ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ பால காண்டம் .

March 26, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

———

ஸ்ரீ பால காண்டம்

திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு

ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பன்

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்

ஆவார் ஆர் துணை என்று துளங்கும்

நல் அமரர் துயர்தீர

வல்லரக்கர்

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணிநகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்  மன்னன்  ஆவான் நிற்க;

————-

ஸ்ரீ பால காண்டம் .

25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –

குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்
குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-

———-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்

மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு
தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –

———–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
————

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –

அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –

————-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

துணை ஆவார் ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-
கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே
நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –
திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு,
நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.

—————–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-

——————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்.

————–

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –

———

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி –
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக
பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

————

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக
மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து
ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

———–

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

—————-

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே

————-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

——————

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –

குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான ஸ்ரீ எம்பெருமானார்

குணம் திகழ் கொண்டல் –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் –
தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே -என்கிறபடியே
தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் –
அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் –
மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே –
சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான

குணம் திகழ் கொண்டலான இராமானுசன் எம் குலக்கொழுந்து–கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர்

ராமானுஜரை அடைந்து குணங்கள் பெருமை பெற்றன
அவர் குணமும் இவனுக்கும் உண்டு என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை இங்கு

—————

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப் பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

——-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

————

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.

இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.

இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.

முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.

அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

 அ + ஹல்யா = மாசு அற்றவள்!

கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!
* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!

வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை

—————–

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

மைதிலியை மணம் புணர்வான்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம்
நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-

காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த
உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம்

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இறுத்து 
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து

இயம் சீதா மம சுதா மம காரம் விட்டவனின் மம காராம் தூண்டுமாம்

அவள் பெருமை சகதர்ம சரிதவ….நம்பியை காண  ஆயிரம் கண்கள் வேண்டும் கொம்பினை காணும் தோறும் ஆயிரம் கண்கள் வேணும்

இதுவரை சொன்னதுக்கு எல்லாம் சீதா கல்யாணத்துக்காக என்றே அத்தை நேராக குறைவாக சொல்கிறாள்
அவள் தன்னை ஏற்றுக்கொள்ள அடியவர் ரக்ஷணம் -அகல்யா சாப விமோசனம் -தாடகா நிராசனம் இவற்றால் அவளை மகிழ்விக்கவே செய்தான்

——————

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

———-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி
இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

—————

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

————-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து

அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

———-

வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ! உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே! உன்னை நானே—- 9-1–

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில் சொற்களுக்கும் ஸ்ரீ திருவாய் மொழியில் சொற்களுக்கும் ஸாம்யம் –முதல் ஐந்து பத்துக்கள் —

March 24, 2023

ஸ்ரீ மா முனிகள் பிரயோகித்த ஆழ்வார் திரு நாம பதங்கள்

1-சடகோபன்-15-
2-குருகையர் கோன்–22-
3-குருகூரில் வந்துதித்த கோ–32–
4-தென் குருகூர் ஏறு–37–
5-மொய்ம்மகிழோன்–40-
6-காரி மாறன்–51-
7-குருகையர் கோன்–52–
8-பராங்குசன்–54-
9-சடகோபற்கு–63-
10-அண்ணலை–66-
11-சடகோபனை–75-
12-சடகோபர்–77-
13-காரிமாறன்–78–
14-ஞான முனி–99-
மாறன் -மற்ற அனைத்து -86-பாசுரங்களிலும் –

—————————-

அந்தாதி (12) 
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4 
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3 
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3 
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3063/3 
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் - நாலாயி:3074/3 
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3373/3 
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3384/3 
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - நாலாயி:3450/3 
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் - நாலாயி:3593/3 
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் - நாலாயி:3692/3 
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3934/3 
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4

அந்தாதிகளால் (1)
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3

திருமொழி (2)
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3

திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
திருமொழியாய் (1)
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை – நாலாயி:2245/3

------------------

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல
மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான்தனியன் 1

இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக,
மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை,
இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார்.

மன்னு புகழ் சேர் மணவாள மாமுனிவன்
தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை
ஒருவாதருந்து நெஞ்சே! உற்று-தனியன் 2

நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால்
திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட
திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.

————-

முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…)
இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது
எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்”
என்று சொல்லும் முதல் திருவாய்மொழி
சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்க வல்லது என்று அருளிச் செய்கிறார்.

உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு–1–

மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார்,
தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச் செய்தார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல்,
உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழி செய்யும்.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

———————

இரண்டாம் பாசுரம்.
மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும்
தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும்
அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.

வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண் குருகூர் மாறன்  இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து–2-

சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார்
மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த
“எல்லாவற்றையும் விட்டு
ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று
அருளிச் செய்தார்.

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப் பத்தே –1-2-11-

———–

மூன்றாம் பாசுரம்.
மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை)
உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்
என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை-3-

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான
“ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்;
தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்;
இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே!
கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு,
நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

————————

நான்காம் பாசுரம்.
மாமுனிகள், பறவைகளை எம்பெருமானிடம் தூதுவர்களாகப் போய்,
அவனுடைய அபராத ஸஹத்வம் (குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்) என்ற குணத்தை அறிவிக்குமாறு
ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என இரந்து  – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-4-

அழகிய சிறகுகளை உடைய பறவைகளைக் கண்ட ஆழ்வார், அவைகளிடம்
“நீங்கள் சென்று என்னுடைய நிலைமையை திருவாழியை உடைய ஸர்வேச்வரனுக்குச் சொல்லுங்கோள்” என்று ப்ரார்த்தித்து,
தன் சக்தியை இழந்து, எல்லா உலகிலும் எம்பெருமானைத் தேடி, கலக்கத்தை அடைந்தார்.
இதுவே ஆழ்வாருடைய பக்தியின் பெருமை.

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

——————–

ஐந்தாம் பாசுரம்.
மாமுனிகள், எல்லோரும் எம்பெருமானைப் புகலிடமாகக் கொள்ள உதவும் அவனுடைய ஸௌசீல்யம் (நீர்மை)
என்கிற குணத்தை விளக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கூடுருவ ஓர்ந்து – தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-

மிகுதியான ஐஸ்வர்யத்தை உடைய எம்பெருமானுடைய பெருமையையும்
தன்னுடைய தாழ்ச்சியையும் தன் நெஞ்சில் உணர்ந்த ஆழ்வார்,
அவற்றை நன்றாக ஆராய்ந்து, மிகவும் தளர்ந்து, எம்பெருமானை விட்டு விலக நினைத்தார்;
ஸர்வேஸ்வரன் தன்னுடைய ஒளி விடும் சீல குணத்தைக் கொண்டு, ஆழ்வாரை ஆனந்தமாக, ஸ்நேஹத்துடன் அணைத்தான்.

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-

———————

ஆறாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானை அடைவதும் தொழுவதும் அரிதன்று, எளிது என்று
சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று  – உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு–6-

எம்பெருமானிடம் நெருக்கமான பக்தியுடன் பேசிய ஆழ்வார்,
எல்லா தோஷங்களுக்கும் எதிர்த் தட்டான ஸர்வேஸ்வரனின் தன்மைகளை
“பூர்ணனான ஸர்வேஸ்வரன்,
அவனுக்கு எதை ஸமர்ப்பித்தாலும் த்ருப்தியுடன் ஏற்றுக் கொள்வான்;
மேலும் அவனை ஆராதிப்பது அரிய செயல் அன்று” என்று சொல்லி,
இவ் வுலகில் அறிவற்ற மக்களுக்கு பிறவி முதலியவற்றை விலக்கி யருளினார்.-

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

———-

ஏழாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானிடத்தில் சரணடையும் இனிமையைக் கொண்டாடிச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பிறவி அற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் – அறவினியன்
பற்றுமவர்க்கென்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே! ஓடு–7-

நெஞ்சே! “ச்ரிய:பதியான எம்பெருமான் தன்னிடம் சரணடைபவர்களை
பிறவித்துயரில் இருந்து விடுவிக்கிறான்;
மேலும் அவர்களுக்குப் பரமபதத்தில் உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் தன்மையுடன் இருக்கிறான்;
அப்படி அவனிடம் சரணடைபவர்களுக்கு அவனே மிகவும் இனிமையானவன்” என்று
அருளிச் செய்த ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த துணையாகக் கருதி,
அவரிடம் விரைந்து சென்று சரணடைவாயாக.

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொரு வல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-

—————

எட்டாம் பாசுரம்.
மாமுனிகள், நேர்மையுள்ளவர்களிடமும் நேர்மையற்றவர்களிடமும்
எம்பெருமான் நேர்மையாகப் பழகுகிறான் என்று சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8-

நேர்மை இல்லாதவர்களை, அதாவது
தங்கள் நிலையில்லாத மனம், உடம்பு மற்றும் வாக்கு ஆகிய கரணங்கள் ஒருமித்து இல்லாமல் இருப்பவர்களை,
ஏற்றுக் கொள்வதாகிய ஸர்வேஸ்வரனின் குணத்தைப் பேசி
எல்லோரும் உணரும்படி அருளிய ஆழ்வாரை அனுஸந்திப்பவர்களிடம்
தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த (கைங்கர்யச்) செல்வம் நிலைத்து நிற்கும்.

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே —1-8-10-

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

—————–

ஒன்பதாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானின் பொறுக்கப் பொறுக்க ஆனந்தத்தைக் கொடுக்கும்
குணத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்தாற்ற
அவயங்கள் தோறும் அணையும் – சுவை அதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்–9-

ஸர்வேஸ்வரன் தன்னுடைய (சென்ற பதிகத்தில் வெளியிடப்பட்ட) நேர்மை போன்ற
குணங்களை உணர்ந்தவர்களுடன் படிப்படியாக, அவர்களின் ஒவ்வொரு அவயவத்துடனும்
ஆனந்தமாகக் கூடும் இன்பத்தைப் பெற்று அனுபவித்த ஆழ்வார்,
அதை மிகுந்த ஆனந்தத்துடன் அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைச் சொல்லவே,
ஸர்வேஸ்வரனின் திருவடிகள் நம் தலையில் வந்து சேரும்.

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

—————–

பத்தாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் தன் எல்லா அவயங்களுடனும் கூடியதற்குத் தன்னிடத்தில் எந்தக் காரணமும் இல்லை
என்பதை உணர்ந்து, த்ருப்தியுடன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையைச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.-

பொரும் ஆழி சங்குடையோன்  பூதலத்தே வந்து
தருமாறோர் ஏதுவறத் தன்னை – திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்–10-

திரு வாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தன் திருக் கைகளில் கொண்டிருக்கும் எம்பெருமான்,
இவ்வுலகில் எந்தக் காரணமும் இல்லாமல் தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவதரித்து,
தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மயை நன்றாக அனுபவித்த ஆழ்வார், அதை அருளிச் செய்தார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் என் தலை வணங்கட்டும்;
என்னுடைய வாய் அவருக்கு மங்களாசாஸனம் செய்யட்டும்.-

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
ண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

————–

பதினொன்றாம் பாசுரம்.
மாமுனிகள், எல்லாப் பதார்த்தங்களும் தன்னைப் போலே துன்புறுவதாகச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் – ஆய
அறியாதவற்றோடு அணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து–11–

தன்னடியார்களை அணுகும் ஸர்வேஸ்வரன் தன்னை மறைத்துக் கொள்ள,
ஆழ்வாரின் சோகம் மிகவும் அதிகமாகி, விடாமல் அழும் நிலையை அடைந்தார்;
தன் சோகத்தைப் புரிந்து கொள்ள அறியாத பதார்த்தங்களை கட்டிக்கொண்டு அழுதார்;
இப்படிப் பட்ட ஆழ்வார் அடியார்களை தன்னுடைய கருணை மிகுந்த கண்களால் கடாக்ஷிப்பார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

——————-

பன்னிரண்டாம் பாசுரம்.
மாமுனிகள், அவதாரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை, முன் பதிகத்துடன் தொடர்பில்லாமல்,
திடீரென்று நினைத்து, அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி அவதாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர் பால்
உற்றாரை மேலிடாதூன்–12-

திடமான எண்ணத்தை உடைய ஆழ்வார்
ஸர்வேஸ்வரனின் பரத்வத்தை அவன் அவதாரங்களில் அருளிச் செய்ததை அறிந்து,
அவ் வாழ்வார் திருவடிகளை அடைபவர்கள்,
இந்த சரீரத்துடன் இருக்கும் பந்தத்தால் ஜயிக்கப்பட மாட்டார்கள்.

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

———————-

பதிமூன்றாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருடன் ஏகதத்வம் (இருவரும் ஒருவரே) என்று
எண்ணும்படிக் கூடின காலத்தில் தனக்குத் துணையாக இருந்து அனுபவிக்க
மேலும் பலரைத் தேடிய ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
ஆனது அனுபவித்தற்காம் துணையா – வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே!  ஆடு–13-

ஆழ்வார் அனுகூலர்களுடன் கூடி இருந்து, எந்தக் குறையும் இல்லாமல் தன்னுடன் வந்து கூடிய
ஸர்வேஸ்வரனுடன் ஏற்பட்ட கூடலின் இனிமையை அனுபவிக்க,
பரமபதத்தில் இருக்கும் அடியார் குழாங்களுடன் கூட ஆசைப்பட்டார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் அடியார்களுடன் வாழ ஆசைப்படு.

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –-2-3-4-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –-2-3-5-

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

————————

பதினான்காம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் மற்றும் அவன் அடியார்களைப் பிரிந்து வாடும்
ஒரு பெண்ணின் தாய் பாவனையில் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறை அதனால் – வாடி மிக
அன்புற்றார் தன் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ!–14-

ஆழ்வார் பரம பதத்தில் இருக்கும் அடியார்களுடன் கூடி அனுபவிக்கவும்
அவர்களுடன் ஆடி மகிழவும் முடியாமல் மிகவும் வருந்தினார்;
அவர் மனம் கலங்கி அவர் அருகில் இருக்கும் அவர் மீது மிகவும் அன்பு கொண்ட
மதுரகவி ஆழ்வார் போன்றோர்களால் ஆராயப் பட்டு, பேசப் பட்டார்;
அந்தோ!

ஆடி யாடி யகம் கரைந்து இசை
பாடிப் பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடி வாடும் இவ்வாணுதலே –2-4-1-

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

——————

பதினைந்தாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுடன் (திவ்ய ஆயுத மற்றும் ஆபரண வடிவில் இருக்கும் நித்யஸூரிகள்) வந்து,
திருவாய்மொழி 2.4 “ஆடி ஆடி” பதிகத்தில் காட்டப்பட்ட வருத்தத்தைப் போக்கியதைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அந்தாமத் தன்பால் அடியார்களோடு இறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால் – சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்த அன்பை நாள் தோறும் வை–15-

ஸர்வேஸ்வரன் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இருக்கும் ஆசையை ஆழ்வாரிடம் கொண்டு,
திவ்ய ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் வடிவில் இருக்கும் நித்யஸூரிகளுடன் வந்து,
உதார குணத்துடன் ஆழ்வாருடன் நன்றாகக் கலந்து ஆழ்வாரின் வருத்தத்தைப் போக்கினான்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் பொருத்தமான அன்பை எப்பொழுதும் வை.

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

———————————–

பதினாறாம் பாசுரம்.
மாமுனிகள், ஈஸ்வரன் நம்மை “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்” என்று அனுபவிக்கும் ஆழ்வார்
தான் மிகத் தாழ்ந்தவர் என்று எண்ணி நம்மை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வது என்று
தேவையில்லாமல் ஸந்தேஹப்பட, அந்த ஸந்தேஹத்தைப் போக்கும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத்தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–16-

நித்ய விபூதிக்குத் தலைவனான ஸர்வேஸ்வரன் ஆழ்வாருடன் வந்து கலக்க
ஆழ்வார் தம்மை தரித்துக் கொண்டார்.
ஆனால் அதன் பிறகு தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கத் தொடங்கினார்;
அதைக் கண்டு வருந்தி மிகவும் உடைந்து போன எம்பெருமானைக் கண்ட ஆழ்வார்,
எம்பெருமானிடம் “நாம் உன்னைப் பிரிய மாட்டோம்” என்று சொல்ல, எம்பெருமான் தேறினான்.

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –-2-6-3-

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

கண்ணித்  தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

————————–

பதினேழாம் பாசுரம்.
மாமுனிகள், தன்னுடன் இருக்கும் உறவால், தன்னுடைய முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள்
பகவானுக்கு அடியவர்கள் ஆனதை ஆனந்தமாகப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த – வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு
ஆறென்று நெஞ்சே!  அணை–17-

ஆழ்வார் “நம்மைச் சேர்ந்தவர்கள், தங்களுடன் தொடர்புள்ள முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுடன்
ஒளியைப் பெற்றனர்” என்று தெளிவாக அருளிச் செய்தார்;
இவ்வாழ்வாருடைய பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது;
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே எல்லா ஆத்மாக்களுக்கும்
மோக்ஷத்துக்கு உபாயமாகக் கொண்டு, அத் திருவடிகளில் சரணடைவாயாக.

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

————————-

பதினெட்டாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானின் மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை உபதேசிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட – இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலர் அடியே
வீசு புகழ் எம்மா வீடு–18-

எம்பெருமான் தன்னைச் சரணடையும் நித்ய ஸம்ஸாரிகளை
நித்ய ஸூரிகளுடன் சேர்க்கக்கூடிய மோக்ஷத்தைக் கொடுக்கிறான்;
எம்பெருமானின் இத் தன்மையை ஆழ்வார் குற்றமற்ற உபதேசமாக அருளிச் செய்து
இந்த ஸம்ஸாரிகளும் கண்ணனின் அருளைப் பெறும்படி செய்தார்;
இப்படி எங்கும் பரவிய பெருமை வாய்ந்த ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே சிறந்த மோக்ஷ ஸ்தானம்.

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன்  பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –-2-8-2-

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

———————————

பத்தொன்பதாம் பாசுரம்.
மாமுனிகள், அடைய வேண்டிய குறிக்கோளை நிர்ணயிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எம்மா வீடும் வேண்டா என்தனக்கு உன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்துரைத்த – நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாள் இணை சூடிக்
கீழ்மையற்று நெஞ்சே!  கிளர்–19-

ஆழ்வார் எம்பெருமானிடம் “எம்பெருமானே! தேவரீரின் திருவடிகளே எனக்குப் போதும்” என்றார்.
இப்படிச் சொன்ன ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே நம்முடைய ஸத்தைக்குக் காரணம்.
தாழ்ந்த விஷயங்களை விட்டு இவ்வாழ்வாரின் திருவடிகளை உங்கள் தலையில் வைத்துக் கொண்டால்,
நீங்கள் உயர்ந்த கதியை அடையலாம்.

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

————————

இருபதாம் பாசுரம்.
மாமுனிகள், “திருமாலிருஞ்சோலை என்னும் திருமலையைப் புகலாகக் கொள்வதே பேற்றுக்கு வழி” என்று உபதேசிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே,
மாமுனிகள் ஆழ்வார் திருமாலிருஞ்சோலை மலையையே சிறந்த குறிக்கோளாக
அனுபவிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளி மால் சோலை மலைக்கே  – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி-20-

முன்பு அருளிச் செய்த, மிகவும் ஒளி விடும் புருஷார்த்தத்தை அடைய,
ஆழ்வார் எம்பெருமானின் இருப்பிடமான, வளர்ந்து வரும் ஒளிபடைத்த திருமாலிருஞ்சோலையை,
தளராமல், மனதை வைத்து அடையுங்கோள் என்று அருளிச் செய்தார்;
இத்தனை பெருமை பெற்ற ஆழ்வாரின் திருவடிகளில், நம் தலையை வைப்போம்.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன் மலை யடைவது அது கருமமே –2-10-3-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

——————

இருபத்தொன்றாம் பாசுரம்.
மாமுனிகள், திருமாலிருஞ்சோலை என்கிற திருமலையில் எழுந்தருளியிருக்கும்
அழகர் எம்பெருமானின் வடிவழகை நன்கு அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—21-

முன்பு, ஆழ்வார் திடமாக இருந்து சிகரங்களை உடைய திருமலையை அனுபவித்து,
அங்கே எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் திருமேனியை,
அந்தத் திருமேனியில் அணிந்திருக்கும் திருவபிஷேகம் (கிரீடம்), சதங்கை மற்றும்
ஏனைய ஆபரணங்களுடன் சேர்ந்து அனுபவித்தார்.

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

——————

இருபத்திரண்டாம் பாசுரம்.
மாமுனிகள், “என்னுடைய கரணங்களின் குறையால் எம்பெருமானின் குணங்களை
அனுபவிக்க முடியவில்லை” என்று கலங்க
அதை எம்பெருமான் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்னவளவென்ன எனக்கரிதாய்த் – தென்ன
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து–22-

முன்பு, ஆழ்வார் அழகர் எம்பெருமானின் வடிவழகில் மூழ்கினார்;
கரணங்களின் குறையால் ஏற்பட்ட அஜ்ஞானத்தால் “எனக்கும் கூட, எம்பெருமானின் அழகை
இவ்வளவு என்று அளவுபடுத்தி அனுபவிக்க முடியவில்லையே!” என்ற
ஆழ்வாரை ஸமாதானப் படுத்தி, எம்பெருமான் ஆழ்வாரின் கலக்கத்தைப் போக்கினான்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

————————–

இருபத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், கைங்கர்யம் செய்வதில் தனக்கு இருக்கும் ஆசையை வெளியிடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட் செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே!  புகழ்–23–

நெஞ்சே! உயர்ந்த சிகரங்களையுடைய திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடன்
பிரியாமல் இருந்து எல்லாக் காலங்களிலும் குற்றமில்லாத கைங்கர்யங்களைச் செய்ய ஆசைப்பட்டு
அதனால் பேரின்பத்தை அடைந்த ஆழ்வாரின் அழகிய திருவடிகளைக் கொண்டாடு.

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

———————-

இருபத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் ப்ரார்த்தனைக்கு இணங்க எல்லாப் பொருட்களுக்கும்
அந்தர்யாமியாக இருப்பதைக் காண்பிக்க, அதைக் கண்டு அனுபவித்து,
வாசிக கைங்கர்யம் செய்யும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

புகழொன்று மால் எப்பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க – மகிழ்மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான் மொய்ம்பால்–24-

தகுந்த பெருமைகளை உடைய ஸர்வேஸ்வரன்,
தான் எல்லா பொருட்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் நேர்மை என்ற குணத்தை வெளிப்படுத்தினான்.
இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எல்லா இடங்களிலும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்ட
வகுளாபரணரான ஆழ்வார், மயர்வற மதிநலம் அருளப் பட்டதால் வந்த பெருமையுடன்,
வாசிக கைங்கர்யத்தைச் செய்தார்.-

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

கூடிவண்டு அறையும் தண் தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண் சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

—————–

இருபத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களைக் கொண்டாடியும்,
அப்படிச் செய்யாதவர்களை நிந்தித்தும் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மொய்ம்பாரும் மாலுக்கு முன் அடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் – அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்தி நெஞ்சே!  
செய்–25-

நெஞ்சே! மிகவும் சக்தி பொருந்திய ஸர்வேஸ்வரனுக்கு அடிமை செய்த ஆனந்தத்தால்,
அவனிடத்தில் பக்தியுடன் தொண்டு செய்பவர்களைக் கொண்டாடியும்
அது செய்யாத மூடர்களை நிந்தித்தும் பேசிய ஆழ்வாரிடம் உயர்ந்த பக்தியைக் கொள்.

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

———————

இருபத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், அர்ச்சாவதாரம் வரை வந்துள்ள எம்பெருமானின் ஸௌலப்யம் (எளிமை)
என்ற குணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று–36-

சேதனர்களுடன் கூடி நன்றாக ஆராயப்படும் தமிழ் வேதத்தையே அடையாளமாகக் கொண்ட ஆழ்வார்
“இவ்வுலகில் எம்பெருமானிடத்திலே சரணடைபவர்களுக்கு,
உயர்த்தி பொருந்திய பரத்வம்,
சிறந்த வ்யூஹம், தூய்மையான அவதாரங்கள்
ஆகியவற்றைக் காட்டிலும் எம்பெருமானின் அர்ச்சாவதாரமே
அடைவதற்கு எளிது” என்று அருளிச் செய்தார்.

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

—————-

இருபத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் அடியார்களே விரும்பத்தகுந்த குறிக்கோள் என்று
பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா–27-

ஆழ்வார் ஸ்ரீய:பதியான எம்பெருமானின் திருவடிகளில் மனதை வைத்துத் தொண்டு
செய்யும் அடியவர்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டார்.
இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யாதவர்களுக்கு
இவ் வுலகில் பிறவி முடியாமல் தொடரும்.

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
பயிலவினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே –3-7-1-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
தோளுமோர் நான்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறும் எம்மை யாளுடை நாதரே –3-7-2-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்போதனை
பொன்னெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறும் என்னை யாளுடையார்களே –3-7-3-

உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்
புடையார் பொன்னூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையாவுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே –3-7-4-

பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வறுமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே –3-7-5-

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
துளிக்கும் நறும் கணனித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே –3-7-6-

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனை தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடியார்ந்த வாயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே –3-7-11-

—————

இருப்பத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், தானும் தன்னுடைய கரணங்களும் (எம்பெருமானை அனுபவிப்பதில்) மிகவும் ஆசையுடன்
இருந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

முடியாத ஆசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டு அவன் பால் படியா – ஒன்றொன்றின்
செயல் விரும்ப உள்ளதெல்லாம் தாம் விரும்பத்
துன்னியதே மாறன் தன் சொல்–28-

ஆழ்வாரின் எல்லை இல்லாத அன்பு மேலும் பெருக,
அவரின் எல்லாக் கரணங்களும் அடியார்களை விட்டு ஸர்வேஸ்வரனை அடைந்தன;
ஒவ்வொரு கரணமும் தன் அனுபவத்துக்கு மேல், மற்ற கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட,
ஆழ்வார் எல்லாக் கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட்டார்;
இவ்வாறு, ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் நன்கு செறிந்தன.

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான்  –3-8-11-

—————–

இருபத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், அடியார் அல்லாதவர்களுக்குத் தொண்டு செய்வது தாழ்ந்தது என்றும்
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது பொருத்தமானது என்றும் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சொன்னாவில் வாழ் புலவீர்! சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்–29-

நாக்கில் கவி பாடும் திறன் பெற்ற புலவர்களே!
உணவு மற்றும் உடைக்காக, குறைந்த ஆயுளை உடைய மனிதர்களை உங்கள் கவிதைகளால் கொண்டாடுவதால் என்ன பயன்?
எல்லோருக்கும் ஸ்ரீ ய:பதியைக் கொண்டாடும்படி உபதேசித்த திருக் குருகூரின் தலைவரான
ஆழ்வாரின் அருளால், அவர்கள் பிறவி நீங்கும்.

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

——————–

முப்பதாம் பாசுரம்.
மா முனிகள், “எம்பெருமானுக்காகவே என்னுடைய கரணங்கள் இருப்பதால்
எனக்கு ஒரு குறையுமில்லை” என்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சன்மம் பல செய்து தான் இவ்வுலகளிக்கும்
நன்மை உடை மால் குணத்தை நாள் தோறும் – இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை உலகீர்!
நாத்தழும்ப ஏத்தும் ஒரு நாள்–30-

ஆழ்வார் “இவ்வுலகத்தில் வாழ்பவர்களே!
பல அவதாரங்களைச் செய்து, இந்த உலகங்களைக் காக்கும் நன்மை உடைய ஸர்வேஸ்வரனின்
கல்யாண குணங்களை எப்பொழுதும் கொண்டாடும் பேரானந்தத்தை
இப்பிறவியில் பெற்றேன்” என்று அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை ஒரு நாளாவது பாடி, உங்கள் நாக்கில் தழும் பேறும்படிச் செய்யுங்கள்.

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-10-4-

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

————————–

முப்பத்தொன்றாம் பாசுரம்.
மாமுனிகள், ஐஸ்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி
மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் – திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்
பன்னி இவை மாறன் உரைப்பால்–31

ஆழ்வார்
1) உலகத்துக்கு ஏக சக்ரவர்த்தியாய் இருந்து பெறும் இன்பம் நிரந்தரமன்று
2) பரந்த ஸ்வர்கத்தில் தேவர்கள் அனுபவிக்கும் இன்பமும் நிரந்தரமன்று
3) நித்யமாக ஆத்மா தன்னையே அனுபவிப்பதும் தீது மற்றும்
4) எம்பெருமானுக்கு அடிமை செய்வது மிகவும் இனியது
ஆகியவைகளை ஆராய்ந்து அருளிச் செய்தார்-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.–4-1-7-

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

————————-

முப்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட பல அவதாரங்களை
அந்தந்த இடம் மற்றும் காலத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அ யொட்டி அருளிச் செய்கிறார்.

பாலரைப் போல் சீழ்கி பரன் அளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த – சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ–32-

ஆழ்வார்திருநகரியில் அவதரித்த தலைவரான ஆழ்வார்,
எம்பெருமானிடத்தில் இருந்த அன்பால் அவனுடைய முற்காலத்து அவதாரங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு,
அவை வேறு காலம் மற்றும் தேசத்தில் ஏற்பட்டதால்,
அது கிடைக்காமையால் குழந்தையைப் போலே சிணுங்கினார்;
மேலும் அவனுக்குக் கைங்கர்யம் செய்ய மிகவும் ஆசைப்பட்டு (அது கிடைக்காமையால்),
மிகவும் வருத்தமுற்றார்.

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே.–4-2-11-

——————

முப்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் எப்படி காலத்தால் இருந்த தடையை நீக்கி
அனுபவத்தைக் கொடுத்தான் என்பதைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கோவான ஈசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை – மேவிக்
கழித்தடையக் காட்டி கலந்த குண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்தது இந்த மண்–33–

எல்லோருக்கும் தலைவனான எம்பெருமான் ஆழ்வாருடன் கூடி,
காலம் கடந்திருந்தாலும், காலத்தால் வந்த தடையைப் போக்கி,
தன்னுடைய பூர்வ சரித்ரங்களை ஆழ்வார் ஆசைப் பட்டபடி காட்டிக் கொடுத்து
ஆழ்வாரின் துன்பத்தைப் போக்கினான்;
இவ்வாறு ஆழ்வார் எம்பெருமான் தன்னுடன் கூடிய அந்த குணத்தைக் கொண்டாட,
இவ் வுலகம் நிலை பெற்றது.

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-

கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

—————————

முப்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானைப் போன்று இருக்கும், மற்றும் எம்பெருமானுடன் தொடர்புடைய பொருட்களைப் பார்த்து,
அவை எம்பெருமான் என்று ப்ரமித்து, அவைகளை எம்பெருமானாகப் பாடிப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமையாய்க் காதல் பித்தேறி – எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை அவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34–

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் ஆழ்வாருடன் கலந்து பின்பு பிரிந்தான்;
அதனால் ஆழ்வார் ஒரு பெண் தன்மையை அடைந்து, அவனிடத்தில் இருந்த பக்தியால், மிகவும் கலங்கி,
அவன் விஷயமான பேரன்பால், அவனைப் போன்ற பொருட்களை அவனாகவே நிர்ணயித்துப் பாடினார்.

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய் மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

———————–

முப்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், திவ்ய ஸ்தானமான பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பைக் கண்டு
அடைந்த பேரின்பத்தைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளி செய்கிறார்.

வீற்றிருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமை ஆனதெல்லாம் – தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து–35-

பரம பதத்தில் வீற்றிருந்தருளும் எம்பெருமான்,
இங்கே வந்து, தன்னுடைய சிறந்த குணங்கள், திருமேனிகள் ஆகியவற்றைக் காட்டி
ஆழ்வாரின் கலக்கத்தை நீக்கி, ஆழ்வாருடன் நன்றாகக் கலந்தான்;
இப்படி ஸர்வேஸ்வரனைக் கண்ட ஆழ்வார், அவனை வணங்கி ஆனந்தத்தை அடைந்து,
தன்னுடைய துன்பங்கள் நீங்கப் பெற்றதால், தன்னுடைய பெருமையைத் தானே அறிவித்தார்.

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11-

——————-

முப்பத்தாறாம் பாசுரம்.
ஆழ்வாரிடத்தில் மிகுந்த காதல் கொண்ட எம்பெருமானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமையால் ஆழ்வார் மோஹித்தார்;
ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண முற்பட,
நல்ல ஞானம் உள்ள ஆழ்வாரின் நலம் விரும்பிகள் ஆழ்வாருக்குச் சேராத விஷயங்களையும்,
இந்நிலைக்குக் காரணத்தையும் தீர்வையும் விளக்கிப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி மா முனிகள் அருளிச் செய்கிறார்.

தீர்ப்பாரிலாத மயல் தீரக் கலந்த மால்
ஓர்ப்பாதும் இன்றி உடன் பிரிய – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்–36-

ஆழ்வாரின் தீர்க்க முடியாத பேரன்பைத் தீர்க்க ஸர்வேஸ்வரன் ஆழ்வாருடன் கலந்து,
ஆராயாமல் ஆழ்வாரை விட்டுப் பிரிந்தான்;
இதைக் கண்ட உறவினர்கள், முன்பைவிட மிகவும் வருந்தி அறிவிழந்தார்கள்;
எம்பெருமானுடைய திரு நாமங்களைக் கேட்டு தன்னுடைய உணர்வை மீண்டும் பெற்றார்;
இதுவே ஆழ்வாரின் தன்மை.

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11-

———————-

முப்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் திருநாமத்தைக் கேட்டுத் தன் உணர்வை மீண்டும் பெற்ற ஆழ்வார்,
அந்தத் திருநாமத்துக்கு உடையவனான எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் வாடிப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சீல மிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு – சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு–37-

ஆழ்வார் திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்,
கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனின் திருநாமங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்;
உணர்ந்த பின் மிகவும் வருந்தி, கண்ணனின் திருமேனியைக் காண ஆசைப்பட்டு,
அனுபவிப்பதற்காக அழைக்கிறார்.

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காணவந்து ஈயாயே.–4-7-2-

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

—————–

முப்பத் தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் தனக்கு உதவாததால், அவனுக்காக இல்லாத
ஆத்மாவிலும்
ஆத்மாவின் உடைமைகளிலும்
தனக்கு இருக்கும் விரக்தியைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என் உடைமை மிக்க உயிர் – தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா எனும் மாறன் தாளை நெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு –38-

ஆழ்வார் “என்னுடைய ஆபரணங்கள் முதலியவையும் அவற்றைவிடச் சிறந்ததான ஆத்மாவும்,
பிராட்டி ஏறி வீற்றிருக்கும் திருமார்பை உடைய ஸர்வேஸ்வரன் திருவுள்ளத்துக்கு ஏற்புடையதில்லை என்றால்,
ஆராய்ந்து பார்த்தால், எனக்கும் அவை வேண்டாம்” என்று வெறுப்புடன் அருளிச்செய்தார்.
நெஞ்சே! இப்படிப் பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த குறிக்கோளாகக் கொள்.

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-

மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-

———————

முப்பத் தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், ஸம்ஸாரிகளின் அநர்த்தத்தைக் கண்டு வெறுத்துப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று–39-

இவ் வுலகில் தங்கள் பாபங்களினாலே எல்லை யில்லாத துன்பங்களை அனுபவிக்கும்
ஆத்மாக்களின் தாழ்ச்சியையும்
அவர்கள் எம்பெருமானிடத்தில் சரணடையாமல் இருப்பதையும் கண்ட ஆழ்வார்,
ஆறியிருக்க முடியாமல், கண்ணீருடன் இருந்தார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரின் கருணையே நமக்குத் தகுந்த துணை.

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

——————–

நாற்பதாம் பாசுரம்.
மா முனிகள், ஸம்ஸாரிகளும் சரணாகதி செய்வதற்கு ஸௌகரியமாகப்
பரத்வத்துடன் இருக்கும் அர்சாவதாரத்தைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி அருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை–40-

எல்லோரும் புரிந்து கொள்ளும்படி,
“இவ்வுலகங்களைப் படைத்த ஸர்வேஸ்வரனைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று
நன்றாக நிர்ணயித்து அருளிய வகுளாபரணரின்
திருவடிகளுக்கு அஞ்ஜலி செய்வதையே என் கைகள் விரும்பும்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

—————————–

நாற்பத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு
ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து–41-

ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாத போதும்
நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன்
எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச் செய்தார்.

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

———————-

நாற்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், தன்னுடைய ஒன்றும் தேவும் (திருவாய்மொழி 4.10) பதிகத்தைக் கேட்டுத்
திருந்தியவர்களுக்கு மங்களாசாஸனமாகவும்
திருந்தாதவர்களைத் திருத்தும் உபதேசமாகவும் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பொலிக பொலிக என்று பூமகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மன மாசு–42-

அடியார்களின் மிகப் பெரிய கோஷ்டியைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார்
“பொலிக! பொலிக!” என்றார்.
இவ்வுலகில் திருந்தாதவர்களைத் திருத்தினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை மருந்தாகக் கொண்டால்,
மனதில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

—————

நாற்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், முன்பு பேசிய எம்பெருமானின் வடிவழகை நேரில் அனுபவிக்க முடியாததால்
மடல் எடுக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

குற்றமற்ற ஒளியை உடைய எம்பெருமானிடம் தனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பினால்,
எம்பெருமான் தன்னுடன் வந்து கலக்காததால், தனக்கு ஏற்படும் பழியையும்
ஊராரின் நிந்தனைக்கு அஞ்சும் நிலையையும் கடந்து,
தான் அவதரித்த ஊரில் மக்கள் நடுங்கும்படி இவ் வுலகில் மடல் எடுக்க முற்பட்டார் ஆழ்வார்.

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என் செய்யுமே?–5-3-1-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

——————–

நாற்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானைப் பிரிந்து இரவின் நீட்சியால் மிகவும் வருந்தும்
நாயகியின் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாதபடி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ?–44-

ஐயோ! இருண்ட இரவும் அதன் துணைவர்களும் சேர்ந்து ஆழ்வாரை விடாமல் நலிந்து
அவர் மடல் எடுக்க முற்படுவதைத் தடுப்பதையும்,
அவர் திருவுள்ளத்தை அடைந்த துன்பத்தையும் எவ்வாறு பேசுவது?

ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6-

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

——————–

நாற்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், உருவெளிப் பாட்டைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எங்ஙனே நீர் முனிவது என்னை இனிநம்பி அழகு
இங்ஙனே தோன்றுகின்றது என் முன்னே – அங்ஙன்
உருவெளிப்பாடா உரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்–45-

தமிழ் வேதமான ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார்,
உருவெளிப்பாடு (மனக்கண்ணால் பார்த்து அனுபவிப்பது) என்னும் கவிதை முறையில்
“என்னிடத்தில் நீங்கள் எல்லோரும் கோபம் கொள்ளலாமா?
திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகு என் கண் முன்னே தோன்றுகின்றது” என்று அருளினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை த்யானிப்பவர்களுக்கு ஆழ்வாரே ஒரு ஆனந்தக் கடலாக இருப்பார்.

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

கை யுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

—————

நாற்பத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், அனுகாரத்தின் மூலம் தன்னை தரித்துக் கொண்டு பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்–46-

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எம்பெருமானை நேரில், தன் கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் வருந்தி,
எம்பெருமானை அனுகரித்து (அவனைப் போலே இருந்து),
திட விச்வாஸத்துடன் அவனைப் பற்றிப் பேசினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளின் பெருமைகளை அறிந்து, அதை அனுஸந்திப்பவர்கள்,
ஆழ்வாருக்குத் தொண்டு செய்யும் தபஸ்ஸைச் செய்தவர்கள் ஆவர்.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.–5-6-3-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4-

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

————-

நாற்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், வானமாமலை எம்பெருமானை அன்புடன் வணங்கியும்
அவன் திருவடிகளில் சரணாகதி செய்தும் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நோற்ற நோன்பாதி இலேன் உன்தனை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே – சாற்றுகின்றேன்
இங்கென் நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது–47-

அழகை அடைந்த ஆழ்வார், உபாய விஷயமாக
“எனக்கு மோக்ஷத்துக்கு வழியான கர்ம யோகம் முதலிய உபாயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை;
உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியவில்லை;
என்னுடைய பேற்றுக்கு உன்னுடைய பெரிய கருணையே உபாயம்” என்று அருளிச்செய்தார்.
கருணை மிகுந்த இப் பாசுரங்களை அனுஸந்திக்க வல்லவர்கள்
ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளுக்கு ஆராவமுதமாக இருப்பர்.

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

—————

நாற்பத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், தன்னுடைய கைம் முதல் இல்லாத் தன்மையை அறிவித்து
ஆராவமுதன் எம்பெருமானைச் சரணடைந்தும்,
எம்பெருமான் “இவர் நம் ஆழ்வார்” என்று தன் ஆசையை நிறைவேற்றாததால்,
கலங்கி வருத்தத்துடன் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக  – தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான்–48–

ஆழ்வாரின் எதிர்பார்ப்பை ஆராவமுதன் கருணையுடன் நிறைவேற்றாததால்
ஆழ்வார் நிறைவேற்ற முடியாத மிகவும் அதிகமான ஆசையை அடைந்து வருத்தமுற்றார்.
இப்படிக் கலங்கிய தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரே நம்முடைய குற்றமற்ற ஸ்வாமி.

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-

————-

நாற்பத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், திருவல்லவாழுக்குச் சென்று அதைச் சூழ்ந்திருக்கும்
புறச்சோலைகளின் அனுபவத்தால் வருந்திப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாநலத்தால் மாறன் திருவல்லவாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ்வூர் தன் அருகில் – மேல் நலங்கித்
துன்பம் உற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற–49-

மிகவும் அன்புடன் ஆழ்வார் திருவல்லவாழ் திவ்யதேசத்தை நோக்கிச் சென்றார்;
ஆனால் அதை அடைய முடியாமல், அதைச் சூழ்ந்திருக்கும் சோலைகளில், தளர்ந்து கீழே விழுந்தார்;
மேலும் கலங்கி, வருந்தி இப்பாசுரங்களை அருளிச்செய்தார்.
இப்பாசுரங்களைக் கற்பவர்களுக்கு, அவற்றைக் கற்ற பின், எம்பெருமானின் திருவடிகளுக்கு
வெளிப்பட்ட பிறவிகள் கிடையாது.

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-

———–

ஐம்பதாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானிடத்தில்
“உன்னுடைய அவதாரங்களில் செய்த லீலைகளை அனுபவித்து நான் தரித்திருக்கும்படி
அனுமதிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணாஉன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் – திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு–59-

ஸ்ரீ நம்மாழ்வார், இவ்வுலகில் அவதரித்து எல்லோரையும் ரக்ஷிக்கும், மிகவும் கருணை பொருந்திய
கண்ணன் எம்பெருமானிடத்தில் “கண்ணா! என் ஹ்ருதயத்தின் உருக்கத்தை நிறுத்தி,
உன்னை அடைந்து, உன்னுடைய குணங்களை நினைத்து அனுபவிக்கும்படி
அருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் வாழ்வாயாக.

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6-

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8-

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் பிரபந்தம் -ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் அருளிச் செய்தது –

March 17, 2023

காராரும் பொழில் வஞ்சி கா வலவன் கதிர் மௌலிக்
கூராரும் சுடர் வேல் கைக் குல சேகரின் திறமும்
ஏராரும் பாகவதர் இன்னருளால் சிறுத்தை இயம்பி
சீராரும் திருப்பாண் ஆழ்வார் திறமும் செப்புவோம் –1-

மாணார்ந்த திறல் அரங்கர் மணி வண்ணனைக் கண்ட கண்கள்
காணா மற்று ஒன்றினையும் எனக் கரந்து கட்டுரைத்த
பாணாழ்வார் அனுபவத்தைப் பாட எனப் பக்தர்கள் முன்
நாணாதே ஒருப்பட்டேன் இதன் வேறு நகை யுளதோ –2-அவை அடக்கம்

மனு மகனுக்கு அயன் கொடுத்த மரகத மா மணிக்குன்றம்
எனும் அரங்கத்து அம்மானை இதயமலர் அணைக்கிடத்தி
அனுபவிக்கும் திறம் உணரில் திருமகளும் அஞ்சும் அடியேன்
பனுவலுக்கோ வெளியாவர் பாணாழ்வார் அல்லரோ –3

மனு மகன் -இஷ்வாஹு –
இவர் பெருமையைச் சொல்ல திருமகளும் அஞ்சும் படி இருக்க அடியேன் பாட்டுக்கு உட்படுவாரோ மாட்டாரோ

என்றால் பொய்யடியேனுக்கு எளிதோ மற்றவன் கீர்த்தி
நின்று ஆங்கே அது நிற்க நாயினேன் புன் சொலினும்
ஒன்றாம் அது என் எனில் உரை தோறும் திருப்பாணன்
குன்றாத திரு நாமம் வரலான் மெய் குறித்தோரே-4

திருநாமம் சொல்வதால் பெற்ற வலிமையாலே சொல்லுவேன்

திருப்பாணார் திரு அவதாரம்

ஆங்கு அவையே துணையாக அறைவேன் மெய் விண் நின்று
பூம் கமலக் கண் எம்மான் திருவருளால் புவியின் மறை
ஓங்கு திரு உறையூரில் திருக்குலத்தார் உறு தவத்தின்
பங்கு அதனால் கார்த்திகை மாதத்தில் வளர் பக்கத்தில் –5-

செய்ய நெறி உரோகிணியில் தேவர்களும் திரு மறையும்
வையக மா முனிவர்களும் மா தவரும் மகிழ்ந்து ஏத்தப்
பையத் தரவணைக் கிடந்தான் பத்தர் குழாம் பரிந்து ஓங்க
ஐயன் என ஆள வந்த திருப்பாணான் அவதரித்தான் –6-

இளமையிலேயே பாண் பெருமாள் சிறப்பு

ஈன்றாரும் அறியாதே இலை மறை காய் என மண்ணில்
தோன்றாதே வளர்ந்து அருளிச் சுருதி தொழ உலகு உய்ய
மூன்றாறு திரு வயதில் கைசிக நாரத முனிவர்
போன்றாரும் இவர்க்கு ஒவ்வார் எனும் இசையில் பொதுவின்றி –7-

சூழ் விசும்பு மதில் அமரர் தொல் உலகும் அம் புவியும்
ஆழ் கடலும் எண் கிரியும் அயன் அரனும் அசுரர்களும்
வாழும் உயிர்ச் சராசரமும் நீராள மயமாக
ஏழிசையும் பாண் பெருமாள் நம் பெருமாள் இடத்து இசைத்தார் –8-

பாணரது இசைத் தொண்டினை பலரும் போற்றுதல்

தென்னாற்றங்கரை நின்று திருப்பாணார் இவை பயில
அந்நாட்டார் திருக்குலத்தில் அவதரித்தார் இவர் யாரோ
பொன்னாட்டில் உள்ளவரோ எனப் புகலப் புண்ணியரும்
பன்னாளும் திருவரங்கத்து அம்மானைப் பணிந்து ஏத்தி –9–

அப்படியே பல காலம் அந்தரங்க சேவை பண்ணி
ஒப்பிலார் சங்கீதம் பயின்றிடு நாள் உயர்வானும்
இப்படியும் அளந்த பிரான் திரு மார்பில் இந்து அமரும்
செப்பென்னும் கன தனத்தாள் திரு மங்கை மனம் மகிழ்ந்தே –10-

பிராட்டி ஏவ அரங்கன் திருப்பாணரை அழைத்து வரச் சொல்லி வாயில் காப்போரை நியமித்தல்

திருவரங்க நகர் எம்பிரான் வடிவை செப்பும் வானில் உறை தேவரும்
மருவரும் பொருவில் வீடதாதி உலகு ஏழினும் இசை வழுத்துவோர்
ஒருவர் இங்கு அவரை ஒத்துளார்கள் பிறர் உண்டு கொல் உரை செயும் பவிப்
பெருகு காதலர் புறம்பு நிற்றல் பழுது என்று செங்கமலை பேசலும்

அண்டர் அண்டமுள் அடங்க உண்டு துயில் கொண்ட மால் அணி அரங்கனார்
புண்டரீக மலர் மங்கை கட்டுரை செய் போதில் அங்கு அவளின் நைந்து நம்
தொண்டரைக் கொணர்மின் என்று செம்பவள வாய் திறந்து இறைவர் சொல்ல அக்
கொண்டல் கோயில் திரு வாசல் காவலவர் ஏகினார் குழுவோடு ஏகியே –12-

வீதி பற்பல கடந்து சென்றவர்கள் திரு முகத்துறையை மேவி நின்று
ஆதி நாதன் அருள் அச்சு தன்னணி அரங்கன் இன்று உனை அழைத்தனன்
போதி எங்களோடும் என்று செப்பியவர் பொற் பாதங்களில் இறைஞ்சலும்
சாதியில் கடையன் என்று பாணர் அது தக்கது அன்று என வணங்கினார்

வர மறுத்த பாணரை அரங்கன் தொண்டர் குலமே தொழு குலாம் என்று சொல்லி அழைத்து வரச் சொல்லுதல்

வணங்கி நின்றவர் உரைப்ப மற்றவர்கள் மாசிலா நெறி அரண்கள் முக்
குணங்கள் தந்தவர் முன் எய்தி இம்மொழிகள் கூறுவோம் என வம் ஏகி நல்
பணங்கள் ஆயிரம் இலங்கு அநந்தன் மிசை மன்னா ஓ இனிய பத்தனார்
இணங்கு கின்றிலர் குணங்கள் எண்ணி இவண் எய்துவான் என இறைஞ்சினார் –14-

அந்த உரை சிந்தை புக ஆதி யவரோடு
முந்தை மறை நீதி குல முற்றும் வருவித்த
எந்தம் உறு தொல் குலம் இயம்பில் எமது அன்ப
வந்த குலமே குலம் வரச்சொலும் என்றார் –15–

நன்றிவை உரைத்திடுவம் நாத என நால்வர்
சென்று விரைவில் திருமுகத்துறை செறிந்தே
நின்று இசை வழுத்து நிமலர்க்கு இவை நிகழ்த்த
ஓன்று உளது கேண்மின் என மற்றவர் உரைப்பார் –16-

மின்னல் போன்று ஒளி வீசும் சரீரத்தை யுடைய விஷ்ணுவின்
பின்னை மணாளனை அடைந்து பிறிதற்றுத்
தன்னை யற விட்டு தலைவர்க்கு அது தகும் கொல்
என்னை யவரோடும் இறை எண்ணிடவும் என்றே –17-

செப்பி அடியேன் முடிவில் தீ வினை செய் நீசன்
ஒப்பரிய சோதி வளர் உத்தம தலத்தில்
எப்படி மிதிப்பது இரு கால் கொடு எனை ஆளும்
அப்பனொடு கட்டுரைமின் அன்பர் என ஆழ்வார் –18-

கூற இறை ஏவலோடே சென்றவர்கள் கோவே
மாறிடில் உமைக்கொடு செல்வோம் வலியில் என்றே
ஏறி எதிர் செல்ல அவர் ஓடி அவண் எட்டாது
ஆறு வரு காவிரியின் அக்கரையில் ஆனார் –19-

இத்திறம் அரங்கரோடு இயம்பிடுவம் என்றே
மெய்த்திறம் உணர்ந்த நெறி நால்வர்களும் மீண்டு ஆங்கு
அத்திறமும் ஆயனோடு அறைந்தனர்கள் அம்மான்
எத்திறம் இயற்றில் இவண் எய்தும் என எண்ணி –20-

அரங்கன் லோக சாரங்க முனிவரைக் கூவிப் பாணரைத் தோளில் தூக்கி வரச் சொல்லுதல்

அலகிலா மா மாயை அரங்கன் தனை அர்ச்சனை செய்யும்
உலக சார்ங்க முனியை உவந்து கூவி உத்தம போய்ப்
பலரும் காண நின் தோளில் பாணாழ்வானைப் பரிந்து ஏற்றி
நிலவும் பதியை வளம் செய்து கொணர்க என்றான் நிகர் இல்லான் –21-

மாசிலா முனிவன் மாயன் மலரடி வணங்கி ஏக
ஆசிலா அனைத்துக் கொத்தும் அவனுடன் சென்மின் என்றே
ஈசனும் அருளிச் செய்ய யாவரும் எழுந்து சென்று அத்
தேசினான் நின்று பாடும் திரு முகத்துறையை மன்னி –22-

சுற்றுற வளைந்து கொண்டு தொழுதனர் திருப்பாணாழ்வார்
உற்றவர் தாள்கள் தம்மில் உடன் பணிந்து உருக ஈசற்கு
அற்ற மா முனிவன் ஆழ்வீர் அருளிப்பாடு உமக்கு இன்று என்றான்
நற்றவம் உடைய பத்தர் நான் அது செய்யேன் என்றார் –23-

ஏடவிழ் துளபத்தாரான் எடுத்து உமைக் கொணரச் சொன்னான்
ஓடவும் ஓட்டோம் ஆழ்வீர் என்றனர் உவந்து சென்றார்
மாடு நின்றவரை நோக்கார் மற்றொரு திசையை நோக்கிக்
கூடுமோ நீசன் மாசில் குலத்தொடும் என்று கூற –24-

லோக சாரங்கர் திருப்பாணாழ்வாரைத் தோளில் தூக்கிக் கொண்டு திருவரங்கம் கோயிலினுள் செல்லுதல்

கடுப்பினில் ஆழ்வார் ஓடக் காத்துற வளைந்து நின்றார்
தடுத்தனர் ஓடல தன்னைச் சரண் என வணங்கி மண்ணில்
படுத்தனர் திருப்பாணாழ்வார் பங்கயத்து அயனும் போற்ற
எடுத்துற முனிவன் ஏந்தி இருத்தினான் திருத்தோள் தன்னில் –25-

நண்ணரும் இலங்கை வேந்தை நாளை வா என்ற அந்நாள்
கண்ணனைத் தோள் மேல் கொண்டு களித்த மாருதியை மானப்
பண்ணமர் கவி வலானைத் தாங்கிய பனவன் பெற்ற
உள் நிறை மகிழ்ச்சி ஏழேழ் உலகினில் ஒருவருக்கு உண்டோ –26–

இடி நிகர் முரசம் ஆர்ப்ப இமையவர் முனிவர் சித்தர்
கடி மலர் சிந்தி ஆர்ப்பக் காசினியோர்கள் போற்றிப்
படி மீசை இறைஞ்சி வாழ்த்தப் பக்தர்கள் குழாங்கள் ஆடும்
அடி தொறும் சேறு பாயும் ஆனந்த அருவி நீரால் –27–

அணி அரங்கத்தை முக்கால் அவ்வணம் வலம் செய் தேகப்
பணியணைக் கிடந்த மா மால் பாணர் மெய் விழிகள் நேர் முன்
கணி கணன் பின்னே போன கஞ்ச மா மலர்த்தாள் ஆதி
மணி முடி வரையும் காட்டி மாசிலா மகிழ்ச்சி ஈந்தார் –28–

பாணர் பரவிய பாட்டு

மும்மலமும் அற்ற நீதி முனி வரன் திருத்தோள் மன்னி
எம்மலமும் கடிவார் வீதி ஊடவர் ஏகும் காலை
அமலன் என்னாதி நீதி அணி அரங்கத்துள் எம்மான்
கமல பாதங்கள் வந்து என் கண்ணுள் ஓக்கின்றன என்றும் –29-

நின்ற தாள் போய தாளால் நிலம் விசும்பு அளந்து நீண்ட
வென்றி வேல் அரக்கர் துஞ்ச வெங்கணை துரந்த வேந்தன்
மன்றல் சேர் துளபத் தாரான் வளர் திரு அரையில் கண்டு
சென்றதாம் சிவந்த செம்பொன் ஆடையில் சிந்தை என்றும் –30-

மந்தி பாய் வேங்கட மலையை மன்னியும்
இந்தியம் கடிந்தவர் இதயப் போதிலும்
சிந்தியாது அடி தொழும் திருவரங்கனார்
உந்தி மேல் எனதுயிர் ஒடுங்கிற்று என்னவும் –31-

கலகமார் இலங்கையர் வேந்தன் காட்டிய
அலகிலா ஆற்றலை அறுத்த மாயனார்
உலகெலாம் உண்டு ஒடுக்கு உதர பந்தனம்
நிலவும் என்னுள்ளத்து என நெகிழ்ந்து கூறியும் –32-

தந்தை தாய் சுற்றம் உற்ற தமியனேன் உயிரும் ஆகி
முந்தை நாள் விரும்பிச் செய்து மொய்த்த வல் வினையும் தீர்த்து என்
சிந்தையே கோயில் கொண்டு திரு வரங்கத்துள் மன்னும்
எந்தையார் திரு மார்பு அன்றோ என்னை ஆட் கொண்டது என்றும் –33–

வண்டடர் இதழித் தாரோன் வல் வினை முழுதும் தீர்த்துக்
கொண்டல் வந்து அமரும் சோலைக் குளிர் புனல் அரங்கம் மன்னி
அண்டரண்டங்கள் ஆதி அணைத்துள்ள பொருளும் தண்டாது
உண்டமர் மிடறு கண்டீர் உயக்கொண்டது என்னை என்றும் –34-

கையமர் ஆழி சங்கம் கதிர் மதி இருபால் மன்னும்
மையமர் கிரி யிது என்ன வளர்வதாம் கருணைக் குன்றம்
பையர வணையுள் மன்னும் அரங்கனார் பதுமம் போன்ற
செய்ய வாய் ஐயோ இன்று என் சிந்தனை கவர்ந்தது என்றும் –35-

பரிய வாள் அவுணன் ஆகம் படி மிசை மடி மேல் இட்ட
அரிய வாள் உகிரால் கீண்ட அரி எனது அரங்கத்து அம்மான்
உரிய மா முகத்தில் நீண்டு செவ்வரி ஓடி வாடாப்
பெரிய வான் கண்கள் என்னைப் பேதைமை செய்த என்றும் –36–

பாலனாய் ஞாலம் உண்டு பங்கயச் செல்வி தன்னோடு
ஆல மரத்திலோர் சிற்றிலை அமர் அரங்கத்து அம்மான்
கோல மா மணிகள் ஆரம் குறு நகை முடிவில் சோதி
நீல மா மேனி நெஞ்சை நிறை கொண்டது ஐயோ என்றும் –37–

கொண்டல் போல் உருவத்தானைக் கோவலனாகி நெய் பால்
உண்ட செவ்வாயினானை உளம் புகுந்து உருக்குவானை
அண்டர்கள் பெருமாள் தன்னை அமுதினை அரங்கத்தானைக்
கண்ட என் கண்களால் பின் காண்கிலேன் ஒன்றை என்றும் –38-

அப்படியே திருமொழி ஓர் பத்து உரைத்து அங்கு அணி யரங்கன் திரு முற்றத்தில்
ஒப்பரிய முனி வரனோடு எய்தி அவன் திருத்தோள் நின்று உம்பர் வாழ்த்தச்
செப்பரிய பாண் பெருமாள் நம்பெருமாள் சரணம் எனச் சென்று தாழ்ந்தார்
இப்படியே இறை அருளின் செயல் இருக்கும் என்று ஒருவருக்கு இயம்பலாமே –39-

ஆழ்வார் திருவரங்கன் திருவடியில் அடங்குதல்

சரணம் எனத் திருவடிக்கீழ் சென்று இறைஞ்சும் பாண் பெருமாள் தன்னை நோக்கிக்
கரண ஒழுங்குறும் வஞ்சப் பொய்யன்புக்கு எட்டாத கமல செவ்வாய்ப்
பூரணன் எழுந்து இணை யடியை மெய்யன்பர் சென்னி மிசைப் பொருத்தப் பூட்ட
அரண் இதுவே புகலிடம் என்று அக்கமலத் திருவடியில் அடங்கினாரால் –40-

இன்ப வீடு அடைவார் தூலமாம் உடல் விட்டு எழில் திகழ் சூச்சுமம் கழற்றித்
துன்பவா தனையும் விரசையில் போக்கிச் செறிவர்கள் துகளறு பாணர்
என்பு தோல் உரோமத் தூலமும் அரங்கன் இணை யடி எய்தியது என்றால்
அன்பினால் அன்றி ஒன்றினால் உய்யும் உபாயம் என் அண்டத்தில் உளதே –41-

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேங்கடேச பாகவதம் -ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபவிக்கும் ஸ்ரீ திருவேங்கடம் —

March 17, 2023
ஸ்ரீ வேங்கடேச த்வாதச நாம ஸ்தோத்திரம்‌ 

வேங்கடேசோ வாஸுதேவ: வாரிஜாஸன வந்தித: 
ஸ்வாமி புஷ்கரிணீவாஸ: சங்கசக்ர கதாதர: 
பீதாம்பரதரோ தேவ: கருடாரூட ஸோபித: 
விஸ்வாத்மா விஸ்வலோகேச: விஜயோ வேங்கடேஸ்வர: 
(வாரிஜாஸன வந்தித: தாமரைமலரை ஆசனமாகக்‌ கொண்ட பிரம்மனால்‌ வணங்கப்பட்டவனே.) 
ஏதத்‌ த்வாதஸ நாமானி த்ரிஸந்த்யம்‌ ய: படேன்‌ நர: 
ஸர்வபாப வினிர்முக்தோ விஷ்ணோஸ்ஸாயுஜ்ய மாப்னுயாத்‌. 
-----------

1. பொய்கையார்‌ பாஞ்சசன்னியம்‌ (சங்கு) 
2. பூதத்தார்‌ கெளமோத$ (கதாயுதம்‌] 
3. பேயார்‌ நாந்தகம்‌ (வாள்‌) 
4-திருமழிசையார்‌ சுதர்சனம்‌ (சக்கரம்‌) 
5. சடகோபர்‌ விஷ்வக்சேனர்‌ (சேனை முதலி) 
6. மதுரகவி வைநதேயர்‌ (கருடன்‌) 
7. குலசேகரர்‌ கெளஸ்துபம்‌ (மணி) 
8. விஷ்ணுசித்தர்‌ கருடன்‌ (வாகனம்‌) 
9. ஆண்டாள்‌ பூமாதேவி (பிராட்டி) 
10. தொண்டரடிப்பொடி வைஜயந்தி (வனமாலை) 
11, திருப்பாணர்‌ ஸ்ரீ வத்ஸம்‌ (மருவு) 
12. திருமங்கை மன்னன்‌ சார்ங்கம்‌ (வில்‌).
----------
பொய்கையாழ்வார்‌ 
1. வேங்கடமே! வானோர்‌. மனச்சுடரைத்‌ தாண்டும்‌ மலை --26-
2. வேங்கடமே! வெண்சங்கம்‌ ஊதியவாய்‌ மரல்‌ உகந்த ஊர்‌, --57
3. வேங்கடமே! மேலகரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌--36-
4. வேங்கடமே! பேரோத வண்ணர்‌ பெரிது (நின்றதுவும்‌], --39
5. வேங்கடமே! மேலசுரர்‌ கோன்‌ வீழக்‌ கண்டு உகந்தான்‌ குன்று --40-
6. வேங்கடமே! மேலொருநாள்‌ மான்மாய எய்தான்‌ வரை 

வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌. 
விண்‌ கொடுக்கும்‌ மண்ணளந்த சீரான்‌ திருவேங்கடம்‌. 
வேங்கடமும்‌ நின்றான்‌ என்றால்‌ கெடுமாம்‌ இடர்‌. 
வேங்கடத்து மேயானும்‌ உள்ளத்தின்‌ உள்ளானென்று ஓர்‌. 
வேங்கடத்தான்‌ முன்னொரு நாள்‌ மாவாய்‌ பிளந்த மகன்‌. 
வேங்கடவனையே! வாய்திறங்கள்‌ சொல்லும்‌ வகை. 
வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌. 
வேங்கடமென்று உளங்கோயில்‌ உள்ளம்‌ வைத்து உள்ளினேன்‌. 

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்‌ நாளும்‌ 
புகை விளக்கும்‌ பூம்புனலும்‌ ஏந்தி - திசை திசையின்‌. 
வேதியர்கள்‌ சென்று இறைஞ்சும்‌ வேங்கடமே! வெண்சங்கம்‌ 
ஊதியவாய்‌ மால்‌ உகந்த ஊர்‌.

இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதக்‌ காட்சிகளைக்‌  கண்முன்‌ கொண்டுவந்து நிறுத்துகிறது. 
ஆழ்வார்கள்‌ காலத்தில்‌  இவ்விதமே திருமலையில்‌ சுப்ரபாதம்‌, தோமாலை சேவை, 
அர்ச்சனை போன்றவை நடந்தன போலும்‌. 
பொய்கையாரின்‌  பாசுரத்தை ஒட்டியே ஸ்ரீ. வேங்கடேச சுப்ரபாதத்திலும்‌ ஒரு 
சுலோகம்‌ அமைந்திருக்கிறது: 

**ஏலாலவங்க கநஸார சுகந்த தீர்த்தம்‌ திவ்யம்‌ வியத்ஸரிதி ஹேமகடேஷு பூர்ணம்‌ 
தருத்வாத்ய வைதிக சிகாமணய: ப்ரஹ்ருஷ்டா: திஷ்டந்தி வேங்கடபதேர்‌ தவ சுப்ரபாதம்‌'* 
இதன்‌ தமிழாக்கம்‌: 

“ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்‌ 
சீலமிகு தெய்வீக திருதீர்த்தம்‌ தலை சுமந்து 
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்‌ 
கோலமிகு கோயிலுற்றார்‌, வேங்கடவா எழுந்தருள்வாய்‌! 

உலகளந்த மாயர்‌' என்பது ஏழுமலையானுக்குச்‌  சிறப்பாகப்‌ பொருந்துகிறது. 
'*தாள்‌ பரப்பி மண்தாவிய ஈசன்‌:'  என்று நம்மாழ்வார்‌ திருவேங்கடவனைப்‌ பாடியுள்ளார்‌. 
எல்லோரையும்‌ திருவடியின்‌ கீழிட்டுக்கொண்டும்‌, கானமும்‌ வானரமும்‌ ஆனவற்றுக்கும்‌ முகங்கொடுத்துக்‌ கொண்டும்‌ 
திருமலைமீது நிற்கிறபடியால்‌ திருவேங்கடமுடையானை  உலகளந்த பெருமானாகச்‌ சொல்லப்‌ பொருத்தமுண்டென்பர்‌  ஆசிரியர்கள்‌. ்‌ 

எம்பெருமான்‌ உலகமளக்க திரிவிக்ரமனாக வளர்ந்தபோது, 
அவன்‌ திருமேனிபோல்‌ அவன்‌ திருக்கைகளிலிருந்த ஆயதங்கள்‌ 
ஜந்தும்‌ தங்கள்‌ குணங்களோடு இருமேனிக்குத்‌ தகுமாறு வளர்ந்து  அழகாய்‌ விளங்கின என்றபடி, 

உலகளந்த சோர்வு தீரப்‌ பாற்கடலில்‌ . படுத்திருக்கிறான்‌. 
இளைப்பாறியதும்‌,  திருவேங்கடத்திற்கு வந்து நின்று கொண்டிருக்கிறான்‌! 

தீக்கனல்‌ பறக்கும்‌ சக்கரம்‌, வெப்பம்‌ வீசும்‌ “வெய்ய' கதை, சார்ங்கம்‌; உஷ்ணமும்‌, ஒளியும்‌ உமிழும்‌ 'வெஞ்சுடர்‌' வாள்‌; 
இவற்றிற்கும்‌ வேங்கடத்திற்கும்‌ சூடான பொருத்தமுண்டு. 
“வேம்‌”  என்றால்‌ வெப்பமான, கொளுத்துகின்ற; 
'கடம்‌' என்றால்‌ பாலை,  நீரற்ற மலைப்பிரதேசம்‌. 
*வேங்கடம்‌' என்பது மலைமீது  குளிர்ச்சியாக இருப்பினும்‌, கீழே கடும்‌ வெயில்‌ கொளுத்தும்‌ 
வறண்ட  மலைக்கூட்டங்கள்‌ன உள்ள நிலப்பகுதியில்‌  அமைந்துள்ளது. 
எனவே வேங்கடமும்‌ ஐம்படைகளைப்‌  போன்றே வெப்பம்‌ மிகுந்தது. 
அதே சமயத்தில்‌ மேகம்‌ நிறைந்த  திருமலையுச்சி, பாற்கடலைப்‌ போல்‌ குளிர்ந்திருக்கிறது! 
திருமாலின்‌ வெஞ்சுடர்‌ வாளாகிய பேயாழ்வார்‌ இந்த ஐம்படைப்‌ பாசுரத்தை, “பயிலும்‌ சுடர்‌ ஒளி மூர்த்தி'யாகிய வேங்கடநாதனுக்கு 
முற்றும்‌ பொருந்தும்‌ விதத்திலேயே அமைத்துள்ளார்‌! 
---------
பூதத்தாழ்வார்‌ 
7. வேங்கடமே! விண்ணவர் தம்‌ வாயோங்கு தொல்புகழான்‌ வந்து--25-
8. வேங்கடமே! பன்னாள்‌ பயின்றது மணிதிகழும்‌ வண்தடக்கை--40-
8. வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவன்‌ மலரடிக்கே செல்ல அணி வேங்கடவன்‌ பேராய்ந்து. 
திருவேங்கடம்‌ கண்டீர்‌! வான்கலந்த வண்ணன்‌ வரை. 

பேயாழ்வார்‌ 
10, வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்‌ கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. --45
11-வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்மதியில்‌ கொண்டுகந்தான்‌ வாழ்வு. --50-
12. வேங்கடமே! மேல்நாள்‌ விளங்கனிக்குக்‌ கன்றெறிந்தான்‌ வெற்பு.--68
13-. வேங்கடமே! மேல்நாள்‌ குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ --குன்று. --71
14. வேங்கடமே! மேலை இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. --78
15. வேங்கடமே! மேலொருநாள்‌ தீங்குழல்‌ வாய்வைத்தான்‌  சிலம்பு.--88-
நால்பால்‌ வேதத்தான்‌ வேங்கடத்தான்‌. 
வேங்கடம்‌ என்‌ சிந்தை அனந்தன்‌ இறைபாடியாய இவை. 
வேங்கடமும்‌ இடமாகக்‌ கொண்டார்‌ கோபாலகன்‌. 
வேங்கடத்தான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌. 

திருமழிசையாழ்வார்‌. 
18-வேங்கடமே! வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு. --நான்முகன் -45
19- வேங்கடமே! நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. 
20. வேங்கடமே! விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
21. வேங்கடமே! மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌. 
22. வேங்கடமே! வானவரைக்‌ காப்பான்‌ மலை.
சென்று வணங்குமினோ சேணுயர்‌ 
வேங்கடமும்‌ தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌.

வேங்கடத்தான்‌ மண்ணொடுங்கத்தான்‌ ௮ளந்த மன்‌ :
.பண்டெல்லாம்‌ வேங்கடம்‌ பாற்கடல்‌ வைகுந்தம்‌.
வேங்கடம்‌ தன்‌ குடங்கை நீரேற்றான்‌ தாழ்வு.

வேங்கடம்‌ பாடும்‌ மால்கிடந்த நீள்கடல்‌ புகும்‌.

வேங்கடவனையே கண்டு வணங்கும்‌ களிறு.

வேங்கடத்து நின்றான்‌ குரைகழலே கூறுவதே நலம்‌.

28. வேங்கடத்துள்‌ நின்று குடந்தையுள்‌ கடந்த மாலும்‌  அல்லையே? 
24. வேங்கடம்‌ மாலபதமே அடைந்து நாளும்‌ உய்ம்மினோ. 
24, வெறுப்பனோ வேங்கடத்து மேயானை. 
23. அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண. 
26. வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி நிற்கின்றேன்‌. 
27. வேங்கடவா! என்னுள்ளம்‌ புகுந்தாய்‌ திருவேங்கடமதனைச்‌ சென்று. 
சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை. 
வேங்கடத்தானை கங்குல்‌ புகுந்தார்கள்‌ காப்பணிவான்‌ 
போம்‌! குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலைக்கே! 
கானமும்‌ வானரமும்‌ வேடும்‌ உடை வேங்கடம்‌. 
விண்ணாள வேண்டுவார்‌ வேங்கடத்தான்‌ பால்‌ வைத்தாரே பன் மலர்கள்‌.
நம்மாழ்வார்‌ 
23. வேங்கடமே! அருமா மாயத்து எனதுயிரே! எனதுடலே! --10-7-6-

-----------

அருள்‌ மிகுத்ததொரு வடிவாய்க்‌ கச்சிதன்னில்‌ 
ஐப்பசி மாதத்‌ திருவோணத்து நாளில்‌ 
பொருள்‌ மிகுத்த மறை விளங்கப்‌ புவியோர்‌ உய்யப்‌ 
பொய்கைதனில்‌ வந்து உதித்த புனிதா! முன்னாள்‌- 
இருளதனில்‌ தண்கோவல்‌ இடைகழிச்‌ சென்று 
இருவருடன்‌ நிற்கவும்‌ மால்‌ இடை நெருக்கத்‌ 
திருவிளக்காம்‌ எனும்‌ வையந்தகளி நூறாம்‌ 
செழும்பொருளை எனக்கு அருள்‌ செய்திருந்த நீயே. (பிரபந்த சாரம்‌, 8) 

மாமயிலைப்‌ பதியதனில்‌ துலா மாதத்தில்‌ 
வரும்‌ சதயத்து அவதரித்துக்‌ கோவலூரில்‌ 
தூமுனிவர்‌ இருவருடன்‌ துலங்க நின்று 
துன்னிய பேரிருள்‌ நீங்கச்‌ சோதி தோன்ற 
சேமமுடன்‌ நெடுமாலைக்‌ காணப்‌ புக்குத்‌ 
திருக்கண்டேன்‌ என உரைத்த தேவே! உன்றன்‌- 
பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்‌ ்‌ 
பழவடியேனுக்கு அருள்செய்‌ பரம நீயே, (பிரபந்த சாரம்‌, 4)
திருக்கோவலூர்‌ இடைகழியில்‌ முதலாழ்வார்கள்‌ ஏற்றிய  ஞானத்தமிழ்‌ விளக்கின்‌ ஒளியில்‌ ஈடுபட்டு அவர்களை ஸ்ரீதேசிகன்‌ 
புகழ்ந்தருனின பாசுரமாவது: 

““பாட்டுக்குரிய பழையவர்‌ மூவரைப்‌ பண்டொருகால்‌ 
மாட்டுக்கு அருள்தருமாயன்‌ மலிந்து வருத்துதலால்‌ 
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க 
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும்‌ இம்மெய்விளக்கே'”,
சகல வேதங்களின்‌ சாரமானது வேதமாதா எனப்படும்‌ காயத்ரீ  மந்திரம்‌. 
அதற்கும்‌ தாயாயிருப்பது திருவெட்டெழுத்தாகிய  நாராயண மந்திரம்‌. 
அதற்கும்‌ மூலமாயிருப்பது 'ஓம்‌' என்னும்‌ பிரணவ மந்திரம்‌. 


“நான்மறை அந்தி நடை விளங்க” 
முதலாழ்வார்கள்‌ அருளிச்செய்த திருவந்தாதிகளின்‌ முதற்‌ பாசுரங்களை, காயத்ரீ,  எட்டெழுத்து, 
பிரணவ மந்திரங்களை உள்ளடக்கிபவைகளாக  . 
மேற்கூறிய  மந்திரங்கள்‌ அனைத்தும்‌ மூன்று பதங்களாகப்‌ பிரியக்‌  கூடியவையாதலால்‌, 
ஒவ்வொரு ஆழ்வார்‌ பாசுரமும்‌ ஒரு  பதத்தைக்‌ கூறுவதாக, 8ழ்க்கண்டவாறு பொருள்‌ கூறப்படும்‌: 

ஆழ்வார்‌... பொய்கையார்‌ பூதத்தார்‌ பேயார்‌ 
பாசுரம்‌ வையந்தகளி அன்பேதகளி திருக்கண்டேன்‌ 
பிரணவம்‌ ௮. உ ம 
உலகம்‌ பூ: புவ: ஸுவ: 
வேதம்‌ ர்க்‌ யசார்‌ சாம 
சாதனை ச்ரவணம்‌ மனனம்‌ சாட்க்ஷாத்காரம்‌ 
பக்திநிலை பரபக்தி பரஞானம்‌ பரமபக்தி 
திருமந்திரம்‌ ஓம்‌ நமோ நாராயணாய 
வேங்கடேச ஓம்‌ நமோ வேங்கடேசாய 

மந்திரம்‌ ்‌ 
காயத்ரீ தத்‌ ஸவிதுர்‌ பர்கோ தயோயோந:  வரேண்யம்‌ தேவஸ்ய ப்ரசோதயாத்‌ 
தீமஹி நாராயண நாராயணாய வாச்தேவாய தன்னோ  காயத்ரீ வித்மஹே தீமஹி விஷ்ணு ப்ரசோதயாத்‌ 

ஓம்‌' என்பதை தமிழில்‌ 'வோம்‌' என்று எழுதினாலும்‌  உச்சரிப்பு அநேகமாக ஒன்றே; 
“வையம்‌' என்பதை“வோம்‌”  என்பதன்‌ தரிபாகக்‌ கொள்ளலாம்‌.
ஒங்காரத்திலிருந்து பிறந்ததே வையம்‌ (உலகம்‌).
வையம்‌' என்கிற சொல்‌ வைகுந்தம்‌, வேங்கடேசன்‌  என்பவை போலவே வகாரத்தில்‌ துவங்குகிறது. 
பொய்கையார்‌  வேங்கடேச பக்தராகையால்‌ வகாரத்தை முதலிட்டுப்‌ பாடினார்‌ 

**வையம்‌' என்றால்‌ உலகம்‌, பூவுலகு என்று பொருள்‌.
ருக்‌  வேதத்திலிருந்து பூ: என்னும்‌ சப்த விசேஷம்‌ தோன்றியது என்பர்‌. 
எனவே வையந்தகளி ருக்‌ வேதம்‌, பூ: இரண்டையும்‌ குறிப்பதாகக்‌  கொள்ளலாம்‌.
ஓம்‌" என்கிற ப்ரணவம்‌ ௮, ௨, ம என்று விரியும்‌. 
வையம்‌,  வார்கடல்‌, வெய்ய கதிரோன்‌ போன்ற ஸ்தூலப்‌  பொருட்களடங்கிய சகல ஐகத்துக்கும்‌ காரணன்‌: நாராயணன்‌.
“சூட்டினேன்‌' என்பதில்‌ 'நான்‌' என்னும்‌ சொல்‌  மறைந்துள்ளது; “நான்‌ சூட்டினேன்‌' என்று கூறத்‌ தேவையில்லை.
“நான்‌” என்று கூறும்‌ மகாரப்‌ பொருளான  ஜீவாத்மா, அகாரப்‌ பொருளான நாராயணனுக்கு அடிமை என்கிற 
சேஷத்வத்தை ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது  கூறுகிறது. 
ப்ரணவத்திலுள்ள உகாரம்‌ ஏவகாரம்‌, தமிழில்‌ “ஏ:  என்பது போன்றது. ''நாராயணனுக்கே நான்‌ அடிமை” என்பதே 
௮, ௪, ம என்று விரியும்‌ ஓங்காரத்தின்‌ உட்பொருள்‌. இதையே 
வையந்தகளி கூறுகிறது. ஏவகாரம்‌ “அடிக்கே! என்பதில்‌ உள்ளது. 

**இடராழி நீங்குக!” என்பது வேங்கட பதத்தின்‌  பொருளை நேரடியாக விளக்குகிறது. 
வேம்‌ * கடம்‌ - வேங்கடம்‌. -வேம்‌ - எரிக்கப்படுகின்ற, நீக்கப்படுகின்ற, கடம்‌ - பாவங்கள்‌, 
இடராழி. இடராழியை நீக்குவது வேங்கடம்‌. 

'"இடராழி நீங்குக”! என்பது வேங்கட பதத்தின்‌ பொருளாக  அமைந்திருப்பதால்‌, 
சுடராழியான்‌ அடியை, திருவேங்கடவனின்‌  அடியாகக்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
உலகனைத்தையும்‌ தன்‌  அடிக்குள்‌ வைத்துத்‌ திருமலையில்‌ நிற்பதால்‌ திருவேங்கடவனின்‌  திருவடிக்குத்‌ தனிச்சிறப்புண்டு.
நம்மாழ்வாரும்‌ 
'“திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன்‌ உன்‌ அடிக்8ழ்‌  அமர்ந்து புகுந்தேனே”" என்
ஏழுமலையானின்‌  திருவடிகளிலேயே சரணமடைகிறார்‌. 
“வேங்கடவன்‌  திருமலையை விரும்புமவன்‌ வாழியே!”', என்கிறது பொய்கையாழ்வாரின்‌ வாழித்திருநாமம்‌.
ஸ்ரவணம்‌ கீர்த்தனம்‌ விஷ்ணோ: ஸ்மரணம்‌ பாதசேவனம்‌ 
அர்ச்சனம்‌ வந்தனம்‌ தாஸ்யம்‌ ஸக்யம்‌ ஆத்மநிவேதனம்‌. 

வையந்தகளி, அன்பேதகளி என்னும்‌ முதலிரண்டு  ஆழ்வார்களின்‌ பாசுரங்கள்‌ பிரகலாதன்‌ கூறும்‌ ஒன்பதுவித பக்தி 
சாதனைகளைக்‌ குறிப்பிடுகின்றன; 
''திருக்கண்டேன்‌'' என்னும்‌  மூன்றாவது ஆழ்வாரின்‌ பாசுரம்‌ பகவானை நேரில்‌ கண்ட  பேரின்ப நிலையை விவரிக்கிறது. 

““வையந்தகளி'* பாசுரத்தில்‌ 
'“சொன்மாலை'' என்பது  விஷ்ணோ: ஸ்ரவணம்‌ (பகவானைப்‌ பற்றிக்‌ கேட்டல்‌), கீர்த்தனம்‌ 
(அவன்‌ புகழ்‌ பாடுதல்‌); ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது ஸ்மரணம்‌ (பகவானை சதா நினைவு கூறுதல்‌); 
“அடிக்கே” என்பது வந்தனம்‌, தாஸ்யம்‌ (அடிமையாய்‌ இருத்தல்‌), பாதஸேவனம்‌; 
சொன்மாலை சூட்டினேன்‌ என்பது அர்ச்சனம்‌ (பூஜித்தல்‌); . ்‌ 
காயத்ரீ மந்திரம்‌: 
ஓம்‌ பூர்புவஸ்ஸுவ:  தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ 
பர்கோ தேவஸ்ய தீமஹி  தியோ யோ ந: ப்ரசோதயாத்‌. 

பூ: புவ: ஸுவ: ஆகிய மூன்று சொற்கள்‌ பூலோகம்‌, புவர்லோகம்‌, சுவர்க்கம்‌ ஆகிய மூவுலகங்கள்‌. 
ய: (யோ) - யார்‌; ந: - நம்முடைய; திய: - அறிவை; 
ப்ரசோதயாத்‌ - தூண்டுகிறாரோ; தத்‌ - அந்த; தேவஸ்ய - 
சுடருடைய; ஸவிதுர்‌ - கடவுளின்‌; வரேண்யம்‌ - மேலாண, பர்க: 
- ஒளியை; தீமஹி: - தியானிப்போமாக. 

காயத்ரீமின்‌ பொருள்‌: 
யார்‌ நம்‌ அறிவைத்‌ தூண்டுகிறாரோ, அந்த சுடர்வீசும்‌ கடவுளின்‌ மேலான ஒளியைத்‌ தியானிப்போமாக. 

பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ எனப்படும்‌ இதுவே 
பல்லாயிரம்‌ ஆண்டுகளாக பாரத நாட்டின்‌ தேயப்‌  பிரார்த்தனையாக இருந்து வருகிறது. 
இதற்கு ரிஷி விசுவாமித்திரர்‌; 
தேவதை, ஸவிதா (சூரியன்‌, பரமாத்மா). 
தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌: 1 

வையந்தகளியில்‌ பொய்கையாழ்வார்‌ “ஸவிதா'' என்பதை  நேரடியாகத்‌ தமிழில்‌ 'கதிரோன்‌' என்று குறிப்பிட்டுள்ளதால்‌, 
இப்பாசுரம்‌ காயத்ரீ மந்திரத்தின்‌ முதற்பதத்தை விளக்குவதாகக்‌ கொள்ளலாம்‌.
'“தேவஸ்ய ஸவிதுர்‌”! (சுடருடைய கடவுளின்‌) என காயத்ரீயில்‌ வருவதை ஆழ்வார்‌. சுடர்‌ ஆழியான்‌! எனக்‌ கூறுவதோடு ஒப்பிடலாம்‌. 
'*தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌'' என்பதே ரிக்வேதமானது. 

விஷ்ணுகாயத்ரீ: மிகவும்‌ பிரசித்தி பெற்ற காயத்ரீ மந்திரத்தையொட்டி, 
பற்பல இந்துமத தெய்வங்களுக்கும்‌ உரிய காயத்ரீ மந்திரங்கள்‌ தோன்றின. 
மஹா நாராயண உபநிஷதத்தில்‌ விஷ்ணுவிற்குத்‌ தரப்பட்டுள்ள நாராயாண காயத்ரீ இது: 
நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌” 
பொகுள்‌: நாராயணனை அறிவோமாக, அதற்காக, வாசுதேவனை தியானிப்போமாக, 
அந்த தியானத்தில்‌, விஷ்ணு நம்மைத்‌ தூண்டுவாராக. 
' நாராயணாய வித்மஹே: உலகனர்‌ நாராயணனை அறிந்து உய்வடைய வேண்டுமென்றே 
பொய்கையார்‌ 'வையந்தகளி' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்தார்‌. 
'“சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌ சொன்மாலை” என்கிற அடியில்‌ 
'*நாராயணனை அறிவோமாக'' என்னும்‌ ஆழ்வாரின்‌ நோக்கம்‌ தெரிகிறது. 
வையந்தகளியின்‌ இயற்கை வர்ணனை: காயத்ரீ மந்திரம்‌ சூரியோதம்‌, உச்சி, அஸ்தமனம்‌ ஆகிய மூன்று சந்தி காலங்களிலும்‌ ஜபிக்கப்படும்‌. 
பொய்கையார்‌ வைணவத்தின்‌ விடிவெள்ளி போன்றவர்‌. 
வையந்தகளி சூரியோதயத்தை வர்ணிப்பதுபோல்‌ அமைந்துள்ளது. 
திருவேங்கடமுடையானே, * வேங்கடகிருஷ்ணன்‌, பார்த்தஸாரதி என்கிற திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ திவ்விய தேசம்‌, 
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி. 
முதலாழ்வார்கள்‌ மூவரும்‌: திருமழிசையாழ்வாருடன்‌ இங்கு வந்து எம்பெருமானை சேவித்ததாகக்‌ கூறுவர்‌. 
திருவல்லிக்கேணியில்‌ புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில்‌  
விடிகாலை, சூரியன்‌ உதயமாகும்‌ நேரம்‌. நம்‌ காலடியில்‌ கடல்மண்‌, வையம்‌, பூமி. சற்று நிமிர்ந்து பார்த்தால்‌ 
வார்கடல்‌, விரித்து, அலைபாயும்‌ சமுத்திரம்‌. கடல்பரப்பின்‌ எல்லை வளைந்து தென்படுகிறது. 
மெதுவாக சூரியன்‌, இளஞ்சிவப்பு நிறத்துடன்‌, கடலின்‌ மறுகோடியில்‌ எழுகிறது. 
' இந்த அற்புதமான இயற்கைக்‌ காட்சியைத்தான்‌ ஆழ்வார்‌ சிறந்த உவமையாகப்‌ பயன்படுத்தியுள்ளார்‌.

நம்‌ காலுக்கடியிலுள்ள பூமி, மண்ணாலான அகல்‌ விளக்கைப்‌  போலுள்ளது; 
அதற்கு மேலேயுள்ள கடல்‌, உருக்கிய நெய்போல்‌  இளமஞ்சள்‌ நிறத்துடன்‌ காணப்படுகிறது. 
அதற்கும்‌ மேலே, உதய  சூரியன்‌ விளக்கைப்போல்‌ ஒளி வீசுகிறது. 
இந்த இயற்கைக்‌  காட்சியில்‌ ஒன்று கவனிக்க வேண்டும்‌, திரி இல்லை!
எனவே  ““வையந்தகளி'' பாசுரத்திலும்‌ திரி இல்லை; 
ஆனால்‌ அடுத்து  பூதத்தார்‌ பாடிய ''அன்பே தகளி'' பாசுரத்தில்‌ இரி உண்டு|
எனவே 
““வையந்தகளி'' விடிகாலையில்‌ செய்யப்படும்‌ சந்தியாவந்தனம்‌ போன்றது. 

காயத்ரீ மந்திரத்தின்‌ ரிஷியான விசுவாமித்திரரே  பாலசூரியனைப்‌ போன்ற ஸ்ரீ ராமச்சந்திரனை, 
'“கெளசல்யா  சுப்ரஜா ராம, பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'* (கோசலையின்‌ உத்தம 
புத்திரனான ராமனே! கிழக்கில்‌ சூரியன்‌ உதயமாகிவிட்டது) என்று எழுப்பியதாக வால்மீகி ராமாயணம்‌ கூறுகிறது. 
உலகிற்கு காயத்ரீயை உபதேசித்த விசுவாமித்திர ரிஷியே, ஸ்ரீ வேங்கடேச  சுப்ரபாதத்தின்‌ முதலடியையும்‌ நமக்கு வழங்கியிருக்கிறார்‌! 

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அருளிச்‌ செய்த  திருப்பள்ளியெழுச்சியும்‌-- 

“கதிரவன்‌ குணதிசைச்‌ சிகரம்‌ வந்து அணைந்தான்‌ 
கன இருள்‌ அகன்றது காலையம்பொழுதாய்‌'' 
என்று சூரியோதய வர்ணனையுடன்‌ துவங்குவதும்‌ இங்கு  ஒப்பு நோக்கத்தக்கது. 

“பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'' என்பதை ''வையந்தகளியா,  வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன்‌ விளக்காக”! என்றும்‌; 
**கெளசல்யா சுப்ரஜா ராம'' என்பதை ''செய்ய சுடராழியான்‌'"  என்றும்‌ ஆழ்வார்‌. அருளிச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளலாம்‌. 
வையந்தகளி ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதமாகி விடுகிறது!
----------------
இந்த (பொய்கையாரின்‌ வையந்தகளி] பாசுரத்தின்‌  மகிமையால்‌ அந்த இடைகழியில்‌ பளிச்சென்று ஏதோ ஒரு திரை 
விலகி எப்படியோ ஒளியும்‌ வந்து விடுகின்றது. புறத்தே கவிந்து  கிடக்கும்‌ இருளும்‌ நீங்கி விடுகின்றது. 
அதே சமயத்தில்‌  பூதத்தாழ்வாரும்‌ ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார்‌. 
அன்பை  அகலாகவும்‌, பொங்கி வரும்‌ ஆர்வத்தை நெய்யாகவும்‌,  
சிந்தையைத்‌ திரியாகவும்‌ கொண்டு ஞான விளக்கை ஏற்றுகின்றார்‌ பூதத்தார்‌.
இந்த விளக்கினால்‌ அகத்தே மண்டிக்கிடந்த உள்‌  இருட்டும்‌ நீங்கி விடுகின்றது. 

உடனே அந்தப்‌ பேயாழ்வார்‌  நான்காவது ஆளைக்‌ கண்டுபிடித்து விடுகின்றார்‌. 

“அன்பே தகளி”” விளக்குபவை: ்‌ 
௮ன்பேதகளி, உகாரம்‌, நமோ (நம: பதம்‌), “பர்கோ 
தேவஸ்ய தீமஹி'' என்டுற காயத்ரீ மந்திரத்தின்‌ இரண்டாவதுபதம்‌, 
வாசுதேவாய தீமஹி என்னும்‌ பதம்‌ ஆகியவற்றை விளக்குவதாகக் கொள்ளலாம்.

அன்பே தகளியில்‌, ஆழ்வார்‌ ''நாரணற்கு'' என்று  கூறியிருப்பதை ''நாராயணனுக்கே, நாராயணனுக்கு மட்டுமே”! 
என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌. 
எனவே அன்பேதகளி, உகார  பத அர்த்தத்தை விளக்குகிறது எனலாம்‌. உகாரத்தால்‌  அந்நியசேஷத்வம்‌ கழிக்கப்படுகிறது. 

லக்ஷ்மியை நாராயணன்‌ திருமார்பில்‌ தரிக்கிறான்‌. பிராட்டிக்கு  “உ என்று திருநாமம்‌. 
'*நாரணற்கு!' என்பதால்‌ பிராட்டிக்கும்‌  சேர்த்தே ஞானத்தமிழ்‌ பாடியிருக்கிறார்‌ பூதத்தார்‌

அடுத்துப்‌ பாடிய பேயாழ்வார்‌ “'திருக்கண்டேன்‌'"  (லக்ஷ்மிப்‌ பிராட்டியைக்‌ கண்டேன்‌) என்றே துவங்குவதால்‌ இது  உறுதியாகிறது. 

நம: பதம்‌: 
“ஓம்‌ நமோ நாராயணாய”, ஓம்‌ நமோ வேங்கடேசாய”  என்னும்‌ மந்திரங்களின்‌ இரண்டாவது பதம்‌. 
ம: என்றால்‌ எனது”!  என்கிற மமகாரம்‌, ஆத்மா தனக்குரியது என்னும்‌ செருக்கு. 
“ந!  என்றால்‌ '“இல்லை”"', மமகாரத்தை இல்லை என்கிறது. 
அகங்கார, மமகாரங்களே (யான்‌, , எனது என்னும்‌ செருக்கு) ஆத்மாவுக்கு  விரோதி, 

அன்பே தகளியில்‌, **நாரணற்கு ஞானத்தமிழ்‌ புரிந்த நான்‌”! 
என்று வருவதால்‌ நான்‌, எனது என்பதெல்லாம்‌ நாராயணனுக்கே அடிமை என்பது தெளிவாகிறது.
இது நம: பதார்த்தமாக உள்ளது  எனலாம்‌
நமப்பதம்‌ சப்தத்தாலும்‌, அர்த்தத்தாலும்‌ உபாயத்தை  அறிவிக்கிறது. நாராயணனே உபாயம்‌ என்பது இதன்‌ பொருள்‌. 
இது ஸ்வசேஷத்தையும்‌, பகவத்‌ சேஷத்வத்வத்துக்கு இசையாமையையும்‌ கழிக்கறது

அன்பேதகளியில்‌, ஞானச்சுடர்‌ : தேவஸ்ய, ஒளியுடைய; 
நாரணற்கு - .ஸவிது:, கடவுளின்‌; விளக்கேற்றிய - பர்‌க;, ஒளியை. 

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி'” 
என்னும்‌ முதலிரண்டு அடிகள்‌ - தீமஹி, தியானிப்போமாக என்று 
நேரடியாகப்‌ பொருள்படுவது இன்புறத்தக்கது. 

“பர்கோ தேவஸ்ய தீமஹி'' என்பதன்‌ விளக்கமாகவே 
"அன்பே தகளி'' அமைந்திருக்கிறது என்றால்‌ மிகையாகாது. 

வாசுதேவாய தீமஹி: 
இது விஷ்ணு காயத்ரீபின்‌ இரண்டாவது பதம்‌. 
*'வாசுதேவனை தியானிப்போமாக”* என்று பொருள்‌. 
மஹாநாராயண உபநிஷத்தில்‌ வரும்‌ நாராயண காயத்ரீக்கு  உரையெழுதிய பட்டபாஸ்கரர்‌, “வாசுதேவன்‌” என்பதற்கு 
“எல்லா ஜீவராசிகளிலும்‌ அந்தர்யாமியாக வசிப்பவன்‌'” என்று பொருள்‌ கூறுகிறார்‌. 

அன்பேத்களியில்‌, பூதத்தாழ்வார்‌ தமது இதயக் குகையிலே  அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும்‌ வாசுதேவனையே 
தியானித்து, ஞானச்சுடர்‌ விளக்கேற்றினார்‌ என்க. 


பிரகலாதன்‌ விவரிக்கும்‌ பக்து சாதனைகள்‌: 
வையந்தகளியில்‌ ''சுடராழியானடிக்கே சூட்டினேன்‌''  என்றார்‌. திருவடியைப்‌ பேசியதால்‌ இது தாஸ்யம்‌ ஆயிற்று. 
அன்பேதகளியில்‌, :*நாரணற்கு'' என்றுள்ளது, திருவடி கூறப்படவில்லை. 
மற்றும்‌, அன்பு, ஆர்வம்‌, இன்புருகு சிந்தை ஆகிய சொற்கள்‌ 'ஸக்யம்‌'' (பகவானிடம்‌ நட்பு) என்னும்‌ 
நெருங்கிய உறவைக்‌ கூறுவது போலுள்ளன. 
''நன்புருக'' என்பது  ஞானமய்மான ஆத்மா பகவதனுபவத்தில்‌ உருகுவதைக்‌ குறிப்பிடுவதால்‌, இது ''ஆத்ம நிவேதனம்‌”” ஆயிற்று. 

எனவே வையந்தகளி பிரகலாதன்‌ கூறும்‌ சாதனைகளில்‌ முதல்‌ ஏழையும்‌, 
௮ன்பேதகளி கடைசி இரண்டையும்‌ பற்றிப்‌ பேசுகின்றன. 

ஞானச்சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு: -இதற்குப்‌ ''ப்ரபந்தரக்ஷை'' உரை: 
நாரணன்‌ விஷயமான விளக்கு நாராயண சப்தத்தின்‌ பொருளான அவனது ஸ்வரூப 
ரூப குண விபவாதிகளிலெங்கும்‌ பரவுகின்றது பற்றி ''ஞானச்சுடர்‌ விளக்கு" என்றது. 
ஞானச்சுடர்‌ என்பதற்கு ப்ரஞானமென்ற  விளக்கு என்ற பொருள்‌ முன்னோர்‌ இசைந்ததன்று. 
பர ஞானம்‌  நாரணனின்‌ அனுக்ரஹத்தாலே தானே வருவதாம்‌. அதை ஏற்றுவது  வேறொருவராகார்‌. 
அதற்கு வேண்டும்‌ பரபக்தியை ஏற்றுகிறார்‌ 
எல்லார்‌ நெஞ்சிலும்‌ ஆழ்வார்‌. “*ஏற்றினேன்‌'' என்று இறந்த  காலமாக ப்ரபந்தத்தன்‌ தொடக்கத்திலேயே அருளினது 
ப்ரபந்தத்தை எம்பெருமான்‌ நன்கு முடித்தருள்வது திண்ணமெனக்‌  கண்டதனால்‌ என்க. 

பொய்கையாரின்‌ '*வையந்தகளி”' பாசுரமும்‌, பூதத்தாரின்‌  “அன்பே தகளி'' பாசுரமும்‌ 
தகளி, நெய்‌, விளக்கு ஆகியவற்றுடன்‌  பக்தர்களுக்குக்‌ கலங்கரை விளக்கம்‌ போல்‌ வழிகாட்டுகின்றன. 
இவ்விரண்டு ஒளிவீசும்‌ பாசுரங்களையும்‌ இங்கே ஒப்பு நோக்குவோம்‌. 

வையந்தகளி: அன்பேதகளி: 

1. புறவிளக்கு; சூரியனை விளக்காக்கியது--அக விளக்கு; ஆத்மாவை விளக்காக்கியது
2. புறவிருளைக்‌ களைகிறது. ௮௧ இருளை அற்றுவறைது. 
3. திரி இல்லாமலே சிந்தையையே திரியாகத்‌ விளக்கேற்றினார்‌! திரித்து விளக்கேற்றினார்‌! 
4. மறைமுகமாக -ஆழியான்‌'' என்றார்‌.பரபக்தியைக்‌ கூறுகிறது;  ''சுடர்‌ நேரடியாக '“நாரணற்கு”* -பரஞானத்தைக்‌ கூறுகிறது;
எனவே அடிக்கே! என்றார்‌. 
தமிழ்‌ பற்றிப்‌ பேசவில்லை. 
“ஞானச்சுடர்‌' என்றார்‌. 
“'ஞானத்தமிழ்‌'' என்று  தமிழ்த்தாய்‌ வாழ்த்தாகவும்‌  துவங்கினார்‌. 

பேயாழ்வாரின்‌ “திருக்கண்டேன்‌”! 
பூதத்தாழ்வார்‌. ''அன்பேதகளி'' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ பாடி முடித்ததும்‌, 
மூன்றாவது ஆழ்வாராகிய பேயார்‌ “*“திருக்கண்டேன்‌'' என்று கம்பீரமாகத்‌ துவங்கப்‌ பாடலானார்‌: 
திருக்கண்டேன்‌ பொன்மேனி கண்டேன்‌ திகழும்‌ 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌ - செருக்கிளரும்‌ 
பொன்னாழி கண்டேன்‌ புரிசங்கம்‌ கைக்கண்டேன்‌ 
என்னாழி வண்ணன்பால்‌ இன்று. 
திரு - ஸ்ரீ, மஹாலட்சுமி, பெரியபிராட்டியார்‌; அருக்கன்‌ - சூரியன்‌; செரு - போர்‌; கிளரும்‌ - கிளம்பும்‌; 
ஆழி - சுதர்சனச்‌ சக்கரம்‌; புரிசங்கம்‌ - வலம்புரிச்‌: சங்கு, பாஞ்சசன்னியம்‌; 
ஆழி வண்ணன்‌ - கடல்நிறக்கடவுள்‌, விஷ்ணு. 

என்னுடைய கடல் வண்ணனான ஸ்ரீநிவாஸனிடம்‌ இன்றைய தினம்‌ பெரிய பிராட்டியாரை சேவிக்கலானேன்‌. 
பொன்னிறமான  திருமேனியைக்‌ கண்டேன்‌. பிரகாசிக்கும்‌ சூரியன்‌ போன்ற அழகிய நிறத்தையும்‌ கண்டேன்‌. 
போர்க்களத்தில்‌  சீறி யெழுந்து  செயல்படும்‌ அழகிய சுதர்சனச்‌ சக்கரத்தையும்‌ கண்டேன்‌. 
மற்ற  திருக்கையில்‌ வலம்புரிச்‌ சங்கையும்‌ சேவிக்கப்‌ பெற்றேன்‌. 

எல்லா உலகங்களும்‌ சரீரமாகக்‌ கொண்ட பெருமானைக்‌  காணும்‌ காட்சியிலே எல்லாவற்றையும்‌ கண்ட ஆழ்வார்‌ அன்பின்‌ 
மிகுதியாலே அவனுடைய பெருமைக்குக்‌ காரணமான சிலவற்றை “அது கண்டேன்‌, இது கண்டேன்‌'' என்கிறார்‌. 

பேயாழ்வார்‌ முதன்‌ முதலாகப்‌ பெரிய பிராட்டியாரின்‌ ௮ருள்‌  வடிவத்தைக்‌ காண்கின்றார்‌; 
பொன்மேனியையுடைய அன்னையாருடன்‌ கூடிய எம்பெருமானின்‌ மரகதத்‌ திருமேனி 
இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக்கிறது. 
மரகத மலையில்‌ உதித்து ஒளிவீசி வரும்‌ இளஞாயிறு போலத்தோன்றி 
இருவரது ஒளியையும்‌ -- பொன்‌ ஒளியும்‌, மரகத ஒளியும்‌ கலந்து 
ஒளிர்கின்ற அந்தக்‌ கலப்பு ஒளியையும்‌ -- காண்கின்றார்‌; 
'திகழும்‌  அருக்கன்‌ ௮ணிநிறமும்‌ கண்டேன்‌! என்பதால்‌ இது பெறப்படுகின்றது. 
'*இருவர்‌ சேர்த்தியால்‌ பிறந்த முதாய சோபை”! என்பது பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்கியான விளக்கம்‌. 

“திருக்கண்டேன்‌' விளக்குபவை: 
மகாரம்‌, ஸுவர்லோகம்‌, சாமவேதம்‌, காரண சீரம்‌,  சத்துவகுணம்‌, சாட்க்ஷாத்காரம்‌, ஆனந்தம்‌, ஈசுவரன்‌,  புருஷார்த்தம்‌, 
“தியோ யோ ந; ப்ரசோதயாத்‌'' என்னும்‌ காயத்ரீ  மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌, 
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌, 
நாராயணாய, வேங்கடேசாய. 
மகாரம்‌: 

௮, ௨, ம்‌ என்று பிரியும்‌ 'ஒம்‌' என்கிற பிரணவ மந்திரத்தின்‌ 
மூன்றாவது எழுத்து. மகாரம்‌ “மந” என்ற தாதுவிலே தோன்றியது. 
இதற்கு ஞானம்‌ என்று அர்த்தம்‌. இதனால்‌ ஆத்மா ஞானமயமானது என்றதாயிற்று. 
“மநு” என்ற தாதுவும்‌ மகாரத்துக்குக்‌ காரணம்‌. இதற்கு அறிதல்‌ என்று பொருள்‌. 
மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ எழுத்து. இதனால்‌ இருபத்து நான்கு  தத்வங்களான ப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌, 
இருபத்தைந்தாம்‌  தத்வமான ஆத்மா வேறுபட்டவன்‌; ஆனந்தமயமானவன்‌ என்பது  பெறப்படும்‌. 

"திருக் கண்டேன்‌' பாசுரம்‌ ஜீவாத்மா (இங்கே ஆழ்வார்‌) பரம  புருஷார்த்தமாகிய பகவதனுபவத்தை நேரடியாக அறிந்து, 
ஆனந்தமடைவதாகக்‌ கூறுவதால்‌, மகாரத்தை விளக்குவதாயிற்று. 

சாமவேதம்‌, ஸுவர்லோகம்‌: 
சாமவேதத்திலிருந்து ஸ்வ: என்னும்‌ சப்த விசேஷம்‌ பிறந்தது. 
ஸுவ: என்பது சுவர்க்க லோகம்‌. 
எண்ணத்தைக்‌ கடவுள்பால்‌  செலுத்துவதே சுவர்க்க லோகமாகிறது. 
ஸ்ரீமந்நாராயணனை  தரிசிப்பதே நிலையான சொர்க்க அனுபவம்‌. 'திருக்கண்டேன்‌: இதையே விவரிக்கிறது. 
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளைக்‌  காணச்‌ செல்லும்‌ வழி '*சொர்க்கவாசல்‌'” எனப்படுவதை நாம்‌  அறிவோம்‌. 

சத்துவ குணம்‌ மேலோங்கிய நிலையிலேயே ஸமாதி  நிலையை மனம்‌ அடைந்து, ஜகத்காரணனாகிய ஈசுவரனைக்‌ 
கண்டு, பரமானந்தம்‌ அடைய முடியும்‌. இதுவே பகவத்‌  சாட்க்ஷாத்காரம்‌, மோட்சம்‌ என்கிற புருஷார்த்தம்‌. 
“திருக்கண்டேன்‌'பாகரம்‌ சத்துவகுணம்‌, காரணம்‌, சாட்க்ஷாத்காரம்‌ (நேரில்‌ இறைவனைக்‌ காணுதல்‌), 
ஆனந்தம்‌, ஈசுவரன்‌, புருஷார்த்தம்‌ ஆகியவற்றின்‌ விளக்கமாகவே அமைந்திருக்கிறது 
என்பது நன்கு விளங்குகிறது. 


தியோ யோ ந: ப்ரசோதயாத்‌: 
“யார்‌ நம்முடைய அறிவைத்‌ தூண்டுகிறாரோ'' என்னும்‌  பொருளுடைய காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌: 
அந்த தியானத்தில்‌; ந: - நம்மை; விஷ்ணு, ப்ரசோதயாத்‌ -  தூண்டுவாராக
இது விஷ்ணு காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

ஈசுவரனாகிய மகாவிஷ்ணு பக்தனுக்கு இரங்கி, அவனது அறிவைத்‌ தூண்டி, அருள்‌ புரிந்தால்தான்‌, 
எம்பெருமானுடைய  திருக்காட்சி கிட்டும்‌. இவ்விதமே ஆழ்வார்‌ பகவதனுபவம்‌ பெற்று 'திருக்கண்டேன்‌' பாடினார்‌ என்க. 

நாராயணாய, வேங்கடேசாய: 
“ஓம்‌ நமோ நாராயணாய,:'' “ஓம்‌ நமோ வேங்கடேசாய* என்னும்‌ மந்திரங்களின்‌ கடைப்பதம்‌. 
நாராயண - நார * அயந.  “நார! என்றால்‌ அழியாத பொருள்களின்‌ கூட்டம்‌; 
அயந -  ஆதாரம்‌. நாரங்களுக்கெல்லாம்‌ அந்தர்யாமியாய்‌ வியாபித்து  ஆதாரமாய்‌ இருப்பவன்‌ நாராயணன்‌. 
நாராயணாய என்பது  நான்காம்‌ வேற்றுமை, பிரார்த்தனைப்‌ பொருளில்‌ வந்தது. 

“ஓம்‌ நமோ நாராயணாய”' :என்னும்‌ திருமந்திரம்‌ 
**சர்வகாரணனாய்‌ சர்வரக்ஷகனான எம்பெருமானுக்கே  உரியவனான நான்‌ சர்வசேஷியான அந்நாராயணனுக்கே எல்லா 
அடிமைகளையும்‌ செய்யப்‌ பெற வேணும்‌'' என்று பொருள்படும்‌  பிரார்த்தனை. ்‌ 

“திருக்கண்டேன்‌' பாசுரம்‌ நாராயணன்‌, பக்தர்களுக்கு  எளியவனாய்‌ தன்னை வெளிப்படுத்திக்‌ காட்டுவதை விவரிக்கும்‌ 
வகையில்‌ அமைந்துள்ளதால்‌ '*'நாராயணாய”'' என்பதன்‌  விளக்கமாக, உள்ளது எனலாம்‌. 

திரு - அலர்மேல்‌ மங்கை, மகாலட்சுமி, ஸீ 
ஆழிவண்ணன்பால்‌ - கடல்வண்ணக்‌ கடவுளிடம்‌; கண்டேன்‌ என்பதால்‌ ::ஸ்ரீநிவாஸனைக்‌ கண்டேன்‌'”  
ஸ்ரீமந்நாராயணன்‌  செளலப்யனாய்‌ நமக்கெல்லாம்‌ மிக எளியவனாகக்‌ காட்டிக்  கொடுக்கும்‌ அர்ச்சை நிலையே ஸ்ரீ வேங்கடேசன்‌. 
எனவே ஸ்ரீநிவாஸ பத விளக்கமாக “*“திருக்கண்டேன்‌'' அமைந்துள்ளது. 

விஷ்ணுவின்‌ ஐவகை நிலைகள்‌: 
உலகங்களை நிர்ஹிக்கும்‌ பொருட்டு, ஸ்ரீமந்நாராயணன்‌ 
பரத்வம்‌, வியூகம்‌, விபவம்‌, அந்தர்யாமித்வம்‌, அர்ச்சாவதாரம்‌  என்று ஐவகை நிலைகளில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌. , 
““திருக்கண்டேன்‌'* பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ ஐந்து முறை *“கண்டேன்‌'' என்று பேசியிருப்பதால்‌, 
எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையுமே கண்டிருப்பார்‌ என்றே தோன்றுகிறது. 
கீழ்ப் பாசுரங்களில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையும்‌ பன்முறை பேசியிருப்பதும்‌ இங்கு நினைவு கூறத்தக்கது. 
திருவேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு  பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐந்து நிலைகளையும்‌ குறிப்பிடுகிறார்‌. 

பாற்கடலும்‌ வேங்கடமும்‌ பாம்பும்‌ பனிவிசும்பும்‌ 
நூற்கடலும்‌ நுண்ணூல தாமரைமேல்‌ - பாற்பட்‌ 
டிருந்தார்‌ மனமும்‌ இடமாகக்‌ கொண்டான்‌ 
குருந்தொசித்த கோபாலகன்‌. 

பாற்கடல்‌ - திருப்பாற்கடல்‌ - வியூக நிலை. 
வேங்கடம்‌ - அர்ச்சாவதார நிலை.  
பனிவிசும்பு - வைகுந்தம்‌ - பரத்வ நிலை, 
மனம்‌ - அந்தர்யாமித்வ நிலை. 
கோபாலகன்‌ - விபவம்‌ (அவதார நிலை). 
எனவே '“திருக்கண்டேன்‌” பாசுரமும்‌ விஷ்ணுவின்‌ ஐந்து  நிலைகளையும்‌ கூறுவதாகக்‌ 8&ழே காண்போம்‌: 

திருக்கண்டேன்‌: . 
திரு நாட்டில்‌ (வைகுந்தத்தில்‌) திருமகளுடன்‌ திருமால்‌ திரு மா மணி மண்டபத்தில்‌ எழுந்தருளியிருப்பதைக்‌ கண்டேன்‌; -பரத்வநிலை. 
பொன்மேனி கண்டேன்‌: 
பொன்‌ . ஆபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ  வேங்கடாசலபதியின்‌ திருமேனியைக்‌ கண்டேன்‌; அர்ச்சாவதார நிலை. 
ஸ்ரீயின்‌ சேர்த்தியாலும்‌ பொன்மேனி எனலாம்‌. 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌: 
சர்வ வியாபியாகிய சூரியனின்‌ அழகிய ஏழு நிறங்களைக்‌  கண்டேன்‌; எல்லா உயிர்களிலும்‌ சூரிய நாராயணன்‌ 
வியாபித்திருக்கும்‌ அந்தர்யாமித்வ நிலை. 
பொன்னாழி கண்டேன்‌... என்னாழி வண்ணன்பால்‌ இன்று: 
ஆழி - சக்கரம்‌, கடல்‌; கடல்‌ வண்ணனைக்‌ கண்டதாகக்‌  கூறுவதால்‌, திருப்பாற்கடல்‌ நாதனைக்‌ குறிக்கிறது.
இது வியூக நிலை. 
புரிசங்கங்‌ கைக்கண்டேன்‌: 
பாஞ்சசன்னியம்‌ ஊதிய பார்த்தஸாரதியைக்‌ கண்டேன்‌. --அவதார நிலை. 

த்வய மந்திரம்‌ அல்லது மந்த்ர ரத்னம்‌: 
ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; 
ஸ்ரீமதே நாராயணாய நம:'' 
என்பதே ஸ்ரீவைஷ்ணவத்தில்‌ பிரசித்தி பெற்ற துவயமந்திரம்‌. 
இரண்டு வாக்கியங்களால்‌ ஆன துவயத்தை ஆசாரியர்கள்‌ அனைவரும்‌ ஆதரித்து, மந்த்ர ரத்னம்‌ என்று பாராட்டினர்‌, 

ஸ்ரீ என்றால்‌ திரு, மகாலட்சுமி, பெரிய பிராட்டியார்‌. எனவே  “'ஸ்ரீயுடன்‌ கூடிய நாராயணனின்‌ திருவடிகளையே சரணமாகப்‌  பற்றுகிறேன்‌; 
ஸ்ரீபுடன்‌ கூடிய நாராயணனுக்கே தொண்டு செய்ய  விரும்பி, வணங்குகிறேன்‌! என்பதே துவயத்தின்‌ பொருள்‌.
பூர்வ (முதல்‌) வாக்கியம்‌ உபாயம்‌ (வழி) எது என்பதையும்‌, உத்தர (இரண்டாவது) வாக்கியம்‌ உபேயம்‌, ப்ராப்யம்‌ (குறிக்கோள்‌) 
என்ன என்பதையும்‌ காட்டுகின்றன. 

த்வயத்தின்‌ மகிமை 
ஸ்ரீ என்னும்‌ மகாலட்சுமித்‌ தாயார்‌ அனைத்து ஜீவர்களுக்கும்‌ அன்னை, கருணையே வடிவானவள்‌, பக்தர்களுக்கு உடனே 
மனமிரங்கி, அருள்புரியும்படி, நாராயணனிடம்‌ புருஷகாரம்‌ (சிபாரிசு) செய்பவள்‌. 
பிராட்டியை முன்னிட்டுச்‌ சரசணடைவதே, சுலபமாக உய்வடைய வழி. பிராட்டியே உபாயம்‌ (வழி), பிராட்டியே உபேயம்‌ 
(குறிக்கோள்‌). எனவே இவளை 'புருஷகார பூதை' என்பர்‌. 

திருவந்தாதிகள்‌ துவய மந்திர சாரமானவை 
முதலாழ்வார்களின்‌ முதற்பாசுரங்கள்‌ 8ழ்க்கண்டவாறு துவய மந்திர சாரமானவை: 
ஆழ்வார்‌ பேயார்‌ பூதத்தார்‌ பொய்கையார்‌ 
பாசுரம்‌ திருக்கண்டேன்‌ அன்பேதகளி வையந்தகளி 
ஆழ்வார்‌ திரு நாரணற்கு அடிக்கே சூட்டினேன்‌ 
வாக்கு 
பூர்வ ஸ்ரீமந்‌ நாராயண  சரணெள சரணம்‌ 
வாக்கியம்‌ ப்ரபத்யே 
உத்தர ஸ்ரீமதே நாராயணாய நம 
வாக்கியம்‌ 

திருக்கண்டேன்‌ பாசுரத்தில்‌ வரும்‌ “திரு”, ஸ்ரீமந்‌, ஸ்ரீமதே என்பதையும்‌; 
அன்பேதகளியில்‌ வரும்‌ 'நாரணற்குஷ்‌ நாராயண, நாராயணாய என்பதையும்‌; 
வையந்தகளியில்‌ வரும்‌ 'அடிக்கே சூட்டினேன்‌' என்பது 'சரணெள (அடிகளை) சரணம்‌ ப்ரபத்யே", 
நம: என்பதையும்‌ குறிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ளன. 
எனவே  மூன்று இரத்தினங்கள்‌ போன்ற இப்பாசுரங்களிலும்‌, மந்திர இரத்தினமான துவயம்‌ பரிமளிக்கறது! 

இதைத்‌ தவிர முதலாழ்வார்கள்‌ பற்பல பாசுரங்களில்‌ “திரு” என்று ஸ்ரீயுடன்‌ சேர்த்தே ஸ்ரீநிவாஸனைப்‌ பாடியிருக்கிறார்கள்‌. 
ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ 
திருமலைக்‌ கோயிலில்‌ பிராட்டிக்குத்‌ தனி சன்னிதி  கிடையாது.
ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ நித்தியவாசம்‌ செய்கிறாள்‌. 
திருமலையப்பன்‌ அம்மையப்பன்‌! இதனால்தான்‌ இவனை வழிபடுபவர்களுக்கு, 
கைம்மேல்‌ பலன்‌ உடனடியாகக்‌ இடைத்துவிடுகிறது! 

ஸ்ரீதிவாஸனை 'பாலாஜி' (பாலா என்பது தாயாரின்‌ திருநாமம்‌) என்றாலே வடநாட்டில்‌ தெரியும்‌. அர்ச்சாவதார ரத்தினமான 
வேங்கடரத்தினம்‌ மந்திர ரத்தினமான துவயவடிவினன்‌ என்பதை ஆழ்வார்‌. ரத்தினங்கள்‌ மூவரும்‌ நன்கு அறிந்திருந்தனர்‌! 
ஸ்ரீநிவாஸன்‌ சிறப்பாக துவயமந்திரம்‌ பொலியும்‌ திருவடிவம்‌ கொண்டவன்‌ என்பதாலேயே முதலாழ்வார்கள்‌ விஷ்ணுவின்‌ 
அர்ச்சை நிலையில்‌ இவனுக்கே முதலிடம்‌ கொடுத்துப்‌ பாடியிருக்கிறார்கள்‌. ! 

---------------

பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி: 
பொய்கையாரின்‌ ''வையந்தகளி'" என்று தொடங்கும்‌ முதல்‌  திருவந்தாதி பரபக்தியையும்‌; 
பூதத்தாரின்‌ “அன்பே தகளி” எனத்துவங்கும்‌ இரண்டாம்‌ திருவந்தாதி பரஞானத்தையும்‌; 
பேயாழ்வாரின்‌ ''திருக்கண்டேன்‌'' என்று துவங்கும்‌ மூன்றாம்‌ திருவந்தாதி பரமபக்தியையும்‌ சொல்வதாக சிலர்‌ கொள்வர்‌. 

“பரபக்தி' என்பது எம்பெருமானை நேரில்‌ காணவேண்டும்‌ என்கிற ஆவல்‌; 
அவனை நேரில்‌ காணல்‌ 'பரஞானம்‌
பின்பு மேன்மேலும்‌ இடையறாது அனுபவிக்க வேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ 'பரமபக்தி', 

இவற்றை மற்றொரு விதமாகவும்‌ பண்டைய ஆசிரியர்கள்‌ விளக்குவர்‌: 
எம்பெருமானோடு கலந்தபோது ஸூகிக்கும்படியாகவும்‌,  பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவும்‌ இருக்கும்‌ நிலை 'பரபக்தி". 
எம்பெருமானுடைய முழுநிறைவு நேர்காட்சி “பரஞானம்‌”. 
அவனுடைய அனுபவம்‌ பெறாவிடில்‌ தீரைவிட்டுப்‌ பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்படி இருத்தல்‌ 'பரமபக்தி", 


முதலாழ்வார்களும்‌, நமது நிலையும்‌ 
பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி ஆகிய மூன்று நிலைகளையும்‌ 
முதலாழ்வார்கள்‌ மட்டுமின்றி திருவேங்கடமுடையானின்‌ 
பக்தர்கள்‌ அனைவருமே தகுதிக்கேற்றபடி  சிறிதளவாவது அனுபவிக்கிறார்கள்‌ எனலாம்‌! 

சம்சார வாழ்க்கையில்‌ உழன்று கொண்டிருந்தாலும்‌,  திருமலையின்‌ பெருமையையும்‌, ஏழுமலையானின்‌ 
மஹிமையையும்‌ பூர்வ ஜன்ம புண்ணியத்தால்‌ நாம்‌ கேட்கிறோம்‌. 
பூலோக வைகுந்தமாகிய திருமலைக்குச்‌ சென்று ஸ்ரீநிவாஸனை தரிசிக்க வேண்டும்‌ என்கிற ஆவல்‌ நமக்கு எழ, 
“'திருவேங்கடம்‌  அடை நெஞ்சமே!" என்று திருமங்கையாழ்வாரைப்‌ போல்‌ 
உற்சாகத்துடன்‌ கிளம்புகிறோம்‌. இது லேசான பரபக்தி! 

பிறகு திருமலைக்குச்‌ சென்று, எப்படியாவது முண்டியடித்துக்‌  கொண்டு, ஸ்ரீவேங்கடேசனை நொடிப் பொழுதாவது நேரில்‌ 
காண்கிறோம்‌. இது லேசான பரஞானம்‌! 

ஆயினும்‌ திருவேங்கடமுடையானை ஒருமுறை காண்பது  திருப்தியளிப்பதில்லை. பின்பு மேன்மேலும்‌ அவனை 
இடையறாது கண்டு அனுபவிக்க வேண்டும்‌ என்கற ஆவல்‌  எழுகிறது. இது லேசான பரமபக்தி! 

---------------

ஞானம்‌, பக்தி, சாக்ஷாத்காரம்‌ (இறைக்காட்சி) 

மூன்று திருவந்தாதிகளும்‌ முறையே ஞான, பக்தி, சாக்ஷத்காரங்களைப்‌ பற்றியவை என்று பெரியவாச்சான்‌ பிள்ளை 
அருளிச்‌ செய்திருக்கிறார்‌. 
“ஞானச்சுடர்‌' என்பதற்கு  "பரமபக்தியாகிற விளக்கு” என்றது அவருரை. 
மூன்றாம்‌ திருவந்தாதி அவதாரிகையிலும்‌--- 
*"ஞானத்தைச்‌ சொல்லுகிறது வைசந்தகளி; ஞான  விபாகமான பக்தியைச்‌ சொல்லுகிறது அன்பே தகளி. 
பக்தியாலே  சாக்ஷாத்கரித்த படி  சொல்லுகிறது இதில்‌ (திருக்கண்டேன்‌)'* என  அவர் தாமே அருளியுள்ளார்‌. 
 
இங்ஙனம்‌ ஞான, பக்தி, ஸாக்ஷாத்காரங்களை இவர்கள்‌ அருளிச்‌ செய்கிறார்கள்‌ என்றதைக்‌ கொண்டு, 
““பொய்கையாழ்வாருக்கு சாஸ்திர ஞானம்‌ மட்டுமே யுள்ளது. 
பூதத்தாழ்வாருக்கு அத்துடன்‌ பக்தியும்‌ சேர்ந்தது. 
பேயாழ்வாரே  சாசக்ஷாத்காரம்‌ செய்தவர்‌' என்ற பாகுபாடு கொள்ள வேண்டா. 
மூவரும்‌ மூன்றுமுள்ளவராயினும்‌, அம்மூன்றும்‌ முறையே வரவேண்டியவை யாகையாலே தமக்கு அம்முறையை அறிவிக்கக்‌ 
கருதி, அவரவர்‌ அடைவதாக அவற்றை அருளினார்கள்‌ என்பதே தத்துவம்‌. 

திரிவிக்ரமன்‌ திருவடியினின்று பெருகிய கங்கை மூன்றாகப்‌  பிரிந்தது போல்‌, அவன்‌ விஷயமான இவர்களின்‌ ப்ரபந்தம்‌ மூன்று 
பிரிவுற்றதென்றார்‌ ஸ்ரீதேசிகள்‌. 

இப்ரபந்தக்‌ கர்த்தாக்கள்‌ மூவராயினும்‌ பொருள்‌ ஒற்றுமை  பற்றி இம்மூன்றும்‌ ஒரு ப்ரபந்தமாகவே அமைகிறது. 
ஒரு  வ்யாகரணத்திற்குப்‌ பாணிநீ, காத்யாயனர்‌, பதஞ்சலி ஆடிய மூவரும்‌ கர்த்தாக்கள்‌ ஆனாப்போலே, 
இப்ரபந்தங்களுக்கும்‌  இம்முனிவர்‌ மூவரும்‌ கர்த்தாக்கள்‌ என்று உரையாசிரியர்‌  துள்ளார்‌. 
வேங்கடவன்தமர்‌ ஏற்றிய வேதவிளக்கு: 

முதலாழ்வார்கள்‌ ஸ்ரீநிவாஸப்‌ பிரியர்களாகையால்‌ அவர்களை 'வேங்கடவன் தமர்‌' எனலாம்‌. 
அவர்கள்‌ ஏற்றிய 
வையந்தகளி, அன்பேதகளி விளக்குகள்‌ ''நான்மறை அந்தி நடை விளங்கச்‌'' செய்வதால்‌ வேதவிளக்குகள்‌ ஆயின. - 
திருமலைக்கே வேதகிரி: என்றொரு பெயருண்டு. 
'“வேங்கட  வெற்பென விளங்கும்‌ வேதவெற்பே”' (வெற்பு - மலை) என்று  ஸ்ரீ தேசிகனும்‌ அருளிச் செய்தார்‌. 

திருவேங்கடவனையே ''உணர்வாரார்‌ உன்‌ பெருமை... வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌!'' என்று ஸ்ரீ 
பொய்கையாரும்‌, 
“வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பயின்று'” என்று பூதத்தாரும்‌, 
பேயாரும்‌ பாடியுள்ளனர்‌. வேதகிரி என்னும்‌ ்‌ குன்றின்‌ மேலிட்ட வேத விளக்கே வேங்கடவன்‌. 

இவற்றைக்‌ கருதியே இங்கே, ''வேங்கடவன் தமர்‌ ஏத்திய  வேத விளக்கு'' என்னும்‌ தலைப்பு அமைந்தது! 

வானரம்‌ வணங்கும்‌ வேங்கடம்‌ 

சமீப காலம்வரை, திருமலை என்றாலே வேங்கடேச பக்தர்களுக்கு அங்கே குரங்குகள்‌ செய்யும்‌ அட்டகாசங்களே 
நினைவுக்கு வரும்‌! வானர சேஷ்டைகளை நினைத்தே திருப்பாணாழ்வார்‌ 'மந்திபாய்‌ வடவேங்கடமாமலை' என்று 
மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌ போலிருக்கிறது. 
குரங்குகள்‌  ஏழுமலையில்‌ குதித்துக்‌ களிப்பூட்டிய காலம்‌ இன்று அநேகமாக மலையேறிவிட்டது எனலாம்‌. 
குரங்குகளுக்கு பதில்‌ குடில்களே திருமலையில்‌ எங்கும்‌ தென்படுகின்றன. ' 


பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்கார்‌ பதினேழாவது 
நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌. மாபெரும்‌ ரங்கநாத பக்தரான இவர்‌ 
திருவரங்கக்‌ கலம்பகம்‌, திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து  மாலை என்கற சிறந்த நூல்களை இயற்றினார்‌. 
திருவேங்கடவன்‌  இவர்‌ கனவில்‌ தோன்றித்‌ தன்னையும்‌ பாடும்படி கட்டளையிட, 
அய்யங்கார்‌. ''அரங்களைப்‌ பாடிய வாயால்‌ குரங்கனைப்‌  பாடுவேடீனோ?'” என்று அட்சியம்‌ செய்தார்‌. 
இதனால்‌ கோபம்‌  கொண்ட ஸ்ரீநிவாஸப்‌ பெருமாள்‌, 'கண்டமாலை' என்னும்‌ கொடிய நோயை விளைவிக்க, 
அய்யங்கார்‌ வேங்கடவளைப்‌  பாடியதாக வரலாறு. 
இவர்‌ 'திவ்விய கவி: எனப்படுவர்‌; 
இவர்‌ இயற்றிய எட்டு நூல்கள்‌ 'அஷ்டப்பிரபந்தம்‌' எனப்படும்‌. 

'குரங்கன்‌' என்றே வேங்கடவனை அலட்சியம்‌ செய்த திவ்வியகவி, அதற்குப்‌ பரிகாரமாக வேங்கடத்துக்‌ குரங்குகளையே 
பாடி, வானத்தை வரம்பாக உடையது திருமலை என்று போற்றியுள்ளார்‌. அற்புதமான கவிதை, 
'கவி' என்று ஆண்‌ குரங்கிற்குத்‌ தமிழில்‌ பெயரும்‌ உண்டு; 'கபி' என்னும்‌ வடசொல்‌, 
கவி என்றாகும்‌. 

"திருவேங்கடத்து மாலை” என்னும்‌ - நூலில்‌ பிள்ளைப்‌ பெருமாள்‌ அய்யங்கார்‌ காட்டும்‌ வேங்கடக்‌ காட்சிகளைக்‌ காண்போம்‌. 


“மண்மூலம்‌ தா என்று மந்திகடுவற்குரைப்ப  விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே.” (25) 

மண்மூலம்‌ - கிழங்கு; விண்மூலம்‌ - மூல நட்சத்திரம்‌; மந்தி - 
பெண்குரங்கு. கடுவன்‌ - ஆண்சுரங்கு. 

திருமலையில்‌ வாழும்‌ பெண்குரங்கு, தன்‌ காதலனிடம்‌ 
““மண்மூலம்‌ தா!” என்று கேட்கிறது. அதாவது, 
*“மண்ணிலிருக்கும்‌ கிழங்கை அகழ்ந்தெடுத்து, எனக்கு உணவாகக்‌ கொடு'' என்கிறது. 
இதை “விண்மூலம்‌', வானத்திலுள்ள மூல  நட்சத்திரம்‌ கேட்டு, தன்னைத்தான்‌ மந்தி பிடித்துக்‌ கொடுக்கச்‌ 
சொல்வதாக நினைத்து, பயத்தால்‌ நடுங்குகிறது. 

திவ்விய கவியின்‌ வருணனை, திவ்வியமான வருணனை! 
மூல நட்சத்திரத்தின்‌ வரை உயர்ந்து வானளாவ நிற்கிறது  திருமலை. எனவேதான்‌ குரங்கு கேட்பது நட்சத்திரத்திற்குத்‌ 
தெளிவாகக்‌ கேட்டு விடுகிறது. 'ஆண்மூலம்‌ அரசாளும்‌” என்பர்‌, 
ஆண்‌ குரங்கு மூல நட்சத்திரத்தில்‌ அவதரித்தது போலும்‌! 
வேங்கடத்துக்‌ கடுவன்‌ நட்சத்திர நாயகர்களான தேவகணங்களும்‌ 
அஞ்சத்தக்க அசாத்திய வலிமை படைத்தது என்பதும்‌ தெரிகிறது! 

மாம்பழம்‌ போல்‌ தித்திக்கும்‌ இன்னொரு திருமலைக் காட்சியையும்‌ திவ்விய கவி உட்டியுள்ளார்‌: 

"*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌  மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே: (42 

வாவு .- தாலிச்செல்லும்‌; கவின்‌ - அழகிய; மேவு - பொருந்திய; கவி - கபி, ஆண்குரங்கு. 

திருவேங்கடத்தில்‌ பெண்‌ குரங்கு மாமரத்தில்‌ பழுத்துத்‌ தொங்கும்‌ தேமாங்கனியைப்‌ பறித்து, தாவிச்‌ செல்கின்றது. 
இதை  தேவலோகத்தில்‌ கற்பகத்‌ தருவில்‌ உட்கார்ந்திருக்கும்‌ ஆண்குரங்கு  பார்த்துவிடுகிறது; 
தனக்குத்‌ தருமாறு அங்கேயி௫ந்து கையை நீட்டுகின்றது! 

கவி இங்கே மறைமுகமாகக்‌ கூறுவது: திருமலை, தேவலோகம்‌ வரை உயர்ந்து நிற்கிறது. 
கற்பக மரத்தின்‌  பழத்தைவிட, வேங்கடத்தில்‌ மந்தி பறித்த மாம்பழம்‌ சுவையானது, பரம போக்யமானது. 
எனவே தேவலோகத்தையும்‌ விட உயர்ந்தது பூலோக வைகுண்டமாகய திருமலை. 


“குரங்கன்‌” என்று ஏழுமலையானை இகழ்ந்தவர்‌, அவன்‌ அருளைப்‌ பெற்றதும்‌, அரங்கனை விடவும்‌ உயர்வாகப்‌ புகழ்ந்து 
பாடிவிட்டார்‌ போல்‌ தோன்றுகிறது. 'வானர வம்பன்‌” என்பது போல்‌ வேங்கடவனை நிந்தனை செய்த பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌ [வான வரம்பன்‌' ஆகவே அவனை வந்தனையும்‌ செய்து விடுகிறார்‌! அரங்கனுக்கும்‌, வேங்கடவனுக்கும்‌ இடையே 
மூர்த்தபேதம்‌ இல்லை என்பதை நேரடியாக உணர்ந்தவர்‌ நம்‌ திவ்விய கவி, 


அய்யங்காரின்‌ இவவிய கவிதை மாந்தோப்பில்‌ இரண்டு மாங்கனிகளைப்‌ பறித்துச்‌ சுவைத்த நம்முடைய 'மனம்‌ என்னும்‌ 
மாயக்குரங்கு' அடுத்து ஆழ்வார்களின்‌ பக்திப்பூங்காவில்‌ தாவிக்‌ குதிக்கிறது! 
பக்தி ரசம்‌ சொட்டும்‌ ஞானப்பழங்கள்‌ நாலாயிரத்தின்‌ ஜன்மபூமிக்கு அல்லவா வந்துவிட்டோம்‌? 
வந்த இடத்தில்‌ வேண்டிய சரக்கிற்குப்‌ .பஞ்சமேயில்லை என்பதை அறிந்து, 
இதற்குமுன்‌ ஆடிய களைப்புத்‌ நீர, நம்‌ மனக்குரங்கு சற்றே  கண்ணயர்கிறது, 
பூதத் திருவடி என்னும்‌ கற்பக மரத்தின்‌ இளையில்‌. பளபளவென்று பொழுதும்‌ புலர்ந்து விடுகிறது. 
இனி: நம்‌  மனக்குரங்கு என்ன செய்ய வேண்டும்‌ என்பதை பூதத்தாழ்வாரே கூறுகிறார்‌. 
ஆழ்வார்‌ கூறுவதிலிருந்து நாம்‌ வந்திருக்கும்‌ இடம்‌ திருமலையே என்பதையும்‌ தெரிந்து இன்புருகு சிந்தையராகிறோம்‌! 
ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ 
போது' அறிந்து வானரங்கள்‌ பூஞ்சுனை புக்‌(கு) ஆங்கு அலர்ந்த 
போது” அரிந்து கொண்டு ஏத்தும்‌ போ(து) உள்ளம்‌ - போதும்‌ 
மணி வேங்‌ கடவன்‌ மலரடிக்கே செல்ல 
அணி வேங்‌ கடவன்‌ பேர்‌ ஆய்ந்து. (72) 

போது" - விடியற்காலம்‌, பொழுது; போது” - மலர்‌; அரிந்து -கொய்து; போதுள்ளம்‌ உள்ளமே போ, புறப்படு; .பேர்‌ - திருநாமம்‌. 

திருமலைக்‌ குரங்குகள்‌ பொழுது விடிந்ததை அறிந்து, சுவாமி புஷ்கரிணி, பாபநாசம்‌ அருவி, பூஞ்சுனைகள்‌ போன்ற 
தீர்த்தங்களில்‌ புகுந்து நீராடும்‌. அப்போதே நீர்நிலைகளில்‌ அன்றலர்ந்த புத்தம்புதிய பூக்களைப்‌: பறித்துக்கொண்டு ஸ்ரீ 
ஸ்ரீ வேங்கடேசனுக்கு சமர்ப்பித்துத்‌ துதி செய்யும்‌. 
என்‌ மனமென்னும்‌  மாயக்குரங்கே! நீயும்‌ புறப்படுவாய்‌. உலகத்திற்கு மணிமகுடம்‌ வைத்ததுபோல்‌ திகழும்‌ திருமலையிலுள்ள 
ஸ்ரீ வேங்கடேசனின்‌  சஹஸ்ரநாமங்களை ஓதிக்கொண்டு, ' திருவேங்கடவனுடைய 
திருவடித்‌ தாமரைகளிலே சென்று சேரும்படியாக பூக்களை  சமர்ப்பிக்கக்‌ கடவாய்‌! 

திருமலை வானரங்கள்‌ அதிகாலையில்‌ ஏழுமலையானை  வணங்க நிகழ்த்தும்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாத சேவையை ஆழ்வார்‌ 
அழகாகப்‌ பாடியுள்ளார்‌. 
ஆஞ்சநேயர்‌ அவதரித்த அஞ்சனாத்ரி ஏழுமலைகளில்‌ ஒன்று. சமீபத்தில்‌ இம்மலைமீது அனுமாருக்குப்‌ 
பெரிய சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எனவே அஞ்சனாத்ரி  வானரங்கள்‌ சிறிய திருவடியாகிய அனுமன்‌ அடிச்சுவட்டில்‌ 
வேங்கடராமனை வழிபடுவதில்‌ ஆச்சரியம்‌ ஒன்றுமில்லை. 
ஆழ்வார்‌ அருளியபடியே, இன்று ஸ்ரீ வேங்கடேசன்‌ சன்னிதிக்கு நேர்‌ எதிரே, கோயிலுக்கு வெளியில்‌, ஆஞ்சநேயரே 
கைகூப்பியபடி காட்சியளிக்கிறார்‌. 
அலைபாயும்‌ நம்‌ மனக்குரங்கிற்கு ஆழ்வார்‌ சிறந்த உபதேசம்‌  செய்துள்ளார்‌. திருப்பதிக்குச்‌ சென்றுதான்‌ திருவேங்கடவனை 
சேவிக்க முடியும்‌ என்பதில்லை. தாம்‌ எங்கிருந்தாலும்‌, காலையில்‌ நீராடி, சுப்ரபாதம்‌ முதலிய துதிபாடி, மானசீகமாகவே பகவான்‌ 
திருவடிகளில்‌: புஷ்பாஞ்சலி செய்து அவனை தியானிக்கலாம்‌. 
இத்தகைய மானசீக பூஜையும்‌, ஜபமுமே மிகச்  சிறந்தன என்று  சாஸ்திரங்கள்‌ அனைத்துமே கூறுகின்றன. 
அடுத்து பேயாழ்வார்‌ இரண்டு அற்புதமான திருமலை வானரக்‌ காட்சிகளைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறார்‌. 
இவையே திவ்விய கவியின்‌ மேற்கூறிய பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தவை. 
இப்பொழுது பூதத்தாழ்வார்‌  என்னும்‌ மாமரத்திலிருந்து நம்முடைய மனக்குரங்கு, பாய்ந்து 
**பிடித்தாலும்‌ பிடித்தான்‌, புளியங்கொம்பாய்ப்‌ பிடித்தான்‌'' என்று 
சொல்வார்களே, அதுபோலப்‌ பேயாழ்வார்‌ என்னும்‌ ஆன்மீகப்‌ புளியம்கொம்பைப்‌ பிடித்து விடுகிறது! 

தெளிந்த சிலாதலத்தின்‌ மேல்‌ இருந்த மந்தி 
அளிந்த கடுவனையே நோக்கி - விளங்கிய
வெண்மதியம்‌ தா என்னும்‌ வேங்கடமே! மேலொரு நாள்‌ . 
மண்மதியில்‌ கொண்டு உகந்தான்‌ வாழ்வு. (58) 

தெளிந்த - பளபளப்பான; சிலாதலம்‌ - கற்பாறையின்‌ தலம்‌, இங்கே படிகப்பாறை; மந்தி '- பெண்குரங்கு; 
அளிந்த - அன்புடைய; கடுவன்‌ - ஆண்‌ குரங்கு; மதியம்‌ - சந்திரன்‌; 
மண்‌ மதியில்‌ கொண்டு - பூமியை புத்தி சாதுர்யத்தினால்‌  ஏற்றுக்கொண்டு. 

பளபளப்பான படிகப்பாறையின்‌ மீது உட்கார்ந்திருக்கும்‌ பெண்குரங்கு, தன்னிடம்‌ காதல்‌ கொண்ட ஆண்‌ குரங்கை நோக்கி 
“ஒளி வீசும்‌ வெண்மையான பூர்ணசந்திரனைத்‌ தா!'' என்று கேட்குமிடமே வேங்கடம்‌." 
முன்னொரு காலத்தில்‌, மூன்றடி  மண்ணை புத்திசாதுர்யத்துடன்‌ கேட்டு, மகாபலிச்‌ சக்கரவர்த்தியிடமிருந்து அதை இன்னும்‌ 
அதிசாமர்த்தியமாக உலகங்களையே மூன்றடியால்‌ அளந்து எடுத்துக்கொண்டு திருப்தியடைந்த உலகளந்தப்‌ பெருமாள்‌ வாழுமிடம்‌ இது! 
 
மந்திக்குச்‌ சந்திரன்‌ எதற்காகா கண்ணாடி போல்‌  பளபளப்பான வஸ்து என்றால்‌ குரங்குக்கு அதில்‌ ப்ரீதி (பிரியம்‌) 
உண்டாவது இயற்கை, 'விளங்கிய வெண்மதியம்‌' என்ற அடைமொழியின்‌ கருத்தைப்‌ பெரிய வாச்சான்பிள்ளை கூறினது - 
**சந்திரனுடைய மேற்புற மாகையினாலே களங்கமற்று  உஜ்வலமாயிருந்துள்ள சந்திரமண்டலத்தை'* என்றவாறு. 
திருமலை சந்திரமண்டலத்திற்கு மேல்‌ வளர்ந்திருப்பது என்றபடி. 
அளிந்த - ப்ரணயகலஹம்‌ (ஊடல்‌) நீங்கத்தான்‌ ஏதேனும்‌ செய்ய விரும்பியது ஆண்குரங்கு
மதியின்‌ கொண்டு - கேட்டதிலும்‌ சாதுர்யம்‌, கொண்ட வகையிலும்‌ சாதுர்யம்‌. ' 

வெண்மதியம்‌ தா: 
ஆஞ்சநேயர்‌ அஞ்சனாத்ரி என்னும்‌ திருமலையின்‌ மீது பிறந்தவுடனேயே சூரியனைப்‌ பழம்‌ என்று நினைத்து 
அதைப்பிடிக்க ஆகாயத்தில்‌ தாவினார்‌. திருமலையில்‌ பிறப்பவர்களின்‌ ஆற்றல்‌ அத்தகையது. 
“நீயும்‌ அதே மலையில்‌ பிறந்து, அதன்‌ மீதே வாழ்கிறாய்‌. அனுமனைப்போல்‌ சூரியனைப்பிடிக்கும்‌ சக்தி இல்லாவிட்டாலும்‌, 
உன்னால்‌  குறைந்தபட்சம்‌ வெகு அருகிலுள்ள சந்திரனையாவது பிடித்துத்‌ தர முடியாதா?” என்று 
ஆண்குரங்கற்கு பலப்பரீட்சை வைக்கிறது மந்தி, இதைக்கேட்ட சந்திரன்‌ நடுங்குகிறான்‌, 
'*குரங்கு: கையில்‌  கிடைத்த பூமாலைபோல நம்‌ கதியும்‌ அதோகதி ஆகிவிடுமோ?” 
என்று பயந்து. திருமலையின்‌ உயர்வும்‌, மகத்துவமும்‌ அத்தகையது! 

“வெண்‌ மதியம்‌ தா” என்னும்‌ பேயாழ்வாரின்‌ கருத்தை ' மூலமாகக்‌ கொண்டே, பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்காரும்‌, 
“மண்மூலம்‌ தா என்று மந்தி கடுவற்குரைப்ப 
விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே'' --என்று பாடினார்‌. 

திருமலையின்‌ குரங்குகளுக்கே சந்திரனையும்‌, மூலநட்சத்திரத்தையும்‌ பிடித்துத்‌ தரும்‌ ஆற்றல்‌ உண்டென்றால்‌, 
அங்கெழுந்தருளியிருக்கும்‌ வேங்கடவனுக்கு எத்தகைய சர்வசக்தி இருக்க வேண்டும்‌? 
எல்லா உலகங்களையும்‌ காலால்‌ அளந்து “மண்‌ மதியில்‌ கொண்டு உகந்தான்‌!! ஆகத்தானே அவன்‌ இருக்கமுடியும்‌? 
இவ்விதமே அற்புதமாகப்‌ , பாசுரத்தை முடித்திருக்கிறார்‌. பேயார்‌!
அனுமார்‌ ஒரே தாவலாக இலங்கையைத்‌ தாண்டியதுபோல, மந்தி, கடுவன்‌ காட்சியை 
விவரித்த ஆழ்வாரின்‌ மனம்‌ ஒரே அடியில்‌ மலையுச்சிக்குப்‌ போய்த்‌ திருவேங்கடமுடையானையே சிக்கெனப்‌ பிடித்து விடுறைது
சந்திரனையும்‌, சூரியனையும்‌ பிடித்து என்ன பயன்‌? 
இவையனைத்தையும்‌ படைத்த ஏழுமலையானின்‌ திருவடிகளைப்‌ பிடிப்பதுதானே பிறவிப்பயன்‌? 
இதை ஆழ்வார்களைப்போல்‌ செய்கிறவர்களே வாழ்வில்‌ உகப்படைவர்‌ என்பது 'உகந்தான்‌ 
வாழ்வு" என்பதிலிருந்து அறியக்கடக்கிறது. 
மண்மதியிற்‌  கொண்டுகந்தான்‌ வாழ்வு - திருமலையப்பனின்‌ திருவடி மண்ணை 
மதியிற்‌ கொண்டு உகப்பவர்களின்‌ வாழ்வே வாழ்வு. 

கண்ணாடிபோல்‌ மின்னும்‌ வெண்ணிலாவில்‌ தன்னுடைய முகத்தழகைப்‌ பார்த்துக்‌ கொள்ள விரும்பி ''வெண்மதியம்‌ தா”! 
என்று குரங்கு கேட்டதை மேற்பாசுரத்தில்‌ கண்டோம்‌. 
கண்ணாடிபோல்‌ முகம்‌ காட்டும்‌ நீர்நிலையில்‌ தன்‌ முகத்தை  ஆண்குரங்கு பார்த்தால்‌ என்ன செய்யும்‌? 
இதைக்‌ கீழ்ப் பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ பாடுகிறார்‌--ஸ்ரீ பேயாழ்வார்‌ 

பார்த்த கடுவன்‌ சுனைநீர்‌ நிழல்‌ கண்டு 
பேர்த்து ஓர்‌ கடுவன்‌ எனப்பேர்ந்து - கார்த்த 
களங்கனிக்குக்‌ கைநீட்டும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
விளங்கனிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு (68) 

பேர்த்து - அப்புறப்படுத்த முயன்று; பேர்ந்து - தானே அசைந்து; கார்த்த - கரிய; களங்கனி - களாக்காய்‌, பழம்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு நாள்‌; விளங்கனி - விளீஈம்பழம்‌; 
கன்று - இங்கு சன்று வடிவில்‌ வந்த வத்ஸாசுரன்‌; வெற்பு - மலை. 

திருவேங்கடமலையிலுள்ள சுனைநீரில்‌ ஓர்‌ ஆண்‌ குரங்கு தன்னுடைய நிழல்‌ தெரிவதைப்‌ பார்த்து, அதைத்‌ தன்‌ எல்லையில்‌ 
புகுந்து ஆக்கிரமிக்க முயலும்‌ இன்னொரு ஆண்குரங்கு என்று நினைத்துத்‌ துரத்தியடிக்க முயல்கிறது! பயனில்லாமல்‌ போகவே 
தானே அங்கிருந்து நகர்ந்து விடுகிறது. அப்பொழுது ஓர்‌ களாப்பழம்‌ நேரிலோ, நீரில்‌ நிழலாகவோ தோன்ற அதைப்‌ 
பறிப்பதற்குக்‌ கடுவன்‌ தன்‌ கையை நீட்டுகிறது. முன்னொரு காலத்தில்‌ விளாம்பழத்தைப்‌ பறிப்பதற்காக, வத்ஸாசுரன்‌ என்கிற 
'கன்றை விட்டெறிந்த கிருஷ்ணனுடைய மலை இது. 
திருமலைச்‌ சுளைநீர்‌ பளிங்குபோல்‌ முகம்‌ காட்டுமளவிற்கு சுத்தமானது. அதில்‌ தத்ரூபமாகத்‌ தெரிந்த தன்‌ உருவத்தைப்‌ பார்த்த 
ஆண்குரங்கு பிரமித்துவிட்டது. . களங்கனியைப்‌ பறிக்கக்‌ கைநீட்டிய குரங்கை விவரித்த ஆழ்வாருக்கு உடனே, கன்று 
வடிவில்‌ தன்னைக்‌ கொல்வதற்கு வந்த வத்ஸாசுரனை எறியக்‌ கைநீட்டிய கண்ணனின்‌ நினைவு வந்து விடுறது. 
விளங்களிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு: 
அசுராவேசங்கொண்டு, கோபர்களைக்‌ கொல்லக்‌ காத்திருந்த விளம்பழங்களை வீழ்த்தினான்‌; அதற்காக கன்று வடிவில்‌ வந்து 
ஒளிந்து கொண்டிருந்த வத்ஸாசுரனை, எறிதடியாக, மலைப்பிஞ்சாகப்‌ பயன்படுத்தினான்‌ கிருஷ்ணன்‌, ஒரே கல்லில்‌ 
இரண்டு மாங்காய்‌ அடிப்பதுபோல! விளங்கனியை அடித்த வேங்கடகிருஷ்ணனுக்குக்‌ களங்கனி பிரியமென்று நினைத்தே 
திருமலைக்‌ கடுவன்‌ அதைப்‌ பறிக்கக்‌ கைநீட்டியது போலும்‌! 

பேயாழ்வாரின்‌ பாசுரத்திலுள்ள சிறந்த கருத்தைக்‌ கைநீட்டிப்‌ பறித்துக்‌ கொள்கிறார்‌ திவ்விய கவி பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌. பறித்தவா்‌-- 
“*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌ 
மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே” --என்று தம்முடைய கவித் திறத்தையும்‌ சேர்த்தே பாடுூறார்‌. 
------------

வேடர்‌ வில்வளைக்கும்‌ வேங்கடம்‌ 
வேடர்‌ என்பவர்கள்‌ காட்டிலே வேட்டையாடியே பிழைப்பவர்கள்‌. குறவர்‌ எனப்படுபவர்கள்‌ இவர்களை விடச்‌ 
சற்று நாட்டுடன்‌ அதிகத்‌ தொடர்பு உடையவர்கள்‌ எனலாம்‌. 
குறவர்கள்‌ தினைப்பயிரிடுவது, பிரம்பு அறுத்துக்‌ கூடைகள்‌ பின்னுவது, மலையில்‌ கிடைக்கும்‌ தேன்‌, கழங்கு போன்றவற்றை 
விற்பது ஆகியவற்றைச்‌ செய்து பிழைப்பர்‌. 
வேடர்களும்‌,  குறவர்களும்‌ வேங்கடத்தில்‌ வில்‌ வளைத்த காட்சிகளை ஆழ்வார்கள்‌ பாடியிருக்கின்றனர்‌. 

மலையும்‌, மலைசார்ந்த இடமும்‌ தமிழில்‌ 'குறிஞ்சி' என வழங்கப்படும்‌. எனவே வேங்கடம்‌ குறிஞ்சி நிலத்தைச்‌ சேர்ந்தது. 
“இத்தகைய இடத்தின்‌ கருப்பொருளாகிய குறவர்‌, யானை, குரங்கு, பாம்பு போன்றவற்றை ஆழ்வார்கள்‌ குறிப்பிட்டுச்‌ 
சொல்லும்‌ அழகு அவர்களுடைய கவித்திறனைக்‌ காட்டுவதுடன்‌ நம்மையும்‌ கவிதை அநுபவத்தின்‌ கொடு முடிக்குக்‌ கொண்டு 
செலுத்துகின்றது”,  
பொய்கையாழ்வார்‌ ஒரு பாசுரத்தில்‌ வேங்கடமலையின்‌ குறவர்‌, யானை, பாம்பு ஆகியவற்றை இணைத்துப்‌ பாடுறார்‌, 
இப்பாட்டில்‌ பேசப்படும்‌ பொருட்கள்‌ யாவுமே திருமாலுடன்‌ விசேஷத்‌ தொடர்பு கொண்டவை என்பதும்‌ இதன்‌ சிறப்பு. 

ஊரும்‌ வரியரவம்‌ ஒண்குறவர்‌ மால்யானை 
பேர எறிந்த பெருமணியை - காருடைய 
மின்னென்று புற்றடையும்‌ வேங்கடமே! மேலகரர்‌ 
எம்மென்னும்‌. மாலது இடம்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -38) 

ஊரும்‌ - ஊர்ந்து செல்லும்‌; வரி - கோடு; அரவம்‌ - பாம்பு; மால்‌ யானை - பெரிய யானை; ஒண்‌ - அழகிய, சிறப்பு வாய்ந்த; 
மணி - மாணிக்கம்‌; கார்‌ - மேகம்‌; மின்‌ - மின்னல்‌; எம்மென்னும்‌ * எம்முடையது என்று கொண்டாடும்‌; மாலது - திருமாலுடைய. 

திருவேங்கடம்‌ என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ வாழ்வதால்‌ சிறப்புடைய குறவர்கள்‌ தங்கள்‌ இனைப்புளங்களில்‌ பட்டி மேயும்‌ 
யானையைத்‌ துரத்துவதற்காகப்‌ பரண்களில்‌ இருந்தபடியே பெரிய, பெரிய மாணிக்கக்‌ கட்டிகளை அதன்மேல்‌ வீசுகின்றனர்‌. 
அப்பொழுது அங்கு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்‌ மலைப் பாம்புகள்‌ யானை மீது பொழியும்‌ மாணிக்க மழையைக்‌ காண்கின்றன; 
யானையை மேகமாகவும்‌, இரத்தினங்களை மின்னல்களாகவும்‌ எண்ணி மயங்குகின்றன. 
மின்னலுடன்‌  இடிதோன்றும்‌ என்று மிரண்டு, பாம்புகள்‌ தங்கள்‌ புற்றுக்களில்‌ புகுந்து கொள்கின்றன. 

ஒண்குறவர்‌ எறிந்த பெருமணி; 
திருமலை வேங்கடேசனிடமிருந்து எந்நேரமும்‌ மகத்தான ஆன்மீக அலைகள்‌ எழுந்து உலகெங்கும்‌ பரவுகின்றன. 
இங்கே பூசிப்பவர்‌, தியானிப்பவர்‌, வாழ்பவர்‌ அனைவருமே தங்களை யறியாமல்‌ இதனால்‌ உயர்ந்த மனநிலைகளை அடைந்து, 
ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர்‌. அத்தகைய ஆனந்த நிலையம்‌ இது. இத்தகைய சக்திவாய்ந்த திவ்ய தேசத்தில்‌ தொடர்ந்து 
வாழ்வதால்‌, அங்குள்ள குறவர்களும்‌ சத்துவ குணம்‌ மேலோங்கியவர்களாக ஆகி விடுகின்றனர்‌. 
விலை மதிக்க முடியாத மாணிக்கங்களும்‌, இரத்தினங்களும்‌ அவர்களுக்கு சற்றும்‌ இலட்சியமில்லை! 
யானையை அடிப்பதற்கு கற்களுக்கு பதில்‌  மாணிக்கக்‌ கட்டிகளையே உபயோகிக்கின்றனர்‌. 
சமயக் குரவர்களையும்‌ - விஞ்சிவிடுவர்‌  போலிருக்கிறதே. நம்‌ திருமலைக் குறவர்கள்‌! 
எனவே ஆழ்வார்‌ இவர்களை 'ஒண்குறவர்‌' எனகிறார்‌. ஒண்‌ - ஒளிவீசும்‌. மகா தேஜஸ்‌ வீசும்‌ குறவர்கள்‌ இவர்கள்‌. 
கிருஷ்ணன்‌. தங்களிடையே அவதரித்ததால்‌ சிறப்புற்ற ''அறிவொன்றும்‌ இல்லாத ஆய்க்குலத்து'' கோபர்களைப்‌ போன்றே, 
ஸ்ரீ வேங்கடாசலபதி  திருமலைக்‌ குறவர்களிடையே குறிஞ்சி நிலத்‌ தலைவனாக உறைவதால்‌ இவர்களும்‌ ஆழ்வாரால்‌ உயர்வாகப்‌ 
பேசப்படுகன்றனர்‌. 
“ஓண் குறவர்‌' என்பது அழகிய  குறவர்கள்‌, சிறந்த குறவர்கள்‌ என்று பொருள்படும்‌. 
“ஒண்மையாவது இவர்கள்‌ பாட்டன்‌-பூட்டனிலே ஒருத்தன்‌ பூமியிலே இறங்கினான்‌ என்றும்‌ 
பழியின்றிக்கே இருக்கை” என்பது வியாக்கியானம்‌. 
அஃதாவது, 
வழி வழியாகத்‌ திருப்பதி மலையை விட்டுக்‌ 8ழே இறங்காமல்‌ அங்கேயே பெயராது வாழும்‌ சிறப்பு அந்தக்‌ குறவர்கட்கே உரியது 
என்று கூறி ஆழ்வாரின்‌ கருத்தை விளக்குவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை. 
அக்குறவர்கள்‌ கற்களுடன்‌ மாணிக்கக்‌ கற்களையும்‌ எறிவர்‌ என்பது வெறும்‌ உயர்வு நவிற்சியன்று; 
அவர்களுடைய மதிப்பிட்டில்‌ கல்லும்‌, மாணிக்கமும்‌ ஒன்றே என்பது குறிப்பு. 

பெகுமணி: 
பெரிய மாணிக்கம்‌. குறவர்கள்‌ வீரியெறியும்‌ இது, திருவேங்கடவனுக்கும்‌ பொருந்தும்‌. கருநிறம்‌, 
விலைமதிப்பின்மை, ஒளிவீசுதல்‌, பெறுவதற்கு அருமை போன்ற தன்மைகள்‌ கொண்டதால்‌ எம்பெருமானுக்கு மாணிக்கத்தை 
உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு. 
'அண்ணல்‌ மாயன்‌' என்று தொடங்கும்‌ பாசுரத்தில்‌ (3-3-3) நம்மாழ்வார்‌ திருவேங்கடவனை 
“கண்ணன்‌ செங்களனிவாய்க்‌ கருமாணிக்கம்‌”* என்று குறிப்பிடுகிறார்‌. 
திருமலைக்கும்‌ 'சிந்தாமணிகிரி' என்கிற  மணியான  திருநாமமுண்டு. 
வேண்டியதைத்‌ தருபவர்‌ திருமலையாழ்வார்‌! மணிவண்ணனுக்கு ஏற்ற மணிமலை! 

மால் யானை: 
மால்‌ - இங்கு, *பெரிய' என்று பொருள்படும்‌. மற்றபடி “மால்‌' என்றால்‌ திருமால்‌. இதற்கு வ்யாமோகமே (பிரேமையே) 
வடிவானவன்‌, தன்னை ஆச்ரமித்தவர்கள்‌ (பற்றியவர்கள்‌) விஷயத்தில்‌ பெரும்‌ பித்தன்‌, பக்தவத்ஸலன்‌ என்று பொருள்‌. 
இவ்விதமே யானையும்‌ தன்னைப்‌ பற்றிய பாகன்‌ முதவியோரிடத்திலே மிகுந்த அன்பு செலுத்தும்‌; இத்துடன்‌ 
கருநிறம்‌, நெடிய உருவம்‌, காண்பவர்க்கு எப்பொழுதும்‌ களிப்பூட்டுதல்‌ போன்றவற்றால்‌ .. யானையைத்‌ திருமாலுக்கு 
உவமை கூறுவதும்‌ மரபாகிறது. எனவே ஆழ்வார்‌ மால்‌, பானை ஆகியே இரு பதங்களையுமே சேர்த்து அர்த்தபுஷ்டியாக 
“மால்யானை' என்று அழகுற அமைத்திருப்பது, கற்கக்‌ கற்க களிப்பூட்டுகின்றது! 

ஊரும்‌ வரி அரவம்‌: 
சளர்ந்து செல்லும்‌, கோடுகளை உடைய பாம்பு. இதற்கும்‌ திருமலைக்கும்‌ நிறைய சம்பந்தம்‌ உண்டு. திருமலையே 
ஆதிசேஷன்‌, அரவணை என்பர்‌. எனவே திருமலையாழ்வார்க்கு அரவகிரி, சேஷகிரி, சேஷாத்ரி என்ற திருநாமங்களுண்டு. 
சேஷாசலத்தின்‌ மீது பேருந்தில்‌ நாம்‌ ஊர்ந்து செல்லும்போது, பாதையும்‌ 'ஊரும்‌ வரி அரவம்‌' போன்றே வளைந்து, வளைந்து 
செல்கிறது! போகும்‌ வழி 'ஊரும்‌ வரி அரவம்‌' என்றால்‌, போகும்‌ ஊரும்‌ அரவ கிரி. 

காருடைய மின்‌: 
யானையைக்‌ கார்மேகமென்றும்‌, குறவர்கள்‌ அதைத்‌ துரத்த வீசிய மணியின்‌ ஒளியை மின்னலென்றும்‌ நினைத்து பயந்து 
பாம்பு புற்றை அடைகிறது. யானை, மேகம்‌, மணி ஆகிய மூன்றுமே திருமாலுக்கு உவமைகளாகக்‌ கூறப்படுபவை; 
மூன்றையும்‌ ஒரே இடத்தில்‌ ஒன்றாகக்‌ கண்டு மயங்குகிறது அரவம்‌. மயக்குபவன்‌ மாயோன்‌, திருமால்‌; அவனுக்கு 
உவமையாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ இவ்விதமே மயக்கும்‌ தன்மையுடைன போலும்‌! மேகங்கள்‌ எப்பொழுதும்‌ தவழ்ந்து 
கொண்டிருப்பது திருமலை; அதன்‌ மீது மேக வண்ணனாகிய வேங்கடவன்‌ நின்று கொண்டிருப்பது பொருத்தமே! 
இவனுக்கு  ஸ்ரீ ஆண்டாள்‌ மேகவிடுதூதும்‌ அருளிச்‌ செய்துள்ளாள்‌. 

மின்னலைப்‌ போல்‌ ஒளிர்பவள்‌ பொன்னிறமுடைய மகாலட்சுமி. கார்மேகத்தினிடையே மின்னல்‌ ஜொலிப்பது 
போல, பிராட்டியுடன்‌ கூடிய “அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌: திகழ்வதை, 'திருக்கண்டேன்‌, பொன்மேனி கண்டேன்‌' என்று 
பேயாழ்வார்‌ பாடியுள்ளார்‌. 
எனவே 'காருடைய மின்‌' என்பது ஸ்ரீதரன்‌, : மாதவன்‌, லட்சுமி நாராயணன்‌, ஸீதாராமன்‌, 
ராதாகிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ போன்ற பிராட்டியுடன்‌ கூடிய  திருமாலைக்‌ குறிக்கிறது. ்‌ 

புற்றடையும்‌ வேங்கடமே! 

**காருடைய மின்‌'' என்று பயந்து திருமலையில்‌ பரம்பு மாத்திரமா புற்றை அடைந்தது? 
மின்னல்‌ போல்‌ ஒளிரும்‌  திருமகளைப்‌ பிரிந்த, கார்மேக வண்ணனாய. வைகுந்தவாசனும்‌ 
அல்லவா சேஷாசலத்தில்‌ பிரம்மதேவனால்‌ படைக்கப்பட்ட திந்திரினி (புளிய] மரத்தின்‌ 8ழிருந்த புற்றை அடைந்ததாக ஸ்ரீ 
வேங்கடேச புராணம்‌ கூறுகிறது! 

இரத்தினத்தைக்‌ கண்டு பயந்து திருமலையில்‌ பாம்பு  புற்றையடைந்தது. 
ரத்னாகரன்‌ என்கிற வேடன்‌ நாரதரிடம்‌ மந்திரம்‌ பெற்று, தன்னைச்‌ சுற்றிலும்‌ எறும்புப்‌ புற்று எழும்படி தவம்‌ 
செய்ததால்‌ *வால்மீகி' என்று பெயரடைந்ததாக வரலாறு கூறுகிறது. 
வால்மீகி முனிவருக்கு ஏதாவது கைம்மாறாக இராமபிரான்‌ செய்ய வேண்டாமா? ஒருவன்‌ செய்ததை அப்படியே 
செய்வது, முன்‌ செய்தவனுக்குப்‌ பெருமையைக்‌ கூட்டும்‌. எனவே பார்த்தார்‌ பெருமாள்‌. நாமும்‌ வால்மீகியைப்‌ போல்‌ சிறிது காலம்‌ 
புற்றுக்குள்‌ கிடப்போம்‌ என்றெண்ணிப்‌ புற்றடைந்தார்‌ வேங்கடத்தில்‌. 
எம்பெருமானைப்‌ பின்பற்றியே நாமும்‌ புற்றுக்குள்‌ எறும்புகள்‌ ஆயிரக்கணக்கில்‌ செல்வது போல, வேங்கட மலைமீது 
சளர்ந்து செல்கிறோம்‌. 

மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌: 
மேல - மேம்பட்டவர்களான, சுரர்‌ - தேவர்கள்‌, நித்யஸூரிகள்‌. 
இவர்களெல்லாம்‌ “ஸ்ரீநிவாஸன்‌ எங்களுடையவன்‌'' என்று  அபிமானித்துக்‌ கொண்டாடும்‌ இடமே திருமலை, 
இது போலவே  நம்மில்‌ பலரும்‌ கொண்டாடுகிறோம்‌ என்பதே கஷ்டகாலமான 
இந்தக்‌ கலியில்‌ நாம்‌ செய்யும்‌ நல்ல காரியங்களில்‌ சிறந்தது;  தவறாமல்‌ பலன்‌ தருவது; 
“மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌”  என்பது இன்றும்‌ உண்மை; நித்ய ஸூரிகளே திருமலையில்‌ பற்பல 
வடிவங்களையெடுத்து உலவுகின்றனர்‌ என்று பெரியோர்‌ பணிப்பர்‌. 

திருவேங்கடத்தில்‌ வாழும்‌ குறவர்‌, அரவம்‌, யானை, அதன் மேல்‌ எறியும்‌ மணி யாவும்‌ பெருமானைப் போல்‌ 
சிறப்புடையன” என்கிறார்‌ ஆழ்வார்‌. 
திருவேங்கட மலையே நித்யஸூரி ' நிர்வாஹகனான எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உவந்து எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ என்றார்‌. 
திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள்‌ (அசையும்‌, அசையாப்‌ பொருட்கள்‌) முற்றும்‌ மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாய்‌ 
(உகந்தவையாய்‌) இருக்கும்‌. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்‌ தம்முடைய "பிரபந்தத்தலே நான்காம்‌ திருமொழியிலே 
''வேங்கடத்துக்‌ கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே'' என்று தொடங்கித்‌, 
திருமலையில்‌ பலவகைப்‌ பிறவி பிறக்க குதூஹலித்து, 
கடைசியாக “திருவேங்கடம்‌ என்னும்‌ எம்பெருமான்‌ பொன்மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே”! என்று தலைக்கட்டுகிறார்‌. 
அதற்கேற்ப, இக் குலசேகர ஆழ்வாரைப்‌ போன்ற ஆர்வம்‌ உடைய . மஹான்‌௧ளே திருமலையில்‌ 
பாம்பாகவும்‌, -குறவராகவும்‌, யானையாகவும்‌, புற்றாகவும்‌ பிறந்திருப்பார்கள்‌ ஆகையாலே அப்பொருள்களையும்‌ 
எம்பெருமானைப்‌ போலவே உத்தேச்யமாகக்‌ கொண்ட இவ்வாழ்வார்‌ இப்பாசுரத்தாலே தம்முடைய எண்ணத்தை வெளியிடுகிறார்‌ என்க. 

திருமலை கோபர்களாகிய குறவர்கள்‌ தினைப்புனம்‌ காப்பதை பொய்கைப்‌ பிரான்‌ பாடிவிட்டார்‌ 
நாம்‌ திருவேங்கடத்தின்‌ கோபிகைகளான குறமகளிர்‌ 'பெளர்ணமி நிலவில்‌ பனிவிழும்‌ இரவில்‌' . விளையாடுவதைப்‌ பாடுவோம்‌” 
என்று அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ரீ பேயாழ்வார்‌: 

குன்று ஒன்றினாய குறமகளிர்‌ கோல்‌ வளைக்கை 
சென்று விளையாடும்‌ தீங்கழைபோய்‌ - வென்று 
விளங்குமதி கோள்விடுக்கும்‌ வேங்கடமே! மேலை 
இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -72) 
குன்று : இங்கே, திருமலை; கழை - மூங்கில்‌; மதி - சந்திரன்‌; கோள்‌ - ராகு; மேலை - மேலான பரமபதத்திஜிருக்கும்‌; 
இளங்குமரர்‌ - பிராயம்‌ எப்போதும்‌ இருபத்தைந்தேயுள்ள  நித்ப ஸூரிகள்‌; கோமான்‌ - தலைவன்‌. 

திருமலையிலேயே என்றும்‌ வசிப்பவர்கள்‌ அழகிய வளைகளை யணிந்த கைகளை யுடைய குறத்திகள்‌. 
இவர்கள்‌  அழகிய மூங்கில்கள்‌ வளரும்‌ இடத்திற்குப்‌ போய்‌ விளையாட்டாக. ஏறி அவற்றை வளைப்பர்‌; 
அதனால்‌ சந்திர மண்டலம்‌ வரை ஓங்கி வளர்ந்த மூங்கில்கள்‌ அசைந்து, சந்திரனைப்‌ பீடித்திருக்கும்‌ 
ராகுவை வென்று அப்புறப்படுத்தி, அதை கரகணத்தினின்று விடுவித்து, மீண்டும்‌ முழு நிலவாக பிரகாசிக்கச்‌ செய்யும்‌. 
இத்தகைய வேங்கடமே, நித்ய யுவர்களாகவே இருக்கும்‌ நித்ய ஸூரிகளின்‌ தலைவனான ஸ்ரீவேங்கடாசலபதியின்‌ உறைவிடம்‌. 

திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுதும்‌  இழிந்தாலும்‌ குலப்‌பழியாம்‌ என்று திருமலையை விடாதே அங்கே 
நித்தியவாஸம்‌ பண்ணுகின்ற குறத்திகள்‌ அவர்கள்‌ ஊஞ்சலாடுகை முதலான விளையாடல்களுக்காக ' மூங்கில்‌ மரங்களிலே 
ஏறியிருப்பதுண்டு. அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை க்ரஹிக்கின்ற ராகுவைக்‌ குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை 
மகழ்விக்கின்றனவாம்‌. 

இப்பாட்டுக்கு மற்றும்‌ பல வகையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. 
விளையாடுகின்ற. குறத்திகளின்‌ கோல்‌ வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி, 
சந்திரன்‌ இங்கு புகப்பெறாமையால்‌ பெற்றிருந்த இடரை நீக்கும்‌ என்றுமாம்‌. 
அன்றியே 
குறத்திகளின்‌  வளைகளின்‌ ஒளியானது சந்திர ஒளி புகுரப்பெறாத மூங்கிலிருளை 
அகற்றி, வெளிச்சமாக்்‌க, சந்திரன்‌ மருவையும்‌ போக்கும்‌ என்றுமாம்‌. 

மேலையிளங்குமரர்‌: 
நித்ய ஸூரிகள்‌, என்றும்‌ பன்னிரண்டு வயது வாய்ந்திருப்பர்‌  எனவும்‌ கூறுவர்‌. 

ஆழ்பொகுள்‌: 

சந்திர மண்டலம்‌ வரை உயர்ந்தது திருமலை என்றார்‌. 
சந்திரனின்‌ கஷ்டத்தை நீக்கு, அதைக்‌ கவ்விக்கொண்டிருந்த இராகுவை விரட்டியடித்து அபாயத்திலிருந்து திருமலை 
காக்கிறது. இதனால்‌ பக்தர்களை அபாயத்திலிருந்து விடுவித்து விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே என்பது கூறப்பட்டது. 

திருமலைக்‌ குறவர்களைப்‌: பற்றிய மற்றொரு பேயாழ்வார்‌ பாசுரம்‌: , 

முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌ ஏனம்‌ 
படிந்து உழுசால்‌ பைந்தினைகள்‌ வித்த - தடிந்து எழுந்த 
'வேய்ங்கழை போய்‌ விண்‌ திறக்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
தீங்குழல்‌ வாய்வைத்தான்‌ சிலம்பு. (89) 

முடிந்த பொழுதில்‌ - ஆயுட்காலம்‌ முடிந்த நிலையிலுள்ள; குறவாணர்‌ - குறசாதியர்‌, குறவர்‌ தலைவர்கள்‌; ஏனம்‌ - பன்றி; 
படிந்து உழு - தோண்டி உழுத; சால்‌ - கட்டியுதிர்ந்து பதமான மண்ணிலே; வித்த - விதைக்க; வேய்ங்கழை - மூங்கில்‌ தடிகள்‌; 
சிலம்பு - மலை. 
 
மரணமடையும்‌ நிலையிலுள்ள இழவர்களான குறவர்‌ தலைவர்கள்‌ திருமலையில்‌ புதிய தனை விதைகளை 
விதைக்கின்றனர்‌. எங்கே எனில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்காலே மூங்கில்கள்‌ வேரோடு விழும்படி 
கோரைப்பற்களினால்‌ மண்ணை அகழ்ந்து உழுத நிலங்களிலே! 
இங்ஙனம்‌ அறுபட்டாலும்‌, நிலத்தின்‌ வளத்தாலும்‌, திருமலையின்‌ மஹிமையாலும்‌ மூங்கிற்‌ கழைகள்‌ மீண்டும்‌ தடித்து வளர்ந்து, 
ஆகாயத்தைப்‌ பிளந்து நிற்கின்றன வேங்கடத்தில்‌. 
முன்பொரு நாள்‌ மதுரமான புல்லாங்குழலைத்‌ தன்‌ பவளச்செவ்வாயில்‌ வைத்து ஊதிய கண்ணபிரானுடைய திருமலை இது! 

திருவேங்கடமலையில்‌ வாழும்‌ குறவர்களோடும்‌, திருவேங்கடமுடையானோடும்‌ . வாசியறத்‌ தமக்கு 
விருப்பமாயிருத்தலை விளக்குகிறார்‌ ஆழ்வார்‌. 
திருமலையின்‌ நிலவளத்தையும்‌, ஒக்கத்தையும்‌ (உயரத்தையும்‌) ஒரு சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌. இதில்‌. 
தேன்‌ -இரட்டுதல்‌, வேட்டையாடி மிருகங்களைப்‌ பிடித்து வருதல்‌ முதலியன குறவர்களின்‌ தொழிலாகும்‌; 
இத்தொழில்கள்‌ நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச்‌ செய்ய இயலுமேபன்றி, இழக்குறவர்கட்குச்‌ செய்ய இயலா. 
ஆகவே அவர்கள்‌ இருஷியினால்‌ (உழவினால்‌) ஜீவிக்கப்‌ பார்ப்பார்கள்‌; அது தன்னிலும்‌ தாங்களே உழுது பயிரிடுதலும்‌ அவர்கட்கு இயலாது. 
கலப்பை பிடித்து உழமாட்டாத 'முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌: ஆதலால்‌, வயதான குறவர்கள்‌ தாங்கள்‌ பூமியைப்‌ பதம்‌ செய்ய 
முடியாதவர்களானாலும்‌ பன்றிகள்‌ வேருணவுக்காகப்‌ பூமியை எங்கும்‌ தோண்டுவதால்‌- அதுவே பண்சால்‌ உழுத பூமிபோல்‌ 
பண்பட அனுகூலமாகிறது. ஆங்காங்குள்ள மூங்கில்களும்‌ வேர்‌ அறுக்கப்பட்டு விழுந்துவிடுகன்றன.
இனி அங்கு. மூங்கில்‌  வளராதென வைத்து, அவர்கள்‌ விதைக்கிறார்கள்‌. 
ஆயினும்‌ பூமியின்‌ வளத்தால்‌ அறுக்கப்பட்டு விழுந்த மூங்கில்களும்‌ வானளாவ வளர்கின்றன. இங்ஙனம்‌ ஸாரமான திருமலையே 
திருமாலின்மலை என்றபடி. 

தீங்குழல்‌: 
குறவர்களும்‌ பன்றிகளும்‌ சுயநலம்‌ கருதி மூங்கில்களை முறித்தாலும்‌ அவை வானளாவ வளர்கின்றன. அதற்கு 
வேங்கடத்தில்‌ இருத்தலே காரணம்‌. வேங்கடமுடையான்‌ வேய்ங்குழல்‌ ஊதுகின்றவனாகையால்‌ அவன்‌ திருமேனி 
ஸம்பந்தம்‌ பெற்ற புல்லாங்குழலின்‌ சு௫தியிற்‌ பிறந்த மூங்கில்களுக்கு உண்டாம்‌ நீங்கெல்லாம்‌ தானே முடிகிறது. 
ஆக எம்பெருமானை ஆச்ரயித்தாரை (பற்றியவரைச்‌) சார்ந்தார்க்கு அயலார்‌ அபகாரம்‌ செய்ய இயலாது என்றதாயிற்று. 
திருவேங்கடத்தில்‌ மூங்கில்‌ வளர்வது கரத தமாவ தாம்‌ வளர்ந்தது போலவே! 

தீங்குழல்‌ வாய் வைத்தான்‌ சிலம்பு: 
கோவர்த்தன மலையின்‌ அருகே இருந்துத்‌ தீங்குழல்‌ ஊதி கோபிகளையும்‌,. கோக்கள்‌ (பசுக்கள்‌), மிருகங்கள்‌, செடி கொடி 
மரங்கள்‌, கந்தர்வர்‌ முதலானோரான எல்லாப்‌ பிராணிகளையும்‌ தனக்கு வசமாக்கிக்‌ கொண்ட எம்பெருமான்‌ 
சதையின்‌ முடிவிலே, ஆயுள்‌ முடிவுக்குள்ளே முடிந்தபோது நாம்‌ அவனை ஆச்ரயிருக்க 
வேண்டுமென்று உபதேசித்தருளின பொருளை இப்போதும்‌ அர்ச்சையில்‌ விளக்குவது திருவேங்கடம்‌, ஆகையால்‌ அதுவே 
அவனது மலையாம்‌. 

குறவர்களும்‌, பன்றிகளும்‌ வெட்டித்தள்ளினாலும்‌, திருமலை மூங்கில்கள்‌ கிருஷ்ணனுக்குக்‌ குழல்‌ தந்த புண்ணியத்தால்‌ ஓங்கி 
வளர்கின்றன; காற்றிலே அசைந்து 'ஊய்‌, ஊய்‌' என்று ஓசை எழுப்புகின்றன. ''புல்லாங்குழல்‌ கொடுத்த மூங்கில்களே, எங்கள்‌ 
புருஷோத்தமன்‌ புகழ்‌ பாடுங்களேன்‌'' என்பது போல்‌ மதுரகீதம்‌  பாடுகின்றன! முன்பொரு நாள்‌ மதுரமாக தையைப்‌ பாடிய 
வேணுகோபாலனே திருமலையில்‌ ஸ்ரீநிவாஸனாக நிற்பதால்‌ 
அவனே இவ்விதம்‌ வேணுகானம்‌ செய்கிறானோ, என்று. நாம்‌ சற்று அசந்து விடுகிறோம்‌. 

இப்பாசுரம்‌ மூன்று அவதாரங்களை நினைவூட்டுகிறது. 
“ஏனம்‌ (பன்றி) படிந்துழுசால்‌' என்பது முன்பு ஆதிவராகப்‌ பெருமாள்‌ நிலத்தை அகழ்ந்தெடுத்ததை நினைவுறுத்துகிறது. 
இவர்‌ திருமலையில்‌ சுவாமி புஷ்கரிணி தீர்த்தக்கரையில்‌ எழுந்தருளியிருப்பதால்‌ திருமலைக்கு 'வராக கிரி! என்றொரு 
பெய்ருமுண்டு. இத்தகைய வராக க்ஷேத்திரத்தில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்கால்‌ மூங்கில்கள்‌ சரியும்படி 
நிலத்தை உழுவது எவ்வளவு பொருத்தமாகறது!
மூங்கில்கள்‌ மீண்டும்‌ வானளாவ வளர்வது, உலகளந்த திரிவிக்கிரமனை நினைவூட்டுகிறது. 
வானையே அளப்பதுபோல்‌ உயர்ந்த மலையில்‌ நிற்பதால்‌, தருவேங்கடவனைத்‌ திரிவிக்ரமன்‌ என்பது பொருந்தும்‌ 
என்று பணிப்பர்‌ பெரியோர்‌. இதுவே இருஷ்ணாவதாரத்தில்‌ குழல்‌ ஊதியவனின்‌ மலையுமாகும்‌. 

அடுத்து, திருமழிசையாழ்வார்‌ திருமலை வேடர்களையும்‌, குறவர்களையும்‌ பாடும்‌ இரு பாசுரங்களைக்‌ காண்போம்‌.
இவர்‌  பார்க்கவ முனிவருக்கு மகனாய்‌ அவதரித்து, பிரம்பு அறுக்கும்‌ குறவர்‌ சாதியிற்‌ வளர்ந்தவர்‌ என்று கூறுவர்‌. 

வைப்பன்‌ மணிவிளக்கா மாமதியை மாலுக்கு என்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானையை - எப்பரடும்‌ 
வேடு வளைக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கும்‌ ,வேங்கடமே! 
நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வேடு - வேடர்‌; நாடு - நாட்டு மக்கள்‌; வளைத்து ஆடுதுமேல்‌ - பிரதட்சிணம்‌ செய்து வணங்குதல்‌. 
 
“சிறந்த சந்திரனைத்‌ திருவேங்கடமுடையானுக்கு மங்களதீபமாக சன்னிதியில்‌ வைப்பேனாக'' என்றெண்ணித்‌ 
திருமலை யானை அதைப்‌ பிடிப்பதற்கு எப்போதும்‌ துதிக்கையை உயரத் தூக்கியபடியே உள்ளது. 
பானையைப்‌ பிடிக்க வேடர்கள்‌ அதை நாற்புறமும்‌ சுற்றி வளைத்துக்‌ கொள்கிறார்கள்‌.
அங்குள்ள குறவர்கள்‌ யானையைக்‌ காக்க வேடர்களை எதிர்த்து (வேடர்களுடன்‌ சேர்ந்து யானையை அடிக்க, என்றும்‌ கூறுவர்‌) 
வில்லை எடுப்பர்‌. தாட்டு மக்கள்‌ அனைவரும்‌ அத்திருமலையைச்‌ சூழ்ந்து, பிரதட்சிணம்‌ செய்து வணங்குவது நன்று. 

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கிறதென்று அதன்‌ ஓக்கம்‌ (உயரம்‌, பெருமை) வெளியிடப்பட்டதாம்‌.
இதனால்‌, மலைகளில்‌ சந்திரன்‌ மிக்க ஸமீபத்தில்‌ இருப்பதாகக்‌ காணும்‌ மலைப்பிராணிகள்‌ அவனைக்‌ கைக்கொள்ள விரும்பி பல 
முயற்சிகள்‌ செய்வது இயல்பு. 
யாளை சந்திரனைப்‌ பிடிக்க முயற்சி செய்வது வெளிக்குத்‌ தெரியுமேயன்றி இன்ன காரியத்திற்காக 
அதனைப்‌ பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே; 
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப்‌ பிடிக்க முயல்கிறதென்று ஆழ்வார்‌ எங்ஙனே அறிந்தார்‌? : என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌; 
திருமலையில்‌ பிறக்கப்பெற்ற பெருமையினால்‌ அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும்‌ என்று 
திருவுள்ளம்‌ பற்றினர்‌ என்க. 
அன்றியும்‌ “*வாயுந்திரையுகளும்‌'* என்கிற திருவாய்மொழியிற்படியே, பிறர்‌ செய்யும்‌ காரியங்களை 
எல்லாம்‌ தாம்‌ செய்யும்‌ காரியங்கள்போல்‌ பகவத்‌ விஷய ப்ராவண்யத்தால்‌ செய்வனவாகவே கொள்வது மெய்யன்பர்களின்‌ வழக்கமாகும்‌. 
ஆழ்வார்‌ சந்திரனைப்‌ பார்க்கும்போது '“இவன்‌ திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தகும்‌"” 
என்று தோற்றவே, இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும்‌ இருந்ததாகக்‌ கொண்டு கூறுதல்‌ பொருந்தியதே. . 

இங்கு (திருமலையில்‌, எல்லாம்‌ எம்பெருமானின்‌ கைங்கர்யத்தில்‌ ஈடுபட்டவை. யானை சந்திரனைக்‌ கண்டு 
கைநீட்டுவது, அதை நந்தாவிளக்காக நம்‌ திருமாலுக்கு அமைக்கலாம்‌ என்கிற நோக்கத்தினால்‌. “இப்படி 
கைங்கர்யபரமான ' யானையை ஏன்‌ வில்லெடுத்து வருத்துகின்றனர்‌. அது நன்றோ?” என்னில்‌ - 
யானைப்பிடிக்க  வளைத்து வரும்‌ வேடரை விலக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கன்றனர்‌ என்க. 
அப்போது பாகவத விரோதிகளை வெல்ல முயல்வது என்ற நன்மையாம்‌. 
அங்குள்ள வேடர்கள்‌ மட்டும்‌ அவ்வாறு நடப்பரோ என்னில்‌, அவர்கள்‌ புறம்புள்ளவரே, அங்குள்ளவரல்லர்‌ என்க. 
இனி வேடர்களும்‌, குறவர்களும்‌ யானையைப்‌ பிடிக்கின்றனர்‌ என்றே கொண்டாலும்‌, யானை சந்திரனை இந்த நோக்கத்துடன்‌ 
பார்க்கிறது என்பதை அவர்‌ அறியார்‌. யானையைப்‌ பிடித்து வசப்படுத்தினால்‌ எம்பெருமான்‌ ஸன்னிதியில்‌ கைங்கர்யத்திற்கு 
அதைப்‌ பயன்படுத்தலாம்‌ என்பது அவர்கள்‌ கருத்து எனலாம்‌. 
நித்ய விபூதியிற்போலே திருமலையிலுள்ள ஜங்கம ஸ்தாவர பூதங்கள்‌ (செடி கொடி, விலங்குகள்‌) எல்லாம்‌ திருமாலின்‌ 
விபூதியாய்‌ அவனது கைங்கர்யத்திலே ஈடுபட்டவை என்று அதன்‌ பெருமையை (இப்பாகரத்தில்‌) அனுபவித்து, (அடுத்த பாட்டில்‌) 
வேங்கடமே ஸர்வோத்க்ருஷ்டம்‌ (அனைத்திலும்‌ சிறந்த புண்ணியத்தலம்‌) என்கிறார்‌. 
: 
“விலங்குகளும்‌ கிட்டி அடிமை செய்யும்‌ திருமலையை நாட்டார்‌ சுற்றி வலம்‌ வந்து வணங்குவார்கள்‌ எனில்‌ நலமாம்‌'* என்றார்‌. 

“வெண்‌ மதியம்‌ தா!” என்று மந்தி கடுவனைக்‌ கேட்டதை பேயாழ்வார்‌, பாடினார்‌. 
இதை கஜேந்திர ஆழ்வார்‌ பரம்பரையில்‌ பிறந்த திருமலை யானை கேட்டு விட்டது. 
““பெண்‌ குரங்கின்‌ பேச்சைக்கேட்டு, ஆண்‌ குரங்கு குரங்குத்தனமாக எதையாவது செய்துவிடப்‌ போகிறதே! 
இத்தனை அழகிய முழுநிலவு குரங்கு கையில்‌ கிடைத்த பூமாலையின்‌ துர்கதியை ௮டைவதார? அதற்கு 
முன்‌ நாமே சந்திரனைப்‌ பறித்து ஸ்ரீ வேங்கடாசலபதிக்கு மணிவிளக்காய்‌ வைப்போம்‌!'” என்று திருமலை தும்பிக்கை 
ஆழ்வார்‌ அவசர அவசரமாகக்‌ கையை நீட்டுகிறார்‌. 
பெளர்ணமி இருமாலை பூஜிப்பதற்குச்‌ சிறந்த நாள்‌, "மார்கழித்‌ இங்கள்‌ மதி நிறைந்த தன்னாள்‌'' என்றே திருப்பாவை துவங்குகிறது. 
நம்மாழ்வார்‌ வைகாசி விசாகத்திலும்‌, திருமங்கையாழ்வார்‌ கார்த்திகை கார்த்திகையிலும்‌, பெளர்ணமி திதியில்‌ அவதரித்தனர்‌. 
''சரி, நம்மால்‌ ஆன பெளர்ணமி பூஜையைப்‌ பெருமாளுக்குச்‌ செய்வோம்‌!” என்று நினைத்தே 
திருமலை கஜேந்திரர்‌ சந்திரனைப்‌ பிடிக்க முயல்கிறார்‌. 

யானை துதிக்கையைத்‌ தூக்குவது வணங்குவது  போலிருக்கும்‌; துதிக்கும்‌ கையே துதிக்கை. '*மாலுக்கென்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானை' என்பதால்‌ திருமலை. யானை எப்பொழுதும்‌ துதிக்கையைத்‌ தூக்கி ஏழுமலையானை ஏத்தித்‌ 
துதித்தே நிற்கும்‌ என்பது தெரிகிறது. ஆபத்துக்‌ காலத்தில்‌ “ஆதிமூலமே” என்று அலறிய பாகவத புராணத்து கஜேந்திரனை 
விடவும்‌ பக்தியிற்‌ சிறந்தது நான்முகன்‌ திருவந்தாதி' திவ்வியப்‌ பிரபந்த யானை!
''சந்திரன்‌ திருமலைக்கு நேரே எப்பொழுது வரும்‌? வந்தவுடன்‌ 'லபக்‌'கென்று பிடித்து மணிவிளக்காய்‌  வைத்து விடுவோம்‌,'' என்று நினைத்தே, தயார்நிலையில்‌ 
எப்பொழுதும்‌ துதிக்கை தூக்கியபடியே இருக்கிறார்‌. சில யோகியர்‌ மன வலிமையை வளர்த்துக்‌ கொள்ள, பகவானை 
நினைத்தே எப்பொழுதும்‌ கைதூக்கியபடி இருப்பர்‌; சிலர்‌ எப்பொழுதும்‌ நின்றுகொண்டே இருப்பர்‌. நம்‌ திருமலை 
கஜேந்திரயோகி இத்தகையவரே. வேடர்கள்‌ தம்மைச்‌ சூழ்ந்து கொண்டது, குறவர்கள்‌ வில்லை எடுப்பது ஒன்றுமே தெரியாமல்‌ 
கருமமே கண்ணாக இருக்கிறார்‌. “கை கூப்பிய நிலையிலேயே ஆழ்வார்களும்‌, ஆசார்யர்களும்‌ எழுந்தருளியிருக்கின்றனர்‌. நமக்கு 
இருப்பதோ ஒரே ஒரு கை. நம்மால்‌ கைகூப்ப இயலாது. எனவே கைதூக்கிய  நிலையிலேயே நிற்போம்‌'' என்றிருக்கிறார்‌. 

நாடு வளைத்து ஆடுமேல்‌ தன்று: 
நாட்டிலுள்ளவர்கள்‌ திருமலையை வலம்‌ வந்து, திருவேங்கடமுடையானைக்‌ குறித்து கீதங்கள்‌ பாடியும்‌, ஆடியும்‌ 
தொழுவது நாட்டிற்கும்‌ நல்லது, வீட்டிற்கும்‌ நல்லது என்றார்‌ ஆழ்வார்‌. ஏழு மலைகளும்‌ பரந்து கிடப்பதால்‌, 
கிரிப்பிரதட்சிணெமாக வலம்‌ வருதல்‌ கருடாழ்வாருக்கே இயலும்‌. 
ஏழு மலைகளையும்‌ நடந்து ஏறுவதே வலம்‌ வருதலாகக்‌ கொள்ளலாம்‌. திருமலையைப்‌ பொறுத்தவரையில்‌, 
கிரிப்பிரவேசமே கிரிப்பிரதட்சிணம்‌. 'நாடு வளைத்து' என்று ஆழ்வார்‌. அன்று அருளியபடியே, திருமலையைச்‌ சுற்றிய 
காடுகளெல்லாம்‌ மாயமாய்‌ நிறைந்து, மக்கள்‌ வாழும்‌ நாடாக  விட்டதை இன்று காண்கிறோம்‌! திருமலையை' நாடு வளைத்து வருகிறது. ்‌ 

நன்‌ மணிவண்ணன்‌ ஊர்‌ ஆளியும்‌ கோளரியும்‌ 
பொன்மணியும்‌ முத்தமும்‌ பூமரமும்‌ - பன்மணி நீர்‌ 
ஓடு பொருது உருளும்‌ கானமும்‌ வானரமும்‌ 
வேடும்‌ உடை வேங்கடம்‌. (-ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 47) 

ஆளி - யாளி, கோளரி - கோள்‌ -* அரி; கோள்‌ - பலம்‌, மிடுக்கு; அரி - சிங்கம்‌. 
நீரோடு என்பது “நீர்‌ ஓடு என்று இங்கு பிரித்து எழுதப்பட்டது. வேடு - வேடர்‌ இனம்‌ 
 
யாளி என்ற மிருகங்களும்‌, பலமுள்ள சிங்கங்களும்‌, பொன்னும்‌, மாணிக்கங்களும்‌, முத்துக்களும்‌, பூத்த மரங்களும்‌, 
பலவகைப்பட்ட ரத்தினங்கள்‌ அருவி நீருடன்‌ கலந்து உருண்டு விழும்‌ காடுகளும்‌, வானரங்களும்‌, வேடர்‌ இனங்களும்‌ உடையது வேங்கடம்‌
இதுவே நீலமணிவண்ணனாகிய திருமாலின்‌ நல்ல திவ்ய தேசம்‌. 

““ஸர்வேச்வரன்‌ உகப்பது திருமலை. ௮வன்‌ உறையும்‌ திவ்ய தேசத்திலுள்ள சேதன அசேதனங்களும்‌ (உயிருள்ள, உயிரற்ற 
பொருட்கள்‌) அவன்‌ விரும்புவன; அவை நித்யஸூரிகளே”' என்று அம்மலையை மண்டி அநுபவிக்கிறார்‌ ஆழ்வார்‌.  

நித்பஸூரிகளே எம்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருமலைக்கேற்ப பல உருவங்களை எடுத்துக்கொண்டு அதனைச்‌ 
சிறப்பித்து வருகின்றனர்‌. ஆகையால்‌ திருமலை பரமபதத்திற்குக்‌ குறைந்ததன்று. பரமபதத்தில்‌ யாளி, மணி, மரம்‌, வானரமென்றாற்‌ 
போன்றவைகள்‌ இருக்குமாயினும்‌ வேடர்‌, குறவர்‌ போன்றோர்‌ இடைப்பதரிது. வேடுமுடையதானபடியாலே வேங்கடத்திற்கு 
ஏற்றமுண்டு. மணிவண்ணனும்‌ லீலாவிபூதியில்‌ உள்ளாருக்கும்‌ சுலபனாயிருந்து தனது மணிவண்ணத்தன்மை, அதாவது மணி 
முன்றானையிலே முடிக்கப்பட்டு அடக்கப்படுமாப்‌ போலே எல்லோருக்கும்‌ எளிதில்‌ இடைக்கப்படுகின்றமை தெரியும்படி 
இங்கே விளங்குகிறான்‌. ஆகவே இதுவே அவனுக்கு நல்ல ஊர்‌. 
இனி நாம்‌ பரமபதத்தை எவ்வாறு நினைக்க வேண்டும்‌ எனில்‌, 
இராமன்‌ அரண்யத்திற்கு எழுந்தருவின பிறகு அயோத்தியை எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று இலக்குமணனுக்கு அவரது 
தாய்‌ உபதேசித்தாள்‌ என்பதை நினைக்க. 

நன்மணி: 
நல்‌ என்பதை மணியோடு சேர்ப்பதை விட ஊரோடு சேர்ப்பது நலம்‌. 
ஊர்‌: 
திருமலையைக்‌ காடென்று நினைக்கலாகாது, ஊரேயாம்‌ அது. பலவகை விவேகிகள்‌ நிறைந்த இடத்தைக்‌ 
காடென்னலாமோ?  ஆளிகள்‌, ஆள்கின்ற நித்யஸூரிகள்‌; கோளரிகள்‌, நரசிங்க மூர்த்தியைப்‌ போன்றவர்கள்‌. இப்படி எல்லாம்‌ சிறந்தவை. 

வேங்கடம்‌: 
பாபம்‌ கழிந்தாரைப்‌ பெறுவது பரமபதம்‌. பாபிகளின்‌ பாபத்தையும்‌ போக்குவது இது. 
எனவே பரமபதத்தையும்‌ விட உயர்ந்தது வேங்கடம்‌. 
“இராமன்‌ இருக்குமிடம்‌ அயோத்தி என்பதுபோல்‌ பரமபதநாதன்‌ இக்கலியுகத்தில்‌ உஈச்‌ஈமிடமான திருவேங்கூமே பரமபதம்‌. 

“வேடும்‌ உடை வேங்கடம்‌”: என்று பாசுரத்தை ஆழ்வார்‌ முடித்திருப்பதை ஒட்டியே நம்‌ தலைப்பும்‌ அமைந்தது; 
நாம்‌ இதுவரை கண்ட திருமலை வேடர்‌, குறவர்‌ காட்சிகளும்‌ முடிகிறது! 
முன்பொருநாள்‌ ஒரு வேடுவன்‌ பறவை என்று நினைத்து வில்லை வளைத்து அம்பை எய்ய, அது திருவடிகளில்‌ 
தோய்ந்ததால்‌ கிருஷ்ணாவதாரம்‌ முடிவுற்றது. 
திருவடிகளில்‌ அம்பு தோய்ந்ததால்‌ மறைந்தவன்‌ மீண்டும்‌ அர்ச்சையாகத்‌ தோன்றியதால்‌, அவனுடைய திருவடிகள்‌ தோய்ந்த மலை எது? 
வேடர்‌ வில்‌ வளைக்கும்‌ வேங்கடம்‌, கானமும்‌, வானரமும்‌, வேடும்‌ உடை வேங்கடம்‌-

----------------

வேழம்‌ வழிபடும்‌ வேங்கடம்‌ 
வேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்த முதலாழ்வார்கள்‌, 
அதன்‌ யானைக்காட்சிகளை மிக அற்புதமாக வர்ணித்துள்ளனர்‌. 
பொய்கையாழ்வார்‌ காட்டும்‌ யானைக்காட்சி இது: 

பெருவில்‌ பகழிக்‌ குறவர்‌ கைச்‌ செந்தீ 
வெருவிப்‌ புனந்‌ துறந்த வேழம்‌ இருவிசும்பில்‌ 
மீன்நீழக்‌ கண்டஞ்சும்‌ வேங்கடமே! மேலசுரர்‌ 
கோன்வீழக்‌ கண்டுகந்தான்‌ குன்று (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -40) 

பகழி - அம்பு; செந்தீ - வட்டி; புனம்‌ - கொல்லை, வயல்‌; வேழம்‌ - யானை, விசும்பு - ஆகாயம்‌; மேல்‌ - முன்னொரு 
காலத்தில்‌; அசுரர்‌ கோன்‌ - இரணியன்‌; குன்று - திருமலை; 

பெரிய வில்லையும்‌, அம்புகளையும்‌ உடைய குறவர்கள்‌, கொளுத்திய தீவட்டியையும்‌ ' கையிலேந்திக்‌ கொண்டு, 
இனைப்புனத்தில்‌ பட்டி மேயும்‌ யானையை கட்டித்‌ துரத்துகிறார்கள்‌. இதனால்‌ பயந்த யானை வயலைவிட்டு 
ஓடுகிறது. அப்பொழுது ஆகாயத்திலிருந்து அகஸ்மாத்தாக ஒரு எரிநட்சத்திரம்‌ மிகுந்த ஒளியுடன்‌ யானைக்குமுன்‌ விழுகிறது. 
இருதலைக்‌ கொள்ளி எறும்புபோல்‌, யானை செய்வதறியாது திகைத்து, அஞ்சி நிற்கிறது, திருமலையில்‌. 

இந்த வேங்கடமே, முன்னொரு காலத்தில்‌ அசுரர்‌ அரசனாகிய இரண்யகசிபுவைக்‌ கொன்று, (தன்னுடைய பக்தனாக 
பிரகலாதனைத்‌ துன்புறுத்திய விரோதி தொலைந்தான்‌) என்று மகிழ்ந்த நரசிம்ம மூர்த்தபினுடைய மலை. ்‌ 
தன்னுடைய பக்தர்களின்‌ விரோதிகளை அழித்து, அவர்களைக்‌ காக்கும்‌ பொருட்டே ஸ்ரீ வேங்கடேசப்‌ பெருமாள்‌ 
திருமலையில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்கிறார்‌. 

தீவட்டி தடியர்களின்‌ மிரட்டலாலும்‌, எரிநட்சத்திரம்‌ தன்‌ பாதையில்‌ விழுந்ததாலும்‌, யானை பயந்தது போலவே பக்தனும்‌ 
இவ்வுலகில்‌ பலவித பிரச்சனைகளில்‌ சிக்கி கதிகலங்குவதுண்டு. 
இவ்விதமே மகாபத்தனாகிய பிரகலாதனும்‌, பாகவத விரோதியான இரணியகசிபுவினால்‌ பலவித இன்னல்களுக்கு இரையானான்‌. 
“அன்று நீ பிரகலாதனை, நரசிம்மமாக அவதரித்துக்‌ காத்தது போதாது; இன்றும்‌ பக்தர்கள்‌ 
துன்பமடையும்போது அவர்களைக்‌ காப்பது உன்‌ கடமை'' என்று ஏழுமலையானுக்கு ஆழ்வார்‌ நினைவூட்டுகிறார்‌. 

"ஞானத்‌ தமிழ்‌ புரிந்த நான்‌” என்றே பாடத்‌ தொடங்கிய இரண்டாவது ஆழ்வாராகிய தவத்திரு பூதத்தடிகள்‌,
“யானே தவஞ்செய்தேன்‌; யானே தவமுடையேன்‌; யானே பெருந்தமிழன்‌!" 
என்று மும்முறை ஒரு பாசுரத்தில்‌ மீண்டும்‌”தம்மைக்‌ குறித்து பெருமிதம்‌ கொள்கிறார்‌. 
கஜேந்திரனை முதலையின்‌ வாயிலிருந்து... விடுவித்த ஸ்ரீ வேங்கடேசனுக்கு அடிமை பூண்டு, திருமலையில்‌ 
புஷ்பகைங்கர்யம்‌ செய்தது குறித்தே விளைந்த பெருமிதம்‌ இது என்பது இதற்கு முந்தைய பாசுரத்திலிருந்து தெரிய வருகிறது. 

இதைக்கேட்ட வேங்கடேசப்‌ பெருமாள்‌ ஆழ்வாரை நோக்கு, “'நீர்‌ நல்ல பெருந்தமிழர்‌ என்பதை நாடு நகரமும்‌ நன்கறிய ஒரு கவி 
சொல்லும்‌, பார்ப்போம்‌!”” என்கிறார்‌. உடனே நம்‌ பெருந்தமிழர்‌ திருவேங்கடத்தைக்‌ குறித்து அற்புதமாக ஒரு யானைப்‌ 
பாசுரத்தைப்‌ பாடித்‌ தம்‌ கைவரிசையைக்‌ காட்டுகிறார்‌. 
“*யானே, யானே, யானே!'' என்று பெருமைப்பட்டவர்‌ ** 
யானை! என்று கீழ்க்காணும்‌ பாசுரத்தில்‌ யானையைக்‌ காட்டி நம்மை மகிழ்விக்கிறார்‌: 

பெருகு மதவேழம்‌ மாப்பிடிக்கு முன்‌ நின்‌(று) 
இருகண்‌ இனமூங்கில்‌ வாங்கி - அருகிருந்த 
தேன்‌ கலந்து நீட்டும்‌ திருவேங்கடம்‌ கண்டீர்‌ 
வான்‌ கலந்த வண்ணன்‌ வரை", (75) 

வேழம்‌ - ஆண்‌ யானை; பிடி - பெண்‌ யானை; வரை - மலை. 

பெருகுகின்ற மதநீரையுடைய ஆண்‌ யானை, தனது சிறந்த பெண்‌ யானைக்கு முன்நின்று, இரண்டே கணுக்களையுடைய 
இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பறித்து, அதை அருகிலிருந்த தேனடையில்‌ தோய்த்துத்‌ தேனுடன்‌ கலந்து நீட்டுகின்றது 
திருவேங்கடமலையில்‌. நீலமேக சியாமளனாகிய ஸ்ரீநிவாஸன்‌ நித்யவாசம்‌ செய்யும்‌ திருமலையல்லவா இது! 
ஏற்கனவே மதம்‌ பிடித்து, திருமலையில்‌ செருக்கித்‌ திரிகின்றது வேழம்‌. அழகான பெண்‌ யானையைக்‌ கண்டதும்‌, 
காதல்‌ ரசம்‌ வேறு அதன்‌ தலைக்கேறி விடுகிறது! உடனே பிடிக்குப்‌ பிடித்தமான இனிய உணவை அதற்குத்‌ தந்து, அதனைக்‌ கவர நினைக்கிறது. 
'*இதயத்தில்‌ இடம்‌ பிடிக்கும்‌ வழி, வயிற்றின்‌ வழியாகவே செல்கிறது"' என்கிற உண்மையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது வேங்கடத்து. வேழம்‌. 
உடனே பசுமையான இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பிடுங்கித்‌ தேனிலே தோய்த்து, 
“குளோப்‌ ஜாமுனை' ஊட்டுவதைப்போல்‌, பேடையின்‌ வாயில்‌ ஊட்டுகிறது! முதலில்‌ தேன்‌ உணவு; அடுத்துத்‌ தேன்‌ நிலவு. 

“இலக்கிய ரசம்‌' என்னும்‌ இளம்‌ மூங்கில்‌ குருத்திலே, “பக்தி ரசம்‌” என்கற தேனைக்‌ குழைத்து நம்‌ வாயிலும்‌ ஊட்டிவிடுகிறார்‌ 
பூதத்தார்‌] ஆழ்வார்‌ நமக்குப்‌ படைக்கும்‌ ஆரா அமுது இது. 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ ௮முதுமாகி'' ஆராவமுதனாகிய திருவேங்கடமுடையான்‌ அன்பர்களின்‌ இதயங்களிலே தித்திப்பது 
போலவே, வேங்கடப்பிடிக்கும்‌, திருமலையாழ்வார்‌ விளைவித்த மூங்கில்‌ 'ரஸகுல்லா” தித்திக்கிறது;
நமக்கும்‌ பெருந்தமிழரின்‌ பாசுரம்‌ திருப்பதி லட்டு போல்‌ தித்திக்கிறது! 

திருமலையிலுள்ள விலங்குகளும்‌ தம்முடைய காப்பை நோக்கி வாழும்‌ பேட்டிற்கு ஆதாரம்‌ காட்டுவதால்‌, பிராட்டியோடு 
உறையும்‌ பெருமான்‌ நம்மிடம்‌ ஆதாரங்கொண்டு காப்பான்‌ என்பது ஆழ்பொருள்‌. 
எம்பெருமான்‌ பிராட்டியை உவப்பிக்கும்படியைக்‌ கூறுதல்‌ இதற்கு உள்ளுறைப்‌ பொருள்‌. 

எம்பெருமானார்‌ (ஸ்ரீ ராமானுஜர்‌) திருமலைக்கு எழுந்தருளி, த்வயத்தின்‌ பொருளைத்‌ திருமத்திரத்தோடும்‌ சரம 
ஸ்லோகத்தோடும்‌ சேர்த்து இனிமைப்படுத்தி உபந்யஸித்தருளினபோது, அனந்தாழ்வான்‌ இப்பாசுரத்தை ஸ்வாமி பரமாக நிர்வஹித்தருளினார்‌. 

திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌: 
இப்பாசுரத்தில்‌, இளமூங்கில்‌ - 'ஓம்‌ நமோ நாராயணாய: என்கிற திருமந்திரம்‌. 
'ஓம்‌' என்பது பிரணவம்‌ எனப்படும்‌. ப்ர  நவம்‌ - ப்ரணவம்‌, எப்பொழுதும்‌ புதிதானது, இளமையானது என்று பொருள்‌. 
இங்கே 'இள' என்பது பிரணவத்தைக்‌ குறிக்கும்‌. 
மூங்கில்‌ கிருஷ்ணாவதாரத்தில்‌ புல்லாங்குழல்‌ கொடுத்தது; எனவே நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
'வேங்கடவன்‌ 'ஓம்‌ நமோ நாராயணாய என்கிற திருமந்திர வடிவினன்‌; 
இளமூங்கில்‌ குழல்‌  ஊதிய கிருஷ்ணாவதாரக்‌ கூறுடையவன்‌. தருபூலையில்‌ விளைந்த 
இளமூங்கில்‌ இங்கே வேங்கடவனையே சிறப்பாகக்‌ குறிக்கும்‌. 
திருமந்திரம்‌ வைணவர்களுக்கு இயல்பானது; எனவே இளமூங்கில்‌ "இயல்‌ தமிழ்‌" ஆகிறது! 

இருகண்‌ - துவயம்‌. 
“ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; ஸ்ரீமதே நாராயணாய , நம:' என்பதே இரண்டு அடிகளையுடைய துவய மந்திரம்‌.
எனவே இங்கு இளமூங்கிலில்‌ உள்ள இரண்டு கணுக்கள்‌ துவயத்தைக்‌ குறிக்கும்‌
ஆண்‌ யானை பெண்‌ யானைக்கு இருகண்‌ இளமூங்கில்‌' சத்துணவை அன்புடன்‌ ஊட்டுவது போலவே, துவய மந்திரத்தை வைகுந்தத்தில்‌ 
முதன்முதலாக ஸ்ரீமந்‌ நாராயணன்‌, மகாலட்சுமிப்‌ பிராட்டீயாருக்கு உபதேசித்து, ஊட்டி உவந்தான்‌. 
ஆண்‌ யானையை எம்பெருமானுக்கு உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு; எனவே பெண்‌ யானை பிராட்டிக்கு உவமையானது; 
உவகை ஊட்டும்‌ உவமை! 
அலர்மேல்‌ மங்கையுறை மார்பினன்‌. ஆகையாலே நம்‌ ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ ஆகிறான்‌. 
இருவர்‌  இணைந்து இசைத்ததால்‌, 'இருகண்‌' இசைத்தமிழே!
இருகண்‌ இளமூங்கிலின்‌ குழலோசையுடன்‌, இலக்குமி-நாராயணன்‌ இருவரும்‌ இணைந்து இசைத்த இன்னிசை விருந்தே துவயம்‌. 

தேன்‌ கலந்து - சரம ஸ்லோகத்தைக்‌ கலந்து. ““ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ”' (அனைத்து தர்மங்களையும்‌ 
கைவிட்டு, என்னையே சரணடை) என்னும்‌ கீதையின்‌ சுலோகம்‌ இது. சரம ஸ்லோகம்‌, மிகவும்‌ சுலபமான இறுதி ௨பாயத்தைக்‌ 
கூறுவதால்‌ பக்தர்களுக்குத்‌ தேன்‌ போன்றது, எனவே இதைத்‌ “தேன்‌' என்றார்‌. 
'மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ (என்னையே சரணம்‌ அடை) என்பதையே வேங்கட கிருஷ்ணன்‌ தனது வலது 
திருக்கையால்‌, திருவடிகளைக்‌ காட்டி, நமக்கு உபதசித்துக்‌ கொண்டிருக்கிறான்‌. இதை நாடகமாகவே நடித்து, அபிநயமும்‌ 
பிடித்துக்‌ காட்டுவதால்‌ ஏழுமலையான்‌ சரம சுலோக ச8ரனே ஆகி, அசல்‌ பார்த்தசாரதியையும்‌ அசத்திவிடுகிறான்‌! எனவே 'தேன்‌ 
கலந்த' ஆழ்வார்‌ பாசுரம்‌ தேன்போன்ற நாடகத்தமிழ்‌ ஆகவே தித்திக்கிறது. 
திரு.மலையில்‌ ஸ்ரீராமானுஜர்‌ உபதேசம்‌: 
திருமலையில்‌ திரிந்த ஆண்‌ யானை, பேடைக்கு 'இருகண்‌ இளமூங்கில்‌ தேன்‌ கலந்து' ஊட்டியது.
அதுபோலவே, ஸ்ரீராமானுஜர்‌. திருமலையில்‌ அனந்தாழ்வான்‌ முதலிய சீடர்களுக்குத்‌ திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகிய 
மூன்றையும்‌ குழைத்துத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து ஊட்டினார்‌ என்பதை அறிகிறோம்‌. 

பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை: 
திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகியவை சம்ஸ்‌கிருதத்தில்‌ அமைந்தவை. ஞானத்தமிழ்‌ புரிந்த 
பூதத்தாழ்வாரோ, 'பெருந்தமிழன்‌ யானே! யானே! யானே! என்று மும்முறை ஒரே பாசுரத்தில்‌ பெருமிதத்துடன்‌ மார்தட்டியவர்‌. 
பார்த்தார்‌ ஆழ்வார்‌. மூன்று சம்ஸ்கிருத மந்திரங்களையும்‌ முறையே 'இளமூங்கில்‌' இயல்‌ தமிழ்‌; 'இருகண்‌' இசைத்‌ தமிழ்‌; 
“தேன்‌ கலந்த நாடகத்‌ தமிழ்‌ என்று உள்ஞ்றைப்‌ பொருளாகவே வைத்துப்‌ பாடிவிட்டார்‌. மூன்று தமிழையும்‌ ஒரே பாசுரத்தில்‌ 
ஒன்றாகக்‌ குழைத்து, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து நமக்கு ஊட்டும்‌ இவரல்லவோ முத்தமிழ்‌ வித்தகர்‌, 
ஸர்வமந்த்ர ஸ்வதந்த்ரர்‌! ஸ்ரீராமானுஜர்‌ இருமலையில்‌ அன்று ஏீடர்களுக்கு மட்டுமே புகட்டியதை, ஆழ்வார்‌ இன்றும்‌ தமிழர்கள்‌ 
அனைவருக்கும்‌ ஊட்டிக்‌ கொண்டிருப்பதால்‌, இதைப்‌ *பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை' என்றோம்‌. 

வேங்கடத்தில்‌ மதவேழம்‌ மாப்பிடியோடு கூடி, தேன்‌ கலந்த இளமூங்கில்‌ ஊட்டியதைப்‌ பாடினார்‌ பூதத்தார்‌;
கூடியதைப்‌  பாடிவிட்டார்‌, நாம்‌ ஊடியதைப்‌ பாடுவோம்‌ என்று பேயாழ்வார்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 

புரிந்து மதவேழம்‌ மாப்பிடியோடு ஊடி 
திரிந்து சினத்தால்‌ பொருது - விரிந்தசீர்‌ 
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
மண்கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. (ஸ்ரீபேயாழ்வார்‌ -45). 

வேழம்‌ - ஆண்யானை, பிடி - பெண்யானை; புரிந்து - கூடி, கலந்து; கோடு - யானை, பன்றிகளின்‌ தந்தம்‌; 'விரிந்த சர்‌ - வீரச்ரீ நிறைந்த. 

மதம்‌ பிடித்த ஆண்‌ யானை பெண்‌ யானையுடன்‌ கூடி, பின்பு கலகம்‌ ஏற்பட்டதால்‌ ஊடி அதனைப்‌ பிரிந்து சென்றது. அதனால்‌ 
ஏற்பட்ட கோபத்திற்குப்‌ போக்குவீடாக வேழம்‌ அங்குமிங்கும்‌  திரிந்து கோபத்தினால்‌  மணிப்பாறைகளில்‌ மோதி, 
வீர ஸ்ரீயையுடைய தனது வெண்மையான தந்தங்களிலிருந்து முத்துக்களை உதிர்க்கறது. 
இந்தத்‌ திருவேங்கடமே முன்னொரு காலத்தில்‌, தன்னுடைய கோரைப்பல்லினால்‌ பூமியை அகழ்ந்தெடுத்த ஆதிவராகப்‌ பெருமாளின்‌ மலை. 
பொருது: 
போர்‌ செய்து; திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன்‌ நிழலைக்‌ கண்டு, எதிர்யானையென்று பிரமித்து 
அதனோடே போர்‌ செய்கின்றதாகவும்‌ கொள்ளலாம்‌. 
திருமலையிலே ஸ்ரீ வேங்கடேச அவதாரத்திற்கு முன்பே ஆதிவராகர்‌ சுவாமி புஷ்கரணியின்‌ கரையில்‌ ததால்‌ பல 
மங்களாசாஸனம்‌ செய்கிறார்‌. 

எம்பெருமானைப்‌ பெறுவதற்கு எங்கோ போக வேண்டுமென்று நினைக்க வேண்டா. திருவேங்கடமே அவனது திருமலையாம்‌. 
மதயானைகள்‌ நிறைந்த மாமலை அது. யானை பெண்யானையோடு கலந்திருந்தபோது ஏதோ கலஹம்‌ ஏற்பட 
அதனால்‌ விட்டுப்பிரிந்து அந்தக்கோபம்‌ தாங்காது மதத்தினால்‌, செய்வது தெரியாமல்‌ மலைப்பாறைகளில்‌ தந்தங்களால்‌ குத்திப்‌ 
போர்புரிய அப்போது ச்ரேஷ்டமான அதன்‌ தந்தங்களில்‌ உண்டான முத்துக்கள்‌ 8ழே கண்டவிடத்தில்‌ சிதறி விழுகின்றன. 
இத்தகைய  வேங்கடமே முன்‌ பூமியைக்‌ இடந்தெடுத்த ஆதி வராஹமூர்த்தி பூதேவியோடு உல்லாசமாய்‌ வஸிக்கப்‌ பரமபதத்தினின்று 
கொணர்ந்த திருமலையாம்‌. 
முதலீரடிகளாலே தன்னை அண்டி சிற்சில பலன்களை அபேகூஷிப்பார்க்கு (வேண்டுவோர்க்கு) 
எம்பெருமான்‌ அதனையளித்து அதில்‌ வைராக்யம்‌ வர வழியும்‌ ஏற்படுத்துவதும்‌, 
“விரிந்தசீர்‌  - முத்துதிர்க்கும்‌' என்றதால்‌ அப்படிப்பட்டவன்‌ சேகரித்த பணத்தையும்‌ விடுவதும்‌ சொன்னதாம்‌. 
இதனால்‌ அர்த்தகாமங்களை த்யாகம்‌ செய்வித்து வினைகளைப்‌ போக்கும்‌ ௮ம்மலை என்றபடி. 

இப்படி தந்தங்களினின்று முத்து உதிர்த்து, அர்த்த காமங்களை விட்டொழிக்கின்றது வேங்கடத்து வேழம்‌. 
வேங்கடவன்‌ அதனுடைய வினைகளைப்‌ போக்கி, நற்புத்தியளிக்கிறான்‌. 
களிறு  கஜேந்திரனைப்‌ போலவே ஸ்ரீ வேங்கடேசனைக்‌ கண்டு வணங்குகிறது. இக்காட்சியை அடுத்து அருளிச்‌ செய்கிறார்‌. 

புகுமதத்தால்‌ வாய்பூசிக்‌ கீழ்தாழ்ந்து அருவி 
உகுமதத்தால்‌ கால்கழுவிக்‌ கையால்‌ - மிகுமதத்தேன்‌ 
விண்டமலர்‌ கொண்டு விறல்‌ வேங்கடவனையே 
கண்டு வணங்கும்‌ களிறு. --ஸ்ரீ பேயாழ்வார்‌ -

புகு - வாயில்‌ புகும்‌; வாய்‌ பூசி.- கொப்பளித்து; உகு - பெருகிற; மிகு. மதத்தேன்‌ - மிகுந்த மதத்தை விளைவிக்கக்கூடிய 
தேன்‌; விண்ட - மலர்ந்த; விறல்‌ - வீரம்‌, வெற்றி மிடுக்கு; களிறு -ஆண்‌ யானை. 

திருமலையிலுள்ள ஆண்‌ யானை, தன்‌ மத்தகத்தினின்றும்‌, கன்னங்களினின்றும்‌ வாயில்‌ புகும்‌ மதஜலத்தால்‌ வாய்‌ 
கொப்பளித்து, ஆசமனஞ்செய்கறது. மேலிருந்து கீழ்வரை அருவிபோல்‌ பெருகும்‌ மதநீரினால்‌ கால்களையும்‌ கழுவிச்‌ சுத்தம்‌ 
செய்துகொள்கிறது. மிகுந்த மதத்தை (களிப்பை) உண்டாக்கக்கூடிய தேன்‌ நிறைந்ததும்‌, அப்பொழுதே 
மலர்ந்ததுமான பூவைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு, வெற்றி மிடுக்கு நிறைந்த ஸ்ரீ வேங்கடாசலபதியை, சேவித்து வணங்குகின்றது. 

பெருமானை அண்டுவதற்குத்‌ தகுதி வேண்டாமோ? எனில்‌, 
விலங்குகளும்‌ கூட அவனை எளிதில்‌ பற்றித்‌ தொண்டு செய்கின்றன என்கிறார்‌, 

திருமலையில்‌ மதயானைகள்‌ தாமரைப்‌ பூக்களைப்‌ பறித்து  அப்பன்‌ திருவடிகளில்‌ சமர்ப்பித்து வணங்குகிறபடியை ஒரு 
சமத்காரம்‌ பொலியப்‌ பேசுகிறார்‌. எம்பெருமான்‌ ஸந்நிதியில்‌ தொண்டு செய்யப்போமவர்கள்‌ வாயைக்‌ கொப்பளித்துக்‌ 
கைகால்களை சுத்தி செய்துகொண்டு, புஷ்பங்களை எடுத்துக்கொண்டு போவது வழக்கம்‌. 
இவ்வாசாரம்‌ சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, 
இருமலையிலுள்ள அஃறிணைப்‌ பொருள்கட்கும்‌ கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்றார்‌. 

விறல்‌ வேங்கடவன்‌: 
இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக்‌ ஜந்துக்களும்‌ தன்னை வணங்குமாறு ஜ்ஞாநத்தைக்‌ , கொடுக்க சக்தனான 
திருவேங்கடமுடையான்‌ என்ப. 

விறல்‌ வேங்கடவனையே -- விறல்‌ - வெற்றியுடைய; ““மோக்ஷ்பர்யந்தமான பலன்‌ அளிக்கும்‌ 
திருவேங்கடமுடையானிடம்‌ பாரமை காந்த்யம்‌ (இது ஈசுவரனையே உபாயமாகப்‌ பற்றி, ஆசாரியன்‌ சொல்படி நடக்கும்‌ 
மிகவுயர்ந்த பக்தனின்‌ நிலை) கொள்கிறது களிறு. 
திர்யக்குகளும்‌  திருவேங்கடமுடையானை ஆசாரத்துடன்‌ தொழ முயன்று வருகின்றன என்றால்‌ அவனுடைய வெற்றியை என்னவென்று சொல்வது? 
வேங்கடம்‌ வெற்றி பெறும்‌ ஸ்தானம்‌ என்று ஸ்ரீ 
தேசிகனும்‌ அருளிச்‌ செய்தார்‌. வல்வினைகள்‌ போர்புரிய அவற்றை 
மாய்க்க ப்ரயாஸப்பட்டு (பாடுபட்டு) கருணை என்ற கவசமணிந்து 
கையும்‌ வில்லுமாய்‌ வெற்றி பெறுமிடமான வேங்கடமேறி அருளினான்‌ சார்ங்கமேந்தும்‌ திருமால்‌ என்றாரே". 

“சுவாமி புஷ்கரிணிப்‌ பொய்கையிலே நீராடி, தேன்‌ சொட்டும்‌ மலரைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு யானை 
திருவேங்கடவனை வணங்குகிறது”! என்னும்‌ இப்பாசுரம்‌ நமக்கு உடனே கஜலட்சுமியைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறது. 
இரண்டு கைகளில்‌ தாமரைப்‌ பூக்களையேந்தி, ஒரு பொய்கை நீரில்‌ விரிந்த ஆயிரம்‌ இதழ்களுடைய தாமரையின்மீது மகாலட்சுமிப்‌ 
பிராட்டி, அலர்மேல்‌ மங்கையாக நின்று கொண்டிருக்கிறாள்‌, ஸ்ரீ வேங்கடேசனைப்‌ போலவே அவளுடைய முன்‌ வலதுகரம்‌ 
அபயஹஸ்தமாக விளங்குகிறது; தங்கக்‌ கையினாலே பொற்காசுகளை பக்தர்களுக்கு அள்ளி வீசிக்‌ கொண்டிருக்கிறாள்‌ 
அன்னை! இரண்டு பக்கங்களிலும்‌ இரண்டு யானைகள்‌ உயரத்தூக்கிய துதிக்கையில்‌ தாமரையை ஏந்திக்கொண்டு, 
இலட்சுமிக்கு சமர்ப்பிக்க, நீரில்‌ வந்து கொண்டிருக்கின்றன. 
சாதாரணமாக மலர்மகள்‌ இவ்விதமே சித்தரிக்கப்படுகிறாள்‌. யானைகளின்‌ நெற்றியில்‌ மகாலட்சுமி வாசம்‌ செய்வதாகக்‌ கூறுவர்‌. 
இவ்வாறு கஜங்களால்‌ தொழப்படுவதால்‌, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ 'கஜலட்சுமி' என்றும்‌ அழைக்கப்படுவாள்‌. 

திருமலை கஜேந்திரன்‌ அலர்மேல்‌ மங்கையை வணங்காமல்‌ ஸ்ரீநிவாஸனையே தொழுவது ஏன்‌? பிராட்டிக்குத்‌ திருமலையில்‌ 
கோயில்‌ இல்லை. “அகலகில்லேன்‌ இறையும்‌' என்று ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே மகாலட்சுமி வாசம்‌ செய்வதால்‌, 
அப்பன்‌ 'அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌' என்றே பிரசித்தமானான்‌. திருமலை கஜேந்திர ஆழ்வார்‌ இவ்வளவையும்‌ 
தெரிந்து, வைத்திருக்கிறார்‌! யானை புத்திசாலி அல்லவா? 

“வேழம்‌: வழிபடும்‌ வேங்கடம்‌' என்று பேயாழ்வார்‌. காட்டும்‌ இந்த கஜேந்திர ஆழ்வாரை நினைத்தே தலைப்பும்‌ இங்கே சூட்டினோம்‌. 
மனிதர்களில்‌ சிலர்‌ கடவுள்‌ இல்லை: என்று வணங்காமுடிகளாகத்‌ திரிவதைப்‌ போலவே, இருமலையிலும்‌ 
யானைகள்‌ திரிந்ததுண்டு. இவைகளின்‌ முடிவு பரிதாபகரமானது! 
இதிலூட்டும்‌ யானைக் காட்சி ஒன்றைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்தி, கீழ்ப்பாசுரத்தில்‌ நம்மை அசத்திவிடுகிறார்‌ ஆழ்வார்‌! 

களிறு முகில்குத்தக்‌.கை எடுத்து ஓடி 
"ஒளிறு மருப்பு ஒசிகை யாளி- பிளிறி 
விழக்‌ கொன்று நின்று அதிரும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ குன்று (ஸ்ரீ பேயாழ்வார்‌ )

களிறு - யானை; முகில்‌ - மேகம்‌; கை - துதிக்கை; ஒளிறு ஒளிரும்‌, ஒளிவீசும்‌; மருப்பு - கொம்பு, தந்தம்‌; 
ஓசிகை - ஒடிக்கின்ற கை; பிளிறி - யானை வாய்விட்டு அலறி; அதிரும்‌ - பெருமுழக்கம்‌ செய்யும்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு காலம்‌; குழக்கன்று - இளம்‌ கன்று, இங்கு வத்ஸாசுரன்‌. 

திருவேங்கடமலையில்‌ யானையானது தனது துதிக்கையைத்‌ தூக்கிக்கொண்டு, வேசுமாக ஓடி, மதயானை போலெழுந்த 
மேகங்களைக்‌ குத்துகிறது. இதைக்‌ கண்ட யாளியானது அந்த யானையின்‌ ஒளிவீசும்‌ தந்தங்களைக்‌ கையினால்‌ முறிக்கிறது; 
யானையை அங்கேயே வாய்விட்டு அலறி விழும்படிக்‌ கொன்றும்‌ விடுகிறது. பிறகு யாளிஅங்கேயே நின்று கொன்டு பெருமுழக்கம்‌ செய்கிறது. 
முன்னொரு காலத்தில்‌ இளங்கன்றின்‌ வடிவெடுத்துக்‌ கொண்டு தன்னைக்‌ கொல்ல வந்த வத்ஸாசுரனை எறிதடியாகக்‌ 
கொண்டு, விளாம்பழ வடிவிலிருந்த கபித்தாசுரனின்‌ மீது எறிந்து, இரண்டு அசுரர்களையும்‌ கொன்ற: ஸ்ரீ கிருஷ்ணன்‌ நித்யவாசம்‌ 
செய்வது திருமலையாகும்‌. 

யாளி - சிங்கத்தைப்‌ போல்‌ வலிய மிருகம்‌; இதன்‌ சிற்பங்களைக்‌ கோயில்களில்‌ காணலாம்‌. இப்படி ஒரு மிருகம்‌ 
இருந்ததா, கவிஞர்களின்‌ கற்பனையா என்று தெரியவில்லை. இங்கே 'யாளி' என்பதை சிங்கம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 

“மதயானை போலெழுந்த மாமுகில்காள்‌!"! '*கரிய மாமுகற்‌ படலங்கள்‌ கடந்தவை முழங்கிடக்‌ களிறென்று”” என்றும்‌ 
சொல்லுகிறபடியே யானைக்கும்‌, மேகத்திற்கும்‌ ஒப்புமை பிரஸித்தம்‌. ஆகவே திருமலையிலுள்ள யானையானது 
மலைமுகட்டில்‌ படிந்திருந்த மேகத்தை எதிரியானதொரு 
"யானையென்று மயங்கிப்‌ பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால்‌ குத்த, இதனை ஒரு யாளி கண்டு 'இக்களிற்றுக்கு 
இவ்வளவு மதமா?! என்று சினந்து ஓடி வந்து ௮வ்‌ யானையின்‌ மேற்‌ பாய்ந்து அதன்‌ கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு 
அலறிக்கொண்டு விழும்படியாகக்‌ கொலையுஞ்‌ செய்து, அவ்வளவிலும்‌ சீற்றம்‌ தணியாமையாலே அவ்விடத்திலேயே 
நின்று மற்றுள்ள மிருகங்களும்‌ மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம்‌ திருமலையில்‌. 
பாசுரத்தின்‌ உட்ககுத்து: 
 “தனது அன்பர்களின்‌ விரோதிகளைப்‌ போக்கும்‌ பெருமான்‌ உறையும்‌ திருவேங்கட மலையில்‌ விலங்குகளும்‌ இதே 
இயல்புடையன”' என்கிறார்‌. 
அண்டினவரின்‌ தாபத்தைப்‌ போக்கித்‌ திருமால்‌: போல்‌ விளங்கும்‌ முகிலை மதம்‌ பிடித்த யானையானது தனக்குத்‌ 
துதிக்கை, எம்பெருமானைத்‌ துதித்துத்‌ தொழ ஏற்பட்டதென எண்ணாமே உதறித்தள்ள வாய்த்ததாக வைத்து ஓடி அதனால்‌ 
குத்தும்போது, முகில்‌ வண்ணனைப்‌ போன்ற முகிலை விரோதிக்கும்‌ அதை மருப்பொசிக்க (தந்தத்தை ஓடிக்கக்‌) 
கையோங்கி விரைந்து வந்து அது கூச்சலிட்டு விழுந்தழியும்படி கொன்று நின்று யாளியானது, விரோதிகளை வெல்லவே 
ஏற்பட்டது வேங்கடமென மீண்டும்‌ முழங்கி வரும்‌. 
௮சுரனாய்‌ வேற்றுருவம்‌ கொண்டு தீங்கிழைக்க வருமவரைக்‌ கொல்லும்‌ கண்ணனுக்கு மேக மண்டலமளாவிய இம்மலையே தகுமான 
திருப்பதி யென்றபடி. 
மேகமண்டலம்‌ அளாவியது மலையென்றார்‌. ஆச்ரித விரோதிகளைக்‌ (ஆச்ரிதர்‌ - பக்தர்‌] கொல்வது கூறப்பட்டது. 

திருமலையில்‌ திருமாலிடம்‌ பக்தி பூணாமல்‌ திரிந்த யானையை யாளி அடித்துக்‌ கொன்றதைக்‌ கண்டோம்‌. 
இது பேயாழ்வார்‌ நீட்டிய சொல்லோவியம்‌. இதையே தூக்கி சாப்பிட்டு விடும்‌ காட்சியைத்‌ திருமழிசையாழ்வார்‌ சித்தரிக்கிறார்‌! 
குருவை மிஞ்சிய சிஷ்யர்‌ போலும்‌! திருமலையில்‌ யானைகளை அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பம்‌ விடும்‌ பிரம்மாண்டமான 
மலைப்பாம்புகள்‌ உண்டு என்றார்‌. பயந்து விடாதீர்கள்‌. இந்நாளில்‌ அப்படி எதுவும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை! 
மனிதனே இன்று உலகிலுள்ள விலங்குகளையெல்லாம்‌ சீக்கிரம்‌ முடித்து விடுவான்‌ போலிருக்கிறது; பயப்பட வேண்டியது அவையே! 

அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண 
இழைப்பன்‌ திருக்கூடல்‌ கூட -- மழைப்பேர்‌ 
அருவி. மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வரன்றி வந்து இழிய - திரட்டிக்‌ கொண்டு வந்து விழ; வெருவி - பயந்து; அரவு - பாம்பு; வெற்பு - மலை. 

திருவேங்கடத்தானைக்‌ காண விரும்பி நான்‌ வாய்விட்டு அழைக்கிறேன்‌. மழைபோல்‌ பொழியும்‌ பெரிய அருவிகள்‌ 
அங்குமிங்கும்‌ கிடக்கும்‌ இரத்தினங்களைத்‌ திரட்டிக்கொண்டு வந்து திருமலையில்‌ விழுகின்றன. 
இரத்தினங்கள்‌ வீசும்‌ ஒளியை அக்னிப்பிழம்பாக நினைத்து யானைகள்‌ பயந்து ஓடுகின்றன; 
மலைப்பாம்புகள்‌ அதை மின்னல்‌ என்று நினைத்து மயங்கி புற்றுக்குள்‌ ஒடுங்கிக்‌ கொள்கின்றன. 
இத்தகைய திருமலை சென்று சேரவேண்டுமென்று விரும்பி நான்‌ 'திருக்கூடல்‌' என்றும்‌ சகுனம்‌ இழைத்துப்‌ பார்க்கிறேன்‌. . 
திருக்கூடல்‌ இழைப்பன்‌: 
கூடல்‌ இழைத்தலாவது, ஒரு பெரிய வட்டம்‌ வரைந்து, அதற்குள்‌ சுழி சுழியாக முழுவதும்‌ எழுத வேண்டும்‌. 
பிறகு அவற்றை இரண்டிரண்டாகக்‌ கூட்டி மீதமில்லாமல்‌ இருந்தால்‌ வேண்டியது நடக்கும்‌; 
இல்லாவிடில்‌ கூடாது என்று அறிவது 
பழந்தமிழர்‌ சகுனம்‌ பார்க்கும்‌ வகைகளில்‌ ஒன்று. சுழிகளை சுழிக்கும்போதே சாமர்த்தியமாக முன்கூட்டியே எண்ணிக்கையைக்‌ 
கூட்டி, இரட்டைப்‌ படையில்‌ முடியுமாறு பார்த்துக்‌ கொள்ளக்கூடாது! 
இது கூடல்‌, கூடல்‌ இழைத்தல்‌, கூடல்‌ வளைத்தல்‌, கூடற்குறி என வழங்கப்படும்‌. 

கூடலிழைத்தல்‌ பெண்டிர்க்கே உரியதென்றும்‌, இங்கு ““இழைப்பன்‌ திருக்கூடல்‌”! என்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தது 
நாயகி ஸமாதியில்‌ என்றும்‌ அழகிய மணவாளச்சீயர்‌ அருளிச்செய்வர்‌. 

பின்னடிகட்கு இரண்டு வகையாகக்‌ கருத்துரைக்கலாம்‌.... 
அருவிகளில்‌ விழுந்த ரத்னங்களைக்‌ கண்ட யானைகள்‌ ''இவை கொள்ளிவட்டம்‌'” என்று ப்ரமித்து ஓடப்புக்கவாறே 
மலைப்பாம்பின்‌ வாயிலே விழும்படியாயின எனவுமாம்‌. 
சில மலைப்பாம்புகள்‌ யானையைப்‌ பார்த்து ௮ஞ்சி ஒடுங்கி ஓடிப்போய்விடும்‌ என்றும்‌, 
பல மலைப்பாம்புகள்‌ யானையை அணுகி விழுங்கி விடுமென்றும்‌ தமிழ்‌ நூல்களால்‌ தெரிகிறது. 

“திரையன்‌ பாட்டு' என்ற ஓர்‌ பழைய நூலில்‌-- 
“கடுங்கண்‌ யானை நெடுங்கை சேர்த்தி 
திடங்கொண்டறைதல்‌ திண்ணமென்றஞ்சிப்‌ 
படங்கொள்‌ பாம்பும்‌ விடரகம்புகூஉம்‌ 
தடங்கொள்‌ உச்சித்‌ தாழ்வரையடுக்கத்து' என்றதனால்‌ மலைப்பாம்பு யானையைக்‌ கண்டு அஞ்சி ஒளிக்கும்‌ என்பது தெரிகின்றது. 

சிறிய கண்ணையுடைய யானை தனது நீண்ட துதிக்கையால்‌ பலமாக அறைந்து விடுவது நிச்சயம்‌ என்று பயந்து, படமெடுக்கும்‌ 
பாம்பு, மலைச்சரிவிலுள்ள புற்றில்‌ புகுந்து கொள்ளும்‌. 
*இடிகொள்‌ வேழத்தை எயிற்றொடும்‌ எடுத்துடன்‌ விழுங்கும்‌ 
கடியமாசுணம்‌ கற்றறிந்தவர்‌ என அடங்கிச்‌ 
சடைகொள்‌ சென்னியர்‌ தாழ்விலர்‌ தாமித்தேறப்‌ 
படிகடாமெனத்‌ தாழ்வரை கிடப்பன பாராய்‌” -என்ற கம்பராமாயணப்‌. பாட்டிலிருந்து மலைப்பாம்பு யானையை விழுங்கும்‌ எனத்‌ தெரிகிறது. 

கம்பர்‌ பாடலின்‌ கருத்து: 

இடிபோல்‌ முழங்கும்‌ யானையை தந்தத்துடன்‌ எடுத்து, உடனடியாக மலைப்பாம்பு விழுங்கிவிடும்‌. இருப்பினும்‌ அது 
சடைமுடி தரித்த முனிவர்களைக்‌ கண்டதும்‌ கற்றறிந்தவர்களைப்போல அடங்கி, அவர்கள்‌ தன்னை மிதித்து 
மலையேறுவதற்கு ஏற்றபடி, மலைச்சரிவில்‌ படிபோல்‌ படுத்துக்கொள்கிறது. 

மிகவும்‌ அற்புதமான சொல்லோவியத்தைக்‌ கவிச்சக்கரவர்த்தி தீட்டியுள்ளார்‌. முதலாழ்வார்களைப்‌ போன்ற மகான்களின்‌ 
முன்னிலையில்‌ யானையை விழுங்கும்‌ பாம்பும்‌ சாதுவாக விடுகிறது! சத்சங்கம்‌ அத்தனை மகத்துவம்‌ வாய்ந்தது. 
“'படியாய்க்‌ இடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே! என்று திருமலையில்‌ படியாகக்‌ இடந்து வேங்கடவனின்‌ பவளவாய்‌ காண விரும்பிய 
குலசேகர ஆழ்வாரைப்‌ போல, கம்பநாடரின்‌ மலைப்பாம்பு, 
முனிவர்களும்‌, அடியார்களும்‌ கிடந்து இயங்கும்‌ படியாகவே, சாஷ்டாங்கமாகத்‌ தரையில்‌ படுத்துவிடுகிறது. 

**யானையைக்‌ கண்டு மலைப்பாம்பு அஞ்சும்‌!" என்று “திரையன்‌ பாட்டுப்‌' பாடிய புலவர்‌; 
''யானையை அது .விழுங்கி விடும்‌!” என்று பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்‌; 
இருவரையுமே  சேர்த்து விழுங்கிவிடும்‌ அளவிற்குக்‌ கவித்திறம்‌ படைத்த 
தெய்வப்புலவர்‌ நம்‌ திருமழிசைப்‌ பிரான்‌ என்பது இப்பாசுரத்திலிருந்து தெரிகிறது. எப்படி என்‌ன்‌றீர்களா? 
குறள்‌ போல்‌ அமைந்துள்ள கடைசி இரண்டு அடிகளைப்‌ பாருங்கள்‌-- 

“அருவி மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு'” என்கிறார்‌. 
இங்கே ''யானை வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு” என்பதற்கு இரண்டு விதமாகப்‌ பொருள்‌ கூறலாம்‌: 

௮] யானையைக்‌ கண்டு, (அல்லது அருவி அடித்து வரும்‌ இரத்தினத்தை மின்னல்‌ என நினைத்து] பாம்பு ஒடுங்கும்‌ 
திருமலை. இதுவே திரையன்பாட்டின்‌ கருத்து. 

ஆ] அருவி அடித்து வரும்‌ இரத்தினங்களைக்‌ கொள்ளிக்கட்டைகள்‌ என்று நினைத்து ஒடும்‌ யானை, 
மலைப்பாம்பின்‌ வாயிலே புகுந்து ஒடுங்கி, அடங்கும்‌ திருமலை. 
இதுவே கம்பன்‌ கூறிய கருத்து. ்‌ 

இப்படி இருபுலவர்களும்‌ . விரித்துக்கறிய இருவேறு கருத்துக்களை ஒரேயடியாக ஈரடிகளில்‌ ஒடுக்கி விடுகிறார்‌ திருமழிசையார்‌! 

இயற்கை என்னும்‌ இங்கரும்பை ஆராய்ந்து எடுத்து, கவித்திறன்‌ என்னும்‌ உருளையால்‌ ௮தை நெருக்கிச்‌ சாறு பிழிந்து, 
அதில்‌ பக்திரசம்‌ என்னும்‌ பனிக்கட்டியையும்‌ சேர்த்து, உலக ஆசை என்னும்‌ தாகம்‌ தணிய நமக்குத்‌ தருகின்றனர்‌ இன்கவி பாடிய 
இப்பரம கவிகள்‌! 
 
“இயற்கையை நாம்‌ காண்பது ஒரு வகை. நம்‌ மனத்தில்‌ அஃது ஒருவித சலனத்தையும்‌ ஏற்படுத்துவதில்லை. 
அது கவிஞர்களிடம்‌ பல்வேறு வித சலனங்களை ஏற்படுத்தப்‌ பல்வேறு கற்பனைக்‌ காட்சிகளைப்‌ படைக்கத்‌ தூண்டுகின்றது. 
கவிஞர்கள்‌ பக்தர்களாக இருப்பின்‌ அவர்கள்‌ பிறிதோர்‌ உலகத்தையே படைத்து விடுகின்றனர்‌; 
அதில்‌ தத்துவக்‌ கருத்துக்களையும்‌ மிளிரச்‌ செய்து விடுகின்றனர்‌. 
இவை இயற்கையைத்‌ துய்ப்பவர்கட்கு எழிலைக்‌ காட்டி மகழ்விக்கன்றன; முருகுணர்ச்சியையும்‌ தூண்டுகின்றன. 
பக்திக்கண்‌ கொண்டு நோக்குபவர்கட்கு பரவசத்தை ஏற்படுத்திப்‌ பரமனின்‌ விசுவரூப தரிசனத்தையே காட்டி விடுகின்றது. 
இத்தகைய பாசுரங்களைப்‌ படித்து அநுபவிக்கக்‌ கற்றுக்கொள்ளாவிடில்‌ நமக்கு இவ்வுலகில்‌ ஆறுதல்‌ 
அளிக்கும்‌ பொருளே இல்லை என்று ஆகிவிடும்‌'". 

------------

முதலாழ்வார்கள்‌ கண்ட திருமலை 
சித்‌, அசித்‌, ஈசுவரன்‌ என்று மூவகைப்பட்ட வைணவத்‌ தீத்துவம்‌ 'தத்துவத்‌ திரயம்‌' (திரயம்‌ - மூன்று) எனப்படும்‌. 
சித்‌ (உயிருள்ள ஜீவராசிகள்‌), அசித்‌ (ஜடப்பொருள்‌) ஆகிய இரண்டும்‌ ஈசுவரனுக்கு உடல்‌ என்பர்‌; 
இந்த உறவு 'சரீர - சரீரி பாவனை! எனப்படும்‌. அசித்தும்‌ பகவான்‌ படைப்பாதலால்‌ அதுவும்‌ வழிபாட்டிற்குரியது. 

திருமலையின்‌ நாம்‌ கண்ட வானரங்கள்‌, யானைகள்‌, வேடர்கள்‌, குறவர்கள்‌ 'சித்‌' வகையைச்‌ சேர்ந்தவர்‌. 
மலை 'அசித்‌” ஆகும்‌. வைகுந்தத்திலிருந்த கருடாசலமே கருடபகவானால்‌ ஸ்ரீமத்நாராயணன்‌ ஆணைப்படி கொண்டு வரப்பட்டு பூவுலகில்‌ 
வைக்கப்பட்டதால்‌, இருமலை கருடாசலம்‌' எனப்படும்‌. 
ஆதிசேஷனே சேஷகிரியாசு எழுந்தருளியிருப்பதாகக்‌ கூறுவர்‌, 
ஏழுமலை வெறும்‌ கல்‌ அல்ல; எம்பெருமானின்‌ சத்துவகுணமே இறுகத்‌  திருமலையானது எனலாம்‌. 
எனவே வேங்கடம்‌ 'திருமலையாழ்வார்‌' என்றே போற்றப்படும்‌. 
மிகவும்‌ பிரசித்தி பெற்ற இந்த ஆழ்வார்‌ ஏகப்பட்ட திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கிறார்‌. 
சிந்தாமணகிரி, 
ஞானகிரி, 
வேங்கடகிரி, 
ஸ்ரீனிவாச கிரி, 
தீர்த்தகிரி, 
சுவர்ணகிரி, 
ஸ்ரீசைலகிரி, 
ஆனந்தகிரி, 
நாராயணகிரி, 
வைகுந்தகிரி, 
வேதகிரி, 
யமகிரி, 
சிம்மகிரி, 
வராககிரி, 
நீலகிரி என்றும்‌, 
சேஷசைலம்‌, 
கருடாசலம்‌, 
வேங்கடாசலம்‌, 
சேஷாசலம்‌ என்றும்‌; 
வேங்கடாத்ரி, 
நாராயணாத்ரி, 
விருஷபாத்ரி, 
விருஷாத்ரி, 
அஞ்சநாத்ரி, 
சேஷாத்ரி, 
ஆநந்தாத்ரி, என்றும்‌ அழைக்கப்படும்‌ ஏழுமலை. 
இருப்பினும்‌ 
வேங்கடம்‌, திருமலை ஆகிய திருநாமங்களே இதற்கு சாதாரணமாக வழங்கப்படும்‌. 

“சென்று சேர்திரு வேங்கடமாமலை 
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”” என்று நம்மாழ்வார்‌ இருமலையை மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌. 
திருமலையாழ்வாரை வணங்கினாலே  நம்முடைய பாவவினைகள்‌ அழிந்து விடும்‌. 
முதல்‌ நான்கு  ஆழ்வார்கள்‌. திருமலையைக்‌ குறித்துப்‌ பாடியுள்ள சில பாசுரங்களை இங்கு காண்போம்‌. 

எழுவார்‌ விடைகொள்வார்‌ ஈன்துழாயானை 
வழுவா வகை நினைந்து வைகல்‌ - தொழுவார்‌ 
வினைச்சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடமே! வானோர்‌ 
மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை. (-ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -மு.தி. 26) 

வழுவா வகை - பிரியாமல்‌ இருக்க வகை; வைகல்‌ - இனந்தோறும்‌; நந்துவிக்கும்‌ - அணைக்கும்‌, அழிக்கும்‌; 
மனச்சுடர்‌  திருவுள்ளமாகிய விளக்கு. 

சிலர்‌ (எழுவார்‌) செல்வம்‌ வேண்டி ஏழுமலையானை வணங்குவர்‌; 
சிலர்‌ (விடை கொள்வார்‌) கைவல்யம்‌ (மோட்சம்‌) வேண்டி, அதைப்‌ பெற்றதும்‌ அவனை விட்டுப்‌ பிரிவர்‌; 
ஆயினும்‌ பக்தர்கள்‌ இனிய துழாய்‌ (துளசி) மாலைகளணிந்த ஸ்ரீவேங்கடாசலபதியை என்றும்‌ பிரியாமலிருக்க விரும்பி 
௮வனை நாள்தோறும்‌ தொழுவார்கள்‌. அவரவர்களது பாவவினைகளாகிய தீயை ௮ணைக்கக்கூடியது வேங்கடம்‌. 
நித்யஸூரிகளுடைய திருவுள்ளமாகிய விளக்கைத்‌ தூண்டி விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே. 
அவதாரத்திற்குப்‌ பிற்பட்டவர்களாகய நாம்‌ தொழுது உய்யுமாறு திருமலையிலே பெருமான்‌ உறைந்துள்ளான்‌. 

கீழ்ப்பல பாசுரங்களில்‌ விபவாவதார சேஷ்டிதங்களை (செயல்களைப்‌) பேசி அநுபவித்த ஆழ்வார்‌, என்றைக்கோ கழிந்த 
அவ்வவதாரங்களின்‌ திருக்குணங்கள்‌ இன்றைக்கும்‌ நன்கு விளங்குமாறு, பின்னானார்‌ (பின்‌ தோன்றியவர்கள்‌) வணங்கும்‌ 
சோதியாக சேவை சாதித்து அருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும்‌ அனுபவிக்க ஆசை கொண்டு, 
'*தென்னனுயர்‌ பொருப்பும்‌ தெய்வவடமலையும்‌'' என்னும்‌ இரண்டு திருமலைகளுள்‌ 
திருவேங்கடமலையிலே திருவுள்ளஞ்சென்று அவ்விடத்தைப்‌ பேசி அனுபவிக்கிறார்‌ இப்பாட்டில்‌. 
எம்பெருமானிலுங்காட்டில்‌ எம்பெருமானோடு சம்பந்தம்‌ பெற்ற பொருள்களே பரம 
உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்கள்‌ ஆகையாலே, 
திருவேங்கடமுடையான்‌ வரையில்‌ போகாமல்‌, அவனுடைய சம்பந்தம்‌ பெற்றதான திருமலையோடே தின்று அனுபவிக்கிறார்‌. 

எழுவார்‌: 
இங்கு 'எங்களுக்கு ஐச்வர்யத்தைத்‌ தரவேணும்‌'” என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும்‌ எம்பெருமானைவிட்டு எழுந்து 
போகிறவர்கள்‌ என்றாவது, ஐச்வர்யம்‌ வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள்‌ என்றாவது கொள்க. 
இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ஐச்வார்ய ப்ராப்திக்கு 
விரோதியான பாவங்களைத்‌ தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை. 

விடைகொள்வார்‌ என்றால்‌ விட்டு நீங்குகிறவர்கள்‌ என்கை; 
ஸந்தர்ப்பம்‌ நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச்‌ சொல்லுகிறது. 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ்‌ 
ஆத்மானுபவத்திற்கு விரோதியான பாவங்களைத்‌ தொலைத்துக்‌ கைவல்யாநுபவத்தை நிறைவேற்றுகை. 

ஈன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல்‌ தொழுவார்‌ 
ப்ரமைகாத்துகளான பகவத்பக்தர்கள்‌; 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது மாறிமாறிப்‌ பலபிறப்பும்‌ 
பிறக்கும்படியான தீவினைகளைத்‌ தொலைத்து முத்தியளிக்கை 

ஆக வேண்டுவோர்‌ வேண்டினபடியே அநிஷ்ட நிவருத்தியையும்‌ (வேண்டாததை விலக்கியும்‌) இஷ்டப்ராப்தியையும்‌ 
செய்விக்கவல்லது திருவேங்கடம்‌ என்றதாயிற்று. 

வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை: 
ஒரு நெருப்பை அணைக்கும்‌; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும்‌ என்று சமத்காரமாக அருளிச்‌ செய்கிறார்‌. 
வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டுகையாவது - பரமபதத்திலே பரத்வகுணத்தை அனுபவித்துக்‌ கொண்டிருக்கிற நித்யஸூரிகளை, 
இங்கு. வந்து ஸெளலப்ய, ஸெளரில்யாதி குணங்களை அனுபவிக்குமாறு  உத்ஸாஹமூட்டுதலாம்‌. 

நெறியார்‌ குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து 
அறியாது இளங்கிரி என்றெண்ணி - பிரியாது 
பூங்கொடிகள்‌ வைகும்‌ பொருபுனற்‌ குன்றென்னும்‌ 
வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு, (-ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 53) 

நெறி - வழி, பாதை; நெறியார்‌ - திருமலை வழியிலே இருப்பவர்கள்‌; குழற்கற்றை - சடைமுடி; இளங்கிரி - சிறியமலை; 
வைகும்‌ - படரும்‌; பொருபுனல்‌ - அலையெறியும்‌ அருவி; வெற்பு ” மலை. 

திருமலைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ தவம்‌ செய்யும்‌ தவசியர்களது சடைமுடிக்கற்றைகள்‌ முன்புறம்‌ உயர்ந்தும்‌, 
பின்னே முதுகுப்புறம்‌ தாழ்ந்தும்‌ இருக்கின்றன. மனிதன்‌ என்று அறியாமல்‌, சிறிய மலை என்றெண்ணி, அவ்விடம்‌ விட்டுப்‌ 
பிரியாமல்‌ பூங்கொடிகள்‌ அவர்கள்‌ மீதே படர்கின்றன. 
அலையெறிகின்ற அருவிகளையுடைய “திருமலை” என்று புகழ்பெற்ற வேங்கடமே நாம்‌ விரும்பும்‌ மலையாகும்‌. 

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம்‌ பொலிய வருணிக்கிறார்‌. திருமலை யாத்திரை வருகின்ற மஹான்கள்‌ பலர்‌ 
“வெறியார்‌ தண்சோலைத்‌ திருவேங்கடமலைமேல்‌ நெறியாங்க்‌ கிடக்கும்‌ நிலையுடையேன்‌ ஆவேனே! என்று ஸ்ரீ குலசேகரப்‌ 
பெருமாள்‌ விரும்பினபடியே, திருமலை ஏறும்‌ வழியிலே மிக்க ஆதாரம்‌ வைத்து, திருமலை மேலே சென்று வாழ்வநிற்காட்டிலும்‌ 
திருமலை வழியிற்‌ கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்‌ கொண்டு அவ்வழியிலே' :வீற்றிருந்து எம்பெருமானைச்‌ சிந்தை செய்கின்றனர்‌. 
அப்போது மூச்சுவிடுதல்‌, உடம்பு அசைத்தல்‌ முதலியன ஒன்றுஞ்செய்யாதே, வால்மீகி ' முதலிய 
மஹரிஷிகளைப்போலே யோகநிலையில்‌ ஆழ்ந்து கிடக்கின்றனர்‌. 
அன்னவர்களது கூந்தல்‌ கற்றையானது முன்னின்று பின்‌ தாழ்ந்திருப்பதைக்‌ கண்ட பூங்கொடிகளானவை 'சில மனிதர்கள்‌ 
வீற்றிருக்கின்றார்கள்‌' என்றும்‌ அவர்களுடைய குழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது' என்றும்‌ தெரிந்து கொள்ளாமல்‌, “இவை 
சிறுமலைகள்‌' என்றெண்ணி அவற்றின்‌ மேலே படர்கின்றனவாம்‌. 
படர்ந்து, வால்மீகி முனிவர்மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின்‌ மேலும்‌ பூங்கொடிகள்‌ படர்ந்திருப்பது அற்புதமான 
ஒரு காட்சியாய்‌ அமைந்தது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம்‌ விரும்பத்தக்க மலையாம்‌ - என்றாயிற்று. 

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன்துழாய்‌ 
கற்பென்று சூடும்‌ கருங்குழல்மேல்‌ - மற்பொன்ற 
நீண்டதோள்‌ மால்கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ 
பூண்டநாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) 

வியன்துழாய்‌ - வியக்கத்தக்க துளசி; மற்பொன்ற - மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான; மால்‌ - திருமால்‌; நீள்கடல்‌ -திருப்பாற்கடல்‌. 

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ 
அமைந்துள்ளது. இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌. 

என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌. தனது 
கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக்கொள்கிறொள்‌. மல்லர்கள்‌ அழியும்படியான 
நீண்ட தோள்களையுடைய திருமால்‌ பள்ளிகொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌. 

இப்பாசரத்தில்‌ 'கற்பென்று” பாதிவ்ரத்யத்தையும்‌, 
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌, 
'என்‌ மகள்‌' என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
மற்பொன்ற: 
மல்லர்களையழித்த; கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌, கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, 
முஷ்டிகளன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌. 

பூண்ட நாள்‌ எல்லாம்‌: 
பூண்ட - பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌' என்கிறபடியே, “விடிந்த விடிவுகள்‌ 
தோறும்‌' என்று பொருள்பட்டது. 

எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌: 
அவனுடைய திருநாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, திருக்கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, 
திவ்யசேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌, வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌, 
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌, ௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ 
பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌ என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌. 

இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு: அதாவது - தாமான தன்மையை (ஆண்மையை/ 
விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ 
எனப்படும்‌). இப்படி அனுபவிக்கும்‌ இறத்தில்‌ தாய்ப்பாசுரம்‌, தோழிப்பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு. 
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌. 
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீபாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை. 
ச்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள்‌ அருளிச்செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌. 
ஆயினும்‌ இப்பாசுரம்‌ ஒன்று தாய்வார்த்தையாகச்‌ செல்லுகிறது. பேயாழ்வாராகிய 
பெண்பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது. 
“என்னுடைய மகளானவள்‌'' என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக்கொள்ள வேண்டும்‌. 

இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌ இங்ஙனே 
தாய்ப்பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌, “என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌ இவ்வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ 
சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌ இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌. 

எங்ஙனே எனில்‌: ''பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு, 
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌; 
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு 
அதனைச்‌ சூடுங்கள்‌; நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌'' என்பதாக. 

இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌: '*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ 
அந்யாபதேசமின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌... 
திருமலையைப்‌ பாடுங்கோள்‌... திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌... விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌'' என்று. 
திருவேங்கடத்தின்‌ புகழைப்பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌, நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; 
நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு ... 

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி 
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ - கற்கின்ற 
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌ 
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40), 
வீடு - மோட்சம்‌; நூல்வலை - வேதங்களாகிய வலை; நூலாட்டி - வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி; 
கேள்வனார்‌ - கணவர்‌, இங்கே திருமால்‌. 
 
மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌; இதன்‌ பலனாகவே 
மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌... “*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ 
எத்தகையது!” என்று நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌! 
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌ திருவடிகளாகிய வலையில்‌ 
அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌. 

"மலை' என்று வருகிற பெயர்களையெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து 'பசுமலை, 
குருவிமலை' என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே, என்னையும்‌ அறியாமல்‌ 'திருவேங்கடமலை' என்று 
என்‌ வாயில்‌ வந்துவிட்டது; இவ்வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌ கணக்கு 
செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து. 

நின்று நினைக்கின்றேன்‌: 
நாம்‌ புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌, எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டுத்‌ திருவுள்ளம்‌ 
பற்றுகிற இது என்ன ஆச்சரியம்‌! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை. 
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? 
மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌, ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ 
தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌. எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே 
என்னை அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு. 
எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, -நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி. 

வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி ஆராய்ந்தபோது, 
எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று... சரணாகதரைக்‌ 
காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி) அந்நூல்களே  * எதற்கென்று கேள்வனை 
(ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌. ்‌ 
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று, அதனால்‌ அதை எனக்கு 
வீடாக்கினான்‌. அதே மோட்சத்தானம்‌. இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன 
வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌). இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ 
வாய்த்தது என்றபடி. 
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோரூப முக்கரணங்களின்‌ வியாபாரங்கள்‌ 
(செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன. 

வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
வேங்கடமே மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌ - வேங்கடமே 
தானவரை வீழத்தன்‌ ஆழிப்படைதொட்டு 
வானவரைக்‌ காப்பான்‌ மலை, (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி. 48) 

மெய்ம்மையால்‌ - உண்மையான பக்தியுடனே; மெய்வினை நோய்‌ - முன்பிறவியில்‌ செய்த பாவவினைகளால்‌ உடலை வருத்தும்‌ நோய்‌; 
தானவர்‌ - அசுரர்கள்‌; ஆழிப்படை - சக்கராயுதம்‌; வானவர்‌ - தேவர்கள்‌. 

நித்யஸூரிகளால்‌ உண்மையான பக்தியூடனே தொழப்படுவது வேங்கடமே. 
பாவ வினைகளால்‌ விளைந்து உடலை வருத்தும்‌ கர்மவியாதிகளைத்‌ தீர்ப்பதும்‌ வேங்கடமே. 
அசுரர்கள்‌ அழியும்படி, சக்கராயுதத்தை ஏவி, தேவர்களைக்‌ காத்தருளும்‌ பெருமானுடைய திருமலையும்‌ வேங்கடமே. 
வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌: விண்ணோர்‌ வைகுந்தத்திலிருக்கும்‌ முக்தர்களும்‌, நித்யஸூரிகளும்‌. 

 “ஸதா பச்யந்தி ஸூரய:'” என்கிறபடியே நித்யஸூரிகள்‌ 
பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவிக்கப்பெற்றாலும்‌, அங்கே பரத்வத்துக்கு உரிய மேன்மைக்‌ 
குணங்களை அநுபவிக்கலாகுமேயன்றி ஸெளலப்ய (எளிதில்‌ அணுகும்‌ தன்மை) ஸெளரில்யங்களுக்குப்‌ (வேறுபாடின்றிப்‌ 
பழகும்‌ தன்மை) பாங்கான எளிமைக்‌ குணங்களை இத்நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால்‌ அந்த லோதி குணங்களை 
அநுபவிப்பதற்காகத்‌ திருமலையில்‌ வந்து தொழும்படியைக்‌ கூறுவது முதலடி. 

வேங்கடமே மெய்வினை நோய்‌ நீர்ப்பதுவும்‌: 
இது 'வேங்கடம்‌' என்பதற்கு விளக்கம்‌. வேம்‌ - பாவம்‌; கடம்‌ - எரித்தல்‌. 
தேவர்களுக்கு அசுரர்களால்‌ .நேரும்‌ துன்பங்களைத்‌ திருவாழியால்‌ (சக்கரத்தால்‌ தொலைத்துக்‌ காத்தருளும்‌ எம்பெருமான்‌,
அப்படியே நம்‌ போன்ற பக்தர்களுடைய துன்பங்களையும்‌ துடைக்கவே எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ திருமலை என்பன பின்னடிகள்‌. 

“'வேங்கட அம்ருத பீஜம்‌ கடமைச்வர்யம்‌ உச்யதே'' என்றபடி வேங்கடம்‌ என்ற சொல்லுக்கு மோட்சம்‌, ஐச்வர்யம்‌ இரண்டுமான 
மலையென்ற பொருளுமுண்டு. மோட்சமென்பதற்கு ஏற்ப விண்ணோர்‌ தொழுகின்றனர்‌. 
ஐச்வர்யம்‌ என்பதற்கிணங்க வானவர்‌ வணங்குகின்றனர்‌. 
வினைகளை எரிப்பதால்‌ வேங்கடம்‌ என்ற பொருளைக்‌ கருதி அனைவரும்‌ இதனையே வணங்கி 
எல்லாத்‌ துயரங்களையும்‌ தீர்த்துக்கொள்வது கண்கூடு. 
ஆகவே எல்லாவற்றிற்கும்‌ மேலானது. இவ்வாறு வேங்கடம்‌ என்ற சொல்லின்‌ பொருளைக்‌ கருதி மூன்றுதரம்‌ வேங்கடமென்றது. 

-----------
 
முதலாழ்வார்கள்‌ கண்ட திருவேங்கடவன்‌ 

முதலாழ்வார்கள்‌ மாபெரும்‌ வேங்கடேச பக்தர்கள்‌ என்பது அவர்கள்‌ பாடிய திருவந்தாதியிகளிலிருந்து நன்கு 
வெளிப்படுகிறது. மொத்தம்‌ 300 பாசுரங்களில்‌, இவர்கள்‌ வேங்கடவனைக்‌ குறித்துப்‌ பாடியவை 39;
ஸ்ரீ ரங்கநாதனைக்‌ குறித்தவை 7; 
திருமழிசையாழ்வார்‌ சரிசமமாகவே, முறையே 15,  பாடல்களைப்‌ பாடியுள்ளார்‌; 
இந்நால்வரும்‌ வேங்கடவனைப்‌ பாடிய பாசுரங்களில்‌ சிலவற்றை இங்கு காண்போம்‌. 

உணர்வாரார்‌ உன்பெருமை? ஊழிதோறு ஊழி 
உணர்வாரார்‌ உன்‌ உருவம்‌ தன்னை? உணர்வாரார்‌? 
விண்ணகத்தாய்‌! மண்ணகத்தாய்‌! வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ 
பண்ணகத்தாய்‌! நீ கிடந்தபால்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ )

உணர்வாரார்‌ - உணரக்கூடியவர்‌ யார்‌? ஊழி - பிரளயம்‌, காலவெள்ளம்‌; விண்ணகம்‌ - வைகுந்தம்‌. 

வைகுண்டத்தில்‌ இருப்பவனே! மண்ணுலகில்‌ அவதரித்தவனே! வேங்கடத்தில்‌ நின்று அருள்பவனே! 
ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களின்‌ பண்கள்‌ மயமானவனே! 
உன்‌ பெருமையை ழி முதல்‌ அடுத்த ஊழிவரை காலமெல்லாம்‌ ஆராய்ந்தாலும்‌ யார்‌ அறியவல்லார்‌? உனது திவ்யாத்ம 
சொரூபத்தைத்தான்‌ யார்‌ அறியவல்லார்‌? நீ திருப்பாற்கடலில்‌ பாம்பணைமேல்‌ கிடக்கும்‌ நிலையைத்தான்‌ யார்‌ அறியவல்லார்? 

“திருமாலை அறிவதே அறிவு!" என்று கீழ்ப்பாட்டில்‌ அருளிச்செய்த ஆழ்வார்‌ ௮றிவுக்கு எல்லைநிலம்‌ எம்பெருமான்‌ 
அல்லது இல்லை என்னும்படி இருந்தாலும்‌, அவன்‌ தன்மை அறிவார்தான்‌ இல்லை என்று இப்பாட்டில்‌ அருளிச்செய்கிறார்‌. 
இவ்வாறிருப்பது வஸ்துவின்‌ (திருவேங்கடவனின்‌) சுபாவமே ஒழிய, அறிவின்‌ குறைவன்று என்பதும்‌ அறியத்தக்கது. 
*'உணர்வாரார்‌?'” என்ற வினாவினால்‌ ஸர்வஜ்ஞனான உன்னாலும்‌ உன்‌ தன்மை அறியமுடியாது என்பதும்‌ காட்டப்படும்‌.
''தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியான்‌'' என்றார்‌ நம்மாழ்வாரும்‌. 

உளதென்று இறுமாவார்‌ உண்டு இல்லை என்று 
தளர்தல்‌ அதன்‌ அருகுஞ்சாரார்‌ - அளவரிய 
வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌' முடிதோயும்‌ 
பாதத்தான்‌ பாதம்‌ பயின்று. (ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 45) 

உளது என்று - செல்வம்‌, பகவானை வழிபடும்‌ பேறு தமக்கு உள்ளது என்று; இறுமாவார்‌ - கர்வம்‌ கொள்ளமாட்டார்‌; 
விண்ணோர்‌ - நித்யஸூரிகள்‌; பயின்று - பழக. 

அளவிட முடியாதபடி அனந்தமாயுள்ள வேதங்களால்‌ போற்றப்படும்‌ திருவேங்கடமுடையான்‌, நித்யஸூரிகளது 
தலைமுடிகள்‌ படியும்படி பணியப்பெற்ற திருவடிகளை யுடையவன்‌. ஸ்ரீவேங்கடாசலபதியினுடைய பாதங்களை 
வணங்கிப்‌ பழகிய பக்தர்கள்‌ தமக்குச்‌ செல்வமோ, அவனை வணங்கும்‌ 'பேறோ உள்ளதென்று கர்வம்‌ கொள்ளமாட்டார்கள்‌; 
அவை நேற்று இருந்து இன்று இல்லையென்னும்படி அழிந்தன” என்னும்‌ மனத்தளர்ச்சியின்‌ பக்கமே செல்லமாட்டார்கள்‌. 
வேங்கடேச பக்தர்கள்‌ தம்முடைய பணம்‌, பதவி பறிபோனாலும்‌, மனம்‌ தளர்ந்து அவனைத்‌ தொழுவதைக்‌ கைவிட 
மாட்டார்கள்‌; ''ஸ்ரீ வேங்கடேச சரணெள சரணம்‌ ப்ரபத்யே” (ஸ்ரீ வேங்கடேசனின்‌ இரண்டு திருவடிகளையும்‌ சரணடைகிறேன்‌) 
என்றே எப்பொழுதும்‌ இருப்பார்கள்‌. 
இத்தகைய ''ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி,” 'வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ 
பாதம்‌ பயின்று என்பதனால்‌ கூறப்பட்டது. 
வேங்கடத்தான்‌ பாதத்தான்‌ - ஸ்ரீ வேங்கடேச சரணெள; பாதம்‌ பயின்று - சரணம்‌ 
ப்ரபத்யே, சரணமாகப்‌ பற்றுகிறேன்‌. 
எனவே இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேசப்‌ பிரபத்திக்கு இலக்கணம்‌ கூறுகிறது. 

உளதென்று இறுமாவார்‌ உண்டில்லை என்று: 
இதற்கு இருவிதமாகப்‌ பொருள்‌ கூறப்படுகிறது; 
செல்வத்தைக்‌ குறித்துச்‌ செருக்கடைதல்‌; நித்யஸூரிகள்‌ முடி. தோயும்‌ 
ஸ்ரீ வேங்கடேசனின்‌ பக்தர்கள்‌ நாம்‌ என்று பெருமைப்படுதல்‌ என்று. 

பாகவதர்களின்‌ பெருமையைப்‌ பேசுகிறார்‌. 
எம்பெருமானுடைய திருவடிகளிற்‌ பழகுகின்ற பாகவதர்கள்‌ செல்வம்‌ படைத்தாலும்‌ செருக்குக்‌ கொள்ள மாட்டார்கள்‌; இருந்த 
செல்வம்‌ அழிந்து போனாலும்‌, “ஐயோ! ஏழைமை வந்துவிட்டதே!'' என்று சிறிதும்‌ தளர்ச்சியடைய மாட்டார்கள்‌. 
களிப்பும்‌ கவர்வுமற்று' என்ற பாசுரத்திற்‌ சொன்னபடி லாபநஷ்டங்களில்‌ , ஒருபடிப்பட்ட சிந்தை உடையராயிருப்பர்‌. 
““முனியார்‌ துயரங்கள்‌ முந்திலும்‌, இன்பங்கள்‌ மொய்த்திடினும்‌ கனியார்‌... எங்கள்‌ இராமாதுசனை வந்தெய்தினர்‌'' (இராமாநுச 
நூற்றந்தாதி, 17) என்ற ஸ்ரீராமாநுஜபக்தனைப்‌ போன்றிருப்பர்‌ பகவத்பக்தர்களும்‌. 

தாழ்சடையும்‌ நீள்முடியும்‌ ஒண்மழுவும்‌ சக்கரமும்‌ 
சூழவும்‌ பொன்நாணும்‌ தோன்றுமால்‌ - சூழும்‌ 
திரண்டருவி பாயும்‌ திருமலைமேல்‌ எந்தைக்கு 
இரண்டுருவும்‌ ஒன்றாய்‌ இசைந்து (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ.தி. 63) 

தாழ்சடை, ஒண்மழு, சூழ்‌ அரவு - சிவனுக்குரியவை. 
நீள்முடி, சக்கரம்‌, பொன்‌ நாண்‌ - விஷ்ணுவுக்குரியவை. 

தாழ்ந்த சடாமுடியும்‌, நீண்ட மகுடமும்‌; அழகிய மழுவாயுதமும்‌, சக்கரமும்‌; சுற்றிலும்‌ அணிந்துள்ள 
நாகாபரணமும்‌, பொன்‌ அரைநாணும்‌; நாற்புறமும்‌ அருவிகள்‌ இரண்டு பாயும்‌ திருமலைமேல்‌ எழுந்தருளியிருக்கும்‌ எந்தை ஸ்ரீ 
வேங்கடேசனுக்கு இவ்விதம்‌ சிவன்‌, விஷ்ணு ஆகிய இருவரின்‌ உருவமும்‌ ஒரே வடிவமாக அமைந்து விளங்குகிறது; என்ன ஆச்சரியம்‌! 

இப்பாசுரத்திற்கு அவரவர்கள்‌ விருப்பப்படி பலவாறாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. சைவர்கள்‌ சங்கர - நாராயணனைக்‌ கூறுவதாகக்‌ 
கொள்வர்‌. இதையொட்டியே சைவ - வைணவர்களுக்கிடையே திருமலை யாருடையது என்று ஒரு பிரச்னை ஏற்பட்டதாகவும்‌, 
ஸ்ரீ ராமானுஜர்‌ அது வைணவருடையதே என்று நிலைநாட்டியதாகவும்‌ வரலாறு கூறுகிறது. ஸ்ரீ ராமானுஜர்‌ ஸ்ரீ 
வேங்கடேசன்‌ சன்னிதியில்‌ பலர்‌ காண சங்கு, சக்கரமும்‌, சிவனுக்குரிய ஒண்மழுவும்‌, திரிசூலமும்‌ வைத்து, எவையேனும்‌ * 
ஒன்றை ஏற்றுப்‌ பிரச்னையை தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்டி, இரவில்‌ கதவை மூடினார்‌. மறுநாள்‌ 
திருவேங்கடமுடையான்‌ சங்கு, சக்கரங்களுடன்‌ காட்சி தந்ததாகக்‌ கூறுவர்‌. 

வேங்கடவன்‌ நாகத்தை அணிந்திருப்பது வாஸ்தவமே. 
எம்பெருமானின்‌ க்ரீடத்துக்குக் கீழ்  காணப்படும்‌ நீண்ட ரேகையைச்‌ தாழ்சடையாக்‌. கொள்வது கற்பனை என்பர்‌ வைணவர்‌. 
இப்பாசுரத்தையே இடைச்செருகல்‌, பேயாழ்வார்‌ பாடியதாக இருக்க முடியாது என்றே சிலர்‌ கூறுவர்‌. 

இது எங்நனமிருப்பினும்‌ பேயாழ்வார்‌ சைவ வைணவ சமரச  நோக்கு உடையவர்‌ என்பதற்கு இப்பாசுரம்‌ சான்றாக அமைகறது. 
இருப்பினும்‌ இவர்‌ திருமாலே முழுமுதற்‌ கடவுள்‌ என்று  கொண்டு, சைவராக இருந்த திருமழிசையாரை வாதத்தில்‌ வென்று 
வைணவராக்கனவர்‌ என்பதையும்‌ நினைவுகூர வேண்டும்‌. 

இன்று அவைதீக சமயங்களின்‌ தீவிரப்‌ பிரசாரத்தினாலும்‌, மதமாற்று முயற்சிகளாலும்‌ வைதீக மதங்களான சைவத்திற்கும்‌ 
வைணவத்திற்கும்‌ இடையே முன்பொரு காலம்‌ நிலவிய பூசல்களும்‌, வாக்குவாதங்களும்‌ , மறைந்து சமரச நோக்கே 
மிகுந்திருப்பது மூழ்ச்சிக்குரிய விஷயமாகும்‌, 
ஸ்ரீ வேங்கடேஸ்வரன்‌ என்று சைவர்களாலும்‌, ஸ்ரீநிவாஸன்‌ என்று வைணவர்களாலும்‌, 'பாலாஜி' என்று சாக்தர்களாலும்‌ மற்றும்‌ 
அவைதீக சமயத்தினராலும்‌ கூட வணங்கப்படும்‌ கண்கண்ட தெய்வமாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திகழ்கின்றது கண்கூடு, 

சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை: 
நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌ - என்றும்‌ 
கடிக்கமல நான்முகனும்‌ கண்மூன்றத்தானும்‌ 
அடிக்கமலம்‌ இட்டேத்தும்‌ அங்கு (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா.தி. 42) 

சேண்‌ - உயர்ந்த; சேணுயர்‌ - மிகவுயர்ந்த; நீர்மை - இயல்பு, சுபாவம்‌; கடி - வாசனை மிகுந்த; கமலம்‌ - தாமரை; 
நான்முகன்‌ பிரம்மா) கண்மூன்றத்தான்‌ - முக்கண்ணன்‌, சிவன்‌. 
 
(அன்பர்களே!) மிகவும்‌ உயர்ந்த வேங்கடத்தைச்‌ சென்று வணங்குங்கள்‌! அத்திருமலை, இயல்பாகவே பாவங்களை நின்று போக்குவது. 
அங்கு பரிமளம்‌ மிக்க தாமரையில்‌ பிறந்த பிரம்மனும்‌, முக்கண்ணனாகிய சிவனும்‌, என்றும்‌ ஸ்ரீ வேங்கடாசலபதியினுடைய திருவடிகளில்‌, 
தாமரைப்‌ பூக்களை சமர்ப்பித்து, துதித்துக்கொண்டிருப்பர்‌. வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌: 

வேம்‌ - பாவங்கள்‌, வினை. கடம்‌ - எரிப்பது, கெடுக்கும்‌; “வேங்கடம்‌” என்பதற்குப்‌ பொருள்‌ கூறியிருக்கிறார்‌. 
“வெங்கொடும்‌ பாவங்களெல்லாம்‌ வெந்திடச்‌ செய்வதால்‌ 
நல்மங்கலம்‌ பொருந்துஞ்சர்‌ வேங்கடமலையானதென்று -என்கிறது ஒரு புராணச்‌ செய்யுள்‌. 

பிரம்மாதி தேவர்களே “புஷ்பமண்டபம்‌' என்றே புகழ்பெற்ற பொன்மலையில்‌ ஸ்ரீ வேங்கடேசனது திருவடிகளில்‌ புஷ்பாஞ்சலி 
செய்து, தங்கள்‌ அதிகாரத்தைப்‌ பெற்றிருக்கின்றனர்‌. நீங்களும்‌ அவ்விதமே செய்து உய்வடைவுங்கள்‌ என்று உபதேசிக்கிறார்‌. 
சமரச . நோக்குடைய பேயாழ்வாரைப் போல்‌ அல்லாது, திருமழிசையார்‌ வீரவைணவர்‌ என்பதும்‌ இதிலிருந்து தெரிகிறது. 

முதலாழ்வார்கள்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ (அப்பிள்ளை திருவாய்மலர்ந்தருளியது) 

அரசனுக்குப்‌ பிரஜைகள்‌ ''வாழ்க, வாழ்க!”” என்று வாழ்த்து தெரிவிப்பது போலவே, இறைவனுக்கும்‌, மெய்யடியார்களுக்கும்‌ 
வாழ்த்துக்கூறுவது மரபாகும்‌. வைணவத்தில்‌ ஆழ்வார்களுக்கும்‌, ஆசாரியர்களுக்கும்‌ இவ்விதம்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ கூறுவது 
வழக்கில்‌ உள்ளது. முதலாழ்வார்களைக்‌ குறித்த இந்நூல்‌ அவர்களுடைய வாழித்‌ திருநாமங்களுடன்‌ நிறைவடைகறது. 

செய்ய துலா ஓணத்தில்‌ செகத்துதித்தான்‌ வாழியே
திருக்கச்சி மாநகரம்‌ செழிக்க வந்தோன்‌ வாழியே 
வையந்தகளி நூறும்‌ வகுத்து உரைத்தான்‌ வாழியே 
வனசமலர்க்‌ கருவதனில்‌ வந்தமைந்தான்‌ வாழியே 
வெய்யகதிரோன்‌ தன்னை விளக்கிட்டான்‌ வாழியே 
வேங்கடவர்‌ திருமலையை விரும்புமவன்‌ வாழியே 
பொய்கைமுனி வடிவழகும்‌ பொற்பதமும்‌ வாழியே 
பொன்முடியும்‌ திருமுகமும்‌ பூதலத்தில்‌ வாழியே. 

அன்பேதகளி நூறும்‌ அருளினான்‌ வாழியே 
ஐப்பசியில்‌ அவிட்டத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே 
நன்புகழ்சேர்‌ குருக்கத்தி நாண்மலரோன்‌ வாழியே 
நல்ல திருக்கடன்மல்லை நாதனார்‌ வாழியே 
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான்‌ வாழியே 
எழில்‌ ஞானச்சுடர்‌ விளக்கேற்றினான்‌ வாழியே 
பொன்புரையும்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே 
பூதத்தார்‌ தாளிணை இப்பூதலத்தில்‌ வாழியே 

திருக்கண்டேன்‌ என நூறும்‌ செப்பினான்‌ வாழியே 
சிறந்த ஐப்பசியில்‌ சதயம்‌ செனித்த வள்ளல்‌ வாழியே 
மருக்கமழும்‌ மயிலைநகர்‌ வாழ வந்தோன்‌ வாழியே 
மலர்க்கரிய நெய்தல்தனில்‌ வந்துதித்தான்‌ வாழியே 
நெருக்கிடவே இடைகழியில்‌ நின்ற செல்வன்‌ வாழியே 
நேமிசங்கன்‌ வடிவழகை நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே 
பெருக்கமுடன்‌ திருமழிசைப்பிரான்‌ தொழுவோன்‌ வாழியே 
பேயாழ்வார்‌ தாளிணையிப்‌ பெருநிலத்தில்‌ வாழியே. 

“ஸ்ரீவேங்கடேச பாகவதம்‌" என்னும்‌ இந்தப்‌ புத்தகத்திலுள்ள குற்றம்‌, குறைகளைப்‌ பொறுத்து அருளும்படி, 
திருவேங்கடமுடையானை வேண்டிக்‌ கொள்வதோடு நூல்‌ நிறைவடைகிறது;  

ஸ்ரீவேங்கடேச நத்தம்‌ 
அஞ்ஞானினா மயா தோஷான்‌ அசேஷான்‌ விஹிதான்‌ ஹரே 
ச்ஷமஸ்வத்வம்‌ க்ஷமஸ்வத்வம்‌ சேஷசைல சிகாமணே 
அறியாமையால்‌ புரி தீவினை புரியாதுளத்‌ தற நீக்கிடு! 
பொறுத்தே அருள்‌! பொறுத்தே அருள்‌! பெருமாமணி வேங்கடவா! 

--------
சுதர்சனச்‌ சக்கரம்‌, பாஞ்சசன்னியம்‌, என்கிற திருச்சங்கு, சார்ங்கம்‌  என்கிற வில்‌ ஆகிய திருமாலின்‌ முப்படைகளை 
ஆண்டாள்‌  மின்னல்‌, இடி, மழையின்‌ வேகம்‌ ஆகியவற்றுக்கு உவமைகளாகச்‌  சொல்கிறாள்‌. 
திருக்கோவலூர்‌ மழையோ, எம்பெருமானுடைய  முப்படைகளின்‌ அவதாரங்களாகிய முதலாழ்வார்கள்‌ மீதே தன்‌ 
கை வரிசையைக்‌ காட்டியது! 
பாஞ்சசன்னியப்‌ பொய்கையார்‌;  கதாயுத பூதத்தார்‌; நாந்தகப்‌ பேயார்‌ ஆூய மூவரும்‌ 
அடைமழையில்‌ சிக்கியபோது, ஆண்டாள்‌ மார்கழி. நீராடி மூழ்ந்ததைப்போல்‌ ஆனந்தப்பட்டார்களோ என்னவோ 
தெரியாது; ஆயினும்‌ மழையில்‌ ஒதுங்குவதற்கு ஒரு புகலிடம்‌ தேடி, இருளில்‌ அலைந்தனர்‌. 

தங்களுடைய உலகநிலையைப்‌ பற்றிய  நினைவேயில்லாமல்‌, ஒருவரையொருவர்‌ விசாரித்து அறிந்து 
கொண்டு, திருமால்‌ பெருமையைப்‌ பேசி ம$ழ்ந்த வண்ணம்‌  இருந்தனர்‌. இத்தகைய இறையன்பர்கள்‌-- 

“செங்கண்‌ திருமுகத்துச்‌ செல்வத்‌ திருமாலால்‌ எங்கும்‌ திருவருள்‌ பெற்று இன்புறுவர்‌' 
என்று கோதை பலசுருதியாகப்‌ பாடியுள்ளாள்‌. 
எனவே இவர்கள்‌  மத்தியில்‌ திருமாலும்‌ வந்து சேர்ந்ததில்‌ ஆச்சரியமில்லை. 

இடைகழி அவ்வளவு சிறியது! ஸ்ரீ  வேங்கடாசலபதியை சேவிக்கும்போது இங்ஙனமே பக்தர்கள்‌ 
இன்று நெருக்கமாக நிற்க நேரிடுகிறது. நெரிசலுக்குப்‌ பிறகே  தரிசனம்‌! 
முதலாழ்வார்களும்‌ எம்பெருமானை இவ்விதமே  அனுபவித்தனர்‌. 

திருமாலின்‌ நான்கு அர்ச்சை நிலைக்‌ கோலங்களைப்‌  பொய்கையாழ்வார்‌ 
''நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ நடந்தானே'"  என்று பாடியுள்ளார்‌. 
திருப்பதி கோவிந்தராஜப்‌ பெருமாள்‌  மேற்கொண்டுள்ளது கிடந்த கோலம்‌; 
திருமலை ஆதிவராக மூர்த்தி இருந்த (அமர்ந்த) கோலத்தில்‌ சேவை சாதிக்கிறார்‌. 
திருமலை வேங்கடவன்‌ ஏற்றுள்ளது நின்ற நிலை. 
இம்மூன்று நிலைகளையும்‌  தொடர்ந்து இடைகழியில்‌ ஆழ்வார்களும்‌ மேற்கொள்ள நேரிட்டது அதிசயிக்கத்தக்கது! 
முதலில்‌ பொய்கையார்‌ கடந்தார்‌; 
பூதத்தார்‌ வந்ததும்‌ இருவரும்‌ இருந்தனர்‌; 
மூன்றாமவர்‌ வந்ததும்‌  மூவரும்‌ நின்றனர்‌. 
திருக்கோவலூரில்‌ திரிவிக்கிரமன்‌ உலகளந்த நிலையில்‌ இருப்பது “நடந்த கோலம்‌' எனப்படும்‌. 
பெயருக்கேற்றவாறே கோவலூரில்‌ எம்பெருமான்‌ நடந்தே வந்து  ஆழ்வார்களுக்குத்‌ தெரியாமல்‌ அவர்கள்‌ மத்தியிலே புகுந்தான்‌ 
பொய்கைப்பிரான்‌ முதல்‌ திருவந்தாதி 85-ஆவது பாசுரத்தில்‌ 
இடைகழியில்‌ புகுந்து நெருக்கிய இறைவனைப்‌ பாடியுள்ளார்‌: 

“நீயுந்‌ திருமகளும்‌ நின்றாயால்‌ குன்றெடுத்துப்‌ 
பாயும்‌ பனி மறைத்த பண்பாளா!- வாசல்‌ 
கடை கழியா, உள்புகாக்‌ காமர்பூங்‌ கோவல்‌ 
இடைகழியே பற்றியினி.'” (86)
முந்தைய பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ தமது திருவுள்ளத்தைக்‌ குறித்து, “பெருமானை அனுபவிக்கவில்லையே”” என்று கூற 
திருமால்‌ பிராட்டியுடன்‌ இவர்‌ இருந்த: இடைகழிக்கே வந்து நின்றான்‌. 
எம்பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாகப்‌  பிராட்டியுடன்‌ நின்ற கோலத்தில்‌ வந்திருந்ததால்‌, வந்தவன்‌ 
வேங்கடவனே எனக்கொள்ளலாம்‌.
பக்தர்களுடன்‌ கலந்த மகிழ்ச்சியால்‌ திருமால்‌ இடைகழியில்‌ நின்றான்‌. 
''காமுகர்கள்‌ உகந்த விஷயத்தினுடைய கண்வட்டம்‌  விட்டுப்‌ போக மாட்டாதாப்‌ போலே”! என்பார்‌ உரையாசிரியர்‌. 

முதலாழ்வார்கள்‌ சந்தித்து, திருமாலைக்‌ கண்டு அருந்தமிழில்‌ 
அந்தாதி பாடியதை, வில்லிப்புத்தூராரின்‌ திருமகனார்‌ வரந்தருவார்‌  இங்ஙனம்‌ போற்றிப்‌ புகழ்வர்‌: 
*பாவரும்‌ தமிழால்‌ பேர்பெறு பனுவல்‌ 
பாவலர்‌ பாதிநாள்‌ இரவில்‌ 
மூவரும்‌ நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி 
முகுந்தனைத்‌ தொழுத நன்னாடு” 

திருக்கோவலூரை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு பெரிய திருமொழிப்பாசுரம்‌ முதலாழ்வார்களைக்‌ குறிப்பிடுவதாக 
திருமங்கையாழ்வார்‌  பாடிய ''தாங்கரும்‌ போர்‌'" என்று தொடங்கும்‌ பாசுரத்திலுள்ள  சில வரிகள்‌ இவை. 

“அடியவர்க்கு ஆரமுதம்‌ ஆனான்‌ தன்னை... 
குழாவரி வண்டு இசைபாடும்‌ பாடல்‌ கேட்டு 
தீங்கரும்பு கண்வளரும்‌ கழனி சூழ்ந்த 
திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே! (210.4) 

அடியவாககு ஆரமுதம அனான: 
அடியவர்கள்‌ என்றது முதலாழ்வார்களை. அவர்கட்கு 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அமுதுமாகத்‌: தித்தித்தவன்‌  இத்தலத்து எம்பிரான்‌.  திருக்கோவலூர்‌ திங்கரும்பு: 

இங்கு தீங்கரும்பாகச்‌ சொன்னது திருக்கோவலூர்‌ திரிவிக்ரமப்‌  பெருமாளை. 
குழாவரி வண்டிசை பாடும்‌ பாடலாவது, (முதலாழ்வார்கள்‌ பாடிய மூன்று திருவந்தாதிகள்‌. 
இந்த அந்தாதி  இசை கேட்டு, திருக்கோவலூர்‌ தீங்கரும்பாகிய  திருவேங்கடமுடையான்‌ கண்ணுறங்குமாம்‌. 
முதலாழ்வார்கள்‌  பாடிய அந்தாதிகளில்‌ மிக அதிகமாகத்‌ திருவேங்கடவன்‌  திருநாமமே அடி.படுவதால்‌ 
இங்ஙனம்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
வண்டுகளை மூன்று ஆழ்வார்களாகக்‌ கொள்ளலாம்‌. 

ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்த '“தேஹளீச ஸ்துதி  ஏழாவது சுலோகத்தில்‌ 
முதல்‌ மூன்று ஆழ்வார்களைக்‌ கரும்பு  பிழியும்‌ சர்க்கரை ஆலையின்‌ மூன்று உருளைகளாகவும்‌, 
அவர்களால்‌ நெருக்கப்பட்ட திருமாலைத்‌ தீங்கரும்பாகவும்‌, 
எம்பெருமானின்‌ செளலப்ய குணத்தைச்‌ சாறாகவும்‌ கூறப்பட்டிருக்கிறது. 
இந்த அற்புதமான உவழைக்கு மேற்கூறிய 
திருமங்கையாழ்வார்‌. பாசுரம்‌ அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்‌ 
 
கண்ணன்‌ அடியினை எமக்குக்‌ காட்டும்‌ வெற்பு 
கடுவினையரிரு வினையும்‌ கடியும்‌ வெற்பு 
திண்ணமிது வீடென்னத்‌ திகழும்‌ வெற்பு 
தெளிந்த பெருந்தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு 
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு 
பொன்னுலகிற்‌ போகமெலாம்‌ புணர்க்கும்‌ வெற்பு 
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவெற்பென விளங்கும்‌ வேத வெற்பே. --ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்தது
----------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவடி மஹாத்ம்யம்– –

March 14, 2023

ஸ்ரீ ஹநுமான் காயத்ரி

ஓம் அஞ்சனி சுதாயா வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹநுமன் ப்ரசோதயாத்

ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் தத்புருஷாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ: ஹநுமத் ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி.

————

தர்ப்போதேக்ரத சேந்த்ரியா ந நமநோ நக்தஞ்சரா திஷ்டிதே
தேஹேஸ்மின் பவ ஸிந்து நா பரிகதே தீ நாம் தசமாஸ்திதஸ்
அத்யத்வே ஹனுமத் ஸமேந குருணா சம்போதிதார்த்தஸ்
ஸூ தீ லங்காருத்த விதேஹ ராஜ தநயா ந்யாயேநலா லப்யதே —சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்
முதலியாண்டான் வார்த்தை -சிறை போல் சம்சாரம் -ஆச்சார்யனே திருவடி

அந்தத் திருவடியின் தன்மையும் ஆச்சார்ய லக்ஷணமும்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது,
பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் –
இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

ஐந்து–நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள்
ஐந்து(பஞ்ச)பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்,…
ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி,…..
ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய வழியாக, ஸ்ரீராமனுக்காக,
ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு,…
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பை அயல் தேசமான இலங்கையில் வைத்தான்,

அஞ்சிலே ஒன்று (*வாயு) பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்(*நீர்) தாவி
அஞ்சிலே ஒன்றாறாக(*ஆகாயம்) ஆரியர்க்காக(*இராமனுக்காக) ஏகி
அஞ்சிலே ஒன்று (*நிலம்) பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்(*இலங்கையில்)
அஞ்சிலே ஒன்று(*நெருப்பை) வைத்தான்.அவன் எம்மை அளித்துக் காப்பான்

அத்தகைய அனுமன், நமக்கு வேண்டியன எல்லாம் அளித்து காப்பான்-

பஞ்சபூத தத்துவம்
சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்திரன் என்பதால் காற்றை வென்றவர்
சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர்.
பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர்
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர்
வானத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர்.
இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை.
ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார்.

உள்ளுறை பொருள் –

முதல் அஞ்சு –பஞ்ச ஸம்ஸ்காரம்
இரண்டாம் அஞ்சு —அர்த்த பஞ்சகம்
மூன்றாம் அஞ்சு —உபாய பஞ்சகம்
நான்காம் அஞ்சு —பரத்வாதி பஞ்சகம்
ஐந்தாம் அஞ்சு —லோக பஞ்சகம்

பஞ்ச சம்ஸ்காரம் முதல் அஞ்சு -வித்யை- தாயாகப் பெற்ற -அன்று நான் பிறந்திலேன் -இவ்வாத்ம வஸ்துவை ஜனிப்பித்து

தாய் தந்தையர் உடலை மட்டுமே பிறப்பிக்கின்றனர்
ஆச்சார்யர் ஞானத்தினால் ஆத்மாவைப் பிறப்பிக்கின்றார் -அழுக்கை நீக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் அடைவிக்கின்றார்

தாப ஸம்ஸ்காரத்துக்குப் பிறகே மந்த்ர ஸம்ஸ்காரத்துக்கு ப்ரஸக்தி யாதலால்
முதலான அந்த ஸம்ஸ்காரத்தையே கொள்ளுதல் தகும் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்

திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிரதராய் ஆவீர் -என்று அனுக்ரஹத்து அருளுவார் அன்றோ

வித்யைத் தாயாகப் பெற்று , பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த
தஞ்சமாகிய தந்தை மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல் விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
நாலு இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
பரம் புருடன் கைக் கொண்ட பின்
சதுர்த்தியுள் புக்கு இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து ஜன்ம பூமியை விட்டகன்று
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று குடைந்து நீராடி
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்துப்
பல்லாண்டு இசைத்துக் கவரி செய்ய நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள
வைகுந்தம் புக்கிருந்து வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து
பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —

வித்யையைத் தாயாகப் பெற்று-
அதாவது —
சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே
ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே ,
வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-

பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –
அதாவது
தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற
போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த-
அதாவது —
திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி –
அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே-(ஆறு குண சாம்யம் மேலே வரும்) ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-

தஞ்சமாகிய தந்தை-
அதாவது
தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய
தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே
ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –
பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க –
பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே –
ஸ்வரூப உத்பாதகனாய் (திரோதானமாய் இருந்ததை தெளிய விட்ட – தீர்க்க பந்து -தயாளுவான)-
ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் –
உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே
ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-

மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –
அதாவது –
மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,
மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற
அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —

விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –
பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,
கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று
பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் (ரஷிக்கிற படியால் பதி– தரிக்கிற படியால் பர்த்தா)-
சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற
மணவாளரை –
பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6-
என்கிற அழகிய மணவாளரை

நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க –
அதாவது –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற
மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே
பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –

பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –
பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே
பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –

சதுர்தியுள் புக்கு –
அதாவது –
விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,
அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப்
பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு செல்லும் (பிரார்த்தனா சதுர்த்தி) சரம சதுர்த்தியிலே உள் புக்கு –
(நான்கு பதிகம் கழித்து -2-9-எனக்கே ஆக -பிரார்த்தனை –
புகழும் என்கோ -3-3- நான்கு திருவாய் மொழி -சதுர்த்தி தானாகே அமைந்ததே)
நான்கு நாள் கழித்தே சேஷ ஹோமம் நடக்கும்
முதல் நாள் சோமன் -அடுத்து கந்தர்வர் -அடுத்து அக்னிக்கும் -அடுத்து இவனுக்கு
நாராயண ஆய -நடுவிலும் நான்கு அக்ஷரங்கள் உண்டே )

இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –
அதாவது –
தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை
இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே –
சேஷத்வ ஞானமும் சேஷ வ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே ,
இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி –
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே
அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –
நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –

ஜன்ம பூமியை விட்டு அகன்று –
அதாவது –
முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற
செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே
ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு
ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..
அன்றிக்கே-
(ஜென்ம பூமி ஞானம் பெற்ற பூமி என்ற நிர்வாகம்-மிகவும் சேரும் )
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு
ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை
பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே -இத்யாதி படியே –
முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு
இது மிகவும் சேரும் இறே-

சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-
அதாவது –
சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க –
அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி-
நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –

குடைந்து நீராடி- –
அதாவது –
குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு
போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே
அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –

வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –
அதாவது –
குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –
வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,
மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,
பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே
அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –
தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா –கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே
போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-

பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –
அதாவது –
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே
இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற
திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-

நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –
அதாவது –
அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே –
அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே –
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே
மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு ,
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே
நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –

வைகுந்தம் புக்கிருந்து –
அதாவது –
உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே –
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே –
ஸ்ரீய பதியானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –

வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-
அதாவது –
பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும்
மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே –
நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –

கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து –
அதாவது –
பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே –
கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே –
தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –

பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –
அதாவது –
தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே -என்றும்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா
சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா
மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி ,
ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட –
மணி மிகு மார்பு-10-3-5– -என்று
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..

குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –
அதாவது –
குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு
(திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)

மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல –
அதாவது –
வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று
உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி
அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும்
கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி –
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது –
மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி -என்றால்
சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே —

இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம் என்று சொல்லிற்று ஆய்த்து-

—————————————-

இரண்டாவது அஞ்சு அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே உண்டே -விரோதி ஸ்வரூபத்தை தாண்டி
ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகளையும் -தாண்டி

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும்  வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்……பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியன்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்த்துச் ச ப்ரத்யகாத்மநா
ப்ராப்தயுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதா ச இதிஹாச புராண கா

மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேந நமஸா
அஹங்கார மமகார ஸ்பர்சம் அற்று
ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய ரஹிதராய்
எம்பெருமானுடைய போகத்துக்கு காணியை விளைவிப்பாதவராய் -இருக்கும் இருப்பு

    • ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
        • நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
        • முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
        • பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
        • கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
        • முமுக்ஷுக்கள் –  ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
    • புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
      • தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
      • அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
      • காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
      • ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
      • பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
    • விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
      • ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
      • பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
      • புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
      • உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
      • ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம்  முதலியவை.

————–

மூன்றாவது அஞ்சு உபாய பஞ்சகம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

  • உபாயம் – வழி –  ஐந்து வகை உண்டு:
    • கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
    • ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
    • பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
    • ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும்  இதுவே நெறி.  இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
    • ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர்.  மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -427-

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

—————-

நான்காவது அஞ்சு பரத்வாதி பஞ்சகம் –அர்ச்சாவதாரம் -கண்டு காணச் செய்து -அணங்கு தெய்வம்

  • ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
      • பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
      • வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
      • விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
      • அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும்  இருத்தல்
      • அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
      • கண்டு -பிற வினையில் வந்த தன் விபினை -காணச் செய்து என்றபடி
        நாம் உஜ்ஜீவனம் அடைய தமர் உகந்த உருவம் கொண்டு இருக்கும் அர்ச்சாவதார எளிமையைக் காட்டிக் கொடுத்த படி

———————–

ஐந்தாவது அஞ்சு லோக பஞ்சகம் -மண் உலகம் நரக லோகம் ஸ்வர்க்க லோகம் கைவல்ய லோகம் பரமபதம்

இருள்தரும் மா ஞாலம் மண்ணுலகம் ஹேயம்
ஸ்வர்க்காதி போகமும் கைவல்யமும் வேண்டேன்
இனிப்பிறவி யான் வேண்டேன் என்றபடி
பரமபதத்துக்கு ஆளாக்கித் திருத்திப் பனி கொள்வதே ஆச்சார்ய க்ருத்யம் என்றபடி

ஆக பஞ்ச சம்ஸ்காரம் பெற்று -பிரதி பந்தகங்களைக் கடந்து சரம உபாயத்தைக் கடைப் பிடித்து அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து
சம்சார உத்தீரணராக்கும் சதாசார்யனுடைய படிகளை வெளியிட்டார் யாயிற்று –

————–

பஷீ ச ஸாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட

ஸூ ப சகுனமாக ஆச்சார்யர் கிடைத்தமை பற்றிய ஸ்லோகம்

பஷீ
ஞான அனுஷ்டானம் இவை நன்குடைய குருவை அடைந்தக்கால் தானே வைகுந்தம் தரும்
உபாப்யாமேவ பஷாப்யாம் யதா கே பஷீணாம் கதி
ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -பிராமண வசனம்
சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஞான கர்மாக்களை சிறகு என்று
குரு ஸ ப்ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -3-1-

ஸாகா நிலய
சாகை என்று கிளைக்கும் வேத பாகத்துக்கும் பெயர்
யஜுஸ் ஸாகாத்யாயீ -ஸாம ஸாகாத்யாயீ
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
வேதம் ஓதாதவன் பரம புருஷனை அறியாதவனாவான்

ப்ரஹ்ருஷ்ட
ஆச்சார்யன் எப்போதும் பகவத் சிந்தையனாக இருப்பதால் மிக்க மகிழ்ச்சி யுடையவனாயே எப்போதும் இருப்பான்
ஆனந்த மயனான எம்பெருமானை அநவரதம் சிந்தை
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்க்கு எங்கே வரும் தீ வினையே -திரு விருத்தம்
தேஹ யாத்திரையிலும் ஆத்ம யாத்திரையிலும் கவலை அற்று ஆனந்தம் ஒன்றே கொண்டு இருப்பார்கள்

புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
சிறந்த ஹித உபதேசங்களுக்கு ஸாந்த்வ வாதம் என்று பெயர்
க்யாதி லாப பூஜா ஹேது அன்றிக்கே
சிஷ்யர்கள் பிரார்த்திக்காமலேயே
தனது பேறாக அடுத்து அடுத்து ஹித உபதேசம் பண்ணும்
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் என்றதாயிற்று –

ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந
ஸ் வாகதாம்-என்றது ஸ்வஸ்மை ஆகதாம் -என்றபடி
ஸூஷ்டு ஸ்வஸ்மை ஆகதாம்–ஸூஸ் வாகதாம்-
ஸ்வ கபோல கல்பிதமான அர்த்தங்களை மனம் போன படியே சொல்லுகை அன்றிக்கே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவரே உத்தமமான ஆச்சார்யர் –

புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -என்றபடிக்கும்
ஸ் காலித்யே ஸாசீ தாரம் -ந்யாஸ விம்சதி ஸூ க்தியின் படிக்கும்
நிர்தாஷிண்யமாக சிஷிப்பவரே ஆச்சார்யர்

 

ஆகவே இந்த ஸ்லோகம் உத்தம ஆச்சார்யர் படியைச் சொல்லிற்று ஆயிற்று –

———-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கோதா ஸ்துதி அனுபவம் —

March 14, 2023

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

1-ஸ்ரீ பூர்வாச்சார்யர்களின் ஸூ க்தி நடையை அநு சரித்தல்

முதல் ஸ்லோகம் -ஐந்தாம் ஸ்லோகம் -இவற்றில் காணலாம்

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–ஸ்ரீ குணரத்னகோசம் 3–

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

தேவேந்த்ரனுடைய உத்யான வனத்துக்கு -நந்தனம் -என்ற பெயர் உண்டு -அங்கு கற்பகக் கொடி படரும்
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் குடியாகிற நந்தவனத்தில் தோன்றிய ஆண்டாளும்
தனது திவ்ய ஸூ க்திகள் மூலம் சகல வேதார்த்தங்கள் எல்லாம் விளக்கி அருளுகிறாள்
பெரியாழ்வார் குலம் ஆண்டாள் திருவவதரித்ததால் பெருமை மிக்கு விளங்கியதே
கொடி கொள் கொம்போடே அணைந்து அல்லால் நிற்காதே
எனக்கே தன்னைத் தந்த கற்பகமான எம்பெருமானான பெரிய பெருமாளாகிய கற்பகத் தருவை அணைந்து விளங்கா நிற்கும்

பஞ்சைதே தேவ தரவோ மந்தார பாரிஜாதக சந்தான கல்ப வ்ருஷச் ச பும்ஸி வா ஹரி சந்தனம் -அமர கோசம்
ஐந்து வ்ருக்ஷங்கள் தேவ வ்ருக்ஷங்கள்

ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ கல்ப வ்ருஷ தேந ஸஹ யோகேந -த்ருஸ்யாம் ரமணீயாம் இத்யர்த்த
மானிடவர்க்கு என்று பேச்சுப்பதில் வாழகில்லேன்

ஆக பட்டரை அடி ஒட்டி ஆண்டாளை கற்பக வல்லியாக அருளிச் செய்கிறார் –

———

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌ தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளி தாம்நா
த‌ந்த்ரீநி நாத‌ ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||–5-

அன்ன வயல் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பூ மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு -தனியனைப் பின்பற்றி அருளிச் செய்த ஸ்லோகம்

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகு கால‌மாகக் கொண்டிருக்கும்
என் போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான்
என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக் க‌ம்பிக‌ளின் நாதத்தைப் போல்
ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலே தான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகலிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா -ஸர்வாத்மநா விதேயனாக ஆக்கிக் கொண்டவள் அன்றோ

————————

2- இந்த ஸ்துதி அவதரித்த வரலாற்றை விலக்ஷணமாக அருளிச் செய்தல்

வைதேசிக: ஸ்ருதி கிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌந த்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா|| .2.

“எண்ணிறந்த ஸ்ருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”

ஸ்வாமி மவ்வ்ன வரத்துடன் எழுந்து அருளி இருக்க
ஆண்டாள் திரு வீதிப் புறப்பாட்டில் -வீதியில்
ஏதோ அனுபபத்தி விளைய -அதன் வழியாக எழுந்து அருள முடியாமல்
இவர் விரதத்தை ஸஹஸா விஸர்ஜனம் செய்து அருளி இந்த ஸ்துதியை விஞ்ஞாபிக்க உபக்ரமித்தார் –

—————

3- அநித அஸாதாரணமான கவித் திறமை

இதற்கு எல்லா ஸ்லோகங்களுமே லஷ்யமானாலும்
ஆறாவது பதினாறாவது ஸ்லோகம் அதி அசாதாரணம்

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம் போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.
உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா ) தோன்றுகிறாய்.
சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய்.
திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–.
உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய்.
மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.
ஆறு ஆறுகள்—கோதாவரி, சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா

இதற்கும் மேல் அபி சப்தத்தை ஐந்து தடவை பிரயோகித்து

சோணா அபி துங்க‌ப‌த்ரா-
துங்க‌ப‌த்ரா அபி ஸரஸ்வதீ
ஸ‌ர‌ஸ்வ‌தி அபி விரஜா
விரஜா அபி கோதா –கோதாவரீ
கோதாவரி அபி நர்மதா
என்று இங்கனம் வாக்ய விந்யாஸம் ஸ்வாமிக்கு விவஷிதம்

——–

த்வந் மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித ஸ பீதி ரஸ ப்ரமோதா|
மஞ்ஜு ஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || .16.

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

இந்த ஸ்லோகத்தில் பிரயோகித்த பதங்கள் யாவுமே மங்களகரமாக அமைந்து உள்ளன
விவாஹ காலங்களிலே பூச்சூடுதல் –மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே-
குழாம் கூடி யுண்ணுதல் –ஸ பீதி ரஸ
சந்தோஷமாக அனுபவித்தல் -ப்ரமோதா|-
மங்கள ஒலி மல்குதல் –மஞ்ஜு ஸ்வநா-
இனிய உணவுகளை அனுபவித்தல் –மதுலிஹோ விதது:-
மங்கள வாத்தியங்கள் முழங்குதல் -மங்கள தூர்ய கோஷம்
இவை அனைத்துமே சொல் நடை நயத்தில் அமைந்துள்ள
அழகு அனுபவிக்கத் தக்கது

வஸ்ய வாக்த்வ பிரபாவம் இது

———————-

4- வேதத்தில் உள்ள திறமையைக் காட்டுதல்

வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)

கோதாய்! பூமிப் பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

உமது காதின் பெருமையோ லோக விலக்ஷணம்
அரவிந்தத்தில் மகரந்தம் ஸ்ரவிப்பது ஸஹஜமே
வால்மீகி கோகிலத்தில் சொற்களின் இனிமையை விட கிளி மொழி கோதையின் சொற்களே அது மதுரம் என்கிறார்
ஆசிரியரின் இந்த நிரூபணத்துக்கு வேத பாண்டித்யமே உதவிற்று –

—————-

5- ஆழ்வார்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு ஏற்றம் கூறுதல் –

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)

கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணு சித்தர்) உன்னைப் போலவே
உன் பிரிய தமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ஸ்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.

இவளுக்கு ஸ்த்ரீத்வத்வம் ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே –
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் என்றும்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்றும்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு
அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே -என்றும்
கொங்கை முலைகள் இடர் தீர இத்யாதி
பாசுரங்களால் ஸ ஹ்ருதய ஹ்ருதயங்கம் -விளங்குமே
அநுராக ரீதியில் உள்ள ஆழ்வார்கள் பாசுரங்கள் போல் அன்ரிக்கே இயற்கையாகவே அமைந்த பகவத் அனுபவ ரஸவத்தரம் விளங்குமே

குரவஸ்த்வதீயா:-அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி அன்றோ இவள் -அஞ்சுகின்ற குடி என்றுமாம்

———————-

6-ஆண்டாளுடைய திருக்குறளின் மேன்மை

இது பல பாசுரங்களிலும் பேசப்பட்டு இருந்தாலும் பத்தாவது ஸ்லோகம் மிக விலக்ஷணம்

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)

கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

கர்ணாம்ருதை: ஸ்துதி-புராதன பாதாம் அன்று -வியஸ்த பாடம் அங்கதம் ஆகும்
கர்ணாம்ருத: ஸ்துதி-என்று ஸமஸ்தமாகவே பாடம் கொள்ள வேண்டும்
கர்ணாம்ருத மான ஸ்துதி ஸதஸ் பாடின ஆழ்வார்களைக் காட்டிலும் அதிக அனுக்ரஹம்
பெற்றுத் தந்ததே இவள் சூடிக் களைந்த மாலையின் பயனாகவே-

————-

7-விரோத ஆபாஸம் காட்டுதல்

சோணா தரேபி -10 பாசுரத்தில் விரோத ஆபாஸம் உண்டாய் இருந்தாலும்
அடுத்த பாசுரம் மிக விலக்ஷணம்
மேல் எழப்பார்க்கும் போது விரோதம் உள்ளது போல் தோன்றி
ஆழ்ந்து பார்க்கும் இடத்து விரோதம் காணாமல் பேசுவதே விரோதி ஆபாஸ லஷ்யம்

திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)

அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!

உத்தர -வட திசைக்கும் உத்க்ருஷ்டமாக இருபதுக்கும்
முந்தின பொருளில் விரோதி உத்பாவநமும்
பிந்தின பொருளில் அதற்குப் பரிஹாரமும்

குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி -என்றும்
மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்து -என்றும்
இருந்தாலும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் உள்ள அபி நிவேசத்தாலே தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிறார் என்றபடி –

———————–

8-விலக்ஷணமான உல்லேகம் காட்டி அருளுதல்

ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்ட காலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

ஏகதேசம் தனது திருநாமம் வகிப்பதாலேயே இழந்த தூய்மை பெற்றது என்று சமத்காரமாக அருளிச் செய்துள்ளார் –

—————-

9- ஸாஸ்த்ரார்த்தங்களை விநோதமாகக் காட்டி அருளுதல்

ரங்கேஸ்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதி கத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

அம்மா பூதேவியே! ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

நம்பியைக் காண நம்பிக்கு ஆயிர நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்

எம்பெருமானுக்கு சேஷித்வமும் ஸகல ஜகத் பதித்தவ ப்ரயுக்தமான ஏற்றமும் பிராட்டிக்கு
ஞானீ து ஆத் மைவ மே மதம் -என்பதால் பிராட்டிக்கு ஏற்றமும் உண்டே
ரசிகா -விநோத வார்த்தைகள் இவ்வாறு உண்டே
இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளும் ஸமத்வத்மமும் வேதார்த்த -சாஸ்த்ர -அர்த்தங்களே

————-

10-அதி லலித வாக் விந்யாஸ வைதக்த்யம்

செவிக்கு இனிய செஞ்சொற்கள் அனைத்துமே –

சதமக மணி நீலா சாருகல்ஹார ஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ஸ்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

இது அதி விலக்ஷணம்
நித்தியமாக ஸூ ப்ரபாதத்தில் இந்த ஸ்லோகம் அனுசந்தேயம் –

 

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சித்தி த்ரய உட்ப்பொருள் -ஸ்ரீ திரு நாங்கூர் உ வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் —

March 13, 2023

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ஸ்லோகம்-
மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸஸ் ததா நிர்ணய
திஸ் ரஸ் சித்தய ஆத்ம ஸம் வித கிலாதீ ஸாந தத்வாஸ்ரய
கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹ ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூந்
யத் க்ரந்த அநு சந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும

ஆகம ப்ராமாண்யம்
மஹா புருஷ நிர்ணயம்
ஆத்ம ஈஸ்வர ஸம் வித் ஸித்திகள்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோஹீ
ஸ்தோத்ர ரத்னம்
ஆகிய கிரந்தங்கள் எந்த ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டதாக ஸ்ரீ பாஷ்ய காரர் அனுசந்திக்கிறாரோ
பரமாச்சார்யராக விளங்கும் அந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கிறோம்

இதில் மஹா புருஷ நிர்ணயம் கிடைக்க வில்லை
ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்துள்ள நியாய தத்வம் யோக ரஹஸ்யம் இவையும் இப்போது கிடைக்கப் பெற வில்லை
ஆகம ப்ராமாண்யம் பகவத் சாஸ்திரமான பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தைப் பஹு முகமாக நிலை நாட்டுகிறது
வேதம் போலவே ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் பிரபல பிரமாணம் என்று பரமாச்சாரியார் மூதலித்துப் பேசுகிறார்

ஸ்ரீ பாஷ்யகாரர் உத்பத்ய சம்பவாதிகரணத்தில் -2-2-8- இதை அடி ஒற்றியே
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம ப்ராமாண்யத்தை ஸ்ரீ வியாஸ சித்தாந்தமாக நிர்ணயித்து அருளுகிறார்
கீதார்த்த ஸங்க்ரஹத்தைத் தழுவியே மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருளை தெரியப் பாரினில் சொன்னார் (இராமானுச நூற்று -68-)
சதுஸ் ஸ்லோஹீ ஸ்தோத்ர ரத்தினங்களை அடி ஒற்றியே கத்யங்களையும் அருளிச் செய்தார்

சித்தி த்ரயத்தை அடியாகக் கொண்டே மஹா ஸித்தாந்த அர்த்த விசேஷங்களை அருளிச் செய்துள்ளார்

ஸித்தி -என்பது தத்வ நிர்ணயத்தைக் குறிக்கும்
ஜீவாத்மா பரமாத்மா பிராமண ஞானம் -இவற்றின் யாதாத்ம ஞானம் -நிர்ணயித்துத்
தருவதால் ஆத்ம ஸித்தி -ஈஸ்வர ஸித்தி -ஸம் வித் ஸித்தி

இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்

பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்

வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –

————-

விருத்த மதயோ அநேகாஸ் சந்தயாத்மா பரமாத்மநோ
அதஸ் தத் பரி ஸூத்தயர்த்தம் ஆத்ம சித்திர் வித்யதே

ஆத்ம பரமாத்மாக்களுடைய தத்வ ஞானம் முக்திக்கு இன்றியமையாத ஸாதனம் என்று
வேதாந்தமும் வேதாந்தம் அறிந்த சான்றோர்களின் நூல்களும் பறை சாற்றுகின்றன
இவ்விரு ஞானத்திலும் புரவாதிகளுடைய துர்வாதங்களை நிரஸித்து தத்துவத்தை உள்ளபடி அறிந்து
உஜ்ஜீவிக்கவே ஆத்ம ஸித்தி செய்யப்படுகிறது என்கிறார் ஆளவந்தார் –

நான் நான் என்று எப்போதும் தனக்குத் தான் தோன்றும் ஆத்ம விஷயத்தில்
தேஹமே ஜீவன் என்றும்
புலன்கள் ஜீவன் என்றும்
மனனே ஜீவன் என்றும்
பிராணனே ஜீவன் என்றும்
புத்தியே ஜீவன் என்றும்
சொல்லும் புற வாதங்களைக் கண்டித்து

ஜீவாத்மா இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும்
ஞான ஆஸ்ரயமாய்
நித்தியமாய்
அணுவாய்
அநேகமாய் இருக்கிறது
இப்படி இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ தந்திரம் அன்று
பரமாத்வுக்கே சேஷமாய் -பரதந்த்ரமாய் -சரீரமாய் இருக்கும்
என்று ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் ஆத்ம ஸித்தியில்

தேஹ இந்திரிய மந ப்ராண தீப்யோ அந்யோ அநந்ய சாதந
நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னஸ் ஸ்வதஸ் ஸூகீ –என்கிற ஸ்லோகத்தால் ஆத்மாவின் யாதாத்ம்ய ஸ்வரூபத்தைச் சொல்லி
மேலே யுக்திகளாலே விளக்கி அருளுகிறார்

இங்கு வ்யாபீ -எல்லா அசேதனப்பொருள்களிலும் இருக்கத் தக்கவன் -அணுவைப் போன்று ஸூஷ்மன் என்று பொருள் உரைத்தார் பாஷ்யகாரர்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -1-1-10-ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டி அருளிச் செய்தபடி
ஜீவாத்மா ஸ்வரூபத்தால் வ்யாபியாக இருப்பவன் என்று பிரமிக்க வேண்டாவே

தைத்ரியம்-அன்ன மய ப்ராண மய மநோ மயங்களுக்கு அவ்வருகே
சரீரம் பிராணன் மனம் இவற்றுக் காட்டிலும் வேறுபட்டு
விஞ்ஞான மய -என்று
வேத புருஷன் ஆத்மாவின் வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறான்

சென்று சென்று பரம் பரமாய்–8-8-5-
என் ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே –8-8-4-என்று ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டியே
ஆளவந்தார் ஆத்ம சித்தியில் நிலை நாட்டி அருளுகிறார்

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப் பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப்பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

யஞ்ஞ மூர்த்தி வாதம் -17 நாள் இரவில் தேவப் பெருமாள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்வப்னத்தில்
ஆளவந்தார் அருளிச் செய்த ஆத்ம ஸித்தி அர்த்தங்களை -மாயாவாத நிரசனங்களை -பிரஸாதித்து அருள
தெளிந்து எழுந்து ஸந்துஷ்டாராக வாத சதஸ்ஸுக்கு எழுந்து அருள
அவரும் இவர் திருவடிகளிலே சரண் அடைய –
அருளாளப் பெருமாள் எம்பருமானார் திருநாமம் சாற்றப்பெற்று
ஸ்ரீ பாஷ்யகாரருடன் நம் தரிசனத்தை நிர்வகித்துப் போந்தார் அன்றோ

இவற்றால் ஆளவந்தாருடையா ஸ்ரீ ஸூக்திகளின் வீறுடைமை நன்கு விளங்கும் –

—————-

ஈஸ்வர ஸித்தியின் உள் பொருள்

வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டும்
வேத வேத்யனான பரம புருஷனை ஒத்துக் கொள்ளாமல்
யகாதி கர்மங்கள் அபூர்வத்தை உண்டு பண்ணி
அதன் வழியாக ஸ்வர்க்காதி பலன்களைப் பெறுகிறார்கள் என்று நிரீஸ்வர வாதம் செய்யும் கர்ம மீமாம்ஸகர்களை நிரஸித்து
பிரளய காலத்தில் அழிந்து கிடந்த எல்லா லோகங்களையும் மறுபடியும் ஸ்ருஷ்டி காலத்தில்
படைத்துக் காத்து அருளும் சர்வேஸ்வரனை ஒருவன் உளன் என்று ஸ்ருதி கூறா நிற்கச் செய்தே
நிரீஸ்வர வாதம் பண்ணும் இவர்களை ஆஸ்திக நாஸ்திகர்கள் என்கிறார்

மேலும்
எவனுடைய திரு ஆராதனமாக யாகாதிகள் ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ
யாகாதிகளால் ஆராதிக்கப்பட்ட எவனுடைய அனுக்ரஹத்தினாலே பலத்தை அவர்கள் அடைகின்றனரோ
அந்தப் பரமன் இல்லாத போது கர்மமும் கர்ம பலனும் ஸித்திக்காது -என்கிறார்

மேலும்
அழிந்து

கிடந்த வஸ்துவுக்கு நாம ரூபங்கள் உண்டாவதற்கு ஒரு விதாதா வேணும்
ஆகவே
ஜகத் ஸ்ருஷ்டவாய்
ஸர்வ கர்ம ஸமாராதனாய்
ஸர்வ பல ப்ரதனான
பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியாலே அவஸ்யம் அங்கீ கரித்தே யாக வேண்டும்
என்று யுக்திகளாலே நிரூபித்து
கருமமும் கர்ம பலனுமாகிய காரணன் தன்னை -என்று
ஆழ்வார் பேணின காரணமான பரம் பொருளை
ஈஸ்வர ஸித்தியிலே நிலை நாட்டி அருளுகிறார் பரமாச்சாரியார்

இதன் இறுதியில்
ஏக ப்ரதான புருஷம் விவாதாத் யாஸிதம் ஜகத்
சேதன அசேதநாத் மத்வாத் ஏக ராஜகதே ஸவத் –என்னும் ஸ்லோகத்தில்
உபய விபூதியிலும் உள்ள ஜீவ ராசிகளும்
அதிகாரி வர்க்கமான வானவர்களும்
ராஜாதி ராஜனான ஸ்ரீ மன் நாராயணனுடைய செங்கோலின் கீழ் இடரின்றி வாழ்கின்றனர்
என்னும் வேதாந்த ஸித்தாந்தத்தை ராஜ ராஷ்ட்ர த்ருஷ்டாந்தத்தாலே விளக்குகிறார்
வேதைக வேத்யன் பரம புருஷன் -என்பதே இவர் திரு உள்ளம்
ஆயினும் வேதார்த்த நிர்ணய ஸஹ காரியான தர்க்கங்களையே ஈஸ்வர ஸித்தியில் முக்யமாகக் காட்டி அருளுகிறார் –

——————

ஸம்வித் ஸித்தியில்
முக்கியமாக கேவல அத்வைத வாதத்தை நிரஸனம் பண்ணி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்துகிறார்
சத்தான -உளதான பொருள் ஒன்றே-அநேகம் இல்லை என்னும் வாதத்தையும்
ஞானம் -அறிவு -ஒன்றே உளது -ஜேயமும் -அறியப்படும் பொருளும் -ஞாதாவும் அறிகிறவனும் -இல்லை -என்னும் வாதத்தையும் கண்டித்து
சித் அசித் ஈஸ்வரன் என்ற தத்வ த்ரயம் -உண்மைப் பொருள்கள் மூன்றுமே உண்டு என்றும்
அப்படியே ஞானம் -ஜேயம் -ஞாதா -மூன்றும் உள்ளது என்றும் நிரூபிக்கிறார் –

மேலும்
ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -5-2-1- ஸ்ருதி வசனத்துக்கு
பரம் பொருளுக்கு குணம் ரூபம் ஐஸ்வர்யம் ஒன்றும் இல்லை என்னும் அபத்தப் பொருளை அத்வைதிகள் உரைத்தனர்
அத்தைத் தகர்த்து
பரம்பொருளான எம்பெருமானுக்கு
நற் குணங்களும்
திவ்ய ரூபங்களும்
வைபவங்களும்
பல பல உண்டு என்று நிரூபிக்கிறார் –

ஸத்யம் ஞானம் அநந்தம் -தைத்ரியம் ஆந -1-2-
விகாரம் அற்று இருப்பதால் ஸத்யமாயும்
ஞானமாகவும்
அளவற்றதாய் இருப்பதால் அநந்தமாயும் –இருக்கும் ப்ரஹ்மம்

பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல கிரியா ச -ஸூவே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் –
ஸ்ருஷ்டித்தல் போன்ற பல செயல்களும் உண்டு என்று அறியப்படுகிறது

கந்தர்வ அப்சரஸஸ் ஸித்தாஸ் சகின்நர மஹோ ரகா
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே
கந்தர்வர்களும் அப்சரஸ் ஸுக்களும் கின்னர்களுடன் மஹா நாகங்களுடன் கூடிய சித்தர்களும்
இவனுடைய குணங்களின் எல்லையை அடைவது இல்லை
ஆகையால் இவன் அநந்தன் என்று சொல்லப்படுகிறான்

இத்யாதி பிராமண வசனங்களால்
எம்பெருமான் எல்லையில்லா நற் குணங்களையும் வைபவங்களை யுடையவன் என்று விளங்குகிறது
இவனே ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
பிரதானனன் -என்கிற பொருளையே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி சொல்கிறது

ஏக முக்யாந்ய கேவலா -என்கிற கோசத்தின் படி ப்ரதானன் -என்பதே ஏக பதார்த்தம்

மேலும்
சோழ மன்னன் ஒருவனே அத்விதீயனாக இப்போதும் உளன் -என்பதற்கு எப்படி
அவனே எல்லா மன்னர்களுக்கும் தலைவன்
அவனுக்கு சமானமாகவும் -அவனைக்காட்டிலும் உயர்ந்தவனாக இப்போதும் மற்றொரு மன்னன் இல்லை போல்
இங்கும் கொள்வது என்று மூதலித்துக் காட்டி அருளுகிறார்

யதா சோழ ந்ரூப ஸம் ராட் அத்விதீயோ அத்ய பூதலே
இதி தத் துல்ய ந்ருபதி –நிவாரண பரம் வசஸ்
ந து தத் ப்ருத்ய தத் புத்ர களத்ராதி நிஷேதகம்
ததா சுரா முர நர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட கோடயஸ்
க்லேச கர்ம விபாகாத்யை ரஸ ப்ருஷ்டஸ்யாகி லே ஸிதுஸ்
ஞாநாதி ஷாட் குண்ய நிதேர சிந்த்ய விபவஸ்ய தா
விஷ்ணோர் விபூதி மஹிம ஸமுத்ரத் ரப்ஸ விப்ருஷஸ் –என்னும் ஸ்லோகங்களால்
அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களும் அதற்கு உட்பட்ட ஸகல தேவாதி சேதனர்களும்
எம்பெருமானுடைய விபூதியில் அடங்கியவை

ஸ்வ தந்திரமான மற்றொரு வஸ்து இல்லை -என்று நிரூபித்து
ப்ரஹ்மாத்ம நாத்மலாபோயம் ப்ரபஞ்சஸ் சித சின்மயஸ்
இதி பிரமீயதே ப்ராஹ்மீ விபூதிர் ந நிஷித்யதே -என்று
அத்விதீய ஸ்ருதியினால் புருஷோத்தமனுடைய விபூதிக்கு ஒருவிதமான இடரும் இல்லை என்று காட்டி அருளுகிறார்

இவ்வண்ணம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளை
ஸம்வித் ஸித்தியில் நிலை நாட்டி அருளுகிறார் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

இத்யாதியான ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளை உட்க் கொண்டு
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி
வசனத்துக்குப் பொருத்தமான பொருளை விளக்கி அருள்கிறார் பரமாச்சாரியார் –

———————————————–—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியிலும்- ஸ்ரீ பெரிய திருமொழியிலும் அந்தாதி பதிகங்கள் —

March 10, 2023
அந்தாதி (12) 
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4 
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3  
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3 
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3063/3 
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் - நாலாயி:3074/3 
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3373/3 
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3384/3 
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - நாலாயி:3450/3 
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் - நாலாயி:3593/3 
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் - நாலாயி:3692/3 
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3934/3 
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4

அந்தாதிகளால் (1)
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3

ஸ்ரீ முனைவர்.ப.பாண்டியராஜா-முன்னாள்:துணைமுதல்வர்,
தலைவர்,கணிதத்துறை இயக்குநர், கணினித்துறை-அமெரிக்கன் கல்லூரி, மதுரை
கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்ட தொடர் அடைவுகள் மூலம்-
அருளிச் செயல்களில் அந்தாதி- தொடர் அடைவுகள்-எளிதாக காணலாம்

—————–

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் அந்தாதி பதிகம்

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1-

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2-

வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3-

வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4-

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5-

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6-

முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7-

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8-

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9-

காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10-

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11-

வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12-

வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13-

—————————

ஸ்ரீ பெரிய திருமொழியில் அந்தாதி பதிகம்

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர்
பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடி யாட
வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே -11-3-2-

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே –11-3-5-

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-6-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை   யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —11-3-8-

நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும்
அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9-

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ்  மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-

—————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவடி மாலை -ஸ்ரீ கழல் கோவை -ஸ்ரீ தேசிகர் மஹாத்ம்யம் –ஸ்ரீ துரை ஸ்வாமி ஐயங்கார் —

March 10, 2023

நிரபாய தேசிகாய நிதர்சிதா மிமாம் கமலா ஸஹாய கருணாதி ரோஹணீம்
க்ரம சோதி ருஹ்ய க்ருதி நஸ்ஸ மிந்ததே பரிசுத்த ஸத்வ பரிகர்மிதே பதே

நித்யமான ஆச்சார்யரால் காட்டப் பெற்ற ஸ்ரீ யபதியின் தயையாகிற படியை முறைப்படி ஏறி
க்ருதார்த்தரானவர்கள் ஸுத்த ஸத்வத்தினால் அலங்கரிக்கப்பெற்ற பரம பதத்தில் பிரகாசிக்கிறார்கள்

இப்பிரபந்தம் இரட்டைக் கழல் ஒலியாய் நவ ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது

அந்தமிலா மறை அன்பர் அடியார்க்கும் அடியேன்
அதின் கருத்தை ஆய்ந்து அளித்த ஆழ்வாருக்கும் அடியேன்
செந்தமிழால் அருள் செயலின் அடியார்க்கும் அடியேன்
சிந்தனை செய் தொண்டர்களின் அடியார்க்கும் அடியேன்
எந்தையிடம் சரண நெறி புகுந்தார்க்கும் அடியேன்
சந்தமிகு தமிழ் மறையோன் தேசிகனார்க்கு அடியேன்

ப்ரஸித்த நெடியோன் ஸ்ரீ நிவாஸன்
அருள் நெடுமையே ஸ்ரீ நிவாஸனின் நெடுமை
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பு
கோமின் துழாய் முடி ஆதி யஞ்சோதி குணங்களே
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உப நிஷத் துக்த ஸிந்தும் விமத்னன் க்ரத் நாதி ஸ்வாது காதா லஹநி தசசதீ நிர்கதம் ரத்ன ஜாதம் என்று
எழில் குருகை வரு மாறன் திருவாய் மொழி ஆயிரம் குணம் கொண்டு
தாத்பர்ய ரத்னாவளிக் கோவையை அரங்க நகர் அப்பனுக்கு ரஞ்ச நிதியாக சாத்தி மகிழ்ந்தார்
பேசு உபய வேதாந்த வள்ளலாருக்கு இக்குணக் கழல் கோவையை இட்டு மகிழ்கிறார் இவர்

அந்தணர் அந்தியூர் எல்லையில் நின்ற அனைத்துலகும் –வந்தடையும் வகை அன்பர் அறிந்து அறிவித்தனரே என்று
மெய்யுணர்வு வூட்டி -ஸரணாகதியில் மூட்டி -ஸ்ரீ நிவாஸன் பொன்னடியைப் பூட்டி –
அன்னவன் பொன்னடி யாயிரம் -பாதுகா ஸஹஸ்ரம் -பாடி அருளிய வள்ளல் பெரும் கடலின் திருக் குணக் கோவை 25 பாக்களாகக் கோக்கப்பட்டது

————————

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா விபூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே –2-

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்–3-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே –9-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

தாரக போஷக போக்யமான
விரகு என்று அருளிய பழ மொழிகளில்
ஒன்றே யமையும் வீடு பெற்று உய்ய
பொன் கழல் அடி யாயிரம் பாடியவா –14-

உனையே யலதோர் பரம் உண்டு எனவே
நினையார் கதியே நிகரில் புகழாய்
பணமும் புகழும் மதியா மதியே
குணமே வடிவாய் வந்தாய் சரணம் –15-

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளின் மணியே சரணம் –16-

ஆரா வமுதே யறிவார் யறிவே
தீரா வினை தீர் திருவேங்கடவா
கண்ணே மணியே கருணைக் கடலே
தொண்டர் துணையே முகிலே சரணம் –17-

விண்ணோர் பதமும் வேண்டிற்று இலை யான்
மண்ணோர் புகழும் நாடுவது இலையே
என்நேரமு நின்னிரு தாள் மலரை
பொன்னே என யான் புனையைப் பெறுமோ –18-

வருமோ ருறவே வளரிள வரசே
அருவிலை மணியே வன மத கரியே
அரு கணை இறையே யறவுரு நிலையே
அருமறை குருவே யடியார் உயிரே –19–

உடையவனே நீ கவரா யுடைமை
அடைவது இலாமையால் குறையிலையே
புத்தியில் யுறைபவநீக வரதா
புத்தி யிலாமையால் குறைவிலமே –20-

எட்டும் இரண்டும் அறியா என் தன்
முட்ட இருவினை யறவே யிதமொடு
மன்னிய நல் திரு மந்த்ரப் பொருளை
பொன் அருளால் அருளாய் கற்பகமே –21-

நின் பேர் யறியார் மேயவர் யாவரோ
யுன்னை அறிந்து மறந்திடுவாரோ
நின் தொண்டர்க்கே அன்பு செய்திட
என்னை யாக்கியே யருள் புரிவாயே –22-

குரு புங்கவனே கருணா நிதி நின்
அருளால் அநு பூதி பிறந்ததுவே
திரிகின்ற மனம் திரியாது யுனையே
அறிவால் யடியார் தொழு தேசிகனே –23-

அமலனுக்கு மக்கள் அளித்த பெயரொடும்
கமலை யுகந்த ளித்தவி ருதொடும்
நல்லாருலகம் நல் பதம் எய்திட
பல்லாண்டு இரும் என இசை பாடுவனே –24–

வேங்கட நாதன் அடியார் அடிகளில்
வேங்கடேசன் மயலால் இறைஞ்சிய
சேதுவான கழல் காதல் மாலையை
ஓதும் அன்பர் எழில் பதம் ஏறுவரே –25-

————–

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா வி பூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

உயர்வற உயர் நலம் யுடையோன் -திருவாய் மொழிக்கு எல்லாம் ஸங்க்ரஹம்
மங்கள உபக்ரமம்
உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே –கோல மலர்ப்பாவையின் அன்பின் அன்பு
அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
மயர்வற மதி நலம் பெற்ற -அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவை அனைத்தும் வாஸனையோடே போம்படி
மதி -பகவத் விஷய ஞானமாகிய மதியையும்
நலம் -பக்தி-தலைவன் -ஸமஸ்த இறைவன் -ஸர்வ உபகாரகன்
அகணித குண வித்யா விபூஷணா-அநந்த கல்யாண குண கண மஹோ ததி
அகணித-எண்ணிக்கை இன்மை
வித்யா-வித்யை கல்வி ஞானம் தந்த்ரத் தொழில்
விபூஷணம் -ஆபரணம்
இக பர பலஸா தன தாரகனே –
இகம் -இப் பிறப்பு
பர -உயர்வு பர ப்ரஹ்ம அனுபவம்
பல -பயன்
ஸாதன -உபாயம்
தாரகனே -நடத்துவோன் -தரிப்பவன் -கொடுப்பவன்

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
ஸம்ஸார சேதனர்களை உஜ்ஜீவிக்கவே பகவத் அனுக்ரஹமே வடிவாக வந்தவர்
ஸ்ரீ ராமானுஜர் பகவத் விஷயத்தில் வைத்த ப்ராவண்யமே உருவாக்க ஸ்வாமியாய் திருஅவதாரம்

மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
தெருள் தர நின்ற தெய்வ நாயக -என்று இவரே அருளிச் செய்தபடி அடியவருக்கு மெய்யனால்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
பூதத்தாழ்வாரைப் போல் ஞானத்தமிழ் புரிந்து ஞானச் சுடர் விளக்கு ஏற்றிய பிரான்
ஆச்சார்ய கிருபா மூலமான பகவத் கிருபையால் அருளப் பெற்றவர்
ஸ்ரீ ஹயக்ரீவரின் லாலா ஸூ தாபான லப்த ஸர்வஞ்ஞன்

வித்யா வி பூஷணா
யதிராஜரைப் போல் ஐவரும் வித்யா வாஹினி -உத்பத்தி ஸ்தானம்
யதிராஜரின் பரிபூர்ண கிருபா விசேஷத்துக்குப் பாத்திரமானவர்
அடியார்களுக்கு பரம பாக்யத்தைக் கொடுக்கும் விசுத்த வித்யா விபூஷணம்

அகணித குண
கல்யாண குணங்களே வடிவானவர் -ஸர்வ குண நிதி –

இக பர பல ஸாதன தாரகனே
பக்தர்களே தனக்குத் தாரகமாக யுடையவர்
குருவாய் நின்று திகழ்ந்து மண் மேல் நின்ற நோய்கள் தவிர்ந்தனனே –

அகில புவன ரஷா சாதநாய அவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக் மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தவ் வேத ஸூடா குரவ்மே
பவது பரம பக்தி ஸ்ரீ நிதவ் வேங்கடேச

———————————-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே–2-

தாதை -தகப்பன்
குசிக குல -கௌசிக குலம் -விச்வாமித்ர குலம்
வாரிய ஸூரியின்-அநந்த ஸூரி –
மாதவர் புகழும் வேத மா மூர்த்தி என்ன விளங்கும் அவ் வனந்த ஸூரி ஓதிடாது ஒழிந்த நூல் இங்கு ஒன்றும் இல்லை என்பராம்
தோதை -தோதாரம்மையார்
மணி வயிறு வாய்த்தவனே-தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரனைப் போலவும்
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனைப் போலவும்
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே-ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரர் -விருது பெற்றவர்
அகடி கடநா சாமர்த்தியம் பெற்றவர்
மந்திர -மறை மொழி தானே மந்த்ரம் என்ப
எம்பார் த்வய அனுசந்தானம் செய்ய பட்டர் குழந்தை மனம் வீசப் பெற்றது கண்டு மகிழிந்தாரே உடையவர்
மணம் கமழ் மாலையனே-நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
த்ரி ஜகத்தும் உஜ்ஜீவிக்க பகவான் பிரத்யேகமாக அளித்த பேறே இவர் அவதாரம்

தீப ப்ரதீபமாய் வந்த தேஜஸ் அன்றோ
கண்டா கரேஸ் ஸமஜ நிஷ்டய தாத்ம நேதி -என்று இவரே ஸங்கல்பஸூர்யோதயத்தில் அருளிச் செய்தபடி
மநோ கதம் பஸ்யதி யஸ்ஸ தாத்வம்
மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்ஸம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ
கிம் குர்வதே தஸ்ய கிரோய தார்ஹம்–ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் –

எவன் ஒருவன் ஞானி கள் மனத்தினில் ஹம்ஸம் போல் விளங்கும் தேவரீரை தன் மனத்தில் இருப்பவனாகக்
காண்கின்றானோ அவனுக்கு வாக்குகள் நான் முன்னே நான் முன்னே என்று வந்து ஏவல் புரியுமே –
ஸர்வ வித்யைகளும் இவர் இட்ட வழக்கு ஆகுமே
மந்த்ர உபதேஷ்டாவான பெரிய திருவடி நாயனார் ப்ரஸாதம் அருளப் பெற்றவர்

———————————–

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்-3-

வாழி வியாக்யான முத்திரைக்கை -பிள்ளை யந்தாதி
உன்னித்ர பத்ம ஸூபகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி
வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் -பிள்ளை யந்தாதி
வாதியார் மூலம் அற நாவின் முழக்கொடு விளங்கிய வித்தகன்
செம்பொன் மேனி மாறாத தூப்புல் மாலே
உத்தமநேயா -கண்ணன் கழல் தொழும் உற்றவரையே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்
மற்ற ஒரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் –

—————-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

ஸ்ரீ செல்லப்பிள்ளை -யதிராஜ வீஷா பாத்ரம் -திருநாமம் சூட்டியுகந்தார் -இதுவே யதிராஜ அருட்கலம் -என்கிறார் இங்கு
ஸ்ரீ தெய்வ நாயகன் -கவி தார்க்கிக ஸிம்ஹம் விருத்தி சாற்றி அருளினார்
திருவுடன் வந்த செழு மணி போல்-பகவத் ப்ரீதிக்கு விஷயமானவர்
விச்வாமித்ர பவித்ர குல சோததி கௌஸ்துபன் -என்று அழைக்கப் பெறுபவர்

———————-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

புத்துயிர் அளித்த நாதன் -நாதமுனிகள்
நாதேந முனி நாதேந பவேயம் நாத வாநஹம்
யஸ்ய நைக மிகம் தத்வம் ஹஸ்தா மலகதாம் கதம் –யதிராஜ சப்ததி
ஆரப்பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப்பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனி
காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி -அதிகார ஸங்க்ரஹம்
நாத உபஞ்ஞம ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம்
யாமுநேய பிரபந்தை ஸ்த்ராதும் ஸம்யக்
யதீந்த்ரை ரிதமகிலதம கர்சனம் தர்சனம் ந -ஸ்ரீ தத்வ முக்தா கலாபம்

——————-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
காரணந்து த்யேய
வாரண மலை யுறை பேர் அருளாளன் -கரிகிரி யம்மான் –பேராத அருள் பொழியும் பெருமாள் –
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரான் -பெரிய திருமொழி -4-3-1-
ஹஸ்தீஸ ஸர்வ வஸசாமவஸான ஸீமாம்
த்வாம் ஸர்வ காரண மு சந்தி அநபாய வாஸ -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி
யம்மான் என்றும் திரு மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும் படி கரை புரண்ட
கருணைக் கடலை இவ்வண்ணம் பேசுவீர் தென்ன பாங்கே –மெய் விரத மான்யம்
நித்யா வாஸம் வ்ருஷபமசலம் ஸூந்தராக் யஸ்ய விஷ்ணோ
ப்ரத்யா ஸீதந் ஸபதிவிநமத் பாக தேயம் நதஸ்யா -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்
ஸூத்த ஸத்வ குண மயமானதும் ப்ரணவ ஸ்வரூபமானதுமான ஸ்ரீ ரெங்க திவ்ய விமானத்தில்
சுயமாய் உதித்து விளங்கும் ஜோதியைப் பற்றி மொழியுங்கால்
பெட்டியுள் வைத்த மரகத மணி போல் அவ்விமானத்துள் ஓங்கி பிரகாசிப்பவனும்
சேஷ சயனத்தில் பள்ளி கொண்டு அருளுபவனும்
பாற்கடல் புதல்வியின் ஆருயிர் காதலனுமான
அவ்வாஸூ தேவன் இடமே என் மனம் தாவி ஓடுகிறது -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்

——————-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

தமிழ் வேதத்தை முன்னே சொன்னது
மங்கையர் கோன் என்ற இவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலை கணாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –அதிகார ஸங்க்ரஹம்
குரு மா மணியே –ஆச்சார்ய குண பூர்த்தி யுடையவர்
நம்மாழ்வார் ஆச்சார்ய தத்வம்
யதிராஜர் -ஆச்சார்ய ரஹஸ்யம்
தேசிகன் -ஆச்சார்ய ரத்னம்
மறை விளக்கி மறை புகட்டி மறையின் நீதி ஓதினாய்
மறை விளக்கும் மெய்ப்பொருளை வாரமாக நல்கினாய்
மறை கடைந்து எழில் மணம் மிசைத் தமிழ் இயற்றினாய்
மறை முடிப்பெயர் புனைந்து உதவ நெறி யுணர்த்தினாய்
சிட்டரான தேசு உயர்ந்த தேசிகர்க்கு உயர்ந்து மேல் எட்டு மூன்று மூடறுத்த எந்தை மால் இரக்கமே
என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளே மணியே சரணம்

—————

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

பற் பல் கலை வல்ல பாவலனே
வியாஸர் வால்மீகி போல் இவரும் கவிச் சக்கரவர்த்தி

—————

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே–9–

மறையின் குருத்தின் பொருளையும் -செந்தமிழையும் கூட்டி ஒன்றத் திரித்ததே தேசிக பிரபந்தங்கள்
திருவாய் மொழியின் பத்துப்பத்தின் அர்த்தங்களும் மும்மணிக்கோவையில்
பயின் மதி நீயே வெளியும் நீயே
தாயும் தந்தையும் நீயே
உறவு உற்றதும் நீயே
ஆறு அறமும் நீயே
துணைவன் துய்யனும் நீயே
காரண கற்பகம் நீயே
இறைவன் இன்பனும் நீயே
யானும் எனதும் நீயே
நல்லதாய் வல்லாய் நீயே –என்று குண தசாக வடிவு அடைவு காணலாம்
அடைபவர் தீ வினை மாற்றி அருள் தரும் தூப்பூல் ஐயா-

—————-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

ராமாநுஜப்பிள்ளான் மா தகவால் உண்டான வண்மை
இவருடைய உண்மை ஞானத்தின் திண்மை
மெய்யனைப் போற்றிய மெய்யன்
உண்மைப் பொருளை யுண்மையாகவே காட்டிக் ஸத்ய வாதி
பகவத் ஆச்சார்யர் திருவடிகளிலே மெய்யன்பு கொண்ட மெய்யன்
மெய்யானான தேவ நாதப் பெருமாளின் செல்லப்பிள்ளை
கொடுத்த
மெய்ய நின் வியப்பே -வாதிகளை வென்ற விதத்தின் வியப்பின் ஆழ்மையை அனுபவிக்க வல்லார் யார் –

————————

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

ஸ்ரீ வராஹ நாயனார் திருவாயால் குரு குரு சப்தித்து குருவானவர் -குருபிஸ் கோணார வைர்க் குர் குரை -தசாவதார ஸ்தோத்ரம்
இரண்டு உறையாத நம் ஏனத்தின் இரண்டு உரையான சரம ஸ்லோக பலத்தை நம் ஸ்வாமி காட்டி அருளுகிறார் ரஹஸ்ய சிகாமணியில்
காருண்யாஸ் ஸாஸ்த்ர பாணிநா
ஸ்ரீ யபதிக்கும் யதிபதிக்கும் நடந்த ஸம்வாத மகிமையையும் சாற்றி அருளி உள்ளார்
தஞ்சப் பர கதியைத் தந்து அருளிய தயா நிதி

எல்லாருக்கும் எளிதான ஏற்றத்தாலும்
இனி உரைக்கை மிகையான இரக்கத்தாலும்
சொல்லார்க்கும் அளவாலும் அமைதலாலும்
துணி வரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும்
கண்ணன் உரை முடி சூடி உரைத்தலாலும்
நல்லாருக்கும் தீயாருக்கும் இதுவே நன்றா
நாரணற்கே அடைக்கலமாய் நணுகுவீரே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கு அடிமை ஆகிறேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும்
இவை யறிவார் செயலுடன் என்னிசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே —அபய பிரதான சாரம்

இப் பாசுரத்தில் தேசிகன் ஸித்த ஸாத்ய உபாயமாக அமைந்து இருப்பது காண்க –

——————-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

கடலிப்பியலே-கடலில் இருக்கும் முத்துச் சிப்பியிலே
யொளி நித்திலம் என -ஒளி வீசும் நல் முத்துப் போலே
சிப்பியைப் போல் உள்ள ஜீவாத்மாக்கள் அந்தராத்மா
இருந்தாலும் வியாப்த கத தோஷம் தட்டாத அமலன் -குண மாயா ஸமாவ்ருதா

குடன் மிசை ஒன்றியும் கூடியும் நின்று கொடும் துயரு
முடன் மிசை தோன்றும் உயிரும் உயிர்க்கு இரா இறையும்
கடன் மிசை கண்டவை தானது திரளவை போர்த்த பொன்னூல்
மடன் மிசை வார்த்தை யதன் பொருள் யன்ன வகுத்தனமே -ஸ்ரீ தத்வ த்ரய சுலளகம்

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்த்
துலை ஓன்று இலை என நின்ற துழாய் முடியான் உடம்பாய்
விலை இன்றி நாம் அடியோம் எனும் வேதியர் மெய்ப்பொருளே -அதிகார ஸங்க்ரஹம்

தாரகன் -நியந்தா -சேஷி -சரீராத்மா பாவம் -பிரதான பிரதிதந்தரம்
ஜகத் ஸர்வம் சரீரம் தே

நின் திரு தனக்கு நீ திருவாகி
துய்யனும் நீயே செய்யாள் யுறைதலின்

வஜ்ராயுதம் போல் நா வீறு படைத்த ஸிம்ஹம் –

————————

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

சிறு வேதத்தை-ப்ரணவம் -வேதக்குறள் -ப்ராஹ்மண கோசோஸீ

நின்னால் அன்றி மன்னார் இன்பம்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார்
நின் பால் அன்றி யன்பால் உ