ஸ்ரீ கத்ய த்ரயம் —
॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥
॥ ஶரணாக³தி க³த்³யம்
யோநித்ய மச்யுத பதா³ம்பு³ஜ யுக்³ம ருக்ம-
வ்யாமோஹதஸ் ததி³தராணி த்ருʼணாய மேநே ।
அஸ்மத்³கு³ரோர் ப⁴க³வதோঽஸ்ய த³யைகஸிந்தோ:⁴
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥–ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த தனியன்
வந்தே³ வேதா³ந்த கர்பூர சாமீகர கரண்ட³கம் ।
ராமாநுஜார்யமார்யாணாம் சூடா³மணி மஹர்நிஶம் ॥–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் அருளிச் செய்த தனியன்
சாமீ கரம் -ஸ்வர்ணம்
கரண்டகம் -பாத்ர விசேஷம்
வேதாந்த ஸாஸ்த்ரமாகிற பச்சைக் கற்பூரம் ஸூ ரஷிதமாகவும் பரிமளம் குன்றாதபடியாகவும் வைப்பதற்கு ஸ்வர்ண பரணி என்னலாம் படி வேதாந்த மார்க்க ப்ரதிஷ்டபந ஆச்சார்யராய் ஆரியர்களுக்கு எல்லாம் ஸிரோ ரதனமாக தாங்குபவராயும் இருக்கும் எம்பெருமானாரை நமஸ்காரம் செய்கிறேன்
வேதாந்தங்கள் அவனையே வஹித்துக் கொண்டு இருப்பதால் பச்சைக் கற்பூரம் என்றதாயிற்று
எம்பெருமானார் வேதாந்த தயா நிதி என்கிறார்
———
ப்ரவேஸம்-அவதாரிகை
உபயாந்தரங்கள் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் -என்று பலவகைப்பட்டு இருக்கும்
ஸ்ரீ பாஷ்யம் குத்ருஷ்டிகளை நிரசிக்கக்காக அருளிச் செய்கிறாராகையாலே
ஆச்சார்யர் ருசி பரிஹிரீத பிரபத்தியை மறைத்து அருளிச் செய்தார் அங்கு
தத்வமஸி இத்யாதி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷம் என்றும்
கர்ம ஞான ஸமுச்சயமே மோக்ஷ சாதனம் என்றும்
சொல்லும் குத்ருஷ்டிகளை நிரசிக்கவே
கர்ம அங்கமாய்
வேதந-த்யாந -உபாஸநாதி ஸப்த வாஸ்யமான பக்தி ரூபா பன்ன ஞான விசேஷமே மோக்ஷ ஸாதனம் என்று சாதித்தார் அங்கு
ப்ராஹ்மணன் சண்டாளனுக்கு வேதத்தை அத்யயனம் பண்ண ஒண்ணாதது போல்
தூரஸ்தரானவர்களுக்கு பரம ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை வெளியிட ஒண்ணாது என்று பார்த்து
அவர்கள் முகம் அறிந்த ஸாஸ்த்ர முகத்தாலே அவர்களை நிரஸித்து
ஸாஸ்த்ர தாத் பர்யமான ஸ்வ சித்தாந்தத்தை ஸ்தாபித்து அருளினார் அங்கு
ஆயினும் தன்னுடைய ருசி பரி க்ருஹீதமான அர்த்தத்தையே விஸ்வசித்து இருக்கும் சாத்விகர்களுக்கு
தன்னுடைய திரு உள்ளக்கருத்தியை விசத தமமாக வெளியிட வேண்டி
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய்
தமக்குத் தஞ்சமாய்
தாம் அறுதியிட்டு இருக்கும் அத்ஹம் பிரபத்தயே என்பதை
இக்கத்ய த்ரயத்தால் வெளியிட்டு அருளுகிறார்
பக்தி
அதிக்ருத அதிகாரம்
துஷ்கரம்
விளம்பித்து பயன் தரும்
ப்ரமாத -கவனக்குறைவு -ஸம்பாவனை உள்ளது
ஸாத்யம்
ஸ்வரூப விரோதம்
ப்ராப்ய வி ஸத்ருசம்
தபஸ்ஸுக்களில் ந்யாஸமே தலை விரைந்தது என்று வேதாந்தங்களை பறை சாற்றுமே
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்தாலும் பிரபத்தியே மேலையார் செய்வனகளாய் இருக்கும்
ஆகவே வேதாந்த ஸித்தமுமாய்
ஸ்வரூப ப்ராப்தமுமாய்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாயும்
சரண்யா ஹ்ருதய அநு சாரியுமாய்
இருக்கும் இத்தை ஸ்வ கீயர்கள் இழக்க ஒண்ணாது என்று
தாமும் அனுசந்தித்து
தம்முடைய பரம கிருபையால் இப்பிரபந்த ரூபமாக வெளியிட்டு அருளிச் செய்கிறார்
இதில் பெரிய பிராட்டியாரும் பெரிய பெருமாளும் அர்ச்சா சமாதியைக் கடந்து இவற்றில் திருச்சோதி வாய் திறந்து அருளிச் செய்தவையும் உண்டு
இவற்றில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்துமே உண்டு -இவையுள்
ஸம்போதந பதங்கள் -தத்வ பரம்
சரண வரண ப்ரதிபாதக வாக்கியங்கள் ஹித பரம்
ப்ரார்த்தநா ப்ரகாஸ வாக்கியங்கள் புருஷார்த்த பரம்
————————-
ஸ்ரீபெரிய பிராட்டியாரைச் சரணமாகப் பற்றுவது:
ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே
ப⁴க³வந் நாராயண-ஸமஸ்த கல்யாண குண பரி பூர்ணனான நாராயணனுக்கு
அபி⁴மத அநுரூப -உகப்பாயும் -தகுந்தும் இருக்கிற
ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ -ஸ்வரூபம் என்ன -விக்ரஹம் என்ன -ஸ்வரூப விக்ரஹ குணங்கள் என்ன -விபூதிகள் என்ன -இவைகளையும்
ஐஶ்வர்ய ஶீலாத்³–ஐஸ்வர்யம் ஸுசீல்யம் முதலிய
யநவதி⁴க அதிஶய –எல்லையில்லாத சிறப்புடைய
அஸங்க்²யேய -எண்ண முடியாத
கல்யாண கு³ண க³ணாம் -கல்யாண குண ஸமூஹங்களையும் உடையவளாய்
பத்³மவநாலயாம் –கமல வனத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவளாய்
ப⁴க³வதீம் –பரம பூஜ்யையாய்
ஶ்ரியம் –ஸ்ரீ என்று திரு நாமம் யுடையவளாய்
தே³வீம்-வடிவில் புகர் நிறைந்தவளாய்
நித்யாநபாயிநீம் -எம்பெருமானை ஒரு நாளும் விட்டுப் பிரியாதவளாய்
நிரவத்³யாம் -பரி ஸூத்தியை யுடையவளாய்
தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -தேவாதி தேவண்டைய எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியாய்
அகி²ல ஜக³ந் மாதரம் -ஸமஸ்த ஜகத்துக்கும் மாதாவாய்
அஸ்மந் மாதரம்–விசேஷித்து அடியோமுக்குத் தாயாய்
அஶரண்ய ஶரண்யாம் -புகல் அற்றவர்களுக்கு புகலாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை
அநந்ய ஶரண: அஹம் -புகல் ஒன்றும் இல்லா அடியேன்
ஶரணம் ப்ரபத்³யே –சரணம் புகுகின்றேன் –
முந்துற முன்னம் பெரிய பிராட்டியாரை சரணம் புகுகிறார்
மேலே தாம் பெரிய பெருமாள் திருவடி வாரத்திலே சரணாகதி நிஷ்டைக்கு வெளியிடப் போகிற
உபேய ருசியும்
உபாயத்வ அத்யாவசாயமும்
பரி பக்குவமாய் இருக்க வேண்டுகையாலே -அவை குறைவற ஸித்திக்க வேண்டும் என்று பெரிய பிராட்டியார் திருவடிகளிலே சரணம் புகுகிறார்
உலகில் எது ஸித்திக்க வேண்டுமானாலும் பெரிய பிராட்டியார் சீர் அருளாலேயே ஸித்திக்க வேண்டும் என்ற அத்யவசாயம் இருப்பார்க்கு இது ப்ராப்தமே யாகும் –
அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் தமது முடியில் பொருந்த பிரார்த்தனை போல்-
ப⁴க³வந் நாராயண-அபி⁴மத அநுரூப –ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ-இவை அனைத்தும் எம்பெருமானுக்கு உகப்பாயும் -ஏற்றவையாயும் இருக்கிற
லௌகீகருக்கு அனுபவமிக்க க்ரம பிராப்தி இருந்தாலும் மனதுக்கு இனியவளாய் இல்லாமலும்
வேறே ஸ்த்ரீகள் மனதுக்கு இனியவர்களாய் இருந்தாலும் பிராப்தி இல்லகாவர்களாகவும் காண்கிறோம் அன்றோ
ருசி -சுசி -அபிமத அனுரூபம் க்வசித் பொருந்தினாலும் முழுவதுமாக பொருந்தியவையாய் இருக்காதே
தேஹ குணம் பொருந்தினாலும் ஆத்ம குணம் பொருந்தாமல் இருப்பதும் உண்டே
திவ்ய தம்பதிகளுக்கு ஸகல அம்சங்களும் முழுவதுமாக அபிமதமாயும் அனுரூபமாயுமே இருக்கின்றன என்றதாயிற்று
இந்த விசேஷணங்களில் குண ஸப்தம் இரண்டு முறை –
முதலில் உள்ளது தேஹ குணம் –ஸுந்தர்ய லாவண்யாதிகள் –
பின்புள்ளது ஆத்ம குணம் -வாத்சல்ய ஸுலப்ய ஸுசீல்யாதிகள்
விபவம் -போகத்துக்கு உபகரணங்களாய் இருக்கும் வஸ்து ஸமூஹங்கள் –
அவளுக்கு என்று தனியே விபூதிகள் உண்டோ என்னில் -தம்பதிகளுக்கு பொதுவாய் தானே இருக்கும்
மேலும் அவளுக்கு அசாதாரணமான மால்யை பூஷண வஸ்த்ராதிகளும் உண்டே
விபவ அர்ச்சா அவதாரங்களில் காண்கிறோம் அன்றோ –
ஐஸ்வர்யம்
நியமன ஸாமர்த்யம் -எம்பெருமானுடைய இச்சையினால் பெற்ற நியமான சாமர்த்தியம்
சேதனர்களை கர்ம அனுகுணமாக நியமித்தும் அருளாலே திருத்தியும் நியமிப்பாள்
ஈஸ்வரனை ரக்ஷண அனுகுணமாக நியமிப்பாள் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
சீல ஆதி -சீலம் புரையறக் கலக்கை -குகன் பக்கலிலும் த்ரிஜடை பக்கலிலும் காணலாம்
ஆதி -வாத்சல்ய ஸுசீல்யாதிகள்
அநவதிக அதிசய -இது குணங்களுக்கு விசேஷணம் -ஒவ்வொரு குணத்தின் எல்லையும் -உத்கர்ஷமும் -காண முடியாமல் இருக்குமே
அஸங்க்யேய கல்யாண குண கணாம் —அவனுக்குப் போலவே குணங்கள் தனித் தனியே எண்ண முடியாதவை மட்டும் அன்றி குண ஸமூஹங்களும் எண்ண முடியாதவை அன்றோ
பத்³மவநாலயாம் -பத்மத்தை உப லக்ஷணமாகக் கொண்டு ஸர்வ மங்கள வாஸிநீ -என்றபடி-பரிமள பிரசுரமான பத்ம வன வாஸிநீ என்பதால் -ஸர்வ கந்த -என்று புகழப்படும் அவனுக்கும் பரிமளமூட்ட வல்லவள்-
ஶ்ரியம்
1-ஸ்ரீயதே –ஸகல சேதனர்களாலும் புருஷகார தயா ஆஸ்ரயிக்கப்படுபவள்
2-ஸ்ரயதே -சேதனர்களுக்காக அவனை ஆஸ்ரயிக்கிறாள்
3-ஸ்ருணோதி -சேதனர்களின் விண்ணப்பங்களை செவி கொடுத்துக் கேட்க்கிறாள்
4-ஸ்ராவயதி -அவற்றை அவனையும் கேட்ப்பிக்கிறாள்
5-ஸ்ர்ணாதி –ஆஸ்ரிதர் குற்றங்களை ஷமித்து இல்லை செய்பவள்
6-ஸ்ரீணாதி -தனது திருக்கல்யாண குணங்களால் உலகோரை உகப்பிக்கிறாள் –
ஸ்ரீரித் ஏவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஆளவந்தார்
ஸ்ரீ ரஸி யத -பட்டர்
தே³வீம்-கிரீடா -இன்புறும் இவ் விளையாட்டுடையவனுடைய சேர்த்தியால் ஒளி வீசி விளங்குபவள்-
நித்யாநபாயிநீம் –பூவும் மணமும் போலவும் ரத்னமும் ஒளியும் போலவும்
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா
நிரவத்³யாம் -கீழ்ச் சொன்ன உதகர்ஷங்கள் எல்லாம் தனது யத்னத்தால் அன்றி -நிலா தென்றல் இத்யாதிகள் போல் -எம்பெருமானுடைய அதிசய தானத்திற்கே உறுப்பு என்று இருப்பவள் –
தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -அப்ரதிஹத சிகீர்ஷிதாம்-தான் எது செய்தாலும் இடையூறின்றி நிறைவேற்றுபவள் -என்பர் ஸ்ருதப்ரகாசிகா பட்டர்
அவ்வளவு கண் அழிவற்ற புருஷகாரம் செய்யும்படி வால்லப்யம் யுடையவன்
ப்ரஹ்மாதிகளை விட உத்துங்கனான தேவ தேவன் போல் அல்லாதவர் மஹிஷிகளில் காட்டில் உத்துங்கம் யுடையவள் –
அகி²லஜக³ந் மாதரம் –தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம்-என்று அஞ்சி பின் வாங்க வேண்டாத படி வாத்சல்யமே விஞ்சி இருப்பவள்அஸ்மந் மாத்ரம்–அகில உலகமும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாக வாத்சல்யம் விஞ்சி இருக்குமே
தேசிகர் பாடத்தில் இப் பதங்கள் இல்லை
அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே-சர்வ லோக சரண்யனாலும் கைவிடப்பட்ட அவர்களுக்கும் புகலிடம் இவளே –
திருவடியைப் பொறுப்பிக்கும் அவள் தன் சொல்லி வருமவளைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாம் அன்றோ
பிரபத்யே -சரணமடைகிறேன் என்று இருக்கச் செய்தே -அஹம் -பத ப்ரயோகம் -விஸிஷ்ய -தம்மைத் காட்டிக் கொள்ளுகிற படி
அசக்தியாலும்
ஸ்வரூப விருத்தமாகையாலும்
உபாயாந்தரங்களில் கை வைக்காதவர் என்று காட்டியபடி
——–
பிராட்டியாரிடம் பிரார்த்திப்பது:
பாரமார்தி²க ப⁴க³வச்சரணாரவிந்த³ யுக³ளைகாந்திகாத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி க்ருʼத
பரிபூர்ணாநவரத நித்ய விஶத³தம அநந்யப்ரயோஜந அநவதி⁴காதிஶய ப்ரிய ப⁴க³வத³நுப⁴வ ஜநித
அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதி ரூப நித்யகைங்கர்ய
ப்ராப்த்யபேக்ஷயா பாரமார்தி²கீ ப⁴க³வச்சரணாரவிந்த³ ஶரணாக³தி: யதா²வஸ்தி²தா அவிரதாঽஸ்து மே ॥ 2 ॥
பாரமார்தி²க–பரம புருஷார்த்தமான -இது பக்திக்கு விசேஷணம்
ப⁴க³வச்சரணாரவிந்த³ யுக³ளைகாந்திக-எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளையே பற்றினதாய்
ஆத்யந்திக -எப்போதும் நிலை நின்றதாய்
பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி –பர பக்தி பர ஞான பரம பக்தி ஆகிய இவற்றாலே
க்ருʼத-செய்யப்பட -இது பகவத் அநுபவத்திலே அந்வயிக்கக் கடவது
பரிபூர்ண-நிரம்பியதாய்
அநவரத -இடைவீடு இல்லாததாய்
நித்ய -நித்யமாய்
விஶத³தம -அதி மிக விசதமாய்
அநந்ய ப்ரயோஜந -ஸ்வயம் ப்ரயோஜனமாய்
அநவதி⁴காதிஶய ப்ரிய -இதற்கும் மேலே வேறே ஒன்றும் பிரியம் இல்லாததாய்
ப⁴க³வத³நுப⁴வ –பகவத் அநுபவத்தினால்
ஜநித–உண்டு பண்ணப்பட்ட
அநவதி⁴காதிஶய ப்ரீதி-மிகச் சிறந்த ப்ரீதியினாலே -உகப்பினாலே
காரித -செய்விக்கப் பட்ட -இது நித்ய கைங்கர்யத்தில் அந்வயிக்கும்
அஶேஷாவஸ்தோ²சித –எம்பெருமானுடைய திரு வோலக்கத்திலும் -அந்தப்புரத்திலும் போன்ற ஸகல அவஸ்தைகளும் ஏற்றவையான
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப –ஸகல வித கைங்கர்யங்களிலும் ஆசை கொண்டு இருப்பதே வடிவான
நித்யகைங்கர்ய ப்ராப்த்யபேக்ஷயா –நித்ய கைங்கர்யத்திப் பெறுவதற்கு உறுப்பாக
பாரமார்தி²கீ -உண்மையான
ப⁴க³வச்சரணாரவிந்த³ ஶரணாக³தி: –எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஆகின்ற சரணாகதியானது
யதா²வஸ்தி²தா அவிரதாঽஸ்து மே -அது அமைய வேண்டிய ரீதியிலே அமைந்ததாய் -இடையறாததாய் எனக்கு ஸித்திக்க வேண்டும் –
கீழே பிராட்டியிடம் சரணாகதி என்றது இத்தால் விஸதீ கரிக்கப்படுகிறது
இடையறாத ஆச்சர்ய பகவத் அனுபவம் விளைந்து -அதனால் கைங்கர்ய ருசி உண்டாகும் என்று உரைத்தாறாயிற்று
———
பிராட்டியாரின் பிரதி வசநம்:
அஸ்து தே ॥ 3 ॥
தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே ॥ 4 ॥
அஸ்து தே –அப்படியே இது உமக்கு ஆகக் கடவது
தயைவ -அந்த ஸரணாகதியினாலேயே
இதுவே போதுமான தாக்க இருக்க
அதுக்கும் மேலும்
ஸர்வம் ஸம்பத்ஸ்யதே –உமது அபிமதம் எல்லாம் அழகாக ஸித்திக்கப் போகிறது -என்று பெரிய பிராட்டியார் அனுக்ரஹத்துக்கு திரு உள்ளதாக ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் -ஸ்வ சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி ஸர்வா ஸப்தா பிப்ரேதம் -என்று
இது உம்மளவில் சுவறிப்போமது அன்று -பரம்பரயா உம்முடைய குடல் துவக்குடைய உம்முடைய குடல் துடக்கு உடைய எல்லார் இடத்திலும் இது பலித்ததாகக் கடவது -என்று பிராட்டியார் அனுக்ரஹித்த படி
இப்படிப்பட்ட வரம் எம்பெருமான் திருமுகத்தில் நீண்டும் மேலே வெளிவரும் என்பதே நம் சம்ப்ரதாயம்-
உக்த்யா தனஞ்ஜய விபீஷண லஷ்யயா தே ப்ரத்யாய்ய லஷ்மண முநே பவத விதீர்ணம்
ஸ்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத -நியாஸ திலகம்–22-ஸ்ருத்வா வரம்-என்று எம்பெருமானாரது ஸம்பந்தமே ஹேதுவாக தமக்கும் பலித்ததாக தேசிகரும் அருளிச் செய்துள்ளார் அன்றோ-
இந்த வரப்ரதானத்துக்குப் பூர்வகமாக பிராட்டியார் சோதி வாய் திறந்து அருளுகிறார்
————-
எம்பெருமானுடைய ஸ்வரூபம்:
அகி²லஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந! * ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷண *
அநந்த ஜ்ஞாநாநந்தை³க ஸ்வரூப! *
அகி²லஹேய ப்ரத்யநீக -அனைத்து ஹேய குணங்களுக்கும் எதிர் தட்டாய்
கல்யாணைகதாந! * -நல்ல குணங்களுக்கு முக்கிய ஸ்தானமாய்
ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷண *–தன்னை ஒழிந்த ஸமஸ்த வஸ்துக்களைக் காட்டிலும் விலக்ஷணமாய்
அநந்த –ஸர்வ வ்யாபியாகையாலே தேச பரிச்சேத ரஹிதமாய்
ஸர்வ கால வர்த்தியாகையாலே கால பரிச்சேத ரஹிதமாய்
ஸர்வ வஸ்துக்களும் தானேயாய் இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய்
ஆக இப்படி மூன்று வித பரிச்சேதங்களும் இல்லாமையே அனந்தத்வம் ஆவது
ஜ்ஞாநாநந்தை³க ஸ்வரூப! -இப்படி அநந்தமாய்
ஸ்வயம் ப்ரகாசமாகையாலே ஞானமே வடிவாய்
ஸூக ரூபமாகையாலே ஆனந்தமே வடிவாய் இருப்பவனே
என்று இவ்வளவும் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைப் பேசியபடி
ஸ்வரூப ரூப குண விபூதிகள் –என்கிற கோவையில்
இதுவரை ஸ்வரூபத்தைப் பேசி
மேலே ரூபம் -திவ்ய மங்கள விக்ரஹ விவரணம் –
————-
ரூபம்:
ஸ்வாபி⁴மதாநுரூப ஏகரூப * அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய நிரவத்³ய* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய
ஸௌந்த³ர்ய ஸௌக³ந்த்⁴ய * ஸௌகுமார்ய லாவண்ய * யௌவநாத்³யநந்தகு³ணநிதி⁴ * தி³வ்யரூப!–
ஸ்வாபி⁴மத-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் அபிமதமாய்
அநுரூப –ஏற்றதாய்
ஏகரூப * –ஷட் பாவ விகாரங்கள் ஒன்றும் இன்றிக்கே இருப்பதாய்
அசிந்த்ய –ப்ராக்ருத வஸ்து சஜாதீயமாக நினைக்கக் கூடாததாய்
தி³வ்ய-அப்ராக்ருதமாய்
அ த்³பு⁴த -க்ஷணம் தோறும் அபூர்வமாய் இருப்பதாய்
நித்ய -ஸ்வரூப குணங்கள் போலே அநாதி நிதநமாய்
நிரவத்³ய* –துர் பலத்வம் முதலான அவத்யங்கள் இன்றிக்கே இருப்பதாய்
அன்றிக்கே
நித்ய நிரவத்ய -என்று ஒரே சொல்லாக்கி எப்போதும் நிரவத்யமாய் இருப்பதாய்
அதாவது என்றும் ஓக்க ஸ்வார்த்தமாய் இராது ஒழிகை
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் -என்றபடி எஞ்ஞான்றும் அடியார்களுக்காகவே இருக்கை
நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய-இதற்கு மேற்பட்டது இல்லை என்னும்படியாய் புகரை யுடைத்தாய்
ஸௌந்த³ர்ய ஸௌக³ந்த்⁴ய * ஸௌகுமார்ய லாவண்ய * யௌவநாத்³யநந்தகு³ணநிதி⁴ * தி³வ்யரூப!–அவயவ சோபை யாகிற ஸுந்தர்யம் என்ன
திவ்ய பரிமள ப்ரசுரமாய் இருக்கை என்ன
பிராட்டிமாரும் உறைக்க பார்க்க ஒண்ணாத படியான ஸூ குமாரத் தன்மை என்ன
ஸமுதாய சோபை யாகிற லாவண்யம் என்ன
எப்போதும் இளமை மாறாமல் இருக்கும் யவ்வனம் என்ன
இவை முதலான அபரிமித குணங்களுக்கு கொள்கலமாய் இருப்பதான
திவ்ய ரூப -திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்
கீழேயும் -அசிந்த்ய திவ்ய அத்புத –திவ்ய பத பிரயோகம் புநர் யுக்தி தோஷம் அன்று
எத்தனை தடவை சொன்னாலும் பர்யாப்தி பிறவாது அன்றோ
இவ்வளவும் திவ்ய மங்கள விக்ரஹம் விவரித்து
மேல் திவ்ய ஆத்ம குணங்களை விவரித்தது அருள்கிறார்
————-
திவ்யாத்ம கு₃ணங்கள்:
ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய * ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்ஸௌஶீல்ய
வாத்ஸல்ய* மார்த³வ ஆர்ஜவ * ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய * மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய *
சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம * ஸத்யகாம ஸத்யஸங்கல்ப *
க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³யஸங்க்²யேயகல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவ !
ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய * -இந்த இரண்டு விசேஷணங்களும் மேல் உள்ள அனைத்து குணங்களிலும் அந்வயிக்கும்
ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கும்
ஷாட் குண்யம் முதலிய ஸமஸ்த கல்யாண குண ஸமூஹங்களுக்கு கடல் போன்றவை
நீருக்கு குளிர்ச்சி போலவும் நெருப்புக்கு உஷ்ணம் போலவும் தர்மி உள்ள போதே இருக்கும் தர்மம் போல் இருப்பதையே ஸ்வா பாவிகமாய் இருப்பவை –
ஒரு நாளில் உண்டாகி மற்ற நாளில் இல்லாதவை போல் அன்றியே யவாதாத்ம பாவியாய் இருக்கை
இத்தால் நித்யர் முக்தர்களின் குணங்களில் நின்றும் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –
அவர்களுக்கு எம்பெருமான் இச்சையால் உண்டானதாய் இருக்கும் அன்றோ
அந வதிக அதிசயமானது -ஒவ்வொரு குணமும் எல்லை காண ஒண்ணாத படி இருக்கை –
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்ஸுக்கள் -மற்ற குணங்களுக்கும் ஊற்றுவாயாக இருக்கும்
ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்
ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்
ஞானமாவது -எல்லாவற்றையும் ஒரு காலே உள்ளபடி எப்போதும் அறிகை
பலமாவது -ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸமஸ்த பதார்த்தங்களையும் -ஸ்ரமம் இன்றி தரிக்கை யாகும் ஆற்றல்
ஐஸ்வர்யமாவது -ஸகல வஸ்துக்களையும் ஸமஸ்த சேதனர்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்
வீர்யமாவது -உபாதான காரியமாக ஸமஸ்த ஜகத்துக்கும் இருந்தாலும் தான் ஸ்வரூப விகாரம் அடையாமல் இருக்கை
சக்தியானது -அகடி கடநா ஸாமர்த்யம்
தேஜஸ்ஸாவது -எதற்கும் ஸஹ காரி அபேக்ஷை இல்லாமல் இருக்கை
மேல் இவற்றில் இருந்தும் தோன்றும் குணங்களை விவரித்து அருள்கிறார்
ஸௌஶீல்யம் ஆவது புரை யறக் கலக்கும் சீல குணம்
வாத்ஸல்யம் * ஆவது -ஆண்டு ஈன்ற கன்றின் அழுக்கை உய்க்கும் பசு போல் அடியார்களின் தோஷங்களையே போக்யமாகக் கொள்ளுகை
மார்த³வம் ஆவது -ஆஸ்ரிதர் விரஹம் பொறுக்க மாட்டாத மென்மை
ஆர்ஜவ *மாவது – கர்ணத்திரயத்தாலும் செவ்வியனாக -ருஜு வாக இருக்கை -இதற்கு எதிர்தன்மை கௌடில்யம்
ஸௌஹார்த³ மாவது -எப்போதும் பிறரது நன்மைகளையே சிந்தித்து இருக்கை
ஸாம்ய மாவது ஜாதி குண வ்ருத்தாதிகளில் தார தம்யம் பாராமல் ஆஸ்ரயிக்கத் தக்க படி இருக்கை-
காருண்ய * மாவது -துக்கித்தவர்களை நோக்கி ஐயோ என்று இரங்குகை
மாது⁴ர்ய மாவது -கொல்ல நினைக்கும் கொடிய நெஞ்சுடையாருக்கும் இனியனாய் இருக்கை
கா³ம்பீ⁴ர்ய மாவது -ஆஸ்ரிதர்களுக்கு செய்ய நினைக்குமவற்றை யாராலும் கணிசிக்க முடியாத ஆழ்ந்த திரு உள்ளம் உடையனாய் இருக்கை
ஔதா³ர்ய *மாவது -கைம்மாறு கருதாதே கொள்ளக் கொள்ளக் குறையாதே வேண்டிற்று எல்லாம் அருளும் கோதிலா மணி வண்ணனாய் இருக்கை
சாதுர்ய மாவது -ப்ரதிகூலரையும் அநுகூலரராக்கும் சதிர்
ஸ்தை²ர்ய மாவது -அடியார்களை ஒருக்காலும் கைவிட மாட்டாத உறுதி
தை⁴ர்ய மாவது -பிரதிபக்ஷம் பிரபலமாய் இருந்தாலும் த்ருணீ கரித்து இருக்கை
ஶௌர்ய மாவது -பிரபல எதிரிகளின் திரள்களிலும் துணையின்றி துணிந்து புகும் ஆற்றல்
பராக்ரம * -அவ்வாறு புகுந்த இடத்தில் அவலீலையாக எதிரிகளைப் பங்கப்படுத்தும் ஆற்றல்
ஸத்யகாம ஸத்யஸங்கல்ப *-இவ்விடத்தில் இவை இரண்டும் பாவ ப்ரதான நிர்தேசமாகையாலே ஸத்ய காமத்வமும் ஸத்ய ஸங்கல்பத்துவமும் என்று கொண்டு
ஸத்ய காமத்வமாவது -விரும்பப்படுவை எல்லாம் குறைவற்று ஸித்தித்து இருக்கை
ஸத்ய ஸங்கல்பத்துவமாவது -எது செய்ய நினைத்தாலும் தடையின்று செய்த் தலைக்கட்டும் ஆற்றல்
க்ருʼதித்வ மாவது -அடியார்களுக்கு செய்து கொண்டே இருக்கை
க்ருʼதஜ்ஞதாத்³மாவது -அடியார்கள் சிறிது நன்மை செய்தாலும் அத்தை ஒருகாலும் மறவாது இருக்கை
ஆக இவை முதலான
யஸங்க்²யேயகல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவ !–எண்ணித் தலைக்கட்ட முடியாத கல்யாண குண ராசிகளாகிற ப்ரவாஹங்களுக்கு கடல் போன்றவனே
இது வரை திருக் கல்யாண குணங்களை பேசி
மேல் திவ்ய பூஷணங்களை விவரித்து அருள்கிறார் –
————–
ஸ்வரூப
ரூப விவரணங்களுக்கு
அநந்தரம்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு அலங்காரமான திவ்ய கல்யாண குணங்களை பேசிய
அநந்தரம்
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய பூஷணங்களைப் பேசுகிறார்
தி₃வ்ய பூ₄ஷணங்கள்:
ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ
* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *
ஸ்வோசித-தனக்குத் தகுந்தவையாய்
விவித⁴விசித்ர-பலவகைப்பட்ட வைச்சித்திரியை யுடையனவையாய்
அநந்த * –அபரிமிதங்களாய்
ஆஶ்சர்ய –விஸ்மய நீயங்களாய்
நித்ய –சாஸ்வதங்களாய்
நிரவத்³ய * –ஒரு வகையான தோஷ சம்பந்தமும் இல்லாதவையாய்
நித்ய நிரவத்ய -ஒரே முழுச் சொல்லாக்கி எப்போதும் நிரவத்யங்களாய் என்றுமாம் –
நிரதிஶய ஸுக³ந்த⁴ -ஒப்புயர்வற்ற பரிமாணத்தை யுடையவையாய்
நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ–ஒருக்காலும் கழற்ற வேண்டாதபடி ஒப்பற்ற ஸுகுமார்யம் யுடையனயவையாய் இருக்கை
- நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * –ஒப்புயர்வற்ற புகரை யுடையவையாய் –
கிரீட மகுட சூடா³வதம்ஸ * –கிரீடம் மகுடம் சூடாவதம்சம் இவை மூன்றும் பர்யாயமாகத் தோன்றினாலும் -அவாந்தர பேதங்களை இட்டுத் தனித்தனியாக வ்யவஹரித்த படி
கொண்டை -தொப்பாரம் -துராய் -என்னுமா போல்
பாரளந்த பேரரசே –எம் விசும்பரசே-எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
ஸுலப்ய பரத்வ பிரணயித்வங்களுக்கு –மூன்று முடிக்கு உரிய இளவரசனுக்கு மூன்று ஸாம்ராஜ்ய பட்டங்கள்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனும் இங்கு மூன்றும் தனித்தனியே வ்யவஹரித்து அருளிச் செய்கிறார்
சூடாவதம்ஸ -முழுச் சொல்லாகவும்
சூட -அவதம்ஸ -என்று கொண்டு க்ரமேண சுட்டியையும் கர்ண ஆபரணத்தையும் சொன்னவாறு என்றுமாம்
மகரகுண்ட³ல –மகர வடிவமான தோடுகள்
க்³ரைவேயக * –திருக்கழுத்துக்கு பூஷணம்
ஹார -திரு மார்பில் அணியும் முத்து வடங்கள்
கேயூர –தோள் வளைகள்
கடக-முன் திருக்கையில் சாத்தும் வளையல்கள் - ஶ்ரீவத்ஸ -இது கீழ்ச் சொன்ன ஆபரணங்கள் போல் அல்லாமல் மயிர்ச்சுழியே யானாலும் பூஷணம் போல் இருக்கும் திரு மறு
- கௌஸ்துப⁴ -திரு மார்பிலே குலாவித் திகழும் குரு மா மணிப்பூண்
- முக்தாதா³ம * -ஏகா வளி த்ரி சரம் பஞ்ச சரம் -என்னப்படுகிற முக்தாஹாரங்கள்
- உத³ரப³ந்த⁴ந * -திரு வயிற்றுப பட்டம்
- பீதாம்ப³ர -புருஷோத்த லக்ஷணமான பீதக வாடை
- உத³ரப³ந்த⁴ந * -திரு வயிற்றுப பட்டம்
- காஞ்சீகு³ண -அந்தப் பீதக வாடையின் மேல் அணியும் அரை நூல் பட்டிகை
- நூபுர-திருவடிச் சிலம்பு
- ஆதி -ஸப்தத்தாலே யஜ்ஜோ பவீதம் கணை யாழி மோதிரம் போல்வன
- யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *–இப்படிப்பட்ட அபரிமித தீய பாஷாணங்களை யுடையவனே
- செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-
————–
தி₃வ்யாயுதங்கள்:
ஸ்வாநுரூப * அசிந்த்ய ஶக்தி ஶங்க² சக்ர க³தா³[ऽஸி] ஶார்ங்கா³த்³யஸங்க்²யேய
* நித்ய நிரவத்³ய * நிரதிஶய கல்யாண * தி³வ்யாயுத⁴!
ஸ்வாநுரூப * –தனக்குத் தகுந்தவையாய்
அசிந்த்ய ஶக்தி –நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாத சக்தியை யுடைய
ஶங்க² சக்ர க³தா³[ऽஸி] ஶார்ங்கா³தி -சங்கு சக்கரம் கதை வில் முதலிய
அஸி -என்பதையும் கூட்டி பாட பேதம் -அது இல்லாத பாடமே நம்பிள்ளை திரு உள்ளம்
யஸங்க்²யேய-எண்ண முடியாதவையாய்
- நித்ய நிரவத்³ய * -நாள் செல்லச்செல்ல மழுங்குகை அன்றிக்கே -என்றும் ஒருபடிப் பட்டவையாய்
நிரதிஶய கல்யாண * -ஒப்பற்ற ஸோபா வஹங்களாயும் இருக்கிற
தி³வ்யாயுத⁴!–திவ்ய ஆயுதங்களை யுடையவனே
————–
தி₃வ்யமஹிஷிகள்:
ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!
ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண
ஸ்ரீ பெரிய பிராய்யியாரைப் பற்றிய முதல் சூர்ணிகையில் அருளிச் செய்த விசேஷணங்களே இங்கும் உள்ளன
இவர் தாம் பிறருக்கு உபதேசிக்கிறார் அன்றியிலே அனுபவிக்கிறாராகையாலே ஆதார அதிசயத்தால் என்பதால் புநர் யுக்தி தோக்ஷம் இல்லை
அதவா
அங்கு சரண்யத்தைக்கு உறுப்பாக அருளிச் செய்தார்
இங்கு வால்லபயத்துக்கு உறுப்பாக அருளிச் செய்கிறார்
ஸ்வ அபிமதங்களாயும்
நித்ய நிரவத்யங்களாயும்
அநு ரூபங்களாயும் இருக்கிற
ஸ்வரூப
ரூப
கு³ண
விப⁴வ
ஐஶ்வர்ய *
ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண -ஸமூஹங்களை யுடைய
ஶ்ரீவல்லப⁴! * பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவனே
ஶ்ரீவல்லப⁴! * -ஸ்ரீ க்கு வல்லபன் என்றும் ஸ்ரீ யை வல்லபையாய் யுடையவன் என்றுமாம்
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்றும்
அவள் சொல்லை மறுக்க மாட்டாதே அவளுக்கு விதேயனாய் இருப்பவன் என்றுமாம்
ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!–கீழ்ச் சொன்ன விசேஷணங்களை எல்லாம் ஏவம் பூத என்று சொல்லி -பெரிய பிராட்டியாருக்குச் சொன்ன பெருமைகள் எல்லாம்
பூமா தேவிக்கும் நீளா தேவிக்கும் சமானம் என்றவாறு
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவின் நிழல் போல்வனர் -திரு விருத்தம்
———–
நித்ய போ₄க்தாக்கள்:
ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண
* ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!
கீழ்ச் சின்ன சேர்த்திகள் எல்லாம் காட்டில் எரிந்த நிலா வாகாமல் நித்ய போக்தாக்கள் இருக்கும்படி சொல்கிறது மேல்
அபரிமித நித்யா முக்த பரிசாரி கள் நித்ய கைங்கர்யம் பண்ணும்படி உள்ளவனே
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்னில்
ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³–தன்னுடைய திரு உள்ளத்தை அநுசரித்த
ஸ்வரூப
ஸ்திதி
ப்ரவ்ருத்திகளை –யுடையவர்களாயும்
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப–ஸகல வித கைங்கர்யங்களையும் செய்ய ஆசைப்பட்டு இருக்கையே வடிவாக யுடையவர்களாயும்
- நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண–எக்காலும் வழுவற்று ஒப்புயர் வற்றவையான
ஞானம்
வியாபாரம்
நியமனம் முதலான
அநந்த கல்யாண குண ஸமூஹங்களை யுடையவர்களுமாய் இருப்பவர்கள்
நித்ய நிரவத்ய -என்பதை * ஶேஷ ஶேஷாஶநாதி களுக்கு விசேஷணமாகக் கொண்டு
நான்கு விசேஷணங்கள் சேஷ சேஷாஸ நாதிகளுக்கு ஆக்கி
ஸ்வாதீன ஸ்வார்த்த கைங்கர்யம் செய்கையாகிற அவத்யம் இல்லாதவர்கள் என்றதாயிற்று
நித்ய நிரவத்யத்தை ஞானாதிகளுக்கும் விசேஷணம் ஆகவுமாம்
அடிமைக்கு உறுப்பான அசங்குசிதமான ஞானம் என்ன –
கிரியா -அந்த ஞானத்துக்குத் தக்க செய்கை என்ன
ஐஸ்வர்யம் -பிறரை நியமிக்கும் அதிகாரம் என்ன
இவை முதலான கல்யாண குணங்களை யுடையவர்கள் என்கை
சேஷா ஸநர் -சேனை முதலியாருக்குத் திருநாமம்
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா –ப்ரியேண ஸேநாபதிநா –ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி
பரிசாரிகா -அநுக்ரஹா -விமலா -காந்தி -வாருணீ -ஸூ கீர்த்தி -ருத்ரா –ஸூத்ரவதி முதலானரை பரிசாரிகர் என்பர்
லீலா லதா க்ருபாணீ -என்றும் முகிளித நளிநா –ரெங்கராஜ ஸ்தவம்
மதி முக மடந்தையர் போல்வார்
————
இருப்பிடம்:
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வ ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த
போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ * அநந்தாஶ்சர்யாநந்த * மஹாவிப⁴வாநந்த பரிமாண
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !
இவற்றை ஒரே வாக்யமாகக் கொள்வதே ஸர்வ ஆச்சார்ய ஸம்மதம்
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வ -என்று தனி வாக்யமாக-ஸம்வாத ரூபமாகக் கொண்டு
மேல்
ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த
போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ * அநந்தாஶ்சர்யாநந்த * மஹாவிப⁴வாநந்த பரிமாண நித்ய நிரவத்³ய நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !
என்று சொல்வாரும் உண்டு என்பாரும் உளர் என்று தேசிகர் பாஷ்யத்தில் உண்டு என்று ஸ்ருத ப்ரகாசாச்சார்யார் வியாக்யானத்தில் உண்டு
அவரே மேல் ஏக வாக்யமாகக் கொள்வதே சிறக்கும் என்கிறார்
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வமாயும்
ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ ராயும்
அநந்தாஶ்சர்யமாயும்
அநந்த * மஹாவிப⁴வமாயும்
அநந்த பரிமாணமாயும்
- நித்யமாயும்
நிரவத்³ய மாயும்
அல்லது
நித்ய நிரவத்³ய மாயும்
நிரதிஶய மாயுமாய் இருக்கிற
ஶ்ரீவைகுண்ட²நாத² !னானவனே – - பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வமாயும்-திவ்ய புருஷைர் மஹாத்மாபிர் அபூரிதே தேஷாம் அபி இயத் பரிமாணம் இயத் ஐஸ்வர்யம் ஈத்ருஸ ஸ்வபாவம் இதி பரிச்சேதும் அயோக்ய -ஸ்ரீ வைகுண்ட கத்ய ஸ்ரீ ஸூக்திகள் கொண்டு முதல் விசேஷணம் இங்கு
- பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாஷாத்காரித்தவர்களாய் -ஸ்வேத தீப வாசிகளான பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்ரீ வைகுண்டம்
- ஸூத்த ஸத்வ மய மாய் இருப்பது ஸ்வரூபம்
- போக்ய தமமாய் இருப்பது ஸ்வ பாவம்
- இவை இரண்டும் பரம யோகிகளுக்கும் சொல்லவும் ஒண்ணாதே நெஞ்சினால் நினைக்கவும் ஒண்ணாதே இருக்கும்
- ஸ்வாபி⁴மத * –தனக்கு அபிமதங்களாயும்
- விவித⁴ -விசித்ராநந்த–பலவகைப் பட்டவையாயும் -அத்புதங்களாயும் -அபரிமிதங்களாயும் இருக்கிற
- போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ -போக்ய வஸ்துக்கள் என்ன
- போக உபகரணங்கள் என்ன
- போக ஸ்தானங்கள் என்ன
- இவை நிரம்பப் பெற்றது ஸ்ரீ வைகுண்டம் –
- அப்ராக்ருதங்களான ஸப்தாதி விஷயங்கள் -போக்ய
- வஸ்துக்கள்
- சூட்டு நன் மாலைகள் போல்வனவும் -பரிஜன பரிச்சதங்களும் போக உபகரணங்கள்
- அப்ராக்ருத ரத்ன மண்டபங்கள் -கிரீடா பர்வதங்கள் போல்வன போக ஸ்தானங்கள்
- இவை அனைத்தும் ஸம்ருத்தமாக பெற்று இருக்கும் என்றதாயிற்று
- *அநந்தாஶ்சர்ய-நித்யமும் அபூர்வ வஸ்து போலே அனுபவிக்கக் கூடியதாய் இருக்கையாலே அளவிறந்த ஆச்சர்யமாய் இருக்கும்
- அநந்த * மஹாவிப⁴வ-ரத்ன பூஷண ஸிம்ஹாஸ நாதிகளும் -உத்யான நதீ தடா காதிகளும் அளவிறந்து இருக்கையாலே அநந்தமான மஹா விபவங்களை யுடையதாய் இருக்கும்
- அநந்த பரிமாண-ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்து இருக்கும்
- நித்ய நிரவத்³ய -அநித்யமாயும் அவத்யங்களுடன் கூடி இருக்கும் ஸ்தானங்களைக் காட்டில் வாசி பெற்று இருக்கும்
நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !-ஆக கீழ்ச் சொன்ன படியால் தனக்கு மேம்பட்ட ஸ்தானம் வேறே ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கும்
இப்படிப்பட்ட ஸ்ரீ வைகுண்ட லோகத்துக்கு நாதனானவனே -என்றபடி
—————-
ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை லீலையாக வுடையவன்:
ஸ்வஸங்கல்பாநுவிதா⁴யி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி * ஸ்வஶேஷதைக ஸ்வபா⁴வ ப்ரக்ருʼதி புருஷ
காலாத்மக விவித⁴ விசித்ராநந்த * போ⁴க்³ய போ⁴க்த்ருʼவர்க³ போ⁴கோ³பகரண * போ⁴க³ஸ்தா²ந ரூப
* நிகி²ல ஜக³து³த³ய விப⁴வ லய லீல !
ஜகத்தாக இருக்கும் மூன்றும்
ப்ரக்ருதி
புருஷ
காலங்களுக்கு
விசேஷணங்களாக
ஸ்வ ஸங்கல்ப அநு விதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள்
தனக்கு சேஷப்பட்டதே இயல்பாக யுடையவை
இவற்றில் புருஷன் -சேதனன் -போக்தா
ப்ரக்ருதியைச் சொன்னது -ப்ராக்ருத வஸ்துக்களும் உப லக்ஷணம் -இவை
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய் இருக்கும்
இந்த ஜகத்து கால கல்யம் என்று காட்டகாலத்தையம் சேர்த்த அருளிச் செய்கிறார்
இவை விவிதமாயும் -பலவகைப்படும்
விசித்ரமாகவும்
அநந்த -அபரிமிதமாகவும் -இருக்குமே
சகல லோகங்களுடைய
ஸ்ருஷ்டி
ஸ்திதி
சம்ஹாரங்களை –விளையாட்டாக யுடையவன்
————
ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! பரப்³ரஹ்மபூ⁴த! புருஷோத்தம! மஹாவிபூ⁴தே! ஶ்ரீமந்! நாராயண! வைகுண்ட²நாத²!
ஸத்யகாம! –நினைக்குமது எல்லாம் நிறைவேற்று இருக்கப் பெற்று இருப்பவனே
ஸத்யஸங்கல்ப! -ஸங்கல்பத்த படி எல்லாம் செய்து தலைக் கட்ட வல்லவனே
பரப்³ரஹ்மபூ⁴த!
புருஷோத்தம!
மஹாவிபூ⁴தே! -அளவு கடந்த நியாம்ய வஸ்துக்களை யுடையவனே
ஶ்ரீமந்!
நாராயண!
வைகுண்ட²நாத²!
இந்த எட்டு விசேஷணங்களும் கீழேயும் இருந்தாலும் இவருடைய அலமாப்பு அதிசயத்தால் புநர் யுக்தி தோஷம் அல்ல –
————
அபாரகாருண்ய ஸௌஶீல்ய வாத்ஸல்ய ஔதா³ர்ய * ஐஶ்வர்ய ஸௌந்த³ர்ய மஹோத³தே⁴!
அபாரகாருண்ய
ஸௌஶீல்ய
வாத்ஸல்ய
ஔதா³ர்ய *
ஐஶ்வர்ய
ஸௌந்த³ர்ய
மஹோத³தே⁴!
இந்த கல்யாண திருக் குணங்களுக்குப் பெரும் கடலாக இருப்பவனே
இங்கு ஐஸ்வர்யத்தைச் சேர்த்து அருளிச் செய்தது-இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -என்று ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டியே
———-
* அநாலோசிதவிஶேஷ அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்திஹர! * ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே⁴!
அநவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத * யாதா²த்ம்ய! அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமந நிரத! * அஶேஷசித³சித்³வஸ்து ஶேஷிபூ⁴த!
* நிகி²ல ஜக³தா³தா⁴ர! * அகி²லஜக³த்ஸ்வாமிந்! * அஸ்மத்ஸ்வாமிந்! * ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! * ஸகலேதரவிலக்ஷண!
* அர்தி²கல்பக! * ஆபத்ஸக²! * ஶ்ரீமந்! * நாராயண! * அஶரண்யஶரண்ய! * அநந்யஶரண:
* த்வத்பாதா³ரவிந்த³யுக³ளம் * ஶரணமஹம் ப்ரபத்³யே ॥
அநாலோசிதவிஶேஷ அஶேஷலோகஶரண்ய! * -ஜன்ம விருத்த ஞானங்களில் வாசி பாராதே -எப்படிப்பட்டவர்களும் வந்து அடி பணியும்படி அவர்களுக்கு எல்லாம் தஞ்சமாய் இருக்குமவனே
ப்ரணதார்திஹர! * –அடி பணிந்தவர்களின் ஆர்த்தகளைத் தீர்க்குமவனே
ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே⁴!-ஆஸ்ரிதர்களின் குற்றங்களை எல்லாம் நற்றமாகக் கொள்ளுகிற குணத்துக்குக் கடலாய் இருப்பவனே
அநவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத * யாதா²த்ம்ய! சகல பதார்த்தங்களின் உண்மை நிலையை எப்போதும் அறிபவனே -இத்தால் ஸர்வஞ்ஞத்வம் சொல்லுகிறது -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் போன்ற அடியேனுடைய நிலைமைகளை விண்ணப்பம் செய்ய வேண்டாத படி நீயே ஸ்வயமாகவே அறிந்து கொள்ள வல்லவனே -என்றபடி
அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமந நிரத! * –ஜங்கம
ஸ்தாவரங்களான ஸகல பதார்த்தங்களையும் நியமிக்க வல்லவனே -இப்படி உனது திருவடித் தாமரைகளில் அடியேனை வந்து நிற்கப் பண்ணி அருளியதும் நீயே அன்றோ என்றபடி
அஶேஷசித³சித்³வஸ்து ஶேஷிபூ⁴த!–ஸகல சேதன அசேதனங்களுக்கும் சேஷி யானவனே –
அடியேன் பக்கல் கைங்கர்யம் கொண்டு அருளுவதும் உனது கடமை -பொறுப்பு -பரம் -அன்றோ
- நிகி²ல ஜக³தா³தா⁴ர! * –ஸகல ஜகத்துக்கும் ஆதரமாய் இருப்பவனே
அகி²லஜக³த்ஸ்வாமிந்! *
அஸ்மத்ஸ்வாமிந்! *
ஸத்யகாம!
ஸத்யஸங்கல்ப! *
ஸகலேதரவிலக்ஷண! - அர்தி²கல்பக! * -இதற்கு மூன்றுபடியாகச் சொல்லுவர்
யாசகர்களுக்குக் கல்ப வ்ருக்ஷம் போன்றவனே என்றும்
‘யாசகர்களை கல்ப வ்ருக்ஷமாகக் கொள்பவன் என்றும்
யாசகனாயும் கல்ப வ்ருஷமாயும் இருப்பவனே என்றும்
மேலும்
அர்த்திகளை யுண்டாக்குபவன் என்றும் நாலாவது பொருளும் சொல்வர்
ஆபத்ஸக²! *
ஶ்ரீமந்! *
நாராயண! *
அஶரண்ய ஶரண்ய! *
அநந்ய ஶரண: - த்வத் பாதா³ரவிந்த³யுக³ளம் * ஶரணமஹம் ப்ரபத்³யே ॥–புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் என்கிறார்
————
அத்ர த்³வய(மநுஸந்தே³ய)ம் ।
ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மதே நாராயணாய நம -அனுசந்தேயம்
எம்பெருமானார் துவரம் அனுசந்தித்து அருளியதை அஸ்மதாதிகளுக்கும் சிக்ஷிக்கிற படி
இங்கு உபாம்சுவாக அனுசந்தேயம்
—————
“பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥
“ஸர்வத⁴ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய * ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் ।
லோகவிக்ராந்த சரணௌ * ஶரணம் தேঽவ்ரஜம் விபோ⁴!” ॥
இவை இரண்டும் புராண ஸ்லோகங்கள்
முன்னோர் மொழிந்த பொருளே அன்றி மொழியும் பொன் போல் போற்றத்தக்கது வாதலாலும்
இவை எம்பெருமான் திரு உள்ளத்தில் அக்ரஹ அதிசயத்தை விளைவிக்குமதலாலும்
இங்கே விண்ணப்பம் செய்து அருளுகிறார்
இவற்றால் மீண்டும் சரணாகதி செய்கிறார் என்று கொள்ளத்தக்கது அல்ல
ஸக்ருத் ஏவ ஹி ஸாஸ்த்ரார்த்த -யாகையால் புநர் யுக்திக்கு ப்ரஸக்தி இல்லை-
விபோ -எம்பெருமானே
பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।-பிதாவையும் மாதாவையும் மனைவியையும் மக்களையும் சுற்றத்தாரையும் தோழன்மாரையும் ஆச்சார்யர்களையும்
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥–ரத்னங்களையும் தந தானியங்கள் முதலானவையையும் கிராம பூமியையும் வீடுகளையும்
ஸர்வத⁴ர்மாம்ஶ்ச –ஸர்வ தர்மங்களையும்
ஸாக்ஷராந் ।ஸர்வ காமம் ச –கைவல்யம் உள்ளிட்ட ஸகல காம்ய புருஷார்த்தங்களையும்
ஸ்வர்க்க லோக அதிபத்யம் -ப்ரஹ்மலோக அதிபதியம் போன்றவற்றிலும் ஆசை அற்ற படி
ஸந்த்யஜ்ய * -வாஸனையோடே முழுவதுமாக விட்டு ஒழித்து
தே லோக விக்ராந்த சரணௌ * ஶரணம் அவ்ரஜம் –உனது உலகு அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றபடி –
இங்கு தாய் தந்தையரையும் ஆச்சார்யரையும் விட்டு ஒழிந்ததாகச் சொல்வது ஸாஸ்த்ர விரோதமாகாதோ என்னில்
இவர்களை விட்டு ஒழிவது விரோதப்பட்டுத் தள்ளுகை அன்று
காம்ய தர்ம உபயோகியாகவோ
அர்த்த காம உபயோகியாகவோ
இவர்களைக் கொள்ளாததுவே த்யாஜ்யம் எனப்படுகிறது இங்கு
வீடு தானம் தான்யம் போன்றவை சன்யாசிகளுக்கும் தேஹ யாத்திரைக்கு வேண்டுமே என்னில்
இங்கு சொல்வது ஸர்வாத்மநா தியாகம் அன்று
கொண்ட பெண்டிர் தாம் முதலாகக் கூறுமுற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டுத் -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான்
ஆர்க்கும் ஹிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு -திருவாய் மொழி நூற்றந்தாதி -81-
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே
என்று அருளிச் செய்வதால்
த்யாஜ்யமாகைக்கு நிபந்தநம் வேறு
உபா தேயமாகைக்கு நிபந்தநம் வேறு என்றதாயிற்று
ஆச்சார்ய சம்பந்தமே முக்திக்கு முதல் தனி வித்தாய் இருக்க -அந்த சம்பந்தத்தையும் குலைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் என்பதற்கு ப்ரஸக்தியே இல்லை
மாதாபிதாக்களையும் ஆச்சார்யரையும் பகவத் விபூதி பரமாகவே கருதுகிறேன் என்பதே பரம தாத்பர்யம் –
இவர்கள் தாமே பகவத் பாகவத விரோதிகளாகில் இவர்களைத் த்யஜித்து பிராப்தமே –
————–
“த்வமேவ மாதா ச பிதா த்வமேவ * த்வமேவ ப³ந்து⁴ஶ்ச கு³ருஸ்த்வமேவ ।
த்வமேவ வித்³யா த்³ரவிணம் த்வமேவ * த்வமேவ ஸர்வம் மம தே³வதே³வ” ॥–7-
ஹே தே³வதே³வ” ॥
த்வமேவ மாதா
ச பிதா த்வமேவ *
த்வமேவ ப³ந்து⁴ஶ்ச
கு³ருஸ்த்வமேவ ।
த்வமேவ வித்³யா
த்³ரவிணம் த்வமேவ *
த்வமேவ ஸர்வம் மம —
பல சொல்லி என் –எனக்கு எல்லாமும் நீயே
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் யாவரும் நீ பேசில்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே
பிரிய வர்த்தனாகையாலே தாயாகவும்
ஹித வர்த்தனாகையாலே தந்தையாகவும்
மற்றும் ஸகல வித உபகாரங்களையும் செய்பவனாகையாலே மற்றை எல்லாருமாகவும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும் மற்றை நிலைகளை எல்லாம் நீர்மையினாலே அருள் செய்தவனாகையாலே ஆச்சார்யரானாகவும்
இப்படிச் சொல்லக் குறையில்லை
பேயிருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதூடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தம் வயிற்று இருத்தி உய்யக் கொண்டான் அன்றோ
த்வமேவ வித்யா -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் என்று இருக்கும் அகிஞ்சனர்கள் உபாஸந ரூப வித்யா ஸ்தானத்தில் எம்பெருமானையே நிறுத்துவார்கள் அன்றோ
த்ரவிணம் த்வமே –உபாய உபேயங்கள் இரண்டுமே நீயே என்று காட்டின படி -உலகில் த்ரவ்யங்களைக் காரியாந்தரங்களுக்கு சாதனமாகவும் ஸ்வயம் போக்யமாகவும் கொள்வது ப்ரத்யக்ஷமே –
அது எம்பெருமானுக்கு ஒக்குமே
————
“பிதாঽஸி லோகஸ்ய சராசரஸ்ய * த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர்க³ரீயாந் ।
ந த்வத்ஸமோঽஸ்த்யப்⁴யதி⁴க: குதோঽந்யோ * லோகத்ரயேঽப்ய ப்ரதிமப்ரபா⁴வ!” ॥’–8-
கீழ் தாம் ஒருவருக்கே மாதா பிதாவாக அருளிச் செய்தார்
அந்த உறவு ஸர்வ லோக அசாதாரணமாகையாலே -முத் தெரிவிக்கும் ஸ்ரீ கீதா -11-43 ஸ்லோகமும்
அடுத்த ஸ்லோகமும் இங்கு அனுசந்திக்கிறார்
ய ப்ரதிமப்ரபா⁴வ!” ॥’–ஒப்பில்லா பெருமை பெற்ற மாயோனே
“பிதாঽஸி லோகஸ்ய சராசரஸ்ய * த்வம் –ஸ்தாவர ஜங்கமாத்மகமான இவ் உலகுக்கு எல்லாம் தந்தையாய் இரா நின்றாய்
அஸ்ய லோகஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர் க³ரீயாந் ।
ச அஸி — இவ் வுலகுக்கு பூஜிக்கத் தகுந்த ஆச்சார்யனாகவும் இரா நின்றாய்
ஆகையால் இவ் வுலகுக்கு எல்லாம் பூஜ்ய தமனாய் இரா நின்றாய்
லோகத்ரயேঽப் ந த்வத் ஸம அந்ய நாஸ்தி –காருண்யாதி கல்யாண குணங்களினால் உன்னை ஒத்தவன் மூவுலகிலும் இல்லை
யப்⁴யதி⁴க: குத அபி -சமானன் இல்லை என்னும் போது மேற்பட்டவன் இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
தன் ஒப்பார் இல்லா -ஒப்பில்லா அப்பன் அன்றோ
த்வத் ஸம நாஸ்தி என்னாமல்
த்வத் ஸந அந்ய நாஸ்தி என்கையாலே
உனக்கு ஒப்பவன் நீயே என்றதாகும்
தன் ஓப்பான் தானாய் உளன் காண் -திருமழிசைப்பிரான்
ககநம் ககநாகாரம் ஸாகரஸ் சாகர உபம ராம ராவண் யோர் யுத்தம் ராம ராவணயோர் இவ –இத்யாதிகளும் உண்டே –
—————-
“தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் * ப்ரஸாத³யே த்வாமஹமீஶமீட்³யம் ।
பிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு: * ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே³வ! ஸோடு⁴ம்” ॥–9-
தஸ்மாத் -கீழ் ஸ்லோகத்தில் சொல்லியபடி ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கையாலே
அஹம் -குற்றங்களையே ஸ்வரூபமாக வடிவாக உள்ள அடியேன்
த்வாம் ஈஶம் ஈட்³யம் ।–ஸர்வ நியந்தவாயும் -ஸ்தோத்ர அர்ஹனாயும் இருக்கிற உன்னை
ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் * -வேர் அற்ற மரம் போலே உடலைக் கீழே இட்டுத் தொழுது
ப்ரஸாத³யே –க்ஷமை வேண்டுகின்றேன்
தே³வ!-பெருமானே
பிதேவ புத்ரஸ்ய (தோஷம் )–மகனுடைய குற்றங்களை பிதா பொறுப்பது போலவும்
ஸகே²வ ஸக்²யு: * (தோஷம் )-மித்ரனுடைய பாராதத்தை மித்ரன் பொறுப்பது போலவும்
ப்ரியாயா மஹ்யம் -நண்பனான அடியேன் பொருட்டு
ப்ரிய: (தவம் )அர்ஹஸி ஸோடு⁴ம்”–அன்பனான அடியேனுடைய அபராதங்களைப் பொறுக்க வல்லை
ப்ரிய ப்ரியாய அர்ஹஸி -என்று கொண்டு -காதலியினுடைய குற்றங்களைக் காதலன் பொறுப்பது போலவும் என்றும் கொள்ளலாம்
————-
அபசாரஙளைப் பொறுக்குமாறு வேண்டுவது:
மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥-10-
மநோவாக்காயைঃ * -மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும்
அநாதி³கால ப்ரவ்ருʼத்த -அடி தெரியாத நெடுநாள் முன்னாக விளைந்த
அநந்த-அளவிறந்த
அக்ருʼத்ய கரண–செய்யத் தகாதவற்றைச் செய்தும்
க்ருʼத்ய அகரண–செய்யத்தக்கவற்றைச் செய்யாது ஒழிந்தும்
ப⁴க³வத³பசார -எம்பெருமான் இடத்தில் அபசாரப்பட்டும்
பா⁴க³வதாபசார-பகவத் அடியார்கள் டத்தில் அபசாரப்பட்டும்
அஸஹ்யாபசார -பொறுக்க முடியாத படி அபசாரப் படுகையும்
ரூப * -இங்கனே யுள்ள
நாநாவித⁴ * அநந்த அபசாராந் * –பலவகைப்பட்ட -அபரிமிதங்களான குற்றங்களை
இதற்கு -அசேஷத க்ஷமஸ்வ -என்பதில் அந்வயம்-அஶேஷத: க்ஷமஸ்வ
அசேஷத –அணுவளவும் மிச்சம் இல்லாதபடி
க்ஷமஸ்வ–பொறுத்து அருள வேண்டும்
இவ் வபசாரங்கள் எப்படிப்பட்டவை என்னில்
ஆரப்³த⁴கார்யாந், * -இன்னமும் பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தவையாய் இருக்கும் அபசாரங்கள்
அநாரப்³த⁴கார்யாந்,-இன்னம் பலன் கொடுக்க ஆரம்பிக்காதவையாய் இருக்கும் அபசாரங்கள்
- க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச –இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் -த்ரிகால வ்யாபிகளாய் இருக்கும் அபசாரங்கள்
இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
ஸர்வாந் * -மநோ வாக் காய அபசாரங்கள் பிரஸித்தமாய் இருக்க
இவற்றை இங்கு அருளிச் செய்தது
எம்பெருமானைச் சிந்திக்கவே அமைந்த மனஸ்ஸையும்
அவனை ஸ்துதிப்பதற்காகவே அமைந்த வாக்கையும்
அவனுக்குப் பலவித பணிவிடைகள் செய்வதற்காகவே அமைந்த தலையம் கொண்டு
அந்தோ வ்யபசரிக்கலாயிற்றே என்று நிர்வேதம் தோன்ற அருளிச் செய்கிறார்
இக்குற்றங்களும் அநாதிகாலம் செயகாவை அன்றோ
ஸம்ஸாரம் ஆனாது தானே
பஹுநி மீ வ்யதீதாநி ஜன்மாநி தவ ச அர்ஜுனா
அநாதி யாவதாலேயே அனந்தங்களாய் இருக்குமே
மேலே அவற்றை வகையிட்டுப் பிரித்து அருளிச் செய்கிறார்
அக்ருத்ய கரண -ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாந் போன்ற விதிகளை அதிக்ரமித்து பண்ணுகிற பிராணி பீடை
-அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை
பிறர் பொருள் தாரம் இவற்றை அபஹரிக்கை
அஸத்யம் சொல்லுகை
அபஷ்யம் -பஷிக்கத் தகாதவற்றை யதேச்சமாக பஷிக்கை
ஆக இவ்வாறு பலவகைப்பட்டு இருக்கும் அக்ருத்ய கரணங்கள்
க்ருத்ய அகரணமாவது-
ஸாஸ்த்ர விஹிதங்களாகிற வர்ணாஸ்ரம தர்மங்களை சோர்வு சோம்பல்களாலும் நாஸ்திக்யத்தாலும் அனுஷ்டியாது ஒழிகை
பகவத் அபசாரமாவது
தேவதாந்தரங்களோடு ஓக்க எம்பெருமானை நினைக்கையும்
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மானுஷ்ய ஸஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுகையும் -முதலானவை
பாகவத அபசாரமாவது
அஹங்காரத்தாலும்
அர்த்த காமங்கள் அடியாகவும்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம்
அஸஹ்ய அபசாரமாவது
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தநம் இல்லாமல்
ஹிரண்ய கசிபுவைப் போலே
பகவத் விஷயம் பாகவத விஷயம் என்றால்
காணவும் கேட்கவும் பொறாதபடியாய் இருக்கை
ஆச்சார்ய அபராதமும் அஸஹ்ய அபசாரமாய் இருக்கும் -அதாவது
ஆச்சார்யர் அருளிச் செய்த அர்த்தத்தின் படியே அனுஷ்டியாமையும்
அவன் உபதேசித்த அர்த்தங்களையும் மந்திரங்களையும் அல்ப பிரயோஜனங்களுக்காக அநதிகாரிகளுக்கு உபதேசிக்கை முதலானவை
ஆச்சார்ய பக்தரான ஸஹ ப்ரஹ்மசாரிகளுடன் ஐக ரஸமுண்டாய் வர்த்திக்கையாய் இருக்க
அது செய்யாதே அவர்கள் திறத்தில் பண்ணும்
அஸூயையும் அவஜ்ஜையும் முதலானவையும் அஸஹ்ய அபசாரம் எனப்படும்
பாகவதர்களிடத்தில் அபசாரம் பட்டால் அது பகவத் அபசாரமாய் முடியும்
பகவான் இடத்தில் அபசாரம் பட்டால் அது பாகவத அபசாரமாய் முடியும்
எம்பெருமான் இடம் ஸம்வாதமாய் இருக்கும் இக்கிரந்தத்தில்
த்வத் அபசாரம் என்னாதே
பகவத் அபசாரம் என்பது பொருந்துமோ என்னில்
பகவத் அபசாரம் என்றே ப்ரஸித்தி பிராஸுர்யமாக இருப்பதால் குறையில்லை
இங்கு அநந்த பதம் இரண்டு பிரயோகங்கள்
முதல் பிரயோகம் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண சாமான்ய அபசாரங்களிலும்
இரண்டாவது பிரயோகம் பகவத் அபசாராதிகளிலே அந்வயிக்கும்
ஆரப்த கார்யான் -அநா ரப்த கார்யான்
கர்மங்களின் பலன் பரிபாக கிரமத்தால் தான் பலன் கொடுக்கும்
பலன் கொடுக்காத தொடங்கியவை ப்ராரப்த கர்மங்கள் என்றும் -இவையே ஆரப்த கார்யான் என்றும்
பலன் கொடுக்கத் தொடங்காதவை -ஸஞ்சித கர்மங்கள் என்றும் இவையே அநா ரப்த கார்யான் என்றும் சொல்லப்படுகின்றன –
————–
அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச
* விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥-11–
இனி மோக்ஷ விரோதியான புண்ய பாப ரூபமான விலக்கடியை க்ஷமித்து அருள் வேண்டுகிறார்
அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * –அடி தெரியாத காலம் முதல் கொண்டு விளைந்ததாய்
விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச* –ஆத்மாவைப் பற்றினதாயும் ஸமஸ்த ஜகத்தைப் பற்றினதாயும் இருக்கிற விபரீத ஞானத்தை ஷமித்து அருள வேண்டும்
அஶேஷ விஷயம் -எல்லாவற்றையும் பற்றினதாய்
அத்³யாபி வர்த்தமாநம்-இன்னமும் தொடர்ந்து வாரா நின்றதாய்
வர்திஷ்யமாணம் ச-இன்னமும் வாஸநா பலத்தாலே வரப்போகின்றதாயும் இருக்கிற
விபரீத -வ்ருʼத்தம் ச * * * ஸர்வம் க்ஷமஸ்வ –எல்லாவிதமான நிஷித்த அனுஷ்டானங்களை பொறுத்து அருள வேண்டும்
ஆத்ம விக்ஷயமான விபரீத ஞானமாவது
தேஹாத்ம அபிமானம்
ஸ்வ ஸ்வா தந்தர்ய பிரமம்
அந்ய சேஷத்வ பிரமம் முதலானவை
க்ருத்ஸன ஜகத் விஷயமான விபரீத ஞானமாவது
ஸர்வ பூதாத்மகே தாத-ஜகந்நாத ஜகன்மயே பரமாத்மந கோவிந்தே மித் அமித்ர கதா குத-என்கிற ப்ரஹ்லாதன் படியே
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கமங்களை அவை யவைகளாக மாத்ரமே காண்கை
ஆத்ம விஷயம் க்ருத்ஸன விஷயம் விசேஷணங்கள் விபரீத விருத்தத்திலும் அந்வயிக்கும்
ஆத்மவிஷயமான விபரீத விருத்தமாவது -ஸ்வ ரஷணே ஸ்வ அந்வயம் முதலானவை
ஜகத் விஷயமான விபரீத விருத்தமாவது–தனக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்தால் அதை ஸ்வ கர்ம பலம் என்றோ கிருபா பலம் என்றோ நினையாதே
நிமித்த மாத்ரமேயான சேதனனை ஸ்வ தந்த்ரனாக எண்ணி அவன் நமக்குத் தீங்கு விளைத்தான் என்று கொண்டு அவன் விஷயத்தில் ஒன்றுக்குப் பத்தாக தீங்குகள் செய்கை
விசேஷ விஷயம் -ஐஸ்வர்யம் முதலான அல்ப விஷயங்களை விரும்புகை முதலான காம்யங்களை விலஷிக்கிறது
முன்பு செய்தவை இப்பொழுது செய்கின்றவை மேலும் செய்யப்போகின்றவற்றை அர்விழியான அடியேன் அறிந்திலேன் யாகிலும்
ஸர்வஞ்ஞரான தேவரீரே அறிந்து பொறுத்து அருள வேண்ம் என்கிறாராயிற்று –
———————–
மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * விபரீத ஜ்ஞாந ஜநநீம்
* ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந
* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * தை³வீம் கு³ணமயீம் மாயாம் *
தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய ।–12-
இங்கு தாஸ பூதம் என்று த்வதீய அந்தமாகச் சொல்வதே சரியான பாடம் –
தாஸபூதப்ரதம அந்தமாக சொல்வது மருள்
தாஸ பூதனும்
ஸரணாகத அஸ்மி -தவாஸ்மி தாஸ -என்று சொல்லும் அடியேனை என்று பொருள்
கீழ்ச் சொன்ன அஞ்ஞானத்துக்கு அடியான தேஹ ஸம்பந்தத்தைத் அறுத்து அருள பிரார்த்தனை இதில்-
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷
மம -என்னுடையதான
ஏஷா -இந்த
குண மயீ -முக்குண மயமான
மாயா -ப்ரகிருதி
தைவீ -தேவனான என்னாலேயே படைக்கப் பட்டதாகையாலே
துரத்யயா.–எவராலும் தம் முயற்சியால் மாத்ரம் கடக்க அரிதாய் உள்ளது
யே -எவர்கள்
மாம் ஏவ -என்னையே
ப்ரபத்யந்தே -சரணம் அடைகிறார்களோ
தே-அவர்கள்
மாயாம் ஏதாம் -இந்த மாயையை
தரந்தி -தாண்டுகிறார்கள் –
என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்-
இந்த கீதா ஸ்லோகத்தின் படியே மாம் தாரய -என்கிறார் இங்கு -மாயை -ப்ரக்ருதி -அத்தை அடியேன் கடந்தேனாம் படி செய்து அருள வேணும்
மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * –நெடுநாளாக நான் பண்ணிப்போந்த கர்ம பரம்பரையால் உண்டானதான
ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * -எம்பெருமானான உன்னுடைய உண்மையைத் தெரிந்து கொள்ள மாட்டாமல் மறைப்பதுமாகிய
விபரீத ஜ்ஞாந ஜநநீம்–தேஹாத்ம அபிமான ப்ரம்மம் முதலிய விபரீத ஞானத்தை விளைப்பதாய்
- ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * –ஸ்வ கார்ய பூதமான ஸப்தாதிகளிலே போக்யதா புத்தியைப் பிறப்பிப்பதாய்
தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * –போக ஆயாதன ரூபமான தேஹ ரூபத்தாலும்
போக்ய உபகரணமான இந்த்ரிய ரூபத்தாலும்
போக்யமான ஸப்தாதி ரூபத்தாலும்
இத்தனைக்கும் முதல் கிழங்கான ஸூஷ்ம ப்ரக்ருதி ரூபத்தாலும்
இவ்வாறு நான்கு வகைப்பட்ட பரிணாமத்தை யுடைத்தாய் இரா நின்ற
தை³வீம் -இன்புறும் இவ் விளையாட்டுடையான் யாகையாலே தேவன் என்ற பேர் பெற்ற உன்னாலே கிரீடா பரிகரமாகச் சொல்லப்பட்டதாய்
கு³ணமயீம் –ஸத்வ தமோ ரஜஸ் குண மூர்த்தியாய்
மாயாம் *–விசித்திர கார்யகரமாகையாலே மாயை என்று பேர் பெற்றதான ப்ரக்ருதியை
இதற்கு மாம் தாரய -என்றத்தோடே அந்வயம்
மாம் என்கிற விசேஷ வியக்திக்கு இரண்டு விசேஷணங்கள்
தா³ஸபூ⁴தம் “-என்றும்
ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * -என்றும்
தா³ஸபூ⁴தம்-அடியேனாகவும்
ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * –த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே சரணாகதன் ஆனேன்
உத்தர கண்டத்தின் படியே கைங்கர்ய நிரதனானேன் -என்று வாய் விட்டுச் சொல்பவனுமாய் இருக்கிற
தவாஸ்மி தாஸ -என்கிற இடத்தில் -அஸ்மி -என்றது பிரார்த்தந அபிப்ராயத்தாலே பிரயோகிக்கப்பட்டது
தாஸ விருத்தி பரனாய் இருக்கக் கடவேன் என்றபடி
இவ்வாறு கொள்ளாத போது கீழ் தாஸ பூதம் என்பதையே சொல்லி புநர் யுக்தி தோஷம் வரும் (என்று தேசிகர் திரு உள்ளம் பற்றுகிறார் -)
மாம் -அடியேனை
தாரய -ப்ரக்ருதியைக் கடந்தவனாகச் செய்து அருள வேண்டும்
————
“தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: * ஏகப⁴க்திர்விஶிஷ்யதே ।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோঽத்யர்த²ம் * அஹம் ஸ ச மம ப்ரிய:” ॥
“உதா³ராஸ்ஸர்வ ஏவைதே * ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।
ஆஸ்தி²தஸ ஹி யுக்தாத்மா * மாமேவாநுத்தமாம் க³திம்” ॥
“ப³ஹூநாம் ஜந்மநாமந்தே * ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்³யதே ।
வாஸுதே³வஸ்ஸர்வமிதி * ஸ மஹாத்மா ஸுது³ர்லப:⁴” ॥
இதி ஶ்லோக த்ரயோதி³த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ ॥–13
கீழே நமஸ் சபிதார்த்தமான விரோதி நிவர்த்தகத்தி அருளிச் செய்து -இதில் இனி சதுர்த்தியின் அர்த்தமான இஷ்ட பிராப்தியை அருளிச் செய்கிறார்
பரம புருஷார்த்தமான கைங்கர்யம் சித்திக்க வேணுமே
அதற்கு இன்றியமையாததாய்
கைங்கர்யம் போலவே பிரிய விஷயமுமாய்
திருநாட்டில் அனுவர்த்திக்கும் பர பக்தி பர ஞானம் பரம பக்திகளை அபேக்ஷிக்கத் திரு உள்ளம் கொண்டு அவை ஸித்திக்க
பக்தி ரூபா பன்ன ஞானம் வேண்டுமே -அத்தை உண்டாக்கி அருள் வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
ஸ்ரீ கீதா 7 அத்தியாயத்தில் 17-18-19- ஸ்லோகங்களை அடைவே அனுசந்தித்து பிரார்திக்கிறார் –
“தேஷாம் ஜ்ஞாநீ -கீழே சதுர்விதா பஜந்தே மாம் -என்று அருளிச் செய்து
அவர்களுக்குள் ஞானியானவன் சிறந்தவன் என்கிறது
நித்யயுக்த: * ஏகப⁴க்திர்விஶிஷ்யதே ।–நித்ய யுக்தனாய் -ஏக பக்தியாய் இருக்கையாலே ஞானியானவன் சிறந்தவன் என்கிறது –
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோঽத்யர்த²ம் * –ஞானிக்கு என்னிடத்தில் உள்ள ப்ரீதி வாஸோ மகோசரம்
அஹம் ஸ ச மம ப்ரிய:” ॥-அப்படியே ஞானிகளின் பக்கல் என்னுடைய ப்ரீத்தியும் வாஸோ மகோசரம்
“உதா³ராஸ்ஸர்வ ஏவைதே * –கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்த சதுர் வித அதிகாரிகளையும் உதாரர்கள் என்கிறான் கீதாச்சார்யன்
என்னிடத்தில் உபாஸித்து சிறிது அளவு பிரார்த்தித்துப் பெற்றாலும் அவர்கள் எனக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணினவர்களாகவே என்னுடைய திரு உள்ளம் என்கிறான்
ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।-ஆனாலும் அவர்களுக்குள் ஞானிகளை எனக்கு உயிராகவே கருதுகிறேன்
ஏன் எனில்
ஆஸ்தி²தஸ ஹி யுக்தாத்மா * மாமேவாநுத்தமாம் க³திம்” ॥–என்னுடன் சேர்ந்தே வாழ நினைத்து இருக்கிற அந்த அதிகாரி என்னையே பரம ப்ராப்யமாகக் கொண்டு இருப்பதால் என்றபடி
மேல் ஸ்லோகத்தாலும் ஞானியின் சிறப்பை அருளிச் செய்கிறான்
“ப³ஹூநாம் ஜந்மநாமந்தே * –பல பிறப்புக்கள் கடந்த பின்பு
ஜ்ஞாநவாந் ஸந் –எனக்கு சேஷப்பட்டு இருப்பதே ஆத்ம ஸ்வரூபம் என்று உணர்ந்தவர்களாய்
மாம் ப்ரபத்³யதே ।-ஞானிகள் என்னை சரண் அடைகிறார்கள்
எவ்வாறு என்றால்
வாஸுதே³வஸ்ஸர்வமிதி * -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிற பிரதிபத்தியுடன் சரண் அடைகிறான்
ஸ மஹாத்மா ஸுது³ர்லப:⁴” ॥-அப்படிப்பட்ட மஹாத்மா எனக்கு கிடைப்பது அரிது
இதி ஶ்லோக த்ரயோதி³த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ ॥–இம்மூன்று ஸ்லோகங்களாலும் புகழ்ந்து கூறப்பட்ட ஞானியாக அடியேனைச் செய்து அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்
——————
“புருஷஸ்ஸ பர: பார்த²! * ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா” *
“ப⁴க்த்யா த்வநந்யயா ஶக்ய:” * “மத்³ப⁴க்திம் லப⁴தே பராம்”
இதி ஸ்தா²நத்ரயோதி³த பரப⁴க்தியுக்தம் மாம் குருஷ்வ ॥-14-
புருஷஸ்ஸ பர: பார்த²! * –ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா” *–8-22–
“ப⁴க்த்யா த்வநந்யயா ஶக்ய:” *11-54-
“மத்³ப⁴க்திம் லப⁴தே பராம்”–18-54
இதி ஸ்தா²நத்ரயோதி³த பரப⁴க்தியுக்தம் மாம் குருஷ்வ ॥-இம்மூன்று இடங்களிலும் சொல்லப்பட்ட பரபக்தி அடியேனுக்கு விளைந்ததாகச் செய்து அருள வேணும் என்று பிரார்திக்கிறார் –
————-
பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்த்யேக ஸ்வபா⁴வம் * மாம் குருஷ்வ ॥-15-
பரபக்தி விளைந்த அளவிலே பர்யாப்தி பிறவாது இறே
பரபக்தி பர ஞானம் பரம பக்தி –இவையே வடிவெடுத்தவனாக அடியேனைச் செய்து அருள வேணும் என்கிறார் –
——————
பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத * பரிபூர்ணாநவரத * நித்யவிஶத³தம அநந்ய ப்ரயோஜந
அநவதி⁴காதிஶயப்ரிய ப⁴க³வத³நுப⁴வோঽஹம் * ததா²வித⁴ ப⁴க³வத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைக ரதிரூப நித்யகிங்கரோ ப⁴வாநி ॥-16-
இதில் நித்ய அனுபவத்தையும்
நித்ய கைங்கர்யத்தையும்
பெற்று வாழ பிரார்திக்கிறார்
கீழே 2 சூர்ணிகையில் உள்ள வாக்ய சந்நிவேசம் சற்றே மாறி இங்கு உள்ளன
———–
எம்பெருமானுடைய ப்ரதிவசநம்:
ஏவம்பூ⁴த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுʼப்த* ஸமஸ்த வஸ்து விஹீநோঽபி
* அநந்த தத்³விரோதி⁴ பாபாக்ராந்தோঽபி * அநந்த மத³பசாரயுக்தோঽபி * அநந்த மதீ³யாபசாரயுக்தோঽபி
* அநந்த அஸஹ்யாபசாரயுக்தோঽபி * ஏதத்கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீதாஹங்கார விமூடா⁴த்ம ஸ்வபா⁴வோঽபி
* ஏதது³ப⁴ய கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீத வாஸநா ஸம்ப³த்³தோ⁴ঽபி * ஏதத³நுகு³ண ப்ரக்ருʼதி விஶேஷ ஸம்ப³த்³தோ⁴ঽபி
* ஏதந்மூல * ஆத்⁴யாத்மிக * ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக * ஸுக²து:³க² தத்³தே⁴து * ததி³தரோபேக்ஷணீய
* விஷயாநுப⁴வ ஜ்ஞாந ஸங்கோசரூப * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந
* பரமப⁴க்தி விக்⁴ந ப்ரதிஹதோঽபி * யேந கேநாபி ப்ரகாரேண * த்³வயவக்தா த்வம் * கேவலம் மதீ³யயைவ த³யயா
* நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந:
* மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி:
* மத்ப்ரஸாதா³தே³வ * ஸாக்ஷாத்க்ருʼத * யதா²வஸ்தி²த மத்ஸ்வரூபரூப கு³ண விபூ⁴தி * லீலோபகரண விஸ்தார:
* அபரோக்ஷஸித்³த⁴ மந்நியாம்யதா * மத்³தா³ஸ்யைக * ஸ்வபா⁴வ * ஆத்மஸ்வரூப: * மதே³காநுப⁴வ:
* மத்³தா³ஸ்யைக ப்ரிய: * பரிபூர்ணாந வரத * நித்யவிஶத³தம அநந்யப்ரயோஜந * அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம்
* ததா²வித⁴ மத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வ ।–17—-
இனி இதற்கு மேல் இந்தக் கத்யம் முடியும் அளவும் எம்பெருமானுடைய பிரதிவசன பிரகாரத்தை அநு வதிக்கிற படி –
ஏவம்பூ⁴த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுʼப்த* ஸமஸ்த வஸ்து விஹீநோঽபி
இந்த சூர்ணிகையின் நடுவில் உள்ள -த்வம் * கேவலம் மதீ³யயைவ த³யயா-என்பதில் இருந்து தவம் -என்பதை முதலில் யோஜித்துக் கொள்ள வேனும்
கீழே நித்ய கிங்கரோ பவான் -என்ற பிரார்த்தித்த படிக்கே அப்படியே நித்ய கைங்கர்ய பரராவீர் என்று அங்கீ கரித்து அருளிய சூர்ணிகை இது
ஏவம் பூத -என்றது கைங்கர்யத்துக்கு விசேஷணம் -கீழ் சூர்ணிகையில் எப்படிப்பட்ட கைங்கர்யம் பிரார்த்தித்தாரோ
அத்தை அநு வதித்து -நீர் விரும்பியபடியே -ஸாஸ்த்ரீய உபயாந்தரங்கள் இல்லையே யாகிலும் என்கை –
அநந்த தத்³விரோதி⁴ பாபாக்ராந்தோঽபி * -அப்படிப்பட்ட உபாய அநுஷ்டானங்களை இனி ஸம்பாதித்திக் கொள்ள ஒண்ணாத படி -அவற்றுக்கு விரோதிகளான பாபங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் யாகிலும்
அநந்த மத³பசாரயுக்தோঽபி * -என்னளவில் பண்ணின அபசாரங்கள் அபரிமிதமாக இருக்கப் பெற்றீர் ஆகிலும்
அநந்த மதீ³யாபசாரயுக்தோঽபி-அபரிமித பாகவத அபசாரங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் ஆகிலுமஅநந்த அஸஹ்யாபசாரயுக்தோঽபி * –அபரிமித அஸஹ்ய அபசாரங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் ஆகிலும்
ஏதத்கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீதாஹங்கார விமூடா⁴த்ம ஸ்வபா⁴வோঽபி–இப்படிப்பட்ட அபசாரங்களினால் உண்டாகுமதும் -இவற்றை மென்மேலும் உண்டாக்குமதுவுமான அநாதி விபரீத அஹங்காரங்களினால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வபாவத்தை யுடையீராகிலும் –
ஏதது³ப⁴ய கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீத வாஸநா ஸம்ப³த்³தோ⁴ঽபி * -கீழ்ச் சொன்ன அபராதங்களும் அஹங்காரமுமாகிற இரண்டுக்குக்கும் கார்ய காரணமுமாகிய அநாதி விபரீத வாஸனை சூழப் பெற்று இருந்தீர் யாகிலும்
ஏதத³நுகு³ண ப்ரக்ருʼதி விஶேஷ ஸம்ப³த்³தோ⁴ঽபி–கீழ்ச் சொன்ன
அபசார
அஹங்கார
வாசனைகள் ஆகிய மூன்றுக்கும் ஏற்ற
ராஜஸ தாமஸ ப்ரக்ருதியினால் நன்கு கட்டுப்பட்டு இருந்தீர் யாகிலும்
ஏதந்மூல * ஆத்⁴யாத்மிக * ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக * ஸுக²து:³க² தத்³தே⁴து * ததி³தரோபேக்ஷணீய
விஷயாநுப⁴வ ஜ்ஞாந ஸங்கோசரூப * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந ப்ரதிஹதோঽபி * –கீழ்ச் சொன்ன பிரக்ருதிக்கு அடியாக வருகிற தாபத்ரயம் என்னப்படுகிற ஸூக துக்கங்கள் என்ன
அவற்றுக்கு ஹேதுவானவை என்ன
அந்த ஸூக துக்கங்களில் காட்டிலும் வேறான உபேக்ஷிக்கக் கூடிய விஷயங்கள் என்ன
இவற்றின் அனுபவமும் ஞான சங்கோசமுமாகிய
என் திருவடி இணைகளைப் பற்றின பரிபூர்ண பரபக்தி பரஞான பரமபக்திகள் இவற்றுக்கு இடையூறு களினால் கெடுதல்கள் அடைந்தீராகிலும் –
யேந கேநாபி ப்ரகாரேண * த்³வயவக்தா த்வம் -ஏதேனும் ஒரு படி த்வய மந்த்ரத்தைச் சொன்ன நீர்
கேவலம் மதீ³யயைவ த³யயா–என்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலேயே
நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந:–என்னுடைய திருவடி இணைகளைப் பற்றிய பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்திகளின் இடையூறுகள் எல்லாம் நிர்மூலமாக -அவற்றுடன் காரணங்களோடும் கூட -நன்கு கழியப் பெற்றவராகி
மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி:–எனது திருவடித் தாமரை இணைகளைப் பற்றிய பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்திகள் என்னுடைய அனுக்ரஹம் அடியாக உண்டாகப் பெற்றவராய்
மத்ப்ரஸாதா³தே³வ –என்னுடைய அனுக்ரஹம் அடியாகவே
ஸாக்ஷாத்க்ருʼத * யதா²வஸ்தி²த மத்ஸ்வரூபரூப கு³ண விபூ⁴தி * லீலோபகரண விஸ்தார:–என் ஸ்வரூபம் ரூபம் திருக் குணங்கள் நித்ய விபூதி லீலா விபூதி ஆகிய இவற்றை விஸ்தாரங்களை உள்ளபடி சாஷாத்கரிக்கப் பெற்றவராய்
அபரோக்ஷஸித்³த⁴ மந்நியாம்யதா * மத்³தா³ஸ்யைக * ஸ்வபா⁴வ ஆத்மஸ்வரூப: -எனக்கே நியாம்யமாயும் -எனக்கே அடிமைப்பட்டு இருக்கையுமாகிற இயற்கையான ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணரப் பெற்றவராய்
மதே³காநுப⁴வ:-என் ஒருவனையே அனுபவிக்க விரும்பியவராய்
மத்³தா³ஸ்யைக ப்ரிய: -எனக்குக் கைங்கர்யம் பண்ணுவது ஒன்றிலேயே ஊற்றமுடையவராய்
பரிபூர்ணாந வரத * நித்யவிஶத³தம அநந்யப்ரயோஜந * அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம்-பரிபூர்ணமாயும் -இடையூறு அற்றதாயும் -எப்போதும் மிகவும் விசதமாயும் -ப்ரயோஜனாந்தரப் பற்று அற்றதாயும் -பரம பிரியமுமாய் இருக்கிற என்னுடைய அனுபவத்தை யுடையீராய்
ததா²வித⁴ மத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வ ।-அப்படிப்பட்ட என் அனுபவத்தினால் உண்டு பண்ணப்பட்ட மிகச் சிறந்த யுகப்பினாலாகிய
ஸர்வ அவஸ்த உசித ஸகல கைங்கர்யங்களிலும் ஆசை கொண்டு இருக்கும் அடியவராக ஆகக் கடவீர்
என்று அனுக்ரஹித்த படி
—————
ஏவம்பூ⁴தோঽஸி ।-18-
இதுவும் நம்பெருமாளுடைய திரு முகப் பாசுரம்
கீழே அனுக்ரஹித்த படியாகத் தொடங்கி விட்டீர் -என்றபடி
—————
ஆத்⁴யாத்மிக ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக து:³க² விக்⁴ந க³ந்த⁴ ரஹிதஸ்த்வம் * த்³வயமர்தா²நுஸந்தா⁴நேந ஸஹ
* ஸதை³வம் வக்தா * யாவச்ச²ரீரபாதம் * அத்ரைவ ஶ்ரீரங்கே³ ஸுக²மாஸ்வ ॥-19-
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
இரு பாடு எரி கொள்ளியினுள்ளே எறும்பே போல் உருகா நிற்கும் என்னுள்ளம்
வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போல் உள்ளம் துளங்கா நிற்பன் –என்று அஞ்சும்படியான இருள் தரும் மா ஞாலத்தில் நிரபாயமாகக் கால ஷேபம் செய்ய வழி ஏது என்னும் சங்கைக்கு பரிஹாரமாக இந்த சூரணை நம்பெருமாள் திருமுகப் பாசுரமாக அவதரிக்கிற படி
தாபத்த்ரய ஜெனித துக்கமாகிற இடையூறு சிறிதும் இல்லாதவராய் -த்வய மந்த்ர அர்த்த அனுசந்தானத்தோடே கூட எப்போதும் இப்படியே சொல்லிக் கொண்டு இருப்பவராய்
இவ்வுடல் தொலையும் வரை திருவரங்கம் ஆகிய பெரிய கோயிலிலேயே இனிது வாழக் கடவீர் என்று எம்பெருமான் சோதிவாய் திறந்து அருளிச் செய்தபடி
இங்கு ஸ்ரீ ரெங்கத்தைச் சொன்னது உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் என்று தேசிகன் திரு உள்ளம் –
————-
ப்ரபன்னனுக்கு பூர்வ க்ருத்யம் என்றும் உத்தர க்ருத்யம் என்றும் இரண்டு உண்டு
பூர்வ க்ருத்யம் கீழே பரக்கச் சொல்லிற்று
உத்தர க்ருத்யம் சொல்லுகிறது இப்போது
இவ்வுடல் சரியும் நிலை எப்படிப்பட்டது
பரமபலன் கை புகுவது எப்போது -என்ற கேள்விகளுக்கு விடை இறுக்கிறது இங்கு
இதுவும் பெரியபெருமாளுடைய திருவாக்கு அநு வாதம்
ஶரீரபாதஸமயே து கேவலம் * மதீ³யயைவ த³யயா அதிப்ரபு³த்³த:⁴ * மாமேவ அவலோகயந்
* அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்கார மநோரத:² * ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே²ந இமாம் ப்ரக்ருʼதிம்
* ஸ்தூ²லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருʼஜ்ய * ததா³நீமேவ மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக
* ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத பரிபூர்ணாநவரத * நித்ய விஶத³தம அநந்ய ப்ரயோஜந
* அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம் * ததா²வித⁴ மத³நுப⁴வஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴விஷ்யஸி ॥–20-
ஶரீரபாதஸமயே து -உடல் சரிந்து போம் போது
கேவலம் * மதீ³யயைவ த³யயா அதிப்ரபு³த்³த:-என்னுடைய இயற்கையான அருளாலேயே மிகவும் சிறந்த ஞானம் உடையீராய்
மாமேவ அவலோகயந்–இதற்கு முன் சிந்திக்கப்பட்ட என்னையே சிந்திப்பவராகி
அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்கார மநோரத:–எம்பெருமானே எனக்கு பரம ப்ராப்ய பூதன் -என்கிற ஸம்ஸ்காரமும்
ப்ராப்தியில் உண்டான பாரிப்பும் குன்றாதவராகி
ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே²ந இமாம் ப்ரக்ருʼதிம் ஸ்தூ²லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருʼஜ்ய -ஸ்தூலமும் ஸூஷ்மமுமான இந்தப்பிரக்ருதியை பழைய வஸ்திரத்தை விடுமா போலே எளிதாக விட்டு
ததா³நீமேவ -அப்போதே –தாமதம் இன்றி
மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக-ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத பரிபூர்ணாநவரத * நித்ய விஶத³தம அநந்ய ப்ரயோஜ அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம் * ததா²வித⁴ மத³நுப⁴வஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴விஷ்யஸி ॥-என்னுடைய அனுக்ரஹத்தாலேயே —–நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யத்தைப் பெற்றவராகப் போகிறீர்-
கீழே சூர்ணிகை -2- ல் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளே இங்கும் உள்ளன –
————-
மா தேঽபூ⁴த³த்ர ஸம்ஶய: ।–21-
நித்ய கிங்கரோ பவிஷ்யதி -என்று அனுக்ரஹித்த இவ்விஷயத்தில் உமக்கு சம்ஸயம் வர்த்திக்க வேண்டாம் என்கிறது –
ப்ரஸக்தஸ் யைவ ஹி ப்ரதிஷேதா -என்று இறே நியாயம் இருப்பது
இங்கு சந்தேஹ ப்ரஸக்தி யுண்டோ என்னில்
உலகில் ஷூத்ர பலன்களைப் பெறுவதற்கும் மிகவும் கனத்த உபாய அனுஷ்டானங்கள் காணா நின்றோம்
மிக மிகக் கனத்த பேறாகிய மோக்ஷ புருஷார்த்தம் பெறுவதற்கு -துஷ்கரத்வத்தில் இனி இதுக்கு அவ்வருகு இல்லை எண்ணலாம் படி பரம துஷ்கரமான உபாயம் இருக்க வேண்டாவோ
மிகவும் ஸூகரமான இந்த ந்யாஸ மாத்ரத்தினாலேயே பேறு தப்பாது என்னில் -இது கண் துடைக்கிற வார்த்தையாய் இருக்குமோ என்று சிலருக்கு சங்கை உண்டாகக் கூடுமாகையாலே
அவர்களுக்கும் தெளிவு பிறக்க வேண்டி எம்பெருமானாரை அபதேசித்து
மா தே பூத் அத்ர ஸம்சய -என்று சோதி வாய் திறந்து அருளிச் செய்கிறபடி –
——–
மா தே பூத் அத்ர ஸம்சய –
“அந்ருʼதம் நோக்தபூர்வம் மே * ந ச வக்ஷ்யே கதா³சந * ராமோ த்³விர்நாபி⁴பா⁴ஷதே।
ஸக்ருʼதே³வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே ।
அப⁴யம் ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³வ்ரதம் மம ॥
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” ॥
இதி மயைவ ஹ்யுக்தம் ।--22-
என்று கீழே அருளிச் செய்ததையே நன்கு நிலை நாட்டுவதற்காகவே மேல் இரண்டு சூர்ணிகைகள்
என்னுடைய நித்ய கைங்கர்ய ப்ராப்தியில் உமக்கு ஸந்தேஹம் வர்த்திக்குமாகில் நான் ஏற்கனவே பேசி வைத்து இருக்கின்ற வார்த்தைகள் பொய்யாகுமே –
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே என்று உமது திருத்தமக்கையார் சொல்லி வைத்தாளே
ஆகவே என்னுடைய வார்த்தையை நீர் உபச்சந்தந மாத்ரமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்று நம்பெருமாள் அருளிச் செய்தபடி –
இது வரையில் ஒருகாலும் நான் பொய் சொல்லிற்று இல்லை -இனி மேல் சொல்லப்போவதும் இல்லை -என்று கிருஷ்ண அவதாரத்தில் சொன்னேன்
ராமன் வாயாலே இரண்டாவது வார்த்தை வராது என்று ராம அவதாரத்தில் சொன்னேன்
அன்றியும் ராம அவதாரத்தில் கடற்கரையில் விபீஷண ஆழ்வானை வ்யாஜீ கரித்து -ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய -என்று சரம ஸ்லோகத்தில் சொன்னேன்
கிருஷ்ண அவதாரத்தில் திருத்தேர் தட்டிலே அருஜுனனை வ்யாஜீ கரித்து -ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று சரம ஸ்லோகத்தில் சொன்னேன்
ஸக்ருத் ஏவ -வில் -ஏதத் விரதம் மம -உயிரான வார்த்தை
ஆக இப்படிச் சொல்லி இருக்கிற நான் இன்றாகப் பொய்யனாக மாட்டேன் காணும் என்று திண்மை பெறுத்தின படி –
————-
கீழ்ச் சொன்னதையே திடப்படுத்தி அருளிச் செய்கிற இது ஸந்தோஷ அதிசயத்துக்காக வாயிற்று -இதுவும் பகவத் வாக்யம்
அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத்³ஜ்ஞாநத³ர்ஶந ப்ராப்திஷு * நிஸ்ஸம்ஶய: ஸுக²மாஸ்வ ॥–23-
அதஸ்–ஸத்யவாதியும் ஸத்ய வ்ரதனுமான நான் சொன்ன வார்த்தை மிகவும் விஸ்வஸிக்கத் தகுந்தது யாகையாலே
த்வம் -பிராமாணிகரான நீர்
தவ -என்னால் ஸ்வீ கரிக்கப் பட்ட ஸகல குணங்களையும் யுடையவரான உம்முடைய
தத்த்வதோ மத்³ஜ்ஞாநத³ர்ஶந ப்ராப்திஷு -உள்ளபடி என்னை அறிவது காண்பது நித்ய கைங்கர்யம் பண்ணுவது ஆகிய இவற்றில்
நிஸ்ஸம்ஶய: -சங்கா களங்க லேசமும் இல்லாதவராய்
ஸுக²மாஸ்வ –இனிது வாழ்ந்து இருக்கக் கடவீர் -என்று
எம்பெருமானாரை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்
—————
அந்த்யகாலே ஸ்ம்ருʼதிர்யாது தவ கைங்கர்யகாரிதா ।
தாமேநாம் ப⁴க³வந்நத்³ய க்ரியாமாணாம் குருஷ்வ மே ॥–24-
அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று
இந்த வாக்யத்துக்கு
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையோ
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசாச்சார்யாரோ
ஸ்ரீ தேசிகனோ
வியாக்யானம் செய்து அருள வில்லை
———-
இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶரணாக³தி க³த்³யம் ஸமாப்தம்॥
—————
ஸரணாகதி கத்ய தாத்பர்ய சாரம்
1-முதல் சூர்ணிகையில் மேல் 5 வது சூர்ணிகையில் தான் அனுசந்திக்கப் போகும் சரணாகதி நன்கு நிறைவேற புருஷகார பிரபத்தி செய்யப்படுகிறது
2-புருஷகார பிரபத்தி இன்னதற்காக என்று வியக்தமாகச் சொல்லப்படுகிறது
3-4- அங்கனமே ஆயிடுக என்று பெரிய பிராட்டியார் அநுக்ரஹித்து அருளிச் செய்தமை சொல்லப்படுகிறது
5- எம்பெருமானுடைய –
திவ்ய ஆத்ம ஸ்வரூப திவ்ய மங்கள விக்ரஹங்களின் வை லக்ஷண்யத்தையும்
கல்யாண குண யோகத்தையும் –
திவ்ய பூஷண மஹிஷீ ஸாஹித்யத்தையும்
நித்ய ஸூரிகளோட்டை சேர்த்தியையும் –
நித்ய விபூதி நாயகத்வத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
மற்றும் ஸத்ய காமத்வ ஸத்ய சங்கல்பத் வாதி கல்யாண குண விசேஷங்கள் யுடைமையையும்
பரக்கச் சொல்லி ஏத்தி எம்பெருமான் திருவடி
இணைகளிலே சரணாகதி செய்தமையைச் சொல்லிற்று
6-7-8-9- த்வய மந்த்ர அனுசந்தானமும் செய்து அருளி
புராண ஸ்லோகங்கள் இரண்டையும் –
கீதையில் உள்ள மூன்று ஸ்லோகங்களையும் அனுசந்தித்தார் ஆயிற்று
10-11- கால த்ரயத்திலும் கரண த்ரயத்தாலும் விளையும் ஸமஸ்த அபசாரங்களையும் பொறுத்து அருள வேணும் என்று பிரார்த்தித்தது
10-ல் நிஷித்த ஆசரண ஷமா பிரார்த்தனை
11-ல் காம்ய ஆசரண க்ஷமா பிரார்த்தனை
12- கீதையில் மம மாயா துரத்யயா -என்றும் மாம் ஏவயே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -என்றும் சொல்லி உள்ளதை அனுசரித்து மாயையை மடித்து அருள பிரார்த்தனை
13- கீதை ஸ்லோகங்கள் மூன்றையும் எடுத்துக் காட்டி அவற்றில் சொல்லப்பட்ட ஞானம் தமக்கு அளிக்க பிரார்த்தனை
14- கீதையில் மூன்று இடங்களில் சொல்லப்பட்ட பரபக்தி தமக்கு விளைய வேண்டும் என்று பிரார்த்தனை
15-பரபக்தி பரஞான பரம பக்திகளே வடிவெடுத்தவனாக ஆக்கி அருளப் பிரார்த்தனை
16- அவற்றால் விலக்ஷண பகவத் அனுபவம் விளைந்து -அவ் வனுபவ பரிவாஹ ரூபமாக நித்ய கைங்கர்ய ருசி விளைய வேணும் என்கிறது
இதற்கு மேல் எல்லாம் பகவத் ப்ரதி வசனங்கள்
17- வாரீர் ராமானுஜர் நித்ய கைங்கர்யம் செய்து களிக்க விரும்பிய நீர் அதற்கு உரிய ஒரு உபாயத்திலும் அந்வயம் அற்று இருந்தீர் ஆகிலும்
அந்த உபாயம் இனிமேலும் நிஷ்பன்னமாகக் கூடாதபடி விரோதிகளான பாபங்கள் நிரம்பி இருந்தீராகிலும்
ஸகல விதமான அபசாரங்களும் மலிந்து இருந்தீராகிலும்
பரபக்தி பரஞான பரமபக்திகள் விளையாமைக்கு உறுப்பான இடையூறுகள் பல மலிந்து இருந்தீராகிலும்
நீர் ஆர்த்த ப்ரபன்னராகியோ திருப்த ப்ரபன்னராகியோ த்வய மந்த்ரத்தை அனுசந்தித்தீராதலால்
என்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலேயே இடையூறுகள் எல்லாம் நீங்கப்பெற்று
பரபக்தி பரஞான பரமபக்திகள் புஷ்கலமாகப் பெற்று
என்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத்கரிக்கப் பெற்று
உம்முடைய ஸ்வரூபத்தையும் நன்கு தெளியப்பெற்று
என்னையே அனுபவிப்பவராய்
எனக்கே தொண்டு செய்பவராய்
வாழக் கடவீர் என்று எம்பெருமான் அனுக்ரஹித்து அருளின படி –
18- இங்கனே யாகப்புகுந்தீர் என்று எம்பெருமான் அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
19-தாபத்ரய லேசமும் அற்று அர்த்த அநுஸந்தானத்தோடே த்வய உச்சாரணம் செய்து கொண்டு இவ்வுடல் விழும் தனையும் இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலிலேயே இனி வாழக்கடவீர் என்று அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
20-இவ்வுடல் சரிந்து போம் காலத்தில் சிறந்த நன்மைகளைப் பெற்று நித்ய கைங்கர்ய நிரதராகப் போகிறீர் என்று அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
21- இதில் எந்தவித ஸந்தேஹலேசமும் வேண்டா என்று தெளிவித்து அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
22-தன்னுடைய திருவாக்கு பழுது படாது என்று எம்பெருமான் மூதலித்து அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
23- கீழ்ப் பண்ணிய அபய ப்ரதானத்தைத் திடப்படுத்தி நிகமித்தது
ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய பிரதிவசனம் நிகமித்தது
24-அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று
———————
॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥
இந்த இரண்டாவது கத்யத்துக்கு
ஸ்ரீ ரெங்க கத்யம் என்றும்
மித கத்யம் என்றும் வ்யவஹாரம்
ஸ்ரீ ரெங்க ஸாயிநம் –முதலில்– ஸ்ரீ ரெங்க நாத மம நாத நமோஸ்து தே -முடிவில் -என்பதால் ஸ்ரீ ரெங்க கத்யம்
முந்திய சரணாகதி கத்யம் ப்ருது கத்யம் -இது சிறியதாய் இருப்பதால் மித கத்யம்
முந்தியது போல் த்வய விவரணம் இதுவும்
இதில் முதல் சூர்ணிகை கைங்கர்ய ப்ராத்தநா பரமான உத்தர கண்ட விவரணமாகவும்
இரண்டாவது சரண வர்ண ப்ரதர்சன பரமான பூர்வ கண்ட விவரணமாக அவதரிக்கின்றது
சித³சித்பரதத்த்வாநாம் தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।
ராமாநுஜாய முநயே நமோ மம க³ரீயஸே ॥—
சித³சித்பரதத்த்வாநாம் -சேதனம் அசேதனம் ஈஸ்வரன் ஆகிய தத்வ த்ரயங்களினுடைய
தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।-உண்மையை உள்ளபடி அறிந்தவரான
மம க³ரீயஸே ॥-எனக்கு உத்தம ஆச்சார்யரான
ராமாநுஜாய முநயே நமோ -எம்பெருமானாருக்கு நமஸ்காரம் ஆகுக
த்₃வயத்தில் உபேயத்தில் நோக்கான உத்தர வாக்ய விவரணம்:
——————
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ் ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ
* ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய * சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம
* ஸத்யகாம ஸத்யஸங்கல்ப * க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³ யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம்
* பரப்³ரஹ்ம பூ⁴தம் * புருஷோத்தமம் * ஶ்ரீரங்க³ஶாயிநம் * அஸ்மத்ஸ்வாமிநம் * ப்ரபு³த்³த⁴ நித்ய நியாம்ய நித்ய
தா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோঽஹம் * ததே³காநுப⁴வ: * ததே³கப்ரிய: * பரிபூர்ணம் ப⁴க³வந்தம்
* விஶத³தமாநுப⁴வேந நிரந்தரமநுபூ⁴ய * தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வாநி ॥–1-
உபாயத்தில் நோக்கான பூர்வ வாக்ய விவரணம்:
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் -மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன்னதீனமாக இருக்கப் பெற்ற
இது முதலான த்விதீ யாந்த விசேஷணங்கள் எல்லாம் மேலே
பகவந்தம் என்ற விசேஷ்யத்திலே அந்வயத்து
விசத தம அநு பவேந நிரந்தரம் அநு பூய -என்று இணங்கக் கடவது
உயர்வற உயர்நலம் முதல் திருவாய் மொழியில்
நாம் அவன் இவன் உவன்
அவரவர் தம்தமது
நின்றனர் இருந்தனர் -என்று அடைவே யுள்ள மூன்று பாசுரங்களையும் தழுவி முதல் விசேஷணம்
பத்தர் முக்தர் நித்யர் -த்ரிவித் சேதனர்
த்ரி குணம் -காலம் -ஸூத்த ஸத்வம் -த்ரிவித அசேதனம்
த்ரி வித -விசேஷணம் சேதனர் மட்டிலும் அன்வயித்து அசேதனங்களில் அந்வயியாதும் இருக்கலாம் -என்பது தேசிகர் திரு உள்ளம்
சூர்ணிகையில் முடிவில் உள்ள பேத பதம் ஸ்வரூபம் முதலிய மூன்றிலும் அன்வயித்து
ஸ்வரூப பேதம்
ஸ்திதி பேதம்
ப்ரவ்ருத்தி பேதம் என்று கொள்ளப் பங்காக உள்ளது
ஒவ்வொன்றிலும் அவாந்தர பேதங்கள் உண்டே
க்லேஶ கர்மாத்³யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்–அவித்யை -அஸ்மிதா-அபி நிவேசம் –ராகம் -த்வேஷம் முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
அவற்றின் கார்யமான புண்ய பாப ரூபமான கர்மம் என்ன
ஆதி சப்தத்தால் இவற்றின் விபாகம் என்ன -இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத
சேதன அசேதனங்கள் ஸரீரமாய் எம்பெருமான் ஸரீரியாய் இருந்தாலும் வியாப்பிய கத தோஷம் தட்டாது-
ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ் ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ
ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய * சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரமஸத்யகாம ஸத்யஸங்கல்ப * க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³ யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம்–ஸ்வாபாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக்கல்யாண குண திரள் களுக்கு கடல் போன்ற –
பரப்³ரஹ்ம பூ⁴தம் * புருஷோத்தமம் –பர ப்ரஹ்ம ஸப்தத்தாலும் -புருஷோத்தம ஸப்தத்தாலும் வேதாந்தங்களிலே ப்ரஸித்தனான
ஶ்ரீரங்க³ஶாயிநம் –திருவரங்கம் பெரிய கோயிலிலே அஸ்மதாதிகளும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிற
அஸ்மத்ஸ்வாமிநம் –பரிபூர்ணம் ப⁴க³வந்தம்–எமக்கு ஸ்வாமியாய் -ஒன்றிலும் குறைவில்லாத எம்பெருமானை
இதற்கு அநு பூய -என்ற ல்யப்போடே அந்வயம்
ப்ரபு³த்³த⁴ நித்ய நியாம்ய நித்ய தா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோঽஹம் –நித்ய நியாம்யமாய்
நித்ய தாஸ்ய ஏக ரஸமான ஆத்ம ஸ்வ பாவத்தை நன்கு அறிந்து கொண்டவனான அடியேன்
ப்ரபு³த்³த என்றது நன்றாக அறியப்பட்ட -என்றபடி –
ஸ்வாதீன -ஸ்வார்த்த -கர்த்ருத்வ போக்த்ருத்வ பிரமம் இல்லாத படி அறிவதே நன்றாக அறிவதாகும்
இவ்வாத்மா எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே ந்யாம்யனும் தாஸ்யனுமானவன் என்று நன்றாக அறிந்து கொண்ட நான் என்றபடி –
ததே³காநுப⁴வ: -ததே³கப்ரிய: –பகவத் விஷயம் ஒன்றே ஞானத்துக்கும் பக்திக்கும் விஷயமாகப் பெற்றவனும்
விஶத³தமாநுப⁴வேந நிரந்தரமநுபூ⁴ய –மிகவும் விசதமாக இடைவீடு இன்றி அநு பவித்து
தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித-அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப
நித்யகிங்கரோ ப⁴வாநி –அவ்வனுபவத்தினால் விளைவிக்கப் பெற்ற மிகச் சிறந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ஊற்றத்தோடு கூடி இருக்கையாகிற நித்ய கைங்கர்யத்தில் நிரதனாகக் கடவேன்
ஶேஷதைக ரதி-என்பது பஹு வ்ரீஹி யாகி நித்ய கிங்கரனுக்கு விசேஷணம் ஆகிறது –
அசேஷமான அடிமைகளிலும் நன்கு ஈடுபட்ட நித்ய கிங்கரனாக ஆகக் கடவேன் என்றபடி
ஆக இவ்வளவும் த்வயத்தில் உபேயத்திலே நோக்கான உத்தர கண்டம் விவரிக்கப்பட்ட தாகிறது –
—————-
ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்யதா³ஸ்யைகரஸாத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக * ப⁴க³வத³நவதி⁴காதிஶய
* ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித * அநவதி⁴கா திஶய ப்ரீதிகாரித * அஶேஷாவஸ்தோ²சித
* அஶேஷஶேஷதைகரதிரூப * நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி * தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந
* தது³பாய ஸமீசீந க்ரியா * தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ * ஸமஸ்தாத்மகு³ணவிஹீந:–* து³ருத்த ராநந்த * தத்³விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு³ண * அநாதி³ பாபவாஸநா மஹார்ணவ அந்தர்நிமக்³ந:
* திலதைலவத் * தா³ருவஹ்நிவத் * து³ர்விவேச த்ரிகு³ண க்ஷண க்ஷரணஸ்வபா⁴வ * அசேதந ப்ரக்ருʼதி வ்யாப்திரூப
* து³ரத்யய ப⁴க³வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ: * அநாத்³யவித்³யா ஸஞ்சித
* அநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்³ரதி²த: * அநாக³த அநந்தகால ஸமீக்ஷயாঽபி
* அத்³ருʼஷ்ட ஸந்தாரோபாய: * நிகி²ல ஜந்துஜாத ஶரண்ய
* ஶ்ரீமந் * நாராயண * தவ சரணாரவிந்த³ யுக³ளம் ஶரணமஹம் ப்ரபத்³யே ॥2-
ஸ்வாத்ம நித்ய நியாம்ய –அடியேன் எப்பொழுதும் நியமிக்கத் தக்கவனாய் இருக்கை என்ன
நித்யதா³ஸ்ய-எப்பொழுதும் அடிமை செய்து கொண்டே இருக்கை என்ன
ஏகரஸ–ஆகிய இவற்றை சாரமாக வுடைய
ஆத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக ப⁴க³வத³நவதி⁴காதிஶய
ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித -எப்போதும் தனக்கே நியமிக்கத் தகுந்தவனாய் இருக்கை என்ன –
நித்ய கைங்கர்யத்திலே ஊன்றி இருக்கை என்ன
இப்படிப்பட்ட ஸ்வ ஸ்வ பாவத்தை அனுசந்தித்திக் கொண்டு
எம்பெருமானது சிறந்த ஸ்வாமித்வம் முதலிய சகல கல்யாண குணங்களையும் அனுபவிப்பதனால் யுண்டான
அநவதி⁴கா திஶய ப்ரீதிகாரித -மிகுந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட
அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷஶேஷதைகரதிரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி –ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ப்ராவண்யம் கொண்டு இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்துக்கு உபாயமான பக்தி என்ன
தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந–அதுக்கும் உபாயமான பரிபக்குவ ஞானம் என்ன
தது³பாய ஸமீசீந க்ரியா -அதுக்கும் உபாயமான நல்ல கர்ம யோகம் என்ன –
தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ ஸமஸ்தாத்மகு³ணவிஹீந:–அதற்கும் உறுப்பான -ஸாத்விகத்வம் ஆஸ்திக்யம் முதலான ஆத்ம குணங்கள் என்ன
ஆகிய இவை சிறிதும் இல்லாதவனாய்
து³ருத்த ராநந்த
தத்³விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு³ண
அநாதி³ பாபவாஸநா மஹார்ணவ அந்தர்நிமக்³ந:–கீழ்ச் சொன்ன ஸம்யக் ஞான -ஸமீசீந கிரியைகளுக்கு மாறான
விபரீத ஞான
விபரீத கிரியைகளுக்கு
உறுப்பான அநாதி பாப வாஸனை யாகிற கடக்க முடியாத பெரும் கடலினுள்ளே மூழ்கிக் கிடப்பவனாய்
திலதைலவத்
தா³ருவஹ்நிவத்
து³ர்விவேச த்ரிகு³ண க்ஷண க்ஷரணஸ்வபா⁴வ
அசேதந ப்ரக்ருʼதி வ்யாப்திரூப
து³ரத்யய ப⁴க³வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ: –எள்ளில் எண்ணெய் போலவும்
கட்டையில் நெருப்பு போலவும் சாதாரணமாகப் பிரிக்க முடியாததாய்
ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களையும்
சதத பரிணாமித்வத்தையும் இயல்பாக யுடைத்தாய்
ஜடரூபமான ப்ரக்ருதியிலே அவர்ஜனீயமாய் இருந்துள்ள சம்பந்தத்தை யுடைத்தாய்
கடக்க அரிதான பகவத் மாயையினால் மறைக்கப் பட்ட ஸ்வ ப்ரகாஸத்தை யுடையனாய் –
அநாத்³யவித்³யா ஸஞ்சித
அநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்³ரதி²த: –அநாதியான அஞ்ஞானத்தினாலே திரட்டப்பட்டதாய்
எண்ணிறந்ததாய்
ஒருவராலும் அவிழ்க்க முடியாததாய் இருந்துள்ள
புண்ய பாப ரூப கர்மமாகிய கயிற்றினால் கட்டுண்டவனாய்
அநாக³த அநந்தகால ஸமீக்ஷயாঽபி
அத்³ருʼஷ்ட ஸந்தாரோபாய: — எத்தனை காலம் பார்த்தாலும் ஸம்ஸார நிஸ்தரண உபாயம் இன்னது என்று அறியப் பெறாது இருந்துள்ளவனான அடியேன்
நிகி²ல ஜந்துஜாத ஶரண்ய–ஸமஸ்த பிராண சமூகங்களுக்கும் சரண்யன் ஆனவனே
ஶ்ரீமந் நாராயண –பெரிய பிராட்டியாருடன் கூடி இருந்துள்ள நாராயணனே
தவ சரணாரவிந்த³ யுக³ளம் ஶரணமஹம் ப்ரபத்³யே ॥-உனது திருவடித் தாமரைகளை உபாயமாகப் பற்றுகிறேன்
—————-
கைங்கர்யத்தைப் பிரார்த்திப்பது:
ஏவமவஸ்தி²தஸ்யாபி * அர்தி²த்வமாத்ரேண பரமகாருணிகோ ப⁴க³வாந் * ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத
* ஐகாந்திக ஆத்யந்திக * நித்யகைங்கர்யைகரதிரூப * நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி * விஶ்வாஸபூர்வகம்
* ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே ॥–3-
ஏவமவஸ்தி²தஸ்யாபி –கீழ்ச் சூர்ணிகையில் விரிவாகச் சொன்னபடியே ஆகிஞ்சன்யாதி களே வடிவெடுத்து இருக்கின்ற எனக்கும்
பரமகாருணிகோ ப⁴க³வாந் –பேர் அருளானனான எம்பெருமான்
அர்தி²த்வமாத்ரேண -என் பக்கலில் உள்ள இரப்பையே கொண்டு
ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத
ஐகாந்திக ஆத்யந்திக
நித்யகைங்கர்யைகரதிரூப
நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி
விஶ்வாஸபூர்வகம்-தன்னை அனுபவிக்கும் உகப்பால் யுண்டாவதாய்
ஒருபடிப்பட்டதாய்
முடிவின்றிக்கே இருந்துள்ள
அடிமையிலேயே ஊற்றம் உற்று இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்தை அருளப் போகிறான் என்கிற நம்பிக்கையுடன்
ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே –எம்பெருமான் இடத்தில் நித்ய கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறேன் –
————–
தவாநுபூ⁴தி ஸம்பூ⁴த ப்ரீதிகாரித தா³ஸதாம் ।
தே³ஹி மே க்ருʼபயா நாத² * ந ஜாநே க³திமந்யதா² ॥–4-
ஸர்வாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிஸ்தவ ।
ப⁴வேயம் புண்ட³ரீகாக்ஷ! * த்வமேவைவம் குருஷ்வ மாம் ॥–5-
கீழே தம்முடைய பாசுரத்தால் பேற்றைப் பிரார்த்தித்தார்
இதிஹாஸஸ்லோகங்கள் இரண்டும் கொண்டு பிரார்திக்கிறார்
இவற்றுக்கு ஆகரம் கண்டு கொள்வது
எம்பெருமானே
உன்னை அனுபவித்த -அதனால் உண்டான உகப்பினால் விளையும் கைங்கர்யத்தை
பரம கிருபையினால் அடியேனுக்குத் தந்து அருள வேண்டும்
வேறு புகல் அறிகின்றிலேன்
செந்தாமரைக் கண்ணனே -ஸர்வ அவஸ்தைகளிலும் உனக்குச் செய்யக் கூடிய ஸகல வித கைங்கர்யங்களிலும் அடியேன் ருசி உடையேனாம் படி
நீ தானே செய்து அருள வேணும் என்கிறார் இந்த ஸ்லோகங்களாலே –
———
ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴* ததி³ச்சா²ரஹிதஸ்யாபி * ஏதது³ச்சாரண மாத்ராவலம்ப³நேந
* உச்யமாநார்த² பரமார்த² நிஷ்ட²ம் * மே மந: * த்வமேவாத்³யைவ காரய ॥-6—
ஸ்ரீ ரெங்க நாதனே
உன்னுடைய திருவருளால் அடியேன் அதிகார பூர்த்தி பெற்றவனாக நினைத்து இருக்கிறேன்
ஒருகால் அப்படிப்பட்ட அதிகார பூர்த்தி இல்லையே யானாலும்
அடியேனிடத்தில் கிடைக்கின்ற யுக்தி வியாஜ்யத்தைக் கொண்டு நீயே சேஷ பூர்ணம் செய்து கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிறார் இந்த சூர்ணிகையில்
ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴ததி³ச்சா²ரஹிதஸ்யாபி –இப்படி மிகச் சிறந்த புருஷார்த்தத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வதும் -அறிந்து கொள்ள விருப்பமும் இல்லாதவனாய் இருந்தாலும் –
ஏதது³ச்சாரண மாத்ராவலம்ப³நேந-என் வாய் மொழி தன்னையே கொண்டு
மே மந: -என்னுடைய உள்ளத்தை
உச்யமாநார்த² பரமார்த² நிஷ்ட²ம் -உபாய உபேயங்களின் உண்மை யுணர்ச்சி பெற்றதாக
த்வமேவாத்³யைவ காரய ॥–நீ தானே இப்போதே செய்து அருள வேணும் –
குரு -என்னாதே -காரய -என்றது -அதுவும் அவனது இன்னருளே -என்ற பரம அர்த்தத்தைக் காட்டுவதற்காவே –
———–
இந்த வாத்மா உனக்கே போ₄க்யமாய்த் தலைக் கட்ட வேணுமென்பது:
அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர
* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!
* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர
* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண
* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥
அபாரகருணாம்பு³தே⁴! –கரை கடந்த கருணைக் கடலே
அநாலோசித விஶேஷ அஶேஷலோகஶரண்ய! –குண தோஷ நிரூபணம் பண்ண மாட்டாமே ஸகல ஜகத்துக்கும் சரண்யனானவனே
ப்ரணதார்த்திஹர-அடி பணிந்தாருடைய ஆர்த்திகளைப் போக்குமவனே
ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! –அடியார் பக்கலில் உண்டான வாத்சல்யத்துக்கு முக்யமான மஹா ஸமுத்ரமே
அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!–ஸகல பூத ஸமூஹங்களுடைய உண்மையை எப்போதும் அறிந்து உள்ளவனே
அஶேஷசராசரபூ⁴த -நிகி²லநியமநிரத -அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த- நிகி²லஜக³தா³தா⁴ர
அகி²லஜக³த்ஸ்வாமிந் அஸ்மத்ஸ்வாமிந்
ஸத்யகாம -அவாப்த ஸமஸ்த காமனே
ஸத்யஸங்கல்ப -நினைத்தது செய்து தலைக்கட்டு வல்லவனே
ஸகலேதரவிலக்ஷண
அர்தி²கல்பக
ஆபத்ஸக² –ஆபத் பந்துவானவனே
காகுத்ஸ்த² –காகுத்ஸ வம்ஸ ப்ரஸூதனானவனே
ஶ்ரீமந்நாராயண –திரு மாலே
புருஷோத்தம -பரம புருஷனே
ஶ்ரீரங்க³நாத² –ஸ்ரீ ரெங்கநாதன்
மம நாத², –எம்பெருமானே
நமோঽஸ்துதே-தே நமஸ் அஸ்து -தேவரீருக்கே சேஷமான இவ்வாத்ம வஸ்து தேவரீருக்கே போக்யமாய்த் தலைக்கட்ட வேணும் என்கை-
॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதம் ஶ்ரீரங்க³க³த்³யம் ஸமாப்தம் ॥
————–
॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥
எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்தில் அறுதியிட்ட அர்த்தம் பனை நிழல் போல் தம் ஒருவர் அளவிலே நின்று இராமே கற்பகக் காவின் நிழல் போல் உலகெல்லாம் பயன் பெற வேண்டும் என்று கருதி அருளினவராகையாலே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலவே யாம்படி உபாய உபேயங்களை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்து பர உபதேசத்தில் இழிகிறார் ஸ்ரீ வைகுண்ட கத்ய முகத்தாலே
பெரிய கத்யமான சரணாகதி கத்யத்திலே பொதுவாக எம்பெருமானை நோக்கின ஸ்வ ப்ரார்த்தனையாக அருளிச் செய்தார்
சிறிய கத்யமான ஸ்ரீ ரெங்க கத்யத்திலே அந்தப் பிரார்தனையை ஸுலபயத்துக்கு எல்லை நிலமான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்தார்
இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக பிறரை நோக்கி கர்தவ்ய உபதேசமாக அருளிச் செய்கிறார்
இதில் உபாய அம்சத்தைச் சுருங்க அருளிச் செய்து
உபேயமான அம்சத்தை மிகவும் பரக்க அருளிச் செய்கிறார்
இந்தக் கத்யம் ஆறு சூர்ணிகைகள் கொண்டதாய் இருக்கும் -அவற்றின் தாத்பர்ய ஸாரம் வருமாறு
சூர்ணிகை -1- எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வை லக்ஷண்யத்தையும் -தன்னுடைய நிலைமையையும் அநுஸந்தித்து
அப்பெருமானுடைய ஸுலப்யம் முதலிய திருக் குணங்களே பற்றாஸாக அவன் திருவடிகளிலே சரணம் புக வேணும் என்கிறது
சூர்ணிகை -2-பேற்றுக்கு ஒருகால் அனுசந்திக்கையே போதுமாய் இருக்கச் செய்தேயும்
நெஞ்சு வேறே ஒன்றில் செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்குமாக
நித்ய அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது
சூர்ணிகை -3-இவ்வதிகாரி அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று ப்ரக்ருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்
கடந்து சென்று புகுகிற நித்ய விபூதியின் வைபவத்தையும்
அந்த தேச விசேஷத்தினுடைய பண்பையும்
அங்குள்ள அலங்காரங்களையும்
அப்படிப்பட்ட இடத்தில் நாச்சியாரும் ஸர்வேஸ்வரனுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அந்த நாச்சிமாருக்கு அநுபாவ்யமான வடிவு அழகையும் -திவ்ய ஆபரணச் சேர்த்தியையும் -திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
வழுவிலா அடிமை செய்யும் நித்ய ஸூரி பரிஷத்தையும்
அவர்களுடைய நித்ய கைங்கர்யத்துக்கு இலக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அனுசந்தித்து
நாம் இப்பேற்றை எப்போது பெறக் கடவோம் என்று பாரித்து
அப் பாரிப்பின் படியே சென்று கிட்டி
எம்பெருமானே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் என்கிறது
சூர்ணிகை -4- ஸ்வ அபேக்ஷித்தத்தின் படியே எம்பெருமானாலே ஸ்வீ கரிக்கப் பட்டவனாய்க் கொண்டு அநுகூல விருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான் என்கிறது
சூர்ணிகை -5-இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்து இருந்த இழவு தீர அந்நிய பரதை அற்று இமையாத கண்ணினனாய்க் கொண்டு ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் படியைச் சொல்கிறது
சூர்ணிகை -6- இப்படி வந்து சேர்ந்த இவனை எம்பெருமான் வினவிக் குளிரக் கடாக்ஷித்துத் திருவடிகளைத் தலை மேல் வைக்க அடி சூடும் அரசு பெற்று நித்ய ஆனந்த ஸாலியாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது
————-
யாமுநார்ய ஸுதா⁴ம்போ⁴தி⁴மவகா³ஹ்ய யதா²மதி ।
ஆதா³ய ப⁴க்தியோகா³க்²யம் * ரத்நம் ஸந்த³ர்ஶயாம்யஹம் ॥
ஆளவந்தார் ஆகிற அமுதக் கடலிலே படிந்து குடைந்தாடி
பக்தி யோகமாகிற ரத்னத்தை
யதா மதி எடுத்து அன்பர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கிறேன் என்கை
இங்கு பக்தி யோகம் என்றது ஸாத்ய பக்தியான ப்ரபத்தியையே சொன்னபடியாம் –
இதன் மேலே -தத் பாதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யத் ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி சாதனமஸ் தீதி -என்று
அருளிச் செய்தது பொருந்துவதற்காக –
ஆளவந்தாருடைய திருவருள் அடியாக கிடைத்த அர்த்தங்களை அன்பர்களுக்கு நித்ய அனுசந்தேயமாக வெளியிடுகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் தேர்ந்த கருத்து –
——–
எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப கு₃ண வைலக்ஷண்யங்கள்:
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³ யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜ: ப்ரப்⁴ருʼத்
யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம் * பரமபுருஷம் * ப⁴க³வந்தம் * நாராயணம்
* ஸ்வாமித்வேந ஸுஹ்ருʼத்த்வேந கு³ருத்வேந ச பரிக்³ருʼஹ்ய ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ
த்³வய பரிசர்யைக மநோரத:² * தத்ப்ராப்தயே ச தத்பாதா³ம்பு³ஜத்³வய ப்ரபத்தேঃ
* அந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: * தஸ்யைவ ப⁴க³வதோ நாராயணஸ்ய
* அகி²லஸத்த்வ த³யைக ஸாக³ரஸ்ய * அநாலோசித கு³ணக³ண அக²ண்ட³ஜநாநுகூல மர்யாதா³ஶீலவத:
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய கு³ணவத்தயா தே³வதிர்யங்மநுஷ்யாத்³யகி²லஜந ஹ்ருʼத³ய ஆநந்த³நஸ்ய
* ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே:⁴ * ப⁴க்தஜந ஸம்ஶ்லேஷைக போ⁴க³ஸ்ய
* நித்ய ஜ்ஞாந க்ரியைஶ்வர்யாதி³ போ⁴க³ஸாமக்³ரீ ஸம்ருʼத்³த⁴ஸ்ய * மஹாவிபூ⁴தே:
* ஶ்ரீமச் சரணாரவிந்த³யுக³ளம் அநந்யாத்மஸஞ்ஜீவநேந * தத்³க³தஸர்வபா⁴வேந * ஶரணம் அநுவ்ரஜேத் ॥ 1 ॥
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் –மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன் அதீனமாக இருக்கப் பெற்ற
க்லேஶ கர்மாத்³ யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்–அவித்யை முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
புண்ய பாப ரூபா கர்மம் என்ன
இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத
ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய
வீர்ய ஶக்தி தேஜ: ப்ரப்⁴ருʼத் யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம் –ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக்கல்யாண குண திரள் களுக்கு கடல் போன்று
பரமபுருஷம் * ப⁴க³வந்தம் * நாராயணம்–புருஷோத்தமனாய் -ஷாட் குண்ய பரிபூர்ணனான ஸ்ரீ மன் நாராயணனை
ஸ்வாமித்வேந ஸுஹ்ருʼத்த்வேந கு³ருத்வேந ச பரிக்³ருʼஹ்ய –சேஷியாகவும்
நேசனாகவும்
ஆச்சார்யனாயும் ஏற்றுக் கொண்டு
ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ த்³வய பரிசர்யைக மநோரத:² –எப்போதும் அப்பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளைப் பற்றிய கைங்கர்யம் ஒன்றே செய்ய வேண்டும் என்னும் பாரிப்பை யுடையவனாய்
தத்ப்ராப்தயே ச தத்பாதா³ம்பு³ஜத்³வய ப்ரபத்தேঃ
அந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: –அந்தக் கைங்கர்யத்தைப் பெறுவதற்கு கல்ப கோடி ஸஹஸ்ரமானாலும்
அப் பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளையே நம்பி இருப்பதில் காட்டிலும் வேறே ஓன்று எனக்கு உபாயமாக இல்லை என்று எண்ணினவனாய்
அகி²லஸத்த்வ த³யைக ஸாக³ரஸ்ய –எல்லாப் பிராணிகள் இடத்திலும் கருணைக் கடலாய்
அநாலோசித கு³ணக³ண அக²ண்ட³ஜநாநுகூல மர்யாதா³ஶீலவத:–குண தோஷங்களில் ஆராய்ச்சி இன்றிக்கே ஸகல ஜனங்களுக்கும் அநுகூலமாய் இருக்கிற எல்லை கடந்த சீல குணத்தை யுடையனாய்
ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய கு³ணவத்தயா தே³வதிர்யங்மநுஷ்யாத்³யகி²லஜந ஹ்ருʼத³ய ஆநந்த³நஸ்ய–இயற்கையாகவே உயர்வற உயர்நலம் யுடையவனாகையாலே
தேவர்கள் மநுஷ்யர்கள் தியக்குகள் முதலிய சகல பிராணிகளுடைய உள்ளத்தை உகப்பிக்குவனாயும்
ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே:⁴ –அடியார்கள் திறத்து வாத்சல்யக் கடலாயும்
ப⁴க்தஜந ஸம்ஶ்லேஷைக போ⁴க³ஸ்ய–பக்த ஜனங்களுடன் கலந்து பரிமாறுமது ஒன்றையே தனக்குப் பேர் இன்பமாகக் கொண்டவனாயும்
நித்ய ஜ்ஞாந க்ரியைஶ்வர்யாதி³ போ⁴க³ஸாமக்³ரீ ஸம்ருʼத்³த⁴ஸ்ய –நித்யமும் -ஸகல விஷயகமாயும் உள்ள ஞானம் என்ன -தனக்கு லீலையாய் இருக்கிற கிரியைகள் என்ன ஐஸ்வர்யம் என்ன
இவை போல்வனவான போக ஸாமக்ரியைகள் நிரம்பி இருக்கப் பெற்றவனாய்
மஹாவிபூ⁴தே:–மிகச்சிறந்த விபூதியையும் யுடையனாய் இருக்கிற
தஸ்யைவ ப⁴க³வதோ நாராயணஸ்ய -அந்த எம்பெருமானுடையவே
ஶ்ரீமச் சரணாரவிந்த³யுக³ளம் -திருவடித்தாமரை இணையை
அநந்யாத்மஸஞ்ஜீவநேந * தத்³க³தஸர்வபா⁴வேந –ஆத்ம உஜ்ஜீவனம் இஃது ஒழிய வேறு ஓன்று இல்லை என்று இருக்கிற ஐகாந்திகமான நினைவோடு
ஶரணம் அநுவ்ரஜேத் ॥ -புருஷார்த்தத்துக்கு இவனே சாதனம் என்று அத்யவசாயம் கொள்ளக் கடவேன் என்றபடி
இப்படி ஒருகால் சரணம் புகுந்து விடும் இத்தனையோ என்னில் பேற்றுக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
கால ஷேபத்துக்கும்
இனிமையால் விட ஒண்ணாமைக்குமாக
இவ்வத்யவசாயம் நாள்தோறும் இடையறாது செல்ல வேணும் என்கிறது மேல்
————–
ததஶ்ச ப்ரத்யஹம் * ஆத்மோஜ்ஜீவநாயைவமநுஸ்மரேத் ॥ 2 ॥
பிற்பாடும் நாடொறும் தன்னை உஜ்ஜீவனம் செய்து கொள்வதற்காக இங்கனம் அநுஸ்யூதமாக ஸ்மரிக்க வேண்டும்
அது மேலே சொல்லுகிறது
————-
நித்யவிபூ₄தி வைப₄வம் –
தி₃வ்யலோகம்:
சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே
பதினான்கு லோகங்கள் மலிந்த அண்டத்தையும்
மேன் மேலும் பதின் மடங்கு அதிகமாய் இருக்கின்ற ஸப்த ஆவரணங்களையும்
மற்றுமுள்ள ஸமஸ்த கார்ய காரண வர்க்கங்களையும்
கடந்து அப்பால் விளங்கா நின்ற
—
பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே
ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *
பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே –பரம ஆகாஸம் என்னும் சொல்லால் சொல்லப்படுகிற
ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே –பிரமன் முதலூக்கு வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாத
ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே -ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில்
—
ஐஶ்வர்யம்:
ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:
* அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே
* தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யே
ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி
அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை:
நித்யஸித்³தை⁴:
அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே—ப்ரஹ்ம பாவனையில் தலை நின்ற ஸநகாதிகளுக்கும்
கர்ம பாவனையில் தலை நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நினைக்க ஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்
எப்போதும் பகவத் அனுபவ நிரதராய்
எண்ணிறந்தவர்களாய்
எம்பெருமான் பக்கல் பரிவே வடிவெடுத்தவர் களாய்
பூமியில் கால் பாவாதவர்களான மஹாத்மாக்களினால் மிடைந்ததாய்
தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி பரிச்சே²த்து மயோக்³யே–அந்த மஹாத்மாக்களுக்கும் அளவிட ஒண்ணாத
பரிணாமம் என்ன
ஐஸ்வர்யம் என்ன
ஸ்வ பாவம் என்ன –இவற்றை யுடையதாய்
—
திருக் கோயில்:
தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந
ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *
தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே –லோக விலக்ஷணமான ஆயிரம் திரு மதிள்களை யுடைத்தாய்
தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே -அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே போக்யமாய்
தி³வ்யோத்³யாந ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே -அநேகமாயிரம் திருத் தோப்புக்களால் சூழப்பட்டதாய்
அதிப்ரமாணே தி³வ்யாயதநே –அகலமும் நீளமும் அளவிட ஒண்ணாததான திருக்கோவிலிலே
—
திரு வோலக்க மண்டபம்:
கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே * தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத
ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே * தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே * தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே
* பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:
* தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே * ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:
* அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் * அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ
கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே –பலவகைப்பட்ட திவ்ய ரத்னங்களாலே பிரகாரமாய் இருப்பதான தொரு திரு ஓலக்க மண்டபத்திலே
தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே –அநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களால் விளக்கமுற்றதாய்
தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே -அப்ராக்ருதமான பலவகைப்பட்ட மாணிக்கங்கள் செறிந்த தரையை யுடைத்தாய்
தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே-மேல்கட்டி திருத்திரை முதலான திவ்ய அலங்காரங்களினால் அழகு பெற்றதாய்
பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:
- தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே –சுற்றிலும் உதிர்ந்தவைகளும் -உதிர்ந்து கொண்டே இருப்பவைகளும்
மரங்களிலே நிற்பவைகளும்
பலவகைப்பட்ட பரிமளத்தையும் நிறத்தையும் உடையவைகளுமான திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே ஸோபிதமாய்
ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:–ஒன்றோடு ஓன்று கலசி இருக்கிற பாரிஜாதம் முதலான கல்ப விருக்ஷங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்
(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய உத்யான சத ஸஹஸ்ரை )
அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் -ஒன்றோடு ஓன்று சேர்ந்து இராத சில
அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ–உள்ளே இருக்கின்ற புஷ்பம் ரத்னம் முதலியவற்றால் அமைக்கப்பட்ட அநேகம் ஆயிரம் திவ்ய லீலா மண்டபங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்
————–
க்ரீடா₃ஶைலங்கள்:
ஸர்வதா³ அநுபூ⁴யமாநைரபி * அபூர்வவத் ஆஶ்சர்யமாவஹத்³பி:⁴ * க்ரீடா³ஶைல ஶதஸஹஸ்ரை: அலங்க்ருʼதை:
ஸர்வதா³ அநுபூ⁴யமாநைரபி
அபூர்வவத் ஆஶ்சர்யமாவஹத்³பி:⁴ –எப்போதும் அனுபவிக்கப் படா நிற்கவும் அபூர்வ வஸ்து போலே ஆச்சர்யத்தை விளைவிப்பவைகளும்
க்ரீடா³ஶைல ஶதஸஹஸ்ரை: அலங்க்ருʼதை:–அநேகம் ஆயிரம் விளையாட்டுக் குன்றுகளாலும் அலங்கரிக்கப் பட்டவர்களும்
————–
லீலோத்₃யாநங்கள்:
கைஶ்சிந் நாராயண தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை: * கைஶ்சித் பத்³மவநாலயா தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை:
* ஸாதா⁴ரணைஶ்ச கைஶ்சிச் சு²கஶாரிகா மயூரகோகிலாதி³பி:⁴ * கோமலகூஜிதைராகுலை:
* தி³வ்யோத்³யாநஶத ஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே,
எம்பெருமானுடைய லீலைக்கே உரியவர்கள் சிலவும்
பிராட்டியுடைய லீலைக்கே உரியவைகள் சிலவும்
இருவருடையம் லீலைக்கே உரியவைகள் சிலவுமாய்
அழகிய குரலை யுடைய
கிளிகள்
பூவைகள்
மயில்கள்
குயில்கள் -முதலான பறவைகளின் கோலாஹலம் பொருந்தின திவ்யமான நூறாயிரம் பொழல்களாலே சூழப்பட்டதாய்
————–
நீரோடைகள்:
மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: * தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: * தி³வ்யாண்ட³ ஜவரை:
* அதிரமணீய த³ர்ஶநை: * அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: * அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:
* தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: * தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,
மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: –ரத்னம் முத்து பவளம் முதலியவற்றால் செய்யப்பட்ட படிகளை யுடையவனவாய்
(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய ஸுகாந்திக வாபீ சத ஸஹஸ்ரை -என்பது )
தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: -அப்ராக்ருதமும் நிர் மலமும் அம்ருதம் போலே ரஸ வத்துவமான நீர்ப்பரப்பை யுடையவனாய்
தி³வ்யாண்ட³ ஜவரை:
அதிரமணீய த³ர்ஶநை:
அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: –கண்ணுக்கு அழகியவைகளும்
பேச்சில் இனிமை யுடையவைகளுமான
அப்ராக்ருத பஷிகளாலே வ்யாப்தங்களாய்
அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:-உள்ளே உண்டான முத்துக்களாலான லீலா ஸ்தானங்களாலே ஸோபிதங்களாய்
தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: –அப்ராக்ருதமான செங்கழு நீரோடையால் பல ஆயிரம் நிறைந்துள்ளாய்
தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,–ஸூத்த ஸத்வ மயமான ராஜ ஹம்ஸங்கள் விளங்கிக் கொண்டு இருப்பவைகளான
———–
லீலா ஸ்தானங்கள்:
நிரஸ்தாதிஶய ஆநந்தை³கரஸதயா ச * ஆநந்த்யாச்ச ப்ரவிஷ்டாநுந்மாத³யத்³பி:⁴ * க்ரீடோ³த்³தே³ஶைர்விராஜிதே,
உயர்வற உயர்ந்த ஆனந்தமே வடிவெடுத்து இருக்கையாலும்
அபரிச்சின்னமாய் இருக்கையாலும்
உள் புக்கவர்களை மயக்க வல்ல லீலா ஸ்தானங்களாலே விளங்கா நிற்பதாய்
———–
பூம் பள்ளிகள்:
தத்ர தத்ர க்ருʼத தி³வ்ய புஷ்ப பர்யங்க உபஶோபி⁴தே,
அவ்வவ்விடங்களிலே பண்ணப்பட்ட பூம் பள்ளிகள் விளங்கா நிற்பதாய்
——-
வண்டுகளின் கானம்:
நாநாபுஷ்ப ஆஸவாஸ்வாத³ மத்த ப்⁴ருʼங்கா³வலீபி⁴: * உத்³கீ³யமாந தி³வ்ய கா³ந்த⁴ர்வேண ஆபூரிதே,
பலவகைப்பட்ட புஷ்பங்களில் யுண்டான மதுவைப் பருகிக் களித்த வண்டுத் திரள்கள் பாடும் திவ்ய ஸங்கீதம் நிறைந்ததாய்
———
மந்த மாருதம்:
சந்த³நாக³ரு கர்பூர தி³வ்ய புஷ்ப அவகா³ஹி மந்தா³நிலாஸேவ்யமாநே,
சந்தனம் -அகில் -பச்சைக் கற்பூரம் -திவ்ய புஷ்பங்கள் ஆகிய இவற்றின் உள் புகுந்து
அங்குள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற மந்த மாருதம் வீசப் பெற்றதாய்
——-
திருப் பள்ளிக் கட்டில்:
மத்⁴யே திவ்ய புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே * மஹதி தி³வ்ய யோக³பர்யங்கே அநந்த போ⁴கி³நி,
மத்⁴யே திவ்ய புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே –இடையிலே விடு பூக்களினால் சித்தரிக்கப் பட்டதான
மஹதி தி³வ்ய யோக³பர்யங்கே –பெரிய திருப்பள்ளிக்கு கட்டிலிலே
அநந்த போ⁴கி³நி -திருவனந்தாழ்வான் மீது
————-
பிராட்டியோடு சேர்த்தி:
ஶ்ரீமத்³வைகுண்டை² ஐஶ்வர்யாதி³ தி³வ்யலோகம் * ஆத்ம காந்த்யா விஶ்வமாப்யாய யந்த்யா
* ஶேஷ ஶேஷாஶநாதி³ ஸர்வம் பரிஜநம் * ப⁴க³வத: தத்தத³வஸ்தோ²சித * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா
* ஶீலரூப கு³ண விலாஸாதி³பி⁴: * ஆத்மாநுரூபயா ஶ்ரியா ஸஹாஸீநம்,
ஶ்ரீமத்³வைகுண்டை² ஐஶ்வர்யாதி³ தி³வ்யலோகம் * ஆத்ம காந்த்யா விஶ்வமாப்யாய யந்த்யா–ஸ்ரீ வைகுண்டச் செல்வம் முதலிய திவ்ய லோகம் முழுவதையும் தனது ஒளியினால் விளங்கச் செய்து மகிழ்விப்பவளும்
ஶேஷ ஶேஷாஶநாதி³ ஸர்வம் பரிஜநம் * ப⁴க³வத: தத்தத³வஸ்தோ²சித * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யாஶீலரூப கு³ண விலாஸாதி³பி⁴: * ஆத்மாநுரூபயா –திரு அநந்தாழ்வான் -சேனாபதி ஆழ்வான் முதலிய சகல பரிஜனத்தையும்
எம்பெருமான் அந்த அந்த அவஸ்தைகளுக்கு உரிய கைங்கர்யங்களில் நியமிப்பவளும்
சீலம் வடிவு குணம் ஸ்ருங்கார ரஸம் முதலியவற்றால் தனக்கு ஏற்றவளுமான
ஶ்ரியா ஸஹாஸீநம்,-பிராட்டியாரோடே கூடி வீற்று இருந்து அருள்பவனும்
——-
திருக்கண்கள், திருமேனி முதலியன:
ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் * அத்யுஜ்வலபீத வாஸஸம்
* ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்
* அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்
* அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்
* ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் * ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் * உஜ்வலாத⁴ரம் * ஶுசிஸ்மிதம்
* கோமலக³ண்ட³ம் * உந்நஸம் * உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்
* ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் * தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்
* தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்–
ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * –அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூ போன்ற திருக் கண்களை யுடையவனும்
ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் –விமலமான கார் முகில் போன்றவனும்
அத்யுஜ்வலபீத வாஸஸம்-மிகவும் புகர் பெற்று விளங்குகின்ற பீதக வாடையை யுடையவனும்
ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்–மிக நிர்மலமாய் –மிகக் குளிர்ந்ததாய் -மிகவும் ஸூ குமாரமுமாய் -ஸ்வச்சமாய் –
மாணிக்கம் போன்றதான தனது திவ்ய காந்தியினால் உலகம் முழுவதையும் விளங்காச் செய்யா நின்றவனும் –
அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்–சிந்தைக்கு எட்டாததாய் –திவ்யமாய் –ஆச்சர்யமாய் -நித்தியமாய் இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய லாவண்யம் நிறைந்த அமுதக் கடலாய் –
அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்–மிகவும் ஸூ குமாரமாதலால் -சிறிது குறு வியர்ப்பு அரும்பினால் போல் காண்கின்ற திரு நெற்றியிலே படிந்த திருக் குழல்களாலே விளங்கா நிற்பவனாய்
ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் –அப்போது அலர்ந்த தாமாரைப் பூப் போன்ற அழகிய திருக்கண்களை யுடையவனாய்
ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் –விலாசத்தோடு கூடிக் கொடி போன்றதான திருப்புருவங்களை யுடையவனாய்
உஜ்வலாத⁴ரம் -பிரகாசிக்கின்ற திரு அதரத்தை யுடையவனாய்
ஶுசிஸ்மிதம்–கபடமற்ற புன் சிரிப்பை யுடையவனாய்
கோமலக³ண்ட³ம் –அழகிய கபோலங்களை யுடையவனாய்
உந்நஸம் –உயர்ந்த திரு மூக்கை யுடையவனாய்
உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்–உயர்ந்தும் பருத்தும் இருக்கிற திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்று சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை யுடையவனாய்
ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்–பிராட்டிமார்களுக்கு கர்ண அலங்காரமான கரு நெய்தல் மலர் என்ன -கர்ண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன ஆகிய இவை அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவையாகித் திரு முழந்தாள் வரை தொங்குகின்ற நான்கு புஜங்களோடே பிரகாசிக்கின்றவனாய்
அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் –மிகவும் அழகிய -தாமரை சங்கு சக்கரம் முதலான ரேகைகளினால் அலங்கரிக்கப் பட்டுச் சிறிது சிவந்து இருக்கிற திருக் கைத் தலத்தை யுடையவனாய்
தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்–அப்ராக்ருதமான மோதிரங்களினால் விளங்குபவனாய்
அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்-மிகவும் ஸூ குமாரமான திரு நகங்களினால் விளங்குகின்ற மிகச் சிவந்த திருவிரல்களால் அலங்கரிக்கப் பட்டவனாய் –
அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம்-என்று இடையிலே பிரித்து எம்பெருமானுக்கு தனி விசேஷணம் ஆக்கவுமாம்
அநு ரக்த -அதி ரக்த -பாட பேதங்கள்
தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்–அப்போது அலர்ந்த புண்டரீகத்தோடு ஒத்த திருவடி இணையை யுடையவனாய்
—–
தி₃வ்யாபரணங்கள்:
அதிமநோஹர கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராதி³பி⁴:
* அத்யந்த ஸுக² ஸ்பர்ஶை: தி³வ்யக³ந்தை⁴: * பூ⁴ஷணைர்பூ⁴ஷிதம்,
மிகவும் ஸூகமான ஸ்பர்சத்தை யுடையவைகளும்
திவ்யமான பரிமளத்தை யுடையவைகளுமான
மிக அழகிய கிரீடம் –நூபுரம் முதலான திவ்ய பூஷணங்களினால் பூஷிதனாய்
—————-
திருமாலை:
ஶ்ரீமத்யா வைஜயந்த்யா வநமாலயா விராஜிதம்,
அழகிய வைஜயந்தி என்னும் வனமாலையினால் விளங்குபவனாய்
———-
தி₃வ்ய ஆயுதங்கள்:
ஶங்க² சக்ர க³தா³ஸி ஶார்ங்கா³தி³ தி³வ்யாயுதை:⁴ ஸேவ்யமாநம்,
பஞ்சாயுத ஆழ்வார்கள் முதலான திவ்ய ஆயுதங்களினாலே சேவிக்கப் படுபவனாய்
——-
ஸேனாபதியாழ்வான் முதலானோருடைய கைங்கர்யம்:
ஸ்வஸங்கல்பமாத்ர அவக்லுʼப்த * ஜக³ஜ்ஜந்ம ஸ்தி²தி த்⁴வம்ஸாதி³கே * ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த*
ஸமஸ்த ஆத்மைஶ்வர்யம் * வைநதேயாதி³பி:⁴ * ஸ்வபா⁴வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வை:
* ப⁴க³வத் பரிசர்யாகரண யோக்³யை: * ப⁴க³வத் பரிசர்யைக போ⁴கை:³ * நித்யஸித்³தை⁴: அநந்தை: யதா²யோக³ம் ஸேவ்யமாநம்
* ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் * தி³வ்யாமல கோமல அவலோகநேந * விஶ்வமாஹ்லாத³யந்தம்
* ஈஷது³ந்மீலித முகா²ம்பு³ஜ உத³ர விநிர்க³தேந * தி³வ்யாநநாரவிந்த³ ஶோபா⁴ஜநநேந *
தி³வ்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய ஸௌந்த³ர்ய மாது⁴ர்யாத்³யநவதி⁴க கு³ணக³ண விபூ⁴ஷிதேந *
அதிமநோஹர தி³வ்ய பா⁴வக³ர்பே⁴ண * தி³வ்ய லீலாலாப அம்ருʼதேந * அகி²லஜந ஹ்ருʼத³யாந்தராணி ஆபூரயந்தம் *
ப⁴க³வந்தம் நாராயணம் * த்⁴யாநயோகே³ந த்³ருʼஷ்ட்வா * [ததோ] ப⁴க³வதோ நித்யஸ்வாம்யம் *
ஆத்மநோ நித்யதா³ஸ்யம் ச * யதா²வஸ்தி²தம் அநுஸந்தா⁴ய
ஸ்வஸங்கல்பமாத்ர அவக்லுʼப்த * ஜக³ஜ்ஜந்ம ஸ்தி²தி த்⁴வம்ஸாதி³கே * ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த*
ஸமஸ்த ஆத்மைஶ்வர்யம் –நினைத்த மாத்ரத்தாலேயே ஸகல ஜகத்தினுடையவும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளை நிர்வஹிக்க வல்ல ஸேனாபதி ஆழ்வான் பக்கலிலே தன்னுடைய நியமனச் செல்வம் எல்லாம் ஒப்படைத்து இருப்பவனாய்-
வைநதேயாதி³பி:⁴ * ஸ்வபா⁴வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வை:
- ப⁴க³வத் பரிசர்யாகரண யோக்³யை: * ப⁴க³வத் பரிசர்யைக போ⁴கை:³ * நித்யஸித்³தை⁴: அநந்தை: யதா²யோக³ம் ஸேவ்யமாநம்-இயற்கையாகவே ஸாம்ஸாரிக ஸ்வ பாவம் ஒன்றும் இல்லாதவர்களும்
எம்பெருமானுக்குத் தொண்டு பூண்டவர்களும்
அந்தக் கைங்கர்யத்தையே நித்ய போகமாக யுடையவர்களுமான
பெரிய திருவடி முதலான எண்ணிறந்த ஸூரிகளாலே முறைமைப்படி ஸேவிக்கப் படுபவனாய்
ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் –ஸ்வ ஆத்ம அநுபவத்தினால் அளவிறந்த காலம் கடந்தமையும் அறிய கில்லாதவனாய்
ஆத்மபோ⁴கே³ந-என்பதற்கு
ஆச்சான் பிள்ளை -இகடாக்ஷம் பரார்த்தமாக அன்றிக்கே கால தத்வம் உள்ளதனையும் ஸ்வ ப்ரயோஜனமாகவே அனுசந்திக்கப்பட்டு
விலக்ஷணமாய் அபராதங்களை நினைத்த்துக் கலங்குகை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன ஸூ ந்தரமான கடாக்ஷத்தாலே -என்கிற வியாக்கியான ஸ்ரீ ஸூ க்தி இருப்பதால்
அநநு ஸம்ஹித -என்கிற ஸ்தானத்தில் அநு ஸம்ஹித-பாடமும்
பராதிகாலம் -என்று தனிப்படை அன்றிக்கே -பகவத் விசேஷணமாக அல்லாமல் -ஸமஸ்த பதமாய் -அவ லோகந விசேஷணமாகக் கொள்ளுகிற பாடமும் தோன்றுகிறது
பல ஸ்ரீ கோஸங்களிலும் பெரியோர்களின் அனுசந்தான பரம்பரைகளிலும் உள்ள பாடமே இங்கே நிவேசிக்கப் பட்டது
ஆத்ம போகமாவது -ரசாந்தாநந்தாத்ம அநுபவ ஜ -இத்யாதி வரதராஜ ஸ்தவ ஸ்ரீ ஸூக்தியில் பிரஸ்தாபிக்கப் பட்ட பரமபத நாதனுக்கு உண்டான ஸ்வ ஆத்ம அனுபவம் –
பிரமனுடைய ஆயுஸ் காலத்துக்கு பரம் என்று பெயர் -அப்படிப்பட்ட பெரிய கால பரிணாமம் தெரியாமல் செல்லுகிறதாம் ஸ்வ ஆத்ம அனுபவத்தில்
க்ஷண அணு வத் ஷிப்த பராதிகாலயா -என்று ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூ க்தியும் உண்டே )
தி³வ்யாமல கோமல அவலோகநேந * விஶ்வமாஹ்லாத³யந்தம்–திவ்யமாய் நிர்மலமாய் ஸூந்தரமான கடாக்ஷ வீக்ஷணங்களினால்
ஸமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய்
ஈஷது³ந்மீலித முகா²ம்பு³ஜ உத³ர விநிர்க³தேந * தி³வ்யாநநாரவிந்த³ ஶோபா⁴ஜநநேந *
தி³வ்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய ஸௌந்த³ர்ய மாது⁴ர்யாத்³யநவதி⁴க கு³ணக³ண விபூ⁴ஷிதேந *
அதிமநோஹர தி³வ்ய பா⁴வக³ர்பே⁴ண * தி³வ்ய லீலாலாப அம்ருʼதேந * அகி²லஜந ஹ்ருʼத³யாந்தராணி ஆபூரயந்தம் *
ப⁴க³வந்தம் நாராயணம் –சிறிது அலர்ந்த திருமுகத்தாமரையின் இடையில் நின்றும் உண்டானதாய்த்
திருப் பவளத்துக்கு ஆபரணம் சாத்தினால் போலே அழகை யுண்டாக்கக் கடவதாய்
திவ்யமான காம்பீர்யம் ஒவ்தார்யம் மாதுர்யம் முதலான எண்ணிறந்த குணத் திரள்களாலே அலங்ருதமாய் அதி மநோ ஹரமான அபிப்ராய விசேஷத்தை உள்ளே யுடைத்தான திவ்யமான ரஸோக்தியாகிய அமுதத்தினால் எல்லாருடைய ஹ்ருதய அவகாஸங்களையும் நிரப்புபவனான பகவன் நாராயணனை
த்⁴யாநயோகே³ந த்³ருʼஷ்ட்வா -உட்கண்ணால் ஸாஷாத் கரித்து
[ததோ] ப⁴க³வதோ நித்யஸ்வாம்யம் *
ஆத்மநோ நித்யதா³ஸ்யம் ச * யதா²வஸ்தி²தம் அநுஸந்தா⁴ய-பிறகு -அப்பெருமானுக்கு இயற்கையாயுள்ள சேஷித்வத்தையும்
தனக்கு இயற்க்கையாயுள்ள சேஷத்வத்தையும் உள்ளபடி அனுசந்தித்து
—————
ஸர்வேஶ்வரனைக் கிட்டி அநுப₄விப்பது – ஆத்ம நிவேதநம்:
“கதா³ஹம் ப⁴க³வந்தம் நாராயணம் * மம குலநாத²ம் * மம குலதை³வதம் * மம குலத⁴நம் * மம போ⁴க்³யம் *
மம மாதரம் * மம பிதரம் * மம ஸர்வம் * ஸாக்ஷாத் கரவாணி சக்ஷூஷா
என் குல நாதனாய்
என் குல தைவமாய்
என் குலச் செல்வமாய்
எனக்குப் பரம போக்யனாய்
எனக்குத் தாயாய் தந்தையாய் எல்லாமுமான
பகவன் நாராயணனை நான் எப்போது கண்ணாரக் காண்பன் -என்றும்
கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜ த்³வயம் *
ஶிரஸா தா⁴ரயிஷ்யாமி
எம்பெருமானது திருவடித் தாமரை இணையை எப்போது நான் தலையால் தங்கப் போகிறேன் -என்றும்
கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜத்³வய * பரிசர்யாகரண யோக்³ய: * தத்பாதௌ³ பரிசரிஷ்யாமி *
கதா³ஹம் ப⁴க³வத்பாதா³ம்பு³ஜத்³வயம் பரிசர்யாஶயா * நிரஸ்த ஸமஸ்தேதர போ⁴கா³ஶ: * அபக³த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வ: *
தத்பாதா³ம்பு³ஜ த்³வயம் ப்ரவேக்ஷ்யாமி
எம்பெருமான் திருவடித் தாமரை இணையில் கைங்கர்ய ருசியாலே விஷயாந்தரங்கள் எல்லாவற்றிலும் காதல் கழிந்தவனாய்
ராக த்வேஷங்களாகிற ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வ பாவங்களும் அகன்றவனாய் அடியேன் எப்போது அடியிணையைகிட்டுவேன் -என்றும்
இந்த வாக்யத்துக்குப் பின்பும் முன் வாக்கியத்தை மீண்டும் அநுஸந்திக்கும் பாடமும் உண்டு
என்றைக்கு அடியேன் அத்திருவடி இணை களில் அடிமை செய்ய உரியவனாய்
அவ் வடிமையில் உறுதி கண்டவனாய்
அத்திருவடி இலைகளில் அடிமை பூண்பேன்
கதா³மாம் ப⁴க³வாந் ஸ்வகீயயா * அதிஶீதலயா த்³ருʼஶா அவலோக்ய *
ஸ்நிக்³த⁴ க³ம்பீ⁴ர மது⁴ரயா கி³ரா * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயிஷ்யதி”
அப் பெருமான் தனது மிகக் குளிர்ந்த திருக் கண்களாலே கடாக்ஷித்து முழங்கி இனிதான பேச்சாலே
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்கிறபடியே கைங்கர்யத்திலே என்னை ஏவப் புகுகிறது எப்போதோ என்றும்
ஆக இப்படி எல்லாம் மநோ ரதித்து
இதி * ப⁴க³வத்பரிசர்யாயாம் ஆஶாம் வர்த⁴யித்வா *
தயைவாஶயா * தத்ப்ரஸாத³ உபப்³ருʼம்ஹிதயா * ப⁴க³வந்தம் உபேத்ய * தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *
இதி * ப⁴க³வத்பரிசர்யாயாம் ஆஶாம் வர்த⁴யித்வா–எம்பெருமானுடைய கைங்கர்யத்தில் ஆசையைப் பெருக்கி
தயைவாஶயா * தத்ப்ரஸாத³ உபப்³ருʼம்ஹிதயா *–அப்பெருமானுடைய அனுக்ரஹத்தினால் பெருகிச் செல்லும் ஆசையோடு
ப⁴க³வந்தம் உபேத்ய –எம்பெருமானைக் கிட்டி
தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *–திருவநந்தாழ்வான் திருமுடியில் பெரிய பிராட்டியாரோடே கூட இருப்பவனாய்
பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனாய் இருக்கிற அப் பெருமாளை
ஸமஸ்த பரிவார ஸமேதனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு நம -என்று சொல்லி
நெடும் தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே
ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று
ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று
ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்
ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்
ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு
பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு
ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்
————–
ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥
ததோ –ஆத்ம சமர்ப்பண அநந்தரம்
ப⁴க³வதா ஸ்வயமேவ -எம்பெருமான் தானாகவே
ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய -ஆத்ம ஸம் உஜ்ஜீவன ஹேதுவாய்
அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய்
மிக அன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி
ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *ஸ்வீக்ருʼத: –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு
ஸ்வீ கரிக்க
அப்பேறு பெற்றவனாகி
அநுஜ்ஞாதஶ்ச –ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி
அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத -மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக்காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப்பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் –
—————
ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥
பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –
———–
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்
——–
லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||
॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥
ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்த்தியையே தஞ்சமாகக் கொண்டு
பிராகிருத மண்டலத்தை விட்டு நீங்கி
அப்ராக்ருதமான தேச விசேஷத்திலே சென்று
ஸர்வாங்க ஸூ ந்தரனாய்
ஸர்வ ஆபரண பூஷிதனாய்
திவ்யாயுத ஸோபிதனாய்
நித்ய ஸூரி பரிஷன் நிஷேவிதனாய்
இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கிட்டி
கைங்கர்ய பிரார்த்தனையை முன்னிட்டுக் கொண்டு
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவில்லாதபடி செய்யும் கைங்கர்யங்களைப் பெற்று
ஆனந்த அமுதக் கடலில் மூழ்கி இருக்குமாற்றை இங்கு இருக்கும் நாள் வரையில் பரம ஏகாந்தியானவன் நாள் தோறும் சிந்தனை செய்து கொண்டு இருக்கக் கடவன் என்று
அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆயிற்று –
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.