இதை உணர்ந்து எம்பெருமானையே தியானம் செய்ய வேண்டும்
Archive for September, 2011
திருவாய்மொழி-1-2-வீடு முன் முற்றவும் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
September 30, 2011திருவாய்மொழி-1-1-உயர்வற உயர்நலம் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
September 30, 2011ஞானி மெய்ஞானி தபஸ்வி-ரிஷிகள்
திருவாய்மொழி–ஈடு பிரவேசம் — ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள்
September 30, 2011பொலிக பொலிக பொலிக போயிற்று பல் உயிர் சாபம் —
ஸ்ரீ திரு விருத்தம் -32-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –
September 29, 2011(சாலோக்யம் சாமீப்யம் ஸாரூப்யம் ஸாம்யாபத்தி சாயுஜ்யம் -ஐந்தும் உண்டே
மேகங்கள் ஸாரூப்யம் பெற்றுள்ளதே
சாதன பலமா -இருக்க முடியாது
அவனது அருளாகவே இருக்க வேண்டும்
எங்கும் தீர்த்த கரராய் திரிகிறீர்களே
கீதா ஸ்லோகம் உபதேசிப்பவன் -என்னையே பெறுகிறான் -பிரியமானவன் -என்றானே
பகவத் விஷயம் வர்ஷிக்கும் பாகவதர்கள்
எனக்கு வரவில்லையே –
தலைவி போலி கண்டு உரைத்தல் துறை
வைகல் பூம் கழிவாய் -6-1-
திரு வண் வண்டூர் -அங்கு குருகு தூது
மேகம் கண்டால் கண்ணன் என்றே ஏறப் பறக்கும்-பராங்குச நாயகி
ஓ மேகங்களே -தாமரைக் கண்ணாவோ போல் துன்பம் மிகுதியால் கூப்பிடுகிறாள்
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-)
அவதாரிகை –
கீழில் பாட்டில் –
மேகங்களே
என்னுடைய தூது வாக்கியத்தை கேட்டுப் போய்ச் சொல்லு கிறிகோள்-
உங்கள் திருவடிகளை என் தலையிலே வைக்கிறிலிகோள் -என்று
சொன்ன படியே
இவை செய்ய மாட்டி கோளாகில்-
இங்கே வந்து ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் என்ன –
எங்களுக்குப் பெருங்கூட்டம் போகா நின்றது –
துணை தப்பும் -என்றனவாகக் கொண்டு
அங்கே நின்றாகிலும்
ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் -என்கிறாள் –
(யோக பிரஷ்டம் போல் -கர்மயோகம் நழுவி -உலக இன்பமும் இல்லாமல் –
நஹி கல்யாண க்ருதி -பெரும் பயத்தில் இருந்து அவனை விடுவிப்பேன்
விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேறே நல்ல பிறவி அளிப்பேன் என்றானே )
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-
பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-
பதவுரை
மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.
மேகங்களோ –
அவற்றைப் பார்த்து தன் ஆற்றாமை எல்லாம்
தோற்றக் கூப்பிடுகிறாள் –
தன்னுடைய ஆர்த்த த்வனி கேட்டால் கால் நடை தந்து போவார் இல்லை என்று –
இவை போகிறது இந்த த்வனி கேளாமை என்னுமத்தாலே
அவற்றுக்கு கேட்கும் அளவும் கூப்பிடுகிறாள்
தூராதாவாஹனம்-தூராத் ஆஹ்வானம் – பண்ணுகிறாள்
மேகங்கள் சிறிதிடம் போய்ச் செறித்து (சேர்ந்து) நின்றபடியைக் கண்டு
குரல் கேட்டு நின்றதாகக் கொண்டு
உரையீர் -என்கிறாள் –
கீழ்ச் சொன்னவை எல்லாம் செய்யாது இருக்கச் செய்தேயும் –
உரையீர் -என்கிறது –
தன் ஆசையில் குறை இல்லாமை
அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –
வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட
வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –
திருமால் திருமேனி யொக்கும் –
யோகங்கள் உங்களுக்கு –பரார்த்தமாய் விலக்ஷணமாய் இருக்கிற
இவ் வடிவு எங்கே பெற்றி கோள்
அவனும் அவளும் பிரிந்து
வெளுத்த வடிவு இன்றியிலே
அவனும் அவளுமாக கலந்து
புகர்த்த வடிவு எங்கே பெற்றி கோள்
(திருவைப் பிரிந்த மாலின் வெளுத்த வடிவு என்னுடையது
திருவுடன் கூடிய மாலின் வர்ணம் உங்களது )
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்னுமதுக்கு
அவ் வருகான வடிவு எங்கே பெற்றி கோள்
அவர்களுக்கு உள்ளது ப்ரஷீண அசேஷ பாவமே இறே என்று
அத்தையும் வியாவர்த்திக்கிறது –
(முக்தன் பரமாத்மாவை அடைந்து பெறும் சாரூப்பியம் விட சிறந்தது அன்றோ உங்களது
அவன் அங்கு
இதுவோ இங்கேயே
விண்ணுளாரிலும் சீரியர் போல் அன்றோ
ப்ரஷீண-கழிந்த –
அசேஷ-ஒழிந்த
கர்ம பாவனையும்
ப்ரஹ்ம பாவனையும்
உபய பாவனையும்
இல்லையே
ஸாதனமாகக் கொள்ளாமல் ப்ராப்யமாகவே கொள்ளுவான் அன்றோ
ப்ரஹ்மம் ப்ராப்யம் மட்டும் அங்கே
ஜகத் வியாவாராம் வர்ஜம் அவனுக்கு
ஜகத் ரக்ஷணம் -இவற்றுக்குத் தானே உண்டு
சாதனதயா ப்ரஹ்ம பாவனையும் வேண்டா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் பிரமாணம்
நாங்களும் பாரதந்தர்யம் விட்டு உங்களை போல பண்ண அமையுமே )
இவ் வடிவைப் பெறுகைக்கு
சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு அதிகார சம்பத்தில்
எங்கே பெற்றி கோள் –
எவ்வாறு பெற்றீர் –
நாமும் பிரணயித்தவத்தாலே பெற விராதே
சாதன அனுஷ்டானம் பண்ண அமையும்
அத்தனை இனி -என்கிறாள் –
உயிர் அளிப்பான் -மாகங்கள் எல்லாம் திரிந்து –
விஷய விபாகம் இன்றிக்கே-
சர்வாத்ம ரக்ஷணத்துக்காக -லோகம் எங்கும் திரிந்து
பஹு வசனம்
பிரதேச அநியமத்தைப் பற்ற
(எல்லா ஆகாசங்களிலும் நியமம் இல்லாமல் திரியுமே )
நன்னீர் சுமந்து –
திரு வீதியிலே செறிந்து சேர்ந்து ஸ்ரமஹரமான தண்ணீரைக் கொண்டு நின்று –
ஏலக் குழம்பு ஏலக் குழம்பு -என்பாரைப் போலே
கடலில் உப்பு நீரைப் பருகி
அம்ருத ஜலம் ஆக்கிக் கொண்டு
நுந்தம் -ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
உங்கள் உடம்பு நோவ வருந்திப் பண்ணின தபஸின் பலமோ
இவ் வடிவு எங்கனே யாகப் பெற்றது –
சாதனாந்தரம்
ஸாத்ய
ஸஹஜ -மூன்றும் உண்டே
அனுக்ரஹத்தால் சாதனாந்தரம் பெற்று -ஸாரூப்யமா -என்று மூன்றும்
பக்திக்கு அங்கமான சரணாகதி
ஸ்வ தந்த்ர ப்ரபத்தியும் உண்டே
தாத்பர்யம்
மேகங்கள் பதில் சொல்லாமல் போக
கூப்பிட்டு
அங்கு இருந்தாகிலும் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ
தூதும் போக வில்லை
தலையில் காலையும் வைக்கவில்லை
ஸ்வர்ணன வரணையான அவள் -செய்யாள் அவள்
ஸ்வர்ணமும் மாணிக்கமும் சேர்ந்தால் போல் திருமால் திருமேனி வடிவு
என்ன தபஸ்ஸூ பண்ணிப் பெற்றீர்கள் என்று கேட்டால்
இதுக்கும் பதில் சொல்லாமல் போகிறீர்கள்
நானே ஊகிக்கிறான்
சர்வேஸ்வரன் நிர்ஹேதுக ரக்ஷணம் தீக்ஷிதத்தை
அவன் கார்யம் நீங்கள் ஏறிட்டுக்கொண்டு
ஜல பாரம் தரித்து
அவனே இந்த ஸாரூப்யம் -பெற அருளினான் போலும்
பரமம் குஹ்யம் -18 அத்யாயம் -பக்தி சாஸ்திரம்
யார் சொல்கிறானோ அவனே இந்த பலம் பெறுகிறான்
என்னையே அடைகிறான் சங்கையே இல்லையே என்றானே
ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷ்வபி தாஸ்யதி-
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய ஸம்ஸய–৷৷18.68৷৷
எவன் ஒருவன் மேலான ரஹஸ்யமான இந்த சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களிடம் வியாக்யானம் செய்கிறானோ
அவன் என்னிடத்தில் மேலான பக்தியைச் செய்து என்னையே அடைகிறான் -இதில் ஐயம் இல்லை
குஹ்யம் -சாஸ்திரம் -பக்தர்கள் இடம் வியாக்யானம் செய்தால் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி இதுவே உண்டாக்கும் –
ஐந்தாவது உபாயம் இது
சரம தமமான உபாயம் அன்றோ இது -சங்கை இல்லாமல் -நான் சொல்லியபடி சொல்லி பலன் கெடுபவர் பெறுவார்
ந ச தஸ்மாந் மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரிய க்ருத்தம–
பவிதா ந ச மே தஸ்மாதந்ய ப்ரிய தரோ புவி–৷৷18.69৷৷
இவ் வுலகில் மனிதர்களில் இந்த சாஸ்திரத்தை வியாக்யானம் செய்பவனைக் காட்டிலும் வேறு ஒருவன்
எனக்கு மிகவும் இனியது செய்பவன் இருந்தது இல்லை –
அவனைக் காட்டிலும் வேறு ஒருவன் எனக்கு வரும் காலத்தில் மிகவும் இனியவனாக உண்டாக்கப் போவதும் இல்லை
ஸ்ரீ கீதா சொல்பவனை விட யாரும் எனக்கு பிரிய தமன் இல்லை -நேற்றும் நாளையும் இதுவே –
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாத மாவயோ–
ஜ்ஞாந யஜ்ஞேந தேநாஹ மிஷ்டஸ் யாமிதி மே மதி–৷৷18.70৷৷
நம் இவர்கள் இடையே நிகழ்ந்த மோக்ஷ உபாயங்களைப் பற்றிய இந்த சம்வாத ரூபமான யோக சாஸ்திரத்தை
எவன் ஓதுகின்றானோ -அவனால் இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஞான யஜ்ஞத்தினால்
நான் ஆராதிக்கப் பெற்றவன் ஆவேன் என்பது என் அபிப்ராயம்
இது என் மதி -அத்யயனம் பண்ணுபவன் -உனக்கும் எனக்கும் நடந்த வார்த்தா லாபம் –
ஞான யாகம் தான் இது -நான் பூஜிக்கப் பட்டவன் ஆகிறேன் –
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு விருத்தம் -31-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –
September 29, 2011(தூது போகா விட்டாலும்
கடகர் இல்லை என்றாலும் ப்ராப்யர் தானே
திருவடியாவது தலை மேல் வைக்கக் கூடாதோ
வேங்கடத்துப் பதியாக வாழும் மேகங்களே
திருமலைக்குப் போக ஒருப்பட்டு -போவான் போகின்ற போல் -இருந்தும்
எனது கார்யம் செய்யாமல் இருப்பதே -என்று வெறுத்து அருளிச் செய்கிறார்
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-)
அவதாரிகை-
நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று
பரம பதத்தே தூது விட்டாள்-
அது பர பக்தி பர ஞானம் பரம பக்தி யுக்தர் ஆனார்க்கு அல்லது
புக ஒண்ணாத தேசம் ஆகையாலே-
அவதாரங்களிலே தூது விடப் பார்த்தாள்–
கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—
அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை இல்லை ஆகையாலே-
பிற்பாடர்க்கும் அனுபவிக்கலாம் படி
ஸூலபமான திரு மலையிலே
திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள்-
(தீர்த்தம் பிரசாதியாதே
பின்னானார் வணங்கும் சோதி அன்றோ அர்ச்சாவதாரம் -அதிலே தேங்கின மடுக்கள் போல் –
திருமூழிக் களம் -தூது -எம் கானல் அகம் கழிவாய் -9-7–பறவைகளைத் தூது அங்கு
ஆகாசம் -பறவைகள் இரண்டு சிறகுகள்
ஞானம் அனுஷ்டானம் -பக்ஷிகளுக்கு
இங்கு மேகம் -உதார ஸ்வபாவம் என்று இங்கு தூது -)
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-
பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-
பதவுரை
அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தை யுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழி கொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின் மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?
வியாக்யானம்-
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்–
திரு மலை நோக்கிப் போகும் மேகங்காள் !-
என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்-
சொல்லுகிறிலிகோள்–
திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே
போகிற்றவற்றை கண்டு
சொல்ல மாட்டிகோள் ஆகில்
உங்கள் திரு அடிகளை என் தலையில் வையுங்கோள் என்றால் வைப்புதிகளோ ?
திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?
(ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே
எனது கார்யம் செய்யா விட்டாலும் தாஸ்யம் மாறாதே
புணர்த்த கையினாராய் எனக்கும் வணங்குமின்
மேகங்களை-அப்ரோக்ஷித்து – முன்னிலையாகவும் -சம்போதமாகவும் கொள்ளலாம்
படர்க்கையாகவும் கொள்ளலாம்
இசையிலம்
இசைவலம் -இசைவு அலம்-பூர்த்தி
இரண்டு பாட பேதங்கள் )
திரு அடியை பிராட்டி -இங்கே ஒரு இரா தங்கி போக வேணும் –
ஸுந்தர காண்டம் -விஸ்ராந்த -68-3-என்று அருளிச் செய்ய
ஒண்ணாது ஒண்ணாது என்று அவன் மறுத்து போனால் போல
போகா நின்றன
அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம் மிசை
அழகிய பொன்னாலும்
பெரு விலையாலும் மாணிக்கங்களால்
(பொன்னில் அழுத்தப்பட்ட மா மணிகள் என்றுமாம் )
திக்குகள் உண்டான இருளை சுரமேற்று நிற்பதும் செய்து-
(சுரமேற்று நிற்பதும் செய்து-குகைக்குள் போகச் சொல்லி விரட்டி விடுவது )
வலிதான தாளை உடைத்தாய் இருக்கும் திரு மலையிலே —
சிமயம்-சிகரங்கள் என்றுமாம் —
(மலைச்சிகரங்கள் என்றும்
சிகரங்களின் நடுவில் என்றுமாம்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் அன்றோ )
மின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே –
ராஜாக்களுக்கு எடுத்து விளக்கு பிடிக்குமா போலே-
போவான் வழிக் கொண்ட
போக்கிலே உத்யோகித்த வழி கொண்ட மேகங்காள் இசைமின்கள் தூது என்றால் இசையுமோ?
என் தலை மேல்-அசைமின்கள் என்றால் அசையுமோ ?–
(அந்த மேகங்கள் -படர்க்கை பரோக்ஷம் )
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்கள் காண்மின் என் தலை மேலாரே –
என்னுமா போலே –பெரிய திருமொழி -7-4-1-
இவர்க்கும் பகவத் விஷயத்தில் யாரேனுமாக ஓர் அடி முற்பாடாய் இருப்பவர்
திரு அடிகள் உத்தேசம் என்கிறார்-
தாத்பர்யம்
கீழ் அனுப்பின்ன அன்னங்களும் குருகுகளும்
தனக்காக தூது செல்லாமல் உலாவி இருக்க
மேகங்களைக் கண்டு தூது விட்டு பிரார்திக்கிறாள்
ஓ மேகங்களே
நா நா விதமான பொன்னாலும் மாணிக்கங்களாலும் பரவும் ஒளியை
சர்வ திக்குகளிலும் தீப்தி யுடைய திருமலைக்கு யாத்திரை செல்வதற்காகவே போகும் மேகங்களே
அக்ரூர யாத்திரை -திருவேங்கட யாத்திரை -அர்ச்சிராதி கதி
மூன்றுமே நித்தியமாக அபி நிவேசம் கொள்ள வேண்டுமே
மின்னி முழங்கிப் புறப்படும் உங்களைத் தொழுதேன்
ஆண்டாளும் அசேதனம் காலில் விழுந்தால் போல் இவளும் விழுகிறாள்
கீழே சொன்னவை செய்யாமல் போனாலும்
இனி உங்கள் திருவடிகளை எனது சிரசில் அமர்த்தி அடியேனை
கிருதார்த்தராக ஆக்க வேண்டும்
ஆறு கால்கள் -கமன சாதனம் சிறகுகள் தானே
ஆச்சார்யர் -பத்னி -புத்திரர் மூவர் -திருவடிகள் ஸ்பர்சமும்
பூர்ணமாக கிடைக்க வேண்டுமே
இதற்க்காகப் பிரார்த்திக்கிறாள்
இத்தையாவது பிரயோஜனம் ஆக்க வேண்டும் – என்கிறாள் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு விருத்தம் -30–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –
September 29, 2011(அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
அஞ்சிறைய மட நாராய்
வண்டானம் -நாரை வகை ஓன்று
தலைவி தூது துறை
தொழுது காயிகம்
இரந்தேன் -வாஸா
மானஸா -உப லக்ஷணம் கொள்ள வேண்டும்
நெஞ்சுக்குத் தூது -அவன் இடம் ஒன்றி உள்ளதே இது –
கண்ணன் வைகுந்தனோடு -ஸுலப்யம் காட்டி அங்கே கூட்டிப் போனானே
நெஞ்சினார் -ஷேப யுக்தி -அவன் கொண்டாடியதாகவுமாம்
அவர் இடம் நீர் செல்லீரோ -இதுவோ தகவு
கூட்டி வந்தால் மறந்து முடியலாம் அன்றோ
இசைமின்கள் பாட்டுப்பாடுமா போல் சொல்லுங்கோள் )
அவதாரிகை-
சிலரை தூது போக விட்டால் ,அவர்கள் வரும் அளவு செல்ல ,ஆறி இருந்து ,
சூது சதுரங்கம் பொருது போது-போக்கும் விஷயம் அல்லாமை யாலே
கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்
யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாஸூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3-
என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜித்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே
தனியே அகப் பட்டேன் என்று-
முதலிகள் எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது
ததி முக பிரப்ருதிகள் நலிய –
அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம் 62-2—என்று
உங்களுக்கு விரோதி ஆனவர்களை நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள் என்ன —
இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு–
இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் –
த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,
அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே
வாலானது வளர்ந்து ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது- அறைந்தது —
அம் மது வனம் இன்றாகில்
ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-
பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய மட நாராய் -1-4-
பதவுரை
அன்னம் செல்வீரும்–(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப்பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்–(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்–யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்
(என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ–உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு–கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரம பதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்–(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி–(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ–அவரிடத்து நீர் இன்னமும் போய்ச் சேராதிருக்கிறீரோ?
இது தகவோ–இது தகுதியோ?
என்று இசைமின்கள்–என்று சொல்லுங்கள்
வியாக்யானம்-
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
அன்னமாய் செல்வீரும் வண்டானமாய் செல்வீரும் –
தொழுது இரந்தேன்–
ஐந்த்ர வ்யாகரண பண்டித -சிறிய திருவடி –
ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-தூது போக கடவத்தை
உங்களை இரவா நின்றேன்-
என் தசை–
உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி–
கிடாம்பி ஆச்சானோடு நம்பி திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து
அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–
அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜனாத் அந்யத் குசல சம்ப்ரசனா அந்ந சேச்சதி ஜனார்த்தன– –
கேளா நிற்க
அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன
அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்-
(தொழுது இரந்தால் இரண்டும் வேண்டாமே )
கிருத அபராதச்ய ஹிதே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேனா அஞ்சலிம் பத்வா
லஷ்மணஸ்ய ப்ரசா தானாத் –கிஷ்கிந்தா காண்டம் -32-17-
தீரக் கழிய அபராதம் பண்ணின வுமக்கு இளைய பெருமாள் பிரசாதிக்கும் போது
ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்று திருவடி மகாராஜற்கு சொன்னால் போல —
அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க
இரப்பவும் செய்தேன்
தொழுகையும் இரக்கையும் தன்னதே ஆய் இருந்த படி –
உவாச ச மஹா ப்ராஜ்ஜா -யுத்த காண்டம் -17-11-
விபீஷணன் சரண் அடைந்து இரக்கம் படும் படி பல சொல் சொன்னது போல்
(வந்ததே போதும்
அஞ்சலியும் செய்தான்
உவாச ச மேலும் பேசவும் செய்தான் )
மறவேல்மினோ-
மறவாமல் கொள்ளுங்கோள் என்கிறாள்-
அங்கே புக்கவாறே
அஹம் அன்னம் -என்று-மறவாதே கொள்ளுங்கோள் —
அவன் வருகையால் உண்டான த்வரையாலே மறவாதே என்றால் ,
மறவாது-ஒழிவார்களோ என்னில்–
தொழுது இரந்தேன் -என்று
உருக்கி விடுகிறாள்–
பிரியேன் பிரியில் தரியேன்-என்றவர்
போய் மறந்தார்-
பேதை–பெரிய திரு மொழி –9-3-3–
பிரிவிலும் கலவியிலும் ,ஒரு வகையோ என்று இருக்கும் பருவம்
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-
நின்னை-
உன்னை பிரிகைக்கு சேதனன் அன்றோ நான்
பிரியேன் என்ற போதே –
பிரிந்தானாகவேயாய் இருக்கிறது காணும் இவளுக்கு
என் வென்னில்
பிரிவை பிரசங்கித போதே பிரிந்தானாம் அத்தனை இறே
அவனைத் தொடர்ந்து போன நெஞ்சம் மறந்தது
முன்னம் போவோர்க்கு எல்லாம் மறப்பேயோ உள்ளது என்று இருக்கிறாள் —
அவர் அங்குத்தைக்கு பரிவராய்
அலைந்த பரிவட்டமும் தானுமாய் திரிகிறார் இறே
நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம் –என்று பெருமாள்
ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில்
ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு
ஸ்ரீ குகப் பெருமாள் —
இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —
கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று
அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவை கொண்டு ,
தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?
சயானே சஹா சீதாயா –
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்-
படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே
சக்யா நித்ரா மயா லப்தும் —
என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –
யத்ர லஷ்மணா -என்ற
ஒரு தம்பி அன்றோ தொடர்ந்து போந்தானும்-
இளைய பெருமாளையும் கூட அசிர்ந்து இவர் இட்ட அடியிலே இட்டு
ஸ்ரீ குகப் பெருமாள் திரியா நிற்க-
அதந்திரிபிர் ஞாதி பிரார்த கார்முகை -என்று
இவர் தம்மையும் கூட அசிர்ந்து கொண்டு இங்கு உள்ளார் அடைய காத்த படி
(ஒரு நாள் முகத்திலே விழித்தாரை வடிவு அழகு படுத்தும் பாடு
இப்படி இருக்க ஆழ்வார் திரு உள்ளம் அங்கு ஈடுபட்டு இருக்கச் சொல்ல வேணுமோ )
நெஞ்சு கண்ணன் மாயையை அனுசந்தித்த அளவிலே பரம பதம் ஏறப் போயிற்று
என் நெஞ்சினார்-
பண்டு போல் அன்றியிலே அவனாலே கொண்டாட பட்ட அளவிலே சொல்கிறாள்
அவர் தான் இத் தலையை அழிக்க நினைத்தார் ஆகையாலே
பிரதான பரிக்ரமான நெஞ்சை படை அறுத்து-கொள்கைக்கு கொண்டாடா நிற்கும் இறே
கண்டால்–
காண்கை தான் அரிதாய் இருக்கும்
அவரைக் காணலாம்–
சதா பஸ்யந்தி -அவனைக் காண இயலும் —
இவரைக் காண அரிது இதே
கண்டால்
நாவிலும் பல்லிலும் நீர் அன்றியே இருந்தது —
என் செய்கிறார் என்று தாமாக வினவும் அவர் அன்றிறே
என்னைச் சொல்லி-
இன்னாளை அறிகை இல்லையோ என்று சொல்லி —
அப்ரமேயம் ஹிததேஜ யஸ்ய யா ஜநகாத்மஜா —-ஆரண்ய காண்டம் –37-18-
ஆற்றல் மிக்க யார் உடைய தர்ம பத்நியோ-என்னும் படி உள்ள சீதை பிராட்டி இப்படி உரைக்கிறாள் –
என்னும் அவள் கிடீர் இப்படி சொல்கிறார்
அவர் இடை –
அன்று பாடு ஓடி கிடந்த கிடை அறிந்தீரே
நீர் –
இப் போது கொண்டு வருகிறேன் என்று கண்ணும் கண்ண நீருமாக
போகும் படி அறிவீரோ
இன்னும் செல்லீரோ –
தூது போந்த உமக்கு
தூது வந்த பின்பும் போகீரோ —
ந காலஸ் தத்ரவை பிரபு-என்று இருந்தீரோ
அவ் இடம் கால க்ருத பரிணாமம் உள்ள தேசம் என்று அறிந்து இலீரோ —
பகலும் இரவுமாய் இருக்கும் காணும் அங்கு
அது தன்னிலும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாய் அன்றோ செல்லுகிறது
இது தகவோ-
பிரணயித்வம் இல்லை ஆகிலும் ஆன்ரு சம்சயம் வேணுமே–
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம சுத்வத்த ஏவம் ஆஸ்ரித –சுந்தர காண்டம் –38-41-
மற்றவர் துன்பம் அலட்ஷியம் செய்யாமல் இருப்பதே தர்மம்-
(தத்துவம் ஸ்வரூபம் புருஷகாரத்வம்
தகவு ஸ்வ பாவம் கிருபை
தத்வம் ஆற்று தாகவும் அன்று போல் )
இசைமின்களே —
மனிச் சடித்து சொல்லாதே போராதே சொல்லி
யவன் ஸ்வரூபத்தை அழித்தே போரும் காண் என்கிறாள்
அழிக்கை ஆவது
ஓராண் பிள்ளையாய் சொல்லுகிறது இல்லை —
ஓர் பெண்டாட்டியை சொல்லுகிறது அல்ல
உன்னை எத்தை சொல்லுவது என்கை இறே-மனசுக்கு ஆன போது —
அவனுக்கு ஆன போது
சொல்லுகை தான் மிகை-
தாத்பர்யம்
ஹம்ஸங்கள் போய் தன் தசையை அறிவியாமையாலே
தனது கண்ணில் தோற்றிய வேறே சில அம்சங்களையும் குருகுகளையும்
மீண்டும் தூது விட தொழுது இரந்து பிரார்திக்கிறாள்
ஸுலப்யம் காட்டி என்னைக் கொண்ட அவனுக்கு
மனது அந்தரங்க கைங்கர்யம் செய்து என்னை மறந்து சென்றது
தான் தனியாகத் தவிக்கிறேன்
நீங்கள் அங்கு சென்று அந்த நெஞ்சு என்னும் பெரியவரைத் தேடிக் கண்டு
எனது அவஸ்தையைத் தெரிவியுங்கோள்
பெண் பிறந்தார் வருத்தம் அறிந்த உமக்கு இதுவும் சொல்ல வேணுமோ
அறியாத அவனுக்கு சொல்ல வேண்டுமோ
உங்களைத் தொழுது யாசிக்கிறேன்
நீங்கள் எனது மனசு போல் அவனிடமே ஈடுபட்டு என்னை மறவாதே கொள்ளுங்கோள்
நீங்கள் எனது அபேக்ஷிதம் அங்குச் சென்று மனசுக்குச் சொல்ல வேணும் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு விருத்தம் -29-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –
September 29, 2011(முதல் நான்கு தூது பாசுரங்கள்
அன்னமோடு அழுதல் துறை
தூது போகாத அன்னம்
பரத்வ அந்தர்யாமி வ்யூஹ விபவ அர்ச்சை -இவையே தூது நாலுக்கும் விஷயம்
இது பரத்வ த்வயம் பொன்னுலகு ஆளீரோ
இதிலும் ஸ்ரீ வைகுந்தத்துக்கு தூது
பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-
குடியாலே வந்த சீர்மை யுடைய அன்னங்கள் என்றும் -இல்லாத -அன்னங்கள் என்றும்
வேறே ஆள் இல்லாமல் இவற்றை இரந்தாலும்
பெருமாள் உலகம் -ஸ்ரீ வைகுண்டம் –
நீல தோயதம் -மின்னன்ன மேனி
பெண் தூது போக மாட்டார் போல்
வினையாட்டியேன் நான் இரந்தேன் -பொன்னுலகு ஆளீரிலும்
வந்து இருந்து உம்முடைய பெடையோடும் -அலர்மேல் அசையும் அன்னங்கள் -அங்கும் உண்டே
என் நலம் கொண்ட பிரானுக்கு உரையீர் -அங்கும் உண்டே –
சேர்ப்பார்களை பக்ஷிகள் -ஞான அனுஷ்டானம் சிறகு )
(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )
அவதாரிகை-
பொரு நீர் திரு அரங்கா வருவாய் என்ற இடத்தில் ,
அருளுகிறேன் என்னுதல் –
அருளேன் என்னுதல் சொல்லாதே
பேசாதே இருந்த படியால் –
வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –
இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-
பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-
பதவுரை
குடிசீர்மை இல்–உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வண்ணப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறை கூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய்வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீல நிறத்தை யுட் கொண்ட
மின் அன்ன–மின்னல் போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையை யுடைமையோ?
வியாக்யானம்-
இன்னன்ன தூது-
இப்படி பட்ட தூது ,
தரித்து இருந்து விடுகிறது அன்று —
போகத்துக்கு விடுகிறது அன்று ..
சத்தா தாரகமாக விடுகின்ற தூது –
(இளைய பெருமாள் சுக்ரீவன் கூட இருக்க தரித்து இருந்து தூது விட்ட பெருமாள் போல் அல்ல
கிம் கார்யம் சீதயா மம போல் அல்லவே
அஞ்சிறைய மட நாராய் -தழுவ தூது -போகத்துக்குத் தூது -அலற்றுவன் தழுவுவன் என்றாரே அங்கு )
கதேஹி ஹரிசார்தூல புனராகமநாயது பிராணா நாமபி-சந்தேஹோ மாமாச்யாநாத்ரா சம்சய -சுந்தர காண்டம் 39-22—என்று
பிராட்டி திரு அடிக்கு தன் தசையை அருளி செய்தது போலே
எம்மை-
நான் இருக்கிற படியே அமைந்து கிடீர் இருக்கிறது
தூது போவார்க்கு
ஒரு ஐந்தர வியாகரண பண்டிதனை-தூது போக விடும் இடத்தை
உங்களைப் போக விடும்படியான தசை கிடீர்
ஆள் அற்ற பட்டு-
ஆள் அறுதி பட்டு ..
உபய விபூதி நாதனும் கூட ஆள் விட இருக்கும் அவள் இறே-
மிதிலா மண்டலும்
ஸ்ரீ கோசல வள நாடும் குறை வறுத்தாலும்
பின்னையும் குறை கிடந்ததற்கு ஒரு மூலையிலே பத்து கோடி பேர் பிணை உண்ணும் படிக்கு ஈடாக
பரிகரம் உடையவள் இறே
இப்போது ஆள் அறுதி பட்டேன் என்கிறாள்
இரந்தாள்-
அவன் தான் செய்யக் கடவத்தை இவள் செய்த படி ..
அத்தலை இட்டு விடக் கடவது இது இறே இவள் தான் விடுகிறது-
இவள்-
அப்ரேமேயம் ஹி தத் தேஜ -ஆரண்ய காண்டம் -37-18-என்னும்
இவள் கிடீர்
அன்னன்ன சொல்லா –
அப்படி பட்டவை சொல்லா
நான் சொல்ல விட்ட வற்றை சொல்லி ,
தானும் வேண்டும் வார்த்தை இட்டுக் கொண்டு சொல்லுகிறதும் இல்லை-
ஓலை பாதி தூது பாதி என்று சொல்லும் அது பொய்யாய் இருந்தபடி
நிரபேஷராய் இருப்பவர் சாபேஷர் கார்யம் செய்து-
தாங்கள் நிரபேஷராய் இருக்க வேண்டாவோ
பெடையோடும் போய் வரும் –
போம் போது -அனுபாவ்ய குணங்களை அனுசந்தித்து கொடு போம்
வரும் போது-அனுபூத குணங்களை அனுசந்தித்து கொடு போம் —
அடிமை செய்வார் மிதுனமாய் இருந்து இறே அடிமை செய்வது-
ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே
பெரிய திரு அடி ஸ்ரீ கீர்த்தியோடே
அத்ரி பகவான் அனுசூயையோடே-
பாதேயம் புண்டரீகாஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்
(ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே திருமால் இருஞ்சோலை சேவை உண்டே )
நீலம் உண்ட இத்யாதி —
அங்கு உள்ளார்க்கு சர்வ ஸ்வகாகம் பண்ணும் வடிவு –
நீலதோ யத் மத்யஸ்தா வித்யுல்லே கேவ பாஸ்கரா –நீளா ஸூக்தம்
பிரிந்த போது மின் இலங்கு திரு உருவு -திருநெடும் தாண்டகம் -25-என்னும் படியாய்-
கலந்த போது கரு முகில் ஒப்பார் -திருநெடும் தாண்டகம் -24-என்னும்படியாய் இறே இருப்பது
(நீலம் உண்ட மேனி – ஒளி படைத்த மேனி -மின்னல் கறுப்பை விழுங்கி –
கறுமைக்கு முக்யத்வம் -மின்னலுக்கு முக்யத்வம் இரண்டும் உண்டே
இரண்டுக்கும் பிரமாணம் )
பெண் தூது செல்லா -அங்கு ஆண் தூதோ செல்லுவது —
அபலைகள் தூது செல்லாதோ ?–
அபலைகள் தூது அங்கு செல்லாது என்று இருந்தீர்களோ ?–
அபலையாய் இருந்து வைத்து தூது விடுவாள் என்று இருந்தீர்களோ ?–
உங்கள் பாடும் அவன் பாடும் குற்றம் என் ?
என் குற்றத்தாலே இறே
(மத் பாபமே -நானே தான் ஆயிடுக )
அன்னன்ன நீர்மை கொலோ –
அப்படி பட்ட ஸ்வபாவங்களோ ?
குடி சீர்மை இல் அன்னங்களே —
உங்கள் பாடு குற்றம் உண்டோ ?
அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-
நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –
பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ —
நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே சொல்லிற்று இலி கோள் என்றும்-
ஸ்வாபதேசம்-
பகவத் விஸ்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி
பிராப்திக்கு ஸஹ காரிகளாய் இருந்தவர்களையும் கூட இன்னாதாக வேண்டும் படியான
தசையைச் சொல்லுகிறது –
தாத்பர்யம்
கீழ் நாயகியின் தசையை
திருத்தாயார்
திருவரங்கன் பதில் கிடைக்காமல்
அர்ச்சையில் பேசாரே
பரமபத நாதனுக்கு அங்கு கண்ட பக்ஷிகளைத் தூது விட
அவைகள் சொல்லாமல் தங்கள் கார்யமே பார்த்து இருக்க
ஓ ஹம்ஸங்களே
உங்களை விட வேறு ஒருவரும் இல்லாமல் தூது விட
அவன் இருதயத்தில் படும்படி
நீங்கள் முன்னமே அவன் சேவையைப் பெறுவீர்
எனது காரியமும் பார்க்காமல்
சொன்ன பின்பும் கூடப் போகாமல்
கூட சென்று அறிவியாமையால் ஸ்த்ரீகள் உடன் திரிகின்றிர்களே
திரு ஆபாரணங்கள் -அத் உஜ்ஜவலமான
நீல மேக ஸ்யாமளன்
ஸ்வயம் பிரயோஜனமாக போக வேண்டி இருக்க
போகாமைக்கு -வெறுத்து
ஒரு பென்னுக்குத் தூது போக்கத் தகாது
பெரும் குலத்தில் பிறக்காமல் இது செய்தீர்
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு விருத்தம் -28-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –
September 28, 2011(செங்கயல் பாய் வயல் திருவரங்கா
நாரங்கள் வாழ -அது தாயார் பாசுரம்
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
இங்கும் பொரு நீர் திருவரங்கா –
சங்குகளை ரஷிக்கும் காவேரி இருக்க -நீர் ரஷியாது இருக்கலாமோ
இது போல் முன்பு யாருக்குமே துன்பம் கொடுக்காமல்
கஜேந்திரன் திரௌபதி ப்ரஹ்லாதனன் போல்வார் அளவிலே விரைந்து வந்து ரஷித்தாய்
திருத்துழாய் நலிய நாம் இழப்போம்
நடுவு பிராப்தியே இல்லாத வாடையும் வந்து நலிய வேண்டுமோ
7-1-இந்திரியங்கள் நலிய -பெண் துன்பப்பட பட -தாயார் கேட்டது 7-2
இங்கு 27 -மகிழ்ந்து -இப்பொழுது 28-வியசனம்
நடுவிலே நடந்ததை-ஆச்சார்யர் வியாக்யானம் கொண்டு அறிய வேண்டும்
கீழ் உண்டான மானச அனுசந்தானம் இத்யாதிகள் )
அவதாரிகை-
கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே
அவ் வருகே ருசியை பிறப்பித்து
ருசியின் உடைய அதிசயத்தாலே
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து ,
நினைத்த படி பரிமாற பொறாமையாலே விஸ்லேஷமாக தலைக் கட்டிற்று.
சம்ஸ்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்க தொடங்கிற்று
தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே — என்று
யாதோர் அளவிலே நிர்வாகன் ஆனவன் கோபித்தால் ,அவன் பரிகரமும் அப்படியே நிற்கும்
திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது
வாடை காற்று குளிர்ந்து
அது தான் இப் பொழுது சுடத் தொடங்கிற்று
சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே
திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற அநந்தரத்திலே
உள்ளே புக்கு அணைக்க பெறாமையால் வந்த ஆற்றாமை-
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-
பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-
பதவுரை
வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக் கோர்த்தாதபடி-ஹிம்ஸியாதபடி –
பொரு–அலை மோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன் பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படி யிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) மாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக் கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?
வியாக்யானம்-
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் —
இதில் சேதம் (விரோதம்)இல்லை
இது செய்யலாம்
திரு துழாய்க்கும் தனக்கும்
பாத்ய பாதக-சம்பந்தம் உண்டாகையாலே ,
திரு துழாய் அங்கு உற்ற அசாதாரண பரிகரம் ஆகையாலும்-
தனக்கு திருவடி களிலே சம்பந்தம் உண்டு ஆகையாலும்
பாத்ய பாதக பாவ சம்பந்தம் தனக்கு பாதகமே ஆகிலும்
திரு துழாயோடு ஒரு சம்பந்தம் உண்டாக அமையும் போலே காணும்
ராஜாக்கள் முனிந்தால்
அவன் பரிகரமும் எதிரி யாம் போலே
சர்வேஸ்வரன் நெகிழ்ந்த படியாலே-
அவன் உடைய அசாதாரண திரு துழாயும் நலிகிறது
(அந்தப்புரத்தில் உள்ளாரைத் தண்டிக்க அசாதாரண பரிகரம் வேண்டுமே )
நடுவே-
பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றியிலே இருக்க
நலிகிறது என்
விபூதி சாமான்யத்தாலே நலிகிறது அத்தனை
நாங்கள் குடி மக்கள் அல்லோம்
(அந்தப்புரம் சேர்ந்தவர்கள் அன்றோ )
நடுவே-
ஸ்வரூப பிரயுக்தம் அன்று —
ஔபாதிகம் என்றுமாம் (ஆகந்துகம் -வந்தேறி என்றபடி )
வாடையைச் சொல்லுகையாலே
பூதங்களில் பிரதானத்தை எடுத்து ,
பிரக்ருதிக்கு உபலஷணமாக சொல்லிற்று
பிரகிருதி பிரவாஹத்தாலே நித்தியமாய் இருக்க ,
இத்தை உபாதி என்னும் படி எங்கனே என்னில்
அந்தவத்தாகையாலே-ஆதி மத்தென்று கொள்ளுகிறோம்
முகத்தில் அழுக்கை கழுவினால் அவ் வழுக்கு போனதை கண்டு வந்தேறி என்று கொள்ளலாகா நின்றது
அழுக்கு இந்த நாள் தொடங்கி பற்றிற்று என்று அறிய வேண்டுவதில்லை என்று
(பிரகிருதி என்பது ஒரு நாள் முடியுமே
அந்தவத்து என்றாலே ஆதிமத்தாக இருக்க வேண்டுமே )
வண்ணம் துழாவி –
வருகிற போதே கண்ணால் கண்டாரை விழ விட்டு கொண்டு வாரா நின்றது-
கலந்து பெற்ற-நிறத்தை அழித்து கொண்டு வாரா நின்றது
ஓர் வாடை-
அத்வதீயன் –
தனி வீரன் என்றுமாம்
உலாவும் –
தனக்கு எதிரி இல்லாமையால் மத முதிதமான கஜம் பாகனை
விழ விட்டு உலாவுமா போலே-வாரா நிற்கும்
நிராஸ்ரய்மாய் நில்லாது என்று இந்நிறம் நிற்கும் ஆஸ்ரயத்தை கணிசித்து உலாவா நின்றது-
அசம்பாதமாக உலாவா நின்றது
(ஒளியைத் தான் கவர வந்தது
ஒளிக்கு ஆஸ்ரயமான இவள் தகிருமேனியையும் அழிக்கவே உலவா நின்றது )
இவள் உடைய அவசய அதிசயத்தை கண்ட திரு தாயார்
பெரிய பெருமாள் திரு அடிகளில் பொகட்டு-
நீ இங்கே கிடக்கிற கிடைக்கைக்கும்
இவள் சோகத்துக்கும் சேர்த்தி கண்டிலோம் –
(தலைவி ஏங்குகிற பாசுரம் தான் இது -தாயார் பாசுரம் இல்லை இங்கு )
வள்வாய் இத்யாதி —
ஒரு ஸ்திரீ குற்றம் செய்தாள் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்து
இவளை ஹிம்சிக்க வேணும் என்ன-
புறம்புள்ள எல்லா வற்றையும் விட்டு ,
இவ் ஊரிலே உத்தேசய்மாய் இருக்கிற இவளை எத்தைச் சொல்லி
நாம் நசிவது என்று அருளிச் செய்தார்
வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க ,
அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி ,
எம்பார் திரு அடிகளில் சரணம் புக ,
ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய் இருக்கச் செய்தே
இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன
நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்
சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-
வளைத்த வாய் அலகை உடைத்தான புள்ளானது , சங்கை ஹிம்சியாத படி
தன்னுடைய நீர் திரை ஆகிய கையாலே எதிரியோடு பொருது
சங்கை ரஷிக்கும் படியான ஊரிலே இருக்கிறவனே
பொரு நீர்-புள்ளானது ஆமிஷித்தை கணிசித்து நீர் கரையிலே இருக்க
சங்கானது நம்மை ஹிம்சிக்க போகிறது என்று அறியாது
என்னை நீர் நோக்க வேணும் என்று சொல்லாது இருக்க
தன் பக்கலிலே வர்த்திக்கும் இவற்றுக்காக
அவற்றின் எதிரியான புள்ளின் முகத்திலே
தன் திரை ஆகிய கையாலே யுத்தம் பண்ணி ,
உள்ளே போராய் என்று கையை பிடித்து கொண்டு போகா நின்றது –
இத்தால் செய்கிறது –
அசேதனமான நீரானது தன் பக்கலிலே வர்திக்கிறவற்றை இப்படியே நோக்கா நின்றால்
பரம சேதனரான தேவரீருக்கு இவள் திறத்து என் செய்ய வேண்டா என்கிறது
(பவத் விஷய வாஸிந என்பதையே கொண்டு சராசரங்களை நல்பாலுக்கு உய்த்தினாயே )
சுத்த சத்வ மயமான ஆத்மாவை
ஜடமான சம்சாரம் நலியாமே நோக்குகைக்கு அன்றோ
தேவரீர் இங்கு வந்து கிடக்கிறது
திரு அரங்கா அருளாய் —
அருளாய் என்ற பொழுது அருளக் கண்டிலர்
இப்படி அருளாது ஒழிவது என் என்னில் ,-
ஈஸ்வரன்
1-கரண களேபராதிகள் நமக்குத் தந்தோம் ஆகில்
2-பக்த்யாதி உபாயங்களை காட்டினோமாகில்
3-இதுக்கு அடியான பிரமாணங்களை காட்டினோம் ஆகில்
அவற்றை அனுஷ்டித்து நம்மை வந்து கிட்டுகிறீர் என்று ஆறி இருக்க —
சர்வஞ்ஞனாய்
சர்வ சக்தியான நீ இவற்றை எல்லாம் இங்கனே பண்ணினாய் அத்தனை அல்லது
வேறு பட பண்ணிற்று இல்லையே
நான் உண்டாய் இருக்க கிட்டும் படி என் என்கிறார்
(கூடவே பாரதந்தர்யத்தையும் காட்டி அருளினாய் அன்றோ
அருளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் என்று அறிவிக்க வேணுமே )
(நான் உண்டாய் இருக்கும் படி கிட்டும் படி -அடைய
காட்டும்படி -உபாயாந்தரங்கள் பல நீ காட்டிப் படுப்பாயோ )
பகவத் விஷயத்தில் இதனை அவகாஹரான இவர் இத்தனை அஞ்சுவான் என் என்னில்
பகவத் பிரசாதம் அடியாக வந்த ஞானம் ஆகையாலே
த்யாஜ்ய பூர்வமாக பிராப்யத்தை காட்டிக் கொடு நின்றது
பிராப்யத்தில் ருசியும் மிகா நின்றது
ருசி அனுகுணமாக பிராப்தி அளவும் செல்லாமையாலே
அதுக்கு அடியான விரோதி தர்சனத்தை பண்ணி அஞ்சுகிறார்
சம்சாரத்தை பார்த்தால் பயப்பட வேணும்..
சர்வேஸ்வரனை பார்த்தால் பயம் கெட வேணும் ..
அவனைப் பார்த்துப் பயம் கெட்டிலன் ஆகில் பகவத் பிரபாவம் அறிந்திலனாம்–
சம்சாரம் பார்த்துப் பயப்படிலன் ஆகில் சம்ஸார ஸ்வாபம் அறிந்திலனாம் —
ஞான கார்யம் ஆவது
ஆகார த்ரயம் உண்டாகை–
(அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யாத்வம் அநந்ய போக்யத்வம் )
சம்சாரம்-மித்யை காண் என்னுதல்–
ஔபாதிகம் காண் என்னுதல்
ஜீவன் முக்தி காண் என்று சொல்லும் சூத்ரவாதிகளுக்கு அன்றோ இத்தை-
நினைத்தால் அஞ்சாது இருக்கல் ஆவது
(புத்த பாஸ்கர சங்கர )
பகவத் பிரபாவமும் அறிந்து ,
சம்ஸார ஸ்வபாவத்தையும் அறிந்து ,
சம்ஸார பய பீதனாய் இருப்பான்-ஒருவனைப் பெற்றால் அன்றோ
சர்வேஸ்வரனுக்கு மாஸூச என்னல் ஆவது —
இப்படி மாஸூச என்றால் அன்றோ
இவனுக்கு ஸ்திதோஸ்மி என்னாலாவது
(சித்த வேண்டா சிந்திப்பே அமையும்
உபாயாந்தரங்களில் போகாமல்
நிலை பெற்று நில்லுங்கோள்
பயமும் அபயமும் மாறி மாறிச் செல்லாமல் ஸ்திதோஸ்மி நிலை பெற்று இருங்கோள் )
சித்த வேண்டா சிந்திப்பே அமையும்
உபாயாந்தரங்களில் போகாமல்
நிலை பெற்று நில்லுங்கோள்
பயமும் அபயமும் மாறி மாறிச் செல்லாமல் நிலை பெற்று இருங்கோள்
திரு அரங்கா –
நீ இங்கு வந்து கிடக்கிறது
1-உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ —
2-போக பூமி தேடியோ —
3-ஒரு குறைவாளர் இல்லையாமையோ —
4-ருசி உடையார் இல்லாமையோ —
நீ அருளாது ஒழிகிறது என்
அருளாய்-
மதி நலம் அருளினன் என்றால்
அதன் பயனான
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ-
அறிவு கலங்கினார்க்கு இப்படி அருளாது ஒழிகை அநாதியோ —
இப்போது உண்டானது அத்தனையோ —
(அருளாத நீர் திரு நாமம் இப்போது அன்றோ பெறுகிறீர் )
உளவோ பண்டும் இன்னன்ன –
ஆர்த்தருக்கு பண்டு உதவினான் –என்னும் இடம் பிரசித்தம் அன்றோ —
1-திரௌபதிக்கு –
2-கஜேந்த்ரனுக்கு-
3-பிரகலாதனுக்கு
4-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு-
5-காகத்துக்கு –
தாத்பர்யம்
கீழ் பிரசாதம்-மானஸ மாத்திரம்
பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல் -அவசன்னராய்
விபூதி நலிய
திருத்துழாய் நலியட்டும்
வழிப் போக்கான வாயுவும் கூட
நிறத்தையும் கொண்டு என்னையும் கொள்ள வேண்டுமோ
மத்ஸ்யாதிகளை கொக்கின் வாயில் அகப்படாமல் காக்கும் திருக் காவேரி
பாயும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்து அருளும் நீர்
அருளாமல் உபேக்ஷிப்பது எதனால்
உன்னைச் சேர்ந்த நீர் ரக்ஷிப்பதிலேயே தீஷிதனாய் இருக்க
ஆபத் ரக்ஷணம் பண்ணுவதே ஸ்வபாவமாக இருக்கும் தேவரீர்
இப்போது எனக்காக கொண்ட நவநீத விரதம் எதுக்கு
மித்ர பாவேன விரதம் கொண்ட நீர் -இப்பொழுது நவீன விரதமாய் கொண்டுள்ளீரே –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு விருத்தம் -27-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –
September 28, 2011(தலைவி மாலை பெற்று மகிழ்தல் -துறை
பகவத் ப்ரஸாதம் பெற்றபின்பு பிரதிகூலமானவை எல்லாம் அனுகூலமாகுமே
செறுவாரும் நன்மை செய்வார்களே
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -நாயகி துன்பம் நீங்கிய திருவாய் மொழி அதுவும்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-
பெரியாருக்கு ஆட் பட்டால் பெறாத பயன் என்ன
திருத்தண் கா இப்பொழுது தான் குளிர்ந்ததானது
இதுவே கீழ்ப்பாட்டுக்கும் இதுக்கும் சங்கதி
மாலைப் பிரசாதம் பெற்றாள் -அதன் பயனே இது )
அவதாரிகை-
நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை
இவன் கடாஷித்தால் இவ் வருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்
ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-
தாங்களே வந்து ,அனுசரிக்குமா போலேயும்
பிராட்டியை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணின ஏகாஷீ ஏக கர்ணிகளான
ராஷசிகள் அனுகூலித்தால் போலேயும் –
(வேற்றுப் பொருள் வைப்பு அணி இது என்பர்
காற்று குளிர்ந்து இருப்பதுக்கு ஹேது சொன்னவாறு )
சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-
பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –
தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்–8-6-
பதவுரை
செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நி ஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
ஏழு அரை நாழிகை -மூன்று பங்கு 22 அரை -சாயம் சந்தை காலம் சந்தை சேர்ந்து ஏழு அரை நாழிகை ஆகுமே
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மை மொழியின் படியே,
அ வாடை–அந்தக் காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய
குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோ வந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.
வியாக்யானம்-
சேமம் செம்கோன் அருளே —
இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை
அவனே இதுக்கு ரஷையாமோபாதி–
இவன் தானும் தனக்கு அநர்த்த அவஹானாய் இருக்கும்-
எங்கனே என்னில் —
ஜகத்தை உண்டாக்குகையும் ,
சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி
திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும்
இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது
மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்
அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே இருப்பது அவன் படி
(பக்தி உழவனின் பெரும் உபகாரங்கள் –
ஷேம க்ருஷி பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார்
யாதானும் பற்றி அன்றோ நாம் இவற்றைத் தப்புவது )
இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்
அவன் சைதன்யம்
உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி
இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்-
தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று
(உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
நாம் பாராமுகனாய் இருக்கும் அவஸ்தையிலும் அவன் ரஷித்தே தீருவான் )
செம்கோன்-
செவ்விய நிர்வாககன் —
பதிம் விஸ்வஸ்ய —
யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி
பாரார்த்யம் ஸ்வம் —என்று சொல்லலாம் படி இருக்கும்-
அருளே-
அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —
இடையீடான பக்தியாதிகளும் வேண்டா
செருவாரும் நட்பாகுவார் என்று —
சத்ருக்களும் பந்துக்கள் ஆவார் என்று
சத்ருக்களும் மேவுற்று செய்வார்கள் என்றுமாம்-
த்யாஜ்யமும் ,பகவத் கடாஷத்தாலே உபாய சக காரியாய்
ஸ்வ யத்ந் த்யாஜமாய் இருக்கும்
(த்யாஜ்யமான சரீரமும்
அவன் அருள் இருண்மதால்
உபாயத்துக்கு ஸஹ காரியாய் -கைங்கர்யத்துக்கு
ஸ்வ யத்ன உபாயாந்தரம்
த்யாஜ்யம் -உபாயாந்தரம் என்று கொண்டு
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் செய்தவை உபாயாந்தரம் இல்லை –அதிகார பூர்த்திக்கு சித்த்யர்த்தம்
கைங்கர்யத்துக்கு உத்தேச்யம் அன்றோ இவை )
ஏமம் பெற –
பழமை பெற
ரஷை பெற என்றும் ஆம்
வையம் சொல்லும் மெய்யே —
லௌகிகமான பழம் சொல்லும் சத்தியமாய் இருந்தது-
சாவாதிருந்தால் காண்பன சில உள என்னுமா போலே —
கல்யாணீ லௌகிக ப்ரதிபாதிமே -ஏதி ஜீவநதி இத்யாதி-
(நூறு வர்ஷம் ஆனாலும் வாழ்ந்து இருப்பவனுக்கே ஒரு நாள் ஆனந்தம் கிட்டும் )
பிராட்டி அசோகா வனத்திலே இருந்து-
இனி முடிய அமையும் என்று நிச்சயிப்பது
பெருமானை காணலாம் ஆகில் இருந்தால் ஆகாதோ-என்பதாமே-
அவ் அளவிலே திரு அடி சென்று
ராம குணங்களை சொல்லி ,முகம் காட்டின அளவிலே ,
இங்கனேயும் ஓன்று சம்பவிப்பதே-என்று ஹிருஷ்ட்டையாய் –
ஒரு காலத்தில் சோகித்தார் முடியாது இருந்தால் ஒரு காலத்தில் ஆனந்திக்கலாம் என்று சொல்லுவது-
இன்று வாடை குளிர்ந்த படியால் மெய்யாகக் கண்டோம்
(பத்து மாதங்களில் ஒன்பது மாதம் இருந்தால் தானே
இப்பொழுது திருவடி வார்த்தை கேட்கவும் முடிந்தது
பின்பு ராமர் கூட கூடவும் பெறுவாள் )
பண்டு எல்லாம்-
சிறை கூடத்தில் பிறந்து
வளர்ந்தாரை போலே
என்றும் பிரிவேயாய்
வாடையின் கையில் நோவு பட்ட படி
அறை கூய்–
மகாராஜர் பெருமாளை அண்டை கொண்டு ,
வாலியை அறை கூவினால் போலே
இங்கு வாடை தனி வீரனான படி
யாமங்களோடு எரி வீசும் —
பாதகத்தில் உறைப்பாலே கோமுக வியாக்ரம் என்கிற படியாலே
(பசு தோல் போர்த்திய புலி போல் )வேறு பட்டு வருகிற படி-
வீசும்-
தன் மேல் விரஹ அக்நி கதுவாமே கடக்க நின்று வீசும் படி-
லௌகிக அக்நி போல அன்று இறே நரக அக்நி —
அத்தை நீர் என்னலாம் படி இறே
விரஹ அக்நி
நம் கண்ணன் தண் அம் துழாய் இத்யாதி —
துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்-
(வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே )
அழகியதாய்
ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —
சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா-
ஸ்பர்சிக்கவே அமையும்
அவ் வாடை –
முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் —
முன்பு அப்படி தடிந்து போன வாடை
ஈதோ வந்து தண் என்றதே —
இப்படி வந்து குளிரா நின்றது-.
ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-
தாத்பர்யம்
கீழ் பகவத் ஆலாபத்தால் நொந்த -சம்சார அச்சத்தாலே பாதிக்கப்பட்ட ஆழ்வாரை
தலைமகனே ஆஸ்வசிப்பித்த அளவில்
அவற்றில் நெஞ்சு ஊன்றி –
சந்தோஷமாக
பாலை நிலத்தில் நடந்து இழைத்த துக்கம் தீரப்பெற்று
திவ்யதேசங்களைக் காட்டக் கண்டு ஸூகித்த ஆழ்வார்
அவனால் சாத்தி அருளப்பெற்ற திருத்துழாய்
இப்போது குளிர்ந்து ஆனந்தகரமாய் இருக்கக் கண்டு
தெய்வம் அநு கூலித்தால் -அனைத்துமே அநு கூலிக்கும் என்கிற உலக மொழியை
இப்பொழுது யதார்த்தம் என்று அறிந்தோம்
பகவத் அருள் இல்லாவிட்டால் இன்று உள்ள அநு கூல்ய பதார்த்தங்கள் எல்லாம் பிரதிகூலிக்கும் என்றும்
அருள் இருந்தால் துக்கம் தருமவை எல்லாம் ஸூக கரம் ஆகும் என்கிற யதார்த்தம் நன்றாகவே இப்பொழுது அறிந்தேன்
ஜகத் ரக்ஷணத்துக்கு ஸ்ரீ யப்பதியே ஏக ரக்ஷகம் என்றும்
தேவ தாந்தரங்களும் சாதனாந்தரங்களும் ரக்ஷகம் ஆகாவே
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
திருவாசிரியம்-3- திவ்யார்த்த தீபிகை /-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
September 28, 2011
–-இனி தேவர்க்கு உதவி பாற் கடல் கடைந்த விருத்தாந்தம் அருளுகிறார்
தலை பக்கம் பிடிக்க தேவர் இடம் சொல்லி கொடுக்க அசுரர் அதை கேட்டு பெற்றார்கள்-ஆயாச பட வைத்தான்-
குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்க கலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரு முர வொலி மலி நளிர் கடல் பட வர
வர கடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனிதாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–
-இப் பாட்டில் பக்தி பண்ணும் விஷய எல்லை –யார் வரைக்கும்- அவனில் தொடக்கி ததீய சேஷத்வம் வரை செல்வதை-அடியார் அடியார்–அடியோங்களே –சப்த பர்வ ஏழு தடவை அருளினாரே–மதுர கவி ஆழ்வார் நிலைமை பெற பெறுவோம்
அதை லோகம் கண் காணும் படி வந்து தோன்றியவன் பண்ணலார் பரவும் பரனே பவித்ரனே
தெய்வம் மூவரில் முதல்வன் அடுத்த அர்த்தம்-
ஆபரணம் விகசிக்கும் திரு மார்பு உடையவனாய் —பாற் கடல் கடையும் பொழுது இவை அசைய
-நானும் கடைவன் இங்கு அங்கு நானே கடைவன்-மெய் அறிவன் குலசேகரர் -புலவர் நெருக்கு உகந்த பெருமான் போல் —
கண்ணன் ஸ்பர்சத்தால் வாசுகி படம் விரித்து கொண்டு–
–நாக்கு நனைக்க அமையும் ஒரு நாள் வீதி வழியே கருட வாகனம் வர சொல்லு-
-ஒப்பூண் உண்ணாமல் –ஆளாகவே இசையும் கொல்-சேஷமாய் அடிமைகளாய் -ஆளாகவே -ஏ வ காரம்—
இதில் அவன் அடியார்கள் அளவும் சென்று
ததீய நிஷ்டையில்
தமக்கு உள்ள ஆசையை வெளியீட்டு அருளுகிறார் –குறிப்பில் கொண்டு -என்று தொடங்கி
தனி மா தெய்வம் -என்னும் அளவும்
எம்பெருமான் உடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அருளுகிறார் –
உலகம் மூன்று
நெறிபட குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ் –
தன்னால் படைக்கப் பட்ட மூன்று உலகங்களும்
கீழ் வழி செல்லாமல்
நல வழி படிந்து
தன்னை லபிக்க
அதனால் எங்கும் பரந்த புகழை உடையவன் -என்கிறது -ஆணை மெய் பெற நடாய
ஆணை ஆஞ்ஞை சாஸ்திரம்
ஸ்ருதி ச்ம்ருதிர் மமைவாஞ்ஞா யஸ்தா முல்லங்கய வர்த்ததே
ஆஞஞாஸ் சேதி மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ -என்று
தானே அருளிச் செய்தபடி
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும்
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து -என்றபடி
சாஸ்த்ரங்களை நன்று பிரசாரம் செய்து அருளி –
ஆணை மேற் பெற நடாய தெய்வம் மூவரில் -ப்ரஹ்ம இந்த்ரன் ருத்ரன் மூவர்க்கும் நியாமகன் -என்றபடி
தெய்வம் மூவரில் முதல்வனாகி -அரி அயன் அரன் -மூவரில் தான் முதல்வன்
சுடர் விளங்கு அகலத்து
தேஜஸ் மிக்கு திரு ஆபரணங்கள் பூண்ட திரு மார்பை யுடையனாய்
அமுதம் கடைகிற அக்காலத்தில் கடலானது
ஒவ்வொரு அலையும் மலை பெயர்ந்தால் போலே
வரை புரை திரை பொரு-மலை போன்ற பெருத்த அலைகள் மோதப் பெற்ற
இது கடலுக்கு விசேஷணம்
உருமுரலொலிமலி-என்பதும் கடலுக்கு விசேஷணம்
உரும் என்றது உருமும் இடிக்கு பெயர் -உரும் முரல் -இடி போலே கோஷிக்கின்ற
அது மலிந்து நிறைந்து -என்றபடி
த்வனி இடி இடித்தால் போலே-
குல பர்வந்தங்களும் நடுங்கும்படி பெரு வரை வெரு வர –
நளிர்கடல்
ஸ்வா பாவிக்க குளிர்ச்சியை சொன்னது அன்று
எம்பெருமான் உடைய கடாஷத்தால் குளிர்ந்து
அடியவர்க்கு ஆளாகவே
பிரயோஜனாந்த பரகளுக்காக உடம்பு வோவ
தங்கள் அமிர்தம் இப்படி
உப்புச் சாற்றை கடைந்து அருளுவதே
என்று ஈடு பட்டு இருக்குமடியவர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஆளப்பட்டு இருக்க
ஓவாது -ஒரு ஷணமும் விடாமல்
ஊழி தோறு ஊழி -சகல காலமும்
என்றபடி –
————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .