(சாலோக்யம் சாமீப்யம் ஸாரூப்யம் ஸாம்யாபத்தி சாயுஜ்யம் -ஐந்தும் உண்டே
மேகங்கள் ஸாரூப்யம் பெற்றுள்ளதே
சாதன பலமா -இருக்க முடியாது
அவனது அருளாகவே இருக்க வேண்டும்
எங்கும் தீர்த்த கரராய் திரிகிறீர்களே
கீதா ஸ்லோகம் உபதேசிப்பவன் -என்னையே பெறுகிறான் -பிரியமானவன் -என்றானே
பகவத் விஷயம் வர்ஷிக்கும் பாகவதர்கள்
எனக்கு வரவில்லையே –
தலைவி போலி கண்டு உரைத்தல் துறை
வைகல் பூம் கழிவாய் -6-1-
திரு வண் வண்டூர் -அங்கு குருகு தூது
மேகம் கண்டால் கண்ணன் என்றே ஏறப் பறக்கும்-பராங்குச நாயகி
ஓ மேகங்களே -தாமரைக் கண்ணாவோ போல் துன்பம் மிகுதியால் கூப்பிடுகிறாள்
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-)
அவதாரிகை –
கீழில் பாட்டில் –
மேகங்களே
என்னுடைய தூது வாக்கியத்தை கேட்டுப் போய்ச் சொல்லு கிறிகோள்-
உங்கள் திருவடிகளை என் தலையிலே வைக்கிறிலிகோள் -என்று
சொன்ன படியே
இவை செய்ய மாட்டி கோளாகில்-
இங்கே வந்து ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் என்ன –
எங்களுக்குப் பெருங்கூட்டம் போகா நின்றது –
துணை தப்பும் -என்றனவாகக் கொண்டு
அங்கே நின்றாகிலும்
ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் -என்கிறாள் –
(யோக பிரஷ்டம் போல் -கர்மயோகம் நழுவி -உலக இன்பமும் இல்லாமல் –
நஹி கல்யாண க்ருதி -பெரும் பயத்தில் இருந்து அவனை விடுவிப்பேன்
விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேறே நல்ல பிறவி அளிப்பேன் என்றானே )
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-
பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-
பதவுரை
மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.
மேகங்களோ –
அவற்றைப் பார்த்து தன் ஆற்றாமை எல்லாம்
தோற்றக் கூப்பிடுகிறாள் –
தன்னுடைய ஆர்த்த த்வனி கேட்டால் கால் நடை தந்து போவார் இல்லை என்று –
இவை போகிறது இந்த த்வனி கேளாமை என்னுமத்தாலே
அவற்றுக்கு கேட்கும் அளவும் கூப்பிடுகிறாள்
தூராதாவாஹனம்-தூராத் ஆஹ்வானம் – பண்ணுகிறாள்
மேகங்கள் சிறிதிடம் போய்ச் செறித்து (சேர்ந்து) நின்றபடியைக் கண்டு
குரல் கேட்டு நின்றதாகக் கொண்டு
உரையீர் -என்கிறாள் –
கீழ்ச் சொன்னவை எல்லாம் செய்யாது இருக்கச் செய்தேயும் –
உரையீர் -என்கிறது –
தன் ஆசையில் குறை இல்லாமை
அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –
வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட
வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –
திருமால் திருமேனி யொக்கும் –
யோகங்கள் உங்களுக்கு –பரார்த்தமாய் விலக்ஷணமாய் இருக்கிற
இவ் வடிவு எங்கே பெற்றி கோள்
அவனும் அவளும் பிரிந்து
வெளுத்த வடிவு இன்றியிலே
அவனும் அவளுமாக கலந்து
புகர்த்த வடிவு எங்கே பெற்றி கோள்
(திருவைப் பிரிந்த மாலின் வெளுத்த வடிவு என்னுடையது
திருவுடன் கூடிய மாலின் வர்ணம் உங்களது )
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்னுமதுக்கு
அவ் வருகான வடிவு எங்கே பெற்றி கோள்
அவர்களுக்கு உள்ளது ப்ரஷீண அசேஷ பாவமே இறே என்று
அத்தையும் வியாவர்த்திக்கிறது –
(முக்தன் பரமாத்மாவை அடைந்து பெறும் சாரூப்பியம் விட சிறந்தது அன்றோ உங்களது
அவன் அங்கு
இதுவோ இங்கேயே
விண்ணுளாரிலும் சீரியர் போல் அன்றோ
ப்ரஷீண-கழிந்த –
அசேஷ-ஒழிந்த
கர்ம பாவனையும்
ப்ரஹ்ம பாவனையும்
உபய பாவனையும்
இல்லையே
ஸாதனமாகக் கொள்ளாமல் ப்ராப்யமாகவே கொள்ளுவான் அன்றோ
ப்ரஹ்மம் ப்ராப்யம் மட்டும் அங்கே
ஜகத் வியாவாராம் வர்ஜம் அவனுக்கு
ஜகத் ரக்ஷணம் -இவற்றுக்குத் தானே உண்டு
சாதனதயா ப்ரஹ்ம பாவனையும் வேண்டா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் பிரமாணம்
நாங்களும் பாரதந்தர்யம் விட்டு உங்களை போல பண்ண அமையுமே )
இவ் வடிவைப் பெறுகைக்கு
சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு அதிகார சம்பத்தில்
எங்கே பெற்றி கோள் –
எவ்வாறு பெற்றீர் –
நாமும் பிரணயித்தவத்தாலே பெற விராதே
சாதன அனுஷ்டானம் பண்ண அமையும்
அத்தனை இனி -என்கிறாள் –
உயிர் அளிப்பான் -மாகங்கள் எல்லாம் திரிந்து –
விஷய விபாகம் இன்றிக்கே-
சர்வாத்ம ரக்ஷணத்துக்காக -லோகம் எங்கும் திரிந்து
பஹு வசனம்
பிரதேச அநியமத்தைப் பற்ற
(எல்லா ஆகாசங்களிலும் நியமம் இல்லாமல் திரியுமே )
நன்னீர் சுமந்து –
திரு வீதியிலே செறிந்து சேர்ந்து ஸ்ரமஹரமான தண்ணீரைக் கொண்டு நின்று –
ஏலக் குழம்பு ஏலக் குழம்பு -என்பாரைப் போலே
கடலில் உப்பு நீரைப் பருகி
அம்ருத ஜலம் ஆக்கிக் கொண்டு
நுந்தம் -ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
உங்கள் உடம்பு நோவ வருந்திப் பண்ணின தபஸின் பலமோ
இவ் வடிவு எங்கனே யாகப் பெற்றது –
சாதனாந்தரம்
ஸாத்ய
ஸஹஜ -மூன்றும் உண்டே
அனுக்ரஹத்தால் சாதனாந்தரம் பெற்று -ஸாரூப்யமா -என்று மூன்றும்
பக்திக்கு அங்கமான சரணாகதி
ஸ்வ தந்த்ர ப்ரபத்தியும் உண்டே
தாத்பர்யம்
மேகங்கள் பதில் சொல்லாமல் போக
கூப்பிட்டு
அங்கு இருந்தாகிலும் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ
தூதும் போக வில்லை
தலையில் காலையும் வைக்கவில்லை
ஸ்வர்ணன வரணையான அவள் -செய்யாள் அவள்
ஸ்வர்ணமும் மாணிக்கமும் சேர்ந்தால் போல் திருமால் திருமேனி வடிவு
என்ன தபஸ்ஸூ பண்ணிப் பெற்றீர்கள் என்று கேட்டால்
இதுக்கும் பதில் சொல்லாமல் போகிறீர்கள்
நானே ஊகிக்கிறான்
சர்வேஸ்வரன் நிர்ஹேதுக ரக்ஷணம் தீக்ஷிதத்தை
அவன் கார்யம் நீங்கள் ஏறிட்டுக்கொண்டு
ஜல பாரம் தரித்து
அவனே இந்த ஸாரூப்யம் -பெற அருளினான் போலும்
பரமம் குஹ்யம் -18 அத்யாயம் -பக்தி சாஸ்திரம்
யார் சொல்கிறானோ அவனே இந்த பலம் பெறுகிறான்
என்னையே அடைகிறான் சங்கையே இல்லையே என்றானே
ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷ்வபி தாஸ்யதி-
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய ஸம்ஸய–৷৷18.68৷৷
எவன் ஒருவன் மேலான ரஹஸ்யமான இந்த சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களிடம் வியாக்யானம் செய்கிறானோ
அவன் என்னிடத்தில் மேலான பக்தியைச் செய்து என்னையே அடைகிறான் -இதில் ஐயம் இல்லை
குஹ்யம் -சாஸ்திரம் -பக்தர்கள் இடம் வியாக்யானம் செய்தால் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி இதுவே உண்டாக்கும் –
ஐந்தாவது உபாயம் இது
சரம தமமான உபாயம் அன்றோ இது -சங்கை இல்லாமல் -நான் சொல்லியபடி சொல்லி பலன் கெடுபவர் பெறுவார்
ந ச தஸ்மாந் மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரிய க்ருத்தம–
பவிதா ந ச மே தஸ்மாதந்ய ப்ரிய தரோ புவி–৷৷18.69৷৷
இவ் வுலகில் மனிதர்களில் இந்த சாஸ்திரத்தை வியாக்யானம் செய்பவனைக் காட்டிலும் வேறு ஒருவன்
எனக்கு மிகவும் இனியது செய்பவன் இருந்தது இல்லை –
அவனைக் காட்டிலும் வேறு ஒருவன் எனக்கு வரும் காலத்தில் மிகவும் இனியவனாக உண்டாக்கப் போவதும் இல்லை
ஸ்ரீ கீதா சொல்பவனை விட யாரும் எனக்கு பிரிய தமன் இல்லை -நேற்றும் நாளையும் இதுவே –
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாத மாவயோ–
ஜ்ஞாந யஜ்ஞேந தேநாஹ மிஷ்டஸ் யாமிதி மே மதி–৷৷18.70৷৷
நம் இவர்கள் இடையே நிகழ்ந்த மோக்ஷ உபாயங்களைப் பற்றிய இந்த சம்வாத ரூபமான யோக சாஸ்திரத்தை
எவன் ஓதுகின்றானோ -அவனால் இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஞான யஜ்ஞத்தினால்
நான் ஆராதிக்கப் பெற்றவன் ஆவேன் என்பது என் அபிப்ராயம்
இது என் மதி -அத்யயனம் பண்ணுபவன் -உனக்கும் எனக்கும் நடந்த வார்த்தா லாபம் –
ஞான யாகம் தான் இது -நான் பூஜிக்கப் பட்டவன் ஆகிறேன் –
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply