ஸ்ரீ மா முனிகள் ரஹஸ்ய அர்த்த ஸம்ப்ரதாய பரம்பரைக்கு அருளிச் செய்த தனியன்
தாயம்
ப்ரதாயம்
ஸம் ப்ரதாயம்
ஸூத்த ஸத்வ சம்ப்ரதாயம் அன்றோ இது
லோக குருஸ் குருபிஸ் ஸஹ பூர்வைஸ் கூர குலோத்தம தாஸம் உதாரம்
ஸ்ரீ நக பதயபி ராமவரே ஸு தீப்ரஸயாந குருஸ் சபேஜஹம் –
——
ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் விஷயமான தனியன்
லோகாச்சார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம
——–
பூர்வ உக்த குரு பரம்பரைக்கு ப்ரத்யேக தனியன்கள்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ கூர குலோத்தம தாசர் விஷயமான தனியன்
லோகாச்சார்ய கிருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
ஸமஸ்த ஆத்ம குண வாஸஸ் வந்தே கூர குலோத்தமம்
—-
ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை விஷயமான தனியன்
நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே
——–
ஸ்ரீ மா முனிகளுக்கு மாதா மஹாரான ஸ்ரீ கோட்டூர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை தனியன்
லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்ஸாயி தாந்தரம்
ஞான வைராக்ய ஜலதி வந்தே ஸும்ய வர குரும்
———-
ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையன் விஷயமான தனியன்
ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ ஸாஸ்த்ர விதம்
ஸூந்தர வர குரு கருணா கந்தளிதா ஞான மந்த்ரம் கலயே –
————-
ஸ்ரீ வானமாலை ஜீயர் அருளிச் செய்த தனியன் –
கோதில் உலகாசரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை ஆழ்வார் செழும் குரவை மணவாளர்
ஒதரிய புகழ் திரு நாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள மா முனிவன் பொன்னடிகள் போற்றுவனே –
வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு
ஒது முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —
முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்
————–
ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அனுபாவ்யனாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் —
அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் –அத்தை இழந்து –அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து -அத்யந்த வியாகுல சித்தனாய் –
இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே –
கரணாதிகளைக் கொடுத்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகைக்கு உடலாக –
அபுருஷேயமாய்-நித்ய நிர் தோஷமாய் -ஸ்வத பிரமாணமான வேதத்தையும் -தத் உப ப்ரும்ஹணங்களான
ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் ப்ரவர்ப்பித்த இடத்திலும் –
அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே –
அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரகமாக இவர்கள் அறியலாம் படி பண்ண வேண்டும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான
ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினான்-
அதில்
திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் ஸ்வ அம்ச பூதனான ஸ்ரீ நரன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வ மகிஷியான ஸ்ரீ பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான் –
சரம ஸ்லோகத்தை திருத் தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரீதனான ஸ்ரீ அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் என்று குரு பரம்பராதியிலே ஸ்ரீ ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –
இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் –
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் –
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வருக்கும் ஸூக்ரமாகவும் ஸூவ்யக்தமாகவும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –
தம்முடைய பரம கிருபையாலே -இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –
முன்பே ரகஸ்ய த்ரய விஷயமாக மூன்று பிரபந்தம் இட்டு அருளி இருக்க செய்தேயும் -அதில்
யாத்ருக்சிகப்படி அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் –
பரந்த படி -அதி விஸ்ருதம் ஆகையாலும் –
ஸ்ரீ யபதிப்படி உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -சம்ஸ்க்ருத வாக்ய பகுளம் ஆகையாலே –
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமை யாலும் –
த்ரிவித தோஷம் இல்லாத படி இன்னமும் ஒரு பிரபந்தம் இட வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி
எல்லா வற்றுக்கும் பின்பு இறே முமுஷுப்படி ஆகிற இப் பிரபந்தம் இட்டு அருளிற்று –
ஆகை இறே அல்லாத பிரபந்தங்கள் கிடக்க -இத்தை எல்லாரும் அதிகரிக்க போருகிறது –
இன்னமும் பூர்வ பிரபந்தங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப் பிரபந்தத்திலே
உண்டு ஆகையாலும் இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும் .
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply