Archive for February, 2011

திரு நெடும் தாண்டகம்-22- நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 28, 2011

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப் பால்
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கன மகர குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வள வுண்டு எம்பெருமான் கோயில்? என்றேர்க்கு
இதுவன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22

இதுவும் தோழிக்கு சொல்லும் பதில்–
சேர்த்துக் கொண்டதை சொல்கிறாள் பல பல பண்ணி–
சங்கீதம் நட்டபாடை ராகம் -பாடி நெருங்கி வந்து –நான் மயங்கி இருக்க —
சிறிது வெட்கம் கொண்டு–மேகலை =ஆடை–நான்கு தோள்-அணைத்தேன் –
ஊர் கேட்டேன் –வேட்டகம் தெரிந்து கொள்ள -கேட்டது திரு மணம் கொல்லை கை காட்டி திரு ஆலி என்றார் தாமே –
மயக்கி சேர்த்துக் கொண்டதை சொல்கிறாள் —
அதச்மின் தத் புத்தி -அது இல்லா இடத்தில் அந்த புத்தி -தேவர் இல்லாதவன் இடம் தேவ புத்தி பண்ணினேன் முன்பு–
அழகை காட்டியே மயக்க முடிய வில்லை–விலக நினைக்க ஸ்ரீ பாதம் நகர வில்லை-
நித்ய சாபேஷம் -ஆத்மா  முன் நித்ய நிரபேஷம் -கால் நகத்தாமல் –இழவு தன்னது
சேஷ வஸ்துவை சேஷன் தானே பிரயத்தனம் பண்ணி கைக் கொள்ள வேண்டும் -லபித்தால் பெரும் பேறு தன்னது தானே —
பிரிய முடியாத காமுகத்வம் –அபிமானம் கொண்டு–

அழகு கொண்டு தான் ருசி பிறப்பிப்பான்
கைங்கர்யம் கொடுத்து பக்தி வளர்த்து –ருசி ஜனக விபவ லாவண்யம் –
நின் பால் ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெருக வைக்கும் அழகனூர் அரங்கம் அன்றே —
அழகு சீலம் சக்தி கொண்டு கார்யம் ஆகாமல்-முன்பு திரு ஆய்ப்பாடு- நாவலம் பெரிய தீவில் அற்புதம் -கேளீர் –
அங்கு குழல் ஓசை ஆச்சார்யர் -கோபிமார்களுக்கு –
இங்கு பர கால நாயகி -தான் நேரே மயக்க -பண்ணை நுனுங்கினான்–
இவர் உடைய ஏவம் பஹுவிதாம் சிந்தாம் இருக்கிற படி–
ஆழ்வார் மைத்ரேயர் பகவான் இருந்த படி ஆழ்வார் -அவா –
பல படி சிந்தை உட் பட்டான் திரு வடி அசோகா வனத்தில் இருந்த நிலை போல —
மதுரம் வாக்கியம்  ஹ -இன் இசையில் ஸ்ரீ ராம கதை பாட –
மிருக வேட்டைக்கு வந்தோம் ஆகையால் பாடுவார் யார் கேட்ப்பார் இல்லை–
பண்ணை இசைக்க அதில் ஈடு பட்டு மேல் விழுந்து கலந்தேன் பதில் –
இது தான் செய்த படி –
மரத்தின் நிழலில் ஒதுங்குகை நீரை முகத்தில் அடிப்பது பண்ணை இசைப்பது எல்லாம் வேட்டை ஆட வருபவர் பண்ணுவது தானே
சிந்தயந்தி வேணு கானம் கேட்க ஆனந்தம் பட்டு புண்ணியம் கணக்கு போக /போக முடியவில்லை துன்பம் பட்டு பாபம் போக
பரமம் சாம்யம் ரேழி இருந்து சென்றாளே-
நட்ட பாடி- நாட்ட குறிஞ்சி நைந்து -மனத்தை மயக்க வல்ல -பாடுபவரும் கேட்ப்போரும் மயங்கும் படி
குணத்தால் நை வளம் பேர் -காதில் கடிப்பிட்டு மருளை  கொடு பாடி -இந்தளம் ராகம் அங்கு –
நந்தி புர விண்ணகரம் நைவளம் பேதை நெஞ்சு அற பாடும் பாட்டு -ஆழ்வார்–ஓன்று -அத்வீதியம் —
பக்தியில் அசக்தனுக்கு பிர பத்தி போல

அழகு -பக்தி யோகம் போல -நைவளம்-பிர பத்தி -அதுவும் பலியாவிடில் வேறு கதி இல்லை–
சரம உபாயம் பற்றினது போல காந்தன் பற்றிய சரம உபாயம் இது ..
பயத்துடன் பாடினான்-நுனுங்கினான் —
ஆராயா -ஆராய்ந்து –ஆலியா அழையா–வினை எச்சம் –
என் முகத்தை பார்த்தான் வயிரம் வெட்டுவதை அரக்கு  வெட்டும்  –
புருஷோத்தமன் நித்ய நிர்விகாரம் அவனையே உருக்க -மிருது ஸ்வாபம் –
உன் அடியாரோடு ஒக்க எண்ணி இருந்தீர் –
நம்மை நோக்கா — ஆத்மநீ  பகு வசனம் –
அலட்சிய போக்கு காட்ட -உள்ளம் கரைந்து -இருந்தது -பொறி புறம் தடவி சலனம் இன்றி இருக்க –
லஜ்ஜை பிறந்தது -சரம உபாயமும் வீண் என்று –போல் -நேராக லஜ்ஜை இல்லை-
நேராக பார்க்காமல் சோலை பார்ப்பது –
பிர பின்னர் தம்மை அடைய அழுவன் தொழுவன்  ஆடி காண்பான் பாடி அலற்றுவன் –
பட்ட பாட்டை எல்லாம்- அபிமத விஷயத்தில் -இவர் பட்டார் –
குழந்தை பண்ணுவது  வேதாந்தி பண்ணுவது ஆடியும் செய்து பார்த்து —
பக்கம் நோக்கி நாணி கவிழ்ந்து இருப்பன்—பின்னும் நயங்கள் செய்வளவில்–நீச பாஷாணம் செய்து –
பண்ணில் இட்டு நுனுங்கினான்-
நாம் பிர பத்தியில்  மகா விசுவாசம் இருந்த படி தானே அவன் மகா விசுவாசம் –பின்னும் பாட –
நயம் -ஒரு பாட்டு நயங்கள்  பல -தொகை இல்லை காண் —

ஆராயா நம்மை நோக்கா -பல சாரச்யங்களை நீயும் கூட காண பெறவில்லை —
மனமும் கண்ணும் ஓடி-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்–
கடல் உடைந்தால் தடுக்கலாம் –கடல் போல் காமத்தவர் ஆழ்வார் –தனித் தனியே ஓடி போயின —
கண்ணால் பார்த்து  அதன் பின் நெஞ்சு போகாமல்–
ராமம் மே அனுகதா -சொத்து ஸ்வாமி பின் போனது சமுத்ரம் போல காம்பீரம் கடலில் தொலைத்த பொருள் கிட்டாதே
தொடு உணர்வு இருக்கா பார்த்து சொல் என்கிறான்
தசரதன் ரிஷீகேசன் காணும் அளவில் தான் புலன்கள் நாம் உடன் -பின்பு இருக்காதே –
ஓடி திரும்பவும் பார்க்காமல் ஓன்று ஒன்றை பார்க்காமல் என்னையும் பார்க்காமல் போனதாம் –
பாட்டினால் உன்னை நெஞ்சத்தில் இருந்தமை காட்டினாய் ஆழ்வார்களுக்கு
பாட வைத்தான் முதலில் அப்புறம் /மொய்ய சொல்லால் இசை மாலைகள் பாடி உணர்ந்தேன்  –
அது போல மனம் முதலில் போக கண் பின் சென்றது
இங்கும் நித்ய நிருபாதிக சம்பந்தம் புக்கது –எம்பெருமான் -தன் மிடற்று ஓசையாலே என்னை எழுதி கொடுத்தேன் —
அவன் நினைத்த அளவு அன்று காண் நான் அழிந்த படி–
திரும்பி பார்க்காமல் இருந்த நான்-மனமும் கண்ணும் ஓடி திரு வடி கீழ் அணைய –
என் முலையை தழுவிக் கொள்ள நட்பு எதிர் பார்த்து இருக்க தளிர் புரையும் திருவடி தலை மேலே –
கலங்கின திசையிலும் இதே நிலை–அடங்கி ஞான திசையிலும் அழியும் பொழுதும் –
தேறியும் தேறாமலும்  மாயோன்  திறமே இத் திரு —

இப் பால் -என்னைக் கிட்ட அவன் பண்ணின வ்யாபாரங்கள் முன்பும் இங்கும் சொன்னேன் —
மகா பாரதம் ஒக்கும் இவை- அடைவு பட பேச தெளிவு இல்லை எனக்கு —
ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி பட்ட பாடு தொடக்கம் சொன்னேன்-மனசும் கண்ணும் ஓட -அதற்க்கு பலன் —
பல ஸ்ருதி கேட்கல் ஆகாதோ–
கை வளையும் மேகலையும் காணேன் –
அஹம் ஒடுக்கு உண்டு போனால் –திருடு போனால் -கண்டது எது காணாது எது என்று
கலவிக்கு பின் கண்டது காணாதது -த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆனது –அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆனது –
அகங்காரம் மமகாரம் தீர்ந்தது  வளை  கழல்வது விரகத்தில் அன்றோ –
சங்கு தங்கு முன்கை நங்கை– சீரார் வளை –கழலாது–
கதை -போய் விட்டு வருகிறான் சொன்னதும் வளை வெடிக்க –
நயாமி -உன்னை கூட்டி போகிறேன் நான் போக  வில்லை மீதி வளை போனதாம் ஆனந்தம் பூரித்து —
சம்ச்லேஷ ரசத்தில் பூரித்து வெடித்து போனதாம்–
வேம் எனது உயிர் –வேல் வளை மேகலை -ஆழ்வார்..பரி யட்டம் அவிழ்ந்ததை சதஸ் பேசலாமா –
எம் வஸ்த்ரம் காண வில்லை உடம்பில் அவன் வஸ்த்ரம் உண்டு–உத்கடா அவஸ்தை —
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில்  கரை அளிக்கும் -திரு மழிசை பிரான்-ஆரா அமுத ஆழ்வார் —
காணேன்-புக்க இடம் அறிந்திலேன் –எல்லா வற்றையும் என் இடத்தில் பார்கிறவன் -என்னது உன்னது ஆவி –
ஸ்வாபதேசம் -அகங்கார மம காரம்/ ஐஸ்வர்யம் கைவல்யம் மேவுகிற கலை த்யாஜ்யம் —
ஸ்வரூப ஞானம் ஏற் பட்டால் -அடிமை என்று தெரிந்த பின் -நான் போக்தா என்று நினைத்தால் அதமம் –
எனக்கு போக்கியம் -கூடாது –அவன் தான் என்னை அனுபவிக்கிறான் உத்தமம் —
நாம் அன்னம் -போக்கியம் ஆக இருப்பதே ஸ்வரூபம் —
காணேன் -கழன்றது இல்லை–
விரோதி போக்க பிரார்த்திக்க வில்லை –தானும் போக்கிக் கொள்ளவில்லை –
போகத்தில் அந்ய பரர் ஆக இருக்க தானே போனது — -இச்சாலே தன் அடைவே  போகும் கழன்று போகும் –
அவரே போக்க வில்லை — நீயும் வேண்டாம் அவனும் வேண்டாம் தன் அடைவே போகும் —
எதைப் பார்த்தாய்- கண்டேன் –
அத் தலையில் உள்ளதைப் பார்த்தேன்
விரோதி கண்டிலேன்
போக்யதை குறைவற்று இருக்கக் கண்டேன் –
தழுவும் பொழுது உறுத்தின திரு மகர குழைகளும் அணைத்த திரு தோள்களும் —துல்ய சீல வயோ விருத்தம்

கன -ஸ்திரம் -நம் இடம் அஸ்திரம் -கலந்தவன் சக்கிரவர்த்தி திரு மகனாய் இருக்க  –
நான்கு தோள்கள் -உண்டது உருக்காட்டாமல் அங்கு தான் இருப்பான்-
வயலாலி மணவாளன் அனுபவிக்க -ஈர் இரண்டு தோள்களாக பணைத்தனவாம்–
பட்டர்-திரு தோள்கள் பணைக்க கவசங்கள் சாத்துவேன்–
இத் தலை அகப் பட்ட பின்பு  தன்னை வெளி இட்டுக் கொண்டான் —
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்– காட்டக் கண்டவர்–சங்கு சக்கர லாஞ்சனம் தேசிகன் முனி வாகன போகம் —
தோள்களைக் கொண்டு காரியம் கொள்ளும் பொழுது மறைக்க முடியாதே ..

எவ்வளவு உண்டு -அவிச்சினமாக அனுபவிக்க -இடைவிடாமல்-
உம் அஹம் எத்தனை தூரம்- சற்றிடம் ஆகில் கூட போவோம் என்ற நினைவால் கேட்டேன் —
அடியேன் பருகிக் களித்தேன் அடியார் குழாங்கள் கூடுவது என் கொலோ -ஆழ்வார் –
அவனை அனுபவிப்பது சத்தை பெறுவது அடியார்கள் உடன் கூடினால் தானே -சேர்ந்து அனுபவிக்க கேட்டேன்-
நானே கிடீர் பிரிவை பிரசங்கித்தேன் —
திரு மணம் கொல்லை திரு வாலி திரு நகர் அங்குலி நிர்த்தேசம் பண்ணி காட்டினான்-
கை காட்டி இது அன்றோ என்றான்–
அன்றிக்கே–
நீ இருந்த இடம் அன்றோ நமக்கு நிர்த்தேசம் என்கிறான் —
ஆஸ்ரிதன் இருக்கிற இடமே
கருடன் -காலவன்–விஸ்வாமித்ரர் இடம் கற்று 800 குதிரைகள் தேடி  சாண்டிலி பெண்ணைக் கண்டு-
காட்டில் இருகிறாலே திவ்ய தேசம் இல்லாமல்- சிறகுகள் எரிந்து விழ -பாகவதன் இருக்கும் இடமே பகவான் உகக்கும் இடம் —
சேஷி இருந்த இடமே சேஷ பூதனுக்கு உத்தேசம்  போல அவனுக்கும் –
பிள்ளை வேட்டகம் ஆசை படும் பெண் புக்ககம் ஆசை படும்–
அதவா–
போகம் மிகுந்து சாத்மிப்பித்து  அனுபவிக்க-பொருப்பிக்க – –
நாம் அஹம் புக்கு வாரா நின்றோம் என்றானாம்–
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோவில் கேட்டாள் –எழில் ஆலி இது அன்றோ என்றான் –
என் காலைக் காட்டிப் போனான் –
நெருங்கி வந்து குனிந்து கட்டை விரலை தொட்டு  காலில் பிரமாணம்  பண்ணிப் பிரிந்தான் —
உச்சி உள்ளே நிற்கும்  தேவ தேவர்க்கு -நெற்றிக்கு பின்பு- இனி போக முடியாமல்  நின்றான்
திரு முடி பிராப்தம் என்று நின்றான் –
அங்கு முடிக்கு ஆசை இங்கு அடிக்கு ஆசை — —
கந்தவ்யம் போக்கு இடம் இன்றி நின்றான்
இவள் காலும் ஸ்தாவரம் – நானும் ஸ்தாவரம்- போக்கிடம் இல்லை என்றானாம் —
அகிஞ்சனம் அகதி சொல்லி கொண்டு நின்றானாம் —
தாமே அவரே வந்தார்- பார்த்தார்- பேசினார் -கலந்தார்- பிரிந்ததும் அவனே —
பரகத ஸ்வீகாரம் நாம் பண்ண ஒன்றும் இல்லை

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–21-மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 28, 2011

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –21

பராசர பட்டார் வியாக்யானம் என்பர் –
இதில் தேசிகர் ஸ்ரீ ஸூக்தி காட்டப் பட்டதால் அப்படி இருக்காது —
பரகால தாசர் என்பவர் அருளி- பெரிவச்சான் பிள்ளை சிஷ்யர் இவர்–
நாயனார் ஆச்சான் பிள்ளை இடமும்  கால ஷேபம் கேட்டு கொண்டார்–
கலி கன்றி தாசர் பெயரை இவருக்கு வைத்து மகிழ்ந்தார் -பட்டர் அர்த்தம் -பொதிந்த வியாக்யானம் –

பெருமாள் லஷ்மணன் சேர்ந்து வந்தது போல –வயலாலி மணவாளனே பெருமாள்-
தானே சீதை பிராட்டி–திருவடி சீதையை எழுப்ப வழி தேடினது போல –தோழிமார்கள் -காந்தர்வ விவாகம் –
கலவி இன்பம் காட்டி -வந்ததை நினைவு படுத்தி –எப்படி வந்தார் கேட்க்க -அதற்க்கு பதில்-
என் முன்னே வந்தார் என்று வந்தது நின்றது -எல்லாம் சொல்ல –சித்ரம் போல காட்ட —
சொல்ல முயன்றேன் -அவ் வண்ணத்தவர்-சொல்லி முடிக்க முடிய வில்லையே என்று முடிகிறாள்

சந்தரன் போல மகர குண்டலம் -எய்வதே ஸ்வாபம் கொண்ட வெம் சிலை–
சார்ங்கம் உதைத்த சர மழை–வில்லாண்டான் -தனம் தொலைத்த இடத்தில் தேட இருவராய் வந்தார் -எங்கே –
கோதாவரி நதி கரைக்கு வந்தது போல திரு மணம் கொல்லைக்கு –
என் முன்னே நின்றார் எட்டு எழுத்தும் பறித்த இடம் இதுவோ–
கை வண்ணம் தாமரை–சுலபனாக வந்தான் அழகன் -தாமரை அனைத்துக்கும் சொல்ல -அடியும் அக்தே -சொல்லாமல்-
அநாதரம் தோற்ற தாமரை ஒப்பாது —
தேவர் என்று -சஜாதியன்- ராமன் தன் வாக்கியம்- ஆத்மாநாம் மானுஷம் உங்களில் ஒருவன் சொன்னதை மறந்தேன் —
மத் சித்தா -என்னையே மனத்தில் வைத்து-
மத் கதா பிராணா -சேர்ந்தால் தான் வாழ்வு பிராணனே அவன் -பெண் பட்ட பாடு –
போத எந்த பரஸ்பரம் —
நடந்ததை சொல்லி பிரிவாற்றாமை தீர்க்க -மத் ஏவ  சித்தாகா -இவனை மட்டுமே சித்தத்தில் கொண்டு–
பிரமேயம்-மனதுக்கும் ஞானத்துக்கும் அவனே விஷயம் விஷயான்தரம் இன்றி –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -தாமரை- சூரியன் ஆறுகள் கடலை நோக்கி போவது போல —
மிதுனத்தை ஒன்றையே விஷயம் ஆக கொண்ட -மற்றவை செருப்பு குத்த கற்றவோ பாதி —
விவசாரம் போல மற்றவை நினைத்தால் -பதி பத்னி சம்பந்தம் -மறந்தும் புறம் தொழா மாந்தர்

தேதாந்தர பஜனமும் கூடாது -இவ் விஷயம் தவிர வேற ஒன்றையும் –
பிரிய பிரதி பத்த பண்ணும் ஞானமும் விவசாரம்- இல்லாதவர் தான் மத் சிந்த –நித்ய யுக்தன் –
எப் பொழுதும் -சேர்ந்தே இருக்க ஆசை  கொண்டு  இருப்பவன் —
அடுத்து பிராணனே பெருமாள் மத் கதா பிராணா–சேர்க்கையே வாழ்வு –ஆவியை அரங்க மாலை–
உச்வாசம் நிச்வாசம் அவனே –கூடின பொழுது சத்தை -பிரியும் பொழுது உயிர் அற்று மோகித்து –
அடுத்து போத எந்த பரஸ்பரம்–புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே —
பேசிக் கொண்டே பிரிவாற்றாமை தவிர்த்து தரித்தல்-
கேட்டுத் தரித்தல் கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே —

பாடித் தரித்தல் –ஞானத்தால் முதல் பத்து பெண் பட்ட பாடு
தாயார் அடுத்தும் இதில் தோழிமார் வார்த்தை கேட்டு -தன் உடைய விருத்த கதனம்-
நடந்த கதை சொல்லியும் தோழிமார் பேசியதை கொண்டு தரித்ததையும் இந்த பத்தில் சொல்கிறாள் –
முதல் பத்து பராசர பாராசர-மக ரிஷிகள் பேச்சு போல தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து மேலே மேலே தொடுப்பவர்கள் —
நடுவில் ஆழ்வார் ரீதி–உள் கலங்கி -சம்ச்லேஷ விஸ்லேஷ சுக துக்கம் கொண்டு –
இதில் பிராட்டி ரீதியாக இருக்கும் –மத்யம ஷட்கம்-அடுத்த பத்து சொல்ல மாட்டார்கள் — கீதை போல —
பிராட்டிமார் தம்  அனுபவம் பேசி விருத்த கீர்த்தனம் —
கீழ் தான் சொன்ன ஹிதம் கேட்க்கும் நிலை இல்லை பிடிவாதம் மயங்கி-பெரும் தவத்தவள் என்றாள்-
கொண்டாடி கடக்க -அவன்  இவள் ஆற்றாமையில் திருப்தியாக விலக –ஸூவ கிருஷி பலித்தது என்று —
இவளும் மயங்கி இட்ட கால் இட்ட கைகளாய் இருக்க -தோழி துடித்து — பிராட்டிக்கு ஹனுமான் போல –

என்ன பண்ண  என்று இவர் துடிக்க -மகா மதி -விதுரன்-மகா மதி–
ராமன் கதை சொல்லி உயிர் பிளைப்பித்தது போல –விருத்தமான சம்ச்லேஷம் —
இயற்க்கை புணர்ச்சி-என்பதால்  தான் அங்கு இல்லை என்று -அவன் வந்த படி என்– உன் உடன் கலந்த படி என்–
என்ன சொல்லி போனான் -ஆழ்வாருக்கும் – இவர் அடி பணிந்தாருக்கும் –ஹிதம் சொல்வதே –சொல்ல தொடங்கினாள்–
கையில் வஸ்து கிடைத்தது கடலில் போட்டு தொலைத்தேன்–சீலம் அழகு  சுலபன் கண்டு கொண்டு —
அந்யதா பிரதி பத்தி பண்ணி–சங்கம் வெளுப்பு மஞ்சள் நினைப்பது போல குணம்/ வஸ்து மாற்றி விபரீத பிரதி பத்தி-
வந்தவனை ஸ்ரீ மன் நாராயணன் தெரிந்து கொண்டு சௌலப்யம் பரத்வம் என்று நினைத்து –
சிறு பேர் அழைத்தோம் சீறி அருளாதே இறைவா தெரிந்து கொண்டேன்
கோவிந்தா புரியாமால் நாராயணா என்று எல்லாம்  கூப்பிட்டேனே சுலபன் ஆழ்ந்த ஞானம் ததீய சேஷத்வம் ஆழ்ந்த ஞானம் —
தலைவி -பேச்சை மாற்றி அவன் -வந்த படி என் கேட்க -சக்ரவர்த்தி தலை மகனாய் தன்னை ஜனக ராஜ குமாரியாய் கொண்டு-
காள மேக -அதை ஸ்படிகமாக ஆக்கும் படியான கருப்பு -மை வண்ணம்-வாமனன் -மற்ற குள்ளர்கள் திரு விக்ரமன் போல மிக்க குள்ளம் போல —

நீர் உண்ட மேகம் ஆக இருந்தாலும் வெளுப்பு சாயை இருக்கும் -அது போல இன்றி -மை வண்ணம்-விசேஷணம்–
நாவினால் நவிற்று -மனசு சகாயம் இன்றி -அது போல திரு மேனியே மை வண்ணம் அதை வெளுப்பு ஆக்கும் –
கண்ணுக்கு விஷயம்- மூக்குக்கு விஷயம் -நறும் –வந்து திறவாய் -கண்// கந்தம் மூக்கு விஷயம் //
சீரார் வளை ஒலி காதுக்கு அங்கு —ஸ்ரம ஹர மணம் கொண்ட குழல்–
சர்வ கந்தனுக்கு மணம் ஊட்டுபவள் -தாப த்ரயம் விரக தாபம் தீர்க்கும் மணம் –கேசவா கிலேச நாசகன்–

நமன் -கேசவன் சொல்ல போது இன்றி வந்தாயே-போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி போற்ற மாட்டேன் —
அருள் என்னும் ஒள் வாள் கொண்டு–அல்ல கேசத்தின் மணம் கொண்டே போக்கி இருப்பான் கிலேசங்களை —
கேசவன் என்று புரிந்து கொள்ளாமல் நாராயணன் என்று நினைத்து இழந்தேன்–பார்வைக்கும் மனசுக்கும் குளிர்ந்து –
குஞ்சி–திரள் திரள் ஆக குழன்று இன்றி மட்டும் இன்றி-
அது குழல்- தனி தனி அலகு-குஞ்சி-கொள்கின்ற கொள் இருளை சுகிர்ந்திட்ட -அன்று மாயன் குழல் -சொல்லிப் பார்த்து மீண்டாரே ஆழ்வார்
என்பதால் இவர் விசேஷணம் இன்றி இங்கு அருளுகிறார்-
இருட்டு அஸ்திரம் சூர்யன் வந்தால் போகும் இதை கொண்டு  ஸ்திரம் இது -சதைக ரூப ரூபாய விஷ்ணவ சர்வ விஷ்ணவே–
கண்ணுக்கு மூக்குக்கும் -மனோ கரம் -நித்யமாக இருக்கும் -குடில குந்தளம் கோபிமார்-குழல் பின் தாழ –

பின் எதுக்கு சொல்கிறாய் எப்படிப் பார்த்தாய்–பெருக்கு ஆற்றை எதிர் சரிக்க மாட்டாதது போல –
பரகால நாயகி சௌந்தர்ய அலைகளை கண்டு-லாவண்யம் இல்லை-இது ஒரு தடவை தானே வரும் -அவயவ சோபை-
அலைகள் திக்கு முக்காட வைக்க முகம் திருப்ப –முன்பு லலாட பர்வதம் நெத்தி வரை இது ஹம்சாவளம்பி தோள் வரை –
இவள் இனிமை போக்யத்வம் இருப்பது –குழலின் கருப்பில் திரு  முகம் -பார்க்காமல் கண் இருண்டு -இருக்க இரண்டு சந்தரன் போல –
உலக இருட்டுக்கு ஒரு சந்தரன் இங்கு இரண்டும் வேண்டும்
மகர நெடும் குழை காதன்-பிராட்டி தேட போகும் பொழுது சந்த்ரோதயம் உதவினது போல இவை பிரகாசமாய் இருந்தனவாம் –
இலங்கி ஒற்றுமையோடு -அன்யோகம் பர பாகம் வர்ண சேர்க்கை –
திருக் குழலுக்கு இவை ஆபரணமா இவற்றுக்கு திருக் குழல் ஆபரணமா –
நீ பார்க்க இழந்தாய் சொல்லி புரிய வைக்க முடியாது –ஆட-கடல் அசைந்து வந்தால் போல -வந்தார்- இங்கு சேர்த்து —

நின்றார்-அபிமத விஷயம் கண்டால் -உடம்பு நடுங்கும் பொழுது-அதனால் ஆடி நின்றாலும் நிற்காது இவை–
முன்பை காட்டுவது பின்பை காட்டுவது பாடு பட்டு ஆடிக் காட்டினான்-நஞ்சீயர்–
பெண்ணை வசப் படுத்த –கூட யார் வந்தார் கேட்டார்கள் —
எய் வண்ண வெம் சிலையே  துணையா–கையும் வில்லும் துணை–
வெப்பம் கக்கும் சிலை–சேர்த்து வைத்தது வில் தானே–வில் இருத்து மெல் இயல் தோய்ந்தான் —
கா புருஷன் -புருஷோத்தமன் அன்றி யாராலும் எடுக்க ஒண்ணாது –மனசு சகாயம் இன்றி தானே எய்யும்–
கையும் வில்லும் பார்த்தே எதிரிகள் மாய்வார்கள் அநு கூலர் வாழ்வார்கள் —
வந்த ஆண் பிள்ளை தனம் நீ காண பெற வில்லை காண்– வீர பத்னி ஆசை படுவது வீர்யத்தில் தானே –
14000 தம் த்ருஷ்ட்வா -அகாசகாய வீரனாய் -சீதை சத்தை பெற்றாள் இதனால் தானே -சிலையே துணையா-
சிலை இலங்கு-சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமாக வந்தார்–வேட்டை வியாஜம் புஷ்பம் பறிக்க இவள்-
இங்கு வந்தது ஏன் என்று கேட்ப்பாருக்கு சாட்சி வில் –இங்கே-நான் நிதி எடுத்த பிரதேசம்-
பிரிந்தாலும் மண்ணின் அடி சுவடு- முகர்ந்து கொண்டே இருக்கலாம்
திரு மணம் கொல்லை-மணவாளன் நிதி திரு மந்த்ரம் நிதி -இலிச்சினை பட நடந்த அடி சுவடு-

இருவராய் வந்தார்- சிலையே சொல்லி -அசங்கதமாய் கையும் வில் போல இளைய  பெருமாளும் ஸ்வரூப நிரூபக தர்மம்
ராமோ தஷிண பாஹு இவர்–இலக்குவனை பிரிந்த காலம் இல்லையே —
எதற்கு பிரித்து இருவர்-என்றாள்-வந்த பின்பு அணைத்தாரே-கை வேண்டுமே- வில் வியாஜம் கை லஷ்மணன் –தோள் உடன் வந்தார்–

சம்ச்லேஷத்து வருபவன் படுக்கை உடன் வந்தான்-ஆதி சேஷன்–லஷ்மணனை பிரிந்து தூக்கம் இல்லை–
திய்வம் மானுஷம் கலந்து இருவராய் வந்தார் பரத்வமும் எளிமையும் கலந்து –
கலங்க அது தான் காரணம் நான் பரத்வம்  பார்க்க அவன் எளிமை காட்ட வந்தான்
சேஷியாய் வந்தார் அல்லர் -அங்குற்ற்ன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்-
தன் திருவடிகளை என் தலையில் வைக்க வந்தவன் என் காலை தன் தலையில் வைத்தான் —
மாயக் கவியாய் வந்து –பாணி கிரகணம் பண்ணும் பொழுது சேஷித்வம் படுக்கையில் முறை கெட பரி மாறி
வகுத்த ஸ்வாமி யாக வேணும் –ஆசை பட்டு வைத்து கொண்டான் ஸ்வாதந்த்ர்யம் தீங்கு இல்லை
ந சாஸ்திரம் ந க்ரமம் -கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லை–

இருவராய்-பர மாத்மா பர கால நாயகி இருவர் மட்டும் ஆகும் படி வந்தார்–
தாம் இருந்த இடத்தில் வந்தார் -பர கத ஸ்வீகாரம்– நாமே பற்றுவது ஸ்வ கத ஸ்வீகாரம் -குரங்கு குரங்கு குட்டி/ பூனை பூனை  குட்டி –

வந்தார் அனுக்ரகம் பண்ண வந்தார் –
தாம் இருந்த இடத்தில் மடல் எடுத்து பெரும் படி இருக்க வேண்டி இருக்க இங்கே வந்தார் —
கால் நடையிலும் அவன் நடை அழகை நீங்கள்  பார்க்க வில்லை  என்கிறாள் —
சுமித்ரை நடக்கிற பெருமாளை லஷ்மணனை பார்க்காதே என்றாள் –
எவ்வாறு நடந்தனை எம்மி ராமாவோ–சதுர கதி -சிம்க வியாக்ர ..ரிஷப சர்ப-ஐந்தும் நம்பெருமாள் இடம் இன்றும் காணலாமே –
தாம் நேர் முகம் பார்ப்பது எப்பொழுது -நான் நினைக்க அவன் எதிர் பார்த்து இருந்தான் —
விபீஷணன் -என்றோ வந்து இருக்க வேண்டும் நம் காவல் சோர்வு என்று பெருமாள், நினைக்க –

எதிர் பார்த்து நின்றார்– கால் வாங்க மாட்டாமல் நின்றார் –ஸ்தாவர பிரதிஷ்டியாக நின்றார் —
பரகால நாயகி தாண்டி மனசு செல்ல முடியாமல்-ஆகாசத்தில் சாலம்பனம் இன்றி நின்றான் விபீஷணன்–
கந்தவ்ய பூமி இல்லாமல் நின்றான் போக்கிடம் இன்றி –ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் நமக்கு —
இங்கு பர கால நாயகி விட்டு போக இடம் –எடுத்து கழிக்க – நம் ஆழ்வார் -ஏக்கத்துடன் நின்றார்–நானும் கண்டேன்–

கை வண்ணம்- சௌந்தர்ய சாகரத்தில் தாம் அகப் பட்ட சுழிகளை சொல்ல ஆரம்பிக்கிறார் —
அவ்வரத்த–கை வாய் கண் அடிகள் -சொல்கிறாள்–தாம் அனுபவித்த வழியை சொல்கிறாள் —
அன்னமும் கேழலும் மீனும் -நாகை-பலன் பாசுரம்-
கை வண்ணம் தாமரை –
பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரகணம் செய்ததை சொல்கிறாள்
கைத் தலம் பற்ற கனா /மந்த்ரம் சொல்லி -இது ஒரு வடிவு அழகு இருந்த படி என் என்று சொல்லி –
தன் செல்லாமை தோற்ற அகலகில்லேன் இறையும் என்கிறான்–
மார்பு அழகு இருந்த படி என் கர்ம ஞான பக்தி யோகம் இருந்த படி என்
அவன் வாய் அழகை தான் பார்த்தேன்–வாய் கொண்டு தாமரை அழகை பேசுவது தெரியும் இங்கோ கமலம் கொண்டு  –
வாய் அழகையே பார்த்து கொண்டு இருந்தேன் —விக்கினால் குறையும் தலை கட்டும் கண் அடுத்து —

அநு கூல தர்சனம் வாரி பருக தொண்டை விக்கி மேலே சொல்ல முடியாமல் –
கண்ணால் முடித்தான் –கண் இணையும் அரவிந்தம் –
ஆதரவ சூசுகமே இன் சொல்–தூது செய் கண்கள் தோற்றோம் மட நெஞ்சே- ஜிதந்தே புண்டரீகாட்ஷா  –
அங்கு 18 பாசுரம் தாய் சொல்லி பார்க்கிறாள் இவள் சொன்னதை – கமல வண்ணம் நான்குக்கும் -போக்ய அதிசயத்தாலே
இங்கு ஒவ் ஒன்றுக்கும் தனித் தனியாக சொல்கிறாள் —
மூன்று தாமரை சொல்லி அடியும் அக்தே என்கிறாள்–பேதை பாலகன் அதாகும்-இளமை படுத்தின பாடு பயத்தில் –
அங்கு- அக்தே –உபேஷா வசனத்தாலே இதற்க்கு கமலம் சொல்ல முடியாது –அநாதரவு மதிப்பு தோன்றாத  படி  சொல்கிறாள்

தும் அப்ரமேயச்ய ச  ஜிதேந்த்ரஷ்ய ச –தாரை 8 சொல்லி அனைத்துக்கும் ச காரம் சொன்னாள் —
ஒவ் ஒன்றும் பெரிய வைபவம் என்பதால் -மன்னிப்பதற்கு குணம் சொல்லி  ச விட்டு இந்த குற்றமும் மன்னிப்பான் என்பதால் ச இங்கு விட்டாள்–
தாமரை வாடும் -முடி சோதி அடி சோதி  படி சோதி ஆடையோடும் பல் கலனாய் -நின் கண் பாதம் கை ஒவ்வா —
ஸ்வாமித்வம் அறிந்து திருவடிகளில் விழுந்தவரை திரு கையால் தூக்கி விட்டான்–கண் -புருஷோத்தமன் சூசுகம் —
அதனால் திருவடியில் விழ திருக் கைகளால் தூக்கி விட –சூடகமே பாசுரமும் இது போல —
கேட்டது போல இன்றி சாஷாத்  கரித்தது போல இருந்தது

சித்ரம் வடித்து காட்டினது போல கண் முன் நிறுத்தினாய்–அறியாத் தனம்-சொல்லும் படி இல்லை–
அவ் வண்ணதவர்-மிக பெருமை-அ காரம் –
வாசனை பிடித்தோம் –வந்த பிரகாரம் அழகை பேச போமோ–
படி எடுத்து உரைத்து காட்டும் படி அல்ல அவன் படி–கேட்டதற்கு சொன்னேன் -அப் பிரகாரத்தை உடையவர்–அப்பேர் பட்டவன்–
திவளும் வெண்மதி –நின் தாள் நயந்து இருந்த இவளை-சுட்டி காட்டி பிறப்பிடம் –
வெண் மதியம்  போல் செழும் கடல் அமுதினில் பிறந்த -குவலயம் கண்ணி -ஒரு அவயவமே –
கொல்லி அம் பாவை அது நீரில் எழுதி இதில் மலையில் –
அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் -மூன்று சொல்லி இவளை-மேன்மை காட்டினால் –
அழகு பெருமை வைபவம் தனி–இங்கு இவள் காட்ட முடியும் இங்கு அவ் காட்ட முடியாது —
நிலைமை கண்டும்–வண்ணம் -பேச வில்லை அப்படி  பட்டவர் என்ற அர்த்தம்

கண்டும் -என்னைப் பெற்று தரிப்பான் பேரா விடில் முடிதல்  என்கிற ஸ்வாபம்
மித்திரன் வேஷம் கொண்டு வந்தாலும் கை விட மாட்டேன் என்கிற நிலைமை -தெரிந்தும் விட்டேனே —
அழகு மட்டும் இல்லை உள்ளத்திலும் –ரமேய்தி ராம —
அவ் வண்ணதவர்–தெரிந்தும் இழந்தே போனேன் —
அவர் நிலைமை-சொன்னேன்–அவர் வடிவழகு  இருந்த படி சீலம் இருந்த படி விவசாயம் இருந்த படி கண்டும்–மூன்றும் இருந்தும் —
சேர வைத்ததே நான் தானே -அது கேட்டு இருந்த படி முன்பு இன்று கண்டு போனேன்–முன்பு  கேட்டு போனது போலே இருந்தார்-
தன்னால் சொல்ல முடிய வில்லை– தோழி சொன்ன படி- ஆச்சார்யர் தான் அவனை அவனாக காட்டுவார் —
கண்டும் –உம்மை தொகை–நெடு நாள் காட்ஷி –
ஆத்மா கேட்டு மனனம் பண்ணி அனவரதம் நினைத்து பர பக்தி பர ஞானம் பரம பக்தி நிலை தாண்டி நெடு நாள் சாதனை பண்ணி —
அவனே வந்து அனாயாசமாக கண்ணுக்கு விஷயம் ஆனாலும் விட்டேனே —

தோழி-உன் பொற்றாமரை அடி போற்றும் –பொருள் கேளாய்-கூப்ப்பிட்டு சொல்கிறாள் –
அழகில் மயங்கி -கைங்கர்ய ஸ்ரத்தை பார்த்து மயங்கி இருந்தானாம் – –
தொடை தட்டி எழுப்பி சொல்கிறாள் நீ குற்றேவல் கொள்ளாமல் போகாதே -உயிர் ஆன இதை கேட்க்க வேண்டும் –
அது போல அவரை நான் தேவர் என்று அஞ்சினோம் சொல்ல போவதற்கு முன் —
அவர் வடி வழகு இருந்த படி வந்த வரவு இருந்த படியும் சௌசீல்யம் நின்ற நிலை இருந்த படியும் நீ காண பெற வில்லை-
தோழியாக இருந்தும் இழந்தாயே —
அவரை -நம்மை ஒழிய செல்ல போகாத படி இருந்த அவரை-
நாம்-அவரை ஒழிந்த பொழுது -நாம் -அவரை ஒழிந்த பொழுது அசத்-அசநேவ பவது –
அவரை விட்டு பிரிய முடியாத -நீ என்னை விட்டு இல்லை நானும் உன்னை விட்டு இல்லை-
தோழி-ஆத்மனி பகு வசனம்–துர் அபிமானம்–இல்லை அவனே வந்தானே ராஜ குல மகாத்மயம் –
ஜனக குல சுந்தரி என்ற இறுமாப்பு –தோழியை சேர்த்து நாம்-
கேசவன் தமருக்கு முன் தான் பின்பு தாம் ஆழ்வார் –பாகவதர் சேர்த்தி கிட்டியதால்–
இழந்ததில் இருவரும் சாம்யம் நான் பார்த்து இழந்தேன் நீ பார்க்காமல் இழந்தாய்
தேவர் -தேவ தேவன் என்று பிர மித்து -அதச்மின் தத் புத்தி  -அது அல்லா இடத்தில் அந்த புத்தி பண்ணி –
தேவ தேவன் காட்டிக் கொள்ள வில்லை அந்யதா பிர பத்தி –ஆத்மாநாம் மானுஷ்ய -தசரத  மகன் -பெருமாள்  சொன்னாரே
பவான் நாராயண ஸ்ரீ மான் -பிரம  சொல்ல -சஜாதிய விஷயதே விஜாதீய புத்தி பண்ணினே —
அவன் நினைவை விட்டு -பவான் நாராயணோ  தேவ -வழி போக்கன் சொன்ன வார்த்தை நம்பி —

அஞ்சினோம்-இறாய்தோம்– விலகிச் சென்றோம் அபய ஸ்தானத்தில் பய புத்தி பண்ணினோமே –
அணுக கிட்ட பற்ற அனுபவம் மிக்கு இருக்கும் விஷயத்தில் விலகினோமே-
நாம் அஞ்சினோம்
ஜனக ராஜன் மகள் சொல்ல வேண்டுமா -ராமன் பார்த்து சொல்ல உண்டு–நாம் சீரர் அருளுவாராம் —
விஸ்லேஷ தசையில் நாம் -மதப்பு -இழவிலும் வாசனை விடாதே –அசோகா வனம் வால்மீகி ஆஸ்ரமம் தனித்து இருந்தாலும் அவள் அவள் தானே –
தோழி உன் சந்நிதி இல்லாததால் அன்றோ நான் இழந்தது —
ஆச்சார்யர் ஸ்தானத்தில் சேர்த்து வைத்து இருப்பாய்- அவன் படியும் என் படியும் அறிந்தவள் அன்றோ

–பாணனார் திண்ணம் இருக்க -நாணுமோ –
என் பிராந்தி போக்கி இருப்பாய்- தேவ தேவன் என்று நினைத்து இருக்க மாட்டேன் -சுலபன் என்று சொல்லி கொடுத்து இருப்பாய்

பரகால  தாசர் -ரெங்க ராஜர் இயல் பெயர்–
பெரிய வாச்சான் பிள்ளை கலி கன்றி தாசர் நாம் பிள்ளை திரு நாமம் சூட்டி இருக்கிறார் தன் சிஷ்யருக்கு —
கலி கன்றி தாசர் சொல்லிக் கொள்கிறார் தம்மை–தஜ்ஜால ஆகாரம் சொவ்கந்த்யம் –
மை வண்ண நறும் -சொல்ல வந்தோம் -ஓராண் வழியாக வந்ததை –நாயகன் உடன் பிரிந்து —
பூ கொய்ய- இவள் போக வேட்டை ஆட அவன் வர -உபாயம் பலித்து -சம்ச்லேஷம் கிட்டி- கலந்து பிரிய –
சேர்த்து வைத்த தோழி வந்து கிட்ட -அவளுக்கு பிரவர்தமான படியை சொல்கிறாள் ..
முதல் பத்து தாம் ஆனா-ஆழ்வார் பாசுரம்  -மத் சித்தா -திரு மந்த்ரார்தம்–
பக்தி –பிரணவார்தம்– அகார அர்த்தம் — தர்சனம் 7 படிகள்//
நடு பத்தால் மத் பிராணா –தளிர் புரையும் என் தலை மேலவே
ஞானத்தில் தன் பேச்சு
இரண்டாம் பத்தில் என் குடம்கால் இருக்க கில்லாள் என்றும் பெற்றேன் பேச கேளாள் என்றும் திரு தாயார் –
மூன்றாம் பத்தில் என் முன்னே நின்றார் என்றும் பிரேமத்தால் கலங்கி-தோழி அவரை நாம் தேவர் என்று -மகள் பிடி-

அவன் இடம் சித்தம் இமையவன் திரு உருவே என்னும் பொழுது என்றும்
மறவாது என்றும் ஏக சிந்தையாய் வாழலாம் மட நெஞ்சமே /
நெஞ்சு உருக மத் ஏக பிராண -துணை முலை மெல் துளி சோர சொர்கின்றாள்–
போத யந்த பரச்ரம்- துஷ்யந்தச ரமயிதி தோழி–21/ 28 பாசுரம் தோழி கூப்பிட்டு  பேசி–அவரை நான் தேவர் என்று அஞ்சினோம் –
இது அன்றோ திரு ஆலி-என்றான் -மகள் பாசுரம் இவை–

முதல் பத்து திரு மந்த்ரம் அர்த்தம் சொல்லி –என் உருவில் நின்ற எந்தை பிரணவ அர்த்தம்–
அகார வாச்யன் ம கார வாக்யத்துக்கு ஸ்வாமி –
தளிர் புரையும் திரு வடிகள் -என் தலை மேலே – நம சப்தம் அர்த்தம்–
மின் உருவாய் தொடக்கி  -அனல் உரு இறுதி வரை நாராயண சப்த அர்த்தம்-
நாரங்கள் அவனை தவிர அனைத்தும் -கரந்து எங்கும் பரந்து உளன் —
மின் உரு பின் உரு பொன் உரு -நாராயண சப்த அர்த்தம் –திகழும் சோதி -பரம் சோதி -அனல் உருவில் திகழும் சோதி-

-துவைய அர்த்தம் நடு பத்து –ஸ்ரீமான் வில் இருத்து  மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்றும்–
திரு மாலைப்  பாட   கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன்-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -நாராயண சப்த அர்த்தம் –
கல்யாண குணங்கள் –துன்னு குழல்  கரு நிறத்து –அடி இணைகள் கமல வண்ணம் சரண சப்த அர்த்தம்–
சரணம் பிர பதயே — உபாய அத்யாவசியம்-பண்ணுவது –உபாய ஸ்வீகாரம் கடல் வண்ணர் இது செய்தார் பேர் பாடி–செய்கை–
இத்தால் சரண சப்தார்தம் உபாயத்தில் உறுதி பாடு–
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்றும்
பொன் தாமரை கயம் நீராட போனாள்- பிர பத்யே  சப்த அர்த்தம்—உபாயம் பற்று வது –உறுதி பூண்டது —
போவேன் போனாள் செயல்பாடு /பாவை மாயன் மொய் அகலத்து உள் இருப்பாள் என்றும்
பித்தர் பனி மலர்  மேல் பாவைக்கு என்றும்  -உத்தர வாக்கியம்
ஸ்ரீ –கைங்கர்யம் சேர்த்தியில்- மிதுனமே பிராப்யம்–
தாமரையாள் –என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார் —
ஸ்ரீ மத் சப்த அர்த்தம்– பாரை உண்டு இத்யாதியாலே உத்தர வாக்ய நாராயண சப்தம்-
பரத்வம் கீழே சௌலப்யம் பற்ற இங்கு கார்யம் செய்ய கைங்கர்யம் கொள்ள பரத்வம்–
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி –
நம சப்தம் -அவன் ஆனந்தத்துக்கு பிர பல  விரோதி -/
சரம ஸ்லோக அர்த்தம் கடைசி பத்து –
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குலையும் நான்கு தோளும் என்றும் –
சர்வ தர்மான் பரித் யஜ்ய -கர்ம ஞான பக்தி யோகம் போனது ஐஸ்வர்ய கைவல்யம் -கை வளையும் மேகலை/ இரு கையில் சங்கு இவை நில்லா–

மாம்-அர்த்தம் -சௌலப்யம்- கரு முகிலே  ஒப்பர் வண்ணம் என்றும்
ஒரு கையில் சங்கு —கையும் சங்கும்-மாம் என்று தொட்டு உரைத்த சொல்லும் -/
மாம் ஏகம்–சரணம் விரஜ -28/29 பாசுரம் பொன் இலங்கு முலை குவட்டில்  பூட்டி கொண்டு-கிரியா பதம் செயல்–
அடி நாயேன் நினந்திட்டேன்– மனோ வியாபாரம் சரணா கதி -புத்தி பண்ணுவது தான் —
அஹம் -உயர்த்தி பரத்வம்–மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமாளே அருளாய் என்று –
அஹமின் அர்த்தம் பெரியவன்-ஆஸ்ரித கார்ய முடிக்கும் குணங்கள் இவை–
த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -அருளாய் என்னை குறித்து தானே த்வா சப்த அர்த்தம்–
தொல்லை பழ வினையை முதல் அறிய வல்லார் தாமே –மாஸூச -அருளாய் என்பதால் மாஸூச அர்த்தமும் விளங்கும் —

பக்தி –பிரபத்தி–புருஷகாரம் மூன்றும் —
இந்த்ரர்க்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை-காரணம் பொருளை  உபாசிக்க வேண்டும் –
பக்தி விதித்து -சர்வம் கல் இதம் பிரம -சரீரம் எல்லாம் -தஜா பிறந்த– தல்ல லயித்த– ததாணு ரஷிக்க படுகிறதோ சாந்த உபாசித —
மந்த்ரத்தை மந்தரத்தால்  மறவாது என்றும் வாழுதியேல்  -தைல தாரா -துருவ அநு ஸ்மரதி— –
பக்தி விஷயமும் பிரகாரமும் //
அடுத்த பத்து பிர பத்தி -நிவ்ருத்தி மார்க்கம் தாயார் வார்த்தை -அணி அரங்கம் ஆடுதுமோ –
விசாரம்-ஆராய்ந்து பொன் தாமரை கயல் நீராட போனாள் சிந்தித்த உபாயம் அனுஷ்டித்து —
கடைசி பத்து — புருஷ காரம் -அரும் தவத்து முனிவர் சூழ உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து கலவி செய்து  ததீயர் புருஷ காரமாக பற்றி —

முதல் பத்து-பிரணவ அர்த்தம் –என் உருவில் நின்ற எந்தை என்றும்
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி–சப்த அர்த்தம்-
வீட்டு இன்பம்-இன்ப பா இன்ப மாரியில் ஆராய்ச்சி மாத்ரு யோனி பரிட்சையோடு ஒக்கும் –
அர்ச்சைக்கு கொண்டார் வீடு இன்பம் இங்கு–அது போல மூன்று உரு பாசுரத்தில் வேற இங்கு வேற —
சேஷி சேஷம் சேஷித்வம் மூன்றும் ஒன்றான படி –பூ ரிக் வேதம்  புவ யசுர் வேதம் சுவ சாம வேதம் மூன்றில்  மூன்று எடுத்து பிரணவம்–
அடுத்து பத்து நம சப்த அர்த்தம் என் குடன்கால் இருக்க கில்லாள் நிவ்ருத்தி
என் சிறகு கீழ் அடங்கா பெண் பெற்றேன்-என் உடையது அல்ல அவனை சேர்ந்தவள்/
நாராயண சப்த அர்த்தம் மை வண்ண ஆயுத ஆபரண சேர்க்கை பெரும் தவத்தார் முனிவர் சூழ திவ்ய ஆயுதம் கொண்டவன்.

இனி அ காரம் முதல் பத்து -ரஷகத்வம் சொல்லி வெற்புடைய –மன்னர் மாள உலகம் ஆண்டு அநிஷ்டம் தொலைத்து
இஷ்டம் கொடுப்பது சொல்லி —
உ காரம் நெஞ்சு உருகி உண்டு அறியாள் உறக்கம் பேணாள் அந்ய சேஷத்வம் நிவ்ருத்தி சொல்லி –
அவளுக்கே ஆட பட்டாள் என்று சொல்லி —
ம காரம் அவர் நிலைமை கண்டும்-என்றும்
கண்டேன் தோள் நான்கும் என்றும் –
ஞாத்ருத்வம் -பலன்–கர்த்ருத்வம் பலன் -போக்த்ருத்வம் –
கர்த்ருத்வம் போக்த்ருத்வம் போல அன்றி பர தந்திர போக்யதைகள் -மணவாள மா முனிகள்–
மூன்றும் ம காரம் -சேஷத்வம் சேஷ பூதன் என்று தெரிவதே —
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் -ஞான தர்சன பிராப்த அவஸ்தைகள்-அறிகை –
கண்டும்-பிற பாடு –அஞ்சினோம்-கர்த்ருத்வம் -அதன் பின் கண்டேன் கனமகர -போக்த்ருத்வம் —

ஸ்ருங்கார சதகம் -அதர்சனே  தர்சனம் -ஒரு தடவை பார்த்தால் போதும் ஆசை த்ருஷ்ட்வா -அணைக்க ஆவல்–
இரண்டற கலக்க வேண்டும் எங்குற்றாய் எம்பெருமான் காண வேண்டிய ஆசை —
ஒரு கால் நாக்கு நினைக்க பிராப்தி -தாகம் கிளப்பி விட பாரதம் அடுத்து காவேரி —
முத்தாரா வன முலையாள் தழுவ கொள்ள -ஆசை பட –யான் காண்பான் –நீ போகல் என்பன்–மூன்றாவது நிலை

ஸ்வரூப ரூப குணம் சொல்லி /
விச்லேஷத்து கலங்கி /
கிலேசம் தீர்ந்து சம்ச்லேஷம் மூன்றாவது பத்தில் சொல்லி -புனல் அரங்கம் ஊர் என்று அனுபவிக்க போனாள் –

பழி சொல்லி மேல் எழுத்து ஒப்புதல் போல தாய் மகள் பண்ணினதை கொண்டாடுகிறாள் —
உபய அனுராகம் இருவரும் கூடி-நங்காய் நாம் குடிக்கு இதுவோ நன்மை–நறையூரும் பாடுவாள் —
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்- அசோக வனத்தில் காத்து இருந்தாள் சீதை போல -ஆறி இருக்க வேண்டும் –
என் சொல்லார் உகவாதவர் -பிடிக்காதவர்கள் குற்றம் சொல்வார் என்று கடிந்து உரைக்க–
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ —
அவனும்  இவள் பக்கல் நேர் உடன் வர கூசி-சந்திக்க ஆசை உண்டு- –
இவள் அபிப்ராயம் அறிய தூதுவர் -சு யதன தூத்யம் -பர தூத்யம் வேண்டாம் முதல் கலவி ஆனதால் தானே வந்தான் —
புஷ்பம் பறித்து நடந்து சீதை வர –ஊரை சூழ்ந்த உபவனம் -இவள் பூ கொய்ய போகிறாள் என்று கேட்டு -மனசு தேறி இருக்கிறாள்-
அறிந்து -வேட்டை  ஆடும் பாவத்தில் -வில்லை கொண்டு–வில் மட்டுமே ஆபரணம் என்று காட்ட தான் அனைத்தையும் கொண்டாள் கைகேயி- –
கல்விச் சிலையால் காத்தானூர் சிலை அன்றோ கை தலத்து என்கின்றாளால் —
எடுத்தி கட்டின மயிரும் –கட்டின கச்சும் –உடை கோலும் –

முதுகிலே கட்டின அம்புறா  துணியும் -கொண்டு -அன்னைமீர்காள் என்னை முனியாதீர் –
நம்பியை நான் கண்ட பின் விடுமினோ என்றும் -செல்கின்றது என் நெஞ்சமே —
அன்னை என் செய்தில் என் -ஊரவர் சொல் கவ்வை எரு  இட்டு -கலகற்று மன்றாடி-சுனை ஆடல்-  புனல் ஆடல் –
பயலான பேச்சு -மறைத்து பேச-தோழி மார் உடன் -தலை காவல் ஆக இருக்க —
ப்ரஹ்ம அனுபவம் நீராடுதல் –இருவரும் சந்தித்து -அபிப்ராயம் அறிந்து கூட —
எவ்வளவு ஊர் எம்பிரானுக்கு கேட்டதும் புனல் அரங்கம் சொல்லி போக -தோழி கேட்ட நடந்த விருத்தாந்தம் இப் பாட்டில் சொல்கிறாள் —
கைப் பட்ட வஸ்துவை கடலில் தொலைத்தேன் என்கிறாள் —
வந்தார் காண் -வந்த பொழுது இருந்த அமளி காண் —
ஸ்வாபிகமான -வடிவழகு — விசேஷித்த ஒப்பனை அழகு -காவல் வில்–மூன்றும் சேர்ந்த  பசும் கூட்டம்
கண்டேன் சீலமும் அழகும் கண்டேன் –அந்யதா பிரதி பத்தி அணியனை சேயன் என்ற எளியவனை பரதவன் என்று கொண்டேன் –கடலில் இழந்தேன் –

அத் திரு குழலின் நிறமும் மணமும் இருந்த படி காண் –
-கார் வண்ணம் திரு மேனி -ஸ்படிகம் என்று சொல்லும் படி மை வண்ணம்-அபூர்வ  ரூபம் தேஜஸ் ராசி -மூர்தயம் –
இதில் இருந்து உருவான கிளம்பிய மை போல இருக்கை இந்த திரு குழலை பார்த்தவர்களுக்கு –
சர்வமும் பிரகாசமாய் இருக்கும் படி சித்த அஞ்சனமாய் இருக்கும்  —
பிங்கல ஜடை தேவன்-ருத்ரன்-ஓர் உருவம் பொன் உருவம் ஓன்று செந்தீ -போல இன்றி -பூசனைக்கு தக்கது இல்லை சடை முடி –
குழல் இருண்டு சுருண்டு அடர்ந்து நெய்த்து நீண்டு கரு நீலம் பாய்ந்தும் கடை சுருண்டும் –
பால சந்தரன் உதித்தால் போல ஸ்ரீ ராமன் தண்ட காரண்யம் நுழைந்தது –
நீல வரை –நீல கடலை கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ-
பாற் கடலை அவன் திரு மேனி நீலமாக ஆக்கினதாம் –ரூபம் மட்டும் இன்று கந்தம் –
மல்லிகை செங்கழுநீர் இத்தால் பூ சூட்டி நறு மணம் ஏற்ற வேண்டாம் -ஸ்வாபாவிக கந்தம் வந்தேறி இல்லை–
திரு மேனி திரு குழல் வேறு படுத்தி காட்ட கந்தம் –சர்வருக்கும் ஸ்ரம ஹரமாய் –கேசவா கிலேச நாசனன்-

கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் போகுமே–கேச பாசம் பார்த்தும் விட்டேனே தோழி என்கிறாள்–
கண்ணுக்கும் மூக்குக்கும் நெஞ்சுக்கும் போக்கியம் -சர்வ கந்தனுக்கே கந்தம் கொடுக்கும் —
திரு வடி முதல் திரு முடி இருக்க முதலில் குஞ்சியில் அகப்படும் காரணம்-பதியின் தலை மேல் ஏறி அமர்வாய் –
கல்யாண மந்த்ரம்-குணத்தால் தான் உடலால் இல்லை வசப் படுத்த –
காட்டவே கண்ட –திருப் பாதம் –பேதை குழவி பிடித்து சுவைத்து விண்ணும் பாதக் கமலம் வந்து காணீரே –
சேஷத்வம் அறிந்தவள் -நாற்ற துழாய் முடி நாராயணன்

அம் தண் துழாய் கமழதல் -நேர் பட்டதே -குட்ட நாட்டு திரு புலியூர் -அதனால் முதல் பட்டது -பரத்வ சூசுகம்–
தான் சூடி கொடுத்த புஷ்பத்தின் மணம் இழுத்தது –நறும் குஞ்சி-துன்னு  கரு குழல் சொல்லி வாய் வெருவின வாசகம் —
அவயவ சோபை-பாட வந்தவள் -சௌந்தர்யம் அடங்காமல் திரு மேனி வெளி புறப் பட்டு -விஞ்சி தலைக்கு மேல் போனதால்-
அனுபவம் இவள் தலைக்கு மேலும் —
குஞ்சி-குடில குந்தள அலங்கிரிதம் என்றும் –
சுருண்டு-அடர்ந்து  இருண்டு சுருண்டு -ஏறிய குஞ்சி-குஞ்சியும் கொண்டையும் குடுமியையும் —
தலை மயிர் நுனி துல்லி குலைந்து நெறி மென் கூந்தல்  குலைந்து –
குஞ்சி போன்ற குழல்-குழல் பின் குஞ்சி முன் தூக்கி வைத்தது என்றுமாம் –
குஞ்சி குழல் என்று இருக்கையாலே குஞ்சித்து இருக்கிற குழல்–கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட -அன்று  மாயன் குழல் –
ஸ்திரம் நித்யம் -சதை ஏக ரூப ரூபாய–மயிரை ஏற வாரி முடிந்த படியாலே -வெற்றுமை-இருக்காத -படி -பிடரிக்கு குழல்—
மகர குண்டலம் தோளுக்கா காதுக்கா குழல்களுக்க- இல்லை மனசுக்கு தான் கூரத் ஆழ்வான்-
முன் தாழ இருந்தால் மயிர் பட மாய்வாள் என்று முன் நின்று வருத்தாமல் பின் இருந்ததாம்

முக்தன் லஷ்மணன் போல சேஷத்வம் காட்ட பின் தாழ்ந்ததாம்–
தன்னை நோக்கி வரும் நாயகன் -பின் தாழ்ந்த குழலை எப்படி பாடினாள்-
பெரும் காற்றை எதிர் கொள்ள முடியாமல்-அவயவ சோபை அலைகள் -அலை தரங்கம்-சௌந்தர்யா –
நேர் பார்க்க முடியாமல் முகம் திருப்ப –பார்த்து -போக்யதை சர்வ சக்தனாலும் அனுபவிக்க முடியாதே —
வேட்டைக்கு வந்தவன் என்பதால் மிருகம் தேட திரும்பினான்–
களவின் கீழ் வந்தவன் என்பதால் வேற்று மனிசர் வர வில்லை என்று பார்த்தானாம்–நான்கு காரணம் அருளினார்—
அவயவ சோபை ஆபரண சோபை ஆயுத சோபை -அடுத்து -குழல் அழகர் -வாய் அழகர் –
பார்ச்வத்தில் திரு காதுகளில் சாத்திய ஆபரண சோபை–
மகரம் சேர் இரு பாடு இலங்கி ஆட -கை விளக்கு -இரண்டு சந்தரன்-
சீதை பிராட்டி காண  சந்தரன் உதித்து திருவடிக்கு உதவ வந்தது போல–
மயூரம் மகரம் ஹம்ச வடிவில் இருக்கும் -பெருமானுக்கு மீன் தானே சேரும் —
காமனார் தாதை என்பதால் அவன் கொடி-மீன்–திரு பாற் கடலில் இருப்பதாலும் பிரதம அவதார சஜாதீயம் என்பதாலும் —
காமன் தோற்று கொடி உடன் பறித்து சாத்தி கொண்டது போல -இரு பாடும் இலங்கி -தன் அழகு காட்ட தானே கை விளக்கு —
மின்னு மா மணி மகர  குண்டலங்கள் -ஆட-திரும்பி பார்த்ததாலே -பூர்வ அவர பாகம் இரண்டும் காட்ட இலங்கி –
ஒளி கொண்டு ஆட–காமன் இடத்தில் இருந்த பொழுது ஒளி இன்றி மங்கி இருக்க -உடையவன் இடம் வந்து சேர பெற்றதால் ஒளி விட்டதாம் –

சேர்த்தி அழகை பார்க்க வில்லையே –
கடல் சந்தரன் கொண்டு நடந்து வந்தது போல –
இது எல்லாம் அவளை ஈர்க்க இவன் செய்த முயற்சிகள் என்று நஞ்சீயர் அருளி செய்வர்

அழகையும் ஆபரணமும் காக்க புற காவலும் கொண்டு வந்தான் சிலையே துணையாக –
வெவ்விய சிலை –சர வர்ஷம் வில்லாண்டான் -வாளி மழை பொழிந்த சிலை —
சார்ங்கம் உதைத்த சர மழை–கா புருஷன் எடுக்கிலும் புருஷோத்தமன் ஆகும் —
ஜமதக்னி பரசுராமன் வாங்கி- மழு வாளி சிலை வாங்கி பின்பு  புருஷோத்தமன் மாறி ரிஷி புத்திரன் ஆனான்–
எடுத்து எய்யும் அவன் மனசு சக காரியும் வேண்டாம்–கல்வி சிலையால் காத்தானூர் —
அவன் பிடித்த எல்லா வில்லும் பெருமை உடையது –ஆயுதமும் ஆபரணமும் –இரு படை மெய் காட்டு —
சிலை இலங்கு பொன் ஆழி- திண் படை சங்கம் –தோற்றாள் பரகால நாயகி /
ஆழி யொடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் —
சேர்த்தி அழகில் ஆழம் கால் பட்டு அறிவு இழந்தார்கள் -பல நிறம் உடை —
வண்ண வெம் சிலை-கையும் வில்லும் கண்ட உடன் குடல் குழம்பும் படியும் அனுகூலர் வாழும் படியும் –
பிரதி கூலர் மண் உண்ட படி–ஆண் பிள்ளை தனம் நீ காண பெற வில்லையே என்கிறாள்–
தம்  த்ருஷ்டா சத்ரு ஹன்தாரம் மக ரிஷீனாம் சுகாவனம்  பகுவா வைதேகி பர்தாராம் ஹர்ஷஸ் — சத்தை பெற்றாள் சீதை பிராட்டி
இது ஆனதும்–ஆலிங்கனம் –ராக்ஷஸ வேட்டை ஆடின பெருமாள் யுத்த ஆயாசம் -தீர –
ஒவ்ஷதம் போல  திரு மேனி ஆலிங்கனம் -வந்த பெருமாளை இழந்தேனே —
தம்–அந்த ராமனை–
ராஷசர் உள்ள காட்டில் கூட்டி போக மாட்டேன் என்ற ராமனை–
இந்த திருக் கோலம் இழந்து இருப்பேன்–
ஸ்ரீயம் புருஷ விக்ரகம் –பெண்ணை ஆண் உடை உடுத்திய பெண் என்பார் ஜனகன் –
கூட்டி போ -ஆண்கள் இருந்த சபையில் சொன்னதை நெஞ்சில் வைத்து –
வென் நரகம் சேரா வகையேசிலை குனித்தான்  -கொன்று முடித்தான்–
தம் நீயே புருஷோத்தமன் அந்த ராமன்–
தம்-ஆதித்ய தேஜஸ் உடைய வீர பாடுக்கு சிறு விரல் காட்ட முதல்வன்–அந்த வீரனை
தம்–விடுதி பூ பட்டு சிவந்த திரு மேனி –
இப் பொழுது சிவந்த படி கண்டு அந்த
தம்- கூசிப் பிடிக்கும் மெல் அடிகள்-அம்பால் சிவந்ததே –
தம்–வீர ஸ்ரீ உடன் சொவ்குமார்யம் சேர்ந்த
தம்–சுகுமாரவ் மகா பலவ-சூர்பணகை–அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்-
பெருமைக்கு தக்க தேவி–அவனுக்கே பெருமை கொடுக்கும் தேவி–கண்டாள் த்ருஷ்ட்வா-குளிர்ந்த குளம் போல –
பத்தர் ஆவி-ஆஸ்ரிதர் விரோதிகளே இவனுக்கு விரோதி-ஞானி ஆத்மைவ மே மதம்–என்னது உன்னது ஆவி உன்னது என்னதாவி–
மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும் —
செற்றார் திறல் அழிய சென்று செறு செய்யும்–கண்ணன் விரோதி -இவருக்கு விரோதி -மாற்றார் உனக்கு வழி தொலைந்து  –
செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா -பாகவதர் விரோதி அவன் விரோதி–மக ரிஷிகள் இவன் சரீரம் தானே –
வேய் மறு தோள் இணை மெலியுமாலோ- ஆழ்வார் -மெலிந்தால் நீ மெலிந்தது போல் தானே —
பகுவா-சத்தை பெற்றாள் –தர்மீ இருந்தால் தானே தர்மம் இறுப்பு பெரும்–
வைதேகி- ஐயர் வயிற்றில் விதேக ராஜன் -பிறந்ததால் தானே இந்த வாழ்வு கிட்டியது–
விதேக குலம்- இன் நிலத்தில் பிறந்து -வில் உடன் சம்பந்தம்–பெறா பேறு பெற்றேன்–முழுதுமாக தழுவினாள்
தடம் மாறும் வரை திரு முலை தடங்களால் வேது கொடுத்தாள்-ஐந்து பானம் அடித்தாலும் ஐநூறு பானம் அடித்தாலும் ஆலிங்கனம்-
ஐந்து காம பானம் -விரகம் தீரவும் ஆலிங்கனம்–கொடி கொள் கொம்பை தழுவி தான் நிற்கும் பரிஷ்யச்வதே –
ஜீவாத்மாவும் பரமாத்வாவும் சேர்ந்தால் தான் இருவருக்கும் ஸ்வரூப சித்தி —
தம்-சர்வ ஆதாரம்–
அநிஷ்ட நிவ்ருத்தி பண்ணிய பின்பு பிராட்டி  அவனை குளிர நோக்குவாள்
த்ருஷ்ட்வா–பகுவா-அவனைக் கண்டு தான் சத்தை பெறுவாள் —
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணிய ஆனந்தம் போக்கு வீடு ஆலிங்கனம் -பரம பிரயோஜனம் வீர பத்னி அகப் பட்ட வீரக் கோலம் –
இது போல பெருமாள் கையும் வில்லுமாக வந்தான் என்கிறாள் பர கால நாயகி–

சிலையே துணையா –பிரி நிலை ஏகாரம்–வண்டே கரியாக வந்தான்-போல-
திருப் புல்லாணி எம்பெருமான் பர கால நாயகி–வண்டு பஷ பாதம் தனக்கு ஏற்று சொல்லும்–
போகத்துக்கு வருகிறவர் வேற யாரையும் திரட்டி கொண்டு வராமல் வந்தான்–
இடை கழியில் மூவருடன் நெருக்கு  பட பத்னி பரிக்ரமம் உடன் போனது போல இன்றி —
ஆயுத சாலை போல அனைத்தையும் கொண்டு வராமல் வில் ஒன்றே கொண்டு–
அனுபவிக்க வருபவர் தாம்பூலம் புஷ்பம் சந்தனம்–வியாஜ்யம் வேட்டைக்கு -பூர்வ சம்ச்லேஷத்தில் இடறு பல —
வில் இவர்களை முன்பு  சேர்த்து வைத்ததால் அதை கொண்டு வந்தான்-
வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தான்-
க்ருதஞ்ஞ  கந்தம் -திருக் கடித் தானமும் என் உடைச் சிந்தையும் —
தாடகை இடையூறு போக்க வந்தது போல–கை பிடித்து போகும் பொழுது பரசுராமர் ரோஷ ராமன்- வந்தது போல–
தனி வில்- 14000 வீரர் உடன் சண்டை போட போனானே -தனி வீரத்துக்கு துணை இது ஓன்று தானே –
என்னைப் பிரிந்து தரிக்க ஊன்றி இருக்க வில்லை கொண்டு வந்தான் —
அமுதம் தனியாக கடைந்தான்–இப் பொழுது துணை வேண்டி இருக்கிறதாம்- துணை பட காரணம் –
பிராவண்யம் அன்பு -வளைந்து விநயம் -குணவத்யம்-நாண்-நல்ல பண்பு உண்டு என்பதால் -குணா விசிஷ்ட வஸ்துகள் சேர்ந்தன –

இங்கே இருவராய் வந்தார் நிதி எடுத்த இடம் -இங்கே -பரி கொடுத்த இடத்திலே திரும்ப கண்டேன் —
கலந்து பிரிந்த பின்பும் மண்ணை முகர்ந்து கொண்டு இருக்கலாம்
சுவடு தெரிந்து -ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் இரு காலும் கொண்டு அங்கு  அங்கு திரு இலச்சினை  பட நடந்த இங்கு–
கதா புனா ..வஜ்ர லாஞ்சனம் —
அன்றிக்கே திரு மணம் கொல்லை காட்டி-
ஆலி நாட்டுக்கு அரசுக்கு தைவ  அரசன் மந்திர அரசை கொடுத்த இடம்–
அஸ்மின் சிலா  ராமன் சீதை இருந்த பாறை காட்டி -கோதாவரி நதி நீச்சல் போட்டி -லஷ்மணன் இடம் காட்டியது போலே காட்டினான் —
குகன் பரதனுக்கு காட்டிய இடம்–எ தத் -பெருமாளும் பிராட்டியும் சயனித்த இடம்- அது போலே அவனும் இவளும் கலந்த இடம் காட்டுகிறாள் தோழிக்கு ..
இங்கே-ஒரு பரம பதம் இல்லை அயோதியை இல்லை திரு பாற் கடல் இல்லை திரு மலை இல்லை கோவில் இல்லை
இவ் இடம் பண்ணின பாக்கியம் காண் —
அயோத்யா வாசிகள் வெளி ஏறி–பிறந்து வளர்ந்த இடம் விட்டு  -கைகேயி ஆளட்டும் கை விடப் பட்டது இது கைக் கொள்ளப் பட்டது —
காடு முடி சூடினது போல ஆனந்தம் அவன் இருக்கும் சித்ர கூடமே நாடு- குபேரன் தோட்டம் போல –இது பாக்கியம் பண்ணினது போல —

இங்கே வந்தார்- வந்ததே செய்கை -வேற என்ன செய்ய வேண்டும் –வருகையே பிராப்யம்–
கை விட்டுப் போகை அன்றி -மதுரை-கோகுலம்-த்வாரகை- குருஷேத்ரம் -போனான் அங்கு –
வந்தார்- வர போகார் என்ற அறிவிப்பு இன்றி வந்தான்-
செம் கண் சிறு  சிறிதே -தரிக்க அவகாசம் கொடுத்து -வர வில்லை-
வந்தார்-வரவாறு ஓன்று இலையாதால் வாழ்வு இனிதாய்  —
பிரார்த்திக்காமல் வந்தான் -நடுவே வந்து உய்ய கொள்கின்ற நாதன்–
இதற்க்கு அடியாக பிரவர்த்தி ஒன்றும் இன்றி -போது எல்லாம் –நின் பொன் அடி புனைய மாட்டேன் –போனார் சப்தம் இன்றி –
திரு ஆணை நின் ஆணை இனி நான் போகல் ஒட்டேன்
ஒன்றும் மையல் செய்யேல் என்றும் -தடுத்தும் வளைத்தும் கொள்ளலாம் படி —
பிரிந்து கலங்கி இன்றி கலந்து மகிழ்ந்து –
இருவராய் வந்தார்-
இரண்டு மேனியாய்- ஸ்வாபம் இரண்டு-புது கணிப்பும் /
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து ஒரு பெண் ஆக்கை ஆப்புண்டான் -இரண்டு ஆகாரமும் —
நான் செத்து வா -நடாதூர் அம்மாள்- அடியேன்–
இருவராய்-
பகிர்ந்து இன்றி ஏக ஷணத்தில் உத் பத்தி விநாசம்  இன்றி –
போக ஏகாந்தம் கூட யாரை கூட்டி வரவில்லை-
ஜனக திரு மகள் திருக் கல்யாணம் கன்னிகைகள் பலர் தமையன் மார் கூட வந்தது போல அன்றி —
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-அசத் இன்றி அஞ்ஞானம் இன்றி அந்தம் இன்றி –
மூவர் இல்லை-ஒருவருக்கு தான் மூன்று விசேஷணம் —
விசேஷ்யம் ப்ரஹ்மம் ஓன்று –நீராய் நிலனாய்– பின்ன பிரவர்த்தி -பஹுஸ்யாம்–
16 வித இருவராய் –
அவயவ ஆபரண சோபை-
இருவராய்
மை வண்ண நறும் குஞ்சி மகர குண்டலம்/வீர சிருங்காரம் தோற்ற -சிலையே துணை -நடந்தார் ஸ்ருங்காரம்–
ஸ்ரீ ராமன் நடக்கிறதைப் பார்த்து கைங்கர்யம் இழக்காதே சுமத்ரை /
பத்தி உலாத்தல் -வா போ வந்து போ -தசரதன் பிரணயிதவம் தைர்யம்-
என் முன்னே வந்தார் நின்றார் –விநயம் தூதன் –
கை வண்ணம் தாமரை வாய் கமலம் -கண் இணையும்–அடியும் அக்தே தூது செய் கண்கள் /
இரண்டு நினைவு பெற்றால் உஜ்ஜீவிக்கையும் பெறாத பொழுது முடிகை /
பரத்வம் சௌலப்யம் –
அவ் வண்ணத்தவர் -சுலபம் அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்-
பரத்வம் /மானுஷவ் தேவ ரூபம்-
சிலையே துணை மனுஷ பாவம் கண் இணையும் அரவிந்தம் புண்டரீகாட்ஷம் ஏவம் அஷணீ
சிங்கமும் யானையும் நடப்பது போலே வந்தார் —
ராஜா பெருமை தோற்ற –வலி மிக்க சீயம் வேழம் போல —
புலி ஏறு கோபம் கர்வம் கொண்டு /
உபாயம் உபேயம் தாமாக வந்தார் //
ஸ்வரூபத்தால் ஸ்வதந்த்ரனாயும் ஸ்வாபத்தாலே-குணத்தாலே பர தந்த்ராயும்  வந்தார் //
நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இல்லை //
சீதை நானும் தண்ணீர் இன்றி இருக்காத மீன் போல –லஷ்மணன் /
தான் உண்டு என்றால் நான் ஆகி இல்லை என்றால் நான் இல்லை ஆகார துவயம்/
ராம லஷ்மணராய் வந்தார்–சிலையே துணையா- கையில் வில் போல நிரூபக தர்மம்
இவரும் நிழல் போல தான் கொல்லை அரக்கியை மூக்கு அறித்திட்ட குமரனார் சொல்லும் போய் ஆனால் —
இருவராய்- அணைக்கும் தோளைப் போல ராமஸ்ய தஷனோ பாஹு –
படுக்கை உடன் வந்தான் —
சேஷி யாய் வந்தார் அல்லர் சேஷனாய் வந்தார் அல்லர் –
உபயமுமாய் ஆள் கொள்வான் வந்து என் உயிர் உண்ட மாயன்–
பாணிக்ரஹணம் பண்ணும் பொழுது சேஷயாய் இருக்கையும் படுக்கையில் முறை கெட பரி மாறுவதும் —
போகத்தில் தட்டு மாறும் சீலம் வகுத்த ஸ்வாமி-
காளி தாசன்- அரசனை உதைத்த காலுக்கு சலங்கை -குழந்தை–
நர நாராயணர் போல ஆச்சர்ய சிஷ்யர் பாவம் –
அதவா
சப்தம் நியமித்து இருவராய் ஆம் படி அவரும் தானும் ஆகும் படி தான் வந்தார் –
அவர் இருந்த இடத்துக்கு நான் மடல் எடுத்து  அடைய இருக்க -அவனே வந்தான் –
நால் அடியிலும் வந்த அழகை  நீ காணப் பெறவில்லையே –நடை சக்கரவத்தி –
இவை எல்லாம் நம் பெருமாள் பக்கல் காணலாம் ஐந்து நடை –

என் முன்னே நின்றான்–சிறப்பித்து சொல்ல காரணம்
பெரிய துவரை உடன் வந்தவர் -கடல் கண்டு தேங்கிய திருவடி போல் -கண்டு மேல் இட மாட்டாமல் கால் வாங்கி நின்றார் —
பாகவதனை தாண்ட மாட்டாமல்-நாம் முகம் பார்ப்பது என்றோ என்று யான் இருக்க எதிர் பாராமல் வந்து நின்றான்–
பிராட்டியைப் பிரித்த பாவி தம்பி  விபீஷணன் ஆதரத்துடன் வர -தாம் இவனை காக்க வைத்தது –
ஸ்ரீ இலங்கை வந்தே ரஷித்து இருக்க வேண்டுமே –
திரு உள்ளம் நொந்து கண்களால் குளிர நோக்கி மயில் இறகால் தடவி விட்டது போல —
இருத்தும் வியந்து –கருத்தை உற வீற்று இருந்தான் கண்டு கொண்டே –
விடாமல் பார்த்து கொண்டு இருக்க குரங்கையே அன்யோன்யம் பெருமாள் பார்த்து இருக்க ஆழ்வாரை பார்த்து இருக்க கேட்கவேண்டுமா –
மாசம் உபவாசிக்கு மருந்து போல முன்னே நின்றான்–
இருந்தது கிடந்தது நடந்தது எல்லாம் காட்டும் முன் நின்று காட்டினான்-பொருக்க பொருக்கக் குடுத்தான் —
அழைப்பன் திரு வேம்கடத்தானை காண -நான் முகன் திரு அந்தாதி —தஸ்மின் த்ருஷ்டே பரா அபரே –அஞ்ஞானம் விலக –
ராம திவாகரன் -விரக தாபம் தொலைய -காணும் அளவும் போய் -மடல் எடுப்பேன்-
ஆசைப் பட்ட அபிநிவேசம் தீரும் அளவும் என் முன்னே நின்றார்–
பாவி  நீ ன்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -ஆழ்வார்
வாயைத் திறக்க முடிய வில்லை பாபம் போனதே முன் நின்றதும்–பசியன் சோறு இட்டால் போல –

நித்யர் முன்னே நின்றான் அல்லன் -என் முன்னே –
ஒரு நாள் காண வாராயே –யார் உடைய முன்னே நிற்க கூடியவர் -சதா பச்யந்தி சூர்ய -என் முன்னே நின்றார்-
மாலா காரர்  குடிசை வந்த கண்ணன்– நித்யர் அனைவருக்கும் கொடுக்கும் அனுபவம் நான் ஒருத்தியே அனுபவிக்கும் படி —
விபீஷணனை -70 லஷம் வானர சைன்யம் காட்டிய அன்பை அவன் இடம் காட்டு சுக்ரீவன் –
எனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ–
அருளாழி அம்மானை ஒரு நாள் புள் கடவ வீதி வழியே கேட்டாரே ஆழ்வாரும் —
இந்த்ரியங்களுக்கு அப்பால் பட்டவன் -கண்ணுக்கு இலக்காகி நின்றான் —
ஸ்ருதி ஸ்ம்ருதி இரண்டும் கண்கள் -தெரியாதவன் கண் இழந்தவன்

இரண்டு கண்ணும் இல்லாத எனக்கு கண்ணையும் கொடுத்து காட்சியும் கொடுத்தானே —
பிரணயித்வாலே தான் முன்னே நின்றான்-ஸ்வரூபம் பார்த்து  நான் நிற்க கடவ —
காட் கரையிலே போகத்தில் தட்டு மாறும் சீலம்–தன கப்பிலே கிடக்கும் –
மங்களா சாசானம் ஸ்வரூப விருத்தமா என்னில்-ப்ரேமம் விஞ்சி–
வெட்டி விரோதி என்று இருப்பேனோ–என்று  பார்க்க நின்றான்-
இன்று வந்து உகந்து ஆலிங்கனம் கொள்வேனோ
ஒரு நாள் வருதியேல்  சினம் தீர்வன் நானே -குலசேகர ஆழ்வார் –எம்பார் அரையர் இடம்
காலால் உதைத்து கையால் அடித்தால் ஆனந்தம் முகம் திருப்புதலே என்று காட்டி கொடுத்தாரே –முன் நின்ற சாகசம்–
அர்ச்சிராதி மார்க்கம் பாரிப்பு திரு வேம்கட யாத்ரை பாரிப்பு போல அகரூர் பாவம் போல —
அவன் பக்கம் கோலி வைத்த பாடு படுத்த பாரிப்பு -உள்ளுவார் உள்ளத்து அறியும் விலவற சிரித்திடேனே –
சாகாச செயல் தானே -அவளும் நின் ஆகத்து இருப்பதும் தெரிந்தும் ஆசை விடாளால் போல —
தீனன் ஆக நின்றான் -நிலை பார்த்து ஒன்றும் பண்ண முடியாத நிலை–
அகிஞ்சனன் அனந்யகதி யாக -என் மனசும்  இரங்கும் படி கல்லும் கரையும் படி–
என்ன  வேஷம் சாகாசம் தைர்யம் —
ஸ்தாவர பிரதிஷ்டையாக மரம் போல நின்றான் —
ஸ்வேத கேது பிரமம் தெரியாமல் நின்ற படி-
ஆய்ச்சியாகிய அன்னையால் -அஞ்சிய நோக்கும் –மேலே என்ன பண்ணினான்—
மனமும் கண்ணும் முன்னே ஓடி போயின திரு மந்த்ரம் கொடுத்து போகம் கேட்டு நின்றான்
இப் பொழுது பிச்சை எடுத்தான் -கை பார்த்தேன் கை வண்ணம் பார்த்தேனே–

மேல் இருந்த நிறத்தில் அகப் பட்டேன்–அதில் மனசை பரி கொடுத்தேன் –
நெஞ்சுக்குள் போக முடிய வில்லை–துஷ்க்ருதம்  க்ருதவான் ராம –
ஸ்ரீ ராமன் இன்னும் உயிர் உடன் சீதை பிராட்டி பிரிந்து இருக்கிறாரே -திரு வடி நினைவு –
இந்த நினைவு வரத் தானே மோதிரம்  கொடுத்தார் இவர் இடம்–கை பார்த்ததே திருப்தி –
உள்ளே -ஸ்வரூபம் பார்க்க வேண்டாம் ரூபமே உத்தேசம் ஆழ்வார் நிலை–
கையிலே அகப் பட்டேன் -அழகிலும் அவன் இடத்திலும் அகப் பட்டேன் —
சிவந்து செய்ய கை- ராகம்-அனுராகை ஆனேன்–காதல் சிகப்பை கண்டே தோற்றேன்–
திரு வண் வண்டூர் செய்ய கண்  –செய்ய வாய் செய்ய கால் ..திருந்த கண்டே –வண்ணம் -நிறம், பிரகாரம் அமைப்பு –
அமைப்பு-அல்லி போலே உள்ளம் கையும் -நாளம் போல கை  கறுத்தும் -தாது போல ரேகை–இதழ்கள் போல விரல்கள் –
விலஷணமான கந்தம் மிருதுவான ஸ்பர்சமும் வெளி பக்கம் கொஞ்சம் கறுத்தும்–

தாமரை பிராட்டிக்கு ஆசனம்-பத்மாசினி-
கை -சகல பல பிரதன்-இதனால் தான் தேவேந்தரன் மூன்று உலகும் பெற்று போனான் –
கை வண்ணம் தாமரை- அலம் புரிந்த நெடும் தடக் கை–பின்பு செய்தது என் -கேட்டதும் –
நான் விரோத வசனம் பண்ணாமல் இருந்த நிலை கண்டு–அனுமதி யாகக் கொண்டு–
பேசாமல் இருந்ததை பாதி இசைவாகக் கொண்டு–அபேஷை யுக்திகளை பண்ண ஆரம்பித்தான் —
பேச ஆரம்பித்ததும் வாய் கமலம் போலும் -மூடி இருந்த செம் தாமரை விரிய –
வெளுத்து இருந்தது சம்மதம் என்று கொண்டு சிவந்தது சூர்யன் கண்டால் தாமரை மலர்வது போல பர கால நாயகி கண்டு விரிய –
அதற்கும் தோற்று இருந்த -அடுத்து நிலை-
அபூர்வமாக தூது செய் கண்கள் சேஷ்ட்டை பண்ண –கண் ஜாடை காட்ட -திரு வாய் மொழி  9-9-9 தூது செய் கண்கள் –
கண் இணையும் அரவிந்தம்–கை இணை சொல்ல வில்லை–கைகள் தனி தனியே ஸ்வதந்திர கரணங்கள்–
கண்கள் அப்படி இல்லையே -ஏக த்ரவ்யம்–இரண்டும் சேர்ந்து பர கல நாயகியை நோக்க -பதில் சொல்லாமல் இருக்க —
கிட்டே வர -அடியும் அக்தே நில தாமரை அலர்ந்தால் போல
-அன்றிக்கே- –
காலைப் பிடிப்பதாக அபிநயனம் -அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழி –கர பத்மம் –

அம்மி போலே மனம் திடம் படுத்திக்க சொல்ல-
கடினமான அம்மி மிதிக்காமல் மிருதுவான கை தாமரை இருந்தவாறு -என்-என்கிறாள் –
அனுஷ்டானம் மந்த்ரம் சொல்ல வாய் பார்த்தேன் வாய் கமலம்-
இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் -நாகை அழகியார் பாசுரம்–
மதுகர சங்காரா வண்டுகள் ரீங்கரிக்கும் -வாய் மந்த்ரம் ஒலியும்–காலே தொடக்கி
குழல் அளவும் பார்த்தார் -திரு கண்களை பார்த்தேன்- அடுத்து தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழி நான் —
நடக்க -கைப் பிடித்து மாறி மாறி இட்ட  திரு வடிகள் சப்த அடி விஷ்ணு தொடரட்டும் —
உடன் படிக்கை-அக்நி–தாமரை பூத்தது போல இருந்தன —
அன்றிக்கே–
அஞ்சலி பண்ணுவது -காலைப் பிடிப்பதாக -அனுபவ தசையில்-ஏகாந்தமாக –
மிருதுவாக தாமரை மேல் காலை வைப்பாரோ -கூசும் படி இருந்தது —
கொப்பூழில் எழு கமல பூ அழகர்–வார்த்தைக்கும் வாய்க்கும்  மணம் உண்டு–
அலை எறியும் திரு கண்கள் —
வேட்டைக்கு போகும் மரவடியை கழற்ற அடியும் அக்தே -சௌவ்குமார்யம் வைத்தே அர்த்தம்

அபயம் சர்வ பூபேப்யோ விரதம்–எனக்கு உகக்கும் என்று கையிலே கட்டிய கங்கணம் பக்த தீஷை–
காட்டினான்-கை வண்ணம் தாமரை–விரோதி நிரசன் திரு கை மர்தவமாய் இருக்க கண்டேன்–
கட்டின காப்ப்புக்கு ஈடாக –நயாமி பரமாம் கதிம் –மாஸூச -சத்ய பிரமாணம் அகம் ஸ்மராமி மத் பக்தம் –
சில வார்த்தைகளையும் சொல்ல வாய் கமலம் —
சஷுசா – சபரி திரு கண்களால் நோக்க பெற்றேன்- நட்புடன் குளிர நோக்குவார் பரதன் பரத்வாஜர் இடம் கேட்டான்- –
குளிரப் பார்த்த திரு கண்களை-கண் இணையும்   அரவிந்தம்–
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் -திருப் பொலிந்த சேவடி –
பிரம ருத்ரர் ஆர்த்திக்கும் -பரிஷித் கரி கட்டை மாற்றி கொடுத்த திருவடிகள் —
தளிர் புரையும் திரு வடிகள் —வாசனை புனுகு ஊற விட்டது போல திருவடி தேன் –
தேனே மலரும் திரு பாதம்–நடந்து வந்தும் ரட்ஷித்தான் -அடியும் அக்தே –

பிர பதனம் சரண் -ஒரு தடவை  பிர பத்தி போதும் என்கிறான்- செய்யேல் தீ வினை —
ஆஸ்ரிதர் முகம் கண்டு மலர்ந்த திரு கை தாமரை–
மெய்ம்மை பெரு வார்த்தை -விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் என்றும்
தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்றும் வார்த்தை அருளி செய்ய வாய்க்கு வேலி கட்டினது போல –
அமர்த்தம் வராமல் இருக்க -வாய் கமலம் -என்னையும் நோக்கி என் -ஞான பக்தி வைராக்கியம் -நோக்கி –
பூர்ண கடாஷம் -ஆகாசத்தில் தாமரை போல கண் இணையும் அரவிந்தம் —
துணை மேல் துளி சோர சோர்ந்து இருந்து அவன் ஊரை நோக்கி போக கிலேசித்து விழ –
இருவராய் வந்து என் முன்னே நின்றார் –
பாளம் போன நிலத்தில் ஒரு பாட்டம் மழை பெய்தால் போல –
அமிர்தம் போல -நடந்து -அடியும் அக்தே –
இந்தளத்தில் தாமரை பூத்தது போல அக்நி நடுவில் தாமரை விரக அக்நி முன் அடி இணைகள் ..

கைப் பிடித்து இது ஒரு அழகு இருந்த படி என் வாய் -சொல்லி தலை கட்ட முடியாமல் கண்ணால் ஜாடை –
கண் இணையும் அரவிந்தம் -ஆதர ஸூசகம் பிரகாசிக்கும் படி கண்ணால் கட்டி நின்றான் —
திருவடிகளில் விழ -ஜிதந்தே புண்டரீகாஷ -தோற்று –
கண்ணும் வாய் -கமலம் ஒரு தடவை 18 பாசுரம் சொல்லி போக்யத்வம் வளர்ந்து –
அங்கு தாய் பேச்சு இது இவள் பேச்சு -அடியும் தாமரை சொல்லாமல் அக்தே –
உபேஷா வசனம் அநாதரவு தோற்ற ஒவ்வாத திருஷ்டாந்தம் என்று அருளினார்

நீ சொல்வதை கேட்டு நாங்கள் நேராக பார்த்தால் போலே அருளினாயே –
சொல்லி முடிக்க முடியாது –அவ் வண்ணத்தவர்–அவரையும் வந்த பிரகாரத்தையும் –
படி எடுத்து உரைத்து காட்டும் படி அல்ல அவன் படி–
ப்ருகு வருணன்- வேதம் சொல்ல முயலலாம்-வேதாஹா மேதம் புருஷம்  மகாந்தம் –அஹம் வேதமி மகாத்மானாம் —
சொல்லி முடிக்க முடியாது –
ஊரார் உமக்கு அறிய கூறுவேன் -பராத் பரம்  மகதோ மகாந்தம் -நேதி நேதி–
யஸ்ய அமதம் தஸ்ய மதம்-தெரிந்து கொள்ள முடியாது என்பவன் அறிந்தவன் ஆகிறான் –
மதம் யஸ்ய  ந வேதச்ய -அறியாதவன் –யதோ வாச்ய நிவர்த்தந்தே –
அறிந்தன வேத அரும் பொருள் என்றும் -ஊற்றம் உடையாய் பெரியாய்– என்றும்
சாஸ்திர  யோநித்வாத் –பன்னலார் பயிலும் பரனே –அவ் வண்ணத்தவர் நிலைமை–
அவர் -நிலைமைக்கும்-ஸ்வாபம் குணம் இவற்றுக்கும் – அவருக்கும் விசேஷணம் —

ஸ்வரூப ரூப குணம் விபூதி -அவனைப் பற்றி–சௌலப்யம் குறிக்கும் -வந்து நின்றானே-சௌந்தர்யம் காட்டி –
பிரசாத பரமாவ் நாதவ் மம- மாலா காரர்-நாதன் பரத்வம் கழற்ற முடியாது –நிலைமை –
மற்ற நான்கு -சௌசீல்யம்= வந்து -இங்கே -வாத்சல்யம் காட்டி –என் முன்னே வந்து -கருணை –நின்றார் —
சௌந்தர்யம் கண்டும் —
சௌலப்யம் நான்காகக் காட்டி–குணம் கண்ணுக்கு விஷயமா -தோழி கேட்டாள்–
உள் கண்ணால் ஞான சாஷ்த் காரம் -புரிந்து கொண்டதை சொல்கிறாள்-
பர ப்ரஹ்மம் இஷத பார்த்தார் சங்கல்பித்துகொண்டான் –அனுபவ அலை போல —
அனைத்திலும் பெருமை கொண்டவன்-
விதியினால் பெடை மணக்கும் -மென் நடைய அன்னங்காள்-கூடி  இருக்க ஆழ்வார் பிரிந்து இருக்க –
சுக்ரீவன் துயர் தீர்த்த பின் தான் சீதை உடன் கூடினான்
அன்னமே நீ அறியாமல் சேர்ந்து இருக்கிறீரே –
கண்டு வைத்தும் அழகு சீலம் உறுதி பாடி கண்டும் -முன்பு உன் இடம் கேட்டு அறிந்ததை கண்டேன் –
நெடு காலம் சாதனம் பண்ணி காணக் கூடிய வகுத்த விஷயம் கண்டேன் —
கண்டும் தெளிய கில்லீர் –அதற்க்கு அடி என் -அவரை–பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன்
சேயன் அனியன் சிந்தைக்கு கோசரம் அல்லன் –பரத்வமும் ஸ்வாபம் நினைந்து மயங்கினேன்
அவன் சௌலப்யம் காட்ட வந்த பொழுதும் —

தோழி -அவனை கிட்டு விக்க துணை-பிரியும் பொழுது நடந்தவை சொல்லி தரிக்க துணை -சர்வ வித சகாயம்-
அறியாதன அறிவித்து விரோதி கழித்து சேர்ப்பித்து இருக்கும் நாள் விருத்த கீர்த்தனம் பண்ணி ஆச்சார்யர்–
திரு நாகை பாசுரம் -பொன் இவர் மேனி மரகதத்தின் –ஹாரம் -இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் —
அவர் -போக்யதை -என்னையும் நோக்கி -நாயக அனுராகம் சொல்லி –
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் பய ஸ்தானம் சொல்லி
அச்சோ ஒருவர் அழகிய வா -பயந்தும் விட முடியாமல் ஆசையும் சொல்லி –
ஸ்வாபதேசம்-ஆத்ம ஸ்வரூபம் அல்குல் பாரதந்த்ர்யம் கொங்கை பக்தி –
கை முதல் இருக்கா பார்த்து மோஷம்-நிர்ஹேதுகம் தானே கிடைப்பது —
அதனால் தாயார் இருக்க -சொல்லாமல் உபாய அத்யாவசயம் சொல்ல –தோழி –
நான் கண்ட வடி அழகு வந்த வரவு நின்ற நிலை நீ காணப் பெற வில்லை–
அவரை நாம் -என்னை விட்டு பிரிந்தால் இருக்க முடியாத –
அவனை விட்டு பிரிந்தால் இருக்க முடியாத நாம்-ஆற்றாமை  உடைய நாம் –
விரக தாபம் கொண்டு துடித்து  செல்வர் பெரியார் -சிறு மனுசர்/
அம்மான் ஆழி பிரான் அவன் எவ் இடத்தான் யான் யார்–

திர்யக் ஸ்தாவர -அரச மரம் மேரு மலை போலே இருக்கிறேன் —
வராக நிருசிம்க ராம கிருஷ்ணன் என்று எல்லாம் வந்தும் -தேவர் என்று அஞ்சினோம்
மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவர் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
தேவ–சப்தம் -விளை யாட்டு உடையவன்– வெற்றி வாய்ப்பு– விவகாரன்– ஒளி படைத்தவன்–ஸ்தோதரம் பண்ணத் தகுந்தவன் —
மோத ஆனந்தம் –மத செருக்கு– சோபனம்– காந்தி ஒளி படைத்தவன்—
கதி புகல் இடம்//-அகில புவன ஜன்ம ஸ்தேம பங்க ஆதி லீலே —
அலகிலா விளை யாட்டு உடையவன்–இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன் என்றும்
வீட்டை பண்ணி விளையாடும் —
ஜிதந்தே புண்டரீகாட்ஷா–ஜிதம் பாகவதா  ஜகத் -ஜாம்பவான் வாக்கியம் -சத்யான் லோகன் ஜயத் –
தோற்றோம் மட நெஞ்சம் -வெற்றி கொள்பவன் என்றும் –விவகாரம் வார்த்தை சொல்லுதல்-

பீதக ஆடை பிரானார்  பிரம  குருவாகி வந்து என்றும் பாஞ்சராத்ரம் கொடுத்தான் –
திருவரங்கர் தாம் பணித்த  மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் –
மறை உரைத்த  பெருமாள் ஹம்ச ஹயக்ரீவ -அன்னமாய்  அரு மறை பயந்தான்-
வேத வைதிக பிரவசனம் –விவகாரம் வழக்கு -ஈச்வரோஹம் /போஹி/ சித்த /பலவான் சுஹி /
வாதாட வருபவர் அசுரர்–பதிம் விஸ்வஸ்ய என்றும் பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரோம்-
ஒளி துதி–தேஜஸ் பதார்த்தம் கடன் வாங்கி -நாராயண பரம் ஜோதி –
நிறைந்த சோதி  வெள்ளம் சூழ்ந்த -சோதி வெள்ளத்தில் எழுந்த உரு –
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது –
ஸ்துதி ஸ்தோதரம் பண்ணத் தக்கவன் -ஸ்துத-ஏத்த எள் உலகும் ஏத்த
ஏத்த  எங்கு எய்தும் -ஸ்தவ்ய ஸ்தவ பிரிய –தீவு காந்தி -தேஜஸ்
பிராப்யம் கதி -புகல் இடம் உபாயம் மாம் விரஜ
நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும் அறிந்து அடிகை–இறைவா நீ தாராய் பறை  என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்றும் —
தேவ தாது அர்த்தம் இவை அருளுகிறார் —
எல்லாம் பூர்ணம்  இவன் இடம் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –ந துத் சமசக -மேன்மை நினைத்தேன் -இழந்தேன்

பவான் நாரயனோ தேவா-பிரமன் முதலானோர் சொல்ல  ஆத்மாநாம் மானுஷம்  மன்யே -தசரதன் பிள்ளை- என்றானே —
ஏழு வயசு கண்ணன்  சோலை சூழ் -குன்று எடுத்த பின் -உங்களில் ஒருவன் என்றானே–
ஆயர் அஞ்ச அஞ்சா முன் -அஹம் வோ பாந்தவோ ஜாதக – -அப்பன் தீ மழை காத்துகுன்றம் எடுத்தானே —
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபர் உரை  —
அகலில் அகலும் அணுகில் அணுகும் -வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் —
மண்ணிலே  மனிசராய் இருக்க ஆசை பட்டவரை தேவர் என்று பழி இட்டேனே —
சஜாதி விஷயத்தை விஜாய புத்தி பண்ணினேனே —

அஞ்சினோம்–ப்ரியம் உடன் அவன் உடன்  போக வில்லை –ப்ரீதி வேண்டும் பீதி கூடாது —
அபாய ஸ்தானத்தில் பயம் கொண்டேனே –பயம் பயானி அபகராணி-பிரக லாதன்-
நாம் அஞ்சினோம் -ஜனக ராஜன் திரு மகள் வாக்கியம் என்பார் நஞ்சீயர்–
ராஜ குல மகாத்மியம் பன்மையில் பேசுகிறாள்  -இழவில்  வந்தாலும் வாசனை விடாது —
பீஷாச்மாத்.. துர் மானிகள் அஞ்சும் இடத்தில் நாம் அஞ்சினோம்-
சமுத்ரம் துரும்பு தள்ளும் மீன் திமிங்கல அடங்கி இருப்பதால் தள்ளாது –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு–அபிமான பங்கமாய் அடிமை தனம் பட்டால் பயம் வேண்டாமே —
நின் பிரிவினும் சுடுமோ காடு உன் கூட இருப்பதே சொர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை பிராட்டி –
ராமன் தோள் நிழல் ஒதுங்கி பயம் இன்றி காட்டில் இருந்தாள் பிராட்டி –
உபய விபூதிக்கும் நிழல் கொடுக்கிறவன் தோள் கிட்டியும் அஞ்சினேனே —
பஜதாம் ப்ரீதி பூர்வகம் புத்தி யோகம் ததாமி -கீதை-புத்தி கொடுத்ததும்
வயலாலி மணவாளன் தான் அவரை போய் தேவர் என்று அஞ்சினோம் –
அறியாதன அறிவித்த அத்தா –தோழி உன் சந்நிதி இல்லை நாம் அஞ்சினோம்
ஆச்சார்யர் சந்நிதி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது –அவன் படியையும் நாம் படியையும் அறிந்து சேர்ப்பவர்

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்- 20-தேராளும் வாள் அரக்கன் செல்வம் மாள-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 27, 2011

தேராளும் வாள் அரக்கன் செல்வம் மாள
தென் இலங்கை முன் மலங்க செந்தீ யொல்கி
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பார் இடந்து பாரை உண்டு
பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை  மண் மேல்
பெரும் தவத்தள்  என்று அல்லால் பேசலாமே ?–20-

பதவுரை

முன்–முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்–தேர்வீரனும் வாட்படை வல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள-ஐச்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க-(அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
(அனுமானையிட்டு)
செம் தீ ஓங்கி–சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
(அதுவன்றியும்)
போர் ஆளன்-போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்-ஆயிரம்தோள்களை யுடையனான
வாணன் பாணாஸுரன்
மாள-பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து-அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு–பாணபுரத்திற்புகுந்து
மிக்க-வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும்
பார் ஆளன்–பூமிக்குநிர்வாஹகனும்,
பார் இடந்து–(வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும்
பாரை உண்டு–(பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து–அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து–(த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
(ஆக இப்படியெல்லாம்)
பாரை ஆண்ட–இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்–பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதும்-இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை-இப் பெண் பிள்ளையை
மண் மேல்-இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே–பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ?

பொரு அ ற்றாள் என்று சொல்ல கேட்டு மேலும் பேசுகிறாள் மகள் —
பூ மண்டலத்திலே நித்யர் போல இருக்கிறாள் என் மகள்-இதை தவிர வேறு -பேச முடியாது என்று இத்துடன்  தாய் பாடல் முடிகிறது –
கொண்டல் வண்ணன் -மற்று ஓன்று காணாவே என்று முடித்தால் போல —
விபவம் மட்டுமே சொல்லி -இந்த பாசுரம் தாய் பாசுரம்-
பெண்ணைப் பார்த்து அர்ச்சையே மறந்தாள் தாய் —
சந்திர ஹாசம் வாள் கொண்ட ராவணன் -தென் =அரண் இலங்கை மாள =-அழியும் படி
ஒல்கி-கொளுத்தி /போராளன்-போர் செய்வதே ஸ்வபாவமாகக் கொண்ட பாணன் -மாள -தோள்களை துனித்த —
வீர ஸ்ரீ அழித்து–பொரு கடல்- அலைகள் எதிர் அம்பு கொத்து எதிரிகள் தாண்ட முடியாத படி–
பாராளன் -பூமிக்கு நல்லது செய்து ஏனமாய் நிலம் கீண்டு -வராகன்-
பார் உண்டு-ரஷித்து
உமிழ்ந்து தன்னை அடைய சிருஷ்டித்து
பார் அளந்து எல்லை நடந்து காட்டி –
பேர் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ வராக வைபவங்களுக்கு-திரு குணங்களுக்கு பல  திரு நாமங்கள் –
ஓதும் -பெண்ணை- மண் மேல் பெரும் தவத்தள்–

சாதநாந்தர சம்பந்தம் என்று நினைந்து இவள் இழக்க கூடாது -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை – ஹிதம் பேசினாள் தாயார் –
அவளே பொரு அற்றாள் என்று -ஊர் கதிர் காவல் விட்டால் -அறுப்பது கிடா விடுவது ஆளி மூளையே –
பயிர் தொழில்களை  அபாரமாக செய்வது போல இவளும் வாய் விட்டு சர்வ ரஷகன் பெருமை பேச ஆரம்பித்தாள்–
உள்ளே வைத்து உமிழ்ந்து எல்லை காவல் கடந்து ஈஸ்வரை ஒழிந்தவர் ரஷகர் இல்லை-
சர்வ ரஷகத்வம் பேசி கால ஷேபம் பண்ணினாள்-
மகிஷிக்கு உதவின படி//பேரனுக்கு உதவின படி/ ரஷக அபெஷை உடைய பூமி பிராட்டி/
அதுவும் இல்லாமல் இருந்தவரை ரஷித்த படி/ தம் பக்கல் விமுகராய்  இருந்தவர் மேல் திரு வடி வைத்து ரஷித்த படி –

வாய் விட்டு பேச -முதல் பத்தில் பத்து பாசுரங்களில் – -தாமான நிலையில் –
திரு கோவலூரை அனுபவிக்க பாரித்து தாம் இருந்த இடம் திரு கோவலூர் பெறாமல் வந்த ஆற்றாமையால் கூப்பிட்டாலும்
வந்து முகம் காட்டாமையால் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது  என்றும் வாழுதியேல் வாழலாம் என்று தம் கால ஷேபமாக அனுபவிக்க —
முகம் காட்டாது ஒழிந்தது தம் தவறு-சாதநான்தரம்-சீதை பிராட்டி அம்மானை கேட்டு– லஷ்மணனை போக சொல்ல –
இரண்டு தவறு பண்ணினேன் என்று சொன்னாள் போல–உபாயான்தரம் பற்றினாள்-

விசனம் பட்டு சந்தேகம் விளக்க -யானை பாவம் அவன் என்று சொல்லி – துடிப்பால் கூப்பிட்டேன் –
என் ஸ்வரூபம் என்பதால் பேர் அலற்றி கூப்பிட்டேன் –
பிரிவாற்றாமை- காரணம் -என்று  ஈஸ்வரனின் புத்தி சமாதானம் பண்ணினார் 10 பாசுரத்தில் —
4/அப்புறம் 10 அமைந்து இருக்க வேண்டும் -சாலம்பன உபாயம் ஆலம்பமாக பற்றி இல்லை சொல்லி இருக்க வேண்டும் –
நடுவில் சந்தேகம் படுகிறார் சொல்வதற்கு முன் -ப்ராசங்கிகமாக நடுவுள் உள்ள பாசுரங்கள் நெஞ்சு இழுக்க போனது —
ஈஸ்வர புத்தி சமாதான அர்த்தம் முதல் பத்து —

வினவ வந்தவர் புத்தி சமான அர்த்தம் அடுத்த பத்து –மற்ற சரணாகதர் சங்கிக்க -தாயார் தன்மையில் பேசி தலை கட்டுகிறார் –
இத்தால் சித்த சாதனம்- சித்தோ உபாயம்-பிர பன்ன-ஈஸ்வரன் திரு வடிகளே –
பகவத் குண சேஷ்டிதங்கள் கால ஷேபம்  விஷயம்-ஆத்மா உள்ள வரை இங்கும் அங்கும் துடித்து கொண்டே கைங்கர்யம் –
எற்றைக்கும் –இவை சாதனம் ஆக இல்லை–
அடைகிற காலத்தில் பிராபகம் குண சேஷ்டிதம்
அனுபவிக்கும் பொழுது பிராப்ய குண சேஷ்டிதம் –
காரண காரிய பிரமம்–

தேராளும்-தேர் ஜாதி எல்லாம் கொண்டவன்-அதி ரதர் மகா ரதர் என்று இதை கொண்டு
மற்ற குதிரை ஆனை ஆள் படைகளையும் சொல்வதால் –சதுரங்க பலம் –
அழகுக்கு போல வாளே போதும் வாள் அரக்கன்–சங்கல்பத்தாலே இவன் கார்யம் கொண்டு திவ்ய ஆயுதங்கள் அழகுக்கு போல —
கையிலே வாள்-=மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப -வாள் சந்திர காசன் வாங்கிக் கொண்டு
நாள் வரம் வாங்கி கொண்டவன் தனி வீரன் —

செல்வம் மாள -திரு வடி மதித்த ஐஸ்வர்யம் –
அதர்மம் இன்றி இருந்தால் மூன்று உலகும் ஆளக் கூடியவன்- இங்கு பிணம் கூட இருக்காமல் மாள வைத்தான்–
சண்டைக்கு அப்புறம் குரங்குகளை உயர் வாங்கி கொடுக்க அரக்கர் சரீரம் கடலில் போட்டானே –
அரண் -அமைக்க பட்ட இலங்கை தென் இலங்கை -சுற்றும் கடலாய் அனந்தரம் நாடாய் அனந்தரம் மதிளாய்–
அவன் தான் குறி அழியாமல்  இருக்க அவன் பார்க்கும் பொழுதே ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படியாக
கண்டு கலங்கும் படி லோகம் அடங்க அவன் கையில் பட்ட பாடு இவனே பட்டான் –
அவளுக்கு மூத்தோனை வென் நரகம் சேரா வகையே -வீர சொர்க்கம்-பட்ட பாடே நரகம் –
செந்தீ -இத்தனை நாளும் வெளுத்த அக்நி இன்று தான் செந்தீ ஆனதாம்
அனலம் அலம் புத்தி இல்லை -ஒல்கி-திரு வடி வாலை அண்டை கொண்டு தன் நிறம் பெற்று –
பாகவதன் நிழலில் ஒதுங்கின பலம் –சேஷத்வம் பார தந்த்ர்யம் -ததீய – இதனாலே பெரும் —
அங்கன் அன்றி கூர்மையான பானங்கள் சர அக்னியால் அழித்த சக்ரவர்த்தி திரு மகன் என்றும் கொள்ளலாம் –

ஒல்கி-தானே -கையில் திரு சக்கரம் செய்தது தான் பண்ணினது போல –
ராம தஷிண பாஹு கொல்லை மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லு -வலது கரம் செய்தது தானே செய்தது  போல தானே
ராமன் பான அம்பு போல நானும் ராம பானம் பிரார்தித்தாரே திரு வடியும் —
போராளன்–ஜன்மம்- போரே புரிந்து தினவு தீரும் படி எதிரிகள்  கிடைக்காமல்  –
ருத்ரன் இடம் சென்று கேட்டானாம் எதிரிகளை பாணாசுரன் –1000 தோள்-கொண்டதால்–
அவனை  பூஜிக்கும் கைகளே கைகள் -மயில் பீலிக்கு கண் உண்டு பிணத்துக்கும் கை /
கை தாய் அவனை அல்லது தான் தொழா– காணா கண் கண் அல்லவே வகுத்த விஷயம் அஞ்சலி பண்ணவே கை —
பெண்ணுக்கு இப் பொழுது ஒரு கால் சேவித்தாலே 500 அஞ்சலி சமம் வாய்ப்பை இழந்து பர ஹிம்சைக்கு உருப்பானதே –
வீரத்தை அழிப்பதை மாளா /பின் இருந்த இருப்பு நடை பிணம் மாளா –

பொரு கடலை- -எதிரிகளை தாண்ட ஒட்டாத கடல் அலைகள் பொருகிற கடல் -பொரு கடல் கீழும் அன்வயிக்கலாம் –
வீர ஸ்ரீ விஜய ஸ்ரீ– மிக்க –அனைவரையும் முடித்ததால் மிக்க —
கார்திகையானும்..முது இட்டு ஓட  கரி முகத்தானும் கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் – –
வாணன் பிழை பொறுத்த –முக் கண் மூர்த்தி கண்டீர்-அடையாளம் சொல்கிறார்–
பூ பாரம் அழித்தான்-

இனி பார் இடர்ந்து – பிராட்டி  தன் நிலை குலையாமல் வந்த ஆபத்தை போக்கி -அவளை மறைத்து —
வருந்தா வினைகள் தீர -திருந்தா அரக்கர் தென் இலங்கை செந்தீ உண்ண சிவந்து ஒரு நாள்  –
பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து பின்னை மணாளர் ஆகி-ஆழ்வார் —
பூமி பிராட்டி நிலை குலைய சங்கல்பத்தால் பண்ணாமல் சூரி போகய வடிவை அழிய மாறி
தத் அனுரூபமான மானமிலா பன்றியாய் கொண்டு -கீழ்  பூமி பிராட்டியை ரஷித்த படி –
இதில் பூமி பிராட்டியை  உத்தாரணம் பண்ணிய படியை சொல்லி –
பிரார்திக்காமலே உண்டும் உமிழ்ந்தும்–தன்னை வந்து அடைய —
பார் அளந்து -அபேஷை மட்டும் இல்லாது அன்றிக்கே விமுகராய் இருக்கும் பொழுது அனைவரையும் தீண்டி
ஸ்வாதந்த்ர்யம்-அந்ய சேஷத்வம் கொண்டு -திரியும்  அனைவரையும் -ஸ்வாமி-பெத்த பாவிக்கு  விட போமோ–
மதீய மூர்தனம் அலங்க்ருஷ்யதே- -படிக்களவாகிய பாத பங்கயம்-
பார் ஆண்ட-பூமி பாலன்-ரஷகன்–பார் மீண்டும் மீண்டும் சொன்னது -ஆதர அதிசயத்தாலே —

ஒவ் ஒரு சேஷ்டிதங்களிலும் –திரு நாமங்கள் ஓதும் பெண்–இதையே கால ஷேபம் ஆழ்ந்து அனுபவிக்கிறாள் –
நித்யர் போல -மண் மேல் பெரும் தவத்தள்-
பிரி கதிர் பட்டு மண்ணில் வந்தவள் –பூமியில் இருக்கும் பொழுது நித்யர் போல அனுபவம்–
நித்யர் பரி மாற்றத்தில் சாதனா புத்தி உண்டோ இல்லையே அது போல தான் இவள் ஆற்றாமையும் சாதனம் இல்லை —
நமோ இத்ய வாசகர் அவர்களும் இவளும் குணம் பேசி திரு நாமங்கள் –
துரும்பு நறுக்க  பிராப்தி இல்லை–நித்யர் கோஷ்ட்டி -தவத்தர் இவள் பெரும் தவத்தர் உயர்ந்தவள் –
இங்கே பக்தி பண்ணி அத்வீதியம் விண்ணுளாரிலும் சீரியர்
உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீரோ

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–19-முற்றாரா வன முலையாள் பாவை மாயன்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 27, 2011

முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்ய கலத்துள் இருப்பாள் அஃதும் கண்டு
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிகின்றாள்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழி என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள்
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரை கயம் நீராட போனாள்
பொரு வற்றாள்   என் மகள் உம் பொண்ணும் அக்தே–19–

பதவுரை

பொருவு அற்றாள் என்மகள்–ஒப்பில்லாதவளான என்பெண்ணானவள்,
முற்று ஆராவனம் முலையாள்–முழுமுற்றும் போந்திலாத அழகிய முலைகளை யுடையவளும்
பாவை-சித்திரப் பதுமை போன்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மாயன்-அற்புதனான எம்பெருமானுடைய
பெற்றேன்-பெற்றெடுத்த தாயாகிய நான்,
வாய் சொல் பேச-(ஹிதமாகச் சில) வார்த்தைகள் சொல்ல,
இறையும்-சிறிதேனும்
கேளாள்-காது கொடுத்துங் கேட்பதில்லை;
பேர் பாடி-திருப்பேர் நகரைப் பாடியும்
தண் குடந்தை நகர் பாடியும்-குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும்
மொய் அதலத்துள் இருப்பாள் அஃது கண்டும்-அழகிய திருமார்பினுள் அடங்கிவாழும்படியைக் கண்டு வைத்தும்
அற்றாள்-அவனுக்கே அற்றுத் தீ்ர்ந்தாள்;
தன் நிறைவு அழிந்தாள்-தன்னுடைய அடக்கமொழிந்தாள்;
ஆவிக்கின்றாள்-நெடு மூச்செறியா நின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-தோழீ! திருவரங்கநகர் படிந்தாடுவோமா?‘ என்கிறாள்;
பொன் தாமரை கயம்-திருப்பொற்றாமரைத் தடாகத்திலே
நீர் ஆட-குடைந்தாடுவதற்கு
போனாள்-எழுந்து சென்றாள்;
உம் பொன்னும் அஃதே-(தோழியர்காள்!) உங்கள் பெண்ணின்படியும் இவ்வண்ணமேயோ?

வினவ வந்தவர்கள் நாச்சியார் கை காட்டி விலக்க சொல்ல –
அதையே பச்சையாக கொண்டு-மேல் விழுந்து ஆசை பட்டாள்-நீங்கள் பெற்ற பெண்களும் அப்படி தானா-
மற்றைய ஆழ்வார்களை திரு உள்ளத்தில் கொண்டே —
நங்கைமீர் –நும்மை தொழுதோம் -நும் அடியோர் எல்லோர் ஓடும்  ஒக்க எண்ணீர் இருந்தீரோ –
நம் ஆழ்வார் போல இல்லை–ஒப்பு சொல்ல முடியாதவள் இவள்–பெருமானுக்கே அற்று தீர்ந்தவள் —
ஸ்ரீ தேவி நாச்சியார் மாயன் மொய் அகலத்து இருப்பாள் கண்டும் ஆற்றாள்-
அனந்யார்ஹ சேஷை பூதை ஆனாள்– பெண்மை அழிந்து நெடு மூச்சு விட்டு —
தோழி இடம் பேச அணி அரங்கம் சென்று  ஆடுதிமோ அனுபவிக்க போகலாம் அழுந்து நீர் ஆடுபவர் போல —

திருப் பேர் நகர் -திரு குடந்தை -வழி தெரியாமல்   பொன் தாமரை கயம் -பெரிய பெருமாள்- சொல்கிறாள் —
திவ்ய தேசம் அவள் சொல்ல தாயார் பெருமாளை சொல்கிறாள் -சுனை ஆடுதல் – பகவத் அனுபவம் –
தன்னையும் பார்க்காமல் என்னையும் பார்க்காமல் அவனும் வராமல் தோழி இடம் பேசுகிறாள் -உம் பொண்ணும் இப்படித் தானா —
ஹிதம் கேட்க்காமல் –அவள் நிலை உயர்ந்த நிலை என்று அதை கொண்டாடி வார்த்தை முன் சொன்னாள்–
வினவ வந்தவர் அவன் ஸ்ரீ தேவி இடம் அந்ய பரர் சொல்ல சொல்ல அதுவும் சொன்னேன் -அதுவே விபரீத பலமாய் அதுவே ஹேதுவாக கொண்டு அவளைப் பற்றி பெறலாம் என்று நம்பி அவன் இருக்கும் தேசம் ஏற போனாள்–

முற்று ஆரா வன முலையாள் –
அழகைச் சொல்லி -அவனை அந்ய பரன் ஆக்கும் –துல்ய பருவம் சொல்கிறது –
யுவா குமாரன் -யுவா அகுமாரன் பிரித்து -கவ்மாரம் மாறி- யுவதிச்ய குமாரினி-பிரிக்க முடியாமல் நடுவில் சகாரம் இருப்பதால் –
கவ்மார அவஸ்தை-இளமை மாறாமல் -யவனம் எட்டி பார்க்கிறது இதுவே சதைக ரூபமாய் இருப்பது அவனுக்கு இல்லை மாறினதே —
11000 ராஜ்ஜியம் ஆண்டாலும் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் இதுவே பருவம் ஆகி இருந்தது–
1000 ஆண்டு காலம் சீதை பிராட்டி இருந்து –மேல் கொண்டு 10000 ஆண்டு இருக்க  போவதையும் லவ குசர் பாடினார்கள் —
பால அவஸ்தை உண்டா -யுவா குமாரர் ஆக பிறந்தார்களா –சிசு பால-மாறுதல் ஒத்து கொண்டால் மேல் விகாரம் வரும் –
விக்ரகத்தால் தாயார் தந்தைக்கு பவ்யமாக கொண்டார்கள் –பெற்றோர் ஆசை பட்டதால் —
மேல் கொண்ட பருவம் யாரும் ஆசை பட்டு கேட்க்க வில்லை-
அடியார்கள் உகந்த உருவமே தான் உகந்த உருவம் ஜரா அவஸ்தை – மூப்பு அநிஷ்டம் என்பதால் வர வில்லை –
ரஷிக்க வர்க்கம் கேட்ட படி கொள்கிறான்
ஏக காலத்தில் பால்யம் யவனம் மாறி வந்த இடம் –
மதுரை வந்ததும் -10 வருஷம் ஆன பின்பும் பால சேஷ்டிதங்கள் காட்டி பால் குடித்தும் காட்டினானே –
பால்யம் இருந்தும் சிசு ஏற் இட்டு கொண்டான்-உன்னையும் ஒக்கலையில் கொண்டு  தன கருத்தாயின செய்தான் –
பால்யமும் யவனமும் சேர தோற்றப் பண்ணினானே —

முலை-பக்தி–சர்வ அங்கமும் சுத்தி இருக்க- மலராள் தனத்து உள்ளான்– கமலாச்த்ன -ஸ்திரீ ஸ்தனாபரணம்-
இவன்–அவ் அருகே கால் வாங்க மாட்டாமல் -போக்கியம் உள்ளதால் —
உபய விபூதி நிர்வாகன்-சங்கல்ப சக்தியால்-கமல கண்ணன் என் கண்ணில் உள்ளான் -அவன் கண்களால் காண்பன் -ஆழ்வார் –
தன் உடையதான விஷயத்தில்-ஸ்ரீ தேவி இடம் -ஏக தேசத்திலும் தாண்ட முடியாமல் இருக்கிறான்-
நிருபாதிக ச்வாதந்த்ர்யம் ஸூயம்  நிர பேஷனாய்  இருப்பவன் -நித்ய நிருபாதிக–கிடீர் ஒரு அவயவம் குறித்து
பர தந்த்ரனாய் எதிர் பார்த்து இருக்கிறான்-எத்தனை இனிமை– பிராட்டி குணம் ரூபம்  சேஷ்டிதம் பார்த்து மயங்கி போகிறான் –
இவை  எல்லாம் அடியாருக்கு ஓடம் ஏற்றி கூலி கொள்ளத் தானே–
இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே –உபதேசதாலே  மீளாதா போது–அவனை அழகாலே திருத்தும் இவனை அருளாலே திரு த்தும் –
உள்ளான்-விபு தத்வம்  அணு வஸ்துவில் ஏக அவயவத்தில் அடங்கினான்–
பிராட்டிக்கு விபுத்வம் உண்டு -வட கலை-தென் ஆச்சர்ய சப்ர்தாயம் -அணு பிராட்டியும் ஜீவ கோஷ்ட்டி–
பாவை–நிருபாதிக ஸ்த்ரீதவம் உடையவள்–புருஷோத்தமன் கூட  அழிக்க முடியாது —
சீதை பிராட்டி ஆறி இருந்தாளே  – 10மாதம் –பராங்குச பரகால நாயகிகள்   ஏற்றம் ஸ்த்ரீத்வம் இழப்பார்கள்
வட நெறி வேண்டுவோம் மடல் எடுத்தார்கள் —

மாயன்-ஆஸ்ரித பூதன் -நிருபாதிக ஸ்வதந்த்ரன் பரதந்த்ரன் ஆன ஆச்சர்யம்-
சதா பூரணன் ஒரு மார்பகம் எதிர் பார்த்து–சர்வஞ்ஞன் சர்வ சக்தன் கூட ஒரு அவயவம் பரி சேதிக்க ஒண்ணாத படி இருந்தானே —
மொய் -அழகு அகலத்து -மார்பன்- அகல கில்லேன் இறையும் என்கிற இவளின் திரு மார்பின் ஏற்றம் சொல்லி
இத்தால் அகல கில்லேன் இறையும் என்று சொல்ல வைத்த அவன் திரு மார்பம் ஏற்றம் சொல்கிறது —
இவளும் மார்புக்கு அவ் அருகு தாண்டாமல் இருக்கிறாள் அவன் முலை தாண்டி போகாதது போல —
அவனைப் போல ஞான சக்திகள் இருந்தும் –ஏக அவயவத்தில் அகப்பட்டு தண்ணீர் தண்ணீர் என்று துடிக்க —
பிராந்த மிதுனம் -பிர பஞ்சம் முழுவதும் -வடி தடம் கண் மலர் அவளோ -தாராய தண் துளப வண்டு உழுத  வரை மார்பன் –
வண்டுகள் உழுகிறதே தன் மகள் இழந்தாள் என்கிறாள் தாயார்   -மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்–

சேஷி-சேஷ வஸ்துவின் ஏக வஸ்துவின் சேஷப் பட்டு போனது போல –
சேஷி சேஷனின் ஏக அவயவத்தில் சேஷ பட்டு இருப்பாள்-இதுவே நிரூபக தர்மம் இருவருக்கும் —
இவள் இருந்தாள் தான் திரு மார்பு–திருவுக்கும் திருவாகிய செல்வா –சர்வேஸ்வர சின்னம் ஸ்ரீய பதித்வம் —
வேதாந்தங்கள் தேடி இதை கண்டு நித்ய –மதுப் பிரத்யயம் -கொண்டே ப்ரஹ்மம் நிர்த்தேசம்
ஸ்ரீ வத்ச வஷன்–மண்டோதரி -நித்ய ஸ்ரீ இரண்டு அடையாளம் -அவர தெய்வம் இது இல்லாமல்-மற்றவர்கள்-
பரம் திறன் அன்றி மற்று இல்லை
திரு அல்லா தேவரை தேவர் என்னோமே –பரம சுவாமி-திரு மால் இரும் சோலை–
அபரம  -அப ரமா -ரமா சம்பந்தம் இல்லாதவர் தான் அபரமர்–உள் இருப்பாள்–
இதம் இத்தம் -இது இனையது இரண்டுக்கும் அவள் சம்பந்தம் வேண்டும்–
திவ்ய ரூபம் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் அவளே -உள் இருப்பாள் -இரண்டுக்கும் நிரூபக தர்மம்-
ஆஸ்ரயண வேளை போக வேளை கைங்கர்ய வேளை -எக் காலத்திலும் மிதுனமே பிரதி சம்பந்தம் –
அல்லாத நாச்சிமார்கள் நிழல் போல -விபூதி அந்தர்பாவம் பூமி நீளா தேவிமார்கள்  –
இவள் ஸ்வரூப ரூப குணம் மூன்றிலும் –மீனில் எங்கும் தண்ணீர்  பசை போல இவள் எங்கும் —
அஃதும் கண்டும் ஆற்றாள் அவனுக்கே அற்று தீர்ந்தாள் –மயல் மிகு -பைத்தியம் இருவருக்கும் ஊமதன்காய்  போல என்று நான் சொல்ல —
பாபானாம் வா -சீதை பிராட்டி வாக்கியம் குன்று அனைய குற்றம் செயிலும் குணம் ஆக கொள்வான்
அநந்யார்ஹை ஆனாள் –
அவள் படியை கண்டு ஆற்றாள்
அவன் படியை கண்டு ஆற்றாள்
மிதுனம் படியை கண்டும் ஆற்றாள்
செய்தாரே நன்று செய்தார் என்பர் போலும்

இருவரும் சேர்ந்து ஊமத்தன்காய் போல இருப்பதால் தெளிந்து இருப்பார் ஓன்று வேண்டும் என்று அநந்யார்ஹை ஆனாள் —
விடுகைக்கு சொன்னது -பற்றுகைக்கு ஆனது அக்க்தே –
மார்பை ஒருத்திக்கு படுக்கை பற்று ஆக்கினான்–அடியார்களுக்கு தானே அது —
என் திரு மகள் சேர் மார்பினே என்னும் என் உடை ஆவியே என்னும் -தாய் பாசுரம்-சேர்த்து நஞ்சீயர் -சொல்ல பட்டர் மோகித்தாரே–
சேர்ந்த படியாலே எனக்கு ஆவி ஜீவனுக்கும் மேல்–
படுக்கை ஆக்கி இல்லாமல் இருந்தால் என் உடை ஆவி இருந்து இருக்காது- போக பூர்த்தி உள்ளது சேர்த்தியிலே —
ஏதாவது ஓன்று இருந்தாலே போதும் இவள் பூர்த்தி அழிகைக்கு–

தன் நிறைவு–கடல் வற்றிற்று என்கிறாள்–
அவள் பூர்த்தி அழிந்தது என்று நீ அறிந்தது எங்கனம்- நெடு மூச்சு வாங்கி –ஆவிகின்றாள்–எதிர் தலை பார்த்து இழந்தாள் –
தோழி வந்து சந்நிஹிதை ஆனாள் -அவனை பிரிந்த பொழுதும் -ஆச்சார்யர் -தோழி-சேர்க்கவும் இவள் வேண்டியதே —

அணி அரங்கம் ஆடுதுமே- தன் ஆற்றாமையே காரணமாக பேறு தப்பாது என்று துணிந்து —
மாறி மாறி -துடிப்பும் இதுவும் வரும்–ஆடுவோம் -குளித்தல் ஸ்ரீ ரெங்கமே குளம்
தாப த்ரயமும் விரக  தாபமும் சர்வருக்கும் ஸ்ரம ஹரம் ஸ்ரீ ரெங்கம் பொய்கை ஆக்குகிறாள்
பெற்றேன்-நான் வார்த்தை சொல்லியும் கேட்கவில்லை
அனுகூலம் பேசினாலும் பெற்றதே குற்றமாக கேட்க்கவில்லை அவன் தோழி சொன்னதை கேட்கிறாள்
கோவில் இடை ஆட்டமாக செய்தி சொன்னாலும் கேட்க்கவில்லை ..-
சொன்னதை செய்யாவிடிலும் கேட்க கூட வில்லை என்கிறாள் —

பேர் பாடி- திரு பேர் நகர் -பாதேயம் போல கோவில் புக  கட்டு பிரசாதம்-
தாரகம் போஷகம் போக்கியம் திவ்ய தேசங்கள் தானே இவருக்கு ..
கோவிலுக்கு போகும் ஆசை தோன்ற திரு பேர் நகர் அருகில் சொல்லி அப்புறம் திரு குடந்தை சொல்கிறாள் –
பொன் தாமரை கயம்-அழகும் ஏற்றமும் உடைய அனுபவம்-

சம்ச்லேஷம் சுனை ஆடல் -போனாள் கீழ் பாசுரத்தில் வழி கேட்டாள் திரு அரங்கம் எங்கே இங்கு போனாள்
உடல் அன்றோ இங்கு இருக்கிறது நெஞ்சுகுடி போனது —
தயரதன் பெற்ற மரகத மணி தடம்-பொய்கை- தானே அவன்–
வாசத் தடம் போல் வருவானே –தடுக்க வில்லையோ
பொருவற்றாள்-
சேர்த்தி கிடையாது அவன் உடன் பொருந்திய பின்பு நங்கைமீர் உமக்கு ஆசை இல்லை உபமான ரஹிதை –
ஒப்பு ஆகாமல் பின்னை கொல் மலர் மகள் கொல் நிலா மகள் கொல் –
உங்கள் வயிற்றில் பிறந்தவர் இவள் படி உண்டோ -மற்றைய ஆழ்வார்கள் –
கடை வெண்ணெய் ஆப்புண்டு -விபவத்தில் மோகித்தார் ஆழ்வார்  உம் பெண் -இவளுக்கு நிகர் இல்லை- நங்கைமீர் என்கிறாள் தாயார்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–18-கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 26, 2011

கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்
கைத் தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திரு வரங்கம் எங்கே? என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே–18-

பதவுரை

பாவம் செய்தேன் என்-பாவியான என்னுடைய
ஏர் வண்ணம் பேதை-அழகிய வடிவை யுடைய பெண்ணானவள்
என் சொல் கேளாள்–என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
திருமேனி கார் வண்ணம் என்னும்–(எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
கண்ணும்–(அவனது) திருக்கண்களும்
வாயும்–திரு வாயும்
கைத் தலமும்–திருக் கைகளும்
அடி இணையும்–திருவடியிரண்டும்
கமலம் வண்ணம் என்னும்–தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்;
பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்–(அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்;
பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்-குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்
விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்;
எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்-என்னை அடிமைப் படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்;
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்–நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக் கடவேன் என்கின்றாள்;
நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ-அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்!

திரு அரங்கம் திரு குறையலூர் இருந்து போகும் பொழுது  திரு நீர் மலை வழி-ஆழ்வார்- நிறைவு அழிந்தவள் -இந்த நிலை-
தாயார் வினவ வந்தவர்களுக்கு சொல்கிறாள் –ஹிதம் சொல்லி மீட்க்க முடியாது -கூடி உடன் பட்டு இவள் கருத்தை கேட்ப்போம் –
இங்கு இருந்து பேசாமல் அவன் இருக்கும் இடம் போக சொல்ல —
நித்தியரும்  குமுழ் நீர் உண்ணும் விஷயத்தில் மேல் விழுந்து அனுபவிக்க இருக்கும் நிலை-
பெண்ணின் பெருமை- ஸ்த்ரீத்வம் பாராமல் ஆறி இருக்காமல் விஷய வைலஷண்யம் பார்த்து இருந்தாள்–
சீதை பிராட்டி ஆறி இருந்தாள் -நிறைவு அழிந்தார் -ஹார்தமாய் -உள் மகிழ்ந்து பேசுகிறாள் துடிப்பவர்களுக்கு தலைவி-
பிரணயத்வத்தில் தேசிகத்வம்-இங்கே பிரகாச படுத்து கிறாள் –விஷய வைலஷண்யம் சொல்லி -போக அனுரூபமான ஸ்வரூபம்-
துடித்து மேல் விழுவது —ஸ்வரூப அனுரூபமான போகம் -ஆறி இருப்பது –எம்பெருமான் பொன் மலை மேல்  ஏதேனும் ஆவேனே —
அனுபவம் கிடைத்தால் எப்படியும் இருக்கலாம்–சித்தாந்தம்- அவன் அழகை சொல்லி -முறை கெட இழிய பார்க்கிறாள்
பர கால நாயகி தாயார் பூர்வ பஷம் ஸ்வரூபம் பார்த்து ஆறி இருக்க சொல்கிறாள் —

பிரதமத்திலே ஸ்வரூபம் உணர்ந்து சேஷத்வம் பார தந்த்ர்யம்-
அதற்க்கு அநு ரூபமான கைங்கர்யம் -ஸ்வரூபம் மேல் விழுகை -புருஷார்த்தம் ஆலிங்கனம் –
ம காரம் தெரியாமல் நாராயண நேராகா பார்த்து வைலஷண்யம் உணர்ந்து இழிகிறாள் —
போக அனுரூபமான ஸ்வரூபம் -மகள் –அவள் அறிந்த பிரமாணம் அவன் ரூபம் மட்டுமே –ஸ்த்ரீத்வமே வேண்டாம் —
அவன் காட்டக் கண்டோம்–வினவ வந்தார்க்கு இவள் சித்தாந்தமே நானும் ஒத்து கொண்டேன் என்கிறார் –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தில் இழிந்து -ஸ்வரூபம் அறிந்து -அடைவே போகாமல் –வடிவிலே இழிந்து —
அநர்த்த ஹேது சரீரம்-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டுமே —
ஆசார்யன் கண்டால் பசியன் சோற்றை கண்டால் போல இருக்க வேண்டும் —
அநர்த்த ஹேது  சரீரத்தில் இழிந்து இருந்தாள் முன்பு –வாடினேன் வாடி- இருந்தாள்

-தன் வடிவைக் காட்டி துவக்கு அறுத்தது —
ஸூரி போக்யமான வடிவில் இவள் இழிந்தாள்–நித்யர் பார்த்தே முடிக்காத வடிவு அழகு–
பார்த்து கண்ணை மீட்டி அனுபவிக்க முடியாத அழகு –ஸ்வரூபம் தானே முக்கியம் ரூபம் –
அடிமை கொண்டதே-குணம் விபவம் -சேஷடிதம்-சேஷித்வம் ஸ்வாமித்வம் ஸ்வரூபம் –
ஆழ்வார்கள் ரூபம் திவ்ய மங்கள விக்ரகமே -உபாயம்  உபேயம்–
த்ருஷ்டே சீதா-நிதானமாக பேச சொன்னான் பெருமாள் இற் பிறப்பு பொறுமை கற்பு நாட்டியம் ஆட கண்டேன்–
இரண்டு  உயிர் ரஷித்துக் கொடுத்தீர் -திரு மேனி ஆலிங்கனம் பரிசு-கொடுத்தானே-திரு மேனியே உபேயம் -புருஷார்த்தம் – —
மாம் ஏகம் சரணம் விரஜ -உபாயம்-கையும் சாராத்வ வேஷம் கையிலே பிடித்த கையும் உளவு கோலும் தேருக்கு கீழே நாட்டிய திரு வடிகளும் –
குழல்கள் சதங்கை கோபால வேஷம்-உபாயம் திரு மேனி -புழுதி அளைந்த பொன் மேனி–
கையிலே பிடித்த சிறு வாய் கயிறு கண்ணிக் கயிறு கடை ஆவும் கடி கோலும் -மறித்து திரிகிற பொழுது தூசி படிய –
பிராப்யத்தின் மேல் எல்லை —சாஸ்திரம் கொண்டு மாற்றி-ஸ்வரூபம் சம்பந்தம் அறிவித்து –
பாகவத சமாகம் கைங்கர்யம் பண்ணி அனுபவிக்க கூடிய திரு மேனி-கீழ் நிலை-விஷயாந்தர பிராவண்யம் –
போக்கினதே -நெருக்கமே பிரதானம்-நான் அறிந்தது வடிவே எருது கெட்டார்க்கு ஏழு கடுக்காய் போல–
மற்று அறிய முடியாமல்  -நெஞ்சும் கண்ணும் அவன் இடம் போய் சேர்ந்ததே –
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபாலன் -எறும்பு போக்க-கூர் வேல் —
அர்ச்சிராதி மார்க்கத்தால் தேச விசேஷம் போவதும் பூர்வ விக்ரக அனுபதுக்கே தானே -அமிர்தம்  த்ருஷ்ட்வா —
விக்ரகம் பிராப்யதுக்கு  எல்லை நிலம் -சௌசீல்யம் அறிந்தது ராமன்-குகன் குசேலர்-கண்ணன்-மூலம் தானே –
ஸ்வரூபத்தால் இதை நிரூபிக்க முடியாதே -ரூப குணம் கொண்டே பிரகாசம் ஆகும் குணங்கள்—-

கார் வண்ணம் -தாப த்ரயத்தால் தபித்தவருக்கு -தாப ஹரமாய் -விரக தாபம் போக்கி –
நீல மேக சியாமளன் கார் வண்ணன்–அனுக்ரகம் -மேகம் -தாமரை பூ காடு–கார் வண்ண மேனியில் கண்ணும் வாயும் –
பரப்பு  மாற தாமரை –நீர் உண்ட கருப்பும் தாமரையின் சிகப்பும் –அபூத வுவமை -இவர் உடைய வாத்சல்யம் –
ஸ்வரூபம் ஆஸ்ர்யத்தால் வாத்சல்யாதி குணம் முன் இடுவார் –
விக்ரகம் ஆஸ்ரயிக்கிறவர் கண்ணும் வாயும் கை தளத்தில் இழிகிறார் —
இவர் உடைய மைத்ரேயர்-அதனில் பெரிய அவா பக்தி தான் அது உந்த  பாசுரம் அருளுவார்–
அது போல இவர் உடைய வாத்சல்யாதிகள் கண்ணும் வாயும் –ரூப குணங்களே உபாயம்–
சம்சார பய பீதி -சரீரம் அநித்தியம்–வெறுப்பு கொண்டு–ஆசை கழிந்து ஆத்மா குணம் உணர்ந்து —
பர ஸ்வரூப பெருமை உணர்ந்து -திவ்ய ஆத்ம குணங்களில் அடி இட்டு இழிந்தவள் இல்லை

இவள் அறிந்தது வடிவு அழகு ஒன்றே –கண்ணும் வாயும் கை தலமும் தூது செய் கண் இறே –
க்ரமத்தில் சொல்கிறாள் இங்கு –முடி சோதி கட்டுரைக்கில் கண் பாதம் கை ஒவ்வா –
சூடகமே தோள் வளையே  தோடே செவி பூவே  பாடகமே –விமுகராய் இருந்தோம் –
தூது செய்து காலைக் கட்டி -ஜிதந்தே புண்டரீகட்ஷன் ருசி பிறப்பிக்க -திரு கண்கள்–கமல கண்ணன் –
ஆதரவு ஏற்படுத்த -ருசி பிறந்த பிறகும் -பின்பு உபாயம் ஆக இருப்பதும் திருக் கண்களே
அனுபவிக்கவும் தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்–கிருபையே உபாயம்-உபேயம் —

வாயும் -கண்ணிலே துவக்கு உண்டாரை நெடும் காலம் இழந்த இழவு தீரும் படி சாந்தனம்  பண்ணும் முறுவல்–
புன் சிரிப்பு-மயில் இறகு தடவுவது போல–கூச்சத்தோடு கிட்டினால் -நிர் அபராதர் நாம் என்று எண்ண வைக்கும் முறுவல்–
பொறுத்தோம் –ருசி ஜனகத்வம் திரு கண்கள்/ உபாயமாக பற்றவும் பிராப்யம் ஆகவும் திரு கண்கள் —
புன் சிரிப்பு நிரபாதர் நினைக்க வைக்கும் –முகமும் முறுவலும்-கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள்-ரஷகம்-
அஞ்சேல் என்ற அபய ஹஸ்தம் -குற்றம் கண்டு விலகாமைக்கு-வாத்சல்யம்–
கவித்த முடியும் ஸ்வாமித்வம் காரியம் செய்பவன் என்று துணிக்கை–
அகலப் பார்த்தால் புன் முறுவல் சௌசீல்யம் -கண்டு பிடித்து கொள்ள சௌலப்யம் திருவடிகள்–
சம்பாஷானம் பண்ணும் திரு அதரம்—கைத் தலம்-அடி இணையும்  கிட்டினாரை மா ஸூச என்னும் திருக் கை-
அணி மிகு தாமரை கை அடிசியோம் தலை மிசை அணியாய்–பிடித்து பற்ற திரு வடிகள்-அனுபவிக்க இழியும் துறை–புகல் இடமும் –
லோக விக்ராந்த சரணவ் உலகம் அளந்த பொன் அடி-சரண் எங்கு பேசினாலும் -திருவடி–
குழந்தைக்கு திரு முலை தடங்கள் போல திரு வடி-திரு விக்கிரம மதியம் மூர்தன அலங்க்ரிஷ்யதி —
திருப் பொலிந்த பொன் அடி என் சென்னியின் மேல்-கொக்கு வாயும் படு கண்ணியம் போல–
பிராப்யம் அறுதி இட்டு அனுபவிப்பது போக்கியம் —
நிகமனத்தில்  முதல் உறவு பண்ணும் கண்ணும் -திரு மேனி முழுவதும் கண்ணாக மாறினதே அர்ச்சைக்கு பலவும் –
படை எடுத்து ராஜ்ஜியம் பிடித்து பிரதமம் ஸ்ரவசி -காது-ஆதி சேஷன் வுச்வாசம் நிச்வாசம்-
கண்கள் பட படக்கும்-சண்டை போட்டு கொள்ளுமாம் இரண்டு கண்கள்–
உறவை ஸ்திரம் ஆக்கும் முறுவல்/ முறை உணர்ந்தாரை மேல் விழுந்து அணைக்கும் திரு கைகள் —
தோற்று திருவடிகளில் விழுந்தோம்-கமல வண்ணம்-போலியாக சொல்வதற்கு தான் தாமரை  -சருகாய் போகும் –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலா செம் கண் –அச்சுதா -நழுவல் இல்லாதவன் -இந்த போலிகள் போல இல்லை–
சதைக ரூப ரூபாய விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே -சதா ஏக ரூபாயா -ஸ்வரூபத்தாலே நித்யம்
அடுத்த ரூபாயா ஸ்வாபமும் நித்யம்–கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா –

முடி அடி இடை பாடினார் முதல் பாசுரம்-முடி சோதி  பார்த்து திரு வடிகளில் விழுவோம் அடி சோதி –
கீழே போக விடாமல் வாரி அனைத்து கொள்வான் –
சூடகமே திரு கை தலம் பற்றுகிறான் தோள்களில் அணைய தோள் வளையே-
ரகசியம் காதில்  பேச வந்தான் தோடு- செவி பூவே –பாடகமே நாம் அணிவோம்–
இவன் யாருக்கு வசம் பட்டவன் என்று மேல் சொல்கிறாள்-அனுபவித்தவள் –
சமுத்ரத்தில் முழுகி மண் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்கள் –
மறை பால் கடல் கடைந்து திரு வாய் மொழி-ஆழம் அறிய மணவாள மா முனிகள் –
லாவண்ய சௌந்தர்ய -அவயவ சோபை- சாகரம் அநு பவித்த -பார் வண்ணம் மட மங்கை–
இவர்கள்  அனுபவிக்க முடியாமல் குமிழ் நீர் உண்ணும் விஷயத்தில் என் பெண்-
மட மங்கை -பூமியை பிரகாரம் -மடப்பம் கொண்ட துல்ய சீல வயோ வருத்தம்-மங்கை- -ஸ்ரீ பூமி பிராட்டி-பார் வண்ணம்  விசேஷணம்–
அனைவர்களுக்கும் போர் ஆடுபவள்-இருக்க -தான் இழந்தேன் —
தான் அபிமதமாய் இருப்பது அன்றி அடியார் அடியார் சம்பந்தம் உத்தேசம் இருவருக்கும் –
பிள்ளை வேட்டகம் ஆசை பட்டு பெண் புக்ககம் இசைவது போல —
மங்கை யுவ குமார ஏற்க-சைசவம் பால்யம் கவ்மாரம் யவனம் -யுவதிச்த குமாரிணி–அபிமத அநுரூப தாம்மபத்யம்-பத்தர்-வசப் பட்டன் –
பஜ -சேவாயாம் -சேவை பண்ணுபவர் -அத் தலை இத் தலையாய் முறை கெட பரி மாறுகிறான்
போகத்தில் தட்டு மாறும் சீலம்-இவள் உடைய போக்யதை இருப்பது —
இவள் சொல்லிக் கொள்கிறாள் சிஷ்யை பக்தை தாசி-கிடந்தது  இருந்து நின்று அளந்து உண்டு உமிழ்ந்து -அவன் படுவது –
பித்தர் பனி மலர் பாவைக்கு -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்- விராதன் ராமன் இடம் –
அரவாகி சுமத்தியால் எயற்றில் எந்தியால் வாயால் விழுங்குதியால் ஈர் அடியால் ஒளித்தியால்
இது அறிந்தால் சீறாளோ மார்பில் இருக்கும் ஸ்ரீ தேவி–
பித்தர் பனி மலர் -அது தான் முறை உடன் பரிமாறுகிறான் என்று சொல்லும் படி வியாமோகம்-
பாவை-பனி மலர்-பனி மலர்-சரம ஹரமான-தாமரை பூவின் பரி மளம் வடிவு கொண்டால் போல்
அல்லி மலர போக மயக்குகள் ஆகியும்  நிற்கும் அவன் குமிழ் நீர் உண்ணும் படி இவள் போக்யதை –
வாக்குக்கும் கண்ணுக்கும் எட்டாது அவனுக்கு கூட –பாவம் செய்தேன்-

ஏர் வண்ணம் -வினவ வந்தவர்களுக்கு அழுது -இவளும் முறை கெட பரி மாறுகிறாள் —
இங்கு முறை கெட-சேஷத்வம் பார தந்த்ர்யம் மறந்து – அவன் வைலஷ்ண்யம் குற்றம் இல்லை
இவள் ஆற்றாமை குற்றம்  இல்லை என் பாவமே இத்தனைக்கு அடி -பரதன் போல நானே தான் ஆயிடுக —
மந்தரை இல்லை கைகேயி இல்லை தசரதன் இல்லை பெருமாள் இல்லை நானே என்றான் –
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைகை தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவம் –
எனக்கும் தனக்கும் உதவாமல்-இருக்கிறாள் —
ஏர் வண்ணம்-என் பேதை -இவள் தன்னை உணர்ந்தால் ஆகில் இப் பாடு எதிர் தலை படும் பாடாய் இருக்கும் அழகு கொண்டவள்
ஏர் வண்ணம்  இவள் -கார் வண்ணம் நிகர் ஆகாது –அறிவை அவளும் நின் ஆகத்து இருப்பதும் –
திவளும் வெண் மதி முகம்- இவள் கண் அழகு -ஏக அவயவம் சாம்யம் -செழும் கடல் அமுதம்
இவள் கொல்லி அம் பாவை நிலத்தில் செதுக்கியது-  மேகம் கிடைத்தது போலி சொல்ல -இவளுக்கு அது சொல்ல முடியாது
அழகிய என்றே வடிவு இணை இல்லா மலர் மகள் மற்று நிலா மகள் பிடிக்கும் மெல் அடி –ஸ்ரீ தேவி நாதன் –
வைஷ்ணவி இவள் ஸ்ரீ வைஷ்ணவி பூமி பிராட்டி சேர்த்தியில் கைங்கர்யம் நீளா தேவி அடியார்க்கு அடியார் ஏற்றம் –

அடியார் அடியார் அடியார் பர கால நாயகி சமுதாயம் கைங்கர்யம்–ஏற்றம்-
பூமி பிராட்டி சமுத்ரம் இவளுக்கு நீளா இடை சாதி இவளோ என் பேதை-கும்பனை  விட ஏற்றம் மம சுதா —
பின்னை கொல்  மலர் மகள் கொல் நிலா மகள் கொல் உடன் அமர் காதல் மகளிர்  பிறந்திட்டாள்–
நியமிக்கும் அளவு போனது –ஹிதம் சொன்னால் கேட்கிறது இல்லை —
அவன் சொல்லு கேட்பவள் என் சொல்லை காற்கடை கொள்ளுதல் மாம் ஏகம் சரணம் விரஜ கேட்டவள் –
சக்ருதேவ பிரபன்னாயா -என்னை இப் பொழுதே பற்று -கிரம பிராப்தி வேண்டும் படி அன்றோ உபாய பிராப்தி –
கர்மம்-ஞான பக்தி போக வேண்டாமே -சித்தோ உபாயம் இதுவு -தனக்கு கர்த்தவ்யம் உண்டு என்றால் க்ரம பிராப்தி உண்டு —
பண்ண  வேண்டியது ஒன்றும் இல்லையே —

எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் -அங்கு வேற போக -இங்கே பேச கூடாது சொன்னேன் –
வழி எது என்று என்னை கேட்கிறாள் அவன் பதறாமைக்கு தான் யார் சொல்லி போனான்–அநந்யார்ஹை ஆக்கி –
பேறு தப்பாது என்று சொன்னதே பதருகைக்கு ஹேது ஆனதே —
நீர் வண்ணன் -கோவிலுக்கு போவது -வழி திரு நீர் மலைக்கு -நிறைவு அழிந்தவள் நிலைமை இது —
திரு குறையலூரில் இருந்து புறப் பட்டு இந்த வழி-தங்கும் பயணம் -பாதேயம் திரு நாம சங்கீர்த்தனம் போல –
கை வழிக்கு சோறு இதுவே –திருப் பதிகளிலே தங்கி அல்லது போக மாட்டாளே இவள் —
நாணம் ஸ்ரீத்வம் அளித்து இருகிறவள் பிரகாரம் -விஷய வைலஷண்யம் பார்த்து -இது அன்றோ  நிற்குமாறு-
தாயார் உண்மை இது தான் என்கிறாள் நாம் அனைவரும் இருக்கும் நிலைமை போக அனுரூபமே ஸ்வரூபம் என்கிறாள் –
ஆற்றிலே கெடுத்து குளத்தில் தேடுகிறாள்-
ஆண்டாள்  ஸ்வரூபம் பார்க்காமல் இடை பெண் போல இடை முடியும் இடை பேச்சும் கொண்டது போல –
போக அநுரூப ஸ்வரூபம் -யக்ஜா பத்னிகள்  மடி தார் உடன் இருந்தார்கள் ஸ்வரூப அனுகுனம் –
தன் மகள் இருந்த போக அநுரூப ஸ்வரூபமே இதுவே போற்றத் தக்க நிலை என்கிறாள் தாயார்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–17-பொங்கார் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 26, 2011

பொங்கார் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப
பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்கு பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடி
தண் கோவலூர் பாடி ஆட கேட்டு
நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே  –17-

பதவுரை

பொங்கு ஆர் மெல் இள கொங்கை-வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம்
பொன்னே பூப்ப–வைவர்ணியமடையவும்
பொரு கயல் கண்–சண்டை யிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள்
நீர் அரும்ப–நீர்த் துளிகள் அரும்பவும்
போந்து நின்று–(வெளியே வந்து) நின்று
செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும்சிறு குரலுக்கு–சிவந்த கால்களை யுடைய இளம் புறாக்கள் தம் பேடைகளோடு சிறு குரலாகப் பேசுகிற படிக்கு
உடல் உருகி–மெய் கரைந்து
சிந்தித்து–(அவன் முறைகெடப் பரிமாறும் படியை) நினைத்து,
ஆங்கே–அவ்வளவில்
தண் காலும்–திருத் தண் காலையும்
தண் குடந்தை நகரும்–திருக் குடந்தைப் பதியையும்
பாடி–(வாயாரப்) பாடி
தண் கோவலூர்-குளிர்ந்த திருக் கோவலூரையும்
பாடி-பாடி
ஆட-கூத்தாட
கேட்டு–அவ் வொலியை நான் கேட்டு,
நங்காய்-‘பெண்ணே!
நம் குடிக்கு–நமது குலத்திற்கு
இது நன்மையோ என்ன–வாய் விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல,
நறையூரும்–திரு நறையூரையும்
பாடுவாள் நவில் கின்றாள்–பாடுவாளாகப் பேசத் தொடங்கினாள்.

போகத்துக்கு என்றே இருக்கும் தம் திரு முலை தடங்கள்- நிறம் மாறி-பசலை–போந்து –
பகவத் விரோதிகள் -விலக்குபவர் இடம் கலவாமல் போந்து –பொங்கார் -கூப்பீட்டு தரை பட்டு கிடந்தாள் முன் —
கிளி வீணை ஆசுவாச படுத்த வைக்க– இல்லை என்பதால் உபதேசம்-ஹிதம் சொன்னால் ஜீவிப்பாள்–
வாய் விட்டு கூப்புடுகை ஸ்ரீத்வம் சேராது–குடிக்கு அவத்யம் என்ன —
அவன் அழகு ஒன்றே நான் குறி- மனசும் கண்ணும் அவன் இடம் கிடக்க –அது தான் கிடக்க –
அவனுக்கு கெட்ட பெயர் வரும் என்று சொல்ல —
ஆசா லேசம் உடையார்க்கு முகம் காட்ட கடவ வஸ்து -தன்னை ஒழிய செல்லாமையால் நோவு பட்டு கூப்பிடும்
பிரணயம் உள்ள ஒருத்திக்கு வர வில்லை என்பார்களே —
என் நெஞ்சினால் நோக்கி காணீர் என்னை  முனியாதே -என் நோவு அறியாத இவள் முகம் பார்க்காமல்-தன் தசை அறிந்த –
அவனை கூப்பிடுகிறாள் -தான் படுகிற இத்தனையும் இவளை விட்டு பிரிந்து அவன் பட வைக்கும் அழகு கொண்டவள் –
அத் தலை இத் தலையாய்- பொங்கு ஆர் இளம் கொங்கை-வளர்த்து மிக்கு மிருதுவாக இளைய சுற்று உடைத்து-ஆர்ந்து –
வருவான் என்று எதிர் பார்த்து -மென் -முலை விரகத்தால் -இளமை மாறாதது -வற்றாத முற்றாத –
போக உபகரணம் நிறம் மாறி பசலை நோய் பொன்னே பூப்ப -வெளுத்த -பூப்ப- கற்பக கன்று  பூத்தால் போல —
பிரிந்து துடிக்க பட்டம் கட்டி -பண்டு அவன்  உடன் கலவியால் ஆபரணம் இன்று பிரிவில் ஆபரணம் —
வினவ வந்தார்க்கு தன் நினைவை அளவை சாதித்து மறைத்து சொல்கிறாள் -தனக்கு -தாயாருக்கு -தர்சநீயமாக இருக்கிறதாம்

கண்ணும் அழிந்தது என்கிறாள் அடுத்து —
சதா தரிசனம்- பொற் கயல் கண்-அவனை பொருகிற– ஈடு படுத்துகிற கண் —
தன் இடைய பொருகிற கண்–கயல் மீன் போல-மிளிர்ந்து -எதிர் பார்த்து -கண்ணீர் நிரம்பி —
சம்ச்லேஷ தசையில் ஹர்ஷத்தாலே அலமந்து விஸ்லேஷ தசையில் சோகத்தால் அலமந்து இருக்கும்
மலையில் நீர் அருவி போல துணை முலை மேல் சோர்ந்தது கண்ண நீ முன்பு இதில் —
விரக அக்னி -நீர் அரும்ப-எட்டி பார்க்கிறது -துக்கம் குறைந்து  இல்லை —
அக்னியால் நீர் பசை அரும் படு உள் உலர்ந்து –அரும்புதல் எப்படி—
பதக்கு பானையில் உழக்கு பால் காச்சினால் வாயில் வருவது போல தோற்றும் கீழ் நீர் அற்று இருக்கும்–போந்து நின்று

அவன்மேல் விழும்படி அழகு கொண்ட நீ கதற வேண்டாம் –சேஷத்வ பார தந்த்ர்யம் இருக்கிறதே —
குளித்து மூன்று அனலை ஓம்பும் –அந்தண்மை ஒழித்திட்டேன் கர்ம யோகமில்லை ..
நின் கண் பக்தன் இல்லை.. களிப்பது என் கொண்டு நம்பி குண பூரணன் –
அறிவு ஒன்றும் இல்லா  ஆய் குலம்–குறை ஒன்றும் இல்லா கோவிந்தா – கடல் வண்ணா கதறுகின்றேன் —
நீ மேல் விழுகை ஸ்ரீத்வம் -சொன்ன ஹிதம் -பிடிக்காமல் -சரவண கடிகமாய் இருப்பதால்–
நெருப்பு பட்ட வீட்டில் இருந்து அகலுவது போல் போந்து-புறப்பட-ஸ்ரீ விபீஷணன் சடக்கென புறப்பட்டால் போல -போவதே-
போந்து – -நின்று-அவள் சந்நிதி விட்டு போந்த பின்பு தரித்தாள்–
சர்வ லோக சரண்யா ராகவாயா -ஷிப்ரம் –ராவண பவனம் போந்து ஆகாசத்தில்  தரித்து நின்றானே-
அநிஷ்டம் விட்டு இஷ்டம் எதிர் பார்த்து –தம்பி வார்த்தை கேட்க்காத கோஷ்ட்டி விட்டு தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டி வந்தான் —
விசுவாசம்–பரதன் ஆனந்தமாக பாதுகை கொண்டு ரதம் ஏறி வருந்தி நந்தி கிராமத்தில் இருந்தான்
ராஜா பட்டம் -ஸ்வாதந்தர்யம் தொலைய மகிழ்ந்தான் -இஷ்டம் கிடைக்க வில்லை எதிர் பார்த்து வருந்தி இருந்தான் —
செங்கால மட சேர்தியை நினைவு மூட்டி நலிகிறது –த்ருஷ்டி விஷமாய் இருந்தது போந்தவளுக்கு —
எல்லாம் அவனை நினைவு -சம்சாரம் உள்ளோடு புறம்போடு வாசி அற -கஷ்டம் -தேச விசேஷம் பரம பதமே –
செங்கால மட புறவம்- -தன் தலையில் அவன் திரு வடி சிவந்து –
செங்கால் -நலிய/செங்கால மட நாராய் –அறுகால சிறு வண்டே தொழுதேன் /
மடப்பம்-அறிவின்மை–பெருமாளின் அறிவின்மை நினைவு படுத்த சர்வக்ஜன்-
உணர்த்தி அழிந்து சம்ச்லேஷ தசையில் அறியாமல் பேசினானே —

பேடைக்கு பேசும் சிறு குரல்–அவன் தன்னை குறித்து பேசிய -போகத்து அனுகூலமாக -நீச பாவம்–
உன் அழகு எனக்கு இல்லை போல–சிறு குரல்-பல ஹானியால் சொன்ன சொல் போகத்தால்–
காதல் பேச்சு பிறர் கேட்க்க கூடாது என்று சொன்ன சொல்–சதஸ்யம் அல்லாததால் –இவள் செவியில் சொன்னது–
உடல் உருகி–சினம் செய் -அனந்தல் அன்றில் அரு குரல் பாவியேன் ஆவியை ஆடுகிறதே -ஆழ்வார்/
நெஞ்சும் வடிவை கண்டு உருக உடல் பேச்சை கேட்டு உருகிற்றாம்–
மேல் கொண்டு உடல் உருக –பரி யட்டம் மாறாடுவது –போகத்தில் தட்டு மாறும்–அஞ்சலியை பண்ணுவது–
முறை கெட–திருவடி வருடி–சிந்தித்து ஆங்கே -அத் திசையில் –இவை பாதகம் ஆனால் —
மீண்டும் தாய் மடியில் போகாமல்–தண் கால் –சங்கேத ஸ்தலங்களை நினைவு கூர்ந்து

திரு தண் கால் -ஸ்ரம ஹரமான காற்று -குளிர்ந்த -ஸ்வாபம் -தென்றல் போல சுக ஸ்பர்சம் —
அவனை தர்சித்தாலே ஸ்ரமம் போகும் -வாயு ரூப ரகித ஸ்பர்ச வான் வாயு- தர்க்கம் -வர்த்திக்கும் தேசம்–
அணைக்கும் பொழுது சுகம் -நினைவு கொண்டு–
தண் குடந்தை ஆஸ்ரிதர் இடம் முறை அழிய பரி மாறினானே -திரு மழிசை ஆழ்வார்-
தமக்கு ஆக்கின போனகத்தை  முற்பட ஆழ்வாருக்கு அமுது செய்வித்து தான்  கொண்டானே –வாத்சல்யத்து அடியாலே –
அவன் ஆனந்தமே முக்கியம்–எதிர் விழி கொடுக்கும் பார தந்த்ர்யம்–அருளி செயல் ரகசியம் -நாயனார் அருளியது —
தோழி பெற்ற பேறும் தன் பேறாக  –
ஆழ்வார் கோஷ்டி–திரு மழிசை பிரான்- ஆரா அமுத ஆழ்வார்- கிடந்த வாறு -எழுந்து இருந்து பேசு வாழி கேசனே —
பெரிய நம்பி விழுந்து சேவிக்க ஸ்வாமி ராமானுஜர் உதா சீனமாக போனாரே –
வாத்சல்யம் அடியாக -காளி தாசர் -அந்த புரத்தில்  அரசனை உதைத்த வனுக்கு பொன் சதங்கை போட சொன்னாரே
குழந்தை தான் அந்த புரம் வந்து உதைத்து இருக்கும் —
போகத்தில் தட்டு மாறி –ஆஸ்ரிதர் கூட முறை கெட பரி மாறி-
தண் திரு கோவலூரில் தானே  மேல் விழுந்து சம்ச்லேஷித்தானே –தீர்தகராய் திரிந்து –
மிருகண்ட மக ரிஷி இடை கழியில் அவர்கள் இருந்த இடத்தில் தானே சென்று –நெருக்க-
பிராட்டி உடன் சென்று -நெருப்பு உகந்த பெருமாள்

கரும்பு சாறு -மூன்று அந்தாதிகள் –மூன்று சக்கரம்-முதல் ஆழ்வார்கள்–
அவர்கள் போன பின்பும் இவன் அங்கேயே நித்ய வாசம்- இடம் முகர்ந்து கொண்டு நிற்கிறான் இறே–
தான் கிட்டி நாளும் அனுபவம் கொடுக்காமல் என்னை முகர்ந்து பார்க்க வைத்து போனானே–
சம்ச்லேஷம் நினைந்து முன் பட்ட கிலேசம் மறந்து ப்ரீதி கொண்டு பாடி ஆடி-காகிக வாசிக–ஆடுவதை கண்டு பாடுவதை கேட்டு–
தாயார்–நங்காய்-நம் குடிக்கு–முகரி-பிரதான்யம் பெற்றவளே–மேல் விழலாமா ஆறி இரு —
அதவா பூர்ணை -குணத்தால் -பட்டர்–சீதை பிராட்டி போல ஆறி இருக்க சொன்னாள்–
நல்ல நங்கை-தோணி- உன் பூர்த்தி கொண்டு இக் குடி வாழும்  நினைத்தாயா-விபரீத லக்ஷணை-பிர பன்ன குடி நம்குடி–
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி – ஸூ பிரவர்த்தி நிவ்ருத்தி- –
பெருமானுக்கு சதா தரிசனம் பண்ண வேண்டும் படி வடி அழகு கொண்டவள் ஆறி இருக்க வேண்டும்–
தானே வந்து மேல் விழும் படி போக உபகரணங்கள் உண்டு -கால தாமதம் இன்றி பலம் கொடுக்கும் ஆற்றாமை உண்டு –
ஸ்வரூப ஞானம் உண்டே -அபூர்ணரை போல கூப்பிட கூடாது–இதுவோ நன்மை–
தன் பூர்த்தி கொண்டு வாழ வேண்டிய -நீ செய்யும் நன்மை– குடியும் அவனையும் கெடுகிறாய்–
மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடைக் குட்டியும்  –குலத்துக்கு பேர் வாங்கி கொடுத்தார்கள் -என்ன-
மீளுகை தவிர்ந்து –திரு -நறையூர் புக -மீட்க ஒண்ணாத இடம் புக்காள்–
இன்னும் குடி கொண்டு உண்ண இருக்கிறீர்களோ–ஆசிலே கை வைத்தாள் -பாட்டிலே ஆயுதத்தில் கை வைத்தாள் —
நிறைந்த வண்  பழி நம் குடிக்கு -ஆழ்வார் அவஸ்தை அறியாதே ஹிதம் சொல்லுகிற இவள் முகத்தில் விழியாமல் –
வகுத்த தாய்- எவ் உயிர் க்கும் தாய்-மேலா தாய் தந்தையரும் அவரே -வஞ்சுள  வல்லி தாயார் அகல  கில்லேன் இறையும் –
பிரிவாற்றாமை துன்பம் அறிந்தவள் -திரு மஞ்சனம் பொழுது நாச்சியார் திரு மொழி சேவித்து ஆற்றாமை தீர ஸ்வாமி —
நம்பியை பற்றிக் கூப்பிடுகிறாள் -பிராட்டி தேடி வந்தவன் என்பதால்–
பாடுவாள் நவில்கின்றாளே -பாடினால் மடல் எடுப்பது போல –மெதுவாக சுரம் எடுக்கிறாள் –நுணுகினாள்-ஆலத்திலே கருத்து அறியும் தாயார் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–16-கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 25, 2011

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே! என்றும்
மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய்! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–16-

பதவுரை

கன்று மேய்த்து-கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த-மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்–இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்–வாஸனை மிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கண புரத்து–திருக் கண்ண புரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்–என் பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி–வீதி யாரக் குடக் கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்–மகிழ்ந்தவனே! என்றும்
வட திரு வேங்கடம்–வட திருவேங்கட மலையிலே
மேய மைந்தா என்றும்–பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்–அசுரக் கூட்டங்களை
வென்று–ஜயித்து
களைந்த–வேரோடொழித்த
வேந்தே என்றும்–வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்-விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்–திருநறையூரிலே
நின்றாய் என்றும்–நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்-அடர்ந்த திருக்குழற் கற்றையையும்
கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்–ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர–கண்ணீர்த் துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்–தளர்கின்றாள்

ஏரார்  விசும்பில் இருப்பு அரிய -நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் இருக்க முடியாமல் –
அழைத்தார் ஆழ்வார் நீராய் நிலனே பதிகத்தில் –அது போல பார கால நாயகி இங்கு கூப்பிடுகிறாள் —
முன் பாசுரத்தில் பரிகாசம் கொண்டு வார்த்தை பேச அவன் வார்த்தை கேட்கவில்லை முகமும் காட்ட வில்லை
நின்ற நிலை குலைந்து அழுகிறாள்—ஹா ராமா ஹா லஷ்மணா  ஹா சுமத்ரா ஹா ராம மாதா -சீதை  பிராட்டி கதறினது போல–
பார கால நாயகிக்கு எல்லாம் அவன் தானே -திவ்ய தேச எம்பெருமான்களையும்  விபவ அவதாரம் நினைந்து –
போகய வஸ்து-ராம/ புஜிப்பாரை -லஷ்மணன் -நிமித்த பூதர் -சுமித்ரை -ராம மாதா –முகம் கொடுப்பாய்-ரஷிப்பாய்-தரை படா நிற்கிறாள்–
கன்று மேய்த்து – ரஷித்த படியை சொல்கிறாள்–சர்வ ரஷகன்–என்னை விட்டாயே-
இடக் கை வலக் கை தெரியாதவர்களையும் ஆநிரை -நித்ய சூரிகளை  ரஷித்தான் என்று ஆறி இருக்கிறேனோ
சன காதிகளை ரஷித்தான் என்று ஆறி இருக்கிறேனோ-
கோப குமாரர்களை ரஷித்தாய் என்று ஆறி இருக்கிறேனோ–
கன்றுகளை மேய்த்து உகந்தாயே–நித்யரை மேய்க்கும் பொழுது ஆனந்தம் இல்லையாம்–
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு  உகத்தி இளம் கன்றுகளை மேய்த்தால் -இனிது உகப்பு இங்கு தான்–நித்யர்- -உகப்பு இல்லையாம்–

ரஷகம் புஷ்கலம் ஆனது-இரவு விளக்கு இங்கு–இட்டமான பசுக்களை இனிது மருத்தி நீர் ஊட்டி–
பசுக்கள் ரஷகன் இருக்கிறான் நினைவு பரிசயம் உண்டே கன்று அது கூட இல்லை-அதனால் இனிது உகந்தான் —
உன் வாசி அறிந்து உன்னை ஒழிய செல்லாத என்னை ரஷியாது ஒழிந்தாய் – நானும் கன்றுகளாக பிறந்திலேனே என்கிறாள்–
உறி அடி பொழுது ஸ்ரீ பட்டர் கோபாலர் கோஷ்டியில் இருந்தாரே —
காமரு சீர் அவுணன்-அவனாக பிறந்து இருந்தால் தரிசனம் கிட்டி இருக்குமே –
காமனை பயந்த காளை கரியான் ஒரு காளை -தான் சோகமாக இருந்தாலும் காளை பருவம் மாறாமல் —
தருணவ் ரூபா சம்பனவ்  சுகுமாரவ் மகா பலவ புண்டரீ காட்ஷ விசாலாஷி -பிணம் திண்ணியம் இதில் அகப்பட்டு சொன்னாளே
உண்ண புக்கு வாயை மறப்பாரை போல —
இங்கும் பர கால நாயகி -காளாய் –கலந்து தானும் இளமை இன்பம்  இளகி பருக ஆசை படுகிறாள்–
பெருமாளை போ வா வந்து ஒரு கால் கண்டு போ -சொல்லி தசரதன் வயசு குறைந்து இருந்தானே
கன்று மேய்த்து இனிது உகந்ததாலே காளை ஆகி இருந்தானாம்-ரசாயன சேவை பண்ணி -வடிவு இளகி -ரஷ்ய  வஸ்து கிடைத்த ப்ரீதியால் –
அன்னம் பார்த்து நமக்கு ஆனந்தம் வருவது போல -அன்ன மயம் பிராண மயம் –அன்னமே விருத்தி ஹேது  போல-
தாரகம்–அது போல கன்று மேய்ப்பு அவனுக்கு –

கடி பொழில் -போக்ய பூதர்-பின்னானார் வணங்கும் சோதி-திரு கண்ண புரத்தில் நின்று அருளுகிறார்-பூர்வர் நிர்வாகம்–
பட்டர்- நிர்வாகமோ– பசுக்கள் கை கழிய போக தேடி கொண்டு போன கண்ணன் வந்த இடம்-
ஸ்ரம ஹரமான பொழில்- மயல் மிகு பொழில் ஆகையாலே –
கோகுலம் ஆய்ப் பாடி என்று நினைந்து புகுந்தான் மையல் ஏற்றி மயக்கும் -ஸ்வரூப  ஐக்கியம் விபவமும் அர்ச்சையும் –
கடி பொழில்- கடி ஆர் பொழில் -இல்லை– கடி மிக்கு இருக்கும் பொழில் -இல்லை
கடியாலே ஆகிய பொழில் உபாதான காரணமே பரி மளம் தான் -சர்வ கந்தகன் வஸ்துவையும் கால் வாங்க விடாமல் வைத்த பொழில்–

கனியே இந்த சோலை பழுத்த பழம்–பக்குவ  பலம் போல–பர பக்தி பர ஞானம் பரம பக்தி -பிர பத்தி -அதிகாரிக்கு –
என் கனி–சாதனாந்த நிஷ்டர்- சாதனம் முடிந்தால் பேறு-காய் ஆகி இருக்கும் —
பிர பன்னருக்கு பிரதி பத்தின  சமயம் தொடங்கி அனுபவம்-பொதி சோறு கட்டி நிற்கிறோம் -கட்டு சாதம்-
அந்த ஜன்மத்திலே மோட்ஷம் -அவன் சக்தி நம்பி இருக்கிறோம்–ஆனந்தம் பக்குவ பலம்–சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே —
என் கனி-எங்கள் இல்லை–எங்கள் கதியே ராமானுஜ முனியே –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-என்று இருக்கும் அவர்–
தேவதாந்திர பஜனம்- சொல்ல  வில்லை -பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமி மற்ற அர்ச்சை  விட்டு–இங்கு வந்தவர்–
கனியே  என்று இரண்டு தலையும் அழிக்கப் பார்கிறார்- கனி போக்தா விட்டு செல்லாதே –
பிரிந்து நீயும்  வாழ முடியாது என்று சொல்ல வில்லை—பெருமான் இருந்தால் ஆழ்வார் இருக்க வேண்டும் இன்றியாமை உண்டு-
மாயா சிரஸ் -காட்டினாலும் சீதை பிராணன் போக வில்லை–அனுபவம் இன்றி கனி முதலில் அழியும் -அதனால் ஆழ்வார்-கனியே-என்கிறார்–

மன்றமர கூத்தாடி  -அம்பலத்தில் அவல் பொதி அவிழ்ப்பாரை போல –ஒரு கனி இல்லை–ஊருக்காக கொடுத்தாயே உன்னை-
குரவை கூத்தாடி -மன்று=அமருகை-கூத்தோடு பொருந்தும் படி–இயைந்து -ஆட்டம் முடிந்தாலும் -கந்தம் வாசனை-மாறாத-
பெருமாள் திரு வீதி புறப்பாடு போல – திரு ஆய்ப்பாடி அம்பலம் –மன்று -நாள் சாந்தி. அம்பலம்-இடையர் சேர்ந்து இருக்கும் இடம் –
சீரார் குடம் ஏந்தி செழும் தெருவே -வாராயோ என்றாற்கு ஒ நீ வரவில்லையா இன்றாவது பெற்று போ
அங்கே பார்த்து கொண்டே கண்ணை கூத்தில் வைத்து ஒ என்றார்களாம்-சென்றேன் என் வல் வினையால்–
நான் ஆழம்கால் பட்டு தனித்து இருந்தேன் அவனும் அனைவரும் போன பின்பும் –மன்று- அங்கு உள்ளார்கள்-அநந்ய பரர்  ஆனார்கள் —
மகிழ்ந்தாய்- கேட்டவர்  பார்த்தவர் ஆனந்தம் விட இவனே மகிழ்ந்தானாம்-பிராப்யமும் பிராபகனும் பிராப்தி உகப்பானும் தானே —
ஜன்ம கர்ம மே திவ்யம்–அவனுக்கே திவ்யமாக இருக்குமாம் ஆழ்வார் போல மூவாறு மாசம் இவனே மோகிப்பானாம்–
தும்புரு நாரதர் அனுபவித்து கூத்தாடி உகக்க கிடக்க -அத் தலை இத் தலையாய் –கூத்தாடு வானும் உகப்பானும் தானாய்–
குடக் கூத்தாடுவது ஈஸ்வர லஷணமோ–பிராமணர் ஐஸ்வர்யம் யாகம்– விஷய பிரவணர் கல்யாணமாம்–
இடையர் குட கூத்து செருக்கு போக்கு வீடாக சஜீதீய பாவம் -அதில் ஒருவன் -மெய்ப்பாடு தோன்ற ஆடினான் -புரை அற கலந்தான் –
அங்காடி பண்டம் ஊர் பொது  சரக்கு நான் இழந்தேன் –
வலது திரு கையால் மா ஏகம் சரண் முத்தரை காட்டி இடது திரு கையால் பற்றினவருக்கு பலன் முழம் கால் அளவும்  வற்றி விடுவேன்-
திரு வேம்கடத்தானும்  இவனும் கூத்தாடி உலகம் அனைவருக்கும் -கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் –
மைந்தா- மிடுக்கான பருவம்-வானவர்  வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும்
காடும் வானரமும் வேடும் உடை வேம்கடம்-பெரியவர்க்கும்  நிகீனருக்கும் கொடுத்தானே நான் இழந்தேன் —
ஈஸ்வர அபிமானிகளும் வாசி அற கொள்ளை கொள்ளும் வடிவு–
அதவா–பக்தர்களுக்கு தான் வடிவு -என் ஒருத்திக்கு மட்டும் இல்லை–

திரு மேனி திரு ஆபரணம் திரு ஆயுதங்கள் எல்லாம் பக்தர் களுக்கு தானே என்னை ஒழியவா–
வென்று அசுரர் -கர தூஷணர் முதலாக குலப் பாவை தாடகை தொடக்கம்-ராவணாதி-கரமும் சிரமும் துணித்து –
தானாம் படி பரி கரங்களை  கொன்று –தசரதர் பெற்ற  மரகத மணி தடம்-கழுத்தில் கல்லை கட்டி கொண்டு இறந்தனர்  –
விரோதி நிரசனம் –அனுபவம் போக்கியம் முன்பு பார்த்தோம்–விரோதி தொலைக்கவும் நீயே தான்–
தமரர்  கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சதுர் மூர்த்தி –ராஷசர்-முடித்தான் அசுரர்- சுரர் தேவர் அல்லாதவர் என்பதால் —
குலம் களைந்தான் -வேந்தே- ராமன் தான் ராஜா -ராம ராஜ்ஜியம் கனவு–சின்னத்தை பெரியது நலியாமல் ஆண்டான்-
-ராமோ ராமோ -ராம இதி  பிரஜானாம் அபவம் கதா  ராம கதை பேசி கொண்டே இருப்பார்கள்–
ராம பூதம் ஜகத் அபூத் -அருளாள பெருமாள் எம்பெருமானார்- தம் மடத்தை இடித்தாரே-
நிழலும் அடி தாறுமாக இருப்பார்கள் அயோதியை மக்கள்–இரண்டற ஒன்றி போனார்கள்-
அநு கூலர் வாய் புலத்தி பிரதி கூலர் மண் உண்ணும் படி இருக்கிறவர் கிடீர் எனக்கு முகம் காட்ட வில்லையே –
தாயார் மகிழ ஒண்ணார் தளர திண் கொள் அசுரர் தேய வளர்கின்ற்றவன்-வஸ்து ஸ்வாபம்-விரி பொழில் சூழ்-திரு நறையூர் –
பிற் பட்டவர்  இழக்கக் கூடாது என்று சேவை–ஏக தார வ்ரதத்வம் சாம்யம்–நம்பி வந்து நிற்கிறான்-
வேத வல்லி செவி வழி செய்தி -விரிகின்ற பொழில்-வஞ்சுளாவல்லி நாச்சியார்  நம்பி கடாஷத்தால் வளர்ந்த பொழில் சூழ்  தேசம் –
நின்றாய்–பிராட்டி தேடி அலமந்து வந்து கிடைத்ததால் தரித்து நின்றான்-ஸ்தல புராணம் ஆழ்வார் கூற மாட்டார்கள்–
இங்கு –ஷீராப்தி -மேதாவி-தாயார் குறித்து பிரார்த்திக்க வஞ்சுள மரத்தின் கீழ் வந்தாள் பிராட்டி
கிருஷ்ணா ஆரண்யம்-ஆரம்பம்-திரு கண்ணம் குடி வரை–நம்பிக்கை நாச்சியார்- –
ஐந்து பேராக வகுத்து கொண்டு சங்கு சக்கரம் சமாச்ரண்யம் பண்ணுவது போல சேவை–
மணி மாடம் சேர்மின்களே மாடம் போல கோவில் அமைப்பு –கோ செங்கணான்
63 நாயன்மார்கள் சோழ நாயனார் இவர்களில்  ஒருவன் –
தன்னை போல ராஜா கதை என்று இதை திரு மங்கை ஆழ்வார் குறிப்பிடு கிறார்

திரு வெள்ளறை- ஸ்ரீ தேவி வைபவம் நாச்சியார் திரு மாளிகை -பூ தேவி-ஸ்ரீ வில்லி புத்தூர்  இந்த திவ்ய தேசம் நீளா தேவி–
தேடி போய் கண்டு பிடித்தாயே -எனக்கு நீ கிடைக்க வேண்டாமோ–
எனக்கு முகம் கொடுக்காமல் அவள் முகம் உனக்கு கிடைக்குமோ-
ஏக தார விரதன் சொல்லி சம்ப்ரதாய கொள்கை புருஷ கார பூதை-
குத்து விளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல் -எனக்கு இடம் கொடுக்க வில்லையே தனி படுக்கை ரசிக்காது –
என் அடியார் அது செய்யார்– குற்றவாளி யார் அல்லர்-ஸ்ரீ தேவி-பாபானம் வா சுபானாம் வா – இவள் படி அவன் படி- –
போட்டி போட்டு ரஷிக்கும் பொழுது என்னை விட்டீர்களே –முகம்  காட்டுதல்–அனுக்ரகிக்க —
திரு குழலையும் வடி அழகையும் -துன்னு குழல் கரு நிறம் அடர்ந்து செறிந்து கறுத்து நெய்த்து —
வித்யாம் கட்ட -கர்ண குண்டலங்கள் ஒளி -தேவர் கோலத்தொடும்-துணை–ஒரு பகல் ஆயிரம் வூழி  யாலோ–காணாமல்-
தோளும் நான்குடை சுரி குழல் கமல  கண்  கனி வாய் காளமேகம் -துணை-வழி துணை பெருமாள்

கொள்கின்ற -கோள் இருளை -படி எடுத்து உரைக்கும் படி இல்லாத அழகு–
நீண்டு இருண்டு கறுத்து நெய்த்து -ஈண்டு சடை ஆயின -குழலும் வடிவிலும் அகப்பட்டேன் —
நாச்சியார்க்கு தான் பிரசாதமும் முதலில் திரு நறையூரில்–
உண்ணாது உறங்காது -ஒலி கடலை -ஊடருத்து -சீதை கையால் நெய் பூசி –
அது போல நாச்சியார் கிடைத்த பின் அவள் கையால் வகுந்து பேணின குழல்-துன்னு குழல்-
வேணி-திரு வேணி சங்கமம்–கங்கை யமுனை சரஸ்வதி-மூன்றும்–

என் துணையே என்னும்–நீலம்- நைல்யம் -கரு முகில் கன ச்யாம்–தாமர மூர்தஜா செம்பட்டை சூர்பணகை-
குடில குந்தளம்-குழல் அழகை காட்டி எனக்கு துணை ஆனவன் –நான் விமுகன் ஆன தசையில் -ஒட்டி வந்தாய்–
சத்தையை நோக்கி வடி அழகு காட்டி- ரூபமே ஆழ்வார் ஸ்வரூபம் ரிஷிகள்-
ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெருக வைத்ததும் அழகனூர் அரங்கமே —
இன்று நான் ஒட்டி வரும் பொழுது –உபேஷித்து போகிறாயே –அருகில் கூட்டி வந்து கை விடலாமா –
காந்தனும் ரஷகனும் துணை ஆவாரார் துணை வழி துணை–காப்பதற்கும் /பிரணயித்வம் காந்தம்-
பிராபகம் பிராப்யம் துணை தானே –துளி-அக்னி கனல் போல –இப்படி சொல்லும் பொழுதே தரை பட நிற்கிறாள் –
துணை முலை-போக உபகரணம் -அவன் பிரிந்த தசையிலும் முலை துணை யாக இருக்கிறது —
விழுவார் அம்மே என்று விழுவது போல -என் துணையே -பெண் நீர்மை யீடழிக்கும் இது தகாது –
என் துணையே என்று இவளும் கூப்பிடுகிறாள்–ஆற்றாமையாலே நோவு பட்டாலும் –
ஆடி ஆடி ..நாடி நாடி நரசிங்கா -மோகித்து துன்புற்றான்–அடியார் குழாங்கள் கூட சேர முடியாமல்-
காசு பொன் மண் இழந்தவன் போல –திரி விக்ரமன்- சேவை இழந்து முதலில் அம்சிறைய மட நாராய் முதலில் —
ஆதி அம் சோதியை நம்பியை என் சொல்லி நான் இழப்பனோ-அர்ச்சை இழந்து கட்டி அழுதார் காற்றையும் –
அடுத்து அடியார் குழாம் சேர ஆசை பட்டு இழந்தார்

பெரிய சோகம்-மணியை இழந்தால்  போல் –நரசிம்கர் இடம் போய் –
பாகவத அனுபவம் இழந்தால் அவன் இடம் அபசாரம் பட்டால் பாகவதர் இடம் தான் அம்பரிஷன் சரித்ரம்–
தேறியும் தேறா விடிலும் மாதவன் திறமே திரு -துணையான தாய் -தான் துணை யாக நிற்க -என் முகம் பார்க்க பிரார்த்திக்க –
அவள் தான் துணையான அவன் முகம் காட்டாமல் நிற்க -அவனையே எதிர் பார்த்து இருக்கிறாள் –
விஷயாந்தரங்கள் மேல் விழுந்து இருந்தாலும் -கண் வைக்காமல்- அவன் கை கொள்ளா விடிலும் -அவனையே நோக்கி இருக்க வேண்டும் –
புலன்கள் இழுக்கும் ஐஸ்வர்யமும் ஈர்க்கும் வலைகள் இவை -அகற்ற நீ வைத்த மாய வலைகள் நன்கு அறிவன் நான் -ஆழ்வார் —
பிரியமாக பேசுவார்கள் ஹிதம் பேசுவார் இல்லை–மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் இருக்க வேண்டும் –
தேவதாந்திர சம்பந்தம் கூடாது –பரிஷை பண்ணியே கொள்வார்கள்–
ஸ்வாமியே 18 தடவை சென்று பெற்றாரே திரு கோஷ்டியூர் நம்பி இடம் –
எத்தனை உதைத்தாலும் கூட இருந்ததால் தானே பாதுகைக்கு பட்டாபிஷேகம் கிடைத்தது –அது போலவே இருக்க வேண்டும்

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–15-கல் உயர்த்த நெடு மதிள் சூழ் கச்சி மேய-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 25, 2011

கல் உயர்த்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே!என்றும்
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்!  என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே  –15–

பதவுரை

கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்-கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட
கச்சி-காஞ்சீபுரத்திலே
கடல் கிடந்த கனியே என்றும்–திருப் பாற்கடலில் கண் வளர்ந்தருளுகிற கனி போன்றவனே! என்றும்.
அல்லி அம் பூ மலர் பொய்கை–தாதுகள் மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களை யுடைய தடாகங்களையும்
பழனம்–நீர்நிலங்களையும்
வேலி-சுற்றும் வேலியாக வுடைய
அணி அழுந்தூர்–அழகிய திருவழுந்தூரிலே
நின்று-நின்றருளி
உகந்த- திருவுள்ளமுவந்திருக்கின்ற
அம்மான் என்றும்–ஸ்வாமியே! என்று (சொல்லி)
சொல் உயர்ந்த-நாதம் மிக்கிருப்பதாய்
நெடு-இசை நீண்டிருப்பதான
மேய-எழுந்தருளி யிருக்கிற
களிறு என்றும்-மத யானை போன்றவனே! என்றும்
வீணை-வீணையை
முலை மேல்-தனது ஸ்தனங்களின் மீது
தாங்கி–தாங்கிக் கொண்டு
தூ முறுவல்–பரிசுத்தமான மந்த ஹாஸத்தாலே
நகை–பல் வரிசை
இறையே தோன்ற–சிறிதே விளங்கும் படியாக
நக்கு–சிரித்து
மெல் விரல்கள்-(தனது) மெல்லிய விரல்கள்
சிவப்பு எய்த-சிவக்கும்படியாக
தடவி-(அந்த வீணையைத்) தடவி
ஆங்கே-அதற்கு மேலே
என் பேதை-என் பெண்ணானவள்
மென் கிளிபோல்–கிளிப் பிள்ளை போலே
மிக மிழற்றும்–பலபடியாகப் பாடா நின்றாள்

உடலும் மனசும் தேறி தானே அவனை பற்றி பேச ஆரம்பிக்கிறாள்-
நெடு வீணை தாங்கிய திருக் கோலம்–திரு ஆலி சாத்துவார்கள்–
திருக் குடந்தை திருக் கண்ண புரம் திரு அழுந்தூர் திரு நாகை -பெருமாள் திரு விக்ரகம்
ஸ்வாமி தான் உகந்த திரு மேனி திரு மங்கை ஆழ்வார் திரு மேனி
வடி வழகு இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே —
மிக மிழற்றும் -மெதுவாக கிளி போல பாடுகிறாள்–மிக–அடை மொழி இவளுக்கு —
ஆச்வாசம்  அடைந்தாள் கீழ் பாட்டில் திரு நாமங்கள் சொல்ல கேட்ட பின் —
தன் வாயாலே திரு நாமம் சொல்லி வீணையில் ஆலாபனம் மீட்டி -வீணை ஸ்பர்சம் —
முன் சம்ச்லேஷ திசையில் அவனும் இவளும் -இருந்த நிலை நினைவுக்கு வர —
இருவர் படிகளும் வீணையில் ஏற இட்டு தாரகமாக -தோள்களும்  திரு மேனியும் -முதுகை தடவுவது போல -கொண்டு-
வீணையில் பண்ண -இவள் உணர்ந்தால் என்னாகுமோ என்று தாயார் விசன பட -/

12/13  பாசுரங்களில் திரு நாமமே பல படிகள் பார்த்தோம் —
உஜ்ஜீவனம் தாரகம் போன்ற பல –ஆபத் சகம் உஜ்ஜீவன ஹேது –கீழே சொல்லி இதில்  போக்கியம்
கல்–உள் நிற்கும் யானை -திரு பாடகம்–அமர்ந்த திரு கோலம்–மதிள் உள் இருக்கும் யானை சிலாக்கியம் சொல்லும்–
ரஷிக்க-பிரிந்த தசையில்  இருந்தாலும் விஷயத்துக்கு பரிவதே -இதுவே நோக்கு —
கஷ்டம் கொடுத்தே வைராக்யம் பிறப்பிக்க வைக்கிறான் -தரு துயரம் தடாயேல்-அழும் குழவி அதுவே போல் இருந்தேனே —
மருத்துவன் பால் மாளாத நோயாளன் போல்–சேஷ வஸ்து ஸ்வாமிக்கு நன்மை சேர்க்கவே ஸ்வரூபம்–
பிரதி கூலர் வர முடியாமல் உயர்ந்த மதிள்கள்-திரு கண்ண புரம் 7 மதிள்கள் இருந்ததாம்
அரையர் தாளம் வீசி போட–சிலை அன்றோ கை தலத்து –தழும்பு இன்றும் சேவிக்கலாம் ஆஸ்ரித வத்சலன்–

நிவாகரகர் இல்லா ஸ்வாதந்த்ரயம்-ஸ்ப்ரூகநீயம்-உள்ள யானை–செருக்கும் அழகும் —
ஸ்ரீ பாடகன் நாயனாரும்  இது போல தானே —
சேனை முதலியார் திரு பிரம்பின் கீழே–சேஷ அசனர்-போக்யமாக கொள்வார் விஷ்வக் சேனர்-
திரு வடி முதுகுக்கு   கீழ்  இருப்பவன் தானே –காளி தாசர்- ராஜா கேள்வி-
அந்த புரத்தில் மார்பை உதைத்தவன்-என்ன தண்டனை -கேட்க சலங்கை பண்ணி போட சொன்னாரே- பிள்ளைக்கு அடிமை இல்லை- தான் அதிகாரம் கொடுத்ததின் பேரில் தானே இவர்கள் –இச்சையின் பேரில் பண்ணுவார்கள்–ஸ்வாமி ஸ்வாமி தானே   —
பெரிய பிராட்டி பார்வை கொண்டே ஸ்ருஷ்ட்டி போல –சர்வருக்கும்  ஸ்ப்ருகநீயனாய் இருப்பவன் என்னை –
சேவை சாதிக்க விலையே -ஸ்வாதந்த்ரன் கிடீர் என்னை இழக்க வைத்தானே —
பாண்டவ தூதன்–பொய் ஆசனம்–திருவடி பாதளம்-அடி முடி காணாத படி வளர்ந்தான்–
சத்திய பாமை ருக்மிணி உடன் சேவை–25 அடி உயரம் —
என்னும்-தாயார் வார்த்தை-அனுவாதம் பண்ணுகிறாள்–
கடல் கிடந்த கனி-திரு பாற்கடல்–விபவமும் அர்ச்சையும் இங்கு இருந்து தானே–இவ் ஆனை வந்த படி –
திருப் பாண் ஆழ்வார் -திரு வேம்கடம் பாடி திரு அரங்கம் பாடினது போல-வடக்கு வாசல் வழியாக வந்து கிடந்தான்—
கனி-பக்குவ பழம்-பிரதி கூலர் வர முடியாத -இங்கு கடல் என்பதால்–இங்கும் ரஷகத்வம் இருக்கு என்று மகிழ்கிறாள்

நிரதிச போகய பூதன்–கனி கண்ட போதே நுகரலாம் படியும் புஜிப்பாரை பெறாத பொழுது தான் அழியும் படி இருக்கையும் —
அவனும் தனக்கு கிட்ட வில்லையே –நித்ய நிர்விகார தத்வம்-வெளுத்து விஜுரக பிரமோதன்-
ராமன் ஜுரம் நீங்கினான் விபீஷணன் பட்டாபிஷேகம் ஒத்து கொண்டதும் –ஆள் கண்ட சமுத்ரம் இவன் —
பக்த பிருந்த கடாஷம்–மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும் —
திரு மூழிக் களம் பெருமாள் குணம்–உத்சவங்கள்  எல்லாம் அடியார்களுக்கு தான்
வையம் கண்ட வைகாசி கருட சேவை தொட்டாச்சர்யர்  ஸ்வாமி சேவை–மிக்கானை -அக்கார கனி- தக்கான் குளம் வந்து சேவை சாதித்தானே —

இடை ஆற்றம்குடி நம்பி நம் பெருமாள் உத்சவம் கண்டு -அங்கேயே தேகம் துரந்தாரே–பக்தர்களுக்கு என்றே இருக்கிறான்–
இருந்த கிடந்த அழகை சேவித்து நின்ற –அல்லி தாதுகள் -கூடிய மலர் -பழன நீர் நிலைகள்-குளமும் நீர் நிலையுமே வேலி–
ஜல துர்க்கம்-யானை ஒரு இடத்தில் இருக்காதே -சஞ்சரித்து நிற்கிற தேசம்–தர்சநீயமான தடாகம் -தேர் அழுந்தூர் —
அநு கூலருக்கு சரம ஹரமாய் –தயரதன் பெற்ற மணி தடம் வல் அரக்கர் புக்கு அழுந்த -பிரதி கூலரை ஒழித்து –
அணி-ஆபரணமாக -உபரி சரவசு-தேரை ஆகாசத்தில்- தேவர்களுக்கு பஷ பாதமாக தீர்ப்பு சொல்ல ரிஷி சாபம்-
நாச்சியார் இல்லை கருடன் பிரகலாதன்-இருவரும்-
கிரீடம் செல்ல பிள்ளைக்கு வைன முடி விமானம் இங்கு சமர்பிக்க அருகிலே நிற்க வைத்து சேவை–
தேவாதி ராஜன் திரு நாமம் – ஆ மருவு அப்பன்-பிரமன் மாடு கன்று -கொண்டு போக -கண்ணன் அனைவருமாக தானே மாறி-
பிரமன் பிரார்த்திக்க சேவை–திரு மங்கை ஆழ்வார்-திரு வுக்கும் திரு வாகிய அரசே-ராஜா பாடவில்லை போக —
புஷ்கரணி அருகில் போக முடியாமல் இழுக்க ஆ மருவி அப்பன் சேவை–நான் இழந்தேன் –நின்று உகந்த அம்மான்–
சம்சாரிகளுக்கு ஆஸ்ரித அனுகூலமாக என்றுமே நின்று –கருட வாகனும் நிற்க-போல –
நிலை அழகையும் குணங்களையும் அனுசந்தித்து கிட்டினால் அதனால் உகப்பவனும் அவனே —
நின்று உகந்து பிராப்தாவும் பிரா பாகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே –ஸ்வாமி சொத்தை பெற்று உகப்பது போல —

ஆத்ம லாபம் ஈஸ்வரனுக்கு தானே –நிற்கிற காரணம் பலித்த வாறே உகந்தான் —
இனியது தனி அருந்தேல்-ஒருவர் வராவிடிலும் வாடுவான்  -அம்மா சர்வ ஸ்வாமி–யத்தனம் பண்ணுகிறான் நின்று —
ஸ்ரீ வைகுண்டம் -திவ்ய தேசம் இங்கு உண்டு இந்த ஸ்வாமி சொத்து பாவம்–
சேஷத்வ சித்தி இங்கு தானே –கைங்கர்யம் பண்ணினால் தான் சித்தி —

நின்றது எந்த ஊரகத்து இருந்தது பாடகத்து –கிடந்தது திரு வெக்காவில்-உள்ளம் வந்து சேர -திரு மழிசை ஆழ்வார் போல–
நாதம் மிக்கு-நெடு வீணை-யாழ் குழல் விட அளவிலும் நாதத்திலும் நீண்டு இருக்கும் இசையும் நீண்டு–
அஷரம் நரம்பு இல்லாத படி கரைந்து இசையே ஆக இருக்கை–அதவா நெடு வீணை-கேட்டார்க்கு அது அது என்று விளக்கும் படி–
முலை மேல் தாங்கி-காந்தன் மணவாளனை தீண்டியது போல–
சம்ச்லேஷ தசையில் தன் உடைய போக்யதையும் இவள் போக்யதையும் வீணையில் ஏற இட்டு —
கை/தோள் உடல் நினைவு வர -தடவும் கையை சாஷாத் கரித்து –
வடிவையும் சாஷாத் கரித்து அவனை மார்பிலே ஏற இட்டு கொள்வது போல வீணையும் கொண்டாள்–
சீதை பிராட்டி அசோகா வனத்தில்- வலிய சிறை புகுந்த பொழுது  கணை ஆழி வாங்கினாள் முலை குவட்டில் வைத்தாள்-
வெறும் மோதிரம் என்று தெரிந்தால் வால்மீகி திரு வடிக்கு வருத்தம் இங்கு தாயாருக்கும் பெரிய வாச்சான் பிள்ளைக்கும் வருத்தம் –
தேசாந்தரம் போன பந்து கண்டால் போல மேல் விழுந்தாள்-
க்ருகீத்வா–பிரேஷமானா வைத்த கண்ணை  எடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தாள்-ச -அந்த சீதை–
இவன் வரவை ராவணன் வரவாக சந்கித்த சீதை பிராட்டி கிடீர்  மேல் விழுந்தாள் —
பர்த்ரு கர விபூஷணம்-கை பிடிக்கும் பொழுது கையை உறுத்திய மோதிரம்–
தானும் அவரும் சம்ச்லேஷித்த பொழுது போகத்தின் மிகுதியால் பிரணய ரோஷம் தலை எடுத்து -குங்குமம் தட்ட-பேசாமல் இருக்க –
பேச தூண்ட கணை ஆழி கீழே போட்டு -வேறு சேர்ப்பார் இல்லை என்று கணை ஆழி தரையில் விட -இது தான் கடகர்–
கண்டார் கொடுக்க சொல்ல -சேர்த்து வைத்த மோதிரம்–இதை எல்லாம் நினைந்து கொண்டு–

ஜீவாத்மா -சீதை அசோகா வனம் -சரீரம் சம்சார சாகரம் -உப்பு கடல் இந்த்ரியங்கள்-10 தலை மனசு-ராவணன் –
சங்கு சக்கர லாஞ்சனம் -கணை ஆழி /பார மாத்மாவுக்கு தெரியும் சீதை வசப் பட வில்லை இவை வாசி/
திரு ஆழி கண்டு விரல் கை தோள் திரு மேனி ஆலிங்கனம் கொண்டது போல —
பர்தாராம் இவ சம்ப்ராப்த –பிரமித்து போல இல்லை பர்த்தா என்றே இருந்தாள் – -வால்மீகி பயந்து போல என்கிறார்–
பீதர் ஆனார் ரிஷி -தாங்கி–வைத்து என்னாதே- காரணம்- அனுபவம் பொழுது தளர்ந்து இருக்க –
தாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்—குணம் ரூபம் சேஷ்டிதம் இவற்றால் பிராட்டி புதுசாக இன்பம் கொடுப்பாள்–
அதனால் அவன் தளர்ந்து போவான்–கால் ஆழ்ந்து நெஞ்சு அழிந்து குமிழ் நீர் உற்று தளர்ந்து —

தூ முறுவல்–ஸ்பரசிக்கையால் வந்த ஹர்ஷத்தாலே –அழகை பார்த்து தளர்ந்தாரே என்றும் —
சேஷத்வம் காட்டியே அவனை வெல்ல முடியும் –வாரி கொண்டு –என்னை முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான்–
தொழுதால் எழலாம்–உதட்டிலே நகை இறையே-புன்சிரிப்பு மாறி-தந்த பந்தி பல் வரிசை கொஞ்சம் தெரியும் படி–
ஸ்மிதம் போர வில்லை இவள் ஆனந்தம் வெளி பட -இள நிலா பாய்ந்தால் போல –சிரிக்க —
ஏகாந்தம் நீச்சல் போட்டி -கோதாவரி-பத்தினிக்கு தோற்ப்பான் பரம ரசிகன்–கேலி தோற்ற சிரிக்க-
காந்தஸ் ஸ்மிதா  லஷ்மனஸ் ச ஜாத ஹாசா –என்ன கடவரே-மென் விரல்கள் தடவி  சிவப்பு எய்தி  –
காந்தன் -நினைத்து -அதி சுகுமாரமான -விரல்கள்–எய்த-தத் காளினமான-தடவினதால் வந்த சிவப்பு  –
கோவை வாயாள் பொருட்டு-நப் பின்னை சிரித்தது  வாய் கோவை போல ஆனதாம் -சிவப்பு ஊட்டினதாம் –
மணவாளன்  என்ற ஆனந்தம் சிவப்பு–ஆங்கே– மென் கிளி- பிள்ளை தனம்-மிக மிளற்றுதல்–
கிளி வாயாலும் கேட்டவள் என்பதால் மிகு இங்கு சொல்கிறாள் தாயார்–பருவ பிள்ளை தனம் பேசுவது பிரணயித்வம் அதிகம்–
மிக- பகு வாக்கியம்-நாங்கள் ஸ்திரீகள் அன்றோ அபலைகள் ஆண் பிள்ளைகள் வசிஷ்டர் சிஷ்யர் –
தேர் அழுந்தூரில் நின்றாராம் இருந்தாராம் கிடந்தாராம்-  வார்த்தைகள் பேசினாள்–

சுமந்த்ரன் தசரதன்-லஷ்மணன் தந்தை இல்லை ராமனே தந்தை  சேலேய் கண்ணி யரும் அவனே
சீதை தான் தாய் -பெற்று மகிழ்ந்தேன் -சீதை வாய் திறந்து பேச வில்லை-உன் மாமனார் இடம் என்ன சொல்வது என்று –
காம்பீர்யம் குறைந்து இவள் பேசுகிறாளே -பரகால நாயகி ஏற்றம்-என் பேதையே- எங்கே கற்றாள்–
இப் பருவத்தில் இவ் வளவு வேட்கை அவா -படுத்துபவன் கற்று கொடுத்தான பருவம் கற்று கொடுத்ததா காலம் கற்று கொடுத்ததா-
வயசோ கொஞ்சம் காதலோ பெரிசு–சிறு மா மனிசரே என்னை ஆண்டார்-கீர்த்தியில் பெருமை மூர்த்தியில் சிறுமை –
எம்பாரை பிள்ளானை ஆண்டானை போல –பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல் –
எங்கனயோ அன்னை மீர்காள் பதிகம் –சிறிய வயிற்றில்  பெரிய உலகம்-அகடிதகடா சாமர்த்தியம் –
அவன் இடம் தான் இவளும் கற்று இருக்க வேண்டும்–ஜீவாத்மா இடம் உள்ளும் வெளி  எங்கும்  வ்யாபிக்கிறான் போல—
பிள்ளை தனமும் அபார காதலும் -இதி சர்வ சமஞ்சதம்  -சேர்த்து ஒருங்கே விட்டாரே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் –
நரசிம்கர் திரு ஆராதன பெருமாளை கொண்டதால் –
நல் குரவும் செல்வமும் நஞ்சும் அமுதமும்  நரகமும் சொர்க்கமும் சேர்த்தானே ஒப்பிலி அப்பன் –
இவள் படியும் அது போல -இன்றும் திரு நகரி சேவை உண்டு

—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–14-முளை கதிரை குறும் குடியுள் முகிலை -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 25, 2011

முளை கதிரை குறும் குடியுள் முகிலை மூவா
மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திரு தண்  காவில்
வெக்காவில்  திரு மாலை பாட கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று
மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே–14–

பதவுரை

முளை கதிரை-இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள் முகிலை–திருக்குறுங்குடியில் காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து–நித்யமாய் மூவகைப் பட்டதான ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால்–பரம பத்திலே
முதல் ஆய் நின்ற–(உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்
அளப்பு அரிய–(ஸ்வரூப ரூப குணங்களில்) அளவிடக் கூடாதவனும்
ஆர் அமுதை-அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை–திருவரங்க மா நகரில் பொருந்திய பரம பரிசுத்தனும்
அந்தணர் தம் சிந்தையானை–வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாக வுடையவனும்
திருத் தண் காவில் விளக்கு ஒளியை–திருத் தண் காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும்
மரகத்தை–மரகதப் பச்சைப் போல் விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
வெஃகாவில் திருமாலை–திரு வெஃகாவில் கண் வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு–ஸர்வேஸ்வரனைக் (கிளி) பாட (அப் பாசுரங்களை)க் கேட்டு
மடக் கிளியை–அழகிய அக் கிளியை நோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று–உன்னை வளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கே வா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள்–அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்.

பவ்யமான கிளி -பால சூர்யன்- மேகம் போன்ற  திரு குறும் குடியில் தங்கி —
மூவா மூ உலகு -பக்த முக்த நித்ய சுத்த சத்வம் மிஸ்ர -கால -அப்பால் –
அளப்பதற்கு அரிய மைந்தனே மதுர ஆறே –அமுதம் விழுந்த இடமே ஸ்ரீ ரெங்கம்–
பெரியோர் ஹ்ருதயத்தில் செல்வதற்க்கே இருக்கிறான்–விளக்கு ஒளி எம்பெருமான்-
பச்சை வண்ண பெருமாள் சிலர் சொல்ல -பெரிய வாச்சான் பிள்ளை விளக்கு ஒளி பெருமாளையே சொல்கிறார் என்கிறார்-
திரு மால்- சேர்த்து -கீழே வேந்தே -தனித்து சொல்லி -இங்கு திரு கல்யாணம் ஆனதால் மிதுனம் –
திரு மாலைப் பாட -மட கிளியை- சிஷ்யன் சொல்ல ஆசார்யன் பெருமை பட –
வருக என்று நினைந்து கை கூப்பி -இரண்டு அடி நடந்து வந்து சேர -கை கூப்புவதை   கண்டு  மடப்பம் –

திரு நாமம் சாத்மிக்கும் திசை –கேட்டு கை கூப்பினாளே -தரித்தாள்- முன்பு சங்கை இருந்தது –சொல்ல சொல்ல மோகித்தாள் முன்பு-
கிளி விவேகத்தாலே முன்பு தெளிந்த காலத்தில் -தான் உஜ்ஜீவித்த -தரித்து -இருந்த காலத்தில் கற்பித்த திரு நாமங்களை
அடைவே  சொல்லக் கேட்டு -அதே வரிசையில் –
முளைக் கதிரை-சொல்லி அவள் முகம் பார்த்து –
குறுங்குடியுள் முகிலை-இன்னும் தெளிய-பரத்வம் சொல்லி அடுத்து -அரங்க பட்டர்  சாய்ந்து இருப்பாராம் —
முளைக் கதிரை –புரியும் படி சொல்லி கொடுத்தார்–என்னீர்-என்னீர் -அடைவே–திரும்ப சொல்ல –
உதிக்கிற சூர்யன் போல- செம் கண் சிறி சிறிதே பால சூர்யன்-கண்ணால் முகந்து அனுபவிக்கும் படி–
கையில் பிடித்த சக்கர ஆயுதம் கோடி சூர்யன் போல -அவன் திரு முக மண்டலம் -தேஜஸ் —
திவ்ய மங்கள விக்ரகம்–பிரசன்ன ஆதித்ய -கடல் மன்னர் சூழ கதிர் போல வீற்று இருந்தான்-
பிரகாசம் உண்டு சுட்டு எரிக்கும் தன்மை இல்லை–மூரி நிமிர்ந்து முழங்கி புறப் பட்டு-
பூவை பூ வண்ணா தேஜஸ் உண்டு மார்தவமும் உண்டு–
அது போல முளைக் கதிர்–அடியிலே விஷயாந்தரம் இருந்து மீட்டதும் –திரு மங்கை ஆழ்வாராக ஆக்கினாரே —
ருசியை பிறப்பித்தும் திரு மேனி அழகை காட்டி தானே–அதை முதலில் பாடுகிறார்–மணி உருவில் பூதம் ஐந்தாய் என்று அன்றோ —
நீல எம்பெருமான் முளைக் கதிர் -சிவப்பு-வஸ்து பேதம் அப்ரயோஜகம்- பிரகாசமே முக்கியம்–தேஜோ மயம் விக்ரகம்- 
பரம் ஜோதி-சாஸ்திரம் அடியாக இல்லை– ஆச்சார்யர் மூலம் இல்லை–திரு குறும் குடி முகிலை–திவ்ய மங்கள விக்ரக தர்சனம்-
முகில் உருவம் இரண்டாம் பாட்டில் ஸ்ரம ஹரம் ஒவ்தார்யம்–காட்டியது போல இன்ன பர்வதத்தில் வர்ஷம்  –
திரு வேம்கடம் திரு மால் இரும் சோலை திரு குறும் குடி- வர்ஷம் தப்பாது -லோகம் எல்லாம் வாழும் படி இருக்கிறான்–
உலகம் வாழ்ச்சிக்கு-நம் ஆழ்வாராக அவதரித்து -உள் முகில் வந்து கொட்டி போகாமல்- ஸ்தாயியாய் கொட்டி கொண்டே இருக்கும் –
ஆழ்ந்து போனது–சீலம் -இரண்டற கலக்க நிற்கிறான்-

அடி பாடி -மூலம் சொல்கிறது -மூவா மூ வுலகு- -அனைத்து உலகும் தாண்டி உள்ள பரம பதம்-
அதனால் திரி வித ஆத்ம வர்க்கம்- புருஷோத்தமன்-பக்த நித்யர் முக்தர் -காட்டிலும் வேறு பட்டவன் கீதை 15 அத்யாயம்-
கடந்து சேதன அசேதனர் தாண்டி- ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷணன்-சுவ இதர வஸ்துகள் – –
முதலா-காரணம் சொல்ல வில்லை- நித்யர் என்றுமே உண்டு என்பதால் போக்யதையால் சத்தை பெரும் படி–
கைங்கர்யம் பண்ணியே ஒளி விட்டுக் கொண்டு–உயர்வற உயர் நலம் உடையவன்-
யானைக்கு குதிரை வைப்பாரைப் போல தன்னை அனுபவிக்க பண்ணுபவன்–
போக்யதையால் நித்யருக்கு சத்தா ஹேதுவாய்–இந்தர்யங்கள் கொடுத்து நமக்கு சத்தா ஹேதுவாய்–
அளப்பரிய ஆரமுதை– ஸ்வரூப ரூப குணங்களால் அபரிசின்னனாய் –
வஸ்து தேச கால அபரிச்சின்னனாய் அமிர்த சாகரமாய் -நிரதிசய போகய பூதனாய் இதுக்கும் அவனை–
அரங்கம் மேய அந்தணனை- குமிழி வந்து கீழே தடாகம் -கோவிலிலே கண் வளரும்

சீரார் திரு வேம்கடமே -பல கோவில்களாக பெருகி–
பெரிய பெருமாளுக்கு அடி ஸ்ரீயபதி  அன்று-திரு பாற்கடல்-காணும் ஸ்ரீ பரம பதம்-ஆயிற்று-
அண்டர் கோன்  அணி அரங்கன் என் அமுது-அரங்கம் மேய–பரம பதத்தில் இருப்பு பேருகைக்கு யோக்யதை உண்டு–
அவதாரங்கள் தீர்த்தம் பிரசாதிக்க யோக்யதை உண்டு–
சம்சாரங்கள் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்போம் -பேரென் என்று கிடக்கிறான் இங்கு–
கல்ப அவசானம்-கல்ப  முடியும் பொழுதும்-விஷயம் இல்லாமையாலே கிளம்பி போகிறான்–
விஷயாந்தர பிராவண்யம் அகங்காரம் போக்கி -சுத்தி உடையவன்–அந்தணர்-சுத்தர்- சுத்தர் ஹ்ருதயம்-
உட் கிடந்த வாறே பொசிந்து காட்டினானே -கோவில் வாசமும் ராகாதி -காமம் குரோதம் இல்லா மனசை தேடி தபஸ்- சாதனம்–
சத்திய ஹ்ருத்ச்யதன் -திருக் கடித் தானமும் என் உடைய சிந்தையும் -தாய பதியிலே –
ஏறி வந்த ஏணி உதைக்க மாட்டான்–அரங்கம் மேய–அன்று வெக்கனை கிடந்த -என்ன கடவரே —
அன்று நான் பிறந்திலேன் –நின்றதும் இருந்ததும் கிடந்ததும் –என் நெஞ்சுளே —

விளக்கு ஒளி-விஷயாந்தர பிரவண்யம் போக்கி  அகங்காரம் போக்கி கிளம்பாமல்-
நெஞ்சில் புகுந்து முறை உணர்த்தினான் –பிரகாசிப்பித்தான் —
அர்த்த பஞ்சகமும் காட்டி புருஷார்த்தம் சித்திக்கும் படி —
மிக்க இறை நிலையும்–திரு தண்காவில் மரகதத்தை- தீபம் சேர்ந்தவன்-ஸ்வேத தீபம் –போல –
இங்கு உள்ள மரகதம்-விலஷணம்–சயனித்து உறங்கும்-பச்சை மா மலை போல் மேனி வடிவை உடையவன்–
வட தேசம் இருந்து வரும்  பெரிய பெருமாளை அனுபவிக்க வருபவர் -இளைத்து  வரும் இடத்தில் –தேற்ற –
ஆயாசம் போக்க எதிர் கொண்டு அனுபவிக்க -திரு வெக்காவில் சயனம் ஆன பின்பு —
ஸ்ரீய பதித்வம் நிறம் பெற்ற படி–இருவரும் கிடந்த கிடக்கை கீழ் அருளி செய்தார்-
ஆஸ்ரியன வேளையிலும் போக வேளையிலும் மிதுனமே ஆபாஸ்ரயம்—

பாட -ப்ரீதி பிர கர்ஷத்தாலே -சொல்லி தலைவி எழுப்பியதை கண்டு–
கிஞ்சித் கார கைங்கர்யம் செய்யப் பெற்றோம் என்று ஆனந்தம்-பாட -சொல்ல இல்லை–சொல்ல ஆரம்பித்து பாட ஆரம்பிக்க –
இவள் கேட்டு–சொல்லே என்று சோர்ந்தாள் -சாத்மிக்கையாலே கேட்ப்பாரை பெற்றாள்–
இதில் தான் பாடக் கேட்டு–திரு மால் வந்த பின்பு-கடகர் உண்டே என்று சாத்மிகிற திசை–
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கு கண்ண நீர்–வளர்த்த பிரயோஜனம் அடைந்தேன்–
ஆபத் சகன் ஆபத்து விளைவித்து போனான்- நீ ஆபத் சகன் ஆனாயே-
முன் கை முப்பது காதம் இருக்கிற படி வருக என்று- மட -மடப்பம் பவ்யம் லஜ்ஜை-
தன் ஓட்டை சம்பந்தம்  ஒவ்பாதிகம் ஆக்கினாளே -சொல்லி கொடுத்தது காரணம் பற்றி இல்லையே-
பயன் பெற்றேன் சொன்னாளே-கை கூப்பி ஒதுக்கி  விடுகிறாளே -வருக பயன் பெற்றேன் சொல்கிறாளே–
ஸ்வரூப பிர யுக்தம் தானே -அதனால் வெட்க்கம் பட்டதாம் –
அஹம் ச ரகு வம்ச லஷ்மணன் வைதேகி -ஹனுமான்- உனக்கு கடன் பட்டோம் கண்டேன் சீதை சொன்னதும் -வெட்கினார் திருவடி-அது போல–
பவ்யம் -விஜய ராகவன் செய்தி சொல்ல போகும் திருவடி முன் -பிராட்டி கை கூப்பி தலை அல்லால் கைம்மாறு இல்லை சொல்ல ஆரம்பிக்க –
குருகி நமஸ்கரித்து ஒதுங்கி நின்றாரே திருவடி–கை கூப்பி வணங்கினாளே–
மனசில் நிற்காமல் , அஞ்சலி பண்ண  -வெட்க்கம் கை விட்டதாம் -தெரியாதது போல –
வாத்சல்க்யத்தால் செய்த தாய்-குழந்தை காலை கன்னத்தில் கொண்டது போல –
வணங்கினாள்-கை கூப்புதல் மட்டும் இன்றி தண்டம் இட –
உடையவர் முதலிகள் செல்ல சமுகம் கண்ட ப்ரீதியாலே ஆள வந்தார் போல நினைத்து பெரிய நம்பி தண்டன் இட —
ராமானுஜர் கண்டு கொள்ளாமல் போக –உதாசீனம் -வாத்சல்யம்- திரும்பி செய்தால் அங்கீ கரித்தது போல ஆகும்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்-13-கல் எடுத்து கல் மாரி காத்தாய்! என்றும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 25, 2011

கல் எடுத்து கல் மாரி காத்தாய்! என்றும் –
காமரு சீர் பூம் கச்சி ஊரகத்தாய் என்றும்
வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய்! என்றும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே! என்றும்
மல் அடர்த்து மல்லரை அன்று  அட்டாய்! என்றும்
மா கீண்ட கை தலத்து என் மைந்தா! என்றும்
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே –13–

பதவுரை

(இப் பெண் பிள்ளை)
கல் மாரி–(இந்திரன் பெய்வித்த) கல் மழையை
கல் எடுத்து–ஒரு மலையை யெடுத்துப் பிடித்து
காத்தாய் என்றும்–தடுத்தவனே! என்றும்,
நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்-விரும்பத் தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,
அட்டாய் என்றும்–ஒழித்தவனே! என்றும்
மா கீண்ட–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த
கைத் தலத்து–திருக் கைகளை யுடைய
என் மைந்தா என்றும்–எனது மைந்தனே! என்றும்
தன் கிளியை–தன்னுடைய கிளியை நோக்கி
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்-வில்லை முறித்துப் பிராட்டியைக் கைப் பிடித்தவனே! என்றும்,
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்–திரு வெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,
அன்று–முன்பொரு காலத்தில்
மல்லரை–மல்லர்களை
மல் அடர்த்து–வலிமை யடக்கி
சொல் எடுத்து–திருநாமத்தின் முதற் சொல்லை யெடுத்துக் கொடுத்து
சொல் என்று–(மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,
(அது சொல்லத் தொடங்கினவாறே)
துணை முலை மேல்–உபயஸ்தரங்களிலும்
துளி சோர–கண்ணீர் பெருகப் பெற்று
சோர்கின்றாளே.–துவளா நின்றாள்.

பிடி தோறும் நெய் போல அடி தோறும் அர்ச்சை இவருக்கு —
கல் எடுத்து கல் மாரி காத்தாய் -என்றும்– காமரு ..ஊரகத்தாய் என்றும் –
சொல் எடுத்து கிளியை சொல்ல சொல்ல -கண்களில் நீர் பெருக —
இவள் திரு நாமம் சொல்ல நம்பி மைந்தா -தரிக்கிற நிலை–பார்த்து இவள் வார்த்தை கேளாதே –
கிளி வாடி இருப்பதைப் பார்த்து இவள் கண் முகப்பே வைத்து –
தாயார் சொன்னதை கேட்க மாட்டாள் என்று கிளியை சொல்லச் சொன்னாள் ஆசுவாசம் படுவாள் என்று நினைத்து —
இவள் தசை கண்டு வாடி இருப்பதாலும் -சேஷ பூதை ஆச்சார்யர் முன் சொல்ல கூடாது என்றும் –
இவள் கற்பித்தவை ஆனாலும் பேசாமல் இருந்தது —
சாஸ்திர அர்த்தம் இவ் இடத்தில் வெளி இடுகிறது –நான் உச்சரிக்க நீ சொல்லலாமே என்றும் –
அடியிலும் இப் படியே கற்பித்த பிரகாரம்–சொல்ல சொல்ல சொன்னது —
கேட்கும் திசை  கூட பர கால நாயகிக்கு பரி போனது –ஆபத் சகத்வம் – திரு நாமமே –
ஓர் அவஸ்தையில் பாவனமுமாய் -ஓர் அவஸ்தையில் போக்யமுமாய் / ஓர் அவஸ்தையில் சம்சார பய நிவர்தமாய்-
ஓர் அவஸ்தையில் சாதனமாய் – சாலம்பன உபாயம்  -ஓர் அவஸ்தையில் -தாரகமாய்   ஓர் அவஸ்தையில் நஞ்சுமாய் இருக்கும் —
தேக ஆத்மா அபிமானிகளுக்கு அன்னமே இப்படி இருக்குமே–
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி -சத்வ சுத்து ஸ்மிர்த்தி லம்பே கிரந்தி முடிச்சு சந்தேகம் விடு படும் –
அன்னம் -தானம்-சாதனம் -அதிசயித்து நஞ்சு தானே–
பவித்ரானாம் கோவிந்தா -பிரதமத்தில் பாவனத்வம்-பரம் உச்சதே–பாவன பொருள் அனைத்துக்கும் பாவனம்-மங்களானாம்  மங்களம்—
ரிஷிகள் வாக்கியம்-ஆழ்வார்கள் அச்சுதா ஆயர் ஏறே அமரர்கள் கொழுந்தே போக்கியம்–
நின் நாமம் கற்ற ஆவலிப்பு– நமன் தமர் தலைகள் மேல் நாவல் இட்டு உளி தருகின்றோம்-
கூட்டு  சேர்த்து அனைவரும் -முதல் பாசுரம்–ரஷகத்வம்-பாவனத்வம்  சொல்லி -போக்கியம்–
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் தாரகம்–கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் தாரகம்–
அழைப்பன் ஆங்கு  அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி -பிழைப்பு  இல் கோவிந்தா போன்ற பெரும் பெயர்–
தாமோதரனை ஆமோ தரம் அறிய –பிழை இல்லாத பெரும் பெயர் இல்லை-பிரகரணத்துக்குச் சேராது -நஞ்சு அர்த்தம் இங்கு —

மூன்று விருத்தாந்தன்கள்-கிருஷ்ணன்-ஒரு ராமன் சரித்ரம்- -இந்த பாசுரம் -அர்ச்சை உடன் சேர்த்து அனுபவிகிறார் —
கோவர்த்தன -ஆபத்து விலக்கின -ஆழ்வார் ஆபத்து நீங்கும் என்பதால்–
ரஷகன்  ஆக வைத்த இந்தத்ரனே பாதகம் ஆக –கோப குலம் பாதிக்க பட -நிருபாதிக ரஷகன் கண்ணன்–
காரணம் நின்றதால் இந்த்ரன் ரஷகம் மாறினது -அது போல அன்றி நிருபாதிக ரஷகன் கண்ணன்–
காடும் மலையுமே ரஷகம் என்று சொல்லி மலைக்கே ஆராதிக்கப் பண்ண-மலை தெய்வமாக இருந்து –
காண்கின்ற மலை கடல் –எல்லாம் நானே என்னும்-அமுது செய்து முடித்தான்–
தனக்கு படைத்ததை பரமாத்மா  அமுது செய்ததற்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்காமல் –
கல் வர்ஷம் பொழிய வைக்க-ஆயர் அஞ்ச அஞ்சா முன்- மலை ஆதாரித்தோம் –
ரஷிக்கும் என்று சொன்னதை மெய்ப்பிக்க –மலை தன்னையே எடுத்து ரஷித்து கொடுத்தான்–
சோலை சூழ் குன்றமாக இருக்க கல் எடுத்து -அனாயாசமாக -எடுத்ததை சொல்கிறாள்-
அப்பன் தீ மலை காத்து குன்றம் எடுத்தான்-கணவன் சாகாச செயல் செய்தாலும் அவ லீலை-
இந்த சக்தி தானே இவள் நெஞ்சத்தில்—கிட்டுவதும் அனுபவிப்பதும் கைங்கர்யமும் ஈஸ்வர சக்தி தானே–அசக்தா அதிகாரம் இது —
சக்தன் கர்ம ஞான பக்தி -இல்லை–புகாது சக்தி இருந்தாலும் -சக்தரோடு அசக்தரோடு வாசி இல்லை
ஈஸ்வர சக்தி எதிர் பார்த்து இருக்கும் சீதை உன் கை பார்த்து/என் கை பார்த்து  இருக்க மாட்டேன் ராமனின் வில் ஒன்றையே என்றாளே

தனக்கு பிரிவு ஆற்றாமை அதிகம் இருந்தும் -பிரதம ஆச்சர்யை பிராட்டி இருந்த இருப்பு–
நீர் மாரி ஆகில் கடலை கொண்டு ரஷித்து இருப்பான்-பட்டர் –
சர்வ சக்தன் இதை கொண்டு இதை செய்ய வேண்டும் என்கிற நியதி இல்லையே —
சங்கல்பத்தாலே தான் பார்கிறான் கேட்கிறான் செய்கிறான்–
திரௌபதிக்கு சக்தி இல்லை கை பார்த்து இருந்தாள்– சொல்லினால் சுடுவன் தூயவன் வில்லுக்கு மாசு என்று பிராட்டி சக்தி விட்டாள்–
இதனை சக்தி இருக்கும் பொழுது என்னை ஏன் கை விட்டாய் —
உன்னால் வந்த ஆபத்தை ரஷித்தால் ஆகாதோ-கல் வர்ஷம் காத்தாயே –
சம்சார வர்ஷம் ரஷிக்க -துக்க வர்ஷினி – மாட்டாயோ–
ஊரார் அகப்பட  ரஷித்தாயே அதை அனைத்தும் ஒருத்தி பட்டால் ரஷித்தால் ஆகாதோ-
மலை எடுக்க வேண்டாம் அந்த தோளை காட்டினால் போதும்  –தோடு இட்ட காது தோடு வாங்கினாலும் தெரியுமே —
மலை ஏந்தி கல் மாரி தன்னை காத்தாய்-ஆழ்வார்–காமரு -பின் பட்டாருக்கு -பாஹ்ய ஹீனர்- –
மூன்று ஸ்ரீயபதி சாதித்தாரே நம் பிள்ளை அது போல —
திரு ஊரகத்தில் –திரு விக்ரமன்- கிருஷ்ணன்-எல்லாரையும் தீண்டுவதும் -உலகம் இங்கு ஊர் அங்கு —
தன் பேறாகா கார்யம் செய்ததும் -இரண்டுமே இந்தரனுக்கு -வருக வருக வாமன நம்பி வருக —
மாணிக் குறளனே தாலேலோ-சாம்யம்-

காமரு- போக்கியம் போக உபகரணம் நிறைந்து -தர்சநீயம் -காஞ்சி-திருப் பதிகளும் நிறைந்த –
படை வீடு ஆகையாலே ராஜ தானி-பரம பதம் போல –விமுகருக்கும் சுலபமான திருவடிகள் –
தனக்கு-ஆற்றாமை கொண்டும் – கிடைக்க வில்லையே –அன்று இல்லை என்று ஆறி இருக்க வில்லை–
பிற் பாடர் என்றும் ஆறி இல்லை ./
பிடி தோறும் நெய் வார்ப்பாரை போல அடி தோறும் அர்ச்சை –திருப் பதிகள் அடி பாடு வேண்டுகையாலே விபவம்–
திருப் பாண் ஆழ்வாரும் திரு வேம்கடம் -திரு அரங்கனின் அடி பாடு- என்று அருளியது போல–
அவதார கந்தம்–மற்ற ஆழ்வார் மேன்மையை பேச பர அவஸ்தை நீர்மை விபவமும் –
கண் கூடாக பார்க்க அர்ச்சை இவரோ மேன்மை நீர்மை அனுபவிக்கவும் சாஷாத் கரிக்கவும் அர்ச்சை–
ஆண் பிள்ளை தனம் காட்டி-ஸ்த்ரீத்வம் அபிமானம் தொலைத்து-மெல் இயல்-ஸ்வாபகம்-தோய்த்தான்–
வில்லை எடுத்து  நாண் ஏற இட்டு – பொற்  கிண்டி கொண்டு வர -பெண் கொடுத்து பெண் வாங்க வர வில்லை  –
நம் ஐயரை கேட்க்க வேண்டும் வசிஷ்டர்  ஆதிகளையும் -வில் எடுத்ததையும் வார்த்தையையும் கேட்டு நீராக உருகினாள்–
அதில் தோய்ந்தான் பெருமாள் -தோள் தோய்ந்தான் நித்ய விபு கரந்து எங்கும் -பரந்துளன் –
ஏக அவயவத்துக்குள் அடங்கினான் -அல்லாத அவயவம் ஆத்ம குணம் பயன் அற்று போகுமே —
இத்தால் நித்ய அனபாயிநியாக -இவளைச் சேர்க்க ஆச்சர்யர் புருஷ கார பூதை வேண்டும் —
சேதனனுக்கும் இது போல–உன்னை பிரிந்து தனி இருப்பார் உடைய ஆபத்தை போக்கிய -திரு கல்யாணம் பண்ணி கொண்டாயே –
நீ என் ஆபத்தை போக்க வேண்டாமா –
திரு கல்யாணம் ஆன பின்பு வெக்காவில் வேந்தே -ராஜ குமரன்- -படுக்கை அப்புறம்–
கீழ் பாசுரம் படுக்கை சொல்லி வயலாலி மணாளன் சொன்னார் —
சேர்த்தியில் அனுபவிக்கப் பெறாத நோவு-அவள் இருந்தும் இழந்தேனே —
வூமதங்காய்  போல இருந்து இருவரும் என்னை மறந்தார்கள் –மல்லர்கள் மிடுக்கை முடித்தான் எதிர்த்து வர முடித்தான்-

சானூர் முஷ்டிகர் கர்வம் தொலைத்து –வில் யாகம்–மான் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல கண்ணனும் பல ராமனும் –
தரிசித்த பொழுதே மிடுக்கு போனதே -குவலையா பீடம் தந்தம் கையில் கொண்டு -பின்னை மல்லரை முடித்தான்–
வரும் மல்லரை நிரசித்தான் -திரு தோள்கள் மிடுக்கு தினவு தீர விஷயம்-
பரியனாகி -வரம் கொடுத்து பெருக்கிய –மல்லாண்ட திண் தோள்-அன்று அடர்த்தான்–வசு தேவனும் தேவகியும் –
பிறந்த அன்று இன்றும் ஆபத்து -ஆழ்வாரும் இன்று ஆபத்து- போல-திரு நெடும் தாண்டகம் முடியும் முன் பார்ப்போமா –
தேவகி இடம் முகம் காட்டி பின்பு விரோதி நிரசனம் செய்யாமல்- விரோதி கிடக்க காட்ஷி இனிக்காதே –
நம நாராயண -போல விட்டே பற்ற வேண்டும் என்பதால் —
விரோதி தொலைத்தே அனுபவம்-கஞ்சன் வயிற்றில் நெருப்பாக நின்று-நெடுமாலே அப்புறம் –ஆண்டாள்

மாதா பிதா ஆபத்து போக்கினாய் -என் ஆபத்து -ஆற்றாமை விட்டு பிரதி கூலராய் மல்லர் போல இருந்தால் அனுபவம் பெற்று இருப்பேனே —
கேசி-பகை அறுத்த கதை–பருவம்  சொவ்குமார்யம் கண்டு விழுங்க வர துவாரம் கண்டால் குழந்தை கை விட்டு –
ரஷகன் கை பட்டதும் பூரித்து வளர -வெள்ளறி பிஞ்சு போல கிழிய -கை தலம்–அதே போல பருவம் காட்டி என்னை அநந்யார்ஹை  ஆக்கி –

கோப குமார ஆபத்து நீக்கி-சொல் எடுத்து -கல் எடுத்து -அவன் தீரம் நினைந்து -சொல் எடுத்து ஆயாசம் -தன் அளவில் கஷ்டம் –
வருந்தி நான்  வாசக மாலை கொண்டு–தன் கிளி -அபிமானம்-பாவை பேணாள் போக்கியம் என்பதால் –
இதற்கு திரு நாமம் ஸ்பர்சம் என்பதால் –அனுகூலம் உண்டானால் எல்லாம் கொள்ளலாமே —
சொல்லே என்று -முதல் சொல்லை கொடுத்ததும் அது சொல்ல ஆரம்பித்ததும்  -கேட்டாள் என்றாமல் –துணை முலை-
பார  தந்திர லக்ஷணம் -மீசை  ஸ்வாதந்த்ர்யம் போனது –கண் ஞானம் இடை -வைராக்கியம் திரு முலை பக்தி –நினைக்கிறது —
அவனுக்கும் இவளுக்கும்  போக உபகரணம் இது தானே —
அவனை இதைக் கொண்ட வாங்க முடியும் கைப் பிடித்து கூட்டி செல்வன்–
துணை முலை–அவனுக்கும் துணை– ஒன்றுக்கு மற்று ஓன்று துணை-இணை அடி போல –சதர்சம்–
அல்லாத ஆழ்வாரை போல அன்றி மாதுர்யம் மிக்கு  -மாசம் உண்டும் மாசம் பிரிந்தும் இருப்பார்கள் மலையாள ஊட்டு போல –
சம்ச்லேஷிக்கும் விச்லேஷிக்கும் -தூது -நான்கு பதிகம் ஆழ்வார் இவரோ நான்கு பாசுரம் மேல் மண் அளந்த தாடாளா–
உம் அடியார் எல்லோர் ஓடும் ஒக்க எண்ணி இருந்தீரோ–அடியேற்கும்  இறையும்  இரங்காயோ–
கண்ணும் திரு மார்பும் சேர்ந்து அழுகின்றனவாம்-ஞானமும் பக்தியும் சேர்ந்து -கண்ணும் முலையும் கண்ணனை இழந்து கட்டி அழுகின்றன
கண்ட இடத்தில் விழாமல் முலையில் விழுந்தன கண்ண நீர் -தானும் சோரா நின்றாள் –

வேம் எமது உயிர் அழல் மெழுகில் ஒக்கு -ஆழ்வார்-மேகலை  கழன்று விழ தூ மலர் கண்ண நீர் முத்தம் சோர துணை முலை அழிய –
கோவில் கட்டணம் அழிகிறது மலராள் தனத்து உள்ளான்-அந்த புரம் அழிகிறது —
திரு நாமம் ஆற்ற வைக்கும்என்று ஆரம்பித்து இப் பொழுது  -அர்த்தம் அனுசந்தித்து மோகித்தாள் –
ஆபத் சகன் உதாவாமல் ஒழிந்தான்–கைமா துன்பம் களைந்தவன்–தன்னை விட்டானே

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-