சூரணை-397-
இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —
இனி இவ் அர்த்த விஷயமாக ஆழ்வார்கள் பாசுரங்களில் அந்யோந்ய விருத்தம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரமும் –
இவ் அர்த்த ஸ்தாபகமாக மற்றும் சொல்ல வேண்டும் பிரமாணங்களும் தர்க்கங்களும் இவ் இடத்திலே
தாம் அருளிச் செய்யாமைக்கு ஹேது இன்னது என்கிறார் –
அதாவது –
நிர்ஹேதுக விஷயீகாரம் ஆகிற இவ் அர்த்த விஷயமாக -இவ் விஷயீ காரத்துக்கு இலக்காய்-
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற -ஆழ்வார்களுடைய-பகவத் அங்கீகார பிரகாசங்களான-பாசுரங்களில் –
வெறிதே அருள் செய்வர் –
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே -என்றும் –
திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன –
மாதவன் என்றதே கொண்டு -என்றும் –
நல்லதோர் அறம் செய்தும் இலேன் -என்றும் –
நோற்றேன் பல் பிறவி -என்றும் –
யான் என் தவத்தால் காண்மின் கொல் இன்று -என்றும் –
யானே தவம் செய்தேன் -என்றும் -இத்யாதிகளாலே
தவத் அங்கீகார ஹேதுக்கள் ஒன்றும் தங்கள் பக்கல் இல்லை என்பதும் -உண்டானாப் போலே சொல்லுவது ஆகையாலே –
கருத்து அறியாதவர்களுக்கு பரஸ்பர விருத்தம் போலே பிரதி பாசிக்கும் -என்கை –
அவற்றில் சொல்லும் பரிகாரங்களான-
மாதவன் -மலை -என்கிறவை வியாவருத்தி உக்தி மாத்ரம் ஆகையால் அவற்றை
ஆரோபித்து வந்து மேல் விழுகிற பகவத் கிருபையே அங்கீகார ஹேது -அவை ஹேது அன்று என்ற இடம் சித்தம் –
நோற்றேன் பல் பிறவி -என்றது இவனுக்கு பல ஜன்மங்கள் உண்டாகும் படியாக
ஆயிற்று நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிற்று என்று -ஸ்வ நிகர்ஷம் சொன்ன இத்தனை –
அநேக ஜன்மமும் அவனைப் பெருகைக்கு சாதனா அனுஷ்டானம் பண்ணினேன் என்ற படி அன்று –
யானே தவம் செய்தேன் -என்றது -இரும் தமிழ் நன்மாலை இணை அடிக்கே சொல்லப் பெற்ற
ப்ரீதி அதிசயத்தாலே -என்னைப் போலே பாக்கியம் பண்ணினார் இல்லை என்று
இப் பேறு பெற்ற தம்மை ஸ்லாகித்த மாத்ரம் என்று இப்புடைகளிலே –
நிர்ஹேதுக வசன விரோதம் -வராதபடி ச ஹேதுகம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரங்கள் –
மற்றும் உண்டான வக்தவ்யங்கள் ஆவன –
மற்றும் இந் நிர்ஹேதுக ஸ்தாபன அர்த்தமாக சொல்ல வேண்டும் அவையான –
ஏவம் சம் ஸ்ருதி சக்ரச்தே பப்ராம்யமானே ஸ்வ கர்மபி
ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபஜாயதே –
நிர்ஹேதுக கடாஷேன மதீயேன மகாமதே
ஆசார்ய விஷயீகாராத் ப்ராப்னுவந்தி பராம்கதிம்
நாசவ் புருஷகாரேண நசாப் யன்யேன ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -இத்யாதி பிரமாணங்களும்
ஏதத் அனுஹ்ரஹ தர்க்கங்களும் விஸ்தார பயத்தால் சொல்லுகிறோம் அல்லோம் -என்றது -இவை
எல்லாம் சொல்லப் பார்க்கும் அளவில் க்ரந்த பரப்பு வரும் என்று அஞ்சி சொல்லுகிறோம் இல்லை -என்றபடி –
———————————————–
சூரணை -398-
ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –
ஆக
கீழ் -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்ன பிரதிக்ஜைக்கு உபபாதமாக -த்ரிபாத் விபூதியிலே -என்று துடங்கி -இவ்வளவும் –
இவ் ஆத்மா உஜ்ஜீவன அர்த்தமாக -விமுக தசையே பிடித்து கிருஷி பண்ணிப் போரும்படியை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அது தன்னை -நிகமிக்கிறார் –
அதாவது –
ஈஸ்வரன் இவ் ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணும் கட்டளை இது ஆகையால் -இப்படி இச் சேதனன் தன் பக்கல் விமுகனான
அவஸ்தையிலும் உட்பட இவன் உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணிப் போந்த குணாதிகனான அவனை அனுசந்தித்தால் –
ஏவம் பூதனான அவன் இவ் அவஸ்த்த ஆபன்னராக்கின நம்மை கர்ம அநு குணமாக சம்சரிக்க விடான் என்று –
தத் குண விச்வாசத்தாலே சர்வ காலமும் நிர்பயனனாயே இருக்கும் இத்தனை -பய பிரசங்கம் இல்லை -என்றபடி –
—————————————-
சூரணை -399-
எதிர் சூழல் புக்கு –
விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின -ஈஸ்வரனை அனுசந்தித்தால் -என்று தாம் கீழ்
அருளிச் செய்த அர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக – ஞானாதிகருடைய அனுசந்தான விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
எதிர் சூழல் புக்கு -என்றது -எனக்கு தப்ப ஒண்ணாதபடி பார்த்த இடம் எங்கும் தாமே யாம்படி யான வ்யாப்தியிலே உள் புக்கு என்ற படி –
எதிர் சூழல் -என்கிறது -அவதார பரமாக மற்று உள்ளாராலே வ்யாக்யாதம் ஆயிற்று ஆகிலும் –இப்போது இவர் இவ் இடத்தில் வ்யாப்தி பரமாக
அருளிச் செய்கிறார் -அநேக யோஜனைகள் உண்டாய் இறே இருப்பது –
——————————————–
சூரணை -400-
ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைவாரைப் போலே –
வ்யாப்தியும் –
அதுக்கு திருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் -அவனை தப்பாமல் பிடிக்க வேணும் என்ற அபிநிவேசத்தால் அவ்வூரைச் சேர வளையுமா போலே யாயிற்று –
ஒரு ஆத்மாவை அகப்படுத்தி கொள்ளுகைக்காக -சகல சேதன அசேதனங்களிலும் வியாபித்து நிற்கும் படி –
ஆகையால் -வ்யாப்தியும் ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது என்கிறார் –
வியாப்தியும் -என்றது -சர்வ சத்தா ஹேதுவான அதுவும் உட்பட -என்றபடி –
————————————
சூரணை -401-
சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –
சிருஷ்டி அவதாராதிகளை ஸ்வ அர்த்தமாக அனுசந்திக்கையை சித்தவத்கரித்து
இதுக்கு திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
முந்நீர் ஞாலத்தில் முதல் பாட்டிலே சிருஷ்டியை ஸ்வ அர்த்தமாகவும் –
இரண்டாம் பாட்டிலும் மூன்றம் பாட்டிலும் அவதாரங்களை ஸ்வ அர்த்தமாகவும் –
இவர் தாமே அநு சந்தித்து அருளினார் -இறே
அவதாராதிகள் -என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தாலே -குண சேஷ்டாதிகளைச் – சொல்லுகிறது —
———————————-
சூரணை -402-
கர்ம பலம் போலே கிருபா பலமும்
அனுபவித்தே அற வேணும் –
இப்படி இவன் விமுகனான தசையிலும் -சிருஷ்டி அவதாரதிகளாலே இவனுடைய உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகிறது –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே இறே –
தாத்ருசா க்ருபா பலம் இவனுக்கு அவசியம் அனுபாவ்யம் என்னும் இடத்தை சத் திருஷ்டாந்தமாக அருளிச் செய்யா நின்று கொண்டு –
கீழ்-நிர்பரனாய் இருக்கும் இத்தனை – என்றவற்றை ஸ்த்ரீகரிக்கிறார் மேல் –
அதாவது –
தான் செய்த புண்ய பாப ரூப கர்ம பலம் -அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடி –
அனுபவித்தே அற வேண்டுமோபாதி-நித்ய சம்சார ஹேதுவான கர்மத்தை தள்ளி –
நித்ய ஸூ ரிகளோடு சமான போகபாகி ஆக்குகைக்கு ஹேதுவான அவனுடைய கிருபா பலம் -இவனுக்கு இச்சை இல்லை ஆகிலும்
அவசியம் அனுபவித்தே விட வேணும் -என்கை – –
——————————————–
சூரணை -403-
கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –
ஏவம் பூத கிருபை அநாதி யாக இருக்கச் செய்தே கர்மா கர்த்தாவான சேதனனுடையவும்
தத் பல தாதாவான ஈச்வரனுடையவும் ஸ்வாதந்த்ர்யங்களாலே தகையைப்பட்டு அன்றோ கிடந்து போந்தது —
இன்னும் அப்படி ஆனாலோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
கிருபா குணம் -நிரந்குச ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் தானிட்ட கட்டளையிலே வந்தவாறே -அங்கீகரிக்கக் கடவோம் என்று இச் சேதனனை
கர்ம அனுகுணமாக நிர்வகிக்கும் அளவில்- இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும்- தகையப்பட்டு நிற்கும்
அது ஒழிய -அக்கட்டளையிலே வாராமையாலே -துர்க்கதியே பற்றாசாக -இவனை அவன் தானே மேல் விழுந்து அங்கீகரிகைக்கு உடலாம்படி
பெருகும் அளவில் -ஸ்வ ஆஸ்ரயமான ஈஸ்வரனுடைய -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஜயா யச்தா முல்லன்கைய வர்த்ததே என்கிறபடியே
ஈஸ்வர ஆக்ஜ்ஜையை அதிலங்கித்து நடக்கைக்கு அடியான- ஸ்வாதந்த்ர்யத்தாலும் நிரோதிக்க ஒண்ணாதபடி –
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே -உபய ஸ்வாதந்த்ர்யமான இரண்டு தலையும் உடைந்து அழியும்படி –
ஒரு மட்டில் நில்லாமை மேல் மேலும் பெருகா நிற்கும் -என்கை-
—————————————–
சூரணை -404-
பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –
பிரகரண ஆதியில் -பய அபய ஹேதுக்களாக சொன்ன -ஸ்வ தோஷ- பகவத் குணங்களில் வைத்து கொண்டு –
கர்ம காருண்யங்கள் பிரதானங்கள் ஆகையால் -அவற்றை உபபாதித்து கொண்டு வந்தார் கீழ் –
அது தன்னை நிகமித்து அருளுகிறார் மேல் –
அதாவது –
ஈச்வரனே உபாயம் என்று இருக்கிற இவ் அதிகாரிக்கு இன்னமும் -சம்சாரம் அனுவர்த்திக்கில் செய்வது என் என்கிற பயத்துக்கு ஹேது –
அந்தி காலம் சம்சரிக்கைக்கு காரணமாய் போந்த -ஸ்வ கர்ம ஸ்மரணம் –
சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெருமே –திரு விருத்தம் -45-என்கிறபடியே -சம்சாரம் நம் அருகே வர மாட்டாது –
சரீர அவசாநத்தில் பகவத் ப்ராப்திக்கு கண் அழிவு இல்லை என்று நிர் பயனாய் இருக்கைக்கு ஹேது -கர்மத்தை பாராமல் அங்கீகரித்து –
சம்சாரத்தை அடி அறுத்து- தன் திருவடிகளில் சேர்த்து கொள்ளுகைக்கு உறுப்பான -அவனுடைய நிர்ஹேதுக காருண்ய ஸ்மரணம் என்கை –
ஸ்வ தோஷ அனுசந்தானம் -பகவத் குண அனுசந்தானம் -என்று துடங்கினத்தை
நிகமிக்கும் இடம் ஆகையாலே -கர்மம்-காருண்யம் -என்கிற இடத்தில் ஸ்மரண பர்யந்தம் விவஷிதம் –
———————————————–
சூரணை -405-
பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —
இப் பயம் அபயங்கள் இரண்டும் இவனுக்கு எவ்வளவாக நடக்கும் என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது –
பகவத் க்ருபா விஷயமாயும் -பிரகிருதி யோடே இருக்கையாலே அநாதி காலம் சம்சரண ஹேதுவாய் போந்த ஸ்வ கர்மத்தை அனுசந்திப்பது –
அத்தைப் பாராதே அங்கீகரித்த பகவத் காருண்யத்தை அனுசந்திப்ப தாய்க் கொண்டு இறே இவ் அதிகாரி இருப்பது –
அதில் கர்மத்தை அனுசந்தித்த போது பயமும் – காருண்யத்தை அனுசந்தித்த போது அபயமுமாய் -இரண்டும் மாறி மாறி –
பிரகிருதி சம்பந்தம் அற்று பகவத் ப்ராப்தி பண்ணும் அளவும் நடக்கும் -என்கை –
————————————————-
சூரணை -406-
நிவர்த்திய ஞானம் பய ஹேது
இப்படி உபயமும் மாறி மாறி பிராப்தி அளவும் நடக்கிறது என் -தத் குண
விச்வாசத்தாலே எப்போதும் ஒக்க நிர்பயனாய் இருக்க ஒண்ணாதோ -என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது –
அவனுடைய காருண்யத்தாலே நிவர்த்திக்க படுமதான -அவித்யா -கர்ம -வாசனை-ருசி – பிரகிருதி சம்பந்த விஷய ஞானம் -இவை
கிடைக்கையாலே இனமும் சம்சாரம் மேலிட்டால் செய்வது என் என்கிற பய ஹேது
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று சர்வேஸ்வரன் அவற்றை
தள்ளிப் பொகடும் படி பண்ணுகையாலே -இவற்றுக்கு நிவர்தகமான அவனுடைய காருண்ய விஷய ஞானம் -தத் பய ராஹித்ய ஹேது -என்கை –
நிவர்த்தாக பலம் அறிந்தாலும் -நிவர்த்யம் கிடக்கும் அளவும் – பயமும் நடு நடுவே கலசி செல்லும் என்று கருத்து –
ஆக –
இப் பிரகரணத்தில் –
இவனுக்கு பய அபய ஹேதுக்களும் -366-
தத் உபய விபர்யயத்தில் சித்திக்கும் அதுவும் -367-
தந் நிபந்தன சங்க பரிகாரங்களும் -368-380-
சர்வேஸ்வரன் சம்சாரிகளுக்கு உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணும் படியையும் -381-
அஞ்ஞாத ஸூக்ருத பகவத் அங்கீகார ஹேதுத்வமும் -381-
அந் நிர்ஹேதுக விஷயீகார வைபவ அநபிஜ்ஞர் படியையும் -383-
ஏதத் வைபவ அபிஜ்ஞர் படியையும் -384-
இவ் அர்த்தம் அபியுக்த வசன சித்தம் என்னும் அதுவும் -385-
அஜ்ஞ்ஞாத ஸூக்ருத் வ்யாஜேனே அவன் அங்கீகரிக்கும் படியையும் -386-
அங்கீகார ஹேது வாக்கும் அஞ்ஞாத ஸூக்ருதங்களின் தத் கிருஷி பலத்வமும் -387
தந் நிரூபண பலித்வமும் -அங்கீகார பற்றாசாம் அவை காதாசித்கமாக ஸ்வயமேவ விளைக்கைக்கு அடியும் -389-
அவற்றின் த்வை விதயமும் –
ஏவம் பூத விஷயீகார சாஸ்திர சித்தத்வமும் -392-
இவ் விஷயீகாரம் பெற்றவர் இத்தை வெளியாக பேசின படியும்-393-
ஏதத் அநபிஞ்ச வசன பரிகாரமும் -394-
ஆபி முக்யவதத் வேஷ தத் கிருபா ஜனித்வமும் -395-
யாத்ருச்சிகாதிகளின் ஸூக்ருத நாமம் ஈஸ்வர க்ருதம் என்னும் அதுவும் -396-
ஏதத் அர்த்த விஷய அபியுக்த வசன பரஸ்பர விரோதி பரிகாராத் அனுயுக்தி ஹேதுவும் -397-
கீழ் பரக்க உபபாதித்து வந்த இதின் பலிதமும் -398-
தத் ஆப்தி ஹேது தயா ஞானாதிகர் அநு சந்தானமும் -399-
நிர்ஹேதுக கிருபா பல அவஸ்ய அனுபாவ்யத்வமும் -402-
ஈத்ருசா கிருபா பிரவாஹா துர்நிவாரகத்வமும் -403-
பிரகரண ஆதி ப்ரதிஞ்ஞா தத் அர்த்த நிகமனமும் –404-
பய அபய அனுவர்த்தன காலாவதியும் -405-
ஏதத் உபய ஹேது பூத ஜ்ஞான விசேஷங்களும்-406- -சொல்லுகையாலே –
இவ் அதிகாரிக்கு அத்வேஷாதி மோஷ பர்யந்த அகில லாப ஹேதுவான பகவத் ஆகஸ்மிக கிருபா பிரபாவம் விஸ்தரேண பிரதிபாதிக்க பட்டது –
இத்தால் -த்வய உபதேஷ்டரு பூதாசார்ய உபசத்யாதிகளுக்கும் தத் உபதிஷ்ட த்வார்த்த ஞானாதிகளுக்கும் –
ஹேதுவான பகவந் நிர்ஹேதுக கிருபா வைபவம் சொல்லப் பட்டது –
(த்வயத்தை பெற்றது ஆச்சார்யம் மூலம் -உபசத்யாதி-கைங்கர்யாதிகள் –ஆச்சார்யரைப் பெற்றது பகவத் நிர்ஹேதுக கிருபையால் என்றதாயிற்று-)
ஆறு பிரகரணங்களில் ஐந்தாவதான -பகவந் நிர்ஹேதுக கிருபா பிரபாவம் முற்றிற்று –
——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்