ஸ்ரீ கத்ய த்ரயம் —ஸ்ரீ கத்ய பாவ பிரகாசிகை-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரையுடன் கூடியது-

May 12, 2024

ஸ்ரீ கத்ய த்ரயம் —

॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥
॥ ஶரணாக³தி க³த்³யம்

யோநித்ய மச்யுத பதா³ம்பு³ஜ யுக்³ம ருக்ம-
வ்யாமோஹதஸ் ததி³தராணி த்ருʼணாய மேநே ।
அஸ்மத்³கு³ரோர் ப⁴க³வதோঽஸ்ய த³யைகஸிந்தோ:⁴
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥–
ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த தனியன்

வந்தே³ வேதா³ந்த கர்பூர சாமீகர கரண்ட³கம் ।
ராமாநுஜார்யமார்யாணாம் சூடா³மணி மஹர்நிஶம்
॥–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் அருளிச் செய்த தனியன்

சாமீ கரம் -ஸ்வர்ணம்
கரண்டகம் -பாத்ர விசேஷம்

வேதாந்த ஸாஸ்த்ரமாகிற பச்சைக் கற்பூரம் ஸூ ரஷிதமாகவும் பரிமளம் குன்றாதபடியாகவும் வைப்பதற்கு ஸ்வர்ண பரணி என்னலாம் படி வேதாந்த மார்க்க ப்ரதிஷ்டபந ஆச்சார்யராய் ஆரியர்களுக்கு எல்லாம் ஸிரோ ரதனமாக தாங்குபவராயும் இருக்கும் எம்பெருமானாரை நமஸ்காரம் செய்கிறேன்

வேதாந்தங்கள் அவனையே வஹித்துக் கொண்டு இருப்பதால் பச்சைக் கற்பூரம் என்றதாயிற்று
எம்பெருமானார் வேதாந்த தயா நிதி என்கிறார்

———

ப்ரவேஸம்-அவதாரிகை

உபயாந்தரங்கள் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் -என்று பலவகைப்பட்டு இருக்கும்
ஸ்ரீ பாஷ்யம் குத்ருஷ்டிகளை நிரசிக்கக்காக அருளிச் செய்கிறாராகையாலே
ஆச்சார்யர் ருசி பரிஹிரீத பிரபத்தியை மறைத்து அருளிச் செய்தார் அங்கு
தத்வமஸி இத்யாதி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷம் என்றும்
கர்ம ஞான ஸமுச்சயமே மோக்ஷ சாதனம் என்றும்
சொல்லும் குத்ருஷ்டிகளை நிரசிக்கவே
கர்ம அங்கமாய்
வேதந-த்யாந -உபாஸநாதி ஸப்த வாஸ்யமான பக்தி ரூபா பன்ன ஞான விசேஷமே மோக்ஷ ஸாதனம் என்று சாதித்தார் அங்கு

ப்ராஹ்மணன் சண்டாளனுக்கு வேதத்தை அத்யயனம் பண்ண ஒண்ணாதது போல்
தூரஸ்தரானவர்களுக்கு பரம ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை வெளியிட ஒண்ணாது என்று பார்த்து
அவர்கள் முகம் அறிந்த ஸாஸ்த்ர முகத்தாலே அவர்களை நிரஸித்து
ஸாஸ்த்ர தாத் பர்யமான ஸ்வ சித்தாந்தத்தை ஸ்தாபித்து அருளினார் அங்கு

ஆயினும் தன்னுடைய ருசி பரி க்ருஹீதமான அர்த்தத்தையே விஸ்வசித்து இருக்கும் சாத்விகர்களுக்கு
தன்னுடைய திரு உள்ளக்கருத்தியை விசத தமமாக வெளியிட வேண்டி
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய்
தமக்குத் தஞ்சமாய்
தாம் அறுதியிட்டு இருக்கும் அத்ஹம் பிரபத்தயே என்பதை
இக்கத்ய த்ரயத்தால் வெளியிட்டு அருளுகிறார்

பக்தி
அதிக்ருத அதிகாரம்
துஷ்கரம்
விளம்பித்து பயன் தரும்
ப்ரமாத -கவனக்குறைவு -ஸம்பாவனை உள்ளது
ஸாத்யம்
ஸ்வரூப விரோதம்
ப்ராப்ய வி ஸத்ருசம்

தபஸ்ஸுக்களில் ந்யாஸமே தலை விரைந்தது என்று வேதாந்தங்களை பறை சாற்றுமே

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்தாலும் பிரபத்தியே மேலையார் செய்வனகளாய் இருக்கும்
ஆகவே வேதாந்த ஸித்தமுமாய்
ஸ்வரூப ப்ராப்தமுமாய்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாயும்
சரண்யா ஹ்ருதய அநு சாரியுமாய்
இருக்கும் இத்தை ஸ்வ கீயர்கள் இழக்க ஒண்ணாது என்று
தாமும் அனுசந்தித்து
தம்முடைய பரம கிருபையால் இப்பிரபந்த ரூபமாக வெளியிட்டு அருளிச் செய்கிறார்

இதில் பெரிய பிராட்டியாரும் பெரிய பெருமாளும் அர்ச்சா சமாதியைக் கடந்து இவற்றில் திருச்சோதி வாய் திறந்து அருளிச் செய்தவையும் உண்டு

இவற்றில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்துமே உண்டு -இவையுள்
ஸம்போதந பதங்கள் -தத்வ பரம்
சரண வரண ப்ரதிபாதக வாக்கியங்கள் ஹித பரம்
ப்ரார்த்தநா ப்ரகாஸ வாக்கியங்கள் புருஷார்த்த பரம்

————————-

ஸ்ரீபெரிய பிராட்டியாரைச் சரணமாகப் பற்றுவது:

ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

ப⁴க³வந் நாராயண-ஸமஸ்த கல்யாண குண பரி பூர்ணனான நாராயணனுக்கு
அபி⁴மத அநுரூப -உகப்பாயும் -தகுந்தும் இருக்கிற
ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ -ஸ்வரூபம் என்ன -விக்ரஹம் என்ன -ஸ்வரூப விக்ரஹ குணங்கள் என்ன -விபூதிகள் என்ன -இவைகளையும்
ஐஶ்வர்ய ஶீலாத்³–ஐஸ்வர்யம் ஸுசீல்யம் முதலிய
யநவதி⁴க அதிஶய –எல்லையில்லாத சிறப்புடைய
அஸங்க்²யேய -எண்ண முடியாத
கல்யாண கு³ண க³ணாம் -கல்யாண குண ஸமூஹங்களையும் உடையவளாய்
பத்³மவநாலயாம் –கமல வனத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவளாய்
ப⁴க³வதீம் –பரம பூஜ்யையாய்
ஶ்ரியம் –ஸ்ரீ என்று திரு நாமம் யுடையவளாய்
தே³வீம்-வடிவில் புகர் நிறைந்தவளாய்
நித்யாநபாயிநீம் -எம்பெருமானை ஒரு நாளும் விட்டுப் பிரியாதவளாய்
நிரவத்³யாம் -பரி ஸூத்தியை யுடையவளாய்
தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -தேவாதி தேவண்டைய எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியாய்
அகி²ல ஜக³ந் மாதரம் -ஸமஸ்த ஜகத்துக்கும் மாதாவாய்
அஸ்மந் மாதரம்–விசேஷித்து அடியோமுக்குத் தாயாய்
அஶரண்ய ஶரண்யாம் -புகல் அற்றவர்களுக்கு புகலாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை
அநந்ய ஶரண: அஹம் -புகல் ஒன்றும் இல்லா அடியேன்
ஶரணம் ப்ரபத்³யே –சரணம் புகுகின்றேன் –

முந்துற முன்னம் பெரிய பிராட்டியாரை சரணம் புகுகிறார்
மேலே தாம் பெரிய பெருமாள் திருவடி வாரத்திலே சரணாகதி நிஷ்டைக்கு வெளியிடப் போகிற
உபேய ருசியும்
உபாயத்வ அத்யாவசாயமும்
பரி பக்குவமாய் இருக்க வேண்டுகையாலே -அவை குறைவற ஸித்திக்க வேண்டும் என்று பெரிய பிராட்டியார் திருவடிகளிலே சரணம் புகுகிறார்
உலகில் எது ஸித்திக்க வேண்டுமானாலும் பெரிய பிராட்டியார் சீர் அருளாலேயே ஸித்திக்க வேண்டும் என்ற அத்யவசாயம் இருப்பார்க்கு இது ப்ராப்தமே யாகும் –

அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் தமது முடியில் பொருந்த பிரார்த்தனை போல்-

ப⁴க³வந் நாராயண-அபி⁴மத அநுரூப –ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ-இவை அனைத்தும் எம்பெருமானுக்கு உகப்பாயும் -ஏற்றவையாயும் இருக்கிற
லௌகீகருக்கு அனுபவமிக்க க்ரம பிராப்தி இருந்தாலும் மனதுக்கு இனியவளாய் இல்லாமலும்
வேறே ஸ்த்ரீகள் மனதுக்கு இனியவர்களாய் இருந்தாலும் பிராப்தி இல்லகாவர்களாகவும் காண்கிறோம் அன்றோ
ருசி -சுசி -அபிமத அனுரூபம் க்வசித் பொருந்தினாலும் முழுவதுமாக பொருந்தியவையாய் இருக்காதே
தேஹ குணம் பொருந்தினாலும் ஆத்ம குணம் பொருந்தாமல் இருப்பதும் உண்டே
திவ்ய தம்பதிகளுக்கு ஸகல அம்சங்களும் முழுவதுமாக அபிமதமாயும் அனுரூபமாயுமே இருக்கின்றன என்றதாயிற்று

இந்த விசேஷணங்களில் குண ஸப்தம் இரண்டு முறை –
முதலில் உள்ளது தேஹ குணம் –ஸுந்தர்ய லாவண்யாதிகள் –
பின்புள்ளது ஆத்ம குணம் -வாத்சல்ய ஸுலப்ய ஸுசீல்யாதிகள்

விபவம் -போகத்துக்கு உபகரணங்களாய் இருக்கும் வஸ்து ஸமூஹங்கள் –
அவளுக்கு என்று தனியே விபூதிகள் உண்டோ என்னில் -தம்பதிகளுக்கு பொதுவாய் தானே இருக்கும்
மேலும் அவளுக்கு அசாதாரணமான மால்யை பூஷண வஸ்த்ராதிகளும் உண்டே
விபவ அர்ச்சா அவதாரங்களில் காண்கிறோம் அன்றோ –

ஐஸ்வர்யம்
நியமன ஸாமர்த்யம் -எம்பெருமானுடைய இச்சையினால் பெற்ற நியமான சாமர்த்தியம்
சேதனர்களை கர்ம அனுகுணமாக நியமித்தும் அருளாலே திருத்தியும் நியமிப்பாள்
ஈஸ்வரனை ரக்ஷண அனுகுணமாக நியமிப்பாள் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

சீல ஆதி -சீலம் புரையறக் கலக்கை -குகன் பக்கலிலும் த்ரிஜடை பக்கலிலும் காணலாம்
ஆதி -வாத்சல்ய ஸுசீல்யாதிகள்

அநவதிக அதிசய -இது குணங்களுக்கு விசேஷணம் -ஒவ்வொரு குணத்தின் எல்லையும் -உத்கர்ஷமும் -காண முடியாமல் இருக்குமே

அஸங்க்யேய கல்யாண குண கணாம் —அவனுக்குப் போலவே குணங்கள் தனித் தனியே எண்ண முடியாதவை மட்டும் அன்றி குண ஸமூஹங்களும் எண்ண முடியாதவை அன்றோ

பத்³மவநாலயாம் -பத்மத்தை உப லக்ஷணமாகக் கொண்டு ஸர்வ மங்கள வாஸிநீ -என்றபடி-பரிமள பிரசுரமான பத்ம வன வாஸிநீ என்பதால் -ஸர்வ கந்த -என்று புகழப்படும் அவனுக்கும் பரிமளமூட்ட வல்லவள்-

ஶ்ரியம்
1-ஸ்ரீயதே –ஸகல சேதனர்களாலும் புருஷகார தயா ஆஸ்ரயிக்கப்படுபவள்
2-ஸ்ரயதே -சேதனர்களுக்காக அவனை ஆஸ்ரயிக்கிறாள்
3-ஸ்ருணோதி -சேதனர்களின் விண்ணப்பங்களை செவி கொடுத்துக் கேட்க்கிறாள்
4-ஸ்ராவயதி -அவற்றை அவனையும் கேட்ப்பிக்கிறாள்
5-ஸ்ர்ணாதி –ஆஸ்ரிதர் குற்றங்களை ஷமித்து இல்லை செய்பவள்
6-ஸ்ரீணாதி -தனது திருக்கல்யாண குணங்களால் உலகோரை உகப்பிக்கிறாள் –
ஸ்ரீரித் ஏவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஆளவந்தார்
ஸ்ரீ ரஸி யத -பட்டர்

தே³வீம்-கிரீடா -இன்புறும் இவ் விளையாட்டுடையவனுடைய சேர்த்தியால் ஒளி வீசி விளங்குபவள்-

நித்யாநபாயிநீம் –பூவும் மணமும் போலவும் ரத்னமும் ஒளியும் போலவும்
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா

நிரவத்³யாம் -கீழ்ச் சொன்ன உதகர்ஷங்கள் எல்லாம் தனது யத்னத்தால் அன்றி -நிலா தென்றல் இத்யாதிகள் போல் -எம்பெருமானுடைய அதிசய தானத்திற்கே உறுப்பு என்று இருப்பவள் –

தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -அப்ரதிஹத சிகீர்ஷிதாம்-தான் எது செய்தாலும் இடையூறின்றி நிறைவேற்றுபவள் -என்பர் ஸ்ருதப்ரகாசிகா பட்டர்
அவ்வளவு கண் அழிவற்ற புருஷகாரம் செய்யும்படி வால்லப்யம் யுடையவன்
ப்ரஹ்மாதிகளை விட உத்துங்கனான தேவ தேவன் போல் அல்லாதவர் மஹிஷிகளில் காட்டில் உத்துங்கம் யுடையவள் –

அகி²லஜக³ந் மாதரம் –தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம்-என்று அஞ்சி பின் வாங்க வேண்டாத படி வாத்சல்யமே விஞ்சி இருப்பவள்அஸ்மந் மாத்ரம்–அகில உலகமும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாக வாத்சல்யம் விஞ்சி இருக்குமே
தேசிகர் பாடத்தில் இப் பதங்கள் இல்லை

அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே-சர்வ லோக சரண்யனாலும் கைவிடப்பட்ட அவர்களுக்கும் புகலிடம் இவளே –
திருவடியைப் பொறுப்பிக்கும் அவள் தன் சொல்லி வருமவளைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாம் அன்றோ
பிரபத்யே -சரணமடைகிறேன் என்று இருக்கச் செய்தே -அஹம் -பத ப்ரயோகம் -விஸிஷ்ய -தம்மைத் காட்டிக் கொள்ளுகிற படி
அசக்தியாலும்
ஸ்வரூப விருத்தமாகையாலும்
உபாயாந்தரங்களில் கை வைக்காதவர் என்று காட்டியபடி

——–

பிராட்டியாரிடம் பிரார்த்திப்பது:

பாரமார்தி²க ப⁴க³வச்சரணாரவிந்த³ யுக³ளைகாந்திகாத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி க்ருʼத
பரிபூர்ணாநவரத நித்ய விஶத³தம அநந்யப்ரயோஜந அநவதி⁴காதிஶய ப்ரிய ப⁴க³வத³நுப⁴வ ஜநித
அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதி ரூப நித்யகைங்கர்ய
ப்ராப்த்யபேக்ஷயா பாரமார்தி²கீ ப⁴க³வச்சரணாரவிந்த³ ஶரணாக³தி: யதா²வஸ்தி²தா அவிரதாঽஸ்து மே
॥ 2 ॥

பாரமார்தி²க–பரம புருஷார்த்தமான -இது பக்திக்கு விசேஷணம்
ப⁴க³வச்சரணாரவிந்த³ யுக³ளைகாந்திக-எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளையே பற்றினதாய்
ஆத்யந்திக -எப்போதும் நிலை நின்றதாய்
பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி –பர பக்தி பர ஞான பரம பக்தி ஆகிய இவற்றாலே
க்ருʼத-செய்யப்பட -இது பகவத் அநுபவத்திலே அந்வயிக்கக் கடவது
பரிபூர்ண-நிரம்பியதாய்
அநவரத -இடைவீடு இல்லாததாய்
நித்ய -நித்யமாய்
விஶத³தம -அதி மிக விசதமாய்
அநந்ய ப்ரயோஜந -ஸ்வயம் ப்ரயோஜனமாய்
அநவதி⁴காதிஶய ப்ரிய -இதற்கும் மேலே வேறே ஒன்றும் பிரியம் இல்லாததாய்
ப⁴க³வத³நுப⁴வ –பகவத் அநுபவத்தினால்
ஜநித–உண்டு பண்ணப்பட்ட
அநவதி⁴காதிஶய ப்ரீதி-மிகச் சிறந்த ப்ரீதியினாலே -உகப்பினாலே
காரித -செய்விக்கப் பட்ட -இது நித்ய கைங்கர்யத்தில் அந்வயிக்கும்
அஶேஷாவஸ்தோ²சித –எம்பெருமானுடைய திரு வோலக்கத்திலும் -அந்தப்புரத்திலும் போன்ற ஸகல அவஸ்தைகளும் ஏற்றவையான
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப –ஸகல வித கைங்கர்யங்களிலும் ஆசை கொண்டு இருப்பதே வடிவான
நித்யகைங்கர்ய ப்ராப்த்யபேக்ஷயா –நித்ய கைங்கர்யத்திப் பெறுவதற்கு உறுப்பாக
பாரமார்தி²கீ -உண்மையான
ப⁴க³வச்சரணாரவிந்த³ ஶரணாக³தி: –எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஆகின்ற சரணாகதியானது
யதா²வஸ்தி²தா அவிரதாঽஸ்து மே -அது அமைய வேண்டிய ரீதியிலே அமைந்ததாய் -இடையறாததாய் எனக்கு ஸித்திக்க வேண்டும் –

கீழே பிராட்டியிடம் சரணாகதி என்றது இத்தால் விஸதீ கரிக்கப்படுகிறது
இடையறாத ஆச்சர்ய பகவத் அனுபவம் விளைந்து -அதனால் கைங்கர்ய ருசி உண்டாகும் என்று உரைத்தாறாயிற்று

———

பிராட்டியாரின் பிரதி வசநம்:
அஸ்து தே ॥ 3 ॥
தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே ॥ 4 ॥

அஸ்து தே –அப்படியே இது உமக்கு ஆகக் கடவது
தயைவ -அந்த ஸரணாகதியினாலேயே
இதுவே போதுமான தாக்க இருக்க
அதுக்கும் மேலும்
ஸர்வம் ஸம்பத்ஸ்யதே –உமது அபிமதம் எல்லாம் அழகாக ஸித்திக்கப் போகிறது -என்று பெரிய பிராட்டியார் அனுக்ரஹத்துக்கு திரு உள்ளதாக ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் -ஸ்வ சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி ஸர்வா ஸப்தா பிப்ரேதம் -என்று
இது உம்மளவில் சுவறிப்போமது அன்று -பரம்பரயா உம்முடைய குடல் துவக்குடைய உம்முடைய குடல் துடக்கு உடைய எல்லார் இடத்திலும் இது பலித்ததாகக் கடவது -என்று பிராட்டியார் அனுக்ரஹித்த படி
இப்படிப்பட்ட வரம் எம்பெருமான் திருமுகத்தில் நீண்டும் மேலே வெளிவரும் என்பதே நம் சம்ப்ரதாயம்-

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லஷ்யயா தே ப்ரத்யாய்ய லஷ்மண முநே பவத விதீர்ணம்
ஸ்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத -நியாஸ திலகம்–22-ஸ்ருத்வா வரம்-என்று எம்பெருமானாரது ஸம்பந்தமே ஹேதுவாக தமக்கும் பலித்ததாக தேசிகரும் அருளிச் செய்துள்ளார் அன்றோ-

இந்த வரப்ரதானத்துக்குப் பூர்வகமாக பிராட்டியார் சோதி வாய் திறந்து அருளுகிறார்

————-

எம்பெருமானுடைய ஸ்வரூபம்:
அகி²லஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந! * ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷண *
அநந்த ஜ்ஞாநாநந்தை³க ஸ்வரூப! *

அகி²லஹேய ப்ரத்யநீக -அனைத்து ஹேய குணங்களுக்கும் எதிர் தட்டாய்
கல்யாணைகதாந! * -நல்ல குணங்களுக்கு முக்கிய ஸ்தானமாய்
ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷண *–தன்னை ஒழிந்த ஸமஸ்த வஸ்துக்களைக் காட்டிலும் விலக்ஷணமாய்
அநந்த –ஸர்வ வ்யாபியாகையாலே தேச பரிச்சேத ரஹிதமாய்
ஸர்வ கால வர்த்தியாகையாலே கால பரிச்சேத ரஹிதமாய்
ஸர்வ வஸ்துக்களும் தானேயாய் இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய்
ஆக இப்படி மூன்று வித பரிச்சேதங்களும் இல்லாமையே அனந்தத்வம் ஆவது
ஜ்ஞாநாநந்தை³க ஸ்வரூப! -இப்படி அநந்தமாய்
ஸ்வயம் ப்ரகாசமாகையாலே ஞானமே வடிவாய்
ஸூக ரூபமாகையாலே ஆனந்தமே வடிவாய் இருப்பவனே
என்று இவ்வளவும் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைப் பேசியபடி
ஸ்வரூப ரூப குண விபூதிகள் –என்கிற கோவையில்
இதுவரை ஸ்வரூபத்தைப் பேசி
மேலே ரூபம் -திவ்ய மங்கள விக்ரஹ விவரணம் –

————-

ரூபம்:
ஸ்வாபி⁴மதாநுரூப ஏகரூப * அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய நிரவத்³ய* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய
ஸௌந்த³ர்ய ஸௌக³ந்த்⁴ய * ஸௌகுமார்ய லாவண்ய * யௌவநாத்³யநந்தகு³ணநிதி⁴ * தி³வ்யரூப!

ஸ்வாபி⁴மத-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் அபிமதமாய்
அநுரூப –ஏற்றதாய்
ஏகரூப * –ஷட் பாவ விகாரங்கள் ஒன்றும் இன்றிக்கே இருப்பதாய்
அசிந்த்ய –ப்ராக்ருத வஸ்து சஜாதீயமாக நினைக்கக் கூடாததாய்
தி³வ்ய-அப்ராக்ருதமாய்
அ த்³பு⁴த -க்ஷணம் தோறும் அபூர்வமாய் இருப்பதாய்
நித்ய -ஸ்வரூப குணங்கள் போலே அநாதி நிதநமாய்
நிரவத்³ய* –துர் பலத்வம் முதலான அவத்யங்கள் இன்றிக்கே இருப்பதாய்
அன்றிக்கே
நித்ய நிரவத்ய -என்று ஒரே சொல்லாக்கி எப்போதும் நிரவத்யமாய் இருப்பதாய்
அதாவது என்றும் ஓக்க ஸ்வார்த்தமாய் இராது ஒழிகை
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் -என்றபடி எஞ்ஞான்றும் அடியார்களுக்காகவே இருக்கை
நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய-இதற்கு மேற்பட்டது இல்லை என்னும்படியாய் புகரை யுடைத்தாய்
ஸௌந்த³ர்ய ஸௌக³ந்த்⁴ய * ஸௌகுமார்ய லாவண்ய * யௌவநாத்³யநந்தகு³ணநிதி⁴ * தி³வ்யரூப!–அவயவ சோபை யாகிற ஸுந்தர்யம் என்ன
திவ்ய பரிமள ப்ரசுரமாய் இருக்கை என்ன
பிராட்டிமாரும் உறைக்க பார்க்க ஒண்ணாத படியான ஸூ குமாரத் தன்மை என்ன
ஸமுதாய சோபை யாகிற லாவண்யம் என்ன
எப்போதும் இளமை மாறாமல் இருக்கும் யவ்வனம் என்ன
இவை முதலான அபரிமித குணங்களுக்கு கொள்கலமாய் இருப்பதான
திவ்ய ரூப -திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்
கீழேயும் -அசிந்த்ய திவ்ய அத்புத –திவ்ய பத பிரயோகம் புநர் யுக்தி தோஷம் அன்று
எத்தனை தடவை சொன்னாலும் பர்யாப்தி பிறவாது அன்றோ
இவ்வளவும் திவ்ய மங்கள விக்ரஹம் விவரித்து
மேல் திவ்ய ஆத்ம குணங்களை விவரித்தது அருள்கிறார்

————-

திவ்யாத்ம கு₃ணங்கள்:
ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய * ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்ஸௌஶீல்ய
வாத்ஸல்ய* மார்த³வ ஆர்ஜவ * ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய * மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய *
சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம * ஸத்யகாம ஸத்யஸங்கல்ப *
க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³யஸங்க்²யேயகல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவ !

ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய * -இந்த இரண்டு விசேஷணங்களும் மேல் உள்ள அனைத்து குணங்களிலும் அந்வயிக்கும்
ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கும்
ஷாட் குண்யம் முதலிய ஸமஸ்த கல்யாண குண ஸமூஹங்களுக்கு கடல் போன்றவை
நீருக்கு குளிர்ச்சி போலவும் நெருப்புக்கு உஷ்ணம் போலவும் தர்மி உள்ள போதே இருக்கும் தர்மம் போல் இருப்பதையே ஸ்வா பாவிகமாய் இருப்பவை –
ஒரு நாளில் உண்டாகி மற்ற நாளில் இல்லாதவை போல் அன்றியே யவாதாத்ம பாவியாய் இருக்கை
இத்தால் நித்யர் முக்தர்களின் குணங்களில் நின்றும் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –
அவர்களுக்கு எம்பெருமான் இச்சையால் உண்டானதாய் இருக்கும் அன்றோ
அந வதிக அதிசயமானது -ஒவ்வொரு குணமும் எல்லை காண ஒண்ணாத படி இருக்கை –
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்ஸுக்கள் -மற்ற குணங்களுக்கும் ஊற்றுவாயாக இருக்கும்
ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்
ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்
ஞானமாவது -எல்லாவற்றையும் ஒரு காலே உள்ளபடி எப்போதும் அறிகை
பலமாவது -ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸமஸ்த பதார்த்தங்களையும் -ஸ்ரமம் இன்றி தரிக்கை யாகும் ஆற்றல்
ஐஸ்வர்யமாவது -ஸகல வஸ்துக்களையும் ஸமஸ்த சேதனர்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்
வீர்யமாவது -உபாதான காரியமாக ஸமஸ்த ஜகத்துக்கும் இருந்தாலும் தான் ஸ்வரூப விகாரம் அடையாமல் இருக்கை
சக்தியானது -அகடி கடநா ஸாமர்த்யம்
தேஜஸ்ஸாவது -எதற்கும் ஸஹ காரி அபேக்ஷை இல்லாமல் இருக்கை
மேல் இவற்றில் இருந்தும் தோன்றும் குணங்களை விவரித்து அருள்கிறார்
ஸௌஶீல்யம் ஆவது புரை யறக் கலக்கும் சீல குணம்
வாத்ஸல்யம் * ஆவது -ஆண்டு ஈன்ற கன்றின் அழுக்கை உய்க்கும் பசு போல் அடியார்களின் தோஷங்களையே போக்யமாகக் கொள்ளுகை
மார்த³வம் ஆவது -ஆஸ்ரிதர் விரஹம் பொறுக்க மாட்டாத மென்மை
ஆர்ஜவ *மாவது – கர்ணத்திரயத்தாலும் செவ்வியனாக -ருஜு வாக இருக்கை -இதற்கு எதிர்தன்மை கௌடில்யம்
ஸௌஹார்த³ மாவது -எப்போதும் பிறரது நன்மைகளையே சிந்தித்து இருக்கை
ஸாம்ய மாவது ஜாதி குண வ்ருத்தாதிகளில் தார தம்யம் பாராமல் ஆஸ்ரயிக்கத் தக்க படி இருக்கை-

காருண்ய * மாவது -துக்கித்தவர்களை நோக்கி ஐயோ என்று இரங்குகை
மாது⁴ர்ய மாவது -கொல்ல நினைக்கும் கொடிய நெஞ்சுடையாருக்கும் இனியனாய் இருக்கை
கா³ம்பீ⁴ர்ய மாவது -ஆஸ்ரிதர்களுக்கு செய்ய நினைக்குமவற்றை யாராலும் கணிசிக்க முடியாத ஆழ்ந்த திரு உள்ளம் உடையனாய் இருக்கை
ஔதா³ர்ய *மாவது -கைம்மாறு கருதாதே கொள்ளக் கொள்ளக் குறையாதே வேண்டிற்று எல்லாம் அருளும் கோதிலா மணி வண்ணனாய் இருக்கை
சாதுர்ய மாவது -ப்ரதிகூலரையும் அநுகூலரராக்கும் சதிர்
ஸ்தை²ர்ய மாவது -அடியார்களை ஒருக்காலும் கைவிட மாட்டாத உறுதி
தை⁴ர்ய மாவது -பிரதிபக்ஷம் பிரபலமாய் இருந்தாலும் த்ருணீ கரித்து இருக்கை
ஶௌர்ய மாவது -பிரபல எதிரிகளின் திரள்களிலும் துணையின்றி துணிந்து புகும் ஆற்றல்
பராக்ரம * -அவ்வாறு புகுந்த இடத்தில் அவலீலையாக எதிரிகளைப் பங்கப்படுத்தும் ஆற்றல்
ஸத்யகாம ஸத்யஸங்கல்ப *-இவ்விடத்தில் இவை இரண்டும் பாவ ப்ரதான நிர்தேசமாகையாலே ஸத்ய காமத்வமும் ஸத்ய ஸங்கல்பத்துவமும் என்று கொண்டு
ஸத்ய காமத்வமாவது -விரும்பப்படுவை எல்லாம் குறைவற்று ஸித்தித்து இருக்கை
ஸத்ய ஸங்கல்பத்துவமாவது -எது செய்ய நினைத்தாலும் தடையின்று செய்த் தலைக்கட்டும் ஆற்றல்
க்ருʼதித்வ மாவது -அடியார்களுக்கு செய்து கொண்டே இருக்கை
க்ருʼதஜ்ஞதாத்³மாவது -அடியார்கள் சிறிது நன்மை செய்தாலும் அத்தை ஒருகாலும் மறவாது இருக்கை

ஆக இவை முதலான
யஸங்க்²யேயகல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவ !–எண்ணித் தலைக்கட்ட முடியாத கல்யாண குண ராசிகளாகிற ப்ரவாஹங்களுக்கு கடல் போன்றவனே

இது வரை திருக் கல்யாண குணங்களை பேசி
மேல் திவ்ய பூஷணங்களை விவரித்து அருள்கிறார் –

————–

ஸ்வரூப
ரூப விவரணங்களுக்கு
அநந்தரம்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு அலங்காரமான திவ்ய கல்யாண குணங்களை பேசிய
அநந்தரம்
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய பூஷணங்களைப் பேசுகிறார்

தி₃வ்ய பூ₄ஷணங்கள்:
ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ
* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

ஸ்வோசித-தனக்குத் தகுந்தவையாய்
விவித⁴விசித்ர-பலவகைப்பட்ட வைச்சித்திரியை யுடையனவையாய்
அநந்த * –அபரிமிதங்களாய்
ஆஶ்சர்ய –விஸ்மய நீயங்களாய்
நித்ய –சாஸ்வதங்களாய்
நிரவத்³ய * –ஒரு வகையான தோஷ சம்பந்தமும் இல்லாதவையாய்
நித்ய நிரவத்ய -ஒரே முழுச் சொல்லாக்கி எப்போதும் நிரவத்யங்களாய் என்றுமாம் –
நிரதிஶய ஸுக³ந்த⁴ -ஒப்புயர்வற்ற பரிமாணத்தை யுடையவையாய்
நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ–ஒருக்காலும் கழற்ற வேண்டாதபடி ஒப்பற்ற ஸுகுமார்யம் யுடையனயவையாய் இருக்கை

  • நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * –ஒப்புயர்வற்ற புகரை யுடையவையாய் –
    கிரீட மகுட சூடா³வதம்ஸ * –கிரீடம் மகுடம் சூடாவதம்சம் இவை மூன்றும் பர்யாயமாகத் தோன்றினாலும் -அவாந்தர பேதங்களை இட்டுத் தனித்தனியாக வ்யவஹரித்த படி
    கொண்டை -தொப்பாரம் -துராய் -என்னுமா போல்
    பாரளந்த பேரரசே –எம் விசும்பரசே-எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
    ஸுலப்ய பரத்வ பிரணயித்வங்களுக்கு –மூன்று முடிக்கு உரிய இளவரசனுக்கு மூன்று ஸாம்ராஜ்ய பட்டங்கள்
    மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனும் இங்கு மூன்றும் தனித்தனியே வ்யவஹரித்து அருளிச் செய்கிறார்
    சூடாவதம்ஸ -முழுச் சொல்லாகவும்
    சூட -அவதம்ஸ -என்று கொண்டு க்ரமேண சுட்டியையும் கர்ண ஆபரணத்தையும் சொன்னவாறு என்றுமாம்
    மகரகுண்ட³ல –மகர வடிவமான தோடுகள்
    க்³ரைவேயக * –திருக்கழுத்துக்கு பூஷணம்
    ஹார -திரு மார்பில் அணியும் முத்து வடங்கள்
    கேயூர –தோள் வளைகள்
    கடக-முன் திருக்கையில் சாத்தும் வளையல்கள்
  • ஶ்ரீவத்ஸ -இது கீழ்ச் சொன்ன ஆபரணங்கள் போல் அல்லாமல் மயிர்ச்சுழியே யானாலும் பூஷணம் போல் இருக்கும் திரு மறு
  • கௌஸ்துப⁴ -திரு மார்பிலே குலாவித் திகழும் குரு மா மணிப்பூண்
  • முக்தாதா³ம * -ஏகா வளி த்ரி சரம் பஞ்ச சரம் -என்னப்படுகிற முக்தாஹாரங்கள்
  • உத³ரப³ந்த⁴ந * -திரு வயிற்றுப பட்டம்
  • பீதாம்ப³ர -புருஷோத்த லக்ஷணமான பீதக வாடை
  • உத³ரப³ந்த⁴ந * -திரு வயிற்றுப பட்டம்
  • காஞ்சீகு³ண -அந்தப் பீதக வாடையின் மேல் அணியும் அரை நூல் பட்டிகை
  • நூபுர-திருவடிச் சிலம்பு
  • ஆதி -ஸப்தத்தாலே யஜ்ஜோ பவீதம் கணை யாழி மோதிரம் போல்வன
  • யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *–இப்படிப்பட்ட அபரிமித தீய பாஷாணங்களை யுடையவனே
  • செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
    தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
    மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
    எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-

————–

தி₃வ்யாயுதங்கள்:
ஸ்வாநுரூப * அசிந்த்ய ஶக்தி ஶங்க² சக்ர க³தா³[ऽஸி] ஶார்ங்கா³த்³யஸங்க்²யேய
* நித்ய நிரவத்³ய * நிரதிஶய கல்யாண * தி³வ்யாயுத⁴!

ஸ்வாநுரூப * –தனக்குத் தகுந்தவையாய்
அசிந்த்ய ஶக்தி –நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாத சக்தியை யுடைய
ஶங்க² சக்ர க³தா³[ऽஸி] ஶார்ங்கா³தி -சங்கு சக்கரம் கதை வில் முதலிய
அஸி -என்பதையும் கூட்டி பாட பேதம் -அது இல்லாத பாடமே நம்பிள்ளை திரு உள்ளம்
யஸங்க்²யேய-எண்ண முடியாதவையாய்

  • நித்ய நிரவத்³ய * -நாள் செல்லச்செல்ல மழுங்குகை அன்றிக்கே -என்றும் ஒருபடிப் பட்டவையாய்
    நிரதிஶய கல்யாண * -ஒப்பற்ற ஸோபா வஹங்களாயும் இருக்கிற
    தி³வ்யாயுத⁴!–திவ்ய ஆயுதங்களை யுடையவனே

————–

தி₃வ்யமஹிஷிகள்:
ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!

ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண
ஸ்ரீ பெரிய பிராய்யியாரைப் பற்றிய முதல் சூர்ணிகையில் அருளிச் செய்த விசேஷணங்களே இங்கும் உள்ளன
இவர் தாம் பிறருக்கு உபதேசிக்கிறார் அன்றியிலே அனுபவிக்கிறாராகையாலே ஆதார அதிசயத்தால் என்பதால் புநர் யுக்தி தோக்ஷம் இல்லை
அதவா
அங்கு சரண்யத்தைக்கு உறுப்பாக அருளிச் செய்தார்
இங்கு வால்லபயத்துக்கு உறுப்பாக அருளிச் செய்கிறார்
ஸ்வ அபிமதங்களாயும்
நித்ய நிரவத்யங்களாயும்
அநு ரூபங்களாயும் இருக்கிற
ஸ்வரூப
ரூப
கு³ண
விப⁴வ
ஐஶ்வர்ய *
ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண -ஸமூஹங்களை யுடைய
ஶ்ரீவல்லப⁴! * பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவனே
ஶ்ரீவல்லப⁴! * -ஸ்ரீ க்கு வல்லபன் என்றும் ஸ்ரீ யை வல்லபையாய் யுடையவன் என்றுமாம்
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்றும்
அவள் சொல்லை மறுக்க மாட்டாதே அவளுக்கு விதேயனாய் இருப்பவன் என்றுமாம்
ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!–கீழ்ச் சொன்ன விசேஷணங்களை எல்லாம் ஏவம் பூத என்று சொல்லி -பெரிய பிராட்டியாருக்குச் சொன்ன பெருமைகள் எல்லாம்
பூமா தேவிக்கும் நீளா தேவிக்கும் சமானம் என்றவாறு
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவின் நிழல் போல்வனர் -திரு விருத்தம்

———–

நித்ய போ₄க்தாக்கள்:
ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண
* ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!

கீழ்ச் சின்ன சேர்த்திகள் எல்லாம் காட்டில் எரிந்த நிலா வாகாமல் நித்ய போக்தாக்கள் இருக்கும்படி சொல்கிறது மேல்
அபரிமித நித்யா முக்த பரிசாரி கள் நித்ய கைங்கர்யம் பண்ணும்படி உள்ளவனே
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்னில்
ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³–தன்னுடைய திரு உள்ளத்தை அநுசரித்த
ஸ்வரூப
ஸ்திதி
ப்ரவ்ருத்திகளை –யுடையவர்களாயும்
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப–ஸகல வித கைங்கர்யங்களையும் செய்ய ஆசைப்பட்டு இருக்கையே வடிவாக யுடையவர்களாயும்

  • நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண–எக்காலும் வழுவற்று ஒப்புயர் வற்றவையான
    ஞானம்
    வியாபாரம்
    நியமனம் முதலான
    அநந்த கல்யாண குண ஸமூஹங்களை யுடையவர்களுமாய் இருப்பவர்கள்
    நித்ய நிரவத்ய -என்பதை * ஶேஷ ஶேஷாஶநாதி களுக்கு விசேஷணமாகக் கொண்டு
    நான்கு விசேஷணங்கள் சேஷ சேஷாஸ நாதிகளுக்கு ஆக்கி
    ஸ்வாதீன ஸ்வார்த்த கைங்கர்யம் செய்கையாகிற அவத்யம் இல்லாதவர்கள் என்றதாயிற்று
    நித்ய நிரவத்யத்தை ஞானாதிகளுக்கும் விசேஷணம் ஆகவுமாம்
    அடிமைக்கு உறுப்பான அசங்குசிதமான ஞானம் என்ன –
    கிரியா -அந்த ஞானத்துக்குத் தக்க செய்கை என்ன
    ஐஸ்வர்யம் -பிறரை நியமிக்கும் அதிகாரம் என்ன
    இவை முதலான கல்யாண குணங்களை யுடையவர்கள் என்கை
    சேஷா ஸநர் -சேனை முதலியாருக்குத் திருநாமம்
    த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா –ப்ரியேண ஸேநாபதிநா –ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி
    பரிசாரிகா -அநுக்ரஹா -விமலா -காந்தி -வாருணீ -ஸூ கீர்த்தி -ருத்ரா –ஸூத்ரவதி முதலானரை பரிசாரிகர் என்பர்
    லீலா லதா க்ருபாணீ -என்றும் முகிளித நளிநா –ரெங்கராஜ ஸ்தவம்
    மதி முக மடந்தையர் போல்வார்

————

இருப்பிடம்:
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வ ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த
போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ * அநந்தாஶ்சர்யாநந்த * மஹாவிப⁴வாநந்த பரிமாண
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !

இவற்றை ஒரே வாக்யமாகக் கொள்வதே ஸர்வ ஆச்சார்ய ஸம்மதம்
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வ -என்று தனி வாக்யமாக-ஸம்வாத ரூபமாகக் கொண்டு
மேல்
ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த
போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ * அநந்தாஶ்சர்யாநந்த * மஹாவிப⁴வாநந்த பரிமாண நித்ய நிரவத்³ய நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !
என்று சொல்வாரும் உண்டு என்பாரும் உளர் என்று தேசிகர் பாஷ்யத்தில் உண்டு என்று ஸ்ருத ப்ரகாசாச்சார்யார் வியாக்யானத்தில் உண்டு
அவரே மேல் ஏக வாக்யமாகக் கொள்வதே சிறக்கும் என்கிறார்

பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வமாயும்
ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ ராயும்
அநந்தாஶ்சர்யமாயும்
அநந்த * மஹாவிப⁴வமாயும்
அநந்த பரிமாணமாயும்

  • நித்யமாயும்
    நிரவத்³ய மாயும்
    அல்லது
    நித்ய நிரவத்³ய மாயும்
    நிரதிஶய மாயுமாய் இருக்கிற
    ஶ்ரீவைகுண்ட²நாத² !னானவனே –
  • பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வமாயும்-திவ்ய புருஷைர் மஹாத்மாபிர் அபூரிதே தேஷாம் அபி இயத் பரிமாணம் இயத் ஐஸ்வர்யம் ஈத்ருஸ ஸ்வபாவம் இதி பரிச்சேதும் அயோக்ய -ஸ்ரீ வைகுண்ட கத்ய ஸ்ரீ ஸூக்திகள் கொண்டு முதல் விசேஷணம் இங்கு
  • பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாஷாத்காரித்தவர்களாய் -ஸ்வேத தீப வாசிகளான பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்ரீ வைகுண்டம்
  • ஸூத்த ஸத்வ மய மாய் இருப்பது ஸ்வரூபம்
  • போக்ய தமமாய் இருப்பது ஸ்வ பாவம்
  • இவை இரண்டும் பரம யோகிகளுக்கும் சொல்லவும் ஒண்ணாதே நெஞ்சினால் நினைக்கவும் ஒண்ணாதே இருக்கும்
  • ஸ்வாபி⁴மத * –தனக்கு அபிமதங்களாயும்
  • விவித⁴ -விசித்ராநந்த–பலவகைப் பட்டவையாயும் -அத்புதங்களாயும் -அபரிமிதங்களாயும் இருக்கிற
  • போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ -போக்ய வஸ்துக்கள் என்ன
  • போக உபகரணங்கள் என்ன
  • போக ஸ்தானங்கள் என்ன
  • இவை நிரம்பப் பெற்றது ஸ்ரீ வைகுண்டம் –
  • அப்ராக்ருதங்களான ஸப்தாதி விஷயங்கள் -போக்ய
  • வஸ்துக்கள்
  • சூட்டு நன் மாலைகள் போல்வனவும் -பரிஜன பரிச்சதங்களும் போக உபகரணங்கள்
  • அப்ராக்ருத ரத்ன மண்டபங்கள் -கிரீடா பர்வதங்கள் போல்வன போக ஸ்தானங்கள்
  • இவை அனைத்தும் ஸம்ருத்தமாக பெற்று இருக்கும் என்றதாயிற்று
  • *அநந்தாஶ்சர்ய-நித்யமும் அபூர்வ வஸ்து போலே அனுபவிக்கக் கூடியதாய் இருக்கையாலே அளவிறந்த ஆச்சர்யமாய் இருக்கும்
  • அநந்த * மஹாவிப⁴வ-ரத்ன பூஷண ஸிம்ஹாஸ நாதிகளும் -உத்யான நதீ தடா காதிகளும் அளவிறந்து இருக்கையாலே அநந்தமான மஹா விபவங்களை யுடையதாய் இருக்கும்
  • அநந்த பரிமாண-ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்து இருக்கும்
  • நித்ய நிரவத்³ய -அநித்யமாயும் அவத்யங்களுடன் கூடி இருக்கும் ஸ்தானங்களைக் காட்டில் வாசி பெற்று இருக்கும்
    நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !-ஆக கீழ்ச் சொன்ன படியால் தனக்கு மேம்பட்ட ஸ்தானம் வேறே ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கும்
    இப்படிப்பட்ட ஸ்ரீ வைகுண்ட லோகத்துக்கு நாதனானவனே -என்றபடி

—————-

ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை லீலையாக வுடையவன்:
ஸ்வஸங்கல்பாநுவிதா⁴யி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி * ஸ்வஶேஷதைக ஸ்வபா⁴வ ப்ரக்ருʼதி புருஷ
காலாத்மக விவித⁴ விசித்ராநந்த * போ⁴க்³ய போ⁴க்த்ருʼவர்க³ போ⁴கோ³பகரண * போ⁴க³ஸ்தா²ந ரூப
* நிகி²ல ஜக³து³த³ய விப⁴வ லய லீல !

ஜகத்தாக இருக்கும் மூன்றும்
ப்ரக்ருதி
புருஷ
காலங்களுக்கு
விசேஷணங்களாக
ஸ்வ ஸங்கல்ப அநு விதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள்

தனக்கு சேஷப்பட்டதே இயல்பாக யுடையவை
இவற்றில் புருஷன் -சேதனன் -போக்தா
ப்ரக்ருதியைச் சொன்னது -ப்ராக்ருத வஸ்துக்களும் உப லக்ஷணம் -இவை
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய் இருக்கும்
இந்த ஜகத்து கால கல்யம் என்று காட்டகாலத்தையம் சேர்த்த அருளிச் செய்கிறார்
இவை விவிதமாயும் -பலவகைப்படும்
விசித்ரமாகவும்
அநந்த -அபரிமிதமாகவும் -இருக்குமே
சகல லோகங்களுடைய
ஸ்ருஷ்டி
ஸ்திதி
சம்ஹாரங்களை –விளையாட்டாக யுடையவன்

————
ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! பரப்³ரஹ்மபூ⁴த! புருஷோத்தம! மஹாவிபூ⁴தே! ஶ்ரீமந்! நாராயண! வைகுண்ட²நாத²!

ஸத்யகாம! –நினைக்குமது எல்லாம் நிறைவேற்று இருக்கப் பெற்று இருப்பவனே
ஸத்யஸங்கல்ப! -ஸங்கல்பத்த படி எல்லாம் செய்து தலைக் கட்ட வல்லவனே
பரப்³ரஹ்மபூ⁴த!
புருஷோத்தம!
மஹாவிபூ⁴தே! -அளவு கடந்த நியாம்ய வஸ்துக்களை யுடையவனே
ஶ்ரீமந்!
நாராயண!
வைகுண்ட²நாத²!
இந்த எட்டு விசேஷணங்களும் கீழேயும் இருந்தாலும் இவருடைய அலமாப்பு அதிசயத்தால் புநர் யுக்தி தோஷம் அல்ல –

————
அபாரகாருண்ய ஸௌஶீல்ய வாத்ஸல்ய ஔதா³ர்ய * ஐஶ்வர்ய ஸௌந்த³ர்ய மஹோத³தே⁴!

அபாரகாருண்ய
ஸௌஶீல்ய
வாத்ஸல்ய
ஔதா³ர்ய *
ஐஶ்வர்ய
ஸௌந்த³ர்ய
மஹோத³தே⁴!
இந்த கல்யாண திருக் குணங்களுக்குப் பெரும் கடலாக இருப்பவனே
இங்கு ஐஸ்வர்யத்தைச் சேர்த்து அருளிச் செய்தது-இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -என்று ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டியே

———-
* அநாலோசிதவிஶேஷ அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்திஹர! * ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே⁴!
அநவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத * யாதா²த்ம்ய! அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமந நிரத! * அஶேஷசித³சித்³வஸ்து ஶேஷிபூ⁴த!
* நிகி²ல ஜக³தா³தா⁴ர! * அகி²லஜக³த்ஸ்வாமிந்! * அஸ்மத்ஸ்வாமிந்! * ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! * ஸகலேதரவிலக்ஷண!
* அர்தி²கல்பக! * ஆபத்ஸக²! * ஶ்ரீமந்! * நாராயண! * அஶரண்யஶரண்ய! * அநந்யஶரண:
* த்வத்பாதா³ரவிந்த³யுக³ளம் * ஶரணமஹம் ப்ரபத்³யே ॥

அநாலோசிதவிஶேஷ அஶேஷலோகஶரண்ய! * -ஜன்ம விருத்த ஞானங்களில் வாசி பாராதே -எப்படிப்பட்டவர்களும் வந்து அடி பணியும்படி அவர்களுக்கு எல்லாம் தஞ்சமாய் இருக்குமவனே
ப்ரணதார்திஹர! * –அடி பணிந்தவர்களின் ஆர்த்தகளைத் தீர்க்குமவனே
ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே⁴!-ஆஸ்ரிதர்களின் குற்றங்களை எல்லாம் நற்றமாகக் கொள்ளுகிற குணத்துக்குக் கடலாய் இருப்பவனே
அநவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத * யாதா²த்ம்ய! சகல பதார்த்தங்களின் உண்மை நிலையை எப்போதும் அறிபவனே -இத்தால் ஸர்வஞ்ஞத்வம் சொல்லுகிறது -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் போன்ற அடியேனுடைய நிலைமைகளை விண்ணப்பம் செய்ய வேண்டாத படி நீயே ஸ்வயமாகவே அறிந்து கொள்ள வல்லவனே -என்றபடி
அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமந நிரத! * –ஜங்கம
ஸ்தாவரங்களான ஸகல பதார்த்தங்களையும் நியமிக்க வல்லவனே -இப்படி உனது திருவடித் தாமரைகளில் அடியேனை வந்து நிற்கப் பண்ணி அருளியதும் நீயே அன்றோ என்றபடி
அஶேஷசித³சித்³வஸ்து ஶேஷிபூ⁴த!–ஸகல சேதன அசேதனங்களுக்கும் சேஷி யானவனே –
அடியேன் பக்கல் கைங்கர்யம் கொண்டு அருளுவதும் உனது கடமை -பொறுப்பு -பரம் -அன்றோ

  • நிகி²ல ஜக³தா³தா⁴ர! * –ஸகல ஜகத்துக்கும் ஆதரமாய் இருப்பவனே
    அகி²லஜக³த்ஸ்வாமிந்! *
    அஸ்மத்ஸ்வாமிந்! *
    ஸத்யகாம!
    ஸத்யஸங்கல்ப! *
    ஸகலேதரவிலக்ஷண!
  • அர்தி²கல்பக! * -இதற்கு மூன்றுபடியாகச் சொல்லுவர்
    யாசகர்களுக்குக் கல்ப வ்ருக்ஷம் போன்றவனே என்றும்
    ‘யாசகர்களை கல்ப வ்ருக்ஷமாகக் கொள்பவன் என்றும்
    யாசகனாயும் கல்ப வ்ருஷமாயும் இருப்பவனே என்றும்
    மேலும்
    அர்த்திகளை யுண்டாக்குபவன் என்றும் நாலாவது பொருளும் சொல்வர்
    ஆபத்ஸக²! *
    ஶ்ரீமந்! *
    நாராயண! *
    அஶரண்ய ஶரண்ய! *
    அநந்ய ஶரண:
  • த்வத் பாதா³ரவிந்த³யுக³ளம் * ஶரணமஹம் ப்ரபத்³யே ॥–புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் என்கிறார்

————

அத்ர த்³வய(மநுஸந்தே³ய)ம் ।

ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மதே நாராயணாய நம -அனுசந்தேயம்
எம்பெருமானார் துவரம் அனுசந்தித்து அருளியதை அஸ்மதாதிகளுக்கும் சிக்ஷிக்கிற படி
இங்கு உபாம்சுவாக அனுசந்தேயம்

—————

பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥

ஸர்வத⁴ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய * ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் ।
லோகவிக்ராந்த சரணௌ * ஶரணம் தேঽவ்ரஜம் விபோ⁴!” ॥

இவை இரண்டும் புராண ஸ்லோகங்கள்
முன்னோர் மொழிந்த பொருளே அன்றி மொழியும் பொன் போல் போற்றத்தக்கது வாதலாலும்
இவை எம்பெருமான் திரு உள்ளத்தில் அக்ரஹ அதிசயத்தை விளைவிக்குமதலாலும்
இங்கே விண்ணப்பம் செய்து அருளுகிறார்
இவற்றால் மீண்டும் சரணாகதி செய்கிறார் என்று கொள்ளத்தக்கது அல்ல
ஸக்ருத் ஏவ ஹி ஸாஸ்த்ரார்த்த -யாகையால் புநர் யுக்திக்கு ப்ரஸக்தி இல்லை-

விபோ -எம்பெருமானே
பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।-பிதாவையும் மாதாவையும் மனைவியையும் மக்களையும் சுற்றத்தாரையும் தோழன்மாரையும் ஆச்சார்யர்களையும்
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥–ரத்னங்களையும் தந தானியங்கள் முதலானவையையும் கிராம பூமியையும் வீடுகளையும்

ஸர்வத⁴ர்மாம்ஶ்ச –ஸர்வ தர்மங்களையும்
ஸாக்ஷராந் ।ஸர்வ காமம் ச –கைவல்யம் உள்ளிட்ட ஸகல காம்ய புருஷார்த்தங்களையும்
ஸ்வர்க்க லோக அதிபத்யம் -ப்ரஹ்மலோக அதிபதியம் போன்றவற்றிலும் ஆசை அற்ற படி
ஸந்த்யஜ்ய * -வாஸனையோடே முழுவதுமாக விட்டு ஒழித்து
தே லோக விக்ராந்த சரணௌ * ஶரணம் அவ்ரஜம் –உனது உலகு அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றபடி –

இங்கு தாய் தந்தையரையும் ஆச்சார்யரையும் விட்டு ஒழிந்ததாகச் சொல்வது ஸாஸ்த்ர விரோதமாகாதோ என்னில்
இவர்களை விட்டு ஒழிவது விரோதப்பட்டுத் தள்ளுகை அன்று
காம்ய தர்ம உபயோகியாகவோ
அர்த்த காம உபயோகியாகவோ
இவர்களைக் கொள்ளாததுவே த்யாஜ்யம் எனப்படுகிறது இங்கு
வீடு தானம் தான்யம் போன்றவை சன்யாசிகளுக்கும் தேஹ யாத்திரைக்கு வேண்டுமே என்னில்
இங்கு சொல்வது ஸர்வாத்மநா தியாகம் அன்று
கொண்ட பெண்டிர் தாம் முதலாகக் கூறுமுற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டுத் -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான்
ஆர்க்கும் ஹிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு -திருவாய் மொழி நூற்றந்தாதி -81-
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே
என்று அருளிச் செய்வதால்
த்யாஜ்யமாகைக்கு நிபந்தநம் வேறு
உபா தேயமாகைக்கு நிபந்தநம் வேறு என்றதாயிற்று

ஆச்சார்ய சம்பந்தமே முக்திக்கு முதல் தனி வித்தாய் இருக்க -அந்த சம்பந்தத்தையும் குலைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் என்பதற்கு ப்ரஸக்தியே இல்லை
மாதாபிதாக்களையும் ஆச்சார்யரையும் பகவத் விபூதி பரமாகவே கருதுகிறேன் என்பதே பரம தாத்பர்யம் –
இவர்கள் தாமே பகவத் பாகவத விரோதிகளாகில் இவர்களைத் த்யஜித்து பிராப்தமே –

————–

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ * த்வமேவ ப³ந்து⁴ஶ்ச கு³ருஸ்த்வமேவ ।
த்வமேவ வித்³யா த்³ரவிணம் த்வமேவ * த்வமேவ ஸர்வம் மம தே³வதே³வ” ॥
–7-

ஹே தே³வதே³வ” ॥
த்வமேவ மாதா
ச பிதா த்வமேவ *
த்வமேவ ப³ந்து⁴ஶ்ச
கு³ருஸ்த்வமேவ ।
த்வமேவ வித்³யா
த்³ரவிணம் த்வமேவ *
த்வமேவ ஸர்வம் மம —
பல சொல்லி என் –எனக்கு எல்லாமும் நீயே

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் யாவரும் நீ பேசில்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே
பிரிய வர்த்தனாகையாலே தாயாகவும்
ஹித வர்த்தனாகையாலே தந்தையாகவும்
மற்றும் ஸகல வித உபகாரங்களையும் செய்பவனாகையாலே மற்றை எல்லாருமாகவும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும் மற்றை நிலைகளை எல்லாம் நீர்மையினாலே அருள் செய்தவனாகையாலே ஆச்சார்யரானாகவும்
இப்படிச் சொல்லக் குறையில்லை
பேயிருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதூடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தம் வயிற்று இருத்தி உய்யக் கொண்டான் அன்றோ

த்வமேவ வித்யா -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் என்று இருக்கும் அகிஞ்சனர்கள் உபாஸந ரூப வித்யா ஸ்தானத்தில் எம்பெருமானையே நிறுத்துவார்கள் அன்றோ

த்ரவிணம் த்வமே –உபாய உபேயங்கள் இரண்டுமே நீயே என்று காட்டின படி -உலகில் த்ரவ்யங்களைக் காரியாந்தரங்களுக்கு சாதனமாகவும் ஸ்வயம் போக்யமாகவும் கொள்வது ப்ரத்யக்ஷமே –
அது எம்பெருமானுக்கு ஒக்குமே

————

“பிதாঽஸி லோகஸ்ய சராசரஸ்ய * த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர்க³ரீயாந் ।
ந த்வத்ஸமோঽஸ்த்யப்⁴யதி⁴க: குதோঽந்யோ * லோகத்ரயேঽப்ய ப்ரதிமப்ரபா⁴வ!” ॥’–8-

கீழ் தாம் ஒருவருக்கே மாதா பிதாவாக அருளிச் செய்தார்
அந்த உறவு ஸர்வ லோக அசாதாரணமாகையாலே -முத் தெரிவிக்கும் ஸ்ரீ கீதா -11-43 ஸ்லோகமும்
அடுத்த ஸ்லோகமும் இங்கு அனுசந்திக்கிறார்

ய ப்ரதிமப்ரபா⁴வ!” ॥’–ஒப்பில்லா பெருமை பெற்ற மாயோனே
“பிதாঽஸி லோகஸ்ய சராசரஸ்ய * த்வம் –ஸ்தாவர ஜங்கமாத்மகமான இவ் உலகுக்கு எல்லாம் தந்தையாய் இரா நின்றாய்
அஸ்ய லோகஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர் க³ரீயாந் ।
ச அஸி — இவ் வுலகுக்கு பூஜிக்கத் தகுந்த ஆச்சார்யனாகவும் இரா நின்றாய்
ஆகையால் இவ் வுலகுக்கு எல்லாம் பூஜ்ய தமனாய் இரா நின்றாய்
லோகத்ரயேঽப் ந த்வத் ஸம அந்ய நாஸ்தி –காருண்யாதி கல்யாண குணங்களினால் உன்னை ஒத்தவன் மூவுலகிலும் இல்லை
யப்⁴யதி⁴க: குத அபி -சமானன் இல்லை என்னும் போது மேற்பட்டவன் இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
தன் ஒப்பார் இல்லா -ஒப்பில்லா அப்பன் அன்றோ

த்வத் ஸம நாஸ்தி என்னாமல்
த்வத் ஸந அந்ய நாஸ்தி என்கையாலே
உனக்கு ஒப்பவன் நீயே என்றதாகும்
தன் ஓப்பான் தானாய் உளன் காண் -திருமழிசைப்பிரான்
ககநம் ககநாகாரம் ஸாகரஸ் சாகர உபம ராம ராவண் யோர் யுத்தம் ராம ராவணயோர் இவ –இத்யாதிகளும் உண்டே –

—————-

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் * ப்ரஸாத³யே த்வாமஹமீஶமீட்³யம் ।
பிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு: * ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே³வ! ஸோடு⁴ம்” ॥
–9-

தஸ்மாத் -கீழ் ஸ்லோகத்தில் சொல்லியபடி ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கையாலே
அஹம் -குற்றங்களையே ஸ்வரூபமாக வடிவாக உள்ள அடியேன்
த்வாம் ஈஶம் ஈட்³யம் ।–ஸர்வ நியந்தவாயும் -ஸ்தோத்ர அர்ஹனாயும் இருக்கிற உன்னை
ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் * -வேர் அற்ற மரம் போலே உடலைக் கீழே இட்டுத் தொழுது
ப்ரஸாத³யே –க்ஷமை வேண்டுகின்றேன்
தே³வ!-பெருமானே
பிதேவ புத்ரஸ்ய (தோஷம் )–மகனுடைய குற்றங்களை பிதா பொறுப்பது போலவும்
ஸகே²வ ஸக்²யு: * (தோஷம் )-மித்ரனுடைய பாராதத்தை மித்ரன் பொறுப்பது போலவும்
ப்ரியாயா மஹ்யம் -நண்பனான அடியேன் பொருட்டு
ப்ரிய: (தவம் )அர்ஹஸி ஸோடு⁴ம்”–அன்பனான அடியேனுடைய அபராதங்களைப் பொறுக்க வல்லை
ப்ரிய ப்ரியாய அர்ஹஸி -என்று கொண்டு -காதலியினுடைய குற்றங்களைக் காதலன் பொறுப்பது போலவும் என்றும் கொள்ளலாம்

————-

அபசாரஙளைப் பொறுக்குமாறு வேண்டுவது:
மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥-10-

மநோவாக்காயைঃ * -மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும்
அநாதி³கால ப்ரவ்ருʼத்த -அடி தெரியாத நெடுநாள் முன்னாக விளைந்த
அநந்த-அளவிறந்த
அக்ருʼத்ய கரண–செய்யத் தகாதவற்றைச் செய்தும்
க்ருʼத்ய அகரண–செய்யத்தக்கவற்றைச் செய்யாது ஒழிந்தும்
ப⁴க³வத³பசார -எம்பெருமான் இடத்தில் அபசாரப்பட்டும்
பா⁴க³வதாபசார-பகவத் அடியார்கள் டத்தில் அபசாரப்பட்டும்
அஸஹ்யாபசார -பொறுக்க முடியாத படி அபசாரப் படுகையும்
ரூப * -இங்கனே யுள்ள
நாநாவித⁴ * அநந்த அபசாராந் * –பலவகைப்பட்ட -அபரிமிதங்களான குற்றங்களை

இதற்கு -அசேஷத க்ஷமஸ்வ -என்பதில் அந்வயம்-அஶேஷத: க்ஷமஸ்வ
அசேஷத –அணுவளவும் மிச்சம் இல்லாதபடி
க்ஷமஸ்வ–பொறுத்து அருள வேண்டும்

இவ் வபசாரங்கள் எப்படிப்பட்டவை என்னில்
ஆரப்³த⁴கார்யாந், * -இன்னமும் பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தவையாய் இருக்கும் அபசாரங்கள்
அநாரப்³த⁴கார்யாந்,-இன்னம் பலன் கொடுக்க ஆரம்பிக்காதவையாய் இருக்கும் அபசாரங்கள்

  • க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச –இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் -த்ரிகால வ்யாபிகளாய் இருக்கும் அபசாரங்கள்
    இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
    ஸர்வாந் * -மநோ வாக் காய அபசாரங்கள் பிரஸித்தமாய் இருக்க
    இவற்றை இங்கு அருளிச் செய்தது
    எம்பெருமானைச் சிந்திக்கவே அமைந்த மனஸ்ஸையும்
    அவனை ஸ்துதிப்பதற்காகவே அமைந்த வாக்கையும்
    அவனுக்குப் பலவித பணிவிடைகள் செய்வதற்காகவே அமைந்த தலையம் கொண்டு
    அந்தோ வ்யபசரிக்கலாயிற்றே என்று நிர்வேதம் தோன்ற அருளிச் செய்கிறார்
    இக்குற்றங்களும் அநாதிகாலம் செயகாவை அன்றோ
    ஸம்ஸாரம் ஆனாது தானே
    பஹுநி மீ வ்யதீதாநி ஜன்மாநி தவ ச அர்ஜுனா
    அநாதி யாவதாலேயே அனந்தங்களாய் இருக்குமே

மேலே அவற்றை வகையிட்டுப் பிரித்து அருளிச் செய்கிறார்
அக்ருத்ய கரண -ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாந் போன்ற விதிகளை அதிக்ரமித்து பண்ணுகிற பிராணி பீடை
-அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை
பிறர் பொருள் தாரம் இவற்றை அபஹரிக்கை
அஸத்யம் சொல்லுகை
அபஷ்யம் -பஷிக்கத் தகாதவற்றை யதேச்சமாக பஷிக்கை
ஆக இவ்வாறு பலவகைப்பட்டு இருக்கும் அக்ருத்ய கரணங்கள்

க்ருத்ய அகரணமாவது-
ஸாஸ்த்ர விஹிதங்களாகிற வர்ணாஸ்ரம தர்மங்களை சோர்வு சோம்பல்களாலும் நாஸ்திக்யத்தாலும் அனுஷ்டியாது ஒழிகை
பகவத் அபசாரமாவது
தேவதாந்தரங்களோடு ஓக்க எம்பெருமானை நினைக்கையும்
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மானுஷ்ய ஸஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுகையும் -முதலானவை
பாகவத அபசாரமாவது
அஹங்காரத்தாலும்
அர்த்த காமங்கள் அடியாகவும்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம்
அஸஹ்ய அபசாரமாவது
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தநம் இல்லாமல்
ஹிரண்ய கசிபுவைப் போலே
பகவத் விஷயம் பாகவத விஷயம் என்றால்
காணவும் கேட்கவும் பொறாதபடியாய் இருக்கை
ஆச்சார்ய அபராதமும் அஸஹ்ய அபசாரமாய் இருக்கும் -அதாவது
ஆச்சார்யர் அருளிச் செய்த அர்த்தத்தின் படியே அனுஷ்டியாமையும்
அவன் உபதேசித்த அர்த்தங்களையும் மந்திரங்களையும் அல்ப பிரயோஜனங்களுக்காக அநதிகாரிகளுக்கு உபதேசிக்கை முதலானவை
ஆச்சார்ய பக்தரான ஸஹ ப்ரஹ்மசாரிகளுடன் ஐக ரஸமுண்டாய் வர்த்திக்கையாய் இருக்க
அது செய்யாதே அவர்கள் திறத்தில் பண்ணும்
அஸூயையும் அவஜ்ஜையும் முதலானவையும் அஸஹ்ய அபசாரம் எனப்படும்
பாகவதர்களிடத்தில் அபசாரம் பட்டால் அது பகவத் அபசாரமாய் முடியும்
பகவான் இடத்தில் அபசாரம் பட்டால் அது பாகவத அபசாரமாய் முடியும்

எம்பெருமான் இடம் ஸம்வாதமாய் இருக்கும் இக்கிரந்தத்தில்
த்வத் அபசாரம் என்னாதே
பகவத் அபசாரம் என்பது பொருந்துமோ என்னில்
பகவத் அபசாரம் என்றே ப்ரஸித்தி பிராஸுர்யமாக இருப்பதால் குறையில்லை

இங்கு அநந்த பதம் இரண்டு பிரயோகங்கள்
முதல் பிரயோகம் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண சாமான்ய அபசாரங்களிலும்
இரண்டாவது பிரயோகம் பகவத் அபசாராதிகளிலே அந்வயிக்கும்

ஆரப்த கார்யான் -அநா ரப்த கார்யான்
கர்மங்களின் பலன் பரிபாக கிரமத்தால் தான் பலன் கொடுக்கும்
பலன் கொடுக்காத தொடங்கியவை ப்ராரப்த கர்மங்கள் என்றும் -இவையே ஆரப்த கார்யான் என்றும்
பலன் கொடுக்கத் தொடங்காதவை -ஸஞ்சித கர்மங்கள் என்றும் இவையே அநா ரப்த கார்யான் என்றும் சொல்லப்படுகின்றன –

————–

அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச
* விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥-11

இனி மோக்ஷ விரோதியான புண்ய பாப ரூபமான விலக்கடியை க்ஷமித்து அருள் வேண்டுகிறார்

அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * –அடி தெரியாத காலம் முதல் கொண்டு விளைந்ததாய்
விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச* –ஆத்மாவைப் பற்றினதாயும் ஸமஸ்த ஜகத்தைப் பற்றினதாயும் இருக்கிற விபரீத ஞானத்தை ஷமித்து அருள வேண்டும்
அஶேஷ விஷயம் -எல்லாவற்றையும் பற்றினதாய்
அத்³யாபி வர்த்தமாநம்-இன்னமும் தொடர்ந்து வாரா நின்றதாய்
வர்திஷ்யமாணம் ச-இன்னமும் வாஸநா பலத்தாலே வரப்போகின்றதாயும் இருக்கிற
விபரீத -வ்ருʼத்தம் ச * * * ஸர்வம் க்ஷமஸ்வ –எல்லாவிதமான நிஷித்த அனுஷ்டானங்களை பொறுத்து அருள வேண்டும்

ஆத்ம விக்ஷயமான விபரீத ஞானமாவது
தேஹாத்ம அபிமானம்
ஸ்வ ஸ்வா தந்தர்ய பிரமம்
அந்ய சேஷத்வ பிரமம் முதலானவை

க்ருத்ஸன ஜகத் விஷயமான விபரீத ஞானமாவது
ஸர்வ பூதாத்மகே தாத-ஜகந்நாத ஜகன்மயே பரமாத்மந கோவிந்தே மித் அமித்ர கதா குத-என்கிற ப்ரஹ்லாதன் படியே
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கமங்களை அவை யவைகளாக மாத்ரமே காண்கை

ஆத்ம விஷயம் க்ருத்ஸன விஷயம் விசேஷணங்கள் விபரீத விருத்தத்திலும் அந்வயிக்கும்
ஆத்மவிஷயமான விபரீத விருத்தமாவது -ஸ்வ ரஷணே ஸ்வ அந்வயம் முதலானவை
ஜகத் விஷயமான விபரீத விருத்தமாவது–தனக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்தால் அதை ஸ்வ கர்ம பலம் என்றோ கிருபா பலம் என்றோ நினையாதே
நிமித்த மாத்ரமேயான சேதனனை ஸ்வ தந்த்ரனாக எண்ணி அவன் நமக்குத் தீங்கு விளைத்தான் என்று கொண்டு அவன் விஷயத்தில் ஒன்றுக்குப் பத்தாக தீங்குகள் செய்கை
விசேஷ விஷயம் -ஐஸ்வர்யம் முதலான அல்ப விஷயங்களை விரும்புகை முதலான காம்யங்களை விலஷிக்கிறது
முன்பு செய்தவை இப்பொழுது செய்கின்றவை மேலும் செய்யப்போகின்றவற்றை அர்விழியான அடியேன் அறிந்திலேன் யாகிலும்
ஸர்வஞ்ஞரான தேவரீரே அறிந்து பொறுத்து அருள வேண்ம் என்கிறாராயிற்று –

———————–

மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * விபரீத ஜ்ஞாந ஜநநீம்
* ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந
* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * தை³வீம் கு³ணமயீம் மாயாம் *
தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய
।–12-

இங்கு தாஸ பூதம் என்று த்வதீய அந்தமாகச் சொல்வதே சரியான பாடம் –
தாஸபூதப்ரதம அந்தமாக சொல்வது மருள்
தாஸ பூதனும்
ஸரணாகத அஸ்மி -தவாஸ்மி தாஸ -என்று சொல்லும் அடியேனை என்று பொருள்
கீழ்ச் சொன்ன அஞ்ஞானத்துக்கு அடியான தேஹ ஸம்பந்தத்தைத் அறுத்து அருள பிரார்த்தனை இதில்-

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

மம -என்னுடையதான
ஏஷா -இந்த
குண மயீ -முக்குண மயமான
மாயா -ப்ரகிருதி
தைவீ -தேவனான என்னாலேயே படைக்கப் பட்டதாகையாலே
துரத்யயா.–எவராலும் தம் முயற்சியால் மாத்ரம் கடக்க அரிதாய் உள்ளது
யே -எவர்கள்
மாம் ஏவ -என்னையே
ப்ரபத்யந்தே -சரணம் அடைகிறார்களோ
தே-அவர்கள்
மாயாம் ஏதாம் -இந்த மாயையை
தரந்தி -தாண்டுகிறார்கள் –

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்-

இந்த கீதா ஸ்லோகத்தின் படியே மாம் தாரய -என்கிறார் இங்கு -மாயை -ப்ரக்ருதி -அத்தை அடியேன் கடந்தேனாம் படி செய்து அருள வேணும்

மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * –நெடுநாளாக நான் பண்ணிப்போந்த கர்ம பரம்பரையால் உண்டானதான
ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * -எம்பெருமானான உன்னுடைய உண்மையைத் தெரிந்து கொள்ள மாட்டாமல் மறைப்பதுமாகிய
விபரீத ஜ்ஞாந ஜநநீம்–தேஹாத்ம அபிமான ப்ரம்மம் முதலிய விபரீத ஞானத்தை விளைப்பதாய்

  • ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * –ஸ்வ கார்ய பூதமான ஸப்தாதிகளிலே போக்யதா புத்தியைப் பிறப்பிப்பதாய்
    தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * –போக ஆயாதன ரூபமான தேஹ ரூபத்தாலும்
    போக்ய உபகரணமான இந்த்ரிய ரூபத்தாலும்
    போக்யமான ஸப்தாதி ரூபத்தாலும்
    இத்தனைக்கும் முதல் கிழங்கான ஸூஷ்ம ப்ரக்ருதி ரூபத்தாலும்
    இவ்வாறு நான்கு வகைப்பட்ட பரிணாமத்தை யுடைத்தாய் இரா நின்ற
    தை³வீம் -இன்புறும் இவ் விளையாட்டுடையான் யாகையாலே தேவன் என்ற பேர் பெற்ற உன்னாலே கிரீடா பரிகரமாகச் சொல்லப்பட்டதாய்
    கு³ணமயீம் –ஸத்வ தமோ ரஜஸ் குண மூர்த்தியாய்
    மாயாம் *–விசித்திர கார்யகரமாகையாலே மாயை என்று பேர் பெற்றதான ப்ரக்ருதியை
    இதற்கு மாம் தாரய -என்றத்தோடே அந்வயம்
    மாம் என்கிற விசேஷ வியக்திக்கு இரண்டு விசேஷணங்கள்
    தா³ஸபூ⁴தம் “-என்றும்
    ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * -என்றும்
    தா³ஸபூ⁴தம்-அடியேனாகவும்
    ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * –த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே சரணாகதன் ஆனேன்
    உத்தர கண்டத்தின் படியே கைங்கர்ய நிரதனானேன் -என்று வாய் விட்டுச் சொல்பவனுமாய் இருக்கிற
    தவாஸ்மி தாஸ -என்கிற இடத்தில் -அஸ்மி -என்றது பிரார்த்தந அபிப்ராயத்தாலே பிரயோகிக்கப்பட்டது
    தாஸ விருத்தி பரனாய் இருக்கக் கடவேன் என்றபடி
    இவ்வாறு கொள்ளாத போது கீழ் தாஸ பூதம் என்பதையே சொல்லி புநர் யுக்தி தோஷம் வரும் (என்று தேசிகர் திரு உள்ளம் பற்றுகிறார் -)
    மாம் -அடியேனை
    தாரய -ப்ரக்ருதியைக் கடந்தவனாகச் செய்து அருள வேண்டும்

————

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: * ஏகப⁴க்திர்விஶிஷ்யதே ।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோঽத்யர்த²ம் * அஹம் ஸ ச மம ப்ரிய:” ॥

“உதா³ராஸ்ஸர்வ ஏவைதே * ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।
ஆஸ்தி²தஸ ஹி யுக்தாத்மா * மாமேவாநுத்தமாம் க³திம்” ॥

“ப³ஹூநாம் ஜந்மநாமந்தே * ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்³யதே ।
வாஸுதே³வஸ்ஸர்வமிதி * ஸ மஹாத்மா ஸுது³ர்லப:⁴” ॥

இதி ஶ்லோக த்ரயோதி³த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ ॥–13

கீழே நமஸ் சபிதார்த்தமான விரோதி நிவர்த்தகத்தி அருளிச் செய்து -இதில் இனி சதுர்த்தியின் அர்த்தமான இஷ்ட பிராப்தியை அருளிச் செய்கிறார்
பரம புருஷார்த்தமான கைங்கர்யம் சித்திக்க வேணுமே
அதற்கு இன்றியமையாததாய்
கைங்கர்யம் போலவே பிரிய விஷயமுமாய்
திருநாட்டில் அனுவர்த்திக்கும் பர பக்தி பர ஞானம் பரம பக்திகளை அபேக்ஷிக்கத் திரு உள்ளம் கொண்டு அவை ஸித்திக்க
பக்தி ரூபா பன்ன ஞானம் வேண்டுமே -அத்தை உண்டாக்கி அருள் வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
ஸ்ரீ கீதா 7 அத்தியாயத்தில் 17-18-19- ஸ்லோகங்களை அடைவே அனுசந்தித்து பிரார்திக்கிறார் –

“தேஷாம் ஜ்ஞாநீ -கீழே சதுர்விதா பஜந்தே மாம் -என்று அருளிச் செய்து
அவர்களுக்குள் ஞானியானவன் சிறந்தவன் என்கிறது
நித்யயுக்த: * ஏகப⁴க்திர்விஶிஷ்யதே ।–நித்ய யுக்தனாய் -ஏக பக்தியாய் இருக்கையாலே ஞானியானவன் சிறந்தவன் என்கிறது –
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோঽத்யர்த²ம் * –ஞானிக்கு என்னிடத்தில் உள்ள ப்ரீதி வாஸோ மகோசரம்
அஹம் ஸ ச மம ப்ரிய:” ॥-அப்படியே ஞானிகளின் பக்கல் என்னுடைய ப்ரீத்தியும் வாஸோ மகோசரம்

“உதா³ராஸ்ஸர்வ ஏவைதே * –கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்த சதுர் வித அதிகாரிகளையும் உதாரர்கள் என்கிறான் கீதாச்சார்யன்
என்னிடத்தில் உபாஸித்து சிறிது அளவு பிரார்த்தித்துப் பெற்றாலும் அவர்கள் எனக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணினவர்களாகவே என்னுடைய திரு உள்ளம் என்கிறான்
ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।-ஆனாலும் அவர்களுக்குள் ஞானிகளை எனக்கு உயிராகவே கருதுகிறேன்
ஏன் எனில்
ஆஸ்தி²தஸ ஹி யுக்தாத்மா * மாமேவாநுத்தமாம் க³திம்” ॥–என்னுடன் சேர்ந்தே வாழ நினைத்து இருக்கிற அந்த அதிகாரி என்னையே பரம ப்ராப்யமாகக் கொண்டு இருப்பதால் என்றபடி
மேல் ஸ்லோகத்தாலும் ஞானியின் சிறப்பை அருளிச் செய்கிறான்

“ப³ஹூநாம் ஜந்மநாமந்தே * –பல பிறப்புக்கள் கடந்த பின்பு
ஜ்ஞாநவாந் ஸந் –எனக்கு சேஷப்பட்டு இருப்பதே ஆத்ம ஸ்வரூபம் என்று உணர்ந்தவர்களாய்
மாம் ப்ரபத்³யதே ।-ஞானிகள் என்னை சரண் அடைகிறார்கள்
எவ்வாறு என்றால்
வாஸுதே³வஸ்ஸர்வமிதி * -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிற பிரதிபத்தியுடன் சரண் அடைகிறான்
ஸ மஹாத்மா ஸுது³ர்லப:⁴” ॥-அப்படிப்பட்ட மஹாத்மா எனக்கு கிடைப்பது அரிது

இதி ஶ்லோக த்ரயோதி³த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ ॥–இம்மூன்று ஸ்லோகங்களாலும் புகழ்ந்து கூறப்பட்ட ஞானியாக அடியேனைச் செய்து அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்

——————

புருஷஸ்ஸ பர: பார்த²! * ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா” *
“ப⁴க்த்யா த்வநந்யயா ஶக்ய:” * “மத்³ப⁴க்திம் லப⁴தே பராம்”
இதி ஸ்தா²நத்ரயோதி³த பரப⁴க்தியுக்தம் மாம் குருஷ்வ ॥-14-

புருஷஸ்ஸ பர: பார்த²! * –ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா” *–8-22–
“ப⁴க்த்யா த்வநந்யயா ஶக்ய:” *11-54-
“மத்³ப⁴க்திம் லப⁴தே பராம்”–18-54
இதி ஸ்தா²நத்ரயோதி³த பரப⁴க்தியுக்தம் மாம் குருஷ்வ ॥-இம்மூன்று இடங்களிலும் சொல்லப்பட்ட பரபக்தி அடியேனுக்கு விளைந்ததாகச் செய்து அருள வேணும் என்று பிரார்திக்கிறார் –

————-

பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்த்யேக ஸ்வபா⁴வம் * மாம் குருஷ்வ ॥-15-

பரபக்தி விளைந்த அளவிலே பர்யாப்தி பிறவாது இறே
பரபக்தி பர ஞானம் பரம பக்தி –இவையே வடிவெடுத்தவனாக அடியேனைச் செய்து அருள வேணும் என்கிறார் –

——————

பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத * பரிபூர்ணாநவரத * நித்யவிஶத³தம அநந்ய ப்ரயோஜந
அநவதி⁴காதிஶயப்ரிய ப⁴க³வத³நுப⁴வோঽஹம் * ததா²வித⁴ ப⁴க³வத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைக ரதிரூப நித்யகிங்கரோ ப⁴வாநி
॥-16-

இதில் நித்ய அனுபவத்தையும்
நித்ய கைங்கர்யத்தையும்
பெற்று வாழ பிரார்திக்கிறார்
கீழே 2 சூர்ணிகையில் உள்ள வாக்ய சந்நிவேசம் சற்றே மாறி இங்கு உள்ளன

———–

எம்பெருமானுடைய ப்ரதிவசநம்:
ஏவம்பூ⁴த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுʼப்த* ஸமஸ்த வஸ்து விஹீநோঽபி
* அநந்த தத்³விரோதி⁴ பாபாக்ராந்தோঽபி * அநந்த மத³பசாரயுக்தோঽபி * அநந்த மதீ³யாபசாரயுக்தோঽபி
* அநந்த அஸஹ்யாபசாரயுக்தோঽபி * ஏதத்கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீதாஹங்கார விமூடா⁴த்ம ஸ்வபா⁴வோঽபி
* ஏதது³ப⁴ய கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீத வாஸநா ஸம்ப³த்³தோ⁴ঽபி * ஏதத³நுகு³ண ப்ரக்ருʼதி விஶேஷ ஸம்ப³த்³தோ⁴ঽபி
* ஏதந்மூல * ஆத்⁴யாத்மிக * ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக * ஸுக²து:³க² தத்³தே⁴து * ததி³தரோபேக்ஷணீய
* விஷயாநுப⁴வ ஜ்ஞாந ஸங்கோசரூப * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந
* பரமப⁴க்தி விக்⁴ந ப்ரதிஹதோঽபி * யேந கேநாபி ப்ரகாரேண * த்³வயவக்தா த்வம் * கேவலம் மதீ³யயைவ த³யயா
* நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந:
* மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி:
* மத்ப்ரஸாதா³தே³வ * ஸாக்ஷாத்க்ருʼத * யதா²வஸ்தி²த மத்ஸ்வரூபரூப கு³ண விபூ⁴தி * லீலோபகரண விஸ்தார:
* அபரோக்ஷஸித்³த⁴ மந்நியாம்யதா * மத்³தா³ஸ்யைக * ஸ்வபா⁴வ * ஆத்மஸ்வரூப: * மதே³காநுப⁴வ:
* மத்³தா³ஸ்யைக ப்ரிய: * பரிபூர்ணாந வரத * நித்யவிஶத³தம அநந்யப்ரயோஜந * அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம்
* ததா²வித⁴ மத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வ ।
–17—-

இனி இதற்கு மேல் இந்தக் கத்யம் முடியும் அளவும் எம்பெருமானுடைய பிரதிவசன பிரகாரத்தை அநு வதிக்கிற படி –
ஏவம்பூ⁴த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுʼப்த* ஸமஸ்த வஸ்து விஹீநோঽபி
இந்த சூர்ணிகையின் நடுவில் உள்ள -த்வம் * கேவலம் மதீ³யயைவ த³யயா-என்பதில் இருந்து தவம் -என்பதை முதலில் யோஜித்துக் கொள்ள வேனும்
கீழே நித்ய கிங்கரோ பவான் -என்ற பிரார்த்தித்த படிக்கே அப்படியே நித்ய கைங்கர்ய பரராவீர் என்று அங்கீ கரித்து அருளிய சூர்ணிகை இது
ஏவம் பூத -என்றது கைங்கர்யத்துக்கு விசேஷணம் -கீழ் சூர்ணிகையில் எப்படிப்பட்ட கைங்கர்யம் பிரார்த்தித்தாரோ
அத்தை அநு வதித்து -நீர் விரும்பியபடியே -ஸாஸ்த்ரீய உபயாந்தரங்கள் இல்லையே யாகிலும் என்கை –

அநந்த தத்³விரோதி⁴ பாபாக்ராந்தோঽபி * -அப்படிப்பட்ட உபாய அநுஷ்டானங்களை இனி ஸம்பாதித்திக் கொள்ள ஒண்ணாத படி -அவற்றுக்கு விரோதிகளான பாபங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் யாகிலும்

அநந்த மத³பசாரயுக்தோঽபி * -என்னளவில் பண்ணின அபசாரங்கள் அபரிமிதமாக இருக்கப் பெற்றீர் ஆகிலும்

அநந்த மதீ³யாபசாரயுக்தோঽபி-அபரிமித பாகவத அபசாரங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் ஆகிலுமஅநந்த அஸஹ்யாபசாரயுக்தோঽபி * –அபரிமித அஸஹ்ய அபசாரங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் ஆகிலும்

ஏதத்கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீதாஹங்கார விமூடா⁴த்ம ஸ்வபா⁴வோঽபி–இப்படிப்பட்ட அபசாரங்களினால் உண்டாகுமதும் -இவற்றை மென்மேலும் உண்டாக்குமதுவுமான அநாதி விபரீத அஹங்காரங்களினால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வபாவத்தை யுடையீராகிலும் –

ஏதது³ப⁴ய கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீத வாஸநா ஸம்ப³த்³தோ⁴ঽபி * -கீழ்ச் சொன்ன அபராதங்களும் அஹங்காரமுமாகிற இரண்டுக்குக்கும் கார்ய காரணமுமாகிய அநாதி விபரீத வாஸனை சூழப் பெற்று இருந்தீர் யாகிலும்

ஏதத³நுகு³ண ப்ரக்ருʼதி விஶேஷ ஸம்ப³த்³தோ⁴ঽபி–கீழ்ச் சொன்ன
அபசார
அஹங்கார
வாசனைகள் ஆகிய மூன்றுக்கும் ஏற்ற
ராஜஸ தாமஸ ப்ரக்ருதியினால் நன்கு கட்டுப்பட்டு இருந்தீர் யாகிலும்

ஏதந்மூல * ஆத்⁴யாத்மிக * ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக * ஸுக²து:³க² தத்³தே⁴து * ததி³தரோபேக்ஷணீய
விஷயாநுப⁴வ ஜ்ஞாந ஸங்கோசரூப * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந ப்ரதிஹதோঽபி * –கீழ்ச் சொன்ன பிரக்ருதிக்கு அடியாக வருகிற தாபத்ரயம் என்னப்படுகிற ஸூக துக்கங்கள் என்ன
அவற்றுக்கு ஹேதுவானவை என்ன
அந்த ஸூக துக்கங்களில் காட்டிலும் வேறான உபேக்ஷிக்கக் கூடிய விஷயங்கள் என்ன
இவற்றின் அனுபவமும் ஞான சங்கோசமுமாகிய
என் திருவடி இணைகளைப் பற்றின பரிபூர்ண பரபக்தி பரஞான பரமபக்திகள் இவற்றுக்கு இடையூறு களினால் கெடுதல்கள் அடைந்தீராகிலும் –

யேந கேநாபி ப்ரகாரேண * த்³வயவக்தா த்வம் -ஏதேனும் ஒரு படி த்வய மந்த்ரத்தைச் சொன்ன நீர்

கேவலம் மதீ³யயைவ த³யயா–என்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலேயே

நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந:–என்னுடைய திருவடி இணைகளைப் பற்றிய பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்திகளின் இடையூறுகள் எல்லாம் நிர்மூலமாக -அவற்றுடன் காரணங்களோடும் கூட -நன்கு கழியப் பெற்றவராகி

மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி:–எனது திருவடித் தாமரை இணைகளைப் பற்றிய பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்திகள் என்னுடைய அனுக்ரஹம் அடியாக உண்டாகப் பெற்றவராய்

மத்ப்ரஸாதா³தே³வ –என்னுடைய அனுக்ரஹம் அடியாகவே

ஸாக்ஷாத்க்ருʼத * யதா²வஸ்தி²த மத்ஸ்வரூபரூப கு³ண விபூ⁴தி * லீலோபகரண விஸ்தார:–என் ஸ்வரூபம் ரூபம் திருக் குணங்கள் நித்ய விபூதி லீலா விபூதி ஆகிய இவற்றை விஸ்தாரங்களை உள்ளபடி சாஷாத்கரிக்கப் பெற்றவராய்
அபரோக்ஷஸித்³த⁴ மந்நியாம்யதா * மத்³தா³ஸ்யைக * ஸ்வபா⁴வ ஆத்மஸ்வரூப: -எனக்கே நியாம்யமாயும் -எனக்கே அடிமைப்பட்டு இருக்கையுமாகிற இயற்கையான ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணரப் பெற்றவராய்

மதே³காநுப⁴வ:-என் ஒருவனையே அனுபவிக்க விரும்பியவராய்

மத்³தா³ஸ்யைக ப்ரிய: -எனக்குக் கைங்கர்யம் பண்ணுவது ஒன்றிலேயே ஊற்றமுடையவராய்

பரிபூர்ணாந வரத * நித்யவிஶத³தம அநந்யப்ரயோஜந * அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம்-பரிபூர்ணமாயும் -இடையூறு அற்றதாயும் -எப்போதும் மிகவும் விசதமாயும் -ப்ரயோஜனாந்தரப் பற்று அற்றதாயும் -பரம பிரியமுமாய் இருக்கிற என்னுடைய அனுபவத்தை யுடையீராய்

ததா²வித⁴ மத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித

அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வ ।-அப்படிப்பட்ட என் அனுபவத்தினால் உண்டு பண்ணப்பட்ட மிகச் சிறந்த யுகப்பினாலாகிய
ஸர்வ அவஸ்த உசித ஸகல கைங்கர்யங்களிலும் ஆசை கொண்டு இருக்கும் அடியவராக ஆகக் கடவீர்
என்று அனுக்ரஹித்த படி

—————

ஏவம்பூ⁴தோঽஸி ।-18-

இதுவும் நம்பெருமாளுடைய திரு முகப் பாசுரம்
கீழே அனுக்ரஹித்த படியாகத் தொடங்கி விட்டீர் -என்றபடி

—————

ஆத்⁴யாத்மிக ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக து:³க² விக்⁴ந க³ந்த⁴ ரஹிதஸ்த்வம் * த்³வயமர்தா²நுஸந்தா⁴நேந ஸஹ
* ஸதை³வம் வக்தா * யாவச்ச²ரீரபாதம் * அத்ரைவ ஶ்ரீரங்கே³ ஸுக²மாஸ்வ ॥-19-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
இரு பாடு எரி கொள்ளியினுள்ளே எறும்பே போல் உருகா நிற்கும் என்னுள்ளம்
வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போல் உள்ளம் துளங்கா நிற்பன் –என்று அஞ்சும்படியான இருள் தரும் மா ஞாலத்தில் நிரபாயமாகக் கால ஷேபம் செய்ய வழி ஏது என்னும் சங்கைக்கு பரிஹாரமாக இந்த சூரணை நம்பெருமாள் திருமுகப் பாசுரமாக அவதரிக்கிற படி

தாபத்த்ரய ஜெனித துக்கமாகிற இடையூறு சிறிதும் இல்லாதவராய் -த்வய மந்த்ர அர்த்த அனுசந்தானத்தோடே கூட எப்போதும் இப்படியே சொல்லிக் கொண்டு இருப்பவராய்
இவ்வுடல் தொலையும் வரை திருவரங்கம் ஆகிய பெரிய கோயிலிலேயே இனிது வாழக் கடவீர் என்று எம்பெருமான் சோதிவாய் திறந்து அருளிச் செய்தபடி
இங்கு ஸ்ரீ ரெங்கத்தைச் சொன்னது உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் என்று தேசிகன் திரு உள்ளம் –

————-

ப்ரபன்னனுக்கு பூர்வ க்ருத்யம் என்றும் உத்தர க்ருத்யம் என்றும் இரண்டு உண்டு
பூர்வ க்ருத்யம் கீழே பரக்கச் சொல்லிற்று
உத்தர க்ருத்யம் சொல்லுகிறது இப்போது
இவ்வுடல் சரியும் நிலை எப்படிப்பட்டது
பரமபலன் கை புகுவது எப்போது -என்ற கேள்விகளுக்கு விடை இறுக்கிறது இங்கு
இதுவும் பெரியபெருமாளுடைய திருவாக்கு அநு வாதம்

ஶரீரபாதஸமயே து கேவலம் * மதீ³யயைவ த³யயா அதிப்ரபு³த்³த:⁴ * மாமேவ அவலோகயந்
* அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்கார மநோரத:² * ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே²ந இமாம் ப்ரக்ருʼதிம்
* ஸ்தூ²லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருʼஜ்ய * ததா³நீமேவ மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக
* ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத பரிபூர்ணாநவரத * நித்ய விஶத³தம அநந்ய ப்ரயோஜந
* அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம் * ததா²வித⁴ மத³நுப⁴வஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴விஷ்யஸி ॥–20-

ஶரீரபாதஸமயே து -உடல் சரிந்து போம் போது

கேவலம் * மதீ³யயைவ த³யயா அதிப்ரபு³த்³த:-என்னுடைய இயற்கையான அருளாலேயே மிகவும் சிறந்த ஞானம் உடையீராய்

மாமேவ அவலோகயந்–இதற்கு முன் சிந்திக்கப்பட்ட என்னையே சிந்திப்பவராகி

அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்கார மநோரத:–எம்பெருமானே எனக்கு பரம ப்ராப்ய பூதன் -என்கிற ஸம்ஸ்காரமும்
ப்ராப்தியில் உண்டான பாரிப்பும் குன்றாதவராகி

ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே²ந இமாம் ப்ரக்ருʼதிம் ஸ்தூ²லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருʼஜ்ய -ஸ்தூலமும் ஸூஷ்மமுமான இந்தப்பிரக்ருதியை பழைய வஸ்திரத்தை விடுமா போலே எளிதாக விட்டு

ததா³நீமேவ -அப்போதே –தாமதம் இன்றி

மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக-ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத பரிபூர்ணாநவரத * நித்ய விஶத³தம அநந்ய ப்ரயோஜ அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம் * ததா²வித⁴ மத³நுப⁴வஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴விஷ்யஸி ॥-என்னுடைய அனுக்ரஹத்தாலேயே —–நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யத்தைப் பெற்றவராகப் போகிறீர்-
கீழே சூர்ணிகை -2- ல் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளே இங்கும் உள்ளன –

————-

மா தேঽபூ⁴த³த்ர ஸம்ஶய: ।–21-

நித்ய கிங்கரோ பவிஷ்யதி -என்று அனுக்ரஹித்த இவ்விஷயத்தில் உமக்கு சம்ஸயம் வர்த்திக்க வேண்டாம் என்கிறது –
ப்ரஸக்தஸ் யைவ ஹி ப்ரதிஷேதா -என்று இறே நியாயம் இருப்பது
இங்கு சந்தேஹ ப்ரஸக்தி யுண்டோ என்னில்
உலகில் ஷூத்ர பலன்களைப் பெறுவதற்கும் மிகவும் கனத்த உபாய அனுஷ்டானங்கள் காணா நின்றோம்
மிக மிகக் கனத்த பேறாகிய மோக்ஷ புருஷார்த்தம் பெறுவதற்கு -துஷ்கரத்வத்தில் இனி இதுக்கு அவ்வருகு இல்லை எண்ணலாம் படி பரம துஷ்கரமான உபாயம் இருக்க வேண்டாவோ
மிகவும் ஸூகரமான இந்த ந்யாஸ மாத்ரத்தினாலேயே பேறு தப்பாது என்னில் -இது கண் துடைக்கிற வார்த்தையாய் இருக்குமோ என்று சிலருக்கு சங்கை உண்டாகக் கூடுமாகையாலே
அவர்களுக்கும் தெளிவு பிறக்க வேண்டி எம்பெருமானாரை அபதேசித்து
மா தே பூத் அத்ர ஸம்சய -என்று சோதி வாய் திறந்து அருளிச் செய்கிறபடி –

——–

மா தே பூத் அத்ர ஸம்சய

அந்ருʼதம் நோக்தபூர்வம் மே * ந ச வக்ஷ்யே கதா³சந * ராமோ த்³விர்நாபி⁴பா⁴ஷதே।
ஸக்ருʼதே³வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே ।
அப⁴யம் ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³வ்ரதம் மம ॥
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” ॥
இதி மயைவ ஹ்யுக்தம் ।-
-22-

என்று கீழே அருளிச் செய்ததையே நன்கு நிலை நாட்டுவதற்காகவே மேல் இரண்டு சூர்ணிகைகள்
என்னுடைய நித்ய கைங்கர்ய ப்ராப்தியில் உமக்கு ஸந்தேஹம் வர்த்திக்குமாகில் நான் ஏற்கனவே பேசி வைத்து இருக்கின்ற வார்த்தைகள் பொய்யாகுமே –
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே என்று உமது திருத்தமக்கையார் சொல்லி வைத்தாளே
ஆகவே என்னுடைய வார்த்தையை நீர் உபச்சந்தந மாத்ரமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்று நம்பெருமாள் அருளிச் செய்தபடி –
இது வரையில் ஒருகாலும் நான் பொய் சொல்லிற்று இல்லை -இனி மேல் சொல்லப்போவதும் இல்லை -என்று கிருஷ்ண அவதாரத்தில் சொன்னேன்
ராமன் வாயாலே இரண்டாவது வார்த்தை வராது என்று ராம அவதாரத்தில் சொன்னேன்
அன்றியும் ராம அவதாரத்தில் கடற்கரையில் விபீஷண ஆழ்வானை வ்யாஜீ கரித்து -ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய -என்று சரம ஸ்லோகத்தில் சொன்னேன்
கிருஷ்ண அவதாரத்தில் திருத்தேர் தட்டிலே அருஜுனனை வ்யாஜீ கரித்து -ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று சரம ஸ்லோகத்தில் சொன்னேன்
ஸக்ருத் ஏவ -வில் -ஏதத் விரதம் மம -உயிரான வார்த்தை

ஆக இப்படிச் சொல்லி இருக்கிற நான் இன்றாகப் பொய்யனாக மாட்டேன் காணும் என்று திண்மை பெறுத்தின படி –

————-

கீழ்ச் சொன்னதையே திடப்படுத்தி அருளிச் செய்கிற இது ஸந்தோஷ அதிசயத்துக்காக வாயிற்று -இதுவும் பகவத் வாக்யம்

அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத்³ஜ்ஞாநத³ர்ஶந ப்ராப்திஷு * நிஸ்ஸம்ஶய: ஸுக²மாஸ்வ ॥–23-

அதஸ்–ஸத்யவாதியும் ஸத்ய வ்ரதனுமான நான் சொன்ன வார்த்தை மிகவும் விஸ்வஸிக்கத் தகுந்தது யாகையாலே

த்வம் -பிராமாணிகரான நீர்

தவ -என்னால் ஸ்வீ கரிக்கப் பட்ட ஸகல குணங்களையும் யுடையவரான உம்முடைய

தத்த்வதோ மத்³ஜ்ஞாநத³ர்ஶந ப்ராப்திஷு -உள்ளபடி என்னை அறிவது காண்பது நித்ய கைங்கர்யம் பண்ணுவது ஆகிய இவற்றில்

நிஸ்ஸம்ஶய: -சங்கா களங்க லேசமும் இல்லாதவராய்

ஸுக²மாஸ்வ –இனிது வாழ்ந்து இருக்கக் கடவீர் -என்று
எம்பெருமானாரை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்

—————

அந்த்யகாலே ஸ்ம்ருʼதிர்யாது தவ கைங்கர்யகாரிதா ।
தாமேநாம் ப⁴க³வந்நத்³ய க்ரியாமாணாம் குருஷ்வ மே ॥–24-

அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று

இந்த வாக்யத்துக்கு
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையோ
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசாச்சார்யாரோ
ஸ்ரீ தேசிகனோ
வியாக்யானம் செய்து அருள வில்லை

———-

இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶரணாக³தி க³த்³யம் ஸமாப்தம்॥

—————

ஸரணாகதி கத்ய தாத்பர்ய சாரம்
1-முதல் சூர்ணிகையில் மேல் 5 வது சூர்ணிகையில் தான் அனுசந்திக்கப் போகும் சரணாகதி நன்கு நிறைவேற புருஷகார பிரபத்தி செய்யப்படுகிறது
2-புருஷகார பிரபத்தி இன்னதற்காக என்று வியக்தமாகச் சொல்லப்படுகிறது
3-4- அங்கனமே ஆயிடுக என்று பெரிய பிராட்டியார் அநுக்ரஹித்து அருளிச் செய்தமை சொல்லப்படுகிறது

5- எம்பெருமானுடைய –
திவ்ய ஆத்ம ஸ்வரூப திவ்ய மங்கள விக்ரஹங்களின் வை லக்ஷண்யத்தையும்
கல்யாண குண யோகத்தையும் –
திவ்ய பூஷண மஹிஷீ ஸாஹித்யத்தையும்
நித்ய ஸூரிகளோட்டை சேர்த்தியையும் –
நித்ய விபூதி நாயகத்வத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
மற்றும் ஸத்ய காமத்வ ஸத்ய சங்கல்பத் வாதி கல்யாண குண விசேஷங்கள் யுடைமையையும்
பரக்கச் சொல்லி ஏத்தி எம்பெருமான் திருவடி
இணைகளிலே சரணாகதி செய்தமையைச் சொல்லிற்று
6-7-8-9- த்வய மந்த்ர அனுசந்தானமும் செய்து அருளி
புராண ஸ்லோகங்கள் இரண்டையும் –
கீதையில் உள்ள மூன்று ஸ்லோகங்களையும் அனுசந்தித்தார் ஆயிற்று
10-11- கால த்ரயத்திலும் கரண த்ரயத்தாலும் விளையும் ஸமஸ்த அபசாரங்களையும் பொறுத்து அருள வேணும் என்று பிரார்த்தித்தது
10-ல் நிஷித்த ஆசரண ஷமா பிரார்த்தனை
11-ல் காம்ய ஆசரண க்ஷமா பிரார்த்தனை
12- கீதையில் மம மாயா துரத்யயா -என்றும் மாம் ஏவயே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -என்றும் சொல்லி உள்ளதை அனுசரித்து மாயையை மடித்து அருள பிரார்த்தனை

13- கீதை ஸ்லோகங்கள் மூன்றையும் எடுத்துக் காட்டி அவற்றில் சொல்லப்பட்ட ஞானம் தமக்கு அளிக்க பிரார்த்தனை
14- கீதையில் மூன்று இடங்களில் சொல்லப்பட்ட பரபக்தி தமக்கு விளைய வேண்டும் என்று பிரார்த்தனை
15-பரபக்தி பரஞான பரம பக்திகளே வடிவெடுத்தவனாக ஆக்கி அருளப் பிரார்த்தனை
16- அவற்றால் விலக்ஷண பகவத் அனுபவம் விளைந்து -அவ் வனுபவ பரிவாஹ ரூபமாக நித்ய கைங்கர்ய ருசி விளைய வேணும் என்கிறது

இதற்கு மேல் எல்லாம் பகவத் ப்ரதி வசனங்கள்
17- வாரீர் ராமானுஜர் நித்ய கைங்கர்யம் செய்து களிக்க விரும்பிய நீர் அதற்கு உரிய ஒரு உபாயத்திலும் அந்வயம் அற்று இருந்தீர் ஆகிலும்
அந்த உபாயம் இனிமேலும் நிஷ்பன்னமாகக் கூடாதபடி விரோதிகளான பாபங்கள் நிரம்பி இருந்தீராகிலும்
ஸகல விதமான அபசாரங்களும் மலிந்து இருந்தீராகிலும்
பரபக்தி பரஞான பரமபக்திகள் விளையாமைக்கு உறுப்பான இடையூறுகள் பல மலிந்து இருந்தீராகிலும்
நீர் ஆர்த்த ப்ரபன்னராகியோ திருப்த ப்ரபன்னராகியோ த்வய மந்த்ரத்தை அனுசந்தித்தீராதலால்
என்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலேயே இடையூறுகள் எல்லாம் நீங்கப்பெற்று
பரபக்தி பரஞான பரமபக்திகள் புஷ்கலமாகப் பெற்று
என்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத்கரிக்கப் பெற்று
உம்முடைய ஸ்வரூபத்தையும் நன்கு தெளியப்பெற்று
என்னையே அனுபவிப்பவராய்
எனக்கே தொண்டு செய்பவராய்
வாழக் கடவீர் என்று எம்பெருமான் அனுக்ரஹித்து அருளின படி –

18- இங்கனே யாகப்புகுந்தீர் என்று எம்பெருமான் அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
19-தாபத்ரய லேசமும் அற்று அர்த்த அநுஸந்தானத்தோடே த்வய உச்சாரணம் செய்து கொண்டு இவ்வுடல் விழும் தனையும் இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலிலேயே இனி வாழக்கடவீர் என்று அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
20-இவ்வுடல் சரிந்து போம் காலத்தில் சிறந்த நன்மைகளைப் பெற்று நித்ய கைங்கர்ய நிரதராகப் போகிறீர் என்று அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
21- இதில் எந்தவித ஸந்தேஹலேசமும் வேண்டா என்று தெளிவித்து அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
22-தன்னுடைய திருவாக்கு பழுது படாது என்று எம்பெருமான் மூதலித்து அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
23- கீழ்ப் பண்ணிய அபய ப்ரதானத்தைத் திடப்படுத்தி நிகமித்தது

ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய பிரதிவசனம் நிகமித்தது

24-அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று

———————

॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥

இந்த இரண்டாவது கத்யத்துக்கு
ஸ்ரீ ரெங்க கத்யம் என்றும்
மித கத்யம் என்றும் வ்யவஹாரம்
ஸ்ரீ ரெங்க ஸாயிநம் –முதலில்– ஸ்ரீ ரெங்க நாத மம நாத நமோஸ்து தே -முடிவில் -என்பதால் ஸ்ரீ ரெங்க கத்யம்
முந்திய சரணாகதி கத்யம் ப்ருது கத்யம் -இது சிறியதாய் இருப்பதால் மித கத்யம்
முந்தியது போல் த்வய விவரணம் இதுவும்
இதில் முதல் சூர்ணிகை கைங்கர்ய ப்ராத்தநா பரமான உத்தர கண்ட விவரணமாகவும்
இரண்டாவது சரண வர்ண ப்ரதர்சன பரமான பூர்வ கண்ட விவரணமாக அவதரிக்கின்றது

சித³சித்பரதத்த்வாநாம் தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।
ராமாநுஜாய முநயே நமோ மம க³ரீயஸே ॥

சித³சித்பரதத்த்வாநாம் -சேதனம் அசேதனம் ஈஸ்வரன் ஆகிய தத்வ த்ரயங்களினுடைய
தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।-உண்மையை உள்ளபடி அறிந்தவரான
மம க³ரீயஸே ॥-எனக்கு உத்தம ஆச்சார்யரான
ராமாநுஜாய முநயே நமோ -எம்பெருமானாருக்கு நமஸ்காரம் ஆகுக

த்₃வயத்தில் உபேயத்தில் நோக்கான உத்தர வாக்ய விவரணம்:

——————
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ் ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ
* ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய * சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம
* ஸத்யகாம ஸத்யஸங்கல்ப * க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³ யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம்
* பரப்³ரஹ்ம பூ⁴தம் * புருஷோத்தமம் * ஶ்ரீரங்க³ஶாயிநம் * அஸ்மத்ஸ்வாமிநம் * ப்ரபு³த்³த⁴ நித்ய நியாம்ய நித்ய
தா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோঽஹம் * ததே³காநுப⁴வ: * ததே³கப்ரிய: * பரிபூர்ணம் ப⁴க³வந்தம்
* விஶத³தமாநுப⁴வேந நிரந்தரமநுபூ⁴ய * தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வாநி ॥–1-

உபாயத்தில் நோக்கான பூர்வ வாக்ய விவரணம்:

ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் -மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன்னதீனமாக இருக்கப் பெற்ற
இது முதலான த்விதீ யாந்த விசேஷணங்கள் எல்லாம் மேலே
பகவந்தம் என்ற விசேஷ்யத்திலே அந்வயத்து
விசத தம அநு பவேந நிரந்தரம் அநு பூய -என்று இணங்கக் கடவது
உயர்வற உயர்நலம் முதல் திருவாய் மொழியில்
நாம் அவன் இவன் உவன்
அவரவர் தம்தமது
நின்றனர் இருந்தனர் -என்று அடைவே யுள்ள மூன்று பாசுரங்களையும் தழுவி முதல் விசேஷணம்

பத்தர் முக்தர் நித்யர் -த்ரிவித் சேதனர்
த்ரி குணம் -காலம் -ஸூத்த ஸத்வம் -த்ரிவித அசேதனம்
த்ரி வித -விசேஷணம் சேதனர் மட்டிலும் அன்வயித்து அசேதனங்களில் அந்வயியாதும் இருக்கலாம் -என்பது தேசிகர் திரு உள்ளம்

சூர்ணிகையில் முடிவில் உள்ள பேத பதம் ஸ்வரூபம் முதலிய மூன்றிலும் அன்வயித்து
ஸ்வரூப பேதம்
ஸ்திதி பேதம்
ப்ரவ்ருத்தி பேதம் என்று கொள்ளப் பங்காக உள்ளது
ஒவ்வொன்றிலும் அவாந்தர பேதங்கள் உண்டே

க்லேஶ கர்மாத்³யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்–அவித்யை -அஸ்மிதா-அபி நிவேசம் –ராகம் -த்வேஷம் முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
அவற்றின் கார்யமான புண்ய பாப ரூபமான கர்மம் என்ன
ஆதி சப்தத்தால் இவற்றின் விபாகம் என்ன -இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத
சேதன அசேதனங்கள் ஸரீரமாய் எம்பெருமான் ஸரீரியாய் இருந்தாலும் வியாப்பிய கத தோஷம் தட்டாது-

ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ் ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ

ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய * சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரமஸத்யகாம ஸத்யஸங்கல்ப * க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³ யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம்–ஸ்வாபாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக்கல்யாண குண திரள் களுக்கு கடல் போன்ற –

பரப்³ரஹ்ம பூ⁴தம் * புருஷோத்தமம் –பர ப்ரஹ்ம ஸப்தத்தாலும் -புருஷோத்தம ஸப்தத்தாலும் வேதாந்தங்களிலே ப்ரஸித்தனான

ஶ்ரீரங்க³ஶாயிநம் –திருவரங்கம் பெரிய கோயிலிலே அஸ்மதாதிகளும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிற

அஸ்மத்ஸ்வாமிநம் –பரிபூர்ணம் ப⁴க³வந்தம்–எமக்கு ஸ்வாமியாய் -ஒன்றிலும் குறைவில்லாத எம்பெருமானை
இதற்கு அநு பூய -என்ற ல்யப்போடே அந்வயம்

ப்ரபு³த்³த⁴ நித்ய நியாம்ய நித்ய தா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோঽஹம் –நித்ய நியாம்யமாய்
நித்ய தாஸ்ய ஏக ரஸமான ஆத்ம ஸ்வ பாவத்தை நன்கு அறிந்து கொண்டவனான அடியேன்
ப்ரபு³த்³த என்றது நன்றாக அறியப்பட்ட -என்றபடி –
ஸ்வாதீன -ஸ்வார்த்த -கர்த்ருத்வ போக்த்ருத்வ பிரமம் இல்லாத படி அறிவதே நன்றாக அறிவதாகும்
இவ்வாத்மா எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே ந்யாம்யனும் தாஸ்யனுமானவன் என்று நன்றாக அறிந்து கொண்ட நான் என்றபடி –

ததே³காநுப⁴வ: -ததே³கப்ரிய: –பகவத் விஷயம் ஒன்றே ஞானத்துக்கும் பக்திக்கும் விஷயமாகப் பெற்றவனும்

விஶத³தமாநுப⁴வேந நிரந்தரமநுபூ⁴ய –மிகவும் விசதமாக இடைவீடு இன்றி அநு பவித்து

தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித-அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப
நித்யகிங்கரோ ப⁴வாநி –அவ்வனுபவத்தினால் விளைவிக்கப் பெற்ற மிகச் சிறந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ஊற்றத்தோடு கூடி இருக்கையாகிற நித்ய கைங்கர்யத்தில் நிரதனாகக் கடவேன்

ஶேஷதைக ரதி-என்பது பஹு வ்ரீஹி யாகி நித்ய கிங்கரனுக்கு விசேஷணம் ஆகிறது –
அசேஷமான அடிமைகளிலும் நன்கு ஈடுபட்ட நித்ய கிங்கரனாக ஆகக் கடவேன் என்றபடி

ஆக இவ்வளவும் த்வயத்தில் உபேயத்திலே நோக்கான உத்தர கண்டம் விவரிக்கப்பட்ட தாகிறது –

—————-

ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்யதா³ஸ்யைகரஸாத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக * ப⁴க³வத³நவதி⁴காதிஶய
* ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித * அநவதி⁴கா திஶய ப்ரீதிகாரித * அஶேஷாவஸ்தோ²சித
* அஶேஷஶேஷதைகரதிரூப * நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி * தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந
* தது³பாய ஸமீசீந க்ரியா * தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ * ஸமஸ்தாத்மகு³ணவிஹீந:
–* து³ருத்த ராநந்த * தத்³விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு³ண * அநாதி³ பாபவாஸநா மஹார்ணவ அந்தர்நிமக்³ந:
* திலதைலவத் * தா³ருவஹ்நிவத் * து³ர்விவேச த்ரிகு³ண க்ஷண க்ஷரணஸ்வபா⁴வ * அசேதந ப்ரக்ருʼதி வ்யாப்திரூப
* து³ரத்யய ப⁴க³வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ: * அநாத்³யவித்³யா ஸஞ்சித
* அநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்³ரதி²த: * அநாக³த அநந்தகால ஸமீக்ஷயாঽபி
* அத்³ருʼஷ்ட ஸந்தாரோபாய: * நிகி²ல ஜந்துஜாத ஶரண்ய
* ஶ்ரீமந் * நாராயண * தவ சரணாரவிந்த³ யுக³ளம் ஶரணமஹம் ப்ரபத்³யே
॥2-

ஸ்வாத்ம நித்ய நியாம்ய –அடியேன் எப்பொழுதும் நியமிக்கத் தக்கவனாய் இருக்கை என்ன

நித்யதா³ஸ்ய-எப்பொழுதும் அடிமை செய்து கொண்டே இருக்கை என்ன

ஏகரஸ–ஆகிய இவற்றை சாரமாக வுடைய

ஆத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக ப⁴க³வத³நவதி⁴காதிஶய
ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித -எப்போதும் தனக்கே நியமிக்கத் தகுந்தவனாய் இருக்கை என்ன –
நித்ய கைங்கர்யத்திலே ஊன்றி இருக்கை என்ன
இப்படிப்பட்ட ஸ்வ ஸ்வ பாவத்தை அனுசந்தித்திக் கொண்டு
எம்பெருமானது சிறந்த ஸ்வாமித்வம் முதலிய சகல கல்யாண குணங்களையும் அனுபவிப்பதனால் யுண்டான

அநவதி⁴கா திஶய ப்ரீதிகாரித -மிகுந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட

அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷஶேஷதைகரதிரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி –ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ப்ராவண்யம் கொண்டு இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்துக்கு உபாயமான பக்தி என்ன

தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந–அதுக்கும் உபாயமான பரிபக்குவ ஞானம் என்ன

தது³பாய ஸமீசீந க்ரியா -அதுக்கும் உபாயமான நல்ல கர்ம யோகம் என்ன –

தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ ஸமஸ்தாத்மகு³ணவிஹீந:–அதற்கும் உறுப்பான -ஸாத்விகத்வம் ஆஸ்திக்யம் முதலான ஆத்ம குணங்கள் என்ன
ஆகிய இவை சிறிதும் இல்லாதவனாய்

து³ருத்த ராநந்த
தத்³விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு³ண
அநாதி³ பாபவாஸநா மஹார்ணவ அந்தர்நிமக்³ந:–கீழ்ச் சொன்ன ஸம்யக் ஞான -ஸமீசீந கிரியைகளுக்கு மாறான
விபரீத ஞான
விபரீத கிரியைகளுக்கு
உறுப்பான அநாதி பாப வாஸனை யாகிற கடக்க முடியாத பெரும் கடலினுள்ளே மூழ்கிக் கிடப்பவனாய்

திலதைலவத்
தா³ருவஹ்நிவத்
து³ர்விவேச த்ரிகு³ண க்ஷண க்ஷரணஸ்வபா⁴வ
அசேதந ப்ரக்ருʼதி வ்யாப்திரூப
து³ரத்யய ப⁴க³வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ: –எள்ளில் எண்ணெய் போலவும்
கட்டையில் நெருப்பு போலவும் சாதாரணமாகப் பிரிக்க முடியாததாய்
ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களையும்
சதத பரிணாமித்வத்தையும் இயல்பாக யுடைத்தாய்
ஜடரூபமான ப்ரக்ருதியிலே அவர்ஜனீயமாய் இருந்துள்ள சம்பந்தத்தை யுடைத்தாய்
கடக்க அரிதான பகவத் மாயையினால் மறைக்கப் பட்ட ஸ்வ ப்ரகாஸத்தை யுடையனாய் –

அநாத்³யவித்³யா ஸஞ்சித
அநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்³ரதி²த: –அநாதியான அஞ்ஞானத்தினாலே திரட்டப்பட்டதாய்
எண்ணிறந்ததாய்
ஒருவராலும் அவிழ்க்க முடியாததாய் இருந்துள்ள
புண்ய பாப ரூப கர்மமாகிய கயிற்றினால் கட்டுண்டவனாய்

அநாக³த அநந்தகால ஸமீக்ஷயாঽபி
அத்³ருʼஷ்ட ஸந்தாரோபாய: — எத்தனை காலம் பார்த்தாலும் ஸம்ஸார நிஸ்தரண உபாயம் இன்னது என்று அறியப் பெறாது இருந்துள்ளவனான அடியேன்

நிகி²ல ஜந்துஜாத ஶரண்ய–ஸமஸ்த பிராண சமூகங்களுக்கும் சரண்யன் ஆனவனே
ஶ்ரீமந் நாராயண –பெரிய பிராட்டியாருடன் கூடி இருந்துள்ள நாராயணனே

தவ சரணாரவிந்த³ யுக³ளம் ஶரணமஹம் ப்ரபத்³யே ॥-உனது திருவடித் தாமரைகளை உபாயமாகப் பற்றுகிறேன்

—————-

கைங்கர்யத்தைப் பிரார்த்திப்பது:
ஏவமவஸ்தி²தஸ்யாபி * அர்தி²த்வமாத்ரேண பரமகாருணிகோ ப⁴க³வாந் * ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத
* ஐகாந்திக ஆத்யந்திக * நித்யகைங்கர்யைகரதிரூப * நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி * விஶ்வாஸபூர்வகம்
* ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே
॥–3-

ஏவமவஸ்தி²தஸ்யாபி –கீழ்ச் சூர்ணிகையில் விரிவாகச் சொன்னபடியே ஆகிஞ்சன்யாதி களே வடிவெடுத்து இருக்கின்ற எனக்கும்

பரமகாருணிகோ ப⁴க³வாந் –பேர் அருளானனான எம்பெருமான்

அர்தி²த்வமாத்ரேண -என் பக்கலில் உள்ள இரப்பையே கொண்டு

ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத
ஐகாந்திக ஆத்யந்திக
நித்யகைங்கர்யைகரதிரூப
நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி
விஶ்வாஸபூர்வகம்-தன்னை அனுபவிக்கும் உகப்பால் யுண்டாவதாய்
ஒருபடிப்பட்டதாய்
முடிவின்றிக்கே இருந்துள்ள
அடிமையிலேயே ஊற்றம் உற்று இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்தை அருளப் போகிறான் என்கிற நம்பிக்கையுடன்

ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே –எம்பெருமான் இடத்தில் நித்ய கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறேன் –

————–

தவாநுபூ⁴தி ஸம்பூ⁴த ப்ரீதிகாரித தா³ஸதாம் ।
தே³ஹி மே க்ருʼபயா நாத² * ந ஜாநே க³திமந்யதா² ॥
–4-

ஸர்வாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிஸ்தவ ।
ப⁴வேயம் புண்ட³ரீகாக்ஷ! * த்வமேவைவம் குருஷ்வ மாம் ॥
–5-

கீழே தம்முடைய பாசுரத்தால் பேற்றைப் பிரார்த்தித்தார்
இதிஹாஸஸ்லோகங்கள் இரண்டும் கொண்டு பிரார்திக்கிறார்
இவற்றுக்கு ஆகரம் கண்டு கொள்வது

எம்பெருமானே
உன்னை அனுபவித்த -அதனால் உண்டான உகப்பினால் விளையும் கைங்கர்யத்தை
பரம கிருபையினால் அடியேனுக்குத் தந்து அருள வேண்டும்
வேறு புகல் அறிகின்றிலேன்
செந்தாமரைக் கண்ணனே -ஸர்வ அவஸ்தைகளிலும் உனக்குச் செய்யக் கூடிய ஸகல வித கைங்கர்யங்களிலும் அடியேன் ருசி உடையேனாம் படி
நீ தானே செய்து அருள வேணும் என்கிறார் இந்த ஸ்லோகங்களாலே –

———

ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴* ததி³ச்சா²ரஹிதஸ்யாபி * ஏதது³ச்சாரண மாத்ராவலம்ப³நேந
* உச்யமாநார்த² பரமார்த² நிஷ்ட²ம் * மே மந: * த்வமேவாத்³யைவ காரய ॥
-6—

ஸ்ரீ ரெங்க நாதனே
உன்னுடைய திருவருளால் அடியேன் அதிகார பூர்த்தி பெற்றவனாக நினைத்து இருக்கிறேன்
ஒருகால் அப்படிப்பட்ட அதிகார பூர்த்தி இல்லையே யானாலும்
அடியேனிடத்தில் கிடைக்கின்ற யுக்தி வியாஜ்யத்தைக் கொண்டு நீயே சேஷ பூர்ணம் செய்து கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிறார் இந்த சூர்ணிகையில்

ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴ததி³ச்சா²ரஹிதஸ்யாபி –இப்படி மிகச் சிறந்த புருஷார்த்தத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வதும் -அறிந்து கொள்ள விருப்பமும் இல்லாதவனாய் இருந்தாலும் –

ஏதது³ச்சாரண மாத்ராவலம்ப³நேந-என் வாய் மொழி தன்னையே கொண்டு

மே மந: -என்னுடைய உள்ளத்தை

உச்யமாநார்த² பரமார்த² நிஷ்ட²ம் -உபாய உபேயங்களின் உண்மை யுணர்ச்சி பெற்றதாக

த்வமேவாத்³யைவ காரய ॥–நீ தானே இப்போதே செய்து அருள வேணும் –

குரு -என்னாதே -காரய -என்றது -அதுவும் அவனது இன்னருளே -என்ற பரம அர்த்தத்தைக் காட்டுவதற்காவே –

———–

இந்த வாத்மா உனக்கே போ₄க்யமாய்த் தலைக் கட்ட வேணுமென்பது:
அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர
* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!
* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர
* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண
* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

அபாரகருணாம்பு³தே⁴! –கரை கடந்த கருணைக் கடலே

அநாலோசித விஶேஷ அஶேஷலோகஶரண்ய! –குண தோஷ நிரூபணம் பண்ண மாட்டாமே ஸகல ஜகத்துக்கும் சரண்யனானவனே

ப்ரணதார்த்திஹர-அடி பணிந்தாருடைய ஆர்த்திகளைப் போக்குமவனே

ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! –அடியார் பக்கலில் உண்டான வாத்சல்யத்துக்கு முக்யமான மஹா ஸமுத்ரமே

அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!–ஸகல பூத ஸமூஹங்களுடைய உண்மையை எப்போதும் அறிந்து உள்ளவனே

அஶேஷசராசரபூ⁴த -நிகி²லநியமநிரத -அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த- நிகி²லஜக³தா³தா⁴ர
அகி²லஜக³த்ஸ்வாமிந் அஸ்மத்ஸ்வாமிந்

ஸத்யகாம -அவாப்த ஸமஸ்த காமனே

ஸத்யஸங்கல்ப -நினைத்தது செய்து தலைக்கட்டு வல்லவனே

ஸகலேதரவிலக்ஷண
அர்தி²கல்பக

ஆபத்ஸக² –ஆபத் பந்துவானவனே

காகுத்ஸ்த² –காகுத்ஸ வம்ஸ ப்ரஸூதனானவனே

ஶ்ரீமந்நாராயண –திரு மாலே

புருஷோத்தம -பரம புருஷனே

ஶ்ரீரங்க³நாத² –ஸ்ரீ ரெங்கநாதன்

மம நாத², –எம்பெருமானே

நமோঽஸ்துதே-தே நமஸ் அஸ்து -தேவரீருக்கே சேஷமான இவ்வாத்ம வஸ்து தேவரீருக்கே போக்யமாய்த் தலைக்கட்ட வேணும் என்கை-

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதம் ஶ்ரீரங்க³க³த்³யம் ஸமாப்தம் ॥

————–

॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥

எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்தில் அறுதியிட்ட அர்த்தம் பனை நிழல் போல் தம் ஒருவர் அளவிலே நின்று இராமே கற்பகக் காவின் நிழல் போல் உலகெல்லாம் பயன் பெற வேண்டும் என்று கருதி அருளினவராகையாலே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலவே யாம்படி உபாய உபேயங்களை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்து பர உபதேசத்தில் இழிகிறார் ஸ்ரீ வைகுண்ட கத்ய முகத்தாலே

பெரிய கத்யமான சரணாகதி கத்யத்திலே பொதுவாக எம்பெருமானை நோக்கின ஸ்வ ப்ரார்த்தனையாக அருளிச் செய்தார்

சிறிய கத்யமான ஸ்ரீ ரெங்க கத்யத்திலே அந்தப் பிரார்தனையை ஸுலபயத்துக்கு எல்லை நிலமான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்தார்

இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக பிறரை நோக்கி கர்தவ்ய உபதேசமாக அருளிச் செய்கிறார்
இதில் உபாய அம்சத்தைச் சுருங்க அருளிச் செய்து
உபேயமான அம்சத்தை மிகவும் பரக்க அருளிச் செய்கிறார்

இந்தக் கத்யம் ஆறு சூர்ணிகைகள் கொண்டதாய் இருக்கும் -அவற்றின் தாத்பர்ய ஸாரம் வருமாறு

சூர்ணிகை -1- எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வை லக்ஷண்யத்தையும் -தன்னுடைய நிலைமையையும் அநுஸந்தித்து
அப்பெருமானுடைய ஸுலப்யம் முதலிய திருக் குணங்களே பற்றாஸாக அவன் திருவடிகளிலே சரணம் புக வேணும் என்கிறது

சூர்ணிகை -2-பேற்றுக்கு ஒருகால் அனுசந்திக்கையே போதுமாய் இருக்கச் செய்தேயும்
நெஞ்சு வேறே ஒன்றில் செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்குமாக
நித்ய அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது

சூர்ணிகை -3-இவ்வதிகாரி அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று ப்ரக்ருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்
கடந்து சென்று புகுகிற நித்ய விபூதியின் வைபவத்தையும்
அந்த தேச விசேஷத்தினுடைய பண்பையும்
அங்குள்ள அலங்காரங்களையும்
அப்படிப்பட்ட இடத்தில் நாச்சியாரும் ஸர்வேஸ்வரனுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அந்த நாச்சிமாருக்கு அநுபாவ்யமான வடிவு அழகையும் -திவ்ய ஆபரணச் சேர்த்தியையும் -திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
வழுவிலா அடிமை செய்யும் நித்ய ஸூரி பரிஷத்தையும்
அவர்களுடைய நித்ய கைங்கர்யத்துக்கு இலக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அனுசந்தித்து
நாம் இப்பேற்றை எப்போது பெறக் கடவோம் என்று பாரித்து
அப் பாரிப்பின் படியே சென்று கிட்டி
எம்பெருமானே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் என்கிறது

சூர்ணிகை -4- ஸ்வ அபேக்ஷித்தத்தின் படியே எம்பெருமானாலே ஸ்வீ கரிக்கப் பட்டவனாய்க் கொண்டு அநுகூல விருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான் என்கிறது

சூர்ணிகை -5-இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்து இருந்த இழவு தீர அந்நிய பரதை அற்று இமையாத கண்ணினனாய்க் கொண்டு ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் படியைச் சொல்கிறது

சூர்ணிகை -6- இப்படி வந்து சேர்ந்த இவனை எம்பெருமான் வினவிக் குளிரக் கடாக்ஷித்துத் திருவடிகளைத் தலை மேல் வைக்க அடி சூடும் அரசு பெற்று நித்ய ஆனந்த ஸாலியாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது

————-

யாமுநார்ய ஸுதா⁴ம்போ⁴தி⁴மவகா³ஹ்ய யதா²மதி ।
ஆதா³ய ப⁴க்தியோகா³க்²யம் * ரத்நம் ஸந்த³ர்ஶயாம்யஹம் ॥

ஆளவந்தார் ஆகிற அமுதக் கடலிலே படிந்து குடைந்தாடி
பக்தி யோகமாகிற ரத்னத்தை
யதா மதி எடுத்து அன்பர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கிறேன் என்கை
இங்கு பக்தி யோகம் என்றது ஸாத்ய பக்தியான ப்ரபத்தியையே சொன்னபடியாம் –
இதன் மேலே -தத் பாதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யத் ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி சாதனமஸ் தீதி -என்று
அருளிச் செய்தது பொருந்துவதற்காக –

ஆளவந்தாருடைய திருவருள் அடியாக கிடைத்த அர்த்தங்களை அன்பர்களுக்கு நித்ய அனுசந்தேயமாக வெளியிடுகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் தேர்ந்த கருத்து –

——–

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப கு₃ண வைலக்ஷண்யங்கள்:

ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³ யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜ: ப்ரப்⁴ருʼத்
யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம் * பரமபுருஷம் * ப⁴க³வந்தம் * நாராயணம்
* ஸ்வாமித்வேந ஸுஹ்ருʼத்த்வேந கு³ருத்வேந ச பரிக்³ருʼஹ்ய ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ
த்³வய பரிசர்யைக மநோரத:² * தத்ப்ராப்தயே ச தத்பாதா³ம்பு³ஜத்³வய ப்ரபத்தேঃ
* அந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: * தஸ்யைவ ப⁴க³வதோ நாராயணஸ்ய
* அகி²லஸத்த்வ த³யைக ஸாக³ரஸ்ய * அநாலோசித கு³ணக³ண அக²ண்ட³ஜநாநுகூல மர்யாதா³ஶீலவத:
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய கு³ணவத்தயா தே³வதிர்யங்மநுஷ்யாத்³யகி²லஜந ஹ்ருʼத³ய ஆநந்த³நஸ்ய
* ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே:⁴ * ப⁴க்தஜந ஸம்ஶ்லேஷைக போ⁴க³ஸ்ய
* நித்ய ஜ்ஞாந க்ரியைஶ்வர்யாதி³ போ⁴க³ஸாமக்³ரீ ஸம்ருʼத்³த⁴ஸ்ய * மஹாவிபூ⁴தே:
* ஶ்ரீமச் சரணாரவிந்த³யுக³ளம் அநந்யாத்மஸஞ்ஜீவநேந * தத்³க³தஸர்வபா⁴வேந * ஶரணம் அநுவ்ரஜேத் ॥
1 ॥

ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் –மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன் அதீனமாக இருக்கப் பெற்ற

க்லேஶ கர்மாத்³ யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்–அவித்யை முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
புண்ய பாப ரூபா கர்மம் என்ன
இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத

ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய
வீர்ய ஶக்தி தேஜ: ப்ரப்⁴ருʼத் யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம் –ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக்கல்யாண குண திரள் களுக்கு கடல் போன்று

பரமபுருஷம் * ப⁴க³வந்தம் * நாராயணம்–புருஷோத்தமனாய் -ஷாட் குண்ய பரிபூர்ணனான ஸ்ரீ மன் நாராயணனை

ஸ்வாமித்வேந ஸுஹ்ருʼத்த்வேந கு³ருத்வேந ச பரிக்³ருʼஹ்ய –சேஷியாகவும்
நேசனாகவும்
ஆச்சார்யனாயும் ஏற்றுக் கொண்டு

ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ த்³வய பரிசர்யைக மநோரத:² –எப்போதும் அப்பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளைப் பற்றிய கைங்கர்யம் ஒன்றே செய்ய வேண்டும் என்னும் பாரிப்பை யுடையவனாய்

தத்ப்ராப்தயே ச தத்பாதா³ம்பு³ஜத்³வய ப்ரபத்தேঃ
அந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: –அந்தக் கைங்கர்யத்தைப் பெறுவதற்கு கல்ப கோடி ஸஹஸ்ரமானாலும்
அப் பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளையே நம்பி இருப்பதில் காட்டிலும் வேறே ஓன்று எனக்கு உபாயமாக இல்லை என்று எண்ணினவனாய்

அகி²லஸத்த்வ த³யைக ஸாக³ரஸ்ய –எல்லாப் பிராணிகள் இடத்திலும் கருணைக் கடலாய்

அநாலோசித கு³ணக³ண அக²ண்ட³ஜநாநுகூல மர்யாதா³ஶீலவத:–குண தோஷங்களில் ஆராய்ச்சி இன்றிக்கே ஸகல ஜனங்களுக்கும் அநுகூலமாய் இருக்கிற எல்லை கடந்த சீல குணத்தை யுடையனாய்

ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய கு³ணவத்தயா தே³வதிர்யங்மநுஷ்யாத்³யகி²லஜந ஹ்ருʼத³ய ஆநந்த³நஸ்ய–இயற்கையாகவே உயர்வற உயர்நலம் யுடையவனாகையாலே
தேவர்கள் மநுஷ்யர்கள் தியக்குகள் முதலிய சகல பிராணிகளுடைய உள்ளத்தை உகப்பிக்குவனாயும்

ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே:⁴ –அடியார்கள் திறத்து வாத்சல்யக் கடலாயும்

ப⁴க்தஜந ஸம்ஶ்லேஷைக போ⁴க³ஸ்ய–பக்த ஜனங்களுடன் கலந்து பரிமாறுமது ஒன்றையே தனக்குப் பேர் இன்பமாகக் கொண்டவனாயும்

நித்ய ஜ்ஞாந க்ரியைஶ்வர்யாதி³ போ⁴க³ஸாமக்³ரீ ஸம்ருʼத்³த⁴ஸ்ய –நித்யமும் -ஸகல விஷயகமாயும் உள்ள ஞானம் என்ன -தனக்கு லீலையாய் இருக்கிற கிரியைகள் என்ன ஐஸ்வர்யம் என்ன
இவை போல்வனவான போக ஸாமக்ரியைகள் நிரம்பி இருக்கப் பெற்றவனாய்

மஹாவிபூ⁴தே:–மிகச்சிறந்த விபூதியையும் யுடையனாய் இருக்கிற

தஸ்யைவ ப⁴க³வதோ நாராயணஸ்ய -அந்த எம்பெருமானுடையவே

ஶ்ரீமச் சரணாரவிந்த³யுக³ளம் -திருவடித்தாமரை இணையை

அநந்யாத்மஸஞ்ஜீவநேந * தத்³க³தஸர்வபா⁴வேந –ஆத்ம உஜ்ஜீவனம் இஃது ஒழிய வேறு ஓன்று இல்லை என்று இருக்கிற ஐகாந்திகமான நினைவோடு

ஶரணம் அநுவ்ரஜேத் ॥ -புருஷார்த்தத்துக்கு இவனே சாதனம் என்று அத்யவசாயம் கொள்ளக் கடவேன் என்றபடி

இப்படி ஒருகால் சரணம் புகுந்து விடும் இத்தனையோ என்னில் பேற்றுக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
கால ஷேபத்துக்கும்
இனிமையால் விட ஒண்ணாமைக்குமாக
இவ்வத்யவசாயம் நாள்தோறும் இடையறாது செல்ல வேணும் என்கிறது மேல்

————–

ததஶ்ச ப்ரத்யஹம் * ஆத்மோஜ்ஜீவநாயைவமநுஸ்மரேத் ॥ 2 ॥

பிற்பாடும் நாடொறும் தன்னை உஜ்ஜீவனம் செய்து கொள்வதற்காக இங்கனம் அநுஸ்யூதமாக ஸ்மரிக்க வேண்டும்
அது மேலே சொல்லுகிறது

————-

நித்யவிபூ₄தி வைப₄வம் –
தி₃வ்யலோகம்:
சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே

பதினான்கு லோகங்கள் மலிந்த அண்டத்தையும்
மேன் மேலும் பதின் மடங்கு அதிகமாய் இருக்கின்ற ஸப்த ஆவரணங்களையும்
மற்றுமுள்ள ஸமஸ்த கார்ய காரண வர்க்கங்களையும்
கடந்து அப்பால் விளங்கா நின்ற

பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே

ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே –பரம ஆகாஸம் என்னும் சொல்லால் சொல்லப்படுகிற

ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே –பிரமன் முதலூக்கு வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாத

ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே -ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில்

ஐஶ்வர்யம்:
ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:
* அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே
* தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யே

ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி
அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை:
நித்யஸித்³தை⁴:
அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே—ப்ரஹ்ம பாவனையில் தலை நின்ற ஸநகாதிகளுக்கும்
கர்ம பாவனையில் தலை நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நினைக்க ஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்
எப்போதும் பகவத் அனுபவ நிரதராய்
எண்ணிறந்தவர்களாய்
எம்பெருமான் பக்கல் பரிவே வடிவெடுத்தவர் களாய்
பூமியில் கால் பாவாதவர்களான மஹாத்மாக்களினால் மிடைந்ததாய்

தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி பரிச்சே²த்து மயோக்³யே–அந்த மஹாத்மாக்களுக்கும் அளவிட ஒண்ணாத
பரிணாமம் என்ன
ஐஸ்வர்யம் என்ன
ஸ்வ பாவம் என்ன –இவற்றை யுடையதாய்

திருக் கோயில்:
தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந
ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *

தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே –லோக விலக்ஷணமான ஆயிரம் திரு மதிள்களை யுடைத்தாய்

தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே -அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே போக்யமாய்

தி³வ்யோத்³யாந ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே -அநேகமாயிரம் திருத் தோப்புக்களால் சூழப்பட்டதாய்

அதிப்ரமாணே தி³வ்யாயதநே –அகலமும் நீளமும் அளவிட ஒண்ணாததான திருக்கோவிலிலே

திரு வோலக்க மண்டபம்:
கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே * தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத
ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே * தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே * தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே
* பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:
* தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே * ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:
* அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் * அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ

கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே –பலவகைப்பட்ட திவ்ய ரத்னங்களாலே பிரகாரமாய் இருப்பதான தொரு திரு ஓலக்க மண்டபத்திலே

தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே –அநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களால் விளக்கமுற்றதாய்

தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே -அப்ராக்ருதமான பலவகைப்பட்ட மாணிக்கங்கள் செறிந்த தரையை யுடைத்தாய்

தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே-மேல்கட்டி திருத்திரை முதலான திவ்ய அலங்காரங்களினால் அழகு பெற்றதாய்

பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:

  • தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே –சுற்றிலும் உதிர்ந்தவைகளும் -உதிர்ந்து கொண்டே இருப்பவைகளும்
    மரங்களிலே நிற்பவைகளும்
    பலவகைப்பட்ட பரிமளத்தையும் நிறத்தையும் உடையவைகளுமான திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே ஸோபிதமாய்

ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:–ஒன்றோடு ஓன்று கலசி இருக்கிற பாரிஜாதம் முதலான கல்ப விருக்ஷங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்

(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய உத்யான சத ஸஹஸ்ரை )

அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் -ஒன்றோடு ஓன்று சேர்ந்து இராத சில

அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ–உள்ளே இருக்கின்ற புஷ்பம் ரத்னம் முதலியவற்றால் அமைக்கப்பட்ட அநேகம் ஆயிரம் திவ்ய லீலா மண்டபங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்

————–

க்ரீடா₃ஶைலங்கள்:
ஸர்வதா³ அநுபூ⁴யமாநைரபி * அபூர்வவத் ஆஶ்சர்யமாவஹத்³பி:⁴ * க்ரீடா³ஶைல ஶதஸஹஸ்ரை: அலங்க்ருʼதை:

ஸர்வதா³ அநுபூ⁴யமாநைரபி
அபூர்வவத் ஆஶ்சர்யமாவஹத்³பி:⁴ –எப்போதும் அனுபவிக்கப் படா நிற்கவும் அபூர்வ வஸ்து போலே ஆச்சர்யத்தை விளைவிப்பவைகளும்

க்ரீடா³ஶைல ஶதஸஹஸ்ரை: அலங்க்ருʼதை:–அநேகம் ஆயிரம் விளையாட்டுக் குன்றுகளாலும் அலங்கரிக்கப் பட்டவர்களும்

————–

லீலோத்₃யாநங்கள்:
கைஶ்சிந் நாராயண தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை: * கைஶ்சித் பத்³மவநாலயா தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை:
* ஸாதா⁴ரணைஶ்ச கைஶ்சிச் சு²கஶாரிகா மயூரகோகிலாதி³பி:⁴ * கோமலகூஜிதைராகுலை:
* தி³வ்யோத்³யாநஶத ஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே,

எம்பெருமானுடைய லீலைக்கே உரியவர்கள் சிலவும்
பிராட்டியுடைய லீலைக்கே உரியவைகள் சிலவும்
இருவருடையம் லீலைக்கே உரியவைகள் சிலவுமாய்
அழகிய குரலை யுடைய
கிளிகள்
பூவைகள்
மயில்கள்
குயில்கள் -முதலான பறவைகளின் கோலாஹலம் பொருந்தின திவ்யமான நூறாயிரம் பொழல்களாலே சூழப்பட்டதாய்

————–

நீரோடைகள்:
மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: * தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: * தி³வ்யாண்ட³ ஜவரை:
* அதிரமணீய த³ர்ஶநை: * அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: * அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:
* தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: * தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,

மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: –ரத்னம் முத்து பவளம் முதலியவற்றால் செய்யப்பட்ட படிகளை யுடையவனவாய்

(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய ஸுகாந்திக வாபீ சத ஸஹஸ்ரை -என்பது )

தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: -அப்ராக்ருதமும் நிர் மலமும் அம்ருதம் போலே ரஸ வத்துவமான நீர்ப்பரப்பை யுடையவனாய்

தி³வ்யாண்ட³ ஜவரை:
அதிரமணீய த³ர்ஶநை:
அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: –கண்ணுக்கு அழகியவைகளும்
பேச்சில் இனிமை யுடையவைகளுமான
அப்ராக்ருத பஷிகளாலே வ்யாப்தங்களாய்

அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:-உள்ளே உண்டான முத்துக்களாலான லீலா ஸ்தானங்களாலே ஸோபிதங்களாய்

தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: –அப்ராக்ருதமான செங்கழு நீரோடையால் பல ஆயிரம் நிறைந்துள்ளாய்

தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,–ஸூத்த ஸத்வ மயமான ராஜ ஹம்ஸங்கள் விளங்கிக் கொண்டு இருப்பவைகளான

———–

லீலா ஸ்தானங்கள்:
நிரஸ்தாதிஶய ஆநந்தை³கரஸதயா ச * ஆநந்த்யாச்ச ப்ரவிஷ்டாநுந்மாத³யத்³பி:⁴ * க்ரீடோ³த்³தே³ஶைர்விராஜிதே,

உயர்வற உயர்ந்த ஆனந்தமே வடிவெடுத்து இருக்கையாலும்
அபரிச்சின்னமாய் இருக்கையாலும்
உள் புக்கவர்களை மயக்க வல்ல லீலா ஸ்தானங்களாலே விளங்கா நிற்பதாய்

———–

பூம் பள்ளிகள்:
தத்ர தத்ர க்ருʼத தி³வ்ய புஷ்ப பர்யங்க உபஶோபி⁴தே,

அவ்வவ்விடங்களிலே பண்ணப்பட்ட பூம் பள்ளிகள் விளங்கா நிற்பதாய்

——-

வண்டுகளின் கானம்:
நாநாபுஷ்ப ஆஸவாஸ்வாத³ மத்த ப்⁴ருʼங்கா³வலீபி⁴: * உத்³கீ³யமாந தி³வ்ய கா³ந்த⁴ர்வேண ஆபூரிதே,

பலவகைப்பட்ட புஷ்பங்களில் யுண்டான மதுவைப் பருகிக் களித்த வண்டுத் திரள்கள் பாடும் திவ்ய ஸங்கீதம் நிறைந்ததாய்

———

மந்த மாருதம்:
சந்த³நாக³ரு கர்பூர தி³வ்ய புஷ்ப அவகா³ஹி மந்தா³நிலாஸேவ்யமாநே,

சந்தனம் -அகில் -பச்சைக் கற்பூரம் -திவ்ய புஷ்பங்கள் ஆகிய இவற்றின் உள் புகுந்து
அங்குள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற மந்த மாருதம் வீசப் பெற்றதாய்

——-

திருப் பள்ளிக் கட்டில்:
மத்⁴யே திவ்ய புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே * மஹதி தி³வ்ய யோக³பர்யங்கே அநந்த போ⁴கி³நி,

மத்⁴யே திவ்ய புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே –இடையிலே விடு பூக்களினால் சித்தரிக்கப் பட்டதான

மஹதி தி³வ்ய யோக³பர்யங்கே –பெரிய திருப்பள்ளிக்கு கட்டிலிலே

அநந்த போ⁴கி³நி -திருவனந்தாழ்வான் மீது

————-

பிராட்டியோடு சேர்த்தி:
ஶ்ரீமத்³வைகுண்டை² ஐஶ்வர்யாதி³ தி³வ்யலோகம் * ஆத்ம காந்த்யா விஶ்வமாப்யாய யந்த்யா
* ஶேஷ ஶேஷாஶநாதி³ ஸர்வம் பரிஜநம் * ப⁴க³வத: தத்தத³வஸ்தோ²சித * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா
* ஶீலரூப கு³ண விலாஸாதி³பி⁴: * ஆத்மாநுரூபயா ஶ்ரியா ஸஹாஸீநம்,

ஶ்ரீமத்³வைகுண்டை² ஐஶ்வர்யாதி³ தி³வ்யலோகம் * ஆத்ம காந்த்யா விஶ்வமாப்யாய யந்த்யா–ஸ்ரீ வைகுண்டச் செல்வம் முதலிய திவ்ய லோகம் முழுவதையும் தனது ஒளியினால் விளங்கச் செய்து மகிழ்விப்பவளும்

ஶேஷ ஶேஷாஶநாதி³ ஸர்வம் பரிஜநம் * ப⁴க³வத: தத்தத³வஸ்தோ²சித * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யாஶீலரூப கு³ண விலாஸாதி³பி⁴: * ஆத்மாநுரூபயா –திரு அநந்தாழ்வான் -சேனாபதி ஆழ்வான் முதலிய சகல பரிஜனத்தையும்
எம்பெருமான் அந்த அந்த அவஸ்தைகளுக்கு உரிய கைங்கர்யங்களில் நியமிப்பவளும்
சீலம் வடிவு குணம் ஸ்ருங்கார ரஸம் முதலியவற்றால் தனக்கு ஏற்றவளுமான

ஶ்ரியா ஸஹாஸீநம்,-பிராட்டியாரோடே கூடி வீற்று இருந்து அருள்பவனும்

——-

திருக்கண்கள், திருமேனி முதலியன:
ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் * அத்யுஜ்வலபீத வாஸஸம்
* ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்
* அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்
* அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்
* ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் * ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் * உஜ்வலாத⁴ரம் * ஶுசிஸ்மிதம்
* கோமலக³ண்ட³ம் * உந்நஸம் * உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்
* ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் * தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்
* தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்

ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * –அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூ போன்ற திருக் கண்களை யுடையவனும்

ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் –விமலமான கார் முகில் போன்றவனும்

அத்யுஜ்வலபீத வாஸஸம்-மிகவும் புகர் பெற்று விளங்குகின்ற பீதக வாடையை யுடையவனும்

ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்–மிக நிர்மலமாய் –மிகக் குளிர்ந்ததாய் -மிகவும் ஸூ குமாரமுமாய் -ஸ்வச்சமாய் –
மாணிக்கம் போன்றதான தனது திவ்ய காந்தியினால் உலகம் முழுவதையும் விளங்காச் செய்யா நின்றவனும் –

அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்–சிந்தைக்கு எட்டாததாய் –திவ்யமாய் –ஆச்சர்யமாய் -நித்தியமாய் இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய லாவண்யம் நிறைந்த அமுதக் கடலாய் –

அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்–மிகவும் ஸூ குமாரமாதலால் -சிறிது குறு வியர்ப்பு அரும்பினால் போல் காண்கின்ற திரு நெற்றியிலே படிந்த திருக் குழல்களாலே விளங்கா நிற்பவனாய்

ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் –அப்போது அலர்ந்த தாமாரைப் பூப் போன்ற அழகிய திருக்கண்களை யுடையவனாய்

ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் –விலாசத்தோடு கூடிக் கொடி போன்றதான திருப்புருவங்களை யுடையவனாய்

உஜ்வலாத⁴ரம் -பிரகாசிக்கின்ற திரு அதரத்தை யுடையவனாய்

ஶுசிஸ்மிதம்–கபடமற்ற புன் சிரிப்பை யுடையவனாய்

கோமலக³ண்ட³ம் –அழகிய கபோலங்களை யுடையவனாய்

உந்நஸம் –உயர்ந்த திரு மூக்கை யுடையவனாய்

உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்–உயர்ந்தும் பருத்தும் இருக்கிற திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்று சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை யுடையவனாய்

ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்–பிராட்டிமார்களுக்கு கர்ண அலங்காரமான கரு நெய்தல் மலர் என்ன -கர்ண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன ஆகிய இவை அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவையாகித் திரு முழந்தாள் வரை தொங்குகின்ற நான்கு புஜங்களோடே பிரகாசிக்கின்றவனாய்

அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் –மிகவும் அழகிய -தாமரை சங்கு சக்கரம் முதலான ரேகைகளினால் அலங்கரிக்கப் பட்டுச் சிறிது சிவந்து இருக்கிற திருக் கைத் தலத்தை யுடையவனாய்

தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்–அப்ராக்ருதமான மோதிரங்களினால் விளங்குபவனாய்

அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்-மிகவும் ஸூ குமாரமான திரு நகங்களினால் விளங்குகின்ற மிகச் சிவந்த திருவிரல்களால் அலங்கரிக்கப் பட்டவனாய் –

அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம்-என்று இடையிலே பிரித்து எம்பெருமானுக்கு தனி விசேஷணம் ஆக்கவுமாம்
அநு ரக்த -அதி ரக்த -பாட பேதங்கள்

தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்–அப்போது அலர்ந்த புண்டரீகத்தோடு ஒத்த திருவடி இணையை யுடையவனாய்

—–

தி₃வ்யாபரணங்கள்:
அதிமநோஹர கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராதி³பி⁴:
* அத்யந்த ஸுக² ஸ்பர்ஶை: தி³வ்யக³ந்தை⁴: * பூ⁴ஷணைர்பூ⁴ஷிதம்,

மிகவும் ஸூகமான ஸ்பர்சத்தை யுடையவைகளும்
திவ்யமான பரிமளத்தை யுடையவைகளுமான
மிக அழகிய கிரீடம் –நூபுரம் முதலான திவ்ய பூஷணங்களினால் பூஷிதனாய்

—————-

திருமாலை:
ஶ்ரீமத்யா வைஜயந்த்யா வநமாலயா விராஜிதம்,

அழகிய வைஜயந்தி என்னும் வனமாலையினால் விளங்குபவனாய்

———-

தி₃வ்ய ஆயுதங்கள்:
ஶங்க² சக்ர க³தா³ஸி ஶார்ங்கா³தி³ தி³வ்யாயுதை:⁴ ஸேவ்யமாநம்,

பஞ்சாயுத ஆழ்வார்கள் முதலான திவ்ய ஆயுதங்களினாலே சேவிக்கப் படுபவனாய்

——-

ஸேனாபதியாழ்வான் முதலானோருடைய கைங்கர்யம்:
ஸ்வஸங்கல்பமாத்ர அவக்லுʼப்த * ஜக³ஜ்ஜந்ம ஸ்தி²தி த்⁴வம்ஸாதி³கே * ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த*
ஸமஸ்த ஆத்மைஶ்வர்யம் * வைநதேயாதி³பி:⁴ * ஸ்வபா⁴வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வை:
* ப⁴க³வத் பரிசர்யாகரண யோக்³யை: * ப⁴க³வத் பரிசர்யைக போ⁴கை:³ * நித்யஸித்³தை⁴: அநந்தை: யதா²யோக³ம் ஸேவ்யமாநம்
* ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் * தி³வ்யாமல கோமல அவலோகநேந * விஶ்வமாஹ்லாத³யந்தம்
* ஈஷது³ந்மீலித முகா²ம்பு³ஜ உத³ர விநிர்க³தேந * தி³வ்யாநநாரவிந்த³ ஶோபா⁴ஜநநேந *
தி³வ்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய ஸௌந்த³ர்ய மாது⁴ர்யாத்³யநவதி⁴க கு³ணக³ண விபூ⁴ஷிதேந *
அதிமநோஹர தி³வ்ய பா⁴வக³ர்பே⁴ண * தி³வ்ய லீலாலாப அம்ருʼதேந * அகி²லஜந ஹ்ருʼத³யாந்தராணி ஆபூரயந்தம் *
ப⁴க³வந்தம் நாராயணம் * த்⁴யாநயோகே³ந த்³ருʼஷ்ட்வா * [ததோ] ப⁴க³வதோ நித்யஸ்வாம்யம் *
ஆத்மநோ நித்யதா³ஸ்யம் ச * யதா²வஸ்தி²தம் அநுஸந்தா⁴ய

ஸ்வஸங்கல்பமாத்ர அவக்லுʼப்த * ஜக³ஜ்ஜந்ம ஸ்தி²தி த்⁴வம்ஸாதி³கே * ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த*
ஸமஸ்த ஆத்மைஶ்வர்யம் –நினைத்த மாத்ரத்தாலேயே ஸகல ஜகத்தினுடையவும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளை நிர்வஹிக்க வல்ல ஸேனாபதி ஆழ்வான் பக்கலிலே தன்னுடைய நியமனச் செல்வம் எல்லாம் ஒப்படைத்து இருப்பவனாய்-

வைநதேயாதி³பி:⁴ * ஸ்வபா⁴வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வை:

  • ப⁴க³வத் பரிசர்யாகரண யோக்³யை: * ப⁴க³வத் பரிசர்யைக போ⁴கை:³ * நித்யஸித்³தை⁴: அநந்தை: யதா²யோக³ம் ஸேவ்யமாநம்-இயற்கையாகவே ஸாம்ஸாரிக ஸ்வ பாவம் ஒன்றும் இல்லாதவர்களும்
    எம்பெருமானுக்குத் தொண்டு பூண்டவர்களும்
    அந்தக் கைங்கர்யத்தையே நித்ய போகமாக யுடையவர்களுமான
    பெரிய திருவடி முதலான எண்ணிறந்த ஸூரிகளாலே முறைமைப்படி ஸேவிக்கப் படுபவனாய்

ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் –ஸ்வ ஆத்ம அநுபவத்தினால் அளவிறந்த காலம் கடந்தமையும் அறிய கில்லாதவனாய்

ஆத்மபோ⁴கே³ந-என்பதற்கு
ஆச்சான் பிள்ளை -இகடாக்ஷம் பரார்த்தமாக அன்றிக்கே கால தத்வம் உள்ளதனையும் ஸ்வ ப்ரயோஜனமாகவே அனுசந்திக்கப்பட்டு
விலக்ஷணமாய் அபராதங்களை நினைத்த்துக் கலங்குகை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன ஸூ ந்தரமான கடாக்ஷத்தாலே -என்கிற வியாக்கியான ஸ்ரீ ஸூ க்தி இருப்பதால்
அநநு ஸம்ஹித -என்கிற ஸ்தானத்தில் அநு ஸம்ஹித-பாடமும்
பராதிகாலம் -என்று தனிப்படை அன்றிக்கே -பகவத் விசேஷணமாக அல்லாமல் -ஸமஸ்த பதமாய் -அவ லோகந விசேஷணமாகக் கொள்ளுகிற பாடமும் தோன்றுகிறது
பல ஸ்ரீ கோஸங்களிலும் பெரியோர்களின் அனுசந்தான பரம்பரைகளிலும் உள்ள பாடமே இங்கே நிவேசிக்கப் பட்டது
ஆத்ம போகமாவது -ரசாந்தாநந்தாத்ம அநுபவ ஜ -இத்யாதி வரதராஜ ஸ்தவ ஸ்ரீ ஸூக்தியில் பிரஸ்தாபிக்கப் பட்ட பரமபத நாதனுக்கு உண்டான ஸ்வ ஆத்ம அனுபவம் –
பிரமனுடைய ஆயுஸ் காலத்துக்கு பரம் என்று பெயர் -அப்படிப்பட்ட பெரிய கால பரிணாமம் தெரியாமல் செல்லுகிறதாம் ஸ்வ ஆத்ம அனுபவத்தில்
க்ஷண அணு வத் ஷிப்த பராதிகாலயா -என்று ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூ க்தியும் உண்டே )

தி³வ்யாமல கோமல அவலோகநேந * விஶ்வமாஹ்லாத³யந்தம்–திவ்யமாய் நிர்மலமாய் ஸூந்தரமான கடாக்ஷ வீக்ஷணங்களினால்
ஸமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய்

ஈஷது³ந்மீலித முகா²ம்பு³ஜ உத³ர விநிர்க³தேந * தி³வ்யாநநாரவிந்த³ ஶோபா⁴ஜநநேந *
தி³வ்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய ஸௌந்த³ர்ய மாது⁴ர்யாத்³யநவதி⁴க கு³ணக³ண விபூ⁴ஷிதேந *
அதிமநோஹர தி³வ்ய பா⁴வக³ர்பே⁴ண * தி³வ்ய லீலாலாப அம்ருʼதேந * அகி²லஜந ஹ்ருʼத³யாந்தராணி ஆபூரயந்தம் *
ப⁴க³வந்தம் நாராயணம் –சிறிது அலர்ந்த திருமுகத்தாமரையின் இடையில் நின்றும் உண்டானதாய்த்
திருப் பவளத்துக்கு ஆபரணம் சாத்தினால் போலே அழகை யுண்டாக்கக் கடவதாய்
திவ்யமான காம்பீர்யம் ஒவ்தார்யம் மாதுர்யம் முதலான எண்ணிறந்த குணத் திரள்களாலே அலங்ருதமாய் அதி மநோ ஹரமான அபிப்ராய விசேஷத்தை உள்ளே யுடைத்தான திவ்யமான ரஸோக்தியாகிய அமுதத்தினால் எல்லாருடைய ஹ்ருதய அவகாஸங்களையும் நிரப்புபவனான பகவன் நாராயணனை

த்⁴யாநயோகே³ந த்³ருʼஷ்ட்வா -உட்கண்ணால் ஸாஷாத் கரித்து

[ததோ] ப⁴க³வதோ நித்யஸ்வாம்யம் *
ஆத்மநோ நித்யதா³ஸ்யம் ச * யதா²வஸ்தி²தம் அநுஸந்தா⁴ய-பிறகு -அப்பெருமானுக்கு இயற்கையாயுள்ள சேஷித்வத்தையும்
தனக்கு இயற்க்கையாயுள்ள சேஷத்வத்தையும் உள்ளபடி அனுசந்தித்து

—————

ஸர்வேஶ்வரனைக் கிட்டி அநுப₄விப்பது – ஆத்ம நிவேதநம்:
“கதா³ஹம் ப⁴க³வந்தம் நாராயணம் * மம குலநாத²ம் * மம குலதை³வதம் * மம குலத⁴நம் * மம போ⁴க்³யம் *
மம மாதரம் * மம பிதரம் * மம ஸர்வம் * ஸாக்ஷாத் கரவாணி சக்ஷூஷா

என் குல நாதனாய்
என் குல தைவமாய்
என் குலச் செல்வமாய்
எனக்குப் பரம போக்யனாய்
எனக்குத் தாயாய் தந்தையாய் எல்லாமுமான
பகவன் நாராயணனை நான் எப்போது கண்ணாரக் காண்பன் -என்றும்

கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜ த்³வயம் *
ஶிரஸா தா⁴ரயிஷ்யாமி

எம்பெருமானது திருவடித் தாமரை இணையை எப்போது நான் தலையால் தங்கப் போகிறேன் -என்றும்

கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜத்³வய * பரிசர்யாகரண யோக்³ய: * தத்பாதௌ³ பரிசரிஷ்யாமி *
கதா³ஹம் ப⁴க³வத்பாதா³ம்பு³ஜத்³வயம் பரிசர்யாஶயா * நிரஸ்த ஸமஸ்தேதர போ⁴கா³ஶ: * அபக³த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வ: *
தத்பாதா³ம்பு³ஜ த்³வயம் ப்ரவேக்ஷ்யாமி

எம்பெருமான் திருவடித் தாமரை இணையில் கைங்கர்ய ருசியாலே விஷயாந்தரங்கள் எல்லாவற்றிலும் காதல் கழிந்தவனாய்
ராக த்வேஷங்களாகிற ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வ பாவங்களும் அகன்றவனாய் அடியேன் எப்போது அடியிணையைகிட்டுவேன் -என்றும்
இந்த வாக்யத்துக்குப் பின்பும் முன் வாக்கியத்தை மீண்டும் அநுஸந்திக்கும் பாடமும் உண்டு
என்றைக்கு அடியேன் அத்திருவடி இணை களில் அடிமை செய்ய உரியவனாய்
அவ் வடிமையில் உறுதி கண்டவனாய்
அத்திருவடி இலைகளில் அடிமை பூண்பேன்

கதா³மாம் ப⁴க³வாந் ஸ்வகீயயா * அதிஶீதலயா த்³ருʼஶா அவலோக்ய *
ஸ்நிக்³த⁴ க³ம்பீ⁴ர மது⁴ரயா கி³ரா * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயிஷ்யதி”

அப் பெருமான் தனது மிகக் குளிர்ந்த திருக் கண்களாலே கடாக்ஷித்து முழங்கி இனிதான பேச்சாலே
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்கிறபடியே கைங்கர்யத்திலே என்னை ஏவப் புகுகிறது எப்போதோ என்றும்

ஆக இப்படி எல்லாம் மநோ ரதித்து

இதி * ப⁴க³வத்பரிசர்யாயாம் ஆஶாம் வர்த⁴யித்வா *
தயைவாஶயா * தத்ப்ரஸாத³ உபப்³ருʼம்ஹிதயா * ப⁴க³வந்தம் உபேத்ய * தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *

இதி * ப⁴க³வத்பரிசர்யாயாம் ஆஶாம் வர்த⁴யித்வா–எம்பெருமானுடைய கைங்கர்யத்தில் ஆசையைப் பெருக்கி

தயைவாஶயா * தத்ப்ரஸாத³ உபப்³ருʼம்ஹிதயா *–அப்பெருமானுடைய அனுக்ரஹத்தினால் பெருகிச் செல்லும் ஆசையோடு

ப⁴க³வந்தம் உபேத்ய –எம்பெருமானைக் கிட்டி

தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *–திருவநந்தாழ்வான் திருமுடியில் பெரிய பிராட்டியாரோடே கூட இருப்பவனாய்
பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனாய் இருக்கிற அப் பெருமாளை
ஸமஸ்த பரிவார ஸமேதனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு நம -என்று சொல்லி
நெடும் தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு

ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥

ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே
ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று

ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று

ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்

ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்

ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு

பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு

ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்

————–

ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥

ததோ –ஆத்ம சமர்ப்பண அநந்தரம்

ப⁴க³வதா ஸ்வயமேவ -எம்பெருமான் தானாகவே

ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய -ஆத்ம ஸம் உஜ்ஜீவன ஹேதுவாய்
அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய்
மிக அன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி

ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *ஸ்வீக்ருʼத: –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு
ஸ்வீ கரிக்க
அப்பேறு பெற்றவனாகி

அநுஜ்ஞாதஶ்ச –ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி

அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத -மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக்காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப்பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் –

—————

ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥

பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –

———–

ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்

——–

லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥

ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்த்தியையே தஞ்சமாகக் கொண்டு
பிராகிருத மண்டலத்தை விட்டு நீங்கி
அப்ராக்ருதமான தேச விசேஷத்திலே சென்று
ஸர்வாங்க ஸூ ந்தரனாய்
ஸர்வ ஆபரண பூஷிதனாய்
திவ்யாயுத ஸோபிதனாய்
நித்ய ஸூரி பரிஷன் நிஷேவிதனாய்
இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கிட்டி
கைங்கர்ய பிரார்த்தனையை முன்னிட்டுக் கொண்டு
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவில்லாதபடி செய்யும் கைங்கர்யங்களைப் பெற்று
ஆனந்த அமுதக் கடலில் மூழ்கி இருக்குமாற்றை இங்கு இருக்கும் நாள் வரையில் பரம ஏகாந்தியானவன் நாள் தோறும் சிந்தனை செய்து கொண்டு இருக்கக் கடவன் என்று
அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆயிற்று –

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ குணரத்ன கோஸம்–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் வியாக்யானம்-

May 9, 2024

ஸ்ரீயப்பதியை -மிதுனத்தை ஸ்தோத்ரம் செய்வது -முக்திக்கு சிறந்த உபாயம் –
நமது இளைய புன் கவிதைகளைத் தொடுத்து ஸ்துதி செய்வதில் காட்டிலும் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அத்தைச் செய்வதால்
எம்பெருமான் திரு உள்ளம் விரைவில் கனியுமாதலால்
இப்படிப்பட்ட நன்மையை நாம் பெறுவதற்காகவே ஆளவந்தார் முதலிய நம் பூர்வாச்சார்யார்கள் பரம கருணையுடன்
அமுதினிலும் ஆற்ற இனிய பல ஸ்தோத்திரங்களை அனுக்ரஹித்து அருளி யுள்ளார்கள்
கூரத்தாழ்வான் அருளிச் செய்த பஞ்ச ஸ்தவங்கள் இருந்தாலும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த இந்த ஸ்லோகமும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவமும் போன்றவற்றுக்கு இணையானாய் எதுவும் இல்லை
இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியானஸ்ரீரங்கநாச்சியார் வியமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.
இதன் காம்பீர்யம் வாஸா மகோசரம் -சொல் தொடையும் பொருள் தொடையும் அமைந்து இருக்கும் அழகு அற்புதம் என்னலாம் அத்தனை-

பெரிய பிராட்டியாருடைய குணங்களாகிற ரத்னங்களுக்கு இந்தக்கரந்தம் பொக்கிஸம் போன்றதால் ஸ்ரீ குணரத்ன கோஸம் -என்று திரு நாமம் இட்டு அருளுகிறார்
இங்கு அனுபவிக்கப்படாத பிராட்டியின் திருக்கணங்கள் வேறே எங்கும் கிடைக்க மாட்டாது என்பதே தாத்பர்யம்
இதில் –தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.
வைதக்த்ய வர்ண குண கும்பத கௌரவைம் யார் கண்டூல கர்ண ருஹா கவயேர தயந்தி -என்று
இது தன்னிலே தாமே அருளிச் செய்யும்படியான ஏற்றம் இது தனக்கே உரியதாகும்
பிராட்டியை முற்படத்தொழுது பிறகு பெருமாளைத் தொழ வேணும் என்கிற ஸாஸ்த்ரார்த்தம் ஆஸ்ரயண காலத்தைப் பற்றியது அன்றி ஸ்தோத்ர ரஸனையைப் பற்றியதன்று யாதலால் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வங்களுக்குப் பின்பு இத்தை அருளிச் செய்துள்ளார்
ஸ்தோத்ர ரத்னத்துக்குப்பின்பு சதுஸ் லோகி போலவும்
வைகுண்ட ஸ்த்வங்களுக்குப் பிறகு ஸ்ரீ ஸ்தவம் போலவும்
இங்கும் –

—————–

ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே
–தனியன்

ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை-
கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தம் என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய
அந்தப் பராசர பட்டரின் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் -திருவடிகளை அடைந்து
மே பூயஸே ஸ்ரேயஸே  – அஸ்தே -நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

————-

இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.

முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால் ஸ்துதிக்க தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால்
பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள் ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார் –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின் பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார் –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில் அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை இளமை சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ச்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திருவவதரித்து மனிசர்க்காக படாதனபட்டு கருணையையும் ஸ்வா தந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீ ரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும்படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப் பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று
பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்ரீ ராமாயணம் போல அன்றி மிதுனமாக இருவராலும் கேட்க்கப் பட்ட சீர்மை இதற்கு யுண்டே –
திருமாலவன் கவியை விட திருவின் கவிக்கு ஏற்றம் யுண்டே –
த்வயம் போலே சுருங்கச் சொல்லாமல் விவரித்து சொல்லும் சீர்மையும் இதற்கு யுண்டே –
பெரிய பிராட்டியார் அகில ஜகன் மாதாவாக இருந்தும் இவருக்கு விசேஷ தாயார் -ஆகையால் பிள்ளைச் பேச்சு -இது-
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ போன்றவையும் கூட இத்தைப் போலே பிராட்டியை மகிழ்விக்க முடியாதே
இதனால் பிரபந்த வைலஷ்ணயமும் பிரபந்த கர்த்தாவின் வைலஷ்ணயமும் சிறப்பானவை விளங்கும் –

————

ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:-எம்பெருமானுக்கு உண்டான ஸகல சேதன அசேதன வஸ்து ஸ்ருஷ்டி ஸ்ரமத்தை
அங்கீகாரிபி: ஆலோகை: -அங்கீ கார ஸூசகங்களான கதாஸா வீக்ஷணங்களினால்
ஸார்த்த யந்த்யை ஸ்ரீரியை-ஸபலமாக்குகின்ற பெரிய பிராட்டியாருக்கு
க்ருத: அஞ்ஜலி:–ஓர் அஞ்சலி செய்யப்பட்டது என்கை

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

இத்தால் ஸ்தோத்ரம் தொடங்கும் பொழுதே ஸாஸ்த்ரார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
ஜகாத் வியாபாரத்தில் எம்பெருமானுக்கே அந்வயம் உள்ளது என்பது ஸத் ஸம்ப்ரதாயார்த்தம் அன்றோ
ஜகத் வியாபார ஸ்ரமம் எல்லாம் அவனுக்கே என்று பூர்வார்த்தத்தில் விளக்கப்பட்டு
பிராட்டியார் உடன் இருந்து அனுக்ரஹிக்குமவள் என்பது உத்தரார்த்தத்தில் விளக்கப்படுகிறது-

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்
–-ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம்-44-விரித்து அருளிச் செய்தவற்றையே இங்கு சுருக்கமாக அருளிச் செய்கிறார்

ஹே வரத

பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன

சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான

ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை

ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே

விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு

அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே

கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை

கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே

சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே

க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்

ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு

கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –

அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–-ஸ்ரீ ஸ்தவம்1-(சார்தூல விக்ரீத மீட்டர் )

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆப வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

ஸ்ரீ தேசிகனும் ஸ்ரீ ஸ்துதியில் –யத் சங்கல்பாத் பவதி கமலே -என்ற ஸ்லோகத்தில் இந்த ஸித்தாந்தத்தையே அருளிச் செய்கிறார்

இது ஸ்ரீ ரெங்க நாச்சியாரை நோக்கியே அவதரித்த ஸ்லோகமாகையாலும்
இங்கு சார்த்யந்த்யை –என்ற வர்த்தமாந பிரயோகம் செய்து இருகையாலும்
எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்ட்டியைச் செய்து அருளும் போது பிராட்டி ஸாக்ஷிணி யாய் இருக்கிறாள் என்பது இனக்குச் சொல்லப்படுகிறது அன்று
இவ்வர்த்தம் மேலே யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -என்ற ஸ்லோகத்தின் முதல் பாதத்தில் சொல்லப்படுகிறது
இங்குச் சொல்லுகிறதாவது -ஸ்ரீ ரெங்கநாச்சியாரது திருக் கோலத்தின் அதிசயமே சொல்லப்படுகிறது
இவளுடைய ஸந்நிதியில் வந்து புகுமவர்களை இவள் காருண்ய திருஷ்ட்டியோடே கடைக்கணித்து அங்கீ கரித்து அருளுவதனால் எம்பெருமான் தன்னுடைய ஜகத் ஸ்ருஷ்டி ஸ்ரமம் சபலமானதாக்காத திரு உள்ளம் பற்றுகிறார்
இப் பொருளே சார்த்யந்த்யை என்கிற வர்த்தமான நிர்தேசத்துக்கு மிகவும் இணங்கும்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருடைய அங்கீ கார ஸூசக கடாக்ஷ அம்ருத தாரைகளுக்கு இலக்காவதே சேதன ஜன்ம ஸாபல்யம் என்று சொல்லிற்றாயிற்று

————-

கடந்த ஸ்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

உல்லாஸ பல்லவித -ஸப்த லோகங்களின் ப்ராதுர்ப் பாவத்தினால் தளிர் பெற்றதும்
பாலித சப்த லோகீ- நிர்வாஹ கோரகித–ஸம்ரக்ஷிக்கப்பட்ட ஏழு உலகின் நிர்வாகத்தால் சஞ்சாத கோரகமுமான
நேம கடாஷ லீலாம்-அரை குறையான கடாக்ஷ வீக்ஷண லீலையை யுடையவளாய்
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்-ஸ்ரீ ரெங்க திவ்ய விமான பிரதேசத்துக்கு மங்கள தீப ஜ்வாலை போன்றவளாய்
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம -பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் –

ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவத்தில் -யஸ்யா கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந ஸத்யஸ் ஸமுல்லஸித பல்லவம் உல்லாஸ -என்ற ஸ்லோக சாயையிலே இதுவும் அருளிச் செய்யப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது
ஆனால் ஆழ்வான் -அருளிச் செய்யும் ஸமுல்லஸித பல்லவம்-என்பது உலகில் அந்வயம்
இங்கு உல்லாஸ பல்லவித -என்று -கடாஷ லீலையில் அந்வயம்
பிராட்டி நேம கடாக்ஷ லீலையாலே உத்பத்தியும் ரக்ஷணமும் -உத்பத்தியின் பொழுது பல்லவமாயும் –
ரக்ஷணத்தில் கோரகத்தின் முகுளத்தின் அவஸ்தை –
பெண்மைக்குத் தக்கபடி புஷப அவஸ்தைக்கு செல்லாமல்–தளிர்ப்பதும் -அரும்புவதும் – முகுள அவஸ்தை –
அந்த கொடியின் தளிரே ஏழு உலகங்கள் தோற்றம் -நிர்வாஹம் அதன் அரும்பு-

ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு திரு விளக்கு ஏற்றி வைக்க பிரசக்தி இல்லாமையால் மங்கள தீபம் என்கிறது
ஸ்ரீ ரெங்க நாதனோடு கூட சாம்ராஜ்ய அபிஷிக்தையாய்க் கொண்டு மிதுனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்றவாறு
இப்படிப்பட்ட ஸ்ரீயை ஆஸ்ரயிக்கிறோம் என்றவாறு

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து.
இவள் தனது திருக் கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான்.
இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்தி விடுகிறான்.

பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரிய பிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி?
அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது.
இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.

இவளே பெரிய பெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.

—————

தன் மீது ஸ்ரீரங்க நாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
3–

அநுகல தநு காண்ட –அநு க்ஷணம் -அவன் திருத் தோள்கள்
ஆலிங்க நாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீ சகா நோக ஹர்த்தி-ஸ்ரீ சக அநோகஹா ருத்தி-
மரம் போன்ற திருமாலினுடைய-கற்பக வருஷம் என்று விசேஷித்து பொருள்- செழிப்பை உடையவளும்-
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-

உலகில் கொடியிலே பூங்கொத்தும் பூவில் படிந்த வண்டுகளுமாய் இருக்குமே
பிராட்டியாருடைய ஸ்தனங்கள் பூங்கொத்துக்கள் –திருக்கண்கள் புஷ்பங்கள் கரு விழிகள் வண்டுகள்
குளிச்சம் என்று பூங்கொத்து
ஸ்பார புஷ்பங்கள்- விகஸித்த புஷ்பங்கள்
த்வி ரேபம் -வண்டு -வண்டுக்கு வாசகமான ப்ரமா -என்னும் சொல்லில் இரண்டு ரேபங்கள் -ரகரங்கள் -இருப்பதால் த்வி ரேபம்

ரசயது மயி லஷ்மீ கல்பவல்லி கடாஷான்–நம்மை கடாக்ஷித்து அருளட்டும்-கடாக்ஷ வீக்ஷணம் செய்கிற சாமர்த்தியம் கல்பகக்கொடிக்கு இல்லையே -பெரிய பிராட்டியாருக்கே அசாதாரணம் -இங்கு பரிணாம அலங்கார பிரயோகம்

லோகத்தில் கொடி வ்ருக்ஷத்தின் மேல் படருவதால் வ்ருஷத்துக்கு அபிவிருத்தி இல்லை -கொடிக்குத் தான்
இங்கேயோ தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் –
ஈரிரண்டு மால் வரைத் தோள்
அபிமத ஜன சம்ச்லேஷ நிபந்தநம்

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி,
அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார்.
அவள் இல்லாமல் இவனது திருக் கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்து விடும்.

——————

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.-

அமுதப் பெருக்கான கடாக்ஷ வீக்ஷணங்களாலே நம்மை அபிஷேகம் செய்து அருளப் பிரார்திக்கிறார் இதில்
மூன்று விசேஷங்களை முற்று பாதங்களால் அருளிச் செய்கிறார்

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:–4–

முராரே-ஸ்திர சர ரசநா தாரதம்யே-யத் ப்ரூ பங்கா பிரமாணம்-ஜங்கம ஸ்தாவராதி-ஸ்ருஷ்ட்டிகளுக்கு –
சந்தன பாரிஜாத மகிழ -கள்ளிச்செடி வேப்பமரம் -இத்யாதி—ஜங்கம பதார்த்தங்களில் தாரதமயமாவது தேவ மனுஷ்ய திர்யகாதி ரூபேண பேதங்களும்
ப்ரஹ்மாதி பிபீலிக அந்தமாகக் காணும் பலவகைப்பட்ட நீச உச்ச பாவங்கள்-உச்ச நீச பாவ பேதங்களுக்கு பிரமாணம் இவளது புருவ நெருப்பே –

ஆழ்வானும் -யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்-ஸ்ரீ ஸ்தவம் -முதல் ஸ்லோகம்
இவரும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் – நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூவிப்ரம பேதத ஈசேஸி தவ்ய வைஷம்ய நிம் நோந்நதமிதம் ஜகத் -என்று அருளிச் செய்தவர்களும் இங்கு அனுசந்தேயம்


வேதாந்தாஸ் –முரபிதுரசி–யத் பாத சிஹ்நைஸ்-தத்வ சிந்தாம் தரந்தி-பரத்வ நிர்ணயம் வேதாந்தங்கள் செய்வதும்-ஸ்ரீயபதியான நாராயணனுக்கே பாராம்யத்தை நிஷ்கர்ஷித்தன
பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் திருவந்தாதி
இவளுடைய சம்பந்தத்தாலேயே எம்பெருமானுக்கும் பாராம்யத்தை விளைக்கும்படியான பெருமை வாய்ந்தவள் பிராட்டி -என்றதாயிற்று


முரபித் உரஸி -இறைவனது மார்பகத்தில்-இவளது–யத் சம்பந்தேந தத்வ சிந்தாம் தரந்தி என்னாமல்-யத் பாத சிஹ்னை-ப்ரணய கேலி பரிமாற்றம் –
லஷ்மீ சரணா லாஷங்க சாக்ஷி ஸ்ரீ வத்ஸ வக்ஷஸே –என்று அன்றோ நம் பூர்வாச்சார்யர்கள் பணிக்கும் பரிசு-

போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வரூப் யாநு பாவா–விஸ்வரூபம்
எடுத்து அனுபவிக்க இழிந்தாலும் அசத் கல்பமாகவே -ஆகும்படி அன்றோ

ஸ்தோத்ர ரத்னத்திலும் –ஸ்வ வைஸ்வ ரூப்யேண ஸதா அநு பூதயாபி அபூர்வவத் விஸ்மய மாத தாநயா -என்று அருளிச் செய்ததையே இங்கு சமத்காரமாக விவரித்து அருளிச் செய்கிறார்-

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-
ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இங்கு ஸ்தோத்ர முடிவிலும் –தச சத பாணி பாத -தொடங்கி யுள்ள ஸ்லோகம் முழுவதாலும் இவ்விஷயமே விவரிக்கப்படுகிறது-

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே
–55–

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–—அப்படிப்பட்ட பெரிய பிராட்டியின் அம்ருத ப்ரவாஹமாகிய
கடாக்ஷ வீக்ஷணங்கள் நம்மை ஆச்சா தானம் செய்ய வேணும் -பரிபூர்ண கடாக்ஷ பூதர் ஆவோம்

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் –
இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது,
நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும்.
இதனைப் புரிந்து கொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம்,
“இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை,
இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்து விடுகிறான்.
இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை –
காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான்.
வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.

இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க.
படைத்தல் குறித்துக் கூறும் போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு
(முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும் போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

——————

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.
–5-

தேவி யத் யாவத் தவ வைபவம் –ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா–வைபவத்தைப் பன்னி யுரைப்பதே ஸ்தோத்ரம் -வைபவம் இத்தகையது என்பதையே அறியப்பெறாதவன் அன்றோ அடியேன்-வைபவம் பற்றி ஸ்துதிக்க ஆசை கொள்ளவும் அதிகாரி அல்லேன்
ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய -ப்ரஹ்மாதிகளும் –பிரையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் -என்னப்பட்ட மேலாத் தேவர்களுக்கும்
ஸ்தோதும் கே வயமிதி யத ஜக்ருஹூ –ஸ்துதிக்க நாங்கள் எவ்வளவிலோம் -என்று தங்கள் அதிகாரம் இல்லாமையையே வாய் வெருவி இருக்க–
ஜக்ருஹு—இத்தையே பரிக்ரஹித்தார்கள் –
அப்யேவம் – காவாச வயம் -இத்தை அறிந்து குத்ஸித வாக்கை யுடைய அடியேன்
தவ தேவி வாங் மனஸ் பாஷா நபிஹ்ஞம் பதம் கவயிதம் ப்ரயதா மஹே -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத
தேவரீர் உடைய அபரிச்சேதமான ஸ்வரூப வைபவத்தை கவி பாட புகுகிறேன் அந்தோ –
ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்—-நல்ல வாக்குகள் நீசனான என் வாயில் புகுந்து கெடாமல் அவற்றின் பெருமை பொலிக –
விலக்ஷணமான நைச்ய அனுசந்தானம்

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,
அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து,
அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர்.
ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.

வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன.
ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின.
இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல்,
“இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூற வேண்டும்?
ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கி யிருக்க,
ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம்.
அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில்,
இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை
யாராவது விரும்புவார்களா? இதனால் தான் “விருப்பம்” என்றார்.

இவ்விதம் கூறி விட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம்.
இதற்கான விடையை இவர் கூறும் போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டு விடும்,
அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டு விடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது?
இவர் ஸ்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை
இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

———————

நைச்ய அனுசந்தானம் கீழ்
இதில் ஸ்துதிக்க தாம் ஒருவரே அதிகாரி -சமத்கார அதிசயம் தோன்ற அருளிச் செய்கிறார்

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரந் ப்ரதாம்.
–6–

தேவி–தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-நானே ஸ்துதிக்க அதிகாரி -மற்று எவரும் இல்லை
ய -ஸ்தோதவ்யஸ்ய குணான் விஸ்த்ருணீதே தம் கவையோ ஸ்தோதார முசந்தி–ஸ்தோத்ரத்தில் இழியும் -ஸ்தோதா –
கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்பவன் அன்றோ
ததச்ச—இப்படி ஸ்தோதா உடைய லக்ஷணம் இருப்பதால் -தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி- அடியேனே அதிகாரி -என்றவாறு-
ஹே பகவதி அஸ்மத மர்ஷணீய பணிதி ஸ்வீகாரத தே ஷாந்த்யௌதார்ய தயாதயோ –
வாய் விட்டு சொல்லாத தகாதவற்றை அடியேன் சொல்ல – குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் –இளைய புன் கவிதைகளை மழலைச் சொல்லாக கேட்டு –
பரம ப்ரீதி அடைந்து -குற்றங்களை தண்டிக்காமல் -ஷமா உதாரம் தயா வாத்சல்யாதி-குணங்கள் விஸ்தரிக்கப்படும் அன்றோ
குண கண யஸ்மாத் ஸ்வாம் ப்ரதாம் ப்ரஸ்நுவீரத்–குணங்கள் விளங்கப் பெரும் என்றவாறு
இதில் அந்யத்ர அதி வியாப்தி வராதே -ஆகவே அடியேனே அதிகாரி

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத் தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக
யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் –
அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் ,
உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்று விடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இந் நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள
தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?

அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார்.
இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை.
உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை.
இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.

இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே.
அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:

1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.

2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்து விட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.

3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.

4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.

ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

———————

நீர் நா வீறு பெற்று ஆச்சர்ய ஸ்துதி பண்ணுவராய் இருக்க இப்படி அருளிச் செய்யலாமோ என்ன
அடியேனுக்கு இயல்பான நா வீறு உண்டி
ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹஸேஸ்மிந் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உபக்ரமத்திலே விண்ணப்பம் செய்துள்ளேனே
தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண பலத்தாலே எனக்கு நா வீறு ஸித்திக்க வேணும் என்கிறார் ஆயிற்று –

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ–லஷ்மீ-ஸ்வயமேவ-மதுரை கடாஷை -ந ஸூக்திம் சமக்ரயது –நிர் ஹேதுக கடாக்ஷ வீக்ஷணம் —
ஸ்ரீ ரெங்கராஜா கமலா பதலாலி தத்வம் பத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹ ஹேஸ்மின்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
இதனாலே திரு நா வீறு -ஸூ க்திகள் அதிசயம் உண்டாகுமே
யாம் ஸூக்திம் வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் கண்டூல கர்ண குஹராஸ் -கவயோ சத்த தயந்தி —
கவிகள் ஆசைப்படும் படி அன்றோ வைதக்யம் -பொருள் பொலிவு -வர்ண குணம் -சொல் பொலிவு –
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு- -இவை அனைத்தும் சேர்ந்தவை
கண்டூல கர்ண குஹராஸ்–தினவு கொண்ட செவிகள் உடையராய்க் கொண்டு –
ஸ்ருண்வந்தி என்னாமல் தயந்தி -என்றது பாநார்த்தகமான தாது –
பண்டிதர்களுக்கு ஸூக்தி ஸ்ரவணமே -ஸூதா பான சமம் -அன்றோ –

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,
இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்?
ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் –
காரணம், அப்போது தான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.

ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு,
இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல் வாக்கு ஆனது.

அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது.
இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க.
இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரி சமமானதாகும் –
தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழிய வல்லது.

————————-

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:-என்றாரே -கீழ் ஸ்லோகத்துக்கு விவரணமாய் இருக்கிறது இது
கீழ் பிராட்டியிடம் நேராக விண்ணப்பம் செய்யாமல் படர்க்கையாக அருளிச் செய்து -இதில் முன்னிலையாக வைத்து தேவரீர் இப்படிப்பட்ட வாக் விலாசத்தைப் பெருக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

அநாக்ராத அவத்யம் பஹு குண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹு முகய வாணீ விலஸிதம்
.–8–

ஹே ஸ்ரீ த்வமேவ மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம்–இதில் நேராக பிராட்டியுடன் சம்போதனம்-இதில் உள்ள ஸ்ரீ ஸம்போதனம் – -கீழே படர்க்கை -இங்கே முன்னிலையாக-
இப்படிப்பட்ட வாக் விலாசத்தை பஹு முகமாக அனுக்ரஹித்து அருள பிரார்த்தனை –
த்வமேவ –நீரே -அடியேனுடைய அநந்யத்வ அத்யாவஸ்யம் குலையாமல் –-ஏவ காரத்தாலலே தேவரீர் அருள மாட்டாது ஒன்றுமே இல்லையே –
எங்கள் குடியில் தேவதாந்தர பஜநம் பண்ணுவார் இல்லையே
இராமானுசன் அடிப் பூ என் தலை மிசையே மன்னவும் –தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைத் தானே போற்றும் குலம்
எந்தப்பிரார்த்தனைக்கும் பிராட்டியையே ஸ்துதிக்கத் தாக்கும் அன்றோ –
அநாக்ராதாவத்யம் -அக்ஷரம் பதம் வாக்ய தோஷ-ஸம்பந்த லேசமும் இல்லாமல்-
காதுக்குக் கடுவாய் இருத்தல் -அச் ஸீலமாய் இருத்தல் – ப்ரக்ருதி பங்காதி துஷ்டமாய் இருத்தல் -கூடாது என்கை
பஹூ குண பரீணாஹி -தோஷங்கள் இல்லாமை மட்டும் போதாதே -சப்த அர்த்த அலங்கார புஷ்டிகள் நிறைந்தவையாக இருக்க வேண்டுமே
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது எலி -என்று ஒருவன் பாடினானாம் -ஹாஸ்யாஸம் ஒன்றுக்கே இலக்கண இதில் குண பரிபோஷம் ஒன்றுமே இல்லையே
சப்த பொருள் அலங்காரங்கள் நிறைந்து இருக்க வேணும் என்கிறார்
மனசோ– சௌஹார்த்தம் -துஹா நம்-பிறர் நெஞ்சு நோவு படுமானால் இவற்றால் பயன் இல்லையே –கேட்பவர் நெஞ்சு கனிய வேண்டும் –
பரிசிதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும் அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ்பொருளை உடையதும் —
தாத்பர்யம் குரு முகமாகவே அறிய வேண்டுமே
இந்த விசேஷணம் பட்டர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கே தகும் -அது தன்னிலும் இந்தத் திவ்ய கிரந்தத்துக்கு விசேஷித்துத் தகும்
பதா நாம் சௌப்ராத்ராத் ஸ்ரவணயோ அநிமிஷ நிஷேவ்யம் –பத சேர்த்தி விலக்ஷணம் பொருந்து இருக்க வேணும் –கீழ்ச் சொன்ன அனைத்திலும் இது மிகச் சிறந்த அதிசயம்
ஹடாதாக்ருஷ்டாநாம் கதி பய பதாநாம் ரஸயிதா -என்னும்படி கவி சொல்ல வல்லார் பல உளரே
அப்படிப்பட்ட வர்களின் ரஸனைகளில் இந்த விசேஷம் காண வரிது
யா பதாநாம் பரா அந்யோந்ய மைத்ரீ சய்யேதி கத்த்யதே -என்னப்பட்ட சய்யா விசேஷம் ஸஹ்ருதய ஹ்ருதய ஏக வேத்யமாய் இருக்கும்
அது தான் -பதா நாம் சௌப்ராத்ரம் என்கிறது
அது உண்டாகில் ரசிகர்கள் விஸ்ராந்தி இன்றிக்கே அனுபவிப்பர்கள் ஆயிற்று
ஆக இப்படிப்பட்ட வாக் விலஸிதயத்தை அருள் புரிய வேணும் என்கிறார் ஆயிட்டு
விலஸிதம் -விலாஸம் -பர்யாயம்

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்க வேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்பட வேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார்.
இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க.
ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

—————————-

அபேஷா நிர பேஷமாக அளிக்க வல்ல பெரிய பிராட்டியார் அபேக்ஷித்த பின்பும் அளிக்க மாட்டாமை இல்லையே
அங்கனமே ஆகுக என்று குளிர நோக்கித் தலை துலுக்கவே –
உள்ளமும் உடலும் பூரித்து ஸ்தோத்ரே ப்ரவ்ருத்தராகிறார்
முன்பே 230 ஸ்லோகன்களால் பூர்வ உத்தர ஸ்தகங்களால் ஸ்ரீ ரெங்கராஜனுடைய பெருமையை அருளிச் செய்தார்
இங்கு 61 ஸ்லோகங்களேயாய் சங்குசிதமாக இருந்ததே யாகிலும் -பெரிய பிராட்டியாருடைய ஒப்புயர்வற்ற பெருமையை சமத்காரமாக இங்கு அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ரெங்கநாதன் ஸந்நிதி வாசலிலே சடக்கென்ச் சென்று நின்று திருப்பள்ளி யுணர்த்தி ஒன்று கேட்டருளாய் என்று விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீரியஸ்: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–
9-

ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச -திருவுக்கும் திருவாகிய செல்வத் திருவரங்கா –
பட்டர் திரு மிடற்று சாய் போல் இருக்கிறதே என்று உணர்ந்து -என் காணும் -எங்கு வந்தீர் -என்ன விசேஷம் –என்றார் அழகிய மணவாளப் பெருமாள்
பகவதீம் ஸ்ரீரியம் பணாமச்–தேவரீருடைய திருத்தேவியாரை ஸ்துதிக்க வந்தேன் -தேவரீர் திருச்செவி சாத்தி அருள வேண்டும்
அங்கெ சென்று ஸ்துதிக்கலாகாதோ இங்கு வருவான் என் -என்றார்
தவச ஹ்ருதயம்- ஸ்ரீரியம் பணாமச்-உம் திரு உள்ளத்துக்கு இனியவளே அன்றோ
ஸ்ரீரியம்-த்வத்தோபி யுச்சைர் வயமிஹ பணாம –திருத்தேவியார் தேவரீருடைய திரு உள்ளத்துக்கு மிகவும் இனியவராகையாலே இங்கே தேவரீர் திரு முன்பே ஸ்துதிப்பதே நன்று என்று கொண்டு இங்கே வந்தேன் என்கிறார் –
அப்படியாகில் சொல்லும் என்றார் பெருமாள்
திரு உள்ளத்தில் பரம ஹர்ஷாவாஹமாக இருந்தாலும் மேலும் இவர்
வாய் சொல் கேட்க்கும் அபி நிவேசத்தால் –
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம–தேவரீரைட் காட்டிலும் மிக உயர்ந்தவராக சொல்லப்போகிறேன் -அது அபிமதம் தானே என்றார்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்று புகழ் பெட்ரா நான் பர உத்கர்ஷம் ஸஹிப்பேனோ -என்று சிவிட்க்கென்று இருந்தார்
பர உத்கர்ஷம் சஹியாதவர் போலே இருக்கும் இருப்பைக் கண்டு
ஸ்ருணுதராம்-தேவரீரையும் நிறம் பெற வைக்கும் இவள் வைபவத்தை -அறவிஞ்சின அபிநிவேசத்தோடே – காதாரக் கேளாய் –
ஸ்ரவணத தே த்ருசௌ ஸூக தரளதாரே பூயாஸ்தாம்-திரு உள்ளப் பூரிப்பு வடிவிலே தொடை கொள்ளலாம் படி தேவரீருடைய திருக்கண்கள் ஆனந்த மிகுதியாலே கருவிழி சுழலமிட்டு கேட்டு அருள வேணும்
இவ்வளவியோ பின்னையும் உண்டோ என்ன
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் புஜயோ கஞ்சுகசுதம் ஸ்புடது மேலும் மேலும் விண்ணப்பம் செய்ய உடல் பூரிப்பாலே -கஞ்சுகம் வெடிக்க வெடிக்க வேறு ஒரு கஞ்சுகம் சாத்தி
அதுவும் வெடிக்கும் படி -இப்படி ஹர்ஷ அதிசயம் எனக்குத் தெரிய வேண்டும் – -விக்ருதம் விளைக்க நல்லதாம் படி
த்வத்தோ அபி உச்சை -தேவரீர் உடைய உயர்த்திக்கும் மேலே -என்றும்
தேவரீர் எம் பெரிய பிராட்டியாரை புகழும் அத்தை விஞ்சின அதிசயம் என்றுமாம்
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-
தொடங்கும் பொழுதே ஸ்ரீயஸ்ரீ -என்று புகழ்ந்து கொண்டே தொடங்கினது ஒரு சாதுர்யம்
பிராட்டியாரை எவ்வளவு உயர்தியாகப் பேசினாலும் திருவுக்கும் திருவாகிய செல்வா -என்னப்பட்ட தேவரீருக்கு ஒரு கொத்தை உண்டோ –
த்வத்தோபி உச்சை -என்பது -தேவரீருடைய உயர்த்தியைக் காட்டிலும் உயர்த்தி என்பது தவிர
தேவரீர் திரு வாக்காலே பிராட்டியை ஸ்துதித்தால் எவ்வளவு அதிசயமாக இருக்குமோ -அதிலும் விஞ்சின அதிசயமாக ஸ்துதிக்கப் போகிறேன் என்பதாம்
இங்கு வயம் என்று தம்மை பஹு வசனத்தாலே சொல்லிக் கொண்டது -இது தன்னாலே தமக்கு ஒரு கௌரவம் உண்டாவதாகத் திரு உள்ளம் பற்றி என்கை –

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக் கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும்.
இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

இங்கு பட்டர் பெரிய பெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரிய பெருமாள்,
“நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக் கல்யாண குணங்கள்
வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான்.
பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார்.
இதனைக் கேட்ட அழகிய மணவாளன் கடகடவென்று சிரித்தான்.
தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப் போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான்.
இதனைக் கண்ணுற்ற பட்டர் – ஸ்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க.
பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக் கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க.
இதன் மூலம் பெரிய பெருமாளின் திரு மார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.

எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ள போது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம்.
இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூற வில்லை, பெரியபெருமாள் கேட்டதனால் தான் கூறினார்.

—————–

ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருமேனியும் பூரிக்கும் படியாக ஸ்துதிக்கப் போவதாக பிரதி ஞாதமாயிற்று கீழ்
அதன்படியே ஸ்துதிக்க இழிந்தவராய் -மாநாதீநா மேய ஸித்தி -என்கிறபடியே ப்ரமேயம் ஸித்திப்பது பிரமாண அதீனமாகையாலே பிராட்டியும் வைபவமாகிய ப்ரமேயத்திற்கு சாதகமான பிரமாணத்தை மூதலிக்க வேண்டி
இதிஹாஸ புராணாதி உப ப்ரும்ஹணங்களினால் உப ப்ரும்ஹிதமான ஸ்ருதி தான் இவ் விஷயத்திற்கு பிரமாணம் என்று அருளிச் செய்கிறார் இதில்
குணரத்ன கோஸம் என்ற பிரபந்த திருநாமமும் அர்த்தாத் ஸூசிப்பித்து அருளுகிறார் முத்ர அலங்கார வகையில் இதில் –

தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

ஹே தேவி பிரதமே புமாம்ச பகவதீம் ஸ்ருதிம் -த்வத் சத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி-வாரீர் ஸ்ரீ ரெங்க நாச்சியாரே – வியாச பராசர வாலமீகி பிரபுருதிகளும் -பராங்குச பரகால யதிவராதிகளுமான பூர்வ புருஷர்கள் –சுடர் மிகு சுருதியை தேவரீர் உடைய
கல்யாண குண ரத்னங்களை இட்டு வைக்கும் பண்டாரமாக அன்றோ -அருளிச் செய்கிறார்கள் –
இவை அவன் பெருமையையும் அதிகமாக சொன்னாலும்
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுதே-தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவரீருடைய பெருமையுள்ளீடு தானே
திரு வில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -என்கிறபடியே
பிராட்டியுடைய சம்பந்தம் இல்லாமல் தேவன் தேவத்வத்தை பெற முடியாதே
ஆக தேவனுடைய பெருமைகளை சொல்லும் இடம் எல்லாம் தேவியின் பெருமையைச் சொல்லிற்றாகவே கொள்ளலாம் இறே
வான் திகழும் சோலை மதிள் அரங்கன் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றது
ஸகல திவ்ய தேசத்து எம்பெருமான்களுடையவும் மஹிமை ஸ்ரீ ரெங்கநாதனுடைய மகிமையின் உள்ளீடு போலே
தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவ தேவ திவ்ய மஹிஷியினுடைய பெருமையின் உள்ளீடு என்கிற பரமார்த்தமும் கண் அழிவற்றதாகையாலே இங்கனே அருளிச் செய்யக் குறையில்லை யாயிற்று

பகவதீம் -ஸ்ருதிக்கு இந்த விசேஷணம்-அபவ்ருமஷே யத்வ -நித்யத்வ -நிர்தோஷத்வாதி ப்ரயுக்தமான பூஜ்யதை இட்டு
பிரதமே புமாம்ச –முன் சொல்லிய மஹரிஷிகள் -ஆழ்வார்கள் -பூர்வர்கள்
இவர்கள் பிராட்டியுடைய திருக்கல்யாண குணங்களாகிற ரத்னங்களுக்குத் கோச க்ருஹமாக அருளிச் செய்கின்றார்கள் என்றது -பிராட்டியாருடைய குணங்கள் வேதத்தில் ஸூ ரஷிதமாகக் காணக்கிடைக்கும் என்கிறார்கள் என்றபடி
மானதீனா மேய சித்தி -பிரமாணங்கள் கொண்டே பிரமேய சித்தி அன்றோ –
ஸ்ரீ குண ரத்னகோசம் -இந்த ஸ்துதி என்று அர்த்தாத் ஸூசிப்பிக்கிறார் இதில்
தத் த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி-ரத்னங்களை வெளி வாசலில் இறைத்து வைக்க மாட்டார்கள் அன்றோ -உள்ளே ஆழ்ந்து பார்த்தாலே இருப்பதை அறிய முடியும்
அதே போல் வேதமாகிய பெட்டியையும் இதிஹாச புராணாதிகளாகிற திறவு கோலை இட்டுத் திறந்து பார்க்கும் அளவில் பிராட்டியுடைய பிரபாவம் வேதங்களில் எளிதாக்க காணக்கிடைக்கும் என்கை
அவை பிராட்டியாலே அவனுக்கு பெருமை என்பதை நிரூபணம் செய்வதாலும்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -இத்யாதி வாக்யங்களிலே ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டு இருக்கிறபடியால்
எம்பெருமானுக்குப் பெருமை சொல்லும் இடம் எல்லாம் பிராட்டியின் பெருமையையே சொல்லிற்று ஆயிற்று
சம் தர்க்கணம் ஆவது -சமீசிந தர்க்கம் -வேதார்த்த விசார ரூப மீமாம்சை
ஸூத்ரகாரர் தர்க்கத்தை வெறுத்தது பிரமாண அநு குணம் அல்லாத சுஷ்க தர்க்கத்தையே யாகும் -அது தோன்றவே இங்கு சாம் தர்க்கண -என்றது
புரஸ் ஸராணி–ஸ்ரீ லஷ்மி தந்த்ராதிகள் -அருளிச் செயல்கள் இத்யாதி களைச் சொன்னவாறு

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க.
வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ் பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.

இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப் போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

———————-

கீழ் வேத பிரமாண விளக்கை அருளிச் செய்து
இதில் அந்த விளக்கில் வீட்டில் படும் பாட்டை அடைந்து அநர்த்தப்படுமவர்களை எடுத்து உரைத்து
இவர்கள் பிராட்டியாருடைய திவ்ய கடாக்ஷதிற்கு இறைப்பொழுதும் இலக்காகப் பெறாமையினால் தான் இப்படி அவப்பொருள்களைச் சொல்லி அநர்த்தப்படுகிறார்கள் என்கிறார்

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–11-

ஆஹூர் வேதாந் அமாநம் கதிசன -வேத பாஹ்யர்களைச் சொன்னார் ஆயிற்று
வேதம் அப்ரமாணம் என்னும் ஸூகத சார்வாகாதிகள் இங்கே விவஷிதர்கள்
இவர்களும் மேல் சொல்லப்படுபவர்களும் அவ்யபதேஸ்யர்கள் என்பதால் சிலர் சிலர் என்றே குறிப்பிடுகிற படி
கதிச அராஜகம் விச்வமேதத்-காபிலர் வாதம் -ஜகத்தை
அநாதம் என்கிறவர்கள் -அனுவதிக்கிறபடி -ஈஸ்வர ஸத்பாவம் இல்லை என்பர் -பிரதானம் காரணம் என்பர்
தத்வத்ரயத்தில் ஈஸ்வர ப்ரகரணத்தில் -காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள் –பிரதானம் அசேதனமாகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும் -ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்தை கூடாமையாலும் அதுவும் சேராது – என்று அருளிச் செய்ததும் அவ்விடத்து வியாக்யானமும் இங்கே அனுசந்தேயம்

ராஜன்வத் கேசிதீசம் -(விஸ்வம் ஆ ஹூ-என்றபதமும் இங்கே அநு ஷங்கம் செய்து கொள்ள வேண்டும் )-இது காணாதர் மதம் –சாஸ்த்ரத்தால் அன்றிக்கே அனுமானத்தால் ஈஸ்வரன் -ஆனுமானிக ஈஸ்வரனுக்கு நிமித்த காரணத்வ மாத்திரம் இசைகிறார்கள்-
எனவே இவர்களும் யதார்த்த வித்துக்கள் அல்லர் –

அந்யே ஈசம் தம் குணி நமபி குணைஸ் தரித்ராணம் (ஆஹு)-குண தரித்ரன் என்னும் மாயா வாதிகள்
நிர்க்குணத்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகள் ஹேய குண அபாவத்தைச் சொல்லுகின்றன என்று நிஷ்கர்ஷிக்க மாட்டாமையாலே –

அந்யே பிஷவ் ஸூராஜம் பவம் (ஆஹு )-வெந்தார் என்பும் சுடுநீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு
உலகு எழும் திரியும் பிச்சாண்டியை ஈஸ்வரன் என்பர்

இதிச ஜடாஸ் தே -இப்படி பலவும் -என்பதால் இதி ச -ஜடாஸ்-கருவிலே திரு இல்லா – மூர்க்கர்கள்

தலாதலி அகார்ஷூ–கையால் தரையை அடித்து வாத யுத்தம் செய்பவர்கள்
கேசாகேசி -தண்டாதண்டி இத்யாதிகள் போலே தலாதலியும் கொள்ளக் கடவது
குடிமையைப் பிடித்துக் கொண்டும் தடியை வீசிக் கொண்டும் யுத்தம் புரிவது போல்
கையைத் தரையிலே அறைந்து வாதம் செய்வது இயல்பு

இவை எல்லாம் ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷ அபாவ நிபந்தம் என்கிறது
ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே யே தே ஷணம் லஷ்யம் நா சந்தே ஏவம் அகார்ஷு-ஸ்ரீ ரெங்க விமானத்தின் கீழ் படர்ந்த கனகக் கொடி அன்றோ தேவரீர் –
உமது கடாக்ஷத்துக்கு க்ஷணம் காலமும் இலக்காகாத ஜடங்கள் அன்றோ
இப்படி ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் -என்றபடி –

மூன்றாம் பாதத்தில் உள்ள தே என்பது தச் சப்தத்தின் பிரதமாபஹு வசனம்
நான்காம் பாதத்தில் உள்ள தே என்பது யுஷ்மச் சப்தத்தின் ஷஷ்டி ஏக வசன அர்த்தம் –

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர்.
மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம் பொருளைக் கூறவில்லை என்றனர்.
மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம் பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும்,
அந்த பரம் பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர்.
இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம் பொருளான பெரிய பெருமாளை அறிய இயலும்.

———————

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவதி-ந நு-லஷ்மி-சகல குண சம்பத்துள்ள பெரிய பிராட்டியாரே
யேபி தன்யா -யாரோ சில பாக்யவான்கள்
பக்தி சித்தாஞ்ஜநேந-பக்தியாகிய சித்த அஞ்சனத்தை உடைத்தாய் கொண்டு -சித்தாஞ்சனம் போன்ற பக்தி -என்றுமாம்
பஹு வ்ரீஹி -பக்தி சித்தாஞ்சனம் இவ யஸ்ய தத் -சித்தாஞ்சனம்போன்ற பக்தி
பக்தியாகிய சித்தாஞ்சனதாலே என்று கொடு -ஸ்வயம் விசேஷய்மாய்க் கொண்டு -அதை வில ஸதா என்பதிலே அந்வயிப்பாரும் உண்டு
அகத்தின் உள்ளே பக்தி ஸித்தாஞ்சநத்தினாலே விளங்கும் ஞானக்கண்ணாலே வீக்ஷமாணா -என்க-
மனஸி விலசத அஷ்ணா-மனசாகிற ஞானக் கண்ணாலே
ஸ்ருதி சிரஸி நிகூடம் தே மஹிமாநம்-வேதாந்தங்களிலே மறைந்து கிடைக்கும் உமது மஹிமைகளை
நிதிம் வீஷமாணா இவ-நிதியைக் காண்பாரைப் போலே காணா நின்றவர்களாகி
நிதி யாவர்க்கும் எளிதன்றே –
உபரி உபரி சஞ்சாதாம் -அத்ருஸ்யம் -ஸ்ரீ வராத ராஜ பஞ்சாத் -ஸ்ரீ மஹா லஷ்மீ வைபவமாகிற நிதி –
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்களோ
தே தைவீம் சம்பதந்தே அபிஜாதா –அன்னவர்கள் மோக்ஷ ஹேதுவான தைவ சம்பத்துக்கு இட்டுப் பிறந்தவர்கள்
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய ஆஸூரீ மதா என்றும்
மாஸூசஸ் சம்பதம் தைவீம் அபி ஜாதோசி -என்றும் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி
வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

————————–

பிராட்டியாருடைய வைபவ ப்ரதிபாதனத்திலே ஸ்ரீ ஸூக்தமானது இதம் பாரமாக ப்ரவ்ருத்தமானது என்றும்
புருஷ ஸூக்தாதிகளும் தத் வைபவ ப்ரதிபாதனத்திலே விஸ்ராந்தமாகிறது என்றும் அருளிச் செய்கிறார் இதில்
அஸ்யேசா நா ஜகத இதிதே-இத்யாதியால் ஸ்ருதியின் அநுவாதம்

அஸ்ய ஈஸாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக
:–13-

அஸ்யேசா நா ஜகத இதிதே தீ மஹே யாம் சம்ருத்திம்-ஸ்ருதி அனுவாதம் – அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்னீ -மூலம்
அநுஸந்திக்கும் வைபவ அதிசயத்தை –
ஸ்ரீ ச் ஸ்ரீ ஸூக்தம் பஹூ முகயதே -சாகைகள் தோறும் பஹு முகமாக ஸ்ரீ ஸூக்தம் விஸதீகரியா நின்றதே
தாஞ்ச சாகா நுசாகம் ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த-சர்வ ஜகத்துக்கும் ஸர்வேஸ்வரேஸ்வரன்
இவனே என்று புருஷ ஸூக்தம் ஓதா நிற்குமே
தம் உத்தர அநு வாக த்வத்கம் பதிம் அதி ஜகத் -அந்த ஸ்ரீ மன் நாராயணனை
நாராயண அநு வாகமானது உமது பர்த்தாவாக அன்றோ சொல்லிற்று
இதம் ஹி புருஷம் ஸூக்தம் சர்வ வேதேஷூ பட்யதே-
சர்வ ஸ்ருதிஷ்வனுகதம் -ஸூ க்தம் து பவ்ருஷம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
ஸ்ரீ ஸூ க்தமும் தைத்ரிய சாகை -மாத்யந்தி நாதி சகல சாகைகளிலும் உண்டே –

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:

1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக் கொண்டான்.

2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக் கொண்டேன்.

——————————-

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-

ஹே அஸ்மத் ஜநநி உத்பாஹூஸ் த்வாம் உபநிஷத ஸா வாஹநைகா நியந்தரீம்-உபநிஷத்துக்கள் மட்டும் அல்ல –
உத்பாஹு என்றது -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்ச்யதே –பிராமண வசனத்தை ஒட்டி –
அசவ் உபநிஷத் என்றது கீழ் ஸ்லோஹத்தில் சொன்ன உத்தரச்ச அநு வாகத்தை –
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே–சிறை இருந்த உன்னுடைய ஏற்றம் சொல்லியே –
உயிர் தரிக்கின்றது ஸ்ரீ ராமாயணமும்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாச் சரிதம் மஹத் –
கருணா காகுஸ்தன் பெருமை பிராட்டி சந்நிதியாலேயே தானே நிலை பெற்றது
பிராணிநி -ஸ்ரீ சீதா சரித்திர ப்ரதிபாதமே ஜீவ நாடி –
ஸ்மர்த்தாரோஸ் யதமே -ஸ்ம்ருதி கர்த்தாக்கள் பராசாராதி மகரிஷிகளும்
சேதிஹாசை புராணை-இதிஹாச புராணங்களாலும்
வேதாந் த்வன் மஹிம்நி பிரமாணம் நிந்யூர்-வேதங்களை உம்முடைய வைபவத்துக்கு பிரமாணம் ஆக்கினார்கள்

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட –
புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.

—————————————-

மாநாதீநா மேய ஸித்தி -யாகையாலே பிராட்டியாரின் வைபவமாகிற ப்ரமேயத்திற்கு இன்னின்னவை பிரமாணம் என்று காட்டி அருளினார் கீழே
இனி பிரமாண பிரதிபன்னமான பிராட்டியாரின் ஐஸ்வர்யத்தை அருளிச் செய்து போருகிறார்

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
ஆகுக்ராம நியாமகா தபிவிபோ ரா சர்வ நிர்வாஹகாத்-சிறிய கிராம நிர்வாகன் -சர்வ லோக நிர்வாகன் –
ஐஸ்வர்யம் யதிஹோத்த ரோத்தர குணம் அஸ்தி -உத்தர உத்தர ஐஸ்வர்யம்
துங்கம் -மேரு போன்ற உன்னதமான வஸ்து சமூகம்
மங்கள -சந்தன குஸூம ஹரித்ரா குங்குமாதிகளாய்க் கொண்டுள்ள மங்கள வஸ்து சமூகம்
முஜ்ஜ்வலம் -மணி த்யுமணி தீபாதிகளாய்க் கொண்டுள்ள பிரசுர பிரகாச யுக்தமான வஸ்து சமூகமும்
கரிமவத் -ஹிமவான் மந்தரம் மைநாகம் -மலைகளாய்க் கொண்டு குருத்வ யுக்தமானவை
புண்யம் -யாகாதிகளான பரலோக சாதன பூத ஸூஹ்ருத்துக்கள்
புன பாவனம்-பின்னையும் கங்கா சரஸ்வதி காவேரி -பிறப்புறுதிகளான பரிசுத்தி கரங்கள் சமூகம்
தன்யம்-நவ நிதி ரூபமாய்க் கொண்டு பாக்ய பலரூப வஸ்து சமூகம்
யத் அஸ்தி தததச்ச -யாது ஓன்று உள்ளதோ இப்படிப்பட்ட மேம்பட்ட வஸ்துக்கள் எல்லாம்
விஷண  புவஸ் தேபஞ்சஷா விப்ருஷ -தேவரீருடைய கடாக்ஷ கந்தளி தங்களான
ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

ஆழ்வானும் ஸ்ரீ ஸ்தவத்தில் –
ஐஸ்வர்யம் மஹதேவ வா அல்பமதவா –
ஐஸ்வர்யம் யத் சேஷ பும்ஸி –

என்ற இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்தவற்றையே இங்கு இவர் ஸங்க்ரஹித்ததாயிற்று

இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும்.
அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

—————–

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி
ஏகோ மநுஷ்ய த்ருப்யத் தந்தாவளஸ்தோ–மத்த வாரணத்தில் வீற்று இருந்து
முக்தாத பத்ர ப்ரசலமணி கணாத்காரி மௌளிர் -முத்துக் கொற்றக் குடைக் கீழே -ரத்ன சரங்கள் கண கண ஒலிக்க திரு முடியை உடையவனாய்
ந தான் ஷோணி பாலான்-அச்சமயத்தில் தன்னை வணங்கின அரசர்களை
ஷணம் ந கணயதி ந தான் யத்-நொடிப்பொழுதும் லஷ்யம் செய்யாது இருக்கும் ஐஸ்வர்ய காஷ்டை யாது ஓன்று உண்டோ இதுவும்
அந்யோ மனுஷ்ய -வேறு ஒரு மனிதன்
க்ருபணம் யதா ததா -தந்த பங்க்தீ-தர்சயன் -பல் வரிசைகளைக் காட்டி தஸ்மை திஷ்டதே யதி யத் -தாரித்ய காஷ் டையை சொன்னவாறு
தத் தே நயனோ தஞ்சித ந்யஞ்சிதாப்யாம் –தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண விஸ்தாரத்தாலும் சங்கோசத்தாலுமே -யாகும்
கண்டார் வணங்கக் களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஓர் காவலராய் விண் தோய் வெண் குடை நிழலின் கீழ் விரி நீர் உலகாண்டு -பல ஸ்ருதி-
இவள் கடாக்ஷ உதஞ்சி தன்யஞ்சிதங்களும் தத் தத் கர்மானுகுணமாகவே யாகுமே –

யானை மீதே இருந்தாலும் யாசகத்வத்தைக் காட்டிக்கொண்டு இருப்பதை -தஸ்மை திஷ்டதே -என்ற பிரயோகம் காட்டும்
தந்த பங்க்தீ -ஏக வசனமாகக் கொள்ளும் பாடத்தை விட த்வி வசநாந்தமான பாடமே சிறக்கும்
கர்ம நிபந்தனமாகவே என்று ஸ்ருதி பல இடங்களிலும் பறையா நிற்க இங்கு பிராட்டி கடாக்ஷ நிபந்தம் என்றது -இதுவும் தத் தத் கர்ம அநு குணமாகவே யகுமாதலால் -பொருத்தமே

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே!
ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார்.
இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.

வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு
மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது.
இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.

பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை.
அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான்.
அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான்.
தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக் கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது.
இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.

ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.

———————–

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:
–17-

அனைத்தும் இவளது திருப்புருவ வட்ட அதீனமே –
ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமான் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யாம் த்வம்
தேவீ நிரீக்ஷசே
-பிரசித்த பிரமாணம் அடியான ஸ்லோகம்
ஸூதாசகி-அம்ருதம் போலே போக்யமானவள் -நால் தோள் அமுத ஸஹி அன்றோ –
அமுதினில் தோற்றிய பெண் அமுதம் என்றுமாம் –
சீதக் கடலுள் அமுது -அன்றோ
இந்திரே–தவ-யதோ முகம் சிசலிஷேத் -தேவரீருடைய திருப்புருவக் கொடி எவனை நோக்கிப் படர நினைக்குமோ –
உடனே அந்தப்புருஷன் பக்கமாக
தவ சிசலிஷேத் -என்று –சலேத் என்னாமல் அருளிச் செய்தது -கடாக்ஷம் பிரசரிப்பதுக்கு முன்னமே
நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-இவை அனைத்தும் வெள்ளம் இடத் தொடங்கும்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி சித்தி ச்ரிய-ப்ரீதி -ஞானம் -வாக்கு -தைர்யம் -பரிபூர்த்தி -சித்தி -சம்பத்து -ஆகிய இவை எல்லாம்-இங்கே காட்டி அருளிய ஏழு நன்மைகளுக்குள் ஸமஸ்த நன்மைகளும் அடங்கும் அன்றோ-
ரதியாவது -பகவத் பாகவதர்களைக் கண்டால் நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் போன்றவற்றை கண்டால் போன்ற ப்ரீதி
மதி சரஸ்வதி -வகுத்த விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணும் ஞானம்
தந்மே சமர்ப்ய மதீஞ்ச சரஸ்வதீஞ்ச த்வாமஞ்ச சா ஸ்துதி பதைர் யதஹம்
திநோமி
-ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் பிரார்த்தனை படி –
த்ருதி -தைர்யம் -ஸ்தைர்யம் -மன உறுதி
ஸம்ருத்தி -பூர்த்தி -சித்தி -அபேக்ஷிதம் எல்லாம் பெறப் பெறுகை
ஸ்ரீ -ப்ரீதி காரித கைங்கர்யம் பர்யந்தம் அனைத்தும்
ஐஸ்வர்யம் யதசேஷ பும்சி யதிதம்–ஸ்ரீஸ்தவ ஸ்லோகம்
பஹூமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய -பஹு பிரகாரமான அஹம் அஹமியைச் செய்து கொண்டு –
நான் முன்னே நான் முன்னே -என்று முற்கோலிப் புறப்படுகை
வசம் வதாஸ் சந்ய-வசப்பட்டவைகளாய்க் கொண்டு
கூலங்கஷா பரிவஹந்தி -அளவு கடந்து -சந்தானங்களிலும் வெள்ளம் கோத்துப் பெருகுகின்ற –
புத்ர பவுத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை அளவும் வெள்ளம் கோத்த படி –

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

———————–

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்
–18-

ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்ச நா கிஞ்சனைஸ் சஹ-ஸ்திரம்-ஸ்தாவரம் / பரித்ரசம்-ஜங்கமம் /
வ்ரஜம்-சமூகம் -மரம் மலை மண்டபம் இவை ஸ்தாவரங்கள் /அலைந்து கொண்டும் அசைந்து கொண்டும் இருப்பவை ஜங்கமங்கள்
விரிஞ்ச நா கிஞ்சனைஸ் -விரிஞ்சனனும் அகிஞ்சனமும் -இவ்வளவும் அன்றி –
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் -சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவனே மரம் -மரம் என்னலாம்படியான அறிவிலிகள் –
பூலோக ப்ருஹஸ்பதி என்னும்படி வித்வன் மணிகள் -இவ்வாறான பேதம் -இவ்வளவும் அன்றிக்கே –
பிரபல விக்ல பப்ரக்ரியம்-வீர சூரர் -எலி எலும்பர்
இப்படிப்பட்ட பிரகாரங்களை யுடைத்ததாய்
இதம் நிகிலமேவ –இந்த பிரபஞ்சம் முழுவதும்
சத அசத ஆத்மநா நிம் நோந்தனம்–நல்லதாயும் கேட்டதாயுமான ஆகாரத்தாலே -அதமமாயும் உத்தமமாயும் -இரா நின்றது
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத்தாண்டவம் –தேவரீருடைய கடாக்ஷத்தாலும் இல்லாமையாலுமான கூத்து தானே
இந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
அனுக்ரஹ பிரவாகம் பெருகின இடம் உத்துங்க ஸ்திதியிலும் பெருகாத இடம் அதம ஸ்திதியிலும் -என்றதாயிற்று –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

——————

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:
–19-

ஜகத் ஸ்ருஷ்ட்டியை நிர்வஹித்து அருளுவதும் உமது விஹாரார்த்தமாகவே –
ஹே ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி
சித் அசிதோர் அன்யோன்யம் ஆலிங்கதோ சதோ -ஒன்றோடு ஓன்று பிசறிக் கிடைக்கும் அளவில் –
அசித விசேஷிதான் பிரளய சீமனி சம்சரத-என்றும்
அசித விஷ்டான் பிரளய ஐந்தூன் -என்றும்
சொல்லும்படியான நிலைமையில் இருந்த அளவிலே
காலே யோக்யதாம் சம்சதி சாதி -கரண களேபரங்கள் தரும் – ஸ்ருஷ்டிக்கு உரிய பருவம் -யோக்யதை -வந்தவாறே
தே விஹ்ருதயே -உம்முடைய திரு விளையாடலுக்கு உறுப்பாக –
சங்கல்பமாந ப்ரிய —-உம் வல்லபன் பஹு பவன சங்கல்பம் கொண்டவனாய்
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை–பஞ்ச பூதங்கள் -அஹங்காரம் -புத்தி யாவது மஹத் தத்வம் –
பஞ்ச கரணீ -பஞ்சா நாம் கரணா நாம் சமா காரா – கரணங்கள்-அதாவது ஞான இந்திரியங்கள் இங்கே – –
மேலே ப்ரக்ருதி இந்திரிய சப்தத்தால் கர்ம இந்திரியங்கள் / சுவாந்தம் -மனஸ்ஸூ
ஆவரணைஸ் -சப்த ஆவாரணங்களோடு கூடவும்
பூர் புவஸ் ஸ்வர் வத-பூ புவ சுவ லோகங்கள்
தான் சஹஸ்ரம் அண்டான்-பிரசித்தமான ஆயிரக் கணக்கான அண்டங்கள்
அகரோத் -ஸ்ருஷ்டித்து அருளினான்

உம்முடைய முக உல்லாஸத்தையே தனது பேறாக வுடைய உன் ப்ரிய வல்லபன்
உம்முடைய விஹார அர்த்தமாகவே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் மர்ம இந்த்ரியம் ஐம் பூதம் இங்கிவ் வுயிரேய் ப்ரக்ருதி மானங்கார மனங்களே -என்னப்பட்ட தத்வங்களோடும்
ஸப்த ஆவாரணங்களோடும்
பூர் புவஸ் ஸ்வர் லோகங்களோடும் கூடின -ஸ்ரீ விஷ்ணு புராணாதி சித்தங்களான பல்லாயிர மண்டபங்களை படைத்து அருளினான் என்றாராயிற்று-லீலா விபூதி இருவருக்கும் லீலார்த்தமாக இருந்தாலும்
பிராட்டியுடைய லீலையைக் கணிசித்தே என்றது பரம ரசிகத்வத்தை சொன்னவாறு –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க் குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

———————

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–2
0-

விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்-பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
என்கிறபடியே -பகவத் விஷயத்தில் விநியோகிக்க கொடுத்தவை கொண்டு விஷயாந்தரங்களில் போவதே –
ஹே ஸ்ரீரங்கேச்வரி
பூர்வ புமான்-புராண புருஷராகிய உம் கேள்வன்
சப்தாதீன் விஷயான் பிரதர்சய -சப்தாதி விஷயாந்தரங்களைக் காட்டி
தாஸ்யாத்மகம் விபவம் விச்மார்ய-பகவத் சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யத்தை மறக்கச் செய்து
பண்யவதூ விடம் பும்ஸா-விலை மாதின் வேஷம் கொண்ட புருஷனாலே –புருஷ ஸ்தானத்தில் தைவீ மாயா –
தூரத்தாந் இவ-தூர்த்தர்களை வஞ்சிப்பது போலே
வைஷணவ்யா குண மாயயா–தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றபடி
விஷ்ணுவான தன்னால் நிரூமிக்கப் பட்டதாய் குணத்ரயாத்மகமான மாயையினால்
ஆத்ம நிவஹான் விப்லாவ்ய -ஜீவ ராசிகளை வஞ்சித்து
ஆயாசயன்-பரிசிரமப்படுத்தா நின்றவராய்க் கொண்டு
தவ பரீஹாசாத் மநே  கேளயே கல்ப்பதே-தேவரின் விளையாட்டின் பொருட்டு சமர்த்தர் ஆகிறார்

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின்
பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

—————————

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:
–21–

ஹே மாத –
தத் விஷ்ணோ பரமம் பதம்  தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–அந்த திரு நாடு தேவரீருக்காகவே என்பர் வைதிகர்கள்
வைகுண்டேது பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைர்ப் பாகவதைஸ் ஸஹ -என்று
திவ்ய தம்பதிகளுக்கும் ஆஸ்தானமாக இருந்தாலும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப -4-9-10- பிராட்டிக்கே பிரதான்யம் என்னக் குறை இல்லையே
யத்தூரே மனசோ -இப்படிப்பட்டது என்று நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாதது -யாருக்கு என்று இங்கு இல்லையாகிலும் –
ப்ரஹ்மாதீநாம் வாங் மனசா கோஸரே ஸ்ரீ மத வைகுண்டே திவ்ய லோகே -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
யதேவ தமஸ பாரே-பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளதோ
யத்யத்புதம்–அநு க்ஷணம் அபூர்வ ஆச்சர்யாவஹத்வம்
யத்காலா தபசேளிமம் -கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம்
ஸூரபுரீ யத் கச்சதோ துர்கதி-ஸ்வர்க்காதி லோகங்கள் துர்கதியாக அன்றோ இங்கு செல்பவர்களுக்கு
ஏதேவை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந -என்றபடி நரக நிர்விசேஷமாய் தோற்றுமே
சாயுஜ்யச்ய யதேவ ஸூதி -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
அதவா மத் கிராம் யத் துர்க்ரஹம்-திவ்ய தம்பதியின் திவ்ய அனுக்ரஹத்தால் எதையும் விவரிக்க வல்ல இவரே
தம்முடைய வாக்குக்கு எட்டாது என்கிறார் -ப்ரஹ்மாதிகள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது என்பது இதற்கு ஒரு சிறப்போ
பெரிய திருமொழி -6-3-4- சாந்தேந்து மென் முலையார் பாசுர வியாக்யானம்-ஐதிக்யம் –
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள் பணித்ததாக பலகாலும் சொல்லும் -நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ
பட்டரும் வியவஹிக்கிறது என்று இருக்க ஒண்ணாது -அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு –
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிராயாய்த் தோற்றும் –
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும்
இப்படிப்பட்ட திரு நா வீறு பெற்ற தமக்கும் வருணிக்க நிலம் இல்லை என்பது விலக்ஷண வாக் விந்யாஸமே யாகும்
ஆக இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்
மேலே -23-ஸ்லோகத்தில் -பகவதி யுவயோராஹுரா ஸ்தானம் -என்று
திவ்ய தம்பதிகள் இருவருக்கும் உரித்ததாகச் சொல்வதோடு இது விரோதியாது –

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

———————-

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீ ரங்கேச்வர தேவி
இதம் அகிலம் சராசரம் தவ ஹேலாயா -தேவர் திருக்கையிலே விநியுக்தமாய் இரா நின்றது –
த்வம் ந்யஞ்சத் பிரு தஞ்சத்பி -கர்ம ஸூத்ரத்தோபாதி க்ரீடாகந்துகைரிப ஐந்துபி -லீலா விபூதி அன்றோ இது
போகே விபூதி பரா-த்ரிபாத் விபூதி போகத்தில் விநியுக்தமாய் இரா நின்றது -நலமந்தம் இல்லாதோர் நாடு-
யே ஸூ ரய சதா பச்யந்தி தே புண்யா பரிசார கர்மணி-நித்ய முக்தர்களில் கைங்கர்யங்களிலே விநியுக்தர்கள்–
ஆகிலும் பணி செய்வது க்ருஹணிக்கு இறே
வயம் கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே -புபுஷுக்கள் முமுஷுக்கள் -அஸ்மதாதிகள் -நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு ஒரு படி சேஷபூதர்
சேஷித்வே பரம புமான் –பரமபுருஷன் சேஷி -கைங்கர்ய பிரதிசம்பந்தி
ஏதே தவ ஸ்பாரணே பரிகரா ஹி -சகலமும் தேவரீருடைய பெருமையில் சொருகி நிற்கும் அத்தனை –
உமக்கு உறுப்பு இல்லாத வஸ்து உபய விபூதியிலும் இல்லையே –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?

இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

——————————–

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேஸ்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–23–

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி–ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு அலங்காரமான தேவரீர்
யா புரீ ஆஜ்ஞா நுக்ரஹ பீம கோமல புரீ பாலா –எந்த திவ்ய நகரியானது ஆஜ்ஜையாலே பயங்கரர்களாயும்
அனுக்ரஹத்தாலே ஸுமயர்களாயும் உள்ள நகர பாலர்களை யுடைத்தாய் இரா நின்றதோ –
ஸ்மேரா ந நாஷி கமலைர் நமத புநாநாந் பேஜூஷாம் தம்ஷ்ட்ராக தாப்ரு குடிபிர் த்விஷ தோது நாநாந் -ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பாகவதருக்கு -அனுகூலர் -புன்முறுவல் -கடாக்ஷம் -புனிதம் ஆக்குவார்கள்
பிரதிகூலரை கோரப்பற்கள் தடி புருவ நெறிப்பு-கொண்டு பயங்கரராய் இருப்பார்கள் -போலே
பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பரம புருஷார்த்தம் –
ய அயோத்த்யேதி அபராஜிதேதி விதிதா –அயோத்யா -யாரும் யுத்தம் பண்ணி ஆக்கிரமிக்க ஒண்ணாத –
அபராஜிதா -ஒருகாலும் பராஜயம் அடைய முடியாதே
நாகம் பரேண ஸ்த்திதா–பொன்னுலகு -ஹிரண்மயபுரி –
பரேண நாகம் புரி ஹேம மயயாம் வோ ப்ரஹ்ம கோ சோஸ்தி அபராஜி தாக்க்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
ஸூதா ச்யந்திபி அத்புத போக பூம கஹநைஸ் பாவைஸ் ஸாந்தரா -அங்குள்ள பதார்த்த விசேஷங்கள் –
ஸூதா ச்யந்திபி பாவைஸ்-அமுத பெருக்கு -பரம போக்யம் –
அத்புத போக பூம கஹநைஸ்-ஆச்சர்யமான ஸூ க அனுபவ பிரகர்ஷம்
ஸாந்தரா -இப்படிப்பட்டவைகளால் மிகுந்த
தாம் யுவயோஸ் ராஜதாநீம் விது -இப்படிப்பட்ட திவ்ய புரி –
திவ்ய தம்பதிகளுடைய ராஜ தானி யாக வேதாந்திகள் அறிகிறார்கள் –

ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

—————-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–24–

ஹே பகவதி ஸ்ரீர்-
தச்யாஞ்ச -கீழில் சொன்ன ராஜ தானியிலே
ஆஸ்தாந ரத்னம் -யுவயோராஹூ -திவ்ய தம்பதிகளுக்கு உரித்தான திரு மா மணி மண்டபம் ஒன்றை வேதாந்திகள்
இவ்வாறு சொல்கிறார்கள் -எப்படி எண்ணில்
த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்-தேவரீருடைய நிரவதிக திருவருள் போலே
நிரவதிகர்களான நித்ய முக்த திரள்கள் விஸ்ரமிப்பதற்கு உறுப்பான அவகாச விசேஷம்
தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை சங்கீர்ணம்-ப்ரீதி கார்ய கைங்கர்யம் -குதூஹலத்தாலே
வெண் கொற்றக் குடை சாமரம்-போன்ற உபகரணங்களை ஏந்தி ஆனந்த பரவசர்களாக
ஆனந்த நிக்நை-இது உகந்த விஷயத்தில் இருப்பதால் –
ஸ்நேஹாத் அஸ்தாந ரஷா வ்யஸந அபிர் சார்ங்க சக்ர அசி  முக்யை அபயம் -பொங்கும் பரிவாலே அஸ்தானே பய சங்கை –
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் -10-
அந்யதா ஞான ப்ரயுக்தம் திருநாட்டிலுமா என்றால் -ஸ்நேஹாத் -ஞான தசையில் ரஷ்ய ரக்ஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்-
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்குமே
ஆநத்தை கார்ணவம் -ஆனந்த ஏக ஆர்ணவம் -அபரிச்சின்னமான ஆனந்தமே யென்று சொல்லும் அத்தனை
ஒழிய வேறு ஒன்றும் சொல்ல முடியாதே
திவ்ய தம்பதிகளுடைய திவ்ய பாகத்துக்கு ஏகாந்தமான இடம் –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

——————–

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

ஹே தேவி
தத்ர -அத்திரு மா மணி மண்டபத்திலே -அனந்த போக விஸ்தீர்யம் -என்பதிலே இதுக்கு அந்வயம் –
திருவனந்த ஆழ்வான் திருமேனி விவரணம் மேலே –
ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் -புஷ்ப மாலை போன்ற ஸ்பர்சம் பரிமளம் -ஸுகுமார்யம் ஸுகந்த்யம் -மேலும்
ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்–பணங்களின் மணித்திரள்களின் நின்று தோன்றும் தேஜஸ் புஞ்சமே-
ஜ்யோதிர் மண்டலமே விதானம் – மேல்கட்டி
அநந்த போகம் விஸ்தீர்ய -திருமேனியை மெத்தையாக விரித்து
ததுபரி அது மேலே -நிவஸ்ய
விஸ்வம் ஏகாத பத்ரம் நயதா -மேலே காந்தேந -என்பதுக்கு விசேஷணம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர்
வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல –
ஈரரசு தவிர்த்து ரசித்து அருளும் எம்பெருமான்
அசந்க்யை தைஸ் தை சாந்தோதித குண விபவைர் த்வாம் அர்ஹதா -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு –
துல்ய சிலா வாயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோர் ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா
சாந்தோதித குண விபவைர்-நித்யோதித தசை என்றும் சாந்தோதித தசை என்றும் இரண்டு உண்டே –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்
தன்னுடைய விஸ்வரூபத்தை அனுபவிக்கும் தசையே சாந்தோதித தசை
அசந்க்யேயை-எண்ணிறந்த திருக்குணங்கள் –
தைஸ் தை-அநீர்வசனீயன்கள்
காந்தேன ஸஹ -அழகிய மணவாளனுடன்
அந்யோன்ய அத்வைத நிஷ்டாக நரசகஹ நான் தேவி போகான் –பத்நாசி-பரஸ்பரம் வ்யக்தி பேதம் காண அரிதாம்படி
ஒரு நீராகக் கலந்து பரிமாறும் -இன்சுவையே வடிவெடுத்த திவ்ய போகங்களை அனுபவிக்கிறீர் –

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

—————————

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.
–26-

போகயாவாம்பி நாந்தரீயகதயா புஷ்பாங்க ராகைஸ் சமம்
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரன் ததா
யாபிஸ்தவம் ச்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே -26–

வாமபி நாந்தரீயகதயா போக்யா-நாந்தரீயகம் -என்றது உபகரணம் –
புஷ்பாங்க ராகைஸ் சமம்–குஸூம சந்தனாதிகள் போலே
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்–ஏரியில் நீர் நிரம்பினால் உடைத்துக் கொண்டு போகாமைக்காக –
ஸாத்மிகைக்கு கலுங்கல் எடுத்து விட்டால் -உள்ளே தேங்குகிற நீரும் புற வெள்ளம் இடும் நீரும் ஒன்றே –
பரஸ்பரம் புத்தி பேதம் கொள்ளாதே -வெளியிலே தள்ளினார்கள் என்று வெறுக்காதே
பூரோத்பீடே தடாகஸ்ய பரீ வாஹ ப்ரதிக்ரியா -உத்தர ராமசரித ஸ்லோகம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரம் ததா–தேவீ பிரதான போக்யகோடி –
மற்றைய தேவிமார்கள் அவளை அனுசரித்து நிற்பார்கள்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தவனை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்-
யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே –தம்முடைய ஸ்தன புஜாதிகளான
அவயவங்களாகவே இவரும் அவர்களை நினைத்து இருப்பார்

தக்கார் பல தேவிமார் சால உடையீர் –
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் மால் ஓத வந்தனர் மனம் -முதல் திருவந்தாதி
இதுக்கு அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்பதை உப லக்ஷணம் ஆக்கி
சவ்பரி போலே ஒவ் ஒரு திவ்ய மஹிஷியுடன் ஒரு நீராக கலக்கிறான்
பட்டர் நிர்வாகம் -திவ்ய பூஷணம் திவ்ய பீதாம்பரம் -பரஸ்பரம் மாத்சர்யம் கொள்ளுமவை அல்லவே –
திருத்தோள் திருக்கண் அவயங்கள் ஒன்றில் ஈடுபடும் பொழுது மற்று ஓன்று ஸ்ர்த்தை கொள்ளாதது போலே
தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -அசித்வத் பாரதந்தர்யம் -சீமா பூமி –
உபகரண கோடியில் அந்வயம் -ச பத்னீ ஸுஹார்த்த வைபவம் சொல்லிற்று ஆயிற்று

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

————-

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–27–

ஹே ஜனனி
தே சாத்யாஸ் ஸந்தி தேவா -ஸ்ருதியை பின்பற்றி -நித்ய முக்த பரிசாரர்களாக விளங்கா நிற்க
குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை- நித்ய நிர்த்தோஷ கந்தா -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே அழுத்தாமல் –
குண-அபஹதபாப் மத்வாதி குணங்கள் / வபுர்-திவ்ய மங்கள விக்ரஹம் -/ வேஷ-சங்கு சக்ராதிகள் தரித்த வேஷம்
வ்ருத்தமே -ஆஞ்ஞா அனுக்ரஹாதி வியாபாரம் / ஸ்வரூபை -ஞான ஆனந்த அமலத் வாதி ஆத்ம ஸ்வரூபம் /
பகவத் அனுபவ விபூதி அனுபவங்கள் -இவற்றில் வாசி இன்றிக்கே-பரம சாம்யா பன்னராய் இருக்குமவர்கள் –
போகைர்வா நிர்விசேஷாஸ்  -சிறிதும் பேதம் இல்லாமல் இருப்பவர்கள்
திவ்ய தம்பதிகள் உடனும் தம்முடனும் பரஸ்பரம் -பேதம் இல்லாமல்
அத ஏவ சவயச இவ -நண்பர்களை போலே இருப்பவர்கள்
சதாபி – ஸ்ரீ ரங்க பர்த்துஸ் தவச பத பரீசார வ்ருத்யை -மிதுனத்தில் நித்ய கைங்கர்யத்தின் பொருட்டே
யாயிற்று அவர்களுடைய சத்தை –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –
ப்ரேம ப்ரத்ராண பாவ-பிரேமத்தினால் கசிந்த நிலை கொண்டும்
ஆவிலஹ்ருதய-ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே நிலை கலங்கின நெஞ்சு கொண்டும் இருப்பவர்கள்
ஸ்நேஹாத் அஸ்தாநே ராஷா வ்யசநிகள் இறே
உற்றேன் உகந்து பணி செய்து –உள் கனிந்து எழுந்ததோர் அன்பினால் நெஞ்சு உருகி நிற்கும் அளவில்
கைங்கர்யம் செய்து அல்லது நிற்க முடியாமல்
பிரேம பலாத்காரத்தாலே அடிமை செய்து அது தன்னையே போகமாகக் கொண்டவர்கள் –

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.

———————-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

ஹே -சந்தர வதநே-மாதச் – ஸ்ரீ-அடியாரை உகப்பிக்க வல்ல திரு முக மண்டலம் உள்ள தாயாரே
நிஷ்கர்ஷ ஸமயே-சாஸ்த்ரார்த்தை நிஷ்கர்ஷித்து தெளிந்து சொல்லும் அளவில் –
பகவத இதம் ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம்
த்வதாச் லேஷாத் கர்ஷாத் கலு பவதி –தேவரீருடன் சேர்த்தியாலே தான் எம்பெருமானுக்கு ஸ்வா தந்தர்ய ஸ்வரூபம் சித்திக்கும்
கமிது இதமித் தந்தவ விபவ த்வம் ஆஸீ –தேவரீர் எம்பெருமானுக்கு வைபவம் –
திரு இல்லாத் தேவரை தேறேன்மின் தீவு -ஸ்ரீ யபதித்வமே பரத்வ லக்ஷணம்
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் பிதத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ ஸூக்தம் சிறிய பகுதியாக இருந்தாலும் –
ஸ்வரூப நிரூபக தர்மமாக அவனில் அந்தர்பவித்து இருப்பதால் கரை கட்டாக் காவேரியான வேதங்களில்
அவனைச் சொன்ன இடங்கள் அனைத்தும் தேவரீரையே சொல்லிற்றாகும் –

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

—————–

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே
–29-

தவஸ்பர்சா தீசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவேதம் நோபாதே உப நிபதிதம் ஸ்ரீரசி யத
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷூ
நசைவந் த்வா தேவம் ஸ்வ தத இதி கச்சித் கவயதே –29-

கமலே-ஈசம் -தவ ஸ்பர்சாத் மங்கள பதம் ஸ்ப்ருசதி -மங்கள ஸ்வரூபையான -உம்முடைய சம்பந்த நிபந்தனத்தாலே –
ஐஸ்வர்யம் யத சேஷ பும்சி யதிதம் ஸுந்தர்ய லாவண்ய யோ ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்லோகே
சதித் யுச்சதே தத் சர்வம் த்வத் அதீனம் ஏவ – ஸ்ரீ ஸ்தவம் –
இதம் தவ உபாதே ரூப நிபதிதம் ந -தேவரீருக்கு மங்களம் இதர சம்பந்த நிபந்தநம் அன்று -அத்தை விவரிக்கிறது மேலே –
ஸ்ரீரசி யத-யத த்வம் ஸ்ரீ ரசி -தத ஏவ இதம் தவ உபாதேர் நோப நிபதிதம் -என்று அந்வயம்
ஸ்வாபாவிகமான இதனை ஓவ்பாதிகம் என்ன ப்ரஸக்தியே இல்லையே
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம்
பரிமளத்தை இட்டே பு ஷ்பத்துக்கு சொல்கிறோம் -பரிமளத்துக்கு இப்படி ஒரு நிர்பந்தம் இல்லையே -ஸ்வத சித்தம் அன்றோ –
தாம் ஜிகதிஷூ ஏவம் த்வாத் ஏவம் ஸ்வ தத இதி ந ஹி கவயதே -பரிமளத்தின் சிறப்பை சொல்கிறவன்
அதுக்கு ஒரு காரணம் சொல்வது இல்லையே –

மங்களம் பகவான் விஷ்ணுர் மங்களம் மது ஸூதந -மங்களம் புண்டரீகாஷோ -மங்களம் கருடத்வஜ –
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாஞ்ச மங்களம் -உம்முடைய சம்பத்தாலே அவனுக்கு –
தேவரீருக்கு நிருபாதிகம் அன்றோ –

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.

இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.

———————-

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.
–30–

ஹே ஸ்ரீ தவ பூயாம்சோ-அபாங்கா- யதுபரி பதிதா தத் பரம்ப்ரஹ்மம் அபூத்–தேவரீருடைய விஞ்சிய கடாக்ஷ வீக்ஷணங்கள்
எந்த வியக்தியின் மீது விழுந்தனவோ அதுவே பர ப்ரஹ்மம் ஆனது
அமீ யத்ர த்வித்ராஸ் சச சத மகா திஸ் தததராத்–சில திவலையாக பிரசுரித்த இடம் ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகள் திக் பாலர்கள்
அத தத் உபயம் உசன் ஆம்நாய த்வாம் ப்ரணி ஜகௌ-இரண்டையும் பேசா நின்ற வேதம் தேவரீரையே பேசிற்றதாகுமே
பிரசஸ்திஸ் சா ராஜ்ஞோ  யதபிச புரீ கோச கதநம் –நகரத்தையும் அதில் உள்ள நிதியையும் வர்ணித்தால் அத்தை ஆள்கின்ற
மஹா பிரபுவையை தானே குறிக்கும் –
அப்படியே தேவரீருடைய கடாக்ஷ அதீன சத்தா சாலிகள் ஆனவர்களைச் சொல்லும் வேதமும்
தேவரீருடைய உத்கர்ஷ கீர்த்தனமே ஆகும்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

—————————

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–
31–

ஒளி ரத்னத்துக்கு ஸ்வமான குணமே -வந்தேறி இல்லையே -ஆகவே இயற்கையான பெருமையே –
ஆகவே எம்பெருமானுக்கு நிருபாதிகத்வம் சொல்லக் குறை இல்லையே –
ஹே ஸ்ரீ -த்வம் ஸ்வதஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வம் அஸி –இயற்கையாகவே எம்பெருமானுக்கு ஸ்வமாகா நின்றீர் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹயாத்மாந பரமாத்மந -என்றும் உள்ள பிரமாணங்கள் பிராட்டிக்கு பொதுவே
பிராட்டி அவனைத் தவிர ஸமஸ்த அனைவருக்கும் ஸ்வாமிநியாயும் அவனுக்கு ஸ்வம்மாகவும் இருப்பாள்
தத  ஏவ-அதனாலாயே
ஏஷ பகவான் த்வதா யத்தர்த்தித்வே அபி அபராதீன விபவ அபவத் -பராதீன வைபவசாலித்வத்தை சொல்லி
உடனே அபராதீன -ஸ்வ தந்த்ர வைபவசாலித்வத்தை சொல்வது பொருந்தும் என்று காட்ட மேலே த்ருஷ்டாந்தம்
ரத்னம் ஸ்வயா தீப்தாயா மஹார்கம் பவத் அபி –ரத்னம் பெரு விலையானாகிறது தன்னுடைய ஒளியினால் தானே -ஆனாலும்
நவிகுணம்-பவதி-ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் -பவதி-ந ச அந்யா ஹித குணம் -பவதி-அந்த ரத்னம் குண ஹீனம் ஆகிறதும் இல்லை –
ஸ்வா தந்தர்யத்தில் கொற்றை பெற்றதாகிறதும் இல்லை -அந்யாதீனமான அதிசயத்தை யுடையதாகிறதும் இல்லை –
மணத்தைக் கொண்டு புஷ்பத்தை விரும்புமா போலேயும் –
பிரபையைக் கொண்டு ரத்னத்தை விரும்புமா போலேயும் –
பிராட்டியைக் கொண்டு இறே எம்பெருமானையும் விரும்புகிறோம் –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

——————————

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா-இருவருக்கும் பொதுவான ஷாட் குணங்கள் –
பிரசகன-சக்தியையம் -வீர்யத்தை -விஜய ப்ரதா-என்றும் தேஜஸ்ஸை ஜ்யோதிஸ் -என்றும் சொன்னவாறு
ஞானம் -ப்ரத்யக்ஷ விஷயங்களை போலே பரோக்ஷ விஷயங்களையும் கை இலங்கு நெல்லிக் கனி போலே காண்கை
பலம் -அனாயாசமாகவே சகலத்தையும் தரிக்க வல்லமை
சக்தி -சகலத்தையும் எளிதாகச் செய்து தலைக்கட்டுகை
தேஜஸ் -சகாயாந்தர நிரபேஷமாக அனைத்தையும் செய்து தலைக்கட்டுகை
ஐஸ்வர்யம் -உபய விபூதியையும் ஆளவல்லமை
வீர்யம் -ஒன்றிலும் விகாரப்படாமை
இவை ஸ்வரூப யோக்யதா மாத்ர பிரகதனம் -மேலே -34- ஸ்லோகத்தில் ஓவ்சித்ய அனுகுணமான விபாகம் செய்து அருளுவதால்
ப்ரணத வரண -ஆஸ்ரித ஜன வசீ கரணம்
ப்ரணத-ப்ரேம -ஆஸ்ரிதர் பாக்கள் ப்ரேமம் விஞ்சி இருக்கை
ப்ரணத-ஷேமங்க -ஆஸ்ரிதர் இஷ்டப் பிராப்தியும் அநிஷ்ட பரிகாரங்கள் செய்து அருளுகை
புரஸ்ஸர–இவைகளை முன்னிட்டவைகளும்-இவை பிரதானம்
இவற்றால் திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரிதங்களான திருக் குணங்களை சொல்லி
மேலே திவ்ய மங்கள விக்ரஹ நிஷ்டங்களான குணங்கள்
அபி பரிமள -ஸுகந்த்யம் -பஞ்ச உபநிஷத் மயம்
காந்திர் -ஸுந்தர்யம்-தோள் கண்டார் தோளே கண்டார் –
லாவண்யம் -சமுதாய சோபை
அர்ச்சிஸ் -உஜ்ஜ்வலம் -பர பிரகாசத்வம் –
இந்திரே தவ பகவதச் ச சாதாரண குண ராசே –உமக்கும் ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் பொதுவான குணங்கள் இவை –
ஷேமங்கரத்வம் எம்பெருமான் சாஷாத்தாகவே செய்ய வல்லவன்
பிராட்டி சில இஷ்ட பிராப்தி தானாகவும் சிலவற்றை எம்பெருமானைக் கொண்டும் செய்ய வல்லவள் –
அநிஷ்ட நிவாரணத்தை எம்பெருமானைக் கொண்டும் செய்விக்க வல்லவள் –
ஸஹ தர்ம சரீம் ஸுரே சம்மந்தரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்ய அஞ்ஞாத நிக்ரஹாம் -யதிராஜ சப்ததி -2-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்

2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்

3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது

4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்

5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்

6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்

7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்

8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்

9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி–ஸ்ரீ ரெங்க நிலையத்துக்கு விளையும் அபி விருத்திக்கு
எல்லாம் த்வஜமாக இருப்பவளே –
யௌவன முகா அன்யேபி குணா யுவயோஸ் சமாநாஸ் சந்த -யௌவனம் ஸுகுமார்யாதிகள்-உபய சாதாரணங்கள் –
தர்ப்பண இவ-இருவர் குணங்களும் கலசி -கண்ணாடியில் பிரதிபலிப்பது போலே –
திவ்ய தம்பதிகளுக்கு உள்ள ஒற்றுமை நயம் வெளிப்படுத்தப் பட்டது –
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண சம்ச்தீர்யா ப்ரசுரம் ஸ்வ தந்தே —உபய குணங்களும் உபயருக்கும் பரம போக்யம் –
தாவத் பர்யந்தம் நினைக்க வேண்டும்படியான ஒற்றுமை காட்டப்பட்டதாகின்றது அத்தனை –

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள்.
அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ?

——————-

இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

யுவயோ யுவத்வாதௌ துல்யே சத்ய அபி–யவ்வனாதிகள் பொதுவாய் இருக்கச் செய்தேயும்
பும்ஸ்த்வ ஸூலபான்- அபரவசதா சத்ருசமன ஸ்திரத்வாதீன் குணாந் க்ருத்வா பகவதி –
அபரவசதவமாவது பாரதந்தர்யம் இல்லாத ஸ்வா தந்தர்யம்
சத்ருசமன ஸ்திரத்வாதீன்-இத்தை சத்ரு சமனமாயும்-ஸ்திரத்வமாகவும் இரண்டாக சொல்வாரும் உண்டு
அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மை -என்று ஒன்றேயாக கொள்ளத்தகும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப் யோ விசேஷத -இத்யாதி பிரமாணங்களிலே காணலாம்
ஆக ஸ்வாதந்தர்யமும் -அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மையும் எம்பெருமானுக்கே உரியவை –
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா ஷமாதீன் குணான் த்வயீ க்ருத்வா —
ம்ரதிம-என்றது ம்ருதத்வம் -ஸுகுமார்யம்-திருமேனிக்கு -ஸுகுமார்ய ஹ்ருதயம் -என்றபடி -/
பதி பரார்த்த்ய -அவனுக்கே பரதந்த்ரப்பட்டு இருக்கை -/
கருணை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் /க்ஷமை-பொறுமை /
அவனுக்கு ஷிபாமி -ந ஷமாமி-இரண்டும் உண்டே -ஆகவே இவை ஸ்த்ரீத்வ ஏகாந்தம்
போக்தும் பவதி ராத்மனி பிதா -அநு போக்தாக்களுக்கு இவை என்றவாறு

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி

ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)

ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்

————————–

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–35-

ஹே -குசேசயோதர விஹாரிணி -குசேசயம்-தாமரைப் பூ -அதன் உதரத்தில் விஹரிப்பவள் –
பத்ம வநாலயே -அலர் மேல் மங்கையே
கந கநக த்யுதீ  -அவனது கன த்யுதீ -மேக ஸ்யாமளன்-கார் கலந்த மேனியன் – –
இவளது கநக த்யுதி -ஸ்வர்ண வர்ணாம்
யுவதசாமபி முக்ததசாம்–அவனது யவ்வனம் /இவளது கௌமாரத்துக்கும் யவ்வனத்துக்கும் சந்தியான பருவம் –
அவன் காளை -இவள் முக்தை-இவை நித்யமாகவே செல்லும் இவர்களுக்கு
யுவ தருண த்வயோருசிதம் பரம் ஆபரணாதி –பருவங்களுக்கு வாசிக்கு தக்கவாறு திவ்ய பூஷணங்கள் –
மேலே -46-ஸ்லோகத்தில் திவ்ய பாஷாணங்கள் விவரணம்
அசமாநதேச விநிவேசி-என்பதுவும் ஆபரண விசேஷம் –
அவற்றை இடும் ஸ்தானங்களில் வாசி -முக்கு குத்தி செவிப்பூ –
ஹரௌ த்வயிச விபஜ்ய-இப்படிகளாலே வியாவருத்தயைக் காட்டிக் கொண்டு
நிர்விசசி–பக்தர்களை அனுபவிக்கச் செய்யா நின்றீர் –

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது
பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் –
ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.

பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–
36-

ஹே ஸ்ரீ ரங்கேச்வரி– ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் தே அங்கம் கும்பத ஷீராப்தே —
ம்ருதத்வம் சீதத்வம் முக்தத்வம் மதுரத்வம் உதாரத்வம் –
சந்திரன் இடத்தில் மார்த்வம் -கல்பலதையில் உதாரம் –ஸூதா மதுமுகா-இவற்றில் மாதுர்யமும் மோஹனத்வமும் —
இப்படி சாராம்சங்களை எல்லாம் பிராட்டி இடம் –
ருஜீஷதாம்-திப்பியாகும் தன்மை – -சாரம் இழந்த சந்திரனே உலகில் சிறப்பாக சொல்லப்பட்டால்
இவள் வைலக்ஷண்யம் வாசா மகோசரம் அன்றோ
ஆவிலாம் வர்ண நாம் சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –இந்த வர்ணனையும் அந நுசிதம் அன்றோ –
க்ருத்ரிதமதா கந்தமும் இல்லாத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்;
கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன.
ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்க வல்லது அல்ல – என்பதாகும்.

தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ப்ரணம தநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–37–

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று
நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன்
எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர் மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————

ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்
–38-

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே
–39-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————-

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–
40-

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–41–

ஹே பத்மே ஆலோகிதை மாம் பாலய-தேவரீர் அடியேனை கடாக்ஷித்து ரஷிக்க வேண்டும் –
ஆறு விசேஷங்களால் அவற்றை விசேஷிக்கிறார்
1-ஆநந்தாத்மபி -பேரின்பமே வடிவெடுத்தவை –
2-ஈச மஜ்ஜ நமத ஷீபாலசைர் சர்வேஸ்வரனும் உம் கடைக்கண் நோக்கில் ஏக தேசத்தில் அமிழும் படி அன்றோ –
இதனாலே செருக்கி இருப்பான்
3-ஆகல- ப்ரேமார்த்ரை ரபி-கழுத்தே கட்டளையாக ப்ரேமம் கசிந்து
4-கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை-இரு கரையும் அழிய பெருகும் கிருபா பிரவாகம்
நம் மேல் ஒருங்கே பிறழ வைக்கும்
5-ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை–கடாக்ஷ லேசம் படும் இடம் எல்லாம் ப்ரஹ்மாதிகள் தோன்றுவார்கள்-
விஷ்கம்பகை-சப்தம் நிர்வாஹகத்வம் தாத்பர்யம் –
6-ஐஸ்வர் யோத்க மகத்கதை -செலவாகி சிறப்பை உண்டாக்க வல்லவை
ஸ்ரீ பட்டருடைய அதி கம்பீர வாக்ய பிரயோகங்கள் இதில் -காணலாம்

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன்.
என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழ வேண்டும், இன்னார் மீது விழக் கூடாது”,
என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–
42-

பங்கஜ ரஜச் தே பாதாருந்துதமேவ-தாமரைப் பூவின் உள்ளே அதி ஸூ குமாரமாக இருக்கும் துகளும் கூட
திருவடிகள் கொதிக்க ஹேதுவாயிற்று -அந்த அடிக்கொதிப்பாலே திருமார்பில் சென்று மன்னியது –
தாமரைப் பூ வாசம் நெரிஞ்சிக் காட்டில் வாசம் போலே அன்றோ தேவரீருக்கு
சே டீப்ருசா லோகிதை அங்கம் லாநி –ச பத்னிமார் -தோழிமார்கள் சிறிது உற்றுப் பார்த்தாலும் திருமேனி வாட்டம் அடைகிறதே
அத லீலாரவிந்த க்ரஹ- சாஹச விதௌ –லீலா தாமரைப்பூவை ஏந்தி இருப்பதும் என்ன ஸாஹஸ சேஷ்டிதம்
ஹரி புஜே வனமாலயா ஸஹ டோலா ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-திரு வனமாலை ஊசல் ஆடுவதால்
ஹா கஷ்டம் ஹா கஷ்டம் என்று ஹாஹாஹாரம் பண்ண வைக்கும் –
இவற்றால் ஸுகுமார்யத்தின் எல்லை சொல்லிற்று ஆயிற்று
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –இதுக்கும் மேலே கவிகளின் புருஷமான வாக்கில் அகப்பட்டு
மாந்திப் போவதால் யார் தான் இத்தைப் பேச வல்லார் –
விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத
இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள்,
உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி,
அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது
(தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”,
என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி
என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக் கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —

————————————–

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:
–43–

ஸ்தன யுகம் அத்யாபி ஆமர்யாதம் அகண்டகம் ந –முலையோ முழு முற்றும் போந்தில —
கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில-பரிபூர்ண ஸ்தன உத் பேதம் வயசா ப்ரவ்ருத்தம்
ஆலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா வா நைசர்கிகத்வ அயச ந ஐஹதி–விப்ரம சப்தம் -விலாச அர்த்தம் –
ஆலோகிதத்திலும் ப்ரூ பேதத்திலும் ஸ்மிதத்திலும் —
ஆலோகித விப்ரமம் -நோக்கும் நோக்கில் ஒரு விலாசம் உண்டு
ப்ரூ விப்ரமம் -புருவ நெருப்பில் ஒரு விலாசம் உண்டு
ஸ்மித விப்ரமம் புன்சிரிப்பில் ஒரு விலாசம் உண்டு -யவ்வன பூர்த்தி இல்லாமை –
நைசர்கிகத்வம் என்றது ஸ்வாபாவிகத்வம் –
சைசவ யௌவன வ்யதிகர தே காத்ரேஷூ சௌரபம்-அதி யவ்வனமும் அதி கௌமாரமும் இல்லாமல் சந்தியான பருவம் –
சைஸவம் கௌமாரம் என்றவாறு -சிசு பிராயத்தை சொல்லுமது அன்று
போக ஸ்ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –போக பிரவாகத்தில் வந்தால் வல்லபருடைய
கராவலம்பம் கொண்டே இழிய வேண்டும் -தேசிகர் -என்றது அந்நிலத்துக்கு உரியவர் என்றவாறு –
பிராட்டியும் பகவத் அனுபவ போக வெள்ளத்திலே ஸ்வதந்திரமாக இழிய மாட்டாளே-
பருவத்தின் இளமை ஸ்த்ரீகரித்த படி

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு,
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும் போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குரு பரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–44-

ஹே -ஸ்ரீ ரங்கேச்வரி-தேவி
தே கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் — தேவரீருடைய பரம ஸூ குமாரமான திருமேனி யாகிற பூம் தொடையல்
காந்த உர ப்ரதியத்தம் அர்ஹதி-அழகிய மணவாளனுடைய திரு மார்புக்கு பரிஷ்காரமாக அலங்காரமாக உள்ளதே
1-ஆமோதாத்புதசாலி -அத்புதமான பரிமளம்
2-யௌவன தசா வ்யாகோசம் -கீழே சொன்னபடி சந்தி -யவ்வன தசைக்கு உரிய விகாசம்
3-அம்லா நிமத்-மென்மேலும் விகாச உன்முகம் -வாடுவதற்கு பிரசக்தி இல்லாமை
4-சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் -அமிர்தம் தெளித்து அதனாலே குளிர்ந்து
5-லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்-லாவண்யமாகிற நூலிலே கோக்கப்பட்டு -லாவண்யம் நீரோட்டம் –
சர்வ அவயவ சோபை என்பதால் இப்படி வர்ணனை
ஆக இப்படி ஐந்து தன்மைகளும் பூம் தொடையலுக்கு உண்டே
கீழே -டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம் –42-என்றதை மீண்டும் அனுசந்தித்து –
இப்படிச் சொன்னது உசிதம் அன்றே என்று அனுதபித்து –
கவிம் திங்மா  ம காண்டாகுலம் –முடி மேலே மோதிக் கொள்ளுமா போலே –
தகாத வழியில்- ஆகுலம் -கலங்கின கவியான என்னை நிந்திக்க வேணும்-
வாசா மகோசரமான ஸுகுமார்யத்துக்கு திரு மார்பும் அடிக்கொதிக்குமே-
இது தகுதி அன்றாகிலும் ஆஸ்ரித வாத்சல்யத்தினால் அன்றோ
அகலகில்லேன் இறையும் என்று மன்னி இருப்பது என்கிறார் என்பது உள்ளுறைப் பொருள் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்;
உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது;
உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன –
ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின்
திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன?
ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல்,
திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு,
இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————-

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்
–45–

அபராத பூயிஷ்டர்களான நம் போல்வாரை எம்பெருமான் ஸ்வீ கரிக்கைக்காக -கலக்கும் கலவியை
திரு நா வீறுடன் அருளிச் செய்கிறார்
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் அன்றோ –
ஹே தேவி த்வம் நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –இடைவிடாதே அன்றோ தேவரீர் உகப்பித்து அருளா நின்றீர்-
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாளே
நித்யம் அபிநந்தயசே -மதுப்பின் அர்த்தமான நித்ய யோகம்
அவனும் பரம ரசிகன் -எதிர் விழி கொடுப்பான் -சுவையன் திருவின் மணாளன் அன்றோ
ரஸிக ப்ரமரோப புக்தா புஷ்பாவளீவ அபிநந்தயசே-ரசிகமான தொரு வண்டு அனுபவித்த பூ மாலை போலே துவண்டு –
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூவிதாலோ –திருவாய் -9-9-4–
துவட்சி எதனாலே என்னில்
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி-அவனுடைய சம்போக கேளிகளாலே யாயிற்று –
மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-ரஸ ஸிரை-ரஸ நாடி -சேதன அங்கீகாரர்த்தமாக எம்பெருமானை வசீகரிக்க
ஸ்ருங்கார லீலா விலாச சேஷ்டிதங்கள் –
திவ்ய தம்பதிகள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்த படியை அருளிச் செய்தவாறு –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.

தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –

————————-

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–4
6–

ஜநார்தன ஜிவிகே-இவள் ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே -அவனும் ந ஜீவேயம் க்ஷணம் அபி விதாநாம் அஸி தேஷனாம் –
ஆகவே இவள் அவனுக்கு ஜீவன ஆதாரம் -ஜீவன ஒளஷதி அன்றோ

பிரகிருதி மதுரம் தே காத்ரம் முக்த விபூஷணை ஜாகர்த்தி-பரம ஸூந்தரமான திவ்ய ஆபரணங்களாலும்
இயற்கையான திரு மேனி -மேலே இரண்டு திருஷ்டாந்தங்களால் விவரணம்
துக்தம் வலய சகலைர்-யதா –என்று -வலய சகலம்-கல்கண்டு பொடி-மதுரமான பாலிலே சேர்ந்தால் போலே
கல்பலதா புஷ்பைச்ச யதா –கல்ப லதையில் புஷ்ப சம்பத்தும் சேர்ந்தால் போலே-சேர்த்தி சோபா அதிசயம்
கநகரசநா–ஸ்வர்ணமயமான மேகலை
முக்தா தாடங்க -முத்துக்களால் சமைந்த கர்ண பாஷாணங்கள்
ஹார -முத்தாஹாரம்
லலாடிகா-உச்சிப்பூ திலக பூஷணம்
மணிசரம் -ரத்ன மாலிகைகள்
துலா கோடி -ரத்ன நூபுரம்
ப்ராயைர்-ஆதிசப்த ஸ்தானீயம்

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில்
பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி,
நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார்.
இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

——————

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–
47-

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி
கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி சாமான்ய போக்யமபி-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –
இவை பொதுவாக திவ்ய தம்பதிகள் இருவரும் அணிந்து கொள்ள வேண்டியவையாய் இருந்தும்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம இவ ரமண ஸ்வயமேவ பிப்ரத்-பரம ஸூகுமாரமான திரு மேனிக்கு பாரமாக இருக்குமே –
அந்த கிலேசம் கூடாதே என்று தானே அழகிய மணவாளர் அணிந்து கொண்டவராகி –
லீலா அரவிந்தமே சுமை அன்றோ உமக்கு -திரு மேனியில் பஞ்சாயுத தாரணம் பரம ஸாஹாசமாய் அன்றோ இருக்கும் –
த்வாம் காஹதே –உம்மை அனுபவிக்கிறார் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது
என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று
ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள்.
அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————-

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–48-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -9-142-
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்ம நஸ் தநூம்
அநுஜ நுர நுரூப சேஷ்டா – உத்தர சதகம் -49-என்று ஸ்ரீ ரெங்க நாதனை சம்போதித்து அருளிச் செய்தபடியே
இங்கும் பெரிய பிராட்டியாரை சம்போதித்து அருளிச் செய்கிறார் –

தரதளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத -சிறிது அலர்ந்த தாமரைப் பூ போலே
அழகிய நீண்ட திருக் கண்கள் உடைய அகில ஜெகன் மாதாவானவளே –
லீலயா மநுஜ திரச்சாம் துல்ய வ்ருத்தே நாதஸ்ய அநுஜநு அநு ரூபா நாவாதரிஷ் யோ யதி -கர்மத்தால் இன்றி ஸ்வ இச்சையால்
சஜாதீயமாக அவனது திருவவதாரம் போலே அநு ரூபையாய்க் கொண்டு திருவவதாரம் செய்திலீராகில்
தஸ்ய நாதஸ்ய நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -அவனது லீலை எல்லாம் விரசமாகியே ஒழியும் அத்தனை –
இது விபவ அவதாரத்து அளவு மட்டும் இல்லை -அர்ச்சையிலும் பர்யவசனமாகுமே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லை யென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லை யென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –

ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது
எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.
இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும்
கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயிததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணமி த்யுக்தி ஷமௌ ரஷத
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே
அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது
பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–51-

மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் / பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் /
ப்ரஹ்ருஷ்யேமச  –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று
நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் அனுசந்தேயம் –

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம்.
எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள்
ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

——————

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

பிதா ஹிதபரன் -சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி -உண்டே
தாய் பிரிய பரம் -தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவில் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ –
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அலகால் திருத்தும்

ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷதீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு -சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித்பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ்வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விச்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.

அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால்,
அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–53–

நேதுர் நித்ய  சஹாயிநீ ஜனனி நஸ் த்ராதும் தவ மத்ராகதா
லோகேத்வன் மகிமாவ போத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹூ
க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸோ வநே
சாதோ திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்-53–

ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய  சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலா கற்றனையோ கரிய கோவே
பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்
எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்
கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்
யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில்
நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய்.
ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும்
உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறா
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————–

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–54–

ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தசமுகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார்,
“குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்?
நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்

——————————

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–

அவனுடைய சர்வபிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமிதஉம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைச்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும்,
அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–56

ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் -ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ரா ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –
பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-

ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ
பூர்வேஷூ சர்வ மதிசாயித மத்ர மாத
ஸ்ரீ ரங்கதாம்நி யது தான்யா துதாஹரந்தி
ஸீ தாவதார முக மேத தமுஷ்ய யோக்யா –57-

அவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் தவ யுக்தா குணா ந ஸக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்கிறபடியே
அர்ச்சாவதாரத்திலே ஸமஸ்த கல்யாண குணங்களும் பூர்ணம்
ஹே மாத -ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ குணேஷு —
சர்வ ஸ்வ தானம் பண்ணுகை யாகிற ஔதார்யம் என்ன
பாரா துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான காருணிகத்தவம் என்ன
ஆஸ்ரித தோஷ போக்யத்வமான வாத்சல்யம் என்ன
இவை முதலான திருக் குணங்களுக்கு உள்ளே
சர்வம் அத்ர ஸ்ரீ ரங்கதாம்நி அதிசாயிதம் — ஒவ் ஒரு திருக் குணமும் திருவரங்கம் பெரிய கோயிலிலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பில் அதிசயமாக உள்ளதே
அந்யத் ஸீதாவதார முகம் -அர்ச்சாவதாரத்தில் வேறுபட்ட ஸ்ரீ சீதாவதார முதலான விபவ அவதாரத்தை
அதிசயித குணமுதா ஹரந்தீதி யத் -குணம் உத்கர்ஷம் உடையதாகச் சொல்லுகிறார்களே என்னில்
ஏதத் -அமுஷ்ய யோக்யா — ஸ்ரீ ரெங்க நாயகியான அர்ச்சாவதாரத்துக்கு அப்யாஸம் என்பதால்
இத்தால் விபவங்களில் குண அப்யாஸம் ஆகையால் அபரிஷ்க்ருத ஸ்திதியும்
அர்ச்சையில் ஸூ பரிஷ்க்ருத ஸ்திதியும் சொல்லிற்று ஆயிற்று –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி,
முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்

————————–

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

ஐஸ்வர்யம் அஷரகதிம் பரமம் பதம் வா
கஸ்மைசி தஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சிதுசித்தம் க்ருதமித் யதாம்ப
த்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபாவ –58-

அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.

பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————————

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–59-

ஹே தேவி -ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் / அதிகாரம் சமதமாதிகள் /சகநம் -அத்யாவசிய திருடத்வம் /அநு சயம் -அநு தாபம் /
இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.

பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .

——————-

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச  புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–61-

தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ்கண்டகம் நிர்துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதியோகி ப்ரதிஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.

சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————–

ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்

ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீபராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-11-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

ப்ரஹ்ம ருத்ராதி சர்வ ஆத்மாக்களுக்கு அந்தராத்மா பூதனாய் ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகனாய் –
அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண நீதியாய்
அப்ராக்ருத ஸ்வ அதாசாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானை அலற்றி
அவா அற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய் அவனைப் பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதி களால் இவை ஆயிரமும் அவற்றிலே தம்முடைய அபேக்ஷிதம் பெற்று விடாய் தீர்ந்த பத்து
இவற்றை அறிந்தார் பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களுக்கும் மேற்பட்டார் என்கிறார் –

——————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-11-

நிகமத்தில் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் உயர்வற உயர்நலம் உடையனாய் -அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் சர்வ ஆயுத உபேதனாய் லஷ்மீ பூமி நீளா நாயகனாய்  -அஸ்தானே பய சங்கிகைகளான அநந்த வைனதேயாதிகளாலே  -அனவரத பரீசர்யமான சரண நளினனாய் ஸ்ரீ வைகுண்ட  நிலயனான சர்வேஸ்வரனாய் -ஸ்வ விபூதி பூதரான -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்து ஆஸ்ரயிக்குமவர்களுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபன்னகரான ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாக பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு -கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க முடியாத படியான  பரமபக்தியாலே பிறந்த அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் சரம்சாரத்திலே பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார் – அயனை அரனை அவா அறச் சூழ் அரியை-என்றுமாம் –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அயனை அரனை –அவா அறச் சூழ் அரியை- அலற்றி–என்றுமாம் –1–முதலிலே மயர்வற மதி நலம் அருளினன் -என்றார் -நடுவு பல இடங்களிலும் அவனே அபாஸ்ரயம் என்றார் -முடிவிலும் -இன்று என்னைப் பொருளாக்கி -என்றும் -என் தலை மிசையாய் வந்திட்டு -என்றும் -எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தையே தமக்கு உபாயமாகப் பேசித் தலைக் காட்டினார் –
-2–இங்கனே இருக்கிற நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு அடியான ஸ்ரீயபதித்தவத்தை-மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்று முதலிலே தொடங்கி நடுவு பல இடங்களிலும் பிரஸ்தாவித்துக் கொடு போந்து –முடிவிலே திருவாணை நின் ஆணை என்றும் -கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டினார் –
-3–ததீயருடைய பிராப்தையையும் முதலிலே அயர்வறும் அமரர்கள் என்று தொடங்கி –நடுவு பல இடங்களிலும் -அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும் பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை அகப்பட பரக்கத் பேசிக் கொடு போந்து முடிவிலும் அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றும் தலைக் கட்டினார்-
-4-எம்பெருமானுக்கு ஸுசீல்யம் என்று கொண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு–எத்திறம் என்று தொடங்கி பல இடங்களிலும் பேசினார் –
-5-இவனுக்கு அசாதாரண திரு நாமம் நாராயணன் என்னும் இடம் -வண் புகழ் நாரணன் -என்று தொடங்கி பல இடங்களிலும் பேசிக் கொடு போந்து -வாழ் புகழ் நாரணன் -என்று தலைக் கட்டினார் –
ஆழ்வார் இப்படி ஆறி —- யால் இவ்வைந்து அர்த்தமே இப்பிரபந்தத்துக்கு பிரதான அர்த்தங்கள் என்று கருத்து –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-11-

அநந்தரம் பல அவாப்தி பிரகாரத்தை ப்ரதிபாதித்துக் கொண்டு இத்திருவாய் மொழிக்குப் பலமாக
இதில் ஞானம் யுடையவர்களுடைய ஜென்ம உதகர்ஷத்தை அருளிச் செய்கிறார்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆஸ்ரிதருடைய அபி நிவேசம் தீரும்படி நிரவதிக சம்ச்லேஷம் பண்ணுகையாலே
விஸ்லேஷ துக்க நிர்ஹரண ஸ்வ பாவனாய் –
வஸ்ய ஸூ த்தி பண்ணும் படியான அவா அறும் படியாகத் தன் குணாதிகளாலே சூழ்ந்து ஹரித்துக் கொள்ளுமவன் என்றுமாம்
முக்த ப்ராப்யதயா பூர்வ பக்ஷதயா சங்கிதனான ஹிரண்ய கர்ப்பனுக்கும் அந்தராத்மாவாய்-
அப்படி பசுபதி மத ப்ராப்யனான ருத்ரனுக்கும் அந்தராத்மாவான
பரம ப்ராப்ய பூதனை பிராபிக்கையில் யுண்டான த்வரையாலே கூப்பிட்டு –
ப்ராப்ய ஸித்தியாலே-அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் அதி பர பக்தி ரூபமாக முடிந்த
அவா இல் அந்தாதி களான இப்பத்தையும் அனுசந்தித்து பிறந்தார் உயர்ந்தே–
`இது கலி விருத்தம் –

————————————————

இப்படி ஸ்ரீ யபதியான நாராயணனுக்குப் பிரகார பூதனான சேதனனுக்கு உபாயத்வேன ப்ரவ்ருத்தனாய்க் கொண்டு
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்கிற மஹா வாக்யார்த்தத்தினுடைய
அவாந்தரார்த்த ரூபமான ப்ராப்ய ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளாயுள்ள அர்த்த பஞ்சகத்தையும்
தத் பிரகார விசிஷ்டானாம்படி சமர்மமாக அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆய்த்து-

இதில் முதல் பத்திலும் இரண்டாம் பத்திலும் -ரக்ஷகத்வ போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
மூன்றாம் பத்திலும் நாலாம் பத்திலும் தத் ஏக அனுபவத்வ தத் ஏக பிரியத்வ ரூபமான சேஷத்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
இந்நாலும் அநுவ்ருத்தமாக இந்த சேஷித்வ சேஷத்வங்களினுடைய அசாதாரண்யத்தைச் சொல்லுகையாலும்
பிரதம அக்ஷரத்திலே சேஷித்வத்தைச் சொல்லி
த்ருதீய அக்ஷரத்தில் சேஷத்வ ஆஸ்ரயத்தைச் சொல்லி
அவதாரணார்த்தமான உகாரத்தில் உபயோஸ் சம்பந்த தாஸ்யத்தைச் சொல்லுகிற ப்ரணவார்த்தத்தை பிரதிபாதித்ததாய்

அநந்தரம்
அஞ்சாம் பத்திலே உபாய ஸ்வரூபத்தையும்
ஆறாம் பத்திலே உபாய வரணத்தையும்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபத்தையும்
எட்டாம் பத்தில் தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகையாலே
சாப்தமாகவும் அர்த்தமாகவும் ஸித்தமான நமந நாமந வானான ஈசுவரனுடைய உபாய பாவத்தையும் –
நமந ரூபமான சரணாகதி ஸ்வரூபத்தையும் -ஆத்மாத்மீய ஸித்தமான அஹங்கார மமகார ரூப
விரோதி ஸ்வரூபத்தையும் தத் நிஷேதத்தையும் சொல்லுகிற நமஸ் சப்தார்த்தத்தை ப்ரதிபாதித்தாய்

ஒன்பதாம் பத்திலும் பத்தாம் பத்திலும் சர்வ வித பந்துத்வ கைங்கர்ய பிரதி சம்பந்தித்வ அபிவிஷ்டமான
பல அவாப்தியைச் சொல்லுகிற சரம பதார்த்தத்தை பிரதிபாதித்தாய்
பிரபந்த சங்க்ரஹமான் முதல் பாட்டில் அருளிச் செய்த க்ரமத்திலே சர்வ ஸாஸ்த்ர சங்க்ரஹமான
மூல மந்த்ரார்த்தை இப்பிரபந்தத்தில் விஸ்தரேண ப்ரதிபாதித்தார் ஆய்த்து

இன்னமும் பிரதமத்திலே ஸ்ரீ யபதித்தவ நாராயணத்வங்களை பிரதிபாதித்து
நாராயணனுடைய சீல ஸுலப்யாதிகளாயும் ஞானாதிகளாயும் உள்ள குணங்களை ஸஹரசமாக ப்ரதிபாதித்து
உத்தமமான க்ரியா பாதத்தால் விரோதி பூத ரஹிதமான புருஷார்த்த ரூப பகவத் கைங்கர்ய அவாப்தியை ப்ரதிபாதிக்கையாலும்
வாக்ய த்வயாத்மகமான சரணாகதி ஸ்வரூபத்தையும் வீசதீகரித்து அருளினார் ஆய்த்து

இவ்வுபாய வரணம் தத் இதர சகல நிவ்ருத்தி யுக்தமாய் இருக்கும் என்றும்
உபாய பூத குண விசிஷ்டானாய் அத்விதீயனாய் இருக்கும் என்றும் ப்ரதிபாதித்து
உபாய கார்யமான ஸமஸ்த விரோதி நிவ்ருத்தியையும்
பல சித்தி நிபந்தன தாதர்யத்தையும் ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகார்த்தத்தையும் விசதீகரித்து அருளினார் ஆய்த்து

ஆக சர்வ பிரகார பகவச் சேஷ பூதனாய் -அநந்ய பிரயோஜனனாய் -அநந்ய சரண்யனான இவ்வதிகாரிக்கு
ஞாதவ்யமான ரஹஸ்ய த்ரயத்தையும் சப்பிரகாரமாக பிரகாசிப்பிக்கையாலே –
இப்பிரபந்தமானது விலக்ஷணரான சாத்விக அக்ரேசர்க்கு நித்ய அனுசந்தேயமாகக் கடவது –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் -ஆழ்வாருடைய கிலேசம்  இன்றியே பலத்திலே அந்வயிப்பர் என்கிறார் –

அவா  அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை–நித்தியமான ஸ்வரூபத்தையும் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களையும் ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய மங்கள விக்ரஹத்தையும் -அபரிமித திவ்ய பூஷணங்களையும் சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களையும் -லஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷீ வர்க்கத்தையும் உடையனாய் அஸ்த்தானே பய சங்கிகைகளான நித்ய ஸூ ரிகளாலே பரிச்சர்யமாணமான திருவடித் தாமரைகளை யுடையனாய் இருந்துள்ளவனை
அயனை அரனை--ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவானவனை –
அவா அறச் சூழ் கை யாவது -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதர் யுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கை–இஸ் சாமா நாதி கரண்யத்தாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கலில் ஈச்வரத்வ சங்கை அறுக்கிறார்-அவர்களுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனம் ஆகையால் அவர்களுக்கு பாரதந்தர்யமே ஸ்வரூபம் -நிர்வாஹகத்வம் கர்மத்தால் வந்தது -இஸ் சாமா நாதி கரண்யத்தாலே நிர்வகிக்குமது அன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் யுண்டு –அயனை அரனை–அவா அற்று-அரியை -அலற்றி -வீடு பெற்ற–என்னுதல் -/
அலற்றி-அவா அற்று- -வீடு பெற்ற–என்னுதல் -/ கூப்பிட்டு- அவா  அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்— அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் –பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –
முடிந்த -அவா இல் அந்தாதி இப்பத்து -பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –
1- முதல் திருவாயமொழியில் நாராயண சப் தார்தத்தை அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில் -வண் புகழ் நாரணன் -என்று பிரயோகித்து -அமைவுடை நாரணன் -என்றும் -செல்வ நாரணன் -என்றும் -நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் -திரு நாரணன் -என்றும் -நாராயணன் நாங்கள் பிரான் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திண்ணம் நாரணமே என்றும் -வாழ் புகழ் நாரணமே -என்றும் தலைக் கட்டுகையாலே -அவனுக்கு அசாதாரணமான திரு நாமம் இதுவே என்னும் இடம் தோற்றுகிறது-
2-முதலிலே மலர் மகள் விரும்பும் -என்றும் திருவுடை அடிகள் என்றும் -கமல மலர் மேலே செய்யாள் -என்றும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திருவாணை நின்னாணை கண்டாய் -என்றும் கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டுகையாலே -ஸ்ரீ மானான நாராயணனே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று இவருக்கு பக்ஷம் என்னும் இடம் தோற்றுகிறது -இவ்வர்த்தம் உபநிஷத் பிரசித்தம் -அநந்ய பாரமான நாராயண அநுவாகத்திலே-நாராயண சப் தத்தாலே சர்வாதிகனைச் சொல்லி -ஹ்ரீச்சதே லஷ்மீ ச்ச பத்நவ் -என்று உத்தர நாராயணத்திலே சொல்லிற்று –
3-முதலிலே மயர்வற மதிநலம் அருளினன் என்றும் -எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -என்றும் சொல்லி -நாலு பிரயோகம் எடுத்து சரணம் புக்கு -தேவிமாராவாரிலே -தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த -என்றும் சொல்லிக் கொடு போந்து –இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்றும் தலைக் கட்டுகையாலே -அம் மிதுனத்தைப் பெறுகைக்கு சாதனமும் அவனுடைய நிர்ஹேதுக கிருபை என்னும் இடம் தோற்றிற்று-
4-முதலிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று தொடங்கி -அடியார்கள் குழாங்களை— உடன் கூடுவது என்று கொலோ என்று பிரார்த்தித்து -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையில் ததீய சேஷத்வத்தை பரக்கத் சொல்லி -அடியாரோடு இருந்தமை என்று தலைக் கட்டுகையாலே பகவத் சேஷத்த்வத்தின் யுடைய எல்லை யாகிறது ததீய சேஷத்வம் என்னும் இடம் தோற்றிற்று –
இவ்வர்த்தங்கள் இப்பிரபந்தத்துக்கு பிரதானம் -என்று கருத்து –
பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் -கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இ றே —

————————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

பல அவாப்த்தி பிரகாரம் பிரதிபாதித்துக் கொண்டு -வீடு பெட்ரா -பலமாக ஞானம் உடையவர் ஜென்ம உதகர்ஷம் அருளிச் செய்கிறார்
உயர்ந்தே பிறந்தார் என்றவாறு -உயர்ந்தவர்களாகவே பிறப்பார்கள்
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆச்ரித அபி நிவேசம் -தீரும் படி நிரவதிக சம்ச்லேஷ அனுபவம்
விஸ்லேஷ துக்கம் தீரும் படி –
கார்யந்து ஜைமினி -காரணம் தியானிக்க -ஹிரண்ய கர்ப்பம் பூர்வ பஷிதயா சங்கீதா நான்முகன் -ந பிரம்மா ந –
இத்யாதி இவர்களும் ஸ்ருஷ்ட்யர் -ஏகோகை நாராயண ஆஸீத் –
சைவர் காபாலிகர் பாசுபதர் -அந்தராத்மா பரம ப்ராப்யம் இவனே -கார்ய காரண நிபந்தனை சாமா நாதி கரண்யம்
த்வரையாலே கூப்பிட்டு
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்-பிராப்தி சித்தி பெற்று
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த-அதி பரம பக்தி ரூபமான சரம பக்தி பரம பக்தி முடிந்த அவா –
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார்
அவா அற -மூன்று தத்துவங்களையும் கபளீ கரித்து
வஸ்ய புத்தி பண்ணும் படி அவா அறும் படி குணங்களால் அபஹரித்துக் கொண்டு –

அர்த்த பஞ்சகம் –
ஸ்ரீ யபதி நாராயணன் -சர்வ பிரகார சேஷ பூதனுடைய -உபாயத்வேந பிரவ்ருத்தனாய் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
மஹா வாக்கியம் -அவாந்தர -ப்ராப்ய பிரம்மா ஸ்வரூபம் -ஆதிகளாய் அர்த்த பஞ்சகம் –
முதல் இரண்டு பத்தால் ரக்ஷகத்வம் -போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வம் -அகாரார்த்தம்
அநந்யார்ஹ சேஷ பூதன் -மூன்றாம் நான்காம் பத்தில் ததேக அனுபவம் ததேக பிரிய -மகார்த்தம்
இந்த நாலும் -பிரதம அக்ஷரத்தில் சேஷித்வம் சேஷத்வ ஆஸ்ரயம் சொல்லி-
அவதாரண உகாரத்தால் சம்பந்தம் அநந்யார்ஹத்வம் -பிரணவ அர்த்தம் சொல்லி –
உபாய ஸ்வரூபம் ஐந்தாம் பத்தால்
உபாய வரணம் ஆறாம் பத்தால்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபம்
எட்டாம் பத்தில் தத் நிவ்ருத்தி
சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் -நமஸ் அர்த்தம் அருளிச் செய்து –அகங்கார மமகார நிவ்ருத்தி
சர்வ வித பந்துத்வ பிரதி சம்பந்தத்வம் ஒன்பதாம் பத்தாம் பத்தில் அருளிச் செய்து -நாராயணாய அர்த்தம்
-கைங்கர்ய பிரதிசம்பந்தி -விசிஷ்டமான பல அவாப்த்தி -சரம பதார்த்தம்
முதல் பாட்டில் உயர்வற -உயர்நலம் -சங்க்ரஹமான –
உத்கீத ப்ரணவம் மாறாடி -பத்து பத்திலும் விரித்து –
மீண்டும் சங்க க்ரஹமாக சொல்லி
பிரதமத்வத்தில் ஸ்ரீ யபதித்தவ நாராயண -கோலத் திரு மகள் உடன் – -சீல ஸுலப் யாதிகளை சொல்லி
கிரியா பாதத்தால் பிரபத்யே -பகவத் கைங்கர்யம் சொல்லி வாக்ய த்வயம் -பின் மூன்று பூர்வ -முதல் மூன்று உத்தர வாக்கியம்
–சரணாகத ஸ்வரூபம் விகசித்து அருளினார்
தத் இதர தர்மங்களை விட -பரித்யஜ்ய மாம் -உபாய வரணம் –
உபாய பூதன் அத்விதீயம் மாம் ஏக்கம் -பிரதிபாதித்து
ஸமஸ்த விரோதிகள் நிவ்ருத்தி பல சித்தி நினைப்பித்தன தாதார்த்யம் சரம ஸ்லோகார்த்தம் வீசாதீ கரித்து
சர்வ பிரகார சேஷ பூதன்
அநந்ய பிரயோஜனம்
அநந்ய யாரஹருக்கு -ரகஸ்ய த்ரயமும்
நித்ய அனுசந்தேயம் சாத்விக அக்ரேஸருக்கு –

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்-
ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்-
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்-
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்-
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்-
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்-
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்-
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்-
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான
எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு-
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்-
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு-
மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்-
சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்-என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே-
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது-
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி-
தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை-
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்-
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்-
இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-
அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-

அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-
அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்-
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்-
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி-
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –
-பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை –

நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன்
கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும்
கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி
விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு-
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்-
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –

கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே-
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் –
பிறந்தே உயர்ந்தார் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –
பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

அவா -சாமான்யம் -தத் தத் அதிகாரி அனுகுணமாக -உண்டே –
மோக்ஷம் பெற அவா -என்னால் முமுஷுவாக ஆழ்வாருக்கு
அயன் அரன் போல்வாருக்கு மோக்ஷம் அபேக்ஷை இல்லையே
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் அவா அவர்களுக்கு போக்கி அருளினான் –
ஸூ விபூதி பூதர்-அவர்களுக்கு பார தந்தர்யம் சொல்வது -சரீரமாக இருந்து -பிரகாரத்தால் –
சகல அபேக்ஷித பிரதன்-ஸம்ஸலேஷிக்கும் ஹரி –
விஸ்லேஷ துக்கம் அபகரிக்கும் ஹரி
அவா அறச் சூழ் அரி -நாராயணன் என்னால் -இதுவே நிரூபணம் –
அரன் அயன் இவர்கள் இடம் அவா இல்லாமல் அரியை அலற்றி -என்றுமாம்
ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு –
பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால்
பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-10-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

இப்படி எம்பெருமானுக்கும் மறுத்து அருள ஒண்ணாத தொருபடி பிராட்டி திருவாணை யையும் தன் திருவாணை யையும் இட்டு
நிர்ப்பந்தித்துக் கொண்டு ஆர்த்த ஸ்வரத்தாலே கூப்பிடும் அளவில்-
தாம் மநோ ரதித்த படியே எம்பெருமானும் எழுந்து அருள -அவனைக் கண்டு –
மஹான் அஹந்காராதிகள் எல்லா வற்றையும் வியாபித்து அவற்றில் காட்டிலும் பெரிதான மூல பிரக்ருதிக்கும் –
அத்தையும் வியாபித்து அதிலும் பெரிதான முக்தாத்மாவுக்கும் –
அதிலும் பெரிதான உன்னுடைய சங்கல்ப ஞானத்துக்கும் ஆத்மாவாய் இருந்த நீ
அந்த சங்கல்ப ஞானத்தில் காட்டிலும் பெரிதாய் இருந்த என்னுடைய விடாய் எல்லாம் தீரும்படி
அந்த ஜெகதாகாரனான படி அன்றியே நீயான படியே வந்து சூழ்ந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒரு படியே முடிந்தது என்கிறார்

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-10-

எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –

சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

பத்துத் திக்குகளிலும் வியாப்தமாய் அபரிச்சேதயமாய் இருக்கிற பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் நிற்கிறவனே -அத்தையும் கூட வியாபித்து அதுக்கு நியாமகனான ஆத்ம தத்துவத்துக்கு ஆத்மாவானவனே -பிரகிருதி புருஷ தத்துவங்களில் இரண்டையும் வியாபித்து அவற்றுக்கும் நிர்வாஹகமுமாய் சங்கல்ப ரூபமாய் ஸூ க ரூபமான ஞானத்தை யுடையவன் –சுடர் ஞான இன்பம் -என்று எம்பெருமானைச் சொல்லிற்று ஆகவுமாம் -அதினிலும் பெரிதான என்னுடைய விடாய் கெடும்படி வந்து சம்ச்லேஷித்தாயே –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-10-

அநந்தரம் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகாம்படியான என் அபி நிவேசமானது கெடும்படியாக
சர்வ பிரகார பரிபூர்ணனாய்க் கொண்டு ஸம்ஸ்லேஷித்தாய் -என்று தமக்கு சாயுஜ்ய ஸித்தமான
பரிபூர்ண போக பிரதானம் பண்ணின படியை அருளிச் செய்கிறார்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ–கார்ய வர்க்கத்தை அடங்கச் சூழ்ந்து -வியாபித்து விஸ்தீர்ணமாய்
கீழும் மேலும் உண்டாகையாலே பத்துத் திக்கிலும் ஸந்நிஹிதமாய்-
உத்பத்தி விநாச ரஹிதமாகையாலே நித்தியமாய் –
ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு ஆகையால் அபரிச்சின்னமாய் –
போக மோக்ஷங்களை விளைக்க நல் தரையான ப்ரக்ருதியை பிரகாரமாக யுடையையாய் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-அந்தப் பிரகிருதி தத்துவத்தை ஸ்வ ஞானத்தால் வ்யாபித்துக் கொண்டு
காட்டில் பெருத்து ஏக ரூபத்வாதிகளாலே மேலாய்
ஸ்வயம் ப்ரகாஸத்வாதி வை லக்ஷண்யத்தை யுடையையாய்
விகாச ஸ்வ பாவமான ஞான பிரபையையுடைய ஆத்மாவை பிரகாரமாக யுடையையாய்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-இந்த பிரகிருதி புருஷர்கள் இருவரையும் வியாபித்து அதுக்கு அவ்வருகாய்
கல்யாண குணங்களால் உஜ்ஜவலமான ஞானானந்த லக்ஷண ஸ்வரூபத்தை யுடைய நியந்தா வானவனே
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–அந்தத் தவ்ய த்ரயத்தையும் வளைத்துக் கொண்டு
அதுக்கு அவ்வருகாம் படியாய் இருக்கிற என் அபி நிவேசமானது
சமிக்கும் படியாக ஸ்வரூப ரூப குண விக்ரஹ பூஷண ஆயுத மஹிஷஹீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய்க் கொண்டு
பரிபூர்ணனான உனக்கு உள்ளே யாம்படி சாயுஜ்ய மோக்ஷத்தைத் தந்தாய் இ றே
ஓ ஓ ஓர் அதிசயமே என்று அடி தோறும் ஹ்ருஷ்டராகிறார்

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-10-

எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –

சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ—சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ–-இப்போது பிரகிருதி புருஷாதிகளைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றில் பெரியது என்று சொல்லுகைக்காக -அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவையும் சொல்லுகிறது –ஸ் வ கார்யமான மஹத்தாதிகளைப் பத்துத் திக்கிலும் புக்கு எங்கும் வியாபிக்க -நித்தியமாய் அபரிச்சேதயமாய் -சேதனர்க்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவானவனே –சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ—அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் அதுக்கு நியாந்தா வாகையாலே மேலாய் -விகாராதிகள் இல்லாமையால் விலக்ஷணமாய் விகஸ்வர தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மாவானவனே –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சிங்கள ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகான-கபளீ கரம் பண்ணும் படி -அபி நிவேசம் -அவா -காதல் பக்தி -சர்வ பிரகார
பரி பூர்ணனாக கொண்டு ஸம்ஸலேஷித்து சாயுஜ்யம் – சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-பிரகிருதி -அகன்று -ஆழ்ந்து உயர்ந்து ஆகையால் சூழ்ந்து
-விஸ்தீர்ணமாய் வியாபித்து -பத்து திக்கிலும் சந்நிஹிதமாய்-பிரக்ருதிக்கு கீழ் எல்லை இல்லை உத்பத்தி விநாச ரஹிதம் நித்யம்
-தத்வ த்ரயமும் நித்யம் -நிலை மாறும் அவஸ்தா பேதம் -ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு பெரும் -இவற்றை பிறப்பிக்கும் –
அபரிச்சின்னமாய் போக மோக்ஷங்கள் விளை நிலம் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-தத் ஞானத்தால் வியாபித்து மேலாய் ஸ்வயம் பிரகாசத்தால் –
அணு -சூஷ்மம் -ஞானத்தால் பெருத்ததால் -சூழ்ந்து -நல்ல ஞானம் உடைய
மலர் விகாசம் அடைந்த சோதி ஞான வடிவம் -ஏக ரூபாத்வாதிகளால் மேலால் -ஞான பிரபையை உடைய -ஆத்மதத்வம் பிரகாரமாக கொண்டு
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-கல்யாண குணங்களால் உஜ்வலமான-சுடர் ஞான இன்பம் –
ஞானம் ஆனந்தம் கட்டடங்க உணர் முழு நலம் முழு உணர்வு முழு நலம் -முன்பே பார்த்தோம் -அத்தையே ஞானம் இன்பம் இங்கும்
-சுடர் வளர்ந்து கொண்டே -லக்ஷணம் ஸ்வரூபம் –
ஆத்மா ஞானத்தால் -ப்ரஹ்மம் ஞானம் ஆனந்தங்களாலே ஆக்கப் பட்டது –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே-தத்வ த்ரயங்களையும் வளைத்துக் கொண்டு அதுக்கு அவ்வருகு -சமிக்கும் படி
அவன் -தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் திருமேனி விபூஷணம் மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் கொண்டு பரி பூர்ணனாய் -சூழ்ந்து –
பரஞ்சோதி -வடிவுடன் -ஆழ்வார் காதல் தனக்கு உள்ளே ஆகும் படி சாயுஜ்யம் அளித்து –
சேர்ந்து இருந்து குணானுபவம் பண்ணும் பேறு– ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் –

எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி-
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து-மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு-இவர் வேண்டிக் கொண்ட படியே-
எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு-
அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்-
உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்-
என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் –
இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து-
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்-என்னவுமாம் –
அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39-பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே-
க்ருதக்ருத்ய ததா ராமா விஜுரஹ பிரதமோதக —

துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே –
ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் –

தம்முடைய அபி நிவேசம் பெருத்த படியை இவற்றின் பெருமையை சொல்லி –ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே
அப்ரஹமாதமக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி –

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-
தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை-பத்து திக்கிலும் புக்கு-எங்கும் ஒக்கப் பரந்து-
என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்-
மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –

சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-
அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்-
விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்-
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது-
கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி –
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –

சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ –
சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே-
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்-
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்-
சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்-
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –

சூழ்ந்து –
மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு –

அதனில் பெரிய –
அவை குளப்படியாம் படி பெரிதான –

என் அவா –
என்னுடைய காதலை

அறச் சூழ்ந்தாயே-
அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து-
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று-
இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அற -வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் –
-அனுகூலமானதால் ஆனந்தம் -ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு –
மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-9-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில்
எனக்கு அதுவே அமையாது –
நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே
திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-9-

நான் ஜகத் சரீரனாய் இருக்கிற இருப்பை உமக்கு காட்டக் கண்டீர் ஆகில் வேறு அபேக்ஷிதம் என் என்னில் -எனக்கு அத்தால் போராது -திரு நாட்டிலே வியாவ்ருத்தமாய் பரி பூர்ணனாய் இருக்கிற இருப்பையும் காண வேணும் என்கிறார் –

முதல் தனி  வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

மூவுலகு தொடக்கமானவற்றுக்கு ஓன்று ஒழியாமே எல்லாவற்றுக்கும் காரணம் ஆனவனே -பிரதானனாய் ஒப்பு இன்றிக்கே குண விபூதி யாதிகளால் பரிபூர்ணனான உன்னை நான் என்று வந்து கூடுவேன் -மஹதாதி விகாரங்களுக்கு ஒப்பில்லாக் காரணமாய் -கார்யங்கள் எங்கும் முற்றும் வியாபித்து -சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் -தனக்கு ஒப்பு இன்றிக்கே நியாமகமாய்-ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை அடைய பத்துத் திக்கும் வியாபித்து அபரிச்சேதயமாய் யுள்ள ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-9-

அநந்தரம் காரண கார்ய உபய அவஸ்தமான சகல சேதன அசேதனங்களுக்கும் பிரகாரித்வாதிகளாலே பிரதானனாய்
தத் வ்யாவ்ருத்தமான விலக்ஷண ஸ்வரூப குணாதிகளை யுடைய உன்னை என்று வந்து கிட்டக் கடவேன் என்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–அவி கல்ப பூர்ணமான ஜகத் த்ரயம் முதலான ஸமஸ்த வஸ்துக்களும்
பிரதானமான நிமித்த காரணமாய் -சஹகாரி நிரபேஷமாய் அத்விதீய உபாதான காரனுமாய்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்- -கார்ய பூதமான ஜகத்தில் அண்டாத் பஹிர் பூதமாயும்
அந்தரகதமுமாய் இருக்கிற பூர்ணமான ஸமஸ்த பதார்த்தங்களையும் வியாபித்து
அத்விதீய காரணமாய்
போக மோக்ஷங்கள் ஆகிற வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல பிரக்ருதிக்கு நியாமகனாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–ப்ரக்ருதி பிராகிருத நியந்த்ருதவத்தாலே பிரதானமாய் –
அசித் ஸ்வ பாவ வ்யாவ்ருத்தியாலே நிரூபமாய் –
தர்ம பூத ஞான முகத்தால் வ்யாப்தமாய்க் கொண்டு -பத்துத் திக்கிலும் உண்டாய் நிதயமான ஆத்மவர்க்கத்துக்கு நியாந்தாவானவனே
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–இப்படி சர்வ பிரதானனாயக் கொண்டு நிரூபமான உன்னை
அந்த ஜெகதாகாரத்தில் அன்றியே அத்யந்த வ்யாவ்ருத்தமான விலக்ஷண
ஸ்வரூப ரூப குண விசிஷ்டானாய்க் கொண்டு இருக்கிற உன்னை பிராபித்து அனுபவிக்கப் பெறாமையாலே
பெரு விடாய்ப் பட்டு இருக்கிற நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-9-

நான் ஜகத் சரீரனாய் இருக்கிற இருப்பை உமக்கு காட்டக் கண்டீர் ஆகில் வேறு அபேக்ஷிதம் என் என்னில் -எனக்கு அத்தால் போராது -திரு நாட்டிலே வியாவ்ருத்தமாய் பரி பூர்ணனாய் இருக்கிற இருப்பையும் காண வேணும் என்கிறார் –

முதல் தனி  வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-ஓன்று ஒழியாத படி த்ரை லோக்யம் தொடக்கமானவற்றுக்கு எல்லாம் த்ரி வித காரணமும் ஆனவனே /–முதல் -நிமித்த காரணம் / தனி -சஹகாரி காரணம் / வித்து -உபாதான காரணம் –
முதல் தனி யுன்னை-இதுக்கு எல்லாம் பிரதானனாய் -உபமான ரஹிதனாய் இருந்துள்ள உன்னை –
யுன்னை–ஜகத் காரணமாய் -உபமான ரஹிதனாய் இருக்கும் அளவன்றிக்கே -நித்ய விபூதியில் அசாதாரண விக்ரஹ யுக்தனாய் -ஸமஸ்த கல்யாண குண யுக்தனாய் -நித்ய ஸூ ரிகள் அனுபவிக்க இருக்கிற உன்னை –
எனை நாள் வந்து கூடுவன் நான்-என்று வந்து கூடக் கடவன் -அத் திரளிலே  நின்றும் பிறி கதிர் பட்டு போந்தாரைப் போலே இருக்கிறதாய்த்து இவருக்கு யோக்யதையாலே –
முதல் தனி எங்கும் இங்கும் -பிரதானமாய் -உபமான ரஹிதமாய் அங்கும் இங்குமாக மஹாதாதிகள் முழுவதிலும்
முழு முற்று உறு வாழ் பாழாய்-எங்கும் -உற்று -விகாரங்களுக்கு எல்லாம் அத்விதீய மான காரணமாய் அவை தன்னை எங்கும் வியாபித்து -/ வாழ் பாழாய்-சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் –
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–பிரகிருதி பிராக்ருதங்களுக்கு நியாமகமாய் -பிரதானமாய் -ஒப்பின்றிக்கே இவற்றை அடைய பத்துத் திக்கிலும் ஞானத்தால் வியாபித்து நித்தியமாய் இருந்துள்ள ஆத்மவஸ்துவுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்–முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–முதல் தனி வித்தாய் –முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயாய் -இருக்கிற -முதல் தனி யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–கார்ய காரண உபய அவஸ்தமான சித் அசித்துக்குகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவு போராது -அசாதாரண விக்ரஹ யுக்தனாய் ஒரு தேச விசேஷத்திலே இருக்கும் இருப்பை அனுபவிக்க வேணும் என்றதாய்த்து –

——————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

ருசி வளர்ந்ததை யம் – -பிரகார பிரகாரி பாவம் /சரீர சரீரி பாவம் /காரண கார்ய பாவம் நினைவு படுத்தி யும் –
ஆர்த்தி துடிப்பையும் – அறிவிக்கிறார் –
காரண கார்ய அவஸ்தை -சூஷ்ம ஸ்தூல -உபய அவஸ்தையிலும் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம்
-ஒரே இடத்தில் பர்யவசாயம் ப்ரஹ்மம் -ஒன்றே -உன்னை -விசேஷயம்-
பிரகாரி பிரதானம் -தத் தத் வியா வ்ருத்தமான-விலக்ஷண ஸ்வரூபம் குணாதிகளை -தனிச் சிறப்பு -உன்னை என்று வந்து கிட்டுவின்
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-உபாதானம் நிமித்த காரணம் -முதல் நிமித்த -தனி -உபாதான -அபின்ன நிமித்த காரணம் –
வியஷ்ட்டி சிருஷ்டியை சொல்லி
ஸமஸ்த வஸ்துக்களுக்கு எல்லாம் -பிரதான நிமித்த காரணம் -சஹகாரி நிரபேஷமான உபாதான காரணம்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு-கரந்து வியாபித்து -மஹான் அஹங்காரம் விகாரம் அடைந்து –
அண்டத்துக்கு உள்ளும் வெளியிலும் அத்விதீய காரணம்
அண்டத்துக்கு அந்தர்கதமாயும் -பூர்ண ஸமஸ்த பதார்த்தங்களில் வியாபித்து -நியாந்தா தாராகம் -அத்விதீய காரணம்
வாழ் பாழாய்-பிரகிருதி -/போக மோக்ஷம் இரண்டுக்கும் /வாழ்வதற்கு இடம் கொடுக்கும் பாழ் /விளை நிலம் -மூலப் பிரகிருதி மண்டலம்
பிராகிருத பூமிக்கு நியாமகன்
முதல் தனி -நியந்த்ருத்வம் -பிரதானம் –போகத்துக்கும் மோக்ஷத்துக்கும் -அபேஷா நிரபேஷமாக தன் பேறாக கொடுப்பவன் –
அசித் ஸ்வ பாவ வியாவருத்தியால் -ஸ்வரூப விகாரம் இல்லை -உவமானம் இல்லாமல்
சித்தை போலே ஸ்வ பாவக விகாரம் இல்லை –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ-அவி நாசி ஆத்ம சமஷடிக்கு நிர்வாஹன் -ஆத்மதத்வம்
-ஒவ் ஒன்றாய் ஒன்றுக்குள் வியாபிக்கும் அணு தானே ஆத்மா -கோடானு கோடி ஆத்மா -தர்ம பூத ஞானத்தால் பரவி –
ஆத்ம வர்க்கத்துக்கு நியாந்தா -பத்து திக்கிலும் ஞானம் -இப்படிப்பட்ட தேவரீரை
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்-ஜெகதாகாரம் அன்றியே -அத்யந்த விலக்ஷணன்
-உன்னை உன்னை -நீ யாகிய உன்னை -சேதன அசேதன விசிஷ்டம் நீ குற்றம் தட்டாத உன்னை –
ஸ்வரூப ரூப குணங்கள் -பெரும் விடாய் பட்ட நான் என்று வந்து கூடக் கட வேன் –

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்
தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்-சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி-
உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன-
அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது-
வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது-
பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் –

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ –
மூன்று உலகங்கள் தொடக்கமான-எல்லாவற்றுக்கும்-மூன்று விதக் காரணங்களும் ஆனவனே-
இதனால் -காப்பாற்ற என்று புக்கால்-காப்பாட்ட படுகின்ற பொருள்களின்-துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-

முதல் தனி உன்னை –
முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை-
தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே –

எனை நாள் வந்து கூடுவன் நான் –
என்று வந்து கூடுவேன்-
அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு-
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் -வந்து கூடுவேன் – -என்கிறார்-
நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது-
உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து-
ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுத்க்கு ஆத்மா ஆனவனே-
உன்னை உன்னை -சேதன அசேதன விசிஷ்டனான உன்னை –
உபய விபூதி நாதத்வம் -உபய லிங்க வைசிஷ்ட்யம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக நாதன் –

நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் –
மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று —
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –
மூ உலகு என்கையாலே-
கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது-
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் –
அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்-
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன -என்று சொல்லப் பட்ட-
எல்லை இல்லாத அண்டங்களைச் சொல்லுகிறது -ஆதி -என்கையாலே-
இவ் வண்டங்கட்கு காரணமான ஆவரணங்களை-மதிள்களைச் சொல்லுகிறது-
ஆக மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் எல்லாவற்றுக்கும்-மூன்று வித காரணங்களும் -ஆனவனே என்றபடி-
முதல் தனி உன்னை –
மேலே நீயான உன்னை -உலக உருவான உன்னை–இனி உன்னை உன்னை -பரம பதத்தில் உள்ள-முதல்வனாய்-
ஒப்பு இன்றிக்கே-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்த வனாய்-உலகத்தை உருவகமாக கொண்டு இருக்கிற உன்னை-

ஜெகதாகாரமாக இருப்பைச் சொல்லி மேலே அசாதாரண விக்ரக விசிஷ்டனை அருளிச் செய்கிறார் –

ஆக- இத்துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்-
உன்னை-
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது-
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே-
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ–
ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் –
உன்னை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்-
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்-
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்-
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா –
கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்-
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு-
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் —
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் -திரு உதர பந்தமும்-
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் —
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்-
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க-
திரு அரை பூத்தால் போல் இருக்கிற -அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்-
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்-
சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் –
நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக –
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்-
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –

எனை நாள் வந்து கூடுவன்-
என்று வந்து கிட்டக் கடவேன்-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி-

நான்-
அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-
அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து-
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்-
ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

முதல்-
மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்-

தனி-
உபமானம் இல்லாததாய்-

சூழ்ந்து-
மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –

அகன்று ஆழ்ந்து உயர்ந்த –
பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த-

முடுவிலீயோ –
அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே-
முடிவு -எனபது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு-
சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்-
முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்-
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்-

காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்-
இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது-
உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-8-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

புண்ய பாப ரூப கர்ம தத் பல போக்த்ரு சேதன கர்ம பல போக உபகரண ப்ரப்ருதி
சர்வ ஜன அந்தராத்மா பூதனாய் சர்வ ஜகத் காரணமாய் சர்வைரத்ருஸ்யனாய் இருந்த
உன்னைப் பெற்று இனி விடுவேனோ -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-8-

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

அத்யந்த விஸஜாதீயனாய் இருந்து எனக்கு மிகவும் சத்தா தாரகனான உன்னைப் பெற்று வைத்து – இனித் தப்ப விடுவேனோ -ஆத்மாவைப் பற்றி விடாதே இருக்கிற புண்ய பாப ரூப கர்மங்களையும் -ஆத்மா தன்னையும் -கர்ம பலமானவற்றையும் -இவை எல்லாம் ஆகிற துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான த்ரை லோக்யம் ஆகிற தூற்றை யுண்டாக்கி -அந்த துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான ஜகத்தினுள்ளே புக்கு -எங்கும் வியாபித்து தெரியாதபடி நின்றாய் –என் முதல் தனி வித்தேயோ-எனக்கு முதலிலே இச்சையும் இன்றிக்கே இருக்க உன் பக்கலிலே ஆபி முக்யத்தைப் பிறப்பித்தவனே –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-8-

அநந்தரம் சர்வ தாரகனாம் படி அந்தராத்மாவாய் எனக்கு தாரகனான உன்னைப் பெற்று வைத்துக் கை விடுவேனோ என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்–இரண்டு வைக்கப்பட்ட புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நிர்வாஹகனாய் —
கர்ம வஸ்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் -அந்தக் கர்மங்களால் யுண்டான ஸூக துக்கங்களை பிரதாவாய்க் கொண்டு
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-இந்த ஜகத் த்ரயம் எல்லாம் ஆகிற பெரிய தூற்றை பிரகாரமாக யுடையையாய் —
கர்ம நிபந்தனமாக பிரவேசித்தார்க்குப் புறப்பட வழி இல்லாத ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ தந்திரனாய் பிரவேசித்து
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-ஒரு பிரகாரத்தாலும் அறிய ஒண்ணாத படி ஸூஷ்ம பூதனாய்க் கொண்டு
மறைந்து நிற்குமவனாய் எனக்கு உன்னைக் கிட்டுக்கைக்கு பிரதம ஸூக்ருதமான அத்விதீய காரணம் ஆனவனே –
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை- எனக்கு நிரூபமாய் அபரிச்சின்னமான பிராண பூதனாய் இருக்கிற
உன்னை கை புகுரப் பெற்று வைத்து உன்னை விடில் முடியும்படியான அவஸ்தை பிறந்த பின்பு விட விரகு உண்டோ –
ஓ என்கிற அசை விடில் செய்வது என் என்கிற விதாதத்தைக் காட்டுகிறது –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-8-

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று  இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை-ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே -இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –
என் தனிப் பேர் உயிரை–உன்னை -என்றதின் வியாக்யானம் -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –
உற்ற இரு வினையாய் -இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி கலந்து -இருவகைப் பட்ட புண்ய பாபங்களுக்கு நியாமகனாய் –
உயிராயப் -அவற்றிலே சிறைப்பட்டுக் கிடக்கிற ஆத்மாவுக்கு நியாமகனாய்
பயன் ஆயவையாய்-அந்த புண்ய பாபங்களுடைய பலன்களுக்கு நிர்வாஹகனாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-முற்றக் கரந்து ஒளித்தாய்--இவை எல்லாம் ஆகிற த்ரை லோக்யம் என்கிற தூற்றை யுண்டாக்கி —பெரும் தூறு -என்கிறது -துர்ஜ்ஜேய ஸ்வ பாவம் யுண்டாகையாலே -இந்த லோகத்தின் உள்ளே புக்கு -எங்கும் வியாபித்து துர்ஜ்ஜேய ஸ்வ பாவனாய் இருந்தாய்
என் முதல் தனி வித்தேயோ-இப்படி இருந்து வைத்து உன்னை எனக்கு பெறுகைக்கு அடியான அத்விதீயமான மூல ஸூ க்ருதத்துக்கு உத்பாதகனாய் -உன் பக்கலிலே ஆபிமுக்யத்தை -ஒளன் முக்கியத்தை -பிறப்பித்தவனே -இப்படிப் பட்டு இருக்கிற உன்னை பிரதம ஸூக்ருதத்துக்கும் உத்பாதகனாய்க் கொண்டு வந்த தரப் பெற்ற நான் உன்னைப் போக்குவேனோ –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

துர் அவகமானான் அறிய அறிய ஸர்வதாத்மா மறைந்து இருந்து தாரகனாக உன்னைப் பெட்ரா பின்பு க்கை விடுவேனோ
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்-புண்ய பாபங்களை நிர்வாகன்-கர்மாவைஷ்யனான ஆத்மாவுக்கு நியாந்தா
-கர்மங்களால் உண்டான சுக துக்கம் பிரதனானாக
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-அடக்கி உள்ள மூல பிரக்ருதியை பிரகாரமாக கொண்டு -கர்மா நிபந்தமாக புகுந்த
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-வித்து தனி வித்து முதல் வித்து -ஸூ சங்கல்பத்தால்
ஸ்வ தந்த்ரனாக சங்கல்ப ஆதீனத்தால் பிரவேசித்து -அறிய ஒண்ணாதபடி அதி சூஷ்மமாக
எனக்கு அடைய பிரதம ஸூ ஹ்ருத் நீயே தானே -அத்விதீய காரணம் -வித்து -காரணம் -தனி அத்விதீயம் –
எனக்கு நிரூபணம் அபரிச்சின்ன பிராண பூதன்-மூன்றையும் சேர்த்து -தனி -பேர் உயிர் -மூன்றையும் உவமானம் இல்லாமல் –
-அபரிச்சின்ன -பிராணன் -உன்னை விடில் முடியும் அவஸ்தை பிறந்த பின்பு விட முடியுமோ –
ஓ பயத்தால் -துக்கம் -விட்டால் என்ன செய்வேன் –

சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –
ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ-
அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-
இனி நான் உன்னை விடுவேனோ –

என் தனிப் பேர் உயிரை –
வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ-
இயம் சீதா -ப்ரதீச்ச -பத்ரம் -மேல் விழுந்து அங்கீ கரிக்க வேணும் -என்றார் ஸ்ரீ ஜனக மகாராஜர் –
உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல்
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே-
எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை –
பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பார லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே –
என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –

உற்ற இரு வினையாய்-
ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே-
உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை-தனித்து இயலும் தன்மையை உடையவனாய்-
நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது –

உயிராயப்-
நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்-
அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் —

பயன் ஆயவையாய் –
அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்-நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய-
வேறு சிலரால் கிடைக்கின்றது என்று-இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது-

முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-
இவை எல்லாம் ஆகிய த்ரை லோக்யம் ஆகிய தூற்றை -அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி
த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே –
பெரும் தூறு சம்சாரம் புக்க இடமும் போந்த இடமும் தெரியாத படி அன்றோ சம்சாரம் -அறிய முடியாதபடி என்றவாறு –
புக்கு -அநாயாசேன தேவரீர் புக்கு –
தூறாய் -உபாதான காரணமாக இருந்து உண்டாக்கி -கடல் ஞாலம் செயதேனும் யானே என்னும் –
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-
நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய்
கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய்
அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து –
அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ –
நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-7-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

பெரிய பிராட்டியார் பக்கலிலும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலும் பண்ணும் வ்யாமோஹத்தை
என் பக்கலிலே பண்ணிக் கொண்டு என்னை புஜித்து அருளின உன்னைப் பெற்று
இனி விடுவேனோ என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-7-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-பெரிய பிராட்டியாருக்கு ஸ்நேஹியாகையாலே அவள் பரிஹாரமான என் பக்கலில் ஸ்நே ஹத்தைப் பண்ணினவனே –நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே / நீலக் கடல் -என்று கடைந்து அருளுகிற எம்பெருமானுடைய திரு நிறம் நிழல் இட்ட படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-7-

அநந்தரம் -ஆஸ்ரித ரக்ஷகனாக உன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ என்கிறார் –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–வடிவு அழகையும் போக்யத்தையும் யுடையளான பிராட்டிக்கு
உகப்பான வத்தாலே என் பக்கலிலும் அதி ப்ராவண்யத்தை யுடையையாய்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்–நீல ரத்ன கிரியானது இரண்டு பிறையை கவ்வி எழுந்து இருந்தால் போலே
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்–விலக்ஷணமான வடிவு அழகை யுடைத்தாய் அத்விதீயமாய்
இருபத்தொரு ஸ்ரீ மஹா வராஹமாய் பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திரு எயிற்றிலே வைத்த அபதானத்தாலே
என்னை சம்சாரத்தில் நின்றும் எடுக்கும் ஆகாரத்தை பிரகாசிப்பிக்கும் ஸ்வாமியாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –உன் திரு வடிவின் நிழலீட்டாலே நீலமான கடலைக் கடைந்து
யரும் தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே –
இப்படி புருஷகார பூர்வகமாய் எனக்கு நல்லையாய் -என்னை ரக்ஷிக்குமவனான உன்னை லபித்து வைத்து
கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ –
நீலக்கடல் -என்று நீல ரத்னத்தை யுடைய கடல் என்றுமாம் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-7-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி  கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இ றே-க்ருபயா  பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இ றே பிராட்டி நீர்மை –
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்--ததஸ்தம் உத்க்ஷிப்ய நீல இவா சலோ மஹான் –ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே –பிறையில் மறுவோபாதி யாய்த்து திரு எயிற்றில் கிடந்த பூமி –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்-மாசுடம்பில் நீர் வாரா நின்ற நிலை இ றே இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயமாய்த்து -பாசி தூர்த்து கிடந்த பார்மகட்க்கு-என்கிறபடியே பிரணயிநி அழுக்கோடு இருக்க தாமான படியே வருவாராகில் பிரணயித்தவத்துக்கு நமஸ்காரமாம் அத்தனை இ றே -அவன் அழிவுக்கு இட்ட வடிவைப் பற்றி இ றே இவர் ஆலத்தி வழிக்கிறது / ஒன்றாய் -வராஹ சஜாதீய மாத்ரம் என்னுதல் –த்ரைலோக்யத்தையும் கண் செறியிட்டால் போலே விம்ம வளர்ந்தபடியாலே அத்விதீயம் என்னுதல் –
நீலக் கடல் கடைந்தாய் -பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தவனே -/ நீலக்கடல் -கடைகிறவனுடைய நிழலீட்டாலே யாதல் -சகல ஓஷிதிகளையும் பொகடுகையால் வந்த நிற வேறுபாடு என்னுதல் -/ நிறத்தால் நீல ரத்னத்தைச் சொல்லிற்றாய் தத் பிரசுரமான ரத்நாகாரம் என்னுதல் –
உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

ஆச்ரித ரக்ஷகனான உன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ -வராஹ நாயனாரை பெற்றதும் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-வடிவு அழகு -போக்யத்தை-உடைய பிராட்டிக்கு உகப்பான வைத்தாலே ஏன் பாக்கள் அதி பிறாவண்யம் -அந்தப்புர பரிகாரம் என்பதால்

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-கடலில் -நீல ரத்ன கிரி -சந்திரர்கள் ஒட்டி -கோரைப் பற்கள் சந்திரர்கள்
-அழுக்கு போலே பூமா தேவி ஒட்டிக் கொண்டு
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
வி லக்ஷணமான வடிவை -ஸ்ரீ பூ வராகன் ஸ்ரீ மூக்ஷணம் -அத்விதீயமான -மஹா வராஹா பெரும் கேழலார்
-புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -விஷயீ கரிக்க தேடி ஆழ்வாரை பிடித்து -எங்கும் பக்க நோக்கு அறியான் பைம் தாமரைக்கு கண்ணன்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ–இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நியமிக்கிறார்
-ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே திரு விருத்தத்திலும் -நிகமித்தார்
பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திருமுடியில் வைத்து -இத்தால் சம்சாரத்தில் இருந்து என்னை எடுத்துக் கொண்ட
சம்சார ஆர்ணவம் -ஸூ சிப்பிக்கவே இந்த திருவவதாரம் –
உன் வடிவில் நிழலீட்டாலே -நீலக் கடல் -பாற் கடல் -ஸ்ரீ தேவிக்காக -நீல ரத்னங்கள் உள்ள கடல் -நீல மூலிகைகள் இருந்து நீலம் என்றுமாம்
மூன்றாவது இத்திரு -அருமை தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே -புருஷகார பூர்வகமாக எனக்கு நல்லையாய்
-உன்ன பெற்று லபித்து க்கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ

நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்-பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு கலந்தால் போலேயும்-
கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்-பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து
என்னோடு கலந்தருளி-
என் பக்கல் மிக்க காதலைச் செய்த-உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ-என்கிறார்-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –
பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட-
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே-
ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை-
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே-
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –
திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் –
திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு நீல மலை-இரண்டு பிறையைக் கவ்வி-நிமிர்ந்தால் போலே-
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று-
அன்றிக்கே-
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே-
காதலி அழுக்கோடு இருக்க-தாமான படியே வருவார் ஆகில்-காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்-
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது-
மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி –
பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி –

ஒன்றாய் –
வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்-
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே-விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்-
நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு-திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே-
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

நீலக் கடல் கடைந்தாய் –
பிராட்டியைப் பெறுகைக்காக-கடலைக் கடைந்தவனே-கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் –
அன்றிக்கே –
எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்-
அன்றிக்கே-
நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்-
இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ-
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-6-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

ஸுந்தர்யாதி சர்வ குணங்களினாலும் உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு போக்யமானால் போலே
எனக்கு போக்யமாய் இருந்து வைத்த அத்தனையே அன்றியே
என்னுடைய ப்ரக்ருதியையும் என்னுடைய ஆத்மாவையும் நிரவாதிகமான அபி நிவேசத்தோடே புஜித்து அருளினை நீ
பிரானே என்னைப் பொகடாதே கொள்ளாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-6-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய பிரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும் ஓக்க ஹிருதயத்துக்கு அமையாமை நிரந்தரமாக புஜித்தாய்-இனி இத்தை விடாதே விஷயீ கரியாய்-எம்பெருமான் கருத்தால் இன்னுயிர் -என்றதாகவுமாம் -தன்னிலத்திலே நின்ற காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை யுடையையாய் புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் -சிவந்த திருப் பவளத்தையும் யுடையையான உனக்கு சத்ருசமான அழகை யுடைய பெரிய பிராட்டியாருக்கு ஸ்நே ஹியாய் வைத்து என் பக்கலிலே அபி நிவிஷ்டன் ஆனவனே –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-6-

அநந்தரம் -பிராட்டி பக்கல் பிரணயியானால் போலே என் பக்கலிலும் நிரதிசய ப்ரணயத்தை யுடைய நீ
உன் போக்யதையை பிரகாசிப்பித்து புஜிப்பித்தாய் -இனி முழுக்க நிர்வஹித்து விட வேணும் என்கிறார்

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்–தன் நிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் சிவந்த திருப் பவளத்தையும் யுடைய
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–உனக்கு அனுரூபமான திரு வடிவை யுடையளாய்
பூவில் பிறப்பால் நிரதிசய போக்ய பூதையாய் ஸ்த்ரீத்வ அனுரூபமான ஆத்மகுணத்தை யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிக்கு அன்பை யுடையையாய் –
என் அன்பு தானே ஒரு வடிவாய் இருக்கிறவனே
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை-எனக்கு நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய
ப்ரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-ஹ்ருதயத்துக்கு திருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-
இனித் தொடங்கி நீ குறையும் புஜிப்பித்தே விட வேணும்
ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இ றே ஸ்வாபாவிகம் –
அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்
ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈசுவரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் சுருதி சொல்லி முடித்தது
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-6-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூ ரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –
எனது ஆவியை-என்னது என்னும் அதுவே ஹேதுவாக காமுகர் அபிமத விஷயத்தில் அழுக்கை விரும்புமா போலே என்னுடம்பை விரும்பினாய் –
இன்னுயிரை-அது தன்னை நன்று என்று விரும்புகையாலே அதிலும் தண்ணிதான ஆத்மாவை விரும்பினாய் –இன்னுயிர் என்று செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்னுமா போலே -என்னுதல் -அவன் தலையால் சுமக்கிற படியால் என்னுதல் –
மனக்கு ஆராமை -மனஸ் ஸூ க்கு ஆராமை –மனக்கு -மனஸ் ஸூ க்கு —
மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்
இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-முன்பு நீ மேல் விழுந்தது உனக்கு ஒரு குறை உண்டாயோ -ஸ்ரீ யானவள் தான் மேல் விழும் வடிவை யுடையையாய் வைத்து அன்றோ என் பக்கலிலே அபி நிவேசித்தது —புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இ றே இவை –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா –இப்படிப் பட்ட உனக்கு சத்ருசமாக அழகை யுடையளாய் புஷபத்தில் பரிமளத்தை வகுத்தால் போலே இருக்கிற ஸுகுமார்யத்தை யுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே -பிராட்டி அழகு நாவால் துகைக்க ஒண்ணாமையாலே –உனக்கு ஏற்கும் கோலம் -என்கிறார் –
என் அன்பேயோ-அவளுக்கு அன்பை யுடையவன் -என்கிறார் -இங்கு இரண்டாக பிரிக்க ஒண்ணாத படி இருந்தான் என்கிறார் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-முன்பு இப்படி தலையால் சுமந்து வைத்து உபேக்ஷித்தால் பொறுக்கப் போமோ —

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

பிராட்டி பக்கல் பிரணயி போலே நிரதிசய பிரணயித்தவம் போக்யத்தை காட்டி அருளினாய் -மேலும் -முழுக்க நிர்வகிக்க வேணும்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-காயாம்பூ தன்னிலம் -புண்டரீகம் போலே திருக்கண்கள்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் -தாமரை மலரால் -பத்மாலயா பத்மாசனம் -நிரதிசய போக்யதை பூதை
மணம் பரிமளம் உருவெடுத்தால் போலே -ஆத்மகுணம் கொண்ட
அன்பேயோ-அன்பே யாகவே தர்மமாகவே -அன்பே வடிவமாகக் கொண்ட -எனக்கு
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
-நிரதிசய போக்யத்தை ஹேயமான எனது பிரக்ருதியை -விலக்ஷண ஆத்மாவையும் -ஆவி சரீரம்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
திருப்தி பெறாத படி விரும்பி அனுபவித்து -இனி குறையும் புஜிப்பித்தே விட வேண்டும் -அவன் புஜித்து-அவன் ஆனந்தம் கண்டு
நாம் மகிழும் படி -உனது அவனுக்கு நிருபாதிக போக்த்ருத்வம் சேதனனுக்கு போக்யமும் -அனுபவ ஜெனித ப்ரீதி கண்டு
ஜீவன் ஆனந்தம் -அஹம் அன்னம் ஸ்வரூபம் -ஞானத்துக்கு வடிகால் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணி அவன் அனுபவிக்க –
அவன் ஆனந்தம் கொண்டு நாம் ஆனந்தம் -அப்ரதானம் என்றபடி –

பெரிய பிராட்டியார் பக்கல் போலே-என் பக்கல் மிக்க காதலை உடையவனாய்
என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து-அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் ஈண்டென-அங்கீ கரித்து அருளாய் –என்கிறார்-

எனக்கு ஆரா அமுதமாய் –
தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே-
எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்-நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை-
பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –

எனது ஆவியை –
என்னுடையது என்னுமதுவே காரணமாக-
காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் –

இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே-
தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே –
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்-

மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –

இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது
நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –
உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –
புனக்காயா நிறத்த-
தன்னிலத்தில் அலர்ந்த-காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது –

புண்டரீகக் கண் –
வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி-ஆயிற்று கண்கள் இருப்பன –

செங்கனி வாய் –
சிவந்து கனிந்து ஆயிற்று-முறுவல் இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை-
அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று-
திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது-

உனக்கு ஏற்கும் கோலம் –
இவனைப் போன்று வார்த்தையால்-
கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்-
இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்-

மலர்ப் பாவைக்கு அன்பா –
மலரில் மணத்தை வடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –இருக்கிற பிராட்டிக்கு அன்பனே
உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அதிதேசம் = ஏறிடுதல்
ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை-
நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –
காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி —

கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ-
அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது-
தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை –
ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று-
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-5-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-5-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

உம்முடைய பரத்தை நான் நிர்வஹிக்கத் தவிர்த்தால் அந்த பரத்தை நீரே நிர்வஹித்துக் கொள்ளலாகாதோ என்னில்-
நீ என்னைக் கை விட்டு உபேக்ஷித்தால் பின்னை யாரைக் கொண்டு எத்தைச் செய்வது –
நான் என்று ஓன்று உண்டோ -என்னுடையது என்று ஓன்று உண்டோ -அடைய முடிந்தது இ றே-ஆனபின்பு
அக்னி சந்தப்த்தமான இரும்பு தாபம் தீரும்படி நீரைப் பருகினால் போலே
உன்னைப் பிரிந்த என்னுடைய ஸந்தாபம் எல்லாம் தீரும்படி யுன்னைப் பருக எனக்கு ஆராவமுதானாய் –
இனிக் குறையும் நீயே செய்து அருளாய் என்கிறார் –

——————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-5-

நான் என்னுடைய யத்தனத்தாலே உன்னைப் பெறுகிறேனாக நீ என்னைக் கை விட்டு இருக்கில் -நான் என்றும் என்னது என்றும் சில உளவோ -முடிந்தேன் அத்தனை இ றே என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

ரக்ஷகனான நீ -அநந்ய கதியான என்னை உன் பக்கல் நின்றும் போர தூக்கிப் பொகட்டால் பின்னை நான் ஆரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -என்ன சாதனத்தாலே என்னாதே ஆரைக் கொண்டு என்கிறது என் என்னில் -என்றும் புருஷார்த்தம் பெறுவது பரம சேதனனாய் இருப்பான் ஒருவனாலே என்று இருக்கையாலே –அக்னி சந்தப்த்தமான இரும்பு நீரை  நிஸ் சேஷமாக புஜிக்குமா போலே / என் ஆர் உயிரை-சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய  நிரதிசய போக்யதையைக் காட்டி  என்னை அகப்படுத்தினாய் –காய்ந்த இரும்பு -அக் காய்ச்சல் தீர  நீரைப் பருகுமா போலே என்னுடைய சந்தானம் எல்லாம் தீரும் படி எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே -என்றுமாம் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-5-

அநந்தரம் எனக்கு நிரதிசய போக்ய பூதனாய் இருந்து வைத்து நீ என்னை உபேக்ஷிக்கப் பார்த்தால்
எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ -என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –தன் காய்ச்சல் தீரும்படி இரும்பானது
உண்ட நீர் போலே என் ஆத்மாவின் விடாய் எல்லாம் தீரப் பரிபூர்ணமாக பருகைக்கு
எனக்கு திருஷ்ணை தொடாத அம்ருதமானாயே -இப்படி இருக்க –
இரும்புண்ட நீர் போலே என் ஆத்மாவை முற்றாய் பருகினான் என்கிறபடியே நீ பூர்ணமாகப் பானம் பண்ணுகைக்கு உறுப்பாக
உன் போக்யதையை எனக்குப் பிரகாசிப்பித்தாய் என்னவுமாம் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் -உன் வாசி அறிந்து புஜிக்கும் படி பண்ணி பிராப்தி பர்யந்தமாக பிரகாசிப்பித்த நீ
அத்தைக் குலைத்துப் போரவிட்டு அசேதனவத் அநாதரித்து
அநந்ய கதியான என்னை உனக்குப் புறம்பான விஷயாந்தரத்திலே போக்க நினைத்தால் –
பின்னை யான்ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்- – சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு
அசக்தனான நான் புருஷார்த்த சாதகராய் இருப்பார் மாற்று யாரைக் கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஐயோ சாதிப்பேன்
என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை
நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை
இது வேறு உண்டோ என்று கருத்து –
ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-5-

சர்வ ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் என் கார்யம் நான் செய்யவோ -பிறர் செய்யவோ -நான் முடிந்தேன் -என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

போர விட்டிட்டு-உன் பக்கலில் நின்று அகற்றி உபேக்ஷித்து -என்னை-அநந்ய கதியான என்னை —நீ -ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவும் வர என்னைப் புகுர நிறுத்தின நீ என்னுதல் -சர்வ ரக்ஷகனான நீ என்னுதல் –
புறம் போக்கல் உற்றால்-புறம்பு போக்குகையில் அத்யவசித்தால் -என் கார்யம் நானே செய்வானாகப் பார்த்து என்னை உபேக்ஷித்தால் –
பின்னை யான்-ஆரைக் கொண்டு எத்தை -சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -ஆரைக் கொண்டு என்கிறது புருஷார்த்தம் பெறுவது ஒரு பரம சேதனனாலே -அசேதன க்ரியாகலாபங்களால் அல்ல என்னும் இடம் தோற்றுகைக்காக -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
அந்தோ-மா மேகம் சரணம் வ்ரஜ என்ற உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே
எனது என்பன் என் யான் எனபது என்-பேறு உம்மதானால் சாதனம் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன -எனக்கு பரிகரமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் அர்த்தம் உண்டோ -ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதோர் அர்த்தம் உண்டோ -சரீர ரக்ஷணம் சரீரியை ஒழியச் செய்வார் உண்டோ –
தீர இரும்பு உண்ட நீரது போலே–அக்னி சந்தப்த்தமான இரும்பு உண்ட நீரானது காற்ற ஒண்ணாதாப் போலே
என் ஆர் உயிரை-ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே -என் ஆத்மாவைச் சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய நிரதிசய போக்யதையைக் காட்டி என்னை அகப்படுத்தினாய் -முன்பு நீ போக்யதையைக் காட்டிற்றும் உன்னை நான் பெறுகைக்கு அன்றி -என்னை அகப்படுத்தி உன் கார்யம் செய்தாயாய் யத்தனை இ றே என்னுதல் –
காய்ந்த இரும்பு அக்காய்ச்சல் தீரும்படி நீரைப் பருகுமா போலே என்னுடைய விடாய் தீரும்படி உன்னைப் புஜிக்க எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே என்னுதல்

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-5-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

நிரவாதிக பாக்ய பூதனாக வைத்து உபேக்ஷித்தால் எனக்கு உஜ்ஜீவனம் உண்டோ
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்-வாசி அறிந்து பிராப்தி பர்யந்தம் பிரகாசிப்பித்த நீ
அத்தை குலைத்து அநாதரித்து அனன்யா கைதியான என்னை விஷயாந்தரங்களில் போக விட்டால்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்-அசக்தன் நான் புருஷார்த்த சாதகனாய் இருப்பார்
யாரைக் கொண்டு என்ன சாதிப்பெண் வேறே உபாயமும் பிறப்பியமும் இல்லையே எனது என்பது என் யான் என்பது என்
காரணங்கள் இல்லை உபாயம் இல்லை -யான் தனியாக ஸ்வ தந்த்ரன் இல்லை -இனி வேறு உண்டோ
யாரை கொண்டு எத்தை -விருத்த யுக்தி -சேதனனைக் கொண்டு அசேதனத்தை -சொல்லி எத்தை கொண்டு யாரை சொல்ல வில்லை
புருஷார்த்தம் ஆழ்வாருக்கு அவனே -ஐஸ்வர்யார்த்திகளை கண்டிக்கிறார் -யாரை -உபாயாந்தரங்கள் -செத்தான் தானே கொடுப்பான்
ஜகத் யுக்தி மாற்றி அருளிச் செய்கிறார் –
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை-காய்ச்சல் தீரும் படி -எனது ஆத்மாவின்
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே-விடாய் தீரும் படி திருப்தி அடைய முடியாத அமுது ஆனாய் –
பூர்ணமாக பானம் பண்ண பரம போக்யன் என்று பிரகாசிப்பித்தாய்

எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற நீ கை விட்டால்-என் கார்யம் -நான் செய்யவோ-
பிறர் செய்யவோ-முடிந்தேனே அன்றோ –என்கிறார்-

போர விட்டிட்டு –
உன் பக்கலில் நின்றும் பிரித்து-உபேஷித்து-

என்னை –
வேறு கதி இல்லாத என்னை –
அன்றிக்கே –
அறிவின்மை -ஆற்றல் இன்மைகளுக்கு எல்லாம்-எல்லையான -என்னை -என்னுதல்-

நீ –
படைப்பே தொடங்கி-இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது-
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது-
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி
அக்கரை ஏறமாட்டாதான் ஒருவனை அமுக்கினால் போலே இருக்கிறது காணும்-

என்னை நீ –
கண்ணும் காலும் இன்றிக்கே இருப்பான் ஒருவன்-கண்ணும் காலும் உடையனாய் இருப்பான் ஒருவன்-
யாருக்கு யார் வழி காட்டுவார் -என்கிறது –
நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ந கச்யசித் -ஜிதந்தே-
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை-
நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் -என்றபடி –

புறம் போக்கல் உற்றால் –
புறம்பே போக்குகையிலே நினைத்தால் -என்றது-
என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து-என்னைக் கை விட்டால் -என்றபடி –

பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை –
அளவில்லா ஆற்றல் உடைய நீ கை விட்ட பின்பு-ஆற்றல் இல்லாதவனான நான்-
என்ன உபாயத்தைக் கொண்டு-என்ன புருஷார்த்தை முடிப்பது –
பேற்றினைப் பெறுவது இறைவனாலே-
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று –
என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு எண்ணாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் –
ப்ரஹ்மம் தானே பல பிரதன் -அசேதன கிரியா கலபரங்கள் இல்லையே –

அந்தோ –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்ற
உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே –
எனது என்பன் என் யான் எனபது என் –
முடிந்தேன் -அன்றோ என்கிறார் –
நானும் இல்லை கரணங்களும் இல்லை என்றவாறு –
பேறு உம்மதானால் -அதற்கு செய்ய வேண்டிய உபாயமும் –
உம்முடைய தலையில் ஆக வேண்டாவோ -என்ன
எனக்கு உபாயமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் பொருள் உண்டோ-
பிரிந்து நிற்பதற்கு தகுதியாய் இருப்பது ஒரு நான் உண்டோ-ப்ருதக் ஸ்திதியே இல்லையே –
சரீரியை ஒழிய சரீரத்தை பாது காப்பதற்கு வேறு சிலர் உளரோ –என்கிறார்-

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –
நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு-காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக-
எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்
உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது
உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு-
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்-
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி-நீரைப் பருகுமாறு போலே-
என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி-
உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத-இனியன் ஆனவனே -என்றுமாம் –
இரும்புண்ட நீர் மீள்கினும் யென்னுழையில்-கரும்புண்ட சொல் மீள்கிலன் காணுதியால்-கம்பர் ஜடாயு உயிர் நீத்த படலம் -104

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-4-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

பிரகிருதி புருஷ மஹான் அகங்கார பிருதிவ்யாதி பூத சதுர்முக ருத்ர தேவாதி ஸ்தாவராந்த சேதன அசேதனாத்மக
ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகளுக்கும் நீயே நிர்வாஹகானாய் இருந்து வைத்து
என்னுடைய பரமத்தனையும் நானே நிர்வஹிக்கக் கடவேனாகப் பார்த்து அருளினாயாகில்
என்னைக் கை விட்டாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-4-

சர்வ நிர்வாஹகனான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே  யல்லையோ என்கிறார் –

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

மஹதாதி விகாரங்களுக்கும் காரணம் ஆகையால் -ஸ்வ காரியங்களுக்கு எல்லாம் மேலாய் -ஸ்வ கார்யங்களை பிறப்பிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தையும் யுடைத்தாய் -சேதனர்க்கு போக மோஷாதி புருஷார்த்தங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன்   ஆனவனே -அதிலே பத்தமாய் நிற்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகனாய் -ஆகாசாதி பூத பஞ்சகத்துக்கும் பாஞ்ச பவ்திகமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ -தேவர்களையும் மற்று உள்ளாரையும் படைத்த முனியாக பிரசித்தனானவன்  நீ -என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கல் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாயே —

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-4-

அநந்தரம் -சர்வ பிரகார விசிஷ்டனான நீ பிரகார பூதனான என்னுடைய கார்யம் நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
வைத்து என்னை இந்த விபூதியில் போர விட்டாய் இத்தனை அன்றோ என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார் –

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ -அதனுள்- மிசை நீயேயோ–பூதமான மஹாதாதி களுக்கு எல்லாம் பிரதான காரணமாகையாலே
மேலாய் -உனக்கு லீலா உபகரணம் ஆகையாலே விலக்ஷணமாய் –
குண த்ரய ஸாம்ய அவஸ்தமாகையாலே-குளிர்ந்து இருப்பதாய் போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்டகாரணமான ஆகாசம் விலக்ஷணமான தேஜஸ்ஸூ முதலான பூதங்களை
ஸ்ருஷ்டித்து தத் பிரகாரியாய் –
பூத ஆரப்தமான அண்டத்துக்கு உள்ளே ப்ரஹ்ம ருத்ராதிகளை உத்பாதித்து தத் தத் பிரகார விசிஷ்டனானவன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–பிராணி ஜாதங்களுக்கு மேலான தேவர்களையும் மனுஷ்யாதி சகல சேதனரையும்
தத் தத் கர்ம விபாக மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ இப்படியாய் இருக்க
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–பிரகார பூதனான என்னுடைய தேகத்தை நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
பிராப்தி பர்யந்தமாக அபரோஷிப்பித்து உன்னை ஒழியச் செல்லாத என்னை பின்னையும் இங்கே போர விட்டிட்டு வைத்தாய்
ஓ என்கிற அசை-நீ என்னும் இடம் தோறும் கூட்டி -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேது போந்து இருக்க
அநாதரித்தாய் என்று கூப்பிடுகிற ஆர்த்தியை ஸூசிப்பிக்கிறது –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-4-

சர்வ நிர்வாஹகானான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே  யல்லையோ என்கிறார் –

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ-மஹதாதி காரியங்களுக்கு எல்லாம் காரணம் ஆகையால் மேலாயத் தன்னுடைய ஏக தேசத்தாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான சக்தியை யுடைத்தாய் விசித்ர பரிணாமினியாய்ச்-சேதனர்க்கு போக மோக்ஷத்தை இசைத்துக் கொள்ளலாம் நிலமாய் இருந்துள்ள மூலப் பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனே – / உம்பர் –மேல் / அம் தண் -அழகியதுமாய் அனுகூலமுமாய் இருக்கை / பாழேயோ-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை
அதனுள் மிசை நீயேயோ–அதிலே பத்தமாய் இருக்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத-தமேவார்த்த ஸ்வரூபேண பிராந்தி தர்சநத ஸ்த்திதம் –ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரி காரணம் ஆகையால் -காரண அவஸ்தையைச் சொல்லிற்று –இத்தால் விசேஷண ப்ராதான்யம் சொல்லும் நியாய வைசேஷிக பக்ஷமும்–விசேஷத்துக்கு அபாரமர்த்த்யம் சொல்லும் மாயாவதி பக்ஷமும் ஆழ்வாருக்கு பக்ஷம் அல்ல என்றதாய்த்து –
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அம்பரம் -ஆகாசம் / நற் சோதி-தேஜோ பதார்த்தம் / இவை இரண்டும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம் –/ அதனுள் பிரமன் அரன் நீ-அந்த பஞ்ச பூதங்களால் ஸ்ருஷ்டமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ –
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–மேலான தேவர்களையும் மனுஷ்யாதி ஸ்தாவாராந்தமான சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்த முனியாக பிரசித்தனானவன் நீ –சகல பதார்த்தங்களையும் கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டிக்கைக்காக பூர்வ கர்மங்களை அநுஸந்திக்குமவன் இ றே முனியாகிறான் -ததச தேவ சன்மனோஸ் குருத ஸ் யாமிதி –இத்தால் ஸ்தூல சித் அசித் சரீரத்வத்தாலே கார்யம் சொல்லிற்று யாய்த்து –கஸ்யப ப்ரஜாபதியைச் சொல்லிற்று ஆகவுமாம் –எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–என் கார்யம் நீயே செய்யக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு -அத்தையும் உபேக்ஷித்து அசேதனத்தைப் பொகடுமா போல பொகட்டாய் என்னுதல் –சகலத்தையும் நிர்வஹிக்கிற நீ என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கலில் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாய் என்னுதல் -/ என்னை -உன்னை ஒழியச் செல்லாத என்னை —

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

சர்வ பிரகார விசிஷ்டன் -பிரகார பூதனான என் கார்யம் செய்வதாக உபக்ரமித்து போர விட்டது எதனால்
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ-பூதமான மஹதாதிகளுக்கு எல்லாம் மேலான
-உனக்கு லீலை உபகரணம் அழகிய குளிர்ந்த -சத்வம் ரஜஸ் தாமஸ் சாம்யம் -போக மோக்ஷங்கள்விலைக்கும் ஸ்தானம்
அதனுள் அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்ட காரணம் -தேஜஸ் -பஞ்ச பூதங்கள் -ப்ரஹ்மாதிகளை உத்பாத்தித்து பிரகாரமாகக் கொண்டு
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ-தத் தத் கர்மா விபாகம் பண்ணி ஸ்ருஷ்டித்த பின்பு
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே-என்னுடைய தேகம் -பிராப்தி பர்யந்தமாக -கண் முன்னால் காட்டிய பின்பு விட்டாயே
ஓ ஒவ் ஒரு இடத்திலும் -சேர்த்து -உம்பர் அம் தண் பாழேயோ-நீ ஓ / அதனுள் மிசை நீயேயோ-நீ ஓ
அம்பரம் நற் சோதி -ஓ /அதனுள் பிரமன் அரன் நீ-ஓ /உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ ஓ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயேஓ /
பொறுப்பை நிர்வகிக்கத்த பின்பு -ஓர் ஒன்றே ரசிக்க ஹேதுவான பின்பு அநாதரிப்பது -ஆர்த்தி மிக கூப்பிடுகிறார்

எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ-என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய் பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் அல்லையோ-என்கிறார்

உம்பர் அம் தண் பாழேயோ –
மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –
தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்-
வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்-நிலமாய் இருந்துள்ள மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே
உம்பர் -மேல்
அம் தண் -அழகிய குளிர்ந்த
பாழ் -மூல பிரகிருதி -படைத்ததற்கு தகுதியாய் இருக்கை-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை-
காரண நிலையில் கார்யத்துக்கு தகுதியாய் நின்று-தன் கார்யத்தாலே-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைக்கவற்று -என்னும் இடத்தை சொல்லுகிறது –
வெண்மை என்று கொண்டு பிரித்துக் காட்டும் சொல்லாலே-தர்மத்தை பிரிய சொல்லுமாறு போலே-
பிரியச் சொல்லப் போகாது இறைவனுக்கு சரீரம் ஆனவற்றை-ஆதலின் பாழேயோ -என்கிறார்-
உம்பர் அம் தண் பாழ் -என்கிற இதனால்-ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ்வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை-அன்றிக்கே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் –
ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்-அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி-
பாழேயோ -என்கிற இதனால்
சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்–
ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –

அந்த மூலப் பிரக்ருதிலே மறைந்து நிற்கிற சிறப்புடைத்தான-ஆத்மாவுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே-காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று-
இதனால் விசேஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்-
விசேஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்-ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்-
ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே-
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –

பிரகாரி பிரகார சம்பந்தம் -காரிய காரண சம்பந்தம் -நீயே பாழ்–சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
நீ ஆத்மா தத் தவம் அ ஸி -அதனுள் மீசை நீயே யோ
ஜகத் வியதிரிக்த விஷயங்களில் -நிஷ்கர்ஷம் தர்மம் தர்மம் சொல்லும் தர்மியை சொல்லாதே –
பூவின் மணம் -மணத்தை தானே குறிக்கும் பூவைக் குறிக்காதே
பகவத் விஷயத்தில் நிஷ்கர்ஷமான சொல்லும் அவனையே குறிக்கும் -நீ பிரகிருதி பாழ் சொல்லலாம் -என்றவாறு –
பிரகிருதி சப்தம் அவன் அளவில் பர்யவசிக்கும் -சர்வ சப்த வாச்யத்வம் –
பிரகார பிரகாரி சரீர ஆத்மா சம்பந்தம் இவனைப் போலே இல்லையே -நமக்கும் சரீர சம்பந்தம் இந்த பிறவியில்
-பிரகிருதி சம்பந்தம் மோக்ஷம் அடைந்ததும் போகுமே
என் உடம்பு நாம் சொல்ல வேண்டும் -அவன் நானே உடம்பு -சொல்லலாம்
ஆடையின் வெண்மை -படஸ்ய ஸுக்லயம் -வெண் தன்மை -நிஷ்கர்ஷகம்
வெண் ஆடை -அநிஷ்கர்ஷகம்
வை வைஷிகா நிஷ்கர்ஷகம்-சுக்ல பட -வெண் ஆடை சொல்லாமல் ஆடையின் வெளுப்பு
நியதி -நிஷ்கர்ஷகம்-கந்தம் பிருத்வி மண்ணில் மணம்
தர்மத்தை மட்டும் சொல்லும் தர்மியை சொல்லாதே
ஈஸ்வரன் இடத்தில் -அப்ஸு ரஸோஹம் தண்ணீரில் ரசம் நான் -கௌந்தேய -சொல்கிறான் –
அனைத்தும் நீயேயாக இருக்க நீ போர விட்டால் எங்கே போவேன் என்கிறார் –
சேதனம் உடன் கூடி இருந்தாலும் கூடாமல் இருந்தாலும் அவனுக்கு சரீரம் -அவனே நிர்வாககன்
அசித் மிஸ்ரான் -விசுத்த ஜீவன் -பக்த முக்த —அசித்தை பிரிந்த ஜீவனும் உண்டே –
அழுக்கு குறைகள் தட்டும் என்பதால் வேறே என்பர் மீமாம்ஸய்கர் -அப்படி அல்ல -ஆத்மாவுக்கு தட்டாது போலே அவனுக்கு –
அத்வைதி மாயாவாதிகள் -சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் ஒன்றாக -ஸ்வரூபத்தால் ஓன்று -அதுவே இது இதுவே அது என்பர் –
தத் ப்ரஹ்மத்தை சொல்லி த்வம் ஸ்வகேதுவைச் சொல்லுமே -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்கியம் சொல்வார் அத்வைதிகள்
-பிரக்ருதிக்கும் ப்ரஹ்மத்துக்கும் சொல்லார் ஆழ்வார் அத்தையும் சொல்லி சரீர ஆத்ம பாவத்தால் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைதிகள் –
விசேஷண பிரதான்யம் சொல்லும் வைசேஷிகர் –
நீ என்பதற்கு தானே ஆழ்வார் பிரதான்யம் என்கிறார் –
பொய் இல்லை -விசேஷணம் உண்டு என்கிறார் -ஆகையால் இரண்டு மதங்களையும் கண்டனம் பண்ணி அருளுகிறார் –

அம்பரம் நற் சோதி –
ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்-
இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்-
யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா-பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில்
தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனால் போலே –

அதனுள் பிரமன் அரன் நீ –
பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான-அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்-நீ இட்ட வழக்கு -என்கிறது –

உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ –
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்-பிரசித்தமாய் இருப்பவனும் நீ-
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை-கார்ய காரண தன்மை அடியாய் வந்தது-
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை-அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன-
ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே-
எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு-
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்-
நாம ரூப வேறுபாடு அற்ற சூஷ்ம சேதனங்கள் அசேதனங்கள் உடன் கூடிய அந்த பரம் பொருளே-
நாம ரூப வேறுபாட்டுக்கு உரிய ஸ்தூல சேதன அசேதன பொருள்களாக கடவேன் -என்று எண்ணியது-
இதனால் ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே-காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று –
சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் தமிழ் செய்த மாறன் –

எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –
என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக் கொண்டு-அதனை விட்டு-அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்-
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ-என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து-
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்-
என்னை-
உன்னால் அல்லது செல்லாத என்னை-
போர விட்டாய்-
அவன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி-குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்-
தெளிந்த ஞானத்தினை உண்டாக்கி-பேற்றின் அளவும் செல்லாமல் இருக்கிற இது-
நளன் தமயந்தி வழி காட்டி விட்டால் போலே இருக்கிறது காணும்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –