ஸ்ரீ திரு விருத்தம் -40-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(நோற்ற நோன்பு -ஆராவமுது -மானேய் நோக்கு -திருவல்ல வாழ் -மூன்றும் அர்ச்சையிலே சரணாகதி –
அடுத்து பிறந்தவாறும் -அவதாரத்தில் சரணாகதி

இருள் கண்டு இரங்கிய தலைமகள் வரவை விருப்பி உரைத்தல்
உற்றார் விரைந்து கூட்டி வருவது எப்போது என்று உரைத்தல்
இரவு விசன பாசுரம் இது என்றுமாம்
ஸூர்யன் அஸ்தமனம் -கல்லில் மலையிலே சேர -இரவுப்பொழுது புகுந்து -எங்கும் சூழ்ந்து
ஞாலம் மணாளன் -பொன் தேவி மணாளன் -சாத்தி அருளும் திருத்துழாயை சூட்டி என்னை ரஷிப்பது எப்போதோ

காண்பது எஞ்ஞான்று கொலோ ? வினையேன் கனி வாய் மடவீர் !
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும்
சேன் சினை யோங்கு அமரச் செலும் கானல் திரு வல்ல வாழ்
மாண் குரல் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே –5-9-6

பாதங்கள் மேல் அணி பூத் தொழக் கூடும் கொல் ? பாவை நல்லீர் !
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செம் கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திரு வல்ல வாழ்
நாதன் இன் ஞாலம் உண்ட நம்பிரான் தன்னை நாள் தொறுமே–5-9-7

சரணாகதி கூடச் சேர்ந்து அதில்
பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே அதில் )

அவதாரிகை-
சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த
தசையை சொல்லுகிறது-

(ஏற்கும் புகழ் -அவனுக்குத் தக்க தெய்வக்கவி ஏற்கும் பாடல் அருளியவர் அன்றோ )

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தை யுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிறைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்-

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-
தர்சநீயமாய்
அத்வதீயமான பகல் களிறு கல்லிலே சேர –
அச்தமய பர்வதத்தே புக –

தர்சநீயமான பகல் என்பான் என் என்னில் –
இந்திரியங்கள் தனி தனியே ஸ்வ விஷயங்களை கிரகிக்கையாலே
தரித்து இருக்கலாம் –

குழாம் விரிந்த இத்யாதி-
ராஜாக்கள் போக பள்ளிகள் வந்து புகுருமா போலே –
ஆதித்யன் அஸ்தமித்தவாறே –
ராத்ரியானது-குழாம்  குழாமாக வந்து விஸ்ருதமான படி –

இந்திரியங்கள் எல்லாமொக்க உபத்ரதமாய் ஏக விஷயத்தையே காணும் ஆகையாலே
அலாப தசையில் ராத்திரி பாதகம் ஆகிற படி-

நீல கங்குல் இத்யாதி –
கறுத்த ராத்ரியானது களிறுகள் எல்லாம் கையுமணியும் வகுத்தன –

ராத்ரியை பஹு வசனமாக சொல்லுவான் என் என்னில் –
கல்பங்கள்
ஊழிகள் என்னுமா போலே

நேரிழையீர்
இவ்வாணை காலிலே துகை உண்கைக்கு நான் ஓர் அபலை இறே-
ஊரார் இவளை தரிப்பிக்கைக்காக தாங்கள் ஒப்பனையோடு இருப்பார்கள் இறே-

ஞானப் பொன் மாதின் மணாளன்
அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –
ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே –
நிதி உடையார்-எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே
இவளுக்கும்-
இவள் உண்டு என்று சொல்லி
அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது –

(கோலத் திருமா மளோடு கூடி சாலப் பலகால் உயிர்கள் உகந்து காப்பவன் அன்றோ
அவளும் நின் ஆகத்தின் இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாதவள் அன்றோ )

மாதின் மணாளன் –
இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது –
இவள் பக்கலில் இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும்
தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் –
(அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அம்மான் )

துழாய் இத்யாதி –
அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே –
அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் –

ராஜ குமரன் புழுகு  நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே-
இவன் தான் –
சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –
வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று
அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது –
அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே
இவள் ஆசை படுகிறது –

நாங்கள் சூழ் குழற்கே  ஏலப் புனைந்து –
பின்னையும் பரிகாரம் இது அல்லது இறே

ஏல-
ஏற்க்கவே –
அத்தை சத்தை அழிவதற்கு முன்னே புனைந்து –
(இது தான் இவளுக்கும் ஏற்கும் என்றபடி )

என்னைமார் –
விலக்கும் தாய் மாரை இட்டு இறே பரிகாரம் தேடுகிறது –
வழி அடிகாரரை தண்ணீர் வேண்டுமா போலே –

எம்மை நோக்குவது என்று கொலோ –
இப்படி நமக்கு ரஷை பெறுவது என்றோ-

தாத்பர்யம்
கீழே அவன் அழகை மாநசமாக அனுபவித்த ஆழ்வார்
பின்பு அந்த அழகைப் பிரத்யக்ஷமாகப் பார்த்து அனுபவிக்க மாட்டாமல்
அதுவும் தளர்ந்து
அருகில் உள்ள பாகவதர்கள் எப்பொழுது சேர்ப்பார்களோ
என்று வினவும் பாசுரம்
நாயகன் உடன் சேர வேண்டும் என்னும் நாயகியின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
பிரசாதம் நாம் உள்ள இடத்திலே கிட்டும்
நம்மைக் கொண்டு போய் எப்போது திருவடியில் சேர்ப்பார்களோ என்கிறார்
ஓ சகிகளே
என்னைத் தேற்றுகைக்காக நீங்கள் அலங்கரித்து வந்தீர்கள்
இதனால் நான் தேறவில்லை
ஆஸ்வாசகரமான பகலும் அஸ்தமித்து
எங்கும் இரவாக அநேக வடிவம் கொண்டு நலியத் தொடங்கிற்று
இப்பொழுது எனது பிராணன் தரிக்கும் படி
ஸ்ரீ பூமி வல்லபன் திருத் துழாய் சூட்டி அவன்
திருவடிகளில் எப்பொழுது சேர்ப்பார்களோ என்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: