தி
கொப்பூழில் எழு பூ அழகர்
இளமை மாறாத எழில் )

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

பதவுரை

வந்த–(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை–சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து–தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறு போல்–குவிந்த கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
தானே–தானே முக்கியனாய் நின்று
விளையாடும்–விளையாடுமவனாய்
நந்தன்–நந்தகோபர்க்கு
மதலைக்கு–(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய–மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ–நாபி இருக்கிறபடியை
காணீர்!
ஒளி–ஒளியால் விஞ்சின
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!!

ஒளி இழையீர் =காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்காள்
தன்னோடு விளையாட வந்த -தன்னோராயிரம் பிள்ளைகளான மதலை குழாத்தை –
தானும் மதலையாய் இருக்க செய்தே -அத்தனை பேரும் ஒருதலை –
தான் ஒரு தலையாக நின்று -பலாத்கரித்து -கொம்பு முகிழ்த்த  இள யானை  போலே
தானே பிரதானனாய்  விளையாடும் -இப்படி திரியா நிற்க  செய்தே –
ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில்
ச விநயமாக வர்த்திக்கும் பிள்ளைத் தனத்தை உடையவனுக்கு –
(யசோதை இளம் சிங்கம் நந்தகோபன் குமரன் )

மிகவும் அழகிய திரு உந்தியைக் காணீரே
ஸுந்தர்ய ஆறு -அழகு சுழல் -தானே திரு உந்தி –
மேல் தடம் தோள்-அகல்பம் -இங்கு ஸ்தானம் ஆல்பம்
ஒளி படைத்த ஆபரணம் பூண்ட நீங்கள் காணீர் என்கிறாள்
(சூடகமே –பராவரர் சூடும் ஆத்ம பூஷணம் -தாஸ்யம் -பாரதந்தர்யம் -சம தமங்கள் )

———————————————

ஒன்பதாம் பாட்டு –
திரு உந்தியின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு உதரத்தின் அழகை அனுபவிக்கிறார் –

அதிரும் கடல் நிற வண்ணனை ஆச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-

பதவுரை

அதிரும்–கோஷிக்கின்ற
கடல் நிறம்–கடலினது நிறம் போன்ற
வண்ணனை–நிறத்தை யுடைய கண்ணனுக்கு
(அடங்காப் பிள்ளைக்கு த்ருஷ்டாந்தம் )
ஆய்ச்சி–யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி–இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து–(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே–தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்–பழகின கயிற்றாலே
ஆர்த்த–கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ–வயிறு இருந்தபடியை
காணீர்!
ஒளி வளையீர்–ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

(உரவிடை ஆப்புண்டு
இடைக் குறையாக உதர இடை -என்றும் –
நெஞ்சுடன் -அவளுடன் சேர்த்துக் காட்டினாள்
வரத வலி த்ரயம் சலேன
தாமோதரனை அறிய ஆமோ தரம்
பிரேமத்தால்-தழும்பு மாறாமல் )

பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த உதரம் = தன் நினைவு தப்பாதபடி
பழகின கயிற்றால் கட்டின திரு வயிறு
அதிரும் கடல் என்று விசேஷிகையாலே-இவனுடைய அடங்காமை தோற்றுகிறது-

கன்றுகளையும் பசுக்களையும் கட்டி பழகி ஒளிஞ்சானமுட்டாய் கிடந்ததொரு –
ஒன்றுக்கும் உதவாத ஒரு கயிறு –
தாம்பாலே கட்டின கயிற்றில் -தழும்பு கணலாம்படி இருக்கிற வயிற்றின் அழகு
இருக்கிறபடியை காணுங்கோள் —

———————————————————

திரு உதரத்தின் அழகை அனுபவித்த அநந்தரம்
திரு மார்பின் அழகை அனுபவிக்கிறார் –

பெரு மா உரலில் பிணிப்பு உண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-

பதவுரை

பெரு மா உரலில்–மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு–கட்டுண்டிருந்து இருந்து
அங்கு–அந்த நிலைமையிலே
இரு மா மருதம்–இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த–முறித்தருளின
இ பிள்ளை–இக் கண்ண பிரானுடைய,
குரு மா–மிகவும் சிறந்த
மணி பூண்–கௌஸ்துபாபரணமானது
குலாவித் திகழும்–அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர்–செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள்
வந்து காணீர்!

மிகவும் பெரிய உரலோடு கட்ட
அத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு
புணரா நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ

தன்னை நலிவதாக சேர்ந்து இருக்கும் இரண்டு பெரிய மருதுகளையும் தவழ்ந்து முறித்தது
முறித்த ஓசையிலே
புரிந்து பார்த்து சிரித்த படி கண்டு -இப்பிள்ளை என்றது

குரு மா மணிப் பூண் = கௌஸ்துப ஆபரணம் -ஸ்ரேஷ்டமாய் ஸ்லாக்கியமான ஆபரணம் –

(கௌஸ்துபம் -நீல நாயகம் -ஜீவாத்மாவுக்கு பிரதிநிதி
அஸ்திர பூஷண அதிகாரம் –
பரத அக்ரூர மாருத -பிரக்ருதிகளை ஆலிங்கனம்
திகழ்கின்ற திரு மங்கை திரு மார்பு -அலர்மேல் மங்கை உறை மார்பன்
துளஸீ பிராட்டி கௌஸ்துபம் -பரமன் பறை சாற்றும்
கூர்ம வியாக்ர ஐம்படைத்தாலி -எளிமை பறை சாற்றும் )

———————————————-

பதினோராம் பாட்டு –
திரு மார்வின் அழகை அனுபவித்த அநந்தரம்
திரு தோளின் அழகை அனுபவிக்கிறார்
(ஸூந்தர தோளுடையான் -ஸூந்தர-பாஹு ஸ்தவம் -விகாசத்துக்கு ஹேது –
பாரிஜாத மரக்கிளை -பூ கொத்து போல் திவ்ய ஆயுதங்கள் )

நாள்களோர்  நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிற்று ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-

பதவுரை

நாள்கள்–(கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர் நாலு ஐந்து திங்கள் அளவிலே–ஒரு நாலைந்து மாதத் தளவிலே
தாளை நிமிர்ந்து–காலைத் தூக்கி
சகடத்தை–சகடாஸுரனை
சாடிப்போய்–உதைத்துவிட்டு,
வாள் கொள்–ஒளிகொண்டதாய்
வளை–வளைந்திராநின்றுள்ள
எயிறு–கோரப் பற்களை யுடைய பூதனையினது
ஆர் உயிர்–அரிய உயிரை
வவ்வினான்–முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர்–சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

திரு அவதாரத்துக்கு பின்
மாசம் நாலு என்றும் -ஐஞ்சு என்றும் -ஒன்பது என்றும் -இருபது என்றும் –
தெரியாதபடி -இப்படி மயக்கி அருளி செய்தது -மங்களா சாசன பரர் ஆகையாலே —
திருஷ்டி தோஷ பரிஹார்த்தமாக –

தனித்து கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் -அசூராவேசத்தாலே நலிவதாக வந்து கிட்டுகிற
சகடத்தை முலை வரவு தாழ்த்தி சீறி நிமிர்த்து -திருவடிகளாலே கட்டு அழிய உதைத்து –
இவன் அன்யார்த்தமாக திருவடிகளை நிமிர்த்தாலும் பிரதி கூலித்து வந்து கிட்டுகையாலே –
சகடம் பக்நமாக தட்டில்லை இறே-

சாடிப்போய்-என்றது –
சாடி விட்டு என்றபடி –

ஒளியை உடைத்தாய்-வளைந்து இருக்கிற எயிருகளை உடையவளான பூதனை உடைய
முடித்தற்கு அரிய  உயிரை-அபஹரித்தவனுடைய –
பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே -பெரிய திருமொழி -என்னக் கடவது இறே —

பேய் முலை நஞ்சு உண்டு கள்ளச்சகடம் -ஆண்டாள்
குரோதம் யோசித்த -சகடம் -பேய் முலை வாசக்குழலி இழந்தது -நம்மாழ்வார்

வளை எயிற்று ஆர் உயிர் -முற்று உவமை -எயிறு உடையவளது உயிர்

சகடாசுர நிரசனத்துக்கு முன்னே பூத நாதி நிரசனமாய் இருக்க -மாறி அருளி செய்தது –
க்ரம விவஷயா வன்று –
ஹர்ஷ அதிசயத்தாலே இன்னபடி சொல்ல வேணும் என்று அறியாமை –

அவளை முலைப் பாலோடே உயிரை வற்ற வாங்குகிற போது-நெறித்த  தோள்களினுடைய
அழகு இருக்கிறபடியை காணுங்கோள்-
சுருண்ட குழலை உடையரான நீங்கள் வந்து காணுங்கோள் –

—————————————————–

பன்னிரண்டாம் பாட்டு –
திரு தோளின் அழகை அனுபவித்த அநந்தரம்-
திருக் கைத் தலத்தின் அழகை அனுபவிக்கிறார் –

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

பதவுரை

மை–மையணிந்த
தட–பெரிய
கண்ணி–கண்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
வளர்க்கின்ற–வளர்க்கப்படுகின்றவனாய்
தலை செய்–உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்–கரு நெய்தல் பூவினது போன்ற நிறத்தை யுடையவான
சிறு பிள்ளை-(இந்த) பால க்ருஷ்ணனுடைய
நெய்–கூர்மை பொருந்திய
தலை–நுதியை யுடைய
நேமியும்–திருவாழியும்
சங்கும்–திருச்சங்கும்
நிலாவிய–அமைந்திரா நின்றுள்ள
கைத்தலங்கள்–உள்ளங்கைகளை
வந்து காணீர்!
கனம்–பொன்னால் செய்த
குழையீர்–காதணிகளை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல் –
அஞ்சன அலங்க்ர்தமாய் விஸ்தாரமாய் இருந்துள்ள கண்ணை உடையவள் -என்னுதல் –
இப்படி இருந்துள்ள கண் அழகை உடைய யசோதை பிராட்டி -வைத்த கண் வாங்காமல்  நோக்கி
வளர்க்கிற வளர்ப்பார் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும் –
அவர்கள் கையில் காட்டிக் கொடாதே -தானே இறே வளர்ப்பார்கள் –

பூ சாரம் உள்ள ஷேத்ரத்தில் -அப்போது அலர்ந்த குவளை பூவின் நிறம் போல் இருக்கிற
நிறத்தை உடையவனான சிறு பிள்ளை யினுடைய-
அவள் சீராட்டி வளர்த்த முசு முசுப்பு-( ஸ்ரத்தை ) எல்லாம்
திரு நிறத்திலே தோன்றும்படி இருக்கும் ஆயிற்று –

கூரிய நுதியை உடைத்தான திரு ஆழி என்னுதல் –
ஆயுத சாமான்யத்தாலே நெய் இருக்கும் திரு ஆழி என்னுதல் –
கை எல்லாம் நெய் வாயொரு பிள்ளை பரம் அன்று -பெரிய திருமொழி -10-7-3-என்கிற –
திருக் கையின் ஸ்பர்சத்தாலே நெய் சுவடு மாறாத திரு ஆழி என்னுதல்–
இப்படி இருக்கிற திரு ஆழியும் –

கருதும் இடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே -கை விடாதே இருந்து –
தன்னோசையாலே எதிரிகளை அழிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –

நிரந்தரமாக வர்த்தியா நின்றுள்ள கையும் -ஆழ்வார்களுமான  சேர்த்தியை ஒரோ தசைகளிலே
இவன் தான் இவளுக்கும் காட்டக் கூடும் இறே
(உம்மை தொகை -தேவகிப் பிராட்டிக்கு திரு அவதரித்த அன்றே காட்டி அருளினான் அன்றோ )

கனம் என்று பொன்னாகவுமாம்-

——————————————————

பதிமூன்றாம் பாட்டு –
திருக் கைத் தலத்தின் அழகை அனுபவித்த அநந்தரம்-
திருக் கழுத்தின் அழகை அனுபவிக்கிறார் –

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-

பதவுரை

வண்டு அமர்–வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்–பூ அணிந்த குழலை யுடையளான
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு–(தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
(உண்மையால் தனது பிள்ளையாகவே வளர்த்தாள்
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ என்று சொல்லும் படி -)
வளர்க்கின்ற–வளர்க்கப் பெற்றவனாய்
கோ வலர்–ஸ்ரீநந்த கோபருடைய
குட்டற்கு–பிள்ளையான கண்ண பிரானுடைய,
அண்டமும்–அண்டங்களையும்
நாடும்–(அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க–முழுதும்
விழுங்கிய–(ப்ரளய காலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ–கழுத்திருந்தபடியை
(கனக வலைய முத்ராம் -பெரும்தெவித்தாயார் -வளையல்கள் அழுந்திய –
விஸ்வரூப சேவை -தேசிகன் -வரதராஜ பஞ்சாத் )

பிள்ளைகள் அனுங்காமைக்காக ( பயப்படாமல் இருக்க ) தாய்மார் தங்களை அலங்கரித்து கொண்டு இருப்பார்கள் ஆய்த்து-
அப்படியே இவளும் கால புஷ்பங்களை பல காலும் முடிக்கையாலே மது பானம் பண்ணும் வண்டுகளுக்கு
வஸ்தவ்ய பூமி இவள் குழல் இறே –
ஆகையால் -வண்டுகள் படிந்து கிடக்கிற பூவோடு கூடின குழலை உடையளான யசோதை பிராட்டி –
தன் மகனாய் ஸ்நேஹித்து கொண்டு வளர்க்கிற
ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு –
இவர் அடி அறிந்தவர் ஆகையாலே -மகனாக கொண்டு -என்கிறார் –
அவள் -தன் மகன் -என்று இறே நினைத்து இருப்பது –

அண்டத்தையும் அண்டாந்த  வர்த்திகளான சேதன அசேதனங்களையும் திரு வயிற்றிலே
ஒரு புடையிலே அடங்கும் படி விழுங்கின -என்னுதல் –
பிரி கதிர் படாமல் அனைத்தையும் சேர விழுங்கி -என்னுதல் –

இப்படி இருந்துள்ள திருக் கழுத்தின் அழகு இருந்தபடியை காணுங்கோள்-

காரிகையார் -அழகு உடைய ஸ்திரீகள் –
(அபி ரூபைகளான நீங்கள் வந்து இவன் அழகை பாருங்கோள் )

—————————————————
பதினாலாம் பாட்டு –
திருக் கழுத்தின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திருப் பவளத்தின் அழகை அனுபவிக்கிறார் –

என் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக் கொண்டு
அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-

பதவுரை

ஆய்ச்சியர்–இடைப் பெண்கள்
தொண்டை–‘‘கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தை யுடைய-(கோவை வாயாள் பொருட்டு போல் )
எம் சிங்கம்–எமது சிங்கக் குருவே!
வா என்று–(எம் பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு–(இடுப்பில்) எடுத்துக் கொண்டு
அம் தொண்டை–அழகிய கொவ்வை போன்ற
வாய்–(கண்ணனுடைய) அதரத்தில்
அமுது–(ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து–விரும்பி,
தம்–தங்களுடைய
தொண்டை வாயால்–கோவை வாயை
தருக்கி–(கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்–பானம் பண்ணப் பெற்ற
இ செம் தொண்டை வாய்–இந்தச் சிவந்த கோவை வாயை
வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீர்!!

தொண்டை வாய் = கொவ்வை கனி போன்ற அதரத்தை உடைய
சிம்ஹ கன்று போலே செருக்கை உடையவனாய் இருக்கிற இவன் என்னுடையவன்
என்று அபிமானித்து வா என்று அழைத்து எடுத்து கொண்டு இடைப் பெண்கள் எல்லாரும் –
தங்கள் கோவை வாயாலே நெருக்கி பானம் பண்ணுகிற
செருக்கி பருகும் என்றுமாம் –
இவர்கள் அருக பருக பின்னையும் சிவப்பு மாறாதே இருக்கிற திரு பவளம் –
சிவந்த ஆபரணம் பூண்ட நீங்கள் வந்து பாருங்கோள் –

————————————

பதினைந்தாம் பாட்டு -திரு பவளத்தின் அழகை அனுபவித்த அநந்தரம்
திரு முக மண்டலத்தின் சமுதாய சோபையை அனுபவிக்கிறார் –

நோக்கி யசோதை நுனிக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-

பதவுரை

அசோதை–யசோதைப் பிராட்டி
நோக்கி–(கண்ண பிரான் திருமேனியின் மென்மைக்குத் தக்க படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய–அரைத்த
மஞ்சளால்–மஞ்சட்காப்பாலே,
நாக்குவழித்து – ;
நீராட்டும்–ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு–இக் கண்ண பிரானுடைய
வாக்கும்–திரு வாக்கும்
நயனமும்–திருக் கண்களும்
வாயும்–அதர ஸ்புரணமும்
முறுவலும்–புன் சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ–மூக்குமிருந்தபடியை
காணீர்!
மொய் குழலீர்–செறிந்த குழலை யுடைய பெண்காள்! வந்து
காணீர்!

நோக்கி =திரு மேனியின் மென்மைக்கு தகுதியாம் படி பார்த்து
பார்த்து ஆராய்ந்து அரைத்த மஞ்சட்காப்பாலே,-நாக்கு வழித்து -திருமஞ்சனம் -விதேயதா பூர்ணனான இவனுக்கு
வாயும் -திரு அதரமும் –
அல்லது -வாய்ந்து  இருக்கிற –
மாதா முதலானாரை நாம க்ரஹணம் பண்ணுகிற வாக்கும் –
என்னைப் பாரீர் என்னைப் பாரீர் என்ன -அவர்களைக் கடாஷிக்கிற திரு நயனங்களும் –
மந்த ஸ்மிதம் செய்ய உபக்ரமிக்கிற திரு அதர ஸ்புரணமும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -என்ற நித்ய சந்தேக ஜனகமான
திரு மூக்கும் ஆகிற -இச் சேர்த்தி அழகு இருந்தபடி-

———————————————————

பதினாறாம் பாட்டு –
சமுதாய சபையின் நடுவே அனுபவித்த திருக் கண்களின் அழகு
பின்னாட்ட -அத்தை அனுபவிக்கிறார் –
அது தன்னில் எல்லாவற்றுக்கும் பின்பு அனுபவதித்தது திரு மூக்கின் அழகு இறே –
திரு மூக்குக்கும் திருக் கண்களுக்கும் ஒரு சேர்த்தி உண்டே –
(தாமரைக்கண்கள் -அதன் கொடி தானே மூக்கு -வள்ளியோ கொழுந்தோ -என்னும்படி சேர்த்தி உண்டே )
அத்தாலும் –
பாதாதி கேசம் அனுபவித்து வருகிற அடைவுக்கு சேர்ந்தது ஆகையாலும்
திருக் கண்களிலே சுழியாறு பட்டு அனுபவிக்கிறார் –

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

பதவுரை

விண் கொள்–ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்–தேவதைகளுடைய
வேதனை தீர–துன்பங்கள் தீரும்படி
முன்–முன்னே
மண் கொள்–பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்–வஸுதேவர்க்கு
மகனாய் வந்து–பிள்ளையாய் வந்து பிறந்து
திண்கொள்–வலிமை கொண்ட
அசுரர்–அஸுரர்கள்
தேய–க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்–வளரா நின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர்–கநக கங்கணத்தை யுடைய பெண்காள்
வந்து காணீர்!!

மண் கொள் வசுதேவன் தம்-பூமியை இருப்பிடமாக உடைய வசுதேவருக்கு

அவதார பிரயோஜனம் சாது பரித்ராணாதிகள் ஆகையாலே
ஸ்வர்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்திராதி தேவர்களுக்கு
ஆசூர பிரக்ருதிகளால் வரும் துக்கம் போம்படியாக
முன்னே பூமியை இருப்பிடமாக உடைய ஸ்ரீ வசுதேவருக்கு புத்ரனாய் வந்து அவதரித்து –
தன்னைப் பற்ற சிறைப் பட்டு இருக்கிற
ஸ்ரீ வசுதேவர் துக்கத்தை தீர்த்து –
பின்னம் தேவர்கள் துக்கம் தீர்க்கைக்கு முன்னம் இங்கே அவதரித்தானாய் ஆய்த்து-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -என்னக் கடவது இறே-

காய பலமும் மனோ பலமும் உடையரான அசுரர் ஆனவர்கள் ஷயித்து செல்லும்படியாக
தான் வளரா நிற்கிறவனுடைய இவன் கால் நெடுக நெடுக அசுர வர்க்கம் ஷீணமாய் விட்டது இறே —
இப்படி அனுகூல ரஷணமும் பிரதி கூல நிரசனமும் பண்ணும் இடத்தில் –
இவர்கள் தழைக்கவும் –
அவர்கள் ஷயிக்கவும் –
கடாஷிக்கும் திருக் கண்களின் அழகு இருக்கிறபடியை காணுங்கோள்-
கன வளையீர்-பொன் வளையை உடைய-

————————————————-

பதினேழாம் பாட்டு –
திருக் கண்களின் அழகை அனுபவித்த அநந்தரம்-
திருப் புருவத்தின் அழகை அனுபவிக்கிறார் –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

பதவுரை

பருவம்–வயது
நிரம்பாமே-முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்–பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய–உஜ்ஜீவிக்கும்படியாக
(பார் எல்லாம் உய்ய -பருவம் நிரம்பாத கண்ணன் -திரு மேனி -அழகை காட்டி அருளினாலும் –
பார் எல்லாம் உஜ்ஜீவனத்துக்கு -ஸ்வ விரோதி நிரசனமே பிரதானம் -)
திருவின் வடிவு ஒக்கும்–பிராட்டியின் வடிவு போன்ற வடிவை யுடையளான
(சீதக்கடலுள் அமுதம் அன்ன -கீழே -இங்கு சாப்தமாக-கண்ணனையே கொடுத்த உபகாரத்தால் சாம்யம் – )
தேவகி–தேவகிப் பிராட்டியாலே
பெற்ற–பெறப் பட்டவனாய்
உருவு கரிய–உருவால் கறுத்ததாய்
ஒளி–உஜ்ஜவலமான
மணி–மணி போன்ற
வண்ணன்–வடிவை யுடையனான கண்ண பிரானுடைய
புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர்–ஆபரணம் பூண்ட முலையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

சக்கரவர்த்தி திருமகனைப் போலே -பருவம் நிரம்பின பின்பு -விரோதிகளை நிரசித்து –
லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கை அன்றிக்கே –
பருவம் நிரம்புவதுக்கு  முன்னே –
திண் கொள் அசுரரை தேய -வளருகையாலே -லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக –
பூதன சகட யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் பிடித்து இறே நிரசித்து சென்றது –

லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –
கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

(ஸாப்தமாக -இங்கு -அனுமானம் -அர்த்தம் கொண்டு கீழே
அனுமானம் -அர்த்தம் –
ப்ரத்யக்ஷம் -ஸ்பஷ்டம் என்றவாறு
ஹேது கர்ப்ப விசேஷணம்
தேவகிக்கு விசேஷணம் -உள் அமுது -திரு
அடைமொழி -என்றும் எடுத்துக்காட்டு
காரணத்தை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிற அடைமொழி
லோகம் உய்யப் பெற்றது -காரணம் -உலகம் உஜ்ஜீவனம் ஹேது இரண்டு இடத்திலும் பொருந்தும் –
ஏக தேச த்ருஷ்டாந்தம் -முகம் சந்திரனைப்போல் )

ரூபத்தால் கரியதாய் –
உஜ்ஜ்வலமாய் இருந்துள்ள
மணி போன்ற வடிவை உடையவன் –
மதனன் கருப்பு சிலை போல் இருக்கிற திரு புருவங்களின் அழகை காணுங்கோள்-

—————————————

பதினெட்டாம் பாட்டு –
திரு மகர குழையின் அழகை அனுபவிக்கிறார் –
(காது ஆபரணத்தைச் சொன்னது காதையும் அனுபவித்த படி
கர்ண பூஷணமா -தலைக்குழலுக்கு ஆபரணமா -தோளுக்கு ஆபாரணமா –
இவை எல்லாம் இல்லை -எனது மனத்தில் உள்ள உனக்கு ஆபரணம்
மகர குழை நெடும் காதர் -தென் திருப்பேரை திவ்ய தேசம் –
எம்பார் எம்பெருமானார் -காது அணிகள் பிரசித்தம் -நமது குறைகளைக் கேள்விப்பவர்கள் )

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணன் எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
கடலும்–கடல்களையும்
உலகு எழும்–ஸப்த லோகங்களையும்
உண்ணுந்திறந்து–திரு வயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து–உகந்து
உண்ணும்–திரு வயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு–(இக்) கண்ண பிரானுடையதான
எழில் வண்ணம் கொள்–அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை–இம் மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த–திண்மை இருந்த படியை
காணீர்! சேயிழையீர்! வந்து காணீர்!!

சர்வ ஆதாரமான பூமியும் –
பூமிக்கு ஆதாரமான பர்வதங்களும் –
பூமிக்கு ரஷகமான சமுத்ரங்களும் –
மற்றும் உண்டான சர்வ லோகங்களும் -பிரளயம் கொள்ளாதபடி -திரு வயிற்றில் வைக்கிற அளவில் –
இவற்றை ரஷிக்க பெற்றோமே -என்னும் உகப்பிலே –
இதுவே தாரகமாக திரு வயிற்றில் வைத்த பாலனுக்கு –

திருமேனிக்கு பரபாகமான திரு நிறத்தையும் –
ஸ்வ சம்ஸ்தான வைசித்ரியால் வந்த அழகையும்
உடைய திரு மகர குழைகளான-இவற்றினுடைய –
கண்டவர்கள் கண்ணையும் நெஞ்சையும் கவரும்படியான திண்மை இருந்தபடியை காணுங்கோள்-
(அழகிய ஆபரணங்களாலே அலங்க்ருதையான நீங்கள் பாருங்கோள் )

———————————————-

பத்தொன்பதாம் பாட்டு -திரு நெற்றியின் அழகை அனுபவிக்கிறார் –

முற்றிலும் தூதையும் முன்கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்து திரி தரு வோர்களைப்
பற்றிப் பறித்துக் கொண்டாடும் பரமன் தன
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-

பதவுரை

சிற்றில்–சிறு வீடுகளை (மணலினால்)
இழைத்து–செய்து கொண்டு
திரி தருவோர்களை–விளையாடித் திரியும் சிறு பெண்களை
பற்றி–(வலியக்) கையைப் பிடித்துக்
கொண்டு (அவர்களுடைய)
முற்றிலும்–(மணல் கொழிக்கிற)சிறு சுளகுகளையும்
தூதையும்–(மணற்சோறாக்குகிற)சிறு பானைகளையும்
முன் கை மேல்–முன் கை மேல் (வைத்து கொண்டு பேசுகிற)
பூவையும்–நாகண வாய்ப் புள்ளையும்
பறித்துக் கொண்டு–அபஹரித்துக் கொண்டு
ஓடும்–ஓடுகின்ற
பரமன் தன்–(தீம்பில்) சிறந்தவனான
கண்ண பிரானுடைய
நெற்றி இருந்த ஆ காணீர்!
நேர்–நேர்த்தியை யுடைய
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!

கொட்டகம் இரு விளையாடும் பெண்கள்
(சல்லடை-வேண்டாதது நிற்கும் –
முறம் – வேண்டியது உள்ளே நிற்கும் –
நாம் முறம் போலவே இருக்க வேண்டும் -)
முற்றிலும் -மணல் கொழிக்கிற  சிறு சுளகுகளையும்-சிறு முறம்
தூதையும் -மணல் சொறாக்குகிற-சிறிய பானைகளையும்
முன் கை மேல் -முன் கை மேல் நின்று விளையாடுகிற-பூவையும் -நாகணை வாய்ப் புள்ளையும்
பறித்து –
பரமன் தன் -தீம்பில் தலைவனானவனுடைய
அந்த ஆயாசத்தாலே குறு வேர்ப்பு  அரும்பின திரு நெற்றியின் அழகை காணுங்கோள் –

(சங்கல்பத்தாலே ஸ்ருஷ்ட்டி இத்யாதி செய்பவனுக்கு இத்தால் வியர்வை –
ஸ்ரமம் இதுவே -போராடி பிடுங்க வேண்டுமே )

நுண்ணியதான ஆபரணங்களை உடைய நீங்கள்-
ஆபரணங்களுக்கு நுட்பமாவது –
ஸௌஷ்யமாதல் -(தொழிலின் ஸூஷ்மம் )
ஸௌகுமார்ய அநு குணமான லாகவம் ஆதல் –

——————————————–

இருபதாம் பாட்டு –
திரு நெற்றியின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு குழலை அனுபவிக்கிறார்-
(கொள்கின்ற கோள் இருளை -இல் பொருள் உவமை -பட்டை தீட்டி -சாரமாக்கி -மை தீட்டி –
அன்று மாயன் குழல் -எடுத்து கழிக்க இவ்வாறு செய்ய வேண்டுமே )

அழகிய பைம் பொன்னின் கோலம் கை கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மலம் கன்று இனங்கள் மறித்து திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

பதவுரை

அழகிய–அழகியதும்
பைம் பொன்னின்–பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்–மாடு மேய்க்குங் கோலை
அம் கை–அழகிய கையிலே
கொண்டு–பிடித்துக் கொண்டு
கழல்கள்–(கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை–சதங்கைகளும்
கலந்து–தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப–போமிடமெல்லா மொலிக்க
மழ–இளமை பொருந்திய
கன்று இனங்கள்–கன்றுகளின் திரள்களை
மறித்து–(கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்–திரியுமவனான கண்ண பிரானுடைய
குழல்கள்–திருக் குழல்களானவை
இருந்த ஆ காணீர்!
குவி முலையீர்! வந்து காணீர்!!

கண்டவர்கள் கண்ணுக்கு அழகியதாய் -பசும் பொன்னால் சமைந்து இருப்பதான கோலை
கன்றுகளை மறிக்கைக்கு உபகரணமாக வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி
அழகியதான கையிலே பிடித்துக் கொண்டு –

கன்றுகளை மறிக்கைகாக அதிர ஒடுகையாலே திருவடிகளில் சாத்தி இருக்கிற
வீரக் கழல்களும்
சதங்கைகளும் தன்னிலே கலந்து
எங்கும் ஒக்க த்வநிக்கை

இளம் கன்றுகளினுடைய திரள்களை கை கழிய போகாமல் மடங்குவித்து
சஞ்சரியா நின்று உள்ளவனுடைய –
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி -என்கிறபடியே
அதிர ஒடுகையாலே
அசைந்து நீங்கிச் செல்லும் திருக் குழலின் அழகு இருககிறபடியை காணுங்கோள்-

(சேனா தூளிசமான திருக்குழல்கள் வயசான பின்பு –
புழுதி அளைந்த பொன் மேனி காண உகப்பாளே )

————————————————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

பதவுரை

சுருப்பு ஆர்–வண்டுகள் படிந்து நிறைந்த-(சுரும்பு ஆர் -சுருப்பு ஆர்)
குழலி–கூந்தலை யுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியால்
முன்–க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன–சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை–பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்–மிக்க ஆதரத்தோடு ( யசோதா பிராட்டி விட மிக்க )
உரைத்த–அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்–இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்–ஓதுமவர்கள்
போய்–(இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்–பொருந்தப் பெறுவார்கள்

சுரும்பு ஆர் -வண்டுகள் படிந்து கிடக்கும் படியான -சுரும்பார் என்கிற இது சுருப்பார் என்று கிடக்கிறது
மெல் ஒற்று வல் ஓற்றாக
முன் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் -அவதார சமயத்தில் அனுபவித்து பிறர்க்கும் அழைத்துக் காட்டிச் சொன்ன
போய் -பிரகிருதி மண்டலத்தை கடந்து போய்
ஒன்றுவர் -பொருந்தி இருப்பார்கள் –

கோதை குழலாள் யசோதை –
பணைத் தோள் இள ஆய்ச்சி –
மைத் தடம் கண்ணி யசோதை -இத்யாதிகளால் யசோதை பிராட்டியை வர்ணித்து சொன்னவையும் –

உழம் தாள் நறு நெய்-
அதிரும் கடல் நிற வண்ணன் –
நோக்கி யசோதை -இத்யாதிகளால் அவனுடைய சேஷ்டிதங்களாக சொன்னவையும் –

மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –
இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை –
சகடத்தை சாடிப் போய் வாள் கொள் வளை எயிற்றால்  ஆர் உயிர் வவ்வினான் –
இத்யாதிகளாலே இவனுக்கு நிரூபகமாக அருளி செய்த அவதாராந்தர சேஷ்டிதங்களும்

இவ் வவாதாரம் தன்னில் உத்தர கால சேஷ்டிதங்கள் எல்லாம் அவதார காலத்துக்கு பிறபாடராய் இருக்க செய்தேயும்
மயர்வற மதி நலம் அருள பெறுகையாலே-
சர்வ காலத்தில் உள்ளதும் பிரகாசிக்கும்படியான தசை பிறந்த இவர்
இவ்விஷயத்தில் ஆதார அதிசயத்தாலே அருளிச் செய்தாராம் இத்தனை

யசோதை பிராட்டி உடைய சிநேகத்தை  உடையராய் கொண்டு அனுபவித்ததும் –
இவள் பாதாதி கேசம் அனுபவித்து பிறர்க்கு காட்டின கட்டளையிலே பேசினதுமான இதுவே –
அவளோடு இவருக்கு சாம்யம் ஆகையாலே –
அசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த -என்று அருளிச் செய்தார் ஆய்த்து-

இந்த ந்யாயத்தாலே மேலில் திரு மொழிகளிலும் இப்படி வந்தவற்றிற்கு வகை இட்டு கண்டு கொள்வது –
(போகத்தில் வழுவாத விட்டு சித்தன் அன்றோ இவர் )

இருபதோடு ஒன்றும் உரைப்பார் –
இருபத்தொரு பாட்டையும் சாபிப்ரயமாக சொல்லுவார் என்னுதல் –
பாவ பந்தம் இல்லையே ஆகிலும் -சப்த மாத்ரத்தை சொல்லுவார் -என்னுதல் –

போய் இத்யாதி –
இவ் விஷயத்தை பரி பூர்ண அனுபவம் பண்ணலாம் படியான
ஸ்ரீ வைகுண்டத்திலே போய் -சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே –
அவனை அனுபவித்து மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு
ஒரு காலமும் பிரிவின்றி இருக்க பெறுவர்-

(அவனை அனுபவித்து
மங்களா சாசனம் பண்ணி
இருக்கும் படி உபகரித்து அருளினார் இவர் என்றபடி
வை குண்டம் -குறைவு அற்ற -ஞானம் பக்தி ப்ரேமம் பூர்ணம் -ஒன்றி இருக்கப் பெறுவோம் – )

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -அவதாரிகை / 1-1–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

May 7, 2012

(ஸ்ரீ பெரியாழ்வார் -பொங்கும் பிரிவால் –3-6- வரை அவனை தானே ரஷிக்கும் பாவனையால்
சேஷத்வ பாரதந்தர்ய யாதாத்ம்ய -மங்களா சாசனம் -பண்ணிக் கொண்டே
இன்றும் நித்ய திரு மஞ்சனம் -ஆழ்வார்கள் அனைவருக்கும் நித்யமாகவே நடக்கும் –
பல்லாண்டு கைத்தல சேவை -முதல் இரண்டு பாசுரங்கள் -சாதிப்பார் அரையர்
இதுவே அனைவருக்கும் ரக்ஷகம்
வேதத்துக்கு ஓம் போல் மங்களகரம் –
விஞ்சி இருப்பதாலே பெரியாழ்வார் –
473-பாசுரங்கள் -12 -திருப்பல்லாண்டு -அதன் தொடர்ச்சியாக -461-பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி -)

(ஒவ்வொரு பத்தும் 105- ஆக 420 பாசுரங்களுக்கு மா முனிகள் வியாக்யானம்
ஐந்தாம் பத்து -41-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் கொண்டு அனுபவிப்போம்
420 வரை பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் கிடைக்காமல் -இட்டு நிரப்ப -பரம பிரமாணிகர்
ஸ்வாபதேச வியாக்யானம் திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்துள்ளார்
விசேஷ அர்த்தங்களையும் பார்ப்போம் –
அரும்பதமும் உள்ளது -ரத்ன கரமாக அர்த்தங்கள் குறிப்பு இருக்கும் –
யுக சந்தியில் முதல்
கலி யுகம் தொடக்கம் -நம்மாழ்வார் -குலசேகர பெருமாள் -பெரியாழ்வார்
விஷ்ணுவின் ரத அம்சம் -ஆனி -ஸ்வாதி -திரு நக்ஷத்ரம்
விஷ்ணுவுக்கு மாமனார் -நம்மால் வணங்கப்படுபவர்
க்ரோதந வர்ஷம் -ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை -முகுந்த பட்டர் பத்மா திருத்தாயார் -விஷ்ணு சித்தர் இயல் பெயர் -)

(புஷ்ப்ப கைங்கர்யம் -மாலா காரர் -போல் -ப்ரஸாத பரம நாதவ் மம கேஹம் உபாகதவ் -சுருள் நாறாத பூ –
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -காயிக புஷ்ப கைங்கர்யம் –
நரபதி வல்லப தேவன் -பரத்வ ஹேதவ் இஹ ஜென்ம-உபாயம் ப்ராப்யம் அறிய -செல்வ நம்பி -சதஸ்ஸூ கூட்ட –
வேண்டிய வேதங்கள் ஓதி -விரைந்து கிளி அறுத்தான்
பரத்வ ஸ்தாபன உத்சவம் இன்றும் கூடல் மதுரை அழகர் கோயிலில் சேவிக்கலாம்
பட்டர் பிரான் -வித்வானுக்கு பிரான் –
அஸ்தானே பயஸங்கை-ஆனை மேல் உள்ள சதங்கை எடுத்து -திருப்பல்லாண்டு
கிருஷ்ண அவதாரம் திரு உள்ளத்தில் கிடக்க-பெரியாழ்வார் திரு மொழி திரு அவதாரம் –
பிள்ளைத்தமிழ் –
3-6- நாவலம் -273- பாசுரங்கள் கிருஷ்ண சேஷ்டிதங்கள் -விபவ –
3-7-/8-நாயிகா தாயார்
3-9-ராம கிருஷ்ண
3-10- அடையாளபதிகம்
4-1- இருவராக அருளிச் செய்த -கண்டார் உளர்
4-2- அர்ச்சா அனுபவம்
முதல் -பதிகம் -தசகம் -திரு மொழி பிரித்தால் -ஒன்பது -கட்டுக்கோப்பு பிரமேயம் ஒன்றாக
ஒரே பதிகம் -21-பாசுரங்கள் -)

ஸ்ரீ யபதியாய்- அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனான சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் –
(பெரியாழ்வாரை -ஊர்வலமாக வல்லபதேவன் கூட்டிச் செல்லும் பொழுது )
தனக்கு சந்நிகிதன் ஆன அளவிலே –
பிரணவத்திலே சொல்லுகிறபடியே
அவனை தமக்கு ரஷகனாகவும் -தம்மை அவனுக்கு ரஷக பூதனாகவும் -அனுசந்தித்து –
ஸ்வ சேஷத்வ அநு ரூபமான விருத்தி விசேஷங்களை அவன் திருவடிகளிலே செய்ய அமைந்து இருக்க –

அவனுடைய சர்வ ரஷகத்வாதிகளை அநு சந்திக்கும் முன்னே –
முகப்பிலுண்டான சௌந்தர்யாதிகளிலே ஆழம் கால் பட்டு -அவனை குழைச் சரக்காக நினைக்கையாலும் –

காலம் அதீதமான வஸ்து
(ஸ்ரீ வைகுண்டம் காலம் நடையாடாதே
கால தேச வஸ்து பரிச்சேத ரஹிதன் அவனும் )
காலம் சாம்ராஜ்யம் பண்ணும் தேசத்தில் வந்து
சந்நிஹிதம் ஆவதே -இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ -என்னும் பயத்தாலும் –

அவனை ரஷ்ய பூதனாக நினைத்து -தாம் ரஷகராய் நின்று மங்களா சாசனம் பண்ணும் அளவில் –
உபய விபூதி யுக்தனான நிலையிலே (முதல் இரண்டு பாசுரங்கள்- திருப் பல்லாண்டில் ) மங்களாசாசனம் பண்ணின
அளவு அன்றிக்கே –
அவன் சம்சாரி சம்ரஷண அர்த்தமாக -பிரதிகூல பூயிஷ்டமான இத் தேசத்தில் வந்து அவதரித்து செய்து
அருளின சேஷ்டிதங்களை அநு சந்தித்து –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலே வயிறு எரியும் பிரேம (ஸ்வரூபர் ) ஸ்வபாவர் ஆகையாலே –
(ஞானம் முற்றிய பிரேம நிலையில் -பொங்கும் பரிவு )
திரு அவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணி அருளினார் -திரு பல்லாண்டிலே-

அது தன்னிலும் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதும் -என்றும் –
(பந்தனை தீர-பிறந்த குழந்தைக்கு -நடுக்கம் தீர )
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும் –
(ஸர்வ ஸ்ரீ ராம நவமி -2021- ஒரே ஸ்ரீ ராம திரு அவதார உத்சவம்)
ஸ்ரீ நரசிம்க ப்ராதுர்பாவதுக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களாசாசனம் பண்ணின அளவு அன்றிகே –

(மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா பல்லாண்டு என்றும் )
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய
சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும்-
ஐம் தலைய பைந்நாக தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதும் -என்றும் –
இவர் ப்ராசுர்யேன மங்களாசாசனம் பண்ணிற்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு இறே–

ஆழ்வார்கள் எல்லாரும் -ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -என்றவாறே போர மண்டி இருப்பார்கள் –
அதுக்கடி-
அல்லாத அவதாரம் போல் அன்றிக்கே -சமகாலம் ஆகையாலே -ஒரு செவ்வாய் கிழைமை முற்பட பெற்றிலோமே –
(அல்ப கால உப லக்ஷணம் )
பாவியேன் -பல்லில் பட்டு தெறிப்பதே -என்னும் இழவும் –
பரிவர் தேட்டமான அவதாரம் ஆகையாலே அத்தை அநு சந்திக்கையால் வந்த வயிறு எரிச்சலும் –

ஸ்ரீ ராம அவதாரத்தில் -தகப்பனார் -சம்பராந்தகனாய் -ஏக வீரனாய் இருப்பான் ஒருவன் –
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகள் –
குடி தானே வன்னிய மறுத்து இருப்பதொரு குடி –
இவை எல்லாம் மிகை ஆகும் படி குணத்தாலே நாட்டை எல்லாம் ஒரு மார்பு
எழுத்தாக்கி கொண்டு இருப்பார்கள் –
(ராமோ ராமோ -ஸர்வான் தேவான் நமஸ்காரம் -ஜகத் பூதம் )
ஆகையால் எதிரிகள் என்கிற சப்தம் இல்லை -இங்கன் அன்றிக்கே –

தமப்பன் ஒரு சாது வர்த்தன்-
பிறந்ததும் கம்சன் சிறைக் கூடத்திலே –
வளர்ந்ததும் அவன் அகத்தருகே –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே எழும் பூண்டுகள் அகப்பட அசூர மயமாய் இருக்கும் –
ரஷகரானவர்கள் ஓரடி தாழ நிற்கில் -பாம்பின் வாயிலே விழும்படியாய் ஆய்த்து அவன்படி இருப்பது –
இப்படியானால் வயிறு எரியாது இரார்களே இவர்கள்-

அவர்கள் எல்லாரையும் போல் அல்ல விறே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –
அதாவது –
விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன் -என்கிறபடியே
தான் பிறந்த படியும் வளர்ந்த படியும் இவரை கொண்டு கொள்கைக்காக –
அவன் இவர் திரு உள்ளத்திலே குடி கொண்டு இருக்க –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்னும்படி அவதார அனுபவமாகிற
போகத்தில் ஒன்றும் நழுவாதபடி-
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று அவதார சமயமே தொடங்கி-
அதிலுண்டான ரசம் எல்லாம் தாமே முற்றூட்டாக அனுபவித்தார் இறே –

இனி –
இவ்விவ்ஷயத்தில் பரிவிலும் வந்தால் -அவர்களுக்கு அது காதாசித்தமாய் -இவருக்கு
நித்தியமாய் இறே இருப்பது –

ஆக –
இப்படி கிருஷ்ண அவதார அனுபவாதிகளிலே ப்ரவர்தரான இவர் –
இவ் வதாரத்துக்கடி சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ திரு கோட்டியூரின்  நின்றும்  வந்து பிறந்தான் என்பான் என்-
ஸ்ரீ ஷீராப்தி நாதன் தேவர்கள் கோஷ்டியில் எழுந்து அருளி இவர்களுடைய ரஷண சிந்தனை பண்ணினமை தோற்றும் படி –
உரகல்  மெல்லணையனாய்-பள்ளி கொண்டு அருளின ஸ்தலம் ஆகையாலே அந்த ஐக்யத்தை பற்றவும் –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் -என்றும் தமக்கு மங்களா சாசனத்துக்கு
சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியோடே ஸ்ரீ திரு கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலே
அவ் வுகப்பை பற்றவும் -ஸ்ரீ திரு கோட்டியூரை திரு அவதார கந்தமாக அருளி செய்த இதில் விரோதம் இல்லை-

இப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார ரசத்தை அனுபவிக்கிற அளவில் -ருஷிகளை போலே
கரையில் நின்று -அவதார குண சேஷ்டிதங்களை சொல்லிப் போகை அன்றிக்கே –
பாவன பிரகர்ஷத்தாலே -கோப ஜென்மத்தை -ஆஸ்தானம் பண்ணி –
யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை -தாம் அவர்களாக  பேசி அனுபவித்து சொல்லுகிறார் –

திருவவதரித்து அருளின அளவில் ஸ்ரீ திரு வாய்ப்பாடியில் உள்ளோர் பண்ணின உபலாளநாதிகளை
அனுசந்தித்து இனியராகிறார் இத் திரு மொழியில் –

பெரியாழ்வார் திருமொழி –
105-பாசுரங்கள் பதிகம் தோறும் –
கடைசி பதிகம்- 41-ஆக -461-
ஒரு பிறவியில் இரு பிறவியானவன்
ஷத்ரியன் -ருக்மிணி பிராட்டி பெறுவதற்கு
இடையன் -நப்பின்னை பிராட்டி பெறுவதற்கு

—————————————————-

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன்  முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

பதவுரை
வண்ணம்–அழகு பொருந்திய
மாடங்கள்–மாடங்களாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்–கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி–கல்யாணகுண பரிபூர்ணனான
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்–(நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே
பிறந்து–திருவவதிரித்தருளின வளவிலே,
(திருவாய்ப்பாடியிலுள்ளார்)
எண்ணெய்–எண்ணெயையும்
சுண்ணம்–மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட–(ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ,
கண்டக்கினிய–விசாலமாய்
நல்–விலக்ஷணமான
முற்றம்–(நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து–(எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று–சேறாய்விட்டது.

அழகிய மாடங்களாலே
சூழப்பட்ட
ஸ்ரீ திரு கோட்டியூரிலே
பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும்
ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது
எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த  கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம்  தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

எண்ணையும் மஞ்சள் பொடியையும் ஹர்ஷத்தாலே களித்து -ஒருவருக்கு ஒருவர்
எதிர்த்து தூவ –
கண்ணன் முற்றம் -என்றது –
ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த போதே க்ர்ஹ நிர்வாககன்
பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைத்து இருக்கையாலே ஸ்ரீ கண்ணனுடைய முற்றம் என்னுதல் –
கண் நல் முற்றம் –
இடமுடைத்தாய் -தர்ச நீயமான முற்றம் என்னுதல் –
எண்ணையும் மஞ்சளும் -இவை இரண்டும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து சேறாய் விட்டது –

——————————————-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்
றாடுவார்களுமாய ஆயிற்று ஆய்ப்பாடியே -1-1-2-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்–(ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்–(சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து–உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்–கோஷிப்பாரும்
நாடுவார்–(பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்–நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு தான் என்பார்–எங்கேதான் (இராநின்றான்) என்பாரும்
பாடுவார்களும்–பாடுவார்களும்
பல் பறை–பலவகை வாத்யங்கள்
கொட்ட–முழங்க
நின்று–அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்–கூத்தாடுவாருமாக
ஆயிற்று–ஆய்விட்டது.

திருவாய்பாடியில் -சம்ப்ரமித்து ஓடுவாரும் –
சேற்றிலே வழுக்கி விழுவாரும் –
பிரேமத்தால் கோஷிப்பாரும்-
பிள்ளையை தேடுவாரும் –
நமக்கு உபகாரனான கண்ணன் –
எங்கே உளன் என்பாரும் –
பாடுவார்களும் –
பல வாத்தியங்களும் முழங்க –
அதற்க்கு பொருந்த நின்று –
நர்த்தனம் பண்ணுவாரும்-ஆக ஆயிற்று –

பிள்ளை பிறந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சம்ப்ரமித்து ஓடுவார் -விழுவார் –
ஓடச்செய்தே அளற்றிலே வழுக்கி விழுவார் –
ப்ரீதராய் -அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே -ஆர்த்து கொள்ளுவார்
நாடுவார் -பிள்ளை எங்கே எங்கே என்று தேடுவார்
நம்பிரான் எங்குற்றான் என்பர் -கண்டு இருக்க செய்தேயும் -ப்ரீதி
பிரகர்ஷத்தாலே -தங்களுக்கு நிர்வாகரான ஸ்ரீ நந்த கோபன் மகனான
முதன்மை தோற்ற -நமக்கு ஸ்வாமியானவன் எங்கே என்பார் –
பாடுவார்களும் -ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடுவார்களும் –
பல் பறை கொட்ட நின்று ஆடுவார்களும் -பல வாத்தியங்களும் கொட்ட
அதுக்கு பொருந்த நின்று ஆடுவார்களும் –
அங்கன் இன்றிகே -சிலர் தங்களுக்கு தோன்றிய படி கொட்ட -நிரந்வயமாக
கூத்தாடுவார்களும் -என்னுதல் –
பாடுவார்களும் -இத்யாதிக்கு ஒக்க -கீழ் சொன்னவை எல்லா வற்றையும் –
ஓடுவாரும் விழுவாரும் என்று -இங்கனே சம்சயித்து கொள்ளுவது –
ஆயிற்று ஆய்ப்பாடியே -இப்படி திருவய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்
ஒருவரும் விக்ரதர் ஆகாமல் இருந்தார் இல்லை என்றபடி –

(சாதன ஸப்தகம்
அநவசாதம் அனு ஹர்ஷம் -கூடாது அப்ராப்த விஷயத்தில்
இங்கு கிடைக்க விடில் அழுதும்
கிட்டினால் ஹர்ஷமும் -ப்ராப்த விஷயம் என்பதால் -உகந்து -அனைத்திலும் உண்டே )

——————————————-

(ரோஹிணி நக்ஷத்ரம்
ஸ்ரவணம் -விஷ்ணு நக்ஷத்ரம் -பொதுவாக சொல்லி –
வெளிப்படையாக சொன்னால் கம்சன் அறிந்து என்னாகுமோ –
இருள் அன்ன மா மேனி இருளில் பிறந்து -அழாமல் -)

பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்கு போதுவார்
ஆண் ஒப்பர் இவர் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-

பதவுரை

சீர் உடை =ஸ்ரீமானான குணங்களை உடைய
பிள்ளை=பிள்ளையான கிருஷ்ணன்
பேணி =கம்சாதிகள் கண் படாதபடி தன்னைக் காத்து வந்து
பிறந்தனில்=பிறந்த அளவில்
தாம் =ஆய்ப்பாடி ஆயர்கள்
காண =பிள்ளையை காண ஆசைப் பட்டு
புகுவார் =உள்ளே நுழைவாரும்
புக்கு =உள்ளே போய் கண்டு
போதுவார் =புறப்படுவாரும்
ஆண் ஒப்பார் =பும்ஸ்த்வம் உடையாரில்
இவன் நேர் இல்லை காண் =இவனோடு ஒத்தவர் இல்லை காண்
இவன்
திரு வோணத்தான் =சர்வேஸ்வரனுடைய
உலகு ஆளும் -லோகங்களை  எல்லாம் ஆளக் கடவன்
என்பார்கள் -என்று சொல்லுவாருமாக ஆனார்கள் –

சீருடை பிள்ளை பேணிப் பிறந்தினில் –
அவதரித்த போதே மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்கையாலே சீருடைய பிள்ளை என்கிறது –
சீர் =குணம் -அதாவது
சிறைக் கூடத்தில் திரு அவதரித்த போதை திவ்ய வேஷத்தை கண்டு –
கம்சன் நிமித்தமாக பயப்பட்ட மாதா பிதாக்கள் அபேஷிக்க-(உப ஸம்ஹர -அலௌகிகம் )
அப்போதே அந்த திவ்ய வேஷத்தை மறைத்தான் இறே-
இப்படி  உகவாதார் கண் படும் படி தன்னை பேணிக் கொடு வந்து
திருவாய்ப்பாடியிலே புகுந்த பின்பு காணும்-இவன் பிறந்தானாக நினைத்து  இருக்கிறது –

காணத் தாம் புகுவார் –
பிள்ளையை காண ஆசைப்பட்டு தாம் புகுவார்

புக்கு போதுவார் –
புக்கு கண்டு புறப்படுவார்

ஆண் ஒப்பார் இத்யாதி –
சாமுத்ரிக லஷணம் போவார் இவனைப் பார்த்து பும்ஸ்வத்த சாம்யம்
உடையவர்களில் இவனுக்கு சத்ருசர் இல்லை காண் என்பாரும் –
இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள் என்கை-

அன்றிகே
ஆண் ஒப்பான் இவன் நேர் இல்லை காண் -என்ற பாடம் ஆன போது –
ஆண் ஒப்பான் என்றது ஆண் படி-அதாவது பும்ஸ்தவ லஷணம்
ஒப்பான் என்றது -ஒப்பாம் என்றபடியே –
பும்ஸ்தவ லஷணத்தால் இவனுக்கு எதிர் இல்லை என்று பொருளாகக் கடவது –
புகுவாரும்- போதுவாரும் -உலகாளும் என்பார்களும் ஆனார்கள் –

(கீழ் பாட்டில் -ஓடுவார் -பாடுவார்களும் – ச காரம்-உம்மைத் தொகை – -ஏழு வினைச் சொற்கள்
ஆயிற்று ஆய்ப்பாடி -என்றதை-ஆனார்கள் என்று ஆக்கி –
புகுவாருமாய் போது வாரும் -உலகாளும் என்பார்களும் ஆனார்கள் -மூன்றையும் சேர்த்து -10- இப்பாட்டில் சேர்த்து அந்வயம் )

—————————————————

(பொதுவாக அருளிச் செய்த பாசுரங்கள் இந்த முதல் பதிகம்
மேலே வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே என்பதால் –
இவை யசோதை பாவத்தில் சொன்னவை அல்லவே )

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால்  தயிர் நன்றாக தூவுவார்
செறி  மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்–இடையர்கள்
உறியை–(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து–முற்றத்திலே
உருட்டி நின்று–உருட்டிவிட்டு
ஆடுவார்–கூத்தாடுவார் சிலரும்,
நறு–மணம்மிக்க
நெய் பால் தயிர்–நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக–நிச்சேஷமாக
தூதுவார்–தானம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்–நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்–மயிர் முடியானது
அவிழ–அவிழ்ந்து கலையும்படி
திளைத்து–நர்த்தநம் பண்ணுவார் சிலருமாக,
எங்கும்–சேரி யடங்கலும்
அறிவு அழிந்தனர்–தங்களுடைய விவேகம் ஒழியப் பெற்றனர்.
மதுவனம் அழித்த முதலிகள் போல் (கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்)

திருவாய்ப்பாடியில் உள்ள கோபர்கள்-
பாலும் தயிரும் இருக்கிற உறிகளை
முற்றத்திலே உருட்டி நின்று
ஆடுவாரும்
மணம் மிக்க நெய் முதலியவற்றை
நிச்சேஷமாக
தானம் பண்ணுவாருமாய்
நெருங்கி மெத்தென்ற
மயிர் முடியானது
அவிழ்ந்து களையும் படி
நர்த்தனம் பண்ணி
சேரி அடங்கலும்
மதுவனம் அழித்த முதலிகள் போல் கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்

நறுவிதமான நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை -த்ரவ்ய கௌரவம்
பாராமல் அறுத்து கொடுவந்து ப்ரீதி பாரவச்யத்தாலே முற்றத்திலே உருட்டி நின்று ஆடுவார்-
க்ருத ஷீர தத்யாதிகளை -பிள்ளைக்கு நன்மை உண்டாக வேணும் -என்று தானம் செய்வார் –
செறிந்து மெத்தென்ற மயிர்முடி அவிழும்படி ச சம்பிரம நர்த்தனம் பண்ணி
திரு ஆய்ப்பாடியில் உள்ள கோபர் ஆனவர்கள் -எங்கும் ஒக்க உகவை தலை மண்டை இட்டு
(மதுவனம் அழித்த முதலிகள் போல் )கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள் –

சிலர்  உறியை முற்றத்து  உருட்டி நின்று ஆட-
சிலர் நறு நெய் பால் தயிர் நன்றாக தூவ –
சிலர் செறி மென் கூந்தல் அவிழ திளைத்து –
இப்படி ஆய்ப்பாடி ஆயர் எங்கும் அறிவு அழிந்தனர் என்று கிரியை –

———————————————–

கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5-

பதவுரை
தான் கொண்ட–கால் நெருக்கத்தை யுடைய
உறி–உறிகளையும்
கோலம்–அழகிய
கெரடு–கூர்மையான
மழு–மழுக்களையும்
தண்டினர்–தடிகளையுமுடையராய்
பறி–(தாழை மடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை-ஓலைகளினாற்செய்த
சயனத்தர்–படுக்கையையுடையராய்
விண்ட–விசஹித்த
முல்லை அரும்பு அன்ன–முல்லையரும்பு போன்ற
பல்லினர்–பற்களையுடையவரான
அண்டர்–இடையரானவர்கள்
மிண்டி–(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்–நெய்யாடல் ஆடினார்கள்.

கால் நெருக்கத்தை உடைத்தான உறிகளையும் –
பரிசு உண்டாய்( அழகான )கூரியதான மழுக்களையும்-
ஜாத் உசிதமான தடிகளையும் உடையராய் –
(தாழை)மடலில் நின்றும் பறிக்கப்பட்ட ஓலையாலே கோத்து சமைத்த ஸய்யையை (சயனத்தையும் ) உடையராய் கொண்டு –
ஹர்ஷம் தோற்ற ஸ்மிதம் பண்ணுகையாலே -முல்லை அரும்பு விண்டாப் போலே இருக்கிற
பல்லை உடையரான கோபரானவர்கள்-
நெருங்கி புகுந்து நெய்யாடல் ஆடினார்கள் -என்கை-

(அஷ்டமியில் பிறந்து யமுனை கடக்கும் பொழுது நவமி -கற்புடை தங்கை வளைக்காரி பிறந்த திதி
இரவு முழுவதும் நெய்யாடல் )

விண்டின்  முல்லை -என்ற பாடமான போது -விண்டு என்று குன்றாய்-குன்றின் முல்லை
நெருங்கி பூத்தாப் போலே இருக்கிற தோற்றுப் பல்லர்-என்னவுமாம் –
இடைக் கூத்தாடுவார் தோற்றுப் பல்லராய் ஆயிற்று இருப்பது -(சுரைக்காய் சேர்த்தால் போல் )
அண்டர்-தேவரும் -இடையரும் -இவ்விடத்தில் இடையரை சொல்லுகிறது —

—————————————————-

(அர்ஜுனனுக்கு விஸ்வ ரூபம் -காட்டிய ஸ்ரீ கீதாச்சார்யன்
ஜகதாகாரத்வம் –
வியாச பிரசாதத்தாலே சஞ்சயனுக்கும் காட்டி அருளினான்
சிறு பிள்ளையிலே இங்கு இவளுக்கு
விஸ்வமே வடிவம் வேறே
இங்கு வாயுக்கு உள்ள விஸ்வம் )

கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-

பதவுரை
கையும்–திருக்கைகளையும்
காலும்-திருவடிகளையும்
நிமிர்த்து–(நீட்டி) நிமிர்த்து
கடாரம்–கடாரத்தில் (காய்ச்சின)
நீர்–திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்–குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய–திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி–ஸ்நாநம் செய்வித்து
ஐய-மெல்லிதான
நா–நாக்கை
வழித் தாளுக்கு–வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட-(கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை–கண்ண பிரானுடைய
வாயுள்–வாயினுள்ளே
வையம் ஏழும்–உலகங்களை யெல்லாம்
கண்டாள்–ஸாக்ஷத்கரித்தாள்.

கையும் காலும் நிமிர்த்து –
திரு மஞ்சனம் செய்க்கைக்கு உடலாக திருக் கைகளையும் திருவடிகளையும் நீட்டி –
திரு மேனியின் மார்த்வத்துக்கு அநு குணமாக நிமிர்த்து –

கடார நீர் பைய ஆட்டி –
திருமேனிக்கு அநு குணமாக ஒவ்ஷதங்களும் சுகந்த த்ரவ்யங்களும்  கூட்டி
காய்ச்சின கடாரத்தில் -திரு மஞ்சனத்தாலே -திரு மேனி அலையாமல் -மெல்ல
திரு மஞ்சனம் செய்து –

பசும் சிறு மஞ்சளால் –
இது கீழ் மேலும் அந்வயித்து கிடக்கிறது –
குறும் கண்ணான பசு மஞ்சளை சாய்த்து ஆய்த்து-நீராட்டிற்றும்

ஐய நா இத்யாதி –
அப்படி இருந்துள்ள மஞ்சளாலே மெல்லியதான திரு நாவை வழித்தவளுக்கு-
அதுக்கு உடலாக –

அங்காந்திட –
பிள்ளை உடைய வாயுள்ளே சகல லோகங்களையும் கண்டாள் என்கை –
அதுக்கடி –
அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து விஸ்வரூபம் காட்டினாப் போலே –
இவளுக்கும் திவ்ய சஷூசை கொடுத்து தன் வைபவத்தை காட்டுகை -இறே

——————————————-

வாயுள் வையகம்  கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப்  பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே -1-1-7-

பதவுரை

வாய் உள =பிள்ளை  உடைய வாயின் உள்ளே –
வையகம் = உலகங்களை
கண்ட =பார்த்த
மட நல்லார் =மடப்பத்தையும் நன்மையையும் உடைய மாதர் =கோப ஸ்திரீகள்
இவன்
ஆயர் புத்திரன் அல்லன் =கோப குமாரன் அல்லன்
அரும் தெய்வம் -பெறுவதற்கு அரிய தெய்வம்
பாய சீருடை =பரம்பின குணங்களை உடையனாய்
பண்புடை =நீர்மையை உடையனான
பாலகன் =இந்த சிறு பிள்ளை
மாயன் =ஆச்சர்ய சக்தி யுக்தன்
என்று = என்று சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர் =மிகவும் ஆனந்தித்தார்கள்
ஏ-அசை

வாயுள் வையகம்  கொண்ட நல்லார் –
இப்படி திருப் பவளத்தின் உள்ளே லோகங்களை கண்ட –
பவ்யத்தையும் சிநேகத்தையும் உடையவர்கள் –
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -என்று கீழ் ஒருத்தியாக சொல்லிற்று ஆகிலும் –
அநு பாஷணத்திலே பலராக சொல்லுகையாலே -பின்னையும் கூடக் கண்டவர்கள்
உண்டு என்று கொள்ள வேணும் –
அதாவது –
இவள் கண்ட அநந்தரம்-அங்கு -அருகு நின்றவர்களுக்கும் காட்ட –
அவனும் தன் வைபவம் எல்லாரும் அறிக்கைக்காக அவர்களுக்கும்
திவ்ய சஷூசை கொடுத்து காட்ட கூடும் -இறே

ஆயர் புத்திரன் அல்லன் -அரும் தெய்வம் –
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –

பாய சீருடை பண்புடைப் பாலகன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –

மாயன் -ஆச்சர்ய சக்தன்
என்று மகிழ்ந்தனர் மாதரே
இப்படி சொல்லி மிகவும் ப்ரீதிகளானார்கள் ஸ்திரீகள் என்கை –

வாயுள் வையகம் கண்ட மட நல்லரான -மாதர் –
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் –
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
மாயன் என்று மகிழ்ந்தனர் -என்று அன்வயம் –

————————————

(கார்க்காச்சார்யார் -ஸ்ரீ கிருஷ்ண -நாமம் சாத்தும் நாள்
கிருஷ் பூ வாசக சப்தம் -ஆனந்தம் கொடுப்பவன் )

பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–1-1-8-

பத்து நாளும் கடந்த =பத்து நாளும் கழிந்த
இரண்டாம் நாள் = இரண்டாம் நாளான நாம கரண தினத்திலே
எத்திசையும் =எல்லா திக்குகளிலும்
சய மரம் = ஜய சூசுகமான தோரணங்களை
கோடித்து = நாட்டி அலங்கரித்து
மத்த மா மலை = மதித்த யானைகளை உடைய -கோவர்த்தனம் -என்னும் மலையை
தாங்கிய = தரித்து கொண்டு நின்ற
மைந்தனை = மிடுக்கனான கண்ணனை
ஆயர் = இடையர்கள்
உத்தானம் செய்து = கைத் தலத்திலே வைத்து கொண்டு
உகந்தனர் =சந்தோஷித்தார்கள்
ஏ -அசை  —

பத்து நாளும் கடந்த இரண்டாம்  நாள் –
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாளான நாம கரண திவசத்திலே –

எத்திசையும் சயமரம்  கோடித்து –
எல்லா திக்குகளிலும் ஜய சூசுகமான தோரணம் நாட்டி அலங்கரித்து

மத்த மா மலை தாங்கிய மைந்தனை –
வர்ஷ ஆபத் ரஷண அர்த்தமாக -மத்த கஜங்களை உடைத்தான -பெரிய மலையை
தரித்து கொண்டு நின்ற மிடுக்கனை –
பிற்பாடர் ஆகையாலே -தத் காலத்தில் அன்றிக்கே -பிற்காலத்தில் உள்ள
சேஷ்டிதங்களையும்-அவ் வஸ்துவுக்கு நிரூபகமாக்கி அருளி செய்யலாம் இறே ஆழ்வாருக்கு –

உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே –
இடையர் எல்லாரும் சிநேக அதிசயத்தாலே -தனித் தனியே தம் தம்
கைகளில் எடுத்து கொண்டு ப்ரீதரானர்கள் -என்கை– –

———————————————

ஒன்பதாம் பாடு –

(யசோதை வார்த்தையாகவே இது )

திருவவதரித்த அளவில் ஊர் அடங்கலும் செய்த உபலாளந  விசேஷங்களை
அனுசந்தித்து இனியரானார் கீழ் –
இப்பாட்டில் பருவத்துக்கு தகுதி அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து –
திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை –
அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார் –

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடிக்காலமையால் நான் மெலிந்தேன் நங்காய் -1-1-9-

நங்காய் =பூர்ணைகளான ஸ்திரீகளே
கிடக்கில் = இப்பிள்ளை தொட்டிலில் கிடந்தானாகில் –
தொட்டில் = தொட்டிலானது
கிழிய = சிதில மாம் படி
உதைத்திடும் -உதையா நிற்கும்
எடுத்துக் கொள்ளில் -இப்பிள்ளையை இடுப்பில் எடுத்து கொண்டால்
மருங்கை = இடுப்பை
இறுத்திடும் =முறியா நிற்கும்
ஒடுக்கி =வியாபார ஷபன் அல்லாதபடி செய்து
புல்கில் = மார்வில் அணைத்து கொண்டால்
உதரத்து -வயிற்றிலே
பாய்ந்திடும் = பாயா நிற்கும்
மிடுக்கு = இந்த சேஷ்டைகளை பொறுக்க வல்ல சக்தி
இல்லாமையால் -பிள்ளைக்கு இல்லாமையால் –
நான் = தாயான நான் –
மெலிந்தேன் = மிகவும் இளைத்தேன்
ஏ -அசை

கிடக்கில் -இத்யாதி –
தொட்டிலிலே வளர்த்தினால் -அதிலே கிடந்தானாகில் -தொட்டில் கிழியும் படி உதையா நிற்கும் –

எடுத்துக் கொள்ளில் மருங்கை  இறுத்திடும் –
திருவடிகளின் மார்த்தவத்துக்கு இது பொறாது-என்று அஞ்சி ஒக்கலையில் எடுத்து கொள்ளில் –
புடை பெயர்ந்து ஒக்கலையை முறியா நிற்கும் –

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் –
இது அத் திருமேனியின் மார்த்தவத்துக்கு பொறாது -என்று வியாபார ஷமன்
அல்லாதபடி ஓடிக்கி மார்விலே இட்டு கொள்ளில் -திருவடிகளாலே வயிற்றிலே பாயா நிற்கும் –

மிடிக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
இந்த சேஷ்டிதங்களை எல்லாம் பொறுக்க வல்ல சக்தி பிள்ளைக்கு போராது என்று –
நான் போர இளைத்தேன் –

நங்காய் என்று ஜாத் யேக வசனமாய் -நங்கைமீர் -என்றபடி –
நீங்கள் எல்லாம் பருவத்துக்கு தக்க சேஷ்டிதங்களை உடைய பிள்ளையை
பெற்று வளர்க்கையாலே -பூரணைகளாய் இருக்கிறீர்கள் இத்தனை –

——————————————————-

அவதாரிகை –
நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித்  தலைக் கட்டுகிறார் –

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

செம் நெல்  =செந்நெல் தான்யமானது
ஆர் =நிறைந்து இருக்கிற
வயல் =கழனி  களாலே
சூழ் = சூழப் பட்ட
திரு கோட்டியூர் =திரு கோட்டியூரிலே
மன்னு = நித்ய வாசம் பண்ணுகிற
நாரணன் = நாராயண சப்த வாச்யனாய்
நம்பி = குண பூர்ணனான கண்ணன்
பிறந்தமை = அவதரித்த பிரகாரத்தை
மின்னு நூல் = விளங்கா நின்ற யஜ்ஜோபவீதத்தை உடைய
விட்டு சித்தன் =பெரிய ஆழ்வார்
விரித்த = பரப்பி அருளி செய்ததாய்
இப் பன்னு பாடல் = ஜ்ஞானிகள் அநவரதம் அனுசந்திக்கும் படியான இப் பாசுரங்களை
வல்லார்க்கு = கற்கும் அவர்களுக்கு
பாவம் இல்லை = பாபம் இல்லை
ஏ -அசை

செந்நெல் இத்யாதி
செந் நெலால்  நிறைந்து இருக்கிற வயல்களாலே சூழப் பட்ட திரு கோட்டியூரிலே –
அசாதாரண  விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பரி பூர்ணனானவன் திரு வவதரித்த பிரகாரத்தை –
(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதோ மதுராம் புரிம் -பிராமண ஸித்தம் )

மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த –
பட்டர் பிரான் ஆகையாலே விளங்கா நின்றுள்ள திரு யஜ்ஜோபவீதத்தை உடையராய் –
சர்வ வ்யாபகனான சர்வேஸ்வரனை தம் திரு உள்ளத்திலே வைத்து கொண்டு இருக்கையாலே –
விஷ்ணு சித்தர் என்னும் திரு நாமத்தை உடையரான பெரிய ஆழ்வார் –
திரு வவதரித்த காலத்தில் உபலாள நாதிகளோடே கூட விஸ்த்ரனே அருளி செய்த –

இப் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே –
ரஸ்யதையால் விசேஷ ஜ்ஞானர் ஆனவர்கள் எப்போதும் சொல்லும்படியான
இப் படாலை சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு –
பகவத் அனுபவ விரோதியான பாபம் இல்லை –

——————————-

அடி வரவு
வண்ணம் ஓடு பேணி உறி கொண்ட கை
வாயுள் பத்து கிடக்கில் செந்நெல் சீதக் கடல்

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கிருஷ்ணன் கதை அமுதம் -613-621..

May 5, 2012

613-

வியாசம் -வசிஷ்டர் –பிரமன்  திரு குமரர் -சக்தி -பராசரர் -பரம்பரை பெருமை -சுகர் –
12 -6 அத்யாயம் பின் பகுதி வியாசர் செய்த -பெரும் உபகாரம் –
இது வரை சுகர் பரிஷித் -பேசினதை கேட்டோம் -இனி
சூத புராணிகர் -திரு குமரர் -சவ்நகர் முதலானவர்களுக்கு பேசிய –
வேத வியாசர் வேதம் பிரித்து -சிஷ்யர்கள் யார் –
ரிக் யசுர் சாம அதர்வண
மந்த்ரம் நிறைந்து ரிக் வேதம் –
/கர்மம் பிரயோகம் யஜுர்
-சாம இசை கூட்டி
துவாபர  யுகம்  பொழுது தான் வேதம் பிரிந்தது –
அநாதி அபவ்ருஷேயம் வேதங்கள் -கிருதயுகம் தொடங்கி உண்டே –
அநந்தம் வேதம் -ஆதி மத்யம் அந்தம் இல்லாதவை பகவான் வேதம் கர்மம் அனைத்தும் –
பல தீபங்கள் உண்டு -அண்டகடாகங்கள் பல -இன்று கண்டு பிடிக்கலாம் -முன்பே இருந்தனவை –
பிரம்மா வேதாந்தம் அமர்ந்து -ஒலி ரீங்கரித்து -பிரணவம் -மூன்று சேர்ந்து –
பரமாத்மாவே பிரணவ வடிவம் -நன்கு ஸ்தோத்ரம் செய்ய படுவதால் அதற்க்கு பிரணவம் என்ற பெயர் –
நமஸ் நாராயண சேர்ந்து திரு மந்த்ரம் –
முக்குனங்களாக மூன்று
மூன்று வேதம் /பூ புவ சுவ
விளித்து கனவு ரதூக்கம் மூன்று நிலை
எழுத்துகள் இதில் இருந்து பிறக்க –
குறில் நெடில் -உயிர்-மெய் -உயிர் மெய் —
அ கார அர்தோ விஷ்ணு –
வேதம் ஒன்றாக இருந்தும் புரியும் சக்தி கொண்டவர்கள் முன்பு –
நான்கு சிஷ்யர் -பைலர் -ரிக் வேதம்
யஜுர் வைசம்பாயனர் -யாகஜா வர்க்கருக்கு இவர் கொடுக்க –
சாம -ஜைமினி
சுமந்து கொண்டு அதர்வண வேதம் –

614-

விஷ்ணுவே வியாசராக அவதாரம் –
பைலர் கொண்டு ரிக் வேதம் –
வைசம்பாயனர் -யஜுர் -யாகஜா வர்க்யர் -சிறந்த ஞானி –
தைத்திரிய உபநிஷத் -சிஷா வல்லி ஆனந்த வல்லி பிருகு வல்லை நாராயண வல்லி –
பறவை கக்கிய வேதம் –
சதஸ் போக முடியவில்லை வைசம்பாயனரால் -தோஷம் பீடிக்க -பிரமஹத்தி –
அகங்காரத்துடன் யக்ஜா வர்க்யர் பேச -செருக்கு கூடாது –
கழற்று கொடுத்த வேதத்தை வைத்து விட்டு போக சொல்ல -வாயால் காக்க
சிஷ்யர் -தித்திரி பறவை ரூபத்துடன் எடுத்து கொள்ள –
சூர்யா  பகவானை-யாகஜா வர்க்யர் – ஸ்தோத்ரம் செய்து -உலகுக்கு ஒளி கொடுக்கிறீர் –
அவர்களுக்கு தெரியாத வேதம் கொடுக்க வேண்டும் -குதிரை முகத்தால் -உபதேசிக்க
கிருஷ்ணா சுக்ல யஜுர் வேதம் –
குதிரை வடிவுடன் கொடுக்க-இரண்டாக பிரிந்து -சாகை
ஜைமினி -சாம -வேதம்-நான்கு பக்கமும் பரப்ப –
7 அத்யாயம் -அதர்வண வேதம் -நஷாத்ரா கல்ப -காச்யபர் அங்கிரஸ்
புராணம் ஆறு பேர் -பரப்ப –
அடையாளங்கள் பத்து -மகா புராணம்
அல்ப ஐந்து சர்க்கச்ய பிரதி சர்கச்ய மன்வந்தரம் வம்சம் கிளை கதைகள் –
சர்க்கம்-சிருஷ்டி முதலில் /மக்கள் பிறந்து -பரம்பரை -விசர்க்கம்
விருத்தி ஜீவன உபாயம் -அடுத்து ஆசாரம் அனுஷ்டானம்
நான்காவது -ரஷை-அவதரித்து காப்பது
அடுத்து மன்வந்தரம் -மனுக்கள் –
வைச்வந்தர மன்வந்தரம்
வம்சம் அடுத்து
வம்சானு சரிதம்
எட்டாவது பிரளயம் -நித்ய நைமித்திக பிராரப்த ஆத்யந்திக  நான்கும்
ஒன்பாதாவது -காரணம் பிறப்பின் -ஹேது -ஜீவன் –
தஞ்சம் புகல் அபாஸ்ர்யம்
இப்படி பத்தும்
பிரம பத்ம விஸ்வ -18 பெயரும் –
வேதம் புராணம் -கற்க கற்க தேஜஸ் வளரும்
இனி  ஆலிலை கண்ணனை மார்கண்டேயர் சேவிக்க போகிறார்

615-

ஆல மா மரத்தின் –பாலகனாய் -நிறை கொண்டது என் நெஞ்சினையே -திரு பாண் ஆழ்வார் –
காட்டவே கண்ட பாத கமலம் -பாணர் தாள் பரவினோமே
முனி வாகனர் -உறையூர் அவதாரம் -லோகசாரங்க முனிவர்
கமலா வல்லி நாச்சியார் –
அவயவம் ஒன்றையும் அனுபவித்து –
ஞாலம் எழும் உண்டான் –
உண்டு உமிழ்ந்து அளந்தான் –
வடபத்ர சாயி -மார்கண்டேயர் சேவிக்க 12 – 8th அத்யாயம் –
விபு நிரந்தவர் -சின்ன ஆலிலை சயனம் –
பெரிய பெருமாள் -வலது பக்கம் ஒருக்களித்து -ஜீரணம் ஆக கூடாதே –
சவ்நகர் கேட்க சூத பவ்நிகர் -விபரிக்கிறார்
சதுர யுகம் முடியும் பொழுது எல்லாம் பிரளயம் வராதே –
பிரம்மாவுக்கு பகல் -1000 சதுர யுகம் முடிந்த பின்பு தானே –
மென்னடைய அன்னம் பறந்து விளையாடும் -வில்லி கண்டன் -மல்லி நாடாண்ட மட மயில் -ஸ்ரீ ஆண்டாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்-
இது தான் கடைசி கதை -அனைவர் உள்ளமும் பறிக்கும் –
மார்கண்டேயர் தபஸ்வி -யோக பலத்தால் -மிர்த்த்யு வென்று வாழ –
திவ்ய தேசங்கள் பல -மார்கண்டேயருக்கு பிரத்யட்ஷம் -தபஸ் செய்து கோவில் கோல செய்தார் –
ரிஷிகள் தேவர்கள் ஆசார்யம்-ஆறு மனுக்கள்  மாறினாராம் -71 சதுர யுகம் ஒவ்வொருவருக்கும் –
இந்த்ரன் தன் பதவிக்கு ஆபத்து -பயப்பட -இவர் தபஸ் கண்டு –
அப்சரஸ் அனுப்பி கலைக்க -முயல -துங்க பத்ர நதி கரையில் ஆஸ்ரமம் –
ஹிமாசலம் உத்தர பாகம் -பத்ர வட விருஷம் -புஷ்பங்கள் தாது காற்று வருட –
616-

மெய்யானை மெய்ய மலையானை -சத்யா மூர்த்தி -மலை குடைவரை கோவில் –
மார்கண்டேயர் -துங்க பத்ர-அதே -முனிவர் சத்ய வரதர் -பகவானை குறித்து ஆராதித்து வர –
சத்ய ஷேத்ரம்-அடையாளம் காட்ட -ஆதி செஷன் சந்தரன் ஆராதத்திகொண்டு  தேசம்-
சத்ய புஷ்கரணி -சத்ய விமானம் -ஐராவத யானை மேல் அனைத்தும் வர –
ஹிமாசலமே நதியே விருஷமே இங்கு வர
சயன திரு கோலம்- மது கைடவரை ஓட்ட –
மற்று ஒரு நின்ற திரு கோலம் -இரண்டு கர்பக்ரகம் –
பகவானை சித்தத்தில் நிறுத்தி -கலங்காமல் இருக்க -இந்த்ரன் கலங்கி –
நர நாராயணன் காட்ஷி கொடுக்க வர -கையில் கமண்டலம் கொண்டு -கடாஷிக்க வர –
வணங்கி -நமோ நமோ -ஸ்தோத்ரம் செய்ய –
பட்டு பூச்சி போல் சிருஷ்டித்து லயம் அடைய செய்ய -சாத்விகன் -நீ ஒருவன் தான் –
வேதங்களால் ஸ்தோத்ரம் செய்ய -பர தேவதை -உன்னை வணங்குகிறேன் –
அடுத்து ஒன்பதாம் அத்யாயம் -உன் திருவடி ஒன்றே வேணும் -ஜிதந்தே –
காட்ஷி -காணுமாறு உண்டு எனில் அருள்-
தனித்து உலகம் என்பர் அறியாதோர் -உன்னுள் தான் உலகம் காட்டி அருள் –
ஒன்றாக காண வேண்டும் -நீ உலகத்துக்கு உள்ளே -உலகம் உன் உள்ளே –
அதை அறிந்தவன் பிரமத்தை அடைகிறான் –
பேத தர்சனம் கூடாது
ஆத்மாக்கள் பலர்  விட்டு பிரியாத -பிரகார பிரகாரி பாவம்
பிரளயம்-தண்ணீரால் மூழ்க -எங்கும் ஓடி பிரிய-
சோகம்-மோகம்-துக்கம்-சுகம்-பயம்-மாறி மாறி பல லஷம் வருஷம் –
தேடி ஓட -மணல் திட்டு -ஆல மரம்- கிளை கண்டு
சிரு குழந்தை கண்டார் –

617

கராரவிந்தென-ஆலிலை தளிரில் சயனம்-திருவடி திருக்கை திருவாய் அனைத்தும் தாமரை –
கட்டை விரலை வாயில் கொண்டு -ஆனந்த தர்சனம் –
உலகம் விழுங்கி அடக்கி கொண்டு சயனித்து –
அனைவரும் அவனுக்குள் அடக்கம்-அடங்கு எழில் சம்பத்து -அடங்குக உள்ளே -ஆழ்வார்
வெளியிலும் கண்டார் வயிற்ருக்குள்ளும் காண போகிறார் –
அம்பரமும் -உண்ட கண்டம்-திரு நறையூர் பாசுரம்-நம்பிக்கை நாச்சியார் -திரு மாட கோவில் –
அடுத்து அடுத்து உயர்ந்த
குல வரையும் அனைத்தும் -கொம்பு அமரும் அவனை பாடுகிறார் திருமங்கை ஆழ்வார் –
ஆலிலை அன்ன வசம் செய்யும் -அடியார் அடியோங்களே -ஆழ்வார் ஏழு முறை –
திருமேனி ஒளியால் வெளிச்சம் – மரகத சியாமம்-மந்தகாசம் –
ஒரு திருக்கையால் கட்டை விரலை வாயில் கொண்டு –
அளந்த ஒன்றால் வாயிற்று உள்ளே இருக்கிறதா பார்க்கிறான்-
அதே படி கொண்டு அளக்கிறான் -அனைத்தையும் சரியாக
திருவடி போக்கியம் சொல்கிறார்கள்-பார்ப்போம் -பார்க்கிறான் –
மூச்சு இழுக்க மார்கண்டேயர் உள்ளே போய் -பார்க்காத ஒன்றும் இல்லை –
வநாணி தேசான் -அனைத்தையும் கண்டார் -எஞ்சாமல் வயிற்று அடக்கி கிடந்தான்
இடை கழி ஆயன் -மாயன் –
ஹிமாசலம் தன்னையே கண்டார் -கண்ணாடி அறையில் சேவை போல் –
அதுக்குள்ளே அதுக்கேள்ளே சேவை போல் –
மூச்சை வெளியில் விட -கொசு வருவது போல் வந்தார் –
மீண்டும் வெளியில் காட்ஷி கண்டார் -வியப்பு –
அவனே உலகமா அவனுக்குள் உலகமா –
அன்று நீ வளர்ந்தது -ஆல் விண்ணதோ மண்ணதோ-குன்று எடுத்த நீயே  சொல்லு –
சின்ன ஆலிலை எங்கு முளைத்தது –
அகடிகடனா சாமர்த்தியம் -தர்சனம் கேட்டாயே போறுமா -கேட்டான் குழந்தை –
சட்டு என்று அனைத்தும் மறைய –
சதுர யுகம் முடிவில்  நடந்தது இல்லை
மார்கண்டேயர் கேட்டு கொண்டதன்படி அவருக்கு காட்டிட காட்ஷி -9th அத்யாயம் முடிகிறது
இனி மார்கண்டேயருக்கு பரமசிவன் கொடுத்த வரம் பார்ப்போம்

618

உத்பலாக விமானம் -ஆலின் மேலால் அடைந்தான் அடி இணைகளே-முக்தி அருளும் –
காலை மாலை கமல மலரிட்டு தொழுமின் -அவனே திரு கண்ண புரத்தில் அருள் பாலிக்கிறான் –
மார்கண்டேயர் -சிவன் இடம் விஷ்ணு பக்தி அருள கேட்க -மீளுதல் இல்லா இன்பம் -12 -10அத்யாயம் –
பக்தனை கடாஷிக பார்வதி -சிவன் வர -இவர் த்யானத்தில் இருக்க -கண்டு கொள்ள வில்லை –
பரம சாது -பக்தர் உடன் பேசுவது பாக்கியம்-பிராண வாயு வழியாக உள்ளே நுழைய -ஆச்சர்யத்துடன் கண் விழிக்க –
ஆசனம் -கை கூப்பி வணங்க -ஸ்தோத்ரம் செய்ய -நம-கேட்ட வரம் ஆள ஆனந்தம் –
ஏகாந்த பக்தன்-சம தர்சனம் -ராவணனுக்கும் வரம் கொடுத்து இருக்கிறோம் -உம போல்வாருக்கு அருளுவதில் இன்பம் –
நாராயணன் தர்சனம் -ஆச்சர்யம் மீள வில்லை -மற்றை எல்லாம் புல்லுக்கு சமம் –
அந்த பக்தியே அருள வேண்டும் -அனுக்ரகிக்க -கல்பத்தின் முடிவில் ஸ்ரீ வைகுண்ட முக்தி கிட்டும் -இந்த கதை
சொல்லுவதற்கும் கேட்பதற்கும் பலன் சொலி முடிக்கிறார்
11 அத்யாயம் பகவான் திரு மேனி ஸ்வரூபம் விவரிக்கும் –
ஒவ்வொரு அங்கமும் -சுதர்சன கிரியா யோகம் –
பூமி திருவடி/ஆகாசம் திரு தலை/சூர்யன் திரு கண்கள்-மனச சத்ன்ரன்
வில் புருவம் யமன்
தலை மயிர் மேகம் /கௌஸ்துபம் ஜீவாத்மா
ஸ்ரீ வத்சம் பிரகிருதி மண்டலம்
வனமாலை மாயா சக்தி
சந்தஸ் பீதகவாடை
பிராணன் கதை
சுதர்சன் அக்னி
தமஸ் கேடயம்
காலம் வில்
அம்புகள் கர்மங்கள்
ஸ்ரீ -விட்டு பிரியாத ஸ்வரூப நிரூபக தத்வம்
உலகமே அவன் திரு மேனி -விஸ்வரூபம் அறிந்தவன் –
சூர்யன் 7 கணங்கள் ராசி விவரிக்கிறார் அடுத்து –
வாசுகி -புலச்தன்-சித்தரை நுழைகிறார் -சூர்ய நாராயணன்

619

கலியுக தர்மம் திரு நாம சங்கீர்த்தனம் –
இதுகாறும் சொன்னதின் சுருக்கம் 12 -12 அத்யாயம் –
முன்னுரை முடிவுரை சொல்வது சான்றோர் வழக்கம் –
நல்ல கருத்துகள் பல -ஒவொன்றை அனுஷ்டிக அனைத்தும் நினைவுக்கு வரும் –
ஸ்லோககங்கள் தர்மங்கள் பல கேட்டோம் -ஓன்று இரண்டை கடை பிடித்தாலே போதும் –
நமோ கிருஷ்ணா -ஹரி திவ்ய லீலைகள் அனைத்தும் சொன்னேன் –
நாராயணனே கண்ணன் -படைத்து லயம் அடைவித்து –
ஞானம் விக் ஞானம் சொன்னேன் –
பக்தி யோகம் விளக்கி –
வைராக்கியம்-பக்தி முக்கியம் –
முதல் ஸ்கந்தம் -சாபம்-கங்கை கரையில் சுகர் பரிஷிதுக்கு உபதேசம் ஆரம்பம்-
இரண்டாம் ஸ்கந்தம் -படைப்பு -சர்க்கம்-விவரிக்க
மூன்றாவது விதுரர் -உத்தவர் தர்மம்/விதுரர் மைத்ரேயர்/மூல பிரகிருதி \மாறுதல்-விளக்கி
காலம் வேறுபாடு  -யுகம்-ஹிரன் யாட்ஷன் முடித்து ஸ்ரீ வராக அவதாரம்
கபிலர் அவதாரம் -கபிலர் தேவ போதை -பேசிக் கொண்டது –
நான்காவது -துருவன் -பால பக்தன்-பிருது அரசன்-புரஞ்சரோ உபாத்யாயணம்
ஐந்தாவது நாபி -ரிஷப தேவஞ்சடபரதர் -ஆத்மா தேக -மான் குட்டி
ஆறாவது தேவ அசுரர் -வாசி
ஏழாவது நரசிம்க திரு அவதாரம்-தெள்ளிய சிங்கம்-போழ்ந்தபுனிதன்-
எட்டாவது கஜேந்திர -வரதன்-கதை /அலை கடல் கடைந்தது -மோகினி அவதாரம்
கூர்ம /மத்ஸ்ய அவதாரம்/வாமன
ஒன்பதாவது -சூர்ய வம்சம் இஷ்வாகு-மனு ஸ்ரீ ராமன் -பகீரதன் -அஜன்-தசரதன் –
வெம் கதிரோன் குலத்துக்கு முதல்வன் -பார்க்கவா ராமன்
நிமி சீதை
யது குலம்

620

கோபால சூடாமணிம் -விம்சதி –
பத்தாவது ஸ்கந்தம் விளக்கும் –
27 ஸ்லோகம் தொடக்கி கண்ணன் கதை -வாடா மதுரை/கோகுலம்
கருத்த யமுனை கண்ணன் போல் –
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் -விஸ்ராம் காட் வராகர் ஒய்வ்வு எடுத்த இடம் –
தேவிகா லீலைகள்-பூதனை/சகடாசுரன் /கொக்கு வச்த கபிலாசுரன் /காளிங்கன் தமனம் –
பிருந்தாவனம்-கோகுலம் நந்த கிராமம் –
மணல் குன்று விளையாட
பிரமாண்ட காட் மண் உண்டு உலகு காட்டிய உகல் பந்தன்-கட்டுப்பட்ட இடம்
நந்த பவன் -பெரிய அரண்மனை தயிர் கடைந்த  இடம்-
சோலை சூழ் குன்று எடுத்த ஏழு வயசில்
கோவர்த்தனம் இன்று 80 அடி உயரம் –
ராசா கிரீடை நடத்திய மண்டபம் சேவா குஞ் -குரங்குகளும் மாலை இருக்காது
துவாதசாதித்ய சிலை -கண்ணனுக்கு வெது கொடுத்தானாம்
அகரூர் காட் தண்ணீரிலும் தேரிலும் தர்சித்தார்
காம்ய வனம் -தண்ணீர் குடிக்க கற்று கொடுத்தான் விமலகுன்றம் –
போஜன் தாலி -வழுக்கி விளையாடிய இடம் –
மல்லரை -கம்சனை முடித்து -தாய்தந்தை கண்டு
சாந்தீபன் இடம் கற்று -பிள்ளையை மீட்டு
யவனன் -துரத்த மேற்கே ஓட -டாகூர் த்வாரக ஆனந்த் பக்கம் –
முசுகுந்தன் -கோமதி துவாரகை -பெட் த்வாரகை -பெட்டி சுதாமா குசலர்
ருக்மிணி தேவி திரு கல்யாணம்
பாணாசுரன் -முடித்து
குருஷேத்ரம் -மண்ணின் பாரம் தீர்க்க –
தன்னுடை ஜோதிக்கு -பிரபாச ஷேத்ரம்-
உத்தவர் உபதேசம் -பரிஷித் முக்தி பெற்றது
மார்கண்டேயர் ஆலிலை கண்ணன் தர்சனம்
கண்ணன் கதை மங்கலம் புண்ணியம் குணம் வெளிப்படுத்தும் ததேவ ரம்யம்
மனசு ஆனந்த படும் சம்சாரம் வற்ற அடிக்கும் –
பிரமன்-நாரதர் வியாசர் -சுகர் -அருளியது –

621

அவன் ஆனந்தம் -ஸ்ரீ பாகவத புராணம் பாராயணம் செய்தால் –
பலன் சொல்லி 12 -12 -58 -குறைவாக நினைத்தாலும் மனச சாந்தி  கொடுக்கும் –
புஷ்கரம் த்வாரகை மதுரை படித்தால் பேரு நிறைய
வேதம்சொள்ளும் ஆழ்ந்த பொருள் இது சொல்லும்
இந்த லோக ஷாந்தி அவ உலக இன்பம் கிட்டும் –
கலியுக அழுக்கு போக்கும் –
அடுத்து -13 புராணங்கள் ஸ்லோகம் எண்ணிக்கை சொல்லி -பல சுருதி சொல்லி முடிக்கிறார் –
தானம் மகத்ம்ய-50000பிரம புராணம் 1000 –
விஷ்ணு 23000 சிவா 25
பாகவதம் 18000
நாரத 25000
மார்கண்ட 9 000
வன்னி அக்னி 144000
பவிஷ்யத் 155000
லிங்கம் 11000
வராக 24000
ஸ்கந்தம் 81000
வாமன 10000
கூர்ம 170000
மாத்ச்ய 140000
கருட 19 -0000
பிரமாண்டம் 120000
மொத்தம் 400000 ஸ்லோகங்கள் –
பிரம்மாவுக்கு -நாரதருக்கும்-உபதேசிக்க-
ஆதி மத்திய இறுதி -வைராக்கியம்-ஹரி லீலை ஆனந்தம் கொடுக்கும் –
கங்கை விஷ்ணு போல் புராணம் – வாழிவாழி வாழி
பரிஷித் முக்தி அடைந்தது போல் நாமும் பெறுவோம் –
திருவடியில் பக்தி மாறாமல் இருக்க வேண்டும் –
திருநாம சங்கீர்த்தனம் அனைத்து பலமும் கிட்டும்
ருக்மிணி திரு கல்யாணத்துடன் முடிக்க வேண்டும் –
ஏழு ஸ்லோகங்கள் -சந்தேசம் -குண்டின புறம்
கண்ணாலம் கோடித்து -கை பிடித்த பெண்ணாளன் –
திவ்ய தேசங்கள் பல சேவித்தோம் –
சரித்ரம் கேட்பவர் சகலமும்பெற்று பேரு வீடும் பெறுவார் –
ருக்மிணி சத்யா பாமா சமேத கண்ணன் /வியாசர்/சுகர்/பரிஷித்பல்லாண்டு
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

12-7/8/9./10/11/12-

12-7

19–vyatirekänvayo yasya

jägrat-svapna-suñuptiñu

mäyä-mayeñu tad brahma

jéva-våttiñv apäçrayaù

The Supreme Absolute Truth is present throughout all the stages of

awareness—waking consciousness, sleep and deep sleep—throughout all the

phenomena manifested by the illusory energy, and within the functions of all

living entities, and He also exists separate from all these. Thus situated in His

own transcendence, He is the ultimate and unique shelter.

20–padärtheñu yathä dravyaà

san-mätraà rüpa-nämasu

béjädi-païcatäntäsu

hy avasthäsu yutäyutam

Although a material object may assume various forms and names, its

essential ingredient is always present as the basis of its existence. Similarly,

both conjointly and separately, the Supreme Absolute Truth is always present

with the created material body throughout its phases of existence, beginning

with conception and ending with death.

12-8

35–

te vai bhagavato rüpe
nara-näräyaëäv åñé

dåñövotthäyädareëoccair

nanämäìgena daëòa-vat

These two sages, Nara and Näräyaëa, were the direct personal forms of the
Supreme Lord. When Märkaëòeya Åñi saw Them, he immediately stood up and

then with great respect offered Them obeisances by falling down flat on the

ground like a stick.

41–

mürté ime bhagavato bhagavaàs tri-lokyäù

kñemäya täpa-viramäya ca måtyu-jityai

nänä bibharñy avitum anya-tanür yathedaà

såñövä punar grasasi sarvam ivorëanäbhiù

O Supreme Personality of Godhead, these two personal forms of Yours have

appeared to bestow the ultimate benefit for the three worlds—the cessation of

material misery and the conquest of death. My Lord, although You create this

universe and then assume many transcendental forms to protect it, You also

swallow it up, just like a spider who spins and later withdraws its web.

43–

nänyaà taväìghry-upanayäd apavarga-mürteù

kñemaà janasya parito-bhiya éça vidmaù

brahmä bibhety alam ato dvi-parärdha-dhiñëyaù

kälasya te kim uta tat-kåta-bhautikänäm

My dear Lord, even Lord Brahmä, who enjoys his exalted position for the

entire duration of the universe, fears the passage of time. Then what to speak of

those whom Brahmä creates, the conditioned souls. They encounter fearful

dangers at every step of their lives. I do not know of any relief from this fear

except shelter at Your lotus feet, which are the very form of liberation.

12-8-

28/29–

khaà rodasé bhä-gaëän adri-sägarän

dvépän sa-varñän kakubhaù suräsurän

vanäni deçän saritaù puräkarän

kheöän vrajän äçrama-varëa-våttayaù

mahänti bhütäny atha bhautikäny asau

kälaà ca nänä-yuga-kalpa-kalpanam

yat kiïcid anyad vyavahära-käraëaà

dadarça viçvaà sad ivävabhäsitam

The sage saw the entire universe: the sky, heavens and earth, the stars,

mountains, oceans, great islands and continents, the expanses in every

direction, the saintly and demoniac living beings, the forests, countries, rivers,

cities and mines, the agricultural villages and cow pastures, and the occupational

and spiritual activities of the various social divisions. He also saw the basic

elements of creation along with all their by-products, as well as time itself,

which regulates the progression of countless ages within the days of Brahmä. In

addition, he saw everything else created for use in material life. All this he saw

manifested before him as if it were real.

0–

himälayaà puñpavahäà ca täà nadéà

nijäçramaà yatra åñé apaçyata

viçvaà vipaçyaï chvasitäc chiçor vai

bahir nirasto nyapatal layäbdhau

He saw before him the Himälaya Mountains, the Puñpabhadrä River, and his

own hermitage, where he had had the audience of the sages Nara-Näräyaëa.

Then, as Märkaëòeya beheld the entire universe, the infant exhaled, expelling

the sage from His body and casting him back into the ocean of dissolution.

33–

tävat sa bhagavän säkñäd

yogädhéço guhä-çayaù

antardadha åñeù sadyo

yathehänéça-nirmitä

At that moment the Supreme Personality of Godhead, who is the original

master of all mysticism and who is hidden within everyone’s heart, became

invisible to the sage, just as the achievements of an incompetent person can

suddenly vanish.

34–

tam anv atha vaöo brahman

salilaà loka-samplavaù

tirodhäyi kñaëäd asya

sväçrame pürva-vat sthitaù

After the Lord disappeared, O

and the dissolution of the universe all vanished as well, and in an instant

Märkaëòeya found himself back in his own hermitage, just as before.

brähmaëa, the banyan tree, the great waterThus

12-10-

42–

ya evam etad bhågu-varya varëitaà

rathäìga-päëer anubhäva-bhävitam

saàçrävayet saàçåëuyäd u täv ubhau

tayor na karmäçaya-saàsåtir bhavet

O best of the Bhågus, this account concerning Märkaëòeya Åñi conveys the

transcendental potency of the Supreme Lord. Anyone who properly narrates or

hears it will never again undergo material existence, which is based on the

desire to perform fruitive activities.

12-11-

1/12–

sva-mäyäà vana-mäläkhyäà
nänä-guëa-mayéà dadhat
väsaç chando-mayaà pétaà

brahma-sütraà tri-våt svaram

bibharti säìkhyaà yogaà ca

devo makara-kuëòale

maulià padaà pärameñöhyaà

sarva-lokäbhayaì-karam

His flower garland is His material energy, comprising various combinations
of the modes of nature. His yellow garment is the Vedic meters, and His sacred

 

thread the syllable
 

 

 
 

 

 

 

composed of three sounds. In the form of His twoshark-shaped earrings, the Lord carries the processes of Säìkhya and

 26–

ya idaà kalya utthäya
mahä-puruña-lakñaëam

tac-cittaù prayato japtvä

brahma veda guhäçayam

Anyone who rises early in the morning and, with a purified mind fixed upon
the Mahäpuruña, quietly chants this description of His characteristics will

realize Him as the Supreme Absolute Truth residing within the heart.

46–dvädaçasv api mäseñu

devo ‘sau ñaòbhir asya vai

caran samantät tanute

paratreha ca san-matim

Thus, throughout the twelve months, the lord of the sun travels in all

directions with his six types of associates, disseminating among the inhabitants

of this universe purity of consciousness for both this life and the next.50–evaà hy anädi-nidhano

bhagavän harir éçvaraù

kalpe kalpe svam ätmänaà

vyühya lokän avaty ajaù

For the protection of all the worlds, the Supreme Personality of Godhead

Hari, who is unborn and without beginning or end, thus expands Himself

during each day of Brahmä into these specific categories of His personal

representations.

12-12-

3–

atra saìkértitaù säkñät
sarva-päpa-haro hariù

näräyaëo håñékeço

bhagavän sätvatäm patiù

This literature fully glorifies the Supreme Personality of Godhead Hari, who
removes all His devotees’ sinful reactions. The Lord is glorified as Näräyaëa,

Håñékeça and the Lord of the Sätvatas.

20–

kaurmaà mätsyaà närasiàhaà

vämanaà ca jagat-pateù

kñéroda-mathanaà tadvad

amåtärthe divaukasäm

The

 

 

 

 

Bhägavatam

also tells of the appearances of the Lord of the universe asKürma, Matsya, Narasiàha and Vämana, and of the demigods’ churning of the

milk ocean to obtain nectar.

27–yaträvatéåëo bhagavän

kåñëäkhyo jagad-éçvaraù

vasudeva-gåhe janma

tato våddhiç ca gokule

How Çré Kåñëa, the Supreme Personality of Godhead and Lord of the

universe, descended into this Yadu dynasty, how He took birth in the home of

Vasudeva, and how He then grew up in Gokula—all this is described in detail.3–naiñkarmyam apy acyuta-bhäva-varjitaà

na çobhate jïänam alaà niraïjanam

kutaù punaù çaçvad abhadram éçvare

na hy arpitaà karma yad apy anuttamam

Knowledge of self-realization, even though free from all material affinity,

does not look well if devoid of a conception of the Infallible [God]. What, then,

is the use of even the most properly performed fruitive activities, which are

naturally painful from the very beginning and transient by nature, if they are

not utilized for the devotional service of the Lord?

61–puñkare mathurayäà ca

dväravatyäà yatätmavän

upoñya saàhitäm etäà

paöhitvä mucyate bhayät

One who controls his mind, fasts at the holy places Puñkara, Mathurä or

Dvärakä, and studies this scripture will be freed from all fear

68–upacita-nava-çaktibhiù sva ätmany

uparacita-sthira-jaìgamälayäya

bhagavata upalabdhi-mätra-dhamne

sura-åñabhäya namaù sanätanäya

I offer my obeisances to the Supreme Personality of Godhead, who is the

eternal Lord and the leader of all other deities, who by evolving His nine

material energies has arranged within Himself the abode of all moving and

nonmoving creatures, and who is always situated in pure, transcendental

consciousness

கிருஷ்ணன் கதை அமுதம் -604-612…

May 5, 2012

அவதார ரகஸ்ய ஸ்லோகம் -கீதை-நன்கு ஸ்லோகங்கள் –
அவதாரம் கானல் நீர் போல் பொய்யா -செஷ்டிதம் மாயையா -இல்லை-
அவதாரம் உண்மை -சத்யத்வம்
சுத்த சத்வ மாயம்
சாது சம்ரஷன அர்த்தம்
தீப பிரகாசர் -தேசிகன் -திரு அவதாரம்-திரு வேங்கடத்தான் திரு  மணி அம்சம் –
அவதாரச்ய சத்யத்வம்-நம் பிறவி உண்மை போல் அவன் அவதாரம்-
தோன்றினார் -உயர்வாக -பிறக்கும் பொழுது பெருமை குறையாமல் –
அஜகது ஸ்வ ச்வாபது-சேற்றில் விளக்கி மாணிக்கம் ஒளி-
நம் உடல் போல் இல்லை அவன் திருமேனி மூன்றாவது -சுத்த சத்வ மயம்ச-
திரு -சேர்த்தே திரு வாடை திரு ஆபரணம் -நம்மதோ  முக்குணம் ஆனால்-பஞ்ச பூதத்தால் –
ச்வேச்சாய -கர்மம் அடியாக இல்லை-ஸ்வ இச்சையால் -தி தந்தை தேர்ந்து எடுத்து கொண்டு –
அடுத்து ஐந்தாவது -அவதார காலம்-தர்மம் தலை குனியும் பொது -இதுவே காலம்
அவதார பயன் அடுத்து -நாமோ கர்மம் தொலைக்க -சாது ரசித்து துஷ்டர் முடிக்க தர்மம் நிலை நாட்ட –
ஆக ஆறு பதில்கள் அருளுகிறார் –
கடல் போல் -அவன் சரித்ரம் -கடல் கரையில் இருந்து பார்த்தோம் –
கல்கி அவதாரம் அடுத்து –
அரசர் பரம்பரை அடுத்து சொல்கிறார்
பெயர்கள் பட்டியல்-12 -01 அத்யாயம்
நந்தி வர்மன் -சிசுனாதன் -நந்தன் -சாணக்யன் கவ்டில்யன் -சந்திர குப்தன் -மௌரிய வம்சம் –
கன்வர்கள்-ஒவ்வொருவரும் எவ்வளவு வருஷம் ஆழ்வார்கள் கணக்கு சொல்கிறார் –

605-

பொலிக பொலிக பொலிக -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
நரகமும் நைய நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
12 -02 அத்யாயம்-கலி கோரம் சொல்கிறது –
நம் ஆழ்வார் தொடங்கி பக்தி ரசம் பொழிய –
ஸ்ரீ பெரும்பூதூர் -ராமானுஜ திவாகரன் –
1017
திருமேனி நினைக்க காமம் குரோதம் விலகும் -நல் கதி கிட்டும் –
அரசர் பரம்பரை சொல்லி -பெண்கள் பசுமாடு -சிரமம்-
அல்ப சுகம்-ரஜோ தமோ குணம் மூடி பிரஜைகள் துன்பம் அரசர்களால் –
கலி வளர சத்யம் கருணை குறைய -பணம் ஒன்றே குறிக்கோள் –
பலவான் வெல்வான்-உண்மை நடுநிலை உள்ளவன் இல்லை –
சாமர்த்தியம் -ஏமாற்று வேலை -பணம் பதவி படாடோபம் -ஓங்கி –
துணை நூல் மார்பில் அந்தணன் -துராசாரம் மிக்கு –
அக்னி கார்யம் குறைந்து -வேஷம் வயிறு நிறைய
அடித்து பேசினால்-பொய் உண்மையாகும் –
புகழுக்காக தர்ம கார்யம் செய்வார்கள் –
பலி அரசன் ஆள-அரசன் தங்களுக்கு நன்மை தேட –
பூமா தேவி பிடிக்காமல்-வெள்ளம் நாசம் -பயப்பட வேண்டாம் –
606-

மீனோடு ஆமை – கேழலாய் -..அரி குறளாய் -முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய்
ல்கியும் ஆனான் -கலி யுகத்தில் குறைந்த  முயற்சியில் அதிக பலன் -ஆயுள் குறையும்
உயரமும் குறையும் -ஸ்ரீ ராமன்  காலத்தில் எட்டு அடி உயரமாம் –
நாஸ்திகர் கூட்டம் பெருகும் –
துன்புறுத்துவதே குறிக்கோள் –
மூலிகைகள் மறையும் -கலப்படம் மிகும் –
விருந்தோம்பல் குறையும்
கல்கி -சம்பளம் கிராமம் விஷ்ணு  யசஸ் -பெயரில் வெள்ளை குதிரையில் –
வாசனை மிக்க திருமேனி -கலி முடிந்து கிருத யுகம்-
பிரளயம் வராது 28 சதுர யுகம் தான் முடியும்
100 சதுர யுகம் முடியணும்-
நல்லவரை கொண்டு கிருத யுகம் ஆரம்பிக்கும் தீயவரை தான் முடிப்பார் –
சந்தரன் சூர்யம் பிரகஸ்பதி மூவரும் புஷ்ய நஷத்தரத்தில் பிரவேசிப்பார்கள் –
சப்த ரிஷிகள் கூட்டமாக
மகம் பரிஷித் காலத்தில் பின்பு பூராடம் மாறி-
அரசர் கீர்த்தி மிகும்
வர்ண ஆஸ்ரம தர்மம் மீண்டும் நிலை பெரும்
நீர் குமிழி போல் தீயவர் அழிவார்கள் –
அடுத்து திரு நாம சங்கீர்த்தனம் பெருமை சொல்லுவார்
607-12 -3 அத்யாயம் தொடங்க இருக்கிறோம் –
தர்மம் யுகம் தோறும் எப்படி இருக்கும் -கேசவ திரு நாம சங்கீர்த்தனம் ஒன்றே வழி
பூமி கீதம் -பரந்து மிகுந்த மேல் பகுதி ஒன்றே அறிவோம் -காணி நிலத்துக்கு சண்டை
அனைத்தும் பூமி தேவி சொத்து உணராமல் –
அரசர் துன்பம் செய்ய -காமம் கோபம் வசப்பட்டு தாங்களுக்கே சொத்து சேர்த்து –
மரண தேவதை வரும் உணராமல்-
கடலை வசப்படுத்த -ஆகாசத்தை வசப்படுத்த –
சண்டை எல்லாம் பூமிக்காக தானே -தங்கம் வெள்ளி விலை ஏற்றி -பூமிக்கும் விலை ஏற்றி –
ஒருசிலர் பயன் பெற்று -ஏலம் செய்து -சண்டை போட்டு –
பரதன் அர்ஜுனன் மாந்தாகன் கட்டுவன்கா சாத்தனு பகீரதன் -பல பெரிய அரசர் தசரதர் யயாதி ஆண்ட நாடு
நமுசி ஹிரன்யாட்ஷன்  ராவணன் இவர்களும் ஆண்டார்கள் –
பொருளாதாரம் வீக்கம் -முதலீடு இங்கே செய்தால் பலன் என்று முதலீடு செய்து –
பரந்து விரிந்த பூமி தேவி -பேசுகிறாள் இங்கே –
உழவு நிலைமை குறைந்து -துல்யமாக கணித்து சொல்கிறது நடப்பதை –
பக்தி செலுத்துவதே உயர்ந்த வழி –
பரிஷித்-கேட்பதில் உடம்பு நடக்கிறதே
தார்மிகனாக வாழ வழி சொல்லும் சுகர் இடம் கேட்கிறான்
இங்கும் நன்மை பெற வழி உண்டே –
சுகர் யுகம் நன்மை தீமை சொல்லி
தர்மம் சத்யம் தயா தவம் தானம் நான்கு கால் பசு

608-

த்ரேதா யுகம்-அதர்மம் நுழைய
சந்தோசம் கருணை நடப்பு  சாந்தி மனசை அடக்கி ஆத்மாராமானாக இருக்க
சம தர்சனம் கிருத யுகத்தில் இருக்க –
ஒரு கால் குறைந்து – பொய் சொல்லி -ஹிம்சை -இன்பத்துக்கு ஆள் ஆகாமல் –
முழுவதும் தர்மம் தொலைந்து போகாமல் இருக்கும்
கிரியை அனுஷ்டானம் செய்வார்கள் –
ஹிம்சை/பொய் கூடி த்வேஷம் மிக்கு -செருக்கு மிகுந்து –
கலியுகம் -முக்கால் போக -முடிவில் அதுவும் போக கல்கி அவ்பதரிக்க –
துஷ்டர் /ஆசாரம் அற்று/சண்டை விரோதம் பாராட்டி
குருத சத்ய குணம் மிகுந்து
த்ரேதா ரஜோ குணம் தலை எடுக்க -வீடு இன்பம் மோஷம் விருப்பம் இன்றி -மற்ற மூன்றில்
துவாபர – ரஜோ தமோ கலந்து -லோபிகள் அசந்தொஷி செருக்கு டம்பம் மிக்கு
பின்பு தமோ  குணம் மிக்கு -கலி யுகத்தில் -சோகம் மோகம் -கவன குறைவு சோம்பல் தூக்கம்
ஞானம் அறிவில் ஆசை கிருத யுகத்தில் –
கலியுகத்தில் பற்று மிகுந்து -தவம் குறைந்து -தெய்வ பலம் குறைந்து –
கொலை கொள்ளை மிகுந்து -வேதம் தூஷிக ஆரம்பிப்பார்கள் –
படிக்காமலே –
அந்தணர் அனுஷ்டானம் இன்றி –
பணம் ஒன்றே குறிக்கோள் –
சன்யாசிகள் காஷாயம் தண்டம் வேஷம்
சாப்பாடுக்கே அலைந்து -வெட்கம்  குறைந்து கடுமை பேச்சு –
பால் கொடுக்காத பசுவை ரஷிக்காமல்-
பிராணி ஹிம்சை -காற்றை தண்ணீரை தூய்மை செய்து –
விஷ்ணு ஆராதனை குறைந்து பாஷாண்டிகள் நாஸ்திக வாதம் நிறைந்து –
கலியுகம் கஷ்டம் அடுக்கி திரு நாம சங்கீர்த்தனம் விளக்குகிறார் அடுத்து 4 /5 ஸ்லோகங்களால்

609-

ருத யுகம் -யுகத்தின் பொது விதி சொல்லி
நல்லவர்களும் இருப்பார்கள் -12 /3 /45 ஸ்லோகம்
புருஷோத்தமன் -எளிய வழி -அவனை அடைய -சரணாகதி நன்றாக விளக்கி
இறைவா நீ தாராய் பறை -மனம் கனிந்து பேர் இன்பம்மிக்கு இருக்கிறான் –
கல்ப கோடி -ஜன்மம் வேண்டும் -வினாடி சம்பாதிக்கும் பாபம் போக்க-
தப்பில் ஈடுபாடு குறைய -அவன் -உதவ ஓடி வருகிறான் –
பயம் போக்க வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூய மலர் தூவி தொழுது –
அன்பு கருணை வெல்லும் -பாப கூட்டம் பரந்து போகும் –
த்யானித்து கிருத யுகம்
யாக யாக்சம் செய்து அடுத்து
உத்சவங்கள் அர்ச்சனை
அடுத்து கும்பிடு நட்டம் இட்டு ஆட -தலியிநிடு ஆசனம் தட்ட
திரு நாம சங்கீர்த்தனம்
மால் கொள் சிந்தையராய் -ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நா வாயில் உள்ளதே -வெட்கம் துறந்து ஸ்ரீ வல்லபேதி -முகுந்தா –
கேசவா என்ன கெடும்  இடராயவென்ன எல்லாம்  கெடும் –
அச்சுவை பெறினும் வேண்டேன் –
ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ர நாம துல்யேன- ரஷைஇது தானே
விஷ்ணு சகஸ்ரநாமம் அனைத்தையும் அருளுமே –
கேசவனை மனத்தில் வைத்து உயர்ந்த கதி அடையலாம் –
கிருஷ்ண கீர்தனத்தாலே முக்தி -கலி யுகத்தில் -சுலப வழி –
துவாரகை நினைத்தாலே மதுரையார் மன்னனுக்கு நாம இருக்கிற இடத்தில்
சொன்னாலே ஆனந்தம் பயம் நீங்கும்
610-

611-

அயோத்யா -மதுரா -முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள்
மாயா காசி காஞ்சி அவந்திகா த்வாரகை -சந்நிதானம் நினைத்தாலே நன்மை கிட்டும்
புண்ய ஷேத்ரம் செல்வது நீராடல் கதை கேட்பது -அழுக்கு நீங்க
மருந்தும் விருந்தும் -பாகவதமே –
பரிஷித் மோஷம் அடைந்தானே இதை கொண்டே –
அவனை பற்றிய புராணம் பாசுரம் சொல்லியே பொழுதுபோக்கு –
ஏழு நாள்களில் நான் அறிந்த ரிஷிகள் அருளியதை
நாராயணன் -நாரதர் -வியாசர் மூலம் பெற்ற –
நான் =ஆத்மா -அறிந்து இறத்தல் உடல் சம்பந்தம் தானே –
ஆத்மா நித்யம்-ஆனந்த வடிவானவன்-அவனை அனுபவித்து கொண்டு இருக்கவே –
விதை -செடி போல் கர்ம பிறவி –
மீளாத இன்பம் பெற பக்தி ஒன்றே வழி-
சாம்யா பத்தி மோஷம் -அங்கும் சேஷ சேஷி பாவம் உண்டே –
மனம் ஒன்றே வேண்டும் விடுதலை அடைய –
ரஜஸ்  தமஸ் சத்வ முக்குணம் -தாண்டி -பரமாத்வா இடம் மனசை செலுத்தி –
மிருத்யுவுக்கு மிர்த்யு அவனே –
கடித்த பாம்பு கடி உண்ட பாம்பு -திரு அனந்தாழ்வான் ஐ தீகம்-
சொன்ன எனக்கும் மகிழ்வு கேட்ட உனக்கும் மகிழ்வு -சுகர் –

612

கிளி கொத்திய பழம் ஸ்ரீமத் பாகவதம் -உபதேசங்கள் 12 -5 முடிந்தது
இனி 6th அத்யாயம் –
பெருத்த உதவிக்கு நன்றி செலுத்துகிறார் பரிஷித்
பயன் நன்றாலும் -முயல்கின்றேன் உன் தன மொய் கழலுக்கு அன்பையே
நிற்க பாடி -அது போல் –
கைகளை கூப்பி தழு தழுத்த குரலில் -பரிஷித் -அவனை காட்டி கொடுத்தீர்
சங்கை போனது
அறிய பட்டது அனைத்தையும் சொல் வடிவில் காட்டி கொடுத்தீர்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
சாத்விக புராணம் கேட்க்கும் பாக்கியம் பெற்றேன்
யாரை பற்றியும் கவலை இல்லை
யாரும் ஆத்மா நான் தீண்ட முடியாதே
அவன் திருவடியில் சமர்பித்த பின்பு –
இனி ஆனந்தமாக சரீரம் விடுவேன் -ஞானத்தால் -திருவடி காட்டி கொடுத்தீர்
நன்றி கூட சொல்ல முடியாமல் தழு தழுக்க-
உபதேசம் பலித்தது-இனி இங்கு வேலை இல்லை –
அடுத்த ஒருவனுக்கு உபதேசிக்க வேண்டுமே –
விவேக ஞானம் இருப்பதால் பாம்பு வந்ததா சரீரம் போகுமா
நம் சிஷ்யன் -பற்று கூடாதே
கண்ணா புரான் கதை அமுதம் கேட்டோமே –
மனசைஅடக்கி -தர்ப்பம் பரப்பி -அமர
பாம்பு வர -சாபம் படி –
விஷத்துக்கு முறிவு அறிந்தவன் வர -அவனை தஷகன் அனுப்பி -அருகில் வந்து கடிக்க –
விஷ அக்னி உடம்பை பற்ற -ஆத்மா ஜோதிஸ் புறப்பட -புஷ்ப மாரி பொழிய –
விண்ணுலாரும் சீ ரியர்
சர்ப யாகம் பண்ண -தஷகன் இத்ரான் இடம் அடைக்கலம் –
சகேந்திர -ஹோமம் பண்ண -பிள்ளைக்கு நல்லது சொல்ல ரிஷிகள் வர
மீளாத இன்பம் அடைந்து இருக்கிறார் சொல்ல –
யாகம் நிறுத்த சொல்ல -ஒத்து கொண்டான் –
கேட்ப்பதால் வேற்றுமை நீங்கி பகவத் பக்தியால் ஒன்றாக ஆவோம் –
மீண்டும் மீண்டும் நம-வேதங்களை  பிரிப்பதை இனி அருளுகிறார்

12-1/2/3/4/5/6–

12-1-

1/2–çré-çuka uväca
yo ‘ntyaù puraïjayo näma
bhaviñyo bärahadrathaù
tasyämätyas tu çunako

hatvä sväminam ätma-jam
pradyota-saàjïaà räjänaà
kartä yat-pälakaù sutaù
viçäkhayüpas tat-putro
bhavitä räjakas tataù

Çukadeva Gosvämé said: The last king mentioned in our previous
enumeration of the future rulers of the Mägadha dynasty was Puraïjaya, who
will take birth as the descendant of Båhadratha. Puraïjaya’s minister Çunaka
will assassinate the king and install his own son, Pradyota, on the throne. The
son of Pradyota will be Pälaka, his son will be Viçäkhayüpa, and his son will be
Räjaka.

14–mauryä hy ete daça nåpäù
sapta-triàçac-chatottaram
samä bhokñyanti påthivéà
kalau kuru-kulodvaha

O best of the Kurus, these ten Maurya kings will rule the earth for 137 years
of the Kali-yuga.

34–mägadhänäà tu bhavitä
viçvasphürjiù puraïjayaù
kariñyaty aparo varëän
pulinda-yadu-madrakän

There will then appear a king of the Mägadhas named Viçvasphürji, who will
be like another Puraïjaya. He will turn all the civilized classes into low-class,
uncivilized men in the same category as the Pulindas, Yadus and Madrakas

39/40–stré-bäla-go-dvija-ghnäç ca
para-dära-dhanädåtäù
uditästa-mita-präyä
alpa-sattvälpakäyuñaù
asaàskåtäù kriyä-hénä
rajasä tamasävåtäù
prajäs te bhakñayiñyanti
mlecchä räjanya-rüpiëaù

These barbarians in the guise of kings will devour the citizenry, murdering
innocent women, children, cows and brähmaëas and coveting the wives and
property of other men. They will be erratic in their moods, have little strength
of character and be very short-lived. Indeed, not purified by any Vedic rituals
and lacking in the practice of regulative principles, they will be completely
covered by the modes of passion and ignorance

41–tan-näthäs te janapadäs
tac-chéläcära-vädinaù
anyonyato räjabhiç ca
kñayaà yäsyanti péòitäù

The citizens governed by these low-class kings will imitate the character,
behavior and speech of their rulers. Harassed by their leaders and by each
other, they will all suffer ruination.

12-2-

1–çré-çuka uväca
tataç cänu-dinaà dharmaù
satyaà çaucaà kñamä dayä
kälena balinä räjan
naìkñyaty äyur balaà småtiù

Çukadeva Gosvämé said: Then, O King, religion, truthfulness, cleanliness,
tolerance, mercy, duration of life, physical strength and memory will all
diminish day by day because of the powerful influence of the age of Kali.

3–dämpatye ‘bhirucir hetur
mäyaiva vyävahärike
strétve puàstve ca hi ratir
vipratve sütram eva hi

Men and women will live together merely because of superficial attraction,
and success in business will depend on deceit. Womanliness and manliness will
be judged according to one’s expertise in sex, and a man will be known as a
brähmaëa just by his wearing a thread.

6–düre väry-ayanaà térthaà
lävaëyaà keça-dhäraëam
udaraà-bharatä svärthaù
satyatve dhärñöyam eva hi
däkñyaà kuöumba-bharaëaà
yaço ‘rthe dharma-sevanam

A sacred place will be taken to consist of no more than a reservoir of water
located at a distance, and beauty will be thought to depend on one’s hairstyle.
Filling the belly will become the goal of life, and one who is audacious will be
accepted as truthful. He who can maintain a family will be regarded as an
expert man, and the principles of religion will be observed only for the sake of
reputation.

11–triàçad viàçati varñäëi
paramäyuù kalau nåëäm

The maximum duration of life for human beings in Kali-yuga will become
fifty years

18–çambhala-gräma-mukhyasya
brähmaëasya mahätmanaù
bhavane viñëuyaçasaù
kalkiù prädurbhaviñyati

Lord Kalki will appear in the home of the most eminent brähmaëa of
Çambhala village, the great soul Viñëuyaçä.

19/20–açvam äçu-gam äruhya
devadattaà jagat-patiù
asinäsädhu-damanam
añöaiçvarya-guëänvitaù
vicarann äçunä kñauëyäà
hayenäpratima-dyutiù
nåpa-liìga-cchado dasyün
koöiço nihaniñyati

Lord Kalki, the Lord of the universe, will mount His swift horse Devadatta
and, sword in hand, travel over the earth exhibiting His eight mystic opulences
and eight special qualities of Godhead. Displaying His unequaled effulgence and
riding with great speed, He will kill by the millions those thieves who have
dared dress as kings.

23–yadävatérëo bhagavän
kalkir dharma-patir hariù
kåtaà bhaviñyati tadä
prajä-sütiç ca sättviké

When the Supreme Lord has appeared on earth as Kalki, the maintainer of
religion, Satya-yuga will begin, and human society will bring forth progeny in
the mode of goodness.

24–yadä candraç ca süryaç ca
tathä tiñya-båhaspaté
eka-räçau sameñyanti
bhaviñyati tadä kåtam

When the moon, the sun and Båhaspaté are together in the constellation
Karkaöa, and all three enter simultaneously into the lunar mansion Puñyä—at
that exact moment the age of Satya, or Kåta, will begin.

26–ärabhya bhavato janma
yävan nandäbhiñecanam
etad varña-sahasraà tu
çataà païcadaçottaram

From your birth up to the coronation of King Nanda, 1,150 years will pass.

31–yadä devarñayaù sapta
maghäsu vicaranti hi
tadä pravåttas tu kalir
dvädaçäbda-çatätmakaù

When the constellation of the seven sages is passing through the lunar
mansion Maghä, the age of Kali begins. It comprises twelve hundred years of
the demigods.

32–yadä maghäbhyo yäsyanti
pürväñäòhäà maharñayaù
tadä nandät prabhåty eña
kalir våddhià gamiñyati

When the great sages of the Saptarñi constellation pass from Maghä to
Pürväsäòhä, Kali will have his full strength, beginning from King Nanda and
his dynasty.

34–divyäbdänäà sahasränte
caturthe tu punaù kåtam
bhaviñyati tadä nèëäà
mana ätma-prakäçakam

After the one thousand celestial years of Kali-yuga, the Satya-yuga will
manifest again. At that time the minds of all men will become self-effulgent

35–ity eña mänavo vaàço
yathä saìkhyäyate bhuvi
tathä viö-çüdra-vipräëäà
täs tä jïeyä yuge yuge

Thus I have described the royal dynasty of Manu, as it is known on this
earth. One can similarly study the history of the vaiçyas, çüdras and brähmaëas
living in the various ages.

39–kåtaà tretä dväparaà ca
kaliç ceti catur-yugam
anena krama-yogena
bhuvi präëiñu vartate

The cycle of four ages—Satya, Tretä, Dväpara and Kali—continues
perpetually among living beings on this earth, repeating the same general
sequence of events.

12-3-

–samudrävaraëäà jitvä
mäà viçanty abdhim ojasä
kiyad ätma-jayasyaitan
muktir ätma-jaye phalam

“After conquering all the land on my surface, these proud kings forcibly
enter the ocean to conquer the sea itself. What is the use of their self-control,
which is aimed at political exploitation? The actual goal of self-control is
spiritual liberation.”

6–yäà visåjyaiva manavas
tat-sutäç ca kurüdvaha
gatä yathägataà yuddhe
täà mäà jeñyanty abuddhayaù

O best of the Kurus, the earth continued as follows: “Although in the past
great men and their descendants have left me, departing from this world in the
same helpless way they came into it, even today foolish men are trying to
conquer me.

15–yas tüttamaù-çloka-guëänuvädaù
saìgéyate ‘bhékñëam amaìgala-ghnaù
tam eva nityaà çåëuyäd abhékñëaà
kåñëe ‘maläà bhaktim abhépsamänaù

The person who desires pure devotional service to Lord Kåñëa should hear
the narrations of Lord Uttamaùçloka’s glorious qualities, the constant chanting
of which destroys everything inauspicious. The devotee should engage in such
listening in regular daily assemblies and should also continue his hearing
throughout the day

19–santuñöäù karuëä maiträù
çäntä däntäs titikñavaù
ätmärämäù sama-dåçaù
präyaçaù çramaëä janäù

The people of Satya-yuga are for the most part self-satisfied, merciful,
friendly to all, peaceful, sober and tolerant. They take their pleasure from
within, see all things equally and always endeavor diligently for spiritual
perfection.

21–tadä kriyä-tapo-niñöhä
näti-hiàsrä na lampaöäù
trai-vargikäs trayé-våddhä
varëä brahmottarä nåpa

In the Tretä age people are devoted to ritual performances and severe
austerities. They are not excessively violent or very lusty after sensual pleasure.
Their interest lies primarily in religiosity, economic development and regulated
sense gratification, and they achieve prosperity by following the prescriptions of
the three Vedas. Although in this age society evolves into four separate classes,
O King, most people are brähmaëas.

22–tapaù-satya-dayä-däneñv
ardhaà hrasvati dväpare
hiàsätuñöy-anåta-dveñair
dharmasyädharma-lakñaëaiù

In Dväpara-yuga the religious qualities of austerity, truth, mercy and charity
are reduced to one half by their irreligious counterparts—dissatisfaction,
untruth, violence and enmity.

24–kalau tu dharma-pädänäà
turyäàço ‘dharma-hetubhiù
edhamänaiù kñéyamäëo
hy ante so ‘pi vinaìkñyati

kalau—in the age of Kali; tu—and; dharma-pädänäm—of the legs of religion;
turya-aàçaù—one fourth; adharma—of irreligion; hetubhiù—by the principles;
edhamänaiù—which are increasing; kñéyamäëaù—decreasing; hi—indeed;
ante—in the end; saù—that one quarter; api—also; vinaìkñyati—will be
destroyed.

In the age of Kali only one fourth of the religious principles remains. That
last remnant will continuously be decreased by the ever-increasing principles of
irreligion and will finally be destroyed.

31–tasmät kñudra-dåço martyäù
kñudra-bhägyä mahäçanäù
kämino vitta-hénäç ca
svairiëyaç ca striyo ‘satéù

Because of the bad qualities of the age of Kali, human beings will become
shortsighted, unfortunate, gluttonous, lustful and poverty-stricken. The
women, becoming unchaste, will freely wander from one man to the next.

37–pitå-bhrätå-suhåj-jïätén
hitvä saurata-sauhådäù
nanändå-çyäla-saàvädä
dénäù straiëäù kalau naräù

In Kali-yuga men will be wretched and controlled by women. They will
reject their fathers, brothers, other relatives and friends and will instead
associate with the sisters and brothers of their wives. Thus their conception of
friendship will be based exclusively on sexual ties.

38–çüdräù pratigrahéñyanti
tapo-veñopajévinaù
dharmaà vakñyanty adharma-jïä
adhiruhyottamäsanam

Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their
livelihood by making a show of austerity and wearing a mendicant’s dress.
Those who know nothing about religion will mount a high seat and presume to
speak on religious principles.

47–yathä hemni sthito vahnir
durvarëaà hanti dhätu-jam
evam ätma-gato viñëur
yoginäm açubhäçayam

yathä—just as; hemni—in gold; sthitaù—situated; vahniù—fire;
durvarëam—the discoloration; hanti—destroys; dhätu-jam—due to the taint of
other metals; evam—in the same way; ätma-gataù—having entered the soul;
viñëuù—Lord Viñëu; yoginäm—of the yogés; açubha-äçayam—the dirty mind.

Just as fire applied to gold removes any discoloration caused by traces of
other metals, Lord Viñëu within the heart purifies the minds of the yogés.

49–tasmät sarvätmanä räjan
hådi-sthaà kuru keçavam
mriyamäëo hy avahitas
tato yäsi paräà gatim

tasmät—therefore; sarva-ätmanä—with all endeavor; räjan—O King;
hådi-stham—within your heart; kuru—make; keçavam—Lord Keçava;
mriyamäëaù—dying; hi—indeed; avahitaù—concentrated; tataù—then;
yäsi—you will go; param—to the supreme; gatim—destination.

Therefore, O King, endeavor with all your might to fix the Supreme Lord
Keçava within your heart. Maintain this concentration upon the Lord, and at
the time of death you will certainly attain the supreme destination.

50–mriyamäëair abhidhyeyo
bhagavän parameçvaraù
ätma-bhävaà nayaty aìga
sarvätmä sarva-saàçrayaù

My dear King, the Personality of Godhead is the ultimate controller. He is
the Supreme Soul and the supreme shelter of all beings. When meditated upon
by those about to die, He reveals to them their own eternal spiritual identity

12-4-

2–catur-yuga-sahasraà tu
brahmaëo dinam ucyate
sa kalpo yatra manavaç
caturdaça viçäm-pate

One thousand cycles of four ages constitute a single day of Brahmä, known
as a kalpa. In that period, O King, fourteen Manus come and go.

3–tad-ante pralayas tävän
brähmé rätrir udähåtä
trayo lokä ime tatra
kalpante pralayäya hi

After one day of Brahmä, annihilation occurs during his night, which is of
the same duration. At that time all the three planetary systems are subject to
destruction.

4–eña naimittikaù proktaù
pralayo yatra viçva-såk
çete ‘nantäsano viçvam
ätmasät-kåtya cätma-bhüù

This is called the naimittika, or occasional, annihilation, during which the
original creator, Lord Näräyaëa, lies down upon the bed of Ananta Çeña and
absorbs the entire universe within Himself while Lord Brahmä sleeps.

8–sämudraà daihikaà bhaumaà
rasaà säàvartako raviù
raçmibhiù pibate ghoraiù
sarvaà naiva vimuïcati

The sun in its annihilating form will drink up with its terrible rays all the
water of the ocean, of living bodies and of the earth itself. But the devastating
sun will not give any rain in return.

13–tata ekodakaà viçvaà
brahmäëòa-vivaräntaram

At that time, the shell of the universe will fill up with water, forming a
single cosmic ocean.

14–tadä bhümer gandha-guëaà
grasanty äpa uda-plave
grasta-gandhä tu påthivé
pralayatväya kalpate

As the entire universe is flooded, the water will rob the earth of its unique
quality of fragrance, and the element earth, deprived of its distinguishing
quality, will be dissolved.

31–yathä hiraëyaà bahudhä saméyate
nåbhiù kriyäbhir vyavahära-vartmasu
evaà vacobhir bhagavän adhokñajo
vyäkhyäyate laukika-vaidikair janaiù

According to their different purposes, men utilize gold in various ways, and
gold is therefore perceived in various forms. In the same way, the Supreme
Personality of Godhead, who is inaccessible to material senses, is described in
various terms, both ordinary and Vedic, by different types of men.

32–yathä ghano ‘rka-prabhavo ‘rka-darçito
hy arkäàça-bhütasya ca cakñuñas tamaù
evaà tv ahaà brahma-guëas tad-ékñito
brahmäàçakasyätmana ätma-bandhanaù

Although a cloud is a product of the sun and is also made visible by the sun,
it nevertheless creates darkness for the viewing eye, which is another partial
expansion of the sun. Similarly, material false ego, a particular product of the
Absolute Truth made visible by the Absolute Truth, obstructs the individual
soul, another partial expansion of the Absolute Truth, from realizing the
Absolute Truth.0–saàsära-sindhum ati-dustaram uttitérñor
nänyaù plavo bhagavataù puruñottamasya
lélä-kathä-rasa-niñevaëam antareëa
puàso bhaved vividha-duùkha-davärditasya

For a person who is suffering in the fire of countless miseries and who
desires to cross the insurmountable ocean of material existence, there is no
suitable boat except that of cultivating devotion to the transcendental taste for
the narrations of the Supreme Personality of Godhead’s pastimes.

41–puräëa-saàhitäm etäm
åñir näräyaëo ‘vyayaù
näradäya purä präha
kåñëa-dvaipäyanäya saù

Long ago this essential anthology of all the Puräëas was spoken by the
infallible Lord Nara-Näräyaëa Åñi to Närada, who then repeated it to Kåñëa
Dvaipäyana Vedavyäsa.

12-5-

–na bhaviñyasi bhütvä tvaà
putra-pauträdi-rüpavän
béjäìkura-vad dehäder
vyatirikto yathänalaù

You will not take birth again in the form of your sons and grandsons, like a
sprout taking birth from a seed and then generating a new seed. Rather, you are
entirely distinct from the material body and its paraphernalia, in the same way
that fire is distinct from its fuel.

4–svapne yathä çiraç-chedaà
païcatvädy ätmanaù svayam
yasmät paçyati dehasya
tata ätmä hy ajo ‘maraù

In a dream one can see his own head being cut off and thus understand that
his actual self is standing apart from the dream experience. Similarly, while
awake one can see that his body is a product of the five material elements.
Therefore it is to be understood that the actual self, the soul, is distinct from
the body it observes and is unborn and immortal.

7–snehädhiñöhäna-varty-agnisaàyogo
yävad éyate
tävad dépasya dépatvam
evaà deha-kåto bhavaù
rajaù-sattva-tamo-våttyä
jäyate ‘tha vinaçyati

A lamp functions as such only by the combination of its fuel, vessel, wick
and fire. Similarly, material life, based on the soul’s identification with the
body, is developed and destroyed by the workings of material goodness, passion
and ignorance, which are the constituent elements of the body.

8–na taträtmä svayaà-jyotir
yo vyaktävyaktayoù paraù
äkäça iva cädhäro
dhruvo ‘nantopamas tataù

The soul within the body is self-luminous and is separate from the visible
gross body and invisible subtle body. It remains as the fixed basis of changing
bodily existence, just as the ethereal sky is the unchanging background of
material transformation. Therefore the soul is endless and without material
comparison.

11/12–ahaà brahma paraà dhäma
brahmähaà paramaà padam
evaà samékñya cätmänam
ätmany ädhäya niñkale
daçantaà takñakaà päde
lelihänaà viñänanaiù
na drakñyasi çaréraà ca
199
viçvaà ca påthag ätmanaù

You should consider, “I am nondifferent from the Absolute Truth, the
supreme abode, and that Absolute Truth, the supreme destination, is
nondifferent from me.” Thus resigning yourself to the Supreme Soul, who is
free from all material misidentifications, you will not even notice the snake-bird
Takñaka when he approaches with his poison-filled fangs and bites your foot.
Nor will you see your dying body or the material world around you, because
you will have realized yourself to be separate from them.

13–etat te kathitaà täta
yad ätmä påñöavän nåpa
harer viçvätmanaç ceñöäà
kià bhüyaù çrotum icchasi

Beloved King Parékñit, I have narrated to you the topics you originally
inquired about—the pastimes of Lord Hari, the Supreme Soul of the universe.
Now, what more do you wish to hear?

12-6-

2–räjoväca
siddho ‘smy anugåhéto ‘smi
bhavatä karuëätmanä
çrävito yac ca me säkñäd
anädi-nidhano hariù

Mahäräja Parékñit said: I have now achieved the purpose of my life, because
a great and merciful soul like you has shown such kindness to me. You have
personally spoken to me this narration of the Supreme Personality of Godhead,
Hari, who is without beginning or end.

3–näty-adbhutam ahaà manye
mahatäm acyutätmanäm
ajïeñu täpa-tapteñu
bhüteñu yad anugrahaù

I do not consider it at all amazing that great souls such as yourself, whose
minds are always absorbed in the infallible Personality of Godhead, show mercy
to the foolish conditioned souls, tormented as we are by the problems of
material life.

4–puräëa-saàhitäm etäm
açrauñma bhavato vayam
yasyäà khalüttamaù-çloko
bhagavän anavarëyate

I have heard from you this Çrémad-Bhägavatam, which is the perfect
summary of all the Puräëas and which perfectly describes the Supreme Lord,
Uttamaùçloka.

5–bhagavaàs takñakädibhyo
måtyubhyo na bibhemy aham
praviñöo brahma nirväëam
abhayaà darçitaà tvayä

My lord, I now have no fear of Takñaka or any other living being, or even of
repeated deaths, because I have absorbed myself in that purely spiritual
Absolute Truth, which you have revealed and which destroys all fear.

9/10–parékñid api räjarñir
ätmany ätmänam ätmanä
samädhäya paraà dadhyäv
aspandäsur yathä taruù

präk-küle barhiñy äséno
gaìgä-küla udaì-mukhaù
brahma-bhüto mahä-yogé
niùsaìgaç chinna-saàçayaù

Mahäräja Parékñit then sat down on the bank of the Ganges, upon a seat
made of darbha grass with the tips of its stalks facing east, and turned himself
toward the north. Having attained the perfection of yoga, he experienced full
self-realization and was free of material attachment and doubt. The saintly King
settled his mind within his spiritual self by pure intelligence and proceeded to
meditate upon the Supreme Absolute Truth. His life air ceased to move, and he
became as stationary as a tree.

16–janmejayaù sva-pitaraà
çrutvä takñaka-bhakñitam
yathäjuhäva sankruddho
nägän satre saha dvijaiù

Hearing that his father had been fatally bitten by the snakebird, Mahäräja
Janamejaya became extremely angry and had brähmaëas perform a mighty
sacrifice in which he offered all the snakes in the world into the sacrificial fire

19–taà gopäyati räjendra
çakraù çaraëam ägatam
tena saàstambhitaù sarpas
tasmän nägnau pataty asau

The brähmaëas replied: O best of kings, the snake Takñaka has not fallen
into the fire because he is being protected by Indra, whom he has approached
for shelter. Indra is holding him back from the fire.

22–iti brahmoditäkñepaiù
sthänäd indraù pracälitaù
babhüva sambhränta-matiù
sa-vimänaù sa-takñakaù

When Lord Indra, along with his airplane and Takñaka, was suddenly
thrown from his position by these insulting words of the brähmaëas, he became
very disturbed.

23–taà patantaà vimänena
saha-takñakam ambarät
vilokyäìgirasaù präha
räjänaà taà båhaspatiù

Båhaspati, the son of Aìgirä Muni, seeing Indra falling from the sky in his
airplane along with Takñaka, approached King Janamejaya and spoke to him as
follows.

24–naiña tvayä manuñyendra
vadham arhati sarpa-räö
anena pétam amåtam
atha vä ajarämaraù

O King among men, it is not fitting that this king of snakes meet death at
your hands, for he has drunk the nectar of the immortal demigods.
Consequently he is not subject to the ordinary symptoms of old age and death.

32–paraà padaà vaiñëavam ämananti tad
yan neti netéty atad-utsisåkñavaù
visåjya daurätmyam ananya-sauhådä
hådopaguhyävasitaà samähitaiù

Those who desire to give up all that is not essentially real move
systematically, by negative discrimination of the extraneous, to the supreme
position of Lord Viñëu. Giving up petty materialism, they offer their love
exclusively to the Absolute Truth within their hearts and embrace that highest truth in fixed meditation.

33–ta etad adhigacchanti
viñëor yat paramaà padam
ahaà mameti daurjanyaà
na yeñäà deha-geha-jam

Such devotees come to understand the supreme transcendental situation of
the Personality of Godhead, Lord Viñëu, because they are no longer polluted by
the concepts of “I” and “my,” which are based on body and home.

40/41–çåëoti ya imaà sphoöaà
supta-çrotre ca çünya-dåk
yena väg vyajyate yasya
vyaktir äkäça ätmanaù
sva-dhämno brähmaëaù säkñäd
väcakaù paramätmanaù
sa sarva-mantropaniñad
veda-béjaà sanätanam

This oàkära, ultimately nonmaterial and imperceptible, is heard by the
Supersoul without His possessing material ears or any other material senses.
The entire expanse of Vedic sound is elaborated from oàkära, which appears
from the soul, within the sky of the heart. It is the direct designation of the
self-originating Absolute Truth, the Supersoul, and is the secret essence and
eternal seed of all Vedic hymns.

42–tasya hy äsaàs trayo varëä
a-kärädyä bhågüdvaha
dhäryante yais trayo bhävä
guëa-nämärtha-våttayaù

Oàkära exhibited the three original sounds of the alphabet—A, U and M.
These three, O most eminent descendant of Bhågu, sustain all the different
threefold aspects of material existence, including the three modes of nature, the
names of the Åg, Yajur and Säma Vedas, the goals known as the Bhür, Bhuvar
and Svar planetary systems, and the three functional platforms called waking
consciousness, sleep and deep sleep.

43–tato ‘kñara-samämnäyam
asåjad bhagavän ajaù
antasthoñma-svara-sparçahrasva-
dérghädi-lakñaëam

From that oàkära Lord Brahmä created all the sounds of the alphabet—the
vowels, consonants, semivowels, sibilants and others—distinguished by such
features as long and short measure.

47–kñéëäyuñaù kñéëa-sattvän
durmedhän vékñya kälataù
vedän brahmarñayo vyasyan
hådi-sthäcyuta-coditäù

Observing that people in general were diminished in their life span, strength
and intelligence by the influence of time, great sages took inspiration from the
Personality of Godhead sitting within their hearts and systematically divided
the Vedas.

50–åg-atharva-yajuù-sämnäà
räçér uddhåtya vargaçaù
catasraù saàhitäç cakre
mantrair maëi-gaëä iva

Çréla Vyäsadeva separated the mantras of the Åg, Atharva, Yajur and Säma
Vedas into four divisions, just as one sorts out a mixed collection of jewels into
piles. Thus he composed four distinct Vedic literatures.

52/53–pailäya saàhitäm ädyäà
bahvåcäkhyäà uväca ha
vaiçampäyana-saàjïäya
nigadäkhyaà yajur-gaëam
sämnäà jaiminaye präha
tathä chandoga-saàhitäm
atharväìgiraséà näma
sva-çiñyäya sumantave

Çréla Vyäsadeva taught the first saàhitä, the Åg Veda, to Paila and gave this
collection the name Bahvåca. To the sage Vaiçampäyana he spoke the collection
of Yajur mantras named Nigada. He taught the Säma Veda mantras, designated
as the Chandoga-saàhitä, to Jaimini, and he spoke the Atharva Veda to his dear
disciple Sumantu.

64/65–devaräta-sutaù so ‘pi
charditvä yajuñäà gaëam
tato gato ‘tha munayo
dadåçus tän yajur-gaëän
yajüàñi tittirä bhütvä
tal-lolupatayädaduù
taittiréyä iti yajuùçäkhä
äsan su-peçaläù

Yäjïavalkya, the son of Devaräta, then vomited the mantras of the Yajur
Veda and went away from there. The assembled disciples, looking greedily upon
these yajur hymns, assumed the form of partridges and picked them all up.
These divisions of the Yajur Veda therefore became known as the most
beautiful Taittiréya-saàhitä, the hymns collected by partridges [tittiräù].

72–atha ha bhagavaàs tava caraëa-nalina-yugalaà tri-bhuvana-gurubhir
abhivanditam aham ayäta-yäma-yajuñ-käma upasaräméti.

Therefore, my lord, I am prayerfully approaching your lotus feet, which are
honored by the spiritual masters of the three worlds, because I hope to receive
from you mantras of the Yajur Veda unknown to anyone else.

74–yajurbhir akaroc chäkhä
daça païca çatair vibhuù
jagåhur väjasanyas täù
käëva-mädhyandinädayaù

From these countless hundreds of mantras of the Yajur Veda, the powerful
sage compiled fifteen new branches of Vedic literature. These became known as
the Väjasaneyi-saàhitä because they were produced from the hairs of the
horse’s mane, and they were accepted in disciplic succession by the followers of
Käëva, Mädhyandina and other åñis.

 

கிருஷ்ணன் கதை அமுதம் -597-603..

May 5, 2012

597

சேஷன் — -சேஷத்வம் உள்ளவன் -அடியவர் இறைவனுக்கு பெருமை சேர்க்க தான் –
சேஷத்வம் சித்தி பயன்-தொண்டு புரிந்தால் தான் -உடலால் கைகளால் வாயால் -எப்படியாவது தொண்டு
மதிள் கட்டி பாசுரங்கள் அருளி திருமங்கை ஆழ்வார் –
இறை உள்ளில் ஒடுங்கே -உள்ளம் கொண்டு –
விக்ரகம் பிரதிஷ்டை செய்து அரசன்-
மூ உலகும் ஆளுவான் -கோவில் கட்டுபவன்
நன்கு நித்ய பூஜை ஏற்பாடு செய்பவன் சத்யா
மூன்றையும் செய்பவன் அவனை அடைகிறான்
-பக்தி இருப்பவன் பூஜிக்கிறான் -அது பக்தி  மேலும் வளர செய்யும் –
பூஜை செய்பவன் பூஜை செய்ய தூண்டுபவன் எனக்கு பிரியம்
28 அத்யாயம் -பரத்வம் -விளக்குகிறான் –
பற்றுதல் இன்றி -இறை அன்பர் சிறந்த பண்பை மட்டுமே பேச வேண்டும் –
கண்கள் அவன் பக்கம் தான் வைக்க வேண்டும் -மாயை உலகம் பிரகிருதி -மறைக்கும் நம் புத்தியை –
மனம் புத்தி விலக காரணம் பிரகிருதி -சூர்யனை மறைக்கும் மேகம் போல் –
கயிறு -பாம்பு பிரமிக்கிறோம் -இரண்டும் உண்மை -மருண்டு சொல்வது
தெளிவு இன்மை -உலகம் குற்றம் சொல்லாதே உன் பார்வையில் தான் -உத்தவருக்கு உபதேசிக்கிறார் கண்ணன் –
உலகம் படைத்தவன் அவன்-அவனில் வேறுபட்டது இல்லை -அனைத்திலும் வியாபித்து இருக்கிறான்
சர்வம் கல்மிதம் பிரம -அனைத்தையும் பார்த்து அவனை பார்க்க அறிந்து கொள் தத்வம் அஸி -ஸ்வேதகேது-
புகழ்வு இகழ்வு கவலை விட்டு அவன் ஒருவனே இலக்கு –
அனைத்தும் அறிவுடன் கூடியது அறிந்து கொள் –
அனுமானம் -குடம் அழிவது கொண்டு அனைத்தும்
ஆத்மா -உள்ளது சாஸ்திரம் கொண்டே
இறைவனை -ஆத்மா அனுபவம் ஒன்றால்-சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் –
சம்சாரம் பெரும் கடல் உண்மையாக என்னது -கேட்கிறார் உத்தவர் –
ஆத்மா நிர் குணம்-மறைக்கபடாதவர்
விறகில் நெருப்பு போல் –
ஆத்மா சம்சாரத்தில் -உடல் உடன் தொடர்பால் –
பவ சாகரம்-தேகதோடதா ஆத்மா உடையதா-எப்படி போக்குவது
கண்ணன் எளிய பதில் சொல்கிறார் –

598

வேதாந்த சாரம் பாகவதம்-பழ ரசம் போல் இன்பம் படலாம்
கிளி கொத்திய பழம்-11 -28   அத்யாயம் –
கர்மம் அடியாக பிறவி-இழந்து இழந்தோம் என்றைளவும் இன்றிகே –
சிறை பட்டு உடலே தான் என்ற பிரேமை –
தூக்கம் சோர்வு அனைத்தும் உடலுக்கு -ஆத்மாவையும் பாதிக்கும்
இது நாம் இல்லை என்ற எண்ணம்  வலுக்க –
பாபங்கள் போககர்மா செய்ய வேண்டும் -விவேக ஞானம் வளர்க்க வேண்டும் –
சம்சாரம் நம்மை சுத்தி தான் உள்ளது –
அவனுக்கு தொண்டன் ஞானமே ஆனந்தமே உருவானவன்
நினைக்க நினைக்க தான் கவலை பயம் சோகம் விலகும்
அவன் ரஷகன் உறுதி வர வேண்டும்
கர்மம் தொலைந்து பிறவி நீத்து –
கர்மம் தொலைக்க நித்ய வர்ண ஆஸ்ரம கர்மா செய்ய வேண்டும் –
நானே உடல் பிராணன் மனம் புலன்கள் -தெருள் இன்றி மருள் கொண்டு –
சொப்பனம் கண்டு பயந்து எழுந்து பயம் துக்கம் போனது போல் -நிம்மதி
உடலே ஆத்மா -நினைவு கனவு போல் -இறைவன் தொண்டன்நிஜ நினைவுக்கு வர வேண்டும் –
கனவில் ஆனந்தம் பட்டாலும் -பிரேமை தானே –
யதார்த்தம் உண்மை நிலைக்கு வர வேண்டும் –
சோகம் -ஹர்ஷம்-லோபம் உடலுடன் சம்பந்தம் என்று உணர வேண்டும் –
அறிவு சுடர் -கத்தி கோடரி கொண்டு -தீய செடி வெட்டி தள்ள வேண்டும்
ஞானம் நெருப்பால் போக்கி –
ஞானம் ஆச்சார்யா உபதேசத்தால் பெறுவோம் –
பொன்னால் சங்கிலி மோதிரம்-
மண்ணால் குடம் பொம்மை
அவனே உலகம் முழுவதும் -அனைத்தும் பிரமம் தானே
எதை பார்த்தாலும் அவனை பார்க்க வேண்டும் –
தோற்றும்-நம்பாதே-
ஆகாசம் -காற்று மேகம் -விமானம் -சம்பந்தம் இல்லையே
அது போல் பற்று இன்றி இருக்க வேண்டும்
பக்தன் இதை புரிந்து கொண்டு எதிலும் ஒட்டாமல் இருக்கிறான்
மனசில் அழுக்கு இன்றி -பக்தி தான் இதை செய்யும் –
பக்தன் சம்சாரத்தில் பிரகிருதி மண்டலத்தில் இருந்தாலும்
சூர்யன் உதித்து இருள் பனி போகும் போல்
முதலிலே இருந்தது சூர்யன் வந்ததும் அறிகிறோம்
ஆத்மா -பாபம் மேக மூட்டம் -குழப்பம் -நீங்கும் பக்தி ஒன்றாலே
யோகம் ஆசனம் பிராணாயாமம் செய்து என்னை அடைகிறார்கள்
பற்று அனைத்திலும் விட்டு அவன் மேல் பற்று வைத்து சம்சாரம் நீக்குகிறான்

599

கலி யுகத்தில் பாகவத புராணத்திலே கண்ணன் வசிக்கிறான்
11 -29 அத்யாயம் பார்க்கிறோம்
உபதேசம் இத்துடன் முடிகிறது
பத்ரி சென்று அழகனந்தா நீராடி முக்தி பெற சொல்கிறான் கண்ணன்
அடுத்து கண்ணன் தன்னுடை  ஜோதி செல்வது –
கண்ணில் மை தீட்டுவது போல்-கிணற்று தண்ணீர் தேத்தாம் கோட்டை போல்
மனசை -கலக்கம் தீர்க்க என்ன செய்ய வேண்டும் -சாரமான உபதேசம் –
கண்ணா உன்னை பார்க்க பார்க்க -தேவர்கள்-அவர்கள் கிரீடம் மணி ரத்னம் உன் ஸ்ரீ பாதத்தில் –
திருவடி சிகப்பு -என்ன காரணம்-ஸ்ரீ பாதம் சேவை நிறைய இடங்களில்
பாதுகா சகஸ்ரம்-மகாத்மயம் சொல்லும் –
இதில் காதல் வந்தவன் வேறு ஒன்றை நினைக்க மாட்டான் –
ஆறு எனக்கு நின் பதமே சரணாக தந்து ஒளிந்தாய்
என்குற்றேனும் அல்லேன்
உலகம் அளந்த பொண்ணாடி
செற்றாமரை அடி -பொற்றாமரை அடி
லோக விக்ராந்த சரணவ் –
கெட்டியாக பிடிக்கும் பாக்கியம் கிட்ட வேண்டும் –
குரங்குகள் அணில்கள் பெற்றனவே –
உன் மதம் எது -சொல்லி விட்டு போ –
ஸ்ரத்தையால் -கடைபிடித்தால் வெல்லலாம் –
ஹந்த -கந்த -ரிஷிகள் மூலம் சொன்னாலும் மயக்கம் போகவில்லையே
கயிறு போட்டு தூகுகிறான்
இரண்டு கருத்து தான்
செயலை அவன் இடம் சமர்பித்து செய் –
அவனே செலுத்துகிறான்
காயேன் வாச-சகலம் நாராயணா  யேது சமர்ப்பயாமி
ஆட்டுவிக்கிறான்
நாம் கருவி
புண்ய தேசம் யாத்ரை -கண்ணன்  கதை கேட்டு
உத்சவம் செய்து -இறை அன்பர் சேர்க்கை –
இதி சர்வாணி பூதானி-எல்லா வற்றிலும் என்னை பார் அனைத்திலும் என்னை பார்
யோமாம் பச்யதி -என்னை எல்லா வற்றிலும் -எல்லாமும் நானே சம தாசன்
கர்மம் விடாமல் செய்து இந்த பலன் கிட்டும் –
இரண்டே கருத்து தான் உஜ்ஜீவிக்க வழி
இதை உபதேசிப்பவன் அனுஷ்டிப்பவன் எனக்கு பிரியமானவன் –
ரகஸ்யமான கருத்து -நாஸ்திகன் நேர்மை இல்லாதவன் பக்தி பணிவு இல்லாதவனுக்கு சொல்லாதே –
பக்தாஞ்சலி உத்தவர் -பேசுகிறார்
திருவடிகளை தலை கொண்டு தீண்டி
மோகம் போனது -சூர்யன் இருட்டை போக்குவது போல்
அச்சுத பானு -தெளிவு அடைந்தேன் –
பத்ரிகாச்ரமம் சென்று உன்னை த்யாநிப்பேன் என்கிறார் –
600

கீதை -பக்தனுக்கு சொல்பவன் என்னையே அடைகிறான் –
சரம ஸ்லோகம் -அனைத்தும் விட்டு என்னையே அணைத்து தர்மமாக பற்று –
சோகம் போக்குகிறான்-பாபம் நீக்கி -வெளியேற வழி கூறுகிறான்
கண்ணன் உபதேசம் கீதையில்
பாகவதம் அவன் செஷ்டிதம் சொல்லும்
உத்தவர் உபதேசம் பார்த்தோம் -பக்தி சாஸ்திரம் –
சாரம்-எல்லார் இடத்திலும் என்னை பார்க்க கற்றுக் கொள் யோகி
அனைத்துக்கும் உள் நான் ஆட்டுவிப்பவன் நான் –
அனைத்தும் அவன் இடம்சமர்ப்பித்து உஜ்ஜீவிகலாம் –
மூன்று வித த்யாகம்-
உத்தவர் தெளிந்தார் -நமோஸ்துதே -சரணாம் போஜே –
ஆசை விட்டு -நீ சொன்ன இடத்துக்கு சென்று
சுவாமி உடையவர் -கேள்வி கேட்காமல் நீங்காத பக்தி மட்டும் அருள்
எங்கு இருந்தாலும் -உள்ளதோடு நீ இருக்க வேண்டும்
அருள் பக்தனுக்கு உண்டு
பக்தனுக்குள் இருக்க ஆசை -தவிப்பு அவனுக்கு
நீண்ட உபதேசம் முடித்து
பத்ரிகாச்ரமம் சென்று -அங்கேயே நித்யம் வாசம் செய்கிறான் கண்ணன் –
ஆசை நீக்கி -கங்கை அலகனந்தா-ரம்மியகாட்சி –
தவ திருகோலம்-
அங்கு சென்று த்யானிக்க அருளுகிறான் –
தழுதழுத குரலுடன்வலம் வந்து திருவடியில் சிரம் வைத்து –
கொக்குவாயும் படு கண்ணியம் போல் -பரதன்-சித்ரா கூடம்
விபீஷணன் கடல் கரையில் போல் -இது தான் பேர் இன்பம்
நின் செம் பா பாத பறபு  என் தலை மேல் ஓலை -ஆழ்வார் போல் –
அறிவாகிய அமுதம் கேட்டோம் -ஞான அமிர்தம் -பக்தி பாற் கடலை கடைந்து –
ஆழ்ந்த பக்தி காதல் பண்ணி பண்ணி கேட்டோம் –
பரிஷித் ஆவல் இன்னம்-30 அத்யாயம் -மேல்கொண்டு த்வாரகை என்ன ஆனது
கண்ணன் திருமேனி என்ன செய்தான் –
யது குலம் விச்வமித்ரர் சாபம் உலக்கை
கோரை புல்
இரும்பு வேடன் கதை பார்த்தோம் –
இறுதி பகுதி கேட்க ஆசை -சுதர்ம ராஜ சபை கண்ணன் இருக்க
துர் நிமித்தம் -யாதவர்கள் புறப்பட்டு -சரஸ்வதி நதி ஓடும் பிரவாஸ ஷேத்ரம் போவோம் –
ஆணை இட்டான் -அனைவரும் பிரவாஸ ஷேத்ரம் போக -மேலே பார்ப்போம் –
6o1

602

சூட்டு நன் மாலைகள் -திரு விருத்தம் -ஆராதனம் செய்து கொண்டு இருக்கும் பொழுது தூபம் –
புகை மண்டலம்-கண்ணன் திரு அவதாரம் செஷ்டிதம் எல்லாம் -முடித்து திரும்பினான் –
தூபம் அப்பொழுதும் காட்டி கொண்டு இருக்க -காலம் தத்வம் அங்கு இல்லையே -கொலோசாச்சாதே அங்கு –
அன்புடன் பூஜை -திரு உள்ளத்தில் சங்கல்பித்து கொண்டு –
பிரவாஸ தீர்த்தம் -திரு குளம் -பாதி சயன நிலை -ஸ்ரீ வத்சம் திரு மருவுடன் –
பொன் சரிகை மேய்ந்த பட்டாடை தரித்து -மந்தகாச திரு அதரம் -திரு குழல்-கருத்த –
புண்டரீக தாமரை கண்கள்/மகர குண்டலங்கள் -இருபால் ஆட -இருவராய் வந்தார் –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -கண்டவாற்றால் தேவதேவன் –
தன்னுடை சோதிக்கு எழுந்து அருளும் பொழுது யாரும் கூட இல்லையே
சராசரங்கள் அனைத்தையும் நல பாலுக்கு உய்த்தனன் ஸ்ரீ ராம பிரான் –
வலது திருவடி மடித்து -இரண்டு திருவடி -மேல் போட்டு கொண்டு –
ரிஷிகள் சாபம் -மரம் பின் இருந்து பார்த்து -பாதம் பார்த்து மான் முகம் போல் கண்ணில் பட –
ஜரன் வேடன்-அம்பின் நுனியில் இரும்பு துண்டு -மீன்-செம்படவன்-வேடன் -மூலம் வந்தது –
இடது திருபாதம் கட்டை விரலில் பட -புருஷோத்தமன்-பயந்து ஓடி வர
மன்னிப்பு கேட்கிறான் -அஞ்ஞானம் இருள் விலகும் யாதவ அச்சுத பானு -அஸ்தமிக்க செய்தேனே -என்ன பாப செயல் –
சிஷி தண்டனை கொடு -சிஷ்யனாக ஏற்று கொள் –
கணன் பேச -கவலை படாதே -என் விருப்பம் படி நடந்தாய் சொர்க்கம் கிட்டும் –
இச்சை படி சரீரம் எடுத்து கொள்ளும் கண்ணன் -பிரதட்ஷினம் செய்து பொன் மாயா விமானம் ஏறி
சொர்க்கம் சென்றான்
தாருகன் -தேரோட்டி -வர -துளசி வாசனை -கண்டு –
பரிஷித் -இடம் -த்வாரகையில் யாரும் இருக்க வேண்டாம் –
பொன்மயமான திரு தேர் கருட கோடி உடன்
ஆழி எழ -ஜய ஜெய சங்கம் நாதத்துடன் –
தாரகன் இடம் உபதேசிக்கிறான் கண்ணன் –
பந்துகள் அனைவரும் த்வாரகை இருக்க வேண்டாம் சமுத்ரம் விழுங்கும்
இந்திர பிரஸ்தம் போகட்டும் -அர்ஜுனன் காப்பான் என்றான் –
தாருகன் விடை பெற்று போக -ஏகாந்தமாக -தன்னுடைஜோதிக்கு எழுந்து அருள –

603-

ஏஷ நாராயண ஸ்ரீ மான் -பகலோலக்கம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -எண்ணிறைந்த நித்யர் முக்தர் சூழ்ந்து இருக்க
ஸ்ரீ தேவிமாருடன் -அவனே ஸ்ரீ யபதி -நம் போன்றவர் உஜ்ஜீவிக்க பக்தி உபதேசிக்க -இங்கு வந்து
திருப்பாற்கடல் சயனம் -மதுரையில் அவதரித்து
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -உபதேசித்தும் –
11 -31 அத்யாயம் உள்ளோம் –
பிரமன்  சரஸ்வதி ருத்ரன் பார்வதி இந்த்ரன் ரதி தேவி கூட -தேர்கள் கூட்டம் –
ஸ்ரீ வைகுண்டம் திரும்புவதை பார்க்க -வாய் விட்டு பாடி ஆட –
சொலி பாடி -அரங்கன் முடியம் சேறு சென்னிக்கு அணிவனே
பூ மாரி பொழிய –
தன்னுடைய பெருமையே நினைத்து பார்க்கிறான் கண்ணன் –
ஸ்வ செஷிடிதம் -மே திவ்யம் –
முனியே நான்முகனே முக்கண் அப்பா-இனி உன்னை போகல ஒட்டேன் -ஆழ்வார்
பொல்லா கனி வாய் தாமரை கண்ணன் –
திருமேனி -ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் -உடனே திரும்ப -அப்ராக்ருத திரு மேனி –
பூத உடல் இல்லை திவ்ய மங்கள பஞ்ச சக்தியால் ஆன திரு மேனி –
பூமியில் இருப்போர் வருந்த ஆகாசத்தில் இருப்போர் மகிழ
கீதை பாகவதம் என்றுமே உண்டே
துந்துபி முழங்க -ஸ்ரீ தபஸ் அனைத்தும் பின்னே போக –
கலி பிறந்ததால் –
மின்னல் வெட்டினது போல் திரும்பி போக –
கை தேர்ந்த நாட்டிய நடிகன் போல் திரும்ப –
பரிஷித் உனக்கு உயிர்/வைதிகன் பிள்ளைகள்/ஆச்சார்யர் சாந்தீபன் பிள்ளை
திரு மேனி வைக்காமல் போக -சரீரம் அஸ்தரம் உணர்த்த
சரித்ரம் நினைப்பவர் படிக்கிறவர் -பலன் சொல்கிறார்
சாதி கிட்டும் -பின்பு அவன் திருவடி கிட்டும் –
தாருகன் திரும்பி சொல்ல -துவாரைகையே சோகம்
தேவகி ரோகினி அனைவரும் -அர்ஜுனன் மிகுந்த சோகம்
வஜ்ரன் -இந்திர ப்ரச்னத்தில் பட்டம் கட்டி வைத்தான் –
கண்ணன் இல்லாத உலகம் வேண்டாம் -தருமனும் அர்ஜுனனும் பரிஷித் பட்டம் கட்டி போக
சரித்ரம் கேட்பவன் பரம பக்தன் ஆவான் –

11/28/29/30/31

28–

14–yathä hy apratibuddhasya
prasväpo bahv-anartha-bhåt
sa eva pratibuddhasya
na vai mohäya kalpate

Although while dreaming a person experiences many undesirable things,
upon awakening he is no longer confused by the dream experiences

18–jïänaà viveko nigamas tapaç ca
pratyakñam aitihyam athänumänam
ädy-antayor asya yad eva kevalaà
kälaç ca hetuç ca tad eva madhye

Real spiritual knowledge is based on the discrimination of spirit from matter,
and it is cultivated by scriptural evidence, austerity, direct perception, reception
of the Puräëas’ historical narrations, and logical inference. The Absolute
Truth, which alone was present before the creation of the universe and which
alone will remain after its destruction, is also the time factor and the ultimate
cause. Even in the middle stage of this creation’s existence, the Absolute Truth
alone is the actual reality.

25–samähitaiù kaù karaëair guëätmabhir
guëo bhaven mat-suvivikta-dhämnaù
vikñipyamäëair uta kià nu düñaëaà
ghanair upetair vigatai raveù kim

For one who has properly realized My personal identity as the Supreme
Godhead, what credit is there if his senses—mere products of the material
modes—are perfectly concentrated in meditation? And on the other hand, what
blame is incurred if his senses happen to become agitated? Indeed, what does it
mean to the sun if the clouds come and go?4–yathä hi bhänor udayo nå-cakñuñäà
tamo nihanyän na tu sad vidhatte
evaà samékñä nipuëä saté me
hanyät tamisraà puruñasya buddheù

When the sun rises it destroys the darkness covering men’s eyes, but it does
not create the objects they then see before them, which in fact were existing all
along. Similarly, potent and factual realization of Me will destroy the darkness
covering a person’s true consciousness.

35–eña svayaà-jyotir ajo ‘prameyo
mahänubhütiù sakalänubhütiù
eko ‘dvitéyo vacasäà viräme
yeneñitä väg-asavaç caranti

The Supreme Lord is self-luminous, unborn and immeasurable. He is pure
transcendental consciousness and perceives everything. One without a second,
He is realized only after ordinary words cease. By Him the power of speech and
the life airs are set into motion.

29

12–mäm eva sarva-bhüteñu
bahir antar apävåtam
ékñetätmani cätmänaà
yathä kham amaläçayaù

With a pure heart one should see Me, the Supreme Soul within all beings
and also within oneself, to be both unblemished by anything material and also
present everywhere, both externally and internally, just like the omnipresent

17–yävat sarveñu bhüteñu
mad-bhävo nopajäyate
tävad evam upäséta
väì-manaù-käya-våttibhiù

Until one has fully developed the ability to see Me within all living beings,
one must continue to worship Me by this process with the activities of his
speech, mind and body.

18–sarvaà brahmätmakaà tasya
vidyayätma-manéñayä
paripaçyann uparamet
sarvato muita-saàçayaù

By such transcendental knowledge of the all-pervading Personality of
Godhead, one is able to see the Absolute Truth everywhere. Freed thus from all
doubts, one gives up fruitive activities.

34–martyo yadä tyakta-samasta-karmä
niveditätmä vicikérñito me
tadämåtatvaà pratipadyamäno
mayätma-bhüyäya ca kalpate vai

martyaù—a mortal; yadä—when; tyakta—having given up; samasta—all;
karmä—his fruitive activities; nivedita-ätmä—having offered his very self;
vicikérñitaù—desirous of doing something special; me—for Me; tadä—at that
time; amåtatvam—immortality; pratipadyamänaù—in the process of attaining;
mayä—with Me; ätma-bhüyäya—for equal opulence; ca—also; kalpate—he
becomes qualified; vai—indeed.

A person who gives up all fruitive activities and offers himself entirely unto
Me, eagerly desiring to render service unto Me, achieves liberation from birth
and death and is promoted to the status of sharing My own opulences.

40–namo ‘stu te mahä-yogin
prapannam anuçädhi mäm
yathä tvac-caraëämbhoje
ratiù syäd anapäyiné

namaù astu—let me offer my obeisances; te—unto You; mahä-yogin—O
greatest of mystics; prapannam—who am surrendered; anuçädhi—please
instruct; mäm—me; yathä—how; tvat—Your; caraëa-ambhoje—at the lotus
feet; ratiù—transcendental attraction; syät—may be; anapäyiné—undeviating.

Obeisances unto You, O greatest of yogés. Please instruct me, who am
surrendered unto You, how I may have undeviating attachment to Your lotus
feet.

41/42/43/44–çré-bhagavän uväca
gacchoddhava mayädiñöo
badary-äkhyaà mamäçramam
tatra mat-päda-térthode
snänopasparçanaiù çuciù
ékñayälakanandäyä
vidhütäçeña-kalmañaù
vasäno valkaläny aìga
vanya-bhuk sukha-niùspåhaù
titikñur dvandva-mäträëäà
suçélaù saàyatendriyaù
çäntaù samähita-dhiyä
jïäna-vijïäna-saàyutaù
matto ‘nuçikñitaà yat te
viviktam anubhävayan
mayy äveçita-väk-citto
mad-dharma-nirato bhava
ativrajya gatés tisro
mäm eñyasi tataù param

çré-bhagavän uväca—the Supreme Personality of Godhead said; gaccha—please
go; uddhava—O Uddhava; mayä—by Me; ädiñöaù—ordered;
badaré-äkhyam—named Badarikä; mama—My; äçramam—to the hermitage;
tatra—there; mat-päda—emanating from My feet; tértha—of the holy places;
ude—in the water; snäna—by bathing; upasparçanaiù—and by touching for
purification; çuciù—cleansed; ékñayä—by glancing; alakanandäyäù—upon the
river Gaìgä; vidhüta—cleansed; açeña—of all; kalmañaù—sinful reactions;
vasänaù—wearing; valkaläni—bark; aìga—My dear Uddhava; vanya—fruits,
nuts, roots, etc., of the forest; bhuk—eating; sukha—happy; niùspåhaù—and
free from desire; titikñuù—tolerant; dvandva-mäträëäm—of all dualities;
su-çélaù—exhibiting saintly character; saàyata-indriyaù—with controlled
senses; çäntaù—peaceful; samähita—perfectly concentrated; dhiyä—with
intelligence; jïäna-with knowledge; vijïäna—and realization;
saàyutaù—endowed; mattaù—from Me; anuçikñitam—learned; yat—that
which; te—by you; viviktam—ascertained with discrimination;
anubhävayan—thoroughly meditating upon; mayi—in Me; äveçita—absorbed;
väk—your words; cittaù—and mind; mat-dharma—My transcendental
qualities; nirataù—constantly endeavoring to realize; bhava—be thus situated;
ativrajya—crossing beyond; gatéù—the destinations of material nature;
tisraù—three; mäm—unto Me; eñyasi—you will come; tataù
param—thereafter.

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, take My
order and go to My äçrama called Badarikä. Purify yourself by both touching
and also bathing in the holy waters there, which have emanated from My lotus
feet. Rid yourself of all sinful reactions with the sight of the sacred Alakanandä
River. Dress yourself in bark and eat whatever is naturally available in the

forest. Thus you should remain content and free from desire, tolerant of all
dualities, good-natured, self-controlled, peaceful and endowed with
transcendental knowledge and realization. With fixed attention, meditate
constantly upon these instructions I have imparted to you and assimilate their
essence. Fix your words and thoughts upon Me, and always endeavor to increase
your realization of My transcendental qualities. In this way you will cross
beyond the destinations of the three modes of nature and finally come back to
Me.

47–tatas tam antar hådi sanniveçya
gato mahä-bhägavato viçäläm
yathopadiñöäà jagad-eka-bandhunä
tapaù samästhäya harer agäd gatim

tataù—then; tam—Him; antaù—within; hådi—his mind; sanniveçya—placing;
gataù—going; mahä-bhägavataù—the great devotee; viçäläm—to
Badarikäçrama; yathä—as; upadiñöäm—described; jagat—of the universe;
eka—by the only; bandhunä—friend; tapaù—austerities;
samästhäya—properly executing; hareù—of the Supreme Lord; agät—he
attained; gatim—the destination.

Thereupon, placing the Lord deeply within his heart, the great devotee
Uddhava went to Badarikäçrama. By engaging there in austerities, he attained
to the Lord’s personal abode, which had been described to him by the only
friend of the universe, Lord Kåñëa Himself

49–bhava-bhayam apahantuà jïäna-vijïäna-säraà
nigama-kåd upajahre bhåìga-vad veda-säram
amåtam udadhitaç cäpäyayad bhåtya-vargän
puruñam åñabham ädyaà kåñëa-saàjïaà nato ‘smi

bhava—of material life; bhayam—the fear; apahantum—in order to take away;
jïäna-vijïäna—of knowledge and self-realization; säram—the essence;
nigama—of the Vedas; kåt—the author; upajahre—delivered; bhåìga-vat—like
a bee; veda-säram—the essential meaning of the Vedas; amåtam—the nectar;
udadhitaù—from the ocean; ca—and; apäyayat—made to drink;
bhåtya-vargän—His many devotees; puruñam—to the Supreme Personality of
Godhead; åñabham—the greatest; ädyam—the first of all beings;
kåñëa-saàjïam—named Lord Kåñëa; nataù—bowed down; asmi—I am.

I offer my obeisances to that Supreme Personality of Godhead, the original
and greatest of all beings, Lord Çré Kåñëa. He is the author of the Vedas, and
just to destroy His devotees’ fear of material existence, like a bee He has
collected this nectarean essence of all knowledge and self-realization. Thus He
has awarded to His many devotees this nectar from the ocean of bliss, and by
His mercy they have drunk it.

11-30

13–mahä-pänäbhimattänäà
véräëäà dåpta-cetasäm
kåñëa-mäyä-vimüòhänäà
saìgharñaù su-mahän abhüt

The heroes of the Yadu dynasty became intoxicated from their extravagant
drinking and began to feel arrogant. When they were thus bewildered by the
personal potency of Lord Kåñëa, a terrible quarrel arose among them.27–räma-niryäëam älokya
bhagavän devaké-sutaù
niñasäda dharopasthe
tuñëém äsädya pippalamräma-niryäëam—the departure of Lord Balaräma; älokya—observing;
bhagavän—the Supreme Lord; devaké-sutaù—the son of Devaké; niñasäda—sat
down; dharä-upasthe—on the lap of the earth; tuñëém—silently;
äsädya—finding; pippalam—a pippala tree
Lord Kåñëa, the son of Devaké, having seen the departure of Lord Räma, sat
down silently on the ground under a nearby pippala tree.8/29/30/31/32–bibhrac catur-bhujaà rüpaà
bhräyiñëu prabhayä svayä
diço vitimiräù kurvan
vidhüma iva pävakaù
çrévatsäìkaà ghana-çyämaà
tapta-häöaka-varcasam
kauçeyämbara-yugmena
parivétaà su-maìgalam
sundara-smita-vakträbjaà
néla-kuntala-maëòitam
puëòarékäbhirämäkñaà
sphuran makara-kuëòalam
kaöi-sütra-brahma-sütrakiréöa-
kaöakäìgadaiù
hära-nüpura-mudräbhiù
kaustubhena viräjitam
vana-mälä-parétäìgaà
mürtimadbhir nijäyudhaiù
kåtvorau dakñiëe pädam
äsénaà paìkajäruëam

bibhrat—bearing; catuù-bhujam—with four arms; rüpam—His form;
bhräjiñëu—brilliant; prabhayä—with its effulgence; svayä—own; diçaù—all
the directions; vitimiräù—devoid of darkness; kurvan—making;
vidhümaù—without smoke; iva—as; pävakaù—a fire; çrévatsa-aìkam—with
the mark of Çrévatsa; ghana-çyämam—dark blue like the clouds;
tapta—molten; häöaka—like gold; varcasam—His glowing effulgence;
kauçeya—of silk; ambara—of garments; yugmena—a pair; parivétam—wearing;
su-maìgalam—all-auspicious; sundara—beautiful; smita—with smiling;
vaktra—His face; abjam—like a lotus; néla—blue; kuntala—with locks of hair;
maëòitam—(His head) adorned; puëòaréka—lotus; abhiräma—charming;
akñam—eyes; sphurat—trembling; makara—shaped like sharks;
kuëòalam—His earrings; kati-sütra—with belt; brahma-sütra—sacred thread;
kiréöa—helmet; kaöaka—bracelets; aìgadaiù—and arm ornaments; hära—with
necklaces; nüpura—ankle bells; mudräbhiù—and His royal symbols;
kaustubhena—with the Kaustubha gem; viräjitam—splendid; vana-mälä—by a
flower garland; paréta—encircled; aìgam—His limbs;
mürti-madbhiù—personified; nija—His own; äyudhaiù—and by the weapons;
kåtvä—placing; urau—on His thigh; dakñiëe—right; pädam—His foot;
äsénam—sitting; paìkaja—like a lotus; aruëam—reddish.

The Lord was exhibiting His brilliantly effulgent four-armed form, the
radiance of which, just like a smokeless fire, dissipated the darkness in all
directions. His complexion was the color of a dark blue cloud and His
effulgence the color of molten gold, and His all-auspicious form bore the mark
of Çrévatsa. A beautiful smile graced His lotus face, locks of dark blue hair
adorned His head, His lotus eyes were very attractive, and His shark-shaped
earrings glittered. He wore a pair of silken garments, an ornamental belt, the
sacred thread, bracelets and arm ornaments, along with a helmet, the Kaustubha
jewel, necklaces, anklets and other royal emblems. Encircling His body were
flower garlands and His personal weapons in their embodied forms. As He sat
He held His left foot, with its lotus-red sole, upon His right thigh.5–ajänatä kåtam idaà
päpena madhusüdana
kñantum arhasi päpasya
uttamaùçloka me ‘nagha

ajänatä—who was acting without knowledge; kåtam—has been done;
idam—this; päpena—by a sinful person; madhusüdana—O Madhusüdana;
kñantum arhasi—please forgive; päpasya—of the sinful person;
uttamaù-çloka—O glorious Lord; me—my; anagha—O sinless one.

Jarä said: O Lord Madhusüdana, I am a most sinful person. I have committed
this act out of ignorance. O purest Lord, O Uttamaùçloka, please forgive this
sinner.8–yasyätma-yoga-racitaà na vidur viriïco
rudrädayo ‘sya tanayäù patayo giräà ye
tvan-mäyayä pihita-dåñöaya etad aïjaù
kià tasya te vayam asad-gatayo gåëémaù

yasya—whose; ätma-yoga—by the personal mystic power; racitam—produced;
na vidaù—they do not understand; viriïcaù—Lord Brahmä;
rudra-ädayaù—Çiva and others; asya—his; tanayäù—sons; patayaù—masters;
giräm—of the words of the Vedas; ye—who are; tvat-mäyayä—by Your illusory
potency; pihita—covered; dåñöayaù—whose vision; etat—of this;
aïjaù—directly; kim—what; tasya—of Him; te—of You; vayam—we;
asat—impure; gatayaù—whose birth; gåëémaù—shall say.

Neither Brahmä nor his sons, headed by Rudra, nor any of the great sages
who are masters of the Vedic mantras can understand the function of Your
mystic power. Because Your illusory potency has covered their sight, they
remain ignorant of how Your mystic power works. Therefore, what can I, such
a low-born person, possibly say?

45–tam anvagacchan divyäni
viñëu-praharaëäni ca
tenäti-vismitätmänaà
sütam äha janärdanaù

tam—that chariot; anvagacchan—they followed; divyäni—divine; viñëu—of
Lord Viñëu; praharaëäni—the weapons; ca—and; tena—by that occurrence;
ati-vismita—astonished; ätmänam—his mind; sütam—to the driver;

äha—spoke; janärdanaù—Lord Çré Kåñëa.

All the divine weapons of Viñëu rose up and followed the chariot. The Lord,
Janärdana, then spoke to His chariot driver, who was most astonished to see all
this.

50–ity uktas taà parikramya
namaskåtya punaù punaù
tat-pädau çérñëy upädhäya
durmanäù prayayau purém

iti—thus; uktaù—spoken to; tam—Him; parikramya—circumambulating;
namaù-kåtya—offering obeisances; punaù punaù—again and again;
tat-pädau—His lotus feet; çérñëi—upon his head; upädhäya—placing;
durmanäù—unhappy in his mind; prayayau—he went; purém—to the city.

Thus ordered, Däruka circumambulated the Lord and offered obeisances to
Him again and again. He placed Lord Kåñëa’s lotus feet upon his head and then
with a sad heart went back to the city.

31-

1–çré-çuka uväca
atha taträgamad brahmä
bhavänyä ca samaà bhavaù
mahendra-pramukhä devä
munayaù sa-prajeçvaräù

Çukadeva Gosvämé said: Then Lord Brahmä arrived at Prabhäsa along with
Lord Çiva and his consort, the sages, the Prajäpatis and all the demigods, headed
by Indra.

2/3–pitaraù siddha-gandharvä
vidyädhara-mahoragäù
cäraëä yakña-rakñäàsi
kinnaräpsaraso dvijäù
drañöu-kämä bhagavato
niryäëaà paramotsukäù
gäyantaç ca gåëantaç ca
çaureù karmäëi janma ca

The forefathers, Siddhas, Gandharvas, Vidyädharas and great serpents also
came, along with the Cäraëas, Yakñas, Räkñasas, Kinnaras, Apsaräs and
relatives of Garuòa, greatly eager to witness the departure of the Supreme
Personality of Godhead. As they were coming, all these personalities variously
chanted and glorified the birth and activities of Lord Çauri [Kåñëa].

6–lokäbhirämäà sva-tanuà
dhäraëä-dhyäna-maìgalam
yoga-dhäraëayägneyyädagdhvä
dhämäviçat svakam

loka—to all the worlds; abhirämäm—most attractive; sva-tanum—His own
transcendental body; dhäraëä—of all trance; dhyäna—and meditation;
maìgalam—the auspicious object; yoga-dhäraëayä—by mystic trance;
ägneyyä—focused on fire; adagdhvä—without burning; dhäma—the abode;
äviçat—He entered; svakam—His own.

Without employing the mystic ägneyé meditation to burn up His
transcendental body, which is the all-attractive resting place of all the worlds
and the object of all contemplation and meditation, Lord Kåñëa entered into His
own abode.

9–saudämanyä yathäkläçe
yäntyä hitväbhra-maëòalam
gatir na lakñyate martyais
tathä kåñëasya daivataiù

saudämanyäù—of lightning; yathä—just as; äkäçe—in the sky;
yäntyäù—which is traveling; hitvä—having left; abhra-maëòalam—the clouds;
gatiù—the movement; na lakñyate—cannot be ascertained; martyaiù—by
mortals; tathä—similarly; kåñëasya—of Lord Kåñëa; daivataiù—by the
demigods.

Just as ordinary men cannot ascertain the path of a lightning bolt as it leaves
a cloud, the demigods could not trace out the movements of Lord Kåñëa as He
returned to His abode.

11–räjan parasya tanu-bhåj-jananäpyayehä
mäyä-viòambanam avehi yathä naöasya
såñövätmanedam anuviçya vihåtya cänte
saàhåtya cätma-mahinoparataù sa äste

My dear King, you should understand that the Supreme Lord’s appearance
and disappearance, which resemble those of embodied conditioned souls, are
actually a show enacted by His illusory energy, just like the performance of an
actor. After creating this universe He enters into it, plays within it for some
time, and at last winds it up. Then the Lord remains situated in His own
transcendental glory, having ceased from the functions of cosmic manifestation.

12–martyena yo guru-sutaà yama-loka-nétaà
tväà cänayac charaëa-daù paramästra-dagdham
jigye ‘ntakäntakam apéçam asäv anéçaù
kià svävane svar anayan mågayuà sa-deham

Lord Kåñëa brought the son of His guru back from the planet of the lord of
death in the boy’s selfsame body, and as the ultimate giver of protection He
saved you also when you were burned by the brahmästra of Açvatthämä. He
conquered in battle even Lord Çiva, who deals death to the agents of death, and
He sent the hunter Jarä directly to Vaikuëöha in his human body. How could
such a personality be unable to protect His own Self?

13–tathäpy açeña-sthiti-sambhaväpyayeñv
ananya-hetur yad açeña-çakti-dhåk
naicchat praëetuà vapur atra çeñitaà
martyena kià sva-stha-gatià pradarçayan

Although Lord Kåñëa, being the possessor of infinite powers, is the only
cause of the creation, maintenance and destruction of innumerable living
beings, He simply did not desire to keep His body in this world any longer.
Thus He revealed the destination of those fixed in the self and demonstrated
that this mortal world is of no intrinsic value.

14–ya etäà prätar utthäya
kåñëasya padavéà paräm
prayataù kértayed bhaktyä
täm eväpnoty anuttamäm

Anyone who regularly rises early in the morning and carefully chants with
devotion the glories of Lord Çré Kåñëa’s transcendental disappearance and His
return to His own abode will certainly achieve that same supreme destination.

18–devaké rohiëé caiva
vasudevas tathä sutau
kåñëa-rämäv apaçyantaù
çokärtä vijahuù småtim

When Devaké, Rohiëé and Vasudeva could not find their sons, Kåñëa and
Räma, they lost consciousness out of anguish.

19–präëäàç ca vijahus tatra
bhagavad-virahäturäù
upaguhya patéàs täta
citäm äruruhuù striyaù

Tormented by separation from the Lord, His parents gave up their lives at
that very spot. My dear Parékñit, the wives of the Yädavas then climbed onto
the funeral pyres, embracing their dead husbands.

20–räma-patnyaç ca tad-deham
upaguhyägnim äviçan
vasudeva-patnyas tad-gätraà
pradyumnädén hareù snuñäù
kåñëa-patnyo ‘viçann agnià
rukmiëy-ädyäs tad-ätmikäù

The wives of Lord Balaräma also entered the fire and embraced His body,
and Vasudeva’s wives entered his fire and embraced his body. The
daughters-in-law of Lord Hari entered the funeral fires of their respective
husbands, headed by Pradyumna. And Rukmiëé and the other wives of Lord
Kåñëa—whose hearts were completely absorbed in Him—entered His fire.

21–arjunaù preyasaù sakhyuù
kåñëasya virahäturaù
ätmänaà säntvayäm äsa
kåñëa-gétaiù sad-uktibhiù

Arjuna felt great distress over separation from Lord Kåñëa, his dearmost
friend. But he consoled himself by remembering the transcendental words the
Lord had sung to him.

22–bandhünäà nañöa-goträëäm
arjunaù sämparäyikam
hatänäà kärayäm äsa
yathä-vad anupürvaçaù

Arjuna then saw to it that the funeral rites were properly carried out for the
dead, who had no remaining male family members. He executed the required
ceremonies for each of the Yadus, one after another.

23–dvärakäà hariëä tyaktäà
samudro ‘plävayat kñaëät
varjayitvä mahä-räja
çrémad-bhagavad-älayam

dvärakäm—Dvärakä; hariëä—by Lord Hari; tyaktäm—abandoned;
samudraù—the ocean; aplävayat—overflooded; kñaëät—immediately;
varjayitvä—except for; mahä-räja—O King; çrémat-bhagavat—of the Supreme
Personality of Godhead; älayam—the residence.

As soon as Dvärakä was abandoned by the Supreme Personality of Godhead,
the ocean flooded it on all sides, O King, sparing only His palace

24–

nityaà sannihitas tatra
bhagavän madhusüdanaù
småtyäçeñäçubha-haraà
sarva-maìgala-maìgalam

nityam—eternally; sannihitaù—present; tatra—there; bhagavän—the Supreme
Personality of Godhead; madhusüdanaù—Madhusüdana; småtyä—by
remembrance; açeña-açubha—of everything inauspicious; haram—which takes
away; sarva-maìgala—of all auspicious things; maìgalam—the most
auspicious.

Lord Madhusüdana, the Supreme Personality of Godhead, is eternally
present in Dvärakä. It is the most auspicious of all auspicious places, and merely

remembering it destroys all contamination.

25–stré-bäla-våddhän ädäya
hata-çeñän dhanaïjayaù
indraprasthaà samäveçya
vajraà taträbhyañecayat

Arjuna took the survivors of the Yadu dynasty—the women, children and
old men—to Indraprastha, where he installed Vajra as ruler of the Yadus.

28–itthaà harer bhagavato rucirävatäravéryäëi
bäla-caritäni ca çantamäni
anyatra ceha ca çrutäni gåëan manuñyo
bhaktià paräà paramahaàsa-gatau labheta

ittham—thus; hareù—of Lord Hari; bhagavataù—of the Supreme Personality
of Godhead; rucira—attractive; avatära—of the incarnations; véryäëi—the
exploits; bäla—childhood; caritäni—pastimes; ca—and; çam-tamäni—most
auspicious; anyatra—elsewhere; ca—and; iha—here; ca—also; çrutäni—heard;
gåëan—clearly chanting; manuñyaù—a person; bhaktim—devotional service;
paräm—transcendental; paramahaàsa—of the perfect sages; gatau—for the
destination (Lord Çré Kåñëa); labheta—will attain.

The all-auspicious exploits of the all-attractive incarnations of Lord Çré
Kåñëa, the Supreme Personality of Godhead, and also the pastimes He
performed as a child, are described in this Çrémad-Bhägavatam and in other
scriptures. Anyone who clearly chants these descriptions of His pastimes will
attain transcendental loving service unto Lord Kåñëa, who is the goal of all
perfect sages.